Monday, March 28, 2016

சில்க் ஸ்மிதாவும் ஒரு சுமார் படமும் – காரைக்குடி கலாட்டா!!!


Share/Bookmark
என்னய்யா இவன் ரெண்டு மாசத்துக்கு ஒருதபா நாங்க காலேஜ்ல அதப் பண்ணோம் இதப்பண்ணோம்னு ஆரம்பிச்சிடுறானேன்னு வெறிக்காதீங்க. கடுப்புல இருக்க சமயத்துல சந்தோஷமா இருந்த நாட்களை கொஞ்சம் திரும்பிப் பாத்துக்குறதுக்காகத்தான் அடிக்கடி கல்லூரிப் பதிவு. மேலும் சில விஷயங்கள் மறந்துடக் கூடாதுங்குறதுக்காக தோணுறப்போ பதிவா எழுதி வச்சிக்கிறதுக்கும் கூட. படிக்கிற நேரம் போக மிச்ச நேரத்தல நாங்க என்ன பன்னுவோம்னா….. யார்ரா அது சிரிக்கிறது? ஒரு பேச்சிக்கு கூட படிச்சோம்னு சொல்லக்கூடாதாப்பு. சரி க்ளாஸ்ல போய் தூங்குற நேரம் போக மிச்ச நேரத்த பயனுள்ள வகையில கழிக்கிறதுக்காக பல விளையாட்டுக்கள கண்டுபுடிச்சி வச்சிருந்தோம். அப்படி ஒரு விளையாட்டுக்களப் பத்தி தான் இன்னிக்கு பாக்கப் போறோம்.


க்ளாஸ் ரூமுக்கு வெளில பொழுது போறது ஒரு பெரிய விஷயமே இல்ல. இவிய்ங்க பாடம் நடத்தும்போது பொழுதப் போக்குறதுதான் ரொம்ப கஷ்டம். சரி சைடுல திரும்பி ”ஆல் யங் கேர்ள்ஸ்” ah பாத்தாவது டைம் பாஸ் பன்னலாம்னு பாத்தா, நம்ம எந்தப் புள்ளைய பாக்க நினைக்கிறமோ அதத் தவற மத்த எல்லாம் நம்ம அதப் பாக்குறத பாத்துரும்ங்க. ஒரே குஸ்டமப்பா. அந்த கேப்புல உருவானதுதான் “வரியப்படி..கண்டுபுடி” விளையாட்டு.. நாலாவது டெஸ்க்லருந்து ஒரு பிட்டு பேப்பர்ல எதாவது ஒரு பாட்டோட சரணத்துல வர்ற ரெண்டு வரிய எழுதி பின்னாடி ஆறாவது டெஸ்க்ல உள்ள என் நண்பனுக்கு அனுப்பி விடுவேன். அவன் அது என்ன பாட்டுன்னு கண்டுபுடிப்பான். கண்டுபுடிச்சா அவன் ஒரு கோலு. கண்டுபுடிக்காட்டி நா ஒரு கோலு.. இப்படியே மாறி மாறி மாறி மாறி… க்ளாஸ் முடிஞ்சிரும். அப்புறம் கெளம்பி ஹாஸ்டலுக்கு போக வேண்டியதுதான்.

அப்புறம் ஹாஸ்டல்ல ஒரு கேம் உருவாக்குனோம் பாருங்க. உலகத்துல ஒருபய விளாண்டுருக்க மாட்டான் அதுமாதிரி. அதான் ”செருப்பத் தூக்கு… எல்லாம் உனக்கு” விளாட்டு. சப்ளிங் மாதிரி இதுவும் ஒரு புதுமாதிரியான விளாட்டு. அதாவது என் ஃப்ரண்ட்டு போட்டுருக்க செருப்ப அவனுக்கு தெரியாம தூக்கி ஒளிச்சி வைக்கனும். ஒரு நாள் டைம். அவன் அசந்த நேரத்துல செருப்ப தூக்கி ஒளிச்சி வச்சிட்டா அந்த செருப்பு நமக்கு. ஒளிச்சி வச்ச செருப்ப அவன் கண்டுபுடிச்சிட்டா அவனுக்கு. ” ஏண்டா இதெல்லாம் ஒரு கேமாடா… எல்லா கல்யாண மண்டபத்துலயும் இந்த கேம்தானடா வெளாடுறாய்ங்கன்னு எல்லாரும் வாயில எச்சிய காரிக்கிட்டு என்னப் பாக்குறீங்கன்னு இங்கருந்தே தெரியிது. ஆனா நானும் என்னோட ரூம்மேட் ப்ரபுவும் இந்த கேம ரொம்ப சீரியஸா விளாடுவோம். எங்க செருப்ப தூக்கிருவாய்ங்களோன்னு, செருப்ப காலோட கயிறு போட்டு கட்டிக்கிட்டெல்லாம் தூங்கிருக்கான். ஒன்ஸ் செருப்ப தூக்கிட்டா கண்டுபுடிக்கிறதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. 60 ரூமுக்குள்ள எந்த ரூம்ல போய் தேடுறது. அதோட ஸ்வாகாதான். இதான் கேம் நம்பர் ரெண்டு.

அடுத்த கேம் தான் நாங்க டெவலப் பன்னதுலயே ரொம்ப சக்ஸஸ்ஃபுல் கேம். வேற ஒண்ணும் இல்லை.. நம்ம விஜய் டிவில கொஞ்ச நாள் முன்னால வந்த “யார் மனசுல யாரு” game ah தமிழ் சினிமா கேரக்டர்களுக்காக மட்டும் வச்சி விளையாடுவோம். கேமோட ரூல்ஸ் இது தான். தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட ஆட்களை மட்டும் தான் நினைச்சிக்கனும். நடிகர், நடிகை, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர்னு யார வேணாலும் நினைச்சிக்கலாம். மொத்தம் இருபத்தி ஒரு கேள்வி. ஒரிஜினல் கேம போலவே இதுலயும் Yes/No பதில் மட்டும் தான் சொல்லனும். நீங்க சொல்ற பதில்/Data எல்லாம் தமிழ் சினிமாவை சார்ந்ததா இருக்கனும். நாங்க கேக்குற கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியலன்னா அந்த கேள்வி கணக்குல எடுக்கமாட்டோம். இப்படி பல ரூல்ஸ்போட்டு விளையாடுவோம்.

இது கேக்க சாதாரணமா இருந்தாலும் எல்லாராலயும் விளையாட முடியாது. நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி எல்லாத்துலயும் சினிமா வெறி இருக்கவிங்களாலதான் விளையாட முடியும். Just like that ஒரு கேரக்டர நினைச்சிக்கிட்டு விளையாட வந்துட முடியாது. அந்த கேரக்டர பத்தி கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல டேட்டா கரெக்டா இருக்கனும். ஆரம்பத்துல சிம்பிளா எல்லாரும் ரஜினி, கமல் ரேஞ்சுக்கு நினைச்சிக்குவாய்ங்க. போகப்போக விளாவாரியா உள்ள புகுந்து வத்தலு, தொத்தலு, வெந்தது வேகாதது, ஒரு படத்துல ஹீரோயினா நடிச்சதுன்னு ரண கொடூரமான கேரக்டர்களையும் நினைச்சிக்குவாய்ங்க.

கிராண்ட் மாஸ்டர் பொசிஷன்ல கேள்வி கேட்டு கண்டுபுடிக்கிறது நானும் நண்பர் ப்ரபுவும் தான். எங்களால முடியாத பட்சத்துல எங்க டேட்டா பேஸ் குண்டு கார்த்தியையும், சிவில் கார்த்தியையும் refer பன்னிக்குவோம். சில சமயம் அவனுங்களே கண்டெஸ்டண்ட்டா வந்துட்டா நமக்கு தாவு தீந்துரும்.

ஃபைனல் இயர்.. ஏழாவது செமஸ்டர் நடந்துகிட்டு இருக்கு. குண்டு கார்த்தி நினைச்சிக்கிட்ட ஒரு கேரக்டர நான், ப்ரபு, கணேசன் மூணு பேரும் கேள்வி கேட்டு கண்டுபுடிச்சிட்டு இருக்கோம். பெரும்பாலும் அவங்க நினைச்ச கேரக்டருக்கு ரஜினி, கமல் படங்களோட எதாவது தொடர்பு இருக்கான்னு தான் முதல்ல செக் பன்னுவோம். அப்டி இருந்தா கண்டிப்பா அவுட்டு. ரஜினி படத்துல வர்ற கேரக்டர்னா நா கண்டுபுடிச்சிருவேன். கமல் படம்னா ப்ரபு கண்டுபுடிச்சிருவான். ஆனா அன்னிக்கு எதுவுமே சிக்கல. கண்ட கருமாந்திரத்த நினைச்சிருப்பான் போல. இருபத்தி ஒரு கேள்வியும் முடிஞ்சிருச்சி. அந்த நாயி யாருன்னே கண்டுபிடிக்க முடியல. நாங்க கேட்ட கேள்வியிலருந்து எங்களுக்கு கிடைச்ச டேட்டா என்னன்னா ”ஒரே ஒரு படத்துல ஹீரோவா நடிச்சிருக்க ஒரு ஆள்.. அவர் நடிச்ச அந்தப் படம் பெரிய ஹிட்டெல்லாம் இல்ல. அவருக்கு சின்னத்திரையோட தொடர்பு இருக்கு” இவ்ளோதான். மண்டை காயிது. பெரும்பாலும் நாங்க இந்த கேம்ல தோக்குறதில்லை.

