Monday, June 29, 2015

INSIDIOUS CHAPTER 3 – ஆயாவும் ஆவியும்!!!


Share/Bookmark
”திடீர் திடீர்னு ஒடையிதாம் சாயிதாம்” டைப் படங்கள்ல insidious ஒரு முக்கியமான படம். டர்ர்ர கெளப்பி விட்டுருவாய்ங்க. பெரும்பாலும் முதல் பாகத்த விட ரெண்டாவது பாகம் சற்று டொம்மையாவும், போர் அடிக்கிற மாதிரியும் தான் வரும். ஆனா இந்த insidious முதல் பாகத்துக்கு கொஞ்சமும் குறையாத தரத்தோட ரிலீஸ் ஆனது அதோட ரெண்டாவது பாகம். உண்மையிலயே அந்தப் படத்த பாக்கும்போது, “இவிங்க மொதல்லயே ரெண்டாவது பார்ட் எடுக்கனும்னு நினைச்சி கதை எழுதுறாய்ங்களா இல்லை சும்மா எடுத்துட்டு ஹிட் ஆனவுடனே ரெண்டாவது பார்ட் எடுக்குறாய்ங்களான்னு ஒரு டவுட்டே வந்துச்சி. ஏன்னா முதல் பாகத்தோட கதையையும் ரெண்டாவது பாகத்தோட கதையையும் லிங்க் பன்ன விதம் அவ்வளவு செமையா இருக்கும். முதல் ரெண்டு பாகத்தையும் டைரக்ட் பன்னவரு ஜேம்ஸ் வான். ரெண்டு பாகத்தோடவே நிறுத்திருக்கலாம். இந்த 3வது பாகத்த அவரு தயாரிக்க, Leigh Whannel ங்குறவரு இயக்கிருக்காரு.

போன வருசம் The conjuring ah பாத்துட்டு, அதோட prequel Annabelle வந்தவுடனே ரொம்ப ஆர்வமா பாக்கப்போய் மிரட்டல் அடி வாங்கிட்டு வந்து புலம்புன கதை உங்களுக்கே தெரியும். கிட்டத்தட்ட அதே நிலமைதான் இந்த Insidious 3 லயும். தொடர்ந்து பேய் படமா பாக்குறதால அவ்வளவு பயம் தெரியலையா இல்லை படமே சற்று டொம்மையா இருக்கான்னு எனக்கே கன்பீசனா இருக்கு. சரி இப்ப இந்தப் படத்த கொஞ்சம் பாப்போம்.

மொதல்ல இந்த Insidious படத்தோட ஒரு பொதுவான கான்செப்ட் என்னன்னா, தூங்கிட்டு இருக்கும்போது சில பேரோட ஆன்மா, அவங்க உடம்ப விட்டு வெளிய போய் ஆவிகள் உலகத்துல ஒலாத்திக்கிட்டு இருக்கும். அந்த மாதிரி சமயத்துல ஏற்கனவே பாடியாயி ஆவியா சுத்துறவிங்க, தூங்கிட்டு இருக்க அந்த பாடிக்குள்ள போக முயற்சி பன்னும். ஒருதடவ அவன் உங்க உடம்புக்குள்ள வந்துட்டா, ஆவி உலகத்துல சுத்துற நீங்க அங்கயே ஆவியோட ஆவியா திரிய வேண்டியதுதான். அவ்ளோதான் மேட்டர்.

இப்ப அந்த ஆவிங்க உலகத்துக்குள்ள ஒரு ஆயா அப்பப்போ பொய்ட்டு வரும். என்னய்யா டெய்லி ஆஃபீஸுக்கு பொய்ட்டு வர்ற மாதிரி சொல்றீங்கன்னு வெறிக்காதீங்க. அது அந்த ஆயாவுக்கு மட்டும் உள்ள ஒரு ஸ்பெஷல் கிஃப்ட்.  யாராவது செத்துப்போன யார்கூடவாச்சும் பேசனும்னா ஆயாட்ட வந்து சொன்னாப் போதும் ஆயா மேட்டர அழகா கேட்டு சொல்லிரும்.

முதல் ரெண்டு பாகத்துல பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு ஹெல்ப் பண்றதுக்காக நம்ம ஆயா வரும். ஆனா இந்த படத்துல ஆயாவுக்காகத்தான் கதையே எழுதிருக்காய்ங்க. குயின்னு ஒரு சின்ன வயசு பாப்பா. அவங்க அம்மா ஒரு வருஷம் முன்னால இறந்து போயிடுறாங்க. ஆனா அந்தப் பொண்ணுக்கு அவங்க அம்மாட்ட சில விஷயங்கள் கேக்கனும்னு ஆசை. அதனால சிலப்பல முயற்சிகளப் பன்னி ஆவிங்க கூடப் பேச அதுவாவே ட்ரை பன்னுது. ஆனா ஒண்ணும் வேலைக்கு ஆகல. அம்மா வரல. அப்பதான் ஆயாவப் பத்தி கேள்விப்பட்டு அதுகிட்ட ஹெல்ப் கேக்க போனா, ஆயா கன்ன மூடி அவங்க அம்மாவ காண்டாக் பண்ணுது. கிழவி பதட்டத்துல ஒரு நம்பர மாத்தி போட்டுருச்சி போல.  அம்மாவுக்கு போகவேண்டிய லைன் வேற ஒரு பேய்க்கு போயிடுது. சும்மா இருக்க பேய்க்கு தந்தியடிச்சா அது சும்மா இருக்குமா. நம்ம சும்மாதானே இருக்கோம்னு அதுவும் கிளம்பி வந்துருது.

அன்னியிலருந்து குய்னுக்கு ஏழரை டபுள் காட் போட்டுடுறான். டெய்லி “திடீர் திடீர்னு சாயிதான் ஒடையிதாம்” மொமெண்டு தான்.  வந்ததும் ஏதோ ஒரு பேயி இல்லை. குய்ன் வீட்டுக்கு நேர் மெல உள்ள வீட்டுல இருந்து செத்துபோன ஒருத்தன். அதுவும் அவன் ரொம்ப சீரியஸா இருந்து, மூச்சு விட முடியாம மூக்குல ஆக்ஸிசன் மாஸ்க்கெல்லாம் போட்டப்புறம் செத்துருப்பான் போல. பேயானப்புறமும் அதே ஆக்ஸிசன் மாஸ்கோடவே திரியிறான்.


சரின்னு ஆயா “யார் அந்த மாஸ்க் போட்டவன்”ன்னு பாத்துட்டு வருவோமே”ன்னு முடிவு பன்னி அந்த பேய் உலகத்துக்கு போகுது. அங்க உள்ள போனா ஆயாவ போட்டுத்தள்ள இன்னொரு ஆயா காத்துக்கிட்டு இருக்கு. அதுக்கு என்ன கோவம்னு தெரியல. பேய்க்கிழவி நம்ம ஆய கழுத்த புடிச்சி நெறிக்கவும் நம்ம ஆயாவுக்கு பீதி ஆயி, மாஸ்க் போட்டவன கண்டுபுடிக்காமயே “Mission Impossible” ன்னு சொல்லிட்டு திரும்ப நம்ம உலகத்துக்கு வந்துருது. அப்ப ஒருத்தர் குடுக்குறாறு ஆயாவுக்கு அட்வைஸூ.. “ஆயா… அது செத்துப்போன ஆயா.. நீ உயிரோட இருக்க ஆயா.. அந்த ஆயாவவிட உனக்கு பலம் ஜாஸ்தி ஆயா… உன்னால முடியும் ஆயா.. U can do it ஆயா” ன்னு நம்ம கிட்ட வேலை வாங்குறதுக்கு நம்ம மேனேஜருங்க குடுக்குற பில்ட் அப் மாதிரி குடுத்து ஆயாவ சார்ஜ் ஏத்துராப்ள.



நம்ம ஆயாவப் பாத்தா ஊதுவத்திக்கு வெள்ளை பெயிண்ட் அடிச்சி ட்ரெஸ் போட்டு விட்டா மாதிரி தான் இருக்கும். ஆனா அந்த பேய்க்கெழவி அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்புடுற ஜம்போ மாமி மாதிரி இருக்கும். இப்ப சார்ஜ் ஏத்துன ஆயா திரும்ப உள்ள போகுது. அந்த பேய்க்கிழவி திரும்ப வந்து ஆயா கழுத்த நெறிக்கவும், ஆயா ஃபுல் சார்ஜையும் கையில கொண்டு வந்து விடுது பாருங்க ஒரு குத்து. பாலகிருஷ்ணாகிட்ட அடி வாங்குன வில்லன்மாதிரி பேய்க்கிழவி ஒரு பதினைஞ்சி அடி தள்ளிப்போய் விழுந்து எந்திருச்சி ஓடுது. “ஆயாவுக்கு ஆயா நாண்டா.. எனக்கு மந்திரிங்க யாரும் இல்லை” ன்னு ஒரு பாட்ட மட்டும் அங்க போட்டுருந்தா பட்டைய கெளப்பிருக்கும்.

