Saturday, December 23, 2017

வேலைக்காரன் – ரொம்ப அழாகா செஞ்சுருக்கம்மா!!!


Share/Bookmark
நல்ல படங்களுக்கும் நல்ல கருத்துள்ள படங்களுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. நல்ல கருத்துள்ள படங்கள் நல்ல படங்களாதான் இருக்கனும்னு எந்த அவசியமும் இல்ல. ஒரு படம் நல்ல படமா அமையிறதுக்கு படத்துல உள்ள நல்ல கருத்துக்களையும் தாண்டி நிறைய விஷயங்கள் தேவை. நம்ம மக்கள்கிட்ட உள்ள வீக்னஸ் என்னன்னா நல்ல கருத்து இருந்தாலே நல்ல படம்னு போற போக்குல சொல்லிட்டு போயிருவாங்க. யாரு பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்கு மட்டும்தாண்டா கடவுள் தெரிவாருங்குற மாதிரி அடுத்தடுத்து போறவங்களும் அதயே ஃபாலோ பன்ன ஆரம்பிச்சிருவாங்க. இந்த மாதிரி பல படங்கள நாம ஹிட்டாக்கிருக்கோம். அந்த வகையில வந்துருக்க ஒரு படம்தான் சினா கானா நடிச்ச வேலைக்காரன்.

”இதப் படிங்க முதல்ல”  அப்டின்னு ஆரம்பிச்சி பாக்கெட்டுல அடைச்சி வச்ச உணவுகள்ல மெழுகு கலந்துருக்கு, பத்து வகையான கெமிக்கல் கலந்துருக்கு அத சாப்டா கேன்சர் வரும் இத சாப்டா அல்சர் வரும்னு அப்டின்னு நமக்கு ஒரு பக்க வாட்ஸாப் மெசேஜ் வருமே ஞாபகம் இருக்கா? அப்டி ஒரு பக்கத்துக்கு “விக்ஸ்”ன்னு எழுதி வந்தத ஒரு 200 பக்கத்துக்கு சுத்தி சுத்தி எழுதி அத ஒரு படமா எடுத்தா அதுதான் இந்த வேலைக்காரன்.

பேசியே கொல்றதுல ரெண்டு வகை இருக்கு. முதல் வகை சூர்யா. “ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு” அப்டின்னு ஹைபிட்சுல கொஞ்ச நேரத்துல நம்ம காதப் பதம்பாக்குறது ஒரு வகை.  “இது முக்கோணம் SVS சன் ஆயில் அது இது எது பவர்டு பை வைக்கிங் பனியன்கள் ஜட்டிகள் கோ ப்ரசண்டட் பை சங்கு மார்க் லுங்கிகள் இப்ப நம்ம சிரிச்சா போச்சு ரவுண்டுல இவங்கள சிரிக்க வைக்கப் போற அந்த ஆளு யாருன்னு இப்ப லிஃப்ட தொறந்து பாப்போம்” அப்டின்னு ஒரே டோன்ல நான்ஸ்டாப்பா பேசிக்கொல்றது இன்னொரு வகை.

சுருக்கமா சொன்னா முதல் வகை லவுடு ஸ்பீக்கார் மாதிரி.. காய் மூய்னு கத்திட்டு நிறுத்துன உடனே டக்குன்னு அப்பாடா அப்டின்னு ஆயிரும். ஆனா ரெண்டாவது வகை மாவுமில் மாதிரி. மாவரைச்சிட்டு வெளில வந்தப்புறமும் அடுத்த அரை மணி நேரத்துக்கும் காதுல மாவு மிஷின் ஓடுற மாதிரியே இருக்கும். அந்த மாதிரிதான் இந்தப் படம் பாத்துட்டு வந்தப்புறமும் இருந்துச்சி.


நல்ல கருத்த சொல்லனும்னு படம் எடுத்தாங்களா இல்ல சிவகார்த்திகேயனுக்கு நல்லா பேசத்தெரியும்னு காட்ட இந்தப் படத்த எடுத்தாங்களான்னே ஒரே கன்பீசன்.

படம் நல்லாதான் ஆரம்பிக்குது. படம் கொஞ்சம் ஸ்லோவா இருந்தாலும் ஸ்டெடியாவே போயிட்டு இருந்துச்சி. ஆனா பாருங்க மைக்க பாத்த உடனே சிவாவுக்கு பழைய ஞாபகம்லாம் வந்துருச்சி போல. டிவில காம்பயரிங்க் பன்ற மாதிரியே பேச ஆரம்பிச்சிட்டாரு.


பொதுவா தமிழ்ப்படங்கள்ல க்ளைமாக்ஸ் நெருக்கிருச்சின்னா “கணம் கோர்ட்ரார் அவர்களே” அப்டின்னு ஆரம்பிச்சி பத்து நிமிஷம் நிறுத்தாம வசனம் பேசுவாங்க. லெந்த்தா வசனம் பேசுனாலே படம் முடியப்போவுதுன்னு நாமளே புரிஞ்சிக்கலாம். ஆனா இந்த படத்துல ஒவ்வொரு அஞ்சி நிமிஷத்துக்கு ஒரு தடவ ஒரு பத்து நிமிஷ வசனம் பேசுறாரு சிவா. அதுவும் சீரியஸா பேசுறதுதான் அங்க செம்ம காமெடியே.

செகண்ட் ஹாஃப்லயெல்லாம் சிவா மட்டும் பேசிக்கிட்டே இருக்காப்ள… தியேட்டர்ல மயான அமைதி… யப்பா டேய் ஒரு செண்டர் ஃப்ரஷ்ஷ வாங்கி இவரு வாய்க்கு ஒரு பூட்ட போட்டு விடுங்கடான்னு தோணிருச்சி.