ஒரு எக்ஸாம் முடிஞ்சி அடுத்த எக்ஸாமுக்கு மூணு நாள் லீவு. அந்த கேப்புல் படிக்காம இத விளையாண்டுகிட்டு இருக்கோம். நைட்டு பன்னெண்டு மணிக்கு மேல ஆயிப்போச்சு. இதக்கண்டுபுடிக்காம விடக்கூடாதுடான்னு யோசிச்சிக்கிட்டே உக்காந்துருக்கோம். டக்குன்னு கணேசன் “டேய் டெய்லி காலையில ஒருத்தன் ஒரு படத்துல மீசை இல்லாம தண்ணிக்குள்ள பூ பரிச்சிட்டு இருக்க ஒரு பாட்டு டிவில போடுவாய்ங்களே..  அவன் கூட சீரியல்ல வருவானே… “ அப்டின்னு எடுத்து விட அடுத்த 30 செகண்ட்ல புடிச்சிட்டோம். வேற யாரும் இல்லை ”மோக முள்”ங்குற படத்துல ஹீரோவா நடிச்ச , இப்ப பல சீரியல்கள்ல நடிச்சிட்டு இருக்குற, பெரும்பாலான ஆங்கில டப்பிங் படங்களுக்கு குரல் கொடுக்குற “நடிகர் அபிஷேக்” தான் அந்த கேரக்டர். அவனயெல்லாம் கண்டுபுடிச்சது எங்க கேம் ஹிஸ்ட்ரில மிகப்பெரிய Achievement.

இந்த குண்டு கார்த்திதான் இப்டின்னா சிவில் கார்த்தி அதுக்கும் மேல நினைப்பான். அவன்கிட்ட விளையாடனும்னா சாதாரண கேள்விகள விட்டுட்டு Advanced mode la தான் விளையாடனும். ஒரு தடவ ஒரு கேரக்டர் நினைச்சிக்கிட்டான். ரஜினிக்கு ஜோடியா நடிச்ச ஒரு பொண்ணு. ஒரே ஒரு படத்துல தான் நடிச்சிருக்கு. அந்தப் படம் வந்தது 1990 க்கு அப்புறம். எவ்வளவு ஈஸின்னு முதல்ல தோணுச்சி. எதைக்கேட்டாலும் இல்லை இல்லைங்குறான். இதுக்குமேல ரஜினி இனிமே படம் நடிச்சாதாண்டா உண்டுன்னு தோல்விய ஒத்துக்கிட்டேன். கடைசில அது யாருன்னு கேட்டா “வள்ளி” படத்துல ரஜினிக்கு ஜோடியா ஒரு பொண்ணு வரும். அத அதிகபட்சம் 30 செகண்ட் தான் காமிப்பாய்ங்க. அதுவும் மூஞ்ச காமிக்க மாட்டாய்ங்க. அந்தப் பொண்ணோட பேர சொல்லி அது சம்பந்தமான ஒரு ஆர்டிக்கிளையும் எடுத்து என்கிட்ட காமிச்சான். அன்னிக்கோட நா பொது வாழ்க்கையிலருந்து ஓய்வு பெறலாம்னு முடிவு பன்னிட்டேன்
.
நாங்க சீரியஸா விளையாண்டுகிட்டு இருக்கும்போது சுத்தி இருக்கவிய்ங்க ஹெல்ப் பண்றதா சொல்லி காண்டேத்துறதும் உண்டு. ஒருதடவ ஹாஸ்டலுக்கு வெளில சீரியஸா ஒருத்தனோட விளாண்டுக்கிட்டு இருந்தோம். கிட்டத்தட்ட கேம் முடியப்போற சமயம். யோசிச்சிட்டு இருந்தோம். அப்ப டக்குன்னு “பாஸூ” என்கிற “அருண் முருகன்” எண்டர் ஆனான். “யோவ் பாஸூ… என்னய்யா இவ்ளோ யோசிச்சிட்டு இருக்கீங்க… என்கிட்ட சொல்லுங்கையா நா ஹெல்ப் பன்றேன்” ன்னான்.  சரி நம்ம பாஸூ கண்டிப்பா ஹெல்ப் பன்னுவாருன்னு அவர்கிட்ட டீட்டெய்ல் சொன்னோம். “பாஸூ.. படையப்பா படத்துல நடிச்சிருக்கவருய்யா… வயசு நாப்பதுக்கு மேல…” ன்னு சொல்லி முடிக்கல “யோவ் பாஸூ.. ரம்யா கிருஷ்ணன்யா… இதுகூட தெரியல உங்களுக்கு” ன்னு சொல்லிட்டு போயிகிட்டே இருந்தான். நாங்க ரெண்டு பேரும் ஸ்லோ மோஷன்ல திரும்பி செவத்துல டமார் டமார்னு முட்டிக்கிட்டோம். ஆக்சுவலா அவன் நினைச்சிருந்த கேரக்டர் “இடிச்ச புளி செல்வராஜ்”

அதே மாதிரி நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சிட்டு இருக்கும்போது அசால்டா சில பேரு சொல்லிட்டு போயிருவாய்ங்க. ஒரு கேரக்டர கண்டுபுடிக்க முடியாம நானும் ப்ரபுவும் முழி பிதுங்கிட்டு இருந்தோம். ஞான சுந்தர் அந்த வழியா வந்தான். டீட்டெய்ல கேட்டான். “டேய் இவன் இந்த க்ரோதம் படத்துல நடிச்சவண்டா” ன்னுட்டு போய்ட்டே இருந்தான். உண்மையிலயே நாங்க கண்டுபுடிக்க கஷ்டப்பட்டது க்ரோதம் ப்ரேமத்தான். இவனுக்குள்ளயும் எதோ இருக்கு பாரேன்னு ஸாக் ஆயிட்டோம். 

அடுத்த சம்பவம் நண்பர் கஜேந்திரனோட. கஜேந்திரனப்பத்தி எப்ப நினைச்சாலும் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்து போகும். ஃபர்ஸ்ட் இயர் எங்க ரூமுக்கு அடுத்த ரூம்ல தான் கஜா இருந்தான். எல்லாரும் ஹாஸ்டல்ல சாப்பிட்டு பால் குடிச்சா, நம்மாளு மட்டும் பால புடிச்சிட்டு வந்து ரூமுக்குள்ள வச்சி ஹார்லிக்ஸ் போட்டு கலக்கி குடிப்பான். குடிச்சிட்டு ஹார்லிக்ஸ் பாட்டில பத்திரமா மூடி சூட்கேஸ்ல லாக் பன்னி வச்சிருவான். இது எங்களுக்கு ஒரே இரிட்டேட்டிங்கா இருந்துச்சி. இதுக்கு ஒரு முடிவு கட்டனும்னு யோசிச்சோம். கடைசில பாருங்க அவன் வச்சிருந்த VIP சூட்கேஸூம் நா வச்சிருந்ததும் ஒரே மாடல். அந்த மாடல்ல லாக் எல்லாமே காமன் தான். 

அவன் இல்லாத நேரத்துல நானு, ப்ரபு அனந்த், சுந்தர் எல்லாம் என்னோட கீய போட்டு தொறந்தோம். பொட்டி தொறந்துருச்சி. உள்ள பத்திரமாக வைக்கப்பட்டிருந்த ஹார்லிக்ஸ் பாட்டில எடுத்து நாலு பேரும் வெறும் வாயிலயே மிச்சம் இருந்த அரை பாட்டில் ஹார்லிக்ஸயும் திண்ணுட்டோம். காலி பாட்டில உள்ள வச்சி பூட்டும்போது ஒரு யோசனை… இத இப்டியே வச்சா நல்லாருக்காதுன்னு வேகவேகமா பாட்டில சுத்தமா கழுவி தொடச்சி, ஒரு பேப்பர்ல நாமம் வரைஞ்சி அந்த பாட்டிலுக்குள்ள போட்டு எப்பவும் இருந்தமாதிரியே பூட்டி வச்சிட்டோம். ரெண்டு நாள் கழிச்சி ஆசையா ஹார்லிக்ஸ் சாப்ட வந்த கஜாவுக்கு காத்திருந்தது அந்த நாமம் மட்டும்தான்.  

