Wednesday, January 28, 2015

யாருக்கோ கொஞ்சம் விளக்கம்!!!


Share/Bookmark
பொதுவா சுயசொறிதல் பதிவுகள் எழுதுறதுல எனக்கு உடன்பாடு இல்லை. நம்மை பத்தி தெரிஞ்சிக்க பெரும்பாலும் யாரும் விருப்பப்படுறது இல்லை அதை எழுதி திணிக்க எனக்கு விருப்பமும் இல்லை. ஆனா சில சமயங்கள்ல நம்மோட நேர்மை சந்தேகத்திற்கு உட்படும்போதோ, குற்றம்சாட்டப்படும் போதோ விளக்கம் குடுக்க வேண்டிய கட்டாயம் உண்டாகிடுது. அந்த மாதிரி ஒரு விஷயத்துக்காகத்தான் இந்த பதிவு.

கொஞ்ச நாளாவே எனக்கு வர்ற சில பின்னூட்டங்கள்ல, நா எழுதுற சினிமா விமர்சனங்கள் one sided ah வும் biased ah இருப்பதாகவும் நண்பர்கள் சிலபேர் சொல்லிருக்காங்க. இந்த கமெண்ட் ஒண்ணும் புதுசில்ல. என்னோட அலுவல நண்பர்கள் என்னோட முகத்துக்கு நேரா சொல்ற இந்த விஷயத்த, முகம் தெரியாத சில நண்பர்கள் இப்போ பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கிறதால இந்த தன்னிலை விளக்கம் இப்போ அவசியம்னு நினைக்கிறேன்.

நா எந்த படத்தையுமே  கிண்டல் பண்ணனும்ங்குற நோக்கத்துலயோ இல்லை விமர்சனம் எழுதனும்ங்குற நோக்கத்தோடவோ பாக்கப் போறதில்லை. சினிமாங்குறது எனக்கு பொழுதுபோக்கு மட்டும் இல்லை. நேரம் போகலன்னா எதாவது ஒரு படத்துக்கு கிளம்பி போற ஆள் நா இல்லை. சினிமா பாக்குறதுங்குறது நா ரொம்ப ரசிச்சி, இந்த கஜினி சூர்யா சொல்ற மாதிரி இஷ்டப்பட்டு செய்யிற ஒரு வேலை. ஒரு படம் பாக்கப்போனா கண்டிப்பா என்னோட favourite விஷயம் ஒண்ணு அந்தப் படத்துல இருக்கும். அப்படி இல்லைன்னா ஒரு மாசம் ரெண்டு மாசம் ஆனாலும் தியேட்டர் பக்கம் போறது இல்லை.

நா ரொம்ப ரொம்ப ரொம்ப சாதாரணமான ஒரு சினிமா ரசிகன். வழக்கமா இந்த ஹைட்டெக் ஆளுங்கல்லாம்ம் சொல்லுவாங்களே “C” க்ளாஸ் ரசிகர்கள்னு. அப்படித்தான் நான்னு வச்சிக்குங்களேன். என்னோட எதிர்பார்ப்பெல்லாம் நா காசு குடுத்து பாக்கப் போற படம் எனக்குள்ள எதாவது ஒரு impact ah ஏற்படுத்தனும். சிரிக்க வைக்கவோ, அழவைக்கவோ, ஆச்சர்யப்பட வைக்கவோ செய்யனும்ங்குறது தான் என்னுடைய எதிர்பார்ப்பா இருக்குமே தவிற zero defect படத்தையோ இல்லை ஒரு flawless படத்தையோ எதிர்பார்த்து இல்லை. நானும் உங்களைப்போல படம் நல்லா இருக்கனும்னு, நமக்கு 3 மணி நேரம் நல்லா போகனும் நினைச்சி தான் போறேன்.

பெரும்பாலும் ஒரு படத்தை பற்றிய மற்றவர்களோட விமர்சனங்கள் என்னை பாதிக்கிறதில்லை. ஆயிரம் பேர் சூப்பர் டூப்பர்ன்னு சொன்னாலும், எனக்கு பிடிக்கலன்னா பிடிக்கலன்னும் அதே ஆயிரம் பேர் அருவைன்னு ஒரு படத்த சொன்னா எனக்கு பிடிச்சிருந்தா தைரியமா எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லவும் நா எப்பவும் தயங்கியதில்லை.

நா எழுதுற விமர்சனத்த படிக்கிறவங்களுக்கு, விமர்சனம் என்பதை தாண்டி ஒரு விஷயத்த ஜாலியா படிச்ச ஃபீல் குடுக்கனும்ங்குறதுக்காக கொஞ்சம் காமெடி மேற்கோள்களை அங்கங்க சேர்த்து எழுதுவேனே தவிற, எந்த இடத்துலயும் என் மனசுக்கு பட்ட கருத்தை, ஒரு பதிவ சுவாரஸ்யமா மாத்துறதுக்காக திரிச்சி எழுதுனதில்லை.

“இந்தப்படத்தின் கதை என்ன? படத்தில் எனக்கு பிடித்த வசனங்கள் என்ன? படக் குழு யார் யார்? “ ன்னு விகடன்லயோ குமுதத்துலயோ வர்ற மாதிரி ஒரு formal டைப் விமர்சனங்களை எழுத எனக்கு உடன்பாடு இல்லை. அதே மாதிரி இந்த காட்சியில கேமரா இந்த ஆங்கிள்ல இருந்துச்சி, இந்த சீன்ல இப்படி ஒரு குறியீடு இருந்துச்சி, இந்த காட்சியில இந்த கலர் க்ரேடு யூஸ் பண்ணிருக்காங்க” ன்னு எனக்கும் சினிமா தெரியும்ங்குற மாதிரியான டெக்னிகல் விஷயங்களை முன்வச்சி விமர்சனங்கள் எழுதவும் எனக்கு உடன்பாடு இல்லை.

சரி இப்போ மேட்டருக்கு வருவோம். நேற்று நண்பர் ஒருத்தர் ஐ விமர்சனத்திற்கு இட்ட பின்னூட்டம் இது.


//Shankar failed as a director from his usual style n theme but Padam avlo mokkai illa. some guys comparing this with linga becoz this is also a biggie with high expectation like linga in recent times.

Very very biased review. If someone read ur last 2 reviews (Aambala n lingaa) they ll agree with what i said.

u not mentioned anything about the world class flying car, Air swimming stunt by vishal n bond style bomb kicking in linga, u not wrote a single negative about these movies, really dese two r such great movies without any neagtive?. itha vera evanavathu paniruntha enna ootu ootirupinga.....

Even in I u not mentioned anything about positives like 'PC, ARR'.

If you say wat u wrote is ur opinion then write in A4 sheet n read urself. dont post in public n disappoint ur fans muthu.... //


பெயரிடாமல் பின்னூட்டம் இட்டிருக்கார். அனேகமா இவர் எனக்கு ஏற்கனவே பரிட்சையமான ஒரு நண்பராக கூட இருக்கலாம்.

பொதுவா படங்களை கம்பேர் பண்ணி பார்த்து சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு ஷங்கர் படத்தையும், ஒரு சுந்தர்.சி படத்தையும் எப்படி ஒண்ணா வச்சி பேச முடியிது? நா ஆம்பள நல்லாருக்குன்னு எழுதிருக்கேன். ஏன்னா ஆம்பளையில சுந்தர்.சி கிட்ட என்ன எதிர்பார்த்தேனோ அது இருந்துச்சி. “ஐ” யில ஷங்கர்கிட்ட எதிர்பார்த்தது சுத்தமா கொஞ்சம் கூட இல்லை. அவ்வளவு தான் வித்யாசம். ஆம்பள பாத்துட்டு தியேட்டர விட்டு வெளிய வரும்போது இருந்த satisfaction ல பத்துல ஒரு பங்கு கூட ஐ பாத்துட்டு வரும்போது இல்லை. ரெண்டு படமும் பாத்தவங்க உங்களை நீங்களே ஒரு தடவ கேட்டுப் பாத்துக்குங்க.

