Monday, April 15, 2013

குடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா ங்கொய்யால !!!


Share/Bookmark
ஏங்க ஏங்க... எங்க ஓடுறீங்க,... இது அலாவுதீன் பூதம் இல்லீங்க... நல்லா பாருங்க நம்ம பிரபு அண்ணேன் தான். வெறித்தனமா டயலாக் பேசுறதா நெனைச்சி மூஞ்ச அப்புடி  வச்சிருக்கதால உங்களுக்கு அடையாளம் தெரியல. ஆனா ப்ரபுன்னு தெரிஞ்சப்புறம்  தான் இன்னும் நாலுஅடி எக்ஸ்ட்ராவா இன்னும் ஜம்ப் பண்ணி ஓடுவீங்கன்னு தெரியும்.  இந்தாளூ டிவில வந்து கத்துன கத்துல எங்க பக்கத்துவீட்டு கெழவிக்கு தூக்கிவாரிப்போட்டு மாரடைப்புல மண்டைய போட்டுருச்சி. அவரு அப்பாவ நடிக்க வச்சிருந்தா கூட இப்புடி நடிச்சிருப்பாராண்ணு தெரியல. அன்னிக்கு ஓரு நாள் கல்யாண் போயிருந்தப்போ நகை எடுக்க வந்துருந்த ஒருத்தரு அங்க வேலை பாத்துகிட்டு இருந்தவர்கிட்ட "ஏங்க.. ப்ரபு என்ன உங்க கடையில பார்ட்னரா?" ன்னாரு. அதுக்கு கடையில இருந்தவரு "அதெல்லாம் ஒண்ணுமில்லையே!! சும்மா விளம்பரத்துக்கு மட்டும் தான்!! (அட அது வெறும் அள்ளக்கையிங்க ன்னு டீசன்ண்டா சொன்னாரு) ன்னு சொல்ல "அப்புறம் எதுக்குப்பா இந்த கத்து கத்துராரு... நெஞ்சுவலி எதுவும்  வந்துரப்போவுது... அவரு கத்துனதுல ஏன் ரெண்டு வயசு பேத்தி பயந்து சொகமில்லாம போச்சப்பா.." ன்னு அவரு கஷ்டத்த சொல்லி பொலம்பிகிட்டு  இருந்தாரு.

இந்த ஜூவல்லரி காரனுக ஆளுகல புடிக்கிறானுக பாருங்க.. ஜூவல்லரிக்குள்ள போட்டி இருக்குதோ இல்லயோ ஆனா நடிக்கிறவனுக வெளுத்து கட்டுறானுக. இந்த பக்கம் பாத்தா பிரபு ரோட்டு கடைகள்ல மூணு பத்துருவா முணு பத்துருவா ன்னு கத்துரவியிங்க மாதிரி அடித்தொண்டை கிழிய கத்திகிட்டு இருக்காரு. "நம்ம கடையில தான் ரேட் கார்டு இருக்கு.. இங்க வாங்க" வாங்கங்குறாரு. ஏண்டா அந்த ரேட் கார்ட நாங்க என்ன ஃப்ரேம் போட்டாடா வீட்டுல மாட்டிக்க போறோம்? சரி இவ்வளவு வந்து வக்கனையா பேசுறாங்களே...

ரேட் கார்டுன்னா எதாவது வெலை கொஞ்சம் கம்மியா போட்டுருப்பாய்ங்க போலருக்குன்னு பாத்தா சத்தியமா இல்லை. அன்னிக்கு பாக்குறேன்...  சும்மா மொழுக்கட்டீர்னு ஒரு மோதரம்... அதுக்கு செய்கூலி 17%... சேதாரம் 10%... ஏண்டா  டேய் எதாவது  செஞ்சாதானடா.. செய்கூலி வேணும்... எதாவது சேதாரம் ஆகும்... எதுமே இல்லாத மொழுக் மோதரத்துக்கும் 17% செய்கூலி, மோதரத்துல ரங்கோலி கோலம்மாதிரி எதாவது டிசைன் போட்டுருந்தாலும் அதுக்கும் 17 பர்சண்டேஜ் செய்கூலியா? நல்லா ஆட்டைய போடுறீங்கடா..

இவிங்க இப்புடின்னா விஜய் டிவி ப்ரோக்ராம பாத்து காப்பி அடிக்கிற சன் டிவி மாதிரி இன்னொரு குரூப் இருக்காய்ங்க.. ஜாய் ஆலுக்காஸ்... இவிங்க இன்னொரு காமெடி ப்ரபு குரூப் ரேட் கார்டுன்னு போட்டு காமெடி பண்ணிகிட்டு இருக்கதுக்கு இவுங்க போட்டியா ஒண்ணு பண்றானுகளாம்... அதான் கிளியர் பிரைஸ் டேக்...  ஆமா  அமெரிக்கா நிலாவுக்கு ராக்கெட் அனுப்பிட்டாங்கனு பதிலுக்கு ரஷ்யா இன்னொரு  ராக்கெட்ட லாஞ்ச் பண்ணிட்டீங்க... ஏண்டா எப்புடியும் எங்களுக்கு புரியாத மாதிரி எதோ ஒரு percentage ah போட்டு ஆட்டைய போட போறீங்க... அதுக்கு ரேட் கார்டு  போட்டா என்ன போடாட்டி என்ன? 

அதுக்கும் மேல ஒரு காமெடி இவனுக விளம்பரத்துக்கு ஒரு ஆள் புடிச்சிருக்கானுக பாருங்க... மாதவேன்... இவரு அந்த விளம்பரத்துல பேசுற ஒரே டயலாக்கு "இந்த வாரம் கோவைய ஜாய் ஆலுக்காஸ் புது ப்ராஞ்ச் ஓப்பன் பண்ராங்க.. நா வர்றேன்... நீங்களும் வந்துருங்க... " இதான்.. ஏண்டா டேய் நீ போனா உனக்கு  ஒரு ஜோடி செருப்ப கிஃப்ட் ராப் பண்ணி ஃப்ரீயா குடுப்பாய்ங்க...அதுக்காக பல்ல காட்டிகிட்டு கெளம்பிருவ.நாங்க எதுக்குடா வரணும். நாங்க வந்தா எங்களுக்கு ஒரு வெங்கல கிண்ணம் கூட கெடைக்காது...

அந்த பக்கம் அந்த அலாஉதீன் பூதம் கத்திகிட்டு இருக்குன்னா இந்த பக்கம் ஜோஸ் ஆலுக்காஸ் சூப்பரா ஒருத்தர புடிச்சிருக்காய்ங்க பாருங்க... ரோட்டுல போயிட்டு இருக்காரு... அங்க ஒரு பொண்ணு மொட்டை அடிச்சி காதெல்லாம் குத்துன அதோட 5 வயது புள்ளைக்கு, இவருகிட்ட பேரு வைக்க சொல்லுது...இவரு  ஒடனே யோசிச்சி அந்த உலக மாகா பேர வக்கிறாரு... "ஷோபா..." ன்ன்னு... ஏண்டா டேய்... யாரோ பெத்த புள்ளைக்கு இவரு வைக்கிற பேர பாருங்க...  இவ்வளவு பாசம் உள்ளவரு அவரு புள்ளைக்கு சந்திர சேகருன்னு தான பேரு வச்சிருக்கனும்.

