Friday, May 23, 2014

கோச்சடையான் - பேச்சே கெடையாது.. வீச்சு தான்!!!


Share/Bookmark
"இந்தப்படமும் சுல்தான் தி வாரியர் மாதிரி தான்.. ஆரம்பிச்சி கொஞ்ச நாள்ல காணாம போயிடும்"  "கேன்ஸூக்கு போகுதுன்னு சொன்னாங்க பேச்சையே காணும்... " "படம் நல்லா இல்லை போல அதான் ரிலீஸ் பண்ண மாட்டேங்குறாங்க" "படத்துல ரஜினியே நடிக்கலையாமே" "கோச்சடையான் படம் ட்ராப் ஆயிடுச்சாமே..."  "டீசர் அவ்வளவு சிறப்பா இல்லை. இந்தப்படம்லாம் நம்மூருக்கு செட் ஆவாதுப்பா" "படம் விநியோகஸ்தர்களுக்கு பிடிக்கலையாம் யாரும் வாங்க மாட்டேங்குறாங்களாம்" இப்படி கண்ட கண்ட மாதிரி பேசிய வாயிங்களுக்கு மொதல்ல ஒரு  பெரிய திண்டுக்கல் பூட்டு போட்ட சவுந்தர்யாவுக்கு நன்றிகள் பற்பல. மோஷன் கேப்சரிங்ல எடுத்த இந்தப் படம் முதல்ல ரிலீஸ் ஆனாலே அது மிகப்பெரிய வெற்றி. வேற எதுவும் தேவையில்லைன்னு நா ஏற்கனவே ஒரு பதிவுல சொல்லியிருந்தேன். ஆனா எதிர் பார்த்ததை விட பலமடங்கு சிறப்பான ஒரு படத்தை கொடுத்திருக்காங்க.

முகத்தில ஜார்ஜ் புஷ் மாதிரியான மாஸ்க (mask) வச்சி மேக்கப் போட்டா யார வேணாலும் ஜார்ஜ் புஷ்மாதிரி காமிக்கலாம். ஆனா அதையெல்லாம் அடுத்த கட்ட முயற்றி, ஒலக முயற்சி ன்னு பாராட்டுனவியிங்க  உண்மையான அடுத்த கட்ட சினிமாவுக்கு தலைவர் செல்லும் போது பாராட்டாம குறை சொல்ல எப்படி மனசு வருதுன்னு தெரியல.  பல ஆங்கிலப்படங்களில் போர்க்காட்சிகளையும், அரசர் காலத்து பிரம்மாண்டங்களையும் பாத்து வாயைப்பிளந்துருக்கேன். இந்த மாதிரி நம்மூர்லயெல்லாம் எப்போ வரப்போகுதுண்ணு கூட நினைச்சிருக்கேன். அதுக்கெல்லாத்துக்கும் சேத்து தலைவர் கொடுத்திருக்கும் பதில தான் இந்த கோச்சடையான்.

மொதல்ல கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சி. சில தெருநாயிங்க குரைக்குறதுக்கு ஏத்த மாதிரி எதுவும் ஆயிடக்கூடாதுன்னு கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சி. இதுக்கு முன்னால சந்திரமுகி ரிலீஸ் அப்போ இதே மாதிரி ஒரு சின்ன பயம். தலைவர் கொஞ்சம் சருக்கினார்ங்குற ஒரே காரணத்துக்காக, அவர் பக்கத்துல நிக்கக்கூட பயப்படுற பயலுங்கல்லாம்  அவர் படம் கூட போட்டி  போட்டு ரிலீஸ் பண்ணாய்ங்க. அடிச்ச அடியில அதுக்கப்புறம் அந்த நினைப்பு கூட அவங்களுக்கு வந்துருக்காது. சந்திரமுகி 200 வது நாள் விழாவுல எஸ்.ஏ.சந்திரசேகர் "நானும் இளைய  தளபதி விஜய்யும் சச்சின் திரைப்படம் சந்திரமுகியுடன் ரிலீஸ் ஆகிவிடக்கூடாது ன்னு எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனா முடியல" ன்னு வந்து பம்புனது இன்னும்
கண்ணுமுன்னாலயே நிக்கிது.

