Monday, July 27, 2009

மோதி விளையாடு


Share/Bookmark
சரண் இயக்கத்தில் வினய் நடிப்பில் வெளிவந்திருக்கும் புதிய திரைப்படம். ஒரு வலுவில்லாத கதைக்கு திரைக்கதை எழுத முடியாமல் எழுதி, தோற்றுபோய் இருக்கிறார் சரண். படத்தின் அனைத்து காட்சிகளுமே வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. காட்சி பதிவு (மட்டும்)அருமை.

.
வழக்கமாக நல்ல திரைக்கதை எழுதி வசனங்களில் மட்டும் கோட்டை விடும் சரண் இந்த முறை திரைக்கதையிலேயே கோட்டை விட்டிருக்கிறார். ஒரே ஒரு எதிர்பாராத திருப்பத்தை தவற படத்தில் சொல்லிக்கொள்வது போல வேறு எதுவும் இல்லை. முதல் பாதியில் சந்தானம் , மயில் சாமி ஆகியோர் இருந்தும் கூட அவர்களை அதிகம் நம்பாமல் காஜல் அகர்வாலை வைத்து கதையை (?) நகர்த்தியிருக்கிறார்கள். எங்களால முடியல....

இடைவேளை
வரை, ஏன்டா வந்தோம் னு நினைக்கும் போது கதையில் ஒரு திருப்பம். சரி second half எதோ இருக்கும் போலருக்குன்னு நெனச்சா, நம்மலவிட கேனயன் வேற யாரும் இல்ல. பின்பாதியில் எதோ திரைக்கதையை ஒப்பேத்துனா போதும் னு படம் எடுத்து நம்மள கடுப்பேத்தி இருக்காங்க.

ஹரிஹரன்-லெஸ்லி இசையில் இரண்டு பாடல்கள் இனிமை. "மோதி விளையாடு மோதி விளையாடு " பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமை.

கடைசி வரைக்கும் படத்துல யாரும் மோதி விளையாடல. படத்த பாத்துட்டு நாங்க தான் சுவத்துல மோதி மோதி வெளயாண்டோம். இதுல எங்களுக்கு பெரிய வருத்தம் எதுவும் இல்ல. ஆனா சரணிடம் அடுத்து சரணடைந்திருப்பது தல அஜித். அத நெனைக்கும் போது தான் lite ah கஷ்டமா இருக்கு. 'தல' யின் தலை தப்பிக்குமா?

Monday, July 20, 2009

ஆறிய ஜெயராஜு


Share/Bookmark

"ஒ மா ஸிமீ யா ஆயா ஆயா"
"ஒக்காளி ஸ்விங் ச்சாய் ச்சாய் ச்ச ச்சைச்சா "
"அய்ய கக்கா ஆயி ஆயி ஆயியே"
" ஒ ஆயி ய்யே ஆயி ய்யே ஆயி ய்யே "

என்னடா இவன் ஆயி ஆயி ன்னு அசிங்கமா பேசுறானேன்னு யாரும் தப்ப நெனைக்க வேண்டாம். இதெல்லாம் நம்ம "ஹாரிஸ்" ஜெயராஜ் பாட்டுக்கு இடயில வர்ற வார்த்தைகள் தான். இது போன்ற கருத்துக்கள் நிறைந்த பாடல்களை தமிழக மக்களுக்கு அள்ளி தருவதில் அவருக்கு நிகர் அவரே.
பொதுவா சினிமா ல ஒருத்தர் பெரிய ஆளு ஆயிட்டங்கன்னா பழசெல்லாம் மறந்துடுவங்கன்னு சொல்லுவாங்க. ஆனா பழச மறக்காத ஒரே ஆளு யாருன்னா நம்ம நாறிய ச்சி ஆரிய ஜெயராஜ் தான். மின்னலே படத்துல என்ன டியூன் போட்டாரோ அதையே தன் இன்னிக்கு வரைக்கும் போட்டுக்கிருக்காரு.

சுருக்கமா சொன்ன இவரு சூப்பர் ஸ்டார் மாதிரி. ஏன்னா அவரு அன்னிக்கு சொன்னத தான் இன்னிக்கு சொல்வாரு. இன்னிக்கு சொன்னத தான் என்னிக்கும் சொல்வாரு. அதே மாதிரித்தான் இவரும். "அன்னிக்கு போட்ட டியூன தான் இன்னிக்கு போடுறாரு. இன்னிக்கு போட்ட டியூனதான் என்னிக்கும் போடுவாரு".

