Monday, April 13, 2009

OPEN DAY- AFTER 6 P.M


Share/Bookmark


குறிப்பு: இந்த பதிப்பு இதற்கு முந்தய பதிப்பின் தொடர்ச்சியே.

மணி 5.30 தொட்டது. SYMPOSIUM நிறைவு பகுதியில் இருந்தது.
இருபுறமும் இரண்டு இறுதியாண்டு மாணவர்கள் நடுவில் நான் ஒரு பனைய கைதி போல. காலையில் எனக்குள் இருந்த அந்த தைரியம் இப்போது குறைந்து, "அய்யய்யோ! இன்னிக்கு என்னல்லாம் பண்ண போரனுன்களோ" என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

சீட்டிலிருந்து எழ முயன்றேன். உடனே அருகில் இருந்தவன் "எங்க சார்போறீங்க?" என்றான்.
"
பிஸ் அடிச்சிட்டு வந்துடுறேண்ணே!!" என்றேன்.

"
அட 6 மணிக்கு மேல அது தானா வந்துடும் சார் . நீங்க உக்காருங்க" என்றான்.

இல்லண்ணே! ரொம்ப அவசரம் னே! போயிட்டு இப்ப வந்துடுறேன் "

"
மவனே! போயிட்டு 5 நிமிஷத்துல வரணும். இல்ல சாவடிச்சுடுவேன்" என்றான் இன்னொருவன்.

"
அண்ணே ! மனுஷன நம்புங்கன்னே! நம்பிக்கைதான் வாழ்க்கை! எப்புடி திரும்பி வர்றேன்னு மட்டும் பாருங்கண்ணே !" என்று சொல்லி விட்டு வெளியில் வந்தேன். உடனே எங்கள் பள்ளியில் நான் ஓட்டபந்தயத்தில் இரண்டாவதாக வந்தது ஞாபகம் வந்தது. விடு ஜூட். அங்க பிடித்த ஓட்டம் ஹாஸ்டல் உள்ளே சென்றவுடன் தான் நின்றது.

அப்பாடா ..... எஸ் ஆய்ட்டோம். 7 மணி வரைக்கும் எவன் கண்ணுலையும்படக்கூடாதுடா சாமி என்று நினைத்துக்கொண்டே என் நண்பனின் அறையை நோக்கி சென்றேன். அது கடைசி அறை. அங்கே சென்றால்தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணி சென்றுகொண்டிருந்தேன். வழியில் ஒருவன் நின்றிருந்தான்.

"
மச்சி யார் வந்து என்ன பத்தி கேட்டலும், என்ன பாத்தே நாலு நாள் ஆயிடுச்சின்னு சொல்லிடு. இங்க இருக்கேன்னு மட்டும் சொல்லிடாத" என்றேன். "சரிடா".... என்று அவன் தலையை ஆட்டியதும், நானும் நம்பி அந்த ரூமுக்கு போனேன்.

அந்த அறையில் யாரும் இல்லை. மின் விளக்குகளை அனைத்து விட்டு கதவை உள் பக்கமாக தாழிட்டு விட்டு ஜன்னல் ஓரமாக இருந்த மூலையில் சென்று அமர்ந்துகொண்டேன். ஒரு இருபத்து நிமிடங்கள் சென்றன.... வெளியில் யாரோ பேசிக்கொள்ளும் சத்தம். இது எங்கயோ கேட்ட குரல். "ஆஹா இது அவன் இல்ல"....காலையில் என்னிடம் அடிபட்ட அப்பாவி என்னை பற்றி யாரிடமோ விசாரித்துக்கொண்டிருந்தன்.

சிறிது நேரத்தில் நான் இருந்த அறையில் கதவு தட்டப்படும் சத்தம். "சார்! நீங்க உள்ள தான் இருக்கிங்கன்னு அவன் சொல்லிட்டன். மரியாதையாநீங்களே வந்துடுங்க........ இல்லன்னா " என்றபடி ஜன்னலை திறந்து அவன்கையை உள்ளே விட்டு கதவின் தாழ்ப்பாளை விடுவித்தான். கதவை திறந்து உள்ளே வந்த அவன் சுற்றும் முற்றும் தேடினான்.