ஒவ்வொரு படங்களுக்கும் expectation level வேறுபடும். இப்போ இந்த “ஐ” யும் சரி “ஆம்பள” யும் சரி டைரக்டர்களுக்காக நான் பார்த்த படம். விக்ரமுக்காவோ விஷாலுக்காகவோ இல்லை. ஷங்கருக்காகவும், சுந்தர்.சிக்காகவும் தான். ஒரு பெரிய டைரக்டரோட படம் வருதுன்னா, அதோட expectation level அந்த டைரக்டர் இதுக்கு முன்னால செட் பண்ணி வச்ச ட்ரெண்ட பொறுத்து தான் இருக்கும். இப்போ ஷங்கரோட ட்ரெண்ட் எப்படி? அவர் படத்துல கதை, திரைக்கதை எப்படி இருக்கும்? காட்சிகளோட அழுத்தம் எப்படி இருக்கும்? ப்ரம்மாண்டம் எப்படி இருக்கும்? அதுல பத்துல ஒரு பங்காவது இந்த ஐ உங்களை satisfy பண்ணிச்சா?

அதே ஆம்பளையில சுந்தர்.சி எதிர்பார்ப்பை நிச்சயம் கொஞ்சம் கூட ஏமாற்றாம பூர்த்தி செஞ்சிருக்காரு (என்னை பொறுத்தவரை). அவ்வளவு தான் நல்லாருக்குன்னு சொன்ன படத்துக்கும், நல்லா இல்லைன்னு சொன்ன படத்துக்கும் உள்ள வித்யாசம்.

சரி நா ரொம்ப biased ah எழுதுறேன்னு சொல்றீங்க. ஒரு சின்ன உதாரணம். கொஞ்ச நாளுக்கு முன்னால ஒரு பையன் என்னுடைய வலைத்தளத்துல சில பதிவுகள படிச்சிட்டு ரொம்ப பாராட்டினாரு. நா எழுதுன சுந்தர்.சியின் முரட்டுக்காளை பட விமர்சனத்த பாத்து தான் ரொம்ப impress ஆனதாகவும் சொன்னாரு. அப்புறம் கொஞ்ச நாள் தொடர்ந்து டச்ல இருந்து அடுத்தடுத்த பதிவுகள பாராட்டியும் அவரோட கருத்துக்கள சொல்லிக்கிட்டும் தொடர்ந்தாரு.

திடீர்னு ஒரு நாள் நா தாண்டவம் படத்துக்கு எழுதுன விமர்சனத்த படிச்சிட்டு “இனிமே உங்க விமர்சனமே படிக்க மாட்டேன்”னு சொல்லிட்டு பொய்ட்டாரு. ஏன்னா அவரு ஒரு தீவிர விக்ரம் ஃபேனாம். விகரம பத்தியும் விக்ரம் பட த்த பத்தியும் தப்பா எழுதுனது புடிக்காம தொடர்ந்து படிக்கிறத நிறுத்திட்டாரு. அப்போ, சுந்தர்சிய ஓட்டும்போது படிக்கிறதுக்கு ஜாலியா இருக்கு. ஆனா “தாண்டவம்”ங்குற உலக காவியத்த நல்லா இல்லைன்னு சொல்லும்போது அவரால தாங்கிக்க முடியல. இப்போ சொல்லுங்க biased ah இருக்கது நானா இல்லை நீங்களா?


உங்களோட பின்னூட்டத்துலருந்து, நீங்க என்னோட சில பதிவுகள படிச்சிருப்பீங்கன்னு தெரியிது. அதே மாதிரி என்னோட சில விமர்சனங்கள் உங்களோட கருத்துக்களுக்கு ஏற்ற மாதிரி ஒத்துப்போயிருக்குன்னும் தெரியிது. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்க ஆசைப்படுறேன். உங்களுக்கு இணையான மாற்று வேற யாருமே இருக்க முடியாது. அதாவது இந்த உலகத்துல ஒவ்வொருத்தரும் unique. நமக்கு நம்ம தான் replacement. நம்மோட எண்ணத்தையும் செயலையும் முழுக்க முழுக்க ஒத்த ஒருத்தரை நம்மால் கண்டுபுடிக்க முடியாது.

அதுமாதிரி தான் நம்ம ரெண்டு பேரோட எல்லா கருத்தும் ஒத்துப் போகும்னு எதிர்பார்க்க முடியாது. அப்டி ஒத்துப்போகாத பட்சத்துல இத ஏன் biased ன்னு சொல்றீங்க? இன்னொருத்தரோட இன்னொரு view ன்னு தானே நீங்க நினைக்கனும் விக்ரமையோ, ஷங்கரையோ தப்பா எழுதுறதால எனக்கு என்ன கிடைக்கபோவுது?

அப்புறம் நா சுமோ பறக்குறத பத்தி சொல்லவே இல்லைன்னு வேற சொல்லிருக்கீங்க. நா தெரியாமத்தான் கேக்குறேன் சுமோ பறக்குற படங்களை நீங்க இதுவரைக்கும் பாத்ததே இல்லையா? அப்போ ஹரி படங்கள்ல ஒண்ணு கூட நீங்க பாத்ததே இல்லை போலருக்கு . ஒரு சாதாரண கமர்ஷியல் மசாலா படத்துல வந்த சுமோ பறக்குற காட்சி அந்தப் படத்துக்கு ஒரு மைனஸா எனக்கு தெரியவே இல்லை. அப்படி ஃபோகஸ் பண்ற அளவு அது பெரிய காமெடியும் இல்லை. இணையத்துல எவண்டா கிடைப்பான் ஓட்டுறதுக்குன்னு அலையிற சில பேர் கிளப்பியது தான் அந்த சுமோ ஸ்ட்ண்ட் காமெடி. லிங்காவை பொறுத்தவரை, அதை நா ஒரு விமர்சனமா எழுதல. லிங்காவை பற்றிய ஒரு பதிவாத்தான் எழுதியிருந்தேன். அதனால நீங்க சொன்ன அந்த வெடிகுண்டு காட்சிகளை குறிப்பிட்டு எழுதல. 

ஒரு படத்துல லாஜிக் பாக்அகனுமா வேணாமான்னு decide பண்றது அந்தப் படம் என்ன genreல வந்துருக்குங்குறத தான். பிதாமகன் படத்துல சூர்யா ஒருத்தன அடிச்சி 10 அடி பறக்க விடுறாருன்னா அது லாஜிக் மீறலா தெரியும். அதே சிங்கம் படத்துல ஒருத்தன அடிச்சி 50 அடி பறக்க விட்டாலும் அது லாஜிக் மீறலா தெரியாது. இவ்வளவுதான் சினிமாவுல லாஜிக்.

//I agree with previous person's review...You didn't mention even a single positive points like Music or Camera or location anything...//

நான் எழுதும் ஒவ்வொரு விமர்சனத்திலும் படத்தில் நான் ரசித்த சிலவற்றை எழுதியிருப்பேன். மேலும் பாட்டு, BGM, கேமரா எப்படி இருந்துச்சின்னு கூட ஒரு வரி மறக்காமல் எழுதுவேன். அஞ்சான் விமரசனத்துல கூட நீங்க ஒரு அது மாதிரி ஒரு பாராவ பாக்கலாம். “விமர்னத்துல பதிவோட நீளம் ஏற்கனவே அதிகமாயிட்டதால மியூசிக் கேமரா பற்றிய ஒரு பத்திய விட்டுட்டேன். அவ்வளவு தான். நீங்க கேக்குறத பாத்தா நா எதோ மட்டம் தட்டனும்ங்குற ஒரே நோக்கத்தோட எழுதியிருக்கேன்னு நினைக்கிறீங்க போல. நிச்சயமா இல்லை. ஏமாந்த ஒருவனோட புலம்பல் அது.

