Sunday, August 30, 2015

தனி ஒருவன் – கெத்து!!!


Share/Bookmark
தெலுங்கு படங்கள் சிலதயெல்லாம் பாக்கும்போது இப்டியெல்லாம் தமிழ்ல்ல யாரும் எடுக்கமாட்டேங்குறாங்களேன்னு நிறைய தடவ ஃபீல் பன்னிருக்கேன். ஆனா அந்தமாதிரி ஃபீலிங் அதிகமாகும் போதெல்லாம் ஒவ்வொரு தமிழ்ப்படம் வந்து, ஆறுதல் அளிக்கும். அஞ்சாதே, பேராண்மை, சதுரங்கவேட்டை, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், புறம்போக்கு மாதிரியான படங்கள் தமிழ் படங்களுக்கான தனி அடையாளம். கதைக்கருக்களை எங்கிருந்தாவது ஆட்டையைப் போட்டிருந்தா கூட, தெலுங்குலயெல்லாம் அந்த மாதிரி படங்களை யாரும் முயற்சிக்கிறது கூட இல்லை. அப்படி வழக்கமான சினிமாவுலருந்து கொஞ்சம் மாறுபட்டு, விறுவிறுப்பான திரைக்கதையோட வந்திருக்க படம் தான் தனி ஒருவன்.

வில்லன் எவ்வளவு பவர்ஃபுல்லானவன் என்பதைப் பொறுத்தே ஒரு ஹீரோவோட கெத்து இருக்கும். ஹீரோவ எவ்வளவு நல்லவனா காட்டனுமோ அந்த அளவுக்கு வில்லன கெட்டவனா காட்டனும். அப்பதான் எடுபடும். மாணிக் பாட்ஷா இவ்வளவு பெரிய ஆள் ஆனாருன்னா அதுக்கு முக்கிய காரணம் மார்க் ஆண்டனிதாங்குறத நிச்சயம் மறுக்க முடியாது.

“உன் எதிரி யார் என்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்” ங்குற வரிகளோட ஆரம்பிக்கிற படத்தோட ஒன்லைனே அதுதான்னு சொல்லலாம். நம்ம நண்பன் யார்னு சொன்னா நம்ம எவ்வளவு நல்லவன்னு தெரிஞ்சிக்கலாம். ஆனா நம்ம எதிரி யார்ன்னு சொன்னாதான் நம்ம கெப்பாசிட்டி என்னன்னு தெரிஞ்சிக்கலாம்ன்னு அந்த வரிகளுக்கு ஜெயம் ரவி விளக்கம் குடுக்கும்போது ஒரே கைதட்டு.

வழக்கமா எல்லா படங்கள்லயும் வில்லன் ஒரு தனி ட்ராக்குல மர்டரா பன்னிட்டு இருப்பாரு. ஹீரோ அதுக்கு சம்பந்தமே இல்லாம எங்கயோ அவரு ஆள கரெக்ட் பன்னி டூயட் பாடிகிட்டு இருப்பாரு. திடீர்னு எதோ ஒரு இடத்துல ரெண்டு பேருக்கும் முட்டிக்கும். அப்புறம்தான் அந்த வில்லன் நம்ம ஹீரோவுக்கு மெயின் வில்லனாவாறு. ஆனா இங்க கொஞ்சம் மாறுபட்டு ஜெயம் ரவி, அவரோட எதிரிய அவரே தேடி முடிவு பன்றாரு.

”நாட்டுல நடக்குற ஒவ்வொரு சின்ன தப்புக்கும் பின்னால எதோ ஒரு பெரிய தப்பு ஒளிஞ்சிருக்கு. ஒவ்வொரு சின்ன தப்பையும் தனித்தனியா ஒழிக்கிறதுக்கு பதில், நூறு தப்பு நடக்க காரணமா இருக்க ஒருத்தன ஒழிச்சா போதும். எல்லாம் சரியாயிடும்” ன்னு நினைக்கிறாரு ஜெயம் ரவி. IPS ட்ரெயிங் முடிஞ்சி போஸ்டிங் வர்றதுக்குள்ள அவருக்கான எதிரிய முடிவு பண்ணி அவன அழிக்கிறத மட்டும் என்னோட ஒரே குறிக்கோளா வச்சிக்கிறேன்னு சொல்லி, அவரு எதிரியையும் முடிவு பன்றாரு. அதுக்கப்புறம் அவரு முடிவு பண்ண எதிரிய எப்படி அழிக்கிறாருங்குறத கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாம சொல்லிருக்க படம்தான் தனி ஒருவன்.

பொதுவா படம் பாக்கும்போது ஆடியன்ஸான நம்ம, நம்மள ஹீரோவோட தான் sync பன்னிக்குவோம். ஹீரோவுக்கு ஒரு கஷ்டம்னா அது நமக்கு வர்ற மாதிரி. ஹீரோ அழுதா நமக்கு அழுக வரும். ஹீரோ சண்டை போட்டா நம்மளே அடிக்கிற மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். வில்லன அடிச்சி தொம்சம் பன்னனும்,.. ஹீரோ ஜெயிக்கனும் வில்லன் தோக்கனும்னு தான் எப்பவும் தோணும். ஆனா சில படங்கள்ல மட்டும்தான் ஹீரோ தோத்தாலும் பரவால்ல. வில்லன் ஜெயிக்கனும்னு ஆசைப்படுவோம். அப்புடி ஒருவில்லன் தான் இங்க.

இதுநாள் வரைக்கும் நம்ம  கோட் சூட்னா அது அஜித்துக்கு மட்டுமே தைக்கப்பட்டதுன்னும் டானுன்னா அவரு மட்டும்தான்னும் ஸ்மார்ட்டுன்னா அவருதான்ப்பான்னும் தான் பில்டப்ப குடுத்துக்கிட்டு இருக்கோம். இங்க அரவிந்தசாமி கோட் சூட் போட்டுகிட்டு சிரிச்சிக்கிட்டு வர்றாரு பாருங்க.. அஜித்தெல்லாம் அவுட்டு. பக்கத்துல கூட நிக்கமுடியாது. என்னமா இருக்காரு. பசங்களே சைட் அடிப்பாய்ங்க போலருக்கு.

இவ்வளவு ஸ்மார்ட்டான, கூலான, பவர்ஃபுல்லான வில்லன் கேரக்டர்தான் படத்தையே தூக்கி நிறுத்துது. படத்துல எவன் நல்லது செய்றானோ அவன் மட்டும் ஹீரோ இல்லை. ஆடியன்ஸ் யாரு பக்கம் இருக்காங்களோ அவனும்தான் ஹீரோ. அந்த வகையில அரவிந்த சாமி நிச்சயம் இங்க ஹீரோதான். அரவிந்த சாமி எண்ட்ரி வரைக்கும் படம் மிஷ்கினோட அஞ்சாதே ஸ்டைல்ல போயிட்டு இருக்கு. ஆனா அவர் எண்ட்ரிக்கு அப்புறம் இன்னும் சூப்பர். சிரிச்சிக்கிட்டே மிரட்டுரது, கொலை பன்றதுன்னு எந்த இடத்துலயுமே அரவிந்த சாமிக்கு கோவம் வர்ற மாதிரியே காமிக்காம அதே கெத்தோட மெயிண்டெய்ன் பன்னி முடிச்சிருக்கது சிறப்பு. அரவிந்த் சாமி அப்பாவா வர்ற தம்பி ராமைய்யாவோட characterization செம. அவர் வர்ற எல்லா காட்சிகள்லயும் சிரிக்க வைக்க தவறல.

தமிழ்ல ஜெயம் ராஜாவோட முதல் நேரடிப் படம். Overall ஆ ரெண்டாவது படம். நிறைய ஹிட்டு படங்களை குடுத்துருந்தாலும் இதுவரைக்கும் இவர யாரும் அவ்வளவு பெரிய டைரக்டரா மதிக்கல. காரணம் அனைத்தும் ரீமேக்கு. நேரடிப்படமா எடுக்கிறாருன்னு பில்ட்அப் குடுக்கப்பட்ட வேலாயுதம் கூட கடைசில ஆசாத் படத்தோட ரீமேக்குன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் நஞ்ச நம்பிக்கையும் போச்சு. சமீபத்துல வாட்ஸாப் ல ஒரு காமெடி படிச்சிருப்பீங்க. மனைவி “என்னங்க இன்னிக்கு ரசம் வைக்கவா இல்ல சாம்பார் வைக்கவான்னு கேப்பா. அதுக்கு ஹஸ்பண்டு “மொதல்ல நீ வைய்யி.. அதுக்கப்புறம் பேரு வச்சிக்குவோம்”னு சொல்லுவான். தனிஒருவன் ஜெயம் ராஜா நேரடிப் படமா இயக்குறாருப்பான்னு கேள்விப்படும்போது எனக்கும் அப்டித்தான் தோணுச்சி. மொதல்ல நீங்க எடுங்க சார் அப்புறம் அது எந்தப் படத்தோட ரீமேக்குன்னு நாங்க பாத்துக்குறோம்னு.