ஆனா ரஜினி எதிர்ப்பாளர்களா தங்களைச் சொல்லிக்கொல்லும் சில பேரு அவங்களையே அறியாம தலைவர எந்த உயரத்துல வச்சிருக்காங்க தெரியுமா? முதல்ல கடவுள் எதிர்ப்பு செய்வதன் மூலம் தங்களை பகுத்தறிவாளர்களா காட்டிக்கொண்டவங்க இப்போ ரஜினி எதிர்ப்பு பண்ணாதான் அவர்கள் பகுத்தறிவுவாதிகளா நினைக்கிறாங்க.  அப்போ அவர்களையும் அறியாம தலைவர கடவுள் அந்தஸ்துக்கு உயர்த்திருக்காய்ங்க. அப்புறம்  ஊருக்கு என்ன பண்ணாரு என்ன பண்ணாருன்னு ஒரு நாட்டோட முதல்வர்கிட்ட கேக்க வேண்டியதை தலைவரிடமும் கேட்டு தலைவரை பதவியிலில்லா மாபெரும் தலைவரா அவங்களே மதிக்கிறாங்க. "நானும் ரஜினி ரசிகந்தாங்க,, ஆனா" ங்குற வாக்கியத்த உயயோகிக்காம யாராலும் தலைவர விமர்சனம் கூடப் பண்ண முடியாது. அதான் தலைவர்.


படத்தின் கதையைப் பற்றியெல்லாம் இப்ப பேசத்தேவையில்லைன்னு நெனைக்கிறேன். யாரும் பாக்கமாட்டாங்கன்னு தெரிஞ்ச படத்துக்குன்னா இதாம்பா கதை, இந்த சீன் இப்டி இருக்கு அந்த சீன் அப்டி இருக்குன்னு சொல்லலாம். ஆனா எல்லாரும் பாக்கப்போற ஒரு படத்துக்கு எதுக்கு கதையையோ இல்லை காட்சிகளையோ சொல்லனும். அதுக்கும் மேல தலைவர் படத்த விமர்சனம் பண்ற அளவு இன்னும் நம்மல்லாம் வளரல. தெளிவுரையும், முடிவுரையும் தெளிந்த நீரோடையாக தெரிந்தபிறகு முன்னுரை எதற்கு?

சில ஹைலைட்டுகள மட்டும் சொல்லிக்கிறேன்.

1. படத்தை நீங்க 2Dல தான் பாத்தீங்கன்னா கண்டிப்பா ஒரு முறை 3D யில பாருங்க. எஃபெக்ட் தெறிக்குது.

2. "SUPER STAR" டைட்டில் கார்ட் அனிமேஷனும், அதற்கான இசையும், தலைவரின் intro scene ம் மாஸ்ஸோ மாஸ்ஸூ..

3. படம் முடியும்போது உங்களுக்கு ஏண்டா முடிஞ்சிது. இன்னும் கொஞ்சம் நேரம் ஓடுனா நல்லாருக்குமேன்னு தோணும். ஏன்னா க்ளைமாக்ஸ்ல வச்சிருக்க விஷயம் அப்டி.

4.தலைவரோட சின்ன சின்ன expression களக்கூட அப்படியே கொண்டுவந்துருக்கது செம. குறிப்பா தலைவர் வசனம் பேசுற காட்சிகள்ல live action பாக்குற ஃபீல் இருக்கு.

5. கடைசி அரைமணி நேரம் சூப்பர். "நாசரின் கேள்விகளுக்கு தலைவரின் அசத்தலான பஞ்ச் பதில்கள்களுக்கும்" "பார்த்தாயா  எங்கள் நாட்டின் ரத கஜ துரக பதாதிகளை" வசனத்தின் போதும் தியேட்டரே விசில் சத்தத்தில் மூழ்கியது.

6. அனிமேஷன்ல வந்தாக்கூட நம்மள கண்கலங்க வைக்க தலைவரால் மட்டுமே முடியும். முத்து படத்தில் "விடுகதையா" பாடலுக்கு நமக்கு வந்த அதே சோகத்தை இந்த கோச்சடையானிலும் ஒரு காட்சி தருகிறது அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும். 

7. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு BGM eh நல்லா போடத்தெரியாதுன்னு சில அரைமெண்டலுங்க சொல்லிகிட்டு திரியிதுங்க. அதுங்க இந்த படத்த பாத்தா ஆயிசுக்கும் அந்த மாதிரி ஒரு வார்த்தைய சொல்ல மாட்டாங்க. BGM கொடூரம்... தலைவர் பட மியூசிக்குக்கு இனி வேறு யாரையுமே நினைச்சி கூட பாக்க முடியாது.