அப்புறம் இன்னும் டீப்பா உள்ள போய், அந்த மாஸ்க் போட்ட பேய கண்டுபுடிச்சி அழிக்கிறாங்க. ராஜகாளியம்மன், பண்ணாரி அம்மன் படங்கள்லயெல்லாம் க்ளைமாக்ஸ்ல வில்லன கொல்லும்போது எல்லா சாமிக்கிட்டருந்தும் ஒரு ஒளி வந்து ஒண்ணா சேந்து பவர்ஃபுல்லாகி அப்புறம் தான் வில்லன கொல்லுவாங்க. அதுமாதிரி இங்கயும் அந்த பேய கொல்றதுக்கு எல்லாருமா ஒண்ணு சேந்து, “we can do it” “we can do it” ன்னு அவன கொல்றாய்ங்க. கொல்றது பெருசா ஒண்ணும் இல்லை. அந்த நாயி போட்டுருக்க மாஸ்க்க கழட்டி விட்டுறாங்க. அவ்வளவுதான். பேய்க்கு கூட ஆக்ஸிசன் ரொம்ப அவசியம் போல. இதுல ஆவியா இருக்க குய்னோட அம்மாவும் வந்து ஹெல்ப் பன்றாங்க. குயின் கிட்டயும் சொல்லவேண்டிய விஷயத்த சொல்லிடுறாங்க. குய்ன் ஹாப்பி.  கடைசியா “happy family” . சுபம்.

Insidious ல அந்தப் பேய்களோட உலத்துக்கு போற காட்சிகள் பாக்க ரொம்ப சூப்பரா இருக்கும். வெறும் இருட்டும் ஆட்களும் மட்டும்தான் தெரிவாங்க. அதுவே ரொம்ப பயமா இருக்கும். ஆனா பழகிட்டதாலயா என்னன்னு தெரில இங்க ஒண்ணும் பெருசா இம்ப்ரஸ் பண்ணல.


கதை பிக் அப் ஆகுறதுக்குள்ளயே இண்டர்வல் விட்டுடுறாய்ங்க. ட்ரெயிலர்ல காமிச்ச சீன்கள் மட்டும்தான் படத்துல நல்லா இருக்கு. ஒரு சில சீன்களை தவற பெரிய பயமுறுத்தல்கள் எதுவும் இல்லை. டவுண்லோட் பன்னியே பாத்துக்கலாம். 


ANNABELLE - புடீக!! அந்த டைரக்டர கொல்லுக!!


Wednesday, June 17, 2015

ஒபாமாவத் தூக்குறோம்!!! – 2


Share/Bookmark
முதல் பகுதி உலகத்துலயே அதிக Threat அமெரிக்க அதிபர்களுக்குத்தான் இருக்கு. அதுலயும் ஒபாமா அதிபரானதுக்கு அப்புறம் அது கிட்டத்தட்ட 400% அதிகமாயிருச்சாம். ஜார்ஜ் புஷ் இருக்கும்போது வருஷத்துக்கு 3000 ah இருந்த number of threats ஒபாமா வந்தப்புறம் கிட்டத்தட்ட 12000 ah  increase ஆயிருச்சாம். போறவன் வர்றவன்லாம் கொளுத்தி போட்டுக்கிட்டு இருப்பான் போல. ரொனால்டு கெஸ்லர்ங்குறவரு In The President’s Secret Service ங்குற புத்தகத்துல அமெரிக்க அதிபர்களுக்கு வந்த மிரட்டல்களையும் அதை எப்படி சமாளிச்சாங்கங்குறதப் பத்தியும் எழுதிருக்காரு. 

ஒரு தடவ சோமாலியாவச் சேர்ந்த ஒரு தீவிரவத அமைப்பு ஒபாமா நியூ இயர் ஸ்பீச் குடுக்கும்போது போட்டுத்தள்ள ப்ளான் பன்றதா இண்டெலிஜன்ஸுக்கு ஒரு இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு. அப்படி எந்த அசம்பாவிதமும் நடந்துடாம இருக்க, அந்த சீக்ரெட் சர்வீஸ் , போலீஸ் டிப்பார்ட்மெண்ட், மிலிட்டரி டிபார்ட்மெண்ட், செக்யூரிட்டி ஏஜென்ஸின்னு கிட்டத்தட்ட 40,000 பேர் உதவியோட பாதுகாப்பு ஏற்பாட்ட கவனிச்சிருக்காங்க. அதுமட்டும் இல்லாம 12 Sniper டீம அந்த ஃபங்க்‌ஷன்ல இன்வால்வ் பன்னிருக்காய்ங்க.  அந்த ஃபங்ஷன் நடக்குற இடத்துக்கு பக்கத்துல இருக்க ஒவ்வொரு ஹோட்டல்ல தங்கியிருந்த அத்தனை பேரோட க்ரிமினல் ரெக்கார்ட்ஸயும் அலசி ஆராய்ஞ்சிருக்காய்ங்க.

2005 ல ஜார்ஜ் புஷ் ஜார்ஜியாங்குற நாட்டுல சொற்பொழிவு ஆத்திக்கிட்டு இருக்கும்போது, அருவை தாங்க முடியாம விளாடிமீர்ங்குற 28 வயசு இளைஞன் ஒரு க்ரானைட்ட தூக்கி வீசிருந்துருக்கான். அது கூட்டத்துல இருந்த ஒரு புள்ளை மேல அடிச்சி கீட விழுந்துருச்சி. தூக்கி வீசுன நாயி, நம்மூர் படங்கள்ல வாயல ஆப்பிள கடிக்கிற மாதிரி திரிய கடிச்சிட்டு வீசிருந்தான்னா அப்பவே குண்டு வெடிச்சி புஷ் புஸ்வானமாயிருப்பாரு. ஆனா அவன் அந்த க்ரானைட்ட ஒரு செகப்புத் துணிக்குள்ள வச்சி வீசிருக்கான். கடைசி வரைக்கும் அந்த க்ரானைட்டுல உள்ள ஃபைரிங் பின் வெளில வரமா பொய்ட்டதால, புஷ் அன்னிக்கு எஸ்கேப் ஆயிருக்காரு.

அமெரிக்க அதிபரா இருந்தா கூட, சீக்ரெட் சர்வீஸ் சொல்பேச்சு கேட்டுத்தான் நடக்கனும். இந்த வழியாத்தான் போகனும் இப்படித்தான் வரனும்னா அத கண்டிப்பா அதிபருங்க ஃபாலோ பண்ணித்தான் ஆகனும். அப்படி இல்லைன்னா குஸ்டமாயிரும். சொல்பேச்சு கேக்காம ஒருத்தரு கிட்டத்தட்ட உயிர விடப்பாத்தாப்ள.

1963, நவம்பர்.22  மதியானம் ஜான் கென்னடிய கார்ல போகும் போது சுட்டுக் கொன்னுட்டாய்ங்க. நம்ம ஓபிக்கு அடிச்ச லக்கு மாதிரி லிண்டன் ஜான்சன்ங்குறவர உடனே அதிபரா அறிவிச்சி அன்னிக்கு சாயங்காலமே பதவியும் ஏத்துக்கிட்டாப்ள. அவர பாதுகாக்குற சீக்ரெட் ஏஜெண்ட்டா ஜெரால்டு ப்ளெய்ன்ங்குறவனையும் போட்டுருக்காய்ங்க. நைட்டு ஆயிருச்சி. நம்ம ப்ளெய்ன் மட்டும் எவனாச்சும் வர்றாய்ங்களான்னு பாத்துக்கிட்டு காவலுக்கு இருந்துருக்கான்.

 திடீர்னு சம்பந்தமே இல்லாத ஒரு பக்கத்துலருந்து யாரோ அவன நோக்கி வர்ற மாதிரி சத்தம் கேட்டுருக்கு. ஆஹா… இந்த சமயத்துல எவனா இருக்கும்? மொத அசைன்மெண்டுல்ல.. எவனா இருந்தாலும் போட்டுத்தள்ளிர வேண்டியதுதான்னு ஃப்ரண்ட்ஸ் விஜய் கட்டைய கையில எடுக்குற மாதிரி ப்ளெய்ன் ஒரு மிஷின் Gun ah கையில எடுத்துகிட்டு சுடுறதுக்கு ரெடியா நின்னுருக்கான். என்னாடா கையில Gun ah எடுத்தவுடனே வந்தவன் ஓடிருவான்னு பாத்தா, அந்த உருவம் இவன நோக்கி தொடர்ந்து வந்துக்கிட்டே இருந்துருக்கு. சுடுறதுக்கு ஸ்ட்ரைக்கர்ல கைய வச்சிட்டு ரெடியாகுறப்போதான் வந்தவன் மூஞ்சி தெரிஞ்சிருக்கு. ”டேய் நாதான்ண்டா உன் பாஸ் நேசமணி நீ எங்கிட்ட வேல பாக்குற கிச்சின மூர்த்தி” ன்னு சொல்லிக்கிட்டு நின்னுருக்காரு புதுசா அப்பாய்ண்ட் ஆன அதிபர்.

கடுப்பான ப்ளெய்ன் அப்புறமா “யோவ் இன்னும் ஒரு செகண்ட் விட்டுருந்தா உன்ன சுட்டுருப்பேன்யா” ன்னு சொல்லிருக்கான்.  ஜான் கென்னடி சுடப்பட்ட அன்னிக்கே இவர் பதவி ஏத்துக்கிட்டதால, கலவரத்துல இவருக்கு செக்யூரிட்டி procedure எல்லாம் சொல்லிக்குடுக்க மறந்துட்டாய்ங்களாம். அதனால அவருக்கு எந்தப்பக்கம் போகனும் போகக்கூடாதுன்னு தெரியல போல. ஜஸ்டு மிஸ்ஸூ. இல்லைன்னா அன்னிக்கே ரெண்டு அதிபரு அவுட் ஆயிருப்பாய்ங்க.

