Thursday, December 30, 2010

கனவு மெய்ப்பட வேண்டாம்


Share/Bookmark
கனவுங்குறது எப்ப வரும், எப்புடி வரும், ஏன் வரும்னு யாருக்குமே தெரியாது.ஆனா தூங்குறப்ப மட்டும் தான் வரும்தான் வரும்னு எல்லாருக்குமே தெரியும். வழக்கமா நமக்கு வர்ற கனவு எல்லாமே தூங்கி எந்திரிக்கும்போது ஏதோ லைட்டா ஞாபகம் இருக்க மாதிரி இருந்துட்டு கொஞ்ச நேரத்துல மறந்து போயிடும். ஆனா எனக்கு வந்த ஒரு கனவ அது மாதிரி மறக்க முடியல.. இதுல பெருசா ஆரம்பம், முடிவுன்னு எதும் இல்லைன்னாலும், கொஞ்சம் வித்தியாசமா நல்லா இருந்துச்சி. அதுனால இங்க பகிர்ந்துக்கிறேன். "இந்த பதிவுல வெள்ளை கலர் எழுத்துல உள்ளத்தெல்லாம் நிஜம்... புளு கலர் எழுத்துல உள்ளதெல்லாம் கனவு" அப்புடின்னு S.J.சூர்யா மாதிரி சொல்ற அளவுக்கு இது ரொம்ப பெரிய கனவு இல்லீங்க.... ரொம்ப சின்ன கனவுதான் பாருங்க.ச்சீ.... படிங்க...

கிட்டத்தட்ட மூணு வருஷம் பட் ரோடு ஏரியால இருந்துட்டு, ரெண்டு மாசம் முன்னாடிதான் நானும் என்னோட friends um  ராமாபுரத்துல ஒரு வீடு பாத்துகிட்டு போனோம். வீடு shift பண்ணி 15 நாள் ஆகி இருந்தாலும் நா ஒரு நாள் கூட அந்த வீட்டுல தூங்கல. ஊர்ல போயி டேரா போட்டுட்டு ஒரு நாள் திரும்பிவந்தேன்.எல்லாரும் கெளம்பி கம்பெனிக்கு போயிட்டாயிங்க.எனக்கு கொஞ்சம் களைப்பா இருந்ததனால, சரி கழுத ஒரு அரை நாள் லீவ போடுவோமேன்னு கொஞ்சம் அசதில தூங்கிட்டேன். கனவு start...

நா படுத்துருந்த ரெண்டாவது பெட் ரூம் ஜன்னல் கதவ யாரோ தட்டுனாங்க. அந்த ஜன்னலுக்கு பின்னாடி வெறும் செங்க கல்லும், ஒரு குட்டி compound சுவரும் தான் இருக்கும்.. அந்த பக்கம் வந்து ஜன்னல் கதவ தட்டுறது யாருன்னு நெனச்சிகிட்டேஜன்னல தொறந்தேன்.

வெளில ஒரு பொண்ணு. நீளமான முகம். கண்ணாடி போட்டுருந்துச்சி. ரொம்ப கலரா இல்ல..லைட் கருப்பா இருந்துச்சி.

"என்ன? யார் வேணும்"" ன்னேன்

"வீட்டுக்குள்ள வரனும்...... கதவ தொறங்க" ன்னுச்சி.

நா நேரா போயி, வீட்டு கதவ தொறக்க, வெளில ஒரு பொண்ணு. ஜன்னல்ல வந்த  பொண்ணு இல்ல. இது வேற. நல்ல கருப்பான,Round முகம். கண்ணாடி போட்டுருக்கு. ஆனா அதுக்கு கால் நடக்க முடியல. சொல்லப்போனா காலே இல்லன்னு சொல்லலாம். போலியோ attack ஆன மாத்ரி இருந்துச்சி.  ரெண்டு காலையும் மடிச்சி சம்மனக்கால் போட்ட மாதிரி வச்சிக்கிட்டு கைய ஊனிக்கிட்டே   உள்ள வந்து ஹால் ல கிழக்கு பக்கம்  பாத்தா மாதிரி  உக்காருது. நா  எதுக்க உக்கார்ந்தேன்.

கொஞ்ச நேரம் போனப்புறம் அது கண்ணுலருந்து, அவ்ளோ கண்ணீரு."எங்க வீட்டுல ரொம்ப கஷ்டம்ன்னு ஆரம்பிச்சி, நாம பஸ்ல பாக்குற பசங்க சொல்ற மாதிரி அப்பா இல்லை, அம்மாக்கு உடம்பு சரி இல்லை எதாது உதவி பண்ணுங்க"ங்குறமாதிரி ஏதேதொ சொல்லி ரொம்ப நேரம் பேசுது....

எல்லாத்தையும் நா கேட்டுகிட்டே இருக்கும் போது, திடீர்னு ஒண்ணு கவனிச்சேன்.அந்த பொண்ணு பேசுதே தவற அதோட வாய் அசையவே இல்ல. ஆனா அது பேசுறது என் காதுல நல்ல கேக்குது. உள்ளுக்குள்ள பயத்தோடவே

"என்னங்க... நீங்க பேசுறது எனக்கு கேக்குது, ஆனா... உங்க வாய் அசையவே இல்லையே.. உங்களால பேச முடியாதா?"

"ஆமா என்னால பேச முடியாது"

பேச முடியாதுன்னு சொல்றது கூட என் காதுல கேக்குது ,
" நீங்க பேசலன்னா அப்புறம் எப்புடி எனக்கு கேக்குது?"ன்னு கேட்டதுக்கு,

"உங்களுக்கு கேக்குறது எல்லாமே நான் என்னோட டைரில எழுதி வச்சிருக்கது" ன்னு அது சொல்ல எனக்கு திடுக்குன்னு முழிப்பு வந்துருச்சி.

மொத நாள் படுக்கையிலயே இப்புடி ஒரு கனவான்னு நெனச்சிக்கிட்டு,அன்னையிலருந்து நா அந்த ரூம்ல தனியா படுக்குறதே இல்ல.

அப்புறம் ஒரு நாள் இந்த கனவ எங்க அம்மாட்ட சொன்னப்ப, அதுக்கு அம்மா ஒரு காரணம் சொல்ல, அதுவும் கிட்ட தட்ட கரெக்டா தான் இருந்துச்சி.

Monday, December 27, 2010

எந்திரனில் கவுண்டர் நடித்திருந்தால்


Share/Bookmark
சூப்பர் ஸ்டார் நடித்து, ஷங்கர் இயக்கிய எந்திரன் இப்போ அசத்தலான நூறாவது நாள நோக்கி போயிக்கிட்டு இருக்க, இந்த சமயத்துல அதே எந்திரன் படத்துல தல கவுண்டர் நடிச்சிருந்தா எப்புடி இருந்துருக்கும்? எந்திரன் காட்சிகளில் சில உங்களுக்காக.இந்த பதிப்புல வர்ற வசனங்கள் யாவும் நகைச்சுவைக்காகவே. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.

டாக்டர் வடக்குபட்டி ராமசாமிங்குற கவுண்டர், குட்டிங்குற ரோபோவ (செந்தில்) உருவாக்குறாரு. அத ஆண்டிப்பட்டி பஞ்சாயதார் முன்னாடி அறிமுகம் செஞ்சி வைக்கிறாரு.

இந்தா நிக்குதே நெல் அவிக்கிற சட்டி கலர்ல. இது பேருதான் குட்டி. பன்றி உருவம்  கொண்ட ரோபோ. He is none other than my மெக்கனிக் ஷாப்'ஸ் க்ரியேஷன்.

செந்தில்: ஹாய்... ஐ யாம் குட்டி... the robo.. Speed 5 km/hr.. 2GB in built memory ..
8GB extendable memory.

இவனுக்கு ஆண்டிப்பட்டில உள்ள அனைத்து மொழிகளும் தெரியும்

"அண்ணன் மொழி தமிழ்"

He can fight...

"வவ்.... வவ்வ்.... வவ்வவ்""

he can dance

"அவா அவா.... அவவா... அவவா... அவா அவா"

நம்ம ஊர்ல எந்த வீட்டுல, எந்த கொழம்பு வச்சாலும் இது கண்டுபுடிச்சிடும். இவனோட வாயி பேசுறதுக்கு மட்டும் இல்ல. திங்கிறதுக்கும் தான்.நூறு பேரோட வாயும் வயிறும் இவனுக்கு program பண்ணப்பட்டு இருக்கு.நாம நூறுபேர் சாப்டுற சாப்பட்ட இது ஒரு ஆளே திண்ணுறும். இப்போ இவன யாராவது கேள்வி கேக்குறதுன்னா கேக்கலாம்.


கூட்டத்திலருந்து ஒரு நபர்,

குட்டி, சிம்பிளா ஒரு கேள்வி கேக்குறேன். 362437 ஃபிபெனோசி நம்பரா?

செந்தில்: அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க. by the by அது மூணாவது தெரு சுப்ரமணி wife oda.....

கவுண்டர்: அய்யயோ... ... ஏன்பா உனக்கு கேக்குறதுக்கு வேற நம்பரே இல்லையா...வேற எதாவது கேளுங்கப்பா....

கூட்டத்துலருந்து இன்னொருத்தர்,

உனக்கு தெரிஞ்ச Prime Ministers பேரு ரெண்டு மூணு சொல்லு...

செந்தில்:
243422224446466486383939838893389212127761212652256652556
21771278273123982378913791334897549058309583409583058045895034850
345049589304958049583049594580348509409583048954...........23984093840
3498209482094892..... 0798234982789 M forty four...இது சரியான்னு பாக்க உங்களுக்கு சில வருஷங்கள் ஆகும்.

கவுண்டர்: குட்டிமா.. உனக்கு பதில் தெரியலன்னா தெரியலன்னு சொல்லிரும்மா. இப்புடி சம்பந்தம் இல்லாம எதாவது சொன்னா இவனுக என் காத கடிச்சி வச்சிருவானுக...

கூட்டத்துலருந்த்து இன்னொருத்தர்,

ஆஹ்ஹா...... ஆஆ....ஆஆ....ஆஆ....ஆஹஹ்ஹாஆ.........

செந்தில்: நாட்டுகுறிஞ்சி பாருறேன்னுட்டு உசேரிக்கு போயிட்ட்டீங்க. நடுவுல
 ஆஹ்ஹ் இந்த இடத்துல சுதி வெலகிருச்சி.

நபர்3: ஏண்டா ஆப்ரிக்கா கொரங்கே... நா கட்டெரும்பு கால்ல கடிச்சிருச்சேன்னு அலருறேன்... இதுல உனக்கு சுதி வெலகாம வேற கத்தனுமா? செருப்பு  பிஞ்சிரும்.

கவுண்டர்: அய்யய்யோ.... டேய் மண்டையா.. கேக்குற கேள்விக்கு மட்டும பதில் சொல்லுடா... இப்புடி அதிக பிரசிங்கி தனமா எதாவது பண்ணி நா விஞ்ஞானி ஆவுறத தடுத்துடாதடா....

நபர்4: கடைசியா ஒரு கேள்வி. ப்ரபாகரன் உயிரோட இருக்கரா இல்லையா?

செந்தில்: பிரபாகரன்னா யாரு?

நபர்4: ஈழத் தமிழர்களுக்காக பாடுபட்டவரு. ராஜபக்ஷேவ எதிர்த்து நின்னவரு.

செந்தில்: எனக்கு தெரிஞ்சி ராஜபக்ஷேவ எதிர்த்து குரல் குடுக்குறது இப்பவும் எங்க அண்ணன் வடக்குபட்டி ராமசாமி தான்......(கவுண்டர நோக்கி கைகாட்டி)

"ப்ரபாகரன் இருக்காரு...."

கவுண்டர்: ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்.... அய்யா.. அம்மா... இந்த கருநாயி பொய் சொல்லுது....அது நா இல்லிங்க... சத்தியாமா நா இல்லிங்க..எனக்கு தலையெல்லாம் சுத்துதுடா சாமி...இந்த விஷயம் மட்டும் அந்த ஆளு காதுக்கு போனுச்சி, ஒரு லாரி நெறயா துப்பாக்கியோடஎன்ன சுடுறதுக்கு ஆள் அனுப்பிடுவான்...மெக்கானிக் ஷாப்ல ஷட்டர போட்டு மூடுங்கடா.....

தொடரும்.....

Wednesday, December 22, 2010

முதல் வெற்றிப்பட இயக்குனர்கள்


Share/Bookmark சசிகுமாரின் ஈசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யாத நிலையில் எல்லாரும் "சசிகுமார் கிட்ட இத எதிர்பாக்கல" "ச்ச மொத படம் இப்புடி குடுத்துட்டு ரெண்டாவது படத்துல இப்புடி பண்ணிட்டாரே" ன்னு எங்க பாத்தாலும்  ஒரே விமர்சனங்கள். எதோ சசிகுமார் வரிசையா பத்து படம் ஹிட் குடுத்துட்டு பதினொறாவது படத்துல சொதப்புன மாதிரி எல்லாரும் பேசுறாங்க.

சுப்ரமணியபுரத்திலும் சசிகுமார் பெரிதாக எதுவும் செஞ்சிடல. வழக்கமா எல்லா டைரக்டருங்களும், ஒரு low budjet படத்த ஹிட்டாக்க என்ன செய்வாங்களோஅததான் சசிகுமாரும் பண்ணியிருந்த்தாரு, பருத்திவீரன் படம் மாதிரியே. இந்த ரெண்டு படத்துலயுமே, climax ah தவிர்த்து பாத்த, மிக சாதாரணமான படங்களே. அதாவது ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும், சாதாரணமான களத்துல பயணிக்கிற கதை, கடைசியில் ஒரு குரூரத்தில் முடியும். கண்டிப்பா அது ஹீரோ, இல்லன்னா ஹீரோயின் அல்லது ரெண்டு பேரோட மரணத்தில் முடியிறதாகவே இருக்கும். இப்போது ஓடிகிட்டுருக்கிற மைனாவும் இதே வகைதான்.

அதைவிட சுப்ரமணியபுரத்துல சசிகுமார் ரசிகர்களை, கவர ரொம்ப சூப்பரா ஒரு ட்ரிக் யூஸ் பண்ணிருப்பாரு. லவ் பண்ண பொண்ணு ஏமாத்திட்டா.... "பெண்களை நம்பாதே"ங்குற கருத்தே படத்தோட இறுதியில மேலோங்கியிருக்கும்.. நம்ம ஊர்ல இந்த "பெண்களை நம்பாதே" குரூப் நெறய பேரு இருக்காய்ங்க... பொண்ணுங்கள பத்தி தப்பா எதாது டயலாக் வந்தாலே விசிலடிக்கிற குரூப்பு.. இவிங்க யோக்கியம் மாதிரி.அதோட அந்த படத்தின் கதையும் அவரோட கற்பனையில் உருவானதாக தெரியல.. சில உண்மைச் சம்பவங்களின் கோர்வையாகவே இருக்கனும்.

அதை கொஞ்சம் புதுமையாக்க கதை 1980ல நடக்குற மாதிரி கதைக்களம் அமைச்சிருந்தாரு. காதல் காட்சிகளுக்கு பிண்ணயில் பழைய ஹிட்டான பாட்டு போட்டு அதை ஒப்பேத்தியிருந்தாரு. இந்த மாதிரி காட்சிங்க இப்போ இன்னொரு ட்ரிக். எதுவும் எடுக்க வரலன்ன, baground la எதாவது பழைய ஹிட்டான பாட்ட போட்டா, அந்த காட்சி நல்லா இல்லன்னாலும் பாக்குறவங்களுக்கு atleast சிரிப்பாவது வரும். இப்புடி சசிகுமார் இளைஞர்கள் மத்தியில ஒரு புதுமை புரட்சி இயக்குனரா அவதாரம் எடுத்தாரு.

அவர் ஹீரோவா நடிச்ச நாடோடிகளும் அதே போல் ஒரு புதுமையான கதை. இதுவரை யாரும் பார்க்கத ஒரு புது கோணத்தில் நண்பர்களை பத்தி சொல்லியிருந்தாங்க. கண்டிப்பாக அந்த கதையும் அவர்களின் கற்பனையில் உருவானது அல்ல என்பது உறுதி. எங்கோ நடந்த உண்மை சம்பத்தின் அதிகபட்சவெளிப்படே அது. முதல் படம் எடுத்து இரண்டு வருஷம் ஆகியும், அவரால அந்த படத்தின் தாக்கத்தை ஏற்படுதுற மாதிரியான கதையை (தேடி) பிடிக்கமுடியாமலேயே இதுபோலான ஒரு பிடிமானமில்லாத ஒரு கதையை உருவாக்கியிருக்காரு. அமீருக்கு கூட பருத்திவீரனுக்கு அப்புறம்  எந்த படமும் இன்னும் வரலங்குறது இன்னொரு வருத்தமான விஷயம்.

முதல் படத்தில் தனது முத்திரையை பதிக்கனும்னு வர்ற இயக்குனருங்க, முதல்ல தேர்வு செய்யிறது இது போல உண்மை சம்பவங்களை அடிப்படையாக  கொண்ட கதையா தான் இப்போ இருக்கு. அதிலயும் எல்லோரயும் திரும்பி பாக்க வைக்கனும்னா கடைசில கண்டிப்பா கொடூரமா எதாவது நடக்கனும் அப்புடிங்குறதுல கரெக்டா இருக்காங்க. அவுங்க இந்த மாதிரியான கதையை தேர்வு செய்ய இன்னொரு காரணம் தயாரிப்பாளர்கள். ஒரு இயக்குனரோட முதல் படத்துக்கே 30 கோடி பட்ஜெட்ல படம் எடுக்க எந்த தயாரிப்பாளரும் தயாரா இருக்க மாட்டாங்க.

