Sunday, January 20, 2013

சமர் - சொந்தமா யோசிங்கடா டேய்!!!


Share/Bookmark
குறிப்பு: சமர் திரைப்படத்தை பார்க்க முடிவு செய்திருப்பவர்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம். ஒரு பெரிய பிஸினஸ்மேன். சொந்தக்காரங்கள்ளாம் இல்லாம தனியா ஒரு பங்களால இருக்காரு. திடீர்னு ஒரு நாள் அவரோட தம்பி  பாக்க வர்றாரு. சும்மா வராம அண்ணனுக்கு ஒரு கிஃப்ட் கொண்டு வர்றாரு. அண்ணன்கிட்ட ஒரு voucher ah குடுத்து "அண்ணாத்த!! அண்ணாத்த!! உன் பேர்ல ஒரு கேம் புக் பண்ணிருக்கேன். உனக்கு தொணுச்சின்னா நீ அந்த அட்ரஸுக்கு போய் விளாடு.... நா வெளாண்டேன்... எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. தயவு செஞ்சி ட்ரை பண்ணி பாரு" ன்னு சொல்லிட்டு போயிடுறாரு.

நம்மாளு கொஞ்ச நாள் கழிச்சி "சரி நம்ம தம்பி சொன்னானே... போய்த்தான் பாப்போமே" அப்புடின்னு அந்த card எடுத்துகிட்டு அந்த அட்ரஸூக்கு போறாரு. போய் பாத்தா அது ஒரு கார்ப்ரேட் கம்பெனி மாதிரி இருக்கு. Card ah குடுத்த உடனே இவருக்கு  சில exam lam வச்சி எதோ டெஸ்ட் பண்ணிட்டு

:"உங்க game இன்னும் 24 hrs la ஆரம்பிச்சிடும்... உங்களுக்கு புடிக்கலன்னா நீங்க எப்போ வேணாலும் இதுலருந்து வெலகிக்கலாம்" அப்புடின்னு ரூல்ஸ் லாம் சொல்லி அனுப்பிடுறாரு. நம்மாளு அன்னிக்கு நைட்டு வீட்டுக்கு போகும் போது வீட்டுக்கு வெளிய யாரோ குப்புற விழுந்து கெடக்குற மாதிரி இருக்கு. இறங்கி போய் பாத்த ஒரு  விகாரமான மூஞ்சோட ஒரு சோளக்காட்டு பொம்மை மாதிரி ஒண்ணு கெடக்குது. என்ன பண்றதுன்னு தெரியாம
அத வீட்டுக்குள்ள எடுத்துட்டு போயி வச்சிட்டு, டிவிய போடுறாரு. டிவில பாத்தா இவரோட மூஞ்சே வருது. இவரு வீட்ல என்ன என்ன பண்றாரோ அத்தனையும் டிவில வருது.

அப்போ ஆரம்பிக்கிற கன்பீசன் தான். அதுக்கப்புறம் அவரோட வாழ்க்கை மொத்தமும் கன்பீசனாயி, போற எடமெல்லாம் இவருக்கு எதிரிங்க... இவர ஆளுங்க கொலை பண்ண ட்ரை பன்றாங்க... .இவரோட பேங்க் பணத்தை எல்லாம் திருடிட்டு இவர நடுரோட்டுல அலைய விட்டுடுறாய்ங்க.. யார் பண்றாங்க எதுக்கு பண்றாங்கன்னு தெரியாம ஒரு  கட்டத்துல மெண்டல் மாதிரி ஆயி இவரு ஒருத்தனை கொலை பண்ணிடுறாரு... போலீஸ்
அரஸ்ட் பண்ண வரும்போது என்ன பன்றதுன்னு தெரியாம ஒரு பெரிய அடுக்குமாடி  கட்டடத்துலருந்து குதிச்சிடுறாரு. அப்புடியே கட் பண்ணி ஏன் எதற்கு எப்படின்னு ரீசன்  சொன்னா அதான் "The Game " படம்.

என்னடா இவன் தெரியாம டைட்டில மாத்தி வச்சிட்டானா? சமர்னு போட்டுட்டு வேற  எதோ ஒரு படத்த பத்தி சொல்லிகிட்டு இருக்கான்னு தானே பாக்குறீங்க. அட ரெண்டும் ஒண்ணுதானப்பா... 1997 ல வந்த அந்த Game படத்து கதைக்கு லைட்டா உப்பு புளி, காரம் மசாலாலாம் சேத்து, ரெண்டு ஹீரொயின கோர்த்துவிட்டா அதான் இந்த சமர். 



முதல் பாதி எதுவும் தெரியாம பாத்தா ஒரளவு சுவாரஸ்யமாவே போனாலும் ரெண்டாவது பாதில எங்கருந்து சுட்டாய்ங்கன்னு தெரிஞ்சதும் படத்து மேல உள்ள மரியாதை சுத்தமா போச்சு. வத்தலோ தொத்தலோ, ஓட்டையோ ஒடசலோ, ஈயமோ பித்தாளையோ, ஈயம் பூசுனதோ பூசாததோ சொந்தமா ஒரு கதைய யோசிச்சி எடுத்தா என்னப்பா... சரி ஆட்டைய போடுறீங்களே.. அதே படத்த அப்புடியே எடுத்துருந்தாலும் நல்லா இருந்துருக்கும். அதுல ஒரு ஹீரோயின சேத்து, ரெண்டு மெண்டல் வில்லன்கள சேத்து நாசமாக்கி வச்சிருக்காய்ங்க.

காதல் காட்சிகள்ல ஜவ்வு மாதிரி இழுவை.. ரொம்ப ஸ்லோ... விஷாலுக்கு இதெல்லாம் வேலைக்கு ஆகாது. முதல் பாதில வர்றா காட்சிகள்ல கண்டெண்ட் நல்லா இருந்தா கூட scenes ah crisp ah எடுக்காம இழுத்ததால எரிச்சல்தான் வருது. படத்தோட பெரிய  மைனஸ் ரெண்டு வில்லன்கள்... JD சக்கரவர்த்தியும் இன்னொருத்தரும்... மெண்டல் மாதிரி சிரிச்சிகிட்டே இருக்காய்ங்க...

விஷால் முன்னாடியோட இப்ப கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்காரு... கொஞ்சம் கலரும் ஆயிட்டாரு போல... கருகம் காசு பணம் வந்தா காக்கா கூட கலராயிரும்னு திருவள்ளுவர் சும்மாவா சொன்னாரு.

பாடல்கள் மட்டுமே யுவன் சங்கர் ராஜா... "சம்ம சம்ம சமரண்" பாட்டும் "அழகோ அழகு" பாட்டும் சூப்பர்... உதித் பாடுன ஒரு பாட்டு சுமார். BGM வேற யாரோ... ஒண்ணும்  சொல்லிக்கிற மாதிரி இல்லை. சுனைனா ரெண்டு மூனு சீன் வந்தாலும் பரவால்ல... திரிசா... திரிசா... இனிமே உங்கள ஹீரோயினா பாக்க முடியல ஆத்தா.. விட்டுருங்க.  திரிசா எத மாத்துனாலும் அந்த "பப்பரப்பா" நடைய மட்டும் மாத்தவே மாத்தாது போல....

இப்பல்லாம் நம்மூரு டைரக்டருங்க கதைய யோசிக்கிறதுல்ல போலருக்கு. இங்லீஷ்  படங்கள்ல தேடிகிட்டு தான் இருக்காங்க...

ட்ரெயிலர் விஷால் சொல்றத பாத்துருப்பீங்க...

"வாழ்க்கை சில பேருக்கு வரம்"
"சில பேருக்கு சாபம்"
"ஆனா எனக்கு யுத்தம்..." 

உனக்கு யுத்தம்... ஆனா நாங்க செத்தோம்... 
சமர் பாக்காதவங்க நல்ல ப்ரிண்டுக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பீங்க. அதுக்கு பதிலா The Game (1997) படத்த download பண்ணி பாருங்க. ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருக்கும். இல்லை... நீங்க தப்பா புருஞ்சிண்டேள்... நாங்க சமரே தான் பாக்கனும்னு அடம் புடிச்சா, அதுவும் தப்புல்ல... ஆரம்பத்துல நல்லா தான் போகும்... போக போக கொஞ்சம் கஸ்தப் பதுவீங்க.... 


Thursday, January 17, 2013

கண்ணா லட்டு திண்ண ஆசையா! - A POWER STAR SHOW !!!


Share/Bookmark
"Build up பண்றமோ பீலா விடுறோமோ.... நாம என்ன பண்ணாலும் இந்த உலகமே நம்மள உத்து பாக்கனும்" ங்கற ஒரே தாரக மந்திரத்தை மனசுல வச்சிகிட்டு திரையுலகத்துக்குள்ள நுழைஞ்ச பவர்ஸ்டார் ஓவர் நைட்டுல தமிழ்நாட்டோட வெரி பவர் ஃபுல் ஸ்டாரா  மாறிட்டாருன்னு சொன்னா அது மிகையாகாது. ஒரு ஹீரோ ஸ்கீரீன்ல வரும்போது ஆடியன்ஸ கத்த வைக்கனும்னா அவங்க எவ்வளவு கஷ்டப்படனும்? ரஜினி, கமலுக்கெல்லாம் ரசிகர்களை இந்த மாதிரி மாத்த எத்தனை நாளாச்சின்னு தெரியல.. ஆனா அடிச்சாரு பாருங்க பவரு  மிரட்டலடி... பவர் ஸ்டார் மொத மொதல்ல  ஸ்கிரீன்ல இண்ட்ரோவாகும் போது தியேட்டரே தெரிக்கிற அளவுக்கு சவுண்டு... ஸ்கிரீன் முன்னால போய் நின்னு ஒரு 50 பேர் ஆடிகிட்டு இருக்காய்ங்க..  ரஜினி, கமல் அஜித், விஜய் படங்களுக்கு மட்டுமே நடக்குற இந்த மாதிரி ரகளைங்க மூணாவது படத்துலயே கெடைக்குதுன்னா அது பவரோட பொறுமைக்கும், சகிப்பு தன்மைக்கும் கெடைச்ச  மிகப் பெரிய பரிசுதான்.

