Saturday, April 29, 2017

பாகுபலி 2 - இந்திய சினிமாவின் அடையாளம்!!!


Share/Bookmark
இரண்டு வருடம் உழைத்தோம்மூண்று வருடம்உழைத்தோம் என்று உழைப்பைச் சொல்லிமக்களைப் படம் பார்க்க அழைப்பது ஒருவிதம்.அதே கடின உழைப்பை வாயால் கூறாமல்திரையில் காண்பித்து மக்களை இழுப்பதுஇன்னொரு விதம்பாகுபலி இந்தஇரண்டாவது வகையைச் சேர்ந்தது.ஒவ்வொரு காட்சியிலும்ஒவ்வொருஃப்ரேமிலும் நடிகர்கள்டெக்னீசியன்கள்ஒவ்வொருவரின் கடின உழைப்பு மிளிர்கிறது

காட்சிகளில் ப்ரம்மாண்டம் காண்பித்து கதைவசனங்களில் ஜீவன் இல்லையென்றால்என்னதான் கடின உழைப்பென்றாலும்எடுபடாதுஆனால் அத்தனை விதங்களிலும்ஒரு தரமான படைப்பாக பாகுபலிவந்திருக்கிறதுஇனி இப்படி ஒரு படம்இந்தஅளவு உணர்வைக் கொடுக்கும் படம்வருவதற்கான வாய்ப்புகள் மிகக்  குறைவு.அப்படியே வரும் என்றாலும் கண்ணுக்கெட்டியதூரத்தில் இல்லை

பாகுபலி முதல் பாகம் உங்களை வெகுவாகக்கவரவில்லை என்றால் பாகுபலி இரண்டாம்பாகம் நிச்சயம் கவரும்ஒருவேளை பாகுபலிமுதல் பாகம் உங்களுக்கு பிடித்திருந்ததுஎன்றால் இரண்டாம் பாகத்தை நிச்சயம் கொண்டாடுவீர்கள்

சில அதிமேதாவிகளைப் பார்க்க கொஞ்சம்பாவமாக இருக்கிறது. “இது எந்தப்படத்துலருந்து எடுத்துருக்காங்க தெரியுமா?அந்த சீன் எங்கருந்து சுட்டுருக்காங்கதெரியுமா?”ன்னுட்டு பினாத்திக்கிட்டு இருக்காங்கடேய் அதெல்லாம் பாத்தஉனக்குத் தானடா ப்ரச்சனை..பாக்காதவங்களுக்கு என்ன ப்ரச்சனை? இவர்களெல்லாம் பாகுபலியின் ப்ரம்மாண்ட வெற்றி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போய்விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

கிட்டத்தட்ட படம் பார்த்த அனைவருமே பாகுபலிக்கு விமர்சனம் எழுதியிருப்பதால், நம்முடைய ஆங்கிளில் பாகுபலி கேரக்டர்களைப் பற்றி ஒரு சில வரிகள்.


விஷாலோட “ஆம்பள” படத்து இண்டர்வல் காட்சியில அத்தை பொண்ணுங்கள கடத்துறதா நினைச்சி அத்தைங்கள சாக்கு மூடையில கட்டி கடத்திருவாங்க. மூட்டைய ஓப்பன் பன்னுற சதீஷ் ப்ரபுகிட்ட :”அப்பா அத்தை பொண்ணுங்க சூப்பர்” ம்பாறு. ப்ரபு மூட்டையில இருக்க பொண்ணுங்கள பாத்து ஷாக் ஆகி “டேய் அது அத்தை பொண்ணு இல்லடா… அத்தை” ன்னு சொல்லுவாறு. உடனே சதீஷ் திரும்ப ரம்யா கிருஷ்ணன் முகத்த ஒருதடவ பாத்துட்டு “பரவால்லப்பா..” ம்பாறு. கிட்டத்தட்ட அதே நிலமைதான் நேத்து எனக்கும். ரம்யா கிருஷ்ணன பாத்து ஜொள்ளு விட்டுக்கிட்டு இருந்தப்ப பக்கத்துல இருந்த ஃப்ரண்டு “இது ஹீரோயின் இல்லீங்க” னாரு.  நா ரம்யா கிருண்ஷன இன்னொருக்கா பாத்துட்டு சதீஷ் மாதிரி “பரவால்லீங்க”ன்னுட்டேன். ரம்யா கிருஷ்ணன் ஒரு சிரிப்பு சிரிக்குது பாருங்க… ச்ச… அவங்களே இன்னும் ஹீரோயினாவே நடிக்கலாம். 

அனுஷ்கா அதுக்கும் மேல… செம கெத்து…. அனுஷ்கா ஆம்பளைங்க கூட்டத்துல நின்னாலே அதுதான் ஹீரோ மாதிரி தெரியும்.. இதுல பொண்ணுங்க கூட்டத்துல வேற ஃபுல்லா நிக்கிது.. சொல்லவா வேணும்… தனியா தெரியிது. அது ஹைட்டுக்கும், அந்த கண் பார்வைக்கும்.. அந்த கேரக்டருக்கு வேற யாரையும் நினைச்சி கூட பாக்க முடியல. நயன்தாரா மட்டும் ஓரளவுக்கு செட் ஆகலாம். 

அனுஷ்கா வெய்ட் கொஞ்சம் அதிகம்தான்.. சில இடங்கள்ல ப்ரம்மாண்டமா தெரியிது. அதுவும் அனுஷ்கா ரம்யா கிருஷ்ணன அத்தைன்னு கூப்புடும்போது “ஏம்மா நம்ம ரெண்டு பேருக்கும் ரெண்டு வயசுதான் வித்யாசம் இருக்கும்.. பொசுக்குன்னு அத்தைன்னுட்டியேம்மா”ன்னு ரம்யா க்ருஷ்ணன் ஃபீல் பன்னிருக்கும். 

சத்யராஜ் வாழ்நாளில் இவ்வளவு முக்கியத்துவம் உள்ள கேரக்டர செஞ்சிருக்க மாட்டாரு. கிட்டத்தட்ட ஹீரோவுக்கு ஈக்குவலான ரோல்… நடிப்புல பிரிச்சிருக்காரு.. முதல் முறையா ரம்யா கிருஷ்ணன பேர் சொல்லி கூப்டுறதும், க்ளைமாக்ஸ்ல நாசர்க்கு விளக்கம் குடுக்குறதுலயும் கெத்து காமிக்கிறாரு. 

ராணாவை பாக்குறப்போல்லாம் உத்தமபுத்திரன் விவேக் வசனம்தான் மைண்ட்ல வந்துச்சி. நமக்கு ரெண்டே கஸ்டமருதான்.. ஒருத்தன் பெரிய முத்துக்கவுண்டன்.. இன்னொருத்தன் சின்ன முத்துக் கவுண்டன்.. ஒருத்தன் முரட்டு பீசு..இன்னொருத்தன் முட்டா பீசு.. அதே மாதிரிதான் ராணாவுக்கு ரெண்டே எதிரிதான்.. ஒருத்தன் அமரேந்திர பாகுபலி… இன்னொருத்தன் மகேந்திர பாகுபலி.. ஒருத்தன் பயங்கர பல்க்கா இருப்பான்… இன்னொருத்தன் பல்க்கா பயங்கரமா இருப்பான். 

ராணாவும் ப்ரபாஸூம் போட்டி போட்டு உடம்ப மெய்ண்ட்டெய்ண் பன்னிருக்கானுங்க.. பின்னால இருந்து பாக்கும்போது ராணாவா ப்ரபாஸான்னே கண்டுபுடிக்க முடியாத அளவு அதே ஹைட்டு.. அதே கட்டிங்ஸ்.. க்ளைமாக்ஸ்ல மட்டும் ப்ரபாஸ்க்கு VFX ல ரெண்டு எக்ஸ்ட்ரா கட்டிங்ஸ்.

படத்தோட இன்னொரு ஹீரோஇசையமைப்பாளர் MM கீரவணி.. பாடல்களும் சரி.. BGM உம் சரி… தெறிக்க விட்டுருக்காரு… அதுவும் இண்டர்வல் ப்ளாக்க்கு போட்டுருக்காரு பாருங்க… தரம். எந்த ஊருல சார் போய் ரெக்கார்டிங் பன்றீங்க? எங்காளுகளுக்கும் கொஞ்சம் சொல்லி விடுங்க. 

ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களும் புல்லரிக்க வைக்கிறது. ராஜமெளலியின் அடுத்த படைப்பு என்னவாக இருக்கும் என்பதை தெரிஞ்சிக்க இப்பவே ஆர்வமா இருக்கு. ராம் கோபால் வர்மா கொஞ்ச நாள் முன்னால சொன்னத வச்சி பாத்தா அடுத்த படைப்பு இன்னும் ப்ரம்மாண்டமா இருக்கும் போல.

”தியேட்டர்ல எக்ஸ்ட்ரா காசு வச்சி விக்கிறான்… தெலுங்கு டப்பிங் படத்த நா ஏன் பாக்கனும், இது வந்து இங்கிலீஷ் சீரியலோட காப்பிடா அதுனால நா பாக்கமாட்டேண்டா” ன்னுலாம் எதாவது சொல்லிக்கிட்டு உங்களை நீங்களே சமாதானப் படுத்திக்கிட்டு download பன்னி பாக்க ஆசப்பட்டா பாருங்க.. நஷ்டம் அவங்களுக்கு இல்லை. ஏன்னா அவங்க அல்ரெடி சுல்தான் டங்கலயெல்லாம் தூக்கி சாப்டு எங்கயோ பொய்ட்டாங்க. நஷ்டப்படப்போறது நீங்கதான். இந்த மாதிரி ஒரு படத்த தியேட்டர்ல பாக்குற வாய்ப்பு உங்களுக்கு இல்லாமலேயே போயிரும்!!!