கார்ல போயிட்டு இருந்த கென்னடியா கூட்டத்துல இருந்துகிட்டே அசால்ட்டா சுட்டு கொன்னுட்டாய்ங்க. ஆனா இன்னிக்கு ஒபாமாவ அப்புடி கார்ல போயிட்டு இருக்கும்போது சுடனும்னு கனவு கூட காண முடியாது. சுடுறது என்ன பாம் போட்டாலே ஒண்ணும் ஆகாதுங்குறாய்ங்க. அப்படிப்பட்ட காருலதான் அவுரு போயிட்டு இருக்காப்ள. அவரோட காரப் பத்தின ஸ்பெஷல் ஆர்ட்டிக்கிள் ஒண்ணு போன வாரம் சுத்திக்கிட்டு இருந்துச்சி. பெரும்பாலானவங்க பாத்துருப்பீங்க. அதப் படிக்காதவங்களுக்காக ஒரு ரிப்பீட்டு.

ஒபாமா யூஸ் பன்னிட்டு இருக்க காரோட செல்லப்பேரு “The Beast” ஆம்.
கிட்டத்தட்ட அந்தக் காரோட நீளம் மட்டும் 18 அடி உயரம் அஞ்சேகால் அடி. அதாவது ஒரு ஆள் உயரம். அந்தக்காரோட window 5” thickness ஆம். அந்த window என்ன material la செஞ்சதுங்குற இன்ஃபர்மேஷன் ரொம்ப சீக்ரெட்டாம். அதே மாதிரி அந்தக் காரோட வெய்ட்டு எவ்வளவுன்னு யாருக்கும் தெரியாது. அதுவும் சீக்ரெட்.

அதுலயும் இந்தக் கார கூட்டம் பார்க் பன்னும்போது, கூட்டம் ஒபாமாவ நெருங்காத மாதிரி ஒரு டாக்டிக்ஸா தான் நிறுத்துவாய்ங்களாம். வண்டி போயிட்டு இருக்க வழியில வண்டிய பஞ்சர் பன்னி, இவர ஸ்டாப் பண்ணலாம்னு நினைச்சா அதுவும் நடக்காது. இந்த கார்ல உள்ள டயர் பஞ்சரே ஆகாதாம். அப்படியே பஞ்சர் ஆகல.. நா டயரையே கிழிச்சி எடுத்துடுறேன்னு நினைச்சா கூட, எந்த ப்ரச்சனையும் இல்லை. டயரே இல்லாம நடுவுல உள்ள ரிம்ம மட்டும் வச்சே இந்த கார ஓட்டிக்கிட்டு வந்துடலாமாம்.


கார் முழுசுமே air tight. அதாவது வெளிலருந்து எந்த கேஸூம் உள்ள போகாது. ஒரு வேளை poisonous gas அட்டாக் எதாவது முயற்சி பன்னாலும் பன்னுவாங்கன்னு இந்த ஏற்பாடு. ஒரு வேளை கார சுத்தி கும்பல் எதாவது கூடி ஆர்ப்பாட்டம் பன்னா கூட, அவங்கள கலைக்க, கண்ணீர் புகை (tear gas) வெளிப்படுத்துறதுக்கு ஒரு ஆப்ஷன் இருக்கு. அதுமட்டும் இல்லாம ஒரு பட்டன அழுத்துனா வண்டிக்கு முன்னால ரெண்டு மூணு short gun வந்து நிக்குமாம். லைட்டெல்லாம் ஆஃப் பன்னிட்டு கும் இருட்டுல கூட கார ஓட்டிக்கிட்டு போற மாதிரி நைட் விஷன் கேமரா ஒண்ணும் இந்தக் கார் முன்னால பொறுத்திருக்காய்ங்களாம்.

ட்ரைவர் பக்கத்துல இருக்க window வ தவிற கார்ல உள்ள எந்த விண்டோவும் ஓப்பன் ஆகாது. டிரைவர் விண்டோ கூட வெறும் மூணு இன்ச் மட்டும் தான் ஓப்பன் ஆகுமாம். அதுவும் எதுக்குன்னா ட்ரைவர் எதாவது டாக்குமெண்ட் எடுத்துக் குடுக்க வேண்டியிருந்தா, அதுக்காம். இந்தக் கார் டைரவர் CIA வால ட்ரெயிங் குடுக்கப்பட்டவனாம். ரொம்ப குஷ்டமான கண்டிஷன்லயும் வண்டி செமையா ஓட்டுற கெப்பாகுட்டி உள்ளவனத்தான் இந்த வண்டி ட்ரைவரா போடுவய்ங்களாம்.


ஒபாமா எந்த ஊருக்குப் போனாலும் இந்தக் காரும் கூட போகுமாம். பீஸ்ட் வெளியூர்ல இருக்கும்போது, அதுக்கு முன்னால ஒரு அமெரிக்க கொடியும், இன்னொன்னு எந்த நாட்டுல இருக்கோ அந்த நாட்டுக் கொடியும் பறக்குமாம். அப்புறம் காருக்குள்ள எந்த சிக்னலும் இருக்காதாம். என்னது Vodafone எல்லா இடத்துலயும் சிக்னல் இருக்குமா? அட ஓடஃபோனா இருந்தாலும் உள்ளுக்குள்ள சிக்னல் இருக்காது. காருக்குள்ளயே ஒரு built in சாட்டிலைட் ஃபோன் இருக்குமாம். அது டைரக்டா Vice president கூட பேசிக்கலாமம். என்னது? ச்ச ச்ச… ரீச்சார்ஜெல்லாம் பன்ன வேண்டியதில்லை. Monthly பில் தான். அத ஆஃபீஸ்லயே கட்டிருவாய்ங்களாம்.

இல்லை எவ்வளவு safety இருந்து என்ன? ஒரு பாம் போட்டா எல்லாம் சுக்கு சுக்காயிரும்னு நினைக்கலாம். ஆனா அதுக்கும் வழி இல்லை. இந்த மாதிரி பாமோ இல்லை க்ரேனைட்டோ தூக்கி வீசுனாலும் வீசிருவாய்ங்கன்னு தான் இந்தக் காருக்கு கீட ஒரு பெரிய ஸ்டீல் ப்ளேட் வச்சிருக்காய்ங்கலாம்.  


இதுக்கு மேலயும் நமக்கு பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமா… அவ்வ்வ்!!!


Tuesday, June 16, 2015

அமெரிக்காவ தாக்குறோம்!! ஒபாமாவ தூக்குறோம்!!!


Share/Bookmark
என்னடா ஒசாமா பின்லாடனோட ஒண்ணா உக்காந்து படிச்சவன் மாதிரி பேசுற. நாங்க ஏண்டா நடுராத்திரி பன்னண்டு மணிக்கு சுடுக்காட்டுக்கு போறோம் தானே நினைக்கிறீங்க. இன்னிக்கு உங்களுக்கு எதுவும் தோணல. ஆனா திடீர்னு நாளைக்கு காலையில தூங்கி எழுந்திரிக்கும்போது, ஒபாமா மேல கடுப்பு வந்து அந்தாள போட்டுத்தள்ளனும்னு தோணலாம். அந்த மாதிரி சமயத்துல நீங்க கஷ்டப்படக்கூடாதுல்ல. அதுக்காகத்தான் இந்தப் பதிவு. சரி ஆப்ரேசன்ல இறங்குறதுக்கு முன்னால அவய்ங்க என்னெல்லாம் டகால்டி வேலை பண்றாய்ங்க. எப்புடியெல்லாம் அந்தாள பத்தரமா வச்சிருக்காய்ங்குற டீட்டெய்ல கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டோம்னா ரொம்ப நல்லது.

ஒபாமாம அதாவது அமெரிக்க ஜனாதிபதிய பாதுக்காக்குறதுன்னே ஒரு தனி சீக்ரெட் ஏஜென்ஸி இருக்கு. அந்த சீக்ரெட் ஏஜென்ஸில யார் யார் இருக்காங்கன்னு ஒபாமாவுக்கும் அவங்க ஒய்ஃபுக்கும் (first lady) மட்டும் தான் தெரியும். சீக்ரெட்ட ஏன் ஒய்ஃப்கிட்ட சொன்னாருன்னு ஒரு டவுட் உங்களுக்கு வரும். ஒருதடவ அந்தம்மா ஒபாமாகிட்ட அந்த சீக்ரெட் சர்வீஸப் பத்தி கேட்டதுக்கு ”இது ரொம்ப சீக்ரெட் உங்கிட்ட சொல்ல முடியாது”ன்னு சொல்லிருக்காரு. கன நேரத்தில் குபீர்ன்னு மூக்குல ஒரு குத்து விட்டுருக்கு. கொட கொடன்னு ரத்தம் கொட்டவும் உண்மைய ஒண்ணுவிடாம சொல்லிட்டாப்ள. ஒபாமாவ கல்யாணம் பன்னிக்கிட்டதுக்காக வேற வழியில்லாம அந்தம்மாவுக்கும் எல்லா உண்மையும் தெரியும்.