"அது இது எது"ல கூப்டு கலாய்ச்சாய்ங்க... நீயா நானாவுல கூப்டு உனக்கு ஏன் இந்த  வெட்டி பந்தாண்ணாய்ங்க...
இன்னும் பல  டி.வி ஷோவுல கூப்டு இவர வச்சி காமெடி ஷோ பண்ணாய்ங்க. அனைத்துக்கும் தன்னுடைய சிரிப்பு ஒன்றையே பதிளாக அளித்த பவர் ஸ்டார ஸ்கீரீன்ல பாக்கும்போது ரசிகர்கள் எழுப்புற சவுண்டு, அவர அசிங்கப்படுத்துனவிங்க எல்லாருக்கும் செருப்படியா இருக்கும். காமெடிதாங்க... எல்லாரும் அவர பாத்து காமெடியாதான் கத்துறாய்ங்க... கலாய்க்கிறாய்ங்க... அவரு ஆசப்பட்டதே அததாம்பா..

இந்த படத்துக்கு முழு விளம்பரமுமே பவர் ஸ்டார நம்பித்தான். உண்மையிலயே பவர் ஸ்டார் இல்லன்னா இந்த படம் டஸ் ஆயிருக்கும். படம் ரிலீஸ் ஆவுறதுக்கு முன்னால இந்த படம் பாக்யராஜோட இன்று போய் நாளைவா படத்த தழுவி எடுத்துருக்காங்கன்னு சொல்லிகிட்டாய்ங்க. படத்த பாத்தாதான் தெரியிது அது சுத்த பொய்... தழுவி இல்ல... வக்காளி அப்புடியே அந்த படத்த ரீமேக் பண்ணிருக்காய்ங்க. சேதுங்கற புதுமுகம் பாக்யராஜ் கேரக்டர்லயும், சந்தானம் அந்த ஹிந்தி கத்துக்கிற கேரக்டர்லயும், தலைவர்
பவர் ஸ்டார் கல்லா பட்டி சிங்காரத்துகிட்ட கராத்தா கத்துக்கிறவர் கேரக்டர்லயும் நடிச்சிருக்காங்க. ரீமேக் படம்ங்கறதால ஹிந்திக்கு பதிலா சங்கீதத்தையும், கராத்தேக்கு பதிலா பரதநாட்டியத்தையும் கலந்து விட்டுருக்காங்க.

மூணு ஹீரோக்களுக்கும் தனித்தனி இண்ட்ரோவோட கலக்கலா  படம் ஆரம்பிச்சாலும் போகப் போக அருக்க ஆரம்பிச்சிடுறாய்ங்க. பவர் ஸ்டார் வர்றா காட்சிகள தவற மத்தது எல்லாமே கடி. இருந்தாலும் அலெக்ஸ் பாண்டியன் அளவுக்கெல்லாம் இல்லைப்பா. சந்தானம் கூட பவர் ஸ்டாரோட வர்ற காட்சிகள்ல மட்டுமே சிரிக்க வைக்கிறாரு.
இந்த கோவை சரளா சனியன் ஏந்தான் இப்புடி கடுப்பேத்துன்னு தெரியல... கருமம் எதோ ஒரு படத்துல அந்த மாதிரி பேசிச்சி... ஓக்கே.. எல்லா படத்துலயும் இப்ப மூச்சி விடாம பேசி எரிச்சல ஏத்துது. அதோட படத்துல நிறைய காட்சிகள்ல மூணு நாலு பேர் ஒண்ணா பேசுற மாதிரி இருக்கது காதுல காச்சின எண்ணைய ஊத்துன எஃபெக்ட குடுக்குது.

ஹீரோயின் ஒரு சுமார் ஃபிகர். அதோட மொத படத்துல இருந்ததுக்கு இதுல பரவால்ல. பாக்குற மாதிரி இருக்கு. மொத ரெண்டு காட்சிகள்ல ஹீரோயின தாவணில தேவத மாதிரி காமிச்சிட்டு அடுத்த காட்சிலயே "அடியே என் அண்ணக்கிளியே" ன்னு அரை குறை ட்ரஸ்ஸூல ஐட்டம் சாங்குங்கு ஆடுற ஒரு பாட்டு ஹீரோயின் மாதிரி ஆக்கி விட்டுட்டாய்ங்க.

தமனோட மியூசிக்ல "கண்ணா லட்டு திங்க ஆசையா" பாட்டும் " அடியே என் அன்னக்கிளியே " பாட்டும் ஓக்கே...

"டேய் இந்த பல்ல வச்சிகிட்டு மலையவே கரண்டலாம்டா"

"நானாவது காமடியன்னு தெரிஞ்சி வாழ்ந்துகிட்டு இருக்கேன்.. நீ காமெடியன்னு தெரியாமயே வாழ்ந்துகிட்டு இருக்க"

"வெட்டி பந்தா வெட்டி பந்தா... "

"இவன் ஒருத்தண்டா சிரிப்பு காமிச்சிகிட்டு"
ன்னு பவர் ஸ்டார்கிட்ட நேர்ல என்னவெல்லாம் சொல்லனும்னு ஆசப்பட்டாரோ அதயெல்லாம் படத்துல காமெடிங்குற பேர்ல சொல்லிட்டாரு.

சுருக்கமா படத்த பத்தி சொல்லனும்னா நண்பர் டான் அசோக் சொன்ன மாதிரி

கண்ணா லட்டு திங்க ஆசையா + பவர் ஸ்டார்  = 50/100

கண்ணா லட்டு திங்க ஆசையா - பவர் ஸ்டார்  = 5/100


ஒரு பவர் ஸ்டார் ரசிகனின் கதை:



சுமார் ஒரு நாலு மாசத்துக்கு முன்னால, ஒரு சனிக்கிழமை மதுரவாயல்ல இருக்குற தலைவர் பவர் ஸ்டார் தலைமை ரசிகர் மன்றத்துல (நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர்... தலைமை ரசிகர் மன்றம்) இணைஞ்சிரலாம்னு ஒரு முடிவெடுத்து நானும் என்னொட வேல பாக்குற ஒரு அண்ணனும் போணோம். எல்லாம் ஒரு ஜாலிக்கு தான்.

அப்ப பவரு பண மோசடில "உள்ள" இந்த நேரம்... ரசிகர் மன்றத்துக்கு போன மன்றம் பூட்டி இருந்துச்சி... சரி வந்தது வந்துடோமேன்னு அங்க பக்கத்துல இருந்த செக்யூரிட்டிகிட்ட நம்பர் வாங்கி மன்ற தலைவருக்கு போன் பண்ணி பேசுனாறு அந்த அண்ணன். அப்போது நடந்த கைபேசி உரையாடல் இதோ உங்களுக்காக.

மறு முனையில் ரிங் போனோன ஃபோன எடுத்து

"ஹலோ... யாருbaa?"

" அண்ணா நாங்க ரசிகர் மன்றத்துல சேர வந்துருக்கோம்"

"மன்றத்துல சேரனுமா? இன்னாத்துக்கு?"

"சும்மா தான் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் சேருறாங்க... அதான்"

"ஆமா நீ இன்னா பண்ற?"

"சாஃப்ட்வேர் கம்பெனில வேல பாக்குறேன்"

"உன் பேர் இன்னா? "

"முத்து "ண்ணா

"உன் வூடு எங்க கீது"

"இங்கதான் மதுரவாயலாண்ட... "

"எத்தினி பேரு வந்துகீரீங்கோ..."

"ஒரு ரெண்டு பேர் மட்டும்ணா... அடுத்த வாரம் இன்னும் நாலு பேரு வருவாங்க"

"தம்பி தலீவரு இப்ப ஊர்ல இல்ல... சவுதீ போய்கிறாரு... நீ இன்னா பண்ற பொய்ட்டு அடுத்த வாரம் சனிக்கிழமை மன்றத்தாண்ட வந்துடு... சேத்துக்கலாம்" (தலைவர் சவுதீ போய்க்கிறாரு- சவுதி... நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர்).

ஃபோன கட் பண்ணிட்டு அந்த அண்ணன் "டேய் சிவா... பாத்தியா...உன் வூடு எங்க கீதுங்குறாரு,... தலீவருன்றாரு... இன்னாத்துக்குன்றாரு...பேச்சே ஒரு மார்கமா இருக்கு. நாம சேந்துட்டு எதாவது சில்மிஷம் பண்ணி மாட்டுனோம்... ரப்படியா அடிச்சி தொவைச்சிருவாய்ங்கடா... யோசிச்சிக்க"

ன்னு சொன்னதும் "இவரு ஒரு டேஞ்சரஸ் புளோ போலருக்கு... இவர கேர்ஃபுல்லாதான் கேண்டில் பண்ணனும்னு" ப்ளான ட்ராப் பண்ணிட்டேன். ஆனா எனக்குள்ள இன்னும் அந்த ரசிகன் தூங்கிட்டே இருக்கான். என்னிக்கு வேணாலும் திரும்ப முழிப்பான்.



நம்ம அடுத்த ஆப்ரேஷன்.... சம்ம சம்ம சமரண்!!!!

Sunday, January 13, 2013

அலெக்ஸ் பாண்டியன் - Oh... What a Karvaad !!!


Share/Bookmark
"ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா"    "ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா"    "ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞ ஞா"                                                                                  என்னடா படத்துக்கு review எழுத சொன்னா சம்பந்தமே இல்லாம எதோ போட்டுருக்கானேன்னு பாக்குறீங்க அதானே... அதாங்க  படத்தோட ரிவியூவே.. இந்த படம் பாக்க போனா  படம் முடிஞ்சி வரும் போது காதல் பரத் மாதிரி இப்புடித்தான் பைத்தியம் புடிச்சி "ங்ஞா ங்ஞா ங்ஞா" ன்னு சொல்லிகிட்டு வரனும். நேத்து இந்த படத்தோட சில விமர்சனங்கள பாத்தேன்... எல்லாரும் "காட்டு மொக்கை" " உக்கார முடியல" "மரண கடி" அப்டியெல்லாம் அப்புடி இருந்தும் ஏண்டா நாயே போனன்னு தான கேக்குறீங்க... படம்னு வந்துட்டா நா விஜய் மாதிரி.. ஒரு தடவ முடிவு பண்ணிட்டா எம் பேச்ச நானே கேக்க மாட்டேன்.