சுபாவின் கதைக்கு ராஜா திரைக்கதை அமைத்திருப்பதாக சொல்றாங்க. இது உண்மைன்னா ராஜா நிச்சயம் திறமையானவர்தான். வசனங்கள்லாம் சூப்பர். நிறைய வசனங்கள் கைதட்டு வாங்குது. ஹிப்ஹாப் தமிழா இசையில் ரெண்டு பாட்டு சூப்பர். ஒரு பாட்டு சுமார் ரகம். BGM உம் பரவாயில்லை. நயன்தாரா வழக்கம்போல சிறப்பு. ஆனா இன்னும் கொஞ்சம் நல்லா மேக்கப் போட்டுருக்கலாம்.

”ஹீரோன்னு சொன்னாலே அதுக்கு பொருத்தமான ஆள் ஜெயம் ரவிதான். என்னா ஹைட்டு என்னா வெய்ட்டு..என்னா கலரு” ன்னு தனுஷ் ஒருதடவ சொன்னாரு. ரவியோட அடுத்தடுத்த தோல்விகளால, ஜெயம் ரவி ப்ரஷாந்தோட நிலமைக்கு போயிட்டு இருக்காருன்னு சமீபத்துல ஒரு ஆர்டிக்கிள்ல போட்டுருந்தாங்க. அவருக்கு சூட் ஆகுற கதையை சரியா செலெக்ட் பன்னா நிச்சயம் அப்டி ஒரு நிலமை வராது. ஆக்‌ஷன் கதைகளும், சீரியஸான கதைக்களங்களுமே ஜெயம் ரவிக்கு செட் ஆகுது. அந்த மூஞ்ச வச்சிக்கிட்டு அவரு காமெடி பன்ன ட்ரை பண்ணும்போது தான் நமக்கு வாமிட் வருது. இந்தப் படத்துல ஆளு செம ஃபிட் & கெத்தா இருக்காரு.

மொத்தத்துல இந்த வருஷத்தோட வெற்றிப்படங்களோட வரிசையில அடுத்ததா சேரப்போகுது இந்த தனி ஒருவன். மிஸ் பன்னாம பாருங்க. அட்லீஸ்ட் அரவிந்தசாமிய பாக்குறதுக்காவது.


Sunday, August 23, 2015

KICK 2 – கால் நூற்றாண்டுக்குப் பிறகு ஒரு கபி கபி!!!


Share/Bookmark
இந்த வருஷம் என்னனே தெரில. பெரும்பாலும் நா பாக்குற எல்லா படங்களுமே ஓரளவுக்கு நல்லாதான் இருக்கு. கடந்த ரெண்டு மூணு வருஷங்களா மிரட்டல் அடி. ட்ராவிட்டோட டெஸ்ட் மேட்ச் strike rate மாதிரி பத்துபடம் பாத்தா ரெண்டு மூணு தேறுறதே ரொம்ப கஷ்டமா இருக்கும். நிறைய பேரு “ஏன் பாஸ்… நீங்க வேணும்னே இந்த மாதிரி மொக்கை படத்துக்கு போய் உக்காருவீங்களா?” ன்னுலாம் கேட்டுருக்காய்ங்க. ஆப்பு மேல யாராவது வேணும்னே போய் உக்காருவாய்ங்களா. ஆனா இந்த வருஷம் நா பாக்குற நல்ல படங்களோட அளவு ட்ராவிட்டோட One day strike rate மாதிரி கொஞ்சம் அதிகமாயிருக்குங்குறதுல மகிழ்ச்சியே.

வருஷத்துக்கு குறைஞ்சது ரெண்டு படம் ரிலீஸ் பன்னிட்டு இருந்தாலும், கடந்த ரெண்டு மூணு வருஷத்துல ரவி தேஜாவுக்கு சொல்லிக்கிறமாதிரி ஒரு பெரிய ஹிட்டும் இல்லை. எல்லா படங்களும் கமர்ஷியல் ஹிட்டுன்னு அறிவிக்கப்பட்டாலும் பாக்குற நமக்கு படங்கள் என்னவோ சற்று டொம்மைபோல்  தான் இருக்கும். நிச்சயம் ஒரு மிகப்பெரிய ஹிட்ட குடுத்தே ஆகனும்ங்குற சமயத்துல ஆறு வருஷத்துக்கு முன்னால வந்து மெகாஹிட் ஆன கிக் படத்தோட ரெண்டாவது பகுதிய அதே இயக்குனரான சுரேந்தர் ரெட்டியோட சேர்ந்து எடுத்து ரிலீஸ் பன்னிருக்காரு.

முதல்ல படத்துல ஒரு ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்னன்னா KICK 2 ன்னு பேர் வச்சிட்டு, நம்ம சிங்கம் 2 ல வந்த மாதிரி முதல் பாகத்தோட அதே plot la கேரக்டர்கள மட்டும் மாத்திபோட்டு ரெண்டாவது பார்ட் எடுத்து கடுப்பேத்தாம, ஒரு புது story line ல (actual ah அது புதுசு இல்லை) படத்த எடுத்துருக்காங்க. கிக் 2 ன்னு பேர் வச்சதுக்காக முதல் பாகத்துக்கும் இதுக்கும் ஒரு சின்ன கனெக்‌ஷனையும் வச்சிருக்காங்க. தயவுசெஞ்சி தமிழ் Kick யும், அதுல வர்ற ஜெயம் ரவி மொகரையும் கொஞ்ச நேரத்துக்கு நினைக்காம இருக்கது உசிதம். படம் பார்க்குற முடிவுல இருக்கவங்க இதோட கட் பண்ணிட்டு கடைசிக்கு பாராவுக்கு போயிருங்க.

முதல் பாகத்துல கிக்குக்காக எதை வேணாலும் செய்யிற ரவிதேஜா, வயசாகி அமெரிக்காவுல செட்டில் ஆயிடுறாரு. கிக் ரவிதேஜாவோட பையன்தான் Comfort ரவிதேஜா. பையன்னு சொன்னாலும் பாக்குறதுக்கு அவருக்கும் அப்பா வயசு மாதிரிதான் இருக்கு. வயசாயிருச்சில்லே. அவரு எப்டின்னா Personal comfort க்காக எத வேணாலும் செய்வாறு. எவ்வளவு ரிஸ்க் வேணாலும் எடுப்பாரு.  அம்மாவோட வயித்துக்குள்ள இருக்க comfort ah இல்லைன்னு ஏழே மாசத்துல பொறந்தவருன்னா பாத்துக்குங்களேன். ஆனா அடுத்தவங்க ப்ரச்சனைக்கு எந்த குரலும் குடுக்க மாட்டாரு. அவங்க அவங்க ப்ரச்சனைய அவங்கதான் தீத்துக்கனும்ங்குற கொள்கையோட வாழ்றவறு.

டாக்டரான comfort ரவிதேஜா தனக்கு சொந்தமா ஒரு ஹாஸ்பிட்டல் கட்டுறதுக்கு அப்பாகிட்ட பணம் கேட்டு கிடைக்கலன்னதும், ஹைதராபாத்ல இருக்க அவங்களோட பழைய இடம் ஒண்ண வித்துட்டு பணம் வாங்குறதுக்காக ஹைதராபாத் வர்றாரு. அங்க அந்த இடம் இன்னொரு ரவுடியால ஆக்ரமிப்பு செய்யப்பட்டிருக்கு. ப்ரம்மானந்தம் வீட்டுல தங்கிட்டே அந்த ரவுடிக்கிட்டருந்து இடத்த திரும்ப வாங்குற முயற்சில இறங்குறாரு ரவிதேஜா.

இன்னொரு பக்கம் தெலுங்கு சினிமா வரலாற்றுல இருபத்தி ரெண்டாயிரத்தி முன்னூற்றி முப்பதஞ்சாவது முறையா, பீகார்ல உள்ள விலாஸ்பூர்ங்குற ஒரு கிராமத்தையே அடிமையா வச்சி, அவங்க ஆண் குழந்தைகளையெல்லாம் அவங்ககிட்டருந்து பிரிச்சி போதைக்கு அடிமையாக்கி வேலை வாங்குறான் தாகூர்ங்குற ஒரு கொடூர வில்லன். எதிர்த்து கேக்குறவங்கள கேள்வியே இல்லாம மரத்துல கட்டிவச்சி எரிச்சிருவாப்ள. இந்த கொடுமையிலருந்து யாராவது நம்மள காப்பாத்த வரமாட்டாங்களான்னு ஊர்மக்கள் ஏங்கிக் கிடக்காங்க.

அந்த சமயத்துல ஹைதராபாத்ல ரவிதேஜாமேல கார விட்டு அடிச்சிட்டு சாரி கேக்காம போயிடுறான் ஒரு லோக்கல் ரவுடி. அவன் சாரி கேக்காம பொய்ட்டதால, அவன் மொத்த கேங்கையும் ஒரே ஆளா நின்னு அடிச்சி தொம்சம் பன்னி அவன நார் நாரா கிழிச்சி தொங்க விடுறாரு ரவிதேஜா. இத மறைஞ்சி நின்னு பாக்குற விலாஸ்பூர் கிராமத்த சேர்ந்த ஒருத்தன், நம்ம ஊர தாகூர்கிட்டருந்து காப்பாத்த இவனால மட்டும்தன் முடியும்னு முடிவு பன்னி ஊர்ல போய் சொல்றான். ஊர் மக்கள்லாம் ஒண்ணு சேந்து ரவிதேஜாவ பீகார் கிராமத்துக்கு வரவைக்க திட்டம் தீட்டி செயல்படுறாங்க.