8. படத்துல பாத்து வியந்த இன்னொரு விஷயம் நாகேஷ். உருவத்த கொண்டுவந்தது பெரிய விஷயம்னாலும் அதே வாய்ஸ்ல அதே மாடுலேஷன்ல பேசவும் வச்சிருக்கதுக்து உண்மையிலயே கிரேட்.

9. மோஷன் கேப்சரிங்கில் டூயட் பாடிய முதல் ஆளும், பஞ்ச் டயலாக் பேசிய முதல் ஆளும் நம் தலைவர் தான். எங்கே போகுதோ வானம் பாட்டும், ருத்ர தாண்டவமும் செம.

முன்னடி ஒரு தடவ தலைவர் ஒரு நிகழ்ச்சியில் சொன்னத வச்சிப் பாக்கும் போது, கோச்சடையானோட கிளைமாக்ஸ் தான் "ரானா" வில் இண்டர்வல் காட்சியாக இருந்திருக்கனும். ச்ச.. மிஸ் ஆயிடுச்சி. கே.எஸ்.ரவிக்குமார் வழக்கம் போல தாறு மாறு. தலைவருக்கு ஸ்கிரீன் ப்ளே எழுதுறதுல SPM க்கு அடுத்து KSR தான். 

படத்தில் கொஞ்சம் நெருடலாக இருந்த ஒரே ஒரு விஷயம் தீபீகாவோட மூகம். சில காட்சிகளில் "ப்ப்ப்பா" ரியாக்சன் கொடுக்க வச்சிருச்சி. சவுந்தர்யா மேடம்இந்த படத்துக்கு தலைவர் 15 நாள் தான் ஷூட்டிங்ல இருந்ததா கேள்விப்பட்டோம்.  இன்னொரு பதினைஞ்சி நாள் சேத்து எடுத்துக்குங்க. அடுத்த பார்ட்ட எடுக்க ஆரம்பிங்க. ஏன்னா வேற யாரையும்  வச்சி உங்களால இனிமே மோஷன் கேப்சரிங்ல  படம்லாம் எடுக்க முடியாது.  அப்படியே நீங்க எடுத்தாலும், வேற யாரையும் எங்களால பாக்க முடியாது. 


மொத்தத்தில் கோச்சடையான்... காலம் கடந்தும் பேச்சுடையான்.


தொடர்புடைய பதிவு

நானும் ரஜினி ரசிகன் தான்.. ஆனா!!!


Monday, May 19, 2014

GODZILLA - ஹாலிவுட் ஜில்லா!!!


Share/Bookmark
யாரு விட்ட சாபம்னு தெரியல. தமிழ்ப்படம் தியேட்டர்ல பாத்து 4 மாசம் ஆச்சு. கடைசியா நா தியேட்டர்ல பாத்த படம் நம்ம பழைய ச்சி இளைய தளபதியோட ஜில்லா. அன்னிலருந்து இப்போ வரைக்கும் நானும் தமிழ்ப் படம் பாக்கனும்னு முடிவு பண்ணானும் எதாவது ஒன்னு வந்து ப்ளான கெடுத்துவிட்டுருது. உடனே பசும்பொன் வடிவேலு மாதிரி "எவனோ நாம படம் பாக்கக்கூடாதுன்னு செய்வினை வச்சிட்டான்... செய்வினைய  இன்னிக்கு எடுக்குறேன்"ன்னுட்டு கூட ஒருத்தன அழைச்சிட்டு எப்போ போனாலும் டிக்கெட் கெடைக்கிற ஒரே மாலான OMR AGS க்கு வண்டிய விட்டோம். கவுண்டர்ல போய் யாமிருக்க பயமே டிக்கெட் கேட்டா ஒரே ஒரு டிக்கெட் தான் இருக்குதுன்னுட்டாய்ங்க அய்யய்யோ சிவகாமி ஜோசியம் கொஞ்சம் கொஞ்சமா பலிக்க ஆரம்பிச்சிருச்சே.. பார்க்கிங்குக்கு வேற முப்பது ரூவா குடுத்தாச்சி. வந்ததுக்கு கழுதை எதயாச்சும் பாத்துட்டு போவோம்னு  உள்ள போனதுதான் இந்த காட்ஸில்லா. பாத்தப்புறம் தான் தெரிஞ்சிது பேசாம 30 ரூவா போனாலும் பரவால்லன்னு அப்பவே கெளம்பி வீட்டுக்கு வந்துருக்கலாம்னு.