 யாருய்யா இந்த மாதிரியெல்லாம் இவருக்கு எழுதி குடுக்குறது? படத்துல தான் கொண்ணு கொலையறுத்துகிட்டு இருக்காருன்னா விளம்பரத்துல கூடவா... ஆமா தெரியாமதான் கேக்குறேன்... இந்த விளம்பரத்துல நீங்க எடுத்ததுக்கும், ஜூவல்லரி விளம்பரத்துக்கும்  என்னடா சம்பந்தம்? கடைசில முடியும் போது தான் தெரியுது அது ஜூவல்லரி விளம்பரம்னு. இதுல ஒரு டயலாக் வேற... "சொந்தம்ங்குறது தங்கம் மாதிரி எவ்வளவு இருக்கோ..  அவ்வளவு நல்லது.." நல்லது தான்...யாரு இல்லைன்னா..ஆனா காசு யாரு உங்க அய்யாவா குடுப்பாரு?

ஆனா இதுல நோட் பண்ண வேண்டிய ஒரு விஷயம் என்னனா இந்த போட்டி போட்டுகிட்டு  இருக்க மூணுமே கேரளா குரூப்பு.. எங்க நம்மூர் கடைங்கள ஓண்ணும் காணுமேன்னு  தானே பாக்குறீங்க... அதெல்லாம் லெமூரியா கண்டத்தோட வழக்கொழிஞ்சி போயிருச்சி... "லலிதாவின் பாட்டுக்கு பாட்டு" "புண்ணகை அதிபரின் பொன்நகைக்கூடம்... பாலு ஜுவல்லர்ஸ்" இந்த விளம்பரங்களையெல்லாம் பாத்தே வருசக்கணக்குல ஆயிருச்சி...  நம்மாளுக கஸ்டமருங்களை கவனிக்கிறதுக்கும் அவங்க கவனிக்கிறதுக்குமே எவ்வளவு வித்தியாசம்..



ஒரு மூணு மாசத்த்துக்கு முன்னால மதுரையில நண்பர் ஒருத்தருக்கு ரிங் வாங்குறதுக்காக கடைக்கி போயிருந்தோம்.. வரிசையா பல கடைங்க இருந்தாலும் கல்யாண் ஜூவல்லர்ஸ பாத்தோன்ன "அய்யயோ வேற எதாவது கடைக்கி பொய்ட்ட நைட்டுல ப்ரபு கனவுல வந்து காதுல கத்துனாலும் கத்துவாரேன்னு பயந்து சரி அங்கயே போவோம்னு  போணோம்.. உள்ள
போன உடனேயே மறுவீட்டுக்கு வந்த மருமகன பம்பிக்கிட்டு அழைச்சிட்டு போறமாதிரி உள்ள கூட்டிட்டு போயி உக்கார வச்சாய்ங்க..
. "டீ.. கோஃபி (coffee) எதாவது சாப்புடுறிங்களா"ன்னு எல்லாம் கேட்டு அங்க இருக்க அத்தனை ரிங்கையும் பொறுமையா எடுத்து காமிக்க, "This is rejected, this is unselected, u go" ன்னு கவுண்டர் ஸ்டைல்ல ஒண்ணு ஒண்ணா ரிஜெக் பண்ண "இதுக்கும் மேல நிங்கள் கேட்ட ரேட்டுக்கு இங்க மோதரம் எதும் இல்ல சாரே" ன்னு அவரு சொல்ல "ஓ... முடிஞ்சே  போச்சா சரி நெக்ஸ்ட் மீட் பண்றோம்"னு கெளம்பிட்டோம்.

உடனே அவரு "'சார்... நிங்கள் வேணா எப்புடி வேணுமோ அதுமாதிரி ஓடர் (order)குடுக்கும்... ஞான் ஒரு பதினைஞ்சி நாளில் ரெடி பண்ணி குடுக்கும்... " ன்னு அவரு சொல்ல... "சாரே ஞான் பின்னே காணா... ஞான் பின்னே கண்டூ" ன்னு சொல்லிகிட்டெ அடுத்த கடைக்கு போனோம்... என்னது கடை பேரா? தங்கமயில் ஜூவல்லரி.,.. அங்க ஒரு மரியாத குடுத்தானுக பாருங்க... மனதை திருடிவிட்டாய் படத்துல வடிவேலுக்கு விவேக் இட்லி வைக்கிறமாதிரி. "ஏய் மேன் சட்னிய எங்க வக்கிற...? இட்லிக்கு பக்கத்துல தான வைக்கனும்ன்னு இட்லிய விவேக்  தூக்கிவீசுறமாதிரி ஒரு நாலு மோதரத்த எடுத்து "இந்தா கவ்விக்க... இந்தா இத கவ்விக்க....டேக் இட் கேட்ச்  இட்.."ன்னு தூக்கி எறிஞ்ச்சாய்ங்க. "டேய் நாங்க மோதரம் காசு குடுத்துதானடா வாங்கவந்தோம்..  எதோ அவங்க பாட்டன் சொத்த எங்களுக்கு ஃப்ரீயா குடுக்குற மாதிரி அந்த மோதரத்த எடுத்து  காமிக்கிறதுல அவனுக்கு அப்புடி ஒரு சலிப்பு சலிச்சிக்கிட்டு நாயிக்கு பிஸ்கட்ட தூக்கி போடுற மாதிரி வீசிகிட்டு இருந்துச்சி.. ... அப்புடியே மயிண்டெய்ன் பண்ணுங்கடா... கடை நல்லா டெவலப் ஆவும்.

சரி அத விட்டுட்டு பக்கத்துல இருந்த இன்னும் ரெண்டு கடைங்களுக்கு போனாலும் அதே மரியாத தான் கெடைச்சிது... சரி என்ன பண்ணித் தொலைக்கிறது.."மச்சி நா அப்பவே சொல்லல... ப்ரபு சொன்னா கரெக்டா தாண்டா இருக்கும்... வா திரும்ப அங்கயே போவோம்.."ன்னு திரும்ப கல்யாணுக்கே போனோம். "நீ வரும் சாரே... நீ திரும்ப இங்கட வரும் சாரே... எனிக்கு அறியும்" ன்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டே முன்னால மோதரம் காட்டுனவரு  திரும்ப உள்ள அழைச்சிட்டு போயி பாத்த படத்தையே திரும்ப காமிச்சாரு. வேற வழி இல்லாம அதுல ஒரு மொக்கைய செலக்ட் பண்ணி குடுத்தா "ஒண் பை டூ, டூ பை த்ரீ... டோட்டலா 3500 ரூவா செய்கூலி சேதாரம் வருதுன்னு அவனுக்கே புரியாத மாதிரி ஒரு கணக்கு போட்டு காமிக்க... "பழனிச்சாமி... நீ வேணா எட்டாவது பாஸ் பண்ணிருக்கலாம்... ஆனா இவ்வளவு அறிவு உதவாதுப்பா" ன்னு மனசுக்குள்ள நெனைச்சிட்டு காச குடுத்துட்டு வந்தோம்.