Friday, April 21, 2017

The Autopsy Of Jane Doe!!!


Share/Bookmark
மனதில் நினைக்கும் போதே உள்ளுக்குள் ஒரு பயத்தை உண்டாக்கும் இடங்களில் முக்கியமான ஒரு இடம் பிணவறை.. பெரும்பாலானோருக்கு நிச்சயம் பரிட்சையமான இடமாக இருக்காது. குறிப்பாக பெண்களுக்கு. நமக்கு நெருங்கியவர்களின் துர்மரணங்கள் நிகழும்போது மட்டுமே, அந்த இடத்திற்கு நாம் செல்வதற்கான சூழல் உருவாகும். சாதாரண மனிதர்களுக்கு சோகத்தையும் பயத்தையும்  மட்டுமே வரவழைக்கும் இடம் அது. அதுவும் அங்கு உபயோகிக்கும் கெமிக்கல்களின் வாடையும், இறந்து போன உடல்களிலிருந்து வர ஆரம்பிக்கும் வாடையும் ஒன்றாக சேர்ந்து… அப்பப்பா.. நினைத்தாலே ஒரு மாதிரி இருக்கிறது.

பிணவறையில் வேலை செய்பவர்களுக்கு எப்படி இருக்கும்? அவர்களுக்கு அது பழகியிருக்கும் என்றாலும், அங்கு வேலை பார்க்க ஒரு அசாத்திய தைரியம் நிச்சயமாகத் தேவைப்படுகிறது. ஒரு பேய் படம் பார்த்தாலே இரவில் நமக்கு தூக்கம் வர மறுக்கிறது. இருட்டில் தனியாகச் செல்ல அள்ளு கிளப்புகிறது. அப்படியிருக்க, ப்ரேதங்களையும், ப்ரேதப் பரிசோதனைகளையும் தினமும் பார்க்கும் இவர்களின் வாழ்க்கை கொஞ்சம் கடினமானதுதான்.

சரி இப்போது மெயின் மேட்டருக்கு வருவோம். ஒரு நான்கைந்து பேர் கொடூரமாக கொல்லப்பட்ட ஒரு வீட்டின் basement இல், பாதி புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல் கிடைக்கிறது.  அந்தப் பெண்ணிற்கும் அந்த வீட்டில் இறந்து கிடப்பவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புதைக்கப்பட்டிருக்கும் பெண் யார் என்றும் தெரியவில்லை. உடலில் எந்த வித காயங்களோ கீரல்களோ எதுவும் இல்லை.

மறுநாள் காலை பத்திரிக்கையாளர்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டிய கட்டாயத்தில், இந்தப் பெண்ணின் மரணத்தைப் பற்றி கண்டறிய போலீஸ் இரு ப்ரேதப் பரிசோதனையாளர்களை அணுகி விடிவதற்குள் ப்ரேதப் பரிசோதனை அறிக்கை தேவை என கேட்கின்றனர்.
தந்தையும், மகனுமான இரு ப்ரேதப் பரிசோதனையாளர்களும் உடனடியாக அந்தப் பெண்ணை ப்ரேதப் ப்ரிசோதனைக்கு உட்படுத்த, ஒவ்வொரு சோதனையும் அவர்களை ஆச்சர்யப்படுத்துகிறது.

யார் அந்தப் பெண்? எப்படி மரணமடைந்தாள் என்பதை கொஞ்சம் அமானுஷ்யங்களையும் கலந்து, த்ரில்லிங்காகக் காட்டியிருக்கும் படம் தான் The Autopsy of Jane Doe.

ஒரு மிகப்பெரிய கட்டிடத்தின் basement இல் இந்த தந்தை , மகன் இருவரும் தங்களது ப்ரேதப் பரிசோதனை கூடத்தை வைத்து சோதனைகளை நடத்தி வருகின்றனர். கைவசம் எப்பொழுதும் மூன்று நான்கு ப்ரேதங்கள் பரிசோதனைக்காக  ஃப்ரீசரில் இருக்கிறது.

ஒரு முறை மகனின் காதலி, பிணங்களைப் பார்க்க ஆசைப்பட்டு ஃப்ரீசரைத் திறக்க, மூகமே இல்லாத ஒரு பிணம்.. அதன் காலில் ஒரு மணி கட்டியிருக்கிறது. எதற்காக இறந்தவர் காலில் மணி கட்டியிருக்கிறீர்கள் என அந்தப் பெண் கேட்க, “பழங்காலத்தில் ஒருவர் உண்மையிலேயே இறந்துவிட்டாரா அல்லது இறந்ததுபோல் கோமா நிலையில் இருக்கிறாரா என்பதைக் கண்டுபிடிக்க அவற்றின் காலில் மணியைக் கட்டுவது வழக்கம். ஒரு வேளை உயிர் இருந்து கால் ஆடும் பட்சத்தில் அந்த சத்தத்தை வைத்து அவருக்கு உயிர் இருக்கிறது என கண்டுபிடித்துவிடலாம். நான் இன்னும் அந்த பழங்கால முறையைப் பின்பற்றி வருகிறேன்” என்கிறார்.

எப்படி இறந்தாள் என்றே தெரியாத பெண்… முகமே இல்லாத பிணம்.. அதன் காலில் மணி… பின்னால் என்ன நடக்கும் என யூகிக்க முடிகிறதல்லவா? மிகக் குறைந்த கேரக்டர்களை வைத்து எடுக்கப்பட்ட ஒரு நல்ல த்ரில்லர். என்சாய்…!

Monday, April 17, 2017

சிவலிங்கா – சந்திரமுகி பார்ட் 6!!!


Share/Bookmark
சந்திரமுகி பட்த்துல ரஜினி ஜோதிகாகப் பத்தி ஒரு வசனம் சொல்லுவாரு. கங்கா சந்திரமுகி அறைக்குப் போனா.. கங்கா சந்திரமுகியா நின்னா.. கங்கா சந்திரமுகியா நடந்தா.. கங்கா சந்திரமுகியாவே தன்னை நினைச்சிக்கிட்டான்னு. இந்த வசனம் ஜோதிகாவுக்கு பொருந்துச்சோ இல்லையோ… நம்ம பி.வாசு சாருக்குத்தான் கரெக்டா பொருந்துது. மனுசன் சந்திரமுகியாவே மாறிட்டாரு போல.. அத விட்டு வெளில வரவே மாட்டேங்குறாரு. கடந்த 12 வருசத்துல கிட்டதட்ட  நாலு சந்திரமுகி எடுத்துருக்காரு.





முதல்ல மலையாள மணிச்சித்ரதாள கன்னடத்துல விஷ்ணுவர்தன வச்சி ஆப்தமித்ரான்னு எடுத்தாரு. அது ஹிட்டான உடனே அத சந்திரமுகின்னு ரஜினிய வச்சி தமிழ்& தெலுகுல எடுத்து மெகா ஹிட்டாக்குனாரு. திரும்ப கன்னடத்துக்கே போயி ஆப்தமித்ராவோட சீக்குவல் ஆப்தரக்‌ஷகாவ எடுத்தாரு. படம் எடுத்து முடிச்சோன விஷ்ணுவர்த்தன் இறந்துட்டாரு. ச்ச… ச்ச… படம் பாத்ததாலயெல்லாம் அவரு சாகல… அந்தப் படம் பாத்தா நம்மதான் சாவோம். அந்த அளவுக்கு இருக்கும். இருந்தாலும் விஷ்ணுவர்தனோட கடைசிப் படம்ங்குறதாலா படம் பிச்சிக்கிட்டு ஓடுச்சி. அதே படத்த தமிழ்ல சந்திரமுகி-2ன்னு எடுக்க ரஜினிய அப்ரோச் பன்னி அது முடியாமப் போக, அதே கதைய தெலுகுல “நாகவல்லி”ங்குற பேர்ல வெங்கடேஷ், அனுஷ்காவ வச்சி எடுத்தாரு. அதாவது வெங்கடேஷ் அந்தப் பட்த்துல சந்திரமுகி சரவணனோட சிஷ்யானா வந்துருப்பாரு. சீக்குவல்னவுடே என்னென்னவோ நினைச்சிடாதீங்க. ஹீரோ ஹீரோயின மட்டும் மாத்திட்டு அதே கதைய அப்டியே திரும்ப எடுத்துருப்பாரு.

ஆக மொத்தம் P. வாசு கணக்குல நாலு சந்திரமுகி. இது இல்லாம அரண்மனைங்குற பேர்ல சுந்தர்.சி வேற ரெண்டு தடவ சந்திரமுகிய எடுத்துருக்காரு. அது வேற கணக்கு விடுங்க. இந்தப் பக்கம் நம்ம ராகவா லாரண்ஸ்.. கடந்த பத்து வருஷத்துல அவர் முனி மட்டும்தான் எடுத்துருக்காரு. அடுத்த பத்து வருஷத்துலயும் முனி மட்டும்தான் எடுப்பாரு போல. ஏன்னா இன்னும் முனி-4, முனி-5ன்னு நிறைய வரவேண்டியிருக்கு.

