Monday, September 28, 2015

மாயா – ஜென்மம் எக்ஸ்!!!


Share/Bookmark
நா ரொம்ப நாளா எதிர்பாத்துக்கிட்டு இருக்க சில படங்கள் ரிலீஸ் ஆகும்போது அத பாக்க முடியாதபடி எதாவது சிக்கல் வந்துடும். போன வருஷம் வரைக்கும், கரெக்டா படம் ரிலீஸ் ஆகும்போது எதாவது சைட்டுக்கு அனுப்பிருவாய்ங்க. இந்த வருஷம் அந்த பிரச்சனை இல்லை. ஆனாலும் ரொம்ப நாளா எதிர் பார்த்த தலைவர் கவுண்டரோட “49-ஓ” ரிலீஸ் ஆகியும் இன்னும் பாக்க முடியல. ரெண்டு மூணு காரணங்கள். நமக்கு எப்பவுமே நைட் ஷோதான் மொத பிரிஃபரன்ஸ். Day டைம் ல படத்துக்கு போன எதோ நேரத்த வீணாக்குற மாதிரியே ஒரு ஃபீல் இருக்கும். அதே மாதிரி நம்ம கம்பெனி சிட்சுவேஷனுக்கும் நைட் ஷோ தான் கரெக்டா இருக்கும். ஆனா கவுண்டர் படம் சிட்டில வெகு சில தியேட்டர்கள்லயே ரிலீஸ் ஆகியிருக்கு. அதிலும் ஒண்ணு ரெண்டு ஷோ . எல்லாமே மதியமும் சாயங்காலமும். போனவாரம் ஊருக்கு போனா, ஊர்லயும் படம் ரிலீஸ் ஆகல. ஒரே டெலிகேட் பொசிசன். இந்த லட்சனத்துல இந்த வாரம் சனி ஞாயிறு இரு தினங்களும் கம்பெனி வச்சிட்டாய்ங்க. இந்த சமயத்துல reliable லான நண்பர்கள் சில பேர்கிட்டருந்து மாயா பத்தின இன்புட் வந்துச்சி. அதனால Week end eh இல்லாத ஒரு week end ல நானே வீக் எண்ட் இருக்க மாதிரி நினைச்சிகிட்டு இந்த படத்த பாத்து வீக் எண்ட முடிச்சிக்கிட்டேன்.

சரி மாயாவுக்கு வருவோம். மாயா ஒரு பள்ளியில ஆசிரியரா வேலை பாக்குறாங்க. அதிகம் பேச மாட்டாங்க. மணி ரத்னம் ஹீரோயின் மாதிரி ஒண்ணு ரெண்டு வார்த்தை அதுவும் துண்டு துண்டா தான் பேசுவாங்க. சோகமா இருக்கும்போது அவங்களுக்குன்னு இருக்க ஒரு தனி பீச் அவுஸ்க்கு போய் டைம் ஸ்பெண்ட் பண்ணுவாங்க. இந்த சமயத்துல மாயாவுக்கு ஒரு போலீஸ் கூட லவ்வாயிடுது. அந்த போலீஸுக்கு சில வில்லன்களோட லடாய் ஆயிருது. வில்லன்கள் போலீஸ் மேல இருக்க காண்டுல மாயாவ போட்டு தள்ளிடுறாங்க.

செத்துப்போன மாயா அவங்கள கொன்ன ரவுடிங்கள பழிவாங்குறதுக்கு பேய் அவதாரம் எடுத்து வர்றாங்க. ஒவ்வொரு ரவுடியையும் பயமுறுத்தி பயமுறுத்தி அவங்கள கொன்ன மாதிரியே கொல்றாங்க. ஆனா மெயின் ரவுடி பாண்டியன மட்டும் உடனே கொல்லல. அவன் கிட்ட போய் “ உன்ன கொல்ல போறேன் பாண்டியன். இது இப்ப நடக்கலாம். இல்லை ரெண்டு நாள் கழிச்சி பொறுமையா கூட நடக்கலாம்” ன்னு அவன் பேசுன அதே டயலாக்க உல்டா அடிச்சி மெரட்டிட்டு வர்றாங்க. பாண்டியன் பயத்துலயே இருக்கான். மாயாவோட கணவர் மாயா செத்தப்புறம், மீசைய மட்டும் கொஞ்சம் மாத்திக்கிட்டு தூத்துக்குடி பக்கத்துல உள்ள நல்லூர்னு ஒரு கிராமத்துல போஸ்டிங் வாங்கிட்டுப் போயிடுறாரு. அதுமட்டும் இல்லாம அந்த ஊர்ல அவர விட உயரமான ஒரு பொண்ண பாத்து உசார் பண்ணிடுறாரு.

பாண்டியன மட்டும் கொண்ணுட்டு பொத்துனாப்புல போயிடலாம்னு இருந்த மாயா பேய், அவங்க ஹஸ்பண்டு வேற ஒரு பொண்ணு கூட டூயட் பாடுறத கேள்விப்பட்டு வெறியாயி, அந்த ஊருக்கு போய் அவ புருஷன கொல்றதுக்காக ஓட ஓட விரட்டுது. தப்பிக்கிறதுக்கு என்ன வழின்னே தெரியாத போலீஸ் புருஷன் டக்குன்னு பாக்கெட்ல இருந்த போன எடுத்து அதுல ஹெட் செட்ட சொருகி, பேய் காதுல வச்சி ஒரு பாட்ட போட்டு விடுறான். “ Yo Yo… This is DSP…. Lets sing and dance… இது சிங்கம் டான்ஸ்” ன்னு எதோ ஒரு பாட்டு ஓட, அத கேட்ட மாயா பேய் அங்கனயே துடிதுடிச்சி செத்துப் போயிருது. ”உயிரோட இருக்கவன சாவடிச்சா வெறும் ஸ்டார். பேயையே சாகடிக்கிறவந்தாண்டா ராக்ஸ்டார்” ன்னு DSP க்கு ராக்ஸ்டார் பட்டம் குடுக்குறதோட படம் முடியிது. சரி காக்க காக்க படத்துக்கு ஒரு சீக்குவல் எடுத்தா எப்டி இருக்கும்ங்குறது தான் இந்தக் கதை. சரி நம்ம இப்ப ஒரிஜினல் மாயாவப் பத்தி பாப்போம். Activate serious mode.

கடந்த ரெண்டு மூணு வருஷங்கள்ல நிறைய புது இயக்குனர்களோட வரவால தமிழ் சினிமா ரொம்பவே மாறிருக்குன்னு சொல்லலாம். நிறைய வித்யாசமான கதைக்களங்கள். குறைந்த முதலீட்டுலயே நல்ல தரமான படங்கள் வரத் தொடங்கிருக்கு. நாம எது எதையெல்லாம் நம்ம  சினிமாவுல குறையா சொல்லிக்கிட்டு இருந்தோமோ அது எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா நிவர்த்தி செஞ்சிக்கிட்டு வர்றாங்க. உதாரணமா கதைக்குள்ள போறது. ஆங்கிலப்படங்கள்ல முதல் காட்சியே கதைக்குள்ள போயிருவாங்க. ஆனா நம்மூர்ல படங்கள் ஆரம்பிச்சி, ஹீரோ இண்ட்ரோ, ஹீரோயின் இண்ட்ரோ, கொஞ்சம் காமெடின்னு சுத்தி சுத்தி குறைஞ்சது இருபது நிமிஷம் கழிச்சிதான் கதைக்குள்ளயே போவோம். அந்த மாதிரி சூழல் சமீபத்தைய புது இயக்குனர்கள் படங்கள்ல ரொம்பவே குறைஞ்சிருக்கு. நேரடியா கதைக்கான காட்சியிலயே ஆரம்பிக்கிறாங்க.

