Tuesday, June 18, 2019

அயோக்யாவும் தம்பி ராமைய்யாவும்!!!


Share/Bookmark



”நீ தெலுங்கந்தானே… உனக்கு தெலுங்கு படம் தான் புடிக்கும்” ”தெலுங்கு படம்னா தூக்கி வச்சி பேச வந்துருவியே.. அவ்வளவு தாய் மொழிப்பற்று” இப்படியான கமெண்டுகள்தான் சமீபத்துல நம்ம பதிவுக்கு வருது. அதாவது நான் ஒரு தெலுங்கன் என்பதால்தான் தெலுங்குப் படங்களை தூக்கி வைச்சிப் பேசுறேனாம். ஏண்டா டேய்.. இங்க எத்தனை பேரு ஹாலிவுட் படங்களை தூக்கி வச்சி பேசுறானுங்க.. அவனுங்கல்லாம் என்ன வெள்ளக்காரனுங்களா? உங்க லாஜிக்குல தீய வைக்க.

ஒரே மாதிரியான ரசனையுடைய  மக்களுக்கு, ஏறத்தாழ ஒரே பழக்க வழக்கங்களை உடைய மக்களுக்கு ஒரே பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களில் தமிழ்ப் படங்கள் மட்டும் ஏன் தரத்தில் மாறுபடுகின்றன என்பதுதான் என்னுடைய ஆதங்கம். அதுமட்டுமில்லாம தமிழ் சினிமாவ அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்  இயக்குனர் பேர்வழிகள் செய்த ஒரே சாதனை பல பேர தியேட்டருக்கு போகவிடாம செஞ்சது மட்டும் தான். இதச் சொன்னா நம்மள தெலுங்கன்றானுங்க. சரி நம்மள தெலுங்கன்னு சொல்றதுக்கு அடுத்த இன்னொரு பதிவு.

ஏற்கனவே நாம பார்த்து நமக்கு பிடிச்ச  படங்களோட ரீமேக்கை வேறு மொழிகளில் பார்க்குறத விட கொடுமை வேற எதுவும் இல்லை. ”96” ரீமேக்குல கன்னடா காரனுங்க புல்டோசர விட்டு ஏத்துனப்ப நமக்கு எப்புடி வலிச்சிது. அதே தான் பல படங்களுக்கு நடக்குது. பாதி நமக்கு தெரியிறதில்லை அவ்வளவு தான். பாட்ஷா படத்தோட கன்னடா ரீமேக்க சமீபத்துலதான் பாத்தேன். சத்தியமா ஜனகராஜ் பாட்ஷாவா நடிச்சா எப்படி இரூந்துருக்குமோ அந்த எஃபெக்ட்தான் இருந்துச்சி அந்தப் படத்த பாக்கும்போது. எது? அப்ப ஜனகராஜ் ரோல்ல நடிச்சவரு எப்படி இருந்தாருன்ன்னு கேக்குறீங்களா?

சரி மேட்டருக்கு வருவோம். ஜூனியர் NTR நடிச்ச டெம்பர் தான் ஆக்டிங்ல இப்பவரைக்குமே அவரோட பெஸ்ட்டுன்னு நா நம்புறேன். அந்தப் பட்த்தோட ரீமேக் ரைட்ஸ் ரொம்ப நாளுக்கு முன்னாலயே வாங்கி வச்சிக்கிட்டு அதுல சிம்புவ நடிக்க வைக்கப்போறதா பேச்சு அடிபட்டப்பல்லாம் என்னோட மூச்சு நின்னு போற மாதிரி இருந்துச்சி. ஏற்கனவே ஒஸ்திங்குற படத்த எடுத்து டபாங்க் படத்து அஸ்திய கரைச்சதெல்லாம்  கண்ணு முன்னால வந்து போகுமா இல்லையா.. கடைசியா விஷால வச்சி எடுக்குறதா சொன்னாங்க. நம்ம பேசிக்கலா ஒரு விஷால் ஃபேன்ங்குறாதால பெருசா ஒண்ணும் எஃபெக்ட் இல்ல.

