Wednesday, March 28, 2012

போலீஸ்கார்... போலீஸ்கார்...


Share/Bookmark

"காலைல எட்டு மணிக்கெல்லாம் எழுந்து போய் வண்டிய மொதல்ல சர்வீஸுக்கு விடனும்"னு நெனைச்சிட்டு 7.45 க்கு அலாரம் வச்சிட்டு நேத்து படுத்தேன். வழக்கம்போல அலாரம் அடிக்க, அத நா அடிக்க அது திரும்ப அடிக்க ன்னு  காலைல 9 மணிக்குதான் முழிச்சேன். அய்யய்யோ... எட்டு மணிக்கு போனாலே அங்க நமக்கு முன்னாடி 18 பேர் நிப்பாய்ங்க.. இங்கயே 9 மணி ஆயிருச்சா.. வெளங்கிரும்" ன்னு  நெனைச்சிட்டு பல்ல லைட்டா வெளக்கிட்டு வண்டிய எடுத்துக்கிட்டு வேகமா போனேன். அது  கண்ணுல பட்டுருச்சி.. என்னவா... ஹோட்டல் தான்... சோறா... சொரணையான்னு கேட்ட நமக்கு சோறுதான சோறுதான் முக்கியம். சில பல இட்லிகள அள்ளி போட்டுகிட்டு திரும்ப கெளம்புனேன்.

ஓரளவுக்கு  traffic ஆரம்பிச்சிருந்துச்சி... L&T கிட்ட ஒரு U turn ah போட்டு, போரூர நோக்கி ஆக்ஸிலேட்டர முறுக்குனேன், 2,3,4,5 ன்னு கியர் மாற வண்டி செம ஸ்பீடு. "ஈஸியா இருக்குறது" ன்னு நெனச்சி கூட முடிக்கல...திடீர்னு சைடுல பாக்காம ஒரு சனியன் புடிச்சவன் ரோட க்ராஸ் பண்ண... அவன் வண்டியா பாத்துட்டு நின்னுடுவான்னு நெனச்சிகிட்டு நான்  அதே வேகத்துல போக, அவன் கடைசி வரைக்கும் ரோடுல யாரு  வர்றாங்கன்னே பாக்காமயே ரோட க்ராஸ் பண்ண...... வேற என்ன... நேர கொண்டு போய் அவன் மேல விட்டுட்டேன்.

மில்லி செகண்ட் நேரத்துல DLF க்கு opposite Ä வண்டி நடுவுல, அவன் வண்டிக்கு லெஃப்டுல, நா வண்டிக்கு ரைட் சைடுல  விழுந்து கிடந்தோம்.. நல்ல வேளை ரெண்டு பேருக்குமே பெரிய அடி எதுவும் இல்ல.(எனக்கும் என் வண்டிக்கும்) அவனுக்கு அடிபட்டுச்சா என்னன்னு சரியா தெரியல... ரெண்டு பேரும் எழுந்துட்டோம்.  "யோவ் அறிவிருக்கா.... க்ராஸ் பண்ணும் போது சைடுல எதுவும் பாக்க மாட்டியா...கண்ண எங்க பொறடில வச்சிருக்க" ன்னு இதோட ரெண்டு மூணு சென்சார் பண்ண வேண்டிய வார்த்தைங்களையும்
சேத்து திட்டுனேன்.

"அதான் அந்த செக்யூரிட்டி கை காமிச்சாருல்ல.. நீங்க ஏன் பாக்காம வந்தீங்க" ன்னு அவன் பதிலுக்கு ஆரம்பிக்க

"ஏங்க செக்யூரிட்டி சந்துக்குள்ள நின்னு காமிச்சா எனக்கு எப்புடிங்க தெரியும்?" ன்னு சொல்லிகிட்டே நானும் அந்த செக்யூரிட்டியும் வண்டிய தூக்க, அந்த கேப்புல அவன் எஸ்கேப் ஆயிட்டான்..ரோடு க்ராஸ் பண்ற ஏரியாங்குறதால டக்குன்னு லேசா கூட்டம் கூடுனதுமே, எதிர்பக்க ரோட்டுல நின்ன ட்ராஃபிக் போலீஸ்கார் இந்த பக்கம் வந்துட்டாரு. வண்டிய தூக்கி நிறுத்துனதுமே பக்கத்துல வந்து சாவிய எடுத்துட்டாரு. "இன்னாடா இங்க?" ன்னு சென்னை தமிழ்ல அவரு ஆரம்பிக்க.. "சார்... சிகனல் பண்ணத பாக்காம இவரு வண்டிய விட்டுட்டாரு"ன்னு அந்த செக்யூரிட்டி போட்டு குடுத்துட்டாரு.. "சரி டாக்குமெண்ட்டல்லாம் எத்துகிட்டு அந்தாண்ட வா"ன்னு சொல்லிட்டு ரோட்டோட அந்த பக்கம் போக.. "ஆஹா..சனியன் சடை போட ஆரம்பிச்சிச்சே" ன்னு நெனச்சிட்டே போனேன்.