//This is not only for I review. for some of the other posts where you are just trying to attack people and not taking opinions.// 

// If u say wat u wrote is ur opinion then write in A4 sheet n read urself. dont post in public//

இதுக்கு ஒரே வரியில என்னால பதில் சொல்லி முடிச்சிட முடியும். ஆனா
உங்களுக்கு responsible ah பதில் சொல்ல வேண்டியது என்னோட கடமை.
நிச்சயமா இந்த வலைத்தளத்துல வெளியிடப்படுற விமர்சனங்கள், ஒரு தனி மனிதனோட பார்வையிலான சினிமா தான். அடுத்தவர்களோட ஒபீனியன் கேட்டு நடுநிலை விமர்சனங்களை தர இது நாளிதழோ வார இதழோ இல்லை. என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டும் தான். சிலருக்கு ஒத்துப்போகுது சிலருக்கு ஒத்துப் போகல. 

உங்களுக்கு இந்த முறை ஒத்துப் போகல. “உங்களுக்கு இந்த விமர்சனம் புடிக்கலயா பரவால்ல விடுங்க பாஸ் அடுத்த தடவ உங்களுக்கு ஏத்த மாதிரி நடுநிலையா விமர்சனம் எழுதிடுறேன்” ன்னு உங்ககிட்ட நா சொன்னாதான் பெரிய தப்பு. தனி ஒரு மனிதனுக்கு நடுநிலைங்குற விஷயம் இருக்கவே முடியாது. என்னோட பார்வையில படங்களை விமர்சிக்கிறேன். என் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம ஒரு படத்த பத்தி நா என்ன நினைக்கிறோனோ அத எழுதுறேன். அதே மாதிரி தான் மறுபடியும் எழுதுவேன். உங்களுக்கு பிடிக்கலன்னு public ah போட வேணாம்னு சொல்றீங்க. ஆனா நிறைய பேர் நான் எழுதிருக்கது சரி தான்னு சொல்லிருக்காங்க. அவங்களுக்கு என்ன செய்றது?



Thursday, January 22, 2015

ஐ – கபிம் குபாம்!!


Share/Bookmark
காலையில நடந்த படகுப் போட்டிக்கு சாயங்காலம் வந்து அட்டெண்டண்ஸ் போடுறதுக்கு எல்லாரும் மன்னிக்கனும். இருந்தாலும் என்னசார் பண்றது? நம்ம கடமைய நாம செஞ்சி தான ஆகவேண்டியிருக்கு. சரி படம் ரிலீஸ் ஆகி முழுசா ஒரு வாரம் ஆயிட்டதால, கிட்டத்தட்ட படத்த பாக்கனும்னு நெனைச்ச முக்கால்வாசிப் பேரு பாத்துருப்பீங்கங்குற நம்பிக்கையில, வாங்க கொஞ்சம் விளாவாரியா உள்ள போயி கிண்டுவோம்.

சிங்காரவேலன் படத்துல சுமித்ரா கமல்ல கூப்பிட்டு, “வேலா..  இன்னும் நீ செய்யவேண்டிய கடமை ஒண்ணு பாக்கியிருக்குப்பா” ன்னு சொன்னதும் கமல் பொங்கி எழுந்து “சொல்லும்மா.. அப்பாவக் கொன்ன அந்த மூணு பேரு யாருன்னு சொல்லு. உடனே பழி வாங்கனும்” ன்னு கொதிப்பாரு. உடனே சுமித்ரா ஒரு கேவலமான லுக்கு ஒண்ண விட்டு “ஏண்டா.. அதிகமா சினிமா பாக்காத பாக்காதன்னு சொன்னா கேட்டியா? உங்கப்பாவ எங்கடா மூணு பேரு கொன்னாங்க. அவரு உடம்பு சரியில்லாம செத்துபோனாருடா”ன்னு சொல்லுவாங்க. “அந்த மூணு பேர பழி வாங்குற, லெமூரியாக் கண்டத்தோட வழக்கொழிஞ்ச கதையத்தான் நம்ம சங்கர் சாரு மூணு வருஷமா எடுத்து நமக்கு குடுத்துருக்காரு.

எந்திரன் படத்துல சிட்டிக்கு உணர்ச்சி வரலன்னு “உனக்கு ரிவர்ஸ் மேப்பிங் பண்ணி ஹார்மோன் சுரக்க வைக்க போறேன்” ன்னு சொல்லி ஒரு டயலாக் வச்சிருப்பாரு ஷங்கர். அதே ரிவர்ஸ் மேப்பிங் ஃபார்முலாவுலதான் இந்த ஐ பட கதையையே உருவாக்கிருக்காருன்னா பாருங்களேன். அதாவது ஒரு கதைய எழுதிட்டு க்ளைமாக்ஸ் எழுதாம, க்ளைமாக்ஸ எழுதிட்டு கதைய எழுதிருக்காரு இந்த படத்துல.

இப்ப இந்த படத்து கதைய எப்டி டெவலப் பன்னிருப்பாங்கன்னு பாருங்க. அதாவது “ஒரு நாலு வில்லன்கள விக்ரம் வித்யாசமான முறையில சாகடிக்கிறாரு” இதான் படத்தொட ஒன்லைன். இப்போ நாலு வில்லன எப்டி ஃபார்ம் பண்றது? சரி விக்ரம்னு நமக்கு ஒரு அடிமை கிடைச்சிட்டாரு. என்ன சொன்னாலும் செய்வாரு. 

இப்போ விக்ரம்கிட்ட எப்படி ஷங்கர் கதை சொல்லிருப்பாரு பாருங்க.”நீங்க ஒரு பாடி பில்டர் சார். முதல்ல body build பண்றீங்க சார்.. அப்போ உங்களுக்கு ஒரு வில்லன் சார். அப்புறம் பாடிய கொஞ்சம் கம்மி பண்ணி model ஆகுறீங்க சார்.. அப்போ ஒரு வில்லன் சார். எமி ஜாக்சன லவ் பண்றீங்க சார் அப்போ ஒரு வில்லன் சார். மூணுங்குறது எல்லா படத்துலயுமே வந்துட்டதால இந்த படத்துல நாலாவதா ஒரு சஸ்பென்ஸ் வில்லன் சார்.. நாலு பேரயையும் ட்ரிக் யூஸ் பண்ணி ப்ரில்லியண்டா கொல்றீங்க சார்.. பாடிய அப்புடியே  40 கிலோவுலருந்து 130 கிலோ வரைக்கும் ஏத்தி இறக்குறீங்க சார்.. இந்த படம வந்ததும் அப்புறம் இந்தியாவுலயே நீங்க ஒருத்தர் தான் சார்” அவ்வளவுதான் படம் ரெடி.

உண்மையிலயே இந்தப் படத்த ஷங்கர் தான் எடுத்தாரான்னு இன்னும் எனக்கு ட்வுட்டா தான் இருக்கு. இவ்வளவு மட்டமான characterization & திரைக்கதை அவர் படத்துல இதுவரைக்கும் இருந்ததே இல்லை. அஞ்சானுக்கும் இந்தப் படத்துக்கும் ஆறு வித்யாசம் கண்டு புடிச்சா பெரிய விஷயம். விக்ரம்ங்குற ஒருத்தர ரெண்டு வருஷமா கொடுமைப் படுத்துனத தவற இந்தப் படத்தால அவர் வேற எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்கல.