அயோக்யா டீசரப் பாத்தப்போதான் தெரிஞ்சிது இது ஜெயம் ராஜாவ மிஞ்சிய ஒரு ரீமேக் பன்னிருக்காங்கன்னு. ஒரு காட்சி, ஒரு வசனம் கூட மாத்தமா அப்படியே. அப்பவே முடிவு பன்னிட்டேன்… பாக்கக் கூடாதுன்னு.
டெம்பர் படம் பத்தி எப்ப நினைச்சாலும் கண்ணு முன்னால முதல்ல வர்றது pre climax ல போலீஸ் ஸ்டேஷன்ல வர்ற ஒரு சண்டை தான். அந்த ஃபைட் ஆரம்பிக்கிற விதம், அதற்கு முன்னால விஷாலுக்கும் அவருடைய உதவியாளரா இருக்க ஒரு போலீஸுக்கும் நடக்குற வாக்குவாதம்  செம்மையா இருக்கும். போசனி கிருஷ்ண முரளின்னு ஒரு காமெடியன் அந்த ரோல பண்ணிருப்பாரு. அவரு காமெடியன்னாலும் எமோஷனலா அந்த சீன்ல பயங்கரமா பண்ணிருப்பாரு.

எனக்கு படம் எப்டி இருக்கும்ன்றத விட அந்த ரோல் தமிழ்ல யாரு பண்ணிருப்பான்றத தெரிஞ்சிக்கிறதுதலதான் ரொம்ப ஆர்வமா இருந்துச்சி. டீசர்ல அது யாருன்னு காமிக்கல. ஆனா ட்ரெயிலர்ல அது கே.எஸ்.ரவிக்குமார்னு தெரிஞ்சிது. சரி எதோ வித்யாசமா ட்ரை பன்றாங்க போலருக்குன்னு நினைச்சிருந்தேன்.

படம் பாத்த பல பேருகிட்ட படம் எப்டி இருக்குன்னு கேட்டத விட செகண்ட் ஆஃப்ல ஒரு சீன் வருமே அது எப்டி?ன்னு தான் கேட்டேன். நம்ம அந்த தெலுங்கு படத்த பாத்து எக்ஸைட் ஆன அளவுக்கு தமிழ்ல பாத்து யாரும் அவ்வளவு எக்ஸைட் ஆனதா தெரியல. கடைசியா நேத்துதான் அந்த சீனப் பாத்தேன். சர்வ நாசம்.

அது ஒரு மசாலா காட்சிதான். ஆனாலும் அவ்வளவு எமோஷான சீன எதோ கடனுக்குன்னு எடுத்து வச்சிருந்தாங்க. நா அந்த ரோல்ல ரொம்ப ஆவலா எதிர் பார்த்த்து நம்ம தம்பி ராமைய்யாவத்தான். உண்மையிலயே தம்பிராமையாவ அந்த ரோல்ல போட்டுருந்தா அந்த சீன் பிரிச்சிருப்பாரு.
சில படங்கள்ல அவர்  ஒரு மொக்கை காமெடியன் தான். ஆனா அதே ஓரு கேரக்டர் ரோல்னு வரும்போது ஏந்த ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தரமான நடிப்ப கொடுப்பவர். தொண்டன் படத்துல 5 நிமிஷ காட்சின்னாலும் ஆளு மெரட்டிருப்பாரு.

விஷாலும் சைடு வகுடெல்லாம் எடுத்து பாக்க ரொம்பக் கண்றாவியா இருந்தாரு. ஒத்த சீன் பாத்ததுல மொத்த படம் பார்க்க இருந்த கொஞ்ச ஆர்வமும் போயிருச்சி. நம்ம மைண்டுல டெம்பரே இருக்கட்டும்னு அத்தோட அந்த ப்ராஜெக்ட ட்ராப் பன்னிட்டேன்.
டெம்பர் பட்த்துல வர்ற அந்த சீன்..




கொலைகாரன்!!!


Share/Bookmark

Monday, June 3, 2019

NGK- நொந்த கோபாலன் குமரன்!!!


