Friday, October 22, 2010

ஜாக்கி விவகாரம் - உலக தலைவர்கள் அதிர்ச்சி


இளவரசன் என்பவர் ஜாக்கி அண்ணனை அவதூறாக பேசி அவமதித்த விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மதுரை, தேனீ உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று முழு கடையடைப்பு கடைபிடிக்கப்பட்டது. சென்னையில் இன்று ஜாக்கியின் ஆதரவாளர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டதில் இளவரசனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அங்கு ஏற்பட்ட கலவரத்தில், பதினாறு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் நாளை, UAE, US, USSR போன்ற பல நாடுகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் உலக தலைவர்கள் பலரும் இந்த வெறிச்செயலுக்கு கடுமையான கண்டனங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு.

(குறிப்பு: ஒவ்வொரு தலைவர்கள் பேச்சை படிக்கும் போதும், அவர்கள் தொணியில் கற்பனை செய்து கொண்டு படியுங்கள்)

கலைஞர் டிவியில் முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள கண்டன அறிக்கை:

"தமிழர்களே.. தமிழர்களே....
நீங்கள் ஜாக்கியை கடலில் தூக்கி எறிந்தாலும்
அவர் ஆபாசமாகத்தான் எழுதுவார்..
அதை பார்த்து நீங்கள் அவர் follower ஆகலாம்"

எனது அருமைத் தம்பி ஜாக்கி, சமுதாயத்தில் சில விஷக்கிருமிகளால்
அசிங்கப்படுத்தப்பட்டார், அவமானப்படுத்தப்பட்டார், ஏளனப்படுத்தப்பட்டார்,
கேவலப்படுத்தப்பட்டர், காரி உமிழப்பட்டார் என்ற செய்தியை கேட்டவுடன் நான் மிகுந்த துன்பம் அடைந்தேன், தீராத மன உலைச்சலுக்கு ஆளானேன். இதுபோன்ற கொடுமை இனிமேல் நடைபெறாமல் இருக்க, நாளை சட்ட மன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அதன்படி இனி ஜாக்கியைப்பற்றி புகழ்ந்து ஒரு வரியேனும் இடம் பெற்றிருந்தால்தான் ஒரு வலைப்பதிவுக்கு 'வரி' விலக்கு அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புக்கு மூன்றெழுத்து
அறிவுக்கு மூன்றெழுத்து
தம்பிக்கு மூன்றெழுத்து
ஜாக்கிக்கு மூன்றேழுத்து
அவருக்கு பிடித்த"செக்ஸி" க்கு மூன்றெழுத்து
அவர் எழுதும் "டிஸ்கி" க்கு மூன்றெழுத்து
அவர் அடிக்கும் "விஸ்கி" க்கும் மூன்றெழுத்து

டி.ஆர் குரல் டிவியில் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

யிய்யாய்... டண்டனக்கா....

எவன்டா அவன் என் உடன்பிறப்பு ஜாக்கிய கிண்டல் பண்ணது. என்னோட குரல் டிவில ஜாக்கிய வச்சி "புதிரா புனிதமா" மாதிரி "ஜலஜாவா ஜல்சாவா" ன்னு ஒரு நிகழ்ச்சி நடத்தி TRP ரேட்டிங் ah increase பண்ணிக்கலாம்னு பாத்தா, எவன்டா என்ன மாதிரி (கரடி) வந்து காரியத்த கெடுத்தது. நீ வேணும்னா இளவரசனா இருக்கலாம்.. ஆன என் பையன் குரலரசன்.. இன்னோரு பையன் சிலம்பரசன்... அப்புறம் என் பொண்டாட்டி..."

ரிப்போர்ட்டர்: சார் சார்... ஜாக்கிய பத்தி சொல்லுங்கன்னா உங்க குடும்பத்த பத்தி பேசுறீங்க...

யோவ்.. இருய்யா... அப்புடி ஆரம்பிச்சி கடைசியா வருவேன்ல... இப்ப பாரு பட்டைய கெளப்புறேன்

"ஜாக்கி எழுதுறது சாண்ட்விச்சு
எங்க வீட்டுல எல்லாரும் நான் வெஜ்ஜூ
இன்னொரு தடவ எழுதுன கைவச்சு
உன் மேல நாங்க நடத்துவோம் கல்வீச்சு"


அது மட்டுமல்லாமல் பாகிஸ்தானின் AAJ NEWS தொலைக்காட்சிக்கு பின் லேடனின் அல்கொய்தா அமைப்பிலிருந்து வந்த ஒரு குறுந்தகட்டில், ஜாக்கியை பற்றி தவறாக எழுதியவர்கள் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டு
இருந்தது.

அதில் பின் லேடன் பேசியதாவது

" உதுமாக்கி அப்துகாமியோ ஜாக்கி துலாஹி அபு
இன் ஹியாமி முகாபு ரிமேசியா இளவரசு, முத்துசிவா ரஸிமானி
கதிபுதா ரஹோ பிதாமி ரிஸ்தியா.....ஜெய் ஜாக்கி"

நடிகை ஷகீலா இன்று சூர்யா டிவிக்கு அளித்துள்ள பேட்டியில்

"என்னோட ரசிகர் மன்ற தலைவரான ஜாக்கிய பத்தி இப்புடி அவதூறா பேசுறத என்னால அனுமதிக்க முடியாது. என்னோட படங்கள எடுக்குற டைரக்டர்ஸ் நிறைய பேரு ஜாக்கியோட blog ல இருந்துதான் வசனத்த எடுத்து போட்டுக்குவாங்க.. அதவிட அவர் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்ல என்னோட படங்கள தான் அதிகமா வச்சிருக்காரு. ஜாக்கி இருக்குறதால
என்னோட படங்களுக்கு ஆகும் விளம்பர செலவும் குறையும். இத வன்மையா
கண்டிக்கிறதுக்காக நா ஒரு படத்துல குடும்ப பொண்ணா நடிக்க போறேன்" என்று கூறி முடித்தார்.

ஒருபுறம் ஜாக்கிக்கு ஆதரவு பெருகினாலும், மறுபுறம் ஜாக்கி கலாக்கப்பட்டது சரிதான் எனவும் சிலர் அவருக்கு எதிராகவும் கோஷங்களை பரப்பி வருகின்றனர்.

கேப்டன் டிவில் நமது கேப்டன் அளித்துள்ள பேட்டி உங்களுக்காக:

நான் ஜாக்கிய பாத்து கேக்குறேன் " ஏண்டா நீ என்ன காந்தியா, நேருவா, சுபாஷ் சந்திர போஸா, அம்பேத்காரா... பாக்கீஸ்தான் தீவிரவாதிய கூட நா மன்னிச்சிருவேன்.. ஆன பொம்பள புள்ளைகள பத்தி ஆபாசமா பேசி எழுதுற உன்ன எந்தகாலத்திலயும் மன்னிக்க முடியாது.. மன்னிப்புக்கு அப்புறம் தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்த ஆபாசம்...அவ்வ்வ்வ்வ்வ்"

ஜாக்கியின் வக்கிரத்தை பார்த்து வெகுண்ட தலைவர் கவுண்டமணி முதன் முதலாக ஒரு தனியார் தொலைக்காட்ச்சிக்கு அளித்துள்ள பேட்டியில்

"இந்த நாயி இது மாதிரியெல்லாம் எழுதுதேன்னு நாம சும்மா போனா அது பின்னாலயே வந்து பொச்ச புடிச்சி கடிச்சி வச்சிரும். இதயெல்லாம் விட்டு வைக்ககூடாது. வெட்டி வைக்கிறதுதான் சரி"

என்றார் தனக்கே உரிய பானியில்.