லைசன்ஸூம் ஆர்,சி புக் ரெண்டும் இருந்துச்சி... ஆனா இன்சூரன்ஸ் expire ஆகி ஆறு மாசம் ஆகி போச்சி, சரி என்ன பண்றது... சமாளிப்போம்னு நெனச்சிகிட்டு எடுத்துக்கிட்டு போணேன்.. அவரு கிண்டி நோக்கி போய்கிட்டு இருந்த வாகனங்களை கைகாட்டி நிறுத்தி, DLF மக்களுக்கு ரோடு க்ராஸ் பண்றதுக்கு உதவி பண்ணிகிட்டு இருந்தாரு. நா இது ரெண்டையும் எடுத்துகிட்டு போய் பம்பிகிட்டே நின்னேன்... ஒரு தடவ ரோடு ஓரமா வந்து லைசண்ஸயும், ஆர்.சி
புக்கையும் வாங்கி பாத்தாரு.

"எங்கடா  இன்சூரன்ஸ்" ன்னு கேட்க..

"சார் அது வீட்டுல இருக்கு சார்.. எடுத்து வர மறந்துட்டேன்"

"அப்புடியா...பத்தரமா இருக்கட்டும்... அப்ப ஓவர் ஸ்பீடு,,, இன்சூரன்ஸ் இல்ல... கேஸ் வாங்கிக்க... 1100 ரூவா பைன் கட்டிட்டு போ:"

"எத்தன தடவடா இதே மாதிரி ஆரம்பிப்பீங்க" ன்னு சிவாஜி ரஜினி ஸ்டைல்ல மனசுக்குள்ள நானே கேள்வி கேட்டுகிட்டேன்.

"எங்கடா வேலை பாக்குற" ன்னாரு

"இங்க தான் சார்.." ன்னு பக்கத்துல இருந்த எங்க கம்பெனிய காமிச்சேன்...

"ஏண்டா பச்சிகிறல்ல... கை காட்டுனா ஸ்டாப்புன்னு தெரியாது உனக்கு"

"சார்... என் மேல தப்பு இல்ல சார்...அவரு தான் ரோட பாக்காம நேர வந்து வண்டில விழுந்துட்டாரு"

:"சிக்னல் பண்ணா பாக்க மாட்டியா நீயி"

"சார் அவர் அந்த முக்குல நின்னு காமிச்சிருக்காரு சார்.. எனக்கு எப்டி சார் தெரியும்" ன்னு நா பதிலுக்கு பதில் சொல்லிட்டே இருக்க

"அதெல்லாம் தெரியாது. SI வருவாரு.. கேஸ் வாங்கிக்க... 1100 ரூவா பைன் கட்டு.."

நம்மளோட பவர் தெரியாம இந்த ஆளு இவளோ நேரம் பேசிட்டு இருக்காரு... நம்ம ஆயுதத்த உபயோகிச்சிட வேண்டியது தான்ன்னு முடிவு பண்ணி ......
கெஞ்ச ஆரம்பிச்சேன் பாருங்க....

"சார் சார்... அர்ஜெண்ட்டா போகனும் சார்.. கொஞ்சம் பாத்து விடுங்க சார்."


"அதெல்லாம் எனக்கு தெரியாது... நீ பைன கட்டிட்டு போ" ன்னு திரும்பவும் பஸ்ஸ் நிறுத்த பொய்ட்டாரு...

 ஒரு அரை மணி நேரம் பொய்ட்டு பொய்ட்டு வந்து மனப்பாடம் பண்ண அந்த "SI வருவாரு கேஸ் வாங்கிக்க" ங்கற டயாலாக்கையே ஒப்பிச்சிட்டு இருந்தாரு... நாஅங்கனக்குள்ளயே கைய கட்டிக்கிட்டு நின்னேன்... திரும்ப வந்தவரு

"டேய் கை கட்டாதடா.. யாராது பாத்தா இன்னா நெனைப்பாங்கோ.."

"சாரி சார்.. என் மேல தப்பு இல்ல சார்"

"அதெல்லாம் தெரியாது... SI வருவாரு அவராண்ட சொல்லு."

"சார்.. SI ல்லாம் வேணாம் சார்... நீங்களே கொஞ்சம் பாத்து விடுங்க சார்"

"நா இன்னாடா பாக்குறது,, நீ தான் சொல்லனும்.... எதாது பாத்து பண்ணிட்டு கெளம்பு" ன்னு லைசன்ஸயும் ஆர்.சி புக்கையும் கைல குடுத்துட்டு திரும்ப
வண்டிய நிறுத்த பொய்ட்டாரு..

சரி வேற என்ன பண்ணித் தொலைக்கிறதுன்னு நெனைச்சிகிட்டு பர்ஸ்லருந்து ஒரு நூறு ரூவாய வெளிய எடுத்தேன்.... அத ரோட்லருந்து பாத்த அவரு பதட்டத்துல "டேய் பண்த்த மறிடா (மறைடா) பண்த்த மறிடான்னு" வாய மூடிக்கிட்டே சொன்னாரு.. சரின்னுஅந்த நூறு ரூவாய front pocket la வச்சிகிட்டேன்..அடுத்த ரெண்டு நிமிஷத்துல ஓரமா வந்த அவரு

"டேய்... எங்க அந்த டாக்குமெண்ட்ட காமி" ன்னு சொன்னதும் ஆர்.சி புக்குக்கு கீழ அந்த நூறு ரூவாய வச்சி நீட்டுனேன்... அதுலருந்து அவருக்கு வேண்டிய அந்த "டாக்குமெண்ட்ட" மட்டும் எடுத்துக்கிட்டு ஆர்.சி. புக்க என்கிட்டயே திருப்பி தந்துட்டு

"டேய் சீக்கிரம் இன்சூரன்ஸ் எடுடா,, இப்புடியெல்லாம் வண்டி ஓட்டாத,, ரொம்ப ரிஸ்க்... இன்னா... " ன்னு வழக்கமா மாமூல் வாங்குன அப்புறம் அட்வைஸ் பண்ற ட்ராஃபிக் கான்ஸ்டபிள்ஸ் மாதிரியே இவரும் அட்வைஸ ஆரம்பிக்க

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" ன்னு நெனைச்சிகிட்டு அங்கருந்து கெளம்பி போரூர் ஹீரோ ஹோண்டா சர்வீஸ் சென் டர்ல 31 வது ஆளா இன்னிக்கு சர்வீஸ் விட்டேன்..