Share/Bookmark

ரொம்ப நாளுக்கப்புறம் செல்வா சார் படம். ஹீரோவுல எப்டி சிம்புவோ  அதேமாதிரி டைரக்டர்ல இவுக.. பூஜை போடுவாரு.. போஸ்டர் விடுவாரு.. ஆனா படம் மட்டும் வராது. அதே மாதிரி கமல் படம்லாம் எப்டி 15 வருஷம் கழிச்சி பாத்தா தான் புரியும்னு சொல்லுவாய்ங்களோ அதே மாதிரி செல்வா சார் படம்மெல்லாம் பத்து வருசம் கழிச்சி பாத்தாதான் புரியும்னு அடிச்சி விட ஆரம்பிச்சிட்டாய்ங்க போன்வாரம்தான் புதுப்பேட்டை நல்ல படம்னு சொல்லிக்கிட்டு இருந்தாய்ங்கஇன்னும் மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்னு ஏகப்பட்ட படம் லிஸ்டுல வெய்ட்டிங்ல இருக்கு. அநேகமா 2030 இந்த 2030 la இந்த NGK ஒரு மிகச்சிறந்த படமாக அமைய நிறையவே வாய்ப்பிருக்கு. சரி வாங்க படம் எப்டி இருக்குன்னு பாப்போம்.

ஒரு கவுன்சிலரோ இல்ல ஒரு அரசியல்வாதியோட அள்ளக்கையோ விரல் நுனியில செய்யிற வேலைய ஒரு சாதாரண மனிதன் செய்யனும்னா எவ்வளவு நேரம் ஆகுது?  So, அரசியல்வாதியாகி ஒரு பவர்ல இருந்தா நாம நினைச்சத மக்களுக்கு செய்யலாம்னு சூர்யாவுக்கு புரிய, அவரும் ஒரு அரசியல்வாதியாக மாறி எப்டி பவருக்கு வர்றாருன்றதுதான் படத்தோட கதை. கேக்குறதுக்கு நல்லாருக்குல்ல. ஆனா சத்தியமா பாக்குறதுக்கு நல்லால..

படத்துல சூர்யா ஒரு இயற்கை விவசாயி. விவசாயம் செய்யிறதுல உள்ள நிம்மதியப் பத்தி ஒரு சீன் பேசுவாறு பாருங்க. “என்னடா வேலை பாக்குறாங்க. காலையில பஞ்ச் அடிச்சிட்டு உள்ள போட்டு சாத்திடுறாங்க. ஒரே சேர தேச்சி தேச்சி உக்காந்துக்கிட்டு மணியடிச்சா சோறப் போட்டு சாயங்காலம் தொறந்து விடுறாங்க. கேக்க ஜெயில் மாதிரியே இருக்குல்ல. ஆனா விசயம் பண்றப்ப மண்ணு வாசனை, கொழம்பு வாசனை, இயற்கை காத்துன்னு நிம்மதியா இருக்குன்னாரு. உடனே வீறு கொண்டு எழுந்து நம்மளும் வேலைய விட்டுட்டு விவசாயம் பன்னப் போயிருவோம்னு எந்திரிச்சிட்டேன். அப்புறம்தான் யோசிச்சி பாத்தேன். நமக்குதான் ஊர்ல விவசாயம் பன்றதுக்கு இடமே இல்லையே..  அப்புறம் எங்க போறது.. சரி மொதல்ல இந்த வேலையப் பாத்து ஒரு இடத்த வாங்குவோம். அப்புறம் போய் விவசாயத்த பாப்போம்னு வேலைய இப்ப கண்டினியூ பன்னலாம்னு இருக்கேன்.

எதுக்கு அண்ணனும் தம்பியும் மாத்தி மாத்தி விவசாயிகளைக் காக்க புடிச்சிட்டு இருக்காங்கன்னு தெரில. இதே மாதிரி ஒரு அபத்தமான காட்சி கடைக்குட்டி சிங்கம் படத்துலயும் வந்துச்சி. அதுக்கு நம்ம என்ன ரிப்ளை குடுத்தோம்னு கொஞ்சம் பாத்துட்டு வரலாம்.