அதோடு ஜாக்கியின் சக நண்பர்களே அவரால் அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று ஜாக்கி வெளியிட்டுள்ள ஒரு பதிப்பில் அவரை பற்றி வெளியாகியுள்ள செய்திகளை மறைப்பதற்காக, அவர் நண்பர்களுக்கு வந்த அசிங்கமான மிரட்டல் கடிததின் சுட்டியை கொடுத்திருக்கிறார். அவரைப்பற்றி தவறாக எழுதப்பட்ட (ஜாக்கியின் பார்வையில் தவறாக உண்மையில் சரியாக) வலைப்பதிவுகளின் சுட்டியை ஏன் அதில் இடவில்லை எனவும் அவரின் நண்பர்கள் கேள்வி
எழுப்புகின்றனர்.

ஜாக்கி நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த மனம் திறந்த பேட்டி அவர் நண்பர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஜாக்கிக்கு எதிராக AJF ( Anti Jackie Force) என்று ஒன்று உருவாகியிருப்பதாகவும், அவை ஜாக்கி தனது ஆபாசமான எழுத்து நடையை மாற்றும் வரை ஓயப்போவதில்லை எனவும் தெரிவித்ததாக துபாயிலிருந்து வரும் செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.

நன்றி: கலைஞர் டிவி, குரல் டிவி, கேப்டன் டிவி, AAJ NEWS

52 comments:

  1. "இந்த நாயி இது மாதிரியெல்லாம் எழுதுதேன்னு நாம சும்மா போனா அது பின்னாலயே வந்து பொச்ச புடிச்சி கடிச்சி வச்சிரும். இதயெல்லாம் விட்டு வைக்ககூடாது. வெட்டி வைக்கிறதுதான் சரி"

    ____________


    சரியா சொன்னாரு...

    ReplyDelete
  2. மேலும் ஜாக்கிக்கு எதிராக AJF ( Anti Jackie Force) என்று ஒன்று உருவாகியிருப்பதாகவும், அவை ஜாக்கி தனது ஆபாசமான எழுத்து நடையை மாற்றும் வரை ஓயப்போவதில்லை எனவும் தெரிவித்ததாக துபாயிலிருந்து வரும் செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.
    ------------


    நெசமாத்தானா..?


    உறுப்பினராவது எப்படியாம்...?

    ReplyDelete
  3. //இளவரசனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.//

    ரொம்பவும் தான் இராஜபக்சே ரேஞ்சுக்கு உங்களுக்கு ஆசை. :)

    ReplyDelete
  4. பாலியல் மற்றும் கவர்ச்சி படங்களைப் போட்டு கூட்டம் சேர்த்தப் பதிவர்கள் பலர். நீங்க ஜாக்கியை மட்டும் கும்முவது சரி இல்லை. ஒருவர் எழுத்து பிடிக்கவில்லை என்றால் நிராகரிக்கலாம். ஆனால் இப்படி எழுதக் கூடாது சொல்ல நண்பர்கள் மட்டும் தான் உரிமை எடுத்துக் கொள்வார்கள், அனுமதிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. @Anonymous said...

    //Fuck Off
    Jacki Fan//

    நீங்க யார திட்டுறீங்கன்னு தெரியல... என்னைய இல்ல ஜாக்கி யாவா ? ஆனா யார திட்டுனாலும் ஜாககி ஸ்டைல் ல திட்டாம கொஞ்சம் டீசன்ட்டா திட்டுங்க

    ReplyDelete
  6. @பயணமும் எண்ணங்களும் :

    உங்கள ஏற்கனவே AJF ல சேத்தாச்சு... office ku வந்து ஒரு அப்பிளிகேஷன் fill பண்ணி குடுத்துட்டு உறுப்பினர் கார்டு வாங்கிக்குங்க... he he

    ReplyDelete
  7. ஒருவர் எழுத்து பிடிக்கவில்லை என்றால் நிராகரிக்கலாம். ஆனால் இப்படி எழுதக் கூடாது சொல்ல நண்பர்கள் மட்டும் தான் உரிமை எடுத்துக் கொள்வார்கள், அனுமதிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறேன்.

    =------------------------

    எப்படிங்க இப்படியெல்லாம் கூசாம சொல்ல முடியுது..

    உங்க தெருவில் வீட்டுமுன் ஒருநாள் மல கொட்டினால் கண்டுகொள்ளாமல் போவீர்கள்..

    தினமும் பலர் வந்து கொட்டி தெருவையே நாசம் பண்ணினால் ?..

    தப்பை தப்புன்னு சொல்லக்கூட உரிமை அது இதுன்னு பேசிகிட்டு..

    சமூகம் எப்படிவேணா நாசமா போகட்டும் என நினைப்பவர் அமைதியாக இருக்கட்டும்..

    அதான் இப்படி வளர்ந்து தொலைக்கிறார்கள்.. :(((

    ReplyDelete
  8. அதில் பின் லேடன் பேசியதாவது

    " உதுமாக்கி அப்துகாமியோ ஜாக்கி துலாஹி அபு
    இன் ஹியாமி முகாபு ரிமேசியா இளவரசு, முத்துசிவா ரஸிமானி
    கதிபுதா ரஹோ பிதாமி ரிஸ்தியா.....ஜெய் ஜாக்கி"

    இது என்னங்க...ஒண்ணுமே புரியல....கொஞ்சம்தமிழ் படுத்துங்களேன்...

    ReplyDelete
  9. //நேற்று ஜாக்கி வெளியிட்டுள்ள ஒரு பதிப்பில் அவரை பற்றி வெளியாகியுள்ள செய்திகளை மறைப்பதற்காக, அவர் நண்பர்களுக்கு வந்த அசிங்கமான மிரட்டல் கடிததின் சுட்டியை கொடுத்திருக்கிறார்.//

    எனக்கு என்னமோ அந்த கடிதத்தை அண்ணன் ஜாக்கி யும் அவரது நண்பரும் அவர்களை திட்டி அவர்களே எழுதி கொண்டார்கள என்று ஒரு
    சந்தேகம்,

    அவரது followers in இரங்கல் மற்றும் support காக அவரே அவரை வசை பாடி, அவரது பாணியில் எழுதியுள்ள கடிதம்.

    ஜாக்கி அண்ணன் அவரது எழுத்துக்கள் லோக்கல் தான் என்பதை ஆணித்தனமாக prove செய்துவிட்டார்.

    ReplyDelete
  10. //நேற்று ஜாக்கி வெளியிட்டுள்ள ஒரு பதிப்பில் அவரை பற்றி வெளியாகியுள்ள செய்திகளை மறைப்பதற்காக, அவர் நண்பர்களுக்கு வந்த அசிங்கமான மிரட்டல் கடிததின் சுட்டியை கொடுத்திருக்கிறார்//


    எனக்கு என்னமோ அந்த கடிதத்தை அண்ணன் ஜாக்கி யும் அவரது நண்பரும் அவர்களை திட்டி அவர்களே எழுதி கொண்டார்கள என்று ஒரு
    சந்தேகம்,

    அவரது followers in இரங்கல் மற்றும் support காக அவரே அவரை வசை பாடி, அவரது பாணியில் எழுதியுள்ள கடிதம்.

    ஜாக்கி அண்ணன் அவரது எழுத்துக்கள் லோக்கல் தான் என்பதை ஆணித்தனமாக prove செய்துவிட்டார்.

    ReplyDelete
  11. விட்டால் அவரது குடும்பத்தையும், followers குடும்பங்களையும் அடியாட்கள் வந்து அடித்ததாக சொல்லுவார் போலும்.

    இதெல்லாம் ரொம்ப ஓவர்.