ஆனா இதுபோலான உண்மை சம்பவங்களை படமாக்குறேன், இயல்பா நடக்குறத எடுக்குறேன்னு சொல்லிகிட்டு இருக்க இயக்குனருங்களுக்கு, கற்பனைவளம் குன்றி தானாக எந்த கதையையும் யோசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுறாங்க என்பதே உண்மை. .இப்போ சமீபத்துல ஹிட்டான "களவானி" படம் கூட இதை ஒத்ததே. எங்க ஊரு பக்கம் (ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை) என்ன நடக்குதுங்குறத அப்புடியே படம்மெடுத்துருக்கரு சற்குணம். இது அவர் சின்ன வயசுலேருந்து பாத்து பழகிய ஊரும், ஊர் மக்களோட வெளிப்படுமே. கற்பனை காட்சிகள் என்று அதில் எதுவுமே இல்லை. அவர் இதேபோலான இன்னொரு கதையை தேடிகிட்டு இருப்பாரு இப்போ. கண்டிப்பா அவரு அடுத்த படம் எடுக்க ரொம்ப நாள் ஆகும்.

இதனாலயே பல இயக்குனருங்க, ரெண்டு மூணு படத்துலயே காணாம போயிடுறாங்க.சினிமா துறையில உள்ள நுழையிறது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் துறையில் நிலைத்து நிற்பது. சினிமாவை சினிமாவாக எடுக்குறவங்கதான், திரைத்துறைய நீண்ட காலமா ஆட்சி செஞ்சிகிட்டு இருக்காங்களேயொழிய, உண்மையை எடுக்குறேன்... இயல்பான சினிமா எடுக்குறேன்னு சொன்னவங்க இல்லை.

இவ்வளவு படம் எடுத்தும், இப்போதும் எந்த இடைவெளியும் இல்லாம தொடர்ந்து படம் எடுத்துகிட்டு இருக்கும் k.s.ரவிகுமார், சுந்தர்.C, ஷங்கர் எல்லாருமே கற்பனை கதை, கற்பனையான காட்சிகள் போன்றவற்றினாலேயே இன்னும் திரைத்துரையில் நிலைச்சி நிக்குறாங்களே தவற இயல்பான சினிமாவினாலேயோ, உண்மைகதைகளை படமாக்கியாதலோ அல்ல. (A.வெங்கடேஷ கூட இந்த லிஸ்டுல சேத்துக்கலாம்...ஹி ஹி).

எப்போதாவது செய்தால் தான் வித்தியாசமான முயற்சி. எப்போதும் அதை போலவே செய்ய நினைத்தால் வீண்முயற்சியாகவே செல்லும் இது மாதிரியான இயக்குனர்கள் சில இயக்குனர்களுக்கு புரிந்தால் சரி.

Monday, November 22, 2010

நகரம்-அசத்தலான மறுபக்கம்


Share/Bookmark
வியக்கவைக்கும் திருப்பங்கள் அதிகம் இல்லை. அனல் பறக்கும் சண்டை காட்சிகள் அதிகம் இல்லை. படம் பாக்குறவங்கள சீட்டோட நுனியில உக்கார  வைக்கிற மாதிரி எந்த காட்சிகளும் இல்லை. ( இப்ப வர்ற படத்துக்கெல்லாம் படம் எப்படா விடுவாய்ங்க, எப்படா எழுந்து ஓடலாம்ங்குறதுக்காக தான் ரசிகர்கள் சீட்டோட நுனியில் உக்கார்ந்து இருக்காங்கங்குறது வேற விஷயம்)

வேற என்ன தான் இருக்கு இந்த படத்துல?

தியேட்டர குலுங்க வைக்கிற வடிவேலுவின் காமெடி காட்சிகளே அவை. வடிவேலுவை சரியாக உபயோக படுத்தினா படத்தை நகர்த்த வேறு எதுவும் தேவை இல்லை என்பதை ஏற்கனவே நிரூபித்த சுந்தர்.C, இந்த படத்திலும் அதே யுக்தியை கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார். படத்தை தனி ஆளாக தூக்கி நிறுத்துறாறு வடிவேலு. ஸ்டைல் பாண்டியாக வரும் வடிவேலுவின் காட்சிகளுக்கு தியேட்டரே குலுங்குகிறது. குறிப்பாக வடிவேலுவின் நூறாவது திருட்டுக்கு சக நண்பர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி, போலீஸில் மாட்டிக் கொள்வது கலக்கல்.

கேட் செல்வமாக சுந்தர்.C. முன்னால் ரவுடி திருந்த முயற்சித்து, சந்தர்பங்களால் திரும்பவும் பழைய பாதைக்கே தள்ளப்படுகிறார். யதார்த்தமான நடிப்பு. ஏற்கனவே பார்த்து பழகிய காட்சிகளானாலும் சற்று மெருகேற்றி புதிய பானியில். எந்த காட்சியும் முகத்தை சுழிக்க வைக்கும் அருவை ரகம் இல்லை. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒரே வேகத்தில் சென்று முடிவடைகிறது.

மதுரை சம்பவத்திற்கு பிறகு, அனுயாவ ஹீரோயினா பாக்க கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. தமன் இசையில் என் பேரு க்ரிஷ்ணவேணி, புடிச்சா புளியங்கொம்பு பாடல்கள் OK. மத்தபடி பிண்ணனி இசை சொல்லிக்கொள்வது
போல் இல்லை.

நகரம்  - வின்னர், கிரி, தலைநகரம் வரிசையில் மற்றொரு ஆக்க்ஷன்+காமெடி கலக்கல்

Thursday, November 11, 2010

கவுண்டரின் பார்வையில் உத்தமபுத்திரன்


Share/Bookmark
(கோயில் காளை பட்த்தில் வரும் அந்த மைக் செட் காமெடியை நினைவு படுத்திக்கொள்ளவும்)


 இடம்: உத்தமபுத்திரன் படம் ஓடும் தியேட்டர். தலைவர் கவுண்டர் டிக்கெட் கவுண்டர்ல டிக்கெட் எடுக்குறதுக்காக நிக்கிறாரு... அந்த நேரத்துல செந்தில் மொத ஷோ படம் பாத்துட்டு பாடு பாடிகிட்டே வெளிய வர்றாரு..

செந்தில்: சட்டி சுட்டதடா.. கை விட்டதடா.... 


கவுண்டர்: டேய் திருட்டு விசிடி வாயா... ஏற்கனவே உன் கை அடுப்புல வச்சி கருக்குன மாதிரிதான் இறுக்கு... இதுல சட்டி சுட்டது எங்க தெரிய போகுது... சரி படம் எப்புடிடா இருக்கு?

செந்தில்: (சோகமான குரலில்) அண்....ண்ணேன்...

கவுண்டமணி: அட சொல்றா.....

செந்தில் :  அண்....ணேன்....

கவுண்டமணி : அடடடா... சின்ன பையன்ங்குறது கரெக்டா இருக்குடா...  நா என்ன படம் நல்லாருக்குன்னு சொன்னா, உன்னை இன்னொரு தடவ டிக்கெட் போட்டு அழச்சிட்டு போ ன்னு சொல்லபோறனா என்ன? இரு நாயே.. உன்ன படம் பாத்துட்டு வந்து வச்சிக்கிறேன்.

(3.30 மணி நேரத்திற்கு பிறகு )

செந்தில் வீட்டு திண்ணைல உக்காந்து பாட்டு பாடிக்கிட்டு இருக்க, கவுண்டர் ரெண்டு காதையும் தாங்கி புடிச்ச மாதிரி கைய வச்சிகிட்டு, மெல்ல வர்றாரு. 

கவுண்டர் : ஆஹ... ஆஹ..... ஆஹ... ஏண்டா சொல்லல?

செந்தில்: அண்...ணேன்....

கவுண்டர் : அப்பயிலருந்து நொண்ணேன் நொண்ணேன்னு சொல்றியே தவற படம் ஏன் நல்லா இல்லை சொல்லல?

செந்தில் : அண்ணேன் அண்ணேன்னு சொல்ல வருது... ஆனா படம் நல்லா இல்லை சொல்ல வரல...

கவுண்டர்:
ஆங்... அதெப்புடி சொல்லுவ... நானும் போயி சாவட்டும் மறச்சிருப்படா நீ... ஒரு மணி நேரமா ரெண்டு மணி நேரமா? 3.30 மணி நேரம்டா... எடையில எழுந்திரிச்சி உடியாந்துரலாம்னா கதவ வேற
மூடிட்டானுக... இதே படத்த நா வேற வேற பேர்ல இதுக்கு முன்னாடியே பாத்துருக்கேன். எம்பது தொண்ணூறு  வயசுல வர்ர கொழப்பமெல்லாம் எனக்கு இந்த படத்த பாத்தோன வந்துருச்சி... அப்புடியே என்ன கை தாங்கலா
கூட்டிகிட்டு போயி அங்க உக்கரவையி...

(அங்கு வடிவேலு வேக வேகமாக வருகிறார்)

வடிவேலு : என்னணே... ரெண்டு பேரும் நல்ல படம் பாத்தீங்களா?

கவுண்டர்: டேய்... போயிரு

வடிவேலு : உத்தமபுத்திரன், குவார்ட்டர் கட்டிங் ரெண்டு படத்தயும் ரெண்டு பேரும், ரெண்டு ரெண்டு தடவ பாத்துருப்பீங்களே?...

செந்தில்: வடிவேலு வேணாம்,,

வடிவேலு : அது எப்புடிண்ணே.. நா ஒரு மனுஷன்னு இங்க இருக்கேன்ல,,.. என்னயும் அழச்சிட்டு போகனும்னு தோனலயா உங்களுக்கு...

கவுண்டர்: டேய் நாதஸ்... அத இப்புடி குடு..

செந்தில் : இந்தாங்கண்ணே...

 கவுண்டர்: இந்தா குவார்ட்டர் கட்டிங் படத்துக்கு நைட் ஷோ டிக்கெட்டு... உனக்காகவே வாங்கி வச்சிருக்கேன்..

வடிவேலு : அவ்வ்வ்வ்வ்.. ரொம்ப நன்றிண்ணே... மிச்சத்த படம் பாத்துட்டு வந்து பேசிக்கிறேன்.... .

கவுண்டர் : படம் பாத்தப்புறம்  நீ உயிரோட இருந்தாதான நாயே... ஊருக்குள்ள நாளைக்கு ஒரு சாவு உறுதியாருச்சிடோய்...ஊ.... ஊ...

Monday, November 8, 2010

ஏழாம் அறிவு


Share/Bookmark
அக்டோபர் 29... மாலை 5.20...சென்னை கிண்டி.... பண்டிகை விடுமுறைக்காக அவரவர் தம் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தமையால், பறவைகள் குன்றிய வேடந்தாங்கலாக காட்சி தந்தது பிரதான சாலை. எந்த நேரத்திலும், வானம் தனது மழை மலரை தூவ தயாராக இருப்பதை கண்டு அவரவர் கடைகளை மூடிவிட்டு, மழைக்கு முன் வீடு செல்லவேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். வாகன புகை அதிகம் கலக்காத தூய்மையான காற்றை சுவாசிக்க  முடியுமானால் அது இன்று தான் என்று நினைக்கும்படியான தூய்மையான சில்லென்ற காற்று அனைவரையும நனைத்துக் கொண்டிருந்தது.

அங்கு கேட்ட அந்த இருவருக்கிடையேயான வாக்குவாதம், இயற்கை காட்டிய மழை பயத்தை சற்றும் சட்டை செய்வதாக தெரியவில்லை. சாலையின் வலதுபுற நடைபாதையில் சென்று கொண்டிருந்த அவர்களில் சற்று பருமனான தேகத்துடன், சராசரி உயரத்தை விட சற்று அதிகமாக வளர்ந்திருந்தவன் கார்த்திக். நாத்திகம் பேசுபவன். அருகில் செல்பவன் விஜய். இவனுக்கு இருபத்து மூன்று வயசா? என்று பார்ப்பவர்கள் கேட்கும்படியான, பள்ளி மாணவன் போலான உடலமைப்பு. கருப்பு என்று சொல்ல முடியாத கலர். கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவன். ஆனால் தற்போது  இவர்களுக்குள்ளான வாக்குவாதம் அதனால் அல்ல. பின்பு எதனால்?...

" டேய் மச்சி... நா முன்னாடியே சொல்லிருக்கேன் அது என் ஆளு... அவள பத்தி
தப்பா பேசுறத இதோட நிறுத்திக்க..." என்றான் விஜய்.

"டேய் நா என்னடா தப்பா சொன்னேன்... உண்மைய தான சொன்னேன்.. உன்
ஆளுங்குறதால என்னால மாத்திலாம் சொல்ல முடியாது.." என்றான் கார்த்த்

"டேய் இதான் மரியாத உனக்கு.. இதோட நிறுத்திக்க"

"என்னடா ரொம்பதான் பண்ற,... உன் ஆள மேக்கப் கம்மியா போட்டு வர சொல்லு ன்னு சொன்னது ஒரு தப்பாடா? நேத்து ரவி கம்பெனிக்கு வரலன்னுதான் உனக்குதெரியும் ஆனா அவன் ஏன் கம்பெனிக்கு வரலன்னு உனக்கு தெரியுமா?"

"ஏன்?"

"ஏன்னா முந்தாநாளு உன் ஆளு மூஞ்ச க்ளோஸ் அப்ல பாத்துருக்கான். அப்ப
பயந்தவந்தான். இன்னும் ஜொரம் விடலயாம்.. டாக்டர் "நீங்க எதையோ பாத்து
பயந்துருக்கீங்க" ன்னு கேட்டதுக்கு கூட "நேந்து நைட் பேய் படம் பாத்து
பயந்துட்டேன்"ன்னு சொல்லி சமாளிச்சிருக்கான்...."

"போங்கடா போங்கடா... கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை? என்னிக்காவது ஒரு நாள் என் ஆளோட அருமை உங்களுக்கெல்லாம் தெரியும்டா"என்று கார்த்திக்குக்கு பதிலளித்த விஜயின் பார்வை சாலையின் மறுபுறத்தை நோட்டம் விட்டு, அந்த முப்பத்தைந்து வயது மதிக்கதக்க மனிதரிடம் பார்வை நிலை கொண்டது. அவர் யாரிடமோ கைபேசியில் பரபரப்பாக பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர் பேசிக்கொண்டிருந்த தொணியை பார்த்தால் அவரின் மனைவியிடம் தான் பேசிக்கொண்டிருப்பார் என ஊகித்தான் விஜய்.

விஜயின் செவியும், வாயும் கார்திக்கின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்துக்கொண்டிருந்தாலும் கண்மட்டும் சாலையின் மறுபுறம் இருந்த அந்த மனிதரையே பார்த்துகொண்டிருந்தது. காரணமாக இல்லை. நாம் வழக்கமாக ஒரு எறும்பை பார்தால், அது கடைசிவரை,எங்கு செல்கிறது, என்ன செய்கிறது என்பதை பார்ப்பது போலவே, விஜயும் அவரைபார்த்துக் கொண்டிருந்தான். பலமாக வீசிய காற்றில், புழுதிகளும், சருகுகளும் பறக்க ஒரு வார பத்திரிக்கைகளின் பக்க அளவுள்ள ஒரு பேப்பர் துண்டு அந்த மனிதரின் முகத்தில் சென்று முகத்தை மூடியது. அதனை எடுத்து மீண்டும் காற்றிலேயே பறக்க விட்டு விட்டு, பேச்சை தொடந்தார். அந்த பேப்பர் துண்டு அருகில் இருந்த அரசால் நடப்பட்ட சாலையோர செடியின்  கூண்டு பகுதியில் மாட்டிக்கொண்டு வேறு எங்கும் செல்ல முடியாத சிறை கைதியானது.

சிறிது நேரத்தில், கைபேசியை அணைத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு,
சாலையை கடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இன்னும் ஏனோ அவரையே கவனித்துக் கொண்டிருந்தான் விஜய். சாலையின் விளிம்பில் நின்றுகொண்டு சாலையை கடக்க வாகனங்களை பார்த்துக்கொண்டிருந்த அவர், மறுபடியும் தனது கைபேசியை எடுத்து காதில் பதித்து ஏதோ நினைப்பில் சாலையை கடக்க ஆரம்பிக்க, அவர் முழுவதும் கடப்பதற்குள் ஒரு டேங்கர் லாரி அவரை கடந்து சென்றது. ஒரு சில வினாடிகள் தான்... அவரின் இதயத்தை துடிக்க கட்டளையிடும் மூளை அவருக்கு சற்று இரண்டடி தொலைவில் சிதறி கிடந்தமையால் அவரின் இதயம் இயக்கத்தை நிறுத்தியிருந்தது.

