
ஜாக்கி அண்ணனைப் பற்றி நான் எழுதிய மூன்று பதிப்புகளுக்கும், வெளியிட முடியாத, ஆபாச வார்த்தைகளில் என்னை திட்டி பல பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. இது சம்பந்தப்பட்டவரின் தரப்பிலிருந்தோ, சம்பந்தப்பட்டவரிடமிருந்தோ அல்லது அவருக்கு சம்பந்தமில்லாத எதிரிகளிடமிருந்தோ வந்திருக்கலாம் (மூன்று இடங்களிலும் இருந்து வந்துஇருக்கிறது என்பதே என் ஊகம்), ஆனால் அதை
பற்றி எனக்கு கவலை இல்லை.
என் பதிவிற்கு எதிராக பின்னூட்டம் இட்ட அனைவருமே, "உனக்கு ஏன் இந்த அக்கரை", "ஜாக்கி அவ்வாறு தான் எழுதுவார், உன் வேலையை பார்த்துக்கொண்டு போ" என்றவாறு கூறினார்களே தவிற, ஜாக்கியின் பதிவுகள்
தரமானவை. அதை ஏன் ஏளனம் செய்கிறீர்கள் என ஒருவர் கூட கேட்கவில்லை. "உங்கள் பதிவுகள் ஆபாசமானவை" என்பதும், "உங்கள் பதிவுகள் ஆபாசமாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்" என்பதும் ஒரே அர்த்தம் தான்.முதலாவது கத்தியை எடுத்து நேராக நெஞ்சில் செருகுவது. இரண்டாவது முதுகுவழியாக குத்தி முன்னே இழுப்பது. நான் செய்தது முதல் ரகமே.
"சக பதிவரை எப்படி ஏளனம் செய்வது? அடுத்தவரை பற்றி விமர்சிக்க நீங்கள் யார்?" என்று பலர் கேட்டிருக்கின்றனர். ஒரு திரைப்படத்தை விமர்சிக்கும் உரிமையை தாங்களுக்கு யார் தந்தது? ஒரு நடிகரையோ, நடிகையையோ அல்லது ஒரு இயக்குனரோ அவரது வேலையை சரியாக செய்யாவிடில், அவரை சாடும் உரிமையை தங்களுக்கு யார் தந்ததோ அவரே தான்
எனக்கு சக பதிவரது தவறை சாடும் உரிமையையும் தந்தார்.
மேலும் ஜாக்கி அண்ணனின் உடல் அமைப்பை கேலி செய்திருக்கிறேன் எனவும், நடிகர் செந்திலின் புகைப்படத்தை இட்டு ஜாக்கியை அவமதிக்கிறேன் என்றும் கூறியிருக்கின்றனர் சிலர், நிச்சயமாக இல்லை. நண்பர் இளவரசன் அவருடைய பதிப்பின் தலைப்பு செந்தில் நடிக்கவிருப்பதாக இருந்த "ஆதிவாசியும் அதிசய பேசியும்" படத்தின் தலைப்பை ஒத்து இருந்ததாலேயே செந்திலின் படத்தை இட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, அதை தொடர்ந்து அதை தழுவி என் பதிப்பு இருந்ததாலேயே நானும் அதே புகைப்படத்தை உபயோகிக்க வேண்டியதாயிற்றே தவிற, ஜாக்கி அண்ணனை கிண்டல் செய்வதற்காக அல்ல.
எனக்கு ஒன்று புரியவில்லை. செந்தில் என்றால் உங்களுக்கு என்ன அவ்வளவு இளக்காரமா? அவரும் வாழ்வின் அடிமட்டத்திலிருந்து முன்னேறியவரே. "செந்திலின் பட்த்தை இட்டு ஜாக்கியை அவமதிக்கிறீர்கள்" என்று நீங்கள் கேட்கும் இந்த தொணியில் செந்தில் அல்லவா அவமதிக்கப்படுகிறார். சரி அதை விடுங்கள். இந்த கேள்விகளை கேட்டவர்களுக்காகவே இந்த பதிப்பில் அரவிந்த் சாமியின் படத்தை இட்டிருக்கிறேன். சந்த்தோஷமா? அரவிந்த சாமியின் தரப்பிலிருந்து என்னிடம் சண்டைக்கு வந்தால் என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை.
வாழ்வின் அடிமட்டத்திலிருந்து வந்தவன். லோக்கல். இதெல்லாம் ஒருவர் ஆபசாமா எழுதலாம் என்பதற்கு தகுதிச் சான்றிதழ்களா?
என் பதிப்பில் இருந்த ஒரு ஒரு வார்த்தைக்கு அதுவும் தமிழ் திரைப்படங்களில தனிக்கை செய்யப்படாமல் வெளியிடப்பட்ட அந்த ஒரே ஒரு வார்த்தைக்காக என்னிடம் சண்டைக்கு வந்தவர்கள் ஏராளம். அவர்கள் அவரிடம் இதுபோல கேள்விகளை கேட்டிருந்தால் அவர் முன்னரே இதைப்பற்றி யோசித்திருப்பார்.... சரி என்னால இதுக்கு மேல தம் கட்ட முடியாது.
நெற்றிக்கண் திறப்பிணும்... ச்ச... ச்ச...
கெட்ட வார்த்தையில் என்னை திட்டினாலும்
குற்றம் குற்றமே...
Nextu... Restu....