    ReplyDelete
  12. விட்டால் அவரது குடும்பத்தையும், followers குடும்பங்களையும் அடியாட்கள் வந்து அடித்ததாக சொல்லுவார் போலும்.

    இதெல்லாம் ரொம்ப ஓவர்.

    ReplyDelete
  13. jackie thinks that hez modern day thiruvalluvar,

    andha dog ku unmaiyile guts irundha anonymous comments aa enable panna sollanum.

    ReplyDelete
  14. எனக்கு என்னமோ அந்த கடிதத்தை அண்ணன் ஜாக்கி யும் அவரது நண்பரும் அவர்களை திட்டி அவர்களே எழுதி கொண்டார்கள என்று ஒரு
    சந்தேகம்,

    அவரது followers in இரங்கல் மற்றும் support காக அவரே அவரை வசை பாடி, அவரது பாணியில் எழுதியுள்ள கடிதம்.

    ஜாக்கி அண்ணன் அவரது எழுத்துக்கள் லோக்கல் தான் என்பதை ஆணித்தனமாக prove செய்துவிட்டார்.

    ------------------------

    100% சரியே..

    அதுமட்டுமல்ல.. ஓட்டுகள் /பின்னூட்டங்கள் எல்லாமே தாமே.:)

    ReplyDelete
  15. நண்பா,தனி நபர் தாக்குதலும்,சக பதிவர் பற்றி நையாண்டியும் எத்ற்கு? உங்களுக்கு நகைச்சுவை நடை நலா வருது,வேறு வழியில் அதை வெளிப்படுத்தலாமே?

    ReplyDelete
  16. A true blogger shud accept all the positive and negative comments equally. he should use the negative comments to imrpove his writing.

    I had written more positive comments & little bit negative comments also, but all the time he wil approve only the positive comments.

    this is also ok, but wat he did last week is the insanest, i had written a mixed comment for his post with positive & negative thoughts, he had edited it and posted only the positive comments.
    That only showed to me that he is an Dunderhead, Numbskull etc.,.

    ReplyDelete
  17. @ சி.பி.செந்தில்குமார்

    //தனி நபர் தாக்குதலும்,சக பதிவர் பற்றி நையாண்டியும் எத்ற்கு?//

    திரு செந்தில் குமார் அவர்களே இது தனி நபர் தாக்குதல் அல்ல,

    பொது சாக்கடை சுத்தம் செய்தல் .

    ஏனெனில் வலைபதிவு என்பது ஒரு பொது ஊடகம்.

    அது சாக்கடையாக மாற்றி விட கூடாது என்ற நல்ல எண்ணம் தான் இந்த பதிவின் உள்நோக்கம்

    ReplyDelete
  18. cps அண்ணே....
    ஜாக்கி என்ற தனிமனிதர் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. அவருடைய எழுத்து நடையிலேயே எனக்கு வெறுப்பு. தேவையற்ற இடங்களில் ஆபாச வார்த்தைகளையும், அசிங்கமான மேற்கோள்களையும் காட்டுவதை கண்டே எனக்கு இந்த கோபம். விண்ணப்பமாக அவரிடம் கேட்டுவிட்டோம். அவர் "நான் லோக்கல் அப்படித்தான் எழுதுவேன் வந்தா வாங்க இல்லண்ணா போங்க" என்கிறார். அதானால் வேறுவழி இல்லாமல் ஆக்க்ஷன் ல இறங்க வேண்டியதாயிற்று. உங்களின் நகைச்சுவையான எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் தாங்களே அவரின் பதிவுகளில் இட்டிருந்த பின்னூட்டங்களை பார்த்திருக்கிறேன். நல்ல பதிப்புகளை பாராட்டுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவரின் அபத்தமான பதிவுகளை ஆதரிப்பதுபோல நாம் இடும் பின்னூட்டங்கள் அவர் மேலும் மேலும் அபத்தங்களை தொடர உதவும்.

    ReplyDelete
  19. @கோவி.கண்ணன் :

    //பாலியல் மற்றும் கவர்ச்சி படங்களைப் போட்டு கூட்டம் சேர்த்தப் பதிவர்கள் பலர். நீங்க ஜாக்கியை மட்டும் கும்முவது சரி இல்லை//

    கண்ணுக்கு தெரியிற கொசுவ அடிப்போம்ணே.. கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாவல்லாம் என்ன பண்றது?

    ReplyDelete
  20. பூனைக்கு மணியை கட்டிடீங்க வாழ்த்துகள் முத்து சிவா. இவங்கள் நாம என்ன தான் கரடியா கத்துனாலும் திருந்த மாட்டாங்க.இப்பதான் கொஞ்ச நாளா சானிட்டரி நேப்கினை பத்தி எழுதறதில்லை, அத பத்தி எழுதறதுல டாக்டர் பட்டமே வாங்கிருப்பாரு. இவரும் கிட்ட தட்ட சாரு மாதிரி தான், தான் பொண்டாட்டி தெய்வம், ஆனா ஊருல ஜீன்ஸ் போடுற பொண்ணுங்க எல்லாரும் தேவிடியான்ற மாதிரி எழுதுவாரு. இவங்களுக்க்ல்லாம் தனி கோஷ்டி இருக்கு தண்ணி அடிக்க ஜால்ரா போடன்னு. அவங்களுக்கு தான் வேலை இல்லை, நமக்குமா, விட்டு தள்ளுங்க

    ReplyDelete
  21. //இப்போதைக்கு அப்பீட்டு.. நமக்கு நிறைய வேலை இருக்கு... எந்த நேரமும் யாரை மொக்க போடலாம்னு கம்யூட்டர்கிட்ட உட்கார்ந்து இருக்க????
    //

    என்னங்க இவர் இப்படி சொல்லிருக்காரு, எனக்கு தெரிஞ்சு அவர் ரொம்ப வருசமாவே சும்மா தான இருக்காரு, இப்ப என்ன திடீர்ன்னு வேலை வந்திருச்சு போல

    ReplyDelete
  22. பதிவுல அவரோட ஃபோட்டோவை போட்டுட்டு உங்களை எதுக்கு திட்டறாரு?????

    ReplyDelete
  23. //
    என்னங்க இவர் இப்படி சொல்லிருக்காரு, எனக்கு தெரிஞ்சு அவர் ரொம்ப வருசமாவே சும்மா தான இருக்காரு, இப்ப என்ன திடீர்ன்னு வேலை வந்திருச்சு போல //

    ஹி ஹி

    ReplyDelete
  24. @Anonymous
    //பதிவுல அவரோட ஃபோட்டோவை போட்டுட்டு உங்களை எதுக்கு திட்டறாரு??????//

    ha ha ha ha ha ha ha ha ha....

    தாறு மாறு

    ReplyDelete
  25. முருகன்October 22, 2010 at 12:56 PM

    //இந்த நாயி இது மாதிரியெல்லாம் எழுதுதேன்னு நாம சும்மா போனா அது பின்னாலயே வந்து பொச்ச புடிச்சி கடிச்சி வச்சிரும். இதயெல்லாம் விட்டு வைக்ககூடாது. வெட்டி வைக்கிறதுதான் சரி//

    அவரு அசிங்கமாக எழுதுரார்னு சொல்றீங்க!!! இது என்ன குடும்பதோட ஒக்காந்து படிக்கக்கூடிய வார்த்தைகளா?