அதோட மத்தவங்க நல்லா இல்லைன்னு சொன்ன நிறைய படங்கள் எனக்கு பிடிச்ச மாதிரி இருந்துருக்கு. சுராஜூம் நம்ம பயபுள்ள தான். கண்டிப்பா ஓரளவு பாக்குற மாதிரி படம்  எடுத்துருப்பாப்ளே அப்புடின்னு நெனைச்சி படத்துக்கு போனன். படத்தோட முதல் பாதி பாத்தப்ப எனக்கு,  நா படிச்ச ரிவியூ எழுதுனவிங்க மேல எல்லாம் செம்ம கோவம்... ஏன்பா இந்த படத்துக்கு என்னப்பா கொறை... நல்லாத்தானே போவுது.. சந்தானம் இருக்காப்புல நல்லா காமெடியும் பண்ணிருக்காப்ளே.. அப்புறம் ஏன் இவிங்க இப்புடி எழுதிருக்காய்ங்கன்னு நெனச்சேன் . வச்சாய்ங்கடா செகண்ட் ஆஃப் ல ட்விஸ்டு. சுறா, புதிய கீதை, பொறி , முகமூடி  போன்ற பல படங்கள ஒண்ணா பாத்த ஒரு எஃபெக்டு.


என்னட்ட இவ்வளவு பெரிய ஓட்டைன்னு தானே பாக்குறீங்க... அது வேற ஒண்ணும் இல்லை அதான் படத்துல உள்ள லாஜிக் ஓட்டை. இந்த மசாலா படங்கள்னா லாஜிக்ல சின்ன சின்ன இண்டு இடுக்கு ஓட்டை ஒடசல் இதெல்லாம் இருக்கது தான். ஆனா இங்க ஒண்ணு இருக்கு பாருங்க. இத கேட்டா ரெண்டு வயசு புள்ளை கூட கெக்க புக்கன்னு சிரிக்க ஆரம்பிச்சிரும். வெளிநாட்டுல தடை செய்யப்பட்ட மருந்த தமிழ்நாட்டு விக்கிறதுக்கு முதலமைச்சர் கிட்ட பர்மிஷன் கேக்குறானுக. அவரு தரமாட்டேன்னு சொல்றாரு. உடனே சி.எம்மோட மகள கடத்தி வச்சிகிட்டு அந்த அக்ரிமெண்ட்ல கையெழுத்து போட சொல்றாய்ங்க.

அதுவும் மெரட்டுரவிங்க ஒரு ஃபேமஸான சாமியாரு, டாக்டரு, அப்புறம் ஒரு பிஸினஸ் மேன். ஏண்டா மங்கினிகளா ஒரு தடவ மெரட்டி கையெழுத்து வாங்கிட்டா அத திரும்ப மாத்த முடியாதா... நார பயலுகளா... அதுவும் தமிழ்நாட்டுலயே பிஸினஸ்  பண்ணுவாய்ங்களாம். எதோ சி.எம் பொண்ண கடத்தி லம்பா ஒரு அமொண்ட்ட கரெக்ட் ஹாங்காங் போயிருவோம், பேங்காக் போயிருவோம்னு சொன்னா கூட எதோ ஒத்துக்கலாம்.

"ச்சீ நாயிங்களா... ஒரு ஆம்பளய இத்தனை பேரு அடிக்கிறீங்களே... உங்களுக்கு தைரியம் இருந்தா ஒத்தைக்கு ஒத்த மோதி பாருங்கடா" இதுதான் 1925லருந்து எல்லா மசாலா படங்கள்லயும் ஹீரோவ கட்டி போட்டு அடிக்கும் போது ஹீரோயின் சொல்ற டயலாக் இது
. இதக்கூட மாத்தலயேப்பா... அதுவும் அந்த டயலாக்க அனுஷ்கா சொல்றது மனச ரொம்ப கஷ்டப் படுத்திருச்சி. இந்த டயலாக்க சொல்லாம, அனுஷ்காவே கட்ட அவுத்துகிட்டு வந்து  வில்லன்கள அடிச்சி தொம்சம் பண்ணி கார்த்திய காப்பாத்துர மாதிரி காட்சி அமைச்சிருந்தா
கூட நம்மூர்ல ஏகப்பட்ட வரவேற்பு இருந்துருக்கும்.

கார்த்தி கடத்துற சி.எம் பொண்ணுதான் அனுஷ்கா... டேய் அனுஷ்காவுக்குன்னு ஒரு  மதிப்பு இருக்குடா... அது நெனைச்சா ஹீரோவே இல்லாம படம் நடிச்சி நூறு நாள் ஓட்டுற அளவுக்கு அதுக்கு கெப்பாகுட்டி இருக்குடா... அத கொண்டு வந்து நம்மூரு சைடு ஆக்டர்ஸுங்க மாதிரி டம்மி ஆக்கி வச்சிருக்கீங்களே... இதெல்லாம் உங்களுக்கு அடுக்குமா..இருங்கடா
உங்களயெல்லாம் அனுஷ்கா அவமதிப்பு வழக்குல உள்ள தள்ளுனாதான் சரிப்பட்டு வருவீங்க. சிவாஜி விவேக் ஸ்டைல்ல சொல்லனும்னா "நீ திரும்ப ஆந்த்ராவுக்கே போயிரு அனுஷ்கா.."  உணமையா சொன்னா தமிழ் சினிமால அனுஷ்காவுக்கு ஏத்த ஜோடி யாரும் இல்லைப்பா... நாகார்ஜூன் கூட நடிச்ச மட்டும் தான் அனுஷ்கா ஹீரோயின் மாதிரி இருக்கும். நம்மூர் ஆளுங்க பக்கத்துல அனுஷ்காதான் ஹீரோ மாதிரி இருக்கு. அனுஷ்காவ கார்த்தி கடத்தி காட்டுல வச்சிருக்கும் போது எதோ கடத்திட்டு வந்துட்டாங்குற மாதிரியே இல்லாம அனுஷ்கா ஹாய்யா இருக்கு. காமெடி பண்ணுது. இதுல எரிஞ்சி போன கம்பி  மத்தாப்பு மாதிரி இருக்க நம்ம மனோபாலா வேற...

ஆக்சன் படம்னா ஃபைட்டு இருக்க வேண்டியது தான். அதுக்குன்னு ஓப்பனிங்களயே பத்து நிமிஷ ஃபைட்டா... ஹீரோ வேற ஊர்ல போய் பதுங்கியிருக்காரு. அவன வில்லன் குரூப்பு தேடுது. இண்டர்வல்ல அத்தனை குரூப்பும் ஒண்ணூ சேருது.. சரி நம்மாளுக்கு ஒரு  வெயிட்டான ஃப்ளாஷ்பேக் இருக்கும்னு பாத்தா... த்தூ.. சல்பீ...

படத்துல உருப்படியான ஒரே விஷயம் சந்தானம் தான். அதுவும் பல இடத்துல வெறும்  டபுள் மீனிங் டயலாக். இந்த கேரம்போர்ட வச்சிகிட்டு இன்னும் எத்தனை நாள் அதே டபுள் மீனிங் காமெடிய பண்ணிகிட்டு இருக்கப்போறாய்ங்கன்னு தெரியல. அதுவும் சந்தானத்தோட தங்கச்சி கேரக்டர்களா வர்றதுங்க பண்ற அனியாயம் இருக்குதே... ஏண்டா இது என்ன
குடும்பமா இல்ல எதாவது பலான லாட்ஜாடா.... கருமம். என்னங்க சார் சுராஜ்... இதுவரைக்கும் நல்லா தானே  போய்கிட்டு இருந்துச்சி... ஏன் இப்புடி தரை டிக்கெட் ரேஞ்சுக்கு எறங்கிட்டீங்க. இதுல உங்களையெல்லாம் நா ஃபேவரைட் டைரக்டரா வேற வச்சிருக்கேன்.. வெளங்கிரும்.

சரிக்கமப் பதநிஸ்ஸே... கபக் கபக் கப கபக் கபக் கப ஜல்ஸே....  நம்மாளு டி.எஸ்.பீ தான் மீஸிக். ஹாரிஸ் ஜெயராஜாவது அதே அஞ்சி ட்யூன எல்லா படத்துலயும் போடுறவரு. ஆனா நம்ம DSP இருக்காரே ஒரே ட்யூன ஒரே படத்துல அஞ்சி விதமா போடுறவரு.  அவ்வளவு டேலண்டுன்ணா பாத்துக்கோங்களேன். ஆனா பாட்டால படம் கப்பியாயிருச்சின்னு சொல்ல முடியாது. ஓக்கே தான். அதவிட கொடுமை "நாலு பக்கம் காடிருக்கு" ன்னு ஒரு
பாட்ட அவரோட வெங்கல கொரல்லயே பாடிருக்காரு. வக்காளி வாய்க்குள்ள கம்பிய எடுத்து குத்திரலாம் போல இருந்துச்சி. அதோட picturization அத விட ப்ரமாதம்.

நம்ம விஜய காந்த், அர்ஜூன் எல்லாம் ஒவ்வொரு படத்துலயும் இந்தியாவ
காப்பாத்துற மாதிரி கதையிலயே நடிக்கிற மாதிரி நம்ம கார்த்தியும் ஓவ்வொரு படத்துலயும் பொண்ணுங்கள காப்பாத்துற மாதிரி கதையில தான் நடிக்கனும்னு எதாவது உறுதி எதும் எடுத்துருக்காரு போலருக்கு. அப்புடி எதும் எடுத்துருந்தா தயவு செஞ்சி அத முடிச்சிக்க. ரீலு அந்து போச்சி. விஜய்யே இந்த மாதிரி மசாலாவெல்லாம் விட்டுட்டு வெளிய வந்துட்டாப்ளே.. நீங்க இப்பதான் அங்கயே வர்றீங்க. மிட்டலடி விழுறதுக்குள்ள எஸ்கேப் ஆயிருங்க.