அந்த சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு காரணங்களுக்காக, பெரும்பாலும் எந்த விஷயத்தையும் பப்ளிக்கா டிஸ்கஸ் பன்ன மாட்டாய்ங்களாம். எங்கெங்க என்ன மாதிரியான செக்யூரிட்டி ப்ளான் பண்ணிருக்குன்னு ரொம்ப சிலருக்க்கே தெரியுமாம். அந்த சீக்ரெட் சர்வீஸோட முக்கியமான வேலை ஆப்பு கண்ணுக்கு தெரிஞ்சப்புறம் ஆக்‌ஷன் எடுக்காம, ஆப்பு தெரியிறதுக்கு முன்னாலயே எங்கெல்லாம் அய்யாவுக்கு ஆப்பு இருக்கலாம்னு கணிச்சி அந்த ஆப்புகளையெல்லாம் அலேக்கா எடுக்குறது தான்.



பெரும்பாலும் ஒபாமா விசிட் பண்ற இடங்களுக்கு இந்த சீக்ரெட் சர்வீஸ் முன்னாலயே விசிட் பண்ணி, அந்த இடம் ஃபுல்லா ஒரு தடவ செக் பண்ணுவாங்க. எத்தனை பேர் இருக்காங்க, என்னென்ன சிஸ்டம் அங்க இருக்கு, அய்யாவுக்கு அடி பட்டா தூக்கிட்டு போக பக்கத்துல எந்த ஹாஸ்பிட்டல் இருக்குன்னு எல்லாத்தையும் அலசிருவாங்க. விசிட்டுக்கு முன்னால intelligence டிபார்ட்மெண்ட்லருந்து அய்யா உயிருக்கு எதாவது ப்ராப்ளம்னு ரிப்பொர்ட் இருக்கான்னு டிஸ்கஸ் பன்னி, ஒரு வேளை எதாவது அசம்பாவிதம் ஆயிட்டா எந்த வழியா அய்யாவ கூட்டிக்கிட்டு எஸ் ஆகுறதுங்குறது, அய்யாவோட கார் எங்க வந்து நிக்கனும், அய்யா எப்போ இறங்கனும், எந்த வழியா நடக்கனும்னு எல்லாத்தையும் ப்ளான் பன்னி முன்னாலயே இன்ஸ்ட்ரக்‌ஷன் குடுத்துருவாங்க.  

இன்னும் ஒரு சில ஆபத்தான நேரங்கள்ல, body double ன்னு சொல்லப்படுற டூப்புகளக் கூட அமெரிக்க ஜனாதிபதிக்கு பதிலா யூஸ் பன்னுவாங்கன்னும் சொல்றாங்க. அதாவது மேடையில ஜஸ்ட் வந்து போஸ் மட்டும் குடுத்தா போதும்ங்குற சமயங்கள்ல அந்த மாதிரி டூப்புகள யூஸ் பன்னுவாங்களாம். பேச விட்டா மாட்டிக்குவாய்ங்கள்ள. ஜனாதிபதியோட ஒத்த உருவ அமைப்புள்ள ஆளுங்களத் தேடிப் புடிச்சி அவிங்கள இந்த டூப்புகளா பயன்படுத்துறாங்களாம். அது எப்படி ஒருத்தன் அச்சு அசலா இன்னொருத்தன் மாதிரி இருக்க முடியும்னு நீங்க கேக்கலாம். ஓரளவுக்கு சிமிலரா இருப்பாய்ங்க. ஒரே மாதிரி கொண்டு வர, முகத்துல  சிலப்பல ப்ளாஸ்டிக் சர்ஜரிய பன்னிவிட்டுருவாய்ங்க. யாரு கண்டா விட்டா அவிய்ங்க க்ளோனிங் கூட பன்னி வச்சிக்குவாய்ங்களாம். அந்த மாதிரியான டூப்புங்க வெளி உலகத்தோட எந்த காண்டாக்டும் இல்லாம தனியாவே வச்சிருப்பாய்ங்களாம்.

Vantage Point ன்னு ஒரு படம். அமெரிக்க அதிபர் க்யூபாவுல நடக்குற ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மீட்டிங்குல கலந்துகிட்டு பேசனும். ஆனா அந்த மீட்டிங்குல அவர போட்டுத்தள்ள நிறைய பேர் ப்ளான் பன்னிருக்கதா இண்டெலிஜன்ஸ் ரிப்போர்ட் வந்துருக்கும். இந்த சீக்ரெட் ஏஜென்ஸில இருக்கவய்ங்கல்லாம் அவர இந்த மீட்டிங்குக்கு போக வேண்டாம் போக வேண்டாம்னு எவ்வளவோ சொல்வாங்க. ஆனா “இது அண்ணனுக்கு ப்ரஸ்டீஜ் ப்ராப்ளம்டா” ன்னு அதிபர் அந்த மீட்டிங்குல கலந்துகிட்டே ஆகனும்பாரு. அவிங்களும் பயங்கரமா செக்யூரிட்டிய பயங்கரமா டைட் பன்னி அதிபர ஸ்டேஜ்ல ஏத்துவாய்ங்க. ஸ்டேஜ்ல ஏறி கையத்தான் தூக்குவாரு.. டுமீல்ன்னு நெஞ்சுல குண்டு பாஞ்சி அங்கயே வாயப் பொளந்துருவாரு.

நம்மல்லாம் அய்யயோ என்னடா இவ்வளவு செக்யூரிட்டி இருந்தும் அய்யாவ போட்டுட்டாய்ங்களேன்னு ஃபீல் பன்னிட்டு இருப்போம். நம்மள மாதிரியே அமெரிக்க ஜனாதிபதியும் எதிர்த்த பில்டிங்குல உக்காந்து “என்னடா இவ்வளவு செக்யூரிட்டி இருந்தும் சுட்டுட்டுட்டாய்ங்களே” ன்னு ஃபீல் பன்னுவாரு. யோவ் உன்னையத்தானய்யா சுட்டாய்ங்க.. இங்க உக்காந்து வேடிக்க பாத்துக்கிட்டு இருக்க. அப்புறம் தான் தெரியிது அவய்ங்க மீட்டிங்குக்கு அனுப்சது அவரோட டூப்ப.  அப்புறம் செத்துப்போன அந்த பாடிய தூக்கிட்டு வந்து ரமணா படத்துல பாடிய வச்சி காச கரக்குற மாதிரி, “அய்யாவுக்கு சீரியஸா இருக்கு.. அய்யா அபாய கட்டத்த தாண்டிட்டாரு” ன்னு ஏதேதோ சொல்லி சமாளிப்பாய்ங்க. முடிஞ்சா Vantage point பாருங்க. செம படம்.

ஹிட்லருக்கு குறைஞ்சது ஆறு பாடி டபுள்ஸ் இருந்ததா சொல்றாய்ங்க. ஆறு பேரு இருந்தாங்களோ இல்லியோ ஆனா ஒருத்தன் நிச்சயாமா இருந்தான்னு வரலாறு சொல்லுது. அவன் பேரு Gustav Weler பாவம் ஹிட்லர் மாதிரி இருந்தது ஒரு குத்தமாய்யா.. போர் நடந்துகிட்டு இருக்கும்போது எதிரி க்ரூப்ப குழப்புறதுக்காக இவன மர்கயா சாலா பன்னி பாடிய தூக்கி வீசிருக்காய்ங்க. எதிரி குரூப்பும் அந்த பாடிய ஹிட்லர்னு நினைச்சி கொஞ்ச நாள் பஜன பாடிருக்கானுங்க. 

செத்தது ஹிட்லர் இல்லைங்குறது ஒரு டிவிஸ்டுன்னா செத்தது Gustav Weler eh இல்லன்னு சொல்றாரு ஒருத்தரு. W. Hugh Thomas  ங்குற ப்ரிட்டீஷ் டாக்டரு அப்ப செத்தது Gutsav Wheler இல்லப்பா… அப்ப செத்தது ஹிட்லரோட சமையல்காரன். அவனும் ஹிட்லரோட ஒரு பாடி டபுள்னு சொல்லிருக்காரு. ஹிட்லர் மட்டையானதுக்கப்புறம் Gutsav Wheler ah சோவியத் காரனுங்க புடிச்சி இன்வெஸ்டிகேஷன் பன்னாங்கன்னும் சொல்றாரு.




சரி அத விடுங்க. இப்ப மேட்டர் ஒபாமாவுக்கு பாடி டபுள் இருக்காரா இல்லையா… நம்ம கரெக்டான ஆளத்தான் தூக்குறோமா இல்லையான்னு தெரியனும்.  இதுவரைக்கும் அவருக்கு பாடி டபுள் யூஸ் பன்னதா எந்தத் தகவலும் இல்லை. ஆனா இந்தோநேஷ்யாவுல Ilham anas ங்குற ஒருத்தன் அப்படியே ஒபாமா மாதிரி இருக்காப்ள. கொடுமை என்னன்னா அந்தாளும் நம்ம மோடிஜீ மாதிரி அடிக்கடி ஊர் சுத்துவாப்ள போல. போற இடத்துலயெல்லாம் “ஐ ஒபாமா.. ஐ ஒபாமா” ன்னு கூட்டம் கூடிருதாம். போற வர்றவய்ங்கள்ளாம் இவரு கூட நின்னு ஃபோட்டொ எடுத்துக்குறாங்களாம். ஒருதடவ இவரு அமெரிக்கா போயிருந்தப்போ இவன்கூட எலிவேட்டர்ல வந்த  ஒரு கிழவி ஒபாமாதான் வந்துட்டாருன்னு செம்ம ஷாக் ஆயி படபடப்பாயிருச்சாம்.