இரண்டு நிமிடத்தில் அவரை சுற்றி, பெரிய கூட்டம். வெகுஅருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர் விஜயும், கார்த்திக்கும். விஜய் ஒரு வித குழப்பத்தில் தனியாக கிடந்த அந்த மூளையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் இருந்த போக்குவரத்து காவலர் அனைவரையும் கலைந்து போக சொல்ல, கார்த்திக் விஜயின் கையை பிடித்துஇழுத்துக் கொண்டு, கூட்டத்திலிருந்து விடுபட்டு வெளிவந்த தருணம், அவன் பற்றியிருந்த கையை வேகமாக விடுவித்துக்கொண்டு ஓடி, அருகில் இருந்த செடியின் அடிப்பகுதியில் சற்றுமுன் தின்ற உணவுகளை கக்கினான் விஜய். அங்கு அவன் பார்த்த காட்சியின் விளைவே அது. இன்னும் வயிற்றை புரட்டிக்கொண்டு வந்தது. சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு நிமிர்ந்த அவன் கண்ணில் அந்த கூண்டில் சிக்கியிருந்த பேப்பர் பட்டது.

அது அவர் முகத்தில் வந்து மூடிய காட்சியும்,அவர் அதை எடுத்து மீண்டும் பறக்க விட்ட காட்சியும் நினைவில் வந்து சென்றன. உடனே அந்த காகித துண்டை அதிலிருந்து விடுவிக்க, அது ஒரு நாளிதழின், கிழிந்த ஒரு பகுதி என்பது தெரிந்தது. அதனை திருப்பி அதிலிருந்த செய்தியை படித்த அவன் முகம், ஒரு விதமான அமானுஷ்யத்தை உணர்ந்தது.

" வேலூரில் டேங்கர் லாரி மோதி வாலிபர் தலை சிதறி சாவு "

என்ற தலைப்பில் ஒரு வாலிபரின் உடல் சாலையில் இறந்து கிடப்பது போலான ஒரு புகைபடத்துடன் கூடிய அரைபக்க செய்தி அதில் இடப்பட்டு இருந்தது. இங்கு நடந்ததும் அதே போல ஒரு சம்பவம் தான். இந்த பேப்பர் எப்படி சரியாக அவர் முகத்தில் வந்து..இது தற்செயலா அல்லது நடக்க போவதை உண்ர்த்த வந்ததா? யோசித்த விஜய்,வேகமாக திரும்பி கார்த்திக்கிடம் அதை காண்பித்து, நடந்ததை கூறினான்.

" டேய் இதுல எதோ ஒண்ணு இருக்குடா? இல்லன்னா எப்புடி கரெக்டா அது அவர் மேல வந்து விழுந்துச்சி... .." என்று ஏதேதோ பேச தொடங்க

கார்த்திக் அந்த பேப்பரை கையில் வாங்கி, காற்றில் விசிறி அடித்துவிட்டு விஜயின்கையை பற்றி இழுத்துச்செல்ல, காற்றில் பறந்த அந்த காகித துண்டை பார்த்தவாறே நடந்தான் விஜய்.

அடுத்த பதிப்பில் தொடரும்...

Monday, October 25, 2010

ஜாக்கி அண்ணனுக்கு என் வாசகர் கடிதம்


Share/Bookmark
இது ஜாக்கி அண்ணனுக்கு என்னுடைய வாசகர் கடிதம். அவரது வாசகர்களுக்கான கடிதமும் கூட. இதனை அவருக்கு அனுப்பினால், தனிக்கை செய்யப்பட்டு, வழக்கமான ஜாக்கியின் புகழ்பாடும் வாசகர் கடிதமாகவே வெளியிடப்படும் என்பதால் என்னுடைய பதிவிலேயே வெளியிடுகின்றேன்.

ஜாக்கி அண்ணனைப் பற்றி நான் எழுதிய மூன்று பதிப்புகளுக்கும், வெளியிட முடியாத, ஆபாச வார்த்தைகளில் என்னை திட்டி பல பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. இது சம்பந்தப்பட்டவரின் தரப்பிலிருந்தோ, சம்பந்தப்பட்டவரிடமிருந்தோ அல்லது அவருக்கு சம்பந்தமில்லாத எதிரிகளிடமிருந்தோ வந்திருக்கலாம் (மூன்று இடங்களிலும் இருந்து வந்துஇருக்கிறது என்பதே என் ஊகம்), ஆனால் அதை
பற்றி எனக்கு கவலை இல்லை.

என் பதிவிற்கு எதிராக பின்னூட்டம் இட்ட அனைவருமே, "உனக்கு ஏன் இந்த அக்கரை", "ஜாக்கி அவ்வாறு தான் எழுதுவார், உன்  வேலையை பார்த்துக்கொண்டு போ" என்றவாறு கூறினார்களே தவிற, ஜாக்கியின் பதிவுகள்
தரமானவை. அதை ஏன் ஏளனம் செய்கிறீர்கள் என ஒருவர் கூட கேட்கவில்லை. "உங்கள் பதிவுகள் ஆபாசமானவை" என்பதும், "உங்கள் பதிவுகள் ஆபாசமாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்" என்பதும் ஒரே அர்த்தம் தான்.முதலாவது கத்தியை எடுத்து நேராக நெஞ்சில் செருகுவது. இரண்டாவது முதுகுவழியாக குத்தி முன்னே இழுப்பது. நான் செய்தது முதல் ரகமே.

"சக பதிவரை எப்படி ஏளனம் செய்வது? அடுத்தவரை பற்றி விமர்சிக்க நீங்கள் யார்?" என்று பலர் கேட்டிருக்கின்றனர். ஒரு திரைப்படத்தை விமர்சிக்கும் உரிமையை தாங்களுக்கு யார் தந்தது? ஒரு நடிகரையோ, நடிகையையோ அல்லது ஒரு இயக்குனரோ அவரது வேலையை சரியாக செய்யாவிடில், அவரை சாடும் உரிமையை தங்களுக்கு யார் தந்ததோ அவரே தான்
எனக்கு சக பதிவரது தவறை சாடும் உரிமையையும் தந்தார்.

மேலும் ஜாக்கி அண்ணனின் உடல் அமைப்பை கேலி செய்திருக்கிறேன் எனவும், நடிகர் செந்திலின் புகைப்படத்தை இட்டு ஜாக்கியை அவமதிக்கிறேன் என்றும் கூறியிருக்கின்றனர் சிலர், நிச்சயமாக இல்லை. நண்பர் இளவரசன் அவருடைய பதிப்பின் தலைப்பு செந்தில் நடிக்கவிருப்பதாக இருந்த "ஆதிவாசியும் அதிசய பேசியும்" படத்தின் தலைப்பை ஒத்து இருந்ததாலேயே செந்திலின் படத்தை இட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, அதை தொடர்ந்து அதை தழுவி என் பதிப்பு இருந்ததாலேயே நானும் அதே புகைப்படத்தை உபயோகிக்க வேண்டியதாயிற்றே தவிற, ஜாக்கி அண்ணனை கிண்டல் செய்வதற்காக அல்ல.

எனக்கு ஒன்று புரியவில்லை. செந்தில் என்றால் உங்களுக்கு என்ன அவ்வளவு இளக்காரமா? அவரும் வாழ்வின் அடிமட்டத்திலிருந்து முன்னேறியவரே. "செந்திலின் பட்த்தை இட்டு ஜாக்கியை அவமதிக்கிறீர்கள்" என்று நீங்கள் கேட்கும் இந்த தொணியில்  செந்தில் அல்லவா அவமதிக்கப்படுகிறார். சரி அதை விடுங்கள். இந்த கேள்விகளை கேட்டவர்களுக்காகவே இந்த பதிப்பில் அரவிந்த்  சாமியின் படத்தை இட்டிருக்கிறேன். சந்த்தோஷமா? அரவிந்த சாமியின் தரப்பிலிருந்து என்னிடம் சண்டைக்கு வந்தால் என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை.

வாழ்வின் அடிமட்டத்திலிருந்து வந்தவன். லோக்கல். இதெல்லாம் ஒருவர் ஆபசாமா எழுதலாம் என்பதற்கு தகுதிச் சான்றிதழ்களா?
என் பதிப்பில் இருந்த ஒரு ஒரு வார்த்தைக்கு அதுவும் தமிழ் திரைப்படங்களில தனிக்கை செய்யப்படாமல் வெளியிடப்பட்ட அந்த ஒரே ஒரு வார்த்தைக்காக என்னிடம் சண்டைக்கு வந்தவர்கள் ஏராளம். அவர்கள் அவரிடம் இதுபோல கேள்விகளை கேட்டிருந்தால் அவர்  முன்னரே இதைப்பற்றி யோசித்திருப்பார்.... சரி என்னால இதுக்கு மேல தம் கட்ட முடியாது.

நெற்றிக்கண் திறப்பிணும்... ச்ச... ச்ச...

கெட்ட வார்த்தையில் என்னை திட்டினாலும்
குற்றம் குற்றமே...

Nextu... Restu....

Friday, October 22, 2010

ஜாக்கி விவகாரம் - உலக தலைவர்கள் அதிர்ச்சி


Share/Bookmark

இளவரசன் என்பவர் ஜாக்கி அண்ணனை அவதூறாக பேசி அவமதித்த விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மதுரை, தேனீ உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று முழு கடையடைப்பு கடைபிடிக்கப்பட்டது. சென்னையில் இன்று ஜாக்கியின் ஆதரவாளர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டதில் இளவரசனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அங்கு ஏற்பட்ட கலவரத்தில், பதினாறு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் நாளை, UAE, US, USSR போன்ற பல நாடுகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் உலக தலைவர்கள் பலரும் இந்த வெறிச்செயலுக்கு கடுமையான கண்டனங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு.

(குறிப்பு: ஒவ்வொரு தலைவர்கள் பேச்சை படிக்கும் போதும், அவர்கள் தொணியில் கற்பனை செய்து கொண்டு படியுங்கள்)

கலைஞர் டிவியில் முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள கண்டன அறிக்கை:

"தமிழர்களே.. தமிழர்களே....
நீங்கள் ஜாக்கியை கடலில் தூக்கி எறிந்தாலும்
அவர் ஆபாசமாகத்தான் எழுதுவார்..
அதை பார்த்து நீங்கள் அவர் follower ஆகலாம்"

எனது அருமைத் தம்பி ஜாக்கி, சமுதாயத்தில் சில விஷக்கிருமிகளால்
அசிங்கப்படுத்தப்பட்டார், அவமானப்படுத்தப்பட்டார், ஏளனப்படுத்தப்பட்டார்,
கேவலப்படுத்தப்பட்டர், காரி உமிழப்பட்டார் என்ற செய்தியை கேட்டவுடன் நான் மிகுந்த துன்பம் அடைந்தேன், தீராத மன உலைச்சலுக்கு ஆளானேன். இதுபோன்ற கொடுமை இனிமேல் நடைபெறாமல் இருக்க, நாளை சட்ட மன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அதன்படி இனி ஜாக்கியைப்பற்றி புகழ்ந்து ஒரு வரியேனும் இடம் பெற்றிருந்தால்தான் ஒரு வலைப்பதிவுக்கு 'வரி' விலக்கு அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புக்கு மூன்றெழுத்து
அறிவுக்கு மூன்றெழுத்து
தம்பிக்கு மூன்றெழுத்து
ஜாக்கிக்கு மூன்றேழுத்து
அவருக்கு பிடித்த"செக்ஸி" க்கு மூன்றெழுத்து
அவர் எழுதும் "டிஸ்கி" க்கு மூன்றெழுத்து
அவர் அடிக்கும் "விஸ்கி" க்கும் மூன்றெழுத்து

டி.ஆர் குரல் டிவியில் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

யிய்யாய்... டண்டனக்கா....

எவன்டா அவன் என் உடன்பிறப்பு ஜாக்கிய கிண்டல் பண்ணது. என்னோட குரல் டிவில ஜாக்கிய வச்சி "புதிரா புனிதமா" மாதிரி "ஜலஜாவா ஜல்சாவா" ன்னு ஒரு நிகழ்ச்சி நடத்தி TRP ரேட்டிங் ah increase பண்ணிக்கலாம்னு பாத்தா, எவன்டா என்ன மாதிரி (கரடி) வந்து காரியத்த கெடுத்தது. நீ வேணும்னா இளவரசனா இருக்கலாம்.. ஆன என் பையன் குரலரசன்.. இன்னோரு பையன் சிலம்பரசன்... அப்புறம் என் பொண்டாட்டி..."

ரிப்போர்ட்டர்: சார் சார்... ஜாக்கிய பத்தி சொல்லுங்கன்னா உங்க குடும்பத்த பத்தி பேசுறீங்க...

யோவ்.. இருய்யா... அப்புடி ஆரம்பிச்சி கடைசியா வருவேன்ல... இப்ப பாரு பட்டைய கெளப்புறேன்

"ஜாக்கி எழுதுறது சாண்ட்விச்சு
எங்க வீட்டுல எல்லாரும் நான் வெஜ்ஜூ
இன்னொரு தடவ எழுதுன கைவச்சு
உன் மேல நாங்க நடத்துவோம் கல்வீச்சு"


அது மட்டுமல்லாமல் பாகிஸ்தானின் AAJ NEWS தொலைக்காட்சிக்கு பின் லேடனின் அல்கொய்தா அமைப்பிலிருந்து வந்த ஒரு குறுந்தகட்டில், ஜாக்கியை பற்றி தவறாக எழுதியவர்கள் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டு
இருந்தது.

அதில் பின் லேடன் பேசியதாவது

" உதுமாக்கி அப்துகாமியோ ஜாக்கி துலாஹி அபு
இன் ஹியாமி முகாபு ரிமேசியா இளவரசு, முத்துசிவா ரஸிமானி
கதிபுதா ரஹோ பிதாமி ரிஸ்தியா.....ஜெய் ஜாக்கி"

நடிகை ஷகீலா இன்று சூர்யா டிவிக்கு அளித்துள்ள பேட்டியில்

"என்னோட ரசிகர் மன்ற தலைவரான ஜாக்கிய பத்தி இப்புடி அவதூறா பேசுறத என்னால அனுமதிக்க முடியாது. என்னோட படங்கள எடுக்குற டைரக்டர்ஸ் நிறைய பேரு ஜாக்கியோட blog ல இருந்துதான் வசனத்த எடுத்து போட்டுக்குவாங்க.. அதவிட அவர் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்ல என்னோட படங்கள தான் அதிகமா வச்சிருக்காரு. ஜாக்கி இருக்குறதால
என்னோட படங்களுக்கு ஆகும் விளம்பர செலவும் குறையும். இத வன்மையா
கண்டிக்கிறதுக்காக நா ஒரு படத்துல குடும்ப பொண்ணா நடிக்க போறேன்" என்று கூறி முடித்தார்.

ஒருபுறம் ஜாக்கிக்கு ஆதரவு பெருகினாலும், மறுபுறம் ஜாக்கி கலாக்கப்பட்டது சரிதான் எனவும் சிலர் அவருக்கு எதிராகவும் கோஷங்களை பரப்பி வருகின்றனர்.

கேப்டன் டிவில் நமது கேப்டன் அளித்துள்ள பேட்டி உங்களுக்காக:

நான் ஜாக்கிய பாத்து கேக்குறேன் " ஏண்டா நீ என்ன காந்தியா, நேருவா, சுபாஷ் சந்திர போஸா, அம்பேத்காரா... பாக்கீஸ்தான் தீவிரவாதிய கூட நா மன்னிச்சிருவேன்.. ஆன பொம்பள புள்ளைகள பத்தி ஆபாசமா பேசி எழுதுற உன்ன எந்தகாலத்திலயும் மன்னிக்க முடியாது.. மன்னிப்புக்கு அப்புறம் தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்த ஆபாசம்...அவ்வ்வ்வ்வ்வ்"

ஜாக்கியின் வக்கிரத்தை பார்த்து வெகுண்ட தலைவர் கவுண்டமணி முதன் முதலாக ஒரு தனியார் தொலைக்காட்ச்சிக்கு அளித்துள்ள பேட்டியில்

"இந்த நாயி இது மாதிரியெல்லாம் எழுதுதேன்னு நாம சும்மா போனா அது பின்னாலயே வந்து பொச்ச புடிச்சி கடிச்சி வச்சிரும். இதயெல்லாம் விட்டு வைக்ககூடாது. வெட்டி வைக்கிறதுதான் சரி"

என்றார் தனக்கே உரிய பானியில்.

அதோடு ஜாக்கியின் சக நண்பர்களே அவரால் அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று ஜாக்கி வெளியிட்டுள்ள ஒரு பதிப்பில் அவரை பற்றி வெளியாகியுள்ள செய்திகளை மறைப்பதற்காக, அவர் நண்பர்களுக்கு வந்த அசிங்கமான மிரட்டல் கடிததின் சுட்டியை கொடுத்திருக்கிறார். அவரைப்பற்றி தவறாக எழுதப்பட்ட (ஜாக்கியின் பார்வையில் தவறாக உண்மையில் சரியாக) வலைப்பதிவுகளின் சுட்டியை ஏன் அதில் இடவில்லை எனவும் அவரின் நண்பர்கள் கேள்வி
எழுப்புகின்றனர்.

ஜாக்கி நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த மனம் திறந்த பேட்டி அவர் நண்பர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஜாக்கிக்கு எதிராக AJF ( Anti Jackie Force) என்று ஒன்று உருவாகியிருப்பதாகவும், அவை ஜாக்கி தனது ஆபாசமான எழுத்து நடையை மாற்றும் வரை ஓயப்போவதில்லை எனவும் தெரிவித்ததாக துபாயிலிருந்து வரும் செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.

நன்றி: கலைஞர் டிவி, குரல் டிவி, கேப்டன் டிவி, AAJ NEWS

Thursday, October 21, 2010

தர்மம் வென்றது.. இல்லை வென்றது ஜாக்கி


Share/Bookmark

"தர்மத்தின் வாழ்வு தான்னை சூது கவ்வும்
ஆனால் தர்மம் மறுபடி வெல்லும்..."