முதல் முக்கால் மணி நேரம் எதோ “மெட்ராஸ்” படத்த திரும்ப பாக்குற மாதிரி ஒரு ஃபீல். டிவில விளம்பரத்துக்கு வர்ற ஒரு எமி ஜாக்சன் மேல விக்ரம் பைத்தியமா இருக்காரு. இப்பல்லாம் ஹீரோயினையே எவனும் மதிக்க மாட்டேங்குறாய்ங்க. இதுல விளம்பரப் பொண்ணுக்கு விக்ரம் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிற லெவல்ல படத்துல பில்ட் அப் குடுக்குறதே முதல்ல ரொம்ப ரொம்ப செயற்கைத் தனமா இருக்கு.

முதல் பாதி முழுசும், காமெடி பண்றோம்ங்குற பேர்ல அருவருப்பா பேசி சந்தானம் அறுக்குறாரு. ஒரு காமெடிக்கு கூட சிரிப்பே வர மாட்டேங்குது. தலைவா படத்துல சாம் ஆண்டர்சன வச்சி அறுத்த மாதிரி இதுல பவர் ஸ்டார வச்சி அறுக்குறாய்ங்க.

அதவிடக் கொடுமை என்னன்னா விக்ரம் சென்னை லோக்கல் பஷை பேசுறேன்னு நம்மள கொல்றாரு பாருங்க. ஆத்தாடி கத்திய எடுத்து கரகரன்னு அறுத்துக்கலாம் போல இருந்துச்சி. எல்லாத்துலயும் பர்ஃபெக்‌ஷன் பர்ஃபெக்‌ஷன்னு பாக்குற ஷங்கர் இத கொஞ்சம் கூட கவனிக்கவே இல்லை போல.

இன்னொரு பெரிய கொடுமை என்னன்னா படம் பாத்த எல்லாரும் விக்ரம் பட்டைய கிளப்பிட்டாப்ள.. விக்ரமுக்காக பாக்கலாம்  விக்ரமுக்காக பாக்கலாம்னு அடிச்சி விட்டுக்கிட்டு இருக்காய்ங்க. எங்கையா அவரு நடிச்சிருக்காரு. ரெண்டு விஷயம் இருக்குங்க. ஒண்ணு உழைப்பு. இன்னொன்னு நடிப்பு. இதுல விக்ரம் கடுமையா உழைச்சிருக்காரு. தமிழ் சினிமாவுல இதுவரைக்கும் யாரும் கஷ்டப்படாத அளவுக்கு கஷ்டப்பட்டுருக்காரு. ஆனா இதுல எங்கைய்யா நடிச்சிருக்காரு? மூஞ்சில 2 இஞ்ச்க்கு மேக்கப்ப போட்டப்புறம் மூஞ்சி ஒரே மாதிரி தான் இருக்கும்? அதுல எங்க ரியாக்சன அவர் காமிக்க முடியும்?


உதாரணத்துக்கு அபூர்வ சகோதரர்கள் அப்பு கமல எடுத்துக்குங்க. அவர் கால மடக்கி வச்சி நடிச்சது உழைப்பு. ஆனா, ரூபினி அவர் கையில போட்ட மோதரத்த புடுங்கும் போது ஒரு ரியாக்சன் குடுப்பாரு பாருங்க. யப்பா.. அதான் நடிப்பு. இப்ப சொல்லுங்க. விக்ரம் எத்தனை சீன்ல இந்த மாதிரி ரியாக்சன் காட்டிருக்காரு? அவருக்கு மருந்தால எஃபெக்ட் வரவும், சுரேஷ் கோபிக்கிட்ட போய் அழுகுற ரெண்டு சீன்ல தான் உண்மையிலயே செமையா நடிச்சிருக்காரு. மத்த இடத்துல மேக்கப் மட்டும்தான் முன்னால நிக்கிது.

சுஜாதா இறந்ததால யாருக்கு கஷ்டமோ இல்லியோ.. ஷங்கருக்கு தான் பெரிய கஷ்டம். வசனங்கள கேக்கும் போது வண்டி வண்டியா வாயில நல்லா வருது. ஒரு சீன்ல “நா இனிமே கூலி இல்லை. கூட்டாளி” ன்னு ஒரு வசனம் வருது?  எந்திரன்ல “என்ன ரோபோ செஞ்சிருக்கீங்க” ன்னு கேக்குற மாதிரி. பேரரசு படத்துல கூட வசனம் இதவிட நல்லாருக்கும்.

இந்த முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில கோவமான நம்ம டைரக்டருங்க, இப்ப ஒவ்வொரு கேரள நடிகர்களையும் நூதன முறையில பழி வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னால “ஷிவன்” ன்னு ஒருத்தர ஜில்லாவுக்கு கூப்டு வந்து அசிங்கப்படுத்தி அனுப்பி வச்சாங்க. இப்ப நம்ம சுரேஷ் கோபி.

அவருகிட்ட எப்டி கதைய சொல்லிருப்பாங்க பாருங்க. “அதாவது சார் நீங்க படத்தோட ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் அள்ளக்கையா நடிக்கிறீங்க சார். கடைசில ஒரு சீன் வைக்கிறோம் பாருங்க.. ஒரு ட்விஸ்ட் வச்சி ஓப்பன்  பண்ணா நீங்க தான் சார் மெயின் வில்லனே.. “ அவ்வளவு தான் சுரேஷ் கோபி விழுந்துருப்பாப்ள. இது எப்டி இருக்குன்னா.. படத்துல நீங்க தாங்க மெயின் வில்லன். ஆனா படம் முடியிற வரைக்கும் நீங்க தலைமறைவாவே இருக்கீங்க ன்னு சொல்ற மாதிரி இருக்கு.

ஒரு படத்துல நல்லாருந்த எல்லாமே நல்லாருக்கு. கப்பியான எல்லாமே கப்பியாயிடுது. கருமம். “மெரசாலாயிட்டேன்” என்னா பாட்டு.. என்னா ஹிட்டு.. அத எடுத்து வச்சிருக்காய்ங்க பாருங்க வாமிட் வர்ற மாதிரி. இந்தாளு ரோட்டுக்கு பெயிண்ட் அடிக்கிறத நிறுத்தவே மாட்டரு போல அது கூட பரவால்ல..”என்னோடு நீ இருந்தால்” ன்னு விக்ரம் ஒரு கெட்டப் போட்டு வந்து பாடுறாரு பாருங்க. மண்டைய பிச்சிக்கவேண்டியிருக்கு. எமி ஜாக்சன் நம்மூர் பொண்ணாவே மாறிடுச்சி. தமிழ் தெலுங்குன்னு மாறி மாறி நடிச்சி பர்ஃபெக்ட்டா செட் ஆயிடுச்சி. ஆனா முதல் அரை மணி நேரத்துல சுத்தமா லிப் சிங்கே இல்லை. அவளுக்கு மட்டும் இல்லை நிறைய பேருக்கு. டப்பிங் படம் பாத்த எஃபெக்ட்டு.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஷங்கர நம்பியோ இல்லை மக்களை நம்பியோ பணத்த போட்ட மாதிரி தெரியலை. படத்துக்கு வந்த ஸ்பான்ஸ்சர்ஸ நம்பி தான் பணம் போட்டுருக்காரு. வக்காளி.. தீபாவளி அன்னிக்கு விஜய் டிவி. ல படம் பாக்குற மாதிரி வெறும் விளம்பரம் விளம்பரமா ஓடிட்டு இருக்கு. அப்புடியே ஆடியன்ஸ் பக்கம் கேமராவ திருப்பி “சென்டர் ஃப்ரஷ்.. வாய்க்கு போடும் பூட்டு”  ன்னு போட்டு இன்னொரு விளம்பரத்தையும் சேத்து விட்டுருக்கலாம். டைட்டில் போட்டப்போ வாயத் தொறந்தவியிங்க. அதுக்கப்புறம் ஒருத்தன் வாயத் திறக்கல.