ரவிதேஜாவும் விலாஸ்பூர்க்கு போறாரு. சொந்தப் பிரச்சனைக்கு மட்டுமே ரவிதேஜா சண்டை போடுவாறு. அடுத்தவங்க ப்ரச்சனைக்காக எதுவும் செய்யமாட்டாருன்னு தெரிஞ்ச ஊர் ஜனங்க ரவிதேஜாவ நேரடியா தாகூரோட மோத வைக்க நிறைய ப்ளான் பண்ணி ரவிதேஜாவ வில்லனோட கோர்த்துவிட்டு , எப்படி வில்லன கொல்றாங்கங்குறதுதான் நம்ம கிக் 2.

கிக் முதல் பாகத்துல காமெடிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனா இதுல காமெடி மட்டும் இல்லாம செண்டிமெண்ட் ஆக்‌ஷன்னு வழக்கமான தெலுகு ஃபார்முலாவுல வந்துருக்கு. ”பண்டிட் ரவிதேஜா” ங்குற பேர்ல வர்றாரு நம்ம ப்ரம்மாணந்தம். அவர் சந்தோஷம் வரும்போதும் கோவம் வரும்போதும் தலையில ரெண்டு கையால அடிச்சிக்கிட்டு டான்ஸ் ஆடுறதுதான் ஹைலைட். சமீபத்துல வந்த படங்கள கம்பேர் பண்ணூம்போது காமெடி இதுல கொஞ்சம் பரவால்ல. பீகார்ல உள்ள அந்த வரண்ட கிராமத்துல ரவிதேஜாவ கம்ஃபர்ட்டா வைச்சிக்கனும்னு ஊர்மக்கள் செய்யிற விஷயங்கள் செம. அதுவும் அந்த ஊர்ல ரெட் புல் கிடைக்கிறதும், KFC சிக்கன குல்ஃபி வண்டில கொண்டு வந்து வந்து தெருக்கள்ள விக்கிறதும் செம லந்து.



ஒருபக்கம் காமெடின்னாலும் ஊர்மக்கள் ரவிதேஜா comfort ah மூணு வேளை நல்ல சாப்பாடு சாப்புடனும்ங்குறதுக்காக அவங்க தினம் சம்பாதிக்கிற மொத்த காசையும் குடுத்துட்டு அவங்க ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டுகிட்டு இருக்காங்க. மகள வில்லன் கொன்னுட்டானு தெரிஞ்சும் ரவிதேஜாவுக்கு சாப்பாடு போடுறதுக்காக அந்த பொண்ணோட அம்மா கண்ண டக்குன்னு துடைச்சிட்டு போறதெல்லாம் செண்டிமெண்ட் டச்.

வில்லன் தாகூரோட பையன ரவிதேஜா சாவடி அடிச்சிட்டு ஊருக்கு கிளம்புவாரு. அவனுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்குற டாக்டர் இவன் எழுந்து நடக்க குறைஞ்சது ஒருவாரத்துக்கு மேல ஆகும்ன்னு சொன்னதும் வில்லன் ரவிதேஜாகிட்டபோய் “என் பையன் ஒருவாரம் கழிச்சி வந்ததும் அவன்கிட்ட நேருக்கு நேர் மோதனும். என்பையன் கையாலதான் நீ சாகனும். அதுவரைக்கும் நீ இங்கயேதான் இருக்கனும்” ன்னு சொன்னதும், ”ஒருவாரம்லாம் என்னால இங்க இருக்க முடியாது” ன்னு சொல்லிட்டு  டாக்டர் ரவிதேஜாவே அவரு அடிச்ச அந்த ரவுடிக்கு ட்ரீட் மெண்ட் பாத்து ஒரே நாள்ல சரிபண்ணி அவன சண்டைக்கு ரெடி பன்றதுலாம் செம சீன்.

ஹீரோயின் நல்லாதான் இருக்கு. ஆனா எதோ ஒண்ணு குறையிற மாதிரி ஒரு பீலிங். தமனோட சமீபத்தைய தெலுகு ஆல்பங்களல இந்த கிக் 2 தான் ரொம்ப ரொம்ப சுமாரான ஆல்பம். ரெண்டு பாட்டுதான் நல்லாருக்கு. மத்ததெல்லாம் டொம்மைதான். BGM உம் அவ்வளவு சிறப்பா இல்லை.

மாஸ் மஹராஜ் வழக்கம்போல செம. காமெடி ஃபைட்டுன்னு எல்லாமே சூப்பர். என் ஃப்ரண்டு எப்பவுமே ரவிதேஜாவ “இந்த வாட்ச் மேன் மாதிரி இருப்பானே அவனா?” “இந்த வாட்ச்மேன் படத்துக்கா போற” ன்னு எப்பப்பாத்தாலும் ரவிதேஜாவ வாட்ச்மேன்னு தான் கூப்டுவான். ”போடா கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை” ன்னு சொல்லி சமாளிப்பேன். இந்தப் படத்துல ஆளுரொம்ப மெலிஞ்சிட்டாப்ள. முகமும் சற்று டொக்கு விழுந்துபோல் இருக்கு. ஆனாலும் நல்லாதான் இருக்காரு. ரெண்டு ரவிதேஜா இருக்கதால க்ளைமாக்ஸ்ல இன்னொருத்தர் எதாவது ஸ்டண்ட் சீன்ல மாஸ் எண்ட்ரி குடுப்பாருன்னு எதிர்பாத்துட்டே இருந்தேன். ஆனா நடக்கல.


மொத்ததுல கிக் 2, அதே வழக்கமான பழைய தெலுங்கு கதைதான்னாலும் போரடிக்காம போற மாதிரி நல்லாவே எடுத்துருக்காங்க. நிச்சயம் ரவிதேஜாவுக்கு இந்தப்படம் ஹிட்டுதான். ஆனா ஜெயம் ரவி அத இங்க நடிக்காம இருக்க ஆண்டவன் தான் துணை இருக்கனும்.


Wednesday, August 19, 2015

வார்டன்னா அடிப்போம்!!!


Share/Bookmark
ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்தே நாட்டைப் பத்தி யாராவது பேசும்பொழுது, ”மாற்றம் வேணும்னா இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்”, ”நாடு முன்னேறனும்னா இளைஞர்கள் நாட்டை ஆள வேண்டும்”, ”படித்தவர்கள் வரவேண்டும்” இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இப்பவரைக்கும் சொல்லிக்கிட்டு இருக்காங்க. முன்னால அரசியல் பற்றிய ஆர்வம் வெகுசிலருக்கே இருந்ததாலும், அரசியல் பற்றிய தனிமனித நிலைபாடுகள் டீக்கடை பெஞ்சுகளோடு போய்விட்டதாலும் அதுமாதிரி சொல்லியிருக்கலாம். ஆனா இன்னிக்கு கிட்டத்தட்ட இளைஞர்கள் நேரடியாக அரசியலுக்கு உள்ள இறங்கலன்னாலும், சமூகவலைத்தளங்கள் மூலம் அவங்களுடைய அரசியல் பற்றிய நிலைபாடு என்னங்குறத தெளிவா சொல்லிக்கிட்டு தான் இருக்காங்க. இந்த நிலைபாடுகளைப்  பாக்கும்போது, ”இளைஞர்கள் வந்தா மாற்றம் வரும்” ங்குற நம்பிக்கை சுத்தமா போயிருச்சி.

பெரும்பாலும் இணையதளங்கள்ல அரசியல் பேசுறவியிங்க, 1925 லருந்து மொத்த இந்திய அரசியல் வரலாற்றையும் கரைச்சி குடிச்சா மாதிரிதான் பேசுவாய்ங்க. “காந்தி ஏன் நேருவ பிரதமரா போட்டாரு தெரியுமா?” “இந்திரா காந்திய ஏன் சுட்டாங்க தெரியுமா?” “பெரியார் இன்னா சொல்லிருக்காரு தெரியுமா?” “1975ல டில்லில என்ன நடந்துச்சின்னு தெரியுமா?” ன்னு ஒட்டுமொத்த இந்திய அரசியலும் அவிய்ங்க கைக்குள்ள இருக்க மாதிரிதான் நினைச்சிக்கிட்டு சுத்துறாய்ங்க. உண்மை என்னன்னு பாத்தா நாயி மொத்தமாவே ஒரு நாலு புத்தகத்த அங்கங்க மேஞ்சிட்டு வந்து இங்க பீலா விட்டுக்கிட்டு இருக்கும்.