என்ற கூற்று மறுபடியும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது எங்கள் ஜாககி அண்ணன் விஷயத்தில்..... அவரை பற்றி அவதூறாக வலைப்பதிவில் பேசிய இளவரசன், நான்அவருக்கு விடுத்த கடுமையான கண்டானத்தால் , தான் சேற்றில் கல்லை விட்டு எறிந்தது தவறு என உணர்ந்து
ஜாக்கியின் ரசிகர்களிடம் நான் கேட்கும் மன்னிப்பு..

எனும் தலைப்பில் உலகெங்கும் உள்ள ஜாக்கி ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அத்தோடு மட்டுமல்லாமல் அகில உலக ஜாக்கி ரசிகர் மன்றத்தில் கோ.ப.செ பதவிக்கு அவரை பரிந்துரைக்குமாறும் என்னிடம் தொலைபேசியில் கேட்டுக்கொண்டார். இப்போது தெரிந்திருக்கும் அவருக்கு ஜாக்கி யார் என்று. அவருக்கு மட்டும் இல்லை. அவரை போன்ற மற்றவர்களுக்கும் நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.

சித்தூர் தாண்டுனா காட்பாடி
ஜாக்கிய சீண்டுனா நீ dead body

S(e)ix க்கு அப்புறம் seven டா...
ஜாக்கிக்கு அப்புறம் எவன்டா.....

ஜெய் ஜாக்கி !!!!

Wednesday, October 20, 2010

ஜாக்கி அண்ணன் கலாய்க்கப்பட்டதற்கு என் கண்டனம்


Share/Bookmark


நான் எப்போதும் காலைல ஆபீஸ் போனோன மொதல்ல எங்க ஜாக்கி அண்ணன் blog
ah தான் படிப்பேன். அப்படிப்பட்ட எனக்கு இன்னிக்கு காலைல ஒரு phone வந்துச்சி... "மச்சி
ஜாக்கி அண்ணன கலாய்ச்சிட்டாண்டா ஒருத்தன்... அவன் எதாது பண்ணனும்டா நாம"
என்று சொல்லு அந்து வலைப்பதிவு முகவரியயும் தந்தான்.

அதில் சென்று பார்க்கும் போதுதான் தெரிந்தது "வானம் என்ற போதி மரம்" என்னும் பெயரில் இளவரசன் என்பவர் "ஆபாச ஜாக்கியும் அதிசய டிஸ்கியும்" எனும் தலைப்பில் எங்கள் ஜாக்கி அண்ணனை பற்றி அவதூராக எழுதியிருப்பது. அவருக்கு பதிலடி கொடுக்கவே இந்த பதிப்பு. நீங்கள் கேட்கலாம் "உனக்கு ஏன் இந்த அக்கரை?
யாருக்கும் இல்லாத அக்கரை...?" என்று. நானே படிப்பேன். தினமும் படிப்பேன் எங்கள் ஜாக்கி அண்ணனின் வலைப்பதிவை.

ஆம் மிஸ்டர் இளவரசன். ஜாக்கி அண்ணன் அவருடைய வலைப்பதிவில் ஆபாச படங்களை சேர்த்தார். மக்களை கெடுக்க வேண்டும் என்பதற்காகவா? இல்லை. ஆபாச படங்களின் வலைமுகவரி தேடி நேரத்தை வீணடிக்கும் மனிதர்களின் கஷ்டங்களை போக்குவதற்காக.

தினமும் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் இல் ஒவ்வொரு கதா நாயகிகளின் படங்களை மாற்றினார். அவருக்கு பிடிக்கவில்லை என்பதற்காகவா? இல்லை. அனுஷ்காவின் படம் பிடிக்காமல் போனவர்கள் அசின் படம் போட்டால் திரும்பி விரும்பி படிக்க வருவார்கள் என்பதற்காக.

தினமும் நான்கு மணிநேரம் வலைப்பதிவில் செலவிடுகிறார். அதனால் அவர் வெட்டியாக இருக்கிறார் என்று அர்த்தமா? சத்தியமாக இல்லை. தினசரி அவருக்கு வரும் கடிதங்களில் எந்த கடிதம் அவரை திட்டாமல் வந்திருக்கிறது என்பதை தேடி எடுக்கவே அதில் மூணே முக்கால் மணி நேரம் வீணாகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? முரசொலியில் கலைஞர் கடிதம் இல்லாத பதிவை உங்களால் கண்டுபிடிக்க முடியும். ஆனால் எங்கள் ஜாக்கி அண்ணனின் வலைபதிவில் வாசகர் கடிதம் இல்லாத ஒரு பதிவை உங்களால் கண்டுபிடிக்க
முடியுமா?

நல்ல திரைப்படங்களுக்கு கூட நாராசமான பாணியில் விமர்சனம் எழுதினார்.
வேண்டுமென்றே செய்தாரா அதை? நிச்சயமாக இல்லை. ஏனென்றால் அவருக்கு அவ்வாறு தான் எழுத வரும். இதை அவரே அவரது பதிவுகளில் வெளியிட்டுரிக்கிறார். பத்தாம் வகுப்பில் 277/500 எடுத்த மாணவனின் வலைப்பதிவை இன்று தினசரி ஆயிரக்கணக்கனோர் படிக்கிறார்கள் என்ற அடிப்படை விபரமாவது உங்களுக்கு தெரியுமா? என்னவோ நீங்கள்
சொல்வதை பார்த்தால் அவர் பள்ளி பருவத்தில் "பருவம் 16" 'மாம்பழ ஆண்டி" போன்ற கதைகளை எழுதியதால் தான் அந்த மதிப்பண்கள் பெற்றார் என்பதை போல் இருக்கிறது.

உலக சினிமாவயே மூன்று பிரிவுகளில் வகைபடுத்த நினைப்பவர் எங்கள் அண்ணன் ஜாக்கி. அந்த மூன்று பிரிவுகள் என்னவென்றாவது உங்களுக்கு தெரியுமா? இப்போது தெரிந்த்து கொள்ளுங்கள். " பிட்டு படம்" "ஆபாச படம்" "A படம்" என்பதே அவை. அதற்காக அண்ணன் படும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமா? உலகின் அனைத்து மொழிகளில் ரிலீஸ் ஆகும்

அனைத்து படங்களையும் தினசரி பார்த்து நமக்கு விமர்சனங்களை சூடாக தருகிறார். அப்படி படம் பார்க்க நேரம் இல்லாவிடில் எதாவது பழைய ஆங்கில படங்களின் பெயரை மட்டும் படித்து விட்டு, அதற்கு அவராக ஒரு கதையை கற்பனை செய்துகொண்டு அதற்கு அவரே விமர்சனமும் எழுதுவாரே.. அந்த சேவைமனப்பங்கையா கேலி செய்கிறீர்கள்.

அப்புறம் "me the first" ன்னு comment போடுவபர்களை கடுமையாக சாடிய்ருக்கிறீர்கள். "என்னுடைய வலைத்தளத்துக்கு வந்தா comment போடாம போகக்கூடாது" என்று எங்கள் அண்ணன் விடுத்த அன்பு கட்டளையை மீறாமல், அவர் பதிவை type பண்ணிகிட்டு இருக்கும் போதே "me the first" ன்னு comment போடுறவுங்களோட சின்சியாரிட்டிய நீங்க கிண்டல் பண்ணீருக்கீங்க.

ஜாக்கி அண்ணனை அதிரடியா பேட்டி எடுத்த கழுகை நக்கலடிச்சிருக்கீங்க. இப்படி ஒரு வலைப்பதிவை வைத்துக்கொண்டு bebnoir blog க்கே சவால் விட்ட எங்கள் அண்ணன் ஜாக்கியை தவிர பேட்டி எடுக்க உகந்தவர் யாரேனும் உண்டா? "ஆன்மீகத்த பத்துன உங்கள் கருத்து என்ன?" என்ற கேள்வியின் உள்ளர்த்தம் உங்களைப்போன்ற மூடர்களுக்கு புரியாது தான், இப்போது தருகிறேன் விளக்கம் அதற்கு. நித்தியானந்தா, பிரேமானந்தா வரிசையில் ஜாக்கி எப்போது ஜாக்கியானந்தாவாக உருவெடுக்க போகிறார் என்பதே அதன் அர்த்தம். அந்த
நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அண்ணன் ஜாக்கி தனது பதிவுகள் மூலம் உலகுக்கு அடிக்கடி உணர்த்துவதை புரிந்து கொள்ள உங்களுக்கு அறிவு பத்தாது.

எதனால் எங்கள் அண்ணன் ஜாக்கி ஆனார் என்பது உங்களுக்கு தெரியும். ஜாக்கி ச்சான் மீது கொண்ட அளவுகடந்த பிரியத்தால். ஆனால நாங்கள் அவரை அந்த ஜாக்கியாக பார்க்கவில்லை. லாரியின் டயரை கழட்டும்போது அடியில் வைப்பார்களே ஒரு ஜாக்கி, அதுவாகத்தான் எங்களுக்கு அவர் தெரிகிறார். ஏனென்றால் பதிவுலகை தூக்கி நிறுத்திக்கொண்டிருப்பவரே எங்கள் எங்கள் ஜாக்கி தான்.

இறுதியாக ஒன்றே ஒன்று இளவரசன். எங்கள் ஜாக்கி அண்ணனை அவதூராக பேசியதற்காக உங்கள் மீது இ.பி.கோ....... ,,,,,,,,,,,,, ...... தத ப த,,,,,,,, எங்க ஜாக்கி அண்ணனுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை. எதாவது ஒரு பிரிவில் உங்கள் மேல் வழக்கு தொடருவார். We Will Meet In The Court.....

ஜாக்கி அண்ணேன்.. நீங்க எதுக்கும் கவல படாம ரெகுலரா போயிகிட்டு இருங்க... இவன் கெடக்குறான் சின்னப்பய........

Tuesday, October 19, 2010

என்ன கொடுமை 'தல' இது? -அஜித் ரசிகன்


Share/Bookmark

ஊர்ல பத்து பதினைஞ்சி ஹிட்டு படம் குடுத்த சூர்யா, தனுஷ் fan எல்லாம் சும்மா இருக்கானுங்க.. ஆனா ரெண்டே ரெண்டு ஹிட்டான படத்த வச்சிக்கிட்டு இந்த அஜித் fans பண்ற அலும்பு இருக்கே... அயூயோயோயோ...............

ஏன் தல நா தெரியாமதான் கேக்குறேன் இப்புடி தொடர்ந்து flop மேல flop ah குடுத்தீங்கன்னா, உங்க fans எல்லாம் எப்புடி விஜய் fans கிட்ட தைரியமா பேசுறது. நா என்ன வச்சிக்கிட்டா இல்லங்குறேன் ன்னு நீங்க சொல்றது புரியிது... ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சிக்கோங்க தல... உங்களோடfans எல்லாம் உங்க நடிப்ப பாத்து தானா சேந்தவியிங்கன்னு மட்டும் தப்பா நெனச்சிடாதீங்க. விஜய் அப்புடிங்குற ஒரு கேவலமான ஜந்துவோட fans ட்டருந்து தப்பிக்கிறதுக்காக தற்கொலைப்படையா மாறி வந்தவியிங்க தான் உங்க ரசிகர்கள்ல பாதிபேர்..

நீங்களே 'தல'ங்குற பேர்ல form ஆயிகிட்டீங்க.. 'அது" ன்னு ஒரு பஞ்ச் டயலாக் வேற பேசுறீங்க .அத நீங்க ரஜினிகிட்ட இருந்துதான் சுட்டீங்கன்னு உங்க ரசிகர்கள் பாதி பேருக்கு தெரியாது. நீங்க அந்த டயலாக்க பேசுற அழக பாத்தி ரஜினி அத பேசுறதயே நிறுத்திட்டாறு. அவரு கடைசியா அத பேசுனது
அருணாச்சலம் படத்துலதான்.உங்கல தல தலன்னு கூப்புடுறவியிங்கள வெளில தல காட்ட முடியாத மாதிரிபண்றீங்களே தல...இது நியாயமா?

நீங்க 'நடந்த' படங்கள் நிறைய இருந்தாலும் நடிச்ச படம்ன்னு பாத்தா அது ஏகன் மட்டும் தான். உங்களோட முந்தைய படங்களோட தாக்கத்தால அந்த படமும் மக்கள் கிட்ட ஒழுங்கா போய் சேராம போயிருச்சி. நீங்க டிவில வந்து அழுகாச்சியா பேட்டி குடுக்குறத பாத்தா எங்களுக்கு அழுகாச்சியாதான் வருது உங்கள பாத்து. ஆன நீங்க உங்க வேலைய கரெக்டா செய்யலயே தல.

படம் ஏன் ஓடலன்னு கேட்டா கார் ரேசுக்கு போனேன் இதுல concentrate பண்ண முடியலன்னு சொல்றீங்க. ஏன் கார் race la ஜெயிக்கலன்னு கேட்டா "போதிய
பயிற்சி இல்லன்னு சொல்றீங்க. கார் race la நீங்க 23 பேர்ல 21 வதா வந்துருக்கீங்க. நீங்க ரெண்டு பேர முந்தி வந்துட்டீங்கன்னு எங்களுக்கு சந்தோசம் தான் :-( . ஆனா அந்த ரெண்டு பேரும் கூட வழில accident la விழுந்துட்டதுனாலதான் நீங்க 21வது கூட வந்தீங்கன்னு....... நா சொல்லல தல.. மத்தவங்க சொல்றாங்க..

அத விட பெரிய காமெடி என்னனா பாலா உங்கள மெரட்டுனாறுன்னு நீங்க பயந்துருக்கீங்க. நாம கொஞ்சம் இழுத்து மூச்சி விட்டாலே அந்த ஈறுகுச்சி ரெண்டா ஒடஞ்சி விழுந்துடுவான். இதுல அவன் மெரட்டுனான்னு நீங்க மிஸ் கிட்ட complaint பண்ற மாதிரி சொல்றீங்க. அதோட பாலாவ தாக்குறதா நெனச்சி ஆழ்வார் படத்துல வச்சீங்களே ஒரு டயலாக்கு.. "நான் கடவுள்" ன்னு.. கருமம். நீங்க அந்த டயலாக்க பேசுறத அழக மட்டும் கடவுள் கேட்டுருந்தாருன்னா
"நான் இனிமேல் கடவுள் இல்லை" ன்னு சொல்லிட்டு ஓடிப்போயிருப்பாரு. ஆழ்வார பாத்து அழுதார் தான் அதிகம்.

நீங்க சினிமாவுக்கு வந்து இத்தனை வருஷம் ஆகியும் உங்களுக்கு என்ன வரும் என்ன வராதுன்னு உங்களுக்கே தெரியலயே தல. உங்க படங்கள் எல்லாம் இப்புடி flop ஆகும் போது ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் ஏன் இவளே gap விடுரீங்க. ஒருவேளை ரஜினிய follow பண்றீங்களோ? நீங்க இன்னும் அந்த level பக்கமே வரலயே தல.

ரஜினி படம் ரிலீஸ் ஆனோன அவரு இமயமலைக்கு போவாரு. அவரு ரெண்டு மாசம் கழிச்சி திரும்பி வந்தாலும் அவரோட படம் இங்க ஓடிக்கிட்டு இருக்கும். அவரு ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் gap விடுறதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா நீங்க உங்க படத்த மொத ஷோ பாத்துட்டு வீட்டுக்கு போறதுக்குள்ளயே உங்க படத்த தியேட்டர்லேர்ந்து
தூக்கிருவானுங்களே.. நீங்க ஏன் அப்புடி?

உதாரணமா நடிகர் விஜய எடுத்துக்குங்க.. எவ்வளவு அடி வாங்குனாலும் பயத்த மட்டும் கண்ணுல காமிக்க மாட்டாரு. "என்ன பாஸ் நேத்து அடிக்க வர்ரேன்னீங்க வரவே இல்ல" ன்னு சொல்லிட்டு அடுத்த படம் நடிக்க போயிருவாரு. இப்ப கூட மூணுபடம் at a time ல நடிச்சிக்கிட்டு இருக்காரு. வளர்ற புள்ள... தொழில் கத்துக்குற மொறை... ஆனா அவரோட மூணு படம் ஓடுன நாட்களை கூட்டி மூணால வகுத்தா உங்க படம் ஓடுன நாள விட கம்மியாதான் வரும்குறது வேற விஷயம்.. ஆனா அந்த சுறுசுறுப்பு உங்க கிட்ட இல்லையே தல..

ஊர்ல உள்ள புது டைரக்டருங்க எல்லாம் உங்கள வச்சி தான் டிரயல் எடுத்துகிட்டு இருக்காங்க.... ஏற்கனவே உங்க ரசிகர்கள் பாதிபேர் "இது ஆவுரதில்லை" ன்னு சொல்லிட்டு வேற ஆக்டருக்கு convert ஆயிட்டாங்க. இதே மாதிரி ட்ரயல் பாக்க விட்டீங்கன்னா, ஏற்கனவே தியேட்டர் ஆபரேட்டர் மற்றும் தான் உங்க படத்த பாத்துகிட்டு இருக்காங்க. அப்புறம் அதும் இருக்காது. ஏதாவது பாத்து பண்ணுங்க தல...

