Thursday, January 30, 2014

கொஞ்சம் குடிங்க பாஸ்!!!


Share/Bookmark
குறிப்பு: இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல . திநகர் சரவணா ஸ்டோர்ஸ விட அதிகமா ஒரு கடையில கூட்டம் கூடுதுன்னா அது நம்ம டாஸ்மாக்குகள்ல தான். புதுப்படம் ரிலீஸ் ஆனா மொதநாள் மட்டும் தான் தியேட்டர்ல கூட்டம் அப்டி இருக்கும். ஆனா இங்க தினம் தினம் புதுப்பட ரிலீஸ் கூட்டம் தான். அள்ளுது. ரஜினியும் கவுண்டமணியும் மன்னன் படத்துல மொத டிக்கெட் வாங்கிட்டு கிழிஞ்ச சட்டையோட “சைனு... மோதரம்” ன்னு வர்ற மாதிரி தான் சாய்ங்காலம் இந்த கடைக்குள்ள போற ஒவ்வொருத்தரும் திரும்பி வர்றாய்ங்க.  பொங்கலுக்கு வந்த படமெல்லாம் 50 கோடி கலெக்சன் பாக்கவே நாக்கு தள்ளுது. ஆனா ரெண்டே நாளுல டாஸ்மாக்குகள்ல 235 கோடி கலெக்சன்... எப்பூடி.. அப்டி இந்த குடியில என்ன தான் இருக்கு. ஏன் மக்கள் இவ்வளவு ஆர்வாமா இருக்காங்க... மனித சமுதாய முன்னேற்றத்துக்கு இந்த குடி எவ்வளவு உறுதுணையா இருக்குன்னு  இப்போ பாப்போம்.


1. மொதல்ல கைய குடுங்க. நீங்க ஒரு குடிகாரனா ஆயிட்டாலே இந்த வெக்கம், மானம், சூடு, சொறைனை அசிங்கமான உணர்ச்சிகள்லாம் உங்கள விட்டு போயிரும். உங்க பையன் உங்கள மதிக்க மாட்டான். உங்க மனைவி உங்கள படு கேவலமா திட்டுவாங்க. ரோட்டுல போற வர்றவன்லாம் காறி துப்புவான். ஆனா நமக்கு தான் ஒண்ணுமே தெரியாதே. அதனால குடிக்க  ஆரம்பிச்சிட்டாலே நீங்க காலர தூக்கி விட்டுக்கிட்டு  பெருமையா சொல்லிக்கலாம் “NOW I AM A SHAMELESS FELLOW" ன்னு. 

2. பஸ் டிக்கெட்டு ட்ரெயின் டிக்கெட்டு ஃப்ளைட் டிக்கெட்டுன்னு எல்லாத்தையும் ஏத்திபுட்டாய்ங்க. இப்பல்லாம் பக்கத்து ஊருக்கு போகனும்னாலே காசு ரொம்ப செல்வாகுது. ஆனா நூறு ரூவா செலவு பண்ணா லண்டன், அமெரிக்கா, சுட்சர்லாந்து ஏன் நிலாவுக்கே கூட பொய்ட்டு வரலாம். ஒரு குவாட்டர போட்டுட்டு நீட்டிகிட்டா போதும். அப்டியே பசிபிக் பெருங்கடல் வழியா பறந்து போய் அமெரிக்காவுல ஒரு யூ டர்ன போட்டு அப்டியே ஷாட் கட்டுல நாசா வழிய நிலாவுல போய் லஞ்ச் சாப்டு டின்னருக்கு
திரும்ப வீட்டுக்கு வந்துடலாம். தெளிவா இருந்தா இதெல்லாம் நடக்குமா? 

3. குடிக்க ஆரம்பிச்சிட்டாலே நீங்க ஒரு திறந்த புத்தகமா மாறிடுவீங்க. ”உயிரே போனாலும் இந்த ரகசியத்த சொல்லிடாத”ன்னு ஒருத்தன் நம்மகிட்ட சொல்லிருப்பான். ஆனா ரெண்டு ரவுண்டு உள்ள போனா போதும் யார்கிட்ட அத சொல்லக்கூடாதுன்னு சொன்னானோ அவன்கிட்டயே அத்தனையும் அச்சி பிசிறாம சொல்லுவோம்.

4. மனுஷங்க பலபேர்கிட்ட இல்லாத ஒரு நல்ல பழக்கம் என்னன்னா இந்த சகிப்புத்தன்மை தான்.  சரக்கு உள்ள பொய்ட்டாலே இந்த சகிப்பு தன்மை எங்கருந்து தான் வரும்னு தெரியல. தெளிவா இருந்தா ஏசி ரூம்லதான் படுப்பேன்னு சொல்லி அடம் புடிப்பாய்ங்க. அடுத்தவன் எச்சி துப்புனாலே மூஞ்ச சுழிப்பாய்ங்க. ஆனா கூட கொஞ்சம் உள்ள பொய்ட்டா அவ்ளோதான்.. ரோட்டு ஓரமா  சாக்கடைய ஒட்டி குபுக்குன்னு வாந்தி எடுத்து அது மேலயே படுத்து பொறண்டுக்குவாய்ங்க. வெரி டீசண்ட் கய்ஸ்ன்னு பேர் கூட உங்களுக்கு கிடைக்கும்.


5. எதோ கறுப்பு பணம்ன்றாங்க.. அந்நிய சலவலானிங்குறாங்க.. ஹவாலாங்குறாங்க..  வரி ஏய்ப்புங்குறாங்க.. இப்படிப்பட்டவங்க இருக்குற நாட்டுல நாடு நல்லாருக்கனும்னு நெனைக்கிற ஒரே ஜீவன்கள் இந்த குடிமகன்கள் தான். வாங்குற சம்பளத்துல கால்பகுதியோ இல்லை பாதியோ இல்லை முக்கால்வாசியோ (அவங்க அவங்க experience ah பொறுத்து) திரும்ப நாட்டுக்கு வருவாயா நாமளே குடுத்துடுறோம். நம்ம வீட்டுல சோறு இல்லைன்னாலும் பரவால்லை நாட்டு நல்லா இருக்கனும்னு நெனைக்கிறவிங்க குடிகாரய்ங்க மட்டும் தான்.

6.  இன்னொரு முக்கியமான விஷயம் ஷேரிங்ங்ங்.. அவசரம்னு கேட்டா அம்மஞ்சல்லி தரமாட்டாய்ங்க. ஆனா குடிக்கிறப்ப மட்டும் இவய்ங்க பண்ற அலும்பு இருக்கே.. “பாஸ் இத சாப்டுங்க பாஸ்”... ‘வெறும் வயித்துல குடிக்காதீங்க பாஸ்... இந்த சிக்கன லைட்டா கடிங்க பாஸ்...” ”இன்னும் கொஞ்சம் தண்ணி ஊத்திக்குங்க பாஸ்”.. “என்ன அதுக்குள்ள எழுந்துட்டீங்க.. இன்னும் ரெண்டு பீரு இருக்கு.. அட உக்காருங்க பாஸ்” ன்னுஅவனுக்கு இல்லைன்னாலும்  அடுத்தவன் வயிறு கெட்டுப் போயிறக்கூடாதுன்னு அள்ளி அள்ளி குடுப்பாய்ங்க.

7. நம்மூர்ல வேற மக்கள் தொகை ஏறிகிட்டே போவுது. என்பது கோடி நூறு கோடி நூத்தம்பது கோடின்னு அது பாட்டுக்கு போயிகிட்டே இருக்கு. இன்கம்மிங் அதிகமா இருக்கு ஆனா அவுட் கோயிங் ரொம்ப கம்மியா இருக்கு. எதச் சொல்றேன்னு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். அதனால அவுட்கோயிங்க அதிகப்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த டாஸ்மாக். வேணுங்குற அளவு குடிங்க. கொஞ்ச நாள்ள லிவரு லீவராயி கிட்னி சட்னியாயி.. அப்புறமென்ன நாமளும் முகேஷ் மாதிரி அவுட்கோயிங் தான். அதானால மக்கள் தொகை கட்டுப்பாட்டுலயும் நாட்டுக்கு உதவுறது நம்ம ”குடி”மக்கள் தான்.