 எந்த ஒரு விஷயத்தையும் கத்துக்கவோ தெரிஞ்சிக்கவோ ஆர்வம்ங்குறது ரொம்ப அவசியம். என்னைப் பொறுத்தவரை அரசியல்ங்குற விஷயத்து மேல ஆர்வம் பெரும்பாலும் இருந்ததில்லை. அதனால அவங்க படிச்ச அந்த நாலு புத்தகத்தை கூட படிக்காத, அரசியல் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாத (அவ்வ்) ஒரு சாதாரண மனிதனான நா கடந்த ரெண்டு மூணு வருஷங்கள்ள எனக்கு ஏற்பட்ட தாக்கத்தை பதிவு செய்யிறேன்.

நம்மூரப் பொறுத்த அளவு நல்லது நடக்குதோ கெட்டது நடக்குதோ, ஆனா எது நடந்தாலும் திமுக, அதிமுக இந்த ரெண்டு கட்சி மூலமா மட்டுமே நடக்கனும்னு எழுதி வச்சிட்டாய்ங்க. ஒரு தடவ இவுக இன்னொரு தடவ அவுக. இதுக்கு இடையில நாலஞ்சி அல்லக்கை கட்சிகள், எல்லாத்தையும் குறைசொல்லிக்கிட்டே, கடைசில எந்தப்பக்கம் லம்ப்பா தேறுதுங்குறத பாத்து, நாய் பொறைக்கு ஓடுறமாதிரி ஓடி ஒருபக்கம் சேந்துக்குறாங்க. கூட்டணிக்கு முன்னால வரைக்கும் ஊழல் பன்ற கட்சின்னு மேடைபோட்டு பேசிட்டு, கரெக்டா எலெக்‌ஷன் வர்ற சமயத்துல அவன் பின்னாடியே போய் தலையச் சொறிஞ்சிக்கிட்டு நிக்கிறதுன்னு அல்லுசில்லு கட்சிகள் எல்லாமே மானங்கெட்ட கட்சிகளாத்தான் இருக்கு.
இன்னும் சிலபேர் ”ரெண்டு பேருமே ஆட்டையப் போடுறாய்ங்க. ஆனா நம்ம ஓட்டு வேஸ்ட்டாகக்கூடாதுன்னு எந்தத் திருடன் சின்ன திருடன்னு பாத்து ஓட்டுப்போடுவோம்” ங்குற பாலிசியோட இருந்துட்டுப் போயிடுறாய்ங்க.

ஒரு கட்சி எலெக்‌ஷன்ல ஜெயிச்சி ஆட்சியப் புடிச்சிட்டா, மற்ற கட்சிகளோட பார்வையில அடுத்த அஞ்சி வருஷத்துக்கு அவங்க செய்யிற அனைத்துமே தப்பாகத் தெரியிது. எதிர்கட்சியா இருந்தாலுமே நல்ல திட்டங்களைச் செயல்படுத்தும்போது பாராட்டவும், சரியில்லாத திட்டங்களை விமர்சிக்கவும் செய்யனும். ஆனா இங்க ஆளுங்கட்சி எதுசெஞ்சாலும் மற்றவர்கள் பார்வையில அது தவறு. சுருக்கமா சொல்லனுமா “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது.. வார்டன்னா அடிப்போம்” கதைதான்.

இதுகூட பரவால்ல. ஆட்சி மாற்றம் நடக்கும்போது புதுசா பதவியேற்கிற கட்சி அதுக்கு முன்னால இருந்த கட்சி போட்ட திட்டங்களை தொடர விடுறதில்லை. இது சரியில்லை. அது தேவையில்லைன்னு கேன்சல் பன்னிடுறாய்ங்க. எது நல்லது கெட்டதுங்குறதத் தாண்டி இது எங்களால நடந்துச்சா இல்லை உங்களால நடந்துச்சாங்குறதுலான் எல்லாரும் குறியா இருக்காய்ங்க. ஒவ்வொரு கட்சிக்கும் அவியிங்க பன்றத நியாயப்படுத்தவும் அடுத்தவன கிழிச்சி தொங்கவிடவும் சொந்தமா ஒரு டிவியும் ஒரு நியூஸ் பேப்பரும்.

இப்போ வலைத்தளங்கள்ல இருக்க ஜூனியர் அரசியல்வாதிகளும் இதுல எந்த விதத்துலயும் வித்யாசப்பட்டவர்கள் இல்லை. அவர்களோட தற்போதைய வேலை என்னன்னா, திமுகவா இருந்தா அரசு என்னனென்ன பன்னிருக்காங்களோ அத்தனையும் நொள்ளை சொல்வதும், அதே அதிமுகவ இருந்தா அரசு செய்ற அத்தனையும் ”சிறப்பு” ”பருப்பு”ன்னு அடிச்சிவிடுறதும் மட்டுமே. காலங்காத்தால எழுந்து நியூஸ் பேப்பர்ல மொதநாள் எவன் எவன் என்னென்ன சொன்னாங்குறதயெல்லாம் பாத்துட்டு அத டைப் பண்ணி, அதுக்கு இவரோட ”டைமிங் சென்ஸ” காமிக்கிற மாதிரி ஒரு ஒன் லைன் கமெண்டு. இவ்வளவுதான்.

நாதாரித்தனம் பன்னும்போது தலையில குட்டுறதும், நல்லது செய்யிம்போது தட்டிக்கொடுக்குறதுமே நல்ல பண்பு. திமுக காரங்களப் பொறுத்தவரைக்கும் அதிமுக ஆட்சிக்கு வந்த இந்த நாலு வருஷத்துல எதுவுமே பண்ணல. அதிமுகவ பொறுத்தவரை போன அஞ்சி வருஷத்துல திமுக செஞ்ச எல்லாமே வேஸ்டு. இவ்வளவுதான் இவிய்ங்க அரசியல்.

கொஞ்ச நாள் முன்னால ஜெயலலிதா சிறையில இருந்தப்போ நாஞ்சில் சம்பத் ”அம்மா வர்றதுக்காகத்தான் புது பஸ்ஸூங்க எல்லாத்தையும் இயக்காம வச்சிருக்கோம். என்ன குடியா முழுகிப்போச்சி” ன்னாரு. இத திமுக காரய்ங்க பயன்படுத்திக்கிட்டாய்ங்களே தவற அதிமுக தொண்டர்கள் யாரும் அவருக்கு கண்டனம் தெரிவித்த மாதிரியோ அவர் பேசுனதுக்கு மறுப்பு தெரிவிச்ச மாதிரியோ தெரியல.

மினரல் வாட்டர் 20 ரூபாய் வித்துக்கிட்டு இருக்குது அதுனால அரசே குறைந்த விலைக்கு தண்ணீர் பாட்டில்கள் தரும்னு பத்து ரூவாய்க்கு அரசு தண்ணீர் பாட்டில்கள் அறிவித்து அத எல்லா பஸ் ஸ்டாண்டுலயும் வச்சாங்க. உடனே திமுக காரங்க “இலவசமாக கொடுக்க வேண்டிய தண்ணீரை காசுக்கு விற்பதா?” ன்னு ஒரு பொங்கல் பொங்குனாய்ங்க. ஏண்டா நீங்க அதக்கூட செய்யலையேடா. அப்புறம் பத்துரூவா தண்ணிய குறை சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?

அதே மாதிரி டக்ளஸ் அய்யாவுக்கு 90 வருஷமா வராத ஞான உதயம் போனமாசம் கழிவறையில் உக்கார்ந்து இருந்தப்போ வந்துருக்கு. “அநேகமா மதுவிலக்கு வந்தாதான் நாட்டைக் காப்பாத்த முடியும்”ன்னு சொல்றாரு. உடனே இம்சை அரசன்ல வடிவேலு “போர்” ன்னு சொன்னதும் “போர்” ”ஆமா போர்” மத்தவய்ங்க கத்துறமாதிரி நாய் பேயெல்லாம் “உடனே மதுவிலக்கு உடனே மதுவிலக்கு” ன்னு ஆரம்பிச்சிட்டாய்ங்க. போனமாசம் வரைக்கும் மூடிக்கிடந்த அறிவுக்கண்ண மடார்ன்னு டக்ளஸ் அய்யா தொறந்துவிட்டுட்டாரு. ஏண்டா அவரே என்ன பண்ணா அடுத்த வருசம் சீட்டுல உக்காரலாம்னு யோசிச்சி கிளப்பி விட்டுருக்காரு. அதக்கேட்டுட்டு இவய்ங்க குதிச்சிட்டு இருக்காய்ங்க.

இவய்ங்களையெல்லாம் கூட ஒரு கணக்குல சேத்துக்கலாம். ஆனா போன மாசம் வரைக்கும் “பயப்படாதீங்க பத்து மணிக்கு கடைய மூடுறதுக்குள்ள மீட்டிங்க முடிச்சிடுறேன்” ன்னு சொன்ன நாயெல்லாம் இப்ப உடனே மதுவிலக்கு வேணும்ங்குது.