அவன்கிட்ட போய் ஒருதடவ ரிப்போர்ட்டருங்கல்லாம் “ஏன்பா.. நீ ஏன் ஒபாமாவுக்கு டூப்பா நடிக்கக்கூடாதுன்னு கேட்டுருக்காய்ங்க. அதுக்கு அவன் செருப்புல அடிச்சா மாதிரி ”என்னால குண்டடி பட்டெல்லாம் சாகமுடியாதுப்பா” ன்னு நோஸ் கட் பன்னி அனுப்பிருக்கான். இந்த அவமானம் நமக்குத் தேவையா.

(அடுத்த பதிவில் தொடரும்)

         

Wednesday, June 10, 2015

காக்கா முட்டையும் ரெண்டு கூமுட்டையும்!!!


Share/Bookmark
குறிப்பு : இந்தப் பதிவு காக்கா முட்டை படத்தை பற்றிய விமர்சனமோ அல்லது படத்தைப் பற்றிய கருத்தோ அல்ல. ரிலீஸ் ஆவுறதுக்கு முன்னாலயே தேசிய விருது வாங்குன படம். ரிலீஸே ஆவாத படத்துக்கு எப்புடி நேஷனல் அவார்டு குடுத்தாய்ங்க.. எல்லாம் உள்குத்து போலன்னு தமிழ் சினிமாவைக் கரைத்துக் குடித்த சினிமா “ஆர்வலர்களும்”, சில இணைய தளங்களும் கூட அந்த சமயத்துல என்னென்னமோ எழுதுனாங்க. போன வாரம் ரிலீஸ் ஆன காக்கா முட்டை படம் பார்த்த எல்லாரோட மனசையும் கவர்ந்திருக்குங்குறது விமர்சனங்கள் மூலமாவும், நண்பர்கள் மூலமும் நல்லாவே தெரியிது.

இப்ப மேட்டர் அது இல்லை. நம்ம சமூக வலைத்தள “பொங்கிகள்” அவங்களோட அதிமேதாவித்தனத்தையும், அவங்களோட ரசிப்புத் திறனையும் மத்தவங்களுக்கு எடுத்துக்காட்ட சீசனுக்கு சீசன் ஒரு படத்த தெரிவு செஞ்சி அந்த ஒரு படத்த பயங்கரமா ப்ரோமோட் பண்ணுவாய்ங்க. சிலர் போஸ்டர மட்டுமே பாத்து. ஆஹா ஓஹோ அமர்க்களம் அட்டகாசம், குறியீடு, கணக்கீடுன்னு அவிய்ங்க எங்கெங்கையோ படிச்சதெல்லாம் அந்த ஒரு படத்துல தெரியிதுன்னு சொல்லுவாய்ங்க. சொல்லிட்டு போங்க தப்பு இல்லை.

ஆனா ஒருத்தனுக்கு புடிச்ச படம் அடுத்தவனுக்கும் நிச்சயம் புடிக்கனும்னு எந்த ஒரு அவசியமும் இல்லை. ஒவ்வொருத்தனுக்கும் ஒரு ஒரு டேஸ்டு. ஆனா, இப்ப facebook ல சில பேரு காக்க முட்டையப் பத்தி போடுற போஸ்டுங்களையெல்லாம் பாத்தா சத்தியமா சிரிப்புத் தான் வருது. ஒருத்தன் என்னடான்னா “காக்கா முட்டைய எவன் மொதல்ல நல்லா இல்லைன்னு சொல்றானோ அவன ஸ்பாட்லயே காலி பண்றேண்டா”ங்குறான். இன்னொருத்தன் என்னடான்னா “காக்கா முட்டை நல்லா இல்லைன்னு சொல்றவன் ரத்தம் கக்கிச் சாவான்” ங்குறான்.

ஒருத்தரு அந்தப் படத்த “சூப்பர்லாம் இல்லைய்யா.. சுமாராத்தான் இருக்கு” ன்னு சொல்லிருந்தாரு. அவரு எதோ மிகப்பெரிய குத்தம் பன்னிட்ட மாதிரி “இவரோட டேஸ்ட் இவ்வளவு தான்.. இவருடைய கலை ஞானம் இவ்வளவுதான்” ன்னு என்னென்னமொ ஓட்டுறாய்ங்க. ஏண்டா டேய் உனக்கு புடிச்சா, நல்லாருக்குப்பா, செமப்பா குறியீடுப்பான்னு எதயாவது சொல்லி பில்ட் அப் பண்ணு. ஆனா அடுத்தவனும் அந்தப் படத்த நல்லா இருக்குன்னுதான் சொல்லனும்னு எதிர்பாக்குறது என்னங்கடா  நியாயம்.

இப்புடி எக்ஸ்ட்ரா பில்ட் அப் குடுத்து குடுத்தே தான் ஒரு டைரக்டர ஒழிச்சே கட்டுனாய்ங்க. அது வேற யாரும் இல்லை. தங்க மீன்களை எடுத்த டைரக்டர் ராம் தான். “மானிடராகப் பிறந்த ஒவ்வொருவரும் பார்த்தே தீரவேண்டிய அருமையான காவியமடா அது” ன்னு இதே குரூப்பு அந்தப் படத்துக்கு வெளம்பரம். அதுவும் படம் வர்றதுக்கு முன்னாலயே. செண்டி மெண்டுன்னாதான் நம்மாளுக படக்குன்னு விழுந்துருவாய்ங்களே.. ”ரிலீஸ் பண்ண விட மாட்டேங்குறாங்க… ரிலீஸ் பண்ண காசு இல்லை…. தியேட்டர் குடுக்க மாட்டேங்குறாங்க” ராம் அவர்கள் அவர் கஷ்டத்த சொல்ல, நம்மாளுக படத்த பாக்கமலேயே ப்ரமோட் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்க. கடைசில நடந்தது என்ன? அது ஒரு ரொம்ப சுமார் படம்.


இவியிங்க பின்னாலருந்து குடுத்த ஊக்கம், அகில உலக சினிமாவையே ஒரே படத்துல அடக்கி எடுத்துட்ட மாதிரி அவருக்குள்ளையே ஒரு மன பிராந்திய உருவாக்கிருச்சி. இல்லைன்னா, அவ்ளோ பேர் முன்னால ஏன் சார் என் படத்துக்கு விருது குடுக்கலைன்னு கேப்பாரா? தெளிவான மனநிலையில இருக்க ஒருத்தன் நிச்சயம் இதுமாதிரி கேக்க மாட்டான். விஜய் அவார்ட்ஸ் சும்மா கண் துடைப்பு அவார்டாவே இருக்கட்டும். Fake polling பன்னி விருது குடுக்குறவங்களாவே இருக்கட்டும். இவர மதிச்சி ஸ்டேஜ்ல கூப்டு பேச வச்சா, கொஞ்சம் கூட ஸ்டேஜ் மேனர்ஸ் இல்லாம “என் படத்துக்கு ஏன் அவார்டு குடுக்கல… அந்தப் பாட்ட போடுங்க நா கேக்கனும்”ன்னு எத்தனை காமெடி. இவர மாதிரியே கோபிநாத்தும் கொஞ்சம் கூட யோசிக்காம, ”உங்க படம் அந்த அளவு ஒர்த் இல்லை சார்” ன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிருந்தா, அதுக்கப்புறம் மூஞ்ச எங்க வச்சிருப்பாரு.

எத்தனையோ நேஷனல் அவார்டு படங்களுக்கு உள்ளூர் விருதுகள் கிடைக்காம போயிருக்கு. எத்தனையோ சிறந்த நடிகருக்கான நேஷனல் அவார்டு வாங்குனவங்கள கண்டுக்காம கூட விட்டுருக்காங்க. அவங்கல்லாம் ஏன் எனக்கு விருது குடுக்கலன்னா கேட்டுக்கிட்டு இருக்காங்க.

இதுல காமெடி என்னனனா, இவிங்க பில்ட் அப் குடுக்காம சும்மா இருந்தாலே நல்ல படங்கள் ஒரளவுக்கு ஓடும். எந்த ஒரு மொக்கை படத்தையும் பில்ட் அப் குடுக்குறதால தூக்கி நிறுத்திடவோ, எந்த ஒரு நல்ல படத்தையும் தப்பான விமர்சனங்களால கவுத்திடவோ முடியாது. பெருவாரியான மக்களுக்கு அந்தப் படம் என்ன தாக்கத்த குடுக்குதோ அதான் படத்தோட ரிசல்ட். மக்கள்கிட்ட இந்த மாதிரி சின்ன படங்களை கொண்டு சேர்க்க சில பில்டப்புகள் இருக்கலாம்தான். அதுல அடாவடித்தனம் இருக்கக் கூடாது. 

