Thursday, February 23, 2012

தலைவா... க்ரேட் எஸ்கேப்!!!!


Share/Bookmark
டைரக்டர் பி.வாசுவ பத்தி நா சொல்லி தான் உங்களுக்கு தெரியனும்னு தேவையில்லை. தமிழ்ல மட்டும் இல்லாம தெலுகு, கன்னடா, ஹிந்தின்னு எல்லா மொழியிலயும் 50 க்கும் மேல படம் டிரைக்ட் பண்ணி பல சூப்பர் டூப்பர் ஹிட்டுங்கள குடுத்தவர். இவர் தலைவரை வச்சு எடுத்த 5 படங்களில் 4 படங்கள் மெகா ஹிட், குசேலன் தவிற.. (பணக்காரன், உழைப்பாளி, மன்னன், சந்திரமுகி) ரஜினிக்கு ஏற்றமாதிரி திரைக்கதை எழுதுறதுல பி.வாசு பயங்கர கில்லாடி. சுருக்கமா சொல்லப்போனா பி.வாசு தலைவரை வைத்து தந்த எந்த படமும் நம்மள ஏமாத்துனதில்லை. அதுமட்டும் இல்லாம ப்ரபு, சத்யராஜ வச்சி நிறைய சூப்பர் டூப்பர் ஹிட்டுகள குடுத்தவரு. தலைவர் படங்கள் இல்லாம இவர் எடுத்த நடிகன், சின்ன தம்பி, மலபார் போலீஸ் போன்ற படங்களுக்கு நா பயங்கர Fan.

போன வாரம் திடீர்னு தலைவர் படம் பாத்தே பாக்கனும்னு உள்ளுக்குள்ளருந்து ஒரு தூண்டுதல். (இது அப்பப்ப வரும்... அநேகமா எல்லா தலைவர் ரசிகர்களுக்குள்ளும் இது வந்து போகும்) சரி பணக்காரன் பாக்கலாம்னு ஆரம்பிச்சேன். நா நிறைய தடவ சன் டிவில பணக்காரன் பாத்துருக்கேன். ஆனா போன வாரம் பாக்க ஆரம்பிக்கும் போது ஒரு சீனு. அப்டியே புல்லரிச்சிருச்சி.. எனக்குள்ள அடிமட்டத்துல இருந்த பி,வாசு அப்டியே உச்சிக்கு பொயிட்டாரு. எந்த சீன்? இது எல்லாரும் பல தடவ பாத்துருப்பீங்க.

ராதாரவி தங்கச்சி கொழந்தைய செந்தாமரைகிட்ட கொல்ல சொல்லி குடுத்துட்டு போயிடுவாரு. ஆனா செந்தாமரை கொழந்தைய கொல்லாம ட்ரெயின்ல தூக்கிகிட்டு ஊருக்கு போயிட்டு இருப்பாரு. செந்தாமரை கைல ப்ராந்தி பாட்டில் வச்சி குடிச்சிட்டே வருவாரு. திடீர்னு கொழந்தை பசியில அழுகும். எதிர்க்க ஒரு அம்மா அவங்க கொழந்தைக்கு பால் குடுத்துகிட்டு இருக்கத பாத்துட்டு

"ஏம்மா இந்த கொழந்தைக்கும் பால் குடேன்" ம்பாறு செந்தாமரை.

"ஹ்ம்ம்ம்... குடிக்க காசு இருக்கு... கொழந்தைக்கு பால் வாங்கி குடுக்க காசு இல்லையா? நா குடுக்க முடியாது போய்யா"ன்னுடும்.

கொழந்தை பசியில அழுதுட்டே இருக்க, இவரு என்ன பணறதுன்னு தெரியாம முழிச்சிட்டே இருக்க...

உடனே ட்ரெயின் ட்ராக் மாறுது..அந்த ஜெர்க்ல Upper berth கூடையில வச்சிருந்த பால் பாட்டில் கீழ விழுந்து அங்கருக்க கேப் வழியா கொழந்தைக்கு பால் கெடைக்குது..

அந்த பால்  சொட்டு சொட்டா வடிஞ்சி கொழந்தை வாயில ஊத்திட்டு இருக்கும் போது  செந்தாமரை ஒரு  சந்தோஷத்துல தலைய அசைக்க, இசைஞானியோட வழக்கமான தாலாட்டுல "மரத்த வச்சவன் தண்ணி  ஊத்துவான்" ங்குற பாட்டு ஆரம்பிக்குது.

 இதுக்கு மேல ரஜினி படத்துக்கு சூப்பரான ஒரு பில்ட் அப் சீன் எழுதமுடியாது. நா இங்க சொல்லிருக்கது எந்த அளவுக்கு உங்களுக்கு ஃபீல் இருக்குன்னு தெரியல. நான் பலதடவ இந்த சீன பாத்துருக்கேன். ஆனா போன வாரம் பாக்கும்போது என்னவோ தெரியல ரொம்ப அஃபெக்ட் பண்ணிருச்சி.

சரி சம்பந்தம் இல்லாம எதுக்கு இப்புடி ஒளரிட்டு இருக்கன்னு தானே கேக்குறீங்க.. சம்பந்தம் இருக்கு.  சந்த்ரமுகிங்கற மெகா ஹிட் படத்த குடுத்த பி.வாசு கொஞ்ச நாளுக்கு முன்னாடி சந்த்ரமுகியோட sequel எடுக்கப்போறேன்.. படம் பேரு வேட்டையன். ரஜினி நடிச்சா மட்டுமே இந்த படத்த எடுக்க முடியும்னு  சொல்லிகிட்டு பீதிய கெளப்பிகிட்டு இருந்தாரு. (தலைவர் ஜக்குபாயை ஹோல்ட் பண்ணிட்டு சந்த்ரமுகி அறிவிக்கும் போது இதே பீதி பல பேருக்கு இருந்தது). ஆனா தலைவர் அதுக்கு ஒத்துக்கலங்கறது நியூஸ்.


உடனே பி.வாசு கன்னடாவுல ஏற்கனவே எடுத்துருந்த ஆப்தமிராவுக்கு (சந்த்ரமுகிக்கு முன்  எடுக்கப்பட்ட சந்த்ரமுகியின் கன்னட வெர்ஷன்) ரெண்டாவது பாகமா ஆப்தரக்க்ஷகா ங்கற படத்த அதே சூப்பர் ஹீரோ விஷ்ணுவர்தன வச்சி எடுத்து மிகப்பெரிய வெற்றிய கொடுத்தாரு. விஷ்ணுவர்தன் தலைவரின் சிறந்த நண்பர்களில் ஒருவர்.  இந்த ஆப்தரக்க்ஷகாவே விஷ்ணுவர்தனின் கடைசித் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனா? மட்டை  ஆயிட்டாருங்க.

இதே ஸ்க்ரிப்ட தெலுகுல தலைவர் நடிச்சி வெளியான சந்த்ரமுகியோட sequel ah வெங்கடேஷ வச்சி நாகவல்லிங்கற பேர்ல எடுத்து 2010 ல ரிலீஸ் பண்ணாரு. தமிழ்லயும் டப்பிங் பண்ணி ரிலீஸ் பண்ணாங்க. படம் சூப்பர் ஹிட் ஆகலன்னாலும் ஒரளவு ஓடுனுச்சின்னு பாக்ஸ் ஆபீஸ் சொல்லுது. சரி அப்டி என்னதான் இந்த ரெண்டாவது பார்ட்ல பண்ணிருக்காருன்னு பாப்போம். ஒரு வேளை தலைவர் ஒரு நல்ல ஸ்கிரிப்ட மிஸ் பண்ணிருந்துருப்பரோன்னு நெனச்சி இன்னிக்கு இந்த படத்த பாத்தேன்.



இத சந்தரமுகியோட ரெண்டாவது பார்ட்டுன்னு சொன்னா சத்தியமா யாரும் நம்ம மாட்டாங்க. சந்த்ரமுகியோட ரீமேக்னு வேணா சொல்லலாம். சந்திரமுகியே ரீமேக் தான.. அப்பனா இது டபுள் ரீமேக்கான்னு கேக்குறீங்க அதான? ஆமாப்பா ஆமாம். இந்த படத்தோட கதைய கொஞ்சம் சுருக்கமா சொல்றேன் புரிஞ்சிக்குங்க.

சந்தரமுகிய ப்ரவு வீட்டுலருந்து தலைவர் வெளியேத்துனதும், சந்த்ரமுகியோட painting அப்டியே காத்துல பறந்து போய் வேற ஒரு எடத்துல விழுந்துடுது. அத ஒருத்தர் எடுத்து வீட்டுக்கு எடுத்துட்டு போக, அங்க இங்கன்னு சுத்திட்டு கடைசில சரத்பாபு வீட்டுக்கு போயிடுது. அந்த ஃபோட்டோ மூலமாதான் சந்த்ரமுகி கங்காங்கர  ஜோதிகா வீட்டுலருந்து கெளரிங்கற ரிச்சா வீட்டுக்கு இடம்பெயருராங்க.

சந்தரமுகில கடைசி சீன்ல அந்த 30 அடி க்ராஃபிக்ஸ் பாம்பு வீட்ட விட்டு வெளிய போகுமே யாருக்காவது ஞாபகம் இருக்கா? அந்த பாம்பும் சரத்பாபு வீட்டுக்கே வந்துருது. என்ன சந்த்ரமுகில கொஞ்சம் ஒல்லியா  இருந்த பாம்பு, நல்ல புஷ்டியான ஆகாரங்களா சாப்டு சாப்டு இந்த படத்துல அனகோண்டாவுக்கே சவால்  விடுற அளவுக்கு வளர்ந்து நிக்குது. இதுல ஒரு காமெடி என்னனா அந்த பாம்பு அடிக்கடி சர்த் பாபு வீட்டுக்குள்ளயே சுத்தி கிட்டு இருக்கும் (வீட்டுக்குள்ளயே -நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர்) ஆனா அத யாராலயும் கண்டுபுடிக்க முடியாது. சந்த்ரமுகில இந்த பாம்ப காமிச்சப்பவே சிரிச்சவ்ங்க பல பேரு. படம் ஆரம்பிச்சி ஒரு கால் மணி நேரம் இந்த பாம்ப வச்சே படம் காட்டிகிட்டு இருந்தாய்ங்களா... நா கூட இது சந்த்ரமுகி பார்ட் 2வா இல்ல அனகோண்டா பார்ட் 2 வான்னு கன்பீஸ் ஆயிட்டேன்.