"
சார் இங்கதான் இருக்கிங்களா... உங்களைத்தான் தேடிகிட்டிருக்கேன். இந்த மூலையில உக்காந்து என்ன சார் பண்ணுறீங்க?"

"
இல்லண்ணே நீங்க என்ன கண்டுபுடிக்கிரீங்கலான்னு டெஸ்ட் பண்ணேன் . நீங்க கரெக்டா கண்டுபுடிச்சிட்டீங்க" என்றேன். "சரி வா நம்ம ஏரியாவுக்கு போவோம்" என்று என் பின் கழுத்தில் கையை வைத்து தள்ளிக்கொண்டு போனான். வழியில் என்னை காட்டிக்கொடுத்த அந்த துரோகி நின்று கொண்டிருந்தான்.

"
என்ன மச்சி இப்புடி பண்ணிட்ட? " என்றேன். "இல்லடா.... சும்மா ஜாலிக்கு " என்றான்.
"
என்னது ஜாலிக்கா..... இவனுங்க என் சோலிய முடிச்சிடுவானுங்கலேடா.... டேய் எட்டப்பா! உனக்கு அடிக்கிறேண்டா ஒருநாள் பெரிய ஆப்பா! "
என நான் கடுப்பாக அவன் அதை கண்டுகொள்ளாமல் சென்று விட்டான்.

"
சார் அத அப்புறம் பாத்துக்கலாம்... நீங்க வாங்க... நாம போவோம்" என்றபடி இறுதியாண்டு விடுதியை நோக்கி தள்ளிக்கொண்டு போனான். "டேய் சும்மா வராம எதாவது பாட்டு பாடுடா.... " என்றான்.

"
என்ன பாட்டுண்ணே பாட?" என்றேன்.

"
எதாவது பாடுடா..."

"
வந்தேன்டா பால்காரன்... அடடா...
பசு மாட்ட பத்தி பாட போறேன் " என நான் பாட

"
அடி செருப்பால .....நாயே..... யார பாத்து 'டா' ங்குற .... வந்தேன் சார் னு பாடுடா.... " என்றான்.

"
வந்தேன் சார் பால்காரன் சார் அட சார்
பசு மாட்ட பத்தி பாட போறேங்க சார்
புல்லு குடுத்தா சார் பால் குடுக்கும் சார் உங்களால முடியாது சார் "


"
புல்லு குடுத்தா பால் குடுக்குமா? சரி அந்த புல் ல புடுங்கு " என்றான். கீழே இருந்து கொஞ்சம் புல்லை பிடுங்கினேன் .
"
அந்த மாட்டுக்கு குடுத்து பால கற" என்றான்.

"
அண்ணே! மாடு எங்கண்ணே?"

"
அங்க மாடு இருக்கிறது மாதிரி நெனச்சிகிட்டு கறடா" என வெற்றிடத்தை காண்பித்து சொன்னான்.

நானும் சிறிது நேரம் நானும் மாட்டிற்கு புல் தருவது போல் செய்கை செய்துவிட்டு "அண்ணே இந்த மாடு புல்ல திங்கமாட்டேங்குதுண்ணே " என்றேன்.

டேய்! உன் மூஞ்ச ஏன்டா அதுக்கு பக்கத்துல கொண்டு போற.... அதான் மாடு வெறிக்குது.... ம்ஹூம் ... நீ இதுக்கு சரிப்பட்டு வரமாட்ட ..

உனக்காக நெறைய பேர் வெயிட்டிங் ல இருக்காங்க.....வா போலாம்... என
என்று என்னை ஒரு இறுதியாண்டு விடுதி அறைக்குள் அழைத்துசென்றான். கதவு தாழிடப்பட்டது. உள்ளே ஐந்து பேர். அப்போது மணி ஏழு. பத்து மணி வரை அவர்களால் முடிந்த வரை பழி தீர்த்துக்கொண்டனர். அதன் பின்னர் அவர்களில் ஒருவன்

"
டேய் விடுங்கடா பாவம் அவன்" என்றான்.

