Thursday, July 29, 2010

சத்ரியன்


Share/Bookmark
"பொறுமையா இருப்பா... நீ இப்புடி கோவப்படுறதால கடைசில பாதிப்பு யாருக்குன்னா நமக்குதான்... உன்ன விட வயசுல மூத்தவன் சொல்றேன்... தயவு செஞ்சு கேளுப்பா..." என்றார் அந்த பெரியவர்..

"அதெப்புடிங்க முடியும்... பாதிக்கபட்டது நாங்க.. அதுக்கு சரியான பழி வாங்குனாதான் என் மனசு ஆறும்...எங்க அண்ணன அடிச்சே
கொன்னவன சும்மா விட்டு வைக்க சொல்றீங்களா?" கொதித்தான் பக்கிரி...

"சும்மா தான் இருக்கனும்....இப்ப உன்ன நம்பிதான் உன்னோட குடும்பமே இருக்கு...அதோட இங்க இருக்கவங்களுக்கெல்லாம் நீ தான்
தொழில் சொல்லித்தர்ற.. உனக்கு ஒன்னு கெடக்க ஒண்ணு ஆயிடுச்சின்னா இவங்களோட கதி.. நீ தானே அவங்களயெல்லாம் கரை சேக்கனும்...."

"எங்க அண்ணனோட சாவு இன்னும் என் கண்ணு முன்னாடியே இருக்கு... என்ன தடுக்காதீங்க...... அவன இப்புடியே விட்டா நாளைக்கு நம்ம பேரு சொல்றதுக்கு கூட யாரும் இருக்க மாட்டாங்க....எங்க அண்ணனோட ஆத்மா சாந்தி அடைய இத நாங்க செஞ்சே ஆகனும்..என்னடா சொல்றீங்க..."

"ஆமா... கண்டிப்பா செய்யிறோம்... " என்றனர் அவனுக்குப்பின்னால் இருந்தவர்கள்.

"என்னமோ நா சொல்றத சொல்லிப்புட்டேன்.. அதுக்கு மேல உங்க இஷ்டம்...செய்யிறத பாத்து செய்யிங்கடா... உசுற காப்பாத்திக்குங்க..."
என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் அந்த பெரியவர்,

ஓரு வழியாக உத்தரவு கிடைத்து விட்ட மகிழ்ச்சியில்

"டேய் எங்கூட ஒரு நாளு பேரு வரனும் இத செய்ய.. யார் யார் வர்ரீங்க..."

"கூட்டத்தில் உயர்த்தப்பட்ட கைகளில் நான்கு பேரை அழைத்தான்..

அவர்கள் கஜா, சாமி, திரு, மாண்டி..

"நா ஏன் உங்கள கூப்டேன்னா நீங்களும் அவனால பாதிக்கப்பட்டுருக்கீங்கன்னு தெரிஞ்சி தான்"

"ஆமாண்ணே.... எங்க உயிர் போனாலும் பரவால்லண்ணே... அவன செய்யிரோம்ணே..."

"எடுத்தோம் குவுத்தோம்னு எதயும் பண்ணக்கூடாது....அவன செய்யிறதுக்கு நாளைக்கு நைட் பத்து மணி சரியாஇருக்கும்..அவனுக்கு முன்னாடியே அவன் வீட்டுக்கு போயி நாம பதுங்கி இருக்கனும். சரியா பத்து மணிக்கு லைன் மாத்துறதுக்காக கரண்ட் கட் ஆகும். அந்த சமயத்த தான் நாம யூஸ் பண்ணனும்... ஒரே சமயத்துல தாக்குனாதான் அவனால சமாளிக்க முடியாது.. கஜா நீ அவன் கழுத்துல போடு... சாமி நீ கைல போடு...மாண்டி நீ முதுகுல போடு.... திரு நீ கதவுக்கு பிண்ணால நின்னு அவன் வரும் போது சிக்னல் தரனும்..ஒகே வா.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் மொத்தமும் சொதப்பிடும்.. சரியா..."

"சரிண்ணே..."

மறுநாள்... இரவு ஒன்பது மணி... மனோகர் வீட்டின் sofa விற்கு பின்பு ஒருவன்.. கட்டிலுக்கு அடியில் ஒருவன்...கதவிடுக்கில் ஒருவனாக
பதுங்கி இருந்தனர்.