8.  குடிகாரனா ஆயிட்டாலே பல குடும்பங்களை அழிக்கிற புண்ணியமெல்லாம் வந்து உங்களச் சேரும். நீங்க ஃபுல்லா குஸ்டு ரோட்டுல தெளிவா போயிட்டு இருக்க எவன் மேல வேணாலும் வண்டிய விட்டு அடிக்கலாம். சும்மா ஒரே ஒரு தடவ மட்டும் அவனுக்கு உயிர் போவும்.அவன் குடும்பம் அத்தோட காலி ஆவும். சில நேரங்கள்ல நமக்கு கூட ஒரு தடவ உயிர் போவும்.  இந்த புண்ணியமெல்லாம் யாருக்கு கெடைக்கும்?

9. கமலஹாசன் இன்னா சொல்லிருக்காரு. மன்னிப்பு கேக்குறவன் மனுஷன். மன்னிக்கிறவன் வீரன்ன்னு. ஒருத்தன் மனுசனாவுறதும் வீரனாவுறதும் இந்த தண்ணியாலதான். ஒருத்தன் நம்மள அசிங்க அசிங்கமா திட்டிருப்பான். வெட்டுக்குத்து ரேஞ்சுல ரெண்டு பேருக்கு சண்டை நடக்கும். ஆனா சாயங்காலம் ஒரு பாட்டில தூக்கி முன்னால வச்சா... “ஹி... ஹி...அப்புறம் மாப்ளே... சும்மா சும்மா நீ கோவப்படுவ” அப்டின்னு சொல்லிட்டு சமாதானமா 
போயிருவாய்ங்க. நா மொதல்ல சொன்ன மாதிரி மா.வெ.சூ.சொ ங்குற ஃபீலிங்கே இருக்காது.

10 .இந்த ப்ளானிங்குங்ற மேட்டர யாரு ஃபாலோ பண்றாங்களோ இல்லியோ.. நம்ம குடிமகன்கள் கரெக்டா ஃபாலோ பன்றாங்க. மறு நாள் கடை லீவுண்ணா இவிங்க ரியாக்சன பாக்கனுமே.. மொத வேலையா போய் ரெண்டு பாட்டிலு வாங்கிட்டு வந்து ஸ்டாக் வச்சா தான் நடுக்கம் நிக்கிது.

11. வாழ்க்கையில போனா வராதது லிஸ்டுல முக்கியமான ஒண்ணு நம்ம வயசு. ஆனா தண்ணியப்போட்டா அதக்கூட திரும்ப கொண்டு வந்துடலாம். ரெண்டு ரவுண்டு உள்ள விட்டா அப்டியே பச்சை கொழந்தையாவே மாறிடுவாய்ங்க. அதான் இந்த சின்னக் குழந்தை நடை பழகும் போது விழுந்து விழுந்து எந்திரிக்குமே அந்த ஸ்டேஜூ.. என்ன ஒரே ஒரு வித்யாசம்னா சின்னக்குழந்தையில விழுந்து விழுந்து எந்திரிச்சா வீட்டுல உள்ளவங்க குழந்தை நடக்க ஆரம்பிச்சிட்டான்னு சந்தோஷப்படுவாங்க. ஆனா இப்போ விழுந்தா ஒரு பய கண்டுக்க மாட்டான்.. மூக்கு முகரையெல்லாம் பேந்து போயிரும்.

12 அது மட்டுமா பல கவிஞர்கள உருவாக்குறதும் இந்த தண்ணி தான். தெளிவா இருந்தா தொடர்ந்து நாலு வார்த்தை சேத்து பேச முடியாது. ஆனா உள்ள கொஞ்சம் விட்டுட்டா... “மெளண்ட் ரோடு அண்ணா சால... சூப்பர் ஸாரு முரட்டுக்காளை” “வானமோ நீலம்.. நீ தான் என் பாலம்” ந்ன்னு அப்டியே கவிதையா கக்குவாய்ங்க. அதுவும் லவ் பண்ணிட்டு இருக்கவிங்க தண்ணியடிக்கும் போது கூட எவனாவது மாட்னா அவனுக்கு மேட்டர் ஓவர்னு அர்த்தம்.



Friday, January 17, 2014

ஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு!!!


Share/Bookmark
இந்த படம் பாத்து முடிக்கும் போது நண்பர் ஒருத்தர் கொஞ்ச நாளுக்கு முன்னாடி இந்த படத்த ஒரு வடிவேலு காமெடிகூட கம்பேர் பண்ணி போட்ட ஸ்டேட்டஸ் தான் ஞாபகம் வந்துச்சி. வடிவேலுவ ஒரு நாலு பேர் ஒரு சந்துக்குள்ள விட்டு சாணியால அடிச்சிடுவாய்ங்க. உடனே வடிவேலு ”குருநாதா இனிமேலும் பொறுக்க முடியாது குருநாதா” ன்னு சொல்லிட்டு போய் அவரு குருநாதன்னு ஒரு  பேட்டை ரவுடிய அழைச்சிட்டு வந்து “இப்போ அடிங்கடா இப்போ அடிங்கடா” ன்னு கத்த வடிவேலுக்கு விழுந்தத விட அதிகமா அடி விழும் குருநாதனுக்கு. “குருநாதா.. எனக்காவது சாணியால அடிச்சாய்ங்க. உனக்கு மாட்டு ஐட்டத்தையும் மனுச ஐட்டத்தையும் கலந்து அடிச்சிட்டாய்ங்க குருநாதா”ன்னு அவர வடிவேலு  கலாய்க்க குருநாதன் அந்த ரவுடிங்கள விட்டுட்டு வடிவேலுவ வெட்ட தொறத்துவாறு. ஜில்லா பாத்தவங்களுக்கு வடிவேலு யாரு குருநாதன் யாருன்னு நல்லா புரிஞ்சிருக்கும். இவருக்கு விழுறது பத்தாதுன்னு “இப்ப பாருங்கடா கேரளாவுலருந்து என் குருநாதன கூப்புடுறேன்”ன்னு மோகன்லால அழைச்சிட்டு வந்து... என்னத்த சொல்ல...

அந்தாளு அந்த ஊர்ல ஒரு பெரும்புள்ளியா கெத்தா சுத்திகிட்டு இருந்தாரு. அவர இங்க கூட்டிட்டு வந்து இதுக்கு மேல இந்த பக்கமே வரமுடியாத படி ஒரு படத்துல நடிக்க வச்சிருக்காய்ங்க. என்னாப்பா.. படம் பாத்த எல்லாரும் மோகன்லால் சூப்பர், செமையா நடிச்சிருக்காரு பட்டைய கெளப்பிருக்காருங்குறாங்க நீ என்னான்னா இப்புடி சொல்றன்னு தானே கேக்குறீங்க. சத்தியமா நா உண்மையத்தாங்கோ சொல்றேன். இப்புடி ஒரு டம்மி ரோல்ல நடிக்கிறதுக்கு நம்ம மலையாள சூப்பர்ஸ்டார் சும்மாவே
இருந்துருக்கலாம்.