Tuesday, March 20, 2012

வினையூக்கியின் குறுங்கதைப் போட்டி -2012


Share/Bookmark

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக பதிவுலகில் தொடர்ந்து 400 பதிவுகளுக்கு மேல் எழுதிக்கொண்டிருக்கும் பிரபல பதிவர், நண்பர் வினையூக்கி செல்வா குறுங்கதை போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2500 ம் , இரண்டாவது பரிசாக ரூ.1500 ம் மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ரூ.100 மதிப்பிலான புத்தகங்களும் வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


போட்டியின் விதிமுறைகள் மற்றும் மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள சுட்டியை க்ளிக்கவும்.

வினையூக்கி - குறுங்கதை போட்டி - முதல் பரிசு ரூபாய் 2500

ம்ம்ம்ம்ம்.... கிளப்புங்கள்



நானும் போட்டில கலந்துக்கலாம்னு இருக்கேன்.. So, be careful (என்னச் சொன்னேன்)

Monday, March 19, 2012

நானும் ரஜினியும்


Share/Bookmark
தலைப்ப பாத்ததும் எங்க இவன் ரஜினியோட ஃபோட்டோ எதும் எடுத்துட்டானோன்னு நெனைச்சிருப்பீங்க,,, சத்தியமா இல்லை. அவர் ஃபோட்டோக்களோட எடுத்துகிட்ட ஃபோட்டோ தான் என்கிட்ட இருக்கு.

இது காலேஜ் ஹாஸ்டல்ல என்னோட ரூம். அப்பப்ப கெடைக்கிற படங்களை ஒட்டி வச்சிக்கிறது, ஒவ்வொரு வருஷமும் ரூம் மாறும் போதும் இது எல்லாத்தையும் இதே மாதிரி ஷிஃப்ட் பண்றதே பெரிய  ப்ராஜெக்டா இருக்கும். என்னது மீரா ஜாஸ்மீனா? அட ஆமாப்பா... இந்த ரன் படம் பாத்ததுலருந்து அந்த புள்ளை மேல ஒரு ஃபீலிங்ஸ் ஆயிருச்சா... அதான் ஹாஸ்டல்லயே தங்கிகட்டும்னு ஒரு இடம் குடுத்துட்டேன்.




இது 1st year படிக்கும் போது எங்க ரூம் 208 ல ஒரு ஃபோட்டோ செஷன் வச்சிகிட்டோம், நண்பர்கள்லாம் விருமாண்டி, நல்லமநாயக்கர், கொத்தாளத்தேவன் கெட்டப்புல ஸ்டில் எடுத்ததும் நா இந்த ஜக்குபாய் கெட்டப் போட்டு எடுத்துகிட்டேன். இப்பல்லாம் இந்த ஃபோட்டோவ பாக்கும் போது காதல் படத்துல  "நடிச்சா ஹீரோ சார்.. நா வெய்ட் பண்றேன்"னு ஒருத்தர் பாட்ஷா ரஜினி கெட்டப்புல ஃபோட்டோ எடுத்து வச்சிருப்பாரே.. அந்த ஞாபகம் தான் வருது.




+2 படிக்கும் போது என்னோட Physics புத்தகத்துல ஒரு ரஜினி ஃபோட்டோ வச்சிருந்தேன். என்கிட்ட சும்மா புத்தகம் வாங்குன எங்க டியூசன் சார் கோபால கிருஷ்ணன் "என்னயா எல்லாருக்கும் மாரியாத்தா துணை,, காளியாத்தா துணை.. ஆனா உனக்கு மட்டும் என்ன ரஜினி துணையா?" ன்னு சிரிச்சிகிட்டே கேட்டாரு. "அட நல்லாருக்கே" ன்னு நெனைச்சிகிட்டு அன்னிலருந்து இப்ப வரைக்கு என்னோட personal நோட் புக் அப்புறம் புத்தகத்துல எல்லாம் இந்த மாதிரி தான் எழுதிகிட்டு இருக்கேன்.