இப்ப நம்ம கஜா ஒரு நாள் நம்ம கேமுக்கு கண்டெஸ்டண்ட்டா வந்தான். அவன் நினைச்சது ஒரு ஹீரோயின் கம் சைடு ஆக்டர். ரஜினி கூட நடிச்சிருக்கா. ஓரளவு க்ளிக் ஆயிருச்சி. உறுதிப்படுத்திக்க “அந்த கேரக்டர் 90’s ல நடிச்ச ஒரு படம் மெகா ஹிட் ஆயிருக்கா?” ன்னு கேட்டோம். இல்லைன்னுட்டான். நாங்க கெஸ் பன்னி வச்சிருந்ததெல்லாம் புஸ்ஸூன்னு ஆயிருச்சி. மறுக்கா இன்வெஸ்டிகேஷன ஆரம்பிக்கிறதுக்குள்ள 21 கேள்வியும் முடிஞ்சி போச்சு. நாங்க கிட்டத்தட்ட மெண்டல் ஆகுற ஸ்டேஜுக்கு வந்துட்டோம். இவன் சொன்ன பதிலுக்கெல்லாம் மேட்ச் ஆகுற மாதிரி இருந்த ஒரு ஆள் நடிச்ச படம் 90’s la ப்ளாக் பஸ்டர். ஆனா இவன் இல்லன்னுடானே… யாரா இருக்கும். நைட்டு ஃபுல்லா போச்சு. கண்டுபுடிக்க முடியல. கடைசில கஜாகிட்ட தோல்விய ஒத்துக்கிட்டோம். சரி யாருன்னு சொல்லுடான்னு கேட்டா… அவனோட ஃபேவெரெட் ஸ்மைலோட “சில்க் ஸ்மிதா” மச்சின்னான்.

ஒக்கா மவனே.. இத்தானடா அந்த கேரக்டர் நடிச்ச படம் 90’s la மெகா ஹிட்டான்னு மாறி மாறி கேட்டோம். சீவலப்பேரி பாண்டில சிலுக்கு தானடா நடிச்சிருக்கான்னோம். “ஆமா சீவலப்பேரி பாண்டி ஒரு சுமாரான படம்தான.. அது எங்க ஓடுச்சி?” ன்னான். ”டொய்ய்ங்” ன்னு எங்களுக்கு தலை தொங்கிருச்சி. “என்ன மச்சி இல்லையா?” ன்னு உன்னை நினைத்து சார்லி மாதிரி அவன் கேக்க பதிலுக்கு மேட்டுக்குடி படத்துல “இப்ப நாதான் காலிங்” ன்னு சொல்ற கார்த்திய பாத்து கவுண்ட மணி கும்புடுவாரே.. அந்த மாதிரி ஒரு கும்புடப் போட்டுட்டு சைலண்ட்டா பொய்ட்டோம். அவனோட விளாண்ட கடைசி விளாட்டும் அதான்.

அதே கேம இன்னும் டெவலப் பன்னி, “ஒரு செகண்ட் கேரக்டர்” ன்னு ஒண்ணு விளையாண்டோம். அதாவது ஒரு நல்ல ஃபெமிலியரான படத்த சொல்லி அதுல ஒரே ஒரு ஷாட்ல மட்டும் வர்ற கேரக்டர நினைச்சிக்க  சொல்லி அத கண்டுபுடிக்கிறது. உதாரனமா ஒரு கேம்ல நா படையப்பா படத்துல நா மீசைவச்ச குழந்தைபப்பா ந்ங்குற வரி வரும்போடு தலைவர் முகம் ஒரு குழந்தை மாதிரி மாறுமே.. அந்தக் குழந்தைய நினைச்சிக்கிட்டேன். இப்படி பல பரிணாமங்களை அடைஞ்ச இந்த கேம் காலேஜ் முடிஞ்சப்புறமும் நேரம் கிடைக்கும்போது, மீட் பன்னும்போது விளையாண்டுக்கிட்டு தான் இருந்தோம். காலப்போக்குல அவன் அவன் குடும்பம் புள்ளை குட்டின்னு செட்டில் ஆயிட்டதால இப்ப விளையாட ஆள் தான் இல்லை. இன்னும் யாருக்காவடு விளையாடனும்னு ஆசை இருந்தா வாட்ஸப்ல ஒரு ping பன்னுங்க. ஐ ஆம் வொய்ட்டிங்...


குறிப்பு: உடுமலைப்பேட்டை கவுரவக் கொலை சம்பந்தமாக நான் எழுதிய சென்ற பதிவின் கருத்துக்களை நண்பர்கள் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையும் சிலர் மனது புண்படும்படியாக இருந்தது எனைபதையும் தனித்தகவல்கள் வாயிலாகவும், பின்னூட்டங்கள் வாயிலாகவும் அறிந்தேன். (சில “டீசண்டான” பின்னூட்டங்கள் வாயிலாகவும் அறிந்தேன்). என் மனதுக்கு தோன்றியவற்றை எழுதினேன். பெரும்பாலும் படிப்பவர்களை சிரிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பதிவுகளை எழுதி வருகிறேன். சிலசமயம் கொஞ்சம் சீரியஸான பதிவுகளை முயற்சி செய்யும் போது இதுபோல் மாட்டிக்கொள்கிறது. மன்னிக்கவும்.  


Thursday, March 17, 2016

சாதிகள் உள்ளதடி பாப்பா!!!


Share/Bookmark
குறிப்பு : இந்தப் பதிவு எந்த சாதியையோ சமூகத்தையோ சார்ந்தோ அல்லது ஆதரித்தோ எழுதப்பட்டது அல்ல. 
.
எந்திரன்ல சிட்டி ரோபோவ பரிசோதனை பன்னும்போது ஒருத்தர் “ஒரு உயிரோட மதிப்பு என்னன்னு கேப்பாரு. அதுக்கு சிட்டி “அது எந்த உயிருங்குறதப் பொறுத்து” ன்னு பதில் சொல்லும். அந்த பதில் நூற்றுக்கு நூறு உண்மை. நமக்கு வேண்டப்பட்ட ஒரு உயிர் போகும் போது அது நமக்கு ஏற்படுற வலி, வேதனை, கோபம் போன்றவை யாரோ ஒரு உயிர் போகும் போது நிச்சயம் வராது. உதாரணமா ஆஸ்திரேலியாவுல தீப்புடிச்சி ஒரு 50 பேர் இறந்துட்டா அது நமக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சாதாரண செய்தி. அதே இந்தியாவுக்குள்ள நடந்தா அத இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் குடுத்து படிப்போம். அதே தமிழ்நாட்டுல நடந்தா அது ரொம்ப முக்கியமான செய்தி. அது நம்ம ஊர்ல நடந்தா அந்த செய்தியே நம்மதான்.
.
மூணு நாளா டைம்லைன் ஃபுல்லா வெறும் உடுமலைப்பேட்டை காதல் ஜோடிய நடுரோட்டில் வெட்டுனதப்பத்துன ஸ்டேட்டஸ் மட்டும் தான் ஓடிக்கிட்டு இருக்கு. ஒவ்வொருத்தனும் டிசைன் டிசைனா பொங்குறாய்ங்க. ”பாவிகள்” “கொடூரர்கள்” “அவர்களை உடனே தூக்கிலிடவேண்டும்” “அவர்களை நடுரோட்டில் வைத்து வெட்டி எறிய வேண்டும்” ன்னு. ஏம்பா அதத்தான அவனுங்க பன்னாய்ங்க. இவய்ங்க இருக்க ஆர்வத்துக்கு விட்டா இவய்ங்களே தீர்ப்பெழுதிருவாய்ங்க போல. தினத்தந்தி  மாவட்ட செய்திகள் படிக்கிறவியிங்களுக்கு நல்லா தெரியும் வாரத்துக்கு இந்தமாதிரி எத்தனை கொலை நடக்குதுன்னு.
.
வழக்கத்துக்கு மாறா இதுக்கு ஏன் இவ்வளவு பொங்கல்னு பாக்கப்போனா ரெண்டே விஷயம். ஒண்ணு அந்தப் பையன கொலை பன்ன விஷயம் நியூஸ் பேப்பர்ல மட்டும் வந்திருந்தா அத பத்தோட பதினொன்னாதான் நம்மாளுக ட்ரீட் பன்னிருப்பாய்ங்க. மாறா வீடியோ வேற கிடைச்சிபோச்சி. பாத்த ஒவ்வொருத்தனும் என்ன ஒரு கொடூரமா வெட்டுராய்ங்கன்னு வெறிக்கிறாய்ங்க. ஏன்ப்பா பேப்பர்ல ”வெட்டிக் கொன்றனர்” ன்னு வந்ததயெல்லாம் என்ன மயக்க மருந்து குடுத்து வலிக்காம வெட்டுனாய்ங்கன்னு நினைச்சிட்டு இருந்தீங்களா? ரெண்டாவது எந்த விஷயம் கிடைச்சாலும் அதுக்கு அரசியல் சாயம் பூசி ரெண்டு மூணு நாளுக்கு அத வச்சி வண்டிய ஓட்டுறது.
.
இங்க கவனிக்கப்பட வேண்டியதும் ஹைலைட் பன்னப்பட வேண்டியதும் ஒரே ஒரு விஷயம் தான். ஒரு உயிர் எடுக்கப்பட்டிருக்கு. ஒரு உயிர எடுக்குற அளவு கொடூரமா ஒருத்தர் மாறிருக்காரு. அவ்வளவுதான். அதுக்கு என்ன வேணாலும் காரனங்கள் இருக்கலாம். இப்ப பொங்குற யாருக்கும் கொலைபன்னது பெரிய ப்ரச்சனையா தெரியல. ”சாதி வெறியை ஒழிக்க வேண்டும்” “கவுரவக் கொலைகளை தடுக்க வேண்டும்” ன்னு அது கவுரவக் கொலைங்குறதுதான் எல்லாருக்கும் உருத்துதே தவற வேற சொத்து ப்ரச்சனையிலயோ இல்ல முன்பகையிலயோ இந்த சம்பவம் நடந்திருந்தா எவனும் கண்டுக்கிட்டு இருக்க மாட்டாய்ங்க போல.   