    //எவன்டா அவன் என் உடன்பிறப்பு ஜாக்கிய கிண்டல் பண்ணது. என்னோட குரல் டிவில ஜாக்கிய வச்சி "புதிரா புனிதமா" மாதிரி "ஜலஜாவா ஜல்சாவா" ன்னு ஒரு நிகழ்ச்சி நடத்தி TRP ரேட்டிங் ah increase பண்ணிக்கலாம்னு பாத்தா, எவன்டா என்ன மாதிரி (கரடி) வந்து காரியத்த கெடுத்தது. நீ வேணும்னா இளவரசனா இருக்கலாம்.. ஆன என் பையன் குரலரசன்.. இன்னோரு பையன் சிலம்பரசன்... அப்புறம் என் பொண்டாட்டி..//
    அவரு கரடி சரி!!! நீங்க என்ன மன்மத குஞ்சா? நீங்க, மன்மத குஞ்சா இருந்துட்டு போங்க!!! அடுத்தவுங்க உடல் அழகை, அமைப்பை விமர்சிப்பவன் நல்ல எழுத்தாளன் (பதிவர்) இல்லை, நல்ல மனிதன் கூட இல்லை.

    //
    நடிகை ஷகீலா இன்று சூர்யா டிவிக்கு அளித்துள்ள பேட்டியில்


    "என்னோட ரசிகர் மன்ற தலைவரான ஜாக்கிய பத்தி இப்புடி அவதூறா பேசுறத என்னால அனுமதிக்க முடியாது.....//

    முகம் தெரியாத நண்பரே, ஆபாசங்களுக்கு எதிரி எனில், நடிகை ஷகீலா பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்? ஆக ஆபாச படங்களை ஒளிந்து, தலையில் முக்காடு போட்டு பார்ப்பவர் நீங்கள், என்று நான் கருத வேண்டி உள்ளது. ஆபாசங்களுக்கு எதிரி எனில், நடிகை ஷகீலாவை எல்லாம் நீங்கள் இழுத்திருக்கவே வேண்டியதில்லை.

    உங்கள் பதிவு முழுக்க முழுக்க தனி மனித எதிர்ப்பாகத்தான் எனக்குப்படுகிறது. அப்படிதான் எழுதி இருக்கிறீர்கள். ஆபாசத்தை, கெட்ட வார்த்தைகளை நீங்கள் எதிர்ப்பதாக இருந்தால் அதைப்பற்றி எழுதுங்கள். இணையத்தில் புரையோடி இருக்கும் ஆபாசத்தைப் பற்றி எழுதுங்கள். அதை விடுத்து தனி ஒரு பதிவரைப் பற்றி இப்படி மட்டமாக உடல் அமைப்பை (கரடி என்று) விமர்சித்து எழுதும் எழுத்தும் ஒதுக்கப்பட வேண்டியதே.

    ஜாக்கியையே இப்படி எழுதுகிறீர்களே, நீங்கள் இன்னும் "சாரு" பற்றி எல்லாம் படிக்கவில்லை போல இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக படித்து இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். ஆபாசத்தை பற்றி எழுதி இருந்தீர்கள் என்றால் நீங்கள் அவரையும் சேர்த்திருக்க வேண்டும். அதற்காக நான் ஜாக்கியை, "சாரு" வோடு ஒப்பிடவில்லை. ஒப்பிடவே முடியாது. ஆனால் ஆபாசத்தை எதிர்ப்பதாக கூறும் நீங்கள் "ஜாக்கியை" மட்டும் ஏன் கலாய்க்கிறீர்கள் என்று புரியவில்லை.

    எழுதுவதற்கு நல்ல விஷயங்கள் இருக்கும் போது, ஆபாசத்தை எழுதுகிறார். இவர் ஒரு லோக்கல் என்று எழுதுகிறீர்கள். நான் கேட்கிறேன் "எழுதுவதற்கு நல்ல விஷயங்கள் இருக்கும் போது, ஒரு லோகலைப் பற்றி" நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்.?

    எனக்கு தெரிந்த காரணம் ஒண்ணே ஒண்ணு. "வயித்தெரிச்சல்".

    ReplyDelete
  26. முருகன்October 22, 2010 at 12:57 PM

    உங்கள் பதிவு முழுக்க முழுக்க தனி மனித எதிர்ப்பாகத்தான் எனக்குப்படுகிறது. அப்படிதான் எழுதி இருக்கிறீர்கள். ஆபாசத்தை, கெட்ட வார்த்தைகளை நீங்கள் எதிர்ப்பதாக இருந்தால் அதைப்பற்றி எழுதுங்கள். இணையத்தில் புரையோடி இருக்கும் ஆபாசத்தைப் பற்றி எழுதுங்கள். அதை விடுத்து தனி ஒரு பதிவரைப் பற்றி இப்படி மட்டமாக உடல் அமைப்பை (கரடி என்று) விமர்சித்து எழுதும் எழுத்தும் ஒதுக்கப்பட வேண்டியதே.

    ஜாக்கியையே இப்படி எழுதுகிறீர்களே, நீங்கள் இன்னும் "சாரு" பற்றி எல்லாம் படிக்கவில்லை போல இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக படித்து இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். ஆபாசத்தை பற்றி எழுதி இருந்தீர்கள் என்றால் நீங்கள் அவரையும் சேர்த்திருக்க வேண்டும். அதற்காக நான் ஜாக்கியை, "சாரு" வோடு ஒப்பிடவில்லை. ஒப்பிடவே முடியாது. ஆனால் ஆபாசத்தை எதிர்பதாக கூறும் நீங்கள் "ஜாக்கியை" மட்டும் ஏன் கலாய்க்கிறீர்கள் என்று புரியவில்லை.

    எழுதுவதற்கு நல்ல விஷயங்கள் இருக்கும் போது, ஆபாசத்தை எழுதுகிறார். இவர் ஒரு லோக்கல் என்று எழுதுகிறீர்கள். நான் கேட்கிறேன் "எழுதுவதற்கு நல்ல விஷயங்கள் இருக்கும் போது, ஒரு லோகலைப் பற்றி" நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்.?

    எனக்கு தெரிந்த காரணம் ஒண்ணே ஒண்ணு. "வயித்தெரிச்சல்".

    ======
    முருகன்

    ReplyDelete
  27. முருகன்October 22, 2010 at 1:08 PM

    //இந்த நாயி இது மாதிரியெல்லாம் எழுதுதேன்னு நாம சும்மா போனா அது பின்னாலயே வந்து பொச்ச புடிச்சி கடிச்சி வச்சிரும். இதயெல்லாம் விட்டு வைக்ககூடாது. வெட்டி வைக்கிறதுதான் சரி //

    அவர் எழுது ஆபாசம்னா இதுக்கு பேரு என்ன என்று விளக்குவீர்களா? இது என்ன குடும்பத்தோட உட்கார்ந்து படிக்கக் கூடிய வார்த்தைகளா?

    உங்கள் பதிவு முழுக்க முழுக்க தனி மனித எதிர்ப்பாகத்தான் எனக்குப்படுகிறது. அப்படிதான் எழுதி இருக்கிறீர்கள். ஆபாசத்தை, கெட்ட வார்த்தைகளை நீங்கள் எதிர்ப்பதாக இருந்தால் அதைப்பற்றி எழுதுங்கள். இணையத்தில் புரையோடி இருக்கும் ஆபாசத்தைப் பற்றி எழுதுங்கள். அதை விடுத்து தனி ஒரு பதிவரைப் பற்றி இப்படி மட்டமாக உடல் அமைப்பை (கரடி என்று) விமர்சித்து எழுதும் எழுத்தும் ஒதுக்கப்பட வேண்டியதே.