இப்ப இந்த பி.வாசு, ராகவா லாரண்ஸ் ங்குற ரெண்டு வெவ்வேறு மந்தையில் இருந்த ஆடுகள் ஒண்ணா சந்திச்ச போது ஏற்பட்ட அசம்பாவிதம்தான் இந்த சிவலிங்கா. படம் முழுக்க சந்திரமுகியும், முனியும்தான் மாத்தி மாத்தி ஓடுது. க்ளைமாக்ஸ்ல பி.வாசு இயக்கத்துல கவுண்டரும் சத்யராஜூம் இணைந்து நடிச்சி மெகா ஹிட்டான மலபார் போலீஸ் படத்தோட க்ளைமாக்ஸ் சீன அப்டியே எடுத்து சேத்துக்கிட்டுருக்காங்க. அவ்ளோதான். ஏற்கனவே பி.வாசுக்கு நாலு சந்திரமுகி. இப்ப சிவலிங்கா ஒண்ணு அஞ்சி. சிவலிங்காவே கன்னட சிவலிங்கா படத்தோட ரீமேக்தான். ஆக மொத்தம் ஆறு… ச்சியேர்ஸ்.. ச்சை.. நமக்கே கண்ணக்கட்டுது.

படத்தோட மிகப்பெரிய ப்ளஸ் நம்ம வடிவேலு. ரொம்ப நாளுக்கு அப்புறம் அவரோட காமெடி ஒர்க் அவுட் ஆகியிருக்கு. நமக்கெல்லாம் புடிச்ச பழைய வடிவேலுவா செமையா சிரிக்க வச்சிருக்காரு. ஒரு நாலஞ்சி சீன் தான் வர்றாரு. ஆனா வந்த சீனெல்லாம் செம காமெடி. எப்புடி திருடுனேன்னு ஊர்வசிக்கிட்ட சொல்லிக்காட்டுற சீன் தாறு மாறு.

அடுத்து ராகவா லாரன்ஸ்.. ஆளு சூப்பரா இருக்காரு. நல்லா டான்ஸ் ஆடுறாரு. ஆனா என்ன ரொம்ப அதிகப் பிரசங்கித் தனம் பன்றாரு. முனி-1 ல பேயப்  பாத்து பயப்புடுவேன்னு ஆரம்பிச்சி இன்னும் அதே ரம்பத்தப் போட்டுக்கிட்டு இருக்காரு. எப்ப நிறுத்தப்போறாருன்னு தெரியல.

போன படத்துல “மக்கள் சூப்பர் ஸ்டார்”ன்னு போட்டு எல்லார்கிட்டயும் நல்லா வலுவா வாங்கிக் கட்டிக்கிட்டாரு. இதுல என்னன்னு பாத்தா அவரு பேரு சிவ லிங்கேஸ்வரன்… அதுலயும் படத்துல அடிக்கடி ”இந்த லிங்கா… சிவலிங்கேஸ்வரன் இத செய்யாம விடமாட்டன்…. லிங்கா இத கண்டுபிடிக்காம விடமாட்டான்” ன்றாராப்ள.. இன்னும் உச்சக்கட்டம் இண்ட்ரோ சாங்கு. இவரு சின்னக் கபாலியாம்… பல பேரு ரஜினி பேர சொல்லாம சூப்பர்  ஸ்டாருன்னு போட்டுக்குறானுங்க… இவரு ரஜினி படத்த ஸ்க்ரீன்ல காமிச்சிட்டு நாந்தான் அடுத்த ரஜினின்னு சொல்லிக்கிறாரு. மத்தபடி அவய்ங்களுக்கும் இவருக்கும் எந்த வித்யாசமும் இல்லை. சின்னக் கபாலி சொல்லிக்கிட்டு திரிஞ்சி சின்னப் பகவதி மாதிரி எவன்கிட்டயாவது மாத்து வாங்குனாதான் தெளியிவாரு போல.

பி.வாசுவோட பையன் ஒரு ரோல் பன்னிருக்காரு. அந்த ரோலுக்கு கரெக்ட்டா மேட்ச் ஆயிருக்காரு. நல்லா நடிக்கவும் செஞ்சிருக்காரு. தமன் பாட்டெல்லாம் கேக்குற மாதிரிதான் போட்டுருக்காரு. பின்ணனி இசைதான் கொஞ்சம் இறைச்சல்.

மைனஸ் அப்டின்னு சொல்லனும்னா எக்கச்சக்கமா சொல்லலாம். மொதல்ல ஏற்கனவே பலதடவ பாத்து பழக்கப்பட்ட அதே கதை திரைக்கதை. இந்தப் படத்த ஒரு பேய் படமா இல்லாம ஒரு க்ரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் டைப் படமா எடுத்துருந்தா மலபார் போலீஸ் மாதிரி நல்ல  படமா வந்திருக்க வாய்ப்பு இருந்துருக்கும்.

அடுத்து ரித்திகா சிங்…சந்திரமுகில ஜோதிகா பன்ன ரோல பன்னிருக்காங்க. அந்தப் புள்ளைக்கு நடிக்கவும் வரல.. அந்த ரோலுக்கு செட்டும் ஆகல.. மேக்கப்பும் சரியில்லை… ஸ்க்ரீன்ல வந்து எதோ பன்னிட்டு இருக்கு. ஊர்வசியும் அதே தான்…

இன்னொரு கொடுமையான விஷயம் மேக்கப். சமீப காலத்துல இவ்வளவு மோசமான மேக்கப்ப படங்கள்ல பாத்த்தே இல்லை. கரகாட்டம் ஆடுறப்போ மூஞ்சி ஃபுல்லா ரோஸ் பவுட நல்லா அள்ளி அப்பி, அடிக்கிற கலர்ல ஒரு லிப் ஸ்டிக் போட்டுக்கிட்டு இருப்பாங்களே… அதே மாதிரிதான் இருக்கு இதுல ரித்திகா சிங், ஊர்வசி.. பனுப்பிரியா எல்லாரோட மூஞ்சும். மூஞ்சில சுண்ணாம்ப விட்டு அப்பி விட்டமாதிரி. அதுவும் இந்தப் படத்துல போட்டுருக்க லிப் ஸ்டிக் கலரெல்லாம் நா தெலுங்குப் படத்துல கூட பாத்தில்லை. படத்த கலர்ஃபுல்லா காமிக்கிறதுக்காக முயற்சி செஞ்சி படம் ஃபுல்லா ஒரே ஊதா கலரு… அதுவும் அடிக்கிற கலரு.. யப்பா… மிடில.

இன்னொரு பெரிய கடுப்பு என்னன்னா படத்துல வர்ற கேரக்டர்கள் நான் ஸ்டாப்பா பேசிக்கிட்டே இருக்காங்க.. ஒவ்வொருத்தரோட வாய்ஸ் intensity யும் பயங்கர அதிகம். காது கொய்யிங்குது. இவங்க சும்மா இருந்தாலும் தமன் விட மாட்ராப்ள.. எதாவது ஒரு மீசிக்க போட்டு காத கிழிச்சி விடுறாப்ள..  படத்துல ஒரு pleasant டான சீன் கூட இல்லை. நல்ல வேளை கோவை சரளா படத்துல இல்லையேன்னு இறைவனுக்கு நன்றிய தெரிவிச்சிக்கிட்டேன். பாக்குற ஐடியா இருந்தா நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டல பாருங்க.


மொத்ததுல வடிவேலு ஒருத்தருக்காக வேணா ஒருதடவ போய்ப் பாக்கலாம். மத்தபடி சிறப்பா சொல்ற மாதிரி ஒண்ணும் இல்லை. 

Monday, April 10, 2017

காற்று வெளியிடை – ”மணி சார்” என்னும் பேட்டைக்காரன்!!!


Share/Bookmark
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை மணி சாருக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. ஒரு மனிதரால் எப்படி என்பதுகள் முதல் இப்பொழுது வரை மக்களின் ரசனையைப் புரிந்துகொண்டு திரைப்படங்களைக் கொடுக்க முடிகிறது? எப்படி இப்படி updated ஆக இருக்கிறார் என்பதெல்லாம் மிகவும் ஆச்சர்யமூட்டும் விஷயங்கள். அவரை விடுங்கள். உங்களின் சினிமா ரசனை எந்த அளவு உள்ளது? சமூக மாற்றங்களை நீங்கள் எந்த அளவு உள் வாங்கிக் கொள்கிறீர்கள்? ஒவ்வொரு காட்சியிலும் வைக்கப்படும் குறியீடுகள் உங்களுக்கு புரிகின்றனவா இல்லையா? என்பதயெல்லாம் சோதித்துப் பார்க்க வேண்டுமானால நீங்கள் முதலில் இந்த காற்று வெளியிடையைப் பார்க்க வேண்டும். ஒரு சினிமா எப்படி எடுக்கப்பட வேண்டும் என இன்றைய இயக்குனர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாகவே இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார். என்ன? பக்குன்னு தூக்கிப் போடுதா? படம் நல்லாருந்தா இப்டியெல்லாம் எழுதலாம்னு இருந்தேன். ஆனா பாருங்க அப்படிப்பட்ட கெட்ட சம்பவங்கள் எதுவும் நடக்கல.

தமிழ் சினிமாவில் இதுபோன்ற அரிய காவியங்கள் வாய்ப்பது மிகவும் அரிது. ஒவ்வொரு ஃப்ரேமையும் செதில் செதிலாக கருக்கி…. ச்சி… செதுக்கி உருவாக்கப்பட்ட இந்தக் காவியத்தை ஒரே ஒரு வார்த்தையில் நன்றாக இல்லை என்று கூற மக்களுக்கு எப்படித்தான் மனது வருகின்றது என்று தெரியவில்லை. அதனால ஒரு வார்த்தையில சொல்லாம ஒரு நாலஞ்சி பாராவுல கழுவி ஊத்துவோம் வாங்க.