படத்துல ஒரு முக்கியமான விஷயம். வெளில சொல்லக்கூடாது இருந்தாலும் சொல்றேன். படத்துல சிவா ஒரு ஆண்டி ஹீரோ. அட ஆமாங்க. நயன் தாரா அப்டிங்குற ஆண்டியோட நடிச்சிருக்காரு. சிவாவுக்கு பக்கத்துல நயன சேத்து பாக்கும்போது “Aandi பாலும் வேணாம் டீயும் வேணாம் bournvita குடுங்க”ன்னு கேக்குற அளவுக்கு அவ்வளவு Aandi யா இருக்காங்க நயன்தாரா. வளர்ச்சி.. வரலாறு காணாத வளர்ச்சியெல்லாம் ஓக்கே… அதுக்குன்னு ஒரு ஜோடிப்பொருத்தம் வேணாமா.. விட்டா அடுத்து அனுஷ்கா, திரிசா கூட ஜோடியா நடிப்பாரு போல. நீ வெக்கப்படமாட்ட… ஆனா எங்களால முடியாதுப்பா…

நயன்தாராலாம் என்ன ரேஞ்சுல நடிச்சிக்கிட்டு இருக்கு. அதக் கொண்டு வந்து இப்டி மொன்னையாக்கி வைச்சிருக்காங்க. படத்துல நயந்தாரா பன்ற ஒரே வேலை “அறிவு.. என்ன அறிவு.. சொல்லுங்க அறிவு” மொதல்ல உனக்கு இருக்கா அறிவு? உன்னயெல்லாம் எங்க வச்சிருக்கோம். இப்புடி ஒரு மொக்க கேரக்டர்ல போய் நடிச்சிருக்க.

ப்ரகாஷ்ராஜ். படத்தோட ட்ரெயிலர்ல ப்ரகாஷ்ராஜ பாத்த உடனே எனக்கு அவ்ளோ சந்தோஷம். ஏனா அவரெல்லாம் இருந்தாலே படம் ஒரு கெத்தா இருக்கும். ஆனா ப்ரகாஷ் ராஜ இவ்வளவு மொக்கையா யூஸ் பண்ண படம் சமீபத்துல எதுவுமே இல்ல. இண்டர்வல்ல ப்ரகாஷ்ராஜ குத்திருவாங்க. இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கல அதுக்குள்ள கொண்ணுட்டீங்களேடான்னு கடுப்பாயிருச்சி. ஆனா சிவா காப்பாத்திட்டாரு. அப்படின்னா செகண்ட் ஹாஃப்ல ப்ரகாஷ் ராஜ நல்லா யூஸ் பன்னிருப்பானுங்கன்னு நினைச்சேன். ஆனா படம் முடிஞ்சப்புறம்தான் அந்தாளு இண்டர்வல்லயே செத்துருக்கலாம்னு தோணுச்சி. இப்டி மொக்கை ரோல் பன்றதுக்கு சாவுறதே மேல்.. ப்ரகாஷ்ராஜ் மட்டும் இல்லாம சார்லி, மைம் கோபின்னு நிறைய நல்ல நடிகர்களுக்கு நடிக்க ஸ்கோப்பே குடுக்காம வேஸ்ட் பன்னிருக்காங்க. எல்லாரு வசனத்தையும் சிவகார்த்திகேயனே புடுங்கி பேசிட்டாரு போல.

கான்செப்ட் நல்லா இருந்தாலும் படத்தோட ஸ்க்ரிப்ட் எழுதுனது ரொம்ப மோசம். எதையோ கொண்டு போய் எங்கயோ லிங்க் பன்ற மாதிரி இண்டர்வல்ல காட்டுற ஒரு கம்பாரிசனுக்காக உருவாக்கப்பட்ட தேவையில்லாத ஆணி ப்ரகாஷ்ராஜ் போர்ஷன். ரெண்டாவது பாதில என்ன வாய் மட்டும்தான் வேலை செய்யிது மத்த்தெல்லாம் அப்டியே இருக்குங்குற மாதிரி கச கசன்னு பேசிக்கிட்டே இருக்கானுங்க. உலகத்துலயே ரொம்ப பவர்ஃபுல்லான சொல் செயல்… டேய் இதயே நாலுதடவ சொல்லிக்கிட்டு இருக்காம நீங்க எதாவது செய்ங்கடா…

படத்துல நல்ல விஷயங்களே இல்லையான்னு கேட்டா கண்டிப்பா இருக்கு. முதல் பாதி ஏவி எம் தயாரிக்கிற படங்கள் மாதிரி சுமாரா போயிட்டு இருக்க, அங்கங்க ஒரு சில சின்ன சின்ன காமெடிகள் நல்லாருக்கு. ஸ்நேகா வர்ற கொஞ்ச நேரமும், அவங்க செய்ற அந்த போராட்டத்தோட கான்செப்டும் நல்லாருக்கு.

குறிப்பா ஃபஹத் ஃபாசில் ஆளு செம சூப்பரா இருக்காரு. சிவகார்த்திகேயன் பக்கம் பக்கமா மனப்பாடம் பண்ணி வசனம் பேசி பில்ட் அப் பன்னதயெல்லாம் கடைசி பத்து நிமிஷத்துல ஃபஹத் தூக்கி எரிஞ்சிட்டு போயிருறாரு. அவரோட பாடி லாங்குவேஜ், பேசுற ஸ்டைல்ன்னு அந்த ரோலுக்குன்னே அளவெடுத்து தச்ச ஒருத்தர்.


என்னதான் ஆயிரம் நெகடிவ் சொன்னாலும் இந்தப் படம் இவ்வளவு பெரிய ஓப்பனிங்க் இருக்க காரணம் சிவாதான். அவரோட டைமிங் காமெடி நிறைய ஒர்க் அவுட் ஆயிருக்கு. சிவா சீரியஸா பேசாத இடங்கள் எல்லாமே சீரியஸா நல்லாருக்கு. கருத்தவன்லாம் கலீஜாம் பாட்டுல அப்டியே தனுஷ் மாதிரி ஆடிருக்காரு. பின்னணி இசை பெரிய அளவு சொல்ற மாதிரி இல்ல.

மொத்தத்துல வேலைக்காரன் ஒரு கருத்துள்ள படம். ஆனா அவ்வளவு சிறப்பான படமா அமையல. ஒருதடவ பாக்கலாம்.


Monday, December 18, 2017

அருவி !!!


Share/Bookmark

மாயவன்!!!