"
அப்படா.... தெய்வம்ணே நீங்க...."என்று நான் கூறி முடிப்பதற்குள்

"
இன்னிக்கு போதும்... போயிட்டு நாளைக்கு வா..." என்றன்.

"
என்னது நாளைக்குமா?............."

Saturday, April 11, 2009

OPEN DAY - ALL DAY JOLLY DAY


Share/Bookmark
இன்னும் ரெண்டு மாசத்துல பொறியியல் இரண்டாம் ஆண்டு முடிய போகுது. அன்னிக்கு எங்க காலேஜல் Open day.. "ஓபன் டே" னோன ஓப்பனா திரியிவாய்ங்க போலருக்குன்னு தப்பா நெனச்சிடாதீங்க.. அன்னிக்கு மட்டும் ஜூனியர்ஸ் சீனியர்ஸ ராகிங் பண்ணிக்கலாம். அதுவும் காலைல ஆறு மணிக்கு ஆரம்பிச்சி சாயங்காலம் ஆறு மணிக்குள்ள தான். அதுக்கு மேல அவிங்க வேலய காட்ட ஆரம்பிச்சிருவாய்ங்க. வேற எந்த கல்லூரிலையும் இந்த பழக்கம் இருக்குமா தெரில.  So, ரிஸ்க் எடுக்குற தெல்லாம நமக்கு ரஸ்க் சப்புடுற மாதிரின்னு நெனைக்கிறவிங்களுக்கு தான் இந்த ஓபன் டே.

அன்னிக்குன்னு பாத்து எங்க டிபார்ட்மெண்ட் symposium வேற. காலைல 9 மணிக்கெல்லாம் நானும் என் நண்பனும் ஆடிடோரியத்துல attendance போட்டுட்டோம். First year லருந்து final year வரைக்கும் அத்தனை பேரும் ஆஜர் அங்க. பொண்ணுங்க எல்லாம் சேலை கட்டிக்கிட்டு குடும்ப பாங்கினிகளா காட்சி தந்தாங்க. ஹையோ ஆல் யங் கேர்ள்ஸ் னு லைட்டா ஜொள்ள
விட்டுட்டு நமக்கு புடிச்ச கடைசி வரிசைல போய் உக்காந்தோம்.

எப்பவுமே காலேஜ்ல நமக்கு immediate seniors கூடவும் immediate juniors கூடவும் எப்பவும் ப்ரச்சனையாதான் இருக்கும். ஏற்கனவே 3rd year kum எங்களுக்கும் வாய்க்கா தகறாரு வேற. அவிங்க கூட அதிகம் வச்சிக்கறதில்லை. so final year பசங்களையே புடிப்போம்னு நெனச்சி கிட்டு இருந்தா அதுக்கேத்த மாதிரி ரெண்டு final year பசங்க சிரிச்சிகிட்டே வந்து "குட் மார்னிங் சார்" ன்னாய்ங்க.

உடனே "என்ன மூதேவி இங்க வந்து பல்ல காட்டிக்கிட்டு நிக்கிற.. போய் வேலைய பாரு" ன்னதும் அதே சிரிப்போட கெளம்பிட்டாங்க. (நா இந்த டயலாக்க சொன்னதுக்கும் ஒரு காரணம் இருக்கு. நா 1st year படிக்கும் போது என்ன பாத்து ஒருத்தரு இப்புடி தான் சொன்னாரு)

கொஞ்ச நேரத்துல இன்னொரு final year பையன் வந்து எங்க முன் வரிசைல உக்காந்தான்.
"டேய் அண்ணன் உக்காந்துருக்கேன்... வணக்கம் சொல்லாம போற,.. உயிர் மேல ஆசை இல்லையா" ன்னதும்

"சாரி சார்... கவனிக்கல.. குட் மார்னிங்க் சார்" ன்னான்

"சாரி எனக்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை.. தண்டனைகள் கடுமையானாதான் குற்றங்கள் குறையும். நீ இப்ப என்ன பன்ற அந்தா ரிசப்ஷன்ல ஒரு பாப்பா மல்லிகை பூ வச்சிட்டு உக்காந்துருக்குள்ள.. அதுகிட்ட போயி அதுக்கே தெரியாம அது தலைலருந்து  ஒரு மல்லிகை பூவ அப்புடியே கவ்விகிட்டு வர்ற.. இதான் உனக்கு தண்டனை" ன்னதும் அவன் எதுவும் சொல்லாம ஆப்ரேஷன்ல எறங்கிட்டான்.