என்னோட சாமி ரூம்ல எப்பவும் தலைவருக்கு ஒரு இடம் உண்டு. இதுல இருக்க இந்த ரஜினி ஸ்டில் சிவாஜி ஷூட்டிங் ஆரம்பிச்ச அன்னிக்கு வந்தது. என்னோட கல்லூரி நண்பன் விஜய் நா காலைல ஹாஸ்டல்ல தூங்கிட்டு இருக்கும் போது எழுப்பி இத குடுத்தான். பத்தரமா வச்சிருந்த இது 6 மாசம் முன்னால வீடு மாத்துரப்ப ரெண்டு மூனு பீஸா கிழிஞ்சிருச்சி. அதுனால கொஞ்ச நாள் சாமி ரூம்ல தலைவர் இல்லை. அந்த டைம்ல தான் அவருக்கு ரொம்ப உடம்பு சரி இல்லாம  ஹாஸ்பிட்டல்ல இருந்தது. இந்த மேட்டர என் நண்பர் வென்கி கிட்ட நா சொன்னதும், "மச்சி  அது இல்லன்னா கூட பரவால வேற ஓண்ண சீக்கிரம் ஒட்டிடுடா.. தலைவர் ஹெல்த் தான் ரொம்ப முக்கியம்டா" ன்னு சொன்னப்புறம் ராணாவ சாமி ரூம்ல ஒட்டுணேன். அதுக்கப்புறம் தான் தலைவர் குணமாயி வந்தாரு. கேணத்தனமா இருக்கேன்னு தோணுமே... இருக்கட்டும்.. இருந்தாலும் நல்லாருக்குல்ல... ஹி ஹி



இது ஹரித்வார் போயிருக்கும் போது மன்ஸா தேவி கோயில் போற வழில எடுத்தது. சினிமால நடிக்கிறவங்கல்லாம் பாம்பு கூட எவ்ளோ கஷ்டப்பட்டு நடிக்கிறாங்கன்னு அன்னிக்கு தான் எனக்கு தெரிஞ்சிது. அத தூக்கி கழுத்துல போட்ட உடனே அது ஒரு நெளி நெளிஞ்சிது பாருங்க. இப்ப நெனைசாலும் எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. பீதிய அடக்கிட்டு சிரிச்சா மாதிரி போஸ் குடுக்குறதுக்கு  நா பட்ட பாடு இருக்கே,,, முடியல...




இது ரிஷிகேஷ்ல ஏறமுடியிற சைஸ்ல ஒரு குட்டி  மலைய பாத்த உடனே மேல ஏறி பாபா position la உக்காந்து எடுத்தது.



இத பாத்து யாரும் டென்ஷன் ஆயிராதிங்க. அறியாத பையன் தெரியாம பண்ணிட்டதா நெனைச்சி மன்னிச்சி விட்டுருங்க.


                                  


அப்புறம் இன்னொரு மேட்டர்


நம்ம வலைத்தளத்தோட முகவரிய www.muthusiva.blogspot.com லருந்து www.muthusiva.in ah மாத்திருக்கேன்.

"அதுக்கு இப்ப என்ன செய்யனுங்குற?" ன்னு கேக்குறீங்க அதானே... சும்ம ஒரு இன்பர்மேசன். வேற ஒண்ணும் இல்ல...




Friday, March 16, 2012

வங்கதேசத்துக்கு ஜெ!!!!!!!!


Share/Bookmark


தென் ஆப்பிரிக்கா முயற்சி பண்ணாய்ங்க... முடியல
ஆஸ்திரேலியா ஆசைப்பட்டாய்ங்க.. ஆனா கெடைக்கலா..
ஸ்ரீலங்கா சிக்க வைக்கலாம்னு  பாத்தாய்ங்க... சிக்கல...
கடைசில  கடவுள் அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு வங்க தேசத்துக்கு... நீங்க history la நின்னுட்டீங்கடா



நாங்க தான் சொந்த நாட்டுக்காரருன்னு அவருக்கு தீவிர ஃபேனா இருக்கோம்.. பிரிஞ்சு போன உங்களுக்குள்ளயுமா இன்னும் அந்த சச்சின் வெறி இருக்கு?.  எங்க ஒரு மொக்கை டீமோட  செஞ்சுரி அடிச்சிட்டாருன்னு அடுத்தவிங்க கிண்டல் பண்ணிருவாய்ங்களோன்னு நெனைச்சி,  289 ah chase பண்ணீங்க பாருங்க.. அங்க நிக்கிறீங்கடா.. வாங்குங்கடா.. ஆசியா கப்பே உங்களுக்கு தாண்டா...



யய்யா... யய்யா ரஹிம்மு.. எங்கய்யா இருந்த இவள நாளா? இன்னிக்கு அடிச்ச பாரு ஒரு அடி.. சும்மா மின்னலடி... நல்லாருய்யா.. நல்லாரு.... நீ எப்ப ஃபார்ம் அவுட் ஆனாலும் எங்க கூட  வந்து ஒரு மேட்ச் வெளையாடுய்யா.... எங்க ஆதரவு உனக்கு எப்பவும் உண்டு...





Tuesday, March 13, 2012

ஒரு கோடி.. ஒரு கோடி... போனா வராது.. பொழுது போனா கிடைக்காது!!!!


Share/Bookmark
"எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனே கால்"  "படையப்பா தமிழ் படமா ஆங்கில படமா"ன்னு  விவேக் கண்டேன் சீதையை படத்துல கேக்கும் போது நாம விழுந்து விழுந்து சிரிச்சோம்.. ஆனா அதை விட பல மடங்கு அறிவுள்ள சிந்தனையை தூண்டும் கேள்வி பதில்களின் பிறப்பிடமாக இருப்பது இப்போ சூர்யா விஜய் டிவில நடத்திக்கிட்டு இருக்குற  ப்ரோக்ராம்.