நமக்கு தான் டான்ஸ் சரியா வரலியே அப்புறம் ஏன் படத்துல குத்துப்பாட்டெல்லாம்... அனுஷ்காவோட உங்களால ஆட முடியுமா? மொதல்ல நம்ம ஊர்ல உள்ள  நாலு சின்ன புள்ளைகள கூப்டு ஆட  பழகுங்க. அப்புறமா அனுஷ்காவோட ஆடலாம். நமக்கு என்ன வருமோ நம்ம பாடி எவ்வளவு தாங்குமோ அவ்வளவுதான் பண்ணனும்.


நீங்களும் ஒரு வேள படத்துக்கு பொய்ட்டா இண்டர்வல்ல என் மேல கோவம் வரும்.  என்னடா இவன் இந்த படத்த போய் நல்லா இல்லைன்னு சொல்லிட்டானேன்னு. ஆனா படம் முடிஞ்சப்புறம் (முடியிற வரைக்கும் தியேட்டர் உள்ள இருந்தா) கண்டிப்பா 'ச்ச கரெக்கிட்டா சொல்லிருக்காம்பா" ன்னு கண்டிப்பா ஃபீல் பண்ணுவீங்க. சில படங்கள்ல காமெடி நல்லாருந்துச்சின்னா படத்துல வர்ற சில மொக்கை சீன்கள அது மறைச்சிடும்.
ஆனா இந்த படத்தோட 2nd half ல வர்றா மொக்கை சீன்ஸ் 1st half la வர்ற சில நல்ல காமெடிங்களோட எஃபெக்டயே மறைச்சிடுது.

அந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப்பக்கம் ஒரசுனாலும் தீ பிடிக்கும்... இந்த அலெக்ஸ் பாண்டியன எந்தப்பக்கம்  ஒரசுனாலும் உங்களுக்கு வெறி தான் புடிக்கும். படம் முடிஞ்சப்புறம் வந்து "எல்லோருக்கும் வணக்கம் எல்லோருக்கும் வணக்கம்,... என்ன பாக்க வந்த எல்லோருக்கும் முதல் வணக்கம்" ன்னு கார்த்தி சிரிக்க, எதிரும் புதிரும்ல கவுண்டமணி மெண்டல் மதன்பாப் கிட்ட சொல்ற மாதிரி "டேய் மெண்டல்... இந்த சிரிப்ப நீ அப்பவே சிரிச்சிருந்தா நாங்க ஓடிப்போயிருப்போமேடா" ன்னு நெனைச்சிட்டு வயித்தெரிச்சலோட வெளிய வந்தேன்.


Thursday, January 10, 2013

அன்புத் தாய்மார்களே!!! அருமைப் பெரியோர்களே!! இனிய குழந்தைகளே!!


Share/Bookmark
ஒரு பத்து வருஷத்துக்கு  முன்னாலயெல்லாம் ஸ்கூல் படிச்சிட்டு இருக்குற காலத்துல எதாவது பண்டிகை வந்துச்சின்னா டிவில என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகள் போடுவாங்க, என்ன என்ன படம் போடுவாங்க அப்புடிங்கறதெ ஒரு பெரிய எதிர்பார்ப்பா இருக்கும்.  முக்கியமா அப்பல்லாம் தியேட்டர்ல பாக்குற படங்களே வருசத்துக்கு ஒண்ணோ  ரெண்டோதான். ஆனா இப்ப... கழுதை என்ன படம் போட்டா என்ன? எப்புடியும் நாம பாத்த படத்த தான் போடப்போறாய்ங்க....

அதுவும் இப்பல்லாம் இந்த லோக்கல் சேனல்  இருக்காய்ங்களே...  கொலை வெறில அலையிறானுக... படம் ரிலீஸ் ஆன அடுத்த  வாரத்துலயே அந்த படத்த சேனல்ல போட்டா தான் அவிங்களுக்கு தூக்கம் வரும். அதும் இப்ப எங்க ஊர் பட்டுக்கோட்டை சைடுல ஒரு புது ட்ரெண்டு கண்டுபுடிச்சிருக்காய்ங்க... ரெண்டு வாரத்துக்கு முன்னால ஊருக்கு போனப்ப, ஒரு மூணு ச்சேனல்ல மூணு நாள்  தொடர்து காலையில் மதியம் நைட்டுன்னு மூணு வேளையும் "துப்பாக்கி" படம் ஓடிட்டுருக்கு.வெளையாட்டுக்கு சொல்லல...இது உண்மை. ஏண்டா இப்புடியெல்லாம் ஒரு படத்த போட்டு அருத்தா அடுத்து துப்பாக்கி படத்த சன் டிவியோ , ஜெயா டிவியோ போடும்போது எல்லாரும் வெறிபுடிச்சி ஓடிற மாட்டாய்ங்க...

அத விடுங்க... இந்த சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் வருவோம்... இந்த கேபிள் டிவி ஆரம்பிச்ச காலத்துலருந்து இப்ப வரைக்கும் எதோ பண்டிகைன்னா ஒரே மாதிரி சிறப்பு நிகழ்ச்சிகள்தான். ஏண்டா... வித்யாசமா போட்டாதான் அது சிறப்பு நிகழ்ச்சி... ஒரே டெம்ப்ளேட்ல ஆளுங்கள மாத்தி  மாத்தி போட்டு அருக்குற அருவை இருக்கே... இப்ப பாருங்க உதாரணமா நம்ம சன் டிவி எடுத்துகிட்டோம்னா...

விடிய காலமே இம்சைய ஆரம்பிச்சிருவாய்ங்க....

"காலை ஆறு மணிக்கு சூல மங்களம் சகோதரிகள் வழங்கும் பக்திப் பாட்டு" ன்னு போடுவாய்ங்க. ஏன்னு கேக்குறீங்களா? காலையிலயே மங்கள கரமா ஆரம்பிக்கிறாய்ங்களாமா. சரி நமக்கு  புரியிற மாதிரி "செல்லாத்தா செல்ல மாரியாத்தா" ன்னு பாடும்ங்கன்னு பாத்தா எதோ  பிரியாத மாதிரியே பாடிகிட்டு இருக்குங்க... அப்புறம் நாலுபேர கேட்டாதான்  தெரியிது. அதுங்க சமஸ்கிருதத்துல பாடுறாங்களாம். நமக்கு தமிழே டண்டனக்கா... இதுல இந்த கொடுமை வேறயா

இது கூட பரவால்ல கொஞ்சம் சேனல தெரியாம திருப்பிட்டோம் அம்புட்டு தான்.. இந்த விஜய் டிவில மூஞ்சி முழுக்க நாமத்த போட்டுக்கிட்டு ஒருத்தரு வந்து "அதாவது கடவுள் என்ன சொல்லுகிறார் என்றால்..... "ம்பாரு.  யோவ் கடவுள் சொல்றது இருக்கட்டும்யா... இந்த மூஞ்ச பாத்துட்டு காலைல ஆரம்பிச்சா அந்த பண்டிகை வெளங்குறாதுக்கா? இத ஒரு ஒருமணி நேரம் போட்டு அருத்துட்டு அத அப்புடியே லைட்ட உல்டா பண்ணி அடுத்து
பாடல்லருந்து ஆடலுக்கு வந்துருவாய்ங்க... அடுத்த ஒரு மணி நேரம் பரத நாட்டியம். இதுவும் நமக்கு சுத்தமா பிரியாது.


அப்புறம் எட்டு மணியா ஆயிருச்சின்னா எப்பவும் போடுற வணக்கம் தமிழகத்தயே ஒரு சினிமா ஆக்டர கூப்டு மொக்கை போட்டு "சிறப்பு வணக்கம் தமிழகமா" ஆக்கிருவாய்ங்க. லைட்டா அந்த கடலில் போட்டாலும் கட்டுமரமா மெதக்குற டிவிக்கு மாத்துனோம்னா அங்க ஒண்ணு நடக்கும் பாருங்க... போன பண்டிகைக்கு இப்புடிதான் சேனல நா மாத்துனோன்ன்ன எங்கப்பா திண்ணையிலருந்து "என்னப்பா.... கரகரங்குது... டிவி ஸ்பீக்கர்ல எதாவது
ப்ரச்சனையா?" ன்னாரு..."ச்ச... ச்ச... ஸ்பீக்கர்லாம் நல்லா தான் இருக்கு. டிவில அய்யா தமிழ் முழக்கமிட்டுகிட்டு இருக்காரு. அதான் ஸ்பீக்கர்ல அந்த கரகரப்பு" ன்னேன்...
புரிஞ்சிருக்குமே என்ன நிகழ்ச்சின்னு.

இந்த கட்டுமர டிவில ஒரு செம்ம காமெடி என்னன்னா... மத்தவிங்க எல்லாம் பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் னு போடுவாக... ஆன இவுக தமிழர் திருநாள்னு போடுவாய்ங்க.. தமிழ் புத்தாண்டுன்னு போடுவய்ங்க... அதோட காமெடி என்னன்னா விநாயகர் சதுர்தின்னு சொல்லமாட்டாய்ங்க விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்ம்பாய்ங்க... அதாவது எப்ப்டின்னா... நாங்க நல்லா கீழ விழுந்து பெரளுவோம்... ஆனா மீசையில மட்டும் எதுவுமே ஓட்டலைங்கங்குற கதை தான்.