இவன் மெதுவா பம்பிகிட்டே போய் அந்த புள்ளை தலையில உள்ள மல்லிகை பூவுல கைய வைக்க அந்த புள்ளை பாத்துருச்சி. "ஹலோ என்ன பண்ணுறீங்க" ன்னு லைட்ட கோவத்துல கேக்க இவன் மின்னல் வேகத்துல என்னை கைகாமிச்சி "அதோ அந்த சாருதான் எடுத்துட்டு வர சொன்னாரு" ன்னுட்டான்.

உடனேஅந்த புள்ளை என்னை முறைக்க "மச்சி டெக்கரேஷன் சூப்பரா இருக்குள்ள" ன்னுட்டு சைடுல திரும்பிட்டேன்.

விட்ரா விட்ரா.. மைனர் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்னு நெனைச்சிகிட்டு அடுத்த அடிமைக்கு வெய்ட் பண்ணிட்டுருந்தேன். கொஞ்ச நேரத்துலயே ஒருத்தன் கெடைச்சான். "இவனுக்கு ஒரு பெரிய ப்ராஜெக்ட குடுத்து எதுலையாச்சும் சிக்க வச்சிடலாம்னு நெனைச்சிகிட்டே ரைட் சைடு உக்கார்ந்துருந்த புள்ளைங்க கூட்டத்துல ஒரு தடவ தேடுனேன். ஒரு அழகான
final year பொண்ணு. "மாட்னடி மாப்ள" ன்னு நெனச்சிகிட்டு "டேய் நீ போய் அந்த
பாப்பாகிட்ட கைல ஆட்டோகிராப் வாங்கிட்டு வா" ன்னதும் அவன் கொஞ்சம்
அப்புடி இப்புடி நெளிஞ்சிகிட்டே அந்த புள்ளைகிட்ட போனான்..

"இன்னிக்கு இவனுக்கு செருப்படி நிச்சயம்... கிச்சா.... ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்" ன்னு நெனைச்சிகிட்ட்டு ஆவலோட காத்துருந்தேன். அவன் அந்த் புள்ளை காதுக்குள்ள எதோ கிசு கிசுன்னு  சொல்ல, அது பர்ஸ்ல வச்சிருந்த பேனாவ எடுத்து, ஒரு கையால இவன் கைய புடிச்சிட்டு இன்னோரு கையால ஆட்டோ க்ராஃப் போட்டுச்சி பாருங்க... flaaaaaash

*********  டமால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்   **********

ஹலோ... ஹலோ essus me...பாம் எதுவும் வெடிக்கல.. வெடிச்சது என்னோட குட்டி  இதயம். .உடனே என்னோட ஆள்காட்டி விரல என் நெத்திக்கு நேரா வச்சி என்ன நானே கேட்டுகிட்டேன் "இந்த அவமானம் உனக்கு தேவையா?" 



ஆட்டோக்ராஃப் வாங்குன மகிழ்ச்சில வந்த அவன் 'சார் வாங்கிட்டேன்... எனக்கு வேற எதாவது வேல குடுங்க"ன்னான்.

"ம்ம்.. நீ மேல போயி தேவை இல்லாத ஆணியெல்லாம் புடுங்கு போ. அதான் இனிமே உனக்கு வேல " ன்னேன்.

"சரி சார்.. நா உங்கள ஆறு மணிக்கு மேல கவனிச்சிக்கறேன்" ன்னு பீதிய கெளப்பிட்டு கெளம்புனான்.

