Thursday, April 28, 2011

"ராணா" நாளை முதல்- Get Ready Folks


Share/Bookmark

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமான "ராணா" வின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருக்கிறது. சூப்பர் ஸ்டார் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் முன்னனி கதாநாயகியா தீபிகா படுகோன் நடிக்கிறார். பதினேழாம் நூற்றாண்டு கதைபின்னனியில் ராணா படமாக்கப்பட உள்ளது.




EROS நிறுவனத்துடன், சவுந்தர்யா அஷ்வின் ரஜினிகாந்த் தாயாரிக்கும் ராணாவை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மானும்,எந்திரனில் ஒளிப்பதிவு செய்த ரத்தினவேலுவும் மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளனர்.



சூப்பர் ஸாடாரின் எந்திரனின் படப்பிடிப்பும் EROS நிறுவனத்தாலேயே துவக்கப்பட்டது.



சூப்பர் ஸ்டாரின் ராணா இமாலய வெற்றி பெற வாழ்த்துக்கள்....

படங்கள்: என்வழி

Monday, April 18, 2011

பிரபல பதிவராவது எப்படி -சில எளிய வழிகள்


Share/Bookmark
குறிப்பு: இந்த பதிவு எந்த தனிப்பட்ட நபரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல. நகைச்சுவைக்காகவே....

உங்களில் பல பேருக்கு எப்படி பிரபல பதிவர் ஆவது என்பதில் பல குழப்பங்கள் இருக்கும். அதை தீர்த்து வைப்பதற்காகவே இந்த பதிவு. இது சில பிரபல பதிவர்களின்(?) பதிவுகளை படித்ததன் மூலம், அவர்களிடம் நான் கற்றுக்கொண்டது. இதை அப்படியே மூன்று மாதம் பின்பற்றினால் எண்ணி இருபத்து நான்கு மணி நேரத்தில் தாங்கள் பிரபல பதிவர் ஆகிவிடலாம் இல்லாவிட்டால் தங்கள் பணம் வாபஸ்.

இதோ அமெரிக்கன் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்ட சில வழிகள் உங்களுக்காக.

1.   நீங்கள் ஒரு பிரபல பதிவர் ஆக வேண்டுமானால், அடுத்தவர்களை எதிர் பார்க்காமல் முதலில் நீங்களாகவே ஒரு பிரபல பதிவராக form ஆகி கொள்ள வேண்டும். உங்கள் ஆழ்மனதில் நீங்கள் ஒரு பிரபல பதிவர் என்பது நன்றாக பதிந்திருக்க வேண்டும். எவ்வளவு பெரிய கூட்டத்திலும் "பிரபல பதிவரே" என்று கூப்பிட்டால் தாங்கள் திரும்பி பார்க்கும் படி அதை தங்கள் மனதில் பொதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

2.  நீங்கள் ஒரு சில பதிவுகளே எழுதியிருந்தாலும், உங்களுக்கு நாடெங்கிலும் ரசிகர் மன்றங்கள் இருப்பது போலவும், தங்களுக்காக உயிரை கொடுக்கும் ரசிகர்கள் இருப்பது போலவும், உங்கள் பதிவு சரியான நேரத்தில் வராவிட்டால் குடிநீருக்கு தவிப்பது போல மக்கள் பதிவுக்கு தவிப்பது போலவும், தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் சக்தி உங்கள் பதிவில் இருப்பது போலவும் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.

3.  தங்களை ஒரு நாய் கூட கண்டு கொள்ளாவிட்டாலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, "என்னை வம்புக்கு இழுக்கிறார்கள்", "கேலி செய்கிறார்கள்" என்று பதிவில் இடலாம்.