இதுல இன்ன்னொரு காமெடி என்னன்னா இதுவரைக்கும் ஆரிய ஜெயரோட ஆல்பம் failure ஆனதே இல்லன்னு இவருக்கு ஒரு நல்ல பேரு வேற. எப்புடிடா ஆகும்? ஒரே டியூன் ல வரியா மட்டும் மாத்தி போட்டு பாட்ட release பண்ணிடுவாரு. நம்ம பயலுக அத கேப்பாங்க. எங்கயோ கேட்ட மாதிரி இருக்கும். ஆனா எங்கன்னு அவனுங்களால கண்டுபுடிக்க முடியாது. அதுனால சிம்பிள் ஆ " அட நல்லாருக்கு" ன்னு வடிவேலு பாணியில சொல்லிட்டு போய்டுவானுங்க.

நம்ம பசங்க கிட்ட உள்ள கெட்ட பழக்கம் என்னன்னா மொதல்ல எவன் என்ன சொல்றனோ அதையே கடைசிவரைக்கும் follow பண்ணுவானுங்க. அதுனால எல்லாரும் "fantastic, என்னமா பாட்டு போட்டு இருக்காரு.. பின்னிட்டாரு " ன்னு ரெண்டு மூணு பிட்ட extra va போட்டு இவனையெல்லாம் பெரியாளு ஆக்கிவிட்டானுங்க.

இதுல நம்ம சூப்பர் டைரக்டரு கெளதம் மேனனும் , 'ஆறிய' ஜெயராஜும் ஒன்னா சேந்துட்டானுங்கன்னா அவ்ளோதான், " நாராயணா இந்த கொசு தொல்ல தாங்கமுடியலடா.. மருந்தடிச்சி கொல்லுங்கடா..."
கெளதம் புதுசா ஒரு படம் ஆரம்பிச்சாருன்னா, harris ஜெயராஜ் ட்ட போய் "போன படத்துல போட்டு குடுத்த பாட்டு மாதிரியே போட்டு குடுங்கன்னு" கேப்பாரு போலருக்கு. அதுக்கு இவன் " அட அதுக்கென்ன அதே பாட்டையே போட்டு தர்றேன் " ன்னு போட்டுகுடுதர்றான். அதுக்கு கெளதம் " அப்பச்சரி ...நானும் அதே மாதிரியே பாட்டையும் எடுதர்றேன்னு " ஒரே பாட்ட இதுவரைக்கும் நாலு தடவ எடுத்துருக்கங்காங்கையா.... அட வெக்கங்கெட்டவங்களா.... இதுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா அலையிறீங்க?

அட பாட்டு தான் இப்புடி போடுறான்னா Background Music சுத்தம். நாலு பேர கூப்டு வைச்சி "ஓமியோ கஜினி ஓமியோ கஜினி ஒமியோமியோ" னு ஒப்பாரி வைக்கிற மாதிரி வாயில வர்றதா சொல்லுங்கப்பா ன்னு விட்ருவான் போலருக்கு...

அட பொது வாழ்க்கைய விடுங்கப்பா... இவரோட கெட்டப்ப பார்த்து "நீங்க யாரு ஏ.ஆர்.ரகுமான் தம்பியா?" ன்னு கேக்கனும்னு இவருக்கு ஆசை போல. அதுக்கு நீ சொந்தமா பாட்டு போடனும் ராசா. உன்ன ஆஸ்கர் மேடைல நிக்க வச்சா, ஒலகம் தாங்காதுடா சாமி. நீ யாருயாருட்டெல்லாம் பாட்ட சுட்டியோ அவன்லாம் துரத்தி துரத்தி சி.டியாலேயே அடிப்பான்!

Harris ஜெயராஜ் பாட்டுன்னா " வாவ்" னு சொல்லணும்.. கெளதம் மேனன் படம்னா "superb... செதுக்கிருக்கண்டா... " னு feel பண்ணனும்... அப்பத்தான் கெத்துன்னுந்னு நெனச்சிக்கிட்டு நெறைய பேர் ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்க்காயங்க. இவன் கேவலமா டியூன் போட்டாலும் வாவ் சொல்றவனுங்க, ஸ்ரீ காந்த் தேவா நல்ல ட்டின் போட்டாலும் ஒத்துக்க மாட்டங்க. இவனுங்கல்லாம் இருக்குற வரைக்கும் , ஆறிப்போன பழைய பாடல்களைப் போடும் ஆறிய ஜெயராஜ் மாறிய ஜெயராஜா மாறவே மாட்டாரு
!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...