"ஆறு மணிக்கு மேல ஊர்ல இருந்தா தானடா ங்கொய்யால" ன்னு நெனச்சிகிட்டு திரும்பி பாத்தா 'நா அப்புடியே ஷாக் ஆயிட்டேன். என்ன சுத்தி ஒரு ஏழு எட்டு பேரு..

"சார்.. சார்.. சார்.. எங்களுக்கும் ஒரு சான்ஸ் குடுங்க சார்... நாங்களும் யார்டயாது ஆட்டோகிராஃப் வாங்கிட்டு வரோம்" ன்னானுங்க கோரஸா....

"டேய் ஆணியே புடுங்க வேணாம்.. டேய் எனக்கு இருக்கதே ஒரு சின்ன மனசு. அத எத்தனை  பேருடா வெடிக்க வைப்பீங்க..இனி ஒரு பய என் கண்ணு முன்னால நிக்க கூடாது.. Be careful"

"சார் நீங்க ரொம்ப பேசுறீங்க.... உங்க ரூம் நம்பெர் என்னன்னு சொல்ல முடியுமா?" ன்னான் ஒருத்தன்.

"எதுக்குடா?" ன்னேன்

"இல்ல ஆறு மணிக்கு மேலே உங்கள கொஞ்சம் கவனிக்கலாமேன்னு தான்"

அப்ப ஆறு மணிக்கு மேல என்னோட நிலைமை?

டண்டனக்கா தான்......... (அடுத்த பதிப்பில்)

Tuesday, April 7, 2009

அயன் (அய்யோ! அம்மா!!)


Share/Bookmark
சூர்யா நடிப்பில் கே.வி .ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புது வரவு. திரையரங்கம் எங்கும் சூர்யாவின் வண்ண தோரணங்கள். ரசிகர் மன்ற விளம்பர பலகைகள். கூட்டம் அலைமோதியது. இரவு காட்சிக்கு கூட பெண்களின் கூட்டம். சூர்யாவின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது தெரிந்தது. டிக்கெட் கவுண்டரில் நானும் எனது நண்பனும் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தோம். அப்போது மாலை காட்சி முடிந்து மக்கள் வெளியில் வந்தனர். வந்தவர்களில் ஒருவனை தேர்ந்தெடுத்து "அண்ணே! படம் எப்புடினே இருக்கு? என்றேன்"

"நல்லாருக்கு! கதை புதுசா இருக்கு" என்றான்.

"புது படம்ல ..... கதை புதுசாத்தான் இருக்கும். இன்னும் ரெண்டு நாள்ல பழசாயிடும்" என்றான் நான் கூட்டிட்டு வந்த குட்டி சாத்தன்.

இதை கேட்டஅவன் ஏதோ வினோத ஜந்துவ பாக்குரமாதிரி ஒரு கேவலமான லுக்கை விட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினான் .

ஆஹா நமக்கு சனியன் double cot போட்டு பக்கத்துலயே படுத்துருக்கான் போலருக்கு. இனிமே யார் கிட்டயும் வாய குடுத்து வாயில புன்னோட போவக்கூடாதுடா சாமின்னு நெனச்சுகிட்டேன். ஒரு வழியா கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கிட்டு உள்ள போய்ட்டோம்.

கதை: அது என்னனு தெரிஞ்சுகத்தன் இன்னிக்கு இன்னொரு தடவ அந்த படத்துக்கு போகலாம்னு இருக்கேன். யாருக்காவது தெரிஞ்சா எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க.

ஒரு கண்ணோட்டம் : முதல் காட்சியிலிருந்தே
கே.வி.ஆனந்தின் கேமரா விளையாடத் தொடங்குகிறது. ஆகாய மார்கமாக சென்னை வருகிறார் சூர்யா. கதாநாயகனுக்குரிய அதனை அம்சங்களும் அவரது தோற்றத்தில். நுனி நாக்கில் சரளமாக விளையாடும் ஆங்கிலம், அமெரிக்காவில் பணிபுரியும் மென்பொருள் அமைப்பு கட்டுமானர் போல தோற்றமளிக்கிறார். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடனே அவரது பேச்சிலும் நடவடிக்கையிலும் முற்றிலும் மாறுபாடு. சென்னை லோக்கல் தமிழ் பேசி, அவர் கடத்தி வந்த திருட்டு VCD ஐ எடுக்கும் போது எனக்கு திரையரங்கிற்கு வெளியே அவன் சொன்னது நினைவுக்கு வந்தது, " கதை வித்யாசமா இருக்கு" . திருட்டு VCD தயாரிக்கும் கும்பலை பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த கட்சிகளில் அவ்வளவு துள்ளியம். இது போன்ற பல வித்யாசங்களை எதிர்பார்த்த எங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான்.

