Showing posts with label மெர்குரி விமர்சனம். Show all posts
Showing posts with label மெர்குரி விமர்சனம். Show all posts

Sunday, April 22, 2018

மெர்க்குரி!!!!


Share/Bookmark



கார்த்திக் சுப்பராஜ் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குனர். ஒரு படம் ஹிட் ஆயிட்டா அதே ஃபார்முலாவுல வரிசையா பத்து படம் எடுத்து நம்மள கொன்னு எடுக்குற இயக்குனர்கள் மத்தியில, எல்லா வகை படங்களும் எடுக்கனும்னு நினைக்கிற ஒருத்தர். மூணு படம் எடுத்துருக்காரு. மூணுமே வேற வேற genre. பாலா படம்னா இப்டிதான்சார் இருக்கும்.. மிஷ்கின் படம்னா இப்டிதான் சார் இருக்கும்.. மணிரத்னம் படம்னா இப்டிதான் சார் இருக்கும். இதுமாதிரி நிறைய இயக்குனர்கள் அவங்களுக்குன்னு ஒரு அடையாளத்த உருவாக்கி வச்சிக்கிட்டு அத விட்டு வெளில வரமுடியாம சிக்கிட்டு இருக்காங்க.  நீ பாலா படம் வேணா எடு இல்ல மணி ரத்னம் படம் வேணா எடுநம்மள பொறுத்த அளவு நல்லாருக்கா இல்லையா அப்டிங்குறதுதான் மேட்டரு.  

இவரு இந்த மாதிரி படம்தான் எடுப்பாருங்குற அடையாளத்த விட இவர் எந்தப் படம் எடுத்தாலும் நல்லா எடுப்பாரு அப்டிங்குறதுதான் ஒரு நல்ல இயக்குனருக்கான அடியாளம். அந்த வகையில கார்த்திக் சுப்பராஜ் ஒரு நல்ல இயக்குனர். வசன்ஙகளே இல்லாம பிரபுதேவா மற்றும் சில புதுமுகங்கள வச்சி இல்லாம எடுத்துருக்க ஒரு படம்தான் மெர்க்குரி. இந்தப் படம் எப்டி இருக்குன்னு பாக்கலாம்.





வழக்கமா இந்த ஹாரர் படங்களுக்கு ஒரே டெம்ப்ளேட் தான். ஒரு அஞ்சி பேரு. அதுல ரெண்டு புள்ளைங்கஅந்த ரெண்டு புள்ளைங்கல்ல ஒண்ணு டவுசர் போட்டு மார்டனா இருக்கும், இன்னொன்னு  ரொம்ப மார்டனா இல்லாம கொஞ்சம் ஹோம்லியா இருக்கும். . வீக் எண்ட எஞ்சாய் பன்றேன்னு இவய்ங்க அஞ்சி பேரும் ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு பங்களாவுல போய் தங்கி அங்கருக்க ஒரு பேய்கிட்டயோ இல்ல ஒரு கொடூர கொலைகாரண்டயோ மாட்டிக்குவானுக. வீக்கெண்டுன்னா வீட்டுல விட்ட்த்த பாத்து படுத்து தூங்கிட்டு மத்தியானம்  போய் தலப்பாகட்டில பிரியாணியப் போட்டா மறுக்கா மட்டையானோம்னா எப்டி போகுதுன்னே தெரியாம போயிரும். அதவிட்டுட்டு ஆளே இல்லாத காட்டுக்குள்ள போயி பேயிகிட்ட மாட்டிக்கிட்டுஅது ஒவ்வொருத்தனையா கொல்ல கடைசில ஒரே ஒரு பொண்ணு மட்டும் தப்பிச்சி வெளில வரும். இதுதான் காலங்காலமா யூஸ் பன்னிட்டு வர்ற டெம்ளேட்டு.

இந்த மெர்க்குரியும் இதுக்கு விதிவிலக்கு இல்ல. என்ன ஒரு மிகப்பெரிய வித்யாசம்னா வழக்கமா ரெண்டு புள்ளைங்களுக்கு பதிலா இதுல ஒரே ஒரு புள்ள மத்த நாலு பேரு பசங்க. எதிர்பாராத சில சம்பவங்களால ஒரு இடத்தல மாட்டிக்கிட்டு ஒவ்வொருத்தனா மட்டையாவுறாங்க. கடைசில யாரு தப்பிக்கிறாங்க அப்டிங்குறதுதான் இந்த மெர்க்குரி.

ஓவராலா படம் ரொம்ப நல்லாருக்கு. வசனமே இல்லாத படமா? அய்யயோ எப்டி ரெண்டு மணி நேரத்த ஓட்டுறதுங்குற பயம் இருந்துச்சி. ஆனா படம் ஆரம்பிச்சி ஒரு பத்து நிமிஷத்துல கதைக்குள்ள போனப்புறம் வசனம் இல்ல அப்டிங்குற ஒரு குறையே தெரியல. அதுக்கேத்த மாதிரி கதாப்பாத்திரங்கள வடிவமைச்சிருக்கதும் நல்லாருந்துச்சி. ரொம்பவே எங்கேஜிங்கான காட்சிகளும். ஒரு சில காட்சிகள்ல பயமுறுத்திருக்காங்க. ப்ரபு தேவா ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு.

படத்துல மைனஸ்ன்னு சொல்லப்போனா ஒரே ஒரு விஷயம்தான். ப்ரஸ்டீஜ் பட்த்துல சொல்ற மாதிரி புறாவ மறைய வைக்கிறது பெரிய விஷயம் இல்ல. மறைஞ்ச புறாவ திரும்ப உயிரோட கொண்டுவந்து காமிக்கிறதுதான் பெருசு. இதுல கார்த்திக் சுப்பராஜ் புறாவ நல்லா மறைய வச்சிருக்காரு. ஆனா அத திரும்ப உயிரோட கொண்டுவரும்போது புறாவுக்கு மூக்கு மொகரையெல்லாம் கொஞ்சம் பேந்துருச்சு.  இது ஒரு பேய் படமா இல்லையா அப்டிங்குற கன்பீசனே படம்பாக்குறவங்களுக்கு கடைசி வரைக்கும் இருக்கு. ஒரு வழியா நாம ஒரு முடிவுக்கு வரும்போது நாம நினைச்சதுக்கு ஆப்போசிட்டா ஒண்ணு காமிக்கிறாங்க. அது கொஞ்சம் கன்வீன்சிங்கா இல்ல.

மத்தபடி ஒவராலா படம் எங்கயுமே போர் அடிக்கல. க்ளைமாக்ஸ் நல்லாருந்துச்சி. சந்தோஷ் நாராயணனோட மியூசிக் பட்த்துக்கு இன்னொரு ப்ளஸ்.  கார்த்திக் சுப்புராஜ் மறுபடியும் தான் ஒரு நல்ல இயக்குனர்னு நிரூபிச்சிருக்காரு. கண்டிப்பா ஒரு தடவ பாக்காலாம்.

  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...