ராஜ்கிரன் பல படங்கள்ல நடிச்சி நசுக்கித் தூக்கிப்போட்ட ஒரு ரோல்ல நடிக்கிறதுக்கு கேரளாவரைக்கும் போய் இவர கூட்டிவந்துருக்காய்ங்க. ஆனா இத இப்போ ராஜ்கிரண்கிட்ட கொண்டு போயிருந்தா கூட பொடணிலயே அடிச்சி திருப்பி அனுப்பிருப்பாரு. அப்புடி ஒரு கரடி காரித்துப்புற மாதிரி ஒரு ரோல் மோகன்லாலுக்கு. வழக்கமா தமிழ் சினிமால ஒரு பெரிய ஹீரோ டான் கேரக்டர் பண்ணா எப்படி இருக்கும்? அவர் தப்பு செய்வாரு.. . கட்டைப் பஞ்சயத்து பண்ணுவாரு. கஞ்சா கடத்துவாரு. ஆனா ஏழைகளுக்கு ஒரு ப்ரச்சனைன்னா தட்டி கேப்பாரு. நியாயம் கேட்டு  வர்றவங்களுக்கு நியாயம் வழங்குவாரு. இதானே நம்மூர் வழக்கம். நம்ம பண்பாடு. அப்பதானே அந்த கேரக்டருக்கு ஒரு மரியாதை. வேலுநாயக்கர்லருது, நந்தா ராஜ்கிரன் வழியா கடைசியா தலைவா சத்யராஜ் வரைக்கும் இத தானே ஃபாலோ பண்ணாங்க. அப்போதானே அந்த கேரக்டருக்கு ஒரு கெத்து. ஆனா இங்க மோகன்லால ஆக்கிவிட்டுருக்காய்ங பாருங்க. தமிழ் மசாலா படங்கள்ல நடிக்கிற ஒரு தரைலோக்கல் வில்லனா அவர காமிச்சிருக்காய்ங்க. தப்பு செய்றாரு. ஏழைங்க வயித்துல அடிக்கிறாரு. நல்ல விஷயம் ஒண்ணு பண்ண மாட்டேங்குறாரு. இதுக்கு எதுக்குடா மோகன்லாலு?

அதுகூட பரவால்ல. வில்லத்தனத்தயாது ஒழுங்கா பண்றாரான்னு பாத்தா அதுவும் இல்லை. தெரியாத்தனமா இந்தாளுக்கு சிவன்னு பேரு வச்சிட்டாய்ங்க. ”ஷிவன் என்ன கேக்கனும்னு  நெனக்கிறானோ அத தான் நீ பேஷனும்”  “சிவன் தண்டிச்சா உஷிர் (உயிர்) இருக்காது. மன்னிச்சா உஷிர் மட்டும் தான் இருக்கும்”  “சிவனுக்கு அப்புறம் தாண்டா சக்தி” “நான் சிவன்டா.. அழிச்சிடுவேன்டா...” அப்புடிடா இப்புடிடா... டேய் கொஞ்சம் பொறுடா.. பேசுன பஞ்ச் டயலாக் அளவுக்காவது எதாவது பண்ணிருக்கியாடா? அட்லீஸ்ட் ஒரு மர்டர் பண்ணிருக்கியாடா படத்துல? அடுத்தவன கொல்லனும்னா கூட இவரு கத்திய தூக்கி கீழ போட்டுறுவாரு. அவனா வெட்டிகிட்டு செத்துடுவான். இதுக்கு எதுக்கு உனக்கு பஞ்ச் டயலாக்கு?

பெரிய ரவடியான மோகன்லால் விஜயோட அப்பா இறந்துட்டதால எடுத்து அவர கூடவே மகனா நெனைச்சி வளக்குறாரு. ”விஜய்யோட அப்பாவ ஒரு போலீஸ் கொண்ணுட்டத்தால அவருக்கு காக்கி கலருன்னாலே புடிக்காது” அப்டின்னு நம்மகிட்ட ஒரு வார்த்த சொல்லிருந்தா ஓக்கேபா.. நாங்க அப்டியே பிக்ஸ் ஆயிக்கிறோம்பான்னு பிக்ஸ் ஆயிருப்போம். ஆனா அத வெளக்குறதுக்கு ஒரு 10 நிமிஷம். கூர்க்காவ பாத்தா அடிக்கிறாரு. யூனிஃபார்ம் டவுசர கிழிக்கிறாரு. யாராவது போலீஸ் ஆவனும்னு சொன்னா அடிக்கிறாரு. அதுக்கு இமானோட ஒரு சூப்பர் BGM வேற.. “காக்கீஈஈ....காக்கீஈ” ன்னு. மிடியல. படம் ஆரம்பிச்சி அரைமணி நேரம் ஆயியும் விஜய் சின்ன வயசுலயே காமிச்சிட்டு இருக்காய்ங்க. ஏம்பா சட்டு புட்டுன்னு ஒரு சைக்கிள் பெடல சுத்த சொல்லி வளர சொல்லுங்கப்பா.... இடைவேளை வரப்போவுது இன்னும் விஜய்ய காணும்.

ஒரு வழியா விஜய்யும் வரப்போறாரு.. சம்பவ இடத்த நெருங்கிட்டோம். வச்சாய்ங்க பாருங்க தீனா பட இன்ட்ரோவ... ‘என் ஆளுங்க அத்தன பேரு உள்ள இருந்தாலும் தீனா ஒருத்தன் வெளிய இருக்கான். அது போதும்” இந்த டயலாக்க சுரேஷ் கோபி பேசுனா அது தீனா..  அதே டயலாக்க மோகன்லால் பேசுனா அது ஜில்லா.. எப்புடி. இன்னொரு கொடுமை என்னன்னா ரெண்டு வாரம் முன்னால ஜில்லா ஸ்டோரி டிஸ்கஷன்னு ஒரு போஸ்ட் எழுதுனேன். அதுல தமாசுக்கு “உங்க பேரு சக்தி.. ஆனா உங்க ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் உங்களுக்கு ஜில்லா துரைன்னு பேரு வச்சி ஜில்லா ஜில்லான்னு கூப்டுறாங்கன்னு சொம்மா ஒரு தமாசுக்கு எழுதிருந்தேன். அட கண்றாவியே.. உண்மையிலயே அததான்யா பண்ணிருக்காய்ங்க. இவர்கிட்ட அடி வாங்குனா ஜில்லாவுலயே இருக்க மாட்டாங்கலாம். அதுனால இவரு பேரு ஜில்லாவாம்.

ஃபைட்டு முடிஞ்சிதுல்ல.. பாட்டு பாட்டு... போன ஒரு மாசத்துல நா அதிக தடவ கேட்டது இந்த படத்தோட இன்ட்ரோ பாட்டு தான். என்னோட favorite SPB ஷங்கர் மகாதேவன் காம்பினேசன்ல பட்டைய கெளப்பிருந்துச்சி. சொல்லப்போன இந்த வருசம் வந்த ரொம்ப காஸ்ட்லியான பாட்டும்  இது தான். விஜய்க்கு ஷங்கர் மகாதேவன் வாய்ஸ் எந்த ப்ரச்சனையும் இல்லாம மேட்ச் ஆயிருச்சி. ஆனா SPB வாய்ஸ மோகன்லால்... கொஞ்சம் கூட லிப் சிங்கே ஆகல.. இதுக்குமேல SPB ah அசிங்கபடுத்த முடியாதுப்பா.. அத கொஞ்சம் ஒழுங்காதான் எடுத்து தொலைச்சா என்ன. மோகன்லால் ரெண்டு மூணு ஸ்டெப் போடுவாரு பாருங்க.. ப்ரமாதம்.

அத விட R.B.செளத்ரியோட மகன்கள் ஜீவா ஜித்தன் ரமேசுன்னு மொத்த குடும்பமும் வந்து ஆடிகிட்டு இருந்தாய்ங்க. இந்த ஃபேமிலி ஆடியன்ஸூ.. ஃபேமிலி ஆடியன்ஸூம்மாய்ங்களே அது நீங்க தானாடா? பாட்டு முடிஞ்சப்புறம் இவங்கல்லாம்  happy family ah இருக்காங்களாமா.. அதுக்கு ஒரு நாலஞ்சி அருவை சீன். “இவங்க happy familybaa" அப்டின்னு சொல்லிருந்தா அதுக்கும் நாங்க ஃபிக்ஸ் ஆயிருப்போம். ஏண்டா இப்டி.