Share/Bookmark

Saturday, December 9, 2017

கொடிவீரன்.. முத்தையா… முடியலய்யா!!!


Share/Bookmark
ஒரு குறிப்பிட்ட சமூகத்தச் சேர்ந்த படம் எடுக்குறவங்கன்னு பேர் எடுத்த சசிகுமாரும், முத்தையாவும் ஒண்ணா சேந்து அதே சமூகத்த சார்ந்து திரும்பவும் எடுத்த படம்தான் இந்த கொடிவீரன். நீங்க எந்த சமூகத்த சார்ந்து வேணாலும் எடுங்க.. யார வேணாலும் தூக்கிப் பேசுங்க… அது உங்க இஷ்டம்.   கழுதை அத பாக்குற மாதிரி எடுத்துத் தொலைங்க அப்டிங்குறதுதான் ஆடியன்ஸோட விருப்பம். 

தெலுங்குப் படம் ஒண்ணுல வந்த ஒரு  சின்ன காமெடி. ஒரு பிரபல இயக்குனர டிவில பேட்டி எடுப்பாங்க.  (இத ஏற்கனவே சொல்லிருக்கேன்னு நினைக்கிறேன்)

“சார் உங்களோட அடுத்த படம் என்ன சார்?”

“Blood Path 2”

”Blood Path ஒண்ணே ப்ளாப் ஆயிருச்சே சார்?”

“அதுக்காகத் தான் ரெண்டாவது பார்ட் எடுக்குறேன்”

“அப்ப ரெண்டாவது பார்ட்டும் ஃப்ளாப் ஆயிட்டா?”

“மூணாவது பார்ட் எடுப்பேன்”ன்னு அசால்ட்டா சொல்லிட்டு போயிருவாரு. இப்ப அந்தக் காமெடில வந்த இயக்குனருக்கும் நம்ம முத்தையாவுக்கும் பெரிய வித்யாசமெல்லாம் இல்ல. இயக்குனர் முத்தையா ஒவ்வொரு படத்துலயும் அவரோட கதையில காட்டுற வித்யாசங்களக் கண்டு நா அப்டியே மெரண்டு போயிருக்கேன்.



முதல் பாதில ஒரு புள்ளைய காதலிச்சி கல்யாணம் பன்னிக்கிட்டு ரெண்டவது பாதில அந்தப் புள்ளையோட அப்பாவ அவரோட எதிரிங்க கிட்டருந்து காப்பாத்துனா அது கொம்பன். அதே முதல் பாதில ஒரு பொண்ண காதலிச்சி கல்யாணம் பன்னிக்கிட்டு ரெண்டாவது பாதில அந்தப் பொண்ணோட எதிரிங்க்கிட்டருந்து அந்தப் பொண்ணக் காப்பாத்துனா அது மருது. அதே முதல் பாதில தங்கச்சிய ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு ரெண்டாவது பாதில தங்கச்சி புருஷன அவரோட எதிரிங்க்கிட்டருந்து காப்பாத்துனா அது கொடிவீரன். மொதல மாமனாரு, அடுத்து மனைவி அடுத்து மச்சான்.. அனேகமா அடுத்த படத்துல மாமியார அவங்க எதிரிங்ககிட்டருந்து காப்பாத்துறதுதான் கதையா  இருக்கனும்.

முன்னாடில்லாம் ஒரு படம் ஹிட்டானா அதே டெம்ளேட்டுல திரும்பத் திரும்ப படம் எடுத்து கொல்லுவாய்ங்க. நம்ம முத்தையா கொஞ்சம் வித்யாசமா ஃப்ளாப் ஆன பட்த்தை திரும்பத் திரும்ப எடுத்துக்கிட்டு இருக்காரு. மரு வச்சி ஒரு படம்.. மரு வைக்காம ஒரு படம்ன்னு மாத்தி மாத்தி ஒரே படத்த வேற வேற ஹீரோக்கள வச்சி எடுத்துப் பழகிட்டு இருக்காரு. அனேகமா அடுத்த படம் கவுதம் கார்த்திக்க வச்சி எடுப்பாருன்னு நினைக்கிறேன். லைக்ஸ் சும்மா பிச்சிக்கும்.

இந்த ஸ்கூல்லயெல்லாம் பசங்க ஒரு கேள்விக்கு தப்பா விடை எழுதிட்டா அதுக்கு தண்டனையா அதே பதில பத்து தடவ மிஸ்ஸூ எழுதிட்டு வரச் சொல்லும். அனேகமா முத்தையாவுக்கும் அதே மாதிரி “இந்தக் கதைய ஒழுங்க எடுக்குறவரைக்கும் வேற எந்தக் கதையையும் எடுக்கக்கூடாதுன்னு யாரும் சொல்லிருப்பாய்ங்க போல.. அதான் ஒரே கதைய திரும்பத் திரும்ப எடுத்து கொண்ணுகிட்டு இருக்காரு.அதுவும் கொடிவீரன்ல அவரு கதை சொல்லிருக்க அழகே தனி. கதைய சொல்றேன் கேளுங்க.

மொதல்ல ஒரு அண்ணன் தங்கச்சிங்க. அப்புறம் இன்னொரு அண்ணன் தங்கசிங்க.. அதுக்கப்புறம் இன்னொரு அண்ணன் தங்கச்சிங்க. மொத்தம் மூணு செட் ஆச்சா? அடுத்து இன்னொரு…. அன்ணன் தங்கச்சின்னு நினைப்பீங்க .. அதான் இல்லை.. அடுத்து ஒரு மச்சான்.. அதுவும் தெய்வ மச்சான். மொத்தம் படத்துல எத்தனை அண்ணன் எத்தனை தங்கச்சின்னு காட்டி முடிக்கிறதுக்குள்ளயே இடைவேளை வந்துருச்சி. அதுவும் ஒரு அண்ணன் தங்கச்சின்னாலே ஒண்ணுக்கு போற அளவுக்கு அடிப்பாய்ங்க. அதுவும் இதுல மூணு அண்ணன் தங்கச்சி.. மோசன் போற அளவுக்கு அடிக்கிறாய்ங்க.