Saturday, October 2, 2010

எந்திரன் First Day -First Show -First Row


Share/Bookmark

காலைல 5.30 மணிக்கு அலாரம் அடிக்காம எந்திரிச்சது இன்னிக்கு தான்..சட்டுபுட்டுன்னு கெளம்பி சத்யம் தியேட்டருக்குஒரு 6.30 மணிக்கு போனா, ஊர்ல உள்ள மொத்த பேரும் அங்க இருக்காய்ங்க. என்ன மாதிரியே எல்லரும் அப்புடிதான் எந்திரிச்சிருப்பாங்க போலருக்கு.... ஒருத்தன் அங்க வந்து தான் பல்லே வெளக்குனாருன்னா பாருங்களேன்.. சத்யம்ல வழக்கமா வக்கிற பெரிய size banner la தலைவர பாக்கலாம்னு ஆசையா போன எனக்கு மிஞ்சுனது கடுப்பு தான்... இன்னும் அந்த பழைய பாஸ் (எ) பாஸ்கரன் banner ah மாத்தாம வச்சிருந்தாய்ங்க...ரசிகர் மன்றத்துல ஏற்பாடு செஞ்சிருந்த தாரை தப்பட்டைகள் கிழிய, அங்க சில ரசிகருங்க குத்தாட்டம் போட்டுக்கிட்டு இருந்தாங்க... 7.30 மணிக்கு show. டிக்கெட் வச்சிருந்த என் நண்பேன் வராததுனால, தியேட்டருக்கு எதுத்தாபுல நின்னு சுத்தி சுத்தி வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தேன்.

"தம்பி" அப்புடின்னு ஒரு குரல் கேட்டு side la பாத்தேன்...நாப்பது வயசு உள்ள ஒருத்தர் பக்கத்துல நின்னாரு.

"சொல்லுங்கண்ணே"

"தம்பி எக்ஸ்ட்ரா டிக்கெட் எதாவது இருக்கா.. எவ்வளவா இருந்தாலும் பரவால்ல"

"அய்யோ... இல்லண்ணே... எனக்கே என் frineds ரொம்ப கஷ்டப்பட்டு வாங்குனாங்கண்ணே... எக்ஸ்ட்ரா டிக்கெட் எதும் இல்லண்ணே...வேணும்னா காசி, கமலா ல ட்ரை பண்ணுங்கண்ணே... வாய்ப்பு இருக்கு"ன்னேன்..

"அங்கல்லாம் பொய்ட்டு தாம்பா இங்க வந்துருக்கேன்" ன்னாறு...

"அண்ணே நீங்க எங்களுக்கும் மே....ல இருக்கீங்க"ன்னு சொல்லிட்டு அங்கருந்து நகந்துட்டேன்... "

மணி 7.05.. இன்னும் பசங்க வரல... அங்க நடந்த சில அளப்பறைகல மொபைல் ல வீடியோ எடுத்துக்கிட்டு இருந்தேன்... அப்ப ஒரு Bajaj caliber வந்து ரோடு ஓரமா நின்னுச்சி... அத ஓட்டிகிட்டு வந்தவருக்கு ஒரு 55 வயசு இருக்கும்.. பின்னாடி இருந்தவருக்குஒரு 50 வயசு இருக்கும். ரெண்டு பேரும் தியேட்டர்ல உள்ள கூட்டத்த ஏற இறங்க ஒரு தடவ பாத்துட்டு பின்னடி இருந்த என்ன பாத்து

"தம்பி... 7 மணிக்கு ஒரு ஷோ இருக்குல்ல?"ன்னாங்க...

"ஆமா சார்... 7 மணிக்கு, 7.30 ஒரு ஷோ... கண்டினுயஸா இருக்கு சார்" ன்னேன்..

" ச்ச.. நானும் எல்லா ரசிகர் மன்றத்துலயும் சொல்லி வச்சிருந்தேன்பா...கடைசில எதுலயும் கெடைக்கல... ஏதாவது ரிசல்ட் தெரிஞ்சிச்சாப்பா.... படம் எப்புடி இருக்காம்... யாராவது பாத்தவங்க சொன்னாங்களா?"

"படம் சூப்பரா இருக்காம் சார்...லண்டன்லருந்து என்னோட friend oda friend கால் பண்ணாறாம் சார்" ன்னேன்..

"அப்பாடா... காலைலயே ஒரு நல்ல வார்த்தை சொன்னப்பா.. ரொம்ப சந்தோஷம்... என் பையன் கூட ஆஸ்திரேலியால இன்னிக்கு பாத்துட்டான், ஆன அவன்ட இருந்தும இன்னும் ரிசல்ட் தெரியல... சரி படம் எப்புடி.. ரஜினி எடுத்துட்டு போற மாதிரி இருக்காஇல்ல ஷங்கர் எடுத்துட்டு போற மாறி இருக்கா..?"

"சார் என்ன சார் இப்புடி கேக்குறீங்க...லண்டன்லருந்து ஒருத்தர் கால் பண்ணி சொல்றாருன்னா அது தலைவரால தான் சார்" ன்னேன்..

"இதான் வேணும்பா.. ரொம்ப சந்தோஷம்... நீங்க பாத்துட்டு ஒரு தடவ எனக்கு கால் பண்ணி சொல்லுங்க... படம் எப்புடி இருக்குன்னு" ன்னு சொல்லுஅவரு மொபைல் நம்பர குடுத்துட்டு கெளம்பிட்டாரு. எனக்கு அப்டியே புல் அரிச்சிருச்சி..இந்த வயசுல இப்புடியா...அதும் காலைல 7 மணிக்கே...தலைவரால் மட்டுமே, தலைவருக்காக மட்டுமே நடப்பவை இவையெல்லாம்..ஆறிலிருந்து அறுபது வரை இது போன்ற ரசிகர்கள் தலைவருக்கு மட்டுமே...

7.30 மணிக்கு பசங்கலாம் வந்தோன உள்ள போனோம்.... எல்லாரும் 1st day 1st show பாக்கதான் ஆசப்பட்டுவாங்க... ஆனா உள்ள போன அப்புறம்தான் தெரிஞ்சிது நாங்க 1st row லயே உக்கந்து படம் பாக்கபோறோம்னு...

முதல் காட்சியிலிருந்தே வித்யாசம்.. நிறைய வியப்பு...பிரமிப்பு...தலைவரின் நடிப்பில் இன்னொரு பரிணாமம்.. படம் வெளிவருவதற்கு முன்,ரோபோ அந்த படத்தின் copy, இந்த படத்தின் copy என்று சொன்னவர்கள் இனி வாய் திறக்க முடியாதபடியான திரைக்கதை. நெற்றிக்கண் படத்தில் இருந்த அந்த ரஜினியின் அதே வில்லத்தனம், தில்லு முல்லில் இருந்த அதே குறும்பு.. ஜானியில் இருந்த அதே துடிப்பு... அத்தனை காட்சியிலும் தலைவர் ஜொலிக்கிறார் ஷங்கரின் கைவன்னத்தில்.

படத்தின் கதை? சாரிங்க... அது ஷங்கரோட கதை.. நா சொன்னா நல்லாருக்காது.... நீங்களே பாத்து தெரிஞ்சிக்குங்க... இதுக்கு மேல பெஸ்ட்டா எடுக்க முடியாது.வேறெந்த படமும் இதுக்கு மேல பெஸ்ட்டா இருக்க முடியாது.

மொத row la உக்கார்ந்து பாத்ததுனால படம் முடியும் போது கழுத்து bend ஆயிருச்சி.. எந்திரிச்சி நிமித்துனாலும் கழுத்து மட்டும் சாய்ஞ்சபடிக்கே இருக்கு.

முழு திருப்தியோட படம் பாத்துட்டு வெளில வந்தோம். அப்ப அடிவயிற்றிலே ஒரு சிறிய மாற்றம்... என்ன? இயற்கை அன்னை வந்துருக்காங்க... மூணு மணி நேரம் படத்த வெறிக்க வெறிக்க பாத்ததுல உச்சா போக மறந்துட்டேன்.. செரி rest room போயிட்டு, போயிட்டு போவோம்ன்னு போனேன். உள்ள போயி வாஷ் பேசின் பக்கத்துல நிக்கும் போது என் தோள்ல ஒரு கை விழுந்துச்சி.. திரும்பி பாத்தா என்கிட்டடிக்கெட் கேட்ட அந்த அண்ணேன்.

" தம்பி டிக்கெட் வாங்கிட்டேன்.. வெளில ஒருத்தரு குடுத்தாறு...600 ருவா தான்" ன்னாறு..

"ஆ... ஆ... ஆறுனூருவாதானாண்ணே... ரொம்ப சந்தோஷம்ணே"ன்னு வெளிய வந்து காலைல என்டபோன் பண்ண சொன்னவருக்குphone பண்ணி சொன்னேன்... " சார்... படம் நிஜமாவே தாரு மாறு சார்.... தல பிண்ணிருக்காரு."

"தம்பி..ரஜினி fan ங்குறதுக்காக சொல்லாதீங்க... ஷங்கருக்காக சொல்லதீங்க.. உண்மைலயே படம் எப்புடி இருக்கு?"ன்னாறு

"இதுல பொய் சொல்ல என்ன சார் இருக்கு... படம் 100 நாள் ஓடும் சார்.. இங்க இல்ல US லயே நூறு நாள் ஒடும்" ன்னேன்

"அப்பா.... இந்த நல்ல செய்தியை சொன்ன நீ வாழ்க... நின் குலம் வாழ்க.. உன் புகழ் ஓங்குக" ன்னு சொல்லிட்டு வச்சாரு,எனக்கு திரும்பவும் புல்லரிக்க ஆரம்பிச்சிருச்சி...

திரையிடப்படும் முன்பு உலகத்தையே திரும்பி பார்க்க வத்த இந்த ரோபோ, இனி அனைவரயும் விரும்பி பார்க்கவைக்கும்.

Monday, September 13, 2010

எந்திரனை சீண்டாதே!!


Share/Bookmark


"ரஜினி தனது மகள் திருமணத்திற்கு ரசிகர்களை அழைக்காததால் ரசிகர்கள் அதிருப்தி"

"தனது மகள் திருமணத்திற்கு ரசிகர்களை வரவேண்டாம் என கூறிய ரஜினி, எந்திரன் திரைப்படத்திற்கு அவர்களை வரவேண்டாம் என கூறுவாரா?"

இதுதான் போன வாரம் சில முக்கியமான தமிழ் வார இதழ்கள்ல பரபரப்பான செய்தி...என்ன ஒரு அறிவுபூர்வமான கேள்வி? ஏண்டா எந்திரன் படமும், சவுந்தர்யா கல்யாணமும் ஒண்ணாடா??எந்திரன் படத்த 2600 ப்ரிண்ட் போட்டு உலகம் full ah ரிலீஸ் பண்ராய்ங்க. அதே மாதிரி சவுந்தர்யா கல்யாணமும் தமிழ்நாட்டுல உள்ள அத்தனை மண்டபத்துலயும் ஒரே நேரத்துல நடந்து, அதுக்கு எங்க தலைவரு ரசிகருங்கள வரவேண்டாம்னு சொல்லிருந்தா நீங்க கேக்குறது ஓரளவுக்கு நியாயம்...

செரி அத விடுங்கடா.... இப்போ ஆட்சி நடத்திக்கிட்டு இருக்குற அய்யா, அவரோட பையன், பொன்னு,பேரன், பேத்தி, ஒன்னு விட்ட சித்தி பையன் ன்னு இப்புடி பல பேருக்கு கல்யாணம் நடத்திருக்காரு.. இதுவரைக்கும் தொண்டர்களை கூப்புட்டுருக்காங்களா? கட்சி மாநாட்டுக்கு மட்டும், அனைவரும் வாரீர்... அலைகடலென வாரீர்...காட்டற்று வெள்ளம் போல வாரீர்ன்னு கூப்புடுவாங்கல்ல.. அப்பல்லாம் நீங்க எங்கடா போயிருந்தீங்க?

ஆங்ங்ங்ங்... அவியிங்கள கேட்டாதான் பத்திரிக்கை ஆபீஸ எரிச்சிடுவாய்ங்கல்ல... அந்த பயத்துல எவனும் கேட்டுருக்க
மாட்டீங்க... எங்க தலைவர கேள்வி கேக்க மட்டும், பல்ல காட்டிகிட்டு வந்துடுரீங்களேடா.. உங்க பத்திரிக்கை நல்லா ஓடனும்னா அவரு படத்த அட்டைல போட்டு வித்துக்குங்க.. அத விட்டுட்டு ஏண்டா அவர வம்புக்கு இழுக்குறதுலயேகுறியா இருக்கீங்க?...

ஆமா,,,,அது என்ன ரசிகர்கள் அதிர்ப்தி, ரசிகர்கள் ஆவேசம்... நாங்கதானடா அவரு ரசிகருங்க... நாங்க எங்கடா இதுமாதிரியெல்லாம்
கேட்டோம்.. நீங்களே எதாது போட்டுகிட்டு அதுக்கு எங்க பேர use பண்ணிக்க வேண்டியது....இனிமே ரசிகர்கள்னு மொட்டையா
போடாதீங்க... எவன் கேட்டான்னு படத்தோட போடுங்க.. ஏன்னா அவரு ரசிகருங்க யாரும் இது மாதிரி கேனத்தனமா
கேக்கமாட்டங்க.. இந்த மாதிரி அவரு பேர வச்சிகிட்டு ஊருக்குள்ள famous ஆகுறதுக்குன்னு சில பேரு சுத்திகிட்டு இருக்கானுங்க..

எங்களுக்கு அவரு அடிக்கடி படம் நடிச்சி ரிலீஸ் பண்ணா அதுவே போதும்.. இது மாதிரி கல்யாணத்துக்கு கூப்புடல...பேரனோட காதுகுத்துக்கு கூப்புடலன்னு யாரும் நெனக்க மாட்டோம்... இது மாதிரியெல்லாம் எழுதுறது இதுவே கடைசி
தடவையா இருக்கனும்.. ஏன்னா அடுத்த தடவை பேச்சே கெடையாது.. வீச்சு தான்.....

எங்கள் வழி அவர் வழி...

அவர் வழி தனி வழி.....

Wednesday, September 8, 2010

அந்த நேரம் அந்தி நேரம்-III


Share/Bookmark இதற்கு முந்தைய பகுதிகளை படிக்க கேழே க்ளிக்கவும்
பகுதி 1
பகுதி 2
மறுநாள் 7.30 மணிக்கு அம்ம வந்து எழுப்பும் போது தான் விழிப்பு வந்தது கதிருக்கு. லேசாக ஜுரம் வருவதைப்போன்ற உணர்வு. எழுந்து முகம் அலம்பிவிட்டு பல் துலக்கும் போது யோசித்து பார்த்தான். இரவு நடந்ததெல்லாம் ஒரு கனவு போல தோன்றியது. ஆனால் ஓடி வரும்போது ஒரு சவுக்கு கிளையால் முழங்கையில் வாங்கிய கீரல் அது கனவல்ல என்பதை உணர்த்தியது.

காலை டிபன் சாப்பிடும் போது அம்மாவிடம் கேட்டான்.. "ம்மா... ஊருக்குள்ள எதாச்சும் பரபரப்பான நியூஸ்?"

"அமாடா... பக்கத்து வீட்டு சுகந்திக்கு பொண் கொழந்தை பொறந்துருக்குடா..."

"இது பரபரப்பான நியூஸ்ஸா... ஏம்மா காலைலயே கடுப்ப கெளப்புற... வெற எதாச்சும்?"

"வேற ஒன்னும் இல்லடா.. சீக்கிரம் சாப்டு வயலுக்கு கெளம்பு.. அப்பா காலைலயே போயிட்டாரு.."

"சரி சரி போறேன்.. எப்ப பாரு வயலு, வாய்க்காலுன்னுகிட்டு" என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே வெளியில் வந்துவண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். செல்லும் போது ஒரு யோசனை.. மீண்டும் அங்கு சென்று பார்த்தால் என்ன?
நேரம் ஆனது ஆகிவிட்டது.. அப்படியே சென்று ஒரு எட்டு பார்த்து விட்டு செல்வோம் என்று வண்டியை சவுக்கு தோப்பிற்கு திருப்பினான்.

ஏழெட்டு நிமிடங்கள்....தோப்பை அடைந்து நேற்று நின்ற இடத்தை தேடிப்பிடித்து வண்டியை நிருத்தினான்.சுற்றும், முற்றும் பார்த்தான்.யாரும் இருப்பதாக தெரியவில்லை. இறங்கி தோப்பிற்குள் சென்றான். சுற்றித்தேட, நேற்று அப்படியொரு சம்பவம் நடந்த்ததற்கான அறிகுறியே தென்படவில்லை. ஆனால் அந்த பெண்ணின் முகம் மட்டும் அச்சாக அவன் மனதில் பதிந்த்திருந்தது.
சந்தேகப்பட்டது சரிதான். கொலையாளி அந்த பெண்ணின் சடலத்தை பதுக்கியிருக்க வேண்டும். அப்படியானால் அவன், நேற்று இரவு நான் உள்ளே வருவதை கண்ட பின் எங்காவது சென்றுமறைந்திருக்க வேண்டும். நான் சென்ற பின்பு ஆர அமர சடலத்தை அப்புறப் படுத்தியிருக்க வேண்டும்.. ஒரு வேளை அவன் என் முகத்தை பார்த்திருந்தால் அது எனக்கும் பேராபத்தாயிற்றே.. என எண்ணிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தான்.