வழக்கம் போல அடுத்து சூர்யாவுக்கு ஒரு பாடல். ஆனால் வழக்கம் இல்லாத ஒரு கேவலமான முதல் பாடல். " பளபளக்குற பகலா நீ .. திணறடிக்கிற துகுலா நீ"
ஏதோ எஸ். .ராஜ்குமார் பாடல் மாதிரி .கருமம்.... கருமம்.... துளி கூட ஒட்டவில்லை .

பிரபு வெளிநாடுகளிலிருந்து கடத்தல் பொருட்களை சென்னைக்கு கடத்தி வந்து (சூர்யா மூலம்) கமிஷன் பெரும் ஒரு பெரும் புள்ளியாக சித்தரிக்கப்படுகிறார். அனைத்து இடங்களிலும் பிரபுவின் ஆட்கள். ஆனால் அவர் தோற்றத்தை பார்த்தல் கார்ப்பரேஷன் toilet contract எடுக்குரவர் மாதிரிதான் தெரிகிறது . அவருடன் சூர்யா, கருணாஸ் மற்றும் விஜய் டி.வி ஜகன் ஆகியோர் இருக்கிறார்கள்.


வழக்கம் போல இவங்களுக்கு எதிராக இதே கடத்தல் தொழில் செய்யும் இன்னொரு கூட்டம். அதில் வில்லன் என்று ஒருவன் சித்தரிக்கபடுகிறான். முடி மட்டும் இடுப்பு வரைக்கும் வச்சிருக்கானே தவற நடிப்பில் ஜீரோ. சன் சில்க் ஷாம்பூ விளம்பரத்துக்கு வேணும்னா அவர நடிக்க வைக்கலாம். மத்தபடி அவர பாத்தா comedy piece மாதிரிதான் தெரியுது. அவர் ரொம்ப
சீரியசாக பேசும் வசனங்களுக்கு கூட நமக்கு சிரிப்பு தான் வருகிறது.

தமன்னா ஜெகனின் தங்கை. அனைவரையும் அழகாக காட்டும் கே.வி.ஆனந்தின் கேமரா தமன்னாவிடம் கொஞ்சம் பாரபட்சம் காட்டிவிட்டது. தமன்னா ஜெகனின் தங்கை என்றாலும், அவரே தமன்னா சூர்யா காதல் வளர துணை இருக்கிறார். சூர்யாவுடன் தமன்னாவை படத்திற்கு அனுப்புகிறார், அவர்கள் இருவரையும் பைக்கில் ஒன்றாக உட்கார வைத்து அவர் பின்னால் அமர்கிறார். "என் தங்கச்சி உனக்கு செட் ஆயிடுச்சி போலருக்கு?" என அவர் சூர்யாவிடம் கேட்கும் போதும் , சூர்யா தமன்னா முத்தமிடுவதை இவர் வீடியோ எடுக்கும் போதும் நமக்கு அருவருப்பின் உச்ச கட்டம். கருமம்....கருமம்........ இவர் தமன்னாவின் அண்ணன் தானா என முகம் சுழிக்க வைக்கிறது. இந்த கருமத்தால இடை இடையே வரும் சில நல்ல நகைச்சுவைக்கு கூட மனம் விட்டு சிரிக்க முடியவில்லை.