உடனே நம்ம ராமச்சந்திர ஆச்சார்யாவ வீட்டுக்கு கூப்புடுறாங்க. சந்த்ரமுகி ரிலீஸ் ஆகி அஞ்சு வருசஷம் ஆகியும் ஆச்சார்யாவுக்கு இன்னும் அதே டெய்லர் அதே வாடகை. அவரு வந்து ஞான திஷ்டில இந்த சந்தரமுகி குடியிருக்காடான்னு கண்டுபுடிச்சி சொல்றாரு. இந்த சந்தரமுகிய விரட்ட உலகத்துலயே ரெண்டே பேர்தான் இருக்காங்க.ஓண்ணு ஈஸ்வர் (தலைவர்) இன்னொன்னு அவரோட சிஷ்யன் விஜய் அப்புடின்னதும் நாலைஞ்சு மலைங்க வெடிக்குது. வெங்கடேஷ் உள்ளருந்து வந்து ஒரு தத்துவப்பாட்டை வெடிக்கவிடுறாரு. (இவரு சினிமாக்கு வந்து 25 வருஷம் ஆச்சாமப்பா)

டாக்டர் சரவணனோட சிஷ்யனா ப்ரச்சனைய சால்வ் பண்ண சரத்பாபு வீட்டுக்கு வர்றாரு வெங்கடேஷ். அதே மாதிரி அடுத்தவங்க மனசுல என்ன நெனைக்கிறாங்கனு சொல்றாரு. பொண்ணுங்கள மயக்குறாரு. சந்த்ரமுகில வர்ற மாதிரியே 12 மணி பேய் காமெடி மாதிரி இதுலயும். ப்ரமாணந்தம் இவ்ளோ மொக்கையா காமெடி பண்ணி நா பாத்ததே இல்லை. எந்த சீனுமே புதுசா பாத்த மாதிரி இல்லை. சந்த்ரமுகிய வேற கேரக்டருங்களோட திரும்ப
பாக்குற மாதிரி இருக்கு.

ஒரு சமயம் இவரு அந்த சந்த்ரமுகியோட STD ah தெரிஞ்சிக்க ஒரு லைப்ரரிக்கு போயி ஒரு புத்தகத்த வாங்கி படிக்கிறாரு. அது ஒரு ஒண்டர்ஃபுல் புக். எப்புடின்னு கேக்குறீங்களா? நூறு வருஷத்துக்கு முன்னால நடந்த கதைய அப்புடியே 12.1 MP கேமராவுல எடுத்த ஃபோட்டோவோட போட்டுருபாங்க. அத பாக்கும் போது தான் தெரியுது 100 வருஷத்துக்கு முன்னாடி சந்த்ரமுகிய கொலை செஞ்ச வேட்டைய ராஜா அப்டியே நம்ம  வெங்கடேஷ்க்கு தாடி வச்சா மாதிரியே இருக்காருன்னு.

உடனே ஃப்ளாஷ்பேக். தஞ்சாவூர்ல இருக்க சந்த்ரமுகிய வேட்டையன் போய் தூக்கிட்டு வந்துடுறாரு. கிட்ட தட்ட ஒரு 20 நிமிஷம் ஃப்ளாஷ்பேக். சந்த்ரமுகில 2 நிமிஷம் ராஜா கெட்டப்புல காட்டுனாலும் படத்தையே தூக்கி நிறுத்துனது அந்த ரெண்டு நிமிஷம் தான். ஆனா இங்க ஒரு சீனும் தேறல. "லகலகலக" க்கு பதிலா புதுசா "அவுரா... அவுரா" ன்னு எதோ சொல்றாரு ராஜா.. எதடா அவுக்க சொல்றீங்கன்னு நா முழிச்சிகிட்டு இருந்தேன். சந்த்ரமுகில காட்டுன கதையோட மேட்ச் பண்றதுக்காக நெறைய சீன் சொதப்பலா  இருக்கு. சந்த்ரமுகியா வர்ற அனுஷ்காவுக்கு மூஞ்சி முழுக்க பொங்கலுக்கு வெள்ளை அடிச்ச மாதிரி சுண்ணாம்ப அடிச்சி விட்டு பாக்கவே முடியாத அளவுக்கு பண்ணிட்டாய்ங்க. சந்த்ரமுகிய கொலைசெஞ்ச அப்புறம் ஊர் மக்கள்லாம் ஒண்ணு சேர்ந்து வேட்டையன கொன்னுடலாம்னு ப்ளான் பண்றாங்க. ஆனா வேட்டையன் உசாரா விட்டு காட்டுக்குள்ள ஓடிருறாரு. அவரு உயிரோட இருக்காரா இல்ல செத்துடாராங்குறது மர்மமாகவே உள்ளதுன்னு அந்த புக்குல முடிச்சிருப்பாங்க.

உடனே வெங்கடேஷ் வேட்டையன தேட ஆரம்பிச்சிருவாரு. ரொம்பலாம் இல்ல. அன்னிக்கு சாயங்காலமே கண்டும் புடிச்சிருவாரு. ஒரு பாழடைஞ்ச கிராஃபிக்ஸ் பங்களா. அதுக்குள்ள இடுப்பு வரைக்கும் வளர்ந்த  முடியோடவும் பேய்ங்களுக்கு உள்ள மாதிரி நகத்தோடவும் நம்ம வேட்டையன் உயிரோட இருக்காரு. அதுவும் சும்மா இல்லை. மேட்ரிக்ஸ் படத்தை திருட்டு விசிடில பாத்து அதே மாதிரி ஃபைட்டும் கத்து வச்சிருக்காரு. ரெண்டு பேருக்கும் ஒரு சண்டை. என்ன கருமாந்துரக்கு அந்த ஃபைட்டுன்னு தெரில. 130 வயசு வேட்டைய ராஜா சும்மா left leg ah செவத்துல ஊணி right leg ஆல பறந்து பறந்து அடிக்கிறாரு பாருங்க. எனக்கு வாந்தி வந்துருச்சி அத பாக்குறதுக்கு.

                            இவருதான் அந்த 130 வயதான வேட்டைய ராஜா



அப்புறம் அதே கிராஃபிக்ஸ் பங்களால கிளைமாக்ஸ் பைட்டும். இதுக்கு மேல உலக கேவலமான கிராஃபிக்ஸ் பண்ணவே முடியாதுங்க. அந்த கன்றாவிய நீங்களே பாருங்க. இப்புடி ஓரு சீன்ல நம்ம தலைவர் நடிச்சிருந்தா என்ன ஆயிருக்கும்? மயக்கம் என்ன படம் பாத்தப்புறம் இந்த ரிச்சா நல்லாருக்க மாதிரி தோணுச்சி... ஆனா இந்த படத்துல ஹை பிட்ச்ல ஒரு டயலாக் பேசும் பாருங்க.. சத்தியமா அத பாத்தா நாலு நாள் சோறு திங்க முடியாது..




ஏற்கனவே சந்திரமுகி நடிச்சப்ப  "என்னடா தலைவர் பேய்க்கதையில எல்லாம் நடிக்கிறாரேமே..தேறுமா?" ன்னு யோசிச்சிட்டு இருக்கும் போது, படம் வந்தப்புறம்  "நா எப்டி கண்ணா தப்பு பண்ணுவேன்"னு சொல்லி தலைவர் செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சி. அதே மாதிரி தான் இந்த படம் பாத்த அப்புறம் ஸ்கிரிப்ட் செலெக்ட் பண்றதுல நம்ம தலைவர் ரொம்ப தெளிவா இருக்காருன்னு தெரியுது.

என்னது? அப்புறம் ஏன் குசேலன்ல நடிச்சாரா?  எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. இத பத்தி இன்னொரு நாள் பேசுவோமே... :)

Monday, February 20, 2012

தமிழக மக்களின் பயோடேட்டா


Share/Bookmark


மரியாதை

                                    தேர்தலின் போது மட்டும் கிடைப்பது
ஓட்டுரிமை
தேர்தலின் போது ஏலம் விடப்படும் சொத்து
ஆட்சி
வஞ்சகமில்லாமல் தி.மு.கவுக்கு ஒரு முறை , அ.தி.மு.கவுக்கு ஒருமுறை என மக்களால் வழங்கப்படுவது.
பால்
பணக்காரர்கள் குடிப்பது
கரண்ட்
அப்டின்னா?
மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர்
மின்சாரமே இல்லாத வீட்டின் அழகு சாதன பொருட்கள்
பெட்ரோல் விலை
சதம் அடிக்க காத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர்
பஸ் பயணம்
காஷில்லப்பா (வடிவேலு ஸ்லாங்)
டாஸ்மாக்
தற்காலிகமாக கவலைகளை இறக்கி வைக்க உதவும் சுமைதாங்கி
விலைவாசி
நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்வது
வருமானம்
நீண்ட நாட்களாக ஏறாமல் அப்படியே இருப்பது
அரசியல்வாதிகள்
நூறு ரூபாய் செலவு செய்து ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் தொழிலதிபர்கள்
மாணவர்கள்
ஆசிரியர்களை கொலை செய்து விளையாடுபவர்கள்
அணடை மாநிலங்கள்
தமிழகத்துக்கு தண்ணீர் கிடைப்பதை வெறுப்பவர்கள்
ஈழத்தமிழர்கள்
ஃபேஸ்புக்கில் (மட்டும்) தமிழர்கள் மொழிப்பற்றையும், இனப்பற்றையும்  வெளிப்படுத்த உதவிக் கொண்டிருப்பவர்கள்
கலைஞர்
அடுத்த ஐந்தாண்டு ஆட்சிக்கு ஆயத்தமாகிக்கொண்டிருப்பவர்
கேப்டன்
ஒரே ஒரு முறை சட்டசபையில் நாக்கை கடித்து, நாட்டை காப்பாற்ற வந்த மகராசனாக form ஆனவர்.
ஜெயலலிதா
வெல்லம் திண்றவர்
சசிகலா
விரல் சூப்பியவர்
மொத்ததில் தமிழகத்தில் இப்பொழுது
Season of the Witch