சரியாக ஒன்பதரை மணி... மனோகர் வீட்டுக்குள் நுழைந்தான்... முகம் கை கால் அலம்பிவிட்டு நாற்காலியில் அமர்ந்து டிவி பார்க்கத்தொடங்கினான்.

மணி 9.55. 9.56...... 9.59..... 10.00

கரண்ட் கட்..... ட்ர்ர்ர்ர்ர்ர்ர்... என்ற சத்தத்துடன் டிவி அணைந்தது....

மறைந்திருந்தவர்கள் வெளிப்பட்டு திட்டமிட்ட படி தாக்க தொடங்கினர்.. கையில் ஒருவன் கழுத்தில் ஒருவன்... முதுகில் ஒருவனாக.."

"சாந்தி... அந்த கொசுவர்த்திய எடுத்துட்டு வா.... கரண்ட் கட் ஆனிச்சின்னா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியால என்று சொல்லிக்கொண்டே
கையில் கடித்த சாமியை ஓங்கி ஒரு அடி அடித்தான் மனோகர்... குடித்த ரத்தத்தை கக்கிவிட்டு சுருண்டு விழுந்தான் சாமி...

மற்ற நால்வரும் மனோகரை கடித்துவிட்ட திருப்தியில் பறந்து வெளியே சென்றன....

அரைமணி நேரத்துக்கு பிறகு

"அண்ணே... நாம திட்டப்படி அவன் ஒடம்புல மலேரியா கலந்த ரத்தத ஏத்தியாச்சி.. கண்டிப்பா மலேரியா வந்து ஒரு வாரம் படுத்துடுவான்..
அப்ப தெரியும் நம்ம யாருன்னு...ஆனா இந்த operation la நம்ம சாமி செத்துட்டானேண்ணே..." என்றான் திரு..

அவர்கள் முன் வந்து அவன் தோளை இருக்கி பிடித்தபடி பக்கிரி சொன்னான் இருக்கம் கலந்த பெருமிதத்தோடு

"சத்ரியனுக்கு சாவுல்லடா"

Sunday, July 25, 2010

அழகு ராஜா சைக்கிள் கடை-பாகம் II


Share/Bookmark
இடம்:ஆல் இன் ஆல் அழகு ராஜா சைக்கிள் கடை
நேரம் : காலை 11.30

கவுண்டர் : டேய் கருவாட்டு தலையா... என்னடா கடையே பாதி காலியா இருக்கு...எல்லா சைக்கிளும் எங்கடா?

செந்தில் : எல்லா சைக்கிளும் வாடகைக்கு போயிருச்சிண்ணே....
கவுண்டர் : இந்த ஊர் காரனுக சைக்கிள்ல எல்லாம் சுத்த மாட்டானுகளே... எல்லாம் கஞ்ச பயலுகளாச்சேடா..அவனுக எப்புடி இப்புடியெல்லாம்?

செந்தில் : அதெல்லாம் ஒரு தொழில் ரகசியம்ண்ணே..

கவுண்டர் : ஹய்யோ... எனக்கு சந்தோசமா இருக்கு... Blackberry செல்லம் நா உன்ன இவளோ நாளா தப்பா நெனச்சிட்டேண்டா.... நீ இவளோ நல்லா கடைய பாத்துக்குவன்னு தெரிஞ்சா நா உன்ன அடிச்சிருக்கவே மாட்டேன்... ஆமா டீ சாப்புடுரியா செல்லம்?

செந்தில் : இல்லண்ணே... அதெல்லாம் வேணாம்னே...

கவுண்டர் : இல்ல குட்டிம்மா... நீ எதாவது சாப்டே ஆகனும்... ஆமா... அப்புடி நீ என்ன பன்ன?

செந்தில் : அது ஒன்னும் இல்லண்ணே... "தமிழர்களே.. தமிழர்களே... நீங்கள் எங்க கம்பெனி சைக்கிளை குளத்தில் தூக்கி போட்டாலும் அது கட்டுமரமாகத்தான் மிதக்கும்.. அதில் ஏறி நீங்கள் சவாரி செய்யலாம்" ன்னு கலைஞர் பாணில ஒரு board எழுதி போட்டேண்ணே... எல்லா பயலுகலும் ஒடனே வந்து சைக்கிள் எடுத்துட்டு பொய்ட்டாய்ங்கண்ணே...காசு கூட வண்டிய விடும் போது குடுத்தா போதும்ன்னு சொல்லிட்டேண்ணே...