இதற்கிடையே சூர்யா பல நாடுகளுக்கு சென்று பல பொருட்களை கடத்தி வருகிறார். உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டுக்கு
சென்று வருவது போல் அவர் உலகை ஒரு ரவுண்டு வருகிறார், பல கெட்டப்பில். கூடவே ஜெகனும் செல்கிறார். வழக்கமா தமிழ் சினிமால எல்லாரும் மலேசியா தான் போவாங்க. இயக்குனர் சற்று வித்யாசமாக ஆப்பிரிக்கா சென்று படம் பிடித்துள்ளார். அதில் மட்டுமே வித்யாசம். இப்படி பிடிப்பில்லாமல் செல்கிறது திரைக்கதை. ஒரு கட்டத்தில் சூர்யா கடத்தல் விபரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்கத்திற்கு தெரியவர எவ்வாறு தெரிகிறது என்று பார்க்கும் போது, ஜகன் வில்லனின் கையால் என்பது தெரியவருகிறது. சூர்யா தமன்னா காதலும் பிரிகிறது. உடனே இடைவேளை.

" அட பாவிகளா....... இப்ப என்ன நடந்துச்சின்னு இண்டெர்வல் விட்டீங்க" . அட இவங்க தொல்ல தான் தங்க முடியலன்னா..... இண்டெர்வல் ல திரும்பி பார்த்த என் நண்பன் ஒருத்தன் வந்திருந்தான். என்ன பாத்து ஒரு கேள்வி கேட்டான் பாருங்க.... " என்ன மச்சி.......... படம் பாக்க வந்தியா?"

" இல்ல மச்சி .....
பப்ளிக் எக்ஸாம் எழுத வந்தேன் "னு சொல்லிட்டு கெளம்புனேன்.

இடைவேளைக்கு பிறகு புதுமையான ஒரு கடத்தலில் இறங்கும் போது ஜகன் கொலைசெய்ய படுகிறார். பழி சூர்யா மேல். வழக்கம் போல தப்பித்து விடுகிறார். முதல் பாதியில் கடத்தல்காரனாக இருந்த சூர்யா இரண்டாம் பாதியில் வில்லனை பழிவாங்குவதற்காக அவன் செய்யும் நூதன கடத்தல் முறைகளை கண்டுபிடித்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறார். கடுப்பாகும் வில்லன் அப்பாவி பிரபுவை போட்டு தள்ள......... சூர்யா வில்லனை போட்டுத்தள்ளுகிறார்.

அடப்பாவி ....... இத மொதல்லையே செஞ்சிருந்தா நாங்க அப்பவே போயிருப்போம்ல .....

ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கம் போல் அவரிடம் இருக்கும் அந்த நான்கு , ஐந்து டியூன்களை
லைட்டாக மாற்றி பாடல்களை தந்திருக்கிறார். வெற்றியும் பெற்றிருக்கிறார். எப்ப தான் திருந்த போறார்னு தெரியல.

அனைத்து பாடல்களையும் படமாக்கிய விதம் அருமை. குறிப்பாக நெஞ்சே நெஞ்சே நீ எங்கே பாடல் காட்சியில் கே. வி. ஆனந்தின் ஒளிப்பதிவு அற்புதம். ஒரு பாலைவனத்தை கூட இவ்வளவு வண்ணமயமாக படம் பிடிக்க முடியுமா என்று அசர வைக்கிறார்கள். பாடல் காட்சிகளில் மட்டுமே சிறிதளவு மன நிம்மதி.

படம் பார்ப்பவர்களுக்கு மற்றுமொரு குழப்பம் படத்திற்கு ஏன் "அயன்" என்று பெயர் வைத்தார்கள் என்று. அயன் என்றால் சிவபெருமான் என்று பொருள். அவருக்கும் இந்த படத்துக்கும் என்னடா சம்மந்தம்? அவருக்கு மட்டும் இது தெரிஞ்சுது ஈட்டியலையே குத்திருவாறு.

ன் பிக்சர்ஸின் காதலில் விழுந்தேன் , தெனாவெட்டு , திண்டுக்கல் சாரதி , தீ போன்ற வெற்றி படங்களின் வரிசையில் மற்றுமொரு படைப்பு அயன்.

மொத்தத்தில் அயன் ..... அய்யோ! அம்மா!!

















LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...