Sunday, February 12, 2012

WHY THIS KOLAIVERI - DHONI VERSION


Share/Bookmark
 ஏற்கனவே கொலைவெறிங்கற வார்த்தைய கேட்டாலே எல்லாருக்கும் கொலைவெறிவர்ற அளவுக்கு எல்லாரும் வெறுப்பேத்தி வச்சிருக்காய்ங்க.. அத்தனை வெர்ஷன் அந்த பாட்டுக்கு.. இங்லீஷ் வெர்ஷன், தமிழ் வெர்ஷன், ஹிந்தி வெர்ஷன், சைனா வெர்ஷன் ஜாஃப்னா வெர்ஷன்னு ஏகப்பட்ட வெர்ஷன் வந்தாச்சி.. இப்ப உங்கள மேலும் கொலைவெறிய ஏத்த எதோ என்னால முடிஞ்சது தான் இந்த தோணி வெர்ஷன்.. கமான்.. எல்லாரும் அதே ட்யூன்ல பாடுங்க பாக்கலாம்... (இது முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தமிழ் Blog. )




MSD singing the song by keeping Australian bowlers in Mind
 
YO BOYS…. I AM SINGING SONG…
MATCH SONG……..DUCK SONG….


Why this kolaveri kolaveri kolaveri daa!!! (mm..ahm,.hmm,…ahmm)
Why this kolaveri kolaveri kolaveri daa!!! ((mm..ahm,.hmm,…ahmm)
(Rhythm correct?)
Why this kolaveri kolaveri kolaveri daa!!! (Maintain please)
Why this kolaveri kolaveri kolaveri daa!!!


Distance’u la four’u four’u
Four’u adikka bore’u
Bore’u adicha beer’u beer’u
Ayyayo stomach’u fire’u


Why this kolaveri kolaveri kolaveri daa!!! (Maintain please)
Why this kolaveri kolaveri kolaveri daa!!!


White’u skin’u ball’u ball’u
Ball’u adichaa fall’u
Bat’um ball’um meet’u meet’u
Keeper hand’la catch’u


Hmmm.. why this kolaveri kolaveri kolaveri daa
Why this kolaveri kolaveri kolaveri daa


Maama… pads ah eduthukko… appdiye bat ah yum eduthukko
Tokku Tokku… Tokku Tokku .. Tokku Tokku Todukku…
Correct ah adi… enna…

            .
            .
            .
            .
            .
takku takku... takku takku.., takku takku tadakku...


Oh what a change over mama….
Ok mama.. Now tune change’u


Hmmmmmmm… kaila gloves……. only English ah


mmm…Hand la gloves’u… gloves’la Bat’u
Eyes full ah fear’u
Fast ball’u.. over bounce’u
My eyes’u close’u


Hit’u hit’u face la hit’u
Coming more’u blood’u
Spin’u spin’u… overu spin’u
I don’t get any run’u


God’u I am out’u now’u
I don’t know how’u
This cup’u for AUS Boys’u
We don’t have choice’u


Why this kolaveri kovaveri kolaveri daaa..…….
Why this kolaveri kovaveri kolaveri daaa……..
mm..ahm,..hmm,…ahmm…… Duck song….!!


எண்ணம் : தம்பி வெட்டோத்தி ஆனந்தகுமார்
ஆக்கம் : முத்துசிவா

Friday, February 10, 2012

ஃப்ளாஷ்பேக் பேய்களும், NON-ஃப்ளாஷ்பேக் பேய்களும்


Share/Bookmark
 "ஏன்பா.. இந்த படத்தையெல்லாம் நீ இவ்வளவு சீக்கிரமாவா பாத்துட்ட" ன்னு
என்னத்த கன்னையா மாதிரி கேக்குற உங்க மைண்டு வாய்ச நா கேட்ச் பண்ணிட்டேன்.. ஹிஹி.. பாத்தவங்க ஃப்ரீயா விடுங்க. பாக்காதவங்க முடிஞ்ச வரைக்கும் பாக்க முயற்சி பண்ணுங்க.

SEVEN  (1995)


இந்த படத்த பாத்தப்ப இந்த இங்கிலீஷ்காரங்க மேல செம்ம கடுப்பாயிட்டேன். ஏன்னு கேக்குறீங்களா? நம்ம ஷங்கர் படத்த காப்பி அடிச்சி படம் எடுத்துருக்காய்ங்க.. அதாங்க... நம்ம ஊர்ல 2005 ல வந்த  அந்நியன்ங்கற படத்த அப்புடியே காப்பி அடிச்சி 1995ல்யே படம் எடுத்து ரிலீஸ் பண்ணி, நம்ம ஷங்கர கலாய்ச்சிருக்காய்ங்கன்னா கோவம் வருமா வராதா? இது பத்தாதுன்னு நம்ம கெளதம் மேனனோட காக்க காக்க படத்துலருந்தும் ரெண்டு மூணு சீன காப்பி அடிச்சிருக்காய்ங்க. இந்த ஹாலிவுட்காரய்ங்க எப்ப தான் திருந்த போராய்ங்கன்னு தெரியலப்பா..

தொடர் கொலைகள துப்பறிஞ்சி யார் கொலையாளிங்கறத கண்டுபுடிக்கிறது தான் படத்தோட கதை. அதாவது நம்ம அந்நியன் படத்துல ப்ரகாஷ்ராஜும், விவேக்கும் மெயின் கேரக்டர்லயும் விக்ரம் சைடு கேரக்டர்லயும்  நடிச்சிருந்தா எப்புடி இருக்குமோ அது தான் இந்த படம். ஆனா அந்நியன் அளவுக்கு மசாலா படம் இல்ல. இந்த மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் காமெடியெல்லாம் கெடையாது. செம டீசன்ட்டான சஸ்பென்ஸ் த்ரில்லர்.  கடைசி பதினைஞ்சி நிமிஷம் உண்மையிலயே நமக்கு பயங்கர expectation ah கெளப்பி விட்டு
நகத்த கடிச்சி துப்ப வச்சிருவாய்ங்க. கண்டிப்பா பாக்காதவங்க பார்க்க வேண்டிய ஒரு படம்.


இந்த படத்தோட Torrent link: http://www.torrentbit.net/torrent/1232877/Seven%20%281995%29%20%5BDVDrip-mp4%5D/

IMDB Rating : 8.7/10
Category : Crime, Thriller

THE GRUDGE (2004)



இதுவும் நம்ம ஊர்லருந்து காப்பி அடிச்ச படமான்னு கேப்பீங்களே? இது மட்டும் இல்ல. உலகத்துல எந்த மொழில பேய் படம் எடுத்தாலும் கதை ஒரே மாதிரி தான் இருக்கும். பொதுவா படத்துல வர்ற பேய்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு ஃப்ளாஷ்பேக் பேய்கள் இன்னொன்னு NON-ஃப்ளாஷ்பேக் பேய்கள். இந்த ப்ளாஷ்பேக் பேய்கள்ல பெரும்பாலும் லேடீஸ் பேய்களும் குழந்தை பேய்களும் தான் அதிகம் வரும். இந்த ஃப்ளாஷ்பேக் பேய்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு பேச்சிலர் பேய்கள், இன்னொன்னு ஃபேமிலி
பேய்கள். இந்த தனியா வர்ற லேடீஸ் பேய்கள் பெரும்பாலும் ஒரு நாலு அஞ்சு பேரால கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கும், அவங்கள பழிவாங்குறதுக்காக சபதம் எடுத்து பேயா சுத்திகிட்டு இருக்கும்.

இந்த ஃபேமிலி பேய்கள்ல பெரும்பாலும் ஒரு அம்மா பேயும் ரெண்டு குழந்தை பேய்களும் இருக்கும். இந்த மூணு பேரும் ஒரே நேரத்துல முன்னாள் புருஷனாலயோ இல்ல எதாவது ஒரு சைக்கோவாலயோ  ஒண்ணா சாகடிக்கப்பட்டிருப்பாங்க. இவங்க இறந்து போன வீட்டுக்கு வர்றவங்கள பயமுறுத்துறதுதான் இதுங்களோட வேலை. அந்த வீட்டுக்கு புதுசா வர்ற குடும்பத்துலயும் இந்த பேய் ஃபேமிலில என்ன கான்ஃபிக்ரேஷன் இருக்கோ
அதே கான்ஃபிக்ரேஷன்ல தான் குழந்தைகள் இருக்கும். அதாவது பேய் பேமிலில ஒரு 5 வயசு குழந்தையும் ஒரு 3 வயசு குழந்தையும் இருந்தா அந்த வீட்டுக்கு புதுசா குடி வர்றவங்களுக்கும் அதே வயசுல ரெண்டு குழந்தைங்க இருக்கும்.

இந்த NON-flash back பேய்கள் பெரும்பாலும் ஆம்பளை பேயிங்கதான். இதுங்க ஏன் பேயா சுத்துதுங்கன்னு  பெருசா காரணம் எதுவும் சொல்ல தேவை இல்ல. மூஞ்சில அங்கங்க கிழிஞ்சி தொங்குறமாதிரியும், ஒரு சைடு நெருப்புல வெந்த மாதிரியும் காமிச்சா போதும். இந்த Vampire ருங்க எல்லாம் இந்த குரூப்புல தான் வரும்.  இதுங்க பழிக்கு பழியெல்லாம் வாங்காது கண்ணுல பட்டவிங்கள எல்லாம் புடிச்சி கடிச்சி பேயாக்கி விட்டுரும். இவ்வளவு தான்பா உலக பேய்படமே. சரி நம்ம படத்துக்கு வருவோம்.