இதுல இன்னும் கொஞ்சம் பேரு ”ஆமா அவனுங்க வெட்டும்போது சுத்தி இத்தனை பேரு நிக்கிறாங்களே.. யாராவது போய் அவனுங்கள தடுத்து அடிச்சிருக்கலாமே”ன்னு வேற யோசனை. இவனுங்கதான் zoo la புலிக்கூண்டுக்குள்ள விழுந்தவன புலி கடிச்சித்தின்ன வீடியோவப் பாத்துட்டு “நா மட்டும் வக்காளி ஸ்பாட்டுல் இருந்துருந்தேன் நடக்குறதே வேற” ன்னு அள்ளி விட்டுக்கிட்டு இருந்தவிய்ங்க. வீடியோல பாத்த நீங்களே இவ்வளவு பொங்குனா நேர்ல பாக்குறவனுக்கு எதும் தோணாமயா இருக்கும். ரவுடின்னு ஃபார்ம் ஆன ஒருத்தன் கையால ஒருத்தன போட்டு அடிச்சாலே நம்மள எதுவும் பன்னிருவானோன்னு யாரும் பக்கத்துல போகமாட்டாய்ங்க. அருவாள வச்சி ஒருத்தன கண்ணுமண்ணு தெரியாம வெட்டிக்கிட்டு இருக்காய்ங்க. அவய்ங்க பக்கத்துல போகவும் எவனுக்கும் தைரியம் வருமா?

ஒரு உயிரப் பறிக்கிறதுங்குறது மன்னிக்கப் படக்கூடிய விஷயம் இல்லை. சாதாரணமா இருக்க யாரும் யாரையும் கொல்லனும்னு நினைக்கிறதில்லை. ஏதோ ஒரு விதத்துல கொலை செய்யவோ இல்லை ஆள் வச்சி கொலை செய்ய சொல்லவோ தூண்டப்படுறாங்க. அது நம்பிக்கை துரோகமா இருக்கலாம், வெறுப்பின் உச்சமாக இருக்கலாம் அல்லது பழியுனர்வா கூட இருக்கலாம். இன்னிக்கு இந்த ரெண்டு பேர வெட்டுனதுக்கு “கெளரவக்கொலை”  ன்னு சொல்றாங்க. நடத்தை தவறிய மனைவியையும் அதுக்கு காரணமானவனையும் ஒருத்தன் வெட்டிப்போடுறான். அப்ப அத என்ன சொல்லுவீங்க? உண்மையா பாக்கப்போனா அதுதான் கெளரவக் கொலை. அந்த நியூசயெல்லாம் படிக்கும்போது “இவளுகளயெல்லாம் இப்டித்தான் கொல்லனும்” ன்னு சொல்ற வாயிதான் இன்னிக்கு ஜாதிடா, ஒழிப்புடான்னு சவுண்டு விடுது.

அதுல ஒரு மனைவி புருஷன் வச்சிருந்த நம்பிக்கைய உடைக்கிறா. இதுல ஒரு பொண்ணு அப்பா தன் மேல வச்சிருக்க நம்பிக்கைய உடைக்கிறா. இது ரெண்டுமே ஒரே விஷயம் தான். அளவுக்கதிகமான நம்பிக்கை உதாசீனப்படுத்தும்போது பலருக்கு அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கு. சிலருக்கு அந்தப் பக்குவம் இல்லாமல் இந்தமாதிரி ஏடாகூடமா யோசிக்க வச்சிருது அவ்வளவுதான்.

ஆமா அந்தப் புள்ளைய நமக்கு எத்தனை நாளா தெரியும்? வீடியோவ பாத்தப்புறம் தான் நமக்கு அப்டி ஒரு புள்ளை இருக்கதே தெரியும். நாமளே இவ்வளவு ஃபீல் பன்றோம்னா இத்தனை வருஷமா அந்தப் புள்ளைய பெத்து வளர்த்த அவங்க அப்பாவுக்கு பாசம் இல்லாமையா இருந்துருக்கும். அதையும் தாண்டி இப்படி ஒரு கொடூரமான செயலை செய்ய தூண்டியிருக்குன்னா அவர் எப்படிப்பட்ட ஒரு ஏமாற்றத்த சந்திச்சிருப்பாரு.
எவ்வளவுதான் நம்ம பெயரளவுல “அடுத்தவங்களுக்காக நாம வாழவில்லை” ன்னு சொல்லிக்கிட்டாலும் முடியிறதில்லை. நம்ம சமூகமும் நம்மை சுத்தி இருக்கவங்களும்தான் நம்ம வாழ்க்கை முறைய தீர்மானிக்கிறாங்க. நம்ம வீட்டு பொண்ணு வேற ஜாதியில கல்யாணம் பன்னிக்கிச்சின்னா அத நம்ம ஏத்துக்குறோமா என்பதை விட நம்ம ஏத்துக்கிட்டா நம்ம சமூகம் நம்மள என்ன ஏளனம் செய்யப்போகுதோங்குற ஒரு பயம்தான் இந்தமாதிரி கொலைகளுக்கு முக்கியமான காரணம்.

எல்லாரும் ஜாதி ஒழிப்பு ஜாதி ஒழிப்புன்னு தம் கட்டி பேசுறோம். முதல்ல ஜாதிங்குறது என்ன? ஒரே மாதிரி பழக்க வழக்கங்களைக் கொண்ட மக்கள் தங்களை அடையாளப்படுத்திக்க ஒரு பேரு வச்சிக்கிட்டாங்க. ஒவ்வொரு தொழில் செஞ்சவனும் ஒரு ஜாதி. கள்ளர், தேவர், பறையர், கோணார்ங்குறது மட்டுமே ஜாதி இல்லை. ”தமிழண்டா” னு சொல்றோமே அதுவும் ஒரு ஜாதி. இந்தியண்டான்னு சொல்றோமே அதுவும் ஒரு ஜாதி. ஒரு வெளிமாநிலத்துல போய் இருக்கும்போது தமிழ் ஆளுங்க மட்டும் தனியா செட்டு சேருறது இல்லையா? ஒரு வெளிநாட்டுல இருக்கும்போது இந்தியர்கள்லாம் ஒண்ணு சேருறது இல்லையா? அதோட மைக்ரோ வியூதான் சின்ன சின்ன ஜாதிகளா நம்மூர்ல மக்கள் சேர்ந்துக்கிறது.

கலப்பு திருமணம் மட்டுமே ஜாதி ஒழிப்புக்கு வழிவகுக்கும்னு நினைச்சா அதைவிட முட்டாள்தனம் வேற எதுவும் இருக்காது. இன்னிக்கு ஜாதி ஒழிப்புன்னு பேசுற எத்தனை பேரு எல்லா வேலையும் செய்ய தயாரா இருக்காங்க. சிட்டிக்களத் தவற எல்லா ஊர்லயும் இன்னும் நாவிதர்கள்தான முடிவெட்டி விடுறாங்க. ஒரு பொணத்துக்கு முன்னால தப்படிச்சிக்கிட்டு ஆடுறதுன்னா பறையர்கள்தான வர்றாங்க. இன்னும் இதுபோல நிறைய. அந்தந்த ஜாதிக்காரங்கதான் அந்தந்த வேலைய செய்யனும்னு ஒரு லிஸ்டே வச்சிருக்கோம்.

இன்னும் சொல்லப்போனா நம்ம ஊர்ல இன்னும் இந்த ஜாதி வேறுபாடும் சகிப்புத்தன்மையும் பணத்தைப் பொறுத்துதான் வேறுபடுது. இதே அந்த தலித் பையன் காரு, பங்களா பெரிய பிஸினஸ்னு பெரிய லெவல்ல இருந்துருந்தான்னா பொண்ணோட அப்பாவுக்கு அவன கொல்லனும்ங்குற எண்ணம் வந்திருக்குமான்னு சொல்ல முடியாது. “எங்க நம்ம பொண்ணு புகுந்த வீட்டுல போய் ரொம்ப  கஷ்டப்பட்டுருவாளோ” ங்குற நினைப்புதான் பெத்தவங்க காதலை எதிர்க்குறதுக்கு முதல் காரணம்.