    ஜாக்கியையே இப்படி எழுதுகிறீர்களே, நீங்கள் இன்னும் "சாரு" பற்றி எல்லாம் படிக்கவில்லை போல இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக படித்து இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். ஆபாசத்தை பற்றி எழுதி இருந்தீர்கள் என்றால் நீங்கள் அவரையும் சேர்த்திருக்க வேண்டும். அதற்காக நான் ஜாக்கியை, "சாரு" வோடு ஒப்பிடவில்லை. ஒப்பிடவே முடியாது. ஆனால் ஆபாசத்தை எதிர்பதாக கூறும் நீங்கள் "ஜாக்கியை" மட்டும் ஏன் கலாய்க்கிறீர்கள் என்று புரியவில்லை.

    எழுதுவதற்கு நல்ல விஷயங்கள் இருக்கும் போது, ஆபாசத்தை எழுதுகிறார். இவர் ஒரு லோக்கல் என்று எழுதுகிறீர்கள். நான் கேட்கிறேன் "எழுதுவதற்கு நல்ல விஷயங்கள் இருக்கும் போது, ஒரு லோகலைப் பற்றி" நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்.?

    எனக்கு தெரிந்த காரணம் ஒண்ணே ஒண்ணு. "வயித்தெரிச்சல்".

    =======
    முருகன்

    ReplyDelete
  28. இவ்வள பேசுற நீங்க இன்னும் ஏன் அவரோட வலைப்பதிவை follow பண்ணுரிங்க

    ReplyDelete
  29. @முருகன்

    நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா ஜாக்கி என்பவர் அரசாங்கம் அல்ல. பொதுவா தாக்குறதுக்கு. மேலும் நாங்கள் சீரியசா எழுதல. நையாண்டி செய்யும் போது கவுண்டர் ஸ்டைல தான் பேச முடியும். காமெடி பீஸை பத்தி சிரியசா பேசுற அளவுக்கு நாங்க காமெடி பிஸ் இல்ல. சாரு பத்தியும் எழுதிருக்கேன் படிங்க..
    http://ilavarasanr.blogspot.com/2010/10/blog-post_14.html?showComment=1287598420795#c4318849801754276459

    ReplyDelete
  30. @carthikeyan
    //இவ்வள பேசுற நீங்க இன்னும் ஏன் அவரோட வலைப்பதிவை follow பண்ணுரிங்க///

    என்னிக்காவது ஒரு நாள் நல்ல பதிப்பு போடுவாறுன்னுதான் பாத்துகிட்டு இருக்கேன்..அது நடக்குற மாதிரி தெரியல..

    ஒருவேள அந்த 730 பேரும் என்னை மாதிரிதான் எதிர் பாத்துகிட்டு இருப்பாங்களோ?

    ReplyDelete
  31. @Murugan

    //அவர் எழுது ஆபாசம்னா இதுக்கு பேரு என்ன என்று விளக்குவீர்களா? இது என்ன குடும்பத்தோட உட்கார்ந்து படிக்கக் கூடிய வார்த்தைகளா? //


    அவரு ரொம்ப decent , இவரு வக்காலத்து வாங்க வந்துட்டாரு.
    அவரு எழுதுன ப்ளாக் படிச்சிட்டு வர உங்களுக்கு இந்த ஒரு வார்த்தை எழுதினது ஆபாசமா தெரியுதா??
    மொதல்ல அந்த blog aa படிச்சு, அவர திருத்த பாருங்க முருகன் ,
    சும்மா இடம் காலியா இருக்கு னு இங்க வந்து comment போடாதீங்க.

    ReplyDelete
  32. @முருகன்:
    ////இந்த நாயி இது மாதிரியெல்லாம் எழுதுதேன்னு நாம சும்மா போனா அது பின்னாலயே வந்து பொச்ச புடிச்சி கடிச்சி வச்சிரும். இதயெல்லாம் விட்டு வைக்ககூடாது. வெட்டி வைக்கிறதுதான் சரி //

    இவ்வளவு பெரிய பின்னூட்டம் இட்டதற்கு நன்றி... நான் உபயோகித்திருக்கும் இந்த வார்த்தை தலைவர் கவுண்டமணியால் நிறைய படங்களில் உபயோகிக்கப்பட்டு, தனிக்கை செய்யப்படாமல் வெளியிடப்பட்டு இருக்கிறது.அதனாலேயே அதை உபயோகித்திருக்கிறேன். இருப்பினும் வேறு எவரேனும் இதே போல பின்னூட்டம் அளித்தால் அந்த வார்த்தையை மாற்றுவதிலும் எனக்கு எந்த ஆட்ட்சேபனையும் இல்லை.


    //முகம் தெரியாத நண்பரே, ஆபாசங்களுக்கு எதிரி எனில், நடிகை ஷகீலா பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்? //

    அண்ணே நா என்னை சாமியார்னு எதாவது சொன்னேனா? நாம வீட்டுல இருக்கும் போது உள்ளாடை மட்டும் அணிந்து உறங்கலாம். அது அபத்தம் இல்லை. அதே உள்ளாடையை மட்டும் அணிந்து தெருவில் திரிவதே அபத்தம். புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  33. சிவா இங்க நாம யாரும் யாரையும் திருத்த இல்லா... எம் ஜி யார் சொன்ன மாதிரி திருடனா பார்த்து திருந்தா விட்டா திருட்ட ஒழிக்க முடியாது

    ReplyDelete
  34. அண்ணே நா என்னை சாமியார்னு எதாவது சொன்னேனா? நாம வீட்டுல இருக்கும் போது உள்ளாடை மட்டும் அணிந்து உறங்கலாம். அது அபத்தம் இல்லை. அதே உள்ளாடையை மட்டும் அணிந்து தெருவில் திரிவதே அபத்தம். புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

    ----------

    Great...

    ReplyDelete
  35. // ஜாக்கியையே இப்படி எழுதுகிறீர்களே, நீங்கள் இன்னும் "சாரு" பற்றி எல்லாம் படிக்கவில்லை போல இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக படித்து இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். ஆபாசத்தை பற்றி எழுதி இருந்தீர்கள் என்றால் நீங்கள் அவரையும் சேர்த்திருக்க வேண்டும். அதற்காக நான் ஜாக்கியை, "சாரு" வோடு ஒப்பிடவில்லை. ஒப்பிடவே முடியாது. ஆனால் ஆபாசத்தை எதிர்பதாக கூறும் நீங்கள் "ஜாக்கியை" மட்டும் ஏன் கலாய்க்கிறீர்கள் என்று புரியவில்லை //


    எங்களுக்கு தெரிந்தவரை மட்டும் தான் நாங்க சொல்ல முடியும், கேட்க முடியும்,நாங்க என்ன நாட்டாமை யா??

    உங்களுக்கு சாரு மேல இருக்க காட்டத்தை ஏன் இங்கு காட்டுகிறீர்கள்??

    சென்று அவரிடம் காட்டுங்கள்.

    இந்த பதிவு ஜாக்கியை குறித்து, சாருவை குறித்து அல்ல

    ReplyDelete
  36. // எனக்கு தெரிந்த காரணம் ஒண்ணே ஒண்ணு. "வயித்தெரிச்சல்". //


    ஆமாம் இவரு ஐன்ஸ்டீன் கண்டு புடிச்சிட்டாரு ,
    அவரு ஒரு stevenspielberg , அவர பார்த்து எங்களுக்கு ஒரே வயித்தெரிச்சல்.

    ஹி ஹி ஹி

    நீங்க சிவா பதிவை விட நல்லா comedy பண்றீங்க, அசத்த போவது யாரு ல ட்ரை பண்ணுங்க

    ReplyDelete
  37. @Murugan

    முருகன் அண்ணே, உங்களுக்கு இந்த டயலாக் சமர்ப்பணம்.