கடைசில ஹாஸ்பிட்டல்ல இருக்க வில்லன்கள சந்தானம் “ஆப்பு டிவிலருந்து வர்றோம்”ன்னு சொல்லி interview பண்றது அக்மார்க் ஷங்கர் பட மொக்கை. படத்தோட எந்த இடத்துலயும் நம்மாள கதையோடவோ இல்லை விகரம் கேரக்டரோடவோ ஒட்டவே முடியல. DA VINCI CODE ல வர்ற சைலஸ் கேரக்டரையும், wrong turn ல வர்ற கேனிபல்கள் மூஞ்சியையும் ஒண்ணா இணைச்ச மாதிரி இருக்க விக்ரம் அங்க இங்க ஓடும் போது, எதோ ஹாலிவுட் படத்து கேரக்டர் வழி தெரியாம நம்ம படத்துக்குள்ள வந்துருச்சோன்னு ஒரு ஃபீல் வருது.

ஆனா படம் பட்டைய கிளப்புதுன்னு ஒரு சில கும்பல் திரியிது. சின்ன வயசுல நாம தியேட்டர்ல பாக்குற எல்லா படமுமே நமக்கு பிடிக்கும். ஏன்னா அப்போ நம்மள ஆறு மாசத்துக்கு ஒரு தடவையோ இல்லை ஒரு வருசத்துக்கு ஒரு தடவையோ தான் தியேட்டருக்கு அழைச்சிட்டு போவாய்ங்க. அதனால தியேட்டர்ல என்ன படம் பாத்தாலும் நமக்கு புடிச்சிரும். அதே மாதிரி கமல் படம் ரிலீஸ் ஆகும் போதும், ஷங்கர் படம் ரிலீஸ் ஆகும் போதும் மட்டுமே தியேட்டருக்கு போற ஒரு சில குரூப்பு இருக்கு. (அது யாருன்னெல்லாம் நா சொல்ல மாட்டேன்). அவங்களுக்கு மட்டுமே படம் பட்டைய கிளப்புறது போல தோணும். மகேஷ் பாபு ஸ்டைல்ல ஒண்ணே ஒண்ணு  சொல்லிக்கிறேன் “update ஆவண்ட்ரா”.

மொத்தத்துல ‘ஐ’ பாக்கும் போது, அந்த கூபம், கபிம் குபாம், மிருகினஜம்போ போன்ற தண்டனைகளே நமக்கு மிஞ்சுகின்றன.


Tuesday, January 20, 2015

அரசியலால் தரம் தாழும் கலைஞர்கள்!!!


Share/Bookmark
ரசிகர்கள் கூட்டம் கொண்ட ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கு. அந்த தனித்தன்மைய இழக்குறப்போதான் ரசிகர்கள்கிட்டயும், பொது மக்கள் கிட்டயும் அவர்களோட மதிப்பு குறைய ஆரம்பிக்குது. இப்போ பெரும்பாலன கலைஞர்கள் தங்களோட திறமைகளை அரசியல் சார்ந்த பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துறது தான் ரொம்ப வேதனையான விஷயம்.

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு நகைச்சுவையாளர்கள்ல ஒருத்தர். திண்டுக்கல் ஐ லியோனி. எதை மிஸ் பண்ணாலும் பண்ணுவேனே தவிற பண்டிகை நாட்கள்ல டிவில வர்ற இவரோட பட்டிமன்றங்களை மிஸ் பண்றதே இல்லை. எங்கள் வாழ்வும் எங்கள் வழமும் மங்காத தமிழென்று சங்கே முழங்குன்னு இவரு ஆரம்பிக்கிறதே செமையா இருக்கும். இப்போதைக்கு டிவில நா பாக்குற ஒரு சில ப்ரோகிராம்ல இவரோடதும் ஒண்ணு. இன்னும் எப்போ டிவிடி வாங்கப் போனாலும் இவரோட பட்டிமன்ற DVD இருந்தா கண்டிப்பா வாங்கிடுவேன்.

உங்கள்ல எத்தனை பேருக்கு லியோனிய புடிக்கும்னு தெரியல. ஆனா அவர மாதிரி நான்ஸ்டாப் காமெடி யாராலயும் பண்ண முடியாது. மூணு மணி நேரம் கூட அசால்ட்டா தொடர்ந்து பேசி மக்கள சிரிக்க வைக்கிற திறமையுடையவர். எங்க ஊருக்கு அவர் ஒருதடவை வந்து நடத்துன பட்டிமன்றத்துல, சிரிச்சி சிரிச்சி கிட்டத்தட்ட எனக்கு வயித்து வலியே வந்துருச்சி.

அன்றாட வாழ்க்கையில நடக்குற விஷயங்களயே, அவரோட பாணில நமக்கு சொல்லும்போது, செம்ம காமெடியா இருக்கும். அதுமட்டும் இல்லாம பலகுரல் மன்னனான இவர் பட்டிமன்றங்கள பாத்துத்தான் இப்படி கூட சில பழைய பாட்டுங்க இருக்கான்னு தெரிஞ்சிது. குறிப்பா “சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே.. சுப்ரமண்யா சுவாமி… உனை மறந்தேனோ… “ பாட்டு. இத அவர் பாடி கேட்டா அந்த சுகமே தனி.

சரிப்பா… இதெல்லாம் தான் எங்களுக்கே தெரியுமே.. உனக்கென்ன ப்ரச்சனை இப்போ?ன்னு வெறிக்காதீங்க. லியோனி ஒரு தீவிர திமுக ஆதரவாளர்ன்னு எல்லாருக்கும் தெரிந்ததே. இப்போ ஒரு ரெண்டு வருஷமாவே, கலைஞர் டிவில ஒளிபரப்பாகும் அவரோட பட்டிமன்றங்கள்ல காமெடின்னு அவர் பண்றதுன்னு பாத்தா அதிமுகவ வச்சோ இல்லை ஜெயலலிதாவ வச்சோ தான். அந்த பட்டிமன்றத்துக்கும், அதுக்கும் சம்பந்தம் இருக்கோ இல்லியோ, வலுக்கட்டாயமா அதிமுகவையும், ஜெயலலிதாவையும் தாக்குற மாதிரியான வசனங்கள் நிச்சயம் இல்லாம இருக்காது.

உதாரணமா போன வாரம் நடந்த பொங்கல் சிறப்பு பட்டிமன்றத்துல,..ச்ச சாரி தமிழ்த்தாண்டு சிறப்பு பட்டிமன்றத்துல, லியோனியும் மதுக்கூர் ராமலிங்கமும் ஜெயலலிதா கேஸ் ரிசல்ட்டுல ஒருத்தர் லட்டு சாப்பிட்டு, உடனடியா தீர்ப்பு மாறிய உடனே அவர் ரியாக்‌ஷன் மாறியதப் பத்தியும், பதவியேற்பு விழாவுல ஓ.பி அழுததப் பத்தியும் தான் அதிகமா பேசி காமெடி பண்ணிட்டு இருந்தாங்க. அத அவங்க ஓட்டும் போது சிரிப்பு வந்தாலும், ஒரு விஷயம் யோசிக்க வச்சிது. ஓ.பி பதவியேற்பு விழாவுல அழுதத லியோனி மட்டும் இல்லை, ரொம்ப பேரு அத ஒரு மிகப் பெரிய காமெடியப் போலவும், நாடகம் என்பது போலவும் சித்தரிச்சிருக்காங்க. சரி இப்போ அரசியல்ங்குற விஷயத்த ஒதுக்கி வச்சிட்டு, அவர ஒரு மனுஷனா பாப்போம்.