மணி ரத்னத்தைப் பற்றிய விமர்சன்ங்கள் எதையாவது முன் வச்சாலே அவரது ரசிகர்கள் (?) “அவரு நாயகன்லாம் எப்டி எடுத்துருந்தாரு தெரியும்ல… தளபதியெல்லாம் மாஸ்டர் பீஸ் தெரியும்ல”ன்னு ஆரமிச்சிருவாய்ங்க. யாருப்பா இல்லைன்னு சொன்னா ? வேணும்னா அந்தப் படத்தையெல்லாம் டிவில போடும்போது பாத்துட்டு  அமைதியா இருங்கய்யா.. இந்தப் படத்துக்கெல்லாம் ஏண்யா கொடை புடிக்கிறீங்க. நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி எல்லாத்துலயும் மொக்கை வெறி ஊறிப்போன ஒருத்தராலதான் இவ்வளவு பெரிய மொக்கைய எடுக்க முடியும்.

இந்த மணி சாரும் சரி கெளதம் மேனனும் சரி.. யாருக்காக படம் எடுக்குறாங்கங்குறதுல பெரிய சந்தேகமே இருக்கு. தமிழ் இயக்குனர்கள். தமிழ்லதான் படம் எடுக்குறாங்க. ஆனா பாருங்க படத்துல வர்ற கேரக்டர்கள் எதுவுமே தமிழ்நாட்டுல இருக்கவங்க மாதிரியோ தமிழ் கலாச்சாரத்தோட ஒன்றியவர்களாகவோ இருக்காது. அதயெல்லாம் விடுங்க… படத்துல பேசுற வசனங்கள் ஒண்ணாவது நம்மாளுங்க பேசுற மாதிரி இருக்கா? 

இந்த  trilingual படம்ன்னு கேள்விப்பட்டுருப்பீங்க. உண்மையான ட்ரை லிங்குவல் படம்னா அது இதுதான். வக்காளி படத்துலயே மூணு லாங்குவேஜ் பேசுறாய்ங்க. அதுல தமிழ் எப்பயாச்சும் அப்பப்ப வந்துட்டு போகுது. ஒரு புள்ளை கார்த்தியப் பாத்து கேக்குது ” When we are gonna have our முதல் பிள்ளை? ” ன்னு. ஏன் ஆத்தா ஒரு வார்த்தைய மட்டும் தமிழ்ல பேசுற? அதயும் இங்கிலீஷ்லயே கேட்டுருக்கலாமே? 

உள்ள என்ன பேசுறானுங்களோ.. ஆனா படத்தோட பேரும், பாடல்களும் தூய தமிழ்ல வச்சிடுறாய்ங்க. மணி சாருக்கு ஒரு வைரமுத்து… கெளதமுக்கு ஒரு தாமரை. இத மட்டும் ஏன் தமிழ்ல வைக்கிறீங்க? ஊர ஏமாத்தவா? “உள்ளே உங்களது ஆங்கிலப் பூர்வீகமே இருக்கலாம் ஆனால் தலைப்பு தமிழில்தான் இருக்கவேண்டும்” இம்சை அரசன்ல சொன்னத கரெக்ட்டா ஃபாலோ பன்றது இவருதான்.  

ஒரு காட்சி கூட இயல்பாவே இல்லை. ரொம்ப ஆர்டிஃபீஷியல். அதுவும் வசனம் பேசுனா ஒண்ணு இங்கிலீஷ்ல பேசுறானுங்க. தமிழ்ல பேசச் சொன்னா படக்குன்னு ” “நெறித்த திரைகடலில் நின்முகம் கண்டேன்” ன்னு கவிதையில இறங்கிடுறானுங்க. ஏண்டா ஒண்ணு தூங்குற இல்லை தூர்வார்ற. நார்மலாவே பேச மாட்டீங்களா? 

கார்த்தியும், அந்தப் புள்ளை அதிதீயும் பேசிக்கிறாங்க.. ”இனிமே நம்ம மீட் பன்னக்கூடாதுன்னு நினைக்கிறேன்… இது டேஞ்சரஸ்னு தோணுது….” டேய்.. கொஞ்சம் இருங்க.. இத நா எங்கயோ கேட்டுருக்கேனே.. இது அதுல்ல…. “நா உன்ன லவ் பன்னல… நீ அழ்கா இருக்கேன்னு நினைக்கல… ஆனா இதெல்லாம் நடந்துருமோன்னு பய்மா இருக்கு”  எத்தனை தடவ?

படத்துல ரெண்டு பாவப்பட்ட ஜீவன்கள்ல ஒண்ணு கார்த்தி… நல்ல இருந்த மனுசன “சார் நீங்க மீசைய மட்டும் எடுத்தீங்கண்ணா நல்லா சாக்லேட் பாய் மாதிரி இருப்பீங்க சார்…. பொண்ணுங்கல்லாம் சும்மா அள்ளிக்குவாங்க”ன்னு என்னென்னமோ சொல்லி மண்டையக் கழுவி மீசைய எடுக்க வச்சிட்டாய்ங்க. ஆனா அதப் பாக்க ரண கொடூரமா இருக்கு. அதுவும் கார்த்தியும், அதிதீயும் ஒண்ணா க்ளோஸப் காட்சிகள்ல காமிக்கும்போது யாரு கார்த்தி யாரு அதிதீன்னு கண்டுபுடிக்கிறதே பெரிய கஷ்டமா இருக்கு. 

அந்த இன்னொரு பாவப்பட்ட ஜீவன் யாருன்னா நம்ம RJ பாலாஜி. சாதரண மனுஷன் ஒரு நிமிஷத்துக்கு 200 வார்த்தை பேசுனான்னா RJ பாலாஜி நானூறு வார்த்தை பேசுறவரு. அந்தாளப் போய் இப்பிடி ஆக்கிவிட்டுட்டீங்களேடா… அதுக்கு பேசாம அவருக்கு ஒரு ஊமை கேரக்டரா குடுத்துருக்கலாம். பேசுறதுக்கு தான் RJ பாலாஜி வேணும்? சும்மா வந்துட்டு போறதுக்கு யாரையாவது போட்டுருக்கலாமே..
படத்துல கார்த்தியோட ஃபேமில ஒரு பியூட்டிஃபுல் பேமிலி… மொதல்ல கொழந்தை பெத்துக்கிட்டு தான் அப்புறம் கல்யாணம் பன்னிக்குவாய்ங்க. கார்த்தி அண்ணன் ஒரு புள்ளைய ஒன்பது மாசமாக்கிட்டு அப்புறம் கல்யாணம் பன்றாப்ள… ஒரு வேளை செலவை கம்மி பன்றதுக்காக வளைகாப்பயும் கல்யாணத்தையும் ஒண்ணா வச்சிருக்கானுங்களோ? இது கார்த்தி அதிதீகிட்ட  “எங்கம்மா எனக்கு பாரதியாரயும் மீன் குழம்பையும் ஊட்டி வளர்த்தவங்க.”ன்னு பெருமையா சொல்றாப்ள. அப்டியே இவனுக்கு கொஞ்சம் கள்ளிப்பாலையும் ஊட்டி வளர்த்துருந்தா இவ்வளவு தொல்லை இருக்காது. 

சரி கார்த்தி மூஞ்சிதான் சகிக்கல… அந்த ஹீரோயின் மூஞ்சாவது நல்லாருக்கான்னு பாத்தா அது அதுக்கும் மேல.. ஹீரோயின் கூட ஒரு துண்டு பீடி எப்பவும் ஒட்டிக்கிட்டே வருது. அதாங்க நம்ம ருக்மணி.. அது ஏன்னு எனக்கு அப்புறம் தான் புரிஞ்சிது. அதெல்லாம் பக்கத்துல இருந்தாதான் அதிதீ கொஞ்சமாவது அழகாத் தெரியும்னுதான் கூடவே சுத்த விட்டுருக்கானுங்க. 



கார்த்தி ஜெயில்ல இருந்தபடி அதிதீய நினைச்சி புலம்புறாரு. ”கண்ண மூடுனா உன் முகம் தெரியிது… உன் சிரிப்பு தெரியிது… உன் பெரிய கண்ணு தெரியிது…. “ டேய் தியேட்டர்ல எல்லாரும் எழுந்து வெளில தம் அடிக்க போறானுகளே அது தெரியிதாடா? 

கார்த்திய ஒரு ப்ளே பாய் மாதிரி காமிக்கிறாய்ங்க. கார்த்திக்கு இந்தப் புள்ளை நாலாவது. அப்ப அந்தப் புள்ளைக்கு கார்த்தி ஏழாவதான்னு கேப்பீங்க? அதப்பற்றிய டீட்டெய்லிங் படத்துல இல்லாமப் போனது கொஞ்சம் வருத்தம்தான். கார்த்தி அதிதீய சின்சியரா லவ் பன்றாரு.. ஆனா கல்யாணம் பன்னிக்க மாட்டாரு. சண்டை போடுறாரு. அந்தப் புள்ளை கோச்சிக்கிட்டு போனா பாட்டுப்பாடி கூப்டு வருவாரு. திரும்ப சண்டை போடுறாரு. திரும்ப கோச்சிக்கிட்டு போகுது… டேய்ய்ய்ய்ய்… என்னடா வாழைப்பழக்காமெடி திரும்பத் திரும்ப அதயே பன்னிக்கிட்டு இருக்கீங்க. திட்டுறதுக்கு வார்த்தை இல்லாம திரும்பத்திரும்ப அதே வார்த்தையச் சொல்லி திட்டுறியேடாங்குற மாதிரி எடுக்குறதுக்கு சீன் இல்லாமா திரும்பத் திரும்ப அதயே எடுத்துக்கிட்டு இருந்துருக்காரு நம்மாளு.