The Grudge- இந்த படத்தையும் பெரும்பாலானவங்க பாத்துருபீங்கன்னு நெனைக்கிறேன். பார்க்காதவங்களுக்காக.  இதுவும் மேல சொல்லியிருக்குற ஃப்ளாஷ்பேக் பேய்கள் வகையை சேர்ந்த பேய் தான். ஆனா ரொம்ப பயங்கரமான பேய். இது இருக்குற  வீட்டுக்கு புதுசா யார் வந்தாலும் அவங்கள கூச்சமே படாம கொன்னுடும். இந்த கண்டிப்பா ராத்திரில தனியா பாக்குறது கஷ்டம்தான். படத்துல ஒவ்வொரு செகண்டும் நம்மள பயமுறுத்தும். இதுல பேய் வரும்போது ஒரு ஸ்பெஷல் சவுண்டு ஒண்ணு குடுத்துருக்காய்ங்க பாருங்க.. படம் முடிஞ்சும் அந்த சவுண்டு என்ன சுத்தி கேட்டுகிட்டே இருக்க மாதிரி ஒரு  ஃபீலிங்கு. மொதல்ல லேப்டாப்ப மடியில வச்சிகிட்டு  ear phone போட்டுகிட்டு பாத்துகிட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்துல அல்லு கெளம்பி ear phone ah  கழட்டிட்டு லேப்டாப் சவுண்டுல பாத்தேன். அப்புறம் கொஞ்ச நேரத்துல லேப்டாப்ப தனியா வச்சிட்டு எட்டி உக்காந்து பாக்க ஆரம்பிச்சிட்டேன்.

இந்த படத்தோட Torrent link:http://www.torrentbit.net/torrent/1742539/The%20Grudge%202004%20Eng%20DVDrip%20-Fenopy%20com/ 

IMDB Rating : 5.7/10
Category : Horror, Mystery


Wednesday, February 8, 2012

கண்டுபிடி கண்டுபிடி - இறுதிப் பகுதி


Share/Bookmark
 முந்தைய பகுதிகளை படிக்க பகுதி 1  பகுதி 2 .  கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள்... 9 ப்ளாஸ்டிக் பைகள் தோண்டி எடுக்கப்பட்டன. எட்டாவதாக எடுக்கப்பட்ட பையில் எப்பவும் அழகாக காணப்படும் சரளாவின் முகம், ரத்தக்கரையோடு சற்று அகோரமாக காட்சி தந்தது. கிட்டத்தட்ட அனைத்து பாகங்களுமே கிடைத்துவிட, அனைத்தும்  ஃபாரன்ஸிக்கிற்று  அனுப்பப்பட்டு இருந்தது. முதல் இரண்டு பைகள் தோண்டி எடுக்கும் பொழுதே ராஜமாணிக்கத்திற்கு மாரடைப்பு ஏற்பட, அருகிலிருந்த மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அரசியல் சம்பந்தப்பட்ட கேஸாக இருப்பதால் முழு விபரங்களும் கிடைக்கும் வரையில் ப்ரஸ்ஸூக்கோ  மற்றவர்களுக்கோ விஷயத்தை தெரிவிக்க வேண்டாம் என அசிஸ்டண்ட் சூப்பர் இண்டெண்டன்ட் கூறியிருந்ததால் விபரம் வெளியில் எவருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

மறுநாள் காலை 9 மணி... நீலகண்டன் வீட்டிலிருந்து ஸ்டேஷனுக்கு புறப்பட்டுக்கொண்டு இருக்கையில், கமிஷ்ணர் லைனில் வந்தார்..

"நீலகண்டன்"

"எஸ் சார்.. குட்மார்னிங் சார்"

"குட்மார்னிங்... Body ராஜமாணிக்கம் வீட்டுல கெடைச்சிதுங்கறதுக்கே அவருக்கு அரெஸ்ட் வாரண்ட் இஸ்யூ பண்ணலாம்.. ஆனா வேற யாரயாவது காரணம் காட்டி ஒரு வாரத்துல அப்புடி இப்புடின்னு வெளிய வந்து அப்புறம் நம்ம தலைய போட்டு உருட்டுவாங்க... அதுனால அந்த பொண்ணு வீட்டுக்கு போய் , ராஜமாணிக்கத்துக்கும் அவளுக்கும் ஏற்கனவே தொடர்பு இருக்கமாதிரி எதாவது எவிடென்ஸ் கிடைக்குதா பாருங்க... "

"எஸ் சார்.. நானும் அதான் சார் நெனைச்சேன்.... அவள பத்தி ஃபுல் டீடெய்ல்ஸ் விசாரிச்சிட்டேன்... அவளுக்கு வேற யாரும் இல்லை. ஒரே ஒரு தாத்தா மட்டும் தான்.. அவரும் 6 மாசத்துக்கு முன்னால இறந்துட்டாரு.. அவ அந்த வீட்டுல தான் தங்கியிருந்துருக்கா.. இன்னும் ஒன் அவர்ல நா அந்த வீட்டுல இருப்பேன் சார்"

"குட்... என்னவா இருந்தாலும் எனக்கு உடனே கால் பண்ணுங்க"

"ஒகே சார் தேங்க் யூ சார்"

பேசிமுடிக்கவும் ஸ்டேஷன் வரவும் சரியாக இருந்தது..

சீட்டில் சென்று அமரும் போது சரியாக மணி 9.15.. சரளாவின் ஃபாரன்ஸிக் ரிப்போர்ட் டேபிளில் ரெடியாக  இருந்தது... அதை எடுத்து புரட்ட எதுவும் புதிதாக இல்லை...

"இறந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம்... தலையில் பலமாக தாக்கப்பட்டு இறந்திருக்கிறாள்... இறந்த பின்னரே உடல் பாகங்கள் துண்டாக்கப்பட்டு இருக்கின்றன.."

அதனை அப்படியே டேபிள் ட்ராயரில் கிடத்தி விட்டு வெளியே வந்தான் "ரங்கசாமி, சேவியர்... ரெண்டு பேரும் என்னோட வாங்க.. அந்த சரளா வீட்டுக்கு போறோம்" என்று இரண்டு கான்ஸ்டபிள்களுடன்  கிளம்பினார்.

----------------------------------
இருபது நிமிட பயணத்தில் திரு.வி.க நகரில் உள்ள சரளாவின் வீடு வந்தது. நல்ல ஜனப்புழக்கம் உள்ள பகுதிதான்... அந்த காலத்தில் கட்டப்பட்ட ஆங்க்லோ இண்டியன் டைப் வீடு. பெரிதாக இல்லாவிட்டாலும் சுற்றிலும் பாதுக்காப்பு கேட்டுடன் போதுமான புழக்கத்துடன் காணப்பட்டது...

பூட்டுகள் உடைக்கப்பட்டு மூவரும் உள்ளே சென்றனர்.. ஒருவர் தங்குவதற்கு தேவையான அத்தனை  வசதிகளும் நிறைந்து காணப்பட்டது.. அருகிலிருந்த ஷெல்ஃப் முழுவதும் மேக்கப் சாதனங்கள்.

சுவற்றில் ஆங்காங்கு சரளாவின் பெரிய சைஸ் ஃபோட்டோக்களும், சரளா தாத்தாவுடன் இருப்பது போலான ஃபோட்டோக்களும் தொங்கவிடப்பட்டு இருந்தான்

"ஒண்ணு விடாம தேடுங்க... எந்த எவிடெண்ஸூம் மிஸ் ஆயிட கூடாது" என கூறிவிட்டு அங்கிருந்த மேசை ட்ராயர்களை குடைய ஆரம்பித்தார் நீலகண்டன்.. வெறும் ஃபோன் பில்களும், சூப்பர் மார்கெட் பில்களும் மட்டுமே கிடைத்தன. டெலிஃபோன் பில்லில் ராஜமாணிக்கம் நம்பர் எதுவும் இருக்கிறதா என நோட்டம் விட, எதுவும் உள்ளது போல தெரியவில்லை.

மேசை ட்ராயரை மூடிவிட்டு அருகிலிருந்த மரபீரோவை பார்த்தான்.. பூட்டி இருந்தது... பீரோவிற்கு மேலே கைவைத்து இரண்டு மூன்று இடத்தில் தடவ அந்த ஒற்றைச்சாவி கையில் சிக்கிக் கொண்டது. கட கட வென பீரோவை திறக்க உள்ளே மேல் அடுக்கில் சுடிதார்களும் நடு அடுக்கில் புடவைகளும் கீழே சில நோட்டு புத்தகங்கள், மற்றும் சில வார இதழ்கள் என காணப்பட்டது...

ஓவ்வொன்றாக கலைத்து தேட , நடுவில் அடுக்கி வைகக்ப்பட்டு இருந்த சேலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்ட அந்த போட்டோ ஆல்பம் கிடைத்தது. அதனை நீல கண்டன் புரட்டிப்பார்க்க, அது சரளா வெவேறு ஆண்களுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்களின் தொகுப்பு. அவற்றில் சில படங்கள் அவள் அருகில் இருப்பவருக்கு தெரியாமல் எடுக்கப்பட்டதாக் இருந்தது. "கண்டிப்பாக இதில் ராஜமாணிக்கத்தின் ஃபோட்டோவும் இருக்கும்... ஃபோட்டோ மட்டும் கெடைச்சிருச்சின்னா இன்னிக்கு மதியமே அந்த ஆள தூக்கி உள்ள போட்டுடலாம்" என நினைத்துக் கொண்டே வேகமாக ஆல்பத்தை புரட்ட "டக்" கென்று கண்ணில் பட்டது அந்த போட்டோ... நீலகண்டன் முகத்தில் புண்ணகை.

"கான்ஸ்டபிள்ஸ்... தேடுனது கெடைச்சிருச்சி.. வாங்க கெளம்பலாம்" என உற்சாகமாக கூறிவிட்டு மூவரும் அங்கிருந்து கிளம்பினர்.