ஊர்த்திருவிழா, பெண்களத் தாயா மதிக்கிறேன்னு நாலு வசனம், ”இய்ங்காரு… சலிச்சி புடுவேன் பாத்துக்க… தட்டி விட்டுருவேன் பாத்துக்க..”ன்னு அதே வசனத்த 30 வருசமா மாத்தாம பேசிக்கிட்டு திரியிற வில்லனுங்கன்னு கொஞ்சம் கூட மாத்தாம நாலு படத்துக்கும் அதே டெம்ளேட்டு.

சசிக்குமாரப் பாக்கதான் பாவமா இருந்துச்சி. உலகத்துலயே ஒரு கம்பெனிக்கு “கம்பெனி”ன்னு (Company productions) பேரு வச்ச மகான் அவரு. தொடர்ந்து அடி வாங்கிட்டு வர்றவரு இந்தப் படத்துலயாவது எழுவார்னு பாத்தா அதுக்கான எந்த சாத்தியக்கூறுமே படத்துல இல்ல.

ரொம்ப நாளுக்கப்புறம் பசுபதி முழு நீள வில்லனா நடிச்சிருக்காரு இந்தப் படத்துல. “டேய்… உனக்கு நான் தாண்டா எமன்…” “டேய்..உனக்கு நாந்தான்னா சிவன்” அப்டின்னு மாத்தி மாத்தி பசுபதியும் சசிகுமாரும் மாத்தி மாத்தி பஞ்ச் டயலாக் பேசிக்கிட்டு இருக்கும்போது “அட சட்டுபுட்டுன்னு யாராது யாரயாவது கொன்னுட்டு சாவுங்கடா.. சீக்கிரம் படமாச்சும் முடியும்”ன்னு தோணுது நமக்கு.

என்ன கண்றாவியா இருந்தாலும் சசிகுமாருக்கு லவ் சீனு வைக்க மட்டும் மறக்கவே மாட்டேங்குறாங்க. அதுலயும் அவரு பொண்ணுங்களப் பாத்து வெக்கப் படுற அழகு இருக்கே… “டேய் நீ என்ன எழவு வேணாலும் பண்ணு ஆனா வெக்கம் மட்டும் படாத… உன் மூஞ்ச பாக்க முடியல”ன்னு சந்தானம் சொல்ற வசனம்தான் ஞாபகம் வந்துச்சி.

டான்ஸ் பர்ஃபார்மென்ஸெல்லாம் அதகளம்.  சசிகுமார் செமையா இம்ப்ரூவ் பண்ணிருக்காரு. அசுரன் படத்துல ஜக்கு ஜக்கு வத்திகுச்சி நெப்போலியன் அவர் இடுப்பு உயரம் இருக்க புள்ளைங்கள ரெண்டு பக்கமும் புடிச்சிக்கிட்டு ஒரு டான்ஸ் ஆடுவாரு. அந்த ஸ்டெப்புக்கு நா ரசிகன். நெப்போலியனுக்கு அப்புறம் அதே ஸ்டெப்ப கண்ணு முன்னால கொண்டு வந்து நிறுத்துறவரு நம்ம சசிகுமார்தான்.

இவங்க தொல்லை ஒரு பக்கம்னா இந்தப் இந்தப் பசுபதியோட தங்கச்சியா வர்றப் பூர்ணா தொல்லை இன்னொரு பக்கம். இந்த படத்த பேய் படம்னு சொல்லி எதுவும் நடிக்க வச்சாய்ங்களான்னு தெரியல.. யாரையுமே நார்மலா பாக்காம. முழிய உருட்டி உருட்டு ஒன் சைடாவே பாத்துக்கிட்டு இருக்கு.  நா வேற ஸ்ட்ரோக் வந்து கண்ணு எதுவும் மேல சொருகிக்கிச்சோன்னு நினைச்சிட்டேன்.  “எங்க அண்ணன் அவனுங்கள கொல்லுவாண்டா.. எங்க அண்ணன் ஒருத்தன் போதும்டா”ன்னு பசுபதியப் பத்தி பெருமையா பூர்ணா பஞ்ச் டயலாக் பேசும்போது பசுபதி மூஞ்சக் காட்டுவானுங்க… ”நம்ம அந்த அளவுக்கெல்லாம் ஒண்ணும் ஒர்த் இல்லையே.. இவ ஏன் இப்புடி ஓவரா பில்ட் அப் பன்றா”ன்னு அவரு மைண்டுல ஓடுற மாதிரி ஒரு மரண பயம் மூஞ்சில தெரியும்.

படத்துல நல்ல விஷயங்கள்னு சொல்லனும்னா, டெக்னிக்கலா ஒவ்வொரு படத்துலயும் முத்தையா நல்லா இம்ப்ரூவ் பண்ணிட்டு வர்றாரு. முந்தைய படங்களை விட இந்தப் படத்துல கேமாரா, எடிட்டிங், சவுண்ட் எஃபெக்ட் எல்லாமே பெட்டரா இருந்துச்சி. ஆண்டவன் எல்லாத்தையும் குடுத்து ஒரு சின்ன குறை வைக்கிற மாதிரி, முத்தையாவுக்கு எல்லா நல்ல டெக்னீஷியன்கள் இருந்தும் ஒரு நல்ல கதை மட்டும் மாட்ட மாட்டேங்குது. கூடிய சீக்கிரம் கிடைக்கும்னு நம்புவோம்.

அடுத்து சசிகுமாரோட காஸ்டியூமும், கெட்டப்பும் நல்லாருக்கு. அவருக்கு நல்லா செட் ஆயிருக்கு. சசிகுமாரோட தங்கச்சியா வர்ற சனுஷா செம்ம அழகு. முழு நேரமும் சிரிச்சிக்கிட்டே இருக்கது இன்னும் அழகு. ஹீரோயினும் ஓக்கே. விதார்த் நீட்டா நடிச்சிருக்காரு. ரகுந்தனோட எல்லா பாடல்களும் கிட்டத்தட்ட நல்லாருக்கு. மதுபாலகிருஷ்ணன் பாடுன முதல் பாடலும், அய்யோ அடி யாத்தே பாட்டும் சூப்பர். மஞ்சப்பைல வர்ற ”பாத்து பாத்து” பாட்டுல வரிய மட்டும் மாத்தி திரும்ப போட்டுக்குடுத்துருக்காரு. பின்ணனி இசைல வெறும் உறுமியும் மேளமும்தான். பாலசரவணனோட ஒருசில ஒன்லைன் கவுண்டர் அப்பப்ப கொஞ்சம் ஆறுதல்.