நகரம் மறுபக்கம் படத்துல வடிவேலுகிட்ட ஹீரோயின லவ் பண்ணனும்னு சத்தியம் வாங்கிக்கிட்டு முத்துக்காளை செத்துருவாரு. “நா எப்புடிடா லவ் பண்றது?” ன்னு வடிவேலு அழும்போது குண்டு மனோகரன் “அண்ணே சும்மா லவ் பண்ணுங்கண்ணே.. அப்பதான் நம்ம டெய்லி பிஸியா இருப்போம்” ம்பான். அந்தக் கதைதான் நம்ம வைகோ அய்யா. அவருக்குத் தேவை தினமும் பிஸியா இருக்கனும். அவ்வளவுதான். ஒருமாசம் இந்தப்பக்கம் இருப்பாரு. இன்னொருமாசம் அந்தப்பக்கம் இருப்பாரு. மிச்ச நாள்லயெல்லாம் ஜெயிலுக்குள்ள இருப்பாரு. மதுவிலக்குக்கு போராடுவாறு. செத்தவனை தூக்க விடமாட்டாரு. சிகரெட் குடிச்சா தப்பு இல்லையாம். ஆனா மது அருந்தினால் தவறு. தொட்டு நக்குனாலும் அள்ளி திண்ணாலும்….  சரி விடுங்க அத ஏன் என் வாயால சொல்லிக்கிட்டு.


எல்லாத்தையும் விட நம்மாளுங்க திருந்தவே மாட்டாங்கங்குற ஒரு எண்ணம் வந்தது போனவாரம் ஈவிகேஎஸ் பேசுன பேச்சுக்கும் அதுக்கு நம்ம இளம் அரசியல்வாதிகளோட ரியாக்சனும்தான். ஒரு மாநில முதலமைச்சரும், ஒரு நாட்டோட பிரதமரையும் இவ்வளவு கேவலமா ஒருத்தன் ஒரு பப்ளிக் மீட்டிங்குல பேசுறான். அவன என்ன பன்னிருக்கனும்? நீங்க எந்தக் கட்சில இருந்தா என்ன? திமுகவோ அதிமுகவோ பாமகாவோ? அந்த தரங்கெட்ட பேச்சுக்கு கடுமையான எதிர்ப்ப காமிச்சிருக்கனுமா இல்லையா? அதவிட்டுட்டு, ”ஐ ஈவிகேஎஸ் ஜெயலலிதாவ தப்பா பேசிட்டாரு” ன்னு பல்ல காட்டிக்கிட்டு, அவங்களோட காமெடி சென்ஸ் மொத்தத்தையும் இதுல காமிக்கிறாய்ங்க. (நான் பார்த்த சிலர்) இன்னிக்கு அந்தம்மாவுக்கு நடந்ததுதான் மத்தவங்களுக்கும். சத்தியமா இவிங்கள பாத்தப்புறம்தான் எத்தனை வருசம் ஆனாலும் எதுவும் தேறாதுன்னு தோணுது.

எந்தக்கட்சியா இருந்தா என்ன? தப்புன்னா தப்புன்னு சொல்றதும், ரைட்டுன்னா ரைட்டுன்னு ஒத்துக்கிற மனப்பான்மையும் எப்ப வளருதோ அப்பதான் எதாவது முன்னேற்றத்துக்கான வழி தெரியும். இப்ப இருக்க எல்லா இணையதள அரசியல் பீரங்கிகளுமே, அதே சாக்கடையில் ஏற்கனவே இருக்கும் பன்றிகளுக்கு இடையில தங்களையும் நுழைச்சிக்கிட்டு அதே நாற்றத்தில் வாழ்ந்துகிட்டு அடுத்தவன் மேல அதே சாக்கடையை வாரி இறைக்கும் பணியைத்தான் செஞ்சிக்கிட்டு இருக்காய்ங்க. அவர்களால் எந்த வித பயனும் இருக்கப்போவதில்லை.



Sunday, August 9, 2015

SRIMANTHUDU - சிறப்பு!!!


Share/Bookmark
ஆடியன்ஸ் பாகுபலி எப்போ ரிலீஸ் ஆகப்போகுதுன்னு எவ்வளவு ஆவலா எதிர்பார்த்தாங்களோ தெரியாது. ஆனா இந்த ஸ்ரீமந்துடு டீம் படத்த எடுத்து வச்சிகிட்டு, பாகுபலி எப்படா ரிலீஸ் பன்னுவாய்ங்க நம்ம எப்படா படத்த ரிலீஸ் பன்னலாம்னு காத்துக்கிட்டு இருந்தானுங்க. அதுவும் ஒரு வகையில கரெக்ட் தான். படம் ரிலீஸ் ஆகி ஒரு மாசம் ஆகியும் இன்னும் Week end la பாகுபலிக்கு டிக்கெட் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. படம் ரிலீஸ் ஆகுற அதே நாள் பலிங்கு குவாலிட்டில திருட்டு ப்ரிண்ட் ரிலீஸ் ஆகுற இந்த டைம்ல பாகுபாலியோட மாபெரும் வெற்றி உண்மையிலயே ஒரு பெரிய சாதனைதான்.

நா ஏற்கனவே பல தெலுங்கு பட பதிவுகள்ல எழுதிருக்க மாதிரி, தெலுங்குல ஒரு கதை ஹிட் ஆயிருச்சின்னா, அனைத்து ஹீரோவும் அதே கதையில ஒரு ரவுண்டு நடிச்சி முடிச்சாதான் விடுவாய்ங்க. போலீஸ் கேரட்டர வச்சி படம் ஹிட்டாச்சின்னா, அடுத்த ரெண்டு வருஷத்துல வர்ற அனைத்து பெரிய ஹீரோக்கள் படமும் போலீஸ் கதையாத்தான் இருக்கும். இதுக்கு கொஞ்சம் கூட கூச்சப்பட மாட்டாய்ங்க. “இதுல வெக்கப்பட என்ன இருக்கு? நீங்க ஒரு தடவ நடிங்க நா ஒரு தடவ நடிச்சிக்கிறேன். அட போங்க பாஸ்” தூக்கிப்போட்டு போயிக்கிட்டே இருப்பாய்ங்க.

2010 ல ஜூனியர் NTR நடிச்ச ப்ருந்தாவனம்ங்குற படம் ரிலீஸ் ஆகி செம ஹிட் ஆச்சி. அதுக்கப்புறம் இப்ப வரைக்கும் அதே மாதிரி ஒரு பத்து படம் வந்துருச்சு. அந்த படங்களோட அந்த பொதுன கதை இதுதான். சிட்டிலயோ இல்லை ஃபாரின்லயோ இருக்க ஒரு பணக்கார ஹீரோ, எதோ ஒரு ரீசனுக்காக ஹீரோயினோட கிராமத்துக்கு போவாரு. அங்க கே.எஸ்.ரவிக்குமார் படத்துல வர்ற மாதிரி ஒரு பெரிய்ய்ய்ய குடும்பம் இருக்கும். ஹீரோ போன கொஞ்ச நாள்லயே அந்த குடும்பத்தோட ரொம்ப க்ளோஸ் ஆயிடுவாரு. அங்க உள்ள ப்ரச்சனையெல்லாம் தீத்து வைப்பாரு. 

ஆனா அவரு பெரிய பணக்காரருன்னு மட்டும் யார்கிட்டயும் சொல்லமாட்டாரு. க்ளைமாக்ஸ்ல அதே குடும்பம் அவர வெளில போகச்சொல்லும் போது “அவரு யாரு தெரியுமா… அவரு எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா..” ன்னு அவரப்பத்தி பில்ட் அப் குடுக்க ஒரு அள்ளக்கை கூட இருப்பான். அப்புறம் அந்த குடும்பத்தோட பரம எதிரிய ஹீரோ அவரு எதிரியா நினைச்சி சண்டை போட்டு காப்பாத்துவாறு. பிருந்தாவனம், மிர்ச்சி, தம்மு, அத்தாரிண்டிக்கி தாரெதி, கோவிந்துடு அந்தரிவாடேலே உட்பட நிறைய படங்கள் இதே கதை தான்.

எல்லாரும் அதுல நடிக்கும்போது மகேஷ்பாபு மட்டும் சும்மா இருப்பாரா. “நானும் ஆந்தாராக்காரன் தாண்டா” ன்னு அதே கதைய கொஞ்சம் ஆல்ட்ரேஷன் பண்ணி, ஒரு ஃபீல் குட் டைப் ஸ்கிரீன் ப்ளேயோட குடுத்துருக்காரு. மகேஷ் பாபுவுக்கு Dookudu க்கு அப்புறம் வந்த நேன் ஒக்கடினே, ஆகடு ஆகிய ரெண்டும் அவ்வளவு சிறப்பா போகாததால, கண்டிப்பா ஹிட் அடிச்சே ஆகவேண்டிய சூழல்ல ரொம்ப கேர்ஃபுல்லாவே ஸ்கிரீன் ப்ளேவ பண்ணிருக்காய்ங்க.