கவுண்டர் : அடப்பாவி... இந்த ஊர்காரனுக ரொம்ம மோசமானவனுங்கடா... உண்மயிலயே சைக்கிள கொளத்துல தோக்கி போட்டாலும்
போட்டுருவானுங்கடா... அடேய்... வால் டியூப் வாயா... உனக்கு எப்புடா இப்புடியெல்லாம் தோணுது?

செந்தில் : அதுக்கெல்லாம் கிட்னி வேனும்னே.. அப்பறம் அந்த டீ சொல்ரேன்னு சொன்னீங்களே... சொல்றீங்களா?

கவுண்டர் : உள்ள வா... போர்ன்வீட்டாவே தர்ரேன்........

(கதவு சாத்தப்படுகிறது)

அரை மணி நேரத்துக்கு பிறகு..

கவுண்டர் : வக்காளி இனிமே இதுமாதிரி எதாவது ஐடியா உனக்கு வந்துச்சி...மண்டையில நாலே முடி விட்டு வெட்டிப்புடுவேன்...படுவா..இந்த கடைக்கு எவன் வேலைக்கு வந்தாலும் ஒரு வாரத்துக்கு மேல இருக்க மாட்டேங்ரானு நானே ஒரு டென்ஷன்ல இருக்கேன்.

செந்தில் : ஒழுங்கா சம்பளம் குடுத்தா ஏன் எல்லாம் போரானுக... உங்க டென்ஷன போக்கத்தான் இன்னிக்கு இன்னும் ரெண்டு பேர கூப்டு வந்துருக்கேன்.

கவுண்டர் : டேய்... முன்னாடி வந்தவனுக மாதிரி சொதப்ப மாட்டனுகளே...

செந்தில் : இல்லண்ணே.. கண்டிப்பா சொதப்பாது... ஏன்பா இங்க வா..

சிம்பு வர்றாரு...

கவுண்டர் : அப்பறம்... தம்பி பேர் என்ன?

சிம்பு : என் தம்பி பேரு குரளரசன் சார்..

கவுண்டர் : டேய்..Jerry mouse வாயா... என்ன டகால்டியா? நா உன் பேர் என்னன்னு கேட்டேன்டா....

சிம்பு : என் பேரு சிலம்பரசன்.. சுருக்கமா சிம்புன்னு கூப்புடுவாங்க..

கவுண்டர் : அதெப்புடி சிலம்பரசன சுருக்குனா சிம்புன்னு வருது.... அதுக்கு பதிலா சிம்பன்சி ன்னு வச்சிக்க,.. கரக்டா இருக்கும்.

சிம்பு : சார்.. மரியாதையா பேசுங்க.. நீங்க இந்த மாதிரி பேசுறது எங்கப்பாவுக்கு தெரிஞ்சிது... சும்மாருக்க மாட்டாரு ஆமா..

கவுண்டர் : ஏன் சொரி செரங்கோட இருப்பானா? அப்புடியே பின்னாடி அந்த சைக்கிள தொடைக்கிறது யாருன்னு பாரு?

சிம்பு : சார்.. நா கூட உங்கள என்னமோன்னு நெனச்சிட்டேன் சார்... கரடிய வச்செல்லாம் வேல வாங்குரீங்க.. பெரிய ஆளு சார் நீங்க..ஆமா... ஏன் சார் அது வாயில பிளாஸ்திரி போட்டு ஒட்டிருக்கீங்க?

கவுண்டர் : டேய்... ஹெட் லைட் கண்ணா... நல்லா பாருடா.. அதான்டா உன்கொப்பன். ரெண்டடி தூரத்துல நின்னா அப்பாவயே அடையாளம் தெரியலயா உனக்கு? போனா போகுதேன்னு அவன வேலைக்கு சேத்தா, வந்ததுலருந்து, "சைக்கிள்ல இருக்கது ரிம்மு, நா நைட்டுல அடிக்கிறது ரம்மு, தமன்னா ரொம்ப ஸ்லிம்மு" ன்னு ஒரே அடுக்குமொழிலயே பேசிக்கிட்டு இருந்தான். அதான் வாயில ப்ளாஸ்திரிய போட்டு விட்டுட்டேன். உங்கப்பன் ஒருதனையே என்னால சமாளிக்க முடியல... உனக்கு இங்க வேல கெடயாது... அப்புடியே எந்திரிச்சி
ஓடிப்போயிரு..