முத்தையா இன்னும் எத்தனை படம் இப்டியே எடுக்கப்போறார்னு தெரியல. மருது படத்துல ஒரு அம்மாவ கழுத்தறுத்து கொல்ற காட்சிய ரொம்பக் கொடூரமா காமிச்சிருந்தாங்க. அதே மாதிரி இந்தப் படத்துலயும் முதல் காட்சிலயே ஒரு அம்மா தூக்கு போட்டுக்கிட்டு சாகுறத ரொம்பவே கொடூரமா காமிச்சிருக்காங்க. படத்தோட வேற எங்கயும் அந்தக் காட்சியோட தாக்கம் இல்லாதப்ப அதை அவ்வளவு அப்பட்டமா, காமிச்சிருக்கத் தேவையில்ல.


மொத்தத்துல முத்தையா, சசிகுமார் ரெண்டுபேருக்கும் சேத்து பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். 

வீடியோ விமர்சனத்திற்கு இங்கே க்ளிக்கவும்

Saturday, December 2, 2017

அண்ணாதுரை!!


Share/Bookmark







எழுத்து வடிவ விமர்சனம் on the way!!!

Monday, November 20, 2017

தீரன் அதிகாரம் ஒண்று – மிகை!!!


Share/Bookmark
சில வருடங்களுக்கு முன்னால் மக்கள் படம் பார்த்த விதத்திற்கும் இப்பொழுது மக்கள் படம் பார்க்கின்ற விதத்திற்கும் நிறைய மாற்றங்கள். முன்பு ஒரு படத்தை படமாகப் பார்த்தார்கள். இப்போது அது படம் என்பதைத் தவிற மற்ற எல்லாமுமாகப் பார்க்கிறார்கள். இயக்குனருக்கே தெரியாத குறியீடுகளைத் தேடிப்பிடிக்கிறார்கள். இன்ன அரசியலைத்தான் இந்தப் படம் பேசுகிறது என பிடித்து வைக்கிறார்கள். படம் எப்படி இருக்கிறது என்பதை விட படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதைக் கொண்டு படத்தின் தரத்தை நிர்ணயிக்கிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்த கத்தி படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்த படங்களிலேயே ரொம்பவே சுமாரான திரைப்படம் என்றால் அது கத்தி தான். சுவாரஸ்யமில்லாத காட்சிகளால் உருவக்கப்பட்ட கத்தி, விவசயாயப் பிரச்சனைகளைப் பற்றி பேசியது என்ற காரணத்தினால் “விவசாயத்தை வாட்ஸாப் மூலம் காக்கும்” கும்பல்களால் மாய்ந்து மாய்ந்து விளம்பரம் செய்யப்பட்டு வெற்றி பெற வைக்கைப்பட்டது. அடுத்த நல்ல உதாரணம் சமீபத்திய மெர்சல். மிகச் சுமாரான மெர்சல் தமிழில் அதிக வசூல் சாதனை படைத்த முதல் 5 படங்களுக்குள் வரவைத்ததும் இதே காரணம்தான்.

தற்பொழுது அதே போன்றதொரு மிகைபடுத்தலுடன் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தீரன் அதிகாரம் ஒண்று. தமிழ்நாட்டில் இருபது வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

”அட்டகாசம் செய்யும் அரசியல்வாதியை, எண்ணி ஏழே நாட்களில் தூக்குகிறேன் பார்” என்று  சவால்விட்டு வெற்றி பெறும் வழக்கமான தமிழ் சினிமா போலீஸ் படங்களிலிருந்து தீரன் நிச்சயம் வேறுபட்ட ஒரு திரைப்படம் என்பதில் துளி கூட சந்தேகமில்லை.

நாம் தமிழில் இதுவரை பார்க்காத, வித்யாசமான கதைக்களம். புதுமையான எதிரிகள். தனிமையில் இருக்கும் வீடுகளில் புகுந்து வீட்டில் இருப்பவர்களைக் கொன்றுவிட்டு கொள்ளையடித்துச் செல்லும் கொலையாளிகளை பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவர, நமக்கே அடிவயிற்றில் சற்று புளியைத்தான் கரைக்கிறது. அதுவும் இடைவேளைக் காட்சியில் உச்சகட்ட பயம் கலந்த பதற்றம்.  

வேட்டையாடும் குழுக்கள் எப்படி மக்களுடன் சேர்த்துக்கொள்ளப்படமால் கொஞ்சம் கொஞ்சமாக மனிதவேட்டைக்கு மாறினார்கள் என்பதை ஆதி வரலாறுகளிலிருந்து எடுத்துக் கூறுவதெல்லாம் அருமை.

ஆனால் அனைத்தும் அவ்வப்போது தான். முழுப்படத்தையும் அதே ஈடுபாட்டோடு நம்மால் பார்க்க முடிகிறதா என்றால் நிச்சயம் இல்லை. சில இடங்களில் கடுப்பு, சில இடங்களில் கொட்டாவி, இன்னும் சில இடங்களில் வடிவேலு போல் “போதும் போதும் லிஸ்ட் ரொம்ப லென்த்தா போயிட்டு இருக்கு” எனவும் சொல்லத் தோன்றுகிறது.

இயக்குனர் வினோத்தின் முதல் திரைப்படமனான சதுரங்க வேட்டையினை எடுத்துக்கொண்டால், திரைக்கதையில் எந்த இடத்திலும் எந்த விதத் தொய்வுமே இல்லாமல் சீராகச் சென்று முடியும், ஆனால் இந்த தீரன் திரைப்படத்தில் அது ரொம்பவே மிஸ்ஸிங்.