Wednesday, April 10, 2013

BAADSHAH (2013) - தாறு மாறு!!!


Share/Bookmark
நம்மூர்ல இப்பல்லாம் ஒவ்வொரு படத்தையும் பட்ஜெட்ட வச்சே விளம்பரம் பண்ணுறாங்க.. ஒரு நாப்பது கோடிய தாண்டிட்டாலே பெரிய பட்ஜெட் படம் அந்த படம் இந்த படம்னு ஏத்தி விட்டு நம்மள தியேட்டருக்கு இழுத்து போயிடுறாங்க.. அங்க போயி எங்கடா கோடி கோடின்னாய்ங்க ஒண்ணயுமே காணுமேன்னு இவிங்க பட்ஜெட்டுன்னு சொன்ன கோடிகள படத்துல நாமன் பூதக்கண்ணாடி வச்சி தேட வேண்டியிருக்கு. படம் எடுக்க செலவு பண்றத விட விளம்பரம் பண்ணி நம்மள தியேட்டருக்கு இழுக்குறதுலதான் இங்க பல கோடி வீணா போயிட்டு இருக்கு. உதாரணமா ரெண்டு மாசத்துக்கு முன்னால வந்த அலெக்ஸ் பாண்டியன்... அசோக் பில்லர், வடபழனி பக்கமெல்லாம் போகவே முடியல... "அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் ஒரசுனாலும்  தீ புடிக்கும்" ன்னு ஒவ்வொரு லேம்ப் போஸ்டுலயும் விளம்பரம்... எந்த முக்குல திரும்புனாலும் கார்த்தி வெறியோட நிக்க, அதெயெல்லாம் பாத்த நமக்கு போய் படத்த பாக்கனும்னு தான் தோணுச்சி... பாத்தப்புறம் தான தெரிஞ்சிது யாருக்கு தீ புடிச்சிதுன்னு...

இதுவரைக்குமே நம்மூர்ல ஸ்டைலிஷான படம், க்ளாஸான படம், ரிச்சான படம்னா உடனே  பில்லா1 ன்னு தான் பல பேரு சொல்லுவோம். இன்னும் சில ஷங்கர் படங்கள சொல்லலாம். இந்த பாட்ஷா படம் எப்புடி இருக்குங்குறதல்லாம் விட்டுட்டு, முதல்ல தயவு செஞ்சி இந்த படத்த ஒரு தடவ தியேட்டர்ல பாருங்க. Picture clarity ன்னா என்ன, ஸ்டைலிஷ் படம்ன்னா என்னங்குறது புரியும்... நம்மூர்காரங்க பட்ஜெட் பட்ஜெட்ன்னு சொல்லி நம்மளயெல்லாம் எப்புடி ஏமாத்திட்டு இருக்காய்ங்கன்னும் தெரியும்... இவ்வளவு க்ளாரிட்டியாவும், ரிச்சாவும், கலர்ஃபுல்லாவும்  இருக்க படம் நா இதுவரைக்கும் பாத்ததில்லை...

ஒரு ஆறேழு வருஷமாவே தெலுகுல ஆக்சன் படம்னா ஒரே ஒரு கதை தான் வச்சிருக்காய்ங்க. ஒரு நாலஞ்சி லோக்கல் ரவுடிங்க இருப்பாங்க. (ஷாயாஜி ஷிண்டே, கோட்டா சீனிவாசராவ் போன்றோர்)  அவங்க கூட ஹீரோ மொதல்ல சீரியஸா மோதிட்டு இண்டர்வல் வரும்போது இந்த நாலஞ்சி வில்லனுங்களையும்  காமெடியனுங்களாக்கி டம்மி ஆக்கி விட்டுருவாறு. இவங்களுக்கெல்லாம் பெரிய டான்...டானுக்கெல்லாம் டான் டண்டனக்கா டான் மலேஷியாலயோ, பேங்காக்லயோ, ஹாங்காங்லயோ இருப்பாரு. அவரு பேரு பாய்ன்னு தான் முடியும்... உதாரணமா அலி பாய், கிட்டு பாய் பெரும்பாலும் அந்த கேரக்டர்ல நடிக்கிறது நம்ம ப்ரகாஷ்ராஜ் தான். முதல் பாதில தலைமறைவா இருந்த அந்த பெரிய டான் இரண்டாவது பாதில வந்து ஹீரோவோட டைரக்டா மோதி கடைசில செத்துருவாரு. இதுல ஹீரோ ஏன் அந்த பெத்த டான கொல்றாருங்கறதுக்க்கு இடையில சில ஃப்ளாஷ்பேக்குகளும் வரும். வேற ஒண்ணும் இல்லை இது நம்ம போக்கிரி கதை தான்.

மொதல்ல இந்த கதையில மகேஷ் பாபு நடிச்சி, ரவி தேஜா ஒரு ரெண்டு மூணு தடவ நடிச்சி ரீலு தேயப்போற நேரத்துல திரும்ப ஜூனியர் என்.டி.ஆர் நடிச்சிருக்காரு. அதெப்புடி  கொஞ்சம் கூட கூச்சப்படாம ஒரே கதைய திரும்பத் திரும்ப எடுக்குறாங்கன்னு தெரில. ஆனா கொஞ்சம் கூட சலிக்க வக்காத அளவுக்கு காமெடி ஆக்சன் கலந்து மசாலாவா குடுத்துருக்காரு டைரக்டர் சீனு வைட்லா.

இவர பத்தி பாக்கப்போனா, இவரோட படங்கள்ல முதல் பத்து நிமிஷம் எதோ கதை ஆரம்பிக்கிற மாதிரி இருக்கும். அதுக்கப்புறம் க்ளைமாக்ஸ் வரைக்கும் சம்பந்தமே இல்லாம வெறும் காமெடி சீனா வரும் . அப்புறம் கடைசி பத்து நிமிஷத்துல இடையில சம்பந்தம் இல்லாம நடந்த எல்லா சம்பங்களையும் ரொம்ப கஷ்டப்பட்டு எதாவது ஒரு லிங்க கொண்டு வந்து படத்த முடிப்பாரு. இவரோட கிங், நமோ வெங்கடேசா, தூக்குடு அத்தனையும் இதே ரகமான படங்களே.. அத்தனையும் சூப்பர் ஹிட். ஆனா ஒரு கண்டிசன்.. முக்காவாசி படத்த ஃபாரின்ல மட்டும் தான் எடுப்பாரு.  கதைக்கும் ஃபாரினுக்கும் சம்பந்தம் இல்லன்னாலும் எப்படியாச்சும் சம்மந்த படுத்தி கொண்டுபோயிருவாரு. தூக்குடுல சும்மா உள்ளூர்ல சுத்திட்டு இருப்பாய்ங்க... டக்குன்னு மகேஷ்பாபு"ஆப்ரேசன் இஸ்தான்பூல்"ன்னு  சொல்லுவாரு. உடனே கெளம்பிருவாய்ங்க துருக்கிக்கு. அதே மாதிரி இதுலயும் முக்கால்வாசிப்படம்
இத்தாலில தான்.