 இந்த நேரம் புதுசா ரிலீஸ் ஆவுற படங்களுக்கான நேரம். "புத்தாண்டுக்கு திரைக்கு வரும் படங்கலிருந்து பாடல்கள் பார்வை" ன்னு ஒரு சிறப்பு நிகழ்ச்சி போடுவாய்ங்க. அது ஒண்ணூம் இல்லை... நாலு நாளைக்கு அப்புறம் முழுசா போட்டு அருக்கப்போற பாட்டுங்கள பாதி பாதி போட்டு கட் பண்ணிருவாய்ங்க...  அதாவது மீதி பாட்டு சஸ்பென்ஸாமா... படத்துக்கு பில்ட் அப்பாமா... போங்கடா டேய்...

பத்து மணி ஆயிருச்சின்னா....

"அன்புத் தாய்மார்களே..... அருமை பெரியோர்களே.... இனிய குழந்தைகளே... பழைய பாட்டிகளே" ன்னு பேசிட்டு வந்துருவாரு நம்மாளூ..... ஆதாம் ஏவாள் காலத்துலருது மாறாம இருக்க ஒரு ப்ரோக்ராம்ன சன் டிவில பண்டிகை அன்னிக்கு பத்து மணிக்கு போடுறா பாலமன் ஆப்பையா பட்டி மன்றம் தான். ட்ரெயிலர்ல ரெண்டு சூப்பரான காமெடி பிட்டு போடுவாய்ங்க... ஒண்ணு பாப்பையா பேசுனதா இருக்கும். இன்னொன்னு ராஜா பேசுனது... சரி பட்டிமன்றம் பட்டைய கெளப்பும்னு பாத்தா, கடைசில ட்ரெயிலர்ல போட்ட ரெண்டு  காமெடிய தவற வேற எதுவும் நல்லாருக்காது, பட்டிமன்றத்துக்கு தலைப்பும் பாத்தீங்கன்னா "குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா பெண்களா?", "காதல் திருமணமா கலப்பு திருமணமா",  "மகனா, மகளா?" "பெரியோர்களா சிறியோர்களா?" இததவர வேற எதுவும் இருக்காது. இங்க இப்புடின்னா அந்த பக்கம் நம்மாளூ லியோனி "பழைய பாடலா புதிய பாடலா" "கண்ணதாசனா பட்டுக்கோட்டையா" "காதல் பாடல்களா கருத்துள்ள பாடல்களா?" ன்னு சினிமாவுல அடிச்சி நவுத்திகிட்டு இருப்பாரு.

அப்புறம் ஒரு பதினொரு மணி ஆயிருச்சின்னா தான் நமக்கு கொலைவெறிய கெளப்புறமாதிரி ஒரு ப்ரோக்ராம் போடுவாய்ங்க... வேற ஒண்ணும் இல்லை ஒரு எதாவது ஒரு ஹீரோயின பேட்டி எடுப்பாய்ங்க... கருமம் அந்த ஹீரோயினுக்கு வயது 18க்கு கீழ தான் இருக்கும்.  அந்த நிகழ்ச்சிக்கு பேரு வச்சிருப்பாய்ங்க பாருங்க... அந்த ஹீரோயின் நடிச்ச பாட்டோட மொத வரி தான் ப்ரோக்ராமோட பேரு. அதாவது எமி ஜாக்சன  பேட்டி எடுக்கப் போறாய்ங்ன்னா ப்ரொக்ராம் பேரு "வாம்மா துரையம்மா."  அனுஷ்காவ பேட்டி எடுக்கப் போறாய்ங்கன்னா அதுக்கு பேரு " தெய்வத் திருமகள்" காஜல பேட்டி எடுக்கப் போறாய்ங்கன்னா பேரு 'கால் முளைத்த பூவே"... அதப்பாத்தா கால் முளைத்த காட்டெருமை மாதிரி இருக்கும். இருந்தாலும் அந்த பாட்டு வரிய அப்புடியே வச்சாதான் இவிங்களுக்கு ஒரு திருப்தி...

அதவிட கொடுமை அந்த ப்ரோக்ராமோட கடைசிலதான். அந்த 14 வயது ஹீரோயிண்ட "நீங்க உங்க ரசிகர்களுக்கு இந்த பண்டிகையும் என்ன சொல்ல விரும்புறீங்க?"ம்பாய்ங்க... அதுக்கு அந்த புள்ளை " எல்லாரும் எந்த சண்டையும் இல்லாம ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து, அன்பா மகிழ்ச்சியா இந்த பண்டிகய கொண்டாடனும்"ன்னு ஒரு அட்வைஸ் குடுக்கும் பாருங்க... "வக்காளி மொதல்ல நீ போய் எட்டாவது பரிட்சை எழுதி பாஸ் பண்ணு சனியனே... கருத்து சொல்ல வந்துருச்சி" ன்னு நமக்கு கொலைவறியாயிரும். என்னது? ச்ச...ச்ச நா லட்சுமி மேனன  பத்திலாம் சொல்லல.. நீங்க யாரும் கோவப்பட வேணாம்..நா பொதுவாச் ச்சொன்னேன்.

அப்புறம் ஒரு 12 மணிக்கு இந்திய தொலைக்காட்சிகளில் 175 வது முறையாக பாட்ஷாவோ முத்துவோ அல்லது படையப்பாவோ போடுவாங்க...

இந்த போஸ்ட் லஞ்ச் செஷன் இருக்கு பாருங்க... இதுதான் இருக்கதுலயே மிக டேஞ்சரஸ்... அது சின்னத்திரை நடிகர்களுக்கான நேரம்... "நாதஸ்வரம் குடும்பத்தினர் கிராம மக்களுடன் கொண்டாடிய பொங்கல்" " மெட்டி ஒலி குடும்பத்தினர் கொண்டாடிய தீபாவளி" ன்னு சீரியல்ல அழுதுகிட்டு இருந்த புள்ளைகல்லாம் கெளம்பி எதாவது ஒரு  ஊருக்குள்ள போய் வெடி வெடிச்சிகிட்டு திரியிவாய்ங்க.. ஏண்டா வார நாளல தான் உங்க தொல்லை தாங்க முடியலன்னா லீவு நாள்லயாது நீங்க கொஞ்சம் லீவு எடுக்கக் கூடாதாய்யா...

சாயங்காலம் ஆறுமணிக்கு "இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக" "மெகா ஹிட் திரைப்படம்" ன்னு ஆரம்பிச்சா தான் அது பண்டிகை படங்கறதுக்கே ஒரு கெத்து. இப்பல்லாம் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாகன்னு ஆரம்பிச்சா நம்ம பயலுக "போங்கடா டேய் நா இத முப்பது தடவ பாத்துட்டேன்" ன்னு ஆஃப் பண்ணிட்டு போயிடுறானுக... எங்க
இவிங்க என்ன்னா படம் வந்து கொறைஞ்சது ஒருவருசம் கழிச்சி தான் போடுறாய்ங்க... நம்ம கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தான் ரெண்டாவது வாரத்துலருந்தே போட ஆரம்பிச்சிடுறாளே!!!

படம் முடிஞ்சி ஒரு பத்து மணி ஆயிருச்சின்னா நாம உசாராயிடனும். கங்கை அமரன், புஷ்பவனம் குப்புசாமி, கருணாஸ் இவுகல்லாம், அவுக அவுக குடும்பத்துல ஒரு நாலுபேத்த கூப்டுட்டு  பட்டு வேட்டி சட்டையெல்லாம் கட்டிக்கிட்டு கெளம்பி வந்துருவாய்ங்க..  இத பாத்தோனயே நாம படக்குன்னு டிவிய ஆஃப் பண்ணிட்டு படுத்துடனும். இல்லைன்னா "பட்டிக்காடா பட்டணமா" ன்னு போட்டு நாட்டுப்புற பாட்டையும் சினிமா பாட்டையும் கலந்து விட்டு காத கிழிச்சிருவாய்ங்க.


இவிங்க இப்புடின்னா இந்த விஜய் டிவி இருக்காய்ங்களே.... அவிய்ங்க இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கெல்லாம் ஒண்ணும் பெருசா அலட்டிக்க மாட்டாய்ங்க... எப்பவும் போடுற  நிகழ்ச்சிகள்லயே ஒரு "சிறப்பு"ங்கற வார்த்தைய மட்டும் சேத்துப்பாய்ங்க... "சிறப்பு நீயா நானா" "சிறப்பு சூப்பர் சிங்கர்" "சிறப்பு அது இது எது" அவ்ளோதான். சாதா நீயா நானாவுக்கும் சிறப்பு நீயா நானவுக்கும் என்ன வித்யாசம்னு கேக்குறீங்களா... பெருசா ஒண்ணூம் இல்ல...கோபிநாத் எப்பவும் போடுற அந்த கோட்ட கொஞ்சம்  தொவைச்சி போட்டு வருவாரு... அவ்வளவுதான். படம் போடுறதுக்கும் ஒண்ணும் பெருசா ரிஸ்க் எடுக்க மாட்டானுக... அந்த பண்டிகைக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னால எதாவ்து
ஒரு படம் வந்து ஃப்ளாப் ஆயிருக்கும்... அத அப்புடியே போட்டுருவானுக.

இவிங்க எல்லாரும் பரவால்ல... இந்த கட்டுமர டிவில போடுவாயங்க பாருங்க நைட்டு... சிறப்பு "மானாட மயிலாட" ன்னு... ஆத்தாடி... சாதா நிகழ்ச்சில சாதா பேயா வர்ற கலா மாஸ்டரு இன்னும் ரெண்டு இஞ்ச் அதிகமா மேக்கப் போட்டு ஸ்பெஷல் பேயா வரும். அதான் இந்த சிறப்பு மானாட மயிலாட.... இந்த ச்சானல் பக்கம் தெரியாம  திருப்பிட்டா கூட டப்பிங் பட ஸ்டைல்ல " ஓடுங்க அது நம்மள பாத்துருச்சி..." ன்னு தெறிச்சி ஓடிற வேண்டியதுதான்.

இதுல எல்லாத்துலயும் ஒரு நல்ல விஷயம் என்னன்னா இந்த சன் மியூசிக் இசையருவில யெல்லாம் host பன்ற புள்ளைங்க எப்பவும் போல ghost  மாதிரி தலைய விரிச்சி போட்டுகிட்டு கிழிஞ்ச பேண்ட்லாம் போடாம சேலை கட்டிகிட்டு பொண்ணுங்க மாதிரி வரும்ங்க...