மணி சாரோட இந்தப் படம் ஒரு கொரியன் சீரியலோட காப்பின்னு ஊருக்குள்ள பரவலா பேசிக்கிறாங்க. அது அப்டியே இருக்கட்டும்… நம்ம அந்த லெவலுக்கு போக வேணாம்… ஒரு நாலு மாசம் முன்னால வாகான்னு ஒரு படம் வந்துச்சி. கிட்டத்தட்ட அதே நம்ம காற்று வெளியிடையும். பாக்கிஸ்தான் ஆர்மிக்கிட்ட மாட்டுன ஒரு இந்திய வீரர், அங்கருந்துக்கிட்டே அவரோட லவ்வ நினைச்சிப் பாப்பாரு. பாக்கிஸ்தான் ஆர்மிக்கிட்டருந்து தப்பிக்கிற காமெடியெல்லாம் அதே வாகாதான்.

பாக்கிஸ்தான் பார்டர்ல கார்த்தி வண்டி ஓட்டிக்கிட்டு வரும்போது வழில வண்டிய பஞ்சர் ஆக்குறதுக்கு ஸ்பைக்ஸ் எல்லாம் போட்டு ஒரு நாலு பாக்கிஸ்தான் போலீஸ் நிப்பானுங்க. நம்மாளு டூவீலர் காரனுங்க ஸ்பீட் ப்ரேக்கர மேல ஏத்தாம சைடுல விட்டு ஓட்டிக்கிட்டு போவானுங்களே.. அதே மாதிரி வண்டிய நேராவிடாம சைடுல விட்டு தப்பிச்சிடுறாரு… அடேய்… பார்டருக்கு உண்டான மரியாதை போச்சேடா உங்களால. வாகா ஒரு காட்டு மொக்கைப் படம். ஆனா காற்று வெளியிடை பாத்தப்புறம் அப்டி நினைச்சது தப்பு தப்புன்னு கண்ணத்துலயே போட்டுக்கிட்டேன். 
டெட் பாடிக்கு அலங்காரம் பண்ணி பன்னீரெல்லாம் தளிச்சி வைக்கிற மாதிரிதான் ஏ.ஆர்.ரஹ்மானோட இசையும், ரவி வர்மனோட ஒளிப்பதிவும். கதையும் திரைக்கதையும் செத்துக் கிடக்குறப்போ, இசையையும் ஒளிப்பதிவையும் வச்சிக்கிட்டு என்ன செய்யிறது?

மணி சார்.. நீங்க  படம் எடுக்குறதெல்லாம் சரி.. ஆனா யாருக்காக எடுக்குறீங்கன்னுதான் தெரியல. நீங்க எடுக்குற படமெல்லாம் தமிழுக்கான படமோ தமிழர்களுக்கான படமோ இல்லைன்னு மட்டும் உறுதியாச் சொல்ல முடியும். புது இளம் இயக்குனர்களே இப்பல்லாம் படத்துல லவ்வுங்குறத வெறும் ஊறுகா மாதிரிதான் தொட்டுக்கிட்டு படம் எடுக்குறாங்க. ஆனா நீங்க அந்த காலத்துலயே புரட்சி பன்னவரு… இப்ப வந்து முழு நீளக் காதல் திரைப்படம் எடுத்துக்கிட்டு திரியிறீங்க. அட நல்லா எடுத்தாலும் பரவால்ல.. நமக்குதான் வரலைல்ல… அப்புறமும் ஏன் அதயே கட்டிகிட்டு அழனும்… வேற பக்கம் வண்டியத் திருப்புங்க. எதாவது தேறுதா பாப்போம். 

நீங்களே சொந்தமா படம் தயாரிக்கிற வரைக்கும் உங்க மனசுல என்ன தோணுதோ அதத்தான் எடுக்கப்போறீங்க.. மெட்ராஸ் டாக்கீஸ இழுத்து மூடி அடுத்த தயாரிப்பாளர்கிட்ட கதை சொல்லி படம் எடுக்க வேண்டிய நிலமை வந்தால் இன்னும் கொஞ்சம் பெட்டரா பன்னுவீங்கன்னு நம்புறோம்.. 

Wednesday, April 5, 2017

ஏய் நா இண்டர்வியூக்கு போறேன்.. இண்டர்வியூக்கு போறேன்-ACCET PLACEMENT!!!


Share/Bookmark
இந்தப் பதிவில் குறிப்பிடப்படும் சம்பவங்கள் கதாப்பாத்திரங்கள் யாவும் உண்மையே.. (சினிமா மேற்கோள்கள் மட்டும் எக்ஸ்ட்ரா)

காலேஜ் சேந்து அஞ்சி செமஸ்டர் வர்ற வரைகும் செத்த நாய் செருப்ப கடிச்ச மாதிரி கிடக்குற பயலுக குபீர்னு ஆறாவது செமஸ்டர்ல படிக்க கெளம்பிருவாய்ங்க. ஆளாளுக்கு நமீதா சைஸுல ஒரு புக்கை கைல எடுத்துக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் திரிஞ்சிட்டு இருப்பானுங்க. இதுல லேடீஸ் ஹாஸ்டல்லருந்து வர்ற ஃபோன் கால்ல டவுட்ட வேற க்ளியர் பன்னிட்டு இருப்பானுங்க. அப்டி என்னடா கையில இவ்ளோ பெருசா வச்சிருக்காய்ங்கன்னு பாத்தா R.S.அகர்வால் எழுதுன Quantitative Aptitude புத்தகம். சப்ஜெக்டுக்கு புக் எழுதிக் கொன்னது பத்தாதுன்னு அந்த அகர்வால் நாதாரி நாயி இங்கயும் வந்துருச்சா. வக்காளி அவனக் கொல்லனும்டா மொதல்லன்னு தோணும்.

ப்ளேஸ்மெண்ட்க்கு கம்பெனிங்க வரனும்னா மொதல்ல அவனுங்க மண்டையக் கழுவி காலேஜ்க்கு அழைச்சிட்டு வரனும். நம்மல்லாம் கூப்டப் போனா மேலயும் கீழயும் பாத்துட்டு வாட்ச்மேன் ட்ரஸ்ஸ குடுத்து கேட்டுல உக்கார வச்சிருவாய்ங்க. அதனால அவனுங்கள கூப்டு வர நல்லா பேசுற ஒரு நாலு பேரு வேணும். அப்படிப்பட்ட பசங்கள செலெக்ட் பண்ணி Placement co-ordinator ah பதவி குடுத்து ஒவ்வொரு கம்பெனிக்கும் அனுப்பி, அவனுங்கள கூட்டிக்கிட்டு வரனும். ஆமா இவனுங்க வழிச்செலவுக்கு காசு வேணுமே? காலேஜ்ல கேட்டா “காலேஜே அவராதத்துலதான் ஓடுது.. நீ வேணா காலேஜுக்கு குடு” ம்பாரு ப்ரின்சிபால். வேற என்ன பன்றது.. “எவன் எவனுக்கெல்லாம் வேலை வேணுமோ அவன்லாம் 2000 ரூவா குடுன்னு எல்லார்கிட்டயும் கலெக்‌ஷனப் போட்டு இந்த மாதிரி செலவுக்கெல்லாம் யூஸ் பன்னிக்குவாய்ங்க. இப்ப இந்த ப்ளேஸ்மெண்ட்ல நம்ம கடந்து வந்த பாதையக் கொஞ்சம் திரும்பி பாக்குறதுதான் இந்தப் பதிவு.

அந்த நாளும் வந்துச்சி. மொதல்ல TCS வந்தாய்ங்க. கேலேஜே ஒரே திருவிழா மாதிரி இருந்துச்சி. பசங்க எல்லாரும் ரேமண்ட்ஸ் மாடல் மாதிரி இருந்தாய்ங்க. பொண்ணுங்க அதுக்கு மேல… “டேய் மச்சி.. யார்ரா இந்தப் பொண்ணு… இத நா சொல்லியே ஆகனும்… யாரும் இவ்வளவு அழக… இவ்வளவு அழகப் பாத்துருக்க மாட்டாங்க.. “  “டேய்… நல்லா கண்ண கழுவிட்டு பாருடா… அது நம்ம க்ளாஸ் புள்ளைதான்… ஃபுல் மேக்கப்புல வந்துருக்கு…” "அப்ப அங்க நிக்கிற பியூட்டி?” “அடேய்... நம்ம HOD மாலாடா..” “அடக் கருமத்தே…. வீட்டுக்கு போன உடனே கண்ண ஆசிட் ஊத்திக் கழுவனும்”ன்னு  இப்படி பல கண்பீசன் நடக்குற அளவுக்கு புள்ளைங்களோட கெட்டப் இருந்துச்சி.

மொதல்ல aptitude test… முக்கால்வாசிப்பேரு தேறியாச்சி. நானும் உள்ள இருந்தேன். அடுத்து  டெக்னிக்கல் இண்டர்வியூ… என்னென்னமோ கேட்டுட்டு “ஆமா வெளியூரெல்லாம் அனுப்புனா போவியா?ன்னான்… நா படக்குன்னு “நோ சார்”ன்னேன்.. “ஏன் சார்” னான்.. “என்னோட ஃபேமிய விட்டுட்டு என்னால எப்புடி சார்ர்… “ன்னு ஒரு விக்ரமன் பட பர்ஃபார்மன்ஸ போட்டேன். க்ளியர் பன்னி HR இண்டெர்வியூக்கு அனுப்பிட்டானுங்க. வெளில வந்து பயலுக்கிட்ட் சொன்னதுக்கு “அட நாசமா போற எடுபட்ட பயலே.. ஏண்டா போக மாட்டேன்னு சொன்னே.. இதுக்கெல்லாம் போவேன்னு சொல்லனும்ண்டா” ன்னானுக… “இதெல்லாம் எனக்கு எப்படா சொல்லிக்குடுத்தீங்க? திடீர்ன்னு கேட்டா நா என்னத்த சொல்றதுன்னு தெரியாம சொல்லித் தொலைஞ்சிட்டேனே… அடுத்த HR இண்டெர்வியூல எப்டி கலக்குறேன் பாரு”ன்னு உள்ள போனேன்..