சிம்பு : நா அழுகுறேன் சார்...

கவுண்டர் : டேய்... மங்கூஸ் மண்டையா.. நீ எந்தெந்த வேலைக்கு முழிய எப்புடி டைப் டைப்பா மாத்துவன்னு தெரியும்டி... இது ஒன்னும் டிவி நிகழ்ச்சி இல்ல. எனக்கு வெறி வர்ரதுகுள்ள ஓடிப்போயிரு.. டேய் அழகேசா அடுத்தவன் யார்டா?...

செந்தில் : அண்ணே.. இவருதாண்ணே எஸ்.ஜே.சூர்யா..

கவுண்டர் : என்ன எச்சக்கல சூர்யாவா?

செந்தில் : அய்யோ இல்லண்ணே... s.j.சூர்யா..

கவுண்டர் : ஒ.... சரி.. உன்ன பத்தி கொஞ்ஜம் சொல்லு..

S.J.சூர்யா: எத சார் சொல்ல சொல்ரீங்க... நா சின்ன வயசுல பெட்ல ஒண்ணுக்கு அடிச்சி வச்சப்ப எங்கம்மா அத பாத்து ஏண்டா ஏழு கழுதை வயசாகுது இன்னும் பெட்ல ஒண்ணுக்கு அடிச்சி வக்கிரியேன்னு என்ன பாதி தூக்கத்துல அழ அழ தர தர ன்னு பாத் ரூமுக்கு இழுத்துட்டு போவாங்களே... u want me to tell u abt thaaaaaaaaat....... எங்க பெரிய அண்ணன் birthday ku பைக் வாங்கி குடுத்தப்ப நானும் பைக் வேனும்னு எங்க அப்பாட்ட கேட்டு அழுதப்ப அந்த வழியா வந்த எங்கம்மா இவன் ஏன் அழுகுரான்னு கேட்டப்ப இவனுக்கும் பைக் வேணுமாம்னு எங்கப்பா சொன்னப்ப, இந்த வயசுலயே உனக்கு எதுக்குடா பைக்கு ன்னு என்ன எங்க
அம்மா என்ன போட்டு அடி அடின்னு அடிச்சப்ப.. எல்லாரும் சந்தோஷமா இருக்கும் போது நா மட்டும் அழுதுக்கிட்டு இருந்தானே u want me to tell u abt thaaaaaaaaaaaaaaaaaaat.....

கவுண்டர் : அடங்கப்பா.. suchitra வாயா... ஒட்டுனது போதும்டா... ரீலு அந்து போச்சி.. நீ பேச ஆரம்பிச்சா நிருத்தவே மாட்டியா? இனிமே உனக்கு no more questions.. straight ah appoinment தான். u r selected. போய் வேலய பாரு.

S.J.சூர்யா : தேங்க் யூ சார்...ஆனா ஒரு கண்டிஷன்

கவுண்டர் : ஓ... இது வேறயா? என்ன கண்டிஷன்?

S.J.சூர்யா : லேடீஸ் staffs யாராவது இருந்தாதான் நா வேலை செய்வேன்.. ஆமா இங்க எத்தன லேடீஸ் staffs இருக்காங்க?

கவுண்டர் : ஆமா.. இது tata consultancy.. முன்னூறு gents staffs ah யும் 250 லேடீஸ் staffs ah யும் வச்சி நா வேல வாங்கிகிட்டுருக்கேன்.. காலையில கடைய கூட்டுறதுக்கு 80 வயசுல பல்லுபோன கெழவி ஒன்னு வரும். அதான் இங்க உள்ள ஒரே லேடி staff.
S.J.சூர்யா : ஒகே. அது போதும்.. நா இன்னிக்கே டூட்டில join பன்றேன்..

கவுண்டர் : அடப்பாவி... அந்த கெழவியயும் நீ விட மாட்டியா.. எப்புடியோ ஒழிஞ்சி போ நாயே..

செந்தில் : இந்தாங்கண்ணே..

கவுண்டர் : என்னடா லெட்டர் இது?