என்னப் பொறுத்த அளவு ஒரு பையன் தன்னை விட வசதியில குறைஞ்ச இடத்துல பொண்ணு எடுக்கலாம். ஆனா ஒரு பொண்ணை அவங்க வீட்ட விட வசதி கம்மியான இடத்துல நிச்சயம் கட்டிக்கொடுக்க கூடாது. பையன்ங்குறவன் எப்பவும் ஒரே வீட்டுல இருக்குறவன். ஆனா ஒரு பொண்ணு இருபது இருவத்தஞ்சி வருஷம் வளர்த்த அம்மா அப்பாவப் பிரிஞ்சி யாருமே அறிமுகம் இல்லாத ஒரு வீட்டுல வாழப்போறது. புதுசாபோற பொண்ணுக்கு அங்க இருக்கவங்களோட பழகி புரிஞ்சிக்கிறதே மிகப்பெரிய கஷ்டம். அதுக்கும் மேல மத்த எந்த கஷ்டத்தையும் அத படவைக்க கூடாது.

காதல் கல்யாணம் பன்னிக்கிட்டவங்க கூட தங்களோட பையனைனோ பொண்ணோ காதல்னு வந்து சொல்லும்போது முதல்ல எதிர்க்கத்தான் செய்றாங்க. ஒண்ணு அவங்க காதல் கல்யாணம் பன்னிக்கிட்டு அனுபவிச்ச கஷ்டங்கள மனசுல நினைச்சி எதிர்க்கலாம். இன்னொன்னு மேல சொன்ன மாதிரி எங்க தப்பான முடிவெடுத்து கஷ்டப்பட்டுருவாங்களோன்னு தான். எத்தனையோ முற்போக்கு கருத்துக்களப் படத்துல சொன்ன சேரன் அவர் பொண்ணு லவ் பன்னப்ப என்ன செஞ்சாருன்னு நமக்கே தெரியும். எல்லா படத்துலயும் லவ் பன்னி ஹீரோயினோட டூயட் பாடுன சிரஞ்சீவி அவர் பொண்ணு லவ் பன்னி கல்யாணம் பன்னப்போ முதல்ல என்ன பன்னாருன்னும் எல்லாருக்கும் தெரியும்.

நம்மளப் பொறுத்த அளவு ஜாதி ஒழிப்புங்குறது “லவ் மேரேஜ் பன்னுங்கப்பா வாழ்க்கை நல்லாருக்கும்” ன்னு சொல்றதும் பார்ப்பனர்கள ஓட்டுறதும் தான். “வொய்ட் க்ராஸ்னா அவனுங்க ஆளுங்கள மட்டும் தான் தூக்கி விடுவானுங்க” ன்னு வயித்தெரிச்சலோட சொல்லுவோம். என்னையும் சேத்து தான் சொல்றேன். ஆனா அதுல என்ன தப்பு இருக்கு? அவன் ஆளுங்கள எங்க பாத்தாலும் கண்டு புடிக்க ஒரு பாஷ வச்சிருக்காங்க. ஒரு அடையாளம் வச்சிருக்காங்க. அவங்க சமூகத்த அவங்க முன்னேத்திக்கிறாங்க. மத்தவங்களால இதப் பன்ன முடியுமா? இவன் எந்த குரூப்புன்னு கண்டுபுடிக்கவே மண்டை காஞ்சிரும். நீங்க கேக்கலாம் இப்புடி பன்றது தப்பு இல்லையான்னு? சரி நீங்க ஒரு கம்பெனில ஜெனரல் மேனேஜரா இருக்கீங்க. உங்க சொந்தக்காரப்பையன் ஒருத்தன் உங்களுக்கு கீழ வேலை பாக்குறான். சிறப்பா செய்வீங்களா மாட்டீங்களா? அட்லீஸ்ட் ஒரு சாஃப்ட் கார்னராவது கண்டிப்பா அவன் மேல இல்லாம இருக்காது.

மதத்தாலயும் மொழியாலயும் பிரிஞ்சிருக்க மனிதர்களிடையே இருக்க ஜாதிங்குற மைக்ரோ பிரிவினை நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டியது தான். ஆனா இந்த மாதிரி கேஸ்களப் பாத்து ரெண்டு நாள் சமூக வலைத்தளங்கள்ல பொங்குறதால மாறக்கூடிய விஷயம் அல்ல அது. இன்றைய தலைமுறை பெற்றோர் பெரும்பாலும் சாதிங்குற பிரிவினையிலயும், நம்பிக்கையிலயும் வாழ்ந்துட்டாங்க. அவர்களோட பிள்ளைகளாகிய நாம அவங்களோட நம்பிக்கைய உடைச்சித்தான் சாதி ஒழிப்ப செய்யனும்னு இல்லை. உங்களுக்குள்ள சாதி ஒழிக்கனும்னு ஒரு வெறி இருந்தா கொஞ்சம் பொறுமையா இருங்க. இன்னும் கொஞ்ச நாள்ல உங்க பையனோ பொண்ணோ பெரியவங்களா வளர்ந்துருவாங்க. உங்க பெற்றோர்களிடத்துலருந்து உங்களுக்கு மறுக்கப்பட்ட சுதந்திரத்த நீங்க உங்க குழந்தைகளுக்கு குடுங்க. இன்னும் ரெண்டு தலைமுறையில சாதி காணாம போயிரும்.




Monday, March 14, 2016

மாப்ள சிங்கம் – கலகலப்பு!!!


Share/Bookmark
கிராமத்து பிண்ணனி கொண்ட படங்களை பாக்க எப்பவுமே ஒரு மகிழ்ச்சியா இருக்கும். ஊஞ்சலோட உள்ள பெரிய வீடு, வீட்டுல ஒரு பாட்டி, கூட்டு குடும்பம், கோயில், பரிவட்டம், ஊர்திருவிழா, கல்யாணம், வெள்ளை வேட்டி சட்டை ,மரத்தடி பஞ்சாயத்து, வயக்காடுன்னு கிராமத்து படங்கள்ல தவறாம இடம்பெறும் இதையெல்லாம் பாக்கவே கலர்ஃபுல்லாவும், சந்தோஷமாவும் இருக்கும். பெரும்பாலும் இந்த பின்னணில படம் எடுக்குறது ரவிக்குமார், சுந்தர்.சி ஹரி இவங்கதான். ரிட்டயர்ட் ஆன டைரக்டர் ஆர்.வி.உதயகுமாரயும் லிஸ்டுல சேத்துக்கலாம். இந்த பிண்ணனில வந்த பெரும்பாலான படங்கள் வெற்றியை தேடிக்கொடுத்துருக்கு. உதாரணமா சமீப காலங்கள்ல மிகப்பெரிய வெற்றிப்படமான வருத்தப்படாத வாலிபர் சங்கமும் இப்ப வந்த ரஜினி முருகனும் கூட கிட்டத்தட்ட இதே வகையறா தான். அதே பாணில அடுத்து வந்திருக்க ஒரு படம்தான் நம்ம மாப்ள சிங்கம்.

ஜாதிப்பிரச்சனையால ரொம்ப நாளா இழுக்கப்படாம இருக்க ஒரு தேர். ஜாதி வெறியில் ஊரிப்போன ரெண்டு ஊர்தலைவர்கள். காதல் பன்றவங்கள நேக்கா பேசி பிரிச்சி விடுற நாயகன். வழக்கம்போல நாயகனச் சுத்தி எப்பவும் இருக்குற நாலு காமெடியர்கள். இதவச்சி ஒரு முழுநீள நகைச்சுவை படத்த எடுத்தா எப்படி இருக்கும்? அதான் மாப்ள சிங்கம்.

விமலுக்கு எல்லா வகையிலயும் சிறந்த படம்னு இதச் சொல்லலாம். மத்த படங்கள்ல எல்லாம் ஹீரோவா இருந்தா கூட சப்போர்ட்டிங் ரோல் பன்றவரு மாதிரி வந்துட்டு போற விமல் கெட்டப்பல்லாம் மாத்தி இதுலதான் கொஞ்சம் ஹீரோ மாதிரி இருக்காரு. அதே ஊர்ல இருக்க வேற்று சமூகத்த சேர்ந்த வக்கீலா நம்ம அஞ்சலி. ஹேர் ஸ்டைல்லாம் மாத்தி அஞ்சலி அள்ளுது.

ரொம்ப சீரியஸான காட்சிகள்னு எதுவும் கிடையாது. சீரியஸான கேரக்டர்னும் எதுவும் கிடையாது. சீரியஸா காமிக்கப்படுற ராதாரவி கூட டென்டர் விடுற காட்சிலயும், க்ளைமாக்ஸ் காட்சிலயும் காமெடில பட்டைய கிளப்புறாரு.

படம் ஆரம்பிச்சதுலருது ஒவ்வொரு காட்சிலயும் தியேட்டர்ல சிரிப்பு சத்தம். சூரிய ஒழுங்கா யூஸ் பன்னா சிரிக்க வைக்க முடியும்ங்குறதுக்கு வ.வா.சங்கம், ரஜினிமுருகன் மாதிரி இந்தப் படமும் ஒரு நல்ல உதாரணம். பத்தாததுக்கு காளிவெங்கட், லொள்ளு சபா சாமிநாதன் வேற. சாமிநாதன் ராதாரவி பொண்ணு ஓடிப்போயிருச்சின்னு எல்லார்கிட்டயும் சொல்ல, பொண்ணத்தேடி கார்ல போயிட்டு இருக்கும் போது, எங்க நாம சொன்னது தப்பானா நம்மள பொளந்துருவாய்ங்களோன்னு கார்ல “கடவுளே கண்டிப்பா அந்தப் பொண்ணு ஓடி தான் போயிருக்கனும்” ன்னு வேண்டிக்கிட்டு வர்ற சீன் கலக்கல்.