Tuesday, January 8, 2013

தமிழ்சினிமா இழந்த சில நட்சத்திரங்கள்!!!


Share/Bookmark
இந்த வருஷம் ரிலீஸான படங்களோட லிஸ்ட்ட நெட்ல தேடுப்பாத்துட்டு இருக்கும்போது ஒரு அதிர்ச்சியான தகவல விக்கிபீடியால பாத்தேன். இந்த வருஷம் மட்டும் 5 நகைச்சுவை நடிகர்கள் தவறியிருக்காங்க... அனைவரும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த மூத்த நடிகர்கள் என்பது வேதனையான விஷயம்.



சேதுராமன்கிட்ட ரகசியமா?



கவுண்டர் : டேய் உன் பொண்ணு செவிடுங்குறத நாம மறைக்க போறோம்

சேதுராமன் : என்னது கொறைக்க போறீங்களா?

கவுண்டர் : ஆமா... உன்ன ஒரு பக்கமா அப்புடியே கொறைக்க போறோம்...

சேதுராமன் :
நா கொஞ்சம் அதிகமா பேசுவேன்... உங்களுக்கு வேணுங்கறத எடுத்துகிட்டு வேணாங்கறத இந்த காதுல வாங்கி இந்த காதுல விட்டுருங்க,..

கவுண்டர் : ஏண்டா இந்த காதுல வாங்கி அந்த காதுல விட அது என்ன காச்சின கம்பியா...

கவுண்டர், க்ரேசி மோகன், கோவைசரளா மற்றும் இடிச்ச புளி செல்வராஜ் சேர்ந்து கலக்குன சின்ன  வாத்தியார் காமெடிய பார்க்காதவங்க இருக்க முடியாது.. அதுல கோவை சரளாவோட அப்பாவா வர்ற இடிச்ச புளி செல்வராஜ் இந்த அக்டோபர் மாதம் இறந்துட்டாரு. பி.பாண்டுவோன அண்ணனான  இவரு ரஜினி, கமல், ப்ரபு உட்பட பல முன்னணி ஹீரோக்களோட சேர்ந்து நூறுக்கும் அதிகமான படங்கள்ல நடிச்சவரு. அதவிட ஒரு முக்கியமான விஷயம் இதயக்கணி, உலகம் சுற்றும் வாலிபன் படங்கள்ல இவரு அசிஸ்டண்ட் டைரக்டரா வேலை செஞ்சவராம்.

விரு விருமாண்டி விருமாண்டி.... 






கரகாட்டக்காரன்ல தவில் காரர வந்து, இது நாள் வரைக்கும் பல படங்கள்ல குணச்சித்திர வேடங்கள்லயும் நகைச்சுவை வேடங்கள்லயும் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்து வந்த பெரிய கருப்பு தேவர் இந்த  வருஷம் இறந்துட்டாரு.  பெரும்பாலும் கோயில் பூசாரி வேடங்கள்ல நடிச்கிற பெரிய கருப்பு தேவர் ஒரு சிறந்த நாட்டுப்புற பாடகர். விருமாண்டில பூசாரிய வர்றதோடு மட்டும் இல்லாம அதுல வர்ற கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில் ங்கற பாட்ட பாடுனவரு. ஸ்ரீகாந்த் நடிச்ச "பூ" படத்துல வர்றா "சிவகாசி ரசியே" பாட்ட எழுதி பாடி அசத்தியவர்.

"காணாம போன புள்ளைன்னா கெடைக்கிறதும் கழுதைன்னா ஒதைக்கிறதும் சகஜம் தானப்பா"
ன்னு தோரணை படத்துல காமெடிலயும் கலக்கியிருந்தவர் 75 வயதான பெரிய கருப்ப தேவர்.  

கலைமாமணி லூஸ் மோகன்: 



 சுமார் 60 வருஷமா 1000 படங்களுக்கு மேல நடித்திருக்கும் நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன் இந்த வருஷம் செப்டம்பர் மாதம் இறந்துட்டாரு. கடைசியாக விவேக் கூட அழகி படத்துல அரசியல் வாதியா வந்து காமெடி செஞ்ச லூஸ் மோகன், கடைசி வரைக்கும் அந்த உடம்ப அதே சைஸ்ல மெயிண்டெய்ன் பண்ணது பெரிய விஷயம்.. லூஸ் மோகன் அவருடைய சென்னை பாஷைக்கு பெயர் போனவர்... "இன்னா அண்ணாத்தை... " ன்னு பேச ஆரம்பிச்சி கடைசில கண்ண லைட்டாஅமூடிகிட்டு குடுக்குற அந்த "இக்க்குங்" ங்கற ஃபினிஷ் தான் இவரோட ப்ளஸ்ஸே.... 2000 மாவது வருஷத்துல தமிழக அரசால் கலைமாமணி விருதளிக்கப்பட்ட லுஸ் மோகன் 84 வயதில் இவ்வுலகதிலிந்து விடை பெற்றுக்கொண்டார்.

காக்கா ராதா கிருஷ்ணன்:



1949 லிருந்து சுமார் 60 வருடங்கள் திரையுலகிலிருந்த காக்கா ராதாகிருஷ்ணன் அடுத்து.. அவரோட முதல் படமான மங்கையர்கரசில  ஒரு காக்காவ புடிக்கிறதுக்காக ஒரு மரத்து மேல ஏறுற மாதிரி ஒரு சீன் வருமாம். அதனாலயே அன்று முதல் இன்று வரை இவருக்கு காக்கா ராதாகிருஷ்ணன்னு பேராகிப்போச்சு. நல்ல வேளை வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரி முதல் படம்ங்கறதால மங்கையர்கரசி ராதாகிருஷ்ணன்னு வைக்காம  போனாங்களே...

கமல்ஹாசனோட தேவர்மகன் மற்றும் வசூல்ராஜாவுல இவரோட கேரக்டர மறக்க முடியாது.  தலைவர் சுந்தர்.சி யோட "உனக்காக எல்லாம் உனக்காக"வுல ஒரு சூப்பர் தாத்தாவாவும், "மாயி"ல வடிவேலுவையும் கோவைசரளாவையும் வடிவேலுவையும் சேர்த்து வைக்கிற குஜால்
தாத்தாவாவும் காமெடில பிண்ணியிருந்தாரு. இவரோட இன்னொரு முக்கியமான விஷயம்  என்னன்னா, தன்னுடைய சிறுவயது நண்பரான நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனை திரையுலகுக்கு  அறிமுகப்படுத்தி வைத்தவர் இவரே. 86 வயதான காக்கா ராதாகிருண்னன் கடந்த ஜூன் 12ல்
இயற்கை எய்தினார்.


அவ்வளவு சத்தமாவா கேக்குது?





இவர் ஆரம்ப காலங்கள்ல சினிமாவுலயோ இல்லை தமிழ்நாட்டுலயோ எவ்வளவு ஃபேமஸா இருந்தார்னு தெரியல. ஆனா அவர் இறக்கும் போது தமிழ்நாட்டுல ஒரு சின்ன குழந்தைக்கு கூட தெரியிற அளவு ஃபேமஸ் ஆயிட்டாரு...

தொட்டால் பூ மலரும் படத்துல "வரும் தம்பி... ஆனா வராதுன்னு..." ஆரம்பிச்சி "நீங்க நல்லா எம்.ஜி.ஆர் மாதிரி கலரு" ன்னு வடிவேலுவ உசுப்பேத்தி கடைசில கார கவுத்துட்டு  திரும்பவும் "தம்பி போவோமா?" ன்னு கேக்குற அந்த காமெடிய பிடிக்காதவங்க பார்க்காதவங்க யாரும் இருக்க முடியாது. இடையில கொஞ்ச நாள் பெரிய ஹிட் காமெடி இல்லாம இருந்த
இவருக்கு "வரும் வராது" செமயா செட் ஆயிருச்சி... அதுக்கப்புறம் அவரு நடிச்ச பல காமெடிங்க அந்த 'வரும் வராது " காமெடிய base பண்ணிதான் இருந்துச்சி

இவரும் இப்பவல்லாம் இல்லை... 1950 லிருந்து நடிப்பு துறையில இருந்தவரு. இவருக்கு எந்த படத்துலருந்து இந்த "என்னத்த" சேர்ந்துச்சின்னு தெரியல. ஆன தலைவரோட  மன்னன் படத்துல தலைவர் கூட வேலை செய்ரவரா வந்து "என்னத்த போட்டி என்னத்த  தேர்தல்" ன்னு பினாத்திட்டு இருப்பாரு. நாமக்கட்டிய போட்டுக்கிட்டு கவுண்டர் பக்கத்துல உக்கார்ந்துருக்கையில " 50 வயசுக்கு மேல உனக்கெல்லாம் வேலை வேணுமாடா... ஆளாலுக்கு அங்கனக்குள்ளயே ஐக்கியமாயிடுவோம்... அப்புறம் பாடிலருந்து லைட்டா ஸ்மெல் வரும்.. ஏற்கனவே ஒரு பாடிலருந்து லைட்டா வருது" ன்னு என்னத்த கன்னையாவதான் பாப்பாரு.. ஆனா இப்ப அவரே....... 

பல வருடங்கள் திரைத்துறையிலிருந்து நம் அனைவரையும் மகிழ்வித்த இவர்களுக்கு பற்பல நன்றிகளும் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய  ப்ராத்தனைகளும்......

Thursday, January 3, 2013

கவுண்டர் வழங்கும் சிறந்த பத்து படங்கள் -2012


Share/Bookmark
காலை 6 மணி....கவுண்டர் அப்பதான் தூங்கி எழுந்துரிக்கிறாரு....

"செகப்பி..... மாமனுக்கு ஒரு சொம்பு பால சுண்ட காச்சி நல்ல காப்பியா போடு... நா அப்புடி ஒதுக்குபுறமா  பொய்ட்டு வந்துடுறேன்" ன்னு சொல்லிட்டு கதவ தொறக்க...