நம்மூரு பழைய ராஜ்கிரன் படத்த லைட்டா ரீமாடல் பண்ணி, நம்ம கும்கி கதையையும் கொஞ்சம் மிக்ஸ் பண்ணி  கொஞ்சம் டெக்னாலஜிக்கள அள்ளிப்போட்டு எடுத்து ரிலீஸ் பண்ணிருக்காய்ங்க. ஆரம்பத்துல வந்த டைனோசர் படங்களான ஜூராசிக் பார்க், த லாஸ்ட் வோல்ட் மற்றும் காட்ஸில்லா படங்களை கொஞ்சம் கூட நெருங்க முடியாத அளவு இருக்கு இந்த படம். அந்தப் படங்கள் ஏற்படுத்துன impact la பத்துல ஒரு பங்குகூட இந்த மார்டன் காட்ஸில்லா ஏற்படுத்தலங்குறது தான் உண்மை.

படம் ஆரம்பிக்கும் போது நல்லாதான் ஆரம்பிக்கிறாய்ங்க. பழைய காலத்துல நடந்த ஆராய்ச்சி அது இதுன்னு பழைய நியூஸ் பேப்பர் நியூஸ் ரீலெல்லாம் போட்டு காமிச்சி கிட்டத்தட்ட  கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்கா தான் ஆரம்பிக்கிறாய்ங்க. ஆனா போகப் போக செண்டிமெண்டப் போடுறேங்குற பேர்ல நம்மள கொன்னு  எடுத்துடுறாய்ங்க. எப்படா காட்ஸில்லாவ காட்டுவாய்ங்கன்னு காத்திருக்க நமக்கு, அத காட்டும் போது ஒரு பெரிய அதிர்ச்சி ஒண்ணு காத்துருக்கு. டேய் என்னடா இது? கிங்காங் படத்துல வந்த குரங்குக்கு  முதுகுல கட்டி வந்த மாதிரி இவ்வளவு கேவலமா இருக்கு? இதப்பாத்தா சிரிப்பு தாண்டா வருது.

அதுவும் இல்லாம மியூட்டோன்னு இன்னும் ஒரு விலங்கு வருது. நம்மூர்ல மழைகாலத்துல வர்ற வெட்டுக்கிளிய பெருசு பண்ணா எப்புடி இருக்குமோ அதப்பாக்க அப்டியே இருக்கு. அதுவும் ஒரு செம காமெடி விலங்கு. கண்ட குப்பையெல்லாம் கெளரி கடிச்சி திங்கிது. ரேடியேஷன் எங்கருந்தெல்லாம் வருதோ அதயெல்லாம்  அப்புடியே உள்வாங்கிக்குமாம். நம்ம கூடங்குளத்துக்கு இது மாதிரி ரெண்டு மியூட்டோவ வாங்கிட்டு வந்து கட்டிப்போட்டா பிரச்சனை தீந்துரும்னு நெனைக்கிறேன். வழக்கமா இந்த மாதிரி படங்கள்ல அந்த மிருகங்கள் ஊர அழிக்க, மனுஷங்க அத எதிர்த்து போராடுவாங்க. இந்த தடவ வில்லன்களான மியூட்டோக்கள ஹீரோ காட்ஸில்லா எப்படி ஒழிக்கிறார்ங்குறது தான் கதை.

இதுல இன்னொரு கொடுமை இத 3D ல வேற எடுத்துருக்காய்ங்க. ஹெலிகாப்டர மூஞ்சிக்கு முன்னாடி பறக்க விடுறாய்ங்க. தலைக்கு மேல பறக்க விடுறாய்ங்க. சுத்தி சுத்தி கடைசி வரைக்கும் ஹெலிகாப்டர் தான் பறந்துகிட்டு இருந்துச்சி. அதுலயெல்லாம் 3D நல்லா பண்ணிருந்தவிங்க காட்ஸில்லாவ காமிக்கும்  போது 3D எஃபெக்ட் அவ்வளவு சிறப்பா இல்லை. ஜூராசிக் பார்க் படத்துல கடைசில ஒரு டைனோசர் குட்டி ஒருத்தன் கால வந்து கடிக்க வரும். 2D ல பாக்கும் போதே அது நம்ம கால கடிக்க வர்ற மாதிரி இருக்கும். ஆனா இத 3D ல எடுத்துருக்காய்ங்க. ஒண்ணும் வேலைக்காகல.