வரும் வழியிலேயே ராஜமாணிக்கத்துக்கு ஃபோன் செய்தான் நீலகண்டன். இரண்டு ரிங் போனபிறகு அட்டெண்ட் செய்து "ஹலோ யாருங்க பேசுறது?" என்ற குரலை கேட்ட பொழுது தெரிந்தது அது குருமூர்த்தி என்று..

"டேய் உங்க அய்யா இருக்காரா... "

"இருக்காரு.. இப்பதான் டாக்டர் injection போட்டுருக்காரு.. அதான் நல்லா தூங்கிகிட்டு இருக்காரு."

"ஆமா இப்ப எங்க இருக்கீங்க"

"இன்னும் பணிமலர் ஹாஸ்பிட்டல்ல தான் சார் இருக்கோம்"

"சரி உங்க அய்யா முழிச்சாருன்னா நா வந்துகிட்டே இருக்கேன்னு சொல்லு" என சிரித்துக்கொண்டே  ஃபோனை வத்தான்.

-----------------------------------
அடுத்த முப்பது நிமிடத்தில் நீல கண்டனின் கார் பணிமலர் ஹாஸ்பிட்டலின் வாசலில் வந்து நின்றது. உள்ளே சென்று ரிசெப்ஷனில் "மிஸ்டர் ராஜ மாணிக்கம் எந்த வார்டு ல இருக்காரு" என கேட்க அங்கிருந்த பணிப்பெண் "ரூம் நம்பர் 308 சார்... தேர்டு ஃப்ளோர்ல லெஃப்ட் சைடு " என்றாள்.

படிவழியாக மேலேறி ரூம் நம்பர் 308 இல் கதவைத் தட்ட , குருமூர்த்தி கதவை திறந்தான். ராஜமாணிக்கம் Bed இல் படுத்தவாறே நீலகண்டனை பயம் கலந்த பார்வையில் ஏறிட்டார். நீலகண்டன் ராஜமாணிக்கத்தை ஏற இறங்க ஒருமுறை பார்த்துவிட்டு தன் முழுபலத்துடன் அருகில் இருந்த குருமூர்த்திக்கு "பொளேர்" என்று ஒரு அரை விட அவன் சுற்றிக்கொண்டு கீழே விழுந்தான். குருமூர்த்திக்கு காதில் "கொய்ய்ய்ய்ய்" என்ற சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க, கண் அருகில் இருக்கும் பொருட்களை தெளிவாக காட்ட மறுத்தது. போலீஸ் அடியை கேள்விப்பட்டு இருக்கிறான். ஆனால் வாங்குவது இதுதான் முதல் முறை.

தட்டு தடுமாறி எழுந்த குருமூர்த்தியின் முகத்துக்கு நேரே அந்த ஃபோட்டோவை நீட்டினான் நீலகண்டன். ஃபோட்டோவில் குருமூர்த்தியும் மற்றொரு இளைஞனும் சரளாவுடன் அரைகுறை ஆடையுடன் இருப்பதை போல இருந்தது. குருமூர்த்தி திருதிருவென விழிக்க முன்பு விழுந்ததை விட அதிக பலத்துடன் மற்றொரு அரை வலது கண்ணத்தில் விழுந்தது.



பத்து நிமிடம்... ரூம் நம்பர் 308லேயே நீலகண்டன் நாற்காலி போட்டு அமர்ந்திருக்க கான்ஸ்டபிள்கள் பின்புறம் நின்றிருந்தனர். அவர்களுக்கு முன் முட்டி போட்டு அமர்ந்திருந்த குருமூர்த்தி தலையை குணிந்து கொண்டே சொல்ல ஆரம்பித்தான்.

"அந்த ஃபோட்டோவுல என் கூட இருக்கது என் ஃப்ரண்டு கதிரேசன். அவனுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைங்க இருக்கு. எங்க ரெண்டு பேருக்குமே சரளா நல்ல பழக்கம். ஒரு தடவ கதிரேசன் சரளா கூட இருந்தத அவ திருட்டு தனமா வீடியோ எடுத்து வச்சிகிட்டு, கதிரேசன மெரட்டி அப்பப்ப ஐயாயிரம் பத்தாயிரம்னு பணம் வாங்கிட்டு இருந்தா. குடுக்கலன்னா வீடியோவ பொண்டாட்டிகிட்ட காமிச்சிருவேனு மெரட்டுனதால அவனும் குடுத்துகிட்டு இருந்தான். ஆனா அவ அன்னிக்கு M.L.A வ பாத்துட்டு போன அப்புறம் அவ கதிரேசன பாத்து,  M.L.A வுக்கு குடுக்க உடனடியா ஒரு லட்ச ரூவா வேணும்னு தொல்லை பண்ணிருக்கா. ஆனா கதிரேசன் பணம் இல்லைன்னு சொல்ல, அவ வீடியோவ wife  கிட்ட காமிக்கப் போறேன்னு கெளம்பிருக்கா. இவன் என்ன பண்றதுன்னு தெரியாம அங்கருந்த கம்பிய எடுத்து அடிச்சதுல அங்கயே கொஞ்ச நேரத்துல இறந்துட்டா. உடனே கதிரேசன் எனக்கு ஃபோன் பண்ணி நடந்தத சொல்லி அழுதான்.

நாந்தான அவள யாருக்கும் தெரியாம பொதைச்சிடலாம்னு சொன்னேன். அவ ஒரு Pros ங்கறதால அவ காணாம போனாலும் யாரும் கவலப்பட்டு தேட மாட்டாங்கன்னு நெனச்சோம். எங்க  பொதைக்கலாம்னு யோசிக்கும் போதுதான் எனக்கு எங்க அய்யா வீட்டு பின்னாலயே பொதைச்சிடலாம்னு யோசனை வந்துச்சி. யாரும் சந்தேகப்பட்டு அய்யா வீட்டுக்குள்ள அவ்வளவு சீக்கிரம் நுழைஞ்சிட முடியாது. அம்மாவும் , சின்னம்மாவும் வேற ஊருக்கு போயிருக்காங்க.. அய்யாவுக்கு வேற இன்னிக்கு கட்சி கூட்டம்  இருக்கு. 12 மணிக்கு மேலதான் வருவாரு.. அதனால நீ அவள துண்டு  துண்டா வெட்டி நா சொல்ற மாதிரி அங்க வந்து பொதைச்சிடுன்னு சொன்னேன்.. ஆனா அன்னிக்கு எங்க கெட்ட நேரம் கூட்டம்  முன்னடியே முடிஞ்சி அய்யா சீக்கிரம் வந்து கதிரேசன பின்பக்கம் பாத்துட்டாரு.

அய்யா என்ன கத்தி கூப்பிடும் போதே நா புரிஞ்சிகிட்டேன் அது கதிரேசன் தான்னு.. அதான் அவர  எதுவும் பண்ண விடாம நானே தோட்டத்துக்குள்ள தேடுறதுக்கு போனேன். நான் அந்த காம்பவுண்ட்  சுவத்துக்கிட்ட போய் பாக்கும் போது கதிரேசன் அங்கதான் ஒரு மரத்துக்கு பின்னாடி நின்னான். நாதான் அவன அங்கயே இருக்க சொல்லிட்டு அய்யாவ வந்து படுக்க போக சொன்னேன்.

அய்யாகிட்ட  சொன்ன மாதிரி பின்பக்கம் கட்டில் போட்டு படுத்துகிட்டேன். கொஞ்ச நேரம் ஆன அப்புறம் நானும் கதிரேசனும் சத்தமில்லாம ஒவ்வோரு பாலிதின் பையா பொதைச்சோம். நீங்க அய்யாவ சந்தேகப்பட்டு புடிச்ச அப்புறம் கூட நாம மாட்டிக்க மாட்டோம்னு தைரியமா இருந்தேன்.. ஆன ஒருநாள் வெளையாட்டு தனமா எடுத்த இந்த ஒரு ஃபோட்டோவால மாட்டிக்கிட்டேன்" என சொல்லி முடிக்க ராஜமாணிக்கம் என்ன சொல்வதென்று புரியாமல் குருமூர்த்தியை பார்த்துக்கொண்டிருந்தார்.

"இவன உடனே ஸ்டேஷனுக்கு கொண்டு போங்க... அந்த கதிரேசனோட அட்ரஸ் வாங்கி அவனையும்  ட்ரேஸ் அவுட் பண்ணுங்க " என நீல கண்டன் கான்ஸ்டபிள்களிடம் சொல்ல, குருமூர்த்தியை இழுத்துச் சென்றனர்.

நீலகண்டன் மெதுவாக ராஜமாணிக்கத்திடம் சென்று "சார் மன்னிச்சிருங்க... உண்மை என்னன்னு தெரியாம உங்களுக்கு செரமத்த குடுத்துட்டேன்.. நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க.. நா வர்ற வழிலேயே  கமிஷ்னருக்கு இன்பார்ம் பண்ணிட்டேன். பாடி உங்க வீட்டுல கெடைச்சிதுங்கற விஷயத்த மறைக்க சொல்லிட்டாரு.. இதுனால உங்க அரசியல் வாழ்க்கைக்கு எந்த ப்ரச்சனையும் வராது"

ராஜமாணிக்கத்திற்கு எதோ பெரிய கண்டத்திலிருந்து தப்பித்தது போல் இருந்தது.. "ரொம்ப நன்றி நீல கண்டன்.. நானும் உங்கள பத்தி சரியா புரிஞ்சிக்காம அன்னிக்கு ஏதேதோ பேசிட்டேன்.. என்னையும் மன்னிச்சிடுங்க... அப்புறம் DC நம்ம ஆளுதான்... அவர்ட்ட சொல்லி அடுத்த மாசமே உங்களுக்கு ப்ரமோஷனுக்கு ஏற்பாடு பண்றேன்.." என்றார்.