இதுலயும் சாதுபாய்ங்கற டானுக்கெல்லாம் டான பாட்ஷாங்கற புது டான் எப்படி போட்டுத்தள்ளுறாருங்கறது தான் கதை. முதல் பாதி முழுக்க காஜல் அகர்வாலோட காமெடி, காதல்ன்னு போயி பாட்ஷாவோட ஃப்ளாஷ்பேக்கோட முடியுது. இரண்டாவது பாதில பாட்ஷா ஹைதராபாத்துக்கு திரும்ப வந்து, சாதுபாயோட அள்ளக்கையான நவ்தீப்க்கு காஜல் அகர்வாலுக்கும் நடக்க இருந்த கல்யாணத்த ட்ராமா பண்ணி தடுத்து நிறுத்தி, சாதுபாயயும் போலீஸ்ல புடிச்சி தர்றாரு.

முதல்பாதில காஜலுடன் சேந்து NTR சூப்பரா காமெடி பண்ணிட்டு இருந்தாலும், எப்புடா இவ்வளவு செமயா picturize பண்ணிருக்காய்ங்கங்குற பிரமிப்புலயே படம் ஓடிருது. ரிவெஞ்ச் நாகேஷ்வரராவ் கேரக்டரும் சரி, க்ரேஸி ராபர்ட்ங்குற ஆசிஷ் வித்யார்த்தி கேரக்டரும் சரி தாறு மாறு. படத்தோட ரெண்டாவது பாதிக்கு முழுக்க காமெடிய குத்தகைக்கு எடுத்துருக்கது தல ப்ரம்மானந்தம்... ரொம்ப நாளுக்கப்புறம் செம காமெடி இந்த படத்துல. இன்செப்ஷன் ஸ்டைல்ல கனவுலகத்துல இருக்கது போலான செட்டப்பு செம. இந்த கேரக்டர தூக்குடுல வர்ற ப்ரம்மானந்தம் கேரக்டரையும் அதுர்ஸ்ல வர்ற அவரோட கேரக்டரையும் கலந்துவிட்டு அடிச்ச ஒரு ஃபீல குடுத்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வச்சிருக்காரு. சுகாசினி, சித்தார்த், ஷாயாஜி ஷிண்டே, நாசர்னு பல முன்னணி நட்சத்ரங்கள் இருக்காங்க... ப்ரகாஷ்ராஜ் தான் மிஸ்ஸிங்.



படத்துக்கு பெரிய ப்ளஸ் cinematography. அதுக்கடுத்து நம்ம தமனோட மியூசிக். நம்மாளு நாளுக்கு நாள் improve ஆயிகிட்டே வர்றாரு. சிம்பு பாடுன "டைமன் கேர்ள்:" பாட்டு மட்டுமே சுமார் ரகம். மத்த 5 பாட்டும் செம. குறிப்பா BGM தாறுமாறு. வில்லனுக்கு வர்ற மியூசிக்கும் சரி தல NTR க்கு வர்ற மியூசிக்கும் சரி... கொடூரம்.

ஜூனியர் NTR... எப்புடி இருந்தவரு இப்ப சிம்பு மாதிரி ஆயிட்டாரு... யப்பா... செம ஸ்லிம் & ஸ்டைல்.... காஸ்ட்யூம்ஸ்லாம் சூப்பர். டான்ஸ்லலாம் இவர அடிச்சிக்க ஆளே இல்லை... ஒவ்வொரு பாட்டுலயும் தெரிக்க விட்டுருக்காரு. குறிப்ப "வெல்கம் வெல்கம்" பாட்டுல. என்ன ஒண்ணு சுத்தி சுத்தி க்ளைமாக்ஸ்ல போலீஸ் கெட் அப்புல வந்து வில்லன தொம்சம் பண்ணிட்டு ஆப்ரேசன் "பாட்ஷா" ஓவர்ன்னு சொல்லும் போது ஏம்பா போக்கிரிலருந்து இந்த சீன கூட மாத்த மாட்டீங்களாப்பான்னு தோணுது. மொத்ததுல NTR, சீனு வைட்லா, ப்ரம்மானந்தம் கூட்டணீயில ஒரு செம மாஸ் மசாலா.  முடிஞ்ச வரைக்கும் மிஸ் பண்ணாம பாருங்க.



குறிப்பு:
இன்னிக்கு காலையில ஒரு நியூஸ் கேள்விப்பட்டேன்... நம்ம டாக்டர் விஜய் இந்த படத்த தமிழ்ல ரீமேக் பண்ணப்போறதா இருக்காராமா... நமக்கு கூடிய சீக்கிரம் ஒரு செம ஆக்சன் ப்ளாக் மாட்டப்போகுது... லொள்ளு சபா டீம்... Get ready folks.... 





Thursday, April 4, 2013

MEPZ சிக்னல் ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் - WHAT A MAN!!!


Share/Bookmark
மாசக்கடைசி... பர்ஸ்ல ஒக்கே ஒக்க நூறு ரூவா நோட்டு தான் இருக்கும்.. சரி சமாளிப்போம் அப்டின்னு நெனைச்சிகிட்டு வண்டிய எடுத்துகிட்டு எங்கயாது போணா அந்த நூறுரூவாய ஆட்டைய போட சனியன் ட்ராஃபிக் போலீஸ் ரூபத்துல வந்துரும்.அவுங்க கைய போட்டு வண்டிய  நிறுத்திபுட்டாங்கன்னா வசூல் பண்றதுல வசூல்ராஜாவ விட மோசமானவிங்க. அவிங்க நல்ல நேரமும் நம்ம கெட்ட நேரமும் சேந்து எந்த நம்மகிட்ட இல்லையோ கரெக்கிட்ட அத கேப்பாய்ங்க..  "எனக்கு ஐ.ஜி ய நல்லா தெரியும்" ன்னு சொல்லிட்டு விவேக் ஸ்டைல்ல தப்பிக்கிற காலமெல்லாம் மலையேறிப் போச்சி கொஞ்ச நேரம் கரகாட்டக்காரன் செந்தில் மாதிரி மேலையும் கீழயும் பாத்து பம்பிகிட்டு  நின்னோம்னாலாது மனசு கரைவாங்களான்னா நம்ம நடிப்பு தான் வீணாப்போகுமே தவற அவிங்க ரியாக்சன்ல எந்த மாற்றமும் இருக்காது.... கடைசில வேற வழி இல்லாம நூறு ரூவாய குடுத்தாதான் அந்த எடத்த உட்டு நகரலாம்.