வண்டியில் ஏறி புறப்பட தாயாரகும் போது நண்பன் இளங்கோவின் ஞாபகம் வந்தது. இளங்கோவும் கதிரின் பள்ளித்தோழன்.கதிரின் மீது மிகுந்த பாசம் கொண்டவன். பத்தாம்வகுப்பில் தேர்ச்சி பெறாததால், படிப்பிற்கு முழுக்கு
போட்டுவிட்டு ஊர் சுற்றிக்கொண்டிருந்தவன்.சிறு வயதில் தாத்தா கடையில் மிட்டாய் திருடி தின்ற அவனிடத்தில் அது மட்டும் தொட்டில் பழக்கமாய்
ஒட்டிக்கொண்டது. பின் அப்பாவின் சட்டை பணம், பக்கத்து வீட்டு வெண்கல சொம்பு என கண்ட இடத்தில் கை வைத்து மாட்டிக்கொள்பவன்.கொஞ்ச நாள் ஊர் சுற்றிகொண்டிருந்த அவன், அவனதுஅப்பாவின் புண்ணியத்தால் துபாய் செல்லும் வாய்ப்பை பெற்றான். அங்கு என்ன வேலை செய்தானோ, நல்ல சம்பார்தியம். இரண்டு வருடங்களுக்கு முன்புதான் ஊர் திரும்பினான். வந்தவுடன் திருமணம்..மாமனார் கொடுத்த வயல்காடுகளில் விவசாயத்தை பார்த்துக் கொண்டுு ஊரிலேயெ இருந்தான்.

அந்த சவுக்கு தோப்பு முடியும் எல்லையிருந்து நூறு மீட்டர் தள்ளி, வயலுக்குள் மண் பாதையில் உள்ளே சென்றால் வருவது தான் இளங்கோவின்
பம்புசெட்டுடன் கூடிய தென்னந்தோப்பும்், மாந்தோப்பும். சுருக்கமாக சொன்னால், அந்த மோட்டர் கொட்டகையிலிருந்து பார்த்தால் சவுக்கு தோப்பின்
பின் பகுதி பார்வைக்கு கிடைக்கும். இரவினில் சிலர், தேங்காய்களை திருடி சென்று விடுவதால், இளங்கோ குடும்பதினர் எவரேனும் இரவில்
அங்கு காவலுக்கு இருப்பது வழக்கம். ஒரு வேளை அங்கு இருந்தவர்கள் யாரையாவது பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அங்கு சென்று இளங்கோ
விடம் கூறினால் எதாவது விபரம் தெரியலாம் என்று எண்ணிக்கொண்டு, அந்த மண் பாதை வழியாக இளங்கோவின் மோட்டர் கொட்டகையை
அடைந்தான். அங்கு பம்பு செட்டிலிருந்து வந்த நீரை தென்னைமரங்களுக்கு பாய்ச்சிக்கொண்டிருந்தான் ஒருவன்... கதிர் தொடங்னான்

"ஏண்ணே இளங்கோ இல்ல?"

"இல்லையேப்பா... அவுக தம்பிக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணம். அதுக்காக யாரோ சொந்தக்காரவுகளுக்கு பத்திரிக்கை குடுக்கனும்னு,
காலைலயேகெளம்பி அவுகளும்அவுக பொஞ்சாதியிம் திருச்சி வரைக்கும் போயிருக்காக" என்றார்.

"ஓ... அப்புடியாண்ணே... சரி அவன் வந்தான்னா நா வந்துட்டு போனேன்னு சொல்லுங்க" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
இனி இதைப்பற்றி பேசுவதும், யோசிப்பதும் நமக்கு தேவையற்ற வேலை.. நேற்று இரவு நடந்ததை ஒரு கனவு போல நினைத்து மறந்துவிட
வேண்டியதுதான் என நினைத்துக்கொண்டு, வழக்கமான வேலைகளில் மூழ்க ஆரம்பித்தான்.

நாங்கு நாட்களுக்கு பிறகு...

வீட்டு ஒட்டு திண்ணையில் அமர்ந்து தேனீர் பருகியபடி எதோ ஒரு தொலைக்காட்சியின் செய்திதொகுப்பை பார்த்துக்கொண்டிருந்தான் கதிர்.

"கடந்த வாரம் தஞ்சையில் கணவன் மனைவி போல்,வந்து வங்கியில் இரண்டி கோடி ரூபாய் கொள்ளையடித்துச் சென்றவர்களை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும், அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன எனவும் காவல்துறை ஆய்வாளர் இன்று தெரிவித்தார்." என்ற செய்தியை ஒட்டி வங்கி கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆணுடன் நடுத்தர வயதுடைய ஒரு சேலை கட்டிய பெண்மணி உடனிருந்தார்.

கதிரின் முகத்தில் சட்டென ஒரு மாற்றம். இந்த் பொண்ணை எங்கயோ பாத்திருக்கேன்... பரபரவென இயங்கிய மூளை சட்டென தேடிப்பிடித்தது.
ஆம். அன்று சவுக்கு காட்டில் இறந்து கிடந்தவள் இவள் தான். ஒரு வேளை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகறாரில் அவள் உடனிருப்பவன் தான் அவளை கொன்றிருக்க வேண்டும் என ஊகித்தான்.

இவன் யோசித்துக்கொண்டு இருக்கும் போதே வெளியில் பைக் சத்தம் கேட்டது.. நண்பன் இளங்கோவும் அவனது மனைவியும் கையில் ஒரு பையுடன்
இறங்கினர். அவர்களை பார்த்ததும் கதிர் புரிந்து கொண்டான், தம்பியின் திருமண அழைப்பிற்காக வந்திருப்பதை. அவர்களை உள்ளே வரவேற்று அழைப்பிதழை பெற்ற பின்னர், இளங்கோவின் மனைவி கதிரின் தாயுடனும் தங்கையுடனும் பேசிக்கொண்டிருக்க, இவர்கள் இருவரும் வெளியில் உட்கார்ந்து பழங்கதைகளை பேசத்தொடங்கினர். இளங்கோ ஒரு, சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு தன் துபாய் கதைகளை கூற ஆரம்பித்தான்.இருபது நிமிடங்கள் கரைந்திருந்தன. இளங்கோவின் கையில் மூன்றாவது சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. "சாந்தி நேரம் ஆச்சு பாரு" என்று உள்ளே குரல் கொடுத்தான். சாந்தி கதிரின் தாய் தங்கையிடம் சொல்லிவிட்டு வெளியில் வர, இளங்கோ கையிலிருந்த மூன்றாவது சிகரட் துண்டை கீழே போட்டான். ஏனோ கதிரின் பார்வை அந்த சிகரெட் துண்டின் மேல் போக, அன்றைய சம்பவம் மனதில் ஓடியது.. "ச்ச.... அந்த கருமத்த எப்புடியாவது மறக்கனும்னு நெனைக்கிறேன்.. எதாவது வந்து அத ஞாபகப்படுத்திடுதே" என நினைத்துக்கொள்ள,

"பொய்ட்டு வர்ரேங்க" என்ற சாந்தியின் குரல் கேட்டு நிமிர்ந்த கதிர் அதிர்ந்தான். சாந்தியின் கழுத்தில் அன்றிரவு இறந்தவள் கழுத்தில் கிடந்த
மீன் டாலர் ச்செயின்...

****************
வண்டியில் இளங்கோவின் பின் அமர்ந்து சென்று கொண்டிருந்த சாந்தி கேட்டாள்
"என்னங்க.. எனக்கு என்னமோ இன்னும் பயமாவே இருக்குங்க... மாட்டிக்குவமோன்னு"

"ச்சீ.. லூசு... அந்த ரெண்டு பேரயும் தான் வெட்டி நம்ம தென்னந்தோப்புக்கு உரமா வச்சாச்சே... இனிமே CBI வந்தா கூட கண்டுபுடிக்க முடியாது..அவங்க கொண்டு வந்த பணமெல்லாம் நம்ம மோட்டர் கொட்டகைல பத்தரமா இருக்கு..கொஞ்ச நாள் போகட்டும்..பாத்துக்குவோம்"

"இல்லீங்க.. அன்னிக்கு யாரோ ஒருத்தன் எறங்கி வந்து பாத்தான்னு சொன்னீங்களே... அவன்?"

"யார்னு தெரியலடி... என்னையும் அவன் பாத்துருக்க வாய்ப்பு இல்ல.. அத விடு... தஞ்சாவூர்ல கொள்ளையடிச்ச பணத்த நம்ம ஊர்ல கொண்டு வந்து பதுக்கி வப்பாங்களாம்... விடுவமா நம்ம... " என்று சொல்லி இளங்கோ சிரிக்க உள்ளுக்குள் பயத்துடன் சாந்தியும் சிரித்தாள்.

Thursday, September 2, 2010

அந்த நேரம் அந்தி நேரம்- II


Share/Bookmark

இந்த பதிப்பு சென்ற பதிப்பின் தொடர்ச்சியே...முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும்.. பகுதி I

இதயம் உச்சகட்ட படபடப்பிற்கு சென்றது கதிருக்கு. சிறிது நேரம் செய்வதறியாது திகைத்து நின்றான்.உடல் லேசான நடுக்கத்திற்குட்பட்டது. ஒருபுறம் பயம் முழுமையும் ஆட்கொண்டிருந்தாலும், இன்னொரு முறைஅந்த ஒலி கேட்குமா என எதிர்பார்த்தான். ஆனால் கேட்கவில்லை.

கேட்டது ஒரு வேளை பிரம்மையா? கண்டிப்பாக அப்படி இருக்க வாய்ப்பில்லை. பெண் ஓலமிடும் சத்தம் கேட்டதே. ஏதாவது விலங்கினகளின் சத்தமா? காட்டுப்பூனை, நாய், நரியை தவிற வேறு எந்த விலங்கினங்களும் இங்கு இருக்க
வாய்ப்பே இல்லை. காட்டுப்பூனை சில சமயம் குழந்தை அழுவதைப்போன்ற சத்தமிடும். ஆனால் இது குழந்தையின் சத்தமும் இல்லை. வேறு என்னவாக இருக்கும்? நொடிப்பொழுதில் பல கேள்விகள் அவன் மூளையை குதறின.

வண்டியில் ஏறி உக்கார்ந்து கிக்கரை உதைத்தான். எஞ்ஜின் உயிர் பெற்றது. லேசான வெளிச்சத்துடன் ஹெட்லைட் எரிய ஆரம்பித்தது.இருப்பினும் போக மனதில்லை. என்னதான் அது என பார்த்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
பயத்தை விட மேலோங்கி நின்றது. வண்டியை சவுக்கு காட்டு பக்கம் திருப்பி வைத்துவிட்டு, இஞ்ஜினை அணைக்காமல்,ஹெட் லைட் வெளிச்சத்தில் தோப்புக்குள் இறங்க ஆரம்பித்தான்.

ரோட்டு பகுதியை விட்டு சற்று பள்ளமான இடத்தில் அமைந்திருந்தது அந்த தோப்பு. ரோட்டின் சரிவல் பகுதியில் மெல்ல இறங்கி கால் வைக்கும் போது ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு, ஐஸ்கட்டி கரைக்கப்பட்ட நீரில் கால் வைத்ததைப் போல. ஆம் அவன் கால் வைத்தது, ஆற்றிலிருந்து பாசனத்திற்காக ஊருக்குள் பிரித்து விடப்பட்ட வாய்க்காலில். சத்தமின்றி சென்றுகொண்டிருந்த அந்த நீரின் வெப்பநிலை மார்கழி குளிரால் ஒற்றை இலக்கத்தை அடைந்திருந்தது. மெதுவாக வாய்க்காலை கடந்து அந்த தோப்புக்குள் சத்தம் வந்த பகுதியை நோக்கி குத்து மதிப்பாக நடந்தான்.

சிறிது தூரத்திற்கு பிறகு வண்டியின் வெளிச்சம் பொருட்களை காட்ட மறுக்க, பாக்கெட்டிலிருந்து செல் போனை எடுத்து டார்ச்சை ஆன் செய்து இன்னும் சற்று உள்ளே சென்றான்.தரை முழுதும் சவுக்கு இலைகளால் மூடப்பட்டு இருந்ததால்
காலடிச்சத்தம் எதும் கேட்கவில்லை.அங்கிருந்து ஒரு பத்தடி தூரம் சென்றிருப்பான். அதன் பின் காடு மிக அடர்ந்திருப்பதால் செல்வது ஆபத்து என நின்றுவிட்டான்.

அதன் பின் டார்ச்சை அவனை சுத்தி ஒரு முறை அடித்து ஏதேனும் தென்படுகிறதா என நோட்டம் விட்டன். ஏதும் அகப்படவில்லை.சரி இது நமக்கு வேண்டாத வேலை கிளம்பலாம் என முடிவு செய்தபோது அது அவன் கண்ணில் பட்டது. தரையில் ஒரு சிறிய மின்மினி பூச்சி போன்றதொரு ஒளிப்புள்ளி. டார்ச்சையும் பார்வையயும் அதன் மீது செலுத்தி, குனிந்து பார்த்த போது தெரிந்தது..அது ஒரு அணைக்கப்படாத சிகரட் துண்டு.

இதில் ஏதோ விபரீதம் இருக்கிறது. கண்டிப்பாக இங்கு இருப்பது தவறு என உணர்ந்து திரும்பும் போது, தரையில் ஏதோ இழுபடுவது போன்ற சத்தம் கேட்டது. உன்னிப்பாக கேட்டன். ஆம் கண்டிப்பாக ஏதோ சத்தம் கேட்கிறது. மனதை இரும்பாக்கிகொண்டு சத்தம் வந்த பகுதியை நோக்கி டார்ச்சை அடித்துக்கொண்டு மெல்ல அடி எடுத்து வைத்தான்... சில அடிகள் நகர்ந்திருப்பான்...

அங்கு அவன் கண்ட காட்சி, அவன் ரத்த அழுத்ததை நொடிப்பொழுதில் உயரச்செய்தது. ஒரு பெண்ணின் உடல் கை, கால்களை தரையில் அடித்துக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, கசாப்பு கடையில் கழுத்து அறுக்கப்பட்ட கோழி இறுதியில் உயிருக்கு போராடுவதைப்போல.. அன்று குடித்த 5 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் அப்போதே வியர்வையாக வெளிவந்தது கதிருக்கு. மெதுவாக அந்த உடலின் மேல் டார்ச் வெளிச்சத்தை செலுத்தினான். ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்திருந்த அந்த பெண்ணின் உடலில் ஏதும் காயம் இருப்பதாக தென்படவில்லை.. மெதுவாக வெளிச்சத்தை சற்று மேலேற்றினான். கழுத்தில் ஆழமான ஒரு வெட்டு இருப்பதை கழுத்துப்பகுதியை முழுதும் நனைத்திருந்த ரத்தம் சொன்னது.. அவள் அணிந்திருந்த மீன் டாலர்
கோர்த்த அந்த ச்செயின் அவள் தாடைப்பகுதியில் தங்கி இருந்தது.

வெளிச்சம் முகத்தில் அடித்தபோது, அவள் கண்கள் இடப்புறமும், வலப்புறமும் இரண்டு முறை சென்று வந்து, பின் கதிரை நோக்கி பார்த்து அப்படியே நிலை குத்திப்போய் நின்றது. கை, கால்களின் அசைவும் நின்றிருந்தது. ஒரு விதமான பயம், அழுகை இரண்டும் சேர்ந்து அவனுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது.. திரும்பி பைக்கை நோக்கி செல்ல ஆரம்பித்தன். இந்த முறை நடக்கவில்லை
ஓடினான்..

அடுத்த பதிப்பில் முற்றும்....

Tuesday, August 31, 2010

அந்த நேரம் அந்தி நேரம்


Share/Bookmark
பட்டுக்கோட்டை..... மார்கழி மாதம்.. இரவு மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது

ட்ரிங்ங்ங்ங்ங்ங்... அய்யா தியேட்டரில் இரவுக்காட்சி முடிந்ததற்கான மணி ஒலித்தது.. சிறிது நேரத்தில் கலைத்து விடப்பட்ட தேன் கூட்டிலிருந்து தேனீக்கள் வெளிப்படுவதை போல மக்கள் வெளிப்பட்டனர். இரண்டு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் ஒரே horn சத்தங்களும், பைக் ஸ்டார்ட் செய்யும் சத்தங்களுமாக பரபரப்பு தொற்றிக்கொண்டது.

மூன்றாவது வரிசையில் நிருத்தப்பட்டிருந்த தனது splendor plus ல் இக்னீஷியனை உசுப்பி, கிக்கரை உதைத்து உயிர்பித்தான் கதிரேசன்.பின் கதிரின் நண்பன் சுரேஷ், பின் சீட்டில் தன்னை அமரவைத்துக்கொண்ட பின்னர் இருவரும் கிளம்பினர். கதிரேசனுக்கு இருபத்து எட்டு வயது முடிந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தன.
உயரத்தில் ஆறடியை தொட்டிருந்தான். சிவப்பா கருப்பா என்று சொல்லமுடியாத கலர். B.sc படித்துவிட்டு ஊரில்அப்பவுடன் விவசாயத்தை பார்த்துக் கொண்டிருப்பவன்.சுரேஷ் கதிரின் பள்ளித் தோழன். ப்ளஸ் டூ வரை படித்திருந்த அவன் பட்டுக்கோட்டையில்ஒரு சிறிய தனியார் கம்பெனியில் கணக்கெழுதும் பணியில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.