4.  தினமும் நீங்க ஒரு 20 பேர பாலோ பண்ணனும். எந்த பதிவா இருந்தாலும் எவ்வளவு கேவலமா இருந்தாலும் "அருமை" "வாழ்த்துக்கள்" "தொடருங்கள்" "கரெக்டா சொன்னீங்க" இந்த மாதிரி கமெண்டுகளை அளித்து விட்டு வர வேண்டும். (மேலே குறிப்பிட்ட கமெண்டுகளை போட பதிவை படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. இவை எல்லாவற்றுக்கும் பொருந்தும்). இந்த செய்முறையை குறைந்தது ஒரு மாதம் நீங்கள் செய்ய வேண்டும். உங்களுடைய சின்சியாரிட்டியை கண்டு அவிங்களும் உங்களை பாலோ பண்ணுவாங்க. நீங்க எப்புடி அவங்க பதிவுக்கு  "அருமை" "வாழ்த்துக்கள்" "தொடருங்கள்" ன்னு போட்டீங்களோ அதே போல உங்களுடைய  பதிவுகளுக்கும் போடுவாய்ங்க. நாளைடைவில் உங்களுடைய பதிவின் தரத்தை உங்களாலேயே மதிப்பிட முடியாது.

5.   தினசரி பதிவு மிக அவசியம். பதிவு நல்லா இருக்கனும்னு அவசியம் இல்லை. நீங்க காலைல பாத்ரூம் போனது, டாய்லெட்ல தண்ணி வராதது இத பத்தியெல்ல்லாம் எழுதலாம். அதற்கும் உங்களுக்கு "கலக்கிட்டீங்க தலைவா"ன்னு கமெண்டு போடுறதுக்கு நம்ம பதிவுலகத்துல ஆள் இருக்காங்க. அட எதுவுமே தோணலையா, அன்னிக்கு காலைல வந்த நியூஸ் பேப்பர்ல உள்ள நியூஸ் அப்புடியே டைப் பண்ணி போஸ்ட் பண்ணிடலாம். சமூக பற்று உள்ளவர் என்ற பெயரும் சேர்ந்து தங்களுக்கு கிடைக்கும்.

6.   இந்த பாயிண்டு தான் மிக முக்கியம். பதினெட்டு ப்ளஸ் சமாசாரங்கள் கண்டிப்பாக பதிவில் இடம்பெற வேண்டும். (உதாரணமாக தாங்கள் காலையில் ரோட்டில் பார்த்த பெண் என்ன கலர் உள்ளாடை அணிந்திருந்தார், அவரை பார்க்கும் போது தங்களுக்கு என்ன பீலிங் வந்தது  என்பது போலான சமாசாரங்கள்) எவ்வளவுக்கெவ்வளவு ஆபாசம் அதிகமாகிறதோ அந்த அளவுக்கு பாலோயர்களும், ஹிட்ஸ்களும் கிடைக்கும்.

7.  அளவுக்கு அதிகமாக ஆபாசங்களை எழுதி,  சில சமயங்களில் அனைவரிடமும் வசமாக மாட்டிக்கொள்ள நேரலாம். அம்மாதிரியான சமயங்களில் சில செண்டிமென்ட் பதிவுகளை, (உதாரணமாக பெண்களை கவர் செய்வது போலான "தாய்குலத்துக்கு நேர்ந்த அவலம்", "தாய்குலத்துக்கு எச்சரிக்கை")பதிவுகளை அள்ளிவிட்டால் மக்கள் பழசை மறந்து விடுவார்கள்.

8.   உங்களுடைய பதிவுகளுக்கு ஓட்டு போடும்படி தங்கள் பதிவிலையே, அனைவரிடமும் காலில் விழுந்து கேட்கலாம். "பிடிச்சிருந்தாலும் சரி பிடிக்காவிட்டாலும் சரி.. தயவு செஞ்சி ஓட்டு போடுங்க.. இப்படிக்கு தங்கள் காலில் விழுந்த நண்பன்" என்று எல்லா பதிவுகளுக்கும் default  வரிகளை சேர்த்து கொள்ளலாம்.