சில வருஷங்களுக்கு முன்னால சன் டிவி கோடீஸ்வரன்னு ஒரு நிகழ்ச்சிய சரத்குமார வச்சி நடத்திக்கிட்டு இருக்கும் போது, அத கிண்டல் அடிச்சி அதே டைம்ல ஜெயா டிவில பிச்சாதிபதின்னு ஒரு நிகழ்ச்சி படவா கோபிய வச்சி நடத்தப்பட்டது. எனக்கு தெரிஞ்சி அந்த டைம்ல ஜெயா டிவில ஒளிபரப்பப்பட்ட உருப்படியான ஒரு நிகழ்ச்சின்னா அது பிச்சாதிபதி தான். அந்த நிகழ்ச்சில கேட்கப்பட்ட ஒரு கேள்வி

வாழைமரத்தில் காய்க்கும் பழத்தின் பெயர் என்ன?

  a) மாம்பழம்   b) ங்கொய்யாப்பழம்   c) வாழைப்பழம்  d)அண்ணாசிப்பழம்

இந்த கேள்விய படவா கோபி ரொம்ப சீரியசா கேட்க, அந்த கண்டஸ்டண்ட் ரொம்ப நேரம் யோசனைக்கு அப்புறம் d) அண்ணாசிப்பழம்னு லாக் பண்ணுவாரு.. spoof ஆக செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கும் இப்போ விஜய் டிவில நடந்துகிட்டு இருக்க நிகழ்ச்சிக்கும் பெரிய வித்யாசம் ஒண்ணும் இல்ல. இந்த நிகழ்ச்சிய ரெண்டு நாள் தொடந்து பாத்தா போதும்... சட்டைய கிழிச்சிகிட்டு நாமளே நமக்கு அப்ளிகேஷன் ஃபார்ம் பில் பண்ணி கீழ்பாக்கத்துல சேர்ந்துருவோம். உங்களுக்காக சில உலக தரமான, சிந்தனையை தூண்டக்கூடிய வகையில் கேட்கப்பட்ட கேள்விகள். (ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட கேள்விகள் தவிற)


புதிய வீட்டிற்கு செல்லும் போது எதை காய்ச்சுவார்கள்?

a) பால்  b) தண்ணீர்  c) ரசம் d) மோர்

நல்ல வேளை ஆப்ஷன் e) சாராயம் னு குடுக்காம விட்டீங்களேடா...


கல்யாணம் ஆகாத ஆண்களுக்கு எந்த கட்டு போடவேண்டும் என கூறுவார்கள்?

a) கைகட்டு  b) கால் கட்டு  c) கண்கட்டு  d) தலப்பாகட்டு

வக்காளி உங்களையெல்லாம் ரோட்டுல விட்டு ஒரே வெட்டு.


தமிழ்நாட்டில் உணவை அடிப்படையாக கொண்ட பண்டிகையின் பெயர் என்ன?

a) பொங்கல்   b) மெதுவடை   c) கார போண்டா  d) தக்காளி சட்னி

அடடா..இதுவல்லவா கேள்வி... தமிழ்நாட்டுல ஒருபய இல்லை இதுக்கு பதில் சொல்ல...


கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி செந்திலிடம் எத்தனை பழங்கள் வாங்கி வரச்சொன்னார்?

     a) 1        b) 2        c) 3        d) 4

அப்புடியே அந்த சொப்பன சுந்தரியா யாரு வச்சிருக்காங்கங்குறதையும் கண்டுபுடிக்க  சொல்லுங்க ராசா

பின்வருவனவற்றில் எது கிரிக்கெட்டில் விளையாடும் ஸ்ட்ரோக் கிடையாது?

a) ஸ்ட்ரெய்ட் ட்ரைவ்  b) கவர் ட்ரைவ் c) ஆன் ட்ரைவ் d) பென் ட்ரைவ்

ஏம்பா இந்த் சிடி ட்ரைவ், டிவிடி ட்ரைவ்னுல்லாம் எதோ சொல்றாங்களே.. அதெல்லாம் நீங்க சேக்கலயா?

நீங்கள் M.B.B.S முடித்திருந்தால் பின்வருவனவற்றில் எந்த தொழிலுக்கு தகுதியானவர்?

a)கணித அறிஞர்      b) ஓட்டுனர்       c) வழக்கறிஞர்      d) மருத்துவர்

இய்ய்யாய்...எங்க தலைவரு பவர் ஸ்டார் MBBS படிச்சிட்டு நடிகரா இருக்காரு.. நீங்க ஏன் நடிகர்ங்குற ஆப்ஷன சேக்கல... இதுக்கு நீங்க பகிரங்கமா மன்னிப்பு கேட்டே ஆகனும்

எலும்பு முறிவை கண்டறிய எந்த வகை கதிர் வீச்சு உபயோகப்படுகிறது?

a) X-RAY      b) Y-RAY      c) Z-RAY    d) Q-RAY

 இந்த அண்ணா ஹசாRAY ன்னு ஒண்ணு இருக்கே... அத வச்சி எதையாச்சும் கண்டுபுடிக்க  முடியுமா பாத்து சொல்லுங்க...

இன்று போய் நாளை வா திரைப்படத்தில் இடம் பெறும் இந்த வரியை பூர்த்தி செய்க..