ஆரம்பத்துலருந்து கம்யூட்டர்ல சிக்னல் வருது சிக்னல் வருதுன்னு பாத்துகிட்டு இருப்பானுங்க. "சிக்னல்  வருது" "அது respond பண்ணுது" "அது எதோ சொல்ல வருது" ன்னு என்னென்னமோ சொல்லிட்டு கடைசில தான் கண்டுபுடிக்கிறாய்ங்க ஒரு MUTO இன்னொரு MUTO வுக்கு "அந்த" மாதிரி விஷயத்துக்காக சிக்னல் குடுத்துருக்குன்னு. "வாய்க்குள் என்னய்யா வேடிக்கை" ன்னு வடிவேலு கேக்குற மாதிரி இந்த சிக்னலயெல்லாம்
ஏண்டா நீங்க பூந்து ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்கீங்க. அவன் அவன் கடுப்புல இருக்கும் போது ரெண்டு MUTO வும்  சந்திச்சி ஒரு உம்மா குடுத்துக்கும் பாருங்க.... வக்காளி டேய்... உங்களால மட்டும் தாண்ட இந்த மாதிரி சீனெல்லாம் வைக்க முடியும்.



ரெண்டு MUTO வும் வந்தப்புறம் கூப்புடுறோம் நம்ம ஹீரோ காட்ஸில்லாவ. அவரு கடல்லருந்து கெளம்பி வந்து ஒரு ஃபைட்ட போட்டு ராஜ்கிரன் அடி ஆளுங்கள தொடையில வச்சி ரெண்டா முறிச்சி போடுற மாதிரி ஒரு MUTO வ ரெண்டா முறிச்சி போட இன்னொரு MUTO வந்து நல்லா சண்டை போட்டுக்கிட்டு இருக்க ஹீரோவ திடீர்னு ஒருத்தன் வந்து கட்டையால பின்னால அடிச்சி மயக்கம் போவ வைக்கிற மாதிரி காட்ஸில்லாவ அடிச்சி தூக்கி வீசிடுது. காட்ஸில்லா மயக்க நிலைக்கு போயிடுறாரு. இந்த சமயத்துல ஹீரோவ மியூட்டோ கடிக்க வரும்போது திடீர்னு ஒரு கை மியூட்டோவ பின்னாலருந்து தடுக்குது. யாருன்னு பாக்குறீங்களா? அட மயக்கமா கெடந்த நம்ம காட்ஸில்லா, ஹீரோயின வில்லன் கொல்ல வரும்போது மயக்கமா கெடக்குற ஹீரோ டக்குன்னு முழிச்சி வந்து சண்டை போடுவாரே அதே மாதிரி முழிச்சி வந்து ரெண்டாவது MUTO வயும் கொண்ணுட்டு தானும் கீழ சரிஞ்சி விழுந்துடுது.

அந்த சோகத்தோட "A film by Bharathi Raja" ன்னு போட்டு முடிச்சிருவாய்ங்கன்னு  பாத்தா இல்லை..  தங்களக் காப்பாத்த தன்னோட உயிரையே விட்ட காட்ஸில்லாவுக்காக மக்கள் கண்ணீர் வடிக்கும் போது, பதினைஞ்சி கத்திக்குத்து வாங்குனப்புரம் அடுத்த சீன்ல "நா எங்கருக்கேன்" ன்னு கேட்டுகிட்ட ICU ward la உயிரோட முழிச்சி பாக்குற ஹீரோ மாதிரி காட்ஸில்லாவும் மெதுவா கண்ண முழிச்சி எழுந்து கால நொண்டிக்கிட்டே மெல்ல மெல்ல நடந்து தண்ணிக்குள்ள போயிருது.  ஊர்காரங்கல்லாம் ஹாப்பி அண்ணாச்சி. அதாவது அந்த சீனுக்கு என்ன அர்த்தம்னா (பாரதி ராஜா குரல்ல படிங்க)  "இவர்களுக்கு இனி எப்போதெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த கடல் காட்ஸில்லா மீண்டும் வருவான்". யப்பா டேய்... ஓட்டுனது போதும்டா ரீலு அந்து போச்சு..