இந்த மாதிரி அருவை சீன்களுக்கு நடுவுல ரெண்டு மூணு நல்லா சீனும் வந்து அப்டியே படம் ஓடிட்டு இருக்க, கெளப்புறாங்க நமக்கு ஒரு பெரிய பீதிய. மோகன்லால ஒரு போலீஸ் அரஸ்ட் பண்ணிட அதுல கடுப்பான மோகன்லால் நம்ம குருப்புலயே ஒருத்தன போலீஸ் ஆக்குங்கடா அப்டிங்குறாரு. அய்யயோ.. திரும்பவும் போலீஸா... மோகன்லால் சார் நீங்க எப்பவும் எல்லாருக்கும் ஒரு கத்திய போட்டு தற்கொலை பண்ணிக்க சொல்லுவீங்களே அது மாதிரி எங்களுக்கும் ஒண்ணு போடுங்க சார்... அந்த கொடுமைக்கு இதுவே பரவால்ல சார். கதறக் கதற விஜய் ஒரு ரவுடி போலீசா ஃபார்ம் ஆயிட ,மோகன்லாலா ஒரு பெரிய ஆக்ஸிடெண்ட் நடந்துட பலபேர் செத்துடுறாங்க.

விஜய் ஃபீல் ஆயிடுறாப்ள. ஆப் சாப்டா கூல் ஆயிடுவாப்ளேன்னு பாத்தா சீரியஸ் போலீசா பார்ம் ஆயிடுறாப்ளே.. விஜய் செத்தவங்கள பாத்து ஃபீல் பண்ணிட்டு இருக்கும் போது காஜல் வந்து “உன் மூஞ்சிய கண்ணாடில பாரு.. உனக்கே புடிக்காது”ன்னு சொன்ன உடனே போய் கண்ணாடில அவர் முகத்த பாத்ததும் உடனே கண்ணாடிய உடைச்சிடுறாரு. ஏண்டா டேய்.. 10 செகண்டே உன் மூஞ்சிய உன்னால கண்ணாடில பாக்க  முடியலயே..  எங்களை எல்லாம் பத்தி கொஞ்சம் நெனைச்சி பாருடா..

போலீஸ் ட்ரெஸ்ஸ போட்ட உடனே அவன் கூட இருந்த ஆளுங்களையே போட்டு அடிக்கிறாப்ளே.. அத பாத்ததும் எனக்கு போக்கிரி லொள்ளு சபா ஞாபகம் தான் வந்துச்சி. பாட்டுக்கு டான்ஸ் ஆடிகிட்டு இருக்க ஜீவா “பாட்டுன்னா பாட்டேவா ஃபைட்டு ஃபைட்டு”ன்னு ஆடியன்ஸ் கத்துனதும் கூட இருந்தவய்ங்களையே தூக்கி போட்டு மிதிப்பாரு. அதே சூட்டோட மோகன்லாலாண்ட போய் சவால் விடுறாரு. “நிறுத்து எல்லாத்தையும் நிறுத்து”ன்னு. டேய் அவருதான் எதுவுமே பண்ண மாட்டேங்குறாரேடா.. அவர நிறுத்து நிறுத்துன்னா எதடா நிறுத்துவாறு? இந்த மாதிரி பல இடைஞ்சல் களுக்கு அப்புறம் இண்டரவ்ல் போட்டாங்க. அப்போ பக்கத்துல உக்காந்துருந்தவர் கிட்ட “அண்ணேன் இந்த படத்துல first half சூப்பரா இருக்கும்னு சொன்னாங்க.. அது எப்பண்ணே வரும்”ன்னேன்... அதுக்கு அவரு “என்ன தம்பி இப்டி கேக்குறீங்க.. இப்ப போச்சுல்ல.. அது தான் first half.. நீங்க பாக்கலயா?” ன்னாரு. “ஓ இதுதான் அந்த நல்லாஇருக்க first half ah சரிண்ணே.. சரிண்ணே..’ன்னு கெளம்புனேன்.

பத்து நிமிஷம் முன்னாடி வரைக்கும் மன்சூர் அலிகான் மாதிரி பொறுக்கி தனம் பண்ணிட்டு சுத்திட்டு இருந்த விஜய் இண்டர்வலுக்கு பொய்ட்டு வந்தோன்ன துரை சிங்கம் மாதிரி பேச ஆரம்பிச்சாரு. டேய் இன்னாடா நடக்குது இங்க? அத விட ஆப்ரேசன் க்ளீன் ன்னு ஒண்ணு சொன்னாரு பாருங்க.. நா கூட மதுரையுல உள்ள கக்கூசயெல்லாம் தொடப்பமும் பக்கெட்டும் எடுத்துட்டு போய் க்ளீன் பண்ண போறாரோன்னு பயந்துட்டேன். இது வேற க்ளீனாம்.

“இவ்வளவு நாளா எங்கய்யா இருந்த.. இந்த ஆப்ரேசனுக்காக யார வேணாலும் கொல்லு.. அசிஸ்டட்ண்ட் கமிஷணரா உன்ன ப்ரோமோட் பண்றேன்.. கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியா உன்ன நியமிக்கிறேன்” என்னடா எங்கயோ கேட்ட டயலாக் மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? சிங்கம்ல விஜயகுமார் பேசுற வசனம் தான் இதெல்லாம். அதே மாதிரி டம்மியா மிச்சர் திண்ணுட்டு உக்காந்துருக்க போலீஸ் ஒருத்தர் இங்கயும் இருக்காப்ளே.. இவன எங்கயோ பாத்த மாதிரி இருக்கே.. டேய் வீரம்ல அஜித்துகிட்ட அடி வாங்கிட்டு நார்த் இந்தியா போறேன்ன்னு போனவந்தானே நீயி.. சைலண்ட்டா இங்க வந்து ஆபீசர் ஆயிட்டான்யா..

செகண்ட் ஹாஃப்ல என்னத்த எடுக்குறதுன்னே தெரியாம கண்ட மேனிக்கு என்னென்னவோ எடுத்து வச்சிருந்தாய்ங்க. அப்போ தான் எனக்கும் புரிஞ்சிது ஏன் எல்லாரும் ஃபர்ட்ஸ் ஹாஃப் நல்லா இருக்குன்னு சொன்னாய்ங்கன்னு. இடைவேளைக்கு அப்புறம்லாம் படம் தலைவா படத்துக்கு இணையான ஒரு படமாக இருந்ததுன்னு சொன்னால் அது மிகையாகாது. ?

தங்கச்சிக்கு கல்யாணம். விஜய்ய யாருமே கூப்புடல. சோகமா அம்மாகிட்ட ஃபோன் பண்ணி பேசுறாரு. சரி எப்புடியும் தங்கச்சிக்கு தாலி கட்டுறத ஓரமா நின்னாவது பாக்க வந்துருவாருன்னு பாத்தா தாலி கட்டும் போது விஜய்யவே காணும். எங்கடா ஆள காணுமேன்னு பாத்தா நம்மாளு பந்தில உக்காந்து ஃபுல் மீல்ஸ போட்டுகிட்டு இருக்காரு. இதுல எங்களு RK வ வேற வலுக் காட்டாயமா அழைச்சிட்டு வந்து அடிச்சி அனுப்பிருக்காய்ங்க. டேய் எங்காள பாத்தா அடிவாங்குறதுக்குன்னு அளவெடுத்து செஞ்சா மாதிரி இருக்காரா என்ன?

படம் ஃபுல்லா இப்படி நகைச்சுவை கொட்டிக்கிடந்தாலும் அங்கங்க உருப்படியா தெரியிற சில விஷய்ம்னா விஜய், இமான், ஸ்டண்ட் சில்வா, கேமரா மேன். விஜய் ஆளு செம ஃபிட். பாட்டோ, ஃபைட்டோ இல்லை காமெடியோ.. வழக்கம்போல அசால்டான நடிப்புல  பூந்து விளையாடிருக்காரு. ஆனா ஒரு கெட்டப் சேஞ்ச் பண்ணிருக்காரு பாருங்க. போன படத்த விட ஒரு 5mm க்கு தாடிய எறக்கி shave பண்ணிருக்காரு. இதுதான் இந்த படத்துக்கான
கெட்டப் சேஞ்ச்.