செந்தில் : என்னுடைய ராஜினாமா கடிதம்

கவுண்டர் : இருக்குற வேலைய ராஜினாமா பண்ணிட்டு சோத்துக்கு என்ன நாயே பண்ணுவ?

செந்தில் : எதுத்தாப்புல இருக்க ராசியப்பன் சைக்கிள் கடையில சேரப்போரேன்.. அங்க உங்கள விட ரெண்டு ரூவா அதிகமா தர்றதா சொல்லிருகாங்க..

கவுண்டர் : ஆமா... இவரு Microsoft லருந்து resign பன்னிட்டு Apple computers ல சேர போராரு... இனிமே என் கண்ணு முன்னாடியே நிக்காம ஓடிப்போயிரு..

செந்தில் : கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு...

கவுண்டர் : அது கற்றவங்களுக்கு.. உனக்கு எங்க போனாலும் செருப்பு தான்... 12B தலையா....

Friday, July 23, 2010

அழகுராஜா சைக்கிள் கடை


Share/Bookmark
குறிப்பு: இந்த பதிப்பில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே.... யார் மனதையும் புண்படுத்துவத்ற்காக அல்ல....
இடம் : ஆல் இன்
ஆல் அழகுராஜா சைக்கிள் கடை

கவுண்டர் : இங்கே வந்திருக்கின்ற ஆல் ஆம்பளைஸ் அண்டு பொம்பளைஸ்.... இந்தியாவுலயே.... ஏன் இந்த world லயே சைக்கிள் கடைக்கு interview வச்சி ஆள் எடுக்குறது ஒரே கடையில தான்.. அது நம்ம கடையில தான்... டேய் பேரிக்கா மண்டையா... இன்னிக்கு எத்தனை பேருடா வந்துருக்காய்ங்க..

செந்தில் : ஒரு நாலு பேரு வந்துருக்காய்ங்கண்ணே...

கவுண்டர் : சரி அவனுகள ஒருத்தன் ஒருத்தனா அனுப்பு..

முதல்ல வர்றது நம்ம இளைய தளபதி விஜய்... போக்கிரி ஸ்டைலுல chair ah நாலு சுத்து சுத்திட்டு உக்காருராறு.

கவுண்டர் : அய்யா என்ன பண்ணீங்க...
விஜய் : ஸ்டைலு....
கவுண்டர் : ஓ....... இதுக்கு பேருதான் ஸ்டைலா... இப்புடித்தான் ஊருக்குள்ள
நெறைய பயலுக இந்த plastic chair ah தூக்கி சுத்துறது, இந்த காலர்க்குள்ள சிகரட்ட வச்சி வாயால கவ்விஇழுக்குறது, கர்ச்சீப்ப தொடையில கட்டுறது இதயெல்லாம் ஸ்டைலுன்னு சொல்லிக்கிட்டு திரியிறானுக....ஆமா உன் பேரு
என்ன?

விஜய் : தமிழ்நாட்டுல என்ன பாத்து பேர் என்னனு கேட்ட மொத ஆள் நீ தான்....

கவுண்டர் : ஏன் மத்தவங்க எல்லாம் உன்ன பாக்காம தலைய குனிஞ்சிகிட்டு பேருஎன்னன்னு கேட்டாங்களா? பேர சொல்றா நாயே...

விஜய் : என் பேரு டாக்டர் விஜய்..
கவுண்டர் : ஓஓஓஒ....... அய்யா என்ன படிச்சிருக்கீங்க?...

விஜய் ; பத்தாவது பெயிலு.....

கவுண்டர் : பண்ணாட பயலே.... பஞ்சர் ஒட்ட வந்த நாயிக்கு பேச்ச பாரு.. என்ன வேல தெரியும் ஒனக்கு...

விஜய் : நா நல்லா பன்ச் லயலாக் பேசுவேங்கண்ணா.. கேக்குரீங்களா... "நா
அடிச்சா அடி விழாது.. இடி விழும்"

கவுண்டர் : இந்தா பக்கத்துல நிக்கிறானே கீரிப்புள்ள தலையன்... இவன்
கடிச்சான்னா கடி விழாது.... ஒரு கிலோ கறிய எடுத்துருவான்...

செந்தில் : வொவ்..... வவ்வவ்.....