மேலும் தமிழ்ல ஆடியன்ஸ ரொம்ப கொடூரமா பயமுறுத்துற மாதிரி இதுவரைக்கும் ஒரு சில படங்கள் மட்டுமே வந்துருக்கு. ஒரு சில படங்கள் கொஞ்ச நேரம் பயமுறுத்தினாலும் படம் முழுசும் அத தக்க வச்சிக்க முடியிறதில்லை. காஞ்சனா மாதிரி படங்கள் முதல் பாதி பயத்துல உறைய வச்சாலும் மறுபாதியில இழுவையான காட்சிகளாலும், பேயோட்டுதல் சாமியார் டைப் காட்சிகளாலயும் போரடிக்க வச்சிடும். சமீபத்துல வந்த டிமாண்டி காலனி ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் கொஞ்சம் கூட தொய்வில்லாம எடுத்துட்டு போயிருந்தாங்க. அதே வரிசையில, டிமாண்டி காலனியவிட இன்னும் பயங்கரமா, நல்ல தரத்தோட வந்திருக்க படம்தான் மாயா.

முதல்ல பேயோட்டுரவங்களோ, இல்லை சாமியார்களோ இல்லாம வந்திருக்க முதல் பேய் படம் இதுதான்னு நினைக்கிறேன். முதல் காட்சியிலிருந்து ஒவ்வொரு காட்சிலயும் பீதியக் கிளப்பிக்கிட்டே இருக்காங்க. வழக்கமா ஒரு கதைய narrate பன்னும் போது அவ்வளவா interesting ah இருக்காது. ஆனா இங்க மாயவனம்ங்குற காட்டப்பத்தியும், அங்க இருந்த காப்பகத்த பத்தியும், அதுக்கப்புறம் அங்க நடந்த விஷயங்களப் பத்தியும் ஒருத்தர் சொல்ல சொல்ல நம்மளயும் அறியாம அள்ளு கிளம்புது.

ஒவ்வொரு சீனும், சீன் லொக்கேஷனுமே பயமுறுத்துது. அர்ஜூன் நடிச்ச ”யார்” நிறைய பேர் பாத்திருப்பீங்க. அந்த கதைக் களமும், லொக்கேஷனுமே நம்மள ரொம்ப பயமுறுத்தும். அதே ”யார்” கண்ணன் இயக்கிய டிவி சீரியலான “ஜென்மம் X” எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்குன்னு தெரியல. டிவில வந்த திகில் சீரியல்கள்ல ரொம்ப முக்கியமான ஒண்ணு. அதுல வந்த பேய் முகங்களும், கதைகளும் இப்ப நினைச்சாலும் பயமா இருக்கும். 

ஒருநாள் ராத்திரி பிரசவ வலியில துடிச்சிட்டு இருக்க ஒரு அம்மாவ ஏத்திட்டு போற ஆட்டோக்காரன் ஒயின் ஷாப்ப பாத்து நிறுத்திட்டு குடிக்க போயிருவான். இந்த அம்மா ஆட்டோவுலயே வலி தாங்காம இறந்து போயிடும். திரும்பி வந்து பாத்த ஆட்டோகாரன் என்ன பன்றதுன்னு தெரியாம, பக்கத்துல உள்ள ஒரு குப்பை கிடங்குல அந்தம்மாவ பொதைச்சிட்டு வந்துடுவான். திரும்ப வந்து ஆட்டோவுல உக்காந்து ஸ்டார்ட் எடுக்கும்போது பின்னால யாரோ உக்கார்ந்துருக்க மாதிரி இருக்கும். பயத்தோட மெதுவா திரும்பி பாக்க, அந்தம்மா, கிழிஞ்சி தொங்குற முகத்தோட கொடூரமா பின்னால உக்காந்திருக்கும். 

இப்ப நினைச்சாலும் பயமா இருக்கு. இன்னும் எத்தனையோ பேய் கதைகள் ஜென்மக் எக்ஸ்ல வந்துருக்கு. இந்தப் படத்துல வர்ற ஆட்டோ பேய் காட்சிகளைப் பாக்கும்போதும், லொக்கேஷன்களப் பாக்கும்போதும் எனக்கு ஜென்மம் எக்ஸ் ஞாபகம்தான் வந்துச்சி. Youtube ல தேடுனதுல மனோ வாய்ஸ்ல ஜென்மம் எக்ஸோட டைட்டில் சாங்க் மட்டும் தான் கிடைச்சிது. இதயே பாருங்க எப்டி இருக்குன்னு.


மாயாவுல குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சில விஷயங்கள் கேமராவும், மியூசிக்கும். பெரும்பாலான காட்சிகள் கருப்பு பேக்ரவுண்டுலதான். அதுவே நல்லா எடுத்து குடுக்குது. அதுக்கேத்த மாதிரி பயமுறுத்துற மியூசிக். நயன்தாரா வயசு ஆக ஆக அழகாயிட்டே போவுது. செம அழகு. சின்னப் புள்ளை மாதிரி இருக்கு. அதுவும் அந்த கேரக்டருக்கு ஏத்த மாதிரி எப்பொதும் ஒரு சோகத்த முகத்துல வச்சிக்கிட்டு, செமையா நடிச்சிருக்கு. கருப்பு பேக்ரவுண்ட்ல எடுத்துருக்கதால பளிச்சின்னு இருக்கு.

நல்ல தெளிவான மற்றும் முழுமையான திரைக்கதை. முதல் பாதியில ஒரு சில காட்சிகளுக்கு தொடர்ச்சி இல்லாத மாதிரியும், கொஞ்சம் எடிட்டிங் மிஸ்டேக் இருக்குதோன்னும் தோணும். ஆனா ரெண்டாவது பாதிய பாத்தப்புறம் எல்லாமே பக்கான்னு புரியும். நெகடிவ்னு ரெண்டு விஷயத்த சொல்லலாம். ஒரு சில ட்விஸ்டுகள் மற்றும் காட்சிங்கள நாம முன்னாலயே கணிக்கும்படியா இருக்கு. நயன்தாரா குடும்ப கஷ்டத்துல குழந்தைய வச்சிக்கிட்டு எப்பவுமே சோகமான முகத்தோட வர்றாங்க. அது ப்ரச்சனை இல்லை. ஆனா அவங்க நடிக்க வாய்ப்பு தேடி அலையிறாங்க. நயன்தாரா நடிச்சி காட்டுறமாதிரி வைக்கப்பட்ட காட்சிகள்ல கூட அதே சோகம்தான் இருக்கே தவற வேற எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

ஹீரோ ஆரி. ஹீரோன்னு சொல்ல முடியாது. ரொம்ப நேரம் வர்ற அமெரிக்க மாப்ளன்னு சொல்லலாம். கதையில அவருக்குன்னு பெருசா எதுவும் ஸ்கோப் இல்லை. நடிப்பு ஓக்கே. ஒரு ஆங்கிள்ல பாத்தா நம்ம சூர்யா மாதிரி இருக்கார். இன்னொரு ஆங்கிள்ல பாத்த நம்ம இண்டியன்  பவுலர் ப்ரவின் குமார் மாதிரி இருக்கார். ”நெடுஞ்சாலை” படத்துல தாடியும் மீசையுமா காட்டான் மாதிரி இருந்தவரு இதுல yo yo boy மாதிரி இருக்காரு.