சொல்லிவச்சா மாதிரி அந்தாளும் கரெக்ட்டா “வெளியூர் அனுப்புனா போவியா மாட்டியா?” ன்னான். இந்த தடவ கொஞ்சம் கூட யோசிக்கலையே “போவேன் சார்” ன்னு மண்டைய வேகமா ஆட்டுனேன். ”டெக்னிக்கல் இண்டர்வியூல போகமாட்டேன்னு சொல்லிருக்க.. இங்க வந்து போவேனு சொல்ற… ஒண்ணு மண்டைய இந்தப் பக்கம் ஆட்டு இல்லை அந்தப் பக்கம் ஆட்டு.. ஏன் இப்புடி மாத்தி மாத்தி ஒளருற”ன்னாரு அவுரு. சார் மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு அவ்வையார் சொன்னாருன்னு அப்பச் சொன்னேன்.. ஆனா திருவள்ளுவர் என்ன சொல்லிருக்காருன்னா “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” ன்னு சொல்லிருக்காருன்னு கில்லி விஜய் மாதிரி மாத்தி மாத்தி பேசுனதுக்கு எதோ சொல்லி சமாளிச்சிட்டு வெளில வந்தேன்.

மொத்த குரூப்புக்கும் இண்டர்வியூ முடிய ராத்திரி ஆயிருச்சி. நைட்டு எட்டு மணியப் போல காலேஜ்குள்ள வச்சி ரிசல்டு சொல்றானுங்க. EEE அட்டெண்டன்ஸ் வாரியா செலெக்ட் ஆன பேரெல்லாம் ஒவ்வொன்னா படிக்கப் படிக்க நமக்கு உள்ளுக்குள்ள திகீர் திகீர்னு இருக்கு. கரெக்ட்டா நம்ம பேரு வரப் போறப்ப மட்டும் டக்குன்னு ஜம்ப் பன்னி அடுத்த பேருக்கு பொய்ட்டாய்ங்க. கிட்டான் போச்சா… காதுல குருவி ரிங்குன்னு சுத்துமே…. குபு குபுன்னு கண்ணுல தண்ணி வந்துருச்சி. நம்ம செலெக்ட் ஆவாத்துக்கு கூட இல்லை. நமக்கு வேண்டியவங்க… வேண்டியவங்களுக்கு வேண்டியவங்க எல்லாரும் TCS ல செலெக்ட் ஆயிட்டாங்க. அந்த சோகம் வேற..

எங்க குரூப்புல மொத்தம் எழு பேரு (பசங்க மட்டுந்தேன்..). நானு, அனந்த், ப்ரபு, ஞான சுந்தர், பரத், ராஜா, வினோத். அதுல அனந்த், ப்ரபு செலெக்ட் ஆயிட்டானுங்க. ”அள்ளிப்போடு… அள்ளிப்போடு..” ன்னு மொத்த காலேஜ் strength la பாதி பேர TCS அள்ளிக்கிட்டு பொய்ட்டனுங்க.  சரி மிச்சம் இருக்க பயலுகளாவது நமக்கு கம்பெனியா இருப்பாய்ங்கன்னு ஒரு ஆறுதல்.

அடுத்த நாலாவது நாள்லயே CTS  காம்பஸ் இண்டர்வியூ. அதுலயும் Aptitude clear. (பேசிக்கலி நா கொஞ்சம் அறிவாளிதான்.. ஆனா பேசதான் வராது). அங்கயும் இண்டர்வியூ. எனக்கு, வினோத், ராஜா மூணூ பேருக்குமே ஒரே பேனல்ல இண்டர்வியூ. அப்ப கஜினி படம் வந்த சமயம். புதுசட்டையெல்லாம் போட்டு டை எல்லாம் கட்டிக்கிட்டு இருக்கவும் கஜினில வர்ற சத்டியன் மாதிரி அங்கிட்டும் இங்கிட்டும் நடந்து “ஹாய்… ஐ ஆம் சஞ்சய் ராமசாமி”ன்னு அவன் குரல்ல காமெடி பன்னிட்டு இருந்தேன்.

ஒவ்வொருத்தனா உள்ள கூப்டானுங்க. இப்ப நம்ம டர்ன். உள்ள போனதும் ஃபைல வாங்கி டேபிள்ள வச்சிட்டு மொத கேள்வி

“what is current?”
“………………………………..”
(பதில் சொல்லல)

அடுத்த கேள்வி

“what is voltage?”
“…………………………………”
அதுக்கும் பதில் சொல்லாம பே பேன்னு உக்கார்ந்திருந்தேன்.

அடுத்து என்கிட்ட ஆன்ஸர் வரவைக்கனும்னே எதோ கேக்க அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சேன். பத்து நிமிஷம் இண்டர்வியூ எடுத்தப்புறம் தில்லு முல்லு தேங்காய் சீனிவாசன் மாதிரி

“What is current க்கும் Answer தெரியாது… What is Voltage க்கும் ஆன்சர் தெரியாது… ஆனா பேரு மட்டும் எலெக்ட்ரிகல் என்ஜினியர்… கெட் அவுட்ட்ட்”ன்னு சொல்ல “ஷார்ட் நேம் சுப்பி சார்”ன்னு வெளில வந்துட்டேன்.

வெளில வந்த அடுத்த செகண்ட் தோணுது “Currnet na flow of electrons ல… Voltage ன்னா potential difference ல… அட மானங்கெட்ட மைண்டே.. இத அப்பவே சொல்லிருந்தா அவய்ங்க்கிட்ட அசிங்கப்படாமயாது வந்துருக்கலாம்லன்னு நினைச்சிட்டு போனேன்… அந்த இண்டர்வியூவும் அவுட்டு. நம்ம பயலுக ராஜாவும் வினோத்தும் செலெக்ட் ஆயிட்டானுங்க. சங்கத்துல மிச்சம் நானு, பரத்து, சுந்தர் மூணு பேருதான்.

மூணு வருசமும் arrears எதுவும் வைக்காத்தால பாரபட்சம் பாக்காம எல்லா கம்பெனியும் அட்டெண்ட் பன்ற eligibility இருந்துச்சி. அடுத்த நாலு நாள்ல WIPRO off campus interview. மதுரை K.L.N காலேஜ்ல. பஸ் எடுத்து காரைக்குடிலருந்து மதுரைக்கு அழைச்சிட்டு போனாய்ங்க. என்னா ஜாலி பஸ்ல. வேலை கிடைக்கலங்குற ஒரு குறையத் தவற வாய்க்கு மட்டும் நமக்கு குறைச்சலே இல்லை அப்ப.

இதே மாதிரி Aptitude க்ளியர் பன்னிட்டேன். நம்ம கூட பஸ்ல வந்த முக்கால்வாசிப்பேரு Apps லயே மட்டை ஆயிட்ட்டால அவியிங்களல்லாம் பேக் அப் பன்னி அந்த பஸ்லயே திரும்ப அனுப்பிட்டானுங்க. அடுத்து டெக்னிக்கல் இண்டர்வியூ. அதுலயும் க்ளியர் பன்னியாச்சு. நூறு பேருக்கும் மேல வந்த பசங்கள்ள 12 பேரு மட்டும் டெக்னிக்கல் க்ளியர் பன்னி HR interview க்கு செலெக்ட் ஆனோம். HR இண்டர்வியூம் முடிஞ்சி அந்த 12 பேர்ல 9 பேர் செலெக் பன்னானுங்க… சோகம் என்ன்ன்னா முகேஷ எங்களால இந்த தடவையும் காப்பாத்த முடியல. இந்த தடவயும் ஊத்திக்கிச்சி.  

மணி ராத்திரி 11க்கு மேல… நாங்க பன்னண்டு பேரும் மதுரைக்கு வந்து பஸ்ஸு புடிச்சிதான் வரனும். அதெல்லாம் ப்ரச்சனை இல்லை. வர்ற 12 பேர்ல 9 பேர் குஜால்ஸ் மூடுல இருப்பாங்க. மித்த 3 பேரு நாங்க சோக மூடுல இருக்கோம். (இல்லைன்னாலும் வரவச்சிக்கனுமே). போற வழிலயே செலெக்ட் ஆன ரெண்டு பயலுக சரக்கடிக்கப் போறேன்னு கிளம்பிட்டானுங்க. ரிஜெக்ட் ஆன பீஸூல நானும் SM சரவணன்னு ஒரு பையனும் இருக்கோம். இன்னொருத்தன் யாருன்னு மறந்து போச்சு. நம்ம SM சரவணன் எப்டின்னா, ஓங்கி அடிச்சான்னா ஒண்ணரை டன் இல்லை நாலு டன் வெய்ட்டு. அப்டி இருப்பான் ஆளு.

நடந்து வந்துக்கிட்டு இருக்கும்போது செலெக்ட் ஆகாத நாங்களே சும்மா வந்துகிட்டு இருக்கோம். செலெக்ட் ஆன ஒருத்தன் ரொம்ப ஃபீல் பன்னிட்டு வந்துக்கிட்டு இருந்தான். “ச்ச… போச்சுடா.. அவ்ளொதாண்டா… ச்ச போச்சுடா…”ன்னுட்டே வந்தான்.