 பரோட்ட சூரி அவ்வளவு சிறப்பா ஒண்ணும் இல்லை. காஜல் அகர்வால் சூப்பர். பாட்டுலயெல்லாம் பாரபட்சம் பாக்காம ஆடியிருக்கு. ஆனா லவ் சீனுன்னு அதோட back ah இவரு புடிச்சி அமுக்குறதும் விஜய்யோட back ah அது புடிச்சி அழுத்துறதும்... டேய் என்னடா பதினொரு மணிக்காட்சி ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்க..

இமான் பாட்டுலயும் சரி BGM மும் சரி.. சூப்பர். ஸ்டண்ட் சில்வாவும், கேமரா மேனும் பட்டைய கெளப்பிருக்காய்ங்க. விஜய்யோட இன்ட்ரோ சீனும் சரி அந்த ஃபைட்டும் சரி, இண்டர்வல்  சீன் போலீஸ் ஸ்டேஷன் ஃபைட்டோட  picturization சரி அந்த ஃபைட்டும் சரி.. தாறு மாறு. ஸ்லோ மோஷன் சீன்ஸ்லாம் செமையா இருக்கு. எல்லா பாட்டுமே நல்லாருந்துச்சி. குறிப்பா வெரசா போகையிலே பாட்டு Choreography செம. 

டைரக்டரு ஓக்கே தான். மோகன்லால், விஜய், RB செளத்ரின்னு பெரிய படம் கெடைச்சும் அத அவ்வளவு சிறப்பா செய்யல. எப்ப மாமா மாமா ட்ரீட்டு பாட்டுல அப்பப்போ நேசன் வந்து “இன்னோர் தபா.” “இன்னோர் தபா”ங்குறாரு.  வக்காளி இன்னொர் தபா இந்த மாதிரி மொக்கையா படம் எடுத்தா இன்னோர் தபா உங்கள இந்தப்படத்த போட்டு விட்டு தனியா பாக்க சொல்லிருவோம் ஆமா..

மொத்தத்துல ஜில்லா ஒரு ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு டைப் படம் தான். பல இடத்துல செமை அறுவை அறுக்குது. அஜித்தோட வீரம் புதுசா இல்லைன்னாலும் எந்த இடத்துலயும் கொஞ்சம் கூட போர் அடிக்கல. ஜில்லா நல்லா இல்லை வீரம் நல்லா இருக்குன்னு சொல்ல முடியாத பல பேரு ஜில்லவும் சுமாரா இருக்கு வீரமும் சுமாரா இருக்குன்னு பூசி மொழுகுறாய்ங்க. இந்த தடவ போட்டில ஜெயிச்சது என்னவோ அஜித்தான். தயவு செஞ்சி யாரும் ஜில்லா கலெக்சன் 34 கோடி.. வீரத்தோட கலெக்‌ஷன் 30 கோடின்னு கமெண்டு போடாதீங்க.

படம் முடிஞ்சப்புறம் என் கூட வந்தவரு உக்காந்துட்டே இருந்தாரு.. ஏங்கன்னு கேட்டதுக்கு ”இருப்பா.. behind the scenes போடுவாங்க.. பாத்துட்டு போலாம்ன்னாரு... “அட நீங்க வேற சீரியஸான படத்துக்கு தான் கடைசில காமெடிக்காக கொஞ்சம் behind the scene போடுவாங்க... முழுக்க முழுக்க காமெடியான படத்துக்கு எதுக்கு behind the scenes... வாங்க போவோம்னு அழைச்சிட்டு வந்தேன்.

ஜில்லா ஸ்டோரி டிஸ்கஷன்

Sunday, January 12, 2014

வீரம் - இனிதான்ஆரம்பம்!!!


Share/Bookmark
ஒருபெரியகிராமம், அங்க ஒருபெரிய வீடுஅந்த வீட்டுல கண்டிப்பா வெள்ளை தலையோட ஒரு வயசான பாட்டி, சந்தைஊர்த்திருவிழா, வயக்காடு, வெள்ளை வேட்ஷ்டிசட்டை இந்த மாதிரி சூழல்ல ஒரு படம் எடுத்தால நம்மளையும் அறியாமஅந்தபடம்புடிச்சிடும். கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வீ.உதயகுமார், சுந்தர்.சிக்கு அப்புறம் அந்த டைப் படங்கள் வர்றதே ரொம்ப கம்மி ஆயிடுச்சிஇப்போ இந்த டைப் படம் எடுத்துக்கிட்டு இருக்கவரு நம்ம ஹரி.ஆனா அதுலயும் எப்பபாத்தாலும் வெட்டுங்கலேகுத்துங்கலேதூத்துக்குடிலே,திருநெல்வேலிலேஅதுலேஇதுலேன்னு ஒரு ப்ளசண்டான விஷயத்த விட அடி தடி தான் தூக்கலா இருக்கும். அப்டியில்லைன்னா முதல் பாதி காமெடி கிராமத்துலயும் ரெண்டாவது பாதி ஆக்ஷன் சிட்டிலயும் எடுத்து நம்மள வெறுப்பேத்துவாய்ங்க. ரொம்ப நாளுக்கு அப்புறம் நா மேல சொன்ன மாதிரியான சூழல்ல முழுக்க முழுக்க கிராமத்து லொக்கேஷன்லயே ஒரு சூப்பரான ஆக்ஷன் மசாலாவ எந்த குறையும் இல்லாம அதுவும் தல அஜித்த வச்சி எடுத்து குடுத்ததுக்கு முதல்ல நம்மாளு சிவாவுக்கு நன்றி.

அஜித் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக்கிற மாதிரியான ஒரு படம்வழக்கமா விஜய் படம் கூட அஜித் படம் ரிலீஸ் ஆகுற சமயங்கள்ல பாத்தா விஜய் படம் மொக்கையா இருக்கும்ஆனா அஜித் படம் ரொம்ப மொக்கையா இருக்கும்அதனால விஜய் படங்கள் ஹிட்டாயிட்டு இருந்துச்சிமாறா இந்த தடவ அப்புடியே மாறி அஜித் படம் பட்டைய கெளப்ப ஆரம்பிச்சிருக்குஏன்னா காத்து என்னிக்குமே ஒரே பக்கம் அடிக்காதுல்ல. என்ன நாஞ்சொல்றது?  ஆரம்பத்தோட ஓப்பனிங்க பாத்தாவது ஜில்லா டீம் கொஞ்சம் யோசிச்சி களத்துல எறங்கிருக்கலாம்.

படத்தோட கதையோ இல்லை அங்கங்க வர்ற டிவிஸ்டோ புதுசுன்னு சொல்ல முடியாதுஏன்னா பல தெலுங்கு படங்கள்ல வந்த மாதிரியான கதைதான்ஆனா அந்த இடத்துல அஜித்த வச்சி பண்ணும் போது எல்லாமே புதுசா இருக்கு.அஜித் இந்த மாதிரி ஃபுல்&ஃபுல் ஆக்ஷன்,  காமெடி செண்டிமெண்ட் கலந்த மசாலா பண்ணதில்லைன்னு சொல்லலாம். பண்ணிருந்தாலும் இவ்வளவு சிறப்பா இதுக்கு முன்னால வந்ததில்லை.தெறிக்க விட்டுருக்காரு. முதல் பாதில அஜித்த தேவையான அளவு யூஸ் பண்ணிகிட்டு மத்த இடத்துலயெல்லாம் சந்தானத்த வச்சி காமெடில பூந்து விளையாடிருக்காங்க.