"ரொம்ப தேஞ்க்ஸ் சார்... சரி நா கெளம்புறேன்",, என்று சொல்லி திரும்பி நடக்க ஆரம்பிக்க ராஜமாணிக்கம் தனது மொபைலில் முல்லை வேந்தனுக்கு ஃபோன் செய்து பேச ஆரம்பித்தார்

"யோவ் முல்லை.. நாம அந்த் இன்ஸ்பெக்டர் நீல கண்டன பத்தி தப்பா நெனைச்சிட்டொம்யா.. அவன் நம்மாளுய்யா" என்ற ராஜமாணிக்கத்தின் வார்த்தைகள் காதில் விழ சிரித்துக்கொண்டே நடந்தான்  நீலகண்டன்.

-முற்றும்-


Tuesday, February 7, 2012

கண்டுபிடி கண்டுபிடி- பகுதி 2


Share/Bookmark
இதன் முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும். நீலகண்டன் திரும்பவும் ஸ்டேஷனுக்குள் நுழையும் போது மணி 10.30... ஸ்டேஷனில் நீலகண்டனை எதிர்பார்த்து காத்திருந்த கமலவேணி, அவரை பார்த்ததும் லேசான புண்ணகையுடன் எழுந்து நின்றாள்.. கமலா ஏரியாவில் பெண்களை வைத்து தொழில் செய்பவள். ஸ்டேஷனுக்கு கரெக்டான பங்குகளை அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருப்பதால் போலீஸால் எந்த தொந்தரவுல் இல்லாமல் தொழில் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.

"என்ன கமலா... இந்த பக்கம்... இன்னிக்கு தேதிக்கு நீ இந்த பக்கம் வரமாட்டியே..."

"உங்கள பாக்க தான் சார்"

"என்ன பாக்கவா... எதாவது புது பார்ட்டி வந்துருக்கா"

"அதெல்லாம் இல்லை சார்...ஒரு கம்ப்ளைண்ட் குடுக்கனும்"

"கம்ப்ளைண்டா... சரி சரி.. சீட்டுக்கு வா... " என்று தன்னுடைய இருக்கையை நோக்கி நடந்தான்.. கமலா நீலகண்டனுக்கு எதிரே அமர்ந்து ஆரம்பித்தாள்..

"சார் ரெண்டு நாளா இந்த சரளாவ காணும்.. செல் போன் சுவிட்ச் ஆஃப் ல இருக்கு... வீட்டுக்கும் வரலையாம்"

"யாரு இந்த கோயம்புத்தூர்லந்து வந்தவன்னு ஒரு நாள் அனுப்சி வச்சியே அவளா...கஸ்டமர யாராயாச்சும் கரெக்ட் பண்ணிட்டு ஊரவிட்டு எஸ்கேப் ஆயிருக்கப்போறா..." என்றான் சிரித்துக்கொண்டே..

"இல்லை சார் அவ அப்புடியெல்லாம் பண்ண மாட்டா... இன்னிக்கு அவள ஒரு ஆந்த்ரா காரனுக்கு புக் பண்ணி வச்சிருந்தேன்.. அவன் போஃன் பண்ணி உயிர எடுக்குறான்.. இவ எங்க போனான்னே தெரில.. அதான் கொஞ்சம் பயமா இருக்கு"

"சரி கவலப்படாத கண்டுபுடிச்சிருவோம்... ஆமா அவள கடைசியா எங்க பாத்த.. யார் கூட போனா..."

கடைசியா முந்தா நேத்து காலைல பாத்தேன்... அன்னிக்கு அவளுக்கு கஸ்டமர் யாரும் இல்லை.. ஆனா அவ பர்ஸ்னலா ஒருத்தர பாக்க போறேன்னு சொல்லிட்டு போனா...

"யார பாக்க போனா?"

"முன்னாள் M.L.A ராஜமாணிக்கம்" என கமலா கூற நீலகண்டன் முகத்தில் சிறு புண்ணகையுடன் நிமிர்ந்து  உட்கார்ந்தான்.

"அப்புடியா சங்கதி... மாப்ள..இந்த மேட்டர வச்சே உன்கண்ணுல வெரல விட்டு ஆட்டல.. என் பேரு நீலகண்டன் இல்லைடா" என நினைத்துக்கொண்டு "சரி நீ ஒரு கம்ப்ளைண்ட் எழுதி குடு... மறக்காம இந்த M.L.A மேட்டரையும் மென்ஷன் பண்ணி குடு.. மத்தத நா பாத்துக்குறேன்.

------------------------------------------------------------
மாலை நான்கு மணி...

ராஜமாணிக்கத்தின் வீட்டில் மறுபடியும் காலையில் வந்து சென்ற மூன்று போலீசாரும் வந்திறங்கினர். போர்டிகோவில் காரை துடைத்துக்கொண்டிருந்த குருமூர்த்தி "என்ன சார்... கண்டுபுடிச்சிட்டீங்களா.. " என கேட்டவுடன்

"டேய் உங்க அய்யாவ கூப்புடுடா" என்றான் நீலகண்டன் சற்று விரைப்பான் தோணியில்.

"அய்யா... அய்யா... " என கூவிக்கொண்டே உள்ளே சென்ற குருமூர்த்தி ராஜமாணிக்கத்துடன்  வெளியே வந்தான்.

"என்ன இன்ஸ்பெக்டர்.... சொல்லுங்க..." என்றார் ராஜமாணிக்கம்..

"உங்ககிட்ட நாங்க கொஞ்சம் விசாரிக்கனும்.. கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வரமுடியுமா?"

"விசாரிக்கனுமா.. அதான் நடந்தது எல்லாத்தையும் ஒண்ணுவிடாம காலைலயே சொல்லிட்டேனே.. இன்னும் என்ன விசாரணை..அதுவும் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு போயி பண்ற அளவுக்கு... வெங்கயாம்" என
பொறுமிய ராஜமாணிக்கத்திடம்

"அய்யா... இது நீங்க கம்ப்ளைண்ட் குடுத்த திருட்டு கேச பத்தி இல்லை... காணாம போன ஒரு பொண்ணை பத்தி..."

"பொண்ணா... எந்த பொண்ணு..என்னையா ஒளருர... யாருட்ட பேசிக்கிட்டு இருக்க தெரியும்ல...டேய் குருமூர்த்தி நம்ம வக்கீலுக்கு போன் போட்டு உடனே இங்க வரச்சொல்லு "

"எல்லாம் தெரிஞ்சிதான் வந்துருக்கேன். நீங்க யார வேணாலும் வரச்சொல்லுங்க... இந்த பாருங்க அரஸ்ட் வாரண்டு கூடவே உங்க வீட்ட சோதனை போட search வாரண்டு.. மரியாதையா விசாரணைக்கு ஒத்துழைப்பு குடுத்தீங்கன்னா நல்லது.. இப்புடி உக்காருங்க உங்கள சில கேள்விகள் கேக்கனும்" என நீலகண்டன் கூற வேறு வழியின்றி தலையில் கைவைத்துக் கொண்டு ராஜமாணிக்கம் உட்கார்ந்தார்.

நீல கண்டன் ஆரம்பித்தான்...

"ஆமா.. சரளாவுக்கு நீங்க ரெகுலர் கஸ்டமரா இல்லை எப்பவாவதா?"

ராஜமாணிக்கம் கோவத்துடன் "யோவ் யாருய்யா அது சரளா எனக்கு யாரையும் தெரியாது.. "

"சும்ம நடிக்காதீங்க சார்.. முந்தாநேத்து காலையிலதான் பாத்துருக்கீங்க... அதுவும் பொண்டாட்டி புள்ளை எல்லாம் ஊருக்கு போன அப்புறம் பாத்துருக்கீங்க... அப்புடின்னா என்ன அர்த்தம்.." என்று சரளாவின் புகைப்படத்தை அவருக்கு முன்னாள் நீட்டினான்..

"ஓ இந்த பொண்ணா இது வேறய்யா.. மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடாத... "

"வேறண்ணா?"

"அந்த பொண்ணு இந்த இலவச வீட்டு மனைத்திட்டத்துல அதுக்கு ஒரு வீடு வேணும்னு என்கிட்ட ஒருதடவ சொல்லிருந்துச்சி.. அதுவிஷயமா பாக்க வந்துச்சி"

"நீங்கதான் இப்ப ஆட்சிலயே இல்லையே உங்கள பாத்து என்ன ப்ரயோஜனம்?"

"யாரு ஆட்சில இருந்தாலும் பணம் குடுத்தா எத வேணாலும் யாரு வேணாலும் வாங்கலாம்... உணமையிலேயே அது விஷயமாத்தான் பாக்க வந்துச்சி அந்த பொண்ணு. மொத்தமே ஒரு ரெண்டு தடவ தான் அந்த பொண்ணை பாத்துருக்கேன்..அதுக்கு மேல எந்த பழக்கமும் இல்லை."

"ஆமா உங்க கூட எவளவு நேரம் பேசிகிட்டு இருந்துச்சி"

" ஒரு பத்து நிமிஷம் இருக்கும்.. உடனே கெளம்பி வெளிய போயிருச்சி..."

"இதுவரைக்கும் நா விசாரிச்சதுல உங்கள பாத்துட்டு போன அப்புறம் சரளாவ யாருமே பாக்கல... எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு.. உங்க வீட்ட கொஞ்சம் சோதனை போடனும்.. "என வாரண்டை முகத்துக்கு நேராக காட்டிவிட்டு வீட்டிற்குள்ளே காண்ஸ்டபிள்களுடன் சென்றான் நீலகண்டன்.

இருபது நிமிடம் மூவரும் ராஜமாணிக்கத்தின் வீட்டை அலசிவிட்டு பின்னர் பின் வாசலுக்கு சென்றனர். காலையில் பார்த்தது போல மேலோட்டமாக பார்க்கமல் சற்று உன்னிப்பாகவே நோட்டம் விட்டான் நீலகண்டன். மறுபடி அந்த காம்பவுண்ட் சுவரில் க்ளாஸ் அகற்றப்பட்ட இடத்தை அலசினான். உருப்படியக எதுவும் சிக்கிய பாடில்லை. திரும்பி செல்ல மனம்வந்து நடக்க முயன்ற போது ஒருநிமிடம் ஜெர்க்கடித்து நின்று தரையை கவனித்தான். எதையோ ஈக்கள் மும்மராமா மொய்த்துக்கொண்டிருந்தன.