ஒட்டுத்திண்ணையில யாரோ படுத்துருக்காங்க...

"இய்ய்ய்ய்ய்ய்ய்... என்னது....நம்ம வீட்டுக்கு முன்னால ஒரு எருமை கண்ணுகுட்டி செத்துக் கெடக்கு... பாத்தா முழுசா எருமை மாதிரியும் தெரியலையே.. பன்னியும் எருமையும் கலந்தாமாறி ஒரு புது மிருகமா
இருக்கு... சரி கிட்டக்க போயி பாப்போம்....." ன்னு கிட்டக்க போக

செந்தில் ஒட்டு திண்ணையில் கொறட்டை விட்டு தூங்கிட்டு இருக்காரு...

கவுண்டர் ஒரு ஜெர்க் அடிச்சிட்டு "இங்ங்ங்ங்... இது எறுமையும் இல்லை பன்னியும் இல்லை... ஆப்பிரிக்கா கொரங்கு... டேய்... டேய்... காட்டேரி வாயா... எழுந்திரிடா"

செந்தில் மெல்லமா கண்ண தொறந்து பாத்து "அட என்னண்ணே நீங்க தூங்குறவன எழுப்பிக்கிட்டு"

"டேய் கருப்பு நாயே... முழிச்சிட்டு இருக்கவன எப்புடிடா எழுப்ப முடியிங்... சொல்லாம கொல்லாம  வந்து படுத்துட்டு எகத்தாளத்த பாரு...எழுந்திரிடா" ன்னு டிக்கில மிதிச்சோன செந்தில் எழுந்து

"என்னண்ணே மறந்துட்டீங்களா... நீங்கதானே இன்னிக்கு உங்க வீட்டுக்கு சாப்புட வரச்சொன்னீங்க..."

கவுண்டர்: டேய் மெட்ரோ ரயில் மண்டையா... நா உன்ன மத்தியான சாப்பாட்டுக்கு தானடா வரச்சொன்ன்னேன்.. அதுக்குன்னு நீ மொதநாள் நைட்டே வந்து படுத்துருவியா... நல்ல வேளை லேசா விடிஞ்சிருந்ததால குத்து மதிப்பா உன்ன அடையாளம் கண்டுகிட்டேன்... இதே நைட்டுல எவனாவது உன்ன பாத்துருந்தா எதோ தார் டின்னு தனியா கெடக்குன்னு எடுத்துட்டு போயி வித்துருக்கமாட்டானுக..."

செந்தில் : சரி சரி விடுங்க... வாங்க போயி சாப்புடுவோம்...

கவுண்டர் : இங்ங்ங்... என்னது சாப்புடலாமா...மணி இப்ப தான் 6.30 ஆகுது... செகப்பி இப்பதான் அடுப்பே மொழுவிகிட்டு இருக்கா.. இப்பவே நீ திங்கனும்னா அந்தா வேளில காயிது பாரு வரட்டி அதுல ரெண்டு எடுத்து கடிச்சி திண்ணு... சரி நவரு எனக்கு அர்ஜெண்ட்டா வருது.. நா அப்புடி கம்மா கரையோறமா பொய்ட்டு வர்றேன்...

செந்தில் : சரி வாங்க போவோம்..

கவுண்டர்  : என்னது வாங்க போவோமா? நா என்ன கட்சி ஊர்வலமாடா போயிட்டு இருக்கேன்... அடிவயித்த கலக்குனதால போயிட்டு இருக்கேன்... காலையிலயே என்கிட்ட மிதிவாங்கி சாவாத ... போயிரு...

செந்தில் :
கோச்சிக்கிறாதீங்கண்ணே... நீங்க அங்க உக்காந்தா நா இங்க உக்காந்துக்குறேன்...

கவுண்டர் : ஹைய்யோ... என் அவசரம் புரியாம லொள்ளு பண்ணிகிட்டு இருக்கானே... சரி வந்துத் தொலைடா...

கம்மாக்கரை ஓரமா கவுண்டரும் செந்திலும் ஒவ்வொரு பக்கமா உக்கந்துருக்க..

செந்தில் : என்னன்ணே பேசாமயே உக்காந்துருக்கீங்க... போர் அடிக்குது எதாவது பேசுங்கண்ணே...

கவுண்டர் : வேணும்னா உனக்கு போர் அடிக்காம இருக்க ஒரு இளையராஜா கான்செர்ட் வச்சிருவோமா.(கடுப்பா ஹைபிட்ச்ல) கம்மாய் ஓரமா கக்கூஸ் போயிட்டுருக்க நாய்க்கு எண்டர்டெய்ண்மெண்ட் கேக்குது...

செந்தில் : இங்கிலீஸ்காரன் ஸ்டைல்ல கக்கா போலாம்னு பாத்தா எவனுக்கு புடிக்கிது... சரி விடுங்க நேத்து காலைல வா நல்ல படத்த பத்தி சொல்றேன்னு சொன்னீங்களே.. அதயாச்சும் சொல்லுங்க...

கவுண்டர் : மக்களே... நல்ல படங்கள பத்தி பேச எப்புடி ஒரு லொக்கேசன் செலக்ட் பண்ணிருக்கான்  பாத்தீங்களா... இந்த நாயே நீங்களே வந்து ரெண்டு அப்பு அப்பிட்டு போங்க... ஆனா இது என்ன  விடாது.. அதுனால இங்கயே ஆரம்பிச்சிருவோம்...

10. கழுகு: 



கவுண்டர் : ஊர்ல எது எதுக்கோ பஞ்சம் வருதுன்னா இவனுகளுக்கு படத்துக்கு பேரு வைக்கிறதுக்கு பஞ்சம் வந்துருது. சொந்தமா ஒரு பேர வைக்க மாட்டேங்குறானுக.. ஏற்கனவே வச்ச பேருகளையே நோண்டி எடுத்து
திரும்ப வச்சிட்டு இருக்கானுக.. ஆனா... கதைக்கு ஏத்த பேரா இருக்கதால ஐ ஆம் இவனுங்கள மன்னிச்சி விடுறேன்... மலையிலருந்து உருண்ட லவ்வேர்ஸ்ஸ தூக்குற இந்த ஹீரோவா வர்ற அவனும் சரி அந்த  பாப்பாவும் சரி குட் ஆக்டிங்... தும்பி ராமைய்யா... ச்ச்சி தம்பி ராமையாவும் கருணாசும் கூட நல்லா பர்பார்மண்ஸ் பண்ணிருக்காங்க...

செந்தில் : ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்ம்ம்ம்ம்.... அத காதலுன்னு சொல்லுவாய்ங்க  அனைவரும்

கவுண்டர்: டேய் ப்ளாக் பெர்ரி மண்டையா... அவரசரமா வந்தா அது காதல் இல்லைடா.... கக்கா.. வக்காளி ஒரு நாள் இல்லை ஒரு நாள் அந்த லவ்வர்ஸ் விழுந்து சாகுற மலைக்கு உன்ன கூட்டி போயி தனியா மேலேருந்து உருட்டி விடுறனா இல்லையாண்ணு பாரு.

9. தடையற தாக்க:



கவுண்டர் : பல தடைகளுக்கு அப்புறம் இவனுக்கு இப்பதான் வாழ்க்கைல ஒரு ரெண்டு மூணு படம் ஓட ஆரம்பிச்சிருக்கு...

செந்தில் : ஆமா இவரு ஏண்ணே ரெண்டு மூணு தடவ பேர மாத்திட்டாரு...

கவுண்டர் : பேர மாத்துனா படம் ஓடிரும்னு எந்த நாயாவது இவனுக்கு ஐடியா குடுத்துருக்கும்... அதுனால இவனுக மாத்திகிட்டு திரியிறாருனுக... டேய்... என்னதான் பேர மாத்துனாலும் வேலை செஞ்சாதாண்டா
சோறு...

செந்தில் : அய்ய்ய்யய்யயயைய்யயய்யோ...

கவுண்டர்: என்னடா பொதருக்குள்ளருந்து பாம்பு எதுவும் கடிச்சிருச்சா...

செந்தில் : தத்துவம் பிண்ணுரீங்கண்ணே...

கவுண்டர்: இது சுத்தமில்லை தம்பி...


8. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்: 




கவுண்டர் : 50 கோடி நூறு கோடி போட்டு படம் எடுக்குறானுக... ஆனா எவனும் தியேட்டர்க்க்கு போக மாட்டேங்குறானுக எப்புடி போவானுக.. படம் நல்லா இருந்தாதானே போவானுக.. ஆனா இங்க ஒரு நாலு ஸ்மால் பாய்ஸ் செலவெல்லாம் அதிகம் எடுக்காம ஒரு குட் படத்தை எடுத்துருக்கானுக... இந்த படத்துக்கு எல்லாரும் குடு குடுன்னு ஓட காரணமே அந்த தலைப்பு தான்... நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்... படத்த பாத்துட்டு வந்து பாத்தா என் கடையில ரெண்டு மோட்டர காணூம்... எங்கண்ணு பாத்தா...இந்தா பக்கத்துல உக்காந்து முக்கிட்டு இருக்கே பண்ணி அது திருடிட்டு போயி வித்து பேரிச்சம்பளம் வாங்கி திண்ணுருச்சி... அப்புடி இருந்தும் நா ஏன் அவன ஒண்ணும் பண்ணலன்னா... பன்னிய அடிச்சா குடும்பதுக்கு ஆகாதுன்னு என் செகப்பி சொன்ன ஒரே காரணத்துக்காக தான்...