9.   தங்களை ஒத்த ஒரு பத்து வலைப்பதிவர்களுடன் சேர்ந்து வலைக்குழுமம் ஆரம்பிக்கலாம். அந்த பத்து பேருக்கு இருக்கும் நண்பர்களும் உங்களுக்கு ஓட்டு அளிப்பர். குறிப்பு: அவர்கள் அனைவரும் நாடோடிகள் படம் பார்த்தவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தங்கள் முயற்சி வீணாகிவிடும் (நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே)



சரி ஏன்பா இவ்வளவு வக்கனையா பேசுறியே நீ ஏன் இன்னும் பிரபல பதிவரா ஆகலன்னு கேப்பீங்க.. நான் எப்பவும் கடைநிலை ஊழியனாக இருக்கவே ஆசைப்படுகிறேன் (அவ்வ்வ்வ்வ்வ்வ்)

Friday, April 8, 2011

2012 ல் உலகம் அழிவது உறுதி- அதிகாரப்பூர்வ தகவல்


Share/Bookmark
கிட்ட தட்ட 2012 உலகம் அழிவது உறுதியாகி விட்டது. ஜப்பானில் நடைபெற்ற சம்பவங்கள் இதனை ஒரளவுக்கு உறுதி செய்துள்ளன. இப்போது இதனை மேலும் உறுதிப்படுத்த சில வலுவான அதாரங்கள் கிடைத்துள்ளன.அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு..



கதை, திரைக்கதை, இயக்கம், வசனம், பாடல்கள், ஒளிப்பதிவு மேற்பார்வை, இசை பாடல்கள் அனைத்தும் தலைவர் தான். தலைவா இன்னும் மிச்சம் இருக்கது ஹீரோயின் மட்டும் தான். அதுக்கும் நீங்க ஏன் கெட் அப் மாத்தி ட்ரை பண்ண கூடாது? எனக்கு தெரியும் உங்களால முடியும்.

                              கன்னா ரெண்டாவது லட்டு திங்க ஆசையா?

"1980- ஒரு தலை ராகம்
2011- ஒரு தலை காதல்"

 யாரும் வெறிக்காதீங்க.. தலைவர் 30 வருஷமா கோமா வுல இருந்துட்டு இப்பதான் தெளிஞ்சிருப்பாருன்னு நெனக்கிறேன்



Tuesday, April 5, 2011

விஜயகாந்துக்கு கவுண்டர் பதிலடி


Share/Bookmark

Monday, April 4, 2011

சக்தி- தெலுங்கில் ஒரு ஆயிரத்தில் ஒருவன்


Share/Bookmark
ஏன் இப்புடி சொல்றேன்னா இவ்ளோ செலவு பண்ணி ஒரு படம் எடுத்து அது எதுக்கும் ஆகாம போயிருச்சேன்னு தான். ஆயிரத்தில் ஒருவன் 1st half எதோ நல்லா இருக்கமாதிரி போயி 2nd half ல சம்பந்தம் இல்லாம படம் திசை மாறி கடைசில பலபேருக்கு புரியாத ஒரு க்ளைமாக்ஸ்.. technical excellece இருந்தாதான் அதை புரிஞ்சிக்க முடியும்னு நம்ம செல்வராகவன் பேட்டி வேற...

இங்கயும் நம்ம ஜூனியர் NTR க்கு ஆப்பு வைக்க வந்த படம் இது. NTR ரோட முந்தைய படங்களான அதுர்ஸ், ப்ருந்தாவனம் ரெண்டும் அவ்ளவா நல்லா போகலன்னாலும் காமெடியும் படமும் நமக்கு எரிச்சல கெளப்பாது. ஆனா சக்தி நம்மல சுத்தி சுத்தி அடிக்குது. வழக்கமா ஒரு தெலுங்கு படம் பாக்கனும்னா ரெண்டு மூணு விஷயங்கள்ல  நாம டென்ஷன் ஆயிட கூடாது. ஒண்ணு பறந்து பறந்து அடிக்கும் சண்டை காட்சிகள்.இன்னொன்னு எதிர்பாக்காத நேரத்துல டக்குன்னு வரும் பாடல் காட்சிகள். இந்த விஷயங்கள்ல பரிட்சயம் இல்லாத ஒருத்தர படத்துக்கு அழைச்சிட்டு போயி படம் முடியிரதுக்கு முன்னாலயே அவரு கெளம்பி வந்துட்டாரு. அப்புறம் என்ன நா மட்டும் கடைசி வரைக்கும் இருந்து முடிச்சி வைச்சிட்டு வந்தேன்.