சரியாக பத்து நிமிடம்.. நகர குடியிருப்பு பகுதிகள் மறைந்து தஞ்ஜாவூர் செல்லும் பிரதான சாலையில் பயணித்துக் கொண்டிருந்தனர். இருவரும். மார்கழிப்பனி இரவிற்கு நன்றாக வெள்ளையடித்து வைத்திருந்தது..வாகனத்தின் வேகத்தால் உடம்பு உறையும் அளவிற்குகுளிர்..

"டேய் இந்த குளுருல வந்து இந்த படத்த அவசியம் பாத்தே ஆகனுமாடா... அதுக்கு பகல்லயாச்சும் வந்துருக்கலாம்ல.." என்றான் சுரேஷ்.

"டேய் பகல்ல தான் வீடு, வயக்காடு, நெல்லுமூட்டை, உரமூட்டைன்னு பொழுது போயிடுது.. ராத்திரி வந்தாதான் நிம்மதியாபடத்த பாக்கலாம்..சரி விடு அடுத்த தடவ வர்ரப்ப வேணும்னா பகல்ல வரலாம்" என்று சொல்லிவிட்டு ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.வண்டி 60 கிலோமீட்டர் வேகத்தில் சீறிக்கொண்டு சென்றது.. அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் சாலையின் இருபுறங்களிலும் சில குடியிருப்பு பகுதிகள்.... வண்டியின் வேகத்தை குறைத்து சாலை ஓரத்தில் நிறுத்தினான்..

சுரேஷ் கீழே இறங்கிகொண்டு "சரிடா பாக்கலாம்.. பாத்து போ" என்றான்

"சரிடா" என சிரித்துக்கொண்டே தலையாட்டினான் கதிர்.

" டேய்.. நா வேணும்னா உன் கூட உங்க வீட்டுக்கு வந்துட்டு காலைல வரட்டுமா?"

"ச்ச..ச்ச... பரவாலடா... நீ போய் தூங்கு.நா பாத்துக்குறேன்.. காலைல முடிஞ்சா phone பண்ணு" என்று சொல்லிவிட்டு கிளம்பினான் கதிர்.

சுரேஷ் அவ்வாறு கேட்டதிலும் ஒரு காரணம் இருந்தது. கதிரின் ஊர் சுரேஷின் ஊரைப்போல பிரதான சாலையில் அமைந்தது அல்ல..அங்கிருந்து ஆறாவது கிலோ மீட்டரில் வரும் வலது பக்க பிரிவில் சென்றால் ஏழாவது கிலோமீட்டரில் அமைந்துள்ளதுதான்கதிரின் முள்ளுர் கிராமம். இடையில் எந்த குடியிருப்பு பகுதிகளும் கிடையாது. வெரும் வயல்காடுகளும் தோப்புகளும் நிறைந்தது.
பகல் நேரத்திலாவது, வயல்வேலை செல்வோர், வெளியூர் செல்வோர் என ஒன்றிரண்டு பேர்கள் அந்த வழியில் காணப்ப்ட்டாலும் இரவில் ஆள் அரவமற்ற பகுதியாகவே தென்படும்..அதிலும் அந்த பிரிவில் ஐந்தாவது கிலோமீட்டரில் வரும் சவுக்குத்தோப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். சுமார் அரைகிலோமீட்டர் நீளத்திற்கு சாலையின் இருபுறமும் நீள்கிறது அந்த சவுக்கு தோப்பு.

ஏற்கனவே அந்த ஊரில் சிலர், இரவில் அந்த வழியாக வரும்போது, குறிப்பாக அந்த சவுக்கு தோப்பு பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் வரும்போது தானாக நின்று விடுவதாகவும், சில வித்தியாசமான சத்தங்கள் அந்த பகுதியில் கேட்பதாகவும்கதை (?) கட்டி விட்டிருந்தனர். ஆனால் கதிர் அதுபோன்றவற்றை நம்புபவனல்ல..ஏற்கனவே பலமுறை இரவுக்காட்சி பார்த்துவிட்டு அந்தப்பகுதி வழியாக சென்றிருக்கிறான், எந்த இடையூருமின்றி.

அன்றும் அதே போல், சுரேஷை இறக்கிவிட்டு சென்ற கதிர் சிறிது தூரத்தில் "முள்ளூர் 7 கிமீ" என்று வலப்புறம் அம்புக்குறியிட்ட அந்த சாலைப்பலகை இருந்த இடத்தில் திரும்பினான். இப்போது சாலை விளக்குகள் முற்றிலும் அனைந்து, இருள் கவ்விக்கொண்டது. ஹெட் லைட்டின் உதவியுடன் நேர்த்தியாக சென்றுகொண்டிருந்தான். இருபுறமும் வயல்களில் வாழும் தவளைகள் வெளிப்படுத்திய பாரம்பரிய இசை பைக் சத்ததை விட அதிகமாக கேட்டது.

சவுக்குத்தோப்பு நெருங்கிகொண்டிருந்தது. என்னதான் கதிரேசன் அது போன்ற கட்டுக்கதைகளை நம்புவதில்லை என்றாலும், அந்த இடத்தை நெருங்க நெருங்க இதயத்துடிப்பு சற்று அதிகமானது என்னவோ உண்மைதான். அந்த பகுதியை விரைவாக கடந்து விடவேண்டும் என்பதறகாக, ஆக்ஸிலேட்டரை
முறுக்கினான். அதுவரை 40 கிலோமீட்டரில் சென்ற வண்டி, 55 கிமீ வேகத்தில் பறந்தது.

அந்த சவுக்குதோப்பு பகுதிக்குள் நுழைந்து கால் பகுதியை கடந்த பின்னர் வண்டியின் வேகத்தில் தானாக ஏற்பட்ட மாற்றத்தை அவனால் உணர
முடிந்தது.வேகம் மெல்ல மெல்ல குறந்து, இஞ்ஜின் இழுத்து இழுத்து வெட்டி தோப்பின் நடுப்பகுதியில் நின்று போனது. முற்றிலும் இருள் சூழ்ந்தது

கதிரின் பின்னந்தலையில் ஐஸ்கட்டிகளை வத்ததுபோன்றதொரு உணர்வு. முழுதும் வியர்த்திருந்தான். ஆனால் சில நொடிகளிலேயே வண்டி தானக நிற்கவில்லை என்பதும், பெட்ரோல் அளவு குறைந்து ரிசர்வ் ஆகி நின்றிருக்கிறது என்பதும், அப்பா பெட்ரோல் போட சொன்னதை மறந்ததும் நினைவிற்கு வந்தது. மனதுக்குள் சிறியதொரு மகிழ்ச்சி..லேசாக ஒரு மெல்லிய காற்று முகத்தில் தீண்டியதைப்போல உணர்ந்தான். பெட்ரொல் பாயின்டரை ரிசர்வுக்கு மாற்றி வத்து விட்டு, கிக்கரை உதைக்க ஆரம்பித்தன்.

ஒன்று... இரண்டு...மூன்று... இஞ்ஜினை உயிர்பிக்க முடியவில்லை.... அப்போதுதான் அந்த சத்தம் கேட்டது..

"வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்..........."

ஒரு பெண்ணின் குரல்....

அடுத்த பதிப்பில் தொடரும்.....

Friday, August 20, 2010

பதினாறு பருத்தி வீரர்கள்


Share/Bookmark
யாரு இந்த பதினாறு பருத்தி வீரர்கள்? விடாம மழை பேஞ்சி principal eh குவாட்டர் அடிச்சிட்டு குப்பற படுத்துருக்கும் போதுநாங்க போனாலே போவோம்னு காலேஜ்க்கு போனவனுங்களா? இல்லை... பக்கத்து காலேஜ் பசங்க எங்க காலேஜ்க்கு வந்து"யாருடா எங்க காலேஜ் சப்ப figure ku ரூட் போட்டது"ன்னு கேட்டப்ப அவயிங்க கூட சண்ட போட்டு தொரத்துனவனுங்களா? சத்தியமா இல்ல.. அப்பறம் யாரு இவியிங்க..

1.Sports day அன்னிக்கு புள்ளைங்க மேல மிக்சர கொட்டி வெளயாண்டவியிங்க

2.Sports meet கொடிய புடுங்கி தலைகீழா நட்டு அதுக்கு வந்தே மாதரம் ன்னு சல்யூட் அடிச்சவியிங்க

3.Chief guest பேசிக்கிட்டு இருக்கும் போது அவருக்கு ரெண்டடி பக்கத்துல கொண்டுபோயி வெடி வச்சிட்டு "அவ்வளவு சத்தமாவா கேக்குது" ன்னு கேட்டவியிங்க

4.சைக்கிள் ஓட்டத்தெரியாம ஓட்டிக்கிட்டு வந்த புள்ளைய கலாட்டா பண்ணி கீழ விழ வச்சவியிங்க

5.எல்லாத்துக்கும் மேலா சம்பந்தத்த (பெயர் மாற்றப்படவில்லை) சம்பந்தம் இல்லாம தகாத வார்த்தையில திட்டுனவியிங்க..

(குறிப்பு: அந்த பதினாறு பேர்ல நா இல்லீங்கோ)

உங்களுக்கு சம்பந்தம் யாருன்னு தெரியனும்ல.. சம்பந்தத்துக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. ஆனா சம்பந்தத்துக்கும் எங்க காலேஜ்க்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. ஏன்னா அவரு எங்க காலேஜ் proffessor. சம்பந்தத்துக்கும் எங்களுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. ஏன்னா அவரு எங்களுக்கும் ஒரு subject எடுத்தாரு. சம்பந்ததுக்கும் அவருக்குமே ஒரு சம்பந்தம் இருக்கு.ஏன்னா அவருதான் சம்பந்தம்.

Sprots meet function ah எல்லாம் நல்லா அஜால் குஜாலா கொண்ட்டாடிட்டு வந்துகிட்டு இருக்கும் போது கூட வந்தவன் கேட்டான்..

"நம்ம class ப்ரியா சாரில ரொம்ப அசிங்கமா இருக்கால்ல.."

"ஆமா.. ச்சுடிதார்ல மட்டும் கரீனா கபூர் மாதிரியா இருந்தா... ஏண்டா இப்டி ஆயிட்ட... ஆமா அவதான் இன்னிக்கு வரவே இல்ல போலருக்கே.. நீ மட்டும் எப்புடி பாத்த.."

"என்ன மச்சி... சம்பந்ததுக்கு அடுத்து ரைட்ல ரெண்டாவதா blue கலர் Saree கட்டிக்கிட்டு உக்கார்ந்து இருந்தாளே... அவதான?"

"ஆ...ஆ....அடப்பாவி..அடப்பாவி... அது நம்ம H.O.D மாலாடா..."

"சாரி மச்சி.. கண்பீசன் ல கண்ணு பீசாயிருச்சி" ன்னு கூலா சொல்லிட்டு அவன்பாட்டுக்கு போனான்.

அப்பவே தெரிஞ்சிது அவியிங்க அன்னிக்கு என்ன கண்டிஷன் ல இருந்தாயிங்கன்னு.அப்புடி இப்புடி போயி மட்டையாயிட்டோம். காலையில
மெஸ்ஸூக்கு போகும் போது ஹாஸ்டல் நோட்டீஸ் board la எதோ புதுசா ஒட்டிருந்தாயிங்க.. பசங்க நாலு பேரு அத வெறிக்க வெறிக்க
பாத்துக்கிட்டுருந்தாயிங்க..

என்ன இன்னிக்கு தேதி 14 தானே ஆகுது.. அதுக்குள்ள மெஸ் பில்ல ஒட்டிட்டாயிங்களா? எப்பவும் 2 ந்தேதி தானே ஒட்டுவாயிங்க...ஆனா அத இவிங்க திரும்பி கூட பாக்க மாட்டய்ங்களேன்னு நெனச்சிக்கிட்டு போய் பாத்தா.. அதுல எதோ புதுசா ஒட்டிருந்தாய்ங்க..

"கீழ்கண்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தினுள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக கல்லூரி முதல்வரை காலை பத்து மணிக்கு சந்திக்க தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" ன்னு போட்டு கீழ பதினாறு பேர் வரிசையா போட்டுருந்துச்சி..மூணாவதா என்னோட ரூம் mate பேரு.

"மாட்னாண்டா மாப்ள" ன்னு நெனச்சிக்கிட்டு வேக வேகமா ரூமுக்கு போயி கனவுல அவனோட lover க்காக ரவுடிங்ககிட்ட சண்ட போட்டுக்கிட்டு
இருந்த அவன எழுப்புனேன்.

"மச்சி.. மச்சி.. நோட்டீஸ் board la உன் பேரு போட்டுருக்காய்ங்கடா... எந்திரி..." ன்னேன்..

கஷ்டப்பட்டு கண்னுமுழிச்ச அவன் " என்னோட அருமையெல்லாம் இப்ப தான் இவியிங்களுக்கு தெரியுதா? என்னடா என்ன culturals co-ordinator ah செலெக்ட் பண்ணிட்டாய்ங்களா?"

"டேய் எருமை.. உன்ன course முடிக்கிறத்துக்கு முன்னாடியே நம்ம காலேஜ் "Old Boys Association" ல சேத்துருவாய்ங்க போலருக்குடா... நேத்து sports meet la நம்ம பசங்க விட்ட ரவுசுக்கு principal காண்டாயிட்டரு போலருக்கு... எதோ enquiry யாம்...உன்ன மட்டும் இல்ல பதினாறு பேர உடனே வந்து மீட் பன்ன சொல்லி போட்ருக்காய்ங்கடா...சீக்கிரம் கெளம்பு..."

உடனே அவனுக்கு பக்கத்துல படுத்துருந்தவன் கேட்டான் "squard la ஏன் பேரு இருக்கா மச்சி?"

"ஆமா இது australia tour போர indian cricket team oda squardu... நாயே...உனக்கெல்லாம் notice eh கெடயாதாம்... straight ah நீ வீட்டுக்கு கெளம்ப வேண்டியது தான்.. காலை சாப்பாட்ட மெஸ்ல சாப்டுட்டு அப்புடியே ஊருக்கு ஓடிப்போயிரு"

பத்து மணிக்கு principal ரூம்ல enquiry... ஆனா அங்க போனது அந்த பதினாறு பேர் மட்டும் இல்ல.. எங்க ஹாஸ்டல் ல இருந்த எல்லாரும்.மதியம் சாப்பாடு சமைக்கனுமேன்னு மெஸ்ல வேல பாக்குற அண்ணன மட்டும் அங்கயே விட்டுட்டு போயிருந்தோம்.

நாங்கல்லாம் அங்க சும்மா வேடிக்கை பாக்கதான் போயிருந்தோம்.. ஆனா principal என்னன்னா நாங்க அந்த பதினாறு பேருக்கு support பன்ன வந்துருக்கோம்னு தப்பா நெனச்சிட்டாறு....

"இந்தா பாருங்க நீங்க எல்லாரும் வந்ததுனால இவனுங்கல சும்மா விட முடியாது... நம்ம காலேஜ்க்குன்னு ஒரு இமேஜ் இருக்கு..இதுமாதிரி பசங்களால அது கெட்டுப்போக நா விடமாட்டேன். இத்தனை chief guest ங்க அங்க இருக்கும் போது இவ்ளோ ச்சீப்பாவா behave பண்றது..படிச்ச பசங்கதானே நீங்கல்லாம்.." ன்னு அவரு பேசிக்கிட்டு இருக்கும்போதே என் காதுல ஒருத்தன் சொன்னான்

"ச்ச பசங்க தப்பு பண்ணிட்டாய்ங்கடா... வெடிய இந்தாளுக்கு கீழ வச்சிருக்கனும்டா...."

"இந்த பசங்க மேல கண்டிப்பா action எடுத்தே ஆகனும்.... பத்துநாள் இவங்கள suspend பண்ணிருக்கோம்.... இவங்களுக்கு support பண்ணா நீங்க எல்லாருமே காலேஜ், ஹாஸ்டல விட்டு வெளிய போகவேண்டியிருக்கும்..." ன்னாரு..

ஆஹா.. plan B சூப்பரா இருக்கே... நம்ம support eh பண்ணல.. அதுக்குள்ள support பண்றோம்ன்னு சொல்லி பத்து நாள் லீவும் தர்றேங்குராரே.. அப்புடியே build up பண்ணிட வேண்டியதுதான்னு நெனச்சிக்கிட்டு உண்மையிலயே எல்லாரும் அவியிங்களுக்காக பேசுனோம்... எதிர் பாத்த மாதிரியே கடைசியா "எல்லாரும் பத்து நாள் ஹாஸ்டலுக்கோ, காலேஜுக்கோ வரக்கூடாதுன்னு" தீர்ப்பு சொல்லிட்டாரு..

"ஆஹா.. இது மாதிரி ஒரு ஆளுதாண்டா நம்க்கு principal ah வேணும்... யார்டா இவருக்கு வெடிவைக்கனும்னு சொன்னது...பிச்சிபுடுவேன் பிச்சி...எப்புடி பாத்தாலும் நம்ம ஆளுடா அவரு" ன்னு சொல்லிட்டு மெஸ்ஸூல மதிய சாப்பட்ட முடிச்சிட்டு சந்தோஷமா எல்லாரும் பத்து நாள் vacation னுக்கு ஊருக்கு கெளம்புனோம்..

இந்த நல்ல விஷயம் நடக்க காரணமா இருந்த அந்த பதினாறு பேரும் பின்னாட்களில் "பதினாறு பருத்தி வீரர்கள்" எனவும், "Team Sixteen" எனவும் எல்லோராலும் அன்போடு
அழைக்கப்பட்டனர்...