படத்துல கேரக்டர்களும் ரொம்ப இல்லை. தேவையான அளவு தான். இந்தப் படத்தோட ட்ரெயிலர் பாக்கும்போது “மனநல காப்பகம், பேய், காடு” ன்னு வந்தோன பெருசா ஈர்ப்பு வரல. ஏன்னா நிறைய ஆங்கில பேய் படங்களோட ஃப்ளாஷ்பேக் இந்தமாதிரி மனநல காப்பக நோயாளிகளை வச்சி வந்துருக்கு. ஆனா படம் பாத்தப்புறம் டைரக்டர் அஷ்வின் சரவணன் மேல ஒரு நல்ல மதிப்பு வந்துருக்கு. ஒரு சில காட்சிகள் மட்டும் சில ஆங்கில பட போஸ்டர்கள் ஞாபகப் படுத்துது. குறிப்பா வீல்சேர்ல உக்காந்திருக்க பேய், அந்த குழந்தை விளையாடுற பொம்மைகள் எல்லாம் conjuring type la இருக்கு.

மத்தபடி என்னைப் பொறுத்த அளவுல தமிழ்ல இதுவரைக்கும் வந்த சிறந்த பேய் படங்கள்ல மாயாவும் ஒண்ணு. நிச்சயம் பாக்கலாம். சின்ன குழந்தைகளை கூட்டிட்டு போறது உசிதமல்ல. படம் பாதி ஓடிக்கிட்டு இருக்கும்போதே நிறைய குழந்தைங்க தியேட்டர்ல அழ ஆரம்பிச்சிருச்சுங்க.


Friday, September 25, 2015

புடிச்சி கொல்லுங்க சார் அவன!!! (18+)


Share/Bookmark
இப்பல்லாம் ஒரு எந்த ஒரு கேஸ்லயும் க்ளியர் கட் ஆதாரங்கள் இருந்தாகூட, அதுக்கு தீர்ப்பு ஆகி வர்றதுக்கு வருஷக்கணக்காகுது. அதுவும் குத்துமதிப்பா, “கொலை பன்னது இவர மாதிரியும் இருக்குங்க இல்லாத மாதிரியும் இருக்குங்க” ன்னு இழுக்குற மாதிரி கேஸெல்லாம் இன்னும் ப்ரமாதம். அசால்ட்டா பத்து பதினைஞ்சி வருஷம் வச்சி செய்யலாம். இப்ப இருக்க சூழல்ல, ஒருசில நாடுகளைத் தவிற மரண தண்டனைங்குறது ரொம்ப குறைவாதான் கொடுக்கப்படுது. கொடுக்குறதே கம்மிதான்னாலும் கருணை மனு, அது இதுன்னு போட்டு நிறைவேற்றப்படுற மரண தண்டனைகள்னு பாத்தா இந்தியாவப் பொறுத்த வரைக்கும் வருஷத்துக்கு ஒண்ணு ரெண்டே அதிகம். வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனைகள் மட்டும்தான் அதிக எதிர்ப்புகள் இல்லாம நிறைவேற்றப்படுது எத்தனை உயிர்கள அவன் எடுத்திருந்தாலும், அவனோட உயிர எடுக்குறதுக்கு யாருமே உடனே அனுமதிக்கிறதில்லை. . இது எல்லாம் நாம ஒரு உயிருக்கு கொடுக்குற மதிப்பத்தான் காட்டுது.

இப்பதான் இப்டியெல்லாம் மதிப்பு குடுக்குறோம். ஆனா சில நூற்றாண்டுகளுக்கு முன்னால மனித உயிர் ரொம்ப ரொம்ப குறைவாகவே மதிக்கப்பட்டிருக்கு. அதுவும் ஒருத்தன எப்படியெல்லாம் டார்ச்சர் பன்னி கொல்ல முடியுமோ அத்தனையும் பன்னித்தான் சாகடிச்சிருக்காய்ங்க. நரகத்துக்கு போனா அங்க எமன் நம்மள எண்ணை சட்டில போட்டு வருப்பாரு, தோல உரிச்சி தொங்கவிடுவாருன்னு சும்மா கதைக்காகத்தான் சொல்லிக்கிட்டு இருக்கோம். ஆனா இது அத்தனையையும் ஒரு காலத்துல உண்மையாவே செஞ்சிருக்காய்ங்க. எப்படியெல்லாம் மனுஷங்கள டிசைன் டிசைனா சாகடிச்சிருக்காய்ங்கன்னு கொஞ்சம் பாப்போம்.

கழுமரமேற்றுதல்னு ஒரு தண்டனை பெரும்பாலும் எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க. மிக கொடூரமான தண்டனைகள்ல இதுவும் ஒண்ணு. தேச துரோக குற்றம், போர்குற்றம் போன்ற நாட்டுக்கு எதிரான செயல்கள் செய்யிறவிங்களுக்கு அதிகமா இந்த தண்டனைதான் கொடுக்கப்பட்டது. தப்பு செஞ்சவியிங்க கையை பின்னால கட்டி, அவன அப்டியே குண்டுக்கட்டா தூக்கி, நட்டு வைச்சிருக்க ஒரு கூரான கம்பில நச்சின்னு உக்கார வச்சிருவாய்ங்க. அந்தக் கம்பி பின்னால வழியா உள்ள இறங்கி இறங்கி கொஞ்ச நேரத்துல வாய் வழியாவோ தலை வழியாவோ வெளில வந்துடும்.

கழுமரமேற்றப்பட்டவிங்க சில பேரு ஒருசில நிமிடங்கள்ல இறந்துடுவாங்க. சில பேரு சில மணி நேரம் வரை உயிரோட இருப்பாங்க. அதிகபட்சமா 5 நாட்கள் வரை கூட உயிரோட இருந்துருக்காங்கலாம். எவ்வளவுக் கெவ்வளவு நேரம் ஆகுதோ அந்த அளவு கொடுமை. கூரான அந்தக் கம்பி உள்ள இறங்கும்போது நுரையீரல், இதயம்னு இப்டி முக்கியமான பகுதிகள்ல குத்திருச்சின்னா உடனே இறந்துடுவாங்க. அப்டி இல்லைன்னா உயிர்போக நேரமாகுமாம்.

இவய்ங்களோட நோக்கமே அவன கொடுமைப் படுத்தி சாகடிக்கனும்ங்குறதுதான். அதனால உடனே அவன் சாகக்கூடாதுங்குறதுக்காக, கழுமரமேத்துறதுக்கு முன்னால ஒரு மழுங்கிப்போன கட்டைய முதல்ல உடல்ல பின் வழியா இறக்கி, முக்கியமான ஆர்கான்ஸயெல்லாம் ஓரம் கட்டுவாய்ங்களாம். என்னடா அமைச்சர் வரும்போது ரோட்டுல நிக்கிற ஆளுங்கள ஓரங்கட்டுற மாதிரி  சிம்பிளா சொல்றீங்க.. ஆனா அதத்தான் பன்னிருக்காய்ங்க.  அப்பதான் கழுமரமேத்தும்ப்போது அந்த ஆர்கான்ஸெல்லாம் டேமேஜ் ஆகாம, அவன் ரொம்ப நேரம் உயிரோட இருந்து துடிச்சி சாவான்.