என்னடா செலெக்ட் ஆனவன் ஏன் போச்சுடா போச்சுடான்னு பொலம்புறான்னு என்னடான்னு கேட்டா

“ச்ச… இந்த கம்பெனிலல்லாம் Place ஆனதே அசிங்கம் மச்சி… எங்கப்பாவுக்கெல்லாம் தெரிஞ்சா அசிங்கமா திட்டப்போறாரு… ச்ச…. அசிங்கமா இருக்கும்”ன்னான்.

இய்ய்ய்ய்…. அடடடாடா. ஆஆஆ…. டேய்ய்ய்ய்ய்

இதக் கேட்ட்தும் எனக்கு தேவிக்குமார் ஞாபகம் வந்துருச்சி.. (தேவிக்குமார் மேட்டர மைண்டுல வச்சிக்குங்க. பின்னால சொல்றேன்.) திடீர்னு என்னோட உடம்புல எதோ ஒண்ணு இடிச்சிது. என்ன நமக்கு இங்க கொஞ்சம் muscle extraவா வளர்ந்துருக்கேன்னு தொட்டுப் பாத்தா அது SM சரவணனோட ஆர்ம்ஸூ… முறுக்கிட்டு அடிக்கிற லெவல்ல நிக்கிறான். பின்ன கடுப்பாகுமா ஆவாதா… அவன் இருந்த கோவத்துக்கு நம்ம பயல அடிச்சி பூமிக்குள்ள இறக்கிருப்பான்.

அப்புறம் அவன சாந்திப் படுத்தி, மதுரை டவுனுக்கு வந்து ஆளுக்கு நாளு பொரோட்டாவ பிச்சிப் போட்டுக்கிட்டு விடியக் காலமா காரைக்குடி வந்து சேந்தோம்.

இந்த தேவிக்குமார பத்தி சொன்னேணே…. ஏற்கனவே ஒரு பதிவுல சொல்லிருக்கேன். இருந்தாலும் இன்னொருதபா…

ஃப்ரஸ்ட் இயர்ல எங்களுக்கு பக்கத்து ரூமுதான் தேவிக்குமார். காலேஜ் சேர்ந்து மொத series test நடத்தி, பேப்பர்லாம் திருத்தி குடுத்துருந்தானுங்க. கணக்கு பேப்பர்ல நா 50க்கு 37ன்னு நினைக்கிறேன். நம்ம ரூம் பசங்க எல்லாமே ஓரளவு டீசண்டான மார்க்குதான் எடுத்துருந்தாய்ங்க. சாப்ட மதியம் ரூமுக்கு வந்தப்ப தேவிக்குமார் ஹாஸ்டல் காரிடார்ல நின்னு பெனாத்திக்கிட்டு இருந்தான்.

“போச்சுடா.. எல்லாமே போச்சுடா… மொத டெஸ்ட்லயே இவ்ளோ கம்பியா எடுத்தா professor க்கு என் மேல impression eh போயிரும்டா” ன்னு ஃபீல் பன்னிட்டு இருந்தான்… “ஹா..ஹா. ஃபெயில் ஆயிட்டான் போலருக்கு funny boy” ன்னு நினைச்சி அவன் பேப்பர அப்டி கையில வாங்கிப் பாக்குறோம்…
டபீர்ன்னு நெஞ்சி வெடிச்சிருச்சி… 50 க்கு 49… அட நாயே.. இந்த  மார்க்க வச்சிக்கிட்டு தான் இவ்வளவு நேரம் இம்ப்ரஷன் போயிரும்… ஆப்ரேசன் ஆயிரும்னெல்லாம் பினாத்துனியா… 

ரைட்டுரா.. இன்னிலருந்து நாங்க உன் பக்கத்து ரூம் இல்லடா.. ரூமக் காலி பன்றோம்டான்னு போனதுதான். பின்னாலதான் தெரிஞ்சிது அவன் தான் 10th matriculation எக்ஸாம்ல ஸ்டேட் ஃப்ர்ஸ்டுன்னு. அவ்வளோதான். நாலு வருஷத்துலயும் அவன் எவ்வளவு மார்க் எடுத்தான்னு நாங்க கேட்டதே இல்லையே…

(இண்டர்வியூ கதை இன்னும் முடியல… மூணு கம்பெனி கதை தான் முடிஞ்சிருக்கு.. இன்னும் 15 பாக்கி இருக்கு. அடுத்த பதிவுல தொடருவோம்)


Monday, April 3, 2017

கவண்!!!


Share/Bookmark
ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு செண்டிமெண்ட் இருக்கு. அவங்களோட வெற்றிபெற்ற படங்கள்ல இருக்க எதாவது ஒரு விஷயத்த அவர்களோட அடுத்தடுத்த படங்கள்லயும் தொடருவாங்க. TR பெரும்பாலும் ஒன்பது எழுத்துக்களில் இருப்பது போலான தலைப்பை வைக்கிறது போல அயன் படத்தின் வெற்றியாலதான் கே.வி ஆனந்த் “அநேகன்” “மாற்றான்” “கவண்”ன்னு ஒரே ‘ன்’ல முடியிற பேரா வச்சிக்கொல்றாரு போல. மற்ற ரெண்டு பட பெயர்களாவது பரவால்ல. கவண்ங்குற பேர்ல ஒரு அட்ராக்‌ஷனே இல்லை.  படத்துலயாவது எதாவது இருக்கான்னு பாப்போம் .

                     செம ஸ்பாய்லர்ஸ்

படம் ரிலீஸான முதல்நாளே படத்துக்கு பயங்கர பில்ட் அப்பு.. அதுவும் சில ஆர்வக்கோளாறுகள் “மீடியாவ விட்டு கிழிச்சிட்டானுங்க” “மீடியாவ வச்சி செஞ்சிட்டானுங்க” ன்னு எக்கச்சக்கமா அடிச்சிவிட்டுக்கிட்டு இருந்தானுங்க. அப்டி என்னத்த கிழிச்சாங்க, நமக்கு தெரியாத எதோ ஒண்ண சொல்லிட்டாங்க போலன்னு பாத்தா எல்லாமே நமக்கு ரொம்ப பழக்கப்பட்ட நாடா.

விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள ஓட்டுரானுங்க. இது ரொம்பப் புதுசு பாருங்க நமக்கு. விஜய் டிவியே ஒரு மானங்கெட்டவனுங்க. அவனுங்களே ஷோ பன்னுவானுங்க. அப்புறம் அது இது எது, கலக்கப்போவது யாருங்குற பேர்ல அவனுங்களே அந்த ஷோவ ஓட்டிக்குவானுங்க. வாரம் ஏழு நாள்ல, பதினாலுதடவ அதயே திரும்பத் திரும்ப போட்டுக்காட்டி அருத்துக் கொல்லுவானுங்க.  இப்டி இருக்க அதே கண்டெண்ட்ட திரும்ப படத்துல வச்சா அது சுவாரஸ்யமா இருக்குமா?.

ஒரு வேளை கே.வி ஆனந்த் இந்தக் கதையை யோசிக்கும்போது இந்த விஷயங்கள் கொஞ்சம் புதிதாக இருந்திருக்கலாம் ஆனா, இன்னிக்கு தேதிக்கு இதெல்லாம் ரொம்ப பழைய மேட்டர்.

தனது டிவி சேனலை முதல் இடத்துக்கு கொண்டு வர துடிக்கிற ஒரு சேட்டு, சிலப் பல டகால்டி வேலைகள்லாம் பண்ணி சேனலோட TRP ய ஏத்திக்கிறாரு. சேனல் மூலமா எந்த செய்தியையும் மக்களை நம்ப வைக்கலாம்ங்குற மெண்டாலிட்டில தப்பான காரியங்கள் செய்யிறாரு. (இதெல்லாம் வாஞ்சிநாதன்ல ப்ரகாஷ்ராஜ் செஞ்சது) இதைத் தட்டிக்கேட்கும் விஜய் சேதுபதி & மடோனா செபஸ்டியன் குழு, அந்த டிவி சேனல்லருந்து வெளியேறி, இருக்கா இல்லையான்னே தெரியாத ஒரு டிவி சேனல்ல வேலைக்கு சேர்ந்து,  சூரியவம்சம் சரத் குமார் மாதிரி ஒரே பாட்டுல எப்படி அந்த சேனலை முன்னேத்துறாங்கங்குறது தான்.

படத்தில் மிகப்பெரிய பலவீனம் Casting. முதல்ல இந்த கதைக்கு விஜய் சேதுபதி பொருத்தமானவரே இல்லை. நிறைய இடங்கள்ல சொதப்பல். ஆங்கிலம் பேசும் காட்சிகள் அபாரம். அதுவும் ஒரு விக்கயும் கண்ணாடியயும் மாட்டி விட்டு, சில காட்சிகள்ல அப்டியே chitti ட்ரெயின் பன்னுற டாக்டர் வசீகரன் மாதிரியே இருக்காரு.  என்னைப் பொறுத்த வரை இந்தக் கேரக்டர்ல விஜய் சேதுபதியை விட மாதவன் இன்னும் சிறப்பாக பொருந்தியிருப்பார். ஆனாலும் சில இடங்களில் விஜய் சேதுபதி அவருக்கே உரிய சில பாடி லாங்குவேஜ், ஒன்லைன்கள்ல நம்மள கவருறாரு. 