    "பிச்சைகாரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரனே"

    ReplyDelete
  38. Anti Jackie Force commando 1October 22, 2010 at 3:07 PM

    @Murugan


    முருகன் அண்ணே, நீங்க கவலை படாதீங்க, ஜாக்கி அண்ணன் இதை பார்த்து திருந்திட்டா
    அப்புறம் யாரு ப்ளாக் ஆ படிக்கிறதுங்குற , உங்க கவலை, மன உளைச்சல் எங்களுக்கு புரியுது.

    கவலை படாதீங்க அவரு அவ்வளவு சீக்கிரம் திருந்த மாட்டாரு.

    ReplyDelete
  39. @ Panithuli shankar

    ///////பதிவுலகம் நான் வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன... இதுவரை பெரிய பிரச்சனைகளை நான் சந்தித்தது இல்லை...பெரிய பிரச்சனைகளில் நான் தலையிட்டதும் இல்லை... காரணம் இது நம்ம பொழப்பு இல்லை என்பதில் மிக தெளிவாக இருக்கின்றேன்...
    ////////////////

    இதுதான் தல நல்லது அதே நேரத்தில் ஏதாவது பயனுள்ள சில பதிவுகளை கொடுத்துவிடலாம் .


    //இந்த நாயை எங்கிருந்து பிடிச்சிங்க பார்க்கவே பயமாக இருக்கு //

    adhu avar photo dhan, konjam uthu paarunga. ha ha ha

    ReplyDelete
  40. அப்புறம் சிங்கப்பூர், மலேசியா, குறிப்பா தாய்லாந்து தலைவரின் அதிர்ச்சி பேட்டி எங்கே?

    தாய்லாந்தில் இப்ப தலைவரு யாரு?
    என்னது தலைவியா?
    ...ஆளவுடு...ஜூட்..

    ReplyDelete
  41. முருகன்October 22, 2010 at 11:08 PM

    @ilavarasanr

    //==== நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா ஜாக்கி என்பவர் அரசாங்கம் அல்ல. பொதுவா தாக்குறதுக்கு. மேலும் நாங்கள் சீரியசா எழுதல. நையாண்டி செய்யும் போது கவுண்டர் ஸ்டைல தான் பேச முடியும். காமெடி பீஸை பத்தி சிரியசா பேசுற அளவுக்கு நாங்க காமெடி பிஸ் இல்ல. சாரு பத்தியும் எழுதிருக்கேன் படிங்க..
    http://ilavarasanr.blogspot.com/2010/10/blog-post_14.html?showComment=1287598420795#c4318849801754276459 ====//

    எழுதுவது பதிவர் உரிமை. படிப்பதுவும் புறக்கணிப்பதுவும் படிப்பவர் உரிமை. இதில் நையாண்டி செய்வதற்கு நீங்கள் யார்? ஆபாச அருவருக்கத்தக்க பதிவுகளை புறக்கணியுங்கள்!!! புறக்கணிப்பை விட பெரிய தண்டனை எதுவும் இல்லை. அருவருப்புகள் எதுவும் வெற்றிகரமாய் தொடர்ந்தது கிடையாது. ஆனால் அதனை கண்டிக்கிறேன் பேர்வழி என்று தனி மனித தாக்குதல் செய்வது ஏற்புடையது அல்ல. கவுண்டர் ஸ்டைல்ல நீங்க எழுதினா, அவர் ஸ்டைல அவர் எழுதுறார். அடுத்தவரை, படிப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு நையாண்டி செய்வது உங்கள் ஸ்டைல் என்றால் ஆபாசமாக எழுதுவது அவர் ஸ்டைலாக இருக்கலாம்.

    "சாரு" பற்றி நீங்கள் (ilavarasanr) எழுதவில்லை என்று சொல்லவில்லை. முத்துசிவா எழுதவில்லை என்றுதான் சொல்லி இருக்கிறேன். ஆபாசத்தை எதிர்த்து பதிவு போடுங்கள். அப்படி போடும்பொழுது யாரெல்லாம் ஆபாசமாக எழுதுகிறார்கள் என்று கருதுகிறீர்களோ அவர்களை குறிப்பிடுங்கள். அது உங்கள் உரிமை. ஆனால் நையாண்டி செய்வது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, உடல் அழகை கிண்டல் செய்வது கண்டிப்பாக கண்டனத்திற்குரிய ஒன்று.

    இங்கு பதிவுகளை தணிக்கை செய்வதற்கு எந்த அமைப்போ அல்லது தனி நபரோ இல்லை. இது பதிவுலகின் பலம் மற்றும் பலவீனம் ஆகும்.

    ========
    முருகன்

    ReplyDelete
  42. முருகன்October 22, 2010 at 11:53 PM

    @Karthik


    =======

    //அவர் எழுது ஆபாசம்னா இதுக்கு பேரு என்ன என்று விளக்குவீர்களா? இது என்ன குடும்பத்தோட உட்கார்ந்து படிக்கக் கூடிய வார்த்தைகளா? //


    அவரு ரொம்ப decent , இவரு வக்காலத்து வாங்க வந்துட்டாரு.
    அவரு எழுதுன ப்ளாக் படிச்சிட்டு வர உங்களுக்கு இந்த ஒரு வார்த்தை எழுதினது ஆபாசமா தெரியுதா??
    மொதல்ல அந்த blog aa படிச்சு, அவர திருத்த பாருங்க முருகன் ,
    சும்மா இடம் காலியா இருக்கு னு இங்க வந்து comment போடாதீங்க.

    =============

    ஒரு துளி மலம் அள்ளி வாயில் வைத்தாலும் அசிங்கம்தானே. அவரை குற்றம் சொல்லும் உங்கள் எழுத்தைதான் நான் குறிப்பிட்டேன். ஏன் இந்த சப்பைக்கட்டு பதில். இங்க யாரும் யாரையும் திருத்த வேண்டியதில்லை. திருத்தவும் முடியாது. உங்கள் குறையை சுட்டிக் காட்டியதற்கே, நான் வக்காலத்து வாங்குவதாய் சொல்கிறீர்கள். உங்கள் இடம் காலியாக இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. நீங்கள்தான் சொல்கிறீர்கள்.



    ============

    // ஜாக்கியையே இப்படி எழுதுகிறீர்களே, நீங்கள் இன்னும் "சாரு" பற்றி எல்லாம் படிக்கவில்லை போல இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக படித்து இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். ஆபாசத்தை பற்றி எழுதி இருந்தீர்கள் என்றால் நீங்கள் அவரையும் சேர்த்திருக்க வேண்டும். அதற்காக நான் ஜாக்கியை, "சாரு" வோடு ஒப்பிடவில்லை. ஒப்பிடவே முடியாது. ஆனால் ஆபாசத்தை எதிர்பதாக கூறும் நீங்கள் "ஜாக்கியை" மட்டும் ஏன் கலாய்க்கிறீர்கள் என்று புரியவில்லை //


    எங்களுக்கு தெரிந்தவரை மட்டும் தான் நாங்க சொல்ல முடியும், கேட்க முடியும்,நாங்க என்ன நாட்டாமை யா??

    உங்களுக்கு சாரு மேல இருக்க காட்டத்தை ஏன் இங்கு காட்டுகிறீர்கள்??

    சென்று அவரிடம் காட்டுங்கள்.

    இந்த பதிவு ஜாக்கியை குறித்து, சாருவை குறித்து அல்ல

    ================

    எனக்கு சாரு மீது எந்த காட்டமும் கிடையாது. சாரு மீது மட்டும் அல்ல. உங்கள் குழு மீதும்தான். பிடித்தால் படிப்பேன் இல்லை என்றால் புறக்கணிப்பேன். சாரு தனி ஒருவர் மீது எழுத்து தாக்குதல் நடத்தினாலும், யாரும் குழு அமைத்து அதனை சப்போர்ட் செய்வதில்லை. சக பதிவரது உடல் அமைப்பையோ, உடல் அழகையோ கிண்டல் செய்வதில்லை. ஆனால் இங்கு அப்படி இல்லை. அதனால் தான் இந்த பதில். ஜாக்கியை கிண்டலடித்துதான் பதிவிட்டு உள்ளீர்கள். அதைதான், தனி மனித தாக்குதல் என்கிறேன். அப்படித்தான் செய்வோம் என்கிறீர்கள் நீங்கள்.