இதாச்சும் பரவால்ல. அவன் தப்பு பன்னிட்டான்னு தெரிஞ்சப்புறம் குடுக்குற தண்டனை. ஆனா அவன் தப்பு பண்ணானா இல்லையான்னு தெரிஞ்சிக்கிறதுக்கே சில டெஸ்டுகள வச்சிருக்கானுங்க பாருங்க. அதுக்கு பேச்சாம தப்பு பன்னிட்டேம்பான்னு ஒத்துக்கிட்டு நச்சின்னு அந்த கம்பில நம்மளாவே வாலண்டீரா ஏறி உக்காந்துக்கலாம் போல. Game of Thrones ல 4th சீசன்ல Tyrion Lannistor கோர்ட்டுல நின்னு “ I Demand Trail by Combat” ன்னு கேக்கும் போது நமக்கு புல்லரிக்கும். குற்றம் சுமத்தப்பட்டவன் ஒருத்தனோட சண்டை போட்டு ஜெயிச்சி, தப்பு பண்ணலன்னு நிரூபிக்கிற முறைதான் அது.

 அதே மாதிரி கரகாட்டக்காரன்ல கனகாவையும், ராமராஜனையும் தீ மிதிக்கச் சொல்லி, அவங்க ஒழுங்கா வெளில வந்துட்டாங்கன்னா அவங்க தப்பு பன்னாதவங்க, இல்லைன்னா தப்பு செஞ்சவங்கன்னு தீர்ப்பு சொல்லுவாய்ங்களே.. அதே மெத்தடத்தான் ரொம்ப நாளா யூஸ் பன்னிட்டு இருந்துருக்காய்ங்க. உடல் ரீதியா குற்றம் சாட்டப்பட்டவன வருத்தி, அதிலருந்து அவன் தப்பு செஞ்சிருக்கானா இல்லையாங்குறத முடிவு செய்யிறது. (Trail by Ordeal) அந்த முடிவ கடவுளே கொடுக்குறதா நம்புனாங்க.

அவிங்க வைக்கிற டெஸ்டுல பாஸ் பன்னா அவன் நல்லவன்னு கடவுள் சொல்லிட்டாரு. அவன விட்டுடலாம். டெஸ்டுல மட்டையாயிட்டான்னா கடவுள் போட்டுத்தள்ள சொல்லிட்டாருன்னு எடுத்துகிட்டு போட்டுத்தள்ளிடலாம். Trail by Combat லயாவது ஓரளவுக்கு திறமையானங்க எஸ்கேப் ஆக வாய்ப்பு இருக்கு. ஆனா Trial by Ordeal லருந்து எஸ் ஆகுறதுங்குறது சாதாரண விஷயமே இல்லை. இதுல நிறைய வகை இருக்கு. ஒவ்வொன்னையும் ரசிச்சி ருசிச்சி உருவாக்கிருப்பாய்ங்க.

முதல் வகையில, ஒரு பானையில எண்ணை கொதிச்சிட்டு இருக்கும். அந்த பானைக்கு அடியில ஒரு சின்ன கல்லு கிடக்கும். எண்ணை கொதிச்சிட்டு இருக்கும்போதே குற்றவாளி, உள்ள கைய விட்டு அந்த கல்ல எடுக்கனும். கிட்டத்தட்ட முழங்கை வரைக்கும் உள்ள விட்டாதான் கல்ல எடுக்க முடியும். கல்ல எடுக்குறதுக்கு முன்னால அரவிந்தசாமி கை மாதிரி இருக்கது, எண்ணை சட்டிக்குள்ள கைய விட்டு கல்ல எடுத்தப்புறம் அடுப்புல வெந்த சாமி கைமாதிரி தீஞ்சி போயிரும்.

இப்ப நம்ம என்ன நினைப்போம். ஒரு வேளை எண்ணைக்குள்ள கைய விட்டு கல்லை எடுத்துட்டா அவன் நல்லவன். கல்லை எடுக்க முடியலைன்னா அவன் தப்பானவன்னு. ஆனா அது தான் இல்லை. வெளில கல்ல எடுத்தோன, தப்பு செஞ்சிருக்கானா இல்லையான்னு தெரியாது. வெளில வந்தோன நல்லவனுங்க மாதிரி வெந்துபோன கையிக்கு மருந்து போட்டு கட்டெல்லாம் கட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டுருவாய்ங்க.

மூணு நாள் கழிச்சி, அந்த கட்ட அவுத்து பாப்பாங்க. அந்த புண்ணு ஓரளவு குணமாயிட்டு வர்ற மாதிரி இருந்தா அவன் நல்லவன். இல்லை குணமாகாம இன்னும் மோசமா இருந்தா அவன் குற்றவாளின்னு தீர்ப்பு சொல்லி அவன மட்டை பன்னிருவாய்ங்க. ஏண்டா அவனுக்கு சுகர் எதுவும் இருந்தா அவன் நிலைமை என்னடா ஆகுறது?

இதுல இன்னொரு முறை நம்ம கரகாட்டக்காரன் டைப்.. நல்ல பழுக்க காய்ச்சின கம்பிங்க மேல ஒரு பத்தடி நடந்து போவனும். இல்லைன்னா பழுக்க காய்ச்சின அதே கம்பிய கையில கொஞ்ச நேரம் புடிச்சிருக்கனும். காப்பி டம்ளர் கொஞ்சம் அதிக சூடுன்னாலே நம்மளால புடிக்க முடியல.. எப்புடித்தான் அதையெல்லாம் புடிச்சாய்ங்களோ? புடிச்சப்புறம் மேல சொன்ன மாதிரி காயத்துக்கு மருந்து வச்சி ஆறப்போட்டு, மூணு நாள் கழிச்சி காயத்தோட current status ah பாத்துட்டு மர்கயா சாலா.

அட என்னப்பா யார் நடந்து போனாலும் காலு கையி பொசுங்கப்போறது உண்மைதான். இதுலயெல்லாம் எப்புடி ப்ரூப் பன்றதுன்னு தோணும். பன்னிருக்காங்களே.. ஒரு அம்மா பன்னிருக்காங்களே.. Emma of Normandy ங்குற ஒரு அம்மா, அவங்கமேல சுமத்தப்பட்ட குற்றத்துக்காக, நெருப்பு கொழம்புல நடந்து கொஞ்சம் கூட காயமே படாம, குற்றமற்றவர்னு ப்ரூப் பன்னிருக்கதா வரலாறு சொல்லுது.

நல்லா கொழுத்த கோழி ஒண்ணு,  சிக்கன் கடைக்கு முன்னாலயே போயி நின்னு தொடைய தட்டிக் காமிச்சிச்சாம். அது மாதிரி நமக்கு நாமே ஆப்ப எடுத்து சொருவிக்க கூடாது. ஒருத்தர் இதே மாதிரி தான் அவருக்கு அவரே வெடி வச்சிக்கிட்டு செத்துருக்காரு.