பக்கத்திலிருந்த சிறு குச்சியை எடுத்து ஈக்களை விரட்டி விட்டு பார்த்த பொழுது முகம் சற்று வித்தியாசத்திற்குட்பட்டது. ஒரு சிறிய தசைத்துணுக்கு. "யோவ்... என்ன கண்றாவிய்யா இது.. இத ஒரு கவர்ல எடுத்து போடு.." கான்ஸ்டபிளை பார்த்து சொல்ல,

"சார்... இந்த காக்கா எல்லாம் கறிகடையிலருந்து எதயாவது தூக்கிட்டு வந்து எங்கயாவது இப்புடி போட்டுட்டு போயிரும் சார்.. இதெயெல்லாம் எடுக்கனுமா?" சலித்துக்கொண்டார் அந்த வயதான கான்ஸ்டபிள்.

"அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.. முதல்ல சொன்னத செய்ங்க " என அவரை கடித்த நீலகண்டனின் கண்கள் சட்டென அந்த ரோஜாச்செடிகள் மேல் நிலை கொண்டது.

பூக்கும் தருவாயில் இருக்கும் செடிகளுக்கு இடையே ஆங்காங்கே புதிதாக நடப்பட்ட சில செடிகள் சற்று உருத்தலாக இருந்தது. வேகமாக சென்று ஒரு புதிய ரோஜா செடியை விலக்கிவிட்டு அதன் அடிபகுதியை பார்த்தான்.. நடப்பட்டு ஓரிரு நாட்களே ஆகியிருப்பதை உண்ர்ந்தான். சற்றும் தாமதிக்காமல் ஒரு செடியை கையோடு பிடித்து பிடுங்கினான்.

இதைப்பார்த்த ராஜமாணிக்கம் முகம் சிவக்க.. "யோவ் உனக்கென்ன பைத்தியம் எதுவும் புடிச்சிருக்கா...அது என் பொண்ணு ஆசையா நட்டு வச்ச செடிய்யா... அந்த சரளா என்ன அதுக்குள்ளயா ஒளிஞ்சிட்டு இருக்கா"

அவர் சொன்னதை கொஞ்சம் கூட காதில் வாங்காதவனாய் அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்து அந்த  இடத்தில் லேசாக தோண்ட ஆரம்பித்தான். இரண்டடிதான் தோண்டியிருப்பான்.. மண்வெட்டி பள்ளத்திலிருந்து ஒரு பாலிதீன் பையை கோர்த்து இழுத்தது. சற்று அகலமாக தோண்டி அந்த பாலிதீன் கவரை முழுமையாக எடுத்து வெளியில் கிடத்தினான். ஒரு அடி நீளத்திற்கு எதையோ சுற்றி வைக்கப்பட்டிருந்தது. ராஜமாணிக்கத்திற்கு என்ன நடக்கின்றது என்று புரியவே சில நிமிடங்கள் ஆகியது.

நீலகண்டன் மெதுவாக அந்த பாலீதீன் பையை பிரித்து வெளியே எடுக்க,

உள்ளே............. "முட்டிக்கு கீழே வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் கால்"

குருமூர்த்தி கண்களில் பயம் கலந்த அதிர்ச்சி.. கால்கள் லேசாக நடுக்க ஆரம்பித்தது.... ராஜமாணிக்கம் மயக்கமே அடைந்து கீழே விழுந்தார்.

"அய்யா.. அய்யா... " என குருமூர்த்தி பதற...

"யோவ்,,, இருய்யா... அரசியல்வாதிங்கன்னாலே எதாவது ப்ரச்சனைல மாட்டுன உடனே மயக்கமும்  நெஞ்சுவலியும் சேந்து வர்றது சகஜம் தான்" என்றான் அமைதியாக.


அடுத்த பதிவில் முற்றும்

கண்டுபிடி கண்டுபிடி


Share/Bookmark
இரவு 11 மணி..  கட்சி கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் M.L.A ராஜமாணிக்கமும், முல்லைவேந்தனும் ஹோண்டா சிட்டியில் ரெட்டேரிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். ராஜமாணிக்கத்தின் ட்ரைவர் குருமூர்த்தி 4 காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.முல்லை வேந்தன் ஆரம்பித்தான்... "நல்ல வேளை இன்னிக்கு நம்ம தானா ஊனா வரல... இல்லைன்னா கூட்டம் இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சிதான் முடிஞ்சிருக்கும்... மனுஷம் பேசியே கொன்னுருவாரு."

"ஹா ஹா... ஆமாய்யா.."

தலைவரே என்ன இருந்தாலும் அந்த இன்ஸ்பெக்டர் நீலகண்டன இன்னிக்கு செம காட்டு காட்டிடீங்க... பய ஆயுசுக்கும் இனிமே உங்கள கண்டா பயப்புடுவான்.."

"ஹாஹா...நா பதவிய விட்டு இறங்குனதுலருந்து  பய கொஞ்ச நாளு அதுப்பாவே திரிஞ்சான்... அதான் இன்னிக்கு பந்தோபஸ்த குறை சொல்ற மாதிரி அவன புடிச்சி நாலு காட்டு காட்டுனேன்.. அப்ப தான் நாள பின்ன நம்ம மேல பயம் இருக்கும். சொல்பேச்சு கேப்பான்..."

இருவரும் பேசுக்கொண்டு சென்றிருக்க "தலைவரே நா இங்க இறங்கிக்குறேன்.. அப்புடியே நடந்து போனா வீடு அஞ்சு நிமிஷம் தான்.. " என முல்லை வேந்தன் சொல்ல, கார் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு, அவனை
வெளியே கிடத்தியது. மேலும் இருபது நிமிட பயணத்தில் ராஜமாணிக்கத்தின் வீடு. அந்த தெருவின் இறுதியில் ராஜமாணிக்கத்தின் வீடு ப்ரம்மாண்டமான மாளிகை போன்று காட்சி அளித்தது. போனமுறை ஆட்சியில் இருக்கும் போது வளைத்து போட்டு கட்டியது. பக்க வாட்டில் நீச்சல் குளம் பின்புறம் சிறிய
தோட்டம் என அனைத்து வசதிகளும் நிறைந்து காணப்பட்டது.

வாசலுக்கு வெளியில் இருந்து ஹார்ன் அடிக்க செக்கியூரிட்டி அந்த பெரிய இரும்பு கேட்டை திறந்து காரை உள்ளே அனுமதித்தான். போர்டிக்கோவில் காரின் இஞ்சின் அணைய ராஜமானிக்கம் இறங்கி கதவை திறந்து வீட்டிற்குள் சென்றான். குருமூர்த்தி காரின் டிக்கியில் கிடத்தப்பட்ட பொனாடைகளையும், மாலைகளையும் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தான்.

வீட்டிற்குள் சென்ற ராஜமாணிக்கத்திற்கு தாகம் தொண்டையை அடைத்தது. எப்பொழுதும் வீட்டிற்கு வந்தவுடனே தண்ணீருடன் ஓடிவரும் மனைவியும் மகளும் மதுரைக்கு பிறந்த வீட்டிற்கு சென்றிருந்தனர். மெல்ல நடந்து சென்று கிச்சனில் உள்ள ஃபிரிட்ஜை திறந்து தண்ணீரை எடுத்து தொண்டையை நனைக்க, வீட்டின் பின்புறத்திலிந்து ஏதோ சத்தம் வருவதை உணர்ந்தான். காதை சற்று உன்னிப்பாக்க, யாரோ நடப்பது போலான சத்தம் நன்றாக கேட்டது. ஒரு வேளை குருமூர்த்தியா.. அவனுக்கு என்ன வீட்டுக்கு பின்னாடி வேலை.. என சற்று வேகமாக வந்து போர்ட்டிகோவை எட்டிப்பார்க்க குருமூர்த்தி காரின் டிக்கியில் ஏதோ குடைந்து கொண்டிருந்தான். அப்போ வேற யாரு பின்பக்கம் இருக்கது?

மெதுவாக பின் வாசல் கதவருகில் சென்று மெதுவாக லாக்கை விடுவித்து வெளியே உள்ள சுவிட்சை தொடப்போக, தட தட என்ற சத்ததுடன் கண் இமைக்கும் நேரத்தில் ராஜமாணிக்கத்தை கீழே தள்ளி விட்டு அந்த உருவம் வேகமாக தோட்டத்திற்குள் ஓடியது. முகத்தினை சரியாக பார்க்க முடியவில்லை.

"டேய் குருமூர்த்தி... டேய் குருமூர்த்தி..." ராஜமாணிக்கம் அடித்தொண்டையில் அலற குருமூர்த்தி அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்தான்.. "என்னங்கையா ஆச்சு... என்னங்கையா ஆச்சு"

"டேய் யாரோ நம்ம வீட்டு கொல்லப்பக்கத்துலருந்து என்ன தள்ளி விட்டுட்டு ஓடுறாண்டா.. போய் பாரு"

"எந்த பக்கம்யா போனான்" எனக்கேட்ட குருமூர்த்தி ராஜமாணிக்கம் கை காட்டிய திசையில் அருகிலிருந்த சிறு மரக்கட்டையை எடுத்துக்கொண்டு ஓடினான். சுற்றும் முற்றும் தேடிப்பார்க்க எவரும் கண்ணில்  அகப்படவில்லை. சுற்றிகட்டப்பட்டிருந்த காம்பவுண்ட் சுவரில் பாட்டில் க்ளாஸ்கள் பதித்திருக்க ஒரு இடத்தில் மட்டும் லேசாக அகற்றப்பட்டிருந்தது.. அதில் கையை வைத்து லேசாக மேலேறி எட்டிப்பார்த்த குருமூர்த்தி அதன் பின்னர் இருந்த புறம் போக்கு இடங்களை மட்டுமே காண முடிந்தது. எவரும் கண்ணில் தென்பட வில்லை.