நா உருப்படியா ஒரு வேலையச் செய்வேன்னா அது படம் பாக்குறது மட்டும் தான். எவ்வளவு மொக்கையா இருந்தாலும் முழிச்சிருந்து பாப்பேன்.  நண்பர் டான் அசோக் மூணு வருசத்துக்கு முன்னால "Inglorious Basterds"ன்னு ஒரு படத்துக்கு அழைச்சிட்டு போனாரு.  நா இதுவரைக்கும் தியேட்டர்ல அந்த ஒரே ஒரு படத்துல தான் தூங்கிருக்கேன். அதுக்கடுத்து நா தூங்குனதுன்ன படம்னா அது இது தான். என்னய மாதிரியே பார்க்கிங் காசு வீணா போகுதுன்னு யாரும் இந்த தப்பான முடிவ எடுத்துடாதீங்க.

படம் மொக்கையா இருந்தது கூட பரவால்லை. படம் முடிஞ்சி வெளிய வரும்போது ஒரு yo yo boy அவரோட girl friend கிட்ட சொன்னாரு " not bad ya... i give 6.5 out of 10". எனக்கு டபீர்னு வெடிச்சிருச்சி. அத கேட்டுட்டு திருமதி பழனிச்சாமில பாண்டு சொல்ற வசனம் தான் ஞாபகம் வந்துச்சி "அதுகளுக்கு இதத்தான் கல்யாணம் பண்ணி வைக்கனும்.அதுகளுக்கு பொம்பளைய மட்டும் கல்யாணம் பண்ணிவைக்கவே கூடாது" ங்குற மாதிரி "உங்களூக்கு
இந்த மாதிரி படம் தாண்டா எடுக்கனும். நல்ல படம் மட்டும் வந்துடவே கூடாது" ன்னு நெனைச்சிட்டு  வந்தேன்.


Friday, May 9, 2014

நானும் +2ல பெயில் தான் பாஸ்....


Share/Bookmark
"நானும் பளஸ் டூல பெயில் தான் பாஸ்... இப்ப என்ன கெட்டா பொய்ட்டேன்.. நல்லா தான் இருக்கேன்..." "நானும் ப்ளஸ் டூல 550 மார்க் தான் எடுத்தேன்.. ஆனா என்ன இப்போ நல்லா தான் இருக்கேன்" "அண்ணா காமராஜர்லாம் படிச்சிட்டா இவ்வளவு பெரிய ஆள் ஆனாங்க" "சச்சின் டெண்டுல்கரே பத்தாவதுல பெயில் தாம்பா.. இப்போ இவ்வளவு பெரிய ஆளா இல்லையா?"  "நாலு புத்தகத்தை மனப்பாடம் செஞ்சி அத படிச்சி மார்க் எடுக்குறதெல்லாம் ஒரு விஷயமா?" "புரிஞ்சி படிக்கும் கல்வித்திட்டமே நம்மூர்ல இல்லை" ஓவ்வொரு முறை பத்தாவது பன்னிரெண்டாவது ரிசல்ட் வரும் போதும், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களையும், தேர்ச்சி பெறாதவர்களையும் மனதை தேற்றி விடுறதா நெனைச்சி சில மங்கினிகள் போடுற ஸ்டேட்டஸ் தான் இதெல்லாம். அதாவது இவரே கொஞ்ச மார்க் தான் எடுத்தாராம். அதனால இவரு மத்தவங்களை தேத்தி விடுறாராம். இதுங்க ஓழுங்கா படிக்காம சுத்திகிட்டு இருந்தது பத்தாதுன்னு மத்தவனையும் கெடுத்துக்கிட்டு திரியிதுங்க.

இதுகூடப் பரவால்லை. ஆனா இந்த நல்லா படிச்சி மார்க் எடுக்குறவனெல்லாம் சும்மா புத்தகத்த  பொட்ட மனப்பாடம் பண்ணி மார்க் எடுக்குறதாகவும்,  இதுங்கல்லாம் அப்புடியே புரிஞ்சி புத்தகத்த படிச்சதாலதான் மார்க் கம்மியா எடுத்தா மாதிரியும் போடுவாய்ங்க பாருங்க ஒரு சீனு. படிக்க  வேண்டிய காலத்துல கண்ட எடத்துல சுத்திகிட்டு இருந்துட்டு, கோட்ட விட்டுட்டு அடுத்தவன் மார்க் நெறைய எடுத்த உடனே என்னவோ அவனுக்கு ஒண்ணும் தெரியாதது மாதிரியும் இதுங்கல்லாம் புரிஞ்சி படிச்சதால அறிவு கொப்புளிச்சி வெளிய ஊத்துற மாதிரியும் பண்றது தான் கொஞ்சம் கூட பொறுத்துக்க முடியல.