காசு குடுக்குறது கூட பரவால்ல.. அந்த நூறு ரூவாய வாங்குனதுக்கப்புறம் ஒரு ரியாக்சன் விடுவாங்க பாருங்க... "இனிமே இந்த மாதிரி டாக்குமெண்ட் இல்லாம வரக்கூடாது...என்ன புரியிதா." சரி சார்னு சொல்லிட்டு வண்டிய எடுக்குற சமயத்துல தம்பி  ஆமா எங்க போற?"ம்பாங்க. நம்ம "பீச்சுக்கு சார்" ன்னோம்னா "ட்ரிப்ளிகேன் வழியா போகாதாப்பா... செம ட்ராஃபிக்கு... அடையார் ஃபிரிட்ஜுல லெஃப்ட் எடுத்து மூணாவது ரைட்டு எடுத்துக்க... லைனு கிளியரா இருக்கும்... " ன்னு ஒரு வழி சொல்லுவாங்க பாருங்க. இய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.... ஒண்ணுமில்ல வாங்குன நூறு ரூவாய்க்கு அவரு நமக்கு நல்லது செய்யிறாராம்.  முன்னாடியாச்சும் மாசக்கடைசில செலவுக்கு காசுல்லன்னா வண்டிய நிறுத்தி வசூல் பண்ணவங்க, இப்போ இந்த HAND மெஷின் வந்தப்புறம் இவுங்க தொல்லை இன்னும் அதிகமாயிருச்சி. அன்னிக்கு ஒரு நாள் நைட் ஷோ பாத்துட்டு வந்துட்டு இருக்கேன் வழக்கம்போல ஓரம்கட்டிட்டாங்க. நல்ல வேளை நம்மகிட்ட எல்லா டாக்குமெண்டும் இருக்குன்னு எடுத்து காமிச்சப்புறமும், சரி ஒரு நூறு ரூவா கட்டிட்டு போப்பா... ன்னு அடம்புடிக்கிறாங்க... இந்த production கம்பெனிங்க மாதிரி இவுகளுக்கும் மாச target லாம் இருக்கும் போல... மாசக்கடைசில மாட்டுறவனையெல்லாம் புடிச்சி பில்ல போட்டு விட்டுறாங்க.

இங்க நம்ம MEPZ சிக்னல்ட்டயும் ஒரு ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் இருக்காரு. அவரு கலெக்சன்ல எப்புடியோ ஆனா எலெக்சன் வந்தா கண்டிப்பா அவர ப்ரச்சாரத்துக்கு கூட்டிகிட்டு போகலாம் போல... மைக்க வச்சிகிட்டு பேசுறாருன்னா பேச்சு... அட்வைஸ் பண்றதுல அரசியல்வாதிங்கல்லாம் தோத்து போயிருவாங்க. குறிப்பா அவரு டார்கெட் பண்ணி அட்வைஸ் பண்றது ட்ராஃபிக்ல ஃபோன் பேசிட்டு போற பொண்ணுங்களுக்கு தான்.

சில பொண்ணுங்கள பத்தி சொல்லனும்னா வேலைமுடிச்சி கார்டு ஸ்வைப் பண்றப்போ "இப்பதான் கெளம்புறேன்"ன்னு  ஆரம்பிச்சா வீடு இருக்க தெருவுக்கு போன அப்புறம்தான் "சரி அப்பா நிக்கிறாரு நா அப்புறம் பேசுறேன்" ன்னு சொல்லிட்டு தான் ஃபோன் ஆஃப் ஆகும். இந்த இடைப்பட்ட கேப்புல ட்ராஃபிக், சிக்னல்ன்னு எல்லாம் வரும் போகும்...  ஆனா ஃபோனு ஆஃப் பண்ண பாடு இருக்காது. (அதுங்கள அவ்வளவு நேரம் மொக்கை போட்டு கெடுக்குறது என்னவோ பசங்கதான்) இந்த மாதிரி பொண்ணுங்க மேல அக்கரை காட்டுர ஒருத்தர்தான் நம்ம MEPZ traffic இன்ஸ்பெக்டர். காலையில ஒன்பதரை மணியிலிருந்து 11 மணி வரைக்கும், அதே மாதிரி சாயங்காலம் 6.30 மணியிலருந்து 8.30 மணி வரைக்கும் MEPZ la வேலைபாக்குறவங்கள ரோடு க்ராஸ் பண்ணி விடுறப்போ  மைக்க வச்சிகிட்டு இஷ்டத்துக்கு பூந்து விளாடுறாரு.

"இந்தாம்மா செகப்பு சுடிதாரு... சீக்கிரம் நடந்து வா... ஏம்மா கொடைபுடிச்சிட்டு போற பொண்ணு.. பக்கத்துல வர்வறு கண்ண குத்திரபோகுது பாரு.. மடக்கிட்டு போ... ஆமை மாதிரி நடக்காம வேகமா வாங்க... வாங்க,.......எல்லாரும் க்ராஸ் பண்றதா வேண்டாமா... இந்தாம்மா... ரோடு க்ராஸ் பண்ணும்போது ஃபோன் பேசாதான்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன்... (டெய்லி அந்த புள்ளைகிட்டயே  சொல்லுவாரு போல) நீங்க பாட்டுக்கு ஃபோன் பேசிட்டே ரோட்ட பாக்காம போயிட்டு இருக்கவேண்டியது...  அப்புறம் எவனாது வண்டில தட்டிட்டான்னா யாரு பதில் சொல்றது" இதெல்லாம் ரோடு க்ராஸ் பண்ணும் போது.

சிக்னல் கிரீனாயி வண்டிங்கல்லாம் போக ஆரம்பிச்சிருச்சின்னா "எல்லாரும் தலைக்கவசம் அணியுங்க... நம்ம உயிர் தான் முக்கியம்... தலைக்கவசம் உயிர்கவசம்...ன்னு படம் போடுதுக்கு முன்னாடி போடுர நியூஸ் ரீலு மாதிரி விளம்பரம் பண்ண ஆரம்பிச்சிடுறாரு. திடீர்னு ஹைபிட்சுல "டேய் 3741 குவாலிஸூ... நடுரோட்டுல வண்டிய  நிறுத்திட்டு என்னடா பண்ணுற... சிகன்ல மாறி ரெண்டு நிமிசம் ஆகுது... போ... எடு எடு.... "  இடையில ரெண்டு பேரு ரோட க்ராஸ் பண்ண முயற்சி பண்ணுவான்... "யப்பா... யப்பா இந்த
பாதசாரிகள்லாம் கொஞ்சம் அமைதியா இருங்க... உங்களுக்கு கிராஸ் பண்ண டைம் குடுப்பேன்.. அதுக்குள்ள என்ன அவசரம்... நீங்களும் வீட்டுக்கு போகனும்... இங்க வண்டில இருக்கவங்களும் வீட்டுக்கு போகனும்..." அதுக்குள்ள திரும்ப சிக்னல் ரெட்டுக்கு மாறிரும்.