விமல் கூட சுத்துற குரூப்புல ஒரு வெள்ளைக்காரரையும் வச்சி நம்ம ஊர்ல இருக்க சில மோசமான பழக்கங்களை அவர் மூலமாவே கேள்வி கேட்டு விவேக் பானில கவுண்டர் குடுக்குறாங்க. ஒரு ரீஜனல் லாங்குவேஜ் படத்துக்கு ஒரு வெள்ளைக்காரரு படம் முழுசும் காமெடி கேரக்டர்ல வந்து, சொந்தக் குரல்ல டப்பிங் பேசி நடிச்சிருக்கது இந்தியாவுலயே இதான் முதல் முறைன்னு நினைக்கிறேன். ஒரு காட்சில “கேஸ்ட் மாறி லவ் பண்ணா தப்பா?” ன்னு அவர் கேக்க சூரியும் வெங்கட்டும் “ஆமா கேஸ்ட் மாறி கல்யாணம் பன்னா எங்க ஊர்ல அடிப்போம்” ன்னு சொல்றாங்க. இன்னொரு சீன்ல விமல் “ஏண்டா உனக்கு லவ்வர் இருக்கா?” ன்னு அவர்கிட்ட கேக்கும்போது “இருக்கு” ன்னு சொல்லிட்டு உடனே பதறிப்போய் “same caste only… same caste only”ன்னு சொல்றது செம. ஏன் சம்பந்தம் இல்லாம ஒரு அயல்நாட்டு கேரக்டர் வருதுன்னு நாம லைட்டா யோசிக்கும்போது அதுக்கும் க்ளைமாக்ஸ்ல பதில் இருக்கு.

மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய N.ராஜசேகர்தான் இயக்குனர். நீட்டான ஸ்க்ரீன்ப்ளே. எந்த காட்சியும் தேவையில்லைன்னோ இல்லை அருக்குதுன்னோ சொல்ல முடியல. இன்னும் சொல்லப்போனா முதல் பாதி ரொம்ப ஸ்பீடா போன மாதிரி ஒரு ஃபீல்.

படத்தோட முதுகெழும்பு டான் அசோக்கின் வசனம்னு சொல்லலாம். பெரும்பாலான காட்சிகள் நாம ஏற்கனவே பார்த்த ரகமாக இருந்தாலும் வசனம்தான் தூக்கி நிறுத்துது.  சாதாரண காட்சிலயும் எதாவது காமெடி வசனங்களை வச்சி சிரிக்க வச்சிருக்காங்க. உதாரணமா கலெக்டர் பாண்டிய ராஜன் பக்கத்துல நிக்கிற போலீஸ்கிட்ட “எதுவும் ப்ரச்சனை வரமா பாத்துங்குங்க சார்” ன்னு சொல்ல உடனே அந்த போலீஸு “சார் இவய்ங்க கிட்ட ப்ரச்சனைவ் வராமல்லாம் பாத்துக்க முடியாது. ப்ரச்சனை வந்ததுக்கு அப்புறம் வேணா பாத்துக்கலாம்” ங்குறாரு.  ஒரு காட்சில சூரி ரொம்ப நேரமா ஒரு எலும்ப உறிஞ்சிட்டு “என்ன ஒண்ணுமே வரல”ன்னு சொல்ல “வராது பங்காளி.. ஏன்னா அது நா உறிஞ்சிட்டு போட்டது” ம்பாரு காளி வெங்கட்.

வில்லனாக முனீஷ்காந்த். வில்லன்னு சொல்றதுக்கு பதிலா படத்துக்கு இன்னொரு காமெடியன்னு சொல்லனும் அவர. செம பாடி லாங்குவேஜ் மற்றும் டயலாக் டெலிவரி. ராதாரவி எப்பவும்போல அவர் கேரக்டர பக்காவ பன்னிருக்காரு. ஒரு சீன்ல அந்த வெள்ளைக்காரர பாத்து “இட்லி ஈட்டாச்சா?” ன்னு கேக்குறப்போ தியேட்டரையே சிரிக்க வைக்கிறாரு. விமலோட அப்பாவா வர்ற கு.ஞானசம்பந்தத்தையும், அஞ்சலி அப்பாவா வர்ற ஜெயப்பிரகாஷையும் இன்னும் நல்லா யூஸ் பன்னிருக்கலாம். எதோ பத்தோட பதினொன்னா வந்துட்டு போறாங்க. விமல் தங்கச்சியா வர்ற சீரியல் புள்ளை சற்று டொம்மை போல இருக்கு. இன்னும் கொஞ்சம் நல்ல புள்ளையா போட்டுருக்கலாம்.

முன்னாலயே சொன்னமாதிரி விமல இந்த அளவுக்கு யூஸ் பன்னதும் சரி இந்த அளவுக்கு இம்பார்ட்டன்ஸ் குடுத்து எடுத்த படமும் இதுவாத்தான் இருக்கும். ஆள் செமையா இருக்காரு. ஆனா என்ன டயாலாக் டெலிவரிலதான் எந்த முன்னேற்றமும் இருக்கமாதிரி தெரியல.

ரகுநந்தன் இசையில அஞ்சி பாட்டுமே நல்லாருக்கு. ”வந்தாரு வந்தாரு மாப்புளை சிங்கம்” பாட்டும் “எதுவுமே தோணல” பாட்டும் செம பிக்சரைசேஷன். “ஒருவாட்டி உனப்பாத்து” பாட்ட முழுசா போட்டுருக்கலாம். நிறைய காட்சிகள் கலர்ஃபுல்லா இருக்கு.

காதலும் கடந்து போகுமோட கம்பேர் பன்னும்போது நிறைய காட்சிகள்ல மாப்ள சிங்கம் ஆடியன்ஸ எங்கேஜ் பன்னி வச்சிருந்துச்சி. மொத்தத்துல எதப்பத்தியும் யோசிக்காம ரெண்டு மணி நேரம் நல்லா சிரிக்க வைக்கிற படம் தான் மாப்ள சிங்கம்.  



Saturday, March 12, 2016

காதலும் கடந்து போகும் – மெதுவாதான் போவும்!!!


Share/Bookmark
ஒரு நடிகர் முழுவீச்சுல நடிக்கிறத நிறுத்தி ரொம்ப நாள் ஆகுது. ஆனா அவர் நடிச்சப்போ ஏற்படுத்துன தாக்கம் தமிழ் சினிமாவுல இன்னும் இம்மி அளவு கூட குறையல. இப்ப வர்ற ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு விதத்துல அவருடைய தாக்கம் இருக்கு. நா சொல்றது எம்.ஜி.ஆரையோ சிவாஜியையோ எம்.ஆர்.ராதாவையோ இல்லை. நம்ம வைகை புயல் வடிவேலுவத்தான் சொல்றேன். எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அளவுக்கு அவர் பேசுன ஒவ்வொரு வசனமும் எல்லா தட்டு மக்களுக்கும் அவ்வளவு ரீச் ஆயிருக்கு. அவர் வசனம் இல்லாத சமூக வலைத்தளங்கள், அவர் காமெடி இல்லாத நகைச்சுவை சேனல்கள்ல ஒரு நாள் கூட பாக்க முடியாது. அதே மாதிரி நம்மளே டெய்லி “முடியல” “இப்பவே கண்ணக்கட்டுதே” ”தம்பி டீ இன்னும் வரல” “சேம் ப்ளட்” ன்னு எதாவது அவர் பேசின வசனத்த பேசாம இருக்கதில்லை. மனுசன் சரித்திரத்துல நின்னுட்டாருப்பா. அந்த வரிசையில அவர் பேசிய வசனமான க.க.க.போ வை டைட்டிலா வச்சி அடுத்து ஒரு படம்.