இதுங்க ஒரு குரூப்புன்னா இன்னொரு குரூப் இருக்காய்ங்க. பாய்ஸ் பட பரத் மாதிரி "I think something fundamentally wrong with our education system"... ஆமா education சிஸ்டம் மாறிருந்தா மட்டும் இவரு அப்டியே கிழிச்சி நாலு GSLV ய வானத்துல ஏவிருப்பாரு. அதாவது நாம எதயோ ஒண்ண படிக்கிறோமாம். பள்ளிக்கூடத்துல மனப்பாடம் பண்றது வாழ்க்கைக்கு உதவாதாம். நாலு புத்தகத்த முழுசா படிக்க முடியாம law பேசிகிட்டு இருக்கவங்கல்லாம் எங்க மத்த விஷய்த்த எப்டி ஃபேஸ் பண்ணுவாய்ங்கன்னு தெரியல.

நீங்களே நல்லா யோசிச்சி பாருங்க. ஒரு பையன் படிக்கிறான் அப்டின்னா அவனோட பெத்தவங்க கூலி வேலை,  செஞ்சா கூட புள்ளை படிக்கிதுன்னு அவன எந்த வேலையையுமே செய்ய விட மாட்டாங்க. அந்த வயசுல நமக்கு இருக்க ஒரே வேளை படிக்கிறது மட்டும் தான். இந்த ஒரு வேலைவே ஒழுங்கா செய்ய  முடியல்லன்னா அவன் பின்னால வாழ்க்கையில என்ன பண்ணப்போறான்? எப்டி மத்த கஷ்டங்கள சமாளிப்பான்.

உடனே இந்த நண்பன் பட குரூப் வந்துடுவாய்ங்க. பையனுக்கு எதுல இண்டரஸ்ட் இருக்கோ அத படிக்க வைக்கிறத விட்டுட்டு இப்டி மார்க் எடுக்கலன்னு சொல்றது தப்புன்னு பேசுவாங்க. எந்த ப்ளஸ் டூ படிக்கிற
பையனுக்கும் நா ஃபோட்டோ கிராஃபி படிச்சி பெரிய ஃபோட்டோ கிராஃபர் ஆகனும்னோ, இல்லை பெரிய டைரக்டர் ஆகனும்னோ இல்லை பெரிய பிசினஸ் மேன் ஆகனும்னோ ஆசை இருப்பதில்லை. கல்லூரி நாட்களிலேயே இந்த மாதிரியான , passion, splendor plus எல்லாம் உருவாகுது. 

அப்புறம் அதே education system ah வேற மாதிரி குறை சொல்ற இன்னொரு குரூப்பு.  நா ஸ்கூல்லயும் காலேஜ்லயும் படிச்சது ஒண்ணு. இப்போ பாத்துக்கிட்டு இருக்க வேலை வேற எதோ ஒண்ணுன்னு இன்னொரு புலம்பல். பள்ளி காலங்கள்ல நாம படிக்கிற விஷயங்களால வாழ்க்கையில நமக்கு எந்த பிரயோஜனும் இல்லையாம். ஒரு விஷயம் நல்லா யோசிச்சி பாருங்க. நீங்க காலேஜ்ல எதோ ஒண்ணு படிச்சிட்டு இப்போ அதுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம வேற எதோ ஒரு  வேலை பாத்துகிட்டு இருக்கீங்கன்னு வச்சிக்குவோம். so நீங்க படிச்சது உங்களுக்கு யூஸ் ஆகல. நீங்க படிக்காத ஒரு விஷயத்துல வேலை பாக்குறீங்க. அப்டின்னா படிக்காத ஒருத்தர கூப்டு அந்த வேலையை செய்ய சொன்னா அவரால செய்ய முடியுமா?