ஏக் காவுமே... ஏக் கிசான் _______ தாத்தா?

a) ரவி           b)    ராம            c) ரெட்டி        d ) ரகு

உங்களையெல்லாம் இந்தியன் தாத்தாகிட்ட தாண்டா புடிச்சி குடுக்கனும்




சரி இவியிங்க எப்புடியோ ஒழிஞ்சி போறாய்ங்கண்ணு பாத்தா, இப்போ இன்னோரு புது தொல்லை வேற ஆரம்பிக்க போகுது. "கையில ஒரு கோடி" ன்னு சன் டிவில...இந்த சன் டிவி மாதிரி வெக்கங் கெட்டவங்கள பாக்கவே முடியாது. விஜய் டிவில என்ன பண்றாய்ங்களோ அதயே திரும்ப  பண்ணாதான் இவிங்களுக்கு தூக்கம் வரும். அங்க கலக்கப்போவது யாரு ன்னு ஒரு ப்ரோக்ராம் நல்லா போயிட்டு இருந்துச்சி.. என்ன பண்ணாய்ங்க... அந்த நிகழ்ச்சில உள்ள ஜட்ஜுக்கு மொதக்கொண்டு மொத்தமா ஒரு ரேட்ட பேசி அப்புடியே இங்க கொண்டு வந்து ஒரே ஒரு வார்த்தைய மட்டும்  மாத்தி "அசத்தப்போவது யாரு" ன்னு ஓட்டுனாய்ங்க.

இப்ப என்னடான்னா அவிங்களே KBC ய  உள்டா அடிச்சி ஒரு நிகழ்ச்சிய ஆரம்பிச்சி ஒட்டிகிட்டு இருக்காய்ங்க.. உடனே இவுக அதயும் உல்டா அடிச்சி  "கையில் ஒரு கோடி" ன்னு ஓண்ண ஆரம்பிச்சிட்டானுங்க.. ஏண்டா வர வர கோடிக்கு உண்டான மரியாத போச்சேடா உங்களால.. இதெல்லாம் பாக்கும் போது எனக்கு கருணாஸ் ஒரு படத்துல சொன்ன வசனம் தான் ஞாபகம் வருது.. "எங்க ஊர்ல பத்து வருஷத்துக்கு முன்னாடி ஏர் ஓட்டிகிட்டு இருந்த முனுசாமி இன்னும் ஏர் தான் ஒட்டிக்கிட்டு இருக்கான்... சைக்கிள்ல் போயிட்டு இருந்த கந்தசாமி இன்னும் சைக்கிள்ல தான் போயிட்டு இருக்கான்.. ஆனா
உங்க கிட்ட மட்டும் எப்புடி இவ்வள காசு.. ஓண்ணு நீ குறுக்கு வழில சம்பாதிச்சிருக்கனும்... இல்லை அரசாங்கத்த ஏமாத்தி சம்பாதிச்சிருக்கனும்" ன்னு.

சரி அந்த மேட்டர விடுவோம்...விஜய் டிவில உள்ள ப்ரோக்ராமுக்கே கேள்விங்க அப்புடி  இருந்துச்சின்னா சன் டிவில எப்புடி இருக்கும்? அதுக்காக கஷ்டப்பட்டு ஒரு மாதிரி  வினாத்தாள தயாரிச்சிருக்கேன்... இத மட்டும் மட்டும் படிச்சிட்டு போட்டிக்கு போனீங்கன்னா..கோடியோட தான் வீட்டுக்கு வருவீங்க.. இதோ கேள்விகள் உங்களுக்காக...

1. தமிழ்நாட்டில் சமயலுக்கு பயன்படுத்தப்படும் பூவின் பெயர் என்ன?

  a)வாழைப்பூ     b) மல்லிகைப்பூ        c) குஷ்பூ        d) கனகாம்பரம்

2. புள்ளி ராஜாவுக்கு _________ வருமா?

  a)கேன்சர்   b) மலேரியா        c) Short term memory loss       d) எய்ட்ஸ்

3.நயன் தாரவின் தற்போதைய காதலர் பெயர் என்ன?

  a) சிம்பு        b) ப்ரபு தேவா        c) பவர் ஸ்டார்    d) Selection under progress

4. கோடிட்ட இடத்தை நிரப்பவும்
   தேவுடா தேவுடா ___________ தேவுடா!!!!

   a)பழனி       b) திருத்தணி        c) திருச்செந்தூர்       d) ஏழுமலை

5. மூக்கடைப்பு உடலின் எந்த பகுதியில் ஏற்படும்?

  a) வாய்         b) முழங்கால்         c) மூக்கு         d) கபாலம்

6. சிம்புவுக்கு நடிக்கத் தெரியாது

  a)ஆமாம்        b) இருக்கலாம்      c) கரெக்டா சொன்னீங்க    d) போடா டேய்

7. டீசல் எஞ்ஜினில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் பெயர் என்ன?

  a)சுடு தண்ணி         b) பச்ச தண்ணி        c) டீசல்          d) விளக்கெண்ணை


8.  சாம் ஆண்டர்சன் நடித்த திரைப்படம் " யாருக்கு யாரோ______________"


      a)கிட்னி      b) சட்னி        c) மேட்னி     d) ஸ்டெப்னி

9. தமிழ்நாட்டில் குடிநீர் குழாயை திறந்தால் என்ன வரும்?

  a) காத்து    b) தண்ணீர்      c) பெட்ரோல்     d) சமயல் எரிவாயு

10. கீழ்கண்டவர்களில் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளூடன் தொடர்புடைய்வர் யார்?