இயக்குனரின் முதல் குழப்பம் இந்தத் திரைப்படத்தை ஃபிக்‌ஷனாக எடுப்பதா அல்லது டாக்குமெண்டரியாக எடுப்பதா என்பது. கார்த்தி இருப்பதால் அவருக்கு ஏற்றார்போல் ஹீரோயிசத்தையும் காட்டவேண்டும், அதே போல இது உண்மைக்கதை என்பதால் அதன் உண்மைத்தன்மையும் கெட்டுவிடக்கூடாது என்ற இரண்டு மனநிலைகளுக்கு நடுவில் சிக்கி, தீரனை இரண்டு ஜான்ராவையும் கலந்த ஒரு கலவையாக்கி வைத்திருக்கிறார்.

கார்த்தியை அந்தக் கொள்ளை கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக அமர்த்துவதற்கு முன்பு  கார்த்தியின் காதல், கார்த்தியின் கேரியர் வளர்ச்சி என அவர்கள் காட்ட முயன்றிருக்கும் காட்சிகள்தான் படத்தின் சுவாரஸ்யத்திற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை. அதுவும் கார்த்தி-ரகுல் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் அருவையின் உச்சகட்டம். காதலும் எடுபடவில்லை, காமெடியும் எடுபடவில்லை. ஒருவழியாக இடைவேளைக்கு ஒரு இருபது நிமிடங்கள் முன்பு கதை ஓட்டம் சூடு பிடிக்கிறது.

கொள்ளையடிக்கும் கும்பல் பயன்படுத்தும் ஆயுதம், அவர்கள் கொள்ளையடிக்கும் முறை என ஒவ்வொன்றாகத் திரையில் விரியும் பொழுது பயம் கலந்த சுவாரஸ்யத்துடன் நாம் திரைப்படத்திற்குள் ஒன்றுகிறோம்.  

தொடர்ந்து இரண்டாம் பாதியில் ராஜஸ்தான் மாநிலத்தின் வறண்ட கிராமங்களுக்குள் குற்றவாளிகளைத் தேடிப் பயணம் என கதை வட மாநிலங்களுக்குள் நுழைகிறது. காட்சிப்பதிவுகள் அருமையாக இருந்தாலும் காட்சிகள் ரொம்பவே சாதாரணமாக சுவாரஸ்யமில்லாமல் கடந்து செல்கின்றன. குற்றவாளையத் தேடி கிராமத்திற்கு சென்று மாட்டிகொள்ளும் போலீஸ் குழுவினரை நூற்றுக்கணக்கான கிராம மக்களிடமிருந்து ஒரு மூங்கில் கம்பை வைத்துக்கொண்டு கார்த்தி காப்பாற்றுகிறார். அதுவரை பயந்து காருக்குள் பதுங்கியிருக்கும் மற்ற போலீஸ்கார்ர்கள் கார்த்தி “லத்தி சார்ர்ர்ஜ்” என்று கூறியவுடன் எதோ அதற்கு முன்பு ஆர்டர் வராமல் இருந்தாதால்தான்  காருக்குள் பயந்து ஒளிந்திருந்தவர்கள் போல் வீறு  கொண்டு எழுந்து லத்தி சார்ஜ் செய்யும் காட்சி சிரிப்பைத்தான் வரவழைத்தது.

க்ளைமாக்ஸில் ஹவேரியாஸ் கூட்டம் மறைந்திருந்து, கவனத்தை திசை திருப்பிக் கொல்லும் யுக்தியை கையாளும் போது அதை அதற்கு மெல் பிரில்லியண்டாக செயல்பட்டு அவர்களை சுட்டுத்தள்ளும் காட்சி அடுத்த சிரிப்பு.

காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும் போதே “நாங்கள் அவனைப் பிடிக்கச் போனோம்.. இன்ஃபர்மேசனுக்காகக் காத்திருக்கோம்” என்பது போன்ற கவுதம் மேனன் பட வகை வாய்ஸ் ஓவர் வேறு எரிச்சலை ஏற்படுத்துகிறது. படம் கிட்டத்தட்ட முடியப்போகிற தருவாயில் ஒரு பதிமூன்று பேரை வரிசையாக பெயர் அவர்கள் செய்யும் செயல் என அறிமுகப்படுத்திவிட்டு ஒவ்வொருவரைத் துரத்தி சுட்டுப் பிடிப்பதை சலிக்காமல் காட்டுவதெல்லாம் வெறும் நேரத்தைக் கடத்துகின்றனவே தவிற வேறு எந்த ஒரு தாக்கத்தையும் நமக்குள்  ஏற்படுத்தவில்லை.

“இந்தப் படம் உண்மைச் சம்பவம் என்று சொன்ன ஒரே காரணத்திற்காகப் பிடித்தது. இல்லையென்றால் படம் செம மொக்கைதான்”  என்று நண்பர் ஒருவர் இன்று பதிவிட்டிருந்தார். உண்மைச் சம்பவம் என்கிற டேக் லைன் அந்தப் படத்தை நிச்சயம் நன்றாக இருக்கிறது என்று சொல்லியே ஆகவேண்டும் என நம்மை ஏன் கட்டாயப்படுத்துகிறது? உண்மைச் சம்பவம் என்கிற டேக் லைன் என்பது மந்தமான காட்சிகளை எழுதுவதற்கான லைசன்ஸா?

வெற்றி மாறனின் ”விசாரணை” உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தான். காஞ்சூரிங் உண்மைச் சம்பவங்களைக் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான். அந்தத் திரைப்படங்கள் உண்மைக்கதையைப் படமாக்குகிறோம் என்று ஏனோதானோவென்று ஸ்க்ரிப்டை எழுதவில்லையே?

படத்தின் நீளமும் பாடல்களும்  இந்தப் படத்தின் சுவாரஸ்யத்திற்கு மிகப்பெரிய தடைக்கல். காதல் காட்சிகளையும் பாடல்களையும் வெட்டியெறிந்து விட்டு வெறும் இரண்டு மணி நேரப் படைப்பாகக் கொடுத்திருந்தால் நிறைய கேள்விகளைத் தவிர்த்திருக்கலாம்.