ஆயிரம் கோடிரூபாய் சொத்துக்கு சொந்தக்காரரான ஜகபதி பாபுவோட ஒரே வாரிசு மகேஷ் பாபு. அப்பாவோட பிசினஸ்ல இண்ட்ரஸ்ட் இல்லாம அவருக்கு புடிச்ச விஷயங்களப் பண்ணிகிட்டு future la என்ன பன்னப்போறோம்ங்குற எந்த ஐடியாவும் இல்லாம இருக்காரு. அதுமட்டும் இல்லாம, நம்ம மட்டும் நல்லா இருந்தா பத்தாது நம்மகிட்ட வேலை பாக்குறவங்க, நம்மள சார்ந்திருக்கவங்க எல்லாருமே சந்தோஷமா இருக்கனும்ங்குற ஒரு நல்ல எண்ணதோட இருக்காரு. ஆனா ஜகபதி பாபுவுக்கு பையன் பிசினஸ பாத்துக்க வர மாட்டேங்குறானேங்குற கவலை.

அதே சமயம் ஒரு கிராமத்துல எந்த வசதியும் இல்லாம மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க. அந்த ஊர் அரசியல்வாதியான சம்பத் தண்ணி எல்லாத்தையும் அவரோட பீர் ஃபேக்டரிக்கு யூஸ் பண்ணிக்கிட்டு மக்களுக்கு எந்த வசதிகளையுமே செஞ்சி குடுக்காம கஷ்டப்பட வைக்கிறாரு. எதிர்த்து பேசுறவங்கள வழக்கமான கொடூர தெலுங்கு வில்லன்கள் மாதிரி “ஏசேயெண்ட்ரா வாடுனி” ன்னு போட்டுத்தள்ளிகிட்டு போய்கிட்டே இருக்காரு. அதனால ஒவ்வொரு குடும்பமா அந்த கிராமத்த விட்டு வெளியேறுறாங்க. இதப்பாத்து பொறுக்க முடியாத ஊர் பெரியவரான ராஜேந்திர ப்ரசாத் அந்த குடும்பங்கள அந்த கிராமத்துலயே இருக்க வைக்க முயற்சி பண்ணி தோத்து போயிடுறாரு.

இப்போ சிட்டில மகேஷ் ஒரு ஹாஸ்டல்ல சுருதியப் பாத்து ஃபீல் ஆயிடுறாப்ள. ரெண்டு பாட்டப் போட்டு லவ் பண்ணா கூல் ஆயிடுவாப்ள. ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்கும்போது, திடீர்னு சுருதிக்கு மகேஷ்பாபு ஜகபதிபாவுவோட பையன்னு தெரிஞ்சிபோய் ஷாக் ஆயி, அப்பதான் மகேஷ்பாபு கிட்ட “உங்க சொந்த ஊர்  இது இல்லை. அது” (அந்த ஊர் பேர் மறந்துபோச்சு) சொல்லி அவரோட அப்பா அந்த ஊர்லருந்து ஓடிவந்தவருன்னு சொல்றாங்க. உடனே நம்ம மகேஷ்பாபு வீட்டுல வோர்ல்டு டூர் போறதா சொல்லிட்டு அந்த கிராமத்துக்குப் போய் அத தத்தெடுத்துகிட்டு அதுக்கு தேவையான எல்லா உதவியையும் ஒரே பாட்டுல செஞ்சி குடுக்குறாரு. இதுக்கு குறுக்க வர்ற ரெண்டு மூணு வில்லன்கள தூக்கிப்போட்டு பந்தாடுறாரு. அம்புட்டுத்தேன்.

கதை அதே டெய்லர் அதே வாடகைதான்னாலும் மகேஷ் பாவுவோட நடிப்பும், வசனங்களும், காட்சி அமைப்புகளும் படத்த தூக்கி நிறுத்துது. தெலுங்கு படங்கள்ல வசனங்கள் எப்பவுமே பட்டையக் கிளப்பும். அது பஞ்ச் டயலாக்கா இருந்தாலும் சரி, செண்டிமெண்ட் வசங்களா இருந்தாலும் சரி. உதாரணமா மகேஷ் பாவு பிஸினஸ பாத்துக்கு முடியாதுன்னு சொல்லுவாறு. அதுக்கு ஜகபதி பாபு “டேய் ஆயிரம் கோடி ரூவாடா… அதுக்கு ஒரே வாரிசு நீ.. நீதான் பாக்கனும்”ன்னு சொல்லுவாறு. உடனே மகேஷ் “ஆமா உங்கப்பா என்ன தொழில் பன்னாறு.?” ன்னதும் ஜகபதிபாபு “விவசாயம்” ம்பாரு. “அப்ப நீங்க ஏன் விவசாயம் பாக்காம பிஸினஸ் பன்றீங்க? அதே மாதிரி நா எதுக்கு நீங்க பன்னதயே பன்னனும்னு எதிர்பாக்குறீங்க?” ன்னு சொல்லி வாயடச்சிருவாரு.

 இன்னொரு சீன்ல அஞ்சி ரவுடிங்க மகேஷ்பாபுவ சுத்தி நிப்பாங்க. முதல்ல அடிக்க வந்த ஒருத்தன கும்முன்னு வயித்த ஒரு பஞ்ச குடுத்து தூக்கி வீசுவாறு. உடனே ரெண்டாவது ஒருத்தன் அடிக்க வருவான். அவன நிறுத்தி “டேய்.. இந்த இடம் இங்க தான் இருக்கும். நானும் இங்கதான் இருப்பேன். என்ன நீ எப்ப வேணாலும் அடிக்கலாம். (அடிவாங்கிட்டு கீழ விழுந்தவனக் காட்டி) ஆனா அவன இன்னும் அஞ்சி நிமிஷத்துல ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு போகலன்னா செத்துருவான்” ன்னு அசால்ட்டா சொன்னதும் மத்தவனுங்களுக்கு டர்ர் எடுத்து ஓடிருவானுங்க.

மத்த தெலுங்கு ஹீரோக்கள் மாதிரி மகேஷ்பாபு முகத்த அஷ்ட கோணலாக்கி “டேய் நேனு எவரு தெலுச்சா… மா ஃபேமிலி ஏண்டோ தெலுசா” ன்னு உயிர் போற மாதிரி வசனமெல்லாம் பேசமாட்டாரு. அதே மாதிரி பாடிலயும் ரொம்ப லாங்குவேஜ்லயும் ரொம்ப வித்யாசமெல்லாம் காமிக்க மாட்டாரு. முகமும் அப்டியேத்தான் இருக்கும். பாக்குறதுக்கு சவுக்கார்பேட்டையில திரியிற சேட்டு பையன் மாதிரித்தான் இருப்பாரு. ஆனா அசால்டா பேசுற அந்த டயாலாக் டெலிவெரிலதான் ஸ்கோர் பண்ணுவாறு. அதத்தான் நம்ம விஜய்ன்னா போக்கிரில முயற்சி பண்ணி நம்ம கழுத்த அறுத்தாரு.


ஃபைட்டு ஒவ்வொண்ணும் பட்டையக் கிளப்புது. அடி ஒண்ணும் இடி மாதிரி விழுகுது. கால் கை முறிக்கும்போதெல்லாம் எதோ அப்பளத்த நொறுக்குற மாதிரி ஒரு சவுண்டக் குடுக்குறாரு DSP. தமிழ்ல்லயாச்சும் ஹீரோக்கள் ஃபைட்டுல ரெண்டு மூணு அடி வில்லன்கிட்ட வாங்குவாங்க. ஆனா தெலுங்குல வாய்ப்பே இல்லை. 500 பேர் வந்தாலும் அசராம அடிப்பாங்களே தவிற ஒரு அடி ஹீரோ மேல விழுகாது. இந்தப் படத்துல இருக்க அஞ்சாரு ஃபைட்டுல மொத்தமாவே ஒரே ஒரு அடிதான் மகேஷ்பாபு வாங்குனாறு.

DSP யும் வழக்கம்போல அதே டெய்லர் அதே வாடகை. ஆனா பாட்டு எல்லாமே கேக்குற மாதிரிதான் இருக்கு. பிக்சரைஸேஷனும் சூப்பர். BGM க்கு நம்ம சிங்கத்துல போட்ட “சிங் கம்… ஹோ ஹோ” ங்குற அதே மீசிக்கையும் சிவாஜில வர்ற சோகமான BGM ஐயும் போட்டு விட்டுருச்சி. ஆனா DSP ராசிக்காரப்பய. அவன்போட்டாலே படம் செம ஹிட்டாயிருது. என்னது வில்லா? அட நா தெலுங்கச் சொன்னேன்.

சுருதி அவ்வளவு சிறப்புன்னு சொல்ல முடியாது. பரவால்ல. வாயில திரும்ப ஆப்ரேஷன் எதுவும் பன்னிருக்கும் போல. சற்று கண்றாவியாக உள்ளது.  கொடுமை என்னன்னா மகேஷ் பாபு பக்கத்துல எந்த ஹீரோயின் நின்னாலுமே சுமாரத்தான் தெரிவாங்க. படத்துல ப்ரம்மானந்தம் மிஸ்ஸிங். அதுமட்டும் இல்லை. காமெடியே மிஸ்ஸிங் தான். ஆலே ய வேஸ்ட் பன்னிருக்காய்ங்க.