  a) பூர்ணம் விஸ்வநாதன்   b) வி.எஸ்.ராகவன்    c) மன்மோகன் சிங்   d) கேப்டன் விஜயகாந்த்

11. கண்ணா... ரெண்டாவது _________ திங்க ஆசையா?

   a) வடை       b) இட்லி         c) லட்டு         d) தோசை

12. விஜய் ஒரு  ______________
 
 a)நகைச்சுவை நடிகர்   b) அமெரிக்க மாப்பிள்ளை     c) சங்கி மங்கி  d) மங்கி சங்கி


13. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் எத்தனை இலைகள் இருக்கும்?

   a)1        b) 2         c) 3          d) 4


14. "கா..கா" வென கத்தும் பறவையின் பெயர் என்ன?

      a) கிளி      b) தூக்கனாங் குருவி      c)வவ்வால்      d) காக்கா

14.  இவற்றுள் எது பவர்ஸ்டார் நடித்த திரைப்படம்?

         a) லத்திகா     b) ங்கொக்கா      b) ஆப்ரிக்கா   d) சொர்ணாக்கா


சரி அப்ப அந்த ஒரு கோடி வாங்குன அப்புறம் நம்மள மறந்துடாதீங்க...

அறிவு பசியை தூண்டும் கேள்விகள் உபயம்: நண்பர் கார்த்தி

Tuesday, March 6, 2012

அரவான் - தமிழ் சினிமாவில் ஒரு கருங்கல்!!!


Share/Bookmark
"இந்த சீன் செம்ம  காமெடிப்பா"
                 
"இந்த ஆக் ஷன் சீன் பயங்கரம்"

 "இந்த செண்டிமெண்ட் சீன் பூந்து வெளையாடிருக்காங்கப்பா"

"இந்த பாட்டு ரொம்ப நல்லாருக்குபா"

"இந்த சீன் படு விறு விறுப்பா இருக்குபா"


இந்த மாதிரி எந்த ரியாக்ஷனுமே நம்மாள இந்த படம் பாக்கும் போது குடுக்க முடியாது, எப்புடி போறோமோ அதே மாதிரி ரோபோ மாதிரி உக்கார்ந்துருந்துட்டு எழுந்து வரவேண்டியது தான். வரும்போது வேணா தலைவலி, டென்ஷன்னு எதாவது நம்ம கூட  வரலாம். எதோ கடனுக்குன்னு படம் ஓடிகிட்டு இருக்கு. எதாவது ஒரு சீனாவது டச் பண்றமாதிரி இருக்கும்னு
நானும் பாத்துட்டே இருந்தேன்.. அப்புறம் என் பக்கத்துல உள்ளவரு "படம் முடிஞ்சிருச்சி ப்ரதர்..... வாங்க வீட்டுக்கு போவோம்" ன்னு சொன்ன அப்புறம் ஏமாற்றம் தாங்க முடியாம  எழுந்து வந்தேன்.


ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி படிச்சிட்டு இருக்கும் போது வெயில்னு ஒரு படம் வந்துச்சி.அந்த படம் மொத நாளே பார்க்க வேண்டிய சூழ்நிலை. அதுக்கு பெருசா ஒண்ணும் காரணம் இல்ல..  S pictures ங்கற பேனரும், ஏற்கனவே வந்த இம்சை அரசன் படத்தோட தாக்கமும் தான் காரணம். ஆனா வெயில் எனக்கு சுத்தமா புடிக்கல, எந்த சீனும் டச்சிங்கா இல்லைங்கற மாதிரி ஃபீலிங். ஆனா என் கூட வந்தவிங்க எல்லாம் வெயில் பயங்கர டச்சிங்கா இருந்ததா சொன்னாங்க. அதே மாதிரி படமும் நிறைய பேருக்கு புடிச்ச மாதிரி இருந்தது போலருக்கு. சரி நம்ம frequency க்கு இந்த ஆளு படம் செட் ஆகாது. இனிமே  இவரோட படங்கள் பாக்க கூடாதுன்னு அன்னிக்கே முடிவு பண்ணேன். அதுனால தான் நான் இந்த அங்காடி தெரு வ கூட இன்னும்
பாக்கல.

இதே மாதிரி இன்னும் சில டிரைக்டர்கள் படமும் பாக்க கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன். இந்த சரண், பாலா, பாலாஜி சக்திவேல், ப்ரபு சாலமன் இன்னும் ஒரு சில பேரு, பொதுவா இந்த அழுகாச்சி க்ளைமாக்ஸ் வச்சி படத்த ஹிட்டாக்க ட்ரை பண்ற டிரைக்டர்கள எனக்கு சுத்தமா  புடிக்கிறதில்லை. மத்தவங்கள்ளாம் எப்புடி மக்கள சிரிக்க வைக்கலாம், ஆச்சர்யபட வைக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கும் போது இவிங்க மட்டும் எப்புடி அழ வைக்கலாம்னு யோசிக்கிறவிங்க. என்ன பொறுத்த வரைக்கும் இவங்க ஒரு விதமான மன நோய் வந்தவர்கள்னு சொல்லலாம்.