விவேகம் திரைப்படம் நன்றாக இல்லை என விமர்சனக்கள் எழுந்த சமயம் அஜித்தின் கடின உழைப்பிற்காகப் படத்தைப் பார்க்கலாம் என ஒரு குழு கிளம்பிய பொழுது நகைத்த அதே சிலர் இன்று வினோத் கடினமாக உழைத்திருக்கிறார் என்று தீரனுக்கு விளம்பரம் செய்கின்றனர். ஒவ்வொரு திரைப்படமும் பலரது கடின உழைப்பில் தான் உருவாகிறது. சாக்கடையை சுத்தம் செய்பவருக்கோ, அல்லது உச்சி வெயிலில் தார் வாளியைத் தூக்கிக்கொண்டு ரோடு போடுபவருக்கோ கடினமாக உழைக்கிறார் என்று ஒரு 50 ரூபாயை நாம் இலவசமாகக் கொடுக்கிறோமா? அவர்களது வேலையை அவர்கள் செய்கிறார்கள் அதற்கான ஊதியம் அவர்களுக்கு கிடைக்கும் என கடந்து சென்று விடுகிறோம். ஆனால் சினிமாவில் மட்டும்தான் கடின உழைப்பு என காரணம் காட்டி சுமாரான திரைப்படங்களை சூப்பர் ஹிட்டாக முயல்கிறோம். 

இறுதியில் தீரண்  தமிழ் சினிமாவில் வித்யாசனமான முயற்சி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் சிலர் மிகைபடுத்திச் சொல்லும் அளவிற்கு ஆஹா ஓஹோ படைப்பெல்லாம் அல்ல. ஒரு முறை பார்க்கலாம் வகைப் படமே.


Saturday, November 18, 2017

தீரன் அதிகாரம் ஒண்று - விமர்சனம்!!!


Share/Bookmark






எழுத்து வடிவ விமர்சனம் on the way!!!

Friday, November 10, 2017

அவள் – ஹாலிவுட் படமானது எப்படி?!!!


Share/Bookmark
அனைத்து சீசன்களிலிலும் மார்க்கெட் இருப்பது காமெடி படங்களுக்கும் பேய் படங்களுக்கும் மட்டும்தான். உள்ளூர் பேய் படங்களுக்கு மட்டுமல்லாம   டப்பிங் செய்யப்பட்ட அயல்நாட்டுப் படங்களான காஞ்ஜூரிங், இட், அனபெல் போன்ற படங்களுக்கு நம் மக்கள் கொடுத்த பேராதரவே இதற்கு சாட்சி. ஆனா சமீபகாலமா ஒரு நல்ல பேய் படம் பார்க்கலாம்னு தியேட்டருக்குப் போனா, பேய் வரப்போற நேரத்துல டக்குன்னு ஒரு கவுண்டரக் குடுத்து பொளக்குன்னு சிரிப்பை வரவச்சிடுறாங்க. காஞ்சூரிங் 2 படம் பார்த்தப்ப பேயப் பாத்து பயந்தவங்களைக் காட்டிலும் சிரிச்சவங்களே அதிகம்.  பேயே கடுப்பாகி என்னய்யா சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் சிரிச்சிக்கிட்டு இருக்கன்னு கேக்குற அளவுக்கு ஆக்கி விட்டாங்க நம்ம மக்கள்.

டிமாண்டி காலனி, மாயா போன்ற படங்களுக்கப்புறம் தமிழ்ல ஒரு பேய்படம் பெருவாரியான மக்களிகிட்டருந்து நேர்மறை விமர்சனங்களோட அதுவும் ஹாலிவுட் ஹாரர் படங்கள் அளவுக்கு இருக்குஅப்டிங்குற அடைமொழியோடவும் ஓடிக்கிட்டு இருக்கு. நிச்சயம் வெளிநாட்டுப் பேய் படங்கள் பாக்குற ஒரு உணர்வத்தான் இந்த அவள் படமும் குடுத்துருக்கு..

திரைக்கதை, ஒலி அமைப்பு இதயெல்லாம் தாண்டி ஹாலிவுட் ஹாரர் படங்கள் பயங்கர திகிலா இருக்குறதுக்கு முக்கியமான காரணம் கதை நடக்குற லொக்கேஷன். பனி, குளிர், தனியாக பல அறைகள் கொண்ட வீடு, வீட்டுக்குள்ளயே இருக்க பாதாள அறைன்னு அவங்க காட்டுற லொக்கேஷன்லயே நமக்குள்ள ஒரு அமானுஷ்யம் பரவ ஆரம்பிச்சிடும்.

ஆங்கிலப் படங்கள்ல இருக்க அதே அமானுஷ்யத் தன்மைய இந்த அவள் படத்துலயும் நமக்கு கொடுக்குறதுக்கு இயக்குனர் முதல்ல தெரிவு செஞ்சது அதேமாதிரியான ஒரு லொக்கேஷன். அதாவது கதை ஹிமாச்சாலப் பிரதேச மலைப் பகுதிகளில் நடப்பது போல சித்தரிக்கப்படுது. குளிர் பிரதேசம், மலைகள் சூழ்ந்த பசுமையான இருப்பிடம், பிரம்மாண்டமான ஒரு வீடுன்னு அத்தனை அம்சங்களையும் அதுல கொண்டு வந்துட்டாங்க. அதுமட்டுமில்லாம வீட்டோட உள்பகுதியோட அலங்கரிப்பும் அமைப்பும் அப்படியே வெளிநாட்டு வீடுகள் பாணியில  இருக்கு.

Spoiler Alert

கதை, திரைக்கதைன்னு பாத்தோம்னா இயக்குனர் நிறைய உழைச்சிருக்காரு. இரவு பகல் பாராம கண்ணு முழிச்சி ஒவ்வொரு ஆங்கிலப் படமா பாத்து ஒவ்வொரு படத்துலருந்தும் ஒண்ணு ஒண்ண எடுத்து ஒரு நல்ல படத்த நமக்கு எடுத்துருக்காரு. RoseMary’s Baby அப்டிங்குற படத்துலருந்து பேஸ் லைன மட்டும் எடுத்து, The Exorcist, The Ring, Exorcism of Emiley Rose, The Conjuring, Insidious மற்றும் பல படங்கள்லருந்து ஒவ்வொன்னா பாத்து பாத்து எடுத்து அவள உருவாக்கிருக்காரு.