இப்டித்தான் போன மாசம், உத்தம வில்லன்ல அது தெரியிது, இது தெரியிதுன்னு ஏத்தி விட்டுக்கிட்டு இருந்தாய்ங்க. படம், முழுசா நாலு நாள் கூட ஒழுங்கா ஓடல. இதுல நா உத்தம வில்லன நல்ல இல்லைன்னு சொன்னதுக்காக என்னை ஒரு நாய் “மூன்றாம் தர நாயெல்லாம் விமர்சனம் எழுதுது” ன்னு திட்டிருந்தான். நா அவனுக்கு பதில் சொல்ல தேவையில்லை. படத்தோட ரிசல்ட்டே அவனுக்கு பதில் சொல்லிருக்கும். 

காஞ்சனா-2வும், உத்தமவில்லனும் தெலுங்குல ஒண்ணாத்தான் ரிலீஸ் ஆச்சு. ஒரு வார முடிவுல காஞ்சானா 11 கோடி கலெக்‌ஷன். உத்தம வில்லனோட கலெக்‌ஷன்  வெறும் 1.5 கோடி.. கலெக்சன்ல என்ன இருக்கு? படம் எப்புடி இருக்குன்னு தான் முக்கியம்னு வியாக்யானம் பேசலாம். ஆனா end of the day படம் எத்தனை பேருக்கு புடிச்சிருக்குங்குறத படத்தோட கலெக்சன் தான் சொல்லும்.

ஒரு படத்த பாராட்டுறது, ப்ரமோட் பண்றது நிச்சயமா நல்ல விஷயம் தான். இல்லைன்னு சொல்லல. ஆனா அடுத்தவங்களும் அதயேத்தான் சொல்லனும்னு நினைக்கிறது தான் ரொம்ப ரொம்ப தப்பு.


இந்த காக்கா முட்டைகள் அவங்களத் தரமான சினிமா ரசிகரா மத்தவங்களுக்கு காட்டிக்கொள்ள இந்த சீசன்ல தேர்ந்தெடுத்திருக்கும் படம் தான் காக்கா முட்டை. ஒரு வேளை படம் புடிக்கலைன்னாலும் யாரும் படத்த பத்தி தப்பா சொல்லிடாதீங்க. அப்புறம் சாமி குத்தம் ஆயிரும். உங்களை வேற வண்டை வண்டையா திட்டுவாய்ங்க. 

ஸ்க்ரோல் பன்னி கடைசி பாராவை மட்டும் படிப்பவர்கள் கவனத்திற்கு, கடைசி பாராவ மட்டும் படிச்சிட்டு திட்டுறதுக்கு கிளம்பி வந்துடாதீங்க. இது சினிமா விமர்சனம் இல்லை. 

Friday, June 5, 2015

வாங்களேன்.. ஒரு செல்ஃபி எடுத்துக்குவோம்!!!


Share/Bookmark
குறிப்பு: இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. முன்னெல்லாம் நாலு பேர் கொண்ட குழுவோட வெளில சுத்த போனோம்னா, நாம எடுக்குற பெரும்பாலான ஃபோட்டோக்கள்ல மூணுபேர் தான் இருப்போம். ஏன்னா நம்மல்ல ஒருத்தன் கண்டிப்பா ஃபோட்டோகிராஃபர் வேலை பாத்தே தீரனும். அப்படி நாலுபேரும் நிக்கிற மாதிரி ஃபோட்டோ வேணும்னா, அங்க வெட்டியா சுத்திக்கிட்டு இருக்க எவண்டயாச்சும், “எக்ஸ்க்யூஸ்மி பாஸ்.. ஒரு ஸ்நாப் எடுத்துத் தரமுடியுமா” ன்னு கேட்டா, அவன் நம்ம கேமராவுல பவர் பட்டன் எது, ஸ்நாப் எடுக்குற பட்டன் எதுன்னு தெரியாம கொஞ்ச நேரம் அத திருப்பி திருப்பி பாப்பான். அப்புறம் நாம அவனுக்கு இத இப்புடி அமுக்குங்கன்னு ட்யூஷன் எடுத்துட்டு போய் நின்னா, நம்ம நாலுபேர்ல எவனாச்சும் ஒருத்தன் ஃபோட்டோவுல கரெக்டா கண்ண மூடுனமாதிரியோ, இல்லை சைடுல போற ஃபிகர பாத்து வழிஞ்சி கேமராவ பாக்காத மாதிரியோ நின்னுருப்போம். அப்புறம் என்ன “இன்னொரு ஸ்நாப் பாஸ்” ன்ன உடனே அவன்கிட்ட எதோ irctc la டிக்கெடி புக்பண்ணி கேட்டா மாதிரி அவ்ளோ கஷ்டப்பட்டுக்கிட்டு எடுத்துக்குடுப்பான்.

நாலுபேரா போற குரூப்புக்கே இந்த நிலமைன்னா, தனியா வெளில போறவிங்க நிலைமைதான் ரொம்ப பரிதாபத்துக்குறியது. எல்லாத்தையும் சுத்தி சுத்தி பாக்க மட்டும்தான் முடியும். ஆசைக்கு கூட ஒரு ஃபோட்டோ எடுக்க முடியாது. அப்படி தனியா சுத்துற எவனோ கழிவறையில் கனநேரம் உக்காந்து யோசிக்கும் போது அவனுக்கு தோணின ஐடியாதான் இந்த செல்ஃபி. தொண்ணூறு பர்சண்ட் செல்ஃபிய கண்டுபுடிச்சவரு மேல ஃபோட்டோவுல இருக்க ரோவன் அட்கின்சனாத்தான் இருக்கனும்.

அப்புடி அவசரத்துக்கு யூஸ் பண்ணிக்கிறதுக்காக கண்டுபுடிக்கப்பட்ட அந்த செல்ஃபிய இன்னிக்கு ரொம்ப அத்யாவசியாமான ஒண்ணா நினைச்சிட்டு சுத்திட்டு இருக்காய்ங்க நம்மாளுக. பர்த்டே பார்ட்டியோ, கெட்டூகெதரோ, ஆஃபீஸ் பார்ட்டியோ அட ஏன் கல்யாணத்துல கூட செல்ஃபி எடுத்தாத்தான் அந்த ஃபங்ஷனுக்கே value ங்குற மாதிரி கொண்டு வந்துட்டானுங்க.

கல்யாணத்துல அம்பதாயிரம் ரூவா செலவு பண்ணி இவியிங்க வீட்டுல ஃபோட்டோகிராபர் அரேஞ்ச் பண்ணிருப்பாய்ங்க. கொடுமை என்னன்னா மாப்ளையும் பொண்ணும் மண மேடையில செல்ஃபி எடுத்துக்கிட்டு இருப்பாய்ங்க. ஏண்டா டேய்…. உங்களுக்கெல்லாம் nokia 1100 வ கையிலகுடுத்து கல்யாணம் பண்ணி வச்சிருக்கனும்ண்டா. சரி செல்ஃபிங்குறது one of the camera angle அதுனால அடிக்கடி எடுக்குறீங்கன்னே வச்சிக்குவோம். அதுல மொகரை நல்லாவாடா இருக்கு?

நா முக்கியமா இந்த பதிவ எழுத ஆரம்பிச்சதே இந்த செல்ஃபிக்காரய்ங்க தொல்ல தாங்க முடியாமத்தான். எது எது கூட செல்ஃபி எடுக்குறது, எங்கெங்க செல்ஃபி எடுக்குறதுங்குற விவஸ்தையே கொஞ்சம் கூட இல்லாம, ஸ்மார்ட் ஃபோன் கையில கிடைச்ச உடனே கண்ட இடத்துல எடுத்து தள்ளுறாய்ங்க. ”சண்டை போட்டு சாவுற நாயிங்க வல்ல நாடு மலைப்பக்கம் போய் அடிச்சிக்கிட்டு சாவுங்கடா” ங்குற மாதிரி எடுக்குறது எடுக்குறீங்க அடுத்தவனுக்கு தொல்லை குடுக்காம எடுங்களேண்டா.

பொணத்துகூட செல்ஃபி எடுத்து “எங்க பெரியப்பா இன்னிக்கு செத்துப் பொய்ட்டாரு” ன்னு ஒருத்தன் கொஞ்ச நாள் முன்னால போட்ட செல்ஃபிய பாத்துருப்பீங்க. அவன கூட ஒரு வகையில சேத்துக்கலாம். ஆனா, தியேட்டருக்குள்ள படம் ஓடிக்கிட்டு இருக்கும்போது  பளிச் பளிச்ன்னு வெளிச்சம் அடிச்சிக்கிட்டே இருக்கு. என்னடான்னு பாத்தா இந்த சனியன் புடிச்சவய்ங்க. அதுவும் நாலு பேர் சேந்து வந்துட்டாய்ங்கன்னா (ஒரு பொண்ணும் அந்த குரூப்புல) அய்யயோ..  அத ஃபோட்டோ எடுத்து fb la ‘me watching avengers at satyam with Preeti Iyer and 3 others" ன்னு போட்டாத்தான் அவிங்களுக்கு நிம்மதி. அதுவும் இப்ப தியேட்டர்ல சினிமா பாக்குறவய்ங்கல்லாம், படத்த பாக்குறாய்ங்களோ இல்லையோ, அவர் படம் பாக்குறது எதோ சரித்திர நிகழ்வு மாதிரி அத FB ல போட்டுட்டு தான் மறு வேலை.