இயேசுவ சிலுவையில அறைஞ்சு கொடுமைப் படுத்திட்டு இருக்கும்போத போது, அவரோட கால் ரெண்டையும் உடைக்கிறதா ரோமன்ஸ் முடிவு பன்னிருக்காங்க. ஆனா இயேசு முன்னாலயே இறந்துட்டதா அவங்களுக்கு சந்தேகம் வந்துருச்சி. அப்போ அங்க இருந்த ஒரு ரோமன் போர் வீரன், அவர் உயிரோட இருக்காரா இல்லையான்னு பாக்க, அவன் கையில வச்சிருந்த ஈட்டிய வச்சி இயேசுவோட ஒரு பக்கதுல குத்துனானாம். குத்துன உடனே இயேசு உடல்லருந்து  ரத்தமும் தண்ணியும் வந்ததாக எஸ்டிடி சொல்லுது. இப்ப மேட்டர் என்னன்னா அவர குத்துன அந்த ஈட்டியத்தான் புனித ஈட்டின்னு சொல்றாங்க. அந்த ஈட்டி ”எங்ககிட்டதான் இருக்கு” எங்ககிட்டதான் இருக்குன்னு உலகத்துல நிறைய கிறிஸ்தவ தேவாலயங்கள் சொல்லிக்கிறாங்களாம்.  

இப்போ  Peter Bartholomew ங்குறவரு ஒரு பெரிய ஆட்டக்காரரு. ராகவன் இன்ஸ்டிங்க்ட் மாதிரி அவருக்கு நிறைய இன்ஸ்டிங்க்ட், நிறைய விஷன்லாம் அப்ப வருமாம். அவரு என்ன பன்னிருக்காரு 1099 ல அந்த புனித ஈட்டிய தான் கண்டுபுடிச்சிட்டதா  எல்லார்கிட்டயும் சொல்லி, கண்டுபுடிச்சத கொண்டாடுறதுக்காக ஒரு பார்ட்டியையும் ஏற்பாடு பன்ன சொல்லிருக்காரு. மக்கள் எல்லாம் அந்த ஈட்டிய பாக்க ஆர்வமா காத்திருக்க, நம்மாளு செந்தில் குடுத்த காசுக்கு முறுக்கு வாங்கி திண்ணுட்டு ஒரே ஒரு வெத்தலை வாங்கிட்டு வர்ற மாதிரி, ஒரு சின்ன மெட்டல் பீஸை கொண்டு வந்து “இதாண்ணே அது” ன்னு சொல்லிருக்காரு. வக்காளி.. வெறியாயிட்டாய்ங்க எல்லாரும். உடனே நம்மாளுமேல 420 கேஸ போட்டுப்புட்டாய்ங்க.

கடுப்பான பீட்டரு நம்ம இதற்குத்தானே ஆசைபட்டாய் ரோஸ்மிக்கு மாதிரி “இருடா… இப்ப என்ன பண்ணுறேன்னு பாரூடா.. நா தப்பு பன்னலன்னு ப்ரூப் பண்றேண்டா” ன்னு வாலண்டியரா அவரே போய் தீமிதிச்சிருக்காரு. கொஞ்சம் எக்ஸ்ட்ராவா மிதிச்சிட்டாரு போல. அப்புறமென்ன.. கதம் ஆயிட்டாரு. 

அடுத்த பதிவில் தொடரும்... 


Thursday, September 10, 2015

WAYWARD PINES!!!


Share/Bookmark
ஆங்கிலப் படங்கள் பாக்க ஆரம்பிச்சதுலருந்தே இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் டைப் படங்கள் மேல ஒரு தனி பிரியம். Free wifi கிடைச்ச காலத்துல mystery genre படங்களா டவுன்லோட் பண்ணி பாத்துக்கிட்டு இருந்தேன். கல்லூரி காலங்கள்ல SAW, Hostel மாதிரியான ஹாரர் படங்கள்ல இருந்த ஆர்வம், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மாறி சஸ்பென்ஸ் த்ரில்லர் மிஸ்ட்ரி படங்கள்ல ஒட்டிக்கிச்சி. இந்த மாதிரி படங்களைப் பாத்துக்கிட்டு இருக்கும்போது, ஒரு வேளை இப்புடி இருக்குமோ, இல்ல ஒரு வேளை அப்புடி இருக்குமோ என யோசிச்சிட்டே பாக்குற பழக்கம் பலரைப் போல எனக்கும் கொஞ்சம் உண்டு. அப்டி நாம “இப்டி இருக்குமோ” ன்னு கணிச்சி வைக்கிற விஷயங்கள் எதுவும் இல்லாம, நம்ம அறிவுக்கு எட்டாத  ஒரு ட்விஸ்ட் வரும்போதுதான் நமக்கு அது நல்ல ட்விஸ்ட்டாத் தெரியும்.

அதே மாதிரி எனக்கு பயப்பட ரொம்ப பிடிக்கும். அதாவது நா மட்டும் தனியா ரூமுக்குள்ள டோர லாக் பன்னிட்டு பேய் படம் பாக்க எனக்கு ரொம்ப புடிக்கும். நோட் திஸ் பாய்ண்ட் டோர லாக் பன்னிக்கிட்டு.. கதவு தொறந்திருந்தா அடிக்கடி வெளில யாரோ க்ராஸ் பன்ற மாதிரி மன ப்ராந்தியாகி ஒரு பீதி வந்து இன்னும் டர்ர்ர கிளப்பும். அதுனால எப்பவும் பேய் படம்னா நாலு பக்கமும் சீல் பன்னிட்டு தான் பாக்குறது.

அந்த வகையில முதல் முதல்ல காலேஜ்ல நா பாத்த ஒரு படம் எனக்கு ரொம்ப பிடிச்சிது. அந்தப் படம் House of Wax. நிறைய பேர் பாத்துருப்பீங்க.
ஒரு ஃபுட்பால் மேட்ச்சுக்கு போற ஒரு ஆறு பேர் ஒரு நாள் ராத்திரி வழியில டெண்ட் அடிச்சி தங்குறாங்க. காலையில எழுந்து பாத்தா அவங்க கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. எதோ ஒரு ஸ்பேர் பார்ட் போயிடுச்சின்னு கண்டுபுடிச்சப்புறம், ரெண்டு பேர் மட்டும் பக்கத்துல உள்ள ஒரு ஊருக்கு போய் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கிட்டு வர்றதுக்காகக் கிளம்புறாங்க. அந்த ஊருக்குள்ள நுழையும் போது, ஊரே ரொம்ப அமைதியா இருக்கு. தெருவுல யாருமே இருக்கமாட்டாங்க. ஒரு குப்பைத் தொட்டிக்குள்ள ஒரு அஞ்சாறு நாய் குட்டிங்க கத்திக்கிட்டு இருக்கும்.

ஒரு சர்ச் இருக்கும். அதுக்குள்ள ஒரு பத்து பேர் ப்ரே பன்னிட்டு இருப்பாங்க. இவங்க அந்த தெருவுக்குள்ள வந்ததுமே, ஒரு வீட்டு மேல் மாடில ஒரு ஆண்டி ஜன்னல் வழியா பாத்துட்டு டக்குன்னு ஸ்க்ரீன மூடிரும். அங்க உள்ள ஒரு ஸ்பேர் பார்ட்ஸ் கடையில ஒருத்தன் இவங்களுக்கு தேவையான பொருளை குடுப்பான்.