கவுண்டர் : பாத்தியா.... ஒழுங்கா போயி அந்த ரிம்ம தொடை.... இந்த மாதிரி
வசனமெல்லாம் இதுவே கடைசி தடவையா இருக்கனும்...

விஜய் : ஏய்....நீ தொடச்சா தூசு.. நா தொடச்சா மாஸ்சு...

கவுண்டர் : வக்காளி....வந்தன்னா எட்டி குறுக்கு மேலயே மிதிச்சிபுடுவேன்...
பல்சர் தலையா... ஒழுங்கா தொடைடா.... டேய்.... என்ன பார்டி கூட்டிட்டு வந்துருக்க நீ.... இவனுகளால என் சைக்கிள் கடை பேரே கெட்டுரும் போலருக்கு,,,,,

செந்தில் : கோச்சிக்காதீங்கண்ணே... அடுத்த பார்டி நல்ல ஆளா மாட்டுவான்....அந்தா வர்றாரு பாருங்க.

கவுண்டர் : யாருடா இவன்... சைக்கிள் கடை வேலைக்கு கோட் சூட், கண்ணாடி எல்லாம் போட்டுக்கிட்டு வர்ரான்...

செந்தில் : அவருதாண்ணே அஜித்.... அவரு எப்பவுமெ அப்புடித்தாண்ணே.... எங்க போனாலும் இந்த கெட் அப்புல தான் போவாரு..

(அஜித் வர்ராறு)

கவுண்டர் : சார்... உக்காருங்க சார்...யார் சார் நீங்க?

அஜித் : 100 கோடி பேர்ல ஒரு ஆள்.. 6 கோடி பேர்ல மொத ஆள்....

கவுண்டர் : டேய் ஸ்ப்ரிங் மண்டையா... 6 வருசத்துக்கு முன்னாடி எழுதுன வசனத்த இன்னும் புள்ளி விவரம் கூட மாறாம அப்புடியே பேசிக்கிட்டு திரியிரியா? இப்ப இந்தியாவோட ஜனத்தொகை என்னன்னு தெரியுமாடா? 100 கோடி 120 கோடியாவும் 6 கோடி 10 கோடியாவும் ஆயி பல மாசம் ஆயிருச்சி.... இப்ப என்ன ஜனத்தொகைன்னு யாருக்குமே தெரியாது... இன்னொருக்கா இந்த வசனத்த எங்கயாச்சும் பேசி கேட்டேன்...நாக்க இழுத்து வச்சி கடிச்சிபுடுவேன்... ஆமா எங்க வந்த?

அஜித் : அண்ணே எதாவது வேல இருந்தா போட்டு குடுங்கண்ணே...

கவுண்டர் : ஓ....வேலையா? அந்த தெரு மொனையில ஒரு ரெண்டு மாடி கட்டடம் இருக்குல்ல... அதுல ஒரு bank வச்சி தர்ரேன்... அத வச்சி நீ பொழச்சிக்க..

அஜித் ; ரொம்ப நன்றிண்ணே!!!

கவுண்டர்: (Hi-pitch) நான்சென்ஸ்... இது என்ன employment exchange nu
நெனச்சியா.... எதாவது வேல போட்டு குடுக்குறத்துக்கு... மேல படிச்சி
பார்... "ஆல் இன் ஆல் அழகுராஜா" சைக்கிள் கடை"... இங்க சைக்கிள் வேல மட்டும் தான் குடுக்க முடியும்....பன்சர் ஒட்ட தெரியுமா?

அஜித் : ஒரளவு தெரியும்ண்ணே...

கவுண்டர் : ஒரளவுன்னா... பாதி ஒட்டி பாதி ஒட்டாம குடுத்துடுவியா? போய் அந்த சைக்கிள் வீலுக்கு பஞ்சர் ஒட்டு போ...

அஜித் : அண்ணே...கார் ன்னா எனக்கு ரொம்ப புடிக்கும்ணே... அதுனால மொத
மொதலா எதாது கார் டயர குடுத்தீங்கன்னா.......

கவுண்டர் : (அஜித் பின்னந்தலைய புடிச்சி) டேய்...McLaren தலையா.. கார் டயர் பஞ்சர் ஒட்டுவதற்கு இது மூஞ்சி அல்ல..இது சைக்கிள் டயர் பஞ்சர் ஒட்டத்தான் லாயக்கு.....போ..