ரெண்டு மாசத்துக்கு முன்னாலதான் நானும் ரவுடி தான் வந்துச்சி. ரெண்டு வாரத்துக்கு முன்னால தான் சேதுபதி வந்துச்சி. அடுத்து ரொம்ப குறுகிய இடைவெளில விஜய் சேதுபதிக்கு இன்னொரு படம். இன்னும் இடம் பொருள் ஏவல் மெல்லிசை, இறைவின்னு லைன்ல நிறைய வச்சிருக்காப்டி. போறபோக்கப் பாத்தா வருசக் கடைசில வந்த படத்துல முக்காவாசி படம் விஜய் சேதுபதி படமாத்தான் இருக்கப்போவுது. சரி இந்த காதலும் கடந்து போகும் எப்டி இருக்குன்னு பாப்போம்.  '

அஞ்சி வருசம் ஜெயில்ல இருந்துட்டு வெளில வந்து ”அண்ணன் எதாவது நமக்கு பெருசா செய்வாறு” ன்னு ஒரு ரவுடி கும்மலோட வெட்டியா சுத்திக்கிட்டு இருக்க "ரவுடி மாதிரி" ஆளு நம்ம சேதுபதி. அப்பா அம்மா பேச்ச கேக்காம சென்னைக்கு வேலைக்கு வந்து ஆறு மாசத்துல இருந்த வேலை போய் அடுத்த வேலைய தேடி தனியா அலைஞ்சிட்டு இருக்க மிடில் க்ளாஸ் பொண்ணு மடோனா செபஸ்டியன். ரெண்டு பேரும் எதிரெதிர் வீட்டுல குடியிருக்காங்க. அவங்க ரெண்டு பேருக்குள்ள ஏற்படுற நட்பு.. இல்லை காதல்.. இல்லை நட்புன்னே வச்சிக்குவோம்.. அதுதான் படம்.

ஓவராலா பாத்தா இது நம்ம விக்ரமன் எடுத்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தோட லேட்டஸ்ட் வெர்ஷன்னு சொல்லலாம். அதுல திருடனா இருக்க கார்த்தி ரோஜாவ கஷ்டப்பட்டு பாடகியாக்கிட்டு கடைசில எந்த க்ரெடிட்டும் எடுத்துக்காம கூட்டத்துல நின்னு வேடிக்க பாப்பாரு. அதே மாதிரி இங்க ரவுடி மாதிரி இருக்க நம்ம சேதுபதி வேலை தேடிகிட்டு இருக்க மடோனாவுக்கு உதவி பன்றாரு. அதுல சினிமாத்தனமான காட்சிகள் அதிகம் இருக்கும். இதுல நிறைய காட்சிகள் யதார்த்தமானதா வச்சிருக்காங்க. அவ்ளோதான்.

முதல் படத்துலயே ஒரு ஹீரோயின் எண்ட்ரிக்கு ஒரு தியேட்டரே கத்துதுன்னா அது இந்த புள்ளைக்காத்தான் இருக்கும். மடோனா எண்ட்ரிக்கு செம்ம சவுண்டு. சேதுபதிக்கு கூட அவ்வளவு இல்லை. ப்ரேமம் நம்மாளுகள என்ன பாடு படுத்தி வச்சிருக்கு பாருங்க. ஆனா சும்ம சொல்லக்கூடாது. செம அழகு. அதோட அந்த புள்ளைக்கு கொடுத்த டப்பிங் வாய்ஸூம்  செம. முதல் பாதில பல காட்சிகள் ரொம்ப சுமார் ரகமா இருந்தாலும் அந்த புள்ளை மூஞ்சியப் பாத்து ஆறுதல் படுத்திக்கலாம்.

இந்த கேரக்டர் விஜய் சேதுபதிக்கு ஒண்ணும் புதுசில்லை. ஒவ்வொரு படமா இதே மாதிரி நடிச்சி பாத்திரமாவே மாறிட்டாரு போல.  முதல் பாதி முழுக்க எதப்பத்தியும் கவலப்படாம படம் ரொம்ப கேஸூவலா ரொம்ப ஸ்லோவா போகுது. ஸ்லோவா போகுதுங்குறத ஒரு படத்துக்கு நெகடிவ்வா சொல்ல முடியாது. நல்லா போனா போதும். இங்க நல்லா போகுதுன்னு சொல்ல முடியாது. போகுது. ஒருசில இடத்துல லேசா சிரிப்பு வருது. விஜய் சேதுபதி மடோனா காம்பினேஷந்தான் முதல் பாதில படத்த காப்பாத்துது. மடோனாவ ஒரு ஆங்கிள்ல பாத்தா நம்ம டொப்பி மூக்கி காதல் சந்தியா மாதியே இருக்கு. மூக்கு பொடப்பா இருக்கதால அப்டி இருக்குமோ?



சேதுபதி ரவுடின்னு சொல்லி சுத்திக்கிட்டு இருக்கது எல்லாம் இப்பத்தான் ”நானும் ரவுடிதான்”ல பாத்தோம். ஆள அடிக்க போய் அடி வாங்கிட்டு வர்றது ஹீரோயிண்ட்ட ரவுடிமாதிரியே இல்லைன்னு மொக்க வாங்குறது எல்லாமே நானும் ரவுடிதான் படத்த ஞாபகப்படுத்துது. இதுக்கு இடையில சந்தோஷ் நாராயணன் வேற போட்ட பாட்டையே போட்டு அறுத்து கொல்றாப்டி.

ஆனா ரெண்டாவது பாதி எல்லா விதத்துலயுமே பெட்டர். காமெடிலயும் சரி, சேதுபதி மடோனாக்கு இடையில நெருக்கம் அதிகமாவுற காட்சிகளும் சரி ரொம்ப சூப்பர். சந்தோஷ் நாரணான் இந்த படத்துல போட்ட ஒரே நல்ல பாட்டான “க..க க..க போ” பாட்டு எடுத்த விதமும் சூப்பர். அதே மாதிரி க்ளைமாக்ஸும். சோகமான காட்சிகளை விட சோகத்த நல்லா பில்ட் அப் பன்னி அதுக்அடுத்து வர்ற ஒரு சந்தோஷமான காட்சி நம்மள அழ வைச்சிடும். க்ளைமாக்ஸ்ல ஒரு செகண்ட் தொண்டை அடிச்சி அழுகை வந்துச்சி. அடப்பாவிகளா க்ளைமாக்ஸ் கூட உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் மாதிரி அழ வச்சிட்டீங்களேடா.

படம் My dear Desperado ங்குற ஒரு கொரியன் படத்தோட தழுவலாம். அத நம்ம பாக்கல. ஆனா இந்தப் படத்த பொறுத்த அளவு திரைக்கதைல ஒரு நேர்த்தி இருந்துச்சி.. பெரும்பாலான படங்கள் படம் நல்லா இருந்தாலும் பாத்துட்டு வரும்போது ஒரு Completeness ah ஃபீல் பன்ன மாட்டோம். ஆனா இந்தப் படத்துல அந்த முழுமை இருந்துச்சி. தழுவல்ங்குரதால நலன் குமரசாமிய ரொம்ப உள்ள இழுத்து பேச தேவையில்லைன்னு நினைக்கிறேன்.

என்னப் பொறுத்த அளவு படத்துல மொக்கையா நா ஃபீல் பன்னது சந்தோஷ் நாராயணனத்தான். ”கககக போ”  பாட்டத்தவற மத்த எல்லாம் மொக்கை. “ஏ பங்காளி” ன்னு ஒரு பாட்டு அப்புடியே ”சேதுபதி” படத்துல வர்ற “நா யாரு” பாட்டோட ட்யூன். இதுல BGM க்கு வேற அந்தப் பாட்ட போட்டு காது ஜவ்வு பிஞ்சிருச்சி.

அப்புறம் விஜய் சேதுபதிய கொஞ்சம் சீரியஸான ரவுடியாவே காமிச்சிருக்கலாம். அவர டம்மி ரவுடியா காமிச்சதால ஒண்ணு ரெண்டு காமெடிக்கு யூஸ் ஆச்சே தவற வேற எந்த புரயோஜனமும் இருந்த மாதிரி தெரியல. சீரியஸா காமிச்சி அந்த ரவுடி கும்பல் சம்பந்தமான ரெண்டு மூணு காட்சிகள கொஞ்சம் எஃபெக்டிவ்வா காமிச்சிருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும். சத்யா “சுந்தர்” ரொம்ப நாளுக்கப்புறம் நடிச்சிருக்காரு. ஆனா Body la வெய்ட்டு இருக்கே தவற கேரக்டர்ல பெரிய வெய்ட்டு ஒண்ணும் இல்லை. சமுத்திரக்கணிய ட்ரெயிலர்ல பாத்தோன ஜாலியா இருந்தேன். ஆனா ரெண்டு நாள் கால்ஷீட் வாங்கி நாலு சீன் எடுத்து அனுப்பி விட்டாய்ங்க போல.

மொத்தத்துல ட்ரெயிலர பாத்துட்டு சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மாதிரியான ஒரு எதிர்பார்ப்போட போனா கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா நிச்சயம் காதலும் கடந்து போகும் நல்ல படம்ங்குறதுல எந்த டவுட்டும் இல்லை. கண்டிப்பா பாக்கலாம்.



Thursday, March 10, 2016

Soggade Chinni Nayana !!!