அங்கங்க கொஞ்சம் மாஸ் சீனுவழக்கம்போல செமையான இண்டர்வல் ப்ளாக்செகண்ட் ஹாஃப்ல கொஞ்சம் கூட ஃபோர் அடிக்காத சீன்ஸ்ன்னு ஒரு மசாலா படத்துக்கு உண்டான எல்லாமே பக்காவா செட் ஆயிருக்கு. விஜய் கில்லி, திருப்பாச்சி, சிவகாசி படங்கள் நடிச்சப்போ இது மாதிரி ஒரு பார்முலாவ புடிச்சிதான் ஹிட்டடிச்சிகிட்டு இருந்தாருஅங்கங்கமிஸ் ஆயிட்டு இருந்த அஜித் இப்போ ட்ராக்க கரெக்டா கப்புன்னு புடிச்சிருக்காருக்ளைமாக்ஸ்ல அஜித் முகத்துல சிரிப்ப பாக்கும் போது வின்னர்ல வடிவேலு சொல்ற டயலாக் தான் ஞாபகம் வந்துச்சி. “ஏன்பா இதவச்சிச்தானே சிட்டில இருக்க அத்தனை பேரையும் ஏமாத்திட்டு இருக்கீங்க. இந்த அண்ணேன் கிராமத்துல இருக்கவிங்கள ஏமாத்திக்க கூடாதா?” ன்னு கேக்குற மாதிரி இருக்கு.

ரஜினி பட டைப் மாஸ் சீன்கள் சிலவும் அங்கங்க இருந்துச்சிபடைப்பாவுல மன்சூர் அலிகான் மணிவண்ணன வீட்ட விட்டு காலி பண்ணிட்டு இருப்பாரு.“ நீயும் இப்போ தர்றேன் அப்போ தர்றேன்ங்குற நானும் நீ கேட்ட டைமெல்லாம் குடுத்து பாத்துட்டேன்இனி யார் வந்தாலும் ஆட்ட முடியாதுஅந்த ஆண்டவனே வந்தாலும் அசைக்க முடியாதுங்குறேன்ம்பாறுஅப்போ ஒரு சின்ன பையன் ஒரு துண்டு சீட்ட கொண்டு வந்துகுடுப்பான்ஆண்டவனே வந்தாலும் அசைக்க முடியாதுன்னு சொன்னவரு தலைவர் கிட்டருந்து வந்த அந்த துண்டு சீட்ட பாத்து கால் நடுக்கம் எடுத்து எந்திரிப்பாரு. இதுக்கு மேல ஒரு மாஸ் சீன் வைக்க முடியாதுஅதேமாதிரி ஒரு சில சீனும் இந்த படத்துல அங்கங்க வச்சி பட்டைய கெளப்பிருக்காங்க.

பில்லா 2 ல அஜித்த போட்டு குத்து குத்துன்னு குத்துவாய்ங்க. ஆனா அதபாக்கும் போது எனக்கு எதுமே தோணல.“ரத்தம் சரியா வரல பாரு இன்னும் ரெண்டு போடுன்னு சொல்லத்தான் தோணுச்சிஆனா இந்த படத்துல அஜித் அடிவாங்கும் போது என்னவோ ரொம்ப கஷ்டமா இருந்துச்சிஎப்போ ஒரு ஹீரோ அடி வாங்கும் போது நமக்கு வலிக்குதோ, ஹீரோ அழும்போது நமக்கும் அழுகை வருதோ அப்போவே அந்த படம் நம்ம மனசுல நின்னுருச்சின்னு அர்த்தம்ஜெயிச்சிருச்சின்னு அர்த்தம். இதுக்கு மேல என்ன நாஞ்சொல்றது?

படத்துக்கு இன்னொரு பெரிய ப்ளஸ்ஸும் ஒருத்தர்தான்மைனஸூம் ஒருத்தர் தான்யாரு அந்த ஒருத்தர்ன்னு தானே கேக்குறீங்க. சரிக் கமப் பதநீசே.. கபக் கபக் கப கபக் கபக் கப ஜல்சே..நம்ம  DSP தான்பாட்டை ஒழுங்கா போட்டவரு அங்கங்க BGMல சொதப்பிட்டாருஇண்டர்வல் சீன்லயெல்லாம் தல வெறித்தனமா சண்டை போட்டு கிட்டு இருப்பாரு இந்த நாயி கப்பித்தனமா எதோ மியூசிக் போட்டு கிட்டு இருக்கு. அந்தநல்லவன்னு சொல்வாங்க” தீமும், “வீரம்” தீமும் போட்டு எல்லா இடத்துலயும் ரொப்பிருக்கதால ஓரளவுக்கு பரவால. ஆனா  BGM இன்னும் சிறப்பா பண்ணிருக்கலாம்ஆயிரம் தான் சொன்னாலும் BGM ல யுவன் யுவன் தான்பா.

தமன்னாவ i am like very much. ஆனா அஜித்தோட இந்த கெட்டப்புக்கும், தல முடிக்கும் தமன்னாவ பக்கத்துல நிக்க வச்சா சர்க்கரை பொங்கலுக்கு வடைகறி காம்பினேஷன்ல இருக்குமேன்னு ரொம்ப பயந்தேன்ஆனா அந்த அளவு மோசமா இல்லைஆனா இதுல டைரக்டரோட டேலண்ட்ட நாம புரிஞ்சிக்கனும்கூட்டி கழிச்சி பாத்தா பாட்ட தவற ஒரு 5 ஷாட் தான் அஜித்தும் தமன்னாவும் ஸ்கிரீன்ல ஒண்ணா இருப்பாங்க. சிவா ராஜதந்திரங்களை கரைத்துக் குடித்திருக்கிறாரைய்யா... தமன்னா சூப்பர். செம அழகு (டயலாக் பேசாம இருக்க வரைக்கும்). அந்த சிரிப்புக்காகவே என்ன வேணாலும் செய்யலாம்.

படத்த ஃபுல்லா கிராமத்துல எடுத்தவங்க பாட்டுகளையும் அப்டியே எடுத்துருக்கலாம்இண்ரோ சாங் சூப்பர் picturization சூப்பர்படத்துல மொத்தமேபாட்ட மட்டும் வச்சது அதவிட சூப்பர்ஆனா ரெண்டு பாட்டுக்கு ஃபாரின் பொய்ட்டாங்க.  அது கூட பரவால்லைஅஜித்துக்கு கோட்ட மாட்டி விட்டு கடுப்பேத்துறாங்க மை லார்ட்இப்போ கோட்டு ரொம்ப முக்கியாமா? என்னங்க?பாட்டு ஸ்னோவுல எடுத்ததால தல குளுருதுன்னு கோட்டு போட்டுருக்காரா?யோவ் ஃபுல் ட்ரெஸ் போட்டுகிட்டு ஆடுற உங்க தலைக்கே இவ்வளவு குளுருதுன்னா இடுப்பெல்லாம் ஓப்பன் பண்ணி வச்சிகிட்டு டான்ஸ் ஆடுற எங்க தமன்னாவுக்கு குளுறாதாகுளுருதுன்னு அதுக்கும் ஒரு கோட்ட மாட்டி விட்டுட்டா யாராவது பாட்ட பாக்க முடியுமாய்யா?

சிறுத்தை சிவாவ பத்தி சொல்லியே ஆவனும்அவரு கடைசியா ரவிதேஜாவ வச்சி தெலுகுல  “தருவுன்னு ஒரு படம் எடுத்தாருஅத பாத்துட்டு எனக்கு மூணு நாளு உடம்பு சரியில்லாம போயிருச்சிஆனா இந்த படத்துல உசாரா முழிச்சிக்கிட்டு தெலுங்கையும் தமிழையும் கலந்து விட்டு அடிச்சிதலக்கு ஏத்த மாதிரியான ஒரு சூப்பர் மசாலா படத்த கரெக்டான டைமுல குடுத்துருக்காரு. அஸிஸ்டண்ட் டைரகடர் கதைங்களையும் சுட்டுகதை திரைக்கதை வசனம் டைரக்ஷன்”  அத்தனைக்கும் தன்னோட பேர போடுற டைரக்டருங்க மத்தியில  A film by Siva & Team ன்னு போட்டதுல எதோ வித்யாசமானவரா தெரியிறாரு சிவா.