நம்ம என்ன பண்ணாலும் யாரும் எதுவும் கண்டுக்கபோறதில்லை. ஏண்டா இதுக்கு முன்னால நீங்கல்லாம் சினிமா பாத்ததே இல்லையா? இல்லை இதுக்கு முன்னால் நீங்க சினிமா பாத்தப்பல்லாம் எல்லாரையும் கூப்டு நா சினிமா பாக்குறேன் சினிமா பாக்குறேன்னு டமாரம் அடிச்சி சொல்லிக்கிட்டு இருந்தீங்களா? அந்த தியேட்டருக்குள்ள உன்ன நீயே செல்ஃபி எடுத்துக்கிட்டு அத யார்கிட்ட கொண்டு போய் காமிக்க போற? சத்தியமா உன்னத் தவற அத யாரும் திரும்பி கூட பாக்கப்போறதில்லை. அப்புடி எடுத்துத் தொலையனும்னா அத தியேட்டருக்கு வெளில எடுத்துட்டு, உள்ள வந்து பொத்துனாப்புல படத்தப் பாருங்க. நீங்க செல்ஃபி எடுக்குறேன்னு அடுத்தவனுக்கு ஏண்டா தொல்லை குடுக்குறீங்க.



போன வாரம் ஒரு நாள் ராத்திரி வட பழனி முருகன் கோயிலுக்கு போயிருந்தேன். அன்னிக்கு, யாரோ தங்கத்தேர் இழுக்க வேண்டிக்கிட்டு, தேர் இழுக்க ரெடியா இருக்காங்க. முருகன் இருக்க அந்தத்தேர் முழு அலங்காரத்தோட ஸ்க்ரீன் போட்டு ரெடியா இருக்கு. ஸ்க்ரீன் எப்போ விலகும்னு ஒரு 50 பேர் முருகன தரிசிக்க வெய்ட்டிங். திடீர்னு அந்த ஸ்கீரீன் ஓப்பன் ஆனது தான் தாமதம். அந்த கூட்டத்துலருந்து ஒரு பத்து பேர்தான் முருகன கையெடுத்து கும்புடுறாங்க. மிச்ச ஆளுங்களெல்லாம் செங்கல் சைஸ் மொபைல வச்சி முருகன வீடியோ எடுத்துக்க்கிட்டு இருக்காய்ங்க.. அதுலயும் ஒருத்தன் பின்பக்கமா திரும்பி நின்னு முருகன் கூடவே செல்ஃபி எடுத்துக்கிட்டு இருக்கான்.

அடப் பதர்களா, எப்பவாவது திறக்குறாங்கங்குறதுக்காகத் தான் அந்த தேர்ல இருக்க முருகனுக்கே ஒரு மதிப்பு. நமக்கும் தரிசனம் கிடைச்ச ஒரு சந்தோஷம். ஆன அத இவய்ங்க ஃபோட்டோ எடுத்துடுறாய்ங்களாம். இது கூட பரவால்ல. லிங்கா படத்தோட முதல் காட்சி பாக்குறாவன், “super star rajni” ன்னு போடுறத ஃபோட்டோ எடுத்து அனுப்பிகிட்டு இருக்கான். ஃபோட்டோ எடுக்க வேண்டிய நேரமாடா அது? அதயே நீ ஃபோட்டோ எடுத்துக்கிட்டு உக்காந்துருக்கியன்னா, நீயெல்லாம் எதுக்கு ஃபர்ஸ்ட் ஷோ போற?

சில தினித்தன்மையான விஷயங்களுக்கு உண்டான மதிப்பை நாம குடுத்துத் தான் ஆகனும். அப்போதான் கடைசி வரைக்கும் அது நமக்கு முக்கியமான விஷயமா தெரியும். சின்ன சின்ன சந்தோஷம் , சர்ப்ரைஸ்ல தான் நம்ம வாழ்க்கையே ஓடிக்கிட்டு இருக்கு. அந்த நேரத்துலயெல்லாம் மொபைல தூக்கி வச்சிக்கிட்டு செல்ஃபி எடுக்குறேன்னு ஆடு கக்கா போன  மாதிரி வத வதன்னு எடுத்துட்டு இருந்தோம்னா, அந்த முக்கியமான தருணத்தையும் இழந்துடுவோம்  ஃபோட்டோங்குற ஒரு விஷயத்து மேல இருக்க சந்தோஷத்தையும், ஆர்வதையும் கூட இழந்துடுவோம்.


Monday, June 1, 2015

மாசு (எ) மாசிலாமணி – SURYA’S COME BACK!!!


Share/Bookmark
விஜய் படம் ஒண்ணு ரிலீஸ் ஆகும்போது அத அஜித் ரசிகர்கள் ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுறதும், அஜித் படம் ரிலீஸ் ஆகும்போது அத விஜய் ரசிகர்கள் கிழி கிழின்னு கிழிச்சி தொங்க விடுறதும் தொன்றுதொட்டு நடந்து வர்ற விஷயம் தான். ஆனா முன்னடியெல்லாம் படம் நல்லா இல்லைன்னா மட்டும் கிண்டல் பண்ணவய்ங்க. ஆனா இப்போ ஒரு 30 செகண்டுக்கு டீசர் வந்துச்சின்னாலே அத ஃப்ரேம் பை ஃப்ரேம் என்னென்ன வடிவேலு, கவுண்டமணி வசங்களை வச்சி ஓட்ட முடியுமோ அவ்வளவு ஓட்டுறாய்ங்க. இது ரொம்ப சின்னப்புள்ளை தனமாத்தான் தெரியிது. அப்படி சும்மா கிண்டல் பண்ணனும்னு பண்றவங்களுக்கு சில நல்ல படங்களை ரசிக்கிற மனநிலையே போயிடும். அதுமட்டும் இல்லாம ஒரு நல்ல படத்துக்கு உண்டான அங்கீராம், சில படங்களுக்கு முழுமையா கிடைக்காமலேயே போயிடும். இது அவ்வளவு சிறப்பான ஒரு சைன் இல்ல. சரி அது எப்படியோ போவட்டும்.   

ஆன்னா ஊன்னா அஜித் விஜய்ன்னு அடிச்சிக்கிறானுக. ஆனா  சூர்யா படம் ரிலீஸ் ஆகும்போது அவிங்க ரெண்டு பேரும் ஒண்ணுகூடி அவன மரண ஓட்டு ஓட்ட ஆரம்பிச்சிடுறாய்ங்க. உலக வரலாற்றுலயே அதிக அளவு  கலாய்க்கப்பட்ட படம்னா அது  அது நம்ம அஞ்சான் தான். சூர்யாவும், லிங்குவும் கிட்டத்தட்ட வாழ்க்கையோட ரொம்ப மோசமான நாட்களை போனவருஷம் பாத்துருப்பாங்க. அதுலருந்து மீண்டு, சூர்யா ஒரு சூப்பர் படத்தோட திரும்பி வந்துருக்காருன்னு தான் சொல்லனும். வாங்க மாசு என்கிற மாசிலாமணிய லைட்டா ஓட்டுவோம். அட அந்த ”ஓட்டுவோம்” இல்லீங்க. படம் எப்டின்னு கொஞ்சம் ஓட்டிப்பாப்போம். தொடர்ந்து படிச்சா, படம் பாக்குறவங்களுக்கு கொஞ்சம் சுவாரஸ்யம் குறைய வாய்ப்பு இருக்கதால, படம் பாக்குற ஐடியாவுல இருக்கவங்க அப்டியே ஸ்கிப் பண்ணி கடைசி பாராவுக்கு செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மனோஜ் நைட் ஷாமலனோட Sixth Sense ங்குற படம் பெரும்பாலானவங்க பாத்துருப்பீங்க.  அந்தப் படத்துல ஒரு சின்னப் பையன் இருப்பான். ரொம்ப பயந்த சுபாவம். எதப்பாத்தாலும் பயந்து ஓடுவான். யார் கூடவும் அதிகமா பேச மாட்டான். அவன்கூட ஸ்கூல்ல படிக்கிற பசங்க அவன பைத்தியம்னு தான் சொல்லுவாங்க. அந்தப் பையன் அவனுக்கு என்ன ப்ரச்சனைங்குறத அவங்க அம்மாகிட்ட கூட சொல்லிருக்க மாட்டான். அப்போ அவனுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்குற டாக்டரா ப்ரூஸ் வில்ஸ் வருவாரு.

அந்தப் பையன் கூட கொஞ்சம் கொஞ்சமா பழகி அவனோட கொஞ்சம் க்ளோஸாகி அவனுக்கு என்னப் ப்ரச்சனைன்னு கேப்பாரு. அப்பதான் அவன் சொல்லுவான் “எனக்கு செத்துப் போனவங்கல்லாம் தெரியிறாங்க” ன்னு. ஸாக் ஆயிப் போற ப்ரூஸ்வில்ஸ் “சரி அதுங்க உன் கண்ணுக்கு தெரியிதுன்னா அதுங்க உன்கிட்ட எதோ எதிர் பாக்குதுன்னு அர்த்தம். அடுத்த தடவ பயப்படாம பேசு” ம்பாரு. அதுக்கப்புறம் பேயப்பாத்தா தைரியமா பேசிட்டு இருப்பான். ஒவ்வொரு பேயும் ஒரு ஒரு உதவி கேட்டுத்தான் அந்தப் பையன்கிட்ட வரும். எல்லாத்தையும் செஞ்ச உடனே எல்லா பேய்களும் அப்புறம் இவனுக்கு ஃப்ரண்ட்ஸ் ஆயிடும்.