Share/Bookmark
தெலுங்குல மத்த ஹீரோக்களோட படங்களோட கம்பேர் பன்னும்போது நாகர்ஜூனாவோட படங்கள் கொஞ்சம் வித்யாசப்படும். மத்த ஹீரோக்கள் படங்கள்ல ஆக்‌ஷன் அடிதடி வெட்டு குத்துக்கள்லாம் கொஞ்சம் அதிகமா இருக்கும். இவரு படத்துல ஆக்‌ஷன விட ரொமான்ஸுதான் அதிகமா இருக்கும். ஆம்பள படத்துல சந்தானம்  “எனக்கு சத்தம் கம்மியா இருக்கனும்.. ரத்தம் ஜாஸ்தியா இருக்கனும்” ன்னு சொல்ற மாதிரி நாகர்ஜுனாவுக்கு “ரத்தம் கம்மியா இருக்கனும்…. முத்தம் ஜாஸ்தியா இருக்கனும்”. ஒரு சின்ன உதாரணம். ஒரு ரெண்டு வருஷம் முன்னால “BHAI” ன்னு ஒரு படம் வந்துச்சி. படத்த பாத்தவியிங்க ஏண்டா வந்துச்சின்னு கூட ஃபீல் பன்னாய்ங்க. அதுல ஒரு சீன்.

ரவுடிங்க கூட சண்டை போட்டுகிட்டு அடி பின்னிக்கிட்டு இருப்பாரு. எல்லாரையும் அடிச்சி போட்டுட்டு வில்லன் தலையில துப்பாக்கி வைப்பாரு. ஆனா சுட மாட்டாரு. ஏன்னு கேட்டா ”மூணுங்குறது என்னோட லஞ்ச் டயம் அப்ப அண்ணத்துல கைவைப்பேனே தவற யாரு கண்ணத்துலயும் கை வைக்க மாட்டேன்” ங்குற மாதிரி ”மணிய பாத்தியா 6 ஆயிடுச்சி. ஆறு மணிக்கு மேல Girls கூட மட்டும் தான் விளாடுவேன்” ன்னு சொல்லிட்டு போய் பப்புல டான்ஸ் ஆடிக்கிட்டு இருப்பாரு. எல்லா படங்கள்லயும் அப்டித்தான். ரொமான்ஸூதான் கொஞ்ச தூக்கலா இருக்கும். அதவிட இவர் படங்கள நம்பி போயிட முடியாது. எப்பயாச்சும் தான் நல்லாருக்கும். பல சமயம் பெரிய ஆப்பா எடுத்து சொருவி விட்டுருவாரு.

நம்ம யாவரும் நலம் எடுத்த விக்ரம்.K.குமார் இயக்கத்துல இவரோட போன படம் “Manam” தாறு மாறு ஹிட்டு. படமும் அவ்ளோ சூப்பரா இருக்கும். ஏற்கனவே ரெண்டு மூணு பதிவுல அந்தப் படத்த பத்தி சொல்லிருக்கேன். இப்ப கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு படத்த குடுக்க முயற்சி செஞ்சிருக்கதுதான் இந்ந Soggade Chinni Naina.

நாகார்ஜுன் லண்டன்ல பெரிய டாக்டர். மனைவி ப்ரியங்கா திரிபாதி. திரிபாதின்னா மீதி எங்கனு கேக்குறீங்களா? மொத்தமே அவ்வளவுதாங்க. நாகர்ஜூனா எப்ப பாத்தாலும் வேலை வேலைன்னு மனைவிகிட்ட சரியாவே பேசி பழகாம இருக்க திரிபாதி கடுப்பாகி டைவர்ஸ் பன்னிக்கலாம்னு சொல்லுது. நாகர்ஜூனாவும் அதுக்கு ஒத்துக்கிட்டு டைவர்ஸ் வாங்க ஊருக்கு வர்றாங்க. ஊர்ல நாகர்ஜூனாவோட அம்மா ரம்யா கிருஷ்ணன். சித்தப்பா சித்தி மாமா மாமின்னு வழக்கமான தெலுங்கு படத்துல வர்ற மாதிரி ஒரு பெத்த குடும்பம். டைவர்ஸ் மேட்டர கேட்டு ரம்யா கிருஷ்ணன் செம ஃபீல் ஆயிடுறாங்க.

அழுதுக்கிட்டே செத்துப்போன புருஷனோட ஃபோட்டோவ பாத்து (இன்னொரு நாகர்ஜூனா) வரச்சொல்லி கூப்டுறாங்க. ஆக்சிடெண்ட்ல செத்துப்போன நாகர்ஜூனா சின்ன வயசுல ஊர்ல உள்ள அத்தனை பொன்னுங்க கூடவும் ஒரே லூட்டி. அதே மாதிரி நரகத்துல உள்ள பொண்ணுங்கள கூட கரெக்ட் பன்னி அங்கயும் ஜாலியா வாழ்ந்துகிட்டு இருக்காரு. ரம்யா கிருஷ்ணன் கூப்ட உடனே, அப்பா நாகர்ஜூனாவ ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ரம்யா கிருஷ்ணன் கண்ணுக்கு மட்டும் தெரியிற மாதிரி வரத்த குடுத்து கீழ அனுப்பி விடுறாரு எமராஜா.

அப்புறம் என்ன கீழ வந்த அப்பா நாகர்ஜூனா தத்தியான அவரோட பையன் நாகர்ஜூனாவுக்குள்ள அப்பப்ப போயி வந்து அவனுக்கும்  பிரியங்க திரிபாதிக்கும் இடையில லவ்வ டெவலப் பன்னி விடுறாரு. ஒரு சீன்ல பையன் நாகர்ஜூனா உடம்புக்குள்ள அப்பா ஆவி போய் பிரியங்கா திரிபாதிகிட்ட ரொமான்ஸ் பன்ன ஸ்டார்ட் பன்னுவாரு. நாகூட என்னடா சிந்து சமவெளிய விட கேவலமா இறங்கிட்டாய்ங்களேன்னு நினைச்சேன். நல்ல வேளை அந்த அளவுக்கு போகல.

இந்தப் படத்துலயும் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் வைக்க வாய்ப்பு இருந்தா கூட இதுலயும் ரொமான்ஸ் தான் தூக்கல். வாய தொறந்த மேனிக்கு வைச்சிக்கிட்டே எல்லா புள்ளைங்களையும் கரெக்ட் பன்னிடுறாப்ள. ரம்யா கிருஷ்ணன் செம. அப்ப இருந்த மாதிரியே இப்பயும்.

படத்துல மிகப்பெரிய பலம் என்னன்னா அனூப் ரூபன்ஸோட மியூசிக் தான். எல்லா பாட்டுமே செம. மனம் படத்துக்கும் இவர்தான் மியூசிக். இப்ப இருக்க மியூசிக் டைரக்டர்கள்ல இவர் கொஞ்சம் பரவால்ல. DSP யையும் S.S.தமனையும் மிக்ஸ் பன்ன மாதிரியான இசை. ரொம்பவே நல்லாருக்கு.

எப்பவுமே ஒரு படத்தோட ஆடியோ டவுன்லோட் பன்னும்போது முதல்ல SPB, மனோ , ஷங்கர் மஹா தேவன், ஹரிஹரன், சாதனா சர்க்கம், மது ஸ்ரீ இவங்க பாடுன பாட்டுங்க எதாவது இருக்கான்னு பாத்து அதத்தான் டவுன்லோட் பன்னுவேன். ஆனா சமீப காலமா நம்மூர் இசையமைப்பாளர்கள் இவங்களையெல்லாம் சுத்தமா மறந்துட்டாய்ங்க. நாங்களே இசை.. நாங்களே பாடிக்கிறோம்னு பெரிய சிங்கர்களை இப்பல்லாம் சுத்தமா யூஸ் பன்றதே இல்லை.  நம்மல்லாம் 60 படத்துக்கிட்ட இசையமைச்ச DSP ய நக்கல் அடிச்சிட்டு இருக்கோம். ஆனா இப்ப வந்த அனிரூத்து, சந்தோஷ் நாராயணனுக்கெல்லாம் நாலு படத்துலயே ட்யூனு ரிப்பீட் ஆக ஆரம்பிச்சிருச்சி. இந்தப் படத்துல ரொம்ப நாளுக்க்கப்புறம் ஹரிஹரன் பாடுன பாட்ட கேட்டதும் எனக்கு ரொம்ப புடிச்சிருச்சி.  20 தடவைக்கு மேல அன்னிக்கே கேட்டுட்டேன். வீடியோ லின்க் கீழ.


. ”நீ நவ்வே ஹாய்கா உந்தி” ன்னு ஷ்ரேயா கோஷல் ஒரு பாட்டு பாடிருக்கு. அதுவும் செம. நாகர்ஜூனா ஆளு செமையா இருக்காரு. திரிபாதியும் செம்ம அழகு. நம்ம ப்ரம்மன் படத்துல சசி குமாருக்கு ஹீரோயினா நடிச்ச புள்ளை தான். அதுல சுமார் பீஸா இருந்தது இதுல சூப்பரா இருக்கு.



இந்த கதையை இன்னும் சுவாரஸ்யமா காமிச்சிருக்கலாம். ஆனா திரைக்கதை சற்று டொம்மை தான். பெரும்பாலான காட்சிகள் நாகர்ஜூனா புள்ளைங்கள கரெக்ட் பன்றதத்தான் காமிக்கிறாய்ங்க. இந்த பொங்கலுக்கு வந்த Nannaku Prematho, Dictator படங்களை விட இந்தப்படம்தான் செம ஹிட்டு. ஆனா படம் ரொம்ப சுமார் ரகம் தான். 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...