ஸ்பேர் வாங்கிட்டு அந்த ஊர்ல ஃபேமஸான Wax Museum ah போய் பாப்பாங்க. அங்க உள்ள எல்லா மெழுகு பொம்மைங்களுமே ரொம்ப ரியலா இருக்கும். கொஞ்ச கொஞ்சமா இவங்களுக்கு அந்த ஊர்ல எதோ ஆபத்து இருக்கது தெரியவரும். அப்புறம்தான் அவங்களுக்கு தெரியும் அந்த ஊர்லயே மொத்தமா ரெண்டே பேர்தான் இருப்பாங்க. அந்த ரெண்டு பேர், வர்றவங்க எல்லாரையும் கொன்னு மெழுகு பொம்மைங்களா ஆக்கி வச்சிருவாய்ங்க. அவிய்ங்க ரெண்டு பேர்கிட்டருந்து எப்டி தப்பிக்கிறாங்கங்குறது தான் அந்தப் படம்.   அந்த தொட்டிக்குள்ள கிடந்த நாய்குட்டிங்க, ஸ்கிரீன மூடுன ஆண்டி, சர்ச்ல ப்ரே பன்ற ஃபாதர் & Co எல்லாமே செட்டப். அந்த ஊரை நார்மலா காட்டுறதுக்காக அதெல்லாம் ரிமோட்டான ஒரு இடத்துலருந்து இவய்ங்களே கண்ட்ரோல் பன்னுவாய்ங்க.  

இப்ப இந்தப்படம் எத்தனை பேருக்கு புடிக்கும்னு தெரியல. IMDB la இதோட ரேட்டிங்க் பாத்தா கூட வெறும் 5.3 தான். ஆனா எனக்கு இப்ப வரைக்கும் mystery டைப் படங்கள்னதுமே மைண்டுல வந்துபோற ஒரு சில படங்கள்ல இதுவும் ஒண்ணு.

படம் பாக்குறவங்கள ரெண்டு வகையில பயப்பட வைக்க முடியும். வெறும் இருட்டையும், முகம் கிழிந்து தொங்கும் பேய்களையும், டமால் டுமீல்ன்னு எதிர்பாக்காத நேரத்துல மியூசிக்கயும் போட்டும் கண்டிப்பா எல்லாரையும் பயப்பட வைக்க முடியும். ஆனா இது எதுவுமே இல்லாம அமானுஷ்யமான சில விஷயங்களக் காமிச்சும் பாக்குறவங்கள பயமுறுத்தலாம். அப்படிப்பட்ட ஒரு ஆள்தான் மனோஜ் நைட் ஷாமலன். ஆரம்பத்துல பெரிய லெவல்ல பேரெடுத்துட்டு போகப்போக தொடர் தோல்விகளால பெயரைக் கெடுத்துக்கிட்டவரு.

இந்த அமானுஷ்யங்கள வச்சி பயமுறுத்துற ரெண்டாவது டைப்ப சேந்தவரு இவரு. எந்த விதமான க்ராஃபிக்ஸ் காட்சிங்களும் இருக்காது. கொடூரப் பேய்களும் இருக்காது. ஆனா இவரோட கதைகள் எல்லாத்துலயும் அந்த அமானுஷ்யத்தன்மை விரவிக் கிடக்கும். Sixth sense ,Signs ரெண்டு படங்களும் பெரும்பாலும் எல்லாரும் பாத்துருப்பீங்க. எல்லாரும் ஏலியன காமிக்க என்னெனவோ பன்னிட்டு இருக்க, மொத்தமே ஒரே ஒரு ஏலியன வச்சி,  அதிகபட்சம் அஞ்சே நிமிஷம்தான் அந்த ஏலியன காமிச்சி படம் முழுசும் மிரட்டிருப்பாரு Signs ல.

அதே மாதிரி தான் The Village உம். ஊர் எல்லையை தாண்டி யாரும் வெளில போகக்கூடாதுங்குற கட்டுப்பாட்டோட இருக்க ஒரு தனி கிராமம். எல்லைக்கு அந்தப்பக்கம் கொடூரமான சில விஷயங்கள் இருப்பதாக நம்பி, அதுங்களுக்கு பயந்துகிட்டு இருக்க கிராமம். அதுல கண்ணு தெரியாத ஒரு ஹீரோயின் காதலனுக்காக தனியா அந்த எல்லைய கடந்து போற மாதிரி ஒரு படம். எந்தெ ஜிம்மிக்ஸ் வேலையும் இருக்காது. ஆனா பயமா இருக்கும்.



The Happening ன்னு இன்னொரு படம். திடீர்ன்னு ஒரு சிட்டில இருக்க எல்லாரும் அவிங்களா தற்கொலை பன்னிக்கிட்டு சாவுவானுங்க. ஏன் சாவுறாங்கன்னு தெரியாது. ஆனா நல்லாதான் இருப்பாய்ங்க. டக்குன்னு துப்பாக்கிய எடுத்து அவன அவனே  சுட்டுக்கிட்டு செத்துப்போயிருவாய்ங்க. பில்டிங் மேல நல்லா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கவிய்ங்க, திடீர்னு மேலருந்து கூட்டம் கூட்டமா குதிச்சி சாவுவானுங்க. பாத்தவய்ங்கல்லாம் பீதியெட்டுத்து எஸ்கேப் ஆயி ஓடுவானுங்க. தப்பிச்சி போறவனுங்களே வேணும்னே கார நேரா கொண்டு போய் மரத்துல மோதி சாவுவானுங்க. இப்டி ஏன் சாவுறானுங்கன்னு கொஞ்ச கொஞ்சமா சொல்றதுதான் the happening.

ஒரு அப்பார்ட்மெண்ட், ஒரு Swimming pool இத மட்டும் வச்சே Lady In the water ன்னு fantasy கலந்த ஒரு ஹாரர் படம். ஒருசில இடங்களத் தவற இந்தப் படமும் நல்லா தான் இருக்கும்.  ஆனா நிறைய பேருக்கு பிடிக்கல. நைட் ஷாமலன கழுவி ஊத்த ஆரம்பிச்சிட்டாய்ங்க. இந்தப் படத்த கழுவ ஆரம்பிச்சவிங்க இப்ப வரைக்கும் அவர கழுவி ஊத்திக்கிட்டு தான் இருக்காய்ங்க. ஏன்னா நம்மாளு அடுத்தடுத்து எடுத்த படங்கள் அப்டி.

சரி விடுங்க. இப்ப எதுக்கு டைட்டில் என்னவோ போட்டுட்டு என்னென்னவோ சம்பந்தம் இல்லாம பேசுறேன்னு பாக்குறீங்களா? வர்றேன். ரெண்டு மாசத்துக்கு முன்னால ஒளிபரப்பப்பட்ட Wayward Pines சீரியல்ல நைட் ஷாமலனும் One of the directors. அந்த ஒரு காரணத்துக்காகவே அந்த சீரியல் பாக்க ஆரம்பிச்சேன். ரெண்டு மாசத்துக்கு முன்னால Predestination ன்னு ஒரு படத்த பாத்தப்போ படம் பாத்த அன்னிக்கு நைட்டு ரொம்ப நேரம் தூக்கம் வராம அந்தப் படத்தப் பத்தியே நினைச்சிட்டு இருந்தேன். கிட்டத்தட்ட அதே எஃபெக்ட் இந்த சீரியல்ல ஒரு சில எபிசோடுகளப் பாத்தப்புறமும் இருந்துச்சி. இந்தப் பதிவு எழுத முக்கியக் காரணமும் அதான்.