திரும்பி வந்த குருமூர்த்தி "அய்யா ஒருத்தனையும் காணலையா.. எதயும் களவாங்க வந்திருப்பாய்ங்க  போலருக்கு. நல்ல வேளை நாம கரெக்டான நேரத்துக்கு வீட்டுக்கு வந்துட்டோம்.. கொஞ்சம் லேட் ஆயிருந்தா கதவுல ஓட்டை போட்டு  எதயாச்சும் எடுத்துட்டு போயிருப்பாய்ங்க. "

"ஆமாடா... சரி போலீஸுக்கு போன் போடு"

"சரிங்கையா" என சொல்லிவிட்டு செல்போனை எடுத்து நம்பரைத் தட்டி பேச ஆரம்பித்தான்..

மூன்று நிமிடம் கழித்து "அய்யா... நம்ம வீடு அந்த இன்ஸ்பெகடர் நீலகண்டன் ஏரியாலதான் வருது.. அந்தாளு தான் பேசுனான். கொஞ்சம் உங்க மேல கடுப்புல இருப்பான் போலருக்கு.. காலைல பாக்கலாம்... ஸ்டேஷன்ல எல்லாம் ரவுண்ட்ஸ் போயிருக்காங்கன்னு சொல்லி கட் பண்ணிடான்யா..."

"திருட்டுப்பய.. அவனுக்கு இன்னும் புத்தி வரலாயா..."

"சரிங்கையா... எதுக்கும் இன்னிக்கு நைட்டு நா பின்பக்கமே கட்டில போட்டு படுத்துக்குறேன்... நீங்க பத்தரமா தாழ் போட்டுட்டு படுங்கய்யா.. காலைல பாக்கலாம்" என குருமூர்த்தி சொல்ல, "சரி பாத்துக்க..எதுவும்னா குரல் குடு" என்று கூறிவிட்டு ராஜமாணிக்கம் உறங்கச்சென்றார்.

*********************************************************************************************

காலை 9 மணி. இன்ஸ்பெக்டர் நீலகண்டனும் இரண்டு கான்ஸ்டபிள்களும் ராஜமாணிக்கத்தின் வீட்டிற்கு வந்திரங்கினர். போர்டிக்கோவில் தினகரனை புரட்டிக்கொண்டிருந்த ராஜமாணிக்கம்

"வாங்க இன்ஸ்பெக்டர்... கொலை பண்ண வர்றாங்கன்னு கம்ப்ளைண்ட் பண்ணா அடக்கம் பண்றதுக்கு தான் வருவீங்க போல.."

"சாரி... நைட் ஸ்டேஷன்ல யாரும் இல்ல... எல்லாம் ரெய்டுக்கு போயிருந்தாங்க.,.. சரி நடந்ததை கொஞ்சம் விவரமா சொன்னீங்கன்னா நல்லாருக்கும்.. காண்ஸ்டபிள்ஸ் நோட் பண்ணிக்குங்க"
என்றவுடன் ஒரு 5 நிமிடத்தை விழுங்கி அனைத்தையும் சொல்லி முடித்தார் ராஜமாணிக்கம்.

"சரி பின்பக்கம் போகலாமா?" என நீலகண்டன் கேட்க, ராஜமாணிக்கமும் ட்ரைவர் குருமூர்த்தியும்  பின்புற தோட்டத்திற்கு வழிநடத்திச்சென்றனர்.

நீலகண்டன் தோட்டத்தை ஒரு முறை நன்றாக நோட்டம் விட்டார். நீண்ட நாட்களாக நல்ல பராமரிப்பில் இருக்கும் தோட்டம் என்பது பார்த்த மாத்திரத்தில் தெரிந்தது. 20க்கும் மேற்பட்ட ரோஜா செடிகள். அவற்றில் ஐந்து ஆறு செடிகள் பூக்களுடன் அழகாக காட்சி அளித்தன. இரண்டு கொய்யா மரங்களும் காய்க்க ஆரம்பிக்காத 5 தென்னை மரங்களும் இடைவெளி விட்டு வைக்கப்பட்டிருந்தன. சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்பபட்டு சுவற்றின் மேல்
பாட்டில்கள் உடைத்து வைக்கப்பட்டிருந்தது.

குருமூர்த்தி சுவற்றில் பாட்டில்கள் ஒரு இடத்தில் அப்புறப்படுத்தப் பட்டிருப்பதையும், அந்த வழியாகவே அவன் வந்திருக்க வேண்டும் எனவும் நீலகண்டனிடம் கூற, நீலகண்டன் உள்ளே சென்று அந்த சுவற்று பகுதியை பார்வையிட்டு விட்டு ராஜமாணிக்கத்திடம் வந்தான்.

"வீட்டுல நீங்க வச்சிருந்த எதாது பொருள் காணாம போயிருக்கா? எதாவது திருட்டு பயலுகள வேலையா தான் இருக்கும்.. நாலு பேர புடிச்சி தட்டுனா உணமைய கக்கிருவாயிங்க"

"இல்லை... வீட்டுல எதுவும் காணாம போகல.... அநேகமா நேத்து கொஞ்சம் லேட்டா வந்துருந்தா  கூட எதயாச்சும் தூக்கிட்டு போயிருந்தாலும் போயிருப்பான்.."

"சரி நீங்க ஒரு கொலைமுயற்சின்னு ஒரு கம்ப்ளைண்ட் குடுங்க.. அத வச்சி நாலு பேர் தூக்கி உள்ள போட்டு விசாரிக்கலாம்.." என்ற நீலகண்டன் அந்த கம்ப்ளைண்ட் பேப்பரில் கையெழுத்தை வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.

----------------------------

அடுத்த பதிவில் தொடரும்

Friday, February 3, 2012

புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு ஒரு கீதாச்சாரம் !!!


Share/Bookmark
குறிப்பு: இந்த பதிவு வெறும் நகைச்சுவைக்காகவே... யாருக்கும் கொலைவெறியை தூண்டும் நோக்குடன் அல்ல.

      எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது






எது நடக்கிறாதோ அது நன்றாகவே நடக்கிறது





எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்



எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

நீ எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது





எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்

இதுவே உலக நியதியும்,எனது படைப்பின் சாராம்சமுமாகும். 


Boss... எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்குவோம்... அது என்ன பேசிகிட்டு இருக்கும் போதே கல்ல கொண்டு எறியிரது...

Thursday, February 2, 2012

இந்திய கிரிக்கெட் அணியின் பயோடேட்டா


Share/Bookmark


குறிப்பு : இந்த பதிவு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மரண அடி வாங்கிக் கொண்டிருக்கும் இந்திய அணியை பற்றியது மட்டுமே. மேலும் இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே.. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.

 
பிட்ச்
இந்திய பேட்டிங்கின் போது பவுலிங் பிட்சாகவும், பவுலிங்கின் போது பேட்டிங் பிட்சாகவும் automatic காக மாறிக்கொள்ளும் culprit.
பவுலர்களின் ஃபீலிங்
டேய் மச்சி... எங்க போட்டாலும் அடிக்கிறாணுங்கடா
பேட்ஸ்மேன்களின் பீலிங்
டேய் மச்சி.. எங்க அடிச்சாலும் புடிக்கிறானுங்கடா..
300 ரன்கள்
எது இந்த 299 க்கு அப்புறம் வருமே அதுவா? பாத்து பல நாள் ஆச்சிங்க
சேவாக்
ஆஸ்திரேலிய அணி பவுலர்களை உற்சாகப்படுத்துவதற்காக முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுக்கும் படி Program செய்யப்பட்ட வீரர்.
ட்ராவிட்
ஆஸ்திரேலியா பவுலர்களை களைப்படைய வைக்கவும், கடுப்படைய வைக்கவும் உபயோகப்படுத்தப்படும் வீரர்
லக்ஷ்மண்
இந்திய அணியின் அமெரிக்க மாப்பிள்ளை
சச்சின்
எதிரனியில் புதிதாக சேர்க்கப்படும் பவுலர்களிடம் விக்கெட்டை பறிகொடுத்து அவர்களை Encourage செய்பவர்
தோணி
10 விக்கெட்டுகளும் விழுந்த பிறகு ரன் அடித்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் தனது விக்கெட்டை பத்திரமாக தக்க வைத்துக் கொள்பவர்
தோணி ரசிகர்கள்
இந்திய அணி வெற்றி பெறும் போது வெற்றிக்கு முழுக்காரணம் தோணிதான் எனவும், தோல்வியடையும் போது “மத்தவங்க வெளையாடலன்னா அவரு என்னங்க பண்ணுவாரு? எனவும் அந்நியனைப் போல் மாறி மாறி பேசுபவர்கள்


இன்னிங்ஸ் Defeat
ரசிகர்களின் நேரத்தை மிச்சப்படுத்த நமது வீரர்கள் கண்டுபிடித்திருக்கும் புதிய வழி
Series wash out
முன்னாள் உலக சாம்பியனுக்கு செய்த கவுரவம்
ஆஸ்திரேயா பன்ச்
நாங்க யானை இல்லே.. குதுரே.. ச்சும்மா டக்குன்னு எழுந்துடுவோம் (தலைவர் slang)
உலக கோப்பை
அடுத்து வரும் பல வருடங்களுக்கு பல தோல்விகள் கண்டாலும் சமாளிக்க பயன்படும் சரித்திரம்
ஒரே ஆறுதல்
நீ எத்தனை மாட்ச் ஜெயிச்சாலும் இன்னும் மூணு வருஷத்துக்கு World Champion நாங்கதாண்டியேய்..
மொத்தத்தில் இந்திய அணி
Out of form இல் இருக்கும் அணிகளையும், வீரர்களையும் form ற்கு கொண்டு வருவதற்காக நடத்தப்படும் கோச்சிங் சென்டர்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...