அஜித் : ஏய்......அது...................(punch)

கவுண்டர் : ஓ... அதுவா... கக்கூஸ் பின்னாடி இருக்கு...நல்லா சுத்தமா பொயிட்டு வந்து வேலய ஆரம்பி...ஏன் கடையில இருக்கவங்க சுத்தமா இருக்கனும்.. அதான் முக்கியம்... அப்புறம் அங்க தண்ணி லாரி தலையன் வீல் தொடச்சிக்கிட்டு இருப்பான்... அவன் வேல செய்யலன்னா...

அஜித : உங்ககிட்ட சொல்லட்டுமாண்ணே?

கவுண்டர் : வேணாம்... நீ கொஞ்ச நேரம் அவன்கிட்ட பேசு... உன் தொல்லை தாங்க முடியாம அவனே வேல செய்ய ஆரம்பிச்சிடுவான்...ச்ச இவனுகளோட ஒரே குஸ்டமப்பா.....

செந்தில் : அப்புறம் அண்ணே.... ரெண்டு பேர வெற்றிகரமா வேலைக்கு
சேத்துட்டீங்க.... ஏன் கமிஷன வெட்டுரீங்களா...

கவுண்டர் : ஆமா...இவரு IBM la ரெண்டு software இஞ்ஜினியர refer பண்ணி வேலைக்கு சேத்துருக்காரு... கமிஷன் வேனுமாம்... இந்தா நாயே ரெண்டு ரூவா நாப்பது காசு... இதான் உன் கமிஷன்... எடுத்துட்டு போயி பொறை வாங்கி சாப்புடு... மசால் வடை தலையா....

Sunday, July 4, 2010

மானாட... மங்காத்தா ஆட....


Share/Bookmark
"ஆயி மச்சா... எப்புடி இருக்கி....
நா நல்லா இருக்கி....
டான்ஸ் நல்லா இருக்கி..
பால் இருக்கி.. பலம் இருக்கி..."

ஹலோ... ஹலோ.... இது தமிழ்தாங்க... வேற எதோ மொழில எழுதிருக்கேன்னு நெனச்சி page ah close பண்ணிட்டு வேலைய பாக்க ஆரம்பிச்சிடாதீங்க... என்னடா இவன் இருக்கி.. வருக்கின்னு ஆரம்பிச்சிட்டானேன்னு பாக்குரீங்களா? தமிழ்தான் எங்கள் மூச்சி.. தமிழ்தான் எங்கள் பேச்சி...தமிழ்தான் எங்கள் வாட்ச்சின்னு சொல்லிக்கிட்டு இருக்க ஒரு டிவில வர்ர ஒரு நிகழ்ச்சியோட judge பேசுறதுதாங்க இதெல்லாம்...

அட இதுல மறைக்கிரதுக்கு என்ன இருக்கு.... கலைஞர் டிவில ஞாயித்துகிழமை ஆனா சாயங்காலம் 6 மணிக்கு ஆரம்பிச்சி நைட்டு 12 மணி வரைக்கும் ஒரு program போடுவாயிங்களே... அதுல நம்ம நமீதாக்கா பேசுற தமிழ்தான் இதெல்லாம். எந்த Programoda பேருலயும் ஆங்கிலமே வரக்கூடாதுன்னு "பட வரிசை பத்து.. சீர் வரிசை பதினஞ்சி "ன்னு எல்லாம் பேரு வச்சிருக்காங்க.. பேரு மட்டும் வச்சா போதுமா... கொஞம் தமிழ் பேச தெரிஞ்ச ஜட்ஜுங்கள போட்டுருந்தா இன்னும் கொஞ்சம் matching ah இருந்துருக்கும்.