காணாமல் போன ரெண்டு சீக்ரெட் ஏஜெண்டுகள தேடிப்போற இன்னொரு ஏஜெண்டுக்கு வழில ஆக்ஸிடெண்ட் ஆயிடுது. அவர் கண் முழிச்சி பாக்கும் போது எதோ ஒரு காட்டுக்குள்ள கிடக்குறாரு. எழுந்து நடந்து வந்தா Wayward Pines ங்குற ஊர். அந்த ஊர்ல எல்லாமே விசித்திரமா இருக்கு. அவர் ஆஃபீஸுக்கு ஃபோன் பன்னா லைன் வேற எங்கயோ போகுது. அவர் தேடி வந்த ஒரு லேடி ஏஜெண்ட அந்த ஊர்ல பாக்குறாரு. ஆனா அந்த பொண்ணு கொஞ்சம் வயசான மாதிரி இருக்கு. வேற யாரோடயோ குடும்ப நடத்திக்கிட்டு இருக்கு. கேட்டா எட்டு வருஷமா அந்த Wayward Pines ல இருக்கதா சொல்லுது. ஆனா அந்தப் புள்ள போன வாரம்தான் காணாமப் போயிருக்கும்.

அவர் தேடி வந்த இன்னொரு ஏஜெண்டு  பாடி ரொம்ப டீகம்போஸ் ஆன நிலையில ஒரு தனி வீட்டுல பிணமா கிடக்குறாரு. மத்தவங்ககிட்ட விசாரிக்கும்போது அவரு Wayward Pines ல ஒரு வருஷத்துக்கும் மேலா தங்கிருந்ததா சொல்றாங்க. போன வாரம் பாத்த ரெண்டு ஏஜெண்டுங்கள்ள ”ஒருத்தர் எட்டு வருஷமா இங்க இருக்கதா சொல்றா, இன்னொருத்தன் ஒண்ணரை வருஷாமா இங்க இருந்ததா சொல்றாங்க” ன்னு நம்ம ஹீரோவுக்கு ஒரே குழப்பம்.



அதுமட்டும் இல்லாம அந்த Wayward Pines எல்லாமே விசித்திரமா இருக்கு. அந்த ஊர் என்ன? ஏன் அப்படி இருக்கு? நம்மாளு அந்த ஊர்லருந்து எஸ்கேப் ஆனாராங்குறத சொல்றதுதான் இந்த சீரியல். அடுத்தடுத்த சீசனுக்காக காத்திருக்கத் தேவையில்லை. ஒரே சீசன் தான்.  பத்து எபிசோடுல முடிஞ்சிருது. மேல நா சொன்ன The Village படத்துக்கும், இதுக்கும் ஒரு சில ஒற்றுமைகள் இருக்கும். ஆனாலும் இதுல கதைய கொண்டு போயிருக்க விதம், அங்க நடக்குற ஒவ்வொரு அமானுஷ்யமான விஷயங்கள் மற்றும் இதுல வர்ற ட்விஸ்டுன்னு எல்லாமே வேற லெவல்.

முதல் ஆறு எபிசோடுகள் செமையா இருக்கும். அடுத்த நாலு சொன்ன கதைய முடிக்கனுமேங்குறதுக்காக எடுக்கப்பட்டது. ஆனா முதல் ஆறு எபிசோடுகளுக்காகவும், இந்த கதைக்காகவும் Mystery டைப் பிரியர்கள் தவறவிடாமல் பாக்கவேண்டிய ஒரு சீரியல்.

Torrent கீழே:





Saturday, September 5, 2015

பாயும் புலி - இது பஜங்கரமான புலி.. பயந்துடாதீங்க!!!


Share/Bookmark
ஆஃபீஸ் கேண்டீன்லயோ, இல்ல வீட்டுலயோ திடீர்ன்னு ஆளுங்களுக்கு சாப்பாடு பத்தாமப்போச்சின்னு வைங்க, அந்த சமயத்துல மேனேஜ் பன்றதுக்குன்னே ப்ரத்யேகமா கண்டுபுடிக்கப்பட்ட ஒரு சாப்பாடு இருக்கு. அதான் உப்புமா. எண்ணை தண்ணி, மிளகா வெங்காயம் எல்லாத்தையும் போட்டு கொத்திக்க வச்சி, ரவா அள்ளி உள்ள கொட்டி, மழைச்சாரல் மாதிரி கொஞ்சம் உப்ப அங்கங்க தூவி நாலு கிண்டு கிண்டி இறக்குனா உப்புமா ரெடி. மேகி பன்ற நேரத்துல உப்புமா செஞ்சிடலாம். ஆனா அத திங்கிறவனுக்கு தான் தெரியும் அது எவ்வளவு கண்றாவியா இருக்கும்னு. அந்த மாதிரியான ஒரு அவசர உப்மாதான் இந்த பாயும் புலி. இவிங்க அவசரத்துக்கு கிண்டி நம்மள சாப்புட வச்சி டெஸ்ட் பன்னிருக்காய்ங்க.

விஷாலுக்கும் கடைசி ரெண்டு படம் சரியாப்போகல… சுசீந்திரனுக்கும் கடைசி படமம் சரியாப் போகல. ஆக ரெண்டு பேரும் சேந்து “வாங்க ஜீ, வாங்க ஜீ,, நாம ரெண்டு பேரு சேருரோம்… பாண்டிய நாடு மாதிரியே ஒரு படத்த குடுக்குறோம்.. பின்றோம்” ன்னு முடிவு பன்னி இறங்கிருப்பாய்ங்க போல. நம்மள பின்னிட்டாய்ங்க

ஒரு படம் எடுக்கும்போது ஒண்ணு ஹரி, லிங்குசாமி மாதிரி முழுசா இறங்கிடனும். அடிச்சா கின்னுன்னு இருக்கது, ஆளுங்கள தூக்கி பனை மரத்துல வீசுறதுன்னு. இல்லையா  எந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் ஏர்ல பரக்குறதெல்லாம் இல்லாம மிஷ்கின், பாலா மாதிரி  இறங்கிடனும். ரெண்டும் இல்லாம, ரெண்டுக்கும் நடுவுல இருக்கமாதிரி “படம் விஷாலுக்கு ஏத்தா மாதிரி ஆக்‌ஷன் படமாவும் இருக்கனும், சுசீந்திரன் எடுக்குற மாதிரி கொஞ்சம் ரியலிஸ்டிக்காவும் இருக்கனும்னு எடுத்தா இப்புடி கப்பியாத்தான் ஆகும்.

சரி படம் பாக்கனும்னு நினைக்கிறங்க, கதை தெரிஞ்சா படம் சுவாரஸ்யமா இருக்காதுன்னு நினைக்கிறவங்க அப்புடியே கடைசிக்கு பாராவுக்கு ஜம்ப் பன்னிடுங்க. ஆனா படம் பாத்ததுக்கப்புறம் “ஏம்மா இதெல்லாம் ஒரு பொண்ணாம்மா” ங்குற ரேஞ்சுல ஃபீல் பண்ணுவீங்கங்குறது உறுதி.

மதுரையில பெரிய தொழிலதிபர்கள மிரட்டி பணம் பறிக்குது ஒரு கும்பல். அவங்கள புடிக்கப்போன ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர கொன்னுடுறாங்க. கோவமான போலீஸ்காரங்க மொத்த ரவுடிகளையும் என்கவுண்டர் பன்ன ப்ளான் பண்றாங்க. இத போலீஸ் தான் பண்ணாங்கன்னு தெரியனும். ஆனா நாம நேரடியா பன்னக்கூடாது. ரவுடிகளுக்கு பயம் வரனும் ஒரு மிகப்பெரிய அண்டர்கவர் ஆப்ரேஷன் பன்றாங்க. அத பன்னப்போறவருதான் நம்ம விசாலு.