கதைய பத்தி சொல்லனும்னா மகதீரா, அருந்ததீ, போக்கிரி போன்ற படங்களை கலந்து விட்டு அடிச்சி வந்ததுதான் சக்தி.  வழக்கமான intro song, fightu ன்னு ஆரம்பிச்சி ஜெய்ப்பூர், ஜம்மு, ஹரித்வார், எகிப்துன்னு படம் நகருது. கொஞ்சம் சஸ்பென்ஸோட. நம்மாளு ஒரு டூரிஸ்ட் guide ah வந்து இலியானா & co va ஊர் சுத்தி காமிக்கிராரு. அங்கங்கே சில நல்ல காமெடிகளும் உண்டு ( பெரிய காமெடி second half la தான்). ஹீரோயின ஒரு குரூப் தேடுது. அவங்க கிட்டருந்து இலியானாவ காப்பாதுராரு NTR. 

அப்புறமா? அதான் காப்பாத்திட்டாருல்ல. லவ்வோ லவ்வு... பாட்டு... fightu... பாட்டு... fightu... போயிகிட்டே இருக்கு படம். நம்மாளு எப்பவும் ஒரு பெரிய மர பொட்டி ஒண்ண இழுத்துகிட்டு தான் போவாரு எங்கயா இருந்தாலும். அது ஏன்னு அப்ப தெரியல. அப்பதான் நாம ஆவலோட எதிர்பார்த்த interval வந்துச்சி. ரவுண்டிங்க ஒரு 50 பேரு சுத்தி வளைச்சி ராக்கெட் லாஞ்சர்லாம் வச்சி NTR ah தாக்க முயற்சிக்க, அப்ப open பண்ணாரு அந்த பொட்டிய..,, அதுக்குள்ள வெரும் ak47, pk47 ன்னு ஏகப்பட்ட துப்பாக்கி. அப்பதான் சொல்றாங்க நம்மாளு NSA commando ன்னு. oh wat a twist? ஒரு பத்து நிமிஷம் துப்பாக்கிய வச்சிகிட்டு கதகளி ஆடுறாரு போட்டாயிங்க இண்டர்வல்ல...

இடைவேளைக்கு அப்புறம் படம் முழுசா ஆன்மீகத்துக்கு திரும்பிடுது. ஒரு flashback. அப்பா NTR, மகதீரா ராம்சரண் மாதிரி கழுத்து வரைக்கும் முடி வச்சிகிட்டு வந்து பூந்து வெளையாடுறாரு (கெட் அப் ரொம்ப கப்பி தனமா இருந்துச்சி :( ) அந்த கெட்டப்புல அவர் வீர வசனங்கள் பேசும் போது அப்படியே பாலையா நம்ம கண்ணில். அப்புறம் நம்மாளு எகிப்துலருந்து வரும் பெரிய அரக்கணோட சண்டை போட்டு ஜெயிச்சி உலகத்த அரக்கர்களிடமிருந்து காப்பத்துறாரு.


பிரபு, அகோரி சாமியாராக வரும் நாசர் இருவரும் வேலைய கரெக்டா பண்ணிருக்காங்க. SPB flash back la ரெண்டு சீன் வந்தாலும் வசன உச்சரிப்புல எல்லாரையும் தூக்கி சாப்புட்டுறாரு.தல பிரமானந்துக்காக ரொம்ப நேரம்  wait பண்ணிட்டு இருந்தேன். second half la "அவதார்"ங்கர அட்டகாசமான பேரோட வந்த அவரும் ஏமாத்திட்டாரு. பாடல்கள் அனைத்தும் பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. நல்ல தரத்துடன்.. கேமராமேனும், art directorum கலக்கிருக்காங்க. நம்ம ஷங்கர் இத கொஞ்சம் பாத்தா நல்லா இருக்கும். எவ்ளோ செலவு செஞ்சி hi quality ல காட்சி அமைப்புகள் இருந்தாலும், கிராஃபிக்ஸ்ல மட்டும் கோட்ட விட்டுறாங்க. மிக மோசமான, தரமற்ற கிராஃபிக்ஸ்.

சரி என்னதாம்பா சொல்ல வர்றன்னு கேக்குறீங்களா? ஒரிஜினல் டிவிடி வந்தோன கண்டிப்பா பாருங்க. கடைசி அரைமணி நேரம் தவிற படம் நல்லாவே இருக்கு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...