சமீபத்துல LKG ன்னு ஒரு படம் வந்துச்சி. எத்தனை பேர் பாத்துருப்பீங்கன்னு தெரில.. பாக்காதவங்க பாருங்க. கண்டிப்பா ஒரு தடவ பாக்கலாம். அந்தப் படத்தோட கேவலமான வெர்ஷந்தான் இந்த NGK. உண்மையிலயே அந்தப் படத்தோட கதையும் இந்தப் படத்தோட கதையும் கிட்டத்தட்ட ஒண்ணுதான். ஆனா அந்தக் கதையிலயும் திரைக்கதையிலயும் இருந்த தெளிவு சத்தியமா இந்தப் படத்துல கொஞ்சம் கூட இல்ல.

இந்த NGK படத்தோட ட்ரெயிலர் வந்தப்போ இத அடுத்த புதுப்பேட்டைங்குற அளவுக்கு பில்ட் அப் குடுத்துக்கிட்டு இருந்தோம். ஆனா படம் பாத்தப்புறம் புதுப்பேட்டைல ஒரு சீன் குடுத்த தாக்கத்த கூட இந்த முழுப்படமும் தரலன்னு தெரியிது.

"என் பேரு நந்த கோபலன் குமரன். என்ன எல்லாரும் NGK ன்னு கூப்டுவாங்க…"ன்றாரு. நானும் படம் முழுக்க தேடிட்டேன்.. யாராச்சும் NGK ன்னு கூப்டுவாங்களான்னு.. ஒரு பய கூப்டல.. நமக்கு நாமே மாதிரி இவரே சொல்லிக்கிட்டு திரியிறாப்ள.

சாய் பல்லவி, ரகுல் ப்ரீட் சிங்னு ரெண்டு ஹீரோயின். போலீஸ்ல மோப்ப நாய்க்கு எதுவும் உடம்பு சரியில்லன்னா சாய் பல்லவிய அழைச்சிட்டு போகலாம். நல்லா மோப்பம் புடிக்கிது. ரகுல் ப்ரீட் சிங் LKG ல ப்ரியா ஆனந்த் பன்ன அதே ரோல். பல ஸ்டேட்டுல ஆட்சிய கவுத்து விட்டவங்க. பல ஸ்டேட்டுல ஆட்சிய புடிச்சி குடுத்தவங்க. என்னடா எதோ பைப்புல தண்ணி புடிக்கிற மாதிரி சொல்றீங்க.

சூர்யாவோட நோக்கம் என்ன அவரு எத நோக்கி போறாருன்றதெல்லாம் யாருக்குமே தெரியாத புதிர். தடி மாடு மாதிரி உடம்ப வச்சிக்கிட்டு இளவரசுகிட்ட போய் கக்கூஸ் கழுவி, கூல கும்புடு போட்டு வேலை பாக்குற மாதிரியெல்லாம் காட்சி எடுத்துருக்கது பாக்கவே ரொம்ப அபத்தமா இருக்கு.

படத்துல நிறைய முன்ணனி நட்சத்திரங்கள் நடிச்சிருக்காங்க. ஆனா அத்தனையும் சும்மா டம்மியா வந்துட்டுப்போறாங்க. வேல ராமமூர்த்தியெல்லாம் நல்ல screen presence உள்ளவரு. அவருக்கு படத்துல அள்ளக்கைக்கு ஒரு கடைசி அள்ளக்கை இருந்தா என்ன முக்கியத்துவம் இருக்குமோ அதுகூட இல்லை.  தலைவாசல் விஜய்க்கும் அதே கதி தான்.
வழக்கமா எல்லா படத்துலயும் comeback குடுக்குற யுவனோட இசையில ஒரு பாட்டு மட்டும் நல்லாருக்கு. மத்தபடி ரொம்ப ஆவரேஜ் தான்.

முதல் பாதிகூட எதோ பரவால்லாம ஓடுது. ரெண்டாவது பாதியெல்லாம் ச்சை… எந்த வகையில அதெல்லாம் சேக்குறதுன்னே தெரியல. படத்துல சூர்யா மட்டும் பாக்க ஆளு செமையா இருக்காரு. மத்தபடி உருப்படியா எதும் இல்ல.

மொத்தத்துல மேல சொன்ன மாதிரி 2030 வாக்குல இந்த NGK ஒரு நல்ல படமாக வர்றதுக்கு வாய்ப்பிருக்கே தவற இப்பதைக்கு இத பாக்குறது வேஸ்ட்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...