இருந்தாலும் அரவான் பாக்குறதுக்கு காரணம்,  நான் தியேட்டர்ல படம் பாத்து மூணு மாசம் ஆகியிருந்ததும், வேறு எந்த நல்ல படமும் இப்ப ரிலீஸ் ஆகாம இருந்ததும், சில முண்னனி  பதிவர்கள் இந்த படத்துக்கு குடுத்த பில்ட் அப்பும் தான். வெயில் பாத்தப்ப எனக்கு என்ன  ஃபீலிங்க குடுத்துச்சோ அதே தான் இந்த படமும். இந்த சீன் நல்லாருக்குன்னு சொல்ற மாதிரி எதுவுமே இல்ல. எதோ நேரத்த கடத்தனும்னு ஓடிக்கிட்டு இருக்கு.

போன வெள்ளிக்கிழமை நைட்டு கார்த்தி அண்ணாவ பாக்கும் போது கேட்டாரு "அரவான் படத்துக்கு போலாமா சிவா?"ன்னு

"இல்லைண்ணா... நா வசந்தபாலன் படத்துக்கெல்லாம் வரமாட்டேன்... அதோட நா இன்னிக்கு  ஊருக்கு கெளம்பறேன்.. அடுத்த வாரம் வேணா வேற படத்துக்கு போவோம்"னு சொல்லிட்டேன்.

படம் பாத்த அப்புறம்.. "அய்யோ..கார்த்தி அண்ணா படத்த  பாத்தாலும் பாத்துருக்க போறாரு..உடனே  கால் பண்ணி அவர காப்பாத்துவோம்"னு அவசரமா கால் பண்ணேன்.. அந்த பக்கம்  ஒரு குரல் மெதுவா கேட்டுச்சி..

"I am sorry.... ஒரு ரெண்டரை மணி நேரம் முன்னாடி கால் பண்ணிருந்தீங்கன்னா பேஷண்ட்ட காப்பாத்திருக்கலாம்" ன்னு. சரி விதி யார விட்டுச்சின்னு நெனச்சிட்டு விட்டுட்டேன்.

நல்ல கதைக்களத்த தேர்ந்தெடுத்தும் சிறப்பான காட்சிகள் அமைக்காதது தான் படத்துக்கு பெரிய மைனஸ். கேமரா, லொக்கேஷன்ஸ் எல்லாமே ரொம்ப சூப்பர். மேக்கிங் & டைரக்ஷன்லையும் நல்ல Improvement. ஆனா  ஸ்கிரிப்டு தான் சற்று டொம்மை போல் இருக்கிறது . படம் ஆரம்பிக்கும் போது சில காட்சிகள் வித்யாசமான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் பின் வரும் காட்சிகள் ஏமாற்றத்தை மட்டுமே தருது.

இந்த படத்துக்கு பேரு மட்டும் தான் பீரியட் பிலிம்.. ஆனா படத்தோட முதல் பாதில ஹீரோ ஆதி, நம்ம வடிவேலு மாதிரி பேசிகிட்டு திரியிறாரு. பசுபதி இந்த படத்துல நல்ல நடிப்ப வெளிப்படுத்தியிருந்தாலும் படம் முடியும் போது "ஆமா இந்த படத்துல எதுக்குய்யா பசுபதி"ன்னு தோணுது. அப்புறம் நம்ம பரத் இந்த படத்துல மேக் அப் இல்லாம நடிச்சிருக்கரு.அழகுன்னா அழகு அப்புடி ஒரு அழகு. சிங்கம்புலி வர்ற ஒரு ரெண்டு சீனுக்கு தியேட்டர்ல இருந்தவங்க ரொம்ப கஷ்டப்பட்டு சிரிப்ப வரவழைச்சிகிட்டு சிரிச்சாங்க. வேற என்ன பண்ணித் தொலைக்கிறது.

வசந்தபாலன் ஏற்கனவே எடுத்த இரண்டு படங்களுமே ஹிட்.. அதனால இந்த படம் எப்புடி இருக்குன்னு தெரியிறதுக்கு முன்னாலயே

"இந்த படம் தமிழ் சினிமாவின் மைல் கல், செங்க கல்,கருங்கல்" ன்னு செய்தி ஊடகங்கள் Build upகளை  குடுக்க வாய்ப்பு இருக்கு.

இல்லைன்னா "ஒவ்வொரு தமிழனும்பார்க்க வேண்டிய படம்" "தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம், அடுத்த வட்டம்"ன்னு உங்க மொழி உணர்வுகளை தூண்டி உசுப்பேத்தி விட வாய்ப்பு இருக்கு.

அப்படி இல்லைன்னா "கடின உழைப்புக்கு மரியாதை செய்வோம்" "ஹீரோ ஒடம்ப கொறைச்சிருக்காரு, ட்ரைக்டர் வெயில்ல நின்னு படம் எடுத்துருக்க்காரு, ஹீரோயின் கஷ்டப்பட்டு சேலை கட்டி நடிச்சிருக்காங்க"
ன்னு செண்டிமெண்டா தாக்க வாய்ப்பு இருக்கு.

இதயெல்லாம் சமாளிக்கிறது உங்க கைல தான் இருக்கு.

இந்த படத்த பாக்கதீங்கன்னு நான் சொல்லலை. பாக்குற அளவு ஒர்த் இல்லைன்னு சொல்றேன். இது ஒரு பொழுது போக்கு படமும் இல்லை. அனுபவித்து ரசிக்கக்கூடிய படி ஒரு நல்ல பீரியட் படமும் இல்லை.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...