ஒரு மனுஷனுக்கு கண்ணீர் வர்றதுங்குறது சாதாரண விஷயம் இல்லை. Just like that ஒருத்தருக்கு கண்ணீர் வராது. உதாரணமா ஒரு கோரமான விபத்தோ, இல்லை ஒரு கோரமான மரணமோ நடந்தா கூட “அய்யயோ என்ன இப்டி ஆயிடுச்சி” ன்னு ஒரு உதட்டளவு ஃபீலிங் தான் நம்மிடத்துல வருமே தவிற கண்ணீர் வராது. ஈழத்துல ஆயிரக்கணக்குல செத்து மடிஞ்சாங்களே? அதப்பாத்து கூட எத்தனை பேருக்கு கண்ணீர் வந்துச்சி? ஒரு கையில தட்டுல தோசைய வச்சிக்கிட்டு “என்ன கொடுமை இது? என் தமிழினம் அழிகிறதே.. இந்த ராஜபக்சேவ கொல்லனும்னு” வாயால வசனம் பேசுனவங்க தானே அதிகம். இவ்வளவு ஏன்? தேர்ந்த நடிகர்கள்ல கூட ஒருசிலரத் தவிற, க்ளிசரின் இல்லாம யாருக்கும் கண்ணீர் வர்றதில்லை.

அப்படி இருக்கும்போது, ஓ.பி அழுது நாடகம், ஓ.பி அழுது நாடகம்னு சொல்றது எந்த விதத்துல நியாயமா இருக்க முடியும்? சரி இப்போ ஓ.பி யோட பார்வையில கொஞ்சம் பாப்போம்.

ஒரு வேள சோத்துக்கு வழியில்லாம ரோட்டுல பிச்சை கேக்குற ஒருத்தன்கிட்ட போய் நீங்க ஒரு பத்துரூவா காச போட்டீங்கன்னா, உங்க பேரக்குழந்தைங்க வரைக்கும் நல்லாருக்கனும்னு வாழ்த்துவாங்க. பயங்கர பணக்கஷ்டத்துல இருக்க ஒருத்தனுக்கு, அவன் கேக்காமலேயே நீங்க வேணும்ங்குற பணத்த குடுத்து அவன் கஷ்டத்துலருந்து காப்பாத்துனீங்கன்னு வைங்களேன்.. அவனுக்கு அப்புறம் நீங்கதான் சாமியே. இப்போ ஓ.பி பொசிசனுக்கு வருவோம். 

கட்சில எத்தனையோ பேர் இருந்தாலும், ஓ.பிய செலக்ட் பண்ணி, ஒரு மாநிலத்தோட மிக உயர்ந்த ஒரு பதவிய குடுத்து ஒரு அம்மா வச்சிக்க சொன்னா, அந்த அம்மாவ ஓ.பி எந்த லெவல்ல வச்சிருப்பாரு? கடவுள் மாதிரி தெரியாதாய்யா? அந்தம்மா ஜெயில்ல இருக்கும்போது பதவியேத்துக்குறப்போ அவருக்கு அழுகை வர்றதுல என்ன காமெடி இருக்கு? அந்தம்மா எதுக்காக ஓ.பிகிட்ட குடுத்துட்டு போச்சிங்குறது வேற விஷயம். இருந்தாலும் ஓ.பிய பொறுத்த அளவு அது எவ்வளவு பெரிய விசயம்.

 இத பெரிய நகைச்சுவையா build up பண்ற திமுக ஆட்கள் கொஞ்சம் யோசிச்சி பாருங்க. 50 வருசமா கேங்கும் நம்ம தான் லீடரும் நம்மதான். 90 வயதிலும் ஓய்வில்லாம உழைக்கிறோம். யாரு உழைக்க சொன்னது? ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே.. பையனுக்கு 60 வயசாயிருச்சி. இன்னும் அந்தப் பதவிய பையனுக்கு குடுக்கனும்ங்குற மனசு கூட இல்லைங்கும் போது சுத்தி நிக்கிறவனுக்கு நம்மள பாத்த எப்படி அழுகை வரும்? அண்ணேன் எப்ப கிளம்புவாறு திண்ணை எப்ப காலியாகும்னு தான் பாத்துக்கிட்டு இருப்பாய்ங்க. 11வது தடவையும் ஒருமனதா நம்ம தான் தலைவரு. அந்த "ஒரு மனது" தலைவரோட மனதா மட்டும் தான் இருக்கும்.

எல்லாம் நம்ம லியோனியால வந்தது. இப்போ வர வர அவரோட பட்டிமன்றங்கள்ல அவரோட அந்த இயல்பான நகைச்சுவை காணாம போயி, artificial லான அரசியல் நகைச்சுவைகளை புகுத்திக்கிட்டிருக்காரு. அரசியல்லயே ஊரிப்போனவங்க, இத வச்சித்தான் பொழப்பு நடத்தனும். அவங்களுக்கு இப்படி பேசுறத தவிற வேற வழி இல்லை. ஆனா ஒரு தனித்திறமையுள்ள சிறந்த நகைச்சுவையாளர், ஒரு குறிப்பிட்ட கட்சியோட விளம்பரங்களுக்காக அந்தத் பயன்படுத்துறது ரொம்ப வேதனையா இருக்கு.


குறிப்பு : இந்தப்பதிவு நிச்சயம் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்து எழுதப்பட்டதல்ல. ஊடகங்களில் சித்தரிக்கப்படும் ஒரு விஷயம் தவறென மனதிற்கு பட்டதால் எழுதப்பட்ட பதிவு. 

Thursday, January 15, 2015

ஆம்பள - தாறுமாறு!!!


Share/Bookmark
ஆஹா வந்துட்டான்ய்யா.. சுந்தர்.சி படம்னா இவன் விமர்சனம்ங்குற பேர்ல ”படம் பட்டைய கெளப்புது, அனல் பறக்குது ஆவி பறக்குதுன்னு ஓவரா build up குடுப்பானே”ன்னு வெறித்து ஓடும் நண்பர்களே. இந்த தடவையும் எனக்கு வேற வழியே இல்லை. இந்த படமும் பட்டைய கிளப்புதுங்குறது தான் நிஜமான உண்மை. உண்மையான truth.

வழக்கம் போல ஹீரோ வருவதற்கு முன்னால ஒரு build அப்பு. அப்புறம் ஹீரோயின் வர்றதுக்கு ஒரு பில்ட் அப்புன்னு தனித்தனியா ஒவ்வொருத்தருக்கும் நேரம் வேஸ்ட் பண்ண விரும்பாம முதல் காட்சியிலிருந்தே ஆடியன்ஸ் அவர்கிட்ட என்ன எதிர்பார்க்குறாங்களோ அதுக்குள்ள நுழைஞ்டுறாரு. முதல் மூணு நிமிஷத்துலயே விஷால், ஹன்சிகா ரெண்டு பேரயும் உள்ள கொண்டு வந்து அவங்களுக்கு லவ் லைனயும் அடிச்சி விட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சந்தானத்தையும் உள்ள இறக்கி ஆட்டத்த ஆரம்பிச்சிடுறாரு தலைவர் சுந்தர்.சி

சமீபத்தில் விஷாலுக்கும் நடிகர் சங்கத்துக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தது எல்லாருக்கும் தெரியும். படம் ஆரம்பிக்கும் போதே ஒரு பஞ்ச்சோட ஆரம்பிக்கிறாரு. படத்துல ஒருத்தர பாத்து விஷால் “உங்க வேலைய நீங்க கரெக்டா செஞ்சா நா ஏன் இந்த வேலைக்கு வர்றேன்” ன்னு வசனம் பேசி முடிக்கும் போது produced by “VISHAL” ன்னு கெத்தா பேர் போடுறாங்க.