"வா... வா... பாதசாரிகள்லாம் க்ராஸ் பண்ணூங்க..." கரெக்டா அவரு நேரத்துக்கு கண்டிப்பா எதாவது ஒரு புள்ள ஃபோன் பேசிக்ட்டே ரோட க்ராஸ் பண்ணும்,... இந்த பாருங்க இந்த ஃபோன் பேசுற புள்ளைங்கள புடிச்சி ஒருநாள் இங்கனக்குள்ள நிறுத்தி முட்டி போட வச்சா தான் பேசாம போவீங்கன்னு நெனக்கிறேன். உங்க குடும்பத்த நெனைச்சி பாருங்க,,, உங்களுக்கெல்லாம் நல்ல குடும்பத்துல கல்யாணம் பண்ணி குடுக்கனும்... இப்பல்லாம் பொண்ணுங்க எந்த கொறையும் இல்லைன்னாலே அவ்வளவு  வரதட்சனை கேக்குறாங்க,.... நீங்க இப்புடி ரோட்டுல ஃபோன் பேசி எதாவது விபத்து நடந்து கால் கையில அடிபட்டா அவ்வளவுதான்... உங்க வீட்டுல உங்கள 100 பவுன் போட்டு கட்டி குடுத்தாலும் எல்லாத்தயும் செலவு பண்ணிட்டு உங்களை புருசன் வீட்ட விட்டு தொரத்திருவான்... அதுனால கவனமா இருங்க... ரோடு க்ராஸ் பண்ணும் போது ஃபோன் பேசாதீங்க... " ன்னாரு... அன்னிக்குதான் அவருக்குள்ள ஒரு அம்மன்கோயில் பூசாரி ஒளிஞ்சிட்டு இருக்கத கண்டுபுடிச்சேன்.

சிலருக்கு மைக்குன்னா ரொம்ப உசுரு போல... எங்க ஊர்ல ஒருத்தரு இருக்காரு. கோயில்  திருவிழா வந்துட்டா போதும்... மைச் செட் பக்கத்துலயே குத்தவச்சி,... "காவடி எடுப்பவர்கள் உடனடியாக காவடிச்சீட்டை பெற்றுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" "பால்குடம் எடுப்பவர்கள் உடனடியாக குளக்கரைக்கு செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" ன்னு கேப்பு விடாம பேசி காதுல ரத்தம் வர வச்சிருவாரு. அதே மாதிரி தான் நம்மாளும்.  ஆனா அவர் சொல்ற விதம் ஒரு மாதிரியா இருந்தாலும் சொல்ல வர்ற விஷயம் பாராட்டப்பட வேண்டிய ஒண்ணு. எத்தனை சிக்னல்ல இந்த மாதிரியெல்லம் பண்றாங்க? அவர் சொன்னத  கேட்டு திருந்துனாங்களோ இல்லையோ, அவர் கண்ணுல பட்டுருவோமோ மைக்குல நம்மள  கூப்டு அசிங்கப்படுத்திருவாரோங்குற பயத்துலயாது பெரும்பாலான பொண்ணுங்க இங்க ஃபோன்  பேசாம ரோடு க்ராஸ் பண்றாங்க.

அப்புறம் ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஒண்ணு சொன்னாரு பாருங்க... "திரும்ப திரும்ப சொன்னதுல இப்ப பொண்ணுங்கல்லாம் கொஞ்சம் பரவால்ல... எல்லாரும் ஒழுங்கா க்ராஸ் பண்றாங்க... இந்த பசங்களத்தான் இன்னும் சரிப்பட்டு வரமாட்டேங்குறாங்க... அவங்களத்தான்
கவனிக்கனும்"....

ஆத்தாடீ............ ம்ம்ம்ம் ஆரம்பிங்க....

மேலே போலீஸ் பேசுவதாக எழுதிய வசனங்கள் கொஞ்சம் ஓவராக இருக்க மாதிரியும் இவன் எதோ அவனுக்கு தோணுற டயலாக்க எழுதிட்டு இருக்கான்னும் நீங்க நெனைக்கலாம். நிச்சயமா இல்லை... எல்லாமே அவர் பேசுனதுதான்... அந்த 100 பவுன் மேட்டர் உட்பட... தாம்பரம் சேனடோரியம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து MEPZ க்கு செல்லும் பலருக்கு இந்த வசனங்கள் நிச்சயம் பரிட்சையப்பட்டிருக்கும்.  


Monday, April 1, 2013

கேடி பில்லா - அவ்ளோ பெரிய காமெடி இல்ல இது!!!


Share/Bookmark


பழக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், மது அருத்துதல் உயிரைக் குடிக்கும்... ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் புகையிலை பழக்கத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.  "என் பேரு முகேஷ்.... எனக்கு ஒரு வருஷமா குட்கா சாப்டுற பழக்கம் இருக்கு... இப்போ எனக்கு வாயில ஆப்ரேசன் பண்ணப் போறாங்க... இதனால பேச்சு வராம கூட போகலாம்.... " (டாக்டர்)இதுல  சோகமான விஷயம் என்னன்னா எங்களால முகேஷோட உயிர காப்பாத்த முடியல.... " அட  ஒண்ணுமில்லீங்க... ஒவ்வொரு படத்துலயும் இந்த விளம்பரத்த பாத்து பாத்து ரிவியூ எழுதும் போதும் கூடவே அதுவும் ஒட்டிகிட்டு வந்துருச்சி... இதுல ஒரு சோகமான விஷயம் என்னன்னா முகேஷாவது எனக்கு பேச்சு வராமா கூட போகலாம்னு தான் சொன்னான்... ஆனா இந்தாளுக "ஆனா எங்களால முகேஷ காப்பத்த முடியலங்குறாய்ங்க...பேச்சுக்கு பதிலா ஒரே அடியா மூச்சையே  நிறுத்திபுட்டாய்ங்க...

தலைவர் படத்தோட டைட்டிலுங்களயெல்லாம் நாசப்படுத்தனும்னு ஒரு குரூப்பே திரிஞ்சிகிட்டு இருக்காய்ங்க போல.. கிட்டத்தட்ட அவரோட எல்லா பழைய பட டைட்டிலயும் வச்சி படம் எடுத்து நாறடிச்சிகிட்டு இருக்காங்க இதுவரைக்கும் பில்லா1, படிக்காதவன், கழுகு படங்களை தவற மற்ற ரஜினி பட டைட்டில்ல வந்த  அத்தனையுமே கப்பிங்க தான். அந்த வரிசையில அடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா. சமீப காலமா நம்மூர்ல இந்த டபுள் ஹீரோ கதைகள் நல்லா போயிட்டு இருக்க, இன்னுமொரு இரண்டு ஹீரோ கதை. சிவகார்த்திகேயன், விமல்னு ரெண்டு ஃபேமஸான ஹீரோஸ், மூணு படம் ஹிட் குடுத்த பாண்டி ராஜ், செம ஃபார்ம்ல இருக்குற பரோட்டா சூரி... எல்லாத்துக்கும் மேல யுவன்... இதுக்கு மேல என்னடா வேணும்னு நம்பி படத்துக்கு போனா... வரும்போது கழுத்த கரகரன்னு அறுத்து  அனுப்பி விடுறாங்க.

தமிழ்சினிமா வரலாற்றில் 1150வது முறையாக, வேலையில்லாமல் ஊர் சுத்தி அப்பா அம்மாட்ட திட்டு வாங்கிட்டு இருக்க கேரக்டர் விமலுக்கும் சிவாவுக்கும். (இன்னும் எத்தனை படத்துலப்பா) இருவரும் இணை பிரியாத நண்பர்கள்... வழக்கம் போல அவிங்க கூட இருந்து ஓசி குடி  குடிச்சிட்டு இருக்க கேரக்டர்ல பரோட்டா சூரி... "இதுவா படத்தோட மொத சீனு?"ன்னு கேக்குற அளவு ஒரு மிக சாதாரணமான ஒரு ஓப்பனிங் சீனு.. New year அன்னிக்கு தன்னியடிச்சிட்டு இனிமே சத்தியமா தண்ணியே அடிக்கமாட்டேன்னு சத்தியம் பண்ற சீன்... ஒவ்வொரு வருசமும் தண்ணி அடிக்கிற அத்தனை பேரும் பண்ற காமெடி  தான் இது... இத திரும்ப எடுத்துவச்சிகிட்டு அதுக்கு நாங்க சிரிக்கனும்னு வேற எதிர்பாத்த எப்புடிங்க..