இந்தப் படத்தோட டைட்டில் கார்டு எதோ அகர்பத்தி விளம்பரம் மாதிரியும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ல மகேஷ் பாபு நம்ம நாம் தமிழர் சீமான் மாதிரியும் கையத்தூக்கிட்டு நிக்கிறதையும் பாத்தப்போ கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. ட்ரெயிலரும் பெருசா இம்ப்ரஸ் பன்னல. ஆனாலும் படம் நிச்சயம் ஏமாத்தல.

முன்னாலயே சொன்ன மாதிரி இந்தப் படம் ஏற்கனவே வந்த சில படங்களோட கலவைதான். கிட்டத்தட்ட ரெண்டாவது பாதி மகேஷ்பாபு நடிச்ச ”கலேஜா” படம் மாதிரியும் இருக்கு. ஆனா, போர் அடிக்காத ஸ்க்ரீன் ப்ளே, அசத்தலான மகேஷ் பாபு ஆக்டிங்னு படம் நிச்சயம் பாக்குற மாதிரி தான் இருக்கு. கண்டிப்பா ஹிட்டுதான்.


Wednesday, August 5, 2015

காரைக்குடியில் சிம்ரன் வாய்ப்பாடு!!!


Share/Bookmark
பன்னிரெண்டாவது வரைக்கும் வீட்டில இருந்தே படிச்சிட்டு, காலேஜ்ல முதல் முதலா ஹாஸ்டல்ல தங்குறப்போ இருக்க கஷ்டம் இருக்கே. ஆத்தாடி. கொஞ்ச நாளுக்கு நரகம் மாதிரி இருக்கும். பாக்குறவய்ங்கல்லாம் புதுசா இருப்பாய்ங்க. காலங்காத்தால நம்ம வீட்டுல அம்மா எழுப்பி காப்பி குடுக்குறது, போதும் போதும்னு சொன்னாலும் எக்ஸ்ட்ராவா ரெண்டு தோசை வச்சி சாப்ட சொல்றதெல்லாம் அப்போதான் ஞாபகத்துக்கு வரும். அங்க நம்மளக் கண்டுக்க ஒருத்தன் இருக்க மாட்டான். காலையில நாமாளா எழுந்தாதான் உண்டு. நமக்கா பசிச்சி போய் சாப்டாதான் உண்டு. எறுமை மாடு வயசுல வெளில அதச் சொல்லி அழுகக்கூட முடியாது. எப்படா வெள்ளிக்கிழமை சாயங்காலம் வரும்னு இருக்கும். வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஹாஸ்டல்லருந்து வீட்டுக்கு கிளம்புறப்போ ஒரு ஜாலி இருக்கே… ஸ்கூல் படிக்கிறப்போ கூட அப்டி ஜாலியா இருந்ததில்லை.

ஃபர்ஸ்ட் இயர் பசங்க எப்படா வெள்ளிக்கிழமை வரும் வெளில போகலாம்னு காத்திருந்தா, இந்த செகண்ட் இயர் பசங்க எப்படா வெள்ளிக்கிழமை வரும் இவியங்க வெளில வருவாய்ங்கன்னு காத்துருப்பாய்க்க. ஏன்னா மத்த நாள்ள எவனும் வெளில போகமாட்டான். ஆனா வெள்ளிக்கிழமை ஊருக்கு போகும்போது பஸ் ஸ்டாப்புக்குப் போய் தனியாதானே பஸ் ஏற வேண்டி வரும். அதுக்குன்னே மீனப்புடிக்க காத்திருக்க கொக்கு மாதிரி அங்கயே குத்த வச்சி எவனையாச்சும் கவ்வி அவன ராகிங் பண்ணி என்ஜாய் பண்ணிக்குவானுங்க.

IRCTC la தீவாளிக்கு டிக்கெட் கூட புக் பன்னிடலாம். ஆனா வெள்ளிக்கிழமை சாயங்காலம் காரைக்குடி to திருச்சி PL.A பஸ்ல சீட்டு கிடைக்கிறதுதான் ரொம்பப் கஷ்டம்.  ஃப்ர்ஸ்ட் இயர் ஹாஸ்டல் கட்டில மொதக்கொண்டு காலி பண்ணிட்டு ஊருக்கு கிளம்பிருவாய்ங்க.

என்னோட நேரம் நா ஒருதடவ காரைக்குடியிலருந்து பட்டுக்கோட்டைக்கு ட்ரெயின்ல ஏறி உக்கார சுத்தி நாலு சீனியர் பசங்க வந்து உக்காந்தாய்ங்க. அப்புறம் என்ன? வடிவேலு சில்லரை வாங்க நாலு குடிகாரய்ங்ககிட்ட மாட்டிக்கிட்டு “ரெண்டம்பது… ரெண்டம்பது… ரெண்டம்பது… ரெண்டம்பது.. ஆகமொத்தம் முப்பது.. ச்சியேர்ஸ்” ன்னு சொல்ற மாதிரி பட்டுகோட்டை வர்ற வரைக்கும் மாத்தி மாத்தி என்னை சிம்ரன் வாய்ப்பாடு சொல்ல வச்சி என்ஜாய் பன்னிட்டுவந்தாய்ங்க.  அது என்ன சிம்ரன் வாய்ப்பாடுன்னு கேக்குறீங்களா? இந்தா சொல்றேன் கேளுங்க

ஒரு சிம்ரன் = சிம்ரன்

ரெண்டு சிம்ரன் = சிம்ரன் சிம்ரன்

மூணு சிம்ரன் = சிம்ரன் சிம்ரன் சிம்ரன்

ஈஸியா இருக்குறதுல்ல? எதோ ரெண்டு மூணுன்னா பரவால்ல. இது மாதிரி முப்பது வரைக்கும் சொல்லனும். அத விடக் கொடுமை என்னன்னா இடையில ஒரு சிம்ரனை விட்டுட்டாலும் திரும்ப மொதல்லருந்து ச்சியேர்ஸ் தான். சேகர் செத்துத்டான். அத்தனை தடவ சிம்ரன் பேர வேற எவனும் வாழ்க்கையில சொல்லிருக்க மாட்டாய்ங்க
.
இந்த வெள்ளிக்கிழமை மூட்டியைக் கட்டுறதெல்லாம் செட்டு சேருற வரைக்கும் ஒரு மூணு மாசத்துக்குத் தான். செட்டு சேந்துட்டா அப்புறம் வார வாரம்ங்குறது ரெண்டு வாரத்துக்கு ஒருதடவ மூணுவாரத்துக்கு ஒரு தடவன்னு மாறி ஃபைனல் இயர்ல ஹாஸ்டல் வார்டன் கழுத்தப் புடிச்சி வெளிய தள்ளுனாலும் ஊருக்குப் போகமாட்டாய்ங்க. அந்த ஆரம்பத்துல செட்டில் ஆக எடுக்குற மூணு மாசம் மட்டும் திங்கள் செவ்வாய் மாதிரி ரொம்ப மெதுவா போகுமே தவிற, அதத்தவிற மத்த மூணே முக்கால் வருஷமும் சனி ஞாயிறு மாதிரி சர்ர்ர்ன்னு போயிறும்.

காரைக்குடியில சீட்டு கிடைச்சப்புறம் டியூஷன் சாரயெல்லாம் போய்ப் பாக்கும்போது, ஒரு சார் “காரக்குடியா.. அட அங்க நம்மகிட்ட போன வருசம் படிச்ச பையன் இருக்காம்பா… பேரு எழில் வேந்தன். அவனப்பாரு எதாவது ஹெல்ப் வேணும்னா பண்ணுவான்” ன்னு சொன்னாரு. அப்பாடா.. எதாவது ப்ராப்ளம் வந்துச்சின்னா அவரப் புடிச்சிற வேண்டியது தான்னு நினைச்சிக்கிட்டேன்.

அட்மிஷன் போட்ட உடனே  பேரண்ட்ஸ் மீட்டிங்குல பேசுன எங்க ப்ரின்சிபாலு “தம்பிங்களா.. நம்ம காலேஜ்ல ராகிங்கெல்லாம் இல்லை. ஆனாலும் நீங்க ஆறு மணிக்கு மேல வெளில எங்கயும் சுத்தக்கூடாது. க்ளாஸ்லருந்து நேரா ஹாஸ்டலுக்குத்தான் போகனும். அங்க இங்க சுத்தக்கூடாது” ன்னு நிறைய எச்சரிக்கை மணிகள அடிச்சிவிட்டாரு. சரி நம்ம யாரு வம்புக்கும் போறதில்லை தும்புக்கும் போறதில்லை. நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்துடுறது.




ஆனாலும் அந்த சீனியருங்களோட கோவம் கனலா எரியிறது. போன வருஷம் அவிங்க சீனியர்கிட்ட வாங்குனதயெல்லாம் நம்ம கிட்ட இறக்கியே ஆகனும்னு வெறியோட சுத்திக்கிட்டு இருக்காங்க. (அய்யய்யோ.. கதை வேற மாதிரி போகுதே) ஒரு நாள்… க்ளாஸ்ல காலை செஷன் தூக்கத்த முடிச்சிக்கிட்டு மத்தியான சாப்பாட்டுக்கு, ஹாஸ்டலுக்கு கிளம்புனேன். புதுசுங்குறதால தனியாத்தான் 1st floor லருந்து இறங்கி வந்தேன். க்ளாஸ்ல இருந்து காலேஜ் மெயின் கேட்டுக்கு கிட்டத்தட்ட ஒரு 200 மீட்டர் நடக்கனும்.