இந்த நிகழ்ச்சில judge ஆகனும்னா ரெண்டு முக்கியமான rules இருக்கு.. ஒன்னு அவங்களோட எடை 125 கிலோவ விட அதிகமா இருக்கனும். ஏன்னு கேக்குரீங்களா... செட்டுல எதாவது பள்ளம் மேடு இருந்தா ஜட்ஜ அங்க ஆட விட்டு சரி பண்ணிக்குவாங்க). இன்னொன்னு அவங்களுக்கு டமில் கொஞ்ஜம் கொஞ்ஜம் தான் தெரியனும்..ஏன்னா அப்பதான் program ஹைடெக்கா இருக்கும்

இந்த நிகழ்ச்சிய பொறுத்த வரைக்கும் ரொம்ப பாவப்பட்ட ஜீவன் யாருன்னா அது camera man தான்.. ஏன்னா அந்த மூணு ஜட்ஜயும் அவரால ஒண்ணா screen la காமிக்கவே முடியாது... குஷ்பூவ காமிச்சா நமீதா மறைஞ்சிடும்... நமீதாவ காமிச்சா குஷ்பூ மறைஞ்சிடும்.. ஏன்னா நம்ம வீட்டுல எல்லாம் இருக்குறது என்னவோ 21 இஞ்ச் டிவி தான். இதுங்கல்லாம் 70mm screen லயே பாதிதான் தெரியுங்க..

இதுகூட பரவால்ல... திடீர்னு என்னிக்காவது ஒரு நாள் "special performance" ன்னு ஒண்ணு போட்டு... "எலே மாஸ்டர் வர்றாருலே...எலே மாஸ்டர் வர்றாருலேம்பாயிங்க"... யாருடா அதுன்னு பாத்தா..... நெல்லு கொட்டி வைக்கிற குருது மாதிரி எதோ ஓன்னு வந்து ஆடிக்கிட்டிருக்கும்.. யார்டா இந்த syntax டேங்குன்னு பாத்தா.. டான்ஸ் மாஸ்டர் கலா....இதுக்குதான் இந்த build up ah...
அட தண்ணி வைங்கப்பா..


ஆனா இந்த program la ஜட்ஜ் எல்லாம் ரொம்ப.. strictu... strictu... strictu... (echo) ஒழுங்கா ஆடுனாதான் six marks. ஒழுங்கா ஆடல...அவங்களுக்கு ஆறு மார்க் தான்.

Excellent, Mind blowing, Fantastic, Super... இந்த வார்த்தைங்கள எல்லாம் அத கண்டுபுடிச்சவங்கல விட இவுங்கதான் அதிகமா use பண்றாயிங்க..ஓரு program ah அரை மணி நேரம் போடலாம்... ஒரு மணி நேரம் போடலாம்... மூணு மணி நேரம் இத போடுராயிங்கய்யா... show முடியிரதுக்குகொஞ்சம் முன்னாடி

" இந்த ஷோவுல இந்த வாரம் eliminate ஆக போறது யார்னு தெரியுமா?.. Keep Guessing.. அதுக்கு முன்னாடி ஒரு shortcommercial break" ன்னு சொல்லிட்டு ஒரு 20 நிமிஷம் விளம்பரத்துக்கு அப்பறம் வருவாயிங்க..

"என்ன எல்லாரும் ரொம்ப ஆவ்லா இருக்கீங்களா?"

கிழிச்சாங்க... சொல்லி தொலைங்கடா.. அப்பதான் வீட்டுல டிவிய off பண்ணுவாங்க... தூக்கம் வருது...

"அத நம்ம judges டயே கேப்போம்..சொல்லுங்க judges.. யார் யாரு இந்த வாரம் eliminate ஆக போராங்க?"

உடனே அவுங்க "எங்களுக்கே அத சொல்ல கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு.. but வேற வழி இல்ல." ன்னு இது மாதிரி எக்க சக்க build up அஹ குடுப்பாயிங்க.. Contestants எல்லாம் ரொம்ப டென்ஷனா இருப்பாங்க.... கடைசியா

" இந்த வாரம் எல்லாரும் சூப்பரா ஆடுனதுனால யாருமே eliminate ஆகல" ன்னு ஒரு அறுமையான தீர்ப்ப சொல்லி முடிச்சிடுவாயிங்க.. அட திரும்பவும் மொதல்ல இருந்தா...

"அப்பாடா நல்ல வேளை.. இந்த வாரமும் யாரும் வெளிய போகல... நா வேற பயந்துட்டேன்" ன்னு சொல்லிகிட்டு எங்கம்மா டிவிய off பண்ணிச்சி.

என்னது இந்த வாரமுமா? அப்ப எப்பவுமே இப்புடித்தானா.. அட வெக்கங்கெட்டவியிங்களா.. இந்த program ku எதுக்குடா மூணு judge? நீங்க அப்புடியே வந்து ஆடிட்டு போகலாமேடா...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...