இது மட்டும் இல்லை படத்துல இவங்க காமெடின்னு பண்ற நிறைய விஷயம் நாம ஏற்கனவே பாத்து பழக்கப்பட்ட விஷயங்கள்... அதுவும் பல இடங்கள்ல நாம இ-மெயில்லயும் SMS layum படிச்சி சலிச்சிப்போன வசங்களும், காமெடிங்களும். நிறைய இடங்கள்ல "அவ்ளோ பெரிய காமெடி இல்ல இது" ன்னு நமக்கு சிரிப்பு வர மாட்டேங்குது. படத்தோட 1st half எதோ கலக்கப்போவது யாரு, லொல்லு சபா, அது இது எது ப்ரோக்ராம்கள கலந்து பாத்த ஒரு ஃபீலிங்க தருதே தவற படம் பாத்த மாதிரி இல்லை. எல்லாமே ஒரு கோர்வையா இல்லாம பிட்டு பிட்டு காமெடிங்களா வருது.

அதுவும் விமலும் சிவாவும் அவிங்க அவிங்க லவ் பண்ண கதைய ஃப்ளாஷ்பேக்கா சொல்றது அருவை. ரெண்டு பேருமே ஹீரோயின பாத்த உடனேயே பின்னாடி போயிடுறாய்ங்க... அதுங்களும் பல்ல பல்ல காட்டிகிட்டு திரியிதுங்க. ரெண்டு ஹீரோயினுமே "பசங்க:" சோபிகண்ணு கேரக்டரத்தான் ஞாபகப்படுத்துதுங்க... சிவகார்த்திகேயனோட ஆளு 'என்னடா ஓலைமட்டையில ஒண்ணுக்கடிச்சா மாதிரி பேசுற" ங்குது.. "நெஞ்ச நக்காதடா"ங்குது... விமலோட ஆளு என்னடான்னா "மூடிக்கிட்டு வந்து நில்லுடா"ன்ங்குது... என்னங்கடா இது... ஹீரோயினுங்களா இல்லை வேற எதுவுமா...  சிவகார்த்திகேயனோட சில டைமிங் டயலாக்ஸ் நல்லா இருந்தாலும் ஹீரோயிண்ட பேசுர சில டபுள் மீனிங் வசங்கள் தேவையில்லாதது.  ஆரம்பத்துலருந்து லவ் பண்ணிட்டு திரியிற விமல்ட எந்த வித எதிர்ப்பையும் சொல்லாத பிந்து மாதவி இண்டர்வலுக்கு முன்னால திடீர்னு தூக்கி போட்டு ஜாக்கி சான் மாதிரி பறந்து பறந்து அடிக்குது... அருவருப்புதான் வருது... இந்த பிந்து மாதவி கழுகுல செம அழகா இருந்துச்சி... இப்போ எதோ மூக்குல ஆப்ரேஷன் பண்ணிட்டு வந்துருக்கும் போல... கருமமா இருக்கு.

எதோ ஒரு படத்துல சின்ன பசங்கள வச்சி, கில்லுறது கொட்டுறதுன்னு படம் எடுத்து சக்ஸஸ் பண்ணாரு பாண்டிராஜ்.. அதுக்காக ஒவ்வொரு படத்துலயுமா சின்னப்புள்ள தனத்த காட்டுறது.  ஒரு சீன்ல சிவகார்த்திகேயன ஒரு பத்து ரவுடிங்க கடத்திட்டு  போவாய்ங்க.. எதோ அடி பின்னி எடுக்கபோறாய்ங்கன்னு பாத்தா முட்டி போட வச்சி தலையில கொட்டி அனுப்புறாய்ங்க... ஏன்யா இப்புடி மொக்கைய போட்டு சாவடிக்கிறீங்க. இதே மாதிரி தான் மெரினா வுலயும் ஒரு  பையன ரெண்டு போலீஸ் காராங்க தீவிரமா தேடிட்டு இருப்பாங்க. அவன எதோ பொளந்து எடுக்க போறாய்ங்கன்னு பாத்தா இன்னொரு சின்ன பையன கூப்டு தலையில கொட்டி அனுப்புவாய்ங்க. நம்ம போய் செவத்துல முட்டிக்க வேண்டியது தான்.

ஆனா படத்தோட முதல் ரெண்டு மணிநேர மொக்கைக்கும் ஆறுதலா இருக்கது கடைசி அரைமணி நேரம்தான். எலெக்ஷன் பூத்ல ஆரம்பிச்சி அத தொடர்ந்து நடக்குற ஒரு கால் மணி நேர காமெடி செம...  எலெக்ஷன் ரிசல்ட் வந்தப்புரம் பெரிய கலவரம் நடந்துகிட்டு இருக்கும்போது கூட்டத்துக்குள்ள ஒருத்தர் "அயயய்யோ ஆனந்தமே" ன்னு ஸ்லோமோஷன்ல பாடிகிட்டு வர்றது  சூப்பர். அதே போல அதுக்கப்புறம் வர்ற செண்டிமெண்ட் காட்சிகளும், Background சாங்கும் லைட்டா  தொண்டைய அடைக்க வச்சிருது. ஒரு பேட்டில டி.ராஜேந்தர் சொல்லிருந்தாரு.. (அவரு ஸ்டைல்லயே படிங்க) "சார்... ஒரு படத்தோட 1st half காமெடியா இருக்காலாம் சார்... second half காமெடியா இருக்கலாம் சார்... ஆனா க்ளைமாக்ஸ்ல மக்களை டச் பண்ணனும் சார்.. அவங்கள ஒரு நிமிஷமாவத்து அழ வக்கனும் சார்" ன்னு... அதெயே தான் நம்ம பாண்டிராஜ் ஃபாலோ பண்ணிருப்பாரு போல... 

படத்துல விமலோட அப்பாவ வர்ற டெல்லி கணேஷ்க்கும், சிவாவோட அப்பாவா வர்றவர்க்கும் characterization சூப்பர். ஒரே ஒரு நிமிட வசனம் பேசிருந்தாலும் சிவா அப்பாவா வர்றவரு
செமயா பேசிருக்காரு. டெல்லி கணேஷ பத்தி சொல்லவே வேணாம்.. தற்பெருமை பேசுறது,  ரவுசு காட்டுறது, சோகமா இருக்கது, பாசத்த காட்டுறதுன்னு பல வேரியஷன்ல பிண்ணிருக்காரு. முக்கியமா பரோட்டா சூரி கேரக்டர்.  படத்தோட முதுகெலும்பே இவருதான். பட்டைய கெளப்பிருக்காரு. நண்பர்களோட சேந்து நக்கலடிக்கும்போதும் சரி, அவரோட மனைவிட்டயும், மாமனார்ட்டயும் லந்த குடுக்கும் போதும் சரி... சூப்பர். 