இன்னொரு விஷயம். சுத்தாமக படிக்காதவருக்கும் ஒரு பண்ணிரண்டாவது வரைக்கும் படிச்சவரோட பழக்க வழக்க்கங்களுக்கும் ஒரு வித்யாசம் இருக்கும். ஒரு பன்னிரண்டாவது மட்டும் படிச்சவருக்கும் ஒரு கலைக்கல்லூரில படிக்கிறவருகும் ஒரு வித்யாசம் இருக்கும். ஒரு கலைக்கல்லூரில படிக்கிறவருக்கும் ஒரு பொறியியல் கல்லூரில படிக்கிறவருக்கும் ஒரு வித்யாசம் இருக்கும். ஒரு பொறியியல் கல்லூரில படிக்கிறாவருக்கும் ஒரு மருத்துவக் கல்லூரில படிக்கிறவருக்கும் ஒரு வித்யாசம் இருக்கும். அந்த வித்யாசம்ங்கறது பேச்சு, பழக்க வழக்கம், ஒரு விஷயத்தை எளிதில் புரிந்து கொள்ளும் சக்தின்னு நிறைய மாறும்.  ஒண்ணு மட்டும் நாம தெளிவா தெரிஞ்சிக்கனும். நாம படிக்கிற விஷயங்கள் அதே ஃபீல்டுல வேலை பாக்குறதுக்கு மட்டும் இல்லை. நாம என்ன படிக்கிறோம்ங்குறத பொறுத்து தான் நம்மோட மூளை ஒரு விஷயத்தை எளிதில் புரிஞ்சிக்கிற தன்மை அதிகரிக்குது.  பின்னால எந்த துறையிலயும் எந்த வேலையையும் ஈஸியா கத்துக்குற தன்மையும் அதிகரிக்குது. இல்லைன்னா எப்புடி சாஃப்ட்வேர் கம்பெனில மெக்கானிக்கல் படிச்சவங்களை
எடுத்து வச்சி வேலை வாங்கமுடியிது?  

நீங்கள் படிக்காத மேதையாக இருக்கலாம். இன்று நீங்கள் பெரிய இடத்தில் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் உங்களைப் போலவே ஆவார்கள் என்று சொல்ல முடியாது. அல்லது நீங்கள் ஒழுங்காகப் படிக்காமல் திரிந்திருந்தாலும் உங்களுடைய பணக்கார அப்பாக்கள் உங்களை சுமந்திருக்கலாம். பிசினஸ் ஆரம்பிக்கும் அளவுக்கு உங்களுக்கு பரம்பரை சொத்திருந்திருக்கலாம். ஆனா நம்மூரில் வெகுசிலருக்கே அது போன்ற பாக்கியங்கள் வாய்திருக்கும். மீதமிருக்குவரவங்களுக்கு படிப்பே வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. ஏன்னா நம்மூர்ல இருக்க முக்கால்வாசி பேர் நடுத்தர வர்க்கங்களையும் அதற்க்கு கீழுள்ளவர்களுமே. அப்படிப்பட்டவங்களுக்கு படிப்பு ஒண்ணு தான் வாழ்க்கையில முன்னேற வழி.

நம்ம படுற கஷ்டத்த நம்ம புள்ளையும் படக்கூடாதுங்குறதுக்காகத் தான் ஒவ்வொருத்தரும் புள்ளைங்கள கஷடப்பட்டு படிக்க வைக்கிறாங்க. அவனும் படிக்காம அதே கஷ்டத்த படுறான்னா அவனோட பெத்தவங்க பட்ட கஷ்டத்துக்கு என்ன பலன். ஒருவேளை நீங்கள் சொல்வது போல் நம்மூரின் education சிஸ்டத்தில் பிரச்சனை இருக்கின்றது என்றே வச்சிக்குவோம். ஒருத்தனோட வாழ்க்கை அந்த சிஸ்டத்தாலயே நிர்ணயிக்கப்படுதுங்கும் போது அதுகூட ஒன்றி வாழ்றதுதான் நல்லதே தவற எதுவும் செய்யாமல் சிஸ்டம் சரியில்லை சிஸ்டம் சரியில்லைன்னு குறை சொல்றதுல எந்த பிரயோஜனமும் இல்லை. 

இன்னிக்கு ஹைஸ்கூல் படிக்கிறவங்க கூட சமூக வலைத்தளங்கள்ல ரொம்ப ஆக்டிவா இருக்க ஆரம்பிச்சிட்டாங்க. நமக்குத் தெரிந்த ஒரே ஒரு காமராஜர்,  ஒரே ஒரு சச்சின் டெண்டூல்கரை இவர்களுக்கு முன்னுதாரணங்களா காட்டி அவங்களோட படிப்ப கெடுக்குறத முதல்ல நிறுத்துங்க. நீங்க படிக்காம இன்னிக்கு பெரிய மிக உயர்ந்த இடத்தில் இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள் என்று உங்களுக்கே தெரியும்.  எனவே "நானும் இப்டித்தான் இருந்தேன்" ன்னு உங்களுடைய பழைய பஞ்சாங்களை மற்றவர்களுக்கு உதாரணமாக காட்டி அவர்களின் படிப்பை கெடுப்பதை தயவு செஞ்சி நிறுத்துங்க. 



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...