எப்படி இருந்தாலும் படத்தோட ஸ்க்ரிப்ட்ல ஒரு முழுமைத் தன்மையை உணர முடியிது. ரொம்பவே நேர்த்தியா உருவாக்கப்பட்டிருக்க இந்தப் படத்துல ஒரு சில விஷயங்கள இன்னும் கொஞ்சம் கவனமெடுத்து செஞ்சிருக்கலாமோன்னு தோணுச்சி. உதாரணமா சைக்கார்டிஸ்ட் சுரேஷ் வரக்கூடிய காட்சிகள். சும்மா கண்ண மூடுங்கநா இப்ப உன்னோட ஆழ் மனசுக்கு போகப்போறேன்.. ஈஸிஈஸின்னு சொன்ன உடனே பேஷண்ட் டக்குன்னு மயங்கி, அவங்களோட சப்கான்ஷியஸ் மைண்ட் கூட பேச ஆரம்பிக்கிறதெல்லாம் 1945லருந்து காமிச்சிட்டு வர்ற சீன். அதயெல்லாம் இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்.

அதுக்கப்புறம் சர்ச் பாதிரியார் எக்ஸார்ஸிசம் செய்யிற காட்சி. எக்ஸார்ஸிசம் அதாவது ஒருத்தரோட உடம்புக்குள்ள புகுந்துருக்க தீய சக்திய வெளியேத்த கடைபிடிக்கப்படுற ஒரு சடங்கு. அதை அவ்வளவு சீக்கிரமா எந்த பாதிரியாரும் யாரும் செய்ய ஒத்துக்க மாட்டாங்கஅந்த சடங்கை செய்யிறதுக்கு முறைப்படி சர்ச்ல பர்மிஷன் வாங்கனும்.  (இதெல்லாம் இங்க்லீஷ் பேய் படங்கள்லருந்து பாத்து தெரிஞ்சிக்கிட்டது. நம்மூர்ல இதெல்லாம் நடைமுறையில இல்லன்னு நினைக்கிறேன்.) இதுல ஃபாதர் கொஞ்சம் கூட யோசிக்காம ஒத்துக்கிறாரு. எக்ஸார்சிசம் செய்யிற முறையையும் ரொம்ப டொம்மையா காமிச்சிருக்காங்க.

ஆண் குழந்தை வேணும்னா பெண் குழந்தையை பலி கொடுக்கனும்ங்குறத மட்டும் நம்ம டைரக்டரே நம்மூருக்கு செட் ஆகுற மாதிரி யோசிச்சிருப்பாரு போல.அங்கதான் கொஞ்சம் இடிக்குது. வெறும் பெண் பிள்ளைகளாகவே பெற்ற ஒருத்தர் அடுத்து கண்டிப்பா ஆண் குழ்ந்தை வேணும்ங்குற வெறியில ஒரு பெண்ணை பலி கொடுக்கிறார்ன்னா கூட ஒத்துக்கலாம். ஆனா இங்க அவருக்கு இருக்கது ஒரே பொண்ணு. அடுத்து பிறக்கப்போற குழந்தை ஆணா பிறக்கனும்னு முதல் குழந்தையை பலிகொடுக்குறார்னு கதை சொல்றதெல்லாம் இன்னா மேரி லாஜிக்னு தெரில.


பல இடங்கள்ல சவுண்ட் எஃபெக்ட்ல பயங்கரமா மிரட்டியிருக்காங்க. பொதுவா இந்த மாதிரி  எக்ஸார்ஸிசம் செய்யிற படங்கள் முதல்ல நல்லாருக்கும். ஆனா அந்தப் பொண்ணையோ பையனையோ பேய் பிடிச்சப்புறம் பெரும்பாலும் அவ்வளவு சுவாரஸ்யமா இருக்காது. தமிழ்ப் படங்கள்ல இதுக்கு நல்ல உதாரணம் மீனா, ப்ரஷாந்த் நடிச்ச ஷாக் படம். முதல் பாதி பாக்க பயமா இருக்கும். ரெண்டாவது பாதி மீனாவுக்கு பேய் ஓட்ட ஆரம்பிச்சப்புறம் அவ்வளவு சுவாரஸ்யமா இருக்காது. ஆனா இந்த அவள் படத்துல அந்த மாதிரி போர் அடிக்காம ரெண்டாவது பாதியையும் ரொம்ப சுவாரஸ்யமா எடுத்துட்டு போயிருக்காரு இயக்குனர். (கைவசம்தான் நிறைய படம் ஸ்டாக் இருக்கே.. அப்புறம் எப்புடி போரடிக்க விடுவாரு)


இந்தப் படத்த ஹாலிவுட் படம்னு சொல்ல இன்னோரு முக்கியக் காரணம் சித்தார்த் ஆண்ட்ரியா இடையே அடிக்கடி நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள். தமிழ்ப் படங்களில் நாசூக்காக காண்பிக்கப்படும் காட்சிகளை அப்பட்டமா காமிச்சிருக்காங்க. குடும்பம் குழந்தைகளோட படத்துக்கு போறவங்க தாவணிக் கனவுகள் பாக்யராஜ் மாதிரி சில்லறை காசோடதான் போகனும்.  

ஹாலிவுட் ஹாரர் படங்கள் அதிகம் பரிட்சையம் இல்லைன்னாஅவள்திகில் விரும்பிகள் கண்டிப்பாக தவற விடாமல் பார்க்க வேண்டிய ஒரு படம். மற்றவர்களுக்கு மெர்சல்னு ஒரு படத்துக்கு டிக்கெட் எடுத்துட்டுப் போய் உள்ள பல படத்த பாத்துட்டு வந்த மாதிரியான அனுபவம்தான் ஏற்படும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...