சிவகார்த்திகேயன் ஆளு சூப்பரா இருக்காரு. பட்டை முருகனா வர்ற சிவா  நல்ல சிவகடாக்ஷமா படம் முழுக்க சிரிச்ச முகத்தோட வலம் வர்றாரு. பல இடங்கள்ல டைமிங் டயலாக்ஸ்ல பிண்ணிருக்காரு. ஆனா சின்னத்திரை கேமரா பழக்கப்பட்டதப் போல இன்னும் வெள்ளித்திரை கேமரா பழக்கப்படலயோ என்னவோ... தனியா அவர் வர்ற காட்சிகள்ல ஒண்ணும் பெருசா  தெரில... ஆனா விமலோட வர்ற காட்சிகள்ல இவர் நடிப்புல இன்னும் ஜூனியர்ங்கறது நல்லாவே தெரியுது.  குறிப்பா முதல் பாட்டுல விமல் ரொம்ப கேசுவலா ஆடிட்டு இருக்க இவரு ரொம்ப கஷ்டப்பட்டு மூவ்மெண்ட் காமிச்சிட்டு இருக்காரு. அதே போல அவரோட டயலாக் டெலிவரியும், ஸ்லாங்கும் கொஞ்சம் கூட மாறவே இல்லை..
முன்னாடி கலக்கப்போவது யாருல காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி பேசுவாரு... இப்ப பல காட்சிகள்ல இன்னும் அதே ஸ்லாங்லதான் பேசிட்டு  இருக்காரு.

சிலபேர கதைக்கு ஏத்தமாதிரி நடிக்க வச்சிறலாம். ஆனா சிலபேரு எப்புடி நடிப்பாங்களோ அதுக்கு ஏத்த மாதிரி நாமதான் கதை எழுதனும்... இந்த ரெண்டாவது ரகத்த சேந்தவரு தான் விமல்... நீங்க கிராமத்து நாயகன் கேரக்டர் குடுத்தாலும் அதே ஸ்லாங் அதே மாடுலேஷன் தான் ஃபாரின் பாய் கேரக்டர் குடுத்தாலும் அதே ஸ்லாங் அதே மாடுலேஷன் தான். ஆனா இந்த படத்து கேரக்டர் அவருக்கு ஏத்த மாதிரி இருக்கதால ஒண்ணும் பெருசா தெரியல. இவரோட காமெடிங்க சூப்பர்ன்னு சொல்லமுடியலன்னாலும் அருக்காத டைப்.



அப்றம் டைரக்டர் பாண்டிராஜ்.. இவரோட "பசங்க" படத்த விட வம்சமும், மெரினாவும் எனக்கு ரொம்ப புடிச்ச படங்க. ஆனா இந்த படம் என்னவோ அந்த அளவு புடிக்கல... படம் முழுக்க அத்தனை காட்சிலயும் பின்னால ட்ரெயின் வந்துட்டே இருக்கு. சிவா அப்பா  ஸ்டேஷன்ல வேலைபாக்குறாருங்கரத்துக்காக எல்லா சீன்லயும் ட்ரெயின் வர்ற மாதிரி காமிச்சிருக்காங்க. அதுக்கூட பரவால்ல... ஹீரோயின் வீட்டு மொட்ட மாடில நின்னு பேசும் போது கூட பின்னாடி ட்ரெயின் போயிட்டு இருக்கு. இத ஏன் சொல்றேன்னா அந்த ஹீரோயின் வீட்டு மொட்ட மாடில நின்னு பேசுற மாதிரியான காட்சிங்க தாம்பரத்துல எங்க வீட்டுக்கு அடுத்த வீட்டுலதான் எடுத்தாங்க. வீட்டுக்கு பின்னாலயே ரயில்வே ட்ராக் இருக்கதால அங்க எடுத்தாங்க. என்ன கொடுமைன்னா ஒவ்வொரு காட்சி எடுக்குறதுக்கும் பின்னால எக்ஸ்ப்ரஸ் ட்ரெயின் போற டைம்லயே எடுத்தாங்க. அதவிட சாயங்காலம் 7 மணிக்கு ஹீரோயின terrace wall la உக்கார வச்சிட்டு எக்ஸ்ப்ரஸ் ட்ரெயினுக்காக வெய்ட் பண்ணிட்டே இருக்காங்க... கருமம் அந்த சமயம்னு ஒரே லோக்கல் எலெக்ட்ரிக் ட்ரெய்னா வருது எக்ஸ்ப்ரஸ் எதயும் காணும்.. அப்புறம் கடைசில முக்கா மணிநேரம் கழிச்சி ஒரு எக்ஸ்ப்ரஸ் வந்தப்புறம் அந்த சீன எடுத்தாங்க. 

ஏம்பா ஹீரோயின் பேசும்போது ஏன் பின்னால ட்ரெயின் வரலன்னு நாங்க யாராது கேட்டமா?  ஒரு சீனுக்கே இவ்ளோ நேரம் வீணடிச்சிருந்தீங்கன்னா படத்துல வர்ற மத்த ட்ரெயின் காட்சிகளுக்கெல்லாம் எவ்வளவு நேரம் வீணடிச்சிருப்பீங்க... Perfection காட்டுறதா நீங்களா ஒண்ணா நெனச்சிட்டு இப்புடி எதாவது கப்பித்தனம் பண்ண வேண்டியது.




அப்புறம் படத்துல மிகப்பெரிய மொன்னை யாருன்னா அது நம்ம யுவன் சார் தான். சிம்பு பாடுற டைட்டில் சாங்க தவற வேற எந்த சாங்கும் தேறல... "கொஞ்சும் கிளி" பாட்டும் "சுட சுட மேகம்" பாட்டும் பரவால்லாம இருக்கு ஆனா அதுக்கெல்லாம் choreography  செம கப்பி. BGM லாம் யுவன் படம் மாதிரியே இல்லை. வழக்கமா யுவன் படங்கள்ல ஒவ்வொரு படத்துலயும் BGM ku தனியா ஒரு தீம் வச்சிருப்பாரு.. இதுல BGM இருக்காங்குறதே டவுட்டா இருக்கு.

இரண்டாவது பாதில வர்றது போல முதல் பாதியிலயும் காட்சிகளோட ஒன்றி continues comedy ya  இருந்துருந்தா படம் இன்னும் சூப்பரா வந்துருக்கும். ஆனாலும் நிறைய பேருக்கு படம் மிகவும் பிடிச்சிருக்கு... சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சதா சொல்றாங்க... நமக்கு அந்த மாதிரி சம்பவங்கள் எதுவும் நடக்கல... மத்தவங்க மாதிரி இல்லாம வக்காளி நாம தான் ஓவர் expectation noda போய் ஏமாந்துடுறோமோ?   

படம் பாத்தப்புறம் ஒண்ணு மட்டும் கரெக்டா தெரிஞ்சுது... காமெடி படங்களல் தல சுந்தர்.சிய அடிச்சிக்க ஆளே இல்ல
 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...