ஒண்ணும் இல்லை. ஷேர் பேசுறேன் ஷேர் பேசுறேன்னு ஒவ்வொருத்தரையா மீட் பண்ணி அந்த இடத்துலயே சுட்டுக் கொல்றாரு. அந்த காட்சிகள் ஒரு பரபரப்பாவும் இல்லை த்ரில்லிங்காவும் இல்லை. “இதான் உங்க அண்டர் கவர் ஆப்ரேசனாடா… அண்டர் கவருக்கு உள்ள மரியாத போச்சேடா உங்களால”

இதுல இடையில இடையில சூரி காமெடி பன்றேங்குற பேர்ல நம்ம வைகைப் புயல் பன்ன அத்தனை பழைய காமெடியையும் சுட்டு செஞ்சிக்கிட்டு இருக்காரு. ஒண்ணு ரெண்டு இடத்துல லேசா சிரிப்பு வரும். ஆனா நம்ம அந்த காமெடிக்கு சிரிக்கிறத விட படத்துல விசாலுதான் சூரி காமெடிக்கு ரொம்ப சிரிக்கிறாரு. ஹரி படத்து காமெடிய விட கப்பியா இருக்கு.

இதுல காஜல் அகர்வால் வேற.. வந்தாலே பாட்டு. முதல் பாதி முழுசுமே முதல்ல காமெடி சீன், அடுத்து லவ் சீன், அடுத்து ஒரு பாட்டு, அடுத்து ஒரு ஆக்‌ஷன் சீன், ஒரு குடும்ப சீன் ஒரு சைக்கிள் முடிஞ்சிது. திரும்ப முதல்லருந்து காமெடி சீன் லவ் சீன்னு, ஒரு பாட்டுன்னு இதே ஆர்டர்ல தான் நாலு ரவுண்டு போயி முதல் பாதி முடியிது. இண்டர்வல்ல ஒரு டுஸ்டு. அப்டின்னு சொல்லிக்கிறாங்கப்பா.

இண்டர்வலுக்கு முன்னாலயே மொத்த ரவுடிகளையும் ஒழிச்சிக்கட்டிருறாரு. ஆனாலும் மெய்ன் வில்லன் ஒருத்தன் இருக்கான். அவன கண்டுபுடிச்சி தூக்குறதுதான் ரெண்டாவது பாதி. விஷாலோட அண்ணனா சமுத்திரக்கனி. அவர ஸ்கிரீன்ல பாக்குறது மட்டுமே நமக்கு கொஞ்சம் ஆறுதலக் குடுக்குதே தவிற, அவருகுன்னு எந்த சீனும் நல்லா இல்லை. ஜிம்முக்கெல்லாம் போவாரு போல. முக்கால்வாசி காட்சில பனியனோட உடம்ப முறுக்கிக்கிட்டே நிக்கிறாரு. அதுவும் அவரு ஒரு ஜஸ்டிஃபிகேஷன் குடுப்பாரு  பாருங்க. ” நீ போட்டுருக்க பாடி ஸ்ப்ரேக்கும், உன் பல்லுல இருக்க கரைக்கும் நீ சொல்ற கதைக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா?” ன்னு சிங்கம் சூர்யா கேப்பாரே. அதே தான் கேக்கனும்போல இருந்துச்சி. ஏண்டா சும்மா எதாவது சொல்லனும்னு சொல்றீங்களேடா.

இந்த மாதிரி படங்களுக்கு விஷுவல் கொஞ்சம் ரிச்சா இருந்தாதான் எடுபடும். ஆனா படம் முழுசும் பயங்கர லோ பட்ஜெட் படங்கள் மாதிரி, மொக்கையாவே இருக்கு. அதுவும் இவிங்க குத்துபாட்டு, ஐட்டம் சாங்கு எடுக்கவெல்லாம் செட்டு போட்டுருக்காய்ங்க பாருங்க. கண்றாவி. ஹைடெக் செட்டுகள்ள ஆடிக்கிட்டு இருந்த காஜல் ஜிலேபி இப்புடி கப்பியான செட்டுகள்ல ஆடிக்கிட்டு இருக்கதா பாத்தா கொஞ்சம் பாவமாத்தான் இருந்துச்சி.

சுசீந்திரன் படங்கள்ல பாண்டிய நாடு தவிற வேற எதுவும் எனக்கு அவ்வளவா புடிச்சது இல்லை. அவரோட மேக்கிங்க் ஸ்டைல் மற்றும் காட்சிங்க AL.விஜய் படங்கள்ல வர்ற காட்சிகள் மாதிரி எதுவுமே இல்லாம சற்று டொம்மையாக இருக்கும். இந்தப் படத்துலயும் எனக்கு அப்டித்தான் தோணுச்சி. இந்த மாதிரி மசாலா படங்களை இயக்க இன்னும் சற்று பயிற்சி வேணும்.

படத்த மொக்கையாக்குனது மட்டும் இல்லாம இமான் போட்ட ரெண்டு நல்ல ட்யூனையும் செம கப்பியாக்கிவிட்டாய்ங்க. “சிலுக்கு மரமே” யும் “புலி புலி புலி” பாட்டும் தான் சமீபத்துல நா அதிகமுறை கேட்ட பாட்டுங்க. ரெண்டுமே பிக்சரைசேஷன் கப்பி. கலா மாஸ்டரோட மானாட மயிலாடவுல ப்ராப்பர்ட்டி ரவுண்டுன்னு ஒண்ணு வைப்பாய்ங்களே.. எதாவது ப்ராப்பர்ட்டிய வச்சி ஆடனும்னு.  அதுக்கு ப்ராக்டிஸ் எடுத்தாய்ங்களா என்னன்னு தெரியல.. சிலுக்கு மரமேல ஃபுல்லா கையில குச்சி, வேல்கம்பு, மான்கொம்புன்னு கண்டத வச்சிக்கிட்டு கடுப்பேத்துறாய்ங்க.

அவன் அவன் எரிச்சலாயி க்ளைமாக்ஸ பாத்துக்கிட்டு இருக்கும்போது இமான் BGM போடுறேங்குற பேர்ல ஹை பிட்ச்ல கத்துறாரு பாருங்க. சுசீந்திரனே தேவலாம் போல இருந்துச்சி. நிகிதா ஒரு பாட்டுக்கு வருது. அதுவும் அவ்வளவு சிறப்பா இல்லை. ஜெப்பிரக்காஷ்ங்குற நல்ல நடிகர இன்னும் எத்தனை படத்துல மொக்கை பன்னப் போறாய்ங்கன்னு தெரியல. அவரு ஏன் இந்த மாதிரியெல்லாம் நடிக்க ஒத்துக்கிறார்னும் தெரியல. விஷால் ஆள் பாக்க நல்லா இருக்காரு. அவ்ளோதான். மத்தபடி படத்துல வேற பெர்மார்மன்ஸ் காட்ட எதுவும் சிறப்பான காட்சிகள் இருந்தா மாதிரி தெரியல.


மொத்தத்துல பாயும் புலி மேல சொன்ன மாதிரி அவசர அவரமா கிண்டப்பட்ட அரைவேக்காட்டு உப்மா தான். சொல்லிக்கிற மாதிரி பெருசா எதுவும் இல்லை. இன்னொரு தலைவர் பட டைட்டிலும் காலி.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...