க்ளீஷே ஆகாத ஒரே விஷயம் காமெடி மட்டும் தான். இந்தாளு என்ன வித்தை பண்றாருன்னே தெரியல. ஒரே டைப் காமெடி தான் திரும்ப திரும்ப எடுக்குறாரு. ஆனா செமையா இருக்கு. வழக்கம் போல ஒரு கார் chasing. மனோபாலா DSP. சந்தானமும் இன்ஸ்பெக்டர். இதுக்கு மேல என்ன வேணும். சந்தானம் counter அடிச்சி தள்ளுறாரு. ஒரு சீன்ல சந்தானம் சுடுறது குறி தவறி மனோபாலா back la குண்டு பாய்ஞ்சிருது. மத்த போலீஸ்காரனுங்க உடனே மனோபாலாவ ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போகும்போது, “டேய் ஏண்டா ஹாஸ்பிட்டலுக்கெல்லாம் போறீங்க. அந்த இடத்துல சதை இருந்தா தானே ப்ரச்சனை. அங்க வெறும் எலும்பு தான் இருக்கு. குண்டு எலும்புக்குள்ளதான் சொருவினு இருக்கும். ரெண்டு தடவ உக்காந்து எழுந்தாருன்னா கீழ விழுந்துரும்” ன்னு கலாய்க்கிறாரு.

சந்தானம் வர்ற முதல் அரை மணி நேரமும் கேப் இல்லாத காமெடி. இந்த தடவை சுந்தர்.சி யோட ஹீரோ சித்தார்தோ, மிர்ச்சி சிவாவோ இல்லை. விஷால்ங்குறதால அவர் பாடிக்கு தகுந்தா மாதிரி சில பல ஃபைட்டுகள வைக்க வேண்டிய கட்டாயம். ஆனா அந்த ஃபைட்டர்ஸ கூட காமெடிக்கு யூஸ் பண்ண தலைவரால மட்டுமே முடியும். ரொம்ப நாளுக்கு அப்புறம் கனல் கண்ணன், பைட்டுலயும் சரி காமெடிலயும் சரி. கலக்கிருக்காரு.  

சந்தானம் கழண்ட உடனே, சதீஷ், ப்ரபு, விஷால், வைபவ் கூட்டணி அமைச்சி காமெடி பண்ண ஆரம்பிக்கிறாங்க. சதீஷ வச்செல்லாம் சுந்தர்.சி நம்மள சிரிக்க வைக்கிறாரு. பெரிய விஷயம் தான்பா. சும்மா லவ் பண்ணி காமெடி ஃபைட்டுன்னு பண்ணிகிட்டு இருந்த விஷாலுக்கு அப்பா ப்ரபு, அத்தை பொண்ணத்தான் கல்யாணம் பண்ணனும்னு ஒரு டார்கெட் குடுக்குறாரு. ப்ரபுவோட மகன்களான விஷால், வைபவ், சதீஷ் மூணு பேரும் சண்டைக்கார அத்தை பொண்ணுங்கள கரெக்ட் பண்ற process la இறங்குறாங்க. மூணு பசங்களுக்கு வசதியா மூணு அத்தைகள். மூணு அத்தைகளுக்கும் மூணு அழகான பொண்ணுங்க.

அத்தை வீட்டுக்குள்ள பித்தலாட்டம் பண்ணி உள்ள போற விஷால் & ப்ரதர்ஸ் (தெலுங்கு பட பாணியில்) அந்த வீட்டுல உள்ள ப்ரச்சனைகளை சரி பண்ணி, பிரிஞ்சவங்கள சேத்து எப்படி அத்தை பொண்ணுங்கள உசார் பண்றாருங்குறது தான் மீதிக் கதை.


மூணு அத்தைகளா ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா. அத்தைகளுக்கு உள்ள வீட்டோட புருஷன்களா ஸ்ரீமன், அபிஷேக் மற்றும் கெளதம். விஷால் கூட்டத்துக்கு ஆள் சேக்குற ஏஜெண்ட். மத்த ரெண்டு அத்தை பொண்ணுங்கள கரெக்ட் பண்ண ப்ளான் பன்ற வைபவ் & சதீஷ். சந்தானம் இன்ஸ்பெக்டர். அவரோட பாஸ் மனோபாலா. இந்த செட்டப்ப பாத்தாலே உங்களுக்கு படத்துல காமெடி எந்த லெவல்ல இருக்கும்னு புரியும்.

பொதுவா சுந்தர்.சி படம் பாக்க போகும் போது, என்கூட படம் பாக்க வர்றவங்கிட்ட “சுந்தர்.சி பேர் போடும் போது கைதட்டனும் ஓக்கேவா” ன்னு சொல்லி தான் அழைச்சிட்டு போவேன். (இதெல்லாம் ஒரு பொழப்பான்னு கேக்குற உங்க மைண்ட் வாய்ச ஐ ஆம் கேட்ச் பண்ணிட்டேன்) இந்த தடவையும் அப்படித்தான் சொல்லி அழைச்சிட்டு போனேன். அதே மாதிரி அவர் பேர் போடும் போது,  தியேட்டர்லயே அதுக்கு கைதட்டுனது நாங்க ரெண்டு பேரு தான். ஆனா படம் ஆரம்பிச்ச அப்புறம், படம் முடியிற வரைக்கும் ஒவ்வொரு சீனுக்கும் மத்த எல்லாரும் கைதட்டி என்ஜாய் பண்ணாங்க. அங்க நிக்கிறாரு சுந்தர்.சி.

ஹிப் ஹாப் தமிழாவோட மியூசிக்ல அஞ்சி பாட்டுமே ஏற்கனவே ஹிட். பழகிக்கலாம் பாட்டு அதுல இன்னும் கலக்கல். BGM உம் காட்சிகளுக்கு நல்லா எடுக்குற மாதிரி தான் போட்டுருக்காரு. ஹன்சிகா அருமை. அவ்வளவுதான் இங்க சொல்ல முடியும். மத்தத நீங்களே பாத்து தெரிஞ்சிக்குங்க. ப்ரபுக்கு செம ஜாலியான கேரக்டர் கொஞ்சம் செண்டிமெண்டும் கலந்து. விஷால் அவரோட கேரக்டர் ரொம்ப அசால்ட்டா பண்ணி அசத்திருக்காரு. 

”ஹைய்யோ.. விஷாலா.. அவன் படத்தையெல்லாம் யாராவது பாப்பாங்களா? எதோ தெலுங்கு படம் மாதிரி ஆளுங்கள அடிச்சி பறக்க விடுறான். இதெல்லாம் எனக்கு சுத்தமா புடிக்காது. இந்த regular commercial movies ன்னாலே எனக்கு ரொம்ப அலர்ஜி ya” ன்னு சீனப்போட்டுக்கிட்டு இருந்தா ஒரு நல்ல படத்த மிஸ் பண்ணிடுவீங்க.


சுருக்கமா சொன்னா இன்னொரு கலகலப்பு படம் பாத்த எஃபெக்ட். ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் கேப்பில்லாத காமெடி கலக்கல். நீங்க வாய்விட்டு சத்தம்போட்டு சிரிக்க ஒரு ரொம்ப நல்ல சந்தர்ப்பம். நிச்சயம் மிஸ்பண்ணாம பாருங்க. 


Monday, January 12, 2015

தங்களுக்குத் தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை!!!