ஒரு சில சீன்கள் அங்கங்கருந்து சுட்டு போட்டுருக்கார். ஒரு ஃபைட்டுல தர்மத்தின் தலைவன் படத்துல ரஜினி படுத்துக்கிட்டு பிரபுகிட்ட “ஏர்ல சுத்தி ஒரு கிக்குகுடு கண்ணா” “பின்னால வர்றான் பாரு..அப்டியே மிதி” ன்னு சொல்ல சொல்ல பிரபு சண்டை போடுவாறு. அதேமாதிரி இங்கயும் ஒண்ணு இருக்கு. அத்தாரிண்டிக்கி தேரெதிங்குற பவன் கல்யான் படத்துல வர்ற ப்ரம்மாணந்தம் ட்ராமா காமெடிய அப்டியே இங்க தம்பி ராமையாவ வச்சி எடுத்துருக்காரு. ஆனா அதெல்லாம் ஒண்ணும் பெரிய குறையா தெரியல. ட்ரெயிலர்ல வந்தஅண்ணன்டாதம்பிங்கடா” டையலாக்க பாத்து சிரிப்பாவந்துச்சி.ஆனாபடத்துலயே அத காமெடி சீனுக்குதான் வச்சிருக்காய்ங்க.

ஜில்லா டீமுதான் ட்ரெயிலர்ல அஜித்த தாக்குற மாதிரி டயலாக் வச்சிருக்காய்ங்கன்னு பாத்த இவிங்க சைலண்டா அங்கங்க ரெண்டு மூண சொருகி விட்டுருக்காய்ங்கஒரு சீன்ல வில்லன் அஜித்த பாத்துதல கால் புரியாம ஆடிட்டேன் விநாயகம். .இப்போ தல எது கால் எதுன்னு கரெக்டா புரிஞ்சி போச்சின்னுசொல்றாருஇன்னொரு சீன்ல வில்லன் அஜித்த பாத்து  “டேய்... விழுந்துட்ட விழுந்துட்டன்னு பாத்தா எத்தனை தடவ விழுந்தாலும் எழுந்து நிக்கிறியேடா” ங்குறாரு. .சரி சரி நடத்துங்கடா நடத்துங்கடா...

இந்த படம் விஜய் ரசிகர்கள் சிலர எப்படி பாதிச்சிருக்குங்குறதுக்கு ஒரு சின்ன உதாரணம்எங்க கம்பெனில ஒரு அண்ணன் விஜய் ஃபேன்வீரம் ட்ரெயிலரபாத்து மெரண்டுடேய் என்னடா இந்த படம் செமய ஓடிரும் போலவேன்னு பாவமா சொன்னாரு.அதுக்கு நாஅண்ணேன் அப்டியெல்லாம் இல்லைண்ணே..சிறுத்தை சிவா எடுத்த கடைசி படத்த பாத்தா ரத்த வாந்தி எடுப்பீங்க. .அவனல்லாம் நம்ப முடியாது.. கண்டிப்பா கவுத்துருவான்” ன்னு சொல்லி மனச தேத்தி விட்டுருந்தேன்அப்புறம் வீரம் நல்லாருக்குன்னு தெறிஞ்ச உடனே நேத்து போன்ல மனசுடைஞ்சி பேசிட்டு இருந்தவரு டேய் அஜித்துக்கு அடுத்த படம் கெளதம் மேனனாண்டா.. . போச்சு. .அதுவும் ஓடிரும் ன்னாருஅதுக்கு நாஅண்ணேன்.. கவலையே படாதீங்க..கெளதம் மேனன்லாம் வேலைக்கே ஆவமாட்டான்கண்டிப்பா கவுத்துருவான்ண்ணேன்” உடனே அவரு டென்சனாயிடேய் யார் பேச்ச வேணாலும் கேப்பேன்இனிமே உன் பேச்ச மட்டும் கேக்கவே மாட்டேண்டா.. இப்டிதான் சிறுத்தை சிவா மொக்கைன்னு சொன்ன..அவன் என்னன்னா மூணுமாசத்துல செமையா படம் எடுத்து இப்புடி வாங்கிப் போட்டு குத்திருக்கான்இனிமே இவனுங்கள ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு வச்சிட்டாரு.

ரொம்ப நாளா கண்ணை மூடிக்கிட்டு கண்ட கதையில யெல்லாம் நடிச்சிகிட்டு இருந்த அஜித் இப்போ ஒரு ரெண்டு வருஷமா ஒரளவு முழிச்சிக்கிட்டு இருக்காரு .அதுக்கு ஒரு நல்ல உதாரணம் தான் இந்த வீரம்இனியாவது ரசிகர்கள ஏமாத்தாம அவங்களுக்கு புடிச்ச மாதிரி நல்ல பொழுதுபோக்கு படங்கள தல தருவார்னு நம்புவோம். 2014 லோடஆரம்பமே” ”வீரத்தோட ரொம்ப  ”அமர்களமா” தொடங்கிருக்கு. இதுல எந்தவில்லன்கமும் இல்லாம அட்டகாசமா”  தொடரனும்னு  ஆஞ்சினேயா” வயும்,திருப்பதிஏழுமலையானையும் வேண்டிக்குவோம்.

Thursday, January 2, 2014

சூப்பர் படங்கள் - 2013


Share/Bookmark
போன வருஷத்த கம்பேர் பண்ணி பாக்கும்போது இந்த வருஷம் எவ்வளவோ பரவால்ல. போன வருசம் நல்ல பத்து படத்த தேடி கண்டுபுடிக்கிறதே பெரும்பாடா போச்சு. இந்த வருஷம் எக்கச்சக்கமான நல்ல படங்கள் வந்து பட்டைய கெளப்பிருக்கு. படம் ரிலீஸ் ஆவுறதுக்கு முன்னாலயே ஹிட்டாக்கப்பட்ட தங்கமீன்கள், ராஜா ராணிய மட்டும் என்னவோ இன்னும் பாக்க பிடிக்கல.  மத்தபடி நான் பார்த்த சில நல்ல படங்களோட வரிசை. விமர்சனத்துக்கு டைட்டில க்ளிக்குங்க.

10. a.ஹரிதாஸ்

 சிம்பிளான ஒரு கதைய எடுத்துக்கிட்டு ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் ஒரு நீட்டான ஸ்க்ரீன் ப்ளேல கொண்டு போயிருந்த ஒரு நல்ல படம்.




கமர்ஷியலா படம் ப்ளாப்.. நிறைய பேருக்கு படம் பிடிக்கலை. ஆனா  செகண்ட் ஹாஃப்ல வர்ற ஒரு சில காட்சிகள தவற மற்றபடி தரமான ஒரு படம்.  ஆடுகளத்துக்கு அப்புறம் தனுஷ் ஒரு செம ஆக்டர்னு மறுபடி ப்ரூப் பண்ண படம்






நம்ம டீம்ல ஷேவாக் விக்கெட்ட மட்டும் கணக்குல எடுக்கவே முடியாது. சில சமயம் மொத விக்கெட் எப்பவுமே ஃப்ரீ விக்கெட் மாதிரி தான். 9 விக்கெட் கணக்குல வச்சிகிட்டு மத்தவங்க தான் டீம காப்பாத்தனும். அது மாதிரி இந்த படத்துல இருந்த ரெண்டு விக்கெட்டுல பாலாங்குற விக்கெட் ஃப்ரீ விக்கெட்டு. எந்த ப்ரயோஜனமும் இல்லைன்னாலும் தனி ஆளா படத்த தூக்கி நிறுத்திய பெருமை விஜய் சேதுபதிக்கு தான். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்த தியேட்டர விட்டு சீக்கிரமா ஒழிச்ச பெருமையும் இந்த படத்தையே சாரும்




அவன் இவனுக்கு  ஒரு கப்பிக்கு அப்புறம் பாலாகிட்டருந்து வந்த இன்னொரு தரமான படம்


வருஷ கடைசில வந்தாலும் கார்த்திக்கு கைகுடுத்த ஒரு படம்

 

8. எதிர் நீச்சல்

இந்த வருஷத்தோட most successful hero நம்மாளு தான்.  கேடிபில்லா கில்லாடி ரங்கா கைவிட்டாலும் அடுத்த மாசமே எதிர்நீச்சல இறக்கி ஹிட்டடிச்சவரு.