இன்னொரு மொக்கையான பாத்திரப் படைப்பு அரசியல் வாதியா வர்ற போஸ் வெங்கட்டோடது. தொடர் குடிகாரர், லோக்கல் பாஷையில் பேசும் ரவுடி கம் அரசியல் வாதி. இந்தக் கேரக்டர அசால்ட்டா பன்ன தமிழ்ல எத்தனையோ பேர் இருக்காங்க. போஸ் வெங்கட்ட கூப்டு வந்து அவருக்கு ஒரு மொக்கை கெட்டப்ப போட்டு விட்டு, செம மொக்கை போட்டுருக்காங்க. அதுவும் சேனல் ஓனர் சேட்டும், போஸ் வெங்கட்டும் பேசிக்கிற காட்சிகள் கண்றாவி. “ஃபேஸ்புக்குல என்ன வச்சி காமெடி தானடா பன்னிக்கிட்டு இருந்தீங்க” என்கிறார் ஒரு காட்சியில். ஒரு வேளை கேப்டனை imitate செய்ய  முயற்சித்திருக்கிறார்களா என தெரியவில்லை.

முதல் ஒரு முக்கால் மணி நேரப் படம் ரொம்ப நல்லாவே போகுது. கதை நகருது. ஆனா ஒரு கட்டத்துல டிவி ஷோவ ஓட்ட ஆரம்பிக்கிறேன்னு பவர் ஸ்டார chief கெஸ்ட்டா கூப்டு வந்து ஒரு ஷோ பன்ற மாதிரி காமிக்கிறானுங்க. அப்ப ஆரம்பிக்கிறது தான்.. அப்புறம் க்ளைமாக்ஸ் வரைக்கும் படம் கடி தான். அதுவும் ரெண்டாவது பாதிலல்லாம் கதை நகரவே இல்லை. இண்டர்வல் வரைக்கும் கதை எவ்வளவு வந்துச்சோ அவ்ளோதான் க்ளைமாக்ஸ் வரைக்கும். இன்னும் இந்த ஃபேக்டரி கழிவுகள்லருந்து மக்களைக் காப்பாத்துற கதைய எத்தனை படத்துல எடுக்கப் போறாய்ங்கன்னு தெரியல. 

படத்தில் ஒரு சில ஆறுதல்கள்ல டி.ஆரும் ஒண்ணு. வடிவேலு ஒரு படத்துல பார்த்திபனப் பாத்து சொல்லுவாறு “இவன் ரூபத்துல ஒருத்தன ஊமையா பாக்குறது மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு”ன்னு. கிட்டத்தட்ட எனக்கும் அதேதான் தோணுச்சி. இவர் ரூபத்துல வாயக் கொஞ்ச நேரம் மூடிக்கிட்டு ஸ்க்ரீன்ல வர்றதப் பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. இவர் வசனம் பேசுவதற்காக திணிக்கப்பட்ட காட்சிகளும் ஒண்ணு ரெண்டு இருக்கு.

மிகப் பெரிய காமெடி என்னன்னா டி ஆர் ஒரு டொம்மையான டிவி சேனலுக்கு ஓனர். அவரோட ஆஃபீஸக் காமிக்கிறானுங்க. ஒரு பாழடைஞ்ச வீடு. அதுல கூட்டுறதுக்கு ஒரு ஆயா.. டி ஆருக்கு அள்ளக்கை ஒண்ணு. லேகியம் விக்கிறா ப்ரோகிராமுக்கு ரெண்டு பேரு. இவ்வளவுதான் மக்களே ஒரு சேனல் ஆஃபீஸ் செட்டப்பு. சேனல்ன்னு சொன்னதுக்காகவாச்சும் எதாவது பன்னிருக்கலாம்ல. அதுலயும் டிஆர் சேனல் ஓனர்னு தான் பேரு. சும்மா சொங்கி மாதிரி வந்துட்டு போறாப்ள.  அவரோட சேனல் செட்டப்ப பாக்கும்போது அப்படியே ஞானப்பழம் படத்துல பாக்யராஜோட ப்ரஸ்ஸ பாக்குறா ஃபீல் 

விஜய் சேதுபதி டிஆர் கிட்ட வேலை கேட்டு போறதும் அதுக்கு அவர் மறுக்குறதும் அப்படியே கிரி பட காமெடிய ஞாபகப்படுத்துது. “எதுவுமே இல்லாத என் கம்பெனிக்கு வேலைக்கு வரனும்னு துடிக்கிறியே அது ஏன்? என்கிட்ட இருக்கதே அரைக்கிலோ மைதா மாவும் நாலு வரிக்கியும்தாம்”பாறு வடிவேலு. இங்க டிஆர்கிட்ட வரிக்கிக்கு பதிலா லேகியம். அவ்ளோதான் டிபரன்ஸ். விஜய் சேதுபதி டீம் இவர் சேனலுக்கு வந்தும் பெருசா இன்னோவேட்டிவால்லாம் எதுவும் பன்ன மாட்டானுங்க. கூட்டி பெருக்கி சுத்தம் மட்டும் பன்னி சுத்தி உக்காந்து பேசிக்கிட்டு இருப்பானுங்க அவ்வளவுதான். அதுவும் அவனுங்க கவர் பன்றது அந்த ஃபேக்டரி மேட்டர் மட்டும்தான்  சேனல் முன்னேறிடும்.

தமிழ்சினிமாவுல ஷங்கர் மூலமா பரப்பப்பட்ட ஒரு அபத்தமான காட்சிகள்ல ஒண்ணு, ஒரு சேனல்ல ஹீரோ பேசும்போது தமிழ்நாட்டுல உள்ள அத்தனை மக்களும் அந்த சேனல கூட்டமா வீட்டுல உக்காந்தோ இல்லை ரோட்டு ஓரமா வசந்த் அன் கோவுல நின்னோ பாத்து “அப்புடிக் கேளுய்யா… அடிச்சாம்பாரு ஆப்பு.. அந்தத் தம்பி சரியாத் தான் பேசுது “ போன்ற வசங்களப் பேசிக்கிட்டு இருப்பானுங்க. ஏண்டா நம்மாளுக கிரிக்கெட் மேட்சத் தவற வேற எதயாவது ஒண்ணா நின்னு பாத்துருகானுங்களா? அதுமட்டும் இல்லாம ஒருத்தன் குடிகாரன்னா கையிலயே பாட்டில வச்சிக்கிட்டு ரெண்டு நிமிஷத்துக்கு ஒருதடவ வாயில ஊத்திக்கிற மாதிரி காமிக்கிறாய்ங்க. மொடா குடிகாரன்கூட அப்டி குடிக்க மாட்டான்.

கேவி ஆனந்தின் முந்தைய படமான அநேகன்ல கொஞ்சமாவது படத்த ட்ரைவ் பன்றதுக்கு ஒரு கதையும் கண்டெண்டும் இருக்கும். இங்க மீடியாங்குறா மேட்டர மட்டும் எடுத்துக்கிட்டு ஒரு முழுப் படத்தையும் தொயிவில்லாம கொண்டு போற ஒரு கதைய எழுதாம விட்டுட்டாரு. கேமரா முதல் பாதி சூப்பர். ரொம்ப ரிச்சா இருந்துச்சி.. ரெண்டாவது பாதில ரொம்ப சுமார். காட்டுக்குள்ள லொக்கேஷன் பொய்ட்டாலே பிக்சர் குவாலிட்டி மொக்கையாயிரும்.

கே.வி ஆனந்தும் ரஞ்சித் மாதிரி ஆயிட்டாரு. ஹீரோ ஹீரோயினத் தவற மற்ற துணை நடிகர்களெல்லாம் அவரோட இதற்கு முந்தைய படங்கள்ல பார்த்து பழக்கப்பட்ட அதே ஆட்கள். மடோனா செபஸ்டியன் ஆளு சூப்பரா இருக்கு. ஆனா நம்ம பயளுக அந்தப் புள்ளைய சத்யராஜ் சத்யராஜுன்னு சொல்லி ஓட்டுறதால அதப் பாக்கும்போதெல்லாம் சத்யராஜ் ஞாபகம்தான் வருது.

கே.வி ஆனந்த் படங்களுக்கு பெரிய பலம் ஹாரிஸின் பாடல்களும் பின்ணணி இசையும். இங்க அது இல்லை. ஹிப் ஹாப் தமிழாவின் பாடல்கள் காதுக்குள்ள காய்ச்சுன கம்பிய விட்டு கொடாயிற மாதிரி இருக்கு. ஹிப் ஆதிக்கு ஜாஸி கிஃப்ட், சுக்விந்தர் சிங் மாதிரியான கொஞ்சம் பெக்குலியர் வாய்ஸ். பத்தில் ஒரு பாடல் அவர்கள் குரலில் கேட்டால்தான் நல்லாருக்கும். பத்தயுமே அவர்கள் குரல்ல கேட்டா காது ஜவ்வு கிழிஞ்சிரும். நம்மதம்பி அனைத்து பாட்டையும் அவரே பாடனும்னு ஆசப்படுறாப்ள. அவருக்கு வாயில எதாவது ஆப்ரேஷன் பண்ணி பாடவிடாம பன்ன முடியுமா பாருங்க. ஆப்ரேசன் செலவுக்கு கூட நானும் ஷேர் தர்றேன்.

மொத்ததுல படத்துக்கு ப்ளஸ்ஸுன்னு பாத்தா முதல் முக்கால் மணி நேரம். விஜய சேதுபதியோட ஒண்ணு ரெண்டு காமெடிகள். மத்தபடி அனைத்துமே படத்துக்கு துணை நிக்கல.  கே.வி ஆனந்த், சேதுபதி, டிஆர் காம்பினேஷன்ல நம்ம எதிர் பாத்த அளவு இல்லாம, ரொம்ப ஆவரேஜான படம். 




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...