Thursday, July 29, 2010

சத்ரியன்


Share/Bookmark
"பொறுமையா இருப்பா... நீ இப்புடி கோவப்படுறதால கடைசில பாதிப்பு யாருக்குன்னா நமக்குதான்... உன்ன விட வயசுல மூத்தவன் சொல்றேன்... தயவு செஞ்சு கேளுப்பா..." என்றார் அந்த பெரியவர்..

"அதெப்புடிங்க முடியும்... பாதிக்கபட்டது நாங்க.. அதுக்கு சரியான பழி வாங்குனாதான் என் மனசு ஆறும்...எங்க அண்ணன அடிச்சே
கொன்னவன சும்மா விட்டு வைக்க சொல்றீங்களா?" கொதித்தான் பக்கிரி...

"சும்மா தான் இருக்கனும்....இப்ப உன்ன நம்பிதான் உன்னோட குடும்பமே இருக்கு...அதோட இங்க இருக்கவங்களுக்கெல்லாம் நீ தான்
தொழில் சொல்லித்தர்ற.. உனக்கு ஒன்னு கெடக்க ஒண்ணு ஆயிடுச்சின்னா இவங்களோட கதி.. நீ தானே அவங்களயெல்லாம் கரை சேக்கனும்...."

"எங்க அண்ணனோட சாவு இன்னும் என் கண்ணு முன்னாடியே இருக்கு... என்ன தடுக்காதீங்க...... அவன இப்புடியே விட்டா நாளைக்கு நம்ம பேரு சொல்றதுக்கு கூட யாரும் இருக்க மாட்டாங்க....எங்க அண்ணனோட ஆத்மா சாந்தி அடைய இத நாங்க செஞ்சே ஆகனும்..என்னடா சொல்றீங்க..."

"ஆமா... கண்டிப்பா செய்யிறோம்... " என்றனர் அவனுக்குப்பின்னால் இருந்தவர்கள்.

"என்னமோ நா சொல்றத சொல்லிப்புட்டேன்.. அதுக்கு மேல உங்க இஷ்டம்...செய்யிறத பாத்து செய்யிங்கடா... உசுற காப்பாத்திக்குங்க..."
என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் அந்த பெரியவர்,

ஓரு வழியாக உத்தரவு கிடைத்து விட்ட மகிழ்ச்சியில்

"டேய் எங்கூட ஒரு நாளு பேரு வரனும் இத செய்ய.. யார் யார் வர்ரீங்க..."

"கூட்டத்தில் உயர்த்தப்பட்ட கைகளில் நான்கு பேரை அழைத்தான்..

அவர்கள் கஜா, சாமி, திரு, மாண்டி..

"நா ஏன் உங்கள கூப்டேன்னா நீங்களும் அவனால பாதிக்கப்பட்டுருக்கீங்கன்னு தெரிஞ்சி தான்"

"ஆமாண்ணே.... எங்க உயிர் போனாலும் பரவால்லண்ணே... அவன செய்யிரோம்ணே..."

"எடுத்தோம் குவுத்தோம்னு எதயும் பண்ணக்கூடாது....அவன செய்யிறதுக்கு நாளைக்கு நைட் பத்து மணி சரியாஇருக்கும்..அவனுக்கு முன்னாடியே அவன் வீட்டுக்கு போயி நாம பதுங்கி இருக்கனும். சரியா பத்து மணிக்கு லைன் மாத்துறதுக்காக கரண்ட் கட் ஆகும். அந்த சமயத்த தான் நாம யூஸ் பண்ணனும்... ஒரே சமயத்துல தாக்குனாதான் அவனால சமாளிக்க முடியாது.. கஜா நீ அவன் கழுத்துல போடு... சாமி நீ கைல போடு...மாண்டி நீ முதுகுல போடு.... திரு நீ கதவுக்கு பிண்ணால நின்னு அவன் வரும் போது சிக்னல் தரனும்..ஒகே வா.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் மொத்தமும் சொதப்பிடும்.. சரியா..."

"சரிண்ணே..."

மறுநாள்... இரவு ஒன்பது மணி... மனோகர் வீட்டின் sofa விற்கு பின்பு ஒருவன்.. கட்டிலுக்கு அடியில் ஒருவன்...கதவிடுக்கில் ஒருவனாக
பதுங்கி இருந்தனர்.

சரியாக ஒன்பதரை மணி... மனோகர் வீட்டுக்குள் நுழைந்தான்... முகம் கை கால் அலம்பிவிட்டு நாற்காலியில் அமர்ந்து டிவி பார்க்கத்தொடங்கினான்.

மணி 9.55. 9.56...... 9.59..... 10.00

கரண்ட் கட்..... ட்ர்ர்ர்ர்ர்ர்ர்... என்ற சத்தத்துடன் டிவி அணைந்தது....

மறைந்திருந்தவர்கள் வெளிப்பட்டு திட்டமிட்ட படி தாக்க தொடங்கினர்.. கையில் ஒருவன் கழுத்தில் ஒருவன்... முதுகில் ஒருவனாக.."

"சாந்தி... அந்த கொசுவர்த்திய எடுத்துட்டு வா.... கரண்ட் கட் ஆனிச்சின்னா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியால என்று சொல்லிக்கொண்டே
கையில் கடித்த சாமியை ஓங்கி ஒரு அடி அடித்தான் மனோகர்... குடித்த ரத்தத்தை கக்கிவிட்டு சுருண்டு விழுந்தான் சாமி...

மற்ற நால்வரும் மனோகரை கடித்துவிட்ட திருப்தியில் பறந்து வெளியே சென்றன....

அரைமணி நேரத்துக்கு பிறகு

"அண்ணே... நாம திட்டப்படி அவன் ஒடம்புல மலேரியா கலந்த ரத்தத ஏத்தியாச்சி.. கண்டிப்பா மலேரியா வந்து ஒரு வாரம் படுத்துடுவான்..
அப்ப தெரியும் நம்ம யாருன்னு...ஆனா இந்த operation la நம்ம சாமி செத்துட்டானேண்ணே..." என்றான் திரு..

அவர்கள் முன் வந்து அவன் தோளை இருக்கி பிடித்தபடி பக்கிரி சொன்னான் இருக்கம் கலந்த பெருமிதத்தோடு

"சத்ரியனுக்கு சாவுல்லடா"

Sunday, July 25, 2010

அழகு ராஜா சைக்கிள் கடை-பாகம் II


Share/Bookmark
இடம்:ஆல் இன் ஆல் அழகு ராஜா சைக்கிள் கடை
நேரம் : காலை 11.30

கவுண்டர் : டேய் கருவாட்டு தலையா... என்னடா கடையே பாதி காலியா இருக்கு...எல்லா சைக்கிளும் எங்கடா?

செந்தில் : எல்லா சைக்கிளும் வாடகைக்கு போயிருச்சிண்ணே....
கவுண்டர் : இந்த ஊர் காரனுக சைக்கிள்ல எல்லாம் சுத்த மாட்டானுகளே... எல்லாம் கஞ்ச பயலுகளாச்சேடா..அவனுக எப்புடி இப்புடியெல்லாம்?

செந்தில் : அதெல்லாம் ஒரு தொழில் ரகசியம்ண்ணே..

கவுண்டர் : ஹய்யோ... எனக்கு சந்தோசமா இருக்கு... Blackberry செல்லம் நா உன்ன இவளோ நாளா தப்பா நெனச்சிட்டேண்டா.... நீ இவளோ நல்லா கடைய பாத்துக்குவன்னு தெரிஞ்சா நா உன்ன அடிச்சிருக்கவே மாட்டேன்... ஆமா டீ சாப்புடுரியா செல்லம்?

செந்தில் : இல்லண்ணே... அதெல்லாம் வேணாம்னே...

கவுண்டர் : இல்ல குட்டிம்மா... நீ எதாவது சாப்டே ஆகனும்... ஆமா... அப்புடி நீ என்ன பன்ன?

செந்தில் : அது ஒன்னும் இல்லண்ணே... "தமிழர்களே.. தமிழர்களே... நீங்கள் எங்க கம்பெனி சைக்கிளை குளத்தில் தூக்கி போட்டாலும் அது கட்டுமரமாகத்தான் மிதக்கும்.. அதில் ஏறி நீங்கள் சவாரி செய்யலாம்" ன்னு கலைஞர் பாணில ஒரு board எழுதி போட்டேண்ணே... எல்லா பயலுகலும் ஒடனே வந்து சைக்கிள் எடுத்துட்டு பொய்ட்டாய்ங்கண்ணே...காசு கூட வண்டிய விடும் போது குடுத்தா போதும்ன்னு சொல்லிட்டேண்ணே...

கவுண்டர் : அடப்பாவி... இந்த ஊர்காரனுக ரொம்ம மோசமானவனுங்கடா... உண்மயிலயே சைக்கிள கொளத்துல தோக்கி போட்டாலும்
போட்டுருவானுங்கடா... அடேய்... வால் டியூப் வாயா... உனக்கு எப்புடா இப்புடியெல்லாம் தோணுது?

செந்தில் : அதுக்கெல்லாம் கிட்னி வேனும்னே.. அப்பறம் அந்த டீ சொல்ரேன்னு சொன்னீங்களே... சொல்றீங்களா?

கவுண்டர் : உள்ள வா... போர்ன்வீட்டாவே தர்ரேன்........

(கதவு சாத்தப்படுகிறது)

அரை மணி நேரத்துக்கு பிறகு..

கவுண்டர் : வக்காளி இனிமே இதுமாதிரி எதாவது ஐடியா உனக்கு வந்துச்சி...மண்டையில நாலே முடி விட்டு வெட்டிப்புடுவேன்...படுவா..இந்த கடைக்கு எவன் வேலைக்கு வந்தாலும் ஒரு வாரத்துக்கு மேல இருக்க மாட்டேங்ரானு நானே ஒரு டென்ஷன்ல இருக்கேன்.

செந்தில் : ஒழுங்கா சம்பளம் குடுத்தா ஏன் எல்லாம் போரானுக... உங்க டென்ஷன போக்கத்தான் இன்னிக்கு இன்னும் ரெண்டு பேர கூப்டு வந்துருக்கேன்.

கவுண்டர் : டேய்... முன்னாடி வந்தவனுக மாதிரி சொதப்ப மாட்டனுகளே...

செந்தில் : இல்லண்ணே.. கண்டிப்பா சொதப்பாது... ஏன்பா இங்க வா..

சிம்பு வர்றாரு...

கவுண்டர் : அப்பறம்... தம்பி பேர் என்ன?

சிம்பு : என் தம்பி பேரு குரளரசன் சார்..

கவுண்டர் : டேய்..Jerry mouse வாயா... என்ன டகால்டியா? நா உன் பேர் என்னன்னு கேட்டேன்டா....

சிம்பு : என் பேரு சிலம்பரசன்.. சுருக்கமா சிம்புன்னு கூப்புடுவாங்க..

கவுண்டர் : அதெப்புடி சிலம்பரசன சுருக்குனா சிம்புன்னு வருது.... அதுக்கு பதிலா சிம்பன்சி ன்னு வச்சிக்க,.. கரக்டா இருக்கும்.

சிம்பு : சார்.. மரியாதையா பேசுங்க.. நீங்க இந்த மாதிரி பேசுறது எங்கப்பாவுக்கு தெரிஞ்சிது... சும்மாருக்க மாட்டாரு ஆமா..

கவுண்டர் : ஏன் சொரி செரங்கோட இருப்பானா? அப்புடியே பின்னாடி அந்த சைக்கிள தொடைக்கிறது யாருன்னு பாரு?

சிம்பு : சார்.. நா கூட உங்கள என்னமோன்னு நெனச்சிட்டேன் சார்... கரடிய வச்செல்லாம் வேல வாங்குரீங்க.. பெரிய ஆளு சார் நீங்க..ஆமா... ஏன் சார் அது வாயில பிளாஸ்திரி போட்டு ஒட்டிருக்கீங்க?

கவுண்டர் : டேய்... ஹெட் லைட் கண்ணா... நல்லா பாருடா.. அதான்டா உன்கொப்பன். ரெண்டடி தூரத்துல நின்னா அப்பாவயே அடையாளம் தெரியலயா உனக்கு? போனா போகுதேன்னு அவன வேலைக்கு சேத்தா, வந்ததுலருந்து, "சைக்கிள்ல இருக்கது ரிம்மு, நா நைட்டுல அடிக்கிறது ரம்மு, தமன்னா ரொம்ப ஸ்லிம்மு" ன்னு ஒரே அடுக்குமொழிலயே பேசிக்கிட்டு இருந்தான். அதான் வாயில ப்ளாஸ்திரிய போட்டு விட்டுட்டேன். உங்கப்பன் ஒருதனையே என்னால சமாளிக்க முடியல... உனக்கு இங்க வேல கெடயாது... அப்புடியே எந்திரிச்சி
ஓடிப்போயிரு..

சிம்பு : நா அழுகுறேன் சார்...

கவுண்டர் : டேய்... மங்கூஸ் மண்டையா.. நீ எந்தெந்த வேலைக்கு முழிய எப்புடி டைப் டைப்பா மாத்துவன்னு தெரியும்டி... இது ஒன்னும் டிவி நிகழ்ச்சி இல்ல. எனக்கு வெறி வர்ரதுகுள்ள ஓடிப்போயிரு.. டேய் அழகேசா அடுத்தவன் யார்டா?...

செந்தில் : அண்ணே.. இவருதாண்ணே எஸ்.ஜே.சூர்யா..

கவுண்டர் : என்ன எச்சக்கல சூர்யாவா?

செந்தில் : அய்யோ இல்லண்ணே... s.j.சூர்யா..

கவுண்டர் : ஒ.... சரி.. உன்ன பத்தி கொஞ்ஜம் சொல்லு..

S.J.சூர்யா: எத சார் சொல்ல சொல்ரீங்க... நா சின்ன வயசுல பெட்ல ஒண்ணுக்கு அடிச்சி வச்சப்ப எங்கம்மா அத பாத்து ஏண்டா ஏழு கழுதை வயசாகுது இன்னும் பெட்ல ஒண்ணுக்கு அடிச்சி வக்கிரியேன்னு என்ன பாதி தூக்கத்துல அழ அழ தர தர ன்னு பாத் ரூமுக்கு இழுத்துட்டு போவாங்களே... u want me to tell u abt thaaaaaaaaat....... எங்க பெரிய அண்ணன் birthday ku பைக் வாங்கி குடுத்தப்ப நானும் பைக் வேனும்னு எங்க அப்பாட்ட கேட்டு அழுதப்ப அந்த வழியா வந்த எங்கம்மா இவன் ஏன் அழுகுரான்னு கேட்டப்ப இவனுக்கும் பைக் வேணுமாம்னு எங்கப்பா சொன்னப்ப, இந்த வயசுலயே உனக்கு எதுக்குடா பைக்கு ன்னு என்ன எங்க
அம்மா என்ன போட்டு அடி அடின்னு அடிச்சப்ப.. எல்லாரும் சந்தோஷமா இருக்கும் போது நா மட்டும் அழுதுக்கிட்டு இருந்தானே u want me to tell u abt thaaaaaaaaaaaaaaaaaaat.....

கவுண்டர் : அடங்கப்பா.. suchitra வாயா... ஒட்டுனது போதும்டா... ரீலு அந்து போச்சி.. நீ பேச ஆரம்பிச்சா நிருத்தவே மாட்டியா? இனிமே உனக்கு no more questions.. straight ah appoinment தான். u r selected. போய் வேலய பாரு.

S.J.சூர்யா : தேங்க் யூ சார்...ஆனா ஒரு கண்டிஷன்

கவுண்டர் : ஓ... இது வேறயா? என்ன கண்டிஷன்?

S.J.சூர்யா : லேடீஸ் staffs யாராவது இருந்தாதான் நா வேலை செய்வேன்.. ஆமா இங்க எத்தன லேடீஸ் staffs இருக்காங்க?

கவுண்டர் : ஆமா.. இது tata consultancy.. முன்னூறு gents staffs ah யும் 250 லேடீஸ் staffs ah யும் வச்சி நா வேல வாங்கிகிட்டுருக்கேன்.. காலையில கடைய கூட்டுறதுக்கு 80 வயசுல பல்லுபோன கெழவி ஒன்னு வரும். அதான் இங்க உள்ள ஒரே லேடி staff.
S.J.சூர்யா : ஒகே. அது போதும்.. நா இன்னிக்கே டூட்டில join பன்றேன்..

கவுண்டர் : அடப்பாவி... அந்த கெழவியயும் நீ விட மாட்டியா.. எப்புடியோ ஒழிஞ்சி போ நாயே..

செந்தில் : இந்தாங்கண்ணே..

கவுண்டர் : என்னடா லெட்டர் இது?

செந்தில் : என்னுடைய ராஜினாமா கடிதம்

கவுண்டர் : இருக்குற வேலைய ராஜினாமா பண்ணிட்டு சோத்துக்கு என்ன நாயே பண்ணுவ?

செந்தில் : எதுத்தாப்புல இருக்க ராசியப்பன் சைக்கிள் கடையில சேரப்போரேன்.. அங்க உங்கள விட ரெண்டு ரூவா அதிகமா தர்றதா சொல்லிருகாங்க..

கவுண்டர் : ஆமா... இவரு Microsoft லருந்து resign பன்னிட்டு Apple computers ல சேர போராரு... இனிமே என் கண்ணு முன்னாடியே நிக்காம ஓடிப்போயிரு..

செந்தில் : கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு...

கவுண்டர் : அது கற்றவங்களுக்கு.. உனக்கு எங்க போனாலும் செருப்பு தான்... 12B தலையா....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...