கடைசில அம்மாகிட்ட சொல்லலாம்னு முடிவு பண்ணி, அம்மாவும் அந்தப் பையனும் கார்ல போயிட்டு இருப்பாங்க. அரை கிலோ மீட்டர் நீள ட்ராஃபிக் ஜாம்ல கடைசில நிக்கும் இவங்க கார். என்னன்னு பாத்தா, முன்னால ஒரு கார் ஆக்ஸிடெண்ட் ஆயிருக்கும். பையன் அப்பதான் அம்மகிட்ட சொல்லுவான். அம்மா நம்ம முடியாம அழுகும். அப்போ அந்தப் பையன், “அம்மா முன்னால கார் ஆக்ஸிடெண்ட் ஆச்சுல்ல.. அதுல இருந்த பொண்ணு செத்துருச்சி” ம்பான். உடனே அம்மா “அது எப்டி உனக்கு தெரியும்”ன்னு கேக்க, “அந்தப் பொண்ணு இப்ப நம்ம காருக்கு வெளிலதான் நின்னுகிட்டு இருக்கு” ன்ன உடனே அம்மாவும் மெர்சலாயிருவாங்க. அப்புறம் இன்னொரு ட்விஸ்டயும் வச்சி படத்த முடிப்பாங்க. ஷாமலனுக்கு பெரிய பேர் வாங்கிக் குடுத்தது அந்தப்படம்.
அய்யய்யோ.. 

இது மாசு விமர்சனம்ல. மறந்துட்டு சிக்ஸ்த் சென்ஸ ரொம்ப நேரம் ஓட்டிட்டேனே… சரி விடுங்க.. ஒண்ணும் இல்லை. மேல சொன்ன Sixth Sense கதைய, நம்மூர் மண் வாசனை  கொழம்பு வாசனைக்கு ஏத்தா மாதிரி மசாலாவ அங்க இங்க சேத்து, ரெண்டு மூணு வில்லன்கள அள்ளி உள்ளபோட்டு ரெடி பண்ணா அது தான் மாசு என்கிற மாசிலாமணி. என்னது சூர்யா என்ன ரோல் பண்ணிருக்காரா? அட Sixth Sense ல உள்ள அந்தக் கொழந்தையே சூர்யா தான்பா.

முதல் கால்மணி நேரம் பாக்கும் போது பாட்டுன்னா பாட்டேவா ஃபைட்டு ஃபைட்டு… ஃபைட்டுன்னா ஃபைட்டேவா பாட்டு பாட்டுன்னு அஞ்சானோட அடுத்த பார்ட்டு போலன்னு தான் தோணுச்சி. ஆனா கொஞ்ச நேரத்துலயே படம் வேற ட்ராக்ல மாறி, செம ஜாலியா போக ஆரம்பிக்கிது. கடைசி வரைக்குமே அத அப்டியே மெய்ண்டெய்ண் பன்னி முடிச்சிருக்காங்க.
இந்தப் படத்துல சூர்யாவுக்கு ஜோடியா ப்ரேம்ஜி நடிச்சிருக்காரு. என்ன ஹோமோ பத்தின கதையோன்னு வெறியாயிடாதீங்க. . படம் முழுக்க சூர்யா இருக்க எல்லா சீன்லயும் இவனும் இருக்கான். அதான் அப்டிச் சொன்னேன். வழக்கமா கடுப்பேத்துற மாதிரி காமெடி பண்ற ப்ரேம்ஜி இந்தப் படத்துல அப்படி எதுவும் பண்ணாம இருக்கதே படத்துக்கு பெரிய ப்ளஸ். அது மட்டும் இல்லாம இதுவரைக்கும் ப்ரேம்ஜ பண்ணதுலயே இது தான் பெஸ்ட் ரோல்.

சூர்யா ஆளு செமையா இருக்காரு. அஞ்சான்ல இருந்த முள்ளம்பண்றித் தலையெல்லாம் நல்லா படியவச்சி, பாக்குறதுக்கு இதுலதான் மனுசன் மாதிரி இருக்காரு. அதுமட்டும் இல்லாம ரெண்டாது கெட்டப்புல ஆளு செம்ம ஸ்மார்ட்டா இருக்காரு. நடிப்ப பத்தியெல்லாம் சொல்லவே தேவையில்லை.  நயன்தாரா… இருக்காங்க. அவ்வளவு தான். ஹீரோயின் கணக்குக்காக. ப்ரனிதா செம்ம அழகு.

வெங்கிக்கு ஒவ்வொரு படத்துலயும் எதாவது பழைய ஹீரோக்கள கொண்டு வந்து இறக்கிவிட்டு டம்மியாக்குறதே வேலையாப்போச்சி. ஜெயராம், அர்ஜுன் வரிசையில இப்ப பார்த்திபன். ரொம்பப் பெரிய ரோலெல்லம் இல்லை. ஆனா அங்கங்க அவர் ஸ்டைல் வசனங்கள் சிலதுல அசத்துறாரு. ஒரு சீன்ல ஒரு ரவுடிய கட்டி வச்சி அடிக்கும்போது சொல்வாரு “ஏண்டா செந்திலே (இன்னொரு ரவுடி) என்னை நம்பி வந்து பணம் குடுத்துட்டான். நீ என்னா அவனவிட பெரிய ஆளா? கவுண்டமணியா நீ?” ன்னு அசால்ட்டா சொல்லுவாரு. ரொம்ப நேரம் நினைச்சி நினைச்சி சிரிச்சேன். அதவிட கடைசில சண்டை நடக்கும்போது கருணாஸ் இவரப்பாத்து “அய்யோ பாவம். அவரு ஹீரோங்குறத அவரே மறந்துட்டாரு”ன்னு நக்கலடிக்கிறது வெங்கி பஞ்ச். ஜெய் ஒரு சீன் வந்தாலும் சூப்பர். கருணாஸும் இருக்காரு. அவ்வளவு தான். ஸ்ரீமன் வழக்கம்போல கலக்கல்.

வெங்கட் ப்ரபு சென்னை 28 ல எதோ லக்குல க்ளிக் ஆயிரிச்சின்னு நினைச்சோம். அடுத்து சரோஜால அசத்துனாரு. கோவால லைட்டா மட்டையானாலும், அஜித்தோட பெஸ்டான மங்காத்தாவ குடுத்தாரு. கார்த்திக்கு ஒரு பிரியாணிய கிண்டிட்டு இப்போ சூர்யாவுக்கு கை குடுத்துருக்காரு. நிறைய இடத்துல சின்ன சின்ன நக்கல கமெண்ட்ஸ்ல வெங்கி தனியா தெறியிறாரு. ரொம்ப இக்கட்டான சூழ்நிலையில சூர்யா மாட்டிட்டு கஷ்டப்படும்போது  ப்ரேம்ஜி  exhaust fan க்கு உள்ளயும் வெளியயும் பூந்து பூந்து விளையாடி “மாஸூ மாஸூ நீயும் வாயேன்” ங்குறதெல்லாம் அசல் வெங்கி பார்முலா காமெடி. யுவன் பாட்டெல்லாம் செமயா போட்டுருக்காரு. அதுவும் பூச்சு பூச்சு பூ பூச்சாண்டி பாட்டுதான் இந்த ஆல்பத்துலயே என் ஃபேவரிட். BGM பெருசா சொல்ற மாதிரி ஒண்ணும் இல்லை. 

வில்லன்கள் குரூப்ப மட்டும் வழக்கமான தமிழ்சினிமா மூணு வில்லன் கான்செப்ட்லருந்து கொஞ்சம் வேற மாதிரி வச்சிருக்கலாம். அதுவும் ஒரு போலீஸ் ஒரு அரசியல்வாதி, ஒரு வக்கீல்னு ஓவ்வொரு ஃபீல்டுல வில்லன வக்கிற காம்பினேஷன எப்ப மாத்தப்போறாய்ங்கன்னு தெரியல. சமுத்திரக்கனி இந்த மாதிரி ரஃப் வில்லன் ரோலுக்கு கொஞ்சம் கூட செட் ஆகல. சுப்ரமணியபுரம் மாதிரி சைலண்ட் வில்லன்ரோல் தான் நம்மாளுக்கு செட் ஆகும்.  வரிசையா ஜெயப்ப்ரகாஷ எல்லா படங்கள்லயும் டம்மி ஆக்கிக்க்ட்டே வர்றாய்ங்க..


படம் பாத்த பெரும்பாலான நண்பர்கள் படம் ரொம்ப ஆவரேஜ்ன்னும், ரொம்ப மொக்கைன்னும் தான் சொல்றாங்க. ஆனா என்னப் பொறுத்த அளவு படம் நல்லாவே இருக்கு. கொஞ்சம் கூட போரடிக்கல, ஜாலியாவும் போகுது. நிச்சயம் ஒரு நல்ல மசாலா படம் பாத்த ஃபீல் குடுக்கும். 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...