Share/Bookmark
ரன் படத்துல சாப்பாடு கிடைக்காம தெருத் தெருவா சுத்துற விவேக் ஏதோ ஒரு ஊர்வலத்துல புகுந்துஇந்தப் படை போதுமா? அஞ்சுரூவா தருவீங்களா?” ன்னு கொடியை புடிச்சிட்டு போவாரு. அதுக்கு நெல்லை சிவா “எலே நல்லா சத்தம் போடுலே.. 5 ரூவாய்க்காக 5 கிலோ மீட்டர் நடந்து வருதே.. உனக்கு இவ்வளவு கொழுப்பான்னு அசிங்கப்படுத்துவாரு. லிங்காவுக்கு எதிரா போராடுற ச்சீமான நினைக்கும் போது 5 ரூவாய்க்கு கொடி புடிக்கிற அந்த விவேக்தான் ஞாபகம் வருது. சோத்துக்கு இலை போட்டுருந்தா எங்கருந்தாலும் பல்ல காட்டிக்கிட்னடு கிளம்பிட வேண்டியது.

யாருய்யா நீயி? உனக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்? நீ கட்சின்னு ஒண்ணுல இருந்த. அத கட்சியாவே ஒருத்தன் கூட இதுவரைக்கும் மதிச்சதில்லை. ஆனா அந்த கட்சியிலருந்தே உன்ன தூக்கிட்டாய்ங்க. அதாவது கரடியே காரி துப்புனதுக்கப்புறமும் அது எப்புடி உன்னால மட்டும் அந்த மொகரையை சிரிச்சா மாதிரி வச்சிகிட்டு நாலு இடத்துக்கு போக வரமுடியிது? அதுவும் போராட்டம். அப்டியே எவனாவது கூப்டு போனா மதிய சாப்பாட்ட அவன வச்சி கரெக்ட் பண்ணிக்கலாம்னு போயிருப்ப.

சரி அத விடுங்க. வழக்கமா ஆப்புங்குறது கண்ணுக்கு தெரியாது. அது யார் யாருக்கு வச்சிருக்காங்கன்னும் தெரியாது. தெரியாம போய் ஆப்புல சிக்குறவங்க தான் அதிகம். ஆனா இங்க ஒருத்தர்  ஆப்ப தேடிப்போய் அத அவரே நல்ல கூரா செதுக்கி அப்புறம் நச்சின்னு அதுமேல அவரே உக்காந்துருக்காரு.

அவரு வேற யாரும் இல்லை. லிங்காவைப் பற்றி, படம் ரிலீஸ் ஆன நாலாவது நாள்லருந்து ஓடல ஓடலன்னு பிரச்சாரம் பண்ண, பண்ணிக்கிட்டு இருக்க மிஸ்டர் சிங்கார வேலன் அவர்கள் தான். அவரே ஒருத்தருக்கு கால் பண்ணி, அவரே அசிங்கப்பட்டு அத அவரே ரெக்கார்டு பண்ணி எல்லாத்துக்கும் அனுப்பிருக்காரு. அவர் ஃபோன் பண்ணி அசிங்கப்பட்ட அந்த ஒருத்தர் வேற யாரும் இல்லை. ஒன் இண்டியா ஷங்கர் அவர்கள் தான்.



நேரமிருப்பவர்கள் தயவு செஞ்சி ஒரு 20 நிமிடம் ஒதுக்கி இந்த ஆடியோவ கேளுங்க. 5 நிமிஷம் தெளிவா பேசுற சிங்கார வேலனுக்கு அடுக்கடுக்கா கேள்விகளையும் டேட்டாக்களைகும் குடுக்க குடுக்க “த ப த ப.. தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை யுவர் ஹானர்” ன்னு பம்புறத கேளுங்க.



இனிமே ஒரு படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னால அந்த படத்த நம்ம சிங்கார வேலன்கிட்ட போட்டு காமிச்சா போதும். அவர் அந்தப் படம் முதல் வாரம் எவ்வளவு கலெக்சன் குடுக்கும், மூணாவது வாரம் எவ்வளவு கலெக்சன் குடுக்கும், மூணு வருசம் கழிச்சி எவ்வளவு கலெக்சன் குடுக்கும்னு கணிச்சி சொல்லிருவாரு. ஏன்னா லிங்கா ரிலீஸான நாலாவது நாள், அவர் கணக்கு படி ஏழாவது நாள் அவர் எவ்வளவு நஷ்டம் ஆகப்போகுதுன்னு கணிச்சி தான் ப்ரச்சாரம் ஆரம்பிச்சாரம்.

இவ்வளவு கணிப்பு கணிக்கிற சிங்காரவேலன் வாழ்க்கையில முதல் முதலா டிஸ்ட்ரிபியூட் பண்ண படமே லிங்கா தானாம். அவர் கடைசியா பண்ண படமும் லிங்கா தாங்குறது வேற விஷயம்.

அவர் ஒன் இண்டியா சங்கர் அவர்கள் கிட்ட பேசிய உரையாடல்ல சில ஹைலட் உங்களுக்காக

ஷங்கர் : ஆமா இதுல சீமான் யாருங்க? வேல் முருகன் யாருங்க? டிஸ்ட்ரிபியூட்டரா

சிங்காரவேலன் : த..ப… அவர் வந்து நிறைய படம் எடுத்த டைரக்டருங்க

ஷங்கர் : ஆமா.. அவரு அப்டியே கோடிகோடியா லாபம் சம்பாதிச்சி குடுத்த பல படங்கள எடுத்தவரு.. அவரு என்ன பண்ணிக்கிட்டு இருந்தாருன்னு ஊருக்கே தெரியும். சீமான், வேல்முருகன்லாம் சினிமா நல்லா இருக்கனும்னு நினைச்சவங்களா? நீங்க ப்ரடியூசர்கிட்ட பணம் வாங்குனாகூட அவருக்கு கமிஷன் குடுக்கனும்ங்க…

சிங்காரவேலன் : இல்லைசார்.. எங்களுக்கு ஒரு துணை தேவைப்பட்டுச்சி

ஷங்கர் : என்ன துணை தேவைப்பட்டிச்சி? ஆமா ரஜினிக்கு வயசாயிருச்சி, ரஜினி ரசிகர்களுக்கு வயசாயிருச்சின்னு சொன்னீங்களே? என் பையனுக்கு பத்து வயசுங்க. அவன் நைட்டு 1 மணிக்கு சைதை ராஜ்ல மொத ஷோ பாத்தான். நீங்க எப்டிங்க அதெல்லாம் சொல்லலாம்.

சிங்காரவேலன் : (பம்பியபடி) நா வேணா அந்த வார்த்தைகள திரும்ப பெற்றுக்குறேங்க..

டேய் சொரிபுடிச்ச மொன்னை நாயே.. அய்யோ சாரி சாரி.. சிங்காரவேலன் அவர்கள், அவரை பற்றி கொச்சையாக பேசக்கூடாது என்று கூறியிருக்கிறார். அவர் கூறிய கருத்துக்களை திரும்ப பெறுறாறாம். நாமளும் அவர் மொகரையிலயே நாலு அப்பு அப்பிக்கிட்டு அப்புறம் நாம குடுத்த அடிய திரும்ப பெற்றுக்கலாம்.

இன்னும் ஏராளமான காமெடிகள் ஆடியோவில். கண்டிப்பா கேளுங்க.

ஒருபடம் ஓடலன்னு நஷ்ட ஈடு கேக்குறதே ஒரு நியாயமில்லாத செயல். அப்படி கேக்குறவங்க அவங்க லாபம் சம்பாதிச்ச படத்துக்கெல்லாம் லாபத்துல பங்க தயாரிப்பாளருக்கு அதிகமா குடுத்துருக்காய்ங்களா என்ன? சரி ரஜினி படம். அவரு குடுத்து பழக்கிட்டாரு. இவங்க வாங்கிப் பழகிட்டாங்க. ஓக்கே.  ஆனா நாலாவது நாள்லருந்து இந்தாளு பண்ற கூத்தெல்லாம் பாத்தா, யாருக்காவது நியாயமா படுதாப்பா?

கடைசியா ஒண்ணே ஒண்ணு. கடவுள் இருக்கான் குமாரு!!!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...