7. கும்கி 




முன்னாடியெல்லாம் க்ளைமாக்ஸ்னா காதலனும் காதலியும் ஒண்ணூ சேர்ர மாதிரி காமிப்பாங்க... பிரிஞ்சி  போன குடும்பம் ஒண்ணா சேர்ர மாதிரி காமிப்பானுக,... ஆனா இப்பல்லாம் க்ளைமாக்ஸ்னாலே எவனாவது ஒருத்தன சாகடிச்சே ஆகனும்னு அடம் புடிக்கிறானுக... எவனுமே கெடைக்கலன்னா புரடியூசர  சாகடிச்சிடுறானுக... ஏண்டா எதையாச்சிம் சாகடிக்காம உங்களால படமே எடுக்க முடியாதா? அந்த கல்யான் ஜூவல்லர்ஸ் பூதத்தோட பையன் தான் ஹீரோ... மூக்கு மட்டும் முட்டி வரைக்கும் வளந்துருக்கு,. இந்த தும்பி ராமைய்யா பேசி பேசியே காது ஜவ்வ கிளிச்சிட்டான்... கடைசில மாணிக்கம் செத்து என் நெஞ்ச கசக்கிட்டான். அப்புடியிருந்தும் இந்த படத்த ஏன் லிஸ்ட்டுல போடுறேன்னா எல்லாம் என் டார்லிங்  லட்சுமி மோடம் காக காரணம்.....

செந்தில்: அண்ணே அது லட்சுமி மோடம் இல்லை லட்சுமி மேனன்...

கவுண்டர்: அட  ரெண்டும் ஒண்ணு தானப்பா... கொளப்புறானுகளே... படத்துல யானை கும்கியோ இல்லையோ லட்சுமி மோடம் "கும்ம்ம்ம்"கி... ஐ லைக் இட் ஆல் யங் கேர்ள்ஸ்...

6. தோணி : 




செந்தில் : எங்க தல தோணிக்கு பெரிய விசில அடிங்க...

கவுண்டர்: கொஞ்சம் அந்த செருப்ப எடுங்க...

செந்தில் : உங்களுக்கு தோணிய புகழ்ந்தா புடிக்காதே... அவரு ஒரு பினிஷர்

கவுண்டர் : என்னது பினிஷரா... அப்புன்னா என்ன வீட்டுக்கு வெள்ளை அடிக்கிறவரா?

செந்தில் : அதாவது 50 வது ஓவர் வரைக்கும் அவுட் ஆகாம நின்னு

கவுண்டர் : நின்னு அடுத்தவன் உயிரை எடுக்குறதா... போதுமுடா ஓட்டுனது ரீலு அந்து போச்சு...அடடடா... கண்டத பேசி என் மூட அவுட் பண்ணிட்டானே... என்னால இதுக்கு மேல இந்த படத்த பத்தி பேச முடியாது... தி நெக்ஸ்ட்...


5. சுந்தரபாண்டியன்:



கவுண்டர்: இவனுக அடுத்த ரகம்... க்ளைமாக்ஸ் எடுக்கனும்னாலே உடனே ஒரு கள்ளிக்காட்டுக்குள்ள கேமராவ தூக்கிட்ட் ஓடிருவானுக... இந்த படத்துல என்ன கொஞ்சம் முன்னேறியிருக்கானுகன்னா, எவனையும் கொல்லாம ரத்த
களரியோட முடிச்சிட்டானுக... என் டார்லிங் லட்சுமி மோடத்துக்கு பெரிப்பா மாதிரி இருக்க சசிகுமார் அந்த கரடிக்குட்டி மூஞ்ச பக்கத்துல காட்டி காட்டி 4 தடவ அவள படம் எடுக்கும் போது  மயங்கம் போட  வச்சிருக்காரு.,...

செந்தில் : அண்ணே நா வேணா போயி

கவுண்டர் : உன் மூஞ்ச காமிக்கிறேங்குறீயா...... அவ உயிரோட இருக்கது உனக்கு புடிக்கலையா...

4. பீட்சா :



கவுண்டர்: போன வருசத்துக்கு எப்புடி ஒரு காஞ்சனாவோ அதே மாதிரி இந்த வருசத்துக்கு ஒரு பீட்சா... கொள்ளிவாய் பிசாசுகிட்டயே கபடி வெளையாண்ட நானே ஒரு நிமிசம் பயந்துட்டேன்னா பாத்துகுங்க...

செந்தில்: இல்லையே... நீங்க ராத்திரி ஒண்ணுக்கு கூட தனியா போக மாட்டீங்களாமே... அண்ணிய  தொணைக்கு கூப்புட்டு தான் போவீங்கன்னு கேள்வி பட்டேன்...

கவுண்டர் : என்னது கேள்விப்பட்டியா... ஏண்டா நா ஒண்ணுக்கு போறது ஊருக்குள்ள சேதியா பரவ ஆரம்பிச்சிருச்சா... ஊரு வெளங்கும்...


3. துப்பாக்கி :




செந்தில் : ஐ... சொல்லுங்கண்ணே சொல்லுங்க...

கவுண்டர் : மனசுக்குள் (டேய் டகால்டி நீ என்ன எதிர் பாக்குறண்ணு தெரியும்டி... நா இவன பத்தி எதாவது தப்பா சொல்லுவேன்... அதுக்கு எவனாவது வந்து என்ன அசிங்க அசிங்கமா திட்டுவான்... அத நீ ஜாலியா வேடிக்கை பாக்கலாம்னு தான பாக்குற... அது நடக்காது மகனே) 

தம்பி விஜய் ரொம்ப நல்லா ஆக்ட் பண்ண்ருக்காரு... நா கூட மிலிட்டரி ஆபீசர்னவுடனே வில்லுல வந்து காமெடி பன்ண மாதிரி எதாவது பண்ணுவாருன்னு நெனைச்சி தான் போனேன்... ஆனா அப்புடி எதுவும்
நடக்கல... படத்துல கூகிள் கூகிள் னு அருமையான, கருத்துள்ள, சமுதாய சிந்தனையுள்ள ஒரு பாட்ட நம்ம நாறிய ஜெயராஜ்.. த... ச்சி ஆரிய ஜெயராஜ் போட்டுருக்காருங்க... எல்லாரும் கேட்டு நல்லா குஜாலா இருங்க...

செந்தில்: (செந்தில் மெதுமா) அண்ணே... அன்னிக்கு கூட படம் பாத்துட்டு வந்து பாட்டுல விஜய் மண்டை கீரிப்புள்ள மாதிரி  இருக்குன்னு சொன்னீங்களே அத சொல்லல...

கவுண்டர் : (ஒரு கல்ல எடுத்து அவர் மேல வேகமா வீசி ) என்ன... மாட்டி விடுற நீ... படுவா...


2. நான் ஈ:




கவுண்டர் : மனுசங்கள வச்சி எடுத்தாலே இப்பல்லாம் யாரும் படம் பாக்கதப்ப ஒரு ஈய ஹீரோவா போட்டு ஒரு படம் எடுத்து ஓடவச்சது பெரிய விஷயம் தானப்பா... அந்த படம் பாத்ததுலருந்து நா எந்த ஈயயுமே அடிக்கிறதில்லை... எதப்பாத்தாலும் அந்த நானிப்பயலே வந்து நிக்கிற மாதிரி ஒரு மன ப்ராந்தி...

செந்தில் : அண்ணே... ஒரு சந்தேகம்..

கவுண்டர்: கக்கூஸ் போற எடத்துல கூட சந்தேகமா? சொல்லித்தொலை

செந்தில் : ஆமா நான் ஈ படத்துல நடிச்சதால அவருக்கு பேரு நானியா இல்ல அவரோட பேரு நானிங்குறதால இந்த படத்துக்கு பேரு நான் ஈ யா?

கவுண்டர் :அப்புடியா ராஜா... எனக்கும் ஒரு சந்தேகம்..அதாவது இந்த செருப்பு பிஞ்சதுனால உன்ன அடிக்கப்போறனா இல்லை உன்னை அடிக்கப்போறதால
இந்த செருப்பு பிய்யப்போவுதாங்குறது தான் அது..

செந்தில் : அய்யோ.. சந்தேகம் போச்சு...

கவுண்டர் : ஹ்ம்ம்ம்ம்... செருப்பெடுத்தா தான் வழிக்கு வர்ற...


1. கலகலப்பு : 




கவுண்டர்: போன வருசம் ஒரு படம் பாக்கையில நா ரொம்ப சந்தோசமா இருந்தேன்னா அது இந்த படம்  தான்... சிரிச்சி சிரிச்சி வயிறு வலி வந்ததும் அன்னிக்குதான்.. இந்த வருசம் தியேட்டர்ல ரெண்டு தடவ பாத்த
படமும் இது தான். பல கடுப்புகளூக்கு நடுவுல படத்துக்கு போனா ஒண்ணூ ரம்பத்த போட்டு கர கரன்னு  கழுத்த அறுத்துடுறானுக இல்லை எவனையாச்சும் சாவடிச்சி நம்மளையும் சாவடிச்சிடுறானுக... இந்த கொடுமையெல்லாம் எதுவும் இல்லாம ரெண்டரை மணி நேரம் கலகலப்பா சிரிக்க வச்சி இந்த படம்தான் இந்த வருசத்துல நமக்கு ரொம்ப புடிச்ச படம்...


கவுண்டர் சொல்லிட்டே எழுந்த் ஆத்துக்கரைகிட்ட போக செந்திலும் அங்க வந்து

செந்தில் : சரி படம் சொன்னதெல்லாம் போதும்... வாங்க போயி சாப்புடுவோம்...

கவுண்டர் : சாப்புடலாம் அதுக்கு முன்னாடி அந்த தெரியுது பாரு ஒரு மீனு அத புடிச்சிட்டோம்னா இன்னும் சூப்பரா இருக்கும்...

செந்தில் : மீனா எங்கண்ணே...

கவுண்டர் : அதோ அந்த ஆத்துக்குள்ள பாரு ராஜா... (செந்தில் குமிஞ்ச ஆத்த பாக்க) டிக்கில ஒரே மிதி
         
செந்தில் : அய்யோ அண்ணே எனக்கு நீச்சல் தெரியாது...

கவுண்டர் : ஹைய்யோ... இத கேக்க எவ்வளவு சந்தோசமா இருக்கு... ரெண்டு நாள்ல கடலோரமா பாடி கரை ஒதுங்கும் அங்க வந்து உன்ன கலெக்ட் பண்ணிகிறேன்... பாய்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...