    =============

    // எனக்கு தெரிந்த காரணம் ஒண்ணே ஒண்ணு. "வயித்தெரிச்சல்". //


    ஆமாம் இவரு ஐன்ஸ்டீன் கண்டு புடிச்சிட்டாரு ,
    அவரு ஒரு stevenspielberg , அவர பார்த்து எங்களுக்கு ஒரே வயித்தெரிச்சல்.

    ஹி ஹி ஹி

    நீங்க சிவா பதிவை விட நல்லா comedy பண்றீங்க, அசத்த போவது யாரு ல ட்ரை பண்ணுங்க

    =============



    நான் ஐன்ஸ்டீனா, அயிரை மீன் விற்பவனா என்பது கேள்வியல்ல. சக மனிதனின் உடல் அமைப்பை கிண்டல் செய்யும் கொடூர டீசிங் மனப்பான்மை இல்லாமல் இருக்கிறதா என்பதே கேள்வி. செந்தில் படம் போட்டு யாரை அசிங்கப்படுதுகிறீர்கள்? செந்திலைப்போல ஜாக்கி என்கிறீர்களா? அல்லது ஜாக்கியைபோல செந்தில் என்கிறீர்களா? ஏன் இந்த உடற்கூறு தாக்குதல்? அய்யா அழகு வீரர்களே, இந்த கேவலமான் கொடூரமான் உடற்கூறு தாக்குதல் தவறு என்று சொல்வதற்கு ஐன்ஸ்டீன் வேண்டியதில்லை. மனிதனை மனிதனாய் மதிக்கும் மனப்பாங்கு போதும்.



    -------

    முருகன்

    ReplyDelete
  43. முருகன்October 22, 2010 at 11:53 PM

    @Karthik


    =======

    //அவர் எழுது ஆபாசம்னா இதுக்கு பேரு என்ன என்று விளக்குவீர்களா? இது என்ன குடும்பத்தோட உட்கார்ந்து படிக்கக் கூடிய வார்த்தைகளா? //


    அவரு ரொம்ப decent , இவரு வக்காலத்து வாங்க வந்துட்டாரு.
    அவரு எழுதுன ப்ளாக் படிச்சிட்டு வர உங்களுக்கு இந்த ஒரு வார்த்தை எழுதினது ஆபாசமா தெரியுதா??
    மொதல்ல அந்த blog aa படிச்சு, அவர திருத்த பாருங்க முருகன் ,
    சும்மா இடம் காலியா இருக்கு னு இங்க வந்து comment போடாதீங்க.

    =============

    ஒரு துளி மலம் அள்ளி வாயில் வைத்தாலும் அசிங்கம்தானே. அவரை குற்றம் சொல்லும் உங்கள் எழுத்தைதான் நான் குறிப்பிட்டேன். ஏன் இந்த சப்பைக்கட்டு பதில். இங்க யாரும் யாரையும் திருத்த வேண்டியதில்லை. திருத்தவும் முடியாது. உங்கள் குறையை சுட்டிக் காட்டியதற்கே, நான் வக்காலத்து வாங்குவதாய் சொல்கிறீர்கள். உங்கள் இடம் காலியாக இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. நீங்கள்தான் சொல்கிறீர்கள்.



    ============

    ReplyDelete
  44. முருகன்October 22, 2010 at 11:54 PM

    // ஜாக்கியையே இப்படி எழுதுகிறீர்களே, நீங்கள் இன்னும் "சாரு" பற்றி எல்லாம் படிக்கவில்லை போல இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக படித்து இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். ஆபாசத்தை பற்றி எழுதி இருந்தீர்கள் என்றால் நீங்கள் அவரையும் சேர்த்திருக்க வேண்டும். அதற்காக நான் ஜாக்கியை, "சாரு" வோடு ஒப்பிடவில்லை. ஒப்பிடவே முடியாது. ஆனால் ஆபாசத்தை எதிர்பதாக கூறும் நீங்கள் "ஜாக்கியை" மட்டும் ஏன் கலாய்க்கிறீர்கள் என்று புரியவில்லை //


    எங்களுக்கு தெரிந்தவரை மட்டும் தான் நாங்க சொல்ல முடியும், கேட்க முடியும்,நாங்க என்ன நாட்டாமை யா??

    உங்களுக்கு சாரு மேல இருக்க காட்டத்தை ஏன் இங்கு காட்டுகிறீர்கள்??

    சென்று அவரிடம் காட்டுங்கள்.

    இந்த பதிவு ஜாக்கியை குறித்து, சாருவை குறித்து அல்ல

    ================

    எனக்கு சாரு மீது எந்த காட்டமும் கிடையாது. சாரு மீது மட்டும் அல்ல. உங்கள் குழு மீதும்தான். பிடித்தால் படிப்பேன் இல்லை என்றால் புறக்கணிப்பேன். சாரு தனி ஒருவர் மீது எழுத்து தாக்குதல் நடத்தினாலும், யாரும் குழு அமைத்து அதனை சப்போர்ட் செய்வதில்லை. சக பதிவரது உடல் அமைப்பையோ, உடல் அழகையோ கிண்டல் செய்வதில்லை. ஆனால் இங்கு அப்படி இல்லை. அதனால் தான் இந்த பதில். ஜாக்கியை கிண்டலடித்துதான் பதிவிட்டு உள்ளீர்கள். அதைதான், தனி மனித தாக்குதல் என்கிறேன். அப்படித்தான் செய்வோம் என்கிறீர்கள் நீங்கள்.



    =============

    // எனக்கு தெரிந்த காரணம் ஒண்ணே ஒண்ணு. "வயித்தெரிச்சல்". //


    ஆமாம் இவரு ஐன்ஸ்டீன் கண்டு புடிச்சிட்டாரு ,
    அவரு ஒரு stevenspielberg , அவர பார்த்து எங்களுக்கு ஒரே வயித்தெரிச்சல்.

    ஹி ஹி ஹி

    நீங்க சிவா பதிவை விட நல்லா comedy பண்றீங்க, அசத்த போவது யாரு ல ட்ரை பண்ணுங்க

    =============



    நான் ஐன்ஸ்டீனா, அயிரை மீன் விற்பவனா என்பது கேள்வியல்ல. சக மனிதனின் உடல் அமைப்பை கிண்டல் செய்யும் கொடூர டீசிங் மனப்பான்மை இல்லாமல் இருக்கிறதா என்பதே கேள்வி. செந்தில் படம் போட்டு யாரை அசிங்கப்படுதுகிறீர்கள்? செந்திலைப்போல ஜாக்கி என்கிறீர்களா? அல்லது ஜாக்கியைபோல செந்தில் என்கிறீர்களா? ஏன் இந்த உடற்கூறு தாக்குதல்? அய்யா அழகு வீரர்களே, இந்த கேவலமான் கொடூரமான் உடற்கூறு தாக்குதல் தவறு என்று சொல்வதற்கு ஐன்ஸ்டீன் வேண்டியதில்லை. மனிதனை மனிதனாய் மதிக்கும் மனப்பாங்கு போதும்.