நடக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே சைடுல ரெண்டு பக்கமும் அணைச்ச மாதிரி ரெண்டு சீனியருங்க வந்து, “டேய் திரும்பக் கூடாது.. பேசிக்கிட்டே நட” ன்னாய்ங்க. அய்யய்யோ… சிக்கிக்கிட்டோமேன்னு நினைச்சிக்கிட்டே “சரிண்ணேன்” ன்னு சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சேன். அவனுங்களும் கூடவே நடக்க ஆரம்பிச்சாய்ங்க.

“பேர் என்னடா?”  “சிவா ண்ணே’

”எந்த டிப்பார்மெண்டு?”  “EEE ண்ணே”

“நாங்களும் EEE தான்” ன்னு அதுல ஒருத்தர் சொன்னதும்

“அப்புடியாண்ணே… “ ன்னு லேசா சிரிச்சேன். “ஏய்ய்ய்.. என்னடா பல்ல காமிக்கிற? நாங்க உன்ன இப்ப சிரிக்கச் சொன்னோமா? மூடிகிட்டு கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு” ன்னதும் நா கொஞ்சம் பயந்து போய் “இவரு ரொம்ப பயங்கரமானவரா இருப்பாரோ” ன்னு நினைச்சி படக்குன்னு வாயில ஓப்பன் பன்னிருந்த Door ah க்ளோஸ் பன்னிட்டேன்.  
“என்ன உங்க பசங்களையெல்லாம் ஹாஸ்டலுக்கு வெளியவே காணும்…. ?”
“வெளில வரக்கூடாதுன்னு சொல்லிருக்காங்கண்ணே”

“அவிங்க உங்கள காலையில வெளிக்கு போகக்கூடாதுன்னு கூடத்தான் சொல்லுவாய்ங்க. சொன்னா கேட்டுருவியா?”

“…..” என்ன சொல்றதுன்னு தெரியாம நா பம்பிக்கிட்டே தொடர்ந்து நடந்தேன்.

“சரி எந்த ஊரு..”

“பட்டுக்கோட்டை ண்ணே”

“பட்டுக்கோட்டை யா” ன்னு கேள்வி கேட்டுக்கிட்டு வந்தவன் ஒரு ஜெர்க் அடிச்சான்.

அட நம்மூர் பேரச்சொன்னாலும் இவிங்களுக்கு ஒரு பயம் இருக்கத்தான்யா செய்யிது.. அப்புடியே மெய்ண்டெய்ண் பன்னுவோம்னு மனசுக்குள்ள ஒரு சந்தோஷம்.

“பட்டுக்கோட்டையா பட்டுக்கோட்டைக்கு பக்கத்துலயா…?”

“பட்டுக்கோட்டைக்கு பக்கத்துல மதுக்கூருண்ணே”

என்ன இவ்வளவு விவரமா கேக்குறாரு… நமக்கு எதுவும் லெட்டர் கிட்டர் போடப்போறாரு போலருக்கு .. எதுக்கும் பின்கோடையும் சொல்லி வைப்போம்”னு சொல்ல வாயெடுத்தேன்.

”சரி படிச்சது பட்டுக்கோட்டையா பட்டுக்கோட்டைக்கு பக்கத்துலயா?”
“பட்டுக்கோட்டைக்கு பக்கத்துல நாட்டுச்சாலை ண்ணே…”

நம்மளப் பத்துன ஃபுல் டீட்டெய்ல் கலெக்ட் பண்ணிட்டு தான் களத்துல இறங்கிருக்காய்ங்களோ… ரேகிங் பண்றதுக்கு கூட பேக்ரவுண்ட் ஒர்க் பண்ணுவாய்ங்க போலருக்குன்னு நினைச்சிகிட்டேன். ஆனா அவன் கேள்வி கேக்குறத மட்டும் நிறுத்தவே இல்லை.

”ஆமா ஃபிசிக்ஸ் யார்கிட்ட ட்யூஷன் படிச்ச?” “CG கிட்ட”

“அப்போ கெமிஸ்ட்ரி ரதன குமார்கிட்டயா?” ”ஆமா…”

“சரி சீனியர் யாரையாவது  தெரியுமா?”

“தெரியும்ணே.. எழில் வேந்தன்னு எங்க ஊர்க்காரரு இங்க தான் படிச்சிட்டு இருக்காரு” ன்னு தைரியமா நா சொல்ல, கேள்வி கேக்காம கூட வந்தவன் கெக்க புக்கன்னு சிரிக்க ஆரம்பிச்சிட்டு

“டேய் எழில் வேந்தன நீ பாத்துருக்கியா?”  “பாத்தது இல்லைண்ணே…”

“இவன் தாண்டா எழில் வேந்தன்” ன்னு இவ்வளவு நேரம் என்ன நோண்டி நோண்டி கேள்வி கேட்டவன காமிச்சி அவன் கூட வந்தரு சொன்னாரு. (இப்ப எதுக்கு அவர அவுர் இவுர்ன்னு சொல்றேன்னு பின்னால தெரியும்)
அடப்பாவி… எவனாச்சும் ரேகிங் பண்ணா உன் பேர சொல்லலாம்னு பாத்தா கடைசில நீயே வந்து என்னைய மெரட்டிக்கிட்டு இருக்கியேய்யான்னு மனசுக்குள்ள நினைச்சிட்டு, இம்சை அரசன் வடிவேலு டைப்புல ஒரு அசட்டு சிரிப்ப சிரிச்சிட்டு “ரொம்ப சந்தோசம்ணே” ணேன். “யாரு ரத்ன குமார் தான நா இங்க படிக்கிறத சொன்னாரு?”  “ஆமாண்ணேன்” ன்னு சொன்னது தான் தாமதம்.

“காலங்கத்தால நம்மாத்துல தான் டிப்பன்னு சொல்லிருப்பாரே.. இந்த காலெஜ்ல சீட்டு கிடைச்சது லக்குன்னு சொல்லிருப்பாரே… அங்க நம்ம சீனியரெல்லாம் இருக்காங்க எதுக்கும் பயப்படாதன்னு சொல்லிருப்பாரே”
“ஆமாண்ணே..”

என்கிட்டயும் சொன்னானுவளே.. இங்க ஒண்ணும் பன்ன முடியாது. உனக்கு எதாவது வேணும்னா தயவுசெஞ்சி 2nd year ஹாஸ்டல் பக்கம் வந்துடாத.. எவன் கைலயாவது மாட்டுனா மாவாட்டிருவானுங்க. அதனால நானே அப்பப்ப உன்ன ஹாஸ்டல்ல வந்து பாக்குறேன்” அவர் சொன்னதும்தான் கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சி. எழில் வேந்தன் நம்ம ஊர்க்காரரா இருந்ததால டக்குன்னு செட் ஆயிட்டாரு. ஆன அவர் பக்கத்துல ஒருத்தார் வந்தாருன்னு சொன்னேனே.. அவர் மட்டும் சிரிக்கவே இல்லை.

அதுக்கப்புறம் ஒரு நாலஞ்சி இடத்துல நானும் பாத்து “ஐ.. நமக்குத் தெரிஞ்ச அண்ணன்னு சிரிப்பேன்…. ஆனா அவர் மொறைச்சிக்கிட்டே “பல்லக் காட்டாதடா” ம்பாறு. அதுக்கப்புறம் நாலு வருஷத்துல ஒரு அஞ்சாறு தடவ தான் அவர பாத்துருப்பேன். காலேஜ் முடிக்கிறதுக்குள்ள அடிச்சி புடிச்சி ஒரு வேலைய  வாங்கியாச்சி.

 கம்பெனில ஜாய்ண் பன்ற முதல் நாள். அதே மாதிரி புது இடம். புது ஃபீலிங்.. காலையில ஃபுல்லா ஓரியண்டேஷன்னு கம்பெனி எஸ்டிடிக்கள சொல்லி தூங்க வச்சிட்டு மத்தியானம் கம்பெனி கேண்டீனுக்கு சாப்பிட அழைச்சிட்டு போனாங்க. கேண்டீனுக்குள்ள நுழையும்போது அங்க சாப்பிட்டுகிட்டு இருந்த ஒருத்தர் என்னை பாக்க, நா அவரப் பாக்க “இவர எங்கயோ பாத்துருக்கோமே.. இது அது இல்ல?” ன்னு நினைக்க, அவரு அதுக்குள்ள எழுந்து வந்து என்னப்பாத்து “டேய்… என்னடா இந்தப்பக்கம்?” சிரிச்சிட்டே கேக்க, பதிலுக்கு நா சிரிக்கிறதா வேணாமான்னு யோசனையிலயே நின்னுக்கிட்டு இருந்தேன். சிரிச்சா ஒரு வேளை “என்னடா பல்லக் காட்டுற?” ன்னு கேட்டாலும் கேட்டுருவாரோன்னு. 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...