ரொம்ப நாளுக்கு அப்புறம் விஷாலுக்கு ஒரு நல்ல படம். வழக்கமான விஷால் படங்கள் மாதிரி இல்லாம எடுத்ததே இந்த படத்தோட வெற்றிக்கு முக்கிய காரணம்



6.மூடர் கூடம்

பாண்டிராஜின் தயாரிப்புல வந்த இந்த படம் வந்ததும் போனதும் தெரியலன்னாலும் சூப்பரான ஒரு படம்.  பெரிய செட்டு, நிறைய பணம்னு இல்லாம கம்மியான கேரக்டர்களோட ஒரு வீட்டுக்குள்ளயே கொஞ்சம் கூட போர் அடிக்காம எடுத்து பட்டைய கெளப்பிருந்தாரு டைரக்டர் நவீன்.  அந்த நாலு மெயின் கேரக்டரோட வடிவமைப்பும், கடைசி வரைக்கும் அத மெயிண்டெய்ண் பன்னி கொண்டு போனதும் சூப்பர். செண்ட்ராய் படத்துக்கு இன்னொரு பலம்





 அதுவா வந்துருந்தா சுமாரா ஓடி ஒரு வாரத்துல போயிருக்கும். ஆனா சும்மா இருந்த படத்த நோண்டி விட்டு எக்கச்சக்கமா விளம்பரம் குடுத்து இந்த வருஷத்தோட மெகா ஹிட் படமாக்கிட்டாங்க. இரண்டாவது பாதி மொக்கன்னாலும் கமலுக்காகவும், அவரோட வித்யாசமான முயற்சிகளுக்காவும் கண்டிப்பா பாக்கவேண்டிய ஒரு படம்



4. வருத்தப்படாத வாலிபர் சங்கம்

இந்த வருஷத்தோட இன்னொரு சூப்பர் ஹிட் படம். அதுக்கு முக்கியமான் ஒரு காரணம் இமான். எல்லா பாட்டும் பட்டைய கெளப்பிருந்தாரு. படம் ஹிட்டாச்சோ இல்லியோ நம்ம ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீ திவ்யா செம ஹிட்டாயிருச்சி. ஒரே படம் ஓஹோன்னு வாழ்க்கைங்குறது இது தான். 



விஜய் சேதுபதிய அடுத்த லெவலுக்கு கொண்டு போன படம். விஜய் சேதுபதி ரசிகர்களை ரெண்டு மடங்காக்கிய படம். இதற்கு தானே ஆசைப்பட்டாய் படம் ஓட காரணமா இருந்த படம்.   பீட்சாவுக்கு அப்புறம் அவருக்கு பெரிய மார்க்கெட் கிடைக்க காரணமே இந்த படத்தோட தாறு மாறு வெற்றிதான்.

 
 

 தலைவர் சுந்தர்.சி இன்னொரு தடவ காமெடில அவர அடிச்சிக்க ஆள் இல்லைன்னு ப்ரூப் பண்ண இன்னொரு படம்.




முகமூடிங்குற பள்ளத்துல விழுந்த மிஷ்கின் டக்குன்னு எழுந்த படம். இந்த வருஷம் வந்த படங்கள்ல தீயா வேலை செய்யனும் குமாருக்கு அப்புறம் ரொம்ப  satisfied ah பாத்துட்டு வந்த படம் இது தான். ஆன  படம் 4 நாள்தான் தியேட்டர்ல ஓடுனுச்சிங்குறதுதான் ரொம்ப சோகமான விஷயம். 

 



Wednesday, January 1, 2014

மைண்ட் ப்ளோயிங் படங்கள் - 2013


Share/Bookmark
நிஜமான மைண்ட் ப்ளோயிங் படங்கள்னா இதுங்க தான். பாத்துட்டு வரும்போது நம்ம மைண்டு ப்ளோ ஆயி எங்கயாது போயி முட்டிக்கலாம்னு தோணும். இதெல்லாம் நான் பாத்த சில மைண்டு  ப்ளோயிங் மற்றும் ஆசம் படங்கள். படங்களின் விமர்சனங்களுக்கு டைட்டிலை க்ளிக்குங்க.

10. சிங்கம் 2



இந்த படத்த மைண்டு ப்ளோயிங்னு சொல்றத விட Ear blowing ன்னு தான் சொல்லனும். உங்க வாய தூக்கி என் காதுல வைங்க பாஸ்ங்குற மாதிரி சூர்யா பேசுறதெல்லாம் நம்ம காதுல லவுடு ஸ்பீக்கர கட்டி விட்ட மாதிரி கொய்ய்ய்ங்குது. ஆனா சூர்யாவோட மிகப்பெரிய ஹிட்டு இந்தப்படம்.

9. ஆரம்பம்




ரசிகர்கள் நெனைச்சா எந்த படத்தை வேணாலும் ஹிட்டா ஆக்கலாம்ங்குறதுக்கு இந்தப்படம் ஒரு உதாரணம். அஜித்துங்குற ஒரே பேருக்காக ஒரு காட்டு மொக்கைய மிகப்பெரிய வெற்றிப்படமா மாத்தி விட்டுட்டாய்ங்க. இதுல நூறு கோடி 200 கோடின்னு எதேதோ பேசிக்குறாங்கப்போய்..


ரீமேக் பண்றேன்னு சொல்லிகிட்டு நல்ல படத்தையெல்லாம் நாறடிச்சிட்டு திரியிற ஒரு கூட்டத்தால எடுக்கப்பட்ட ஒரு கொடுமை இது. முழுக்க முழுக்க சிரிப்பே வராத அளவு எடுக்கப்பட்ட ஒரு காமெடிப்படம்

 குட்டிக்கரடின்னு பேரு வைக்கிறதுக்கு பதிலா குட்டிப்புலின்னு இந்த படத்துக்கு பேரு வச்சிட்டாய்ங்க போல. 



 கார்த்திக்கு 2013னோட ஆரம்பமே அலெக்ஸ் பாண்டியன்ங்குற அபார ஹிட்டோட ஆரம்பிச்சிதுன்னு சொன்னா அது மிகையாகாது. இதே போல இந்த வருஷமும் அவர் பல பன்றிகளை பெற வேண்டும்ங்கறது தான் என்னோட ஆசை.



 ஜெயம் ரவி அமீர் காம்பினேசன்ல வந்த ஒரு அற்புதமான படம். மிஸ் பண்ணவங்க தயவு செஞ்சி பாருங்க. சத்தியமா அதுக்கப்புறம் அமீர் படம் பாக்க மாட்டீங்க.



சில படங்கள் ஃப்ளாம் ஆவுறது தரித்திரம். ஆனா சில படங்கள் ஃப்ளாப் ஆவுறது சரித்திரம்.  அப்படி ஒரு படம் தான் இந்த தலைவா. இதப்பத்தி நா சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. இதயெல்லாம் பின்னால வரலாறு பேசும். எல்லாரும் படிப்பாங்க.. ஹையோ ஹையோ..



காலங்கள் போற்றக்கூடிய,   செல்வராகவனின் இன்னுமொரு அரிய படைப்பு.




 நேசனல் அவார்டு டைரக்டரும் நேசனல் அவார்டு ஹீரோவும் சேந்து எடுத்த ஒரு ஆஸ்கார் அவார்டு படம் இது.

1. ஆல் இன் ஆல் அழகுராஜா




ஒருத்தன் இந்தப் படத்த முழுசா தியேட்டர்ல உக்காந்து பாத்துட்டு வந்துட்டான்னா ( தூங்காம) அவன மாதிரி பொறுமை சாலி யாருமே இல்லை. வாழ்க்கையில என்ன ப்ரச்சனை வந்தாலும் அவன் சமாளிச்சிருவான். அப்படி ஒரு செம படம். இந்தப் படம் தான் முதல் இடத்த புடிச்சிருக்குற இந்த வருசத்தோட பெஸ்டு மைண்டு ப்ளோயிங் படம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...