    -------

    முருகன்

    ReplyDelete
  45. முருகன்October 22, 2010 at 11:55 PM

    =============

    // எனக்கு தெரிந்த காரணம் ஒண்ணே ஒண்ணு. "வயித்தெரிச்சல்". //


    ஆமாம் இவரு ஐன்ஸ்டீன் கண்டு புடிச்சிட்டாரு ,
    அவரு ஒரு stevenspielberg , அவர பார்த்து எங்களுக்கு ஒரே வயித்தெரிச்சல்.

    ஹி ஹி ஹி

    நீங்க சிவா பதிவை விட நல்லா comedy பண்றீங்க, அசத்த போவது யாரு ல ட்ரை பண்ணுங்க

    =============



    நான் ஐன்ஸ்டீனா, அயிரை மீன் விற்பவனா என்பது கேள்வியல்ல. சக மனிதனின் உடல் அமைப்பை கிண்டல் செய்யும் கொடூர டீசிங் மனப்பான்மை இல்லாமல் இருக்கிறதா என்பதே கேள்வி. செந்தில் படம் போட்டு யாரை அசிங்கப்படுதுகிறீர்கள்? செந்திலைப்போல ஜாக்கி என்கிறீர்களா? அல்லது ஜாக்கியைபோல செந்தில் என்கிறீர்களா? ஏன் இந்த உடற்கூறு தாக்குதல்? அய்யா அழகு வீரர்களே, இந்த கேவலமான் கொடூரமான் உடற்கூறு தாக்குதல் தவறு என்று சொல்வதற்கு ஐன்ஸ்டீன் வேண்டியதில்லை. மனிதனை மனிதனாய் மதிக்கும் மனப்பாங்கு போதும்.



    -------

    முருகன்

    ReplyDelete
  46. முருகன்October 22, 2010 at 11:55 PM

    // ஜாக்கியையே இப்படி எழுதுகிறீர்களே, நீங்கள் இன்னும் "சாரு" பற்றி எல்லாம் படிக்கவில்லை போல இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக படித்து இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். ஆபாசத்தை பற்றி எழுதி இருந்தீர்கள் என்றால் நீங்கள் அவரையும் சேர்த்திருக்க வேண்டும். அதற்காக நான் ஜாக்கியை, "சாரு" வோடு ஒப்பிடவில்லை. ஒப்பிடவே முடியாது. ஆனால் ஆபாசத்தை எதிர்பதாக கூறும் நீங்கள் "ஜாக்கியை" மட்டும் ஏன் கலாய்க்கிறீர்கள் என்று புரியவில்லை //


    எங்களுக்கு தெரிந்தவரை மட்டும் தான் நாங்க சொல்ல முடியும், கேட்க முடியும்,நாங்க என்ன நாட்டாமை யா??

    உங்களுக்கு சாரு மேல இருக்க காட்டத்தை ஏன் இங்கு காட்டுகிறீர்கள்??

    சென்று அவரிடம் காட்டுங்கள்.

    இந்த பதிவு ஜாக்கியை குறித்து, சாருவை குறித்து அல்ல

    ================

    எனக்கு சாரு மீது எந்த காட்டமும் கிடையாது. சாரு மீது மட்டும் அல்ல. உங்கள் குழு மீதும்தான். பிடித்தால் படிப்பேன் இல்லை என்றால் புறக்கணிப்பேன். சாரு தனி ஒருவர் மீது எழுத்து தாக்குதல் நடத்தினாலும், யாரும் குழு அமைத்து அதனை சப்போர்ட் செய்வதில்லை. சக பதிவரது உடல் அமைப்பையோ, உடல் அழகையோ கிண்டல் செய்வதில்லை. ஆனால் இங்கு அப்படி இல்லை. அதனால் தான் இந்த பதில். ஜாக்கியை கிண்டலடித்துதான் பதிவிட்டு உள்ளீர்கள். அதைதான், தனி மனித தாக்குதல் என்கிறேன். அப்படித்தான் செய்வோம் என்கிறீர்கள் நீங்கள்.

    ReplyDelete
  47. முருகன்October 23, 2010 at 12:02 AM

    @Anti Jackie Force commando 1 said...


    ஜாக்கி திருந்திட்டாலோ அல்லது திருந்தாவிட்டாலோ எனக்கு கவலை இல்லை. யாரை அடுத்து கிண்டலடிக்கலாம், நையாண்டி செய்யலாம் என்று தேடவேண்டியிருக்கும் உங்களுக்குத்தான் கவலை எல்லாம்.



    அவரு திருந்திட்டா அருவருக்கத்தக்க பதிவு எழுதும் தளமே இல்லையா என்ன? இங்க வந்து தினமும் வாசிக்க போறேன். அவரை விட அருவருக்க தக்க வகையில நீங்க தானே காமெடிங்கற பேர்ல எழுதி வர்றீங்க.

    ReplyDelete
  48. தேவையற்ற தனி மனிதத் தாக்குதல்..

    ReplyDelete
  49. WTF , hate these kinda ppl , u don have any other issues other than this..........

    ReplyDelete
  50. //சக பதிவரது உடல் அமைப்பையோ, உடல் அழகையோ கிண்டல் செய்வதில்லை. ஆனால் இங்கு அப்படி இல்லை. அதனால் தான் இந்த பதில். ஜாக்கியை கிண்டலடித்துதான் பதிவிட்டு உள்ளீர்கள். அதைதான், தனி மனித தாக்குதல் என்கிறேன். அப்படித்தான் செய்வோம் என்கிறீர்கள் நீங்கள்.//

    நண்பரே... நான் ஜாக்கி அண்ணனை பற்றி நான் வெளியிட்ட பதிப்புகளில் அவரின் உடல் அமைப்பை கிண்டல் செய்வது போல தங்களுக்கு உண்ர்த்தியது எந்த பதிப்பு? எந்த வரிகள்?

    ஜாக்கி அண்ணனை பற்றி நான் வெளியிட்டிருக்கும் மூன்று பதிப்புகளிலும் அவரது ஆபாசமான எழுத்து நடையை மட்டுமே தாக்கி எழுதியிருந்தேனே தவிற உடல் அமைப்பையோ, அழகையோ அல்ல..

    ReplyDelete
  51. //அவரு திருந்திட்டா அருவருக்கத்தக்க பதிவு எழுதும் தளமே இல்லையா என்ன? இங்க வந்து தினமும் வாசிக்க போறேன். அவரை விட அருவருக்க தக்க வகையில நீங்க தானே காமெடிங்கற பேர்ல எழுதி வர்றீங்க. //

    ஆக ஜாக்கி அண்ணன் அருவருக்க தக்க பதிப்புகளை எழுதி வருகிறார் என்பதை தாங்களே ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா? என்னுடைய பதிப்புகள் சிறந்த பதிப்புகள் என்று நான் சொல்லவில்லை...சொல்லவும் மாட்டேன் ஆனால் அருவருக்க தக்க பதிக்க பதிப்புகளாக இருந்ததில்லை. இருக்கவும் இருக்காது. தொடந்து அதுமாதிரியான பதிப்புகளை படித்து தங்களுக்கு இப்போது எது எதெல்லாம் அருவருக்க தக்க பதிப்புகளாக தெரிகிறது பார்த்தீர்களா?

    ReplyDelete
  52. இது போன்ற பனி(பதிவுலக)ப்போர்கள் எப்போதான் நிக்குமோனு தெரில.. எனினும் எவ்வளவோ நல்ல விசயங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை சொல்லலாமே நண்பரே! இது போன்ற பதிவுகள் நீங்கள் அவருக்கு இலவசமாக கொடுக்கும் விளம்பரங்களாகவே அமையும்.. எனவே உங்கள் எழுத்தாற்றலை வேறு விதமான பதிவுகளாக எதிர்பார்க்கிறேன் நண்பரே!

    ReplyDelete