Wednesday, June 27, 2012

வைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்


Share/Bookmark
குறிப்பு : இந்த பதிவு வைத்தீஸ்வரன் கோவில் ஓலைச்சுவடி வரலாறுகளை பழிசொல்வதற்கோ அல்லது ஜோதிடத்தை நம்புபவர்களின் நம்பிக்கையை குலைப்பதற்காகவோ அல்ல. எனக்கு ஏற்பட்ட ஒரு சிறு அனுபவத்தின் தொகுப்பே.. மேலும் இப்பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்தும்  கற்பனை அல்ல. உண்மையே..


போன வாரம் கம்பெனிக்கு தொடந்து ஒரு மூணு நாள் லீவு விட்டுட்டு (எனக்கு நானே லீவு விட்டுக்கிட்டேன்) அண்ணனோட திருமணத்துக்காக ஊருக்கு போயிருந்தேன்.  வெள்ளிக்கிழமை கொஞ்சம் freeya இருந்ததால வீட்டுல எல்லாரும் கும்பகோணத்த சுத்தியிருந்த கோயில்களுக்கு ஒரு நாள் டூர் மாதிரி கெளம்புனோம்... ஆலங்குடி  குருஸ்தலம், திருமணஞ்சேரி, திருக்கடையூர்னு பொய்ட்டு மதியம் 11.20 மணி போல வைத்தீஸ்வரன் கோயிலுக்குள்ள நுழைஞ்சோம். ஊருக்குள்ள நுழைஞ்ச உடனேயே
 "ஓலைச்சுவடி ஜோதிடம்" "நாடி ஜோதிடம்" "ஜோதிட சிகாமணி" "ஜோதிட கலாபூசன்" ன்னு பாக்குற இடமெல்லாம் இந்த மாதிரி போர்டுங்கதான்.

அந்த கோவிலுக்கு நா போனது அதுவே முதல்முறை.. ரொம்ப அருமையா இருந்துச்சி பாக்குறதுக்கு. கோவிலுக்கு உள்ள போற வழியில ரெண்டு சைடும் சின்ன சின்ன கடைங்க. வழக்கம் போல ஒருத்தர் வந்து அர்ச்சனை தட்டு வாங்கறதுக்காக எல்லாரையும் மறிச்சி அவர் கடைக்கு கூப்டாரு.. அர்ச்சனை வாங்கிட்டு கிளம்பும்போது கடைக்காரர் மெதுவா கிட்ட வந்து


 "கைரேகை எதாவது பாக்குறதுன்னா இப்பவே குடுத்துட்டு போங்க... நீங்க
வர்றதுக்குள்ள எடுத்து வைப்பாங்க"ன்னாரு

"எண்ணன்னே சொல்றீங்க... ஒண்ணும் புரியலயே"ன்னு நா கேக்க

"ஓலைச்சுவடி பாக்குறதுக்குப்பா..இங்க கோயில்பக்கத்துலயே பாக்குறாங்க... உங்களுக்கு பாக்கனும்னா உங்க கைரேகைய அங்க குடுத்துட்டு போங்க... உங்க கைரேகைக்கு  ஏத்த ஓலைச்சுவடிய அவங்க லைப்ரரிலருந்து தேடி எடுக்கவே பத்து பதினைஞ்சி நிமிஷம் ஆகும்.. அந்த ஓலைச்சுவடில உங்க பேரு உங்க அப்பா பேரு அம்மா பேரு எல்லாம் கரெக்டா வந்தா தான் உங்களுக்கு ஜாதகமே சொல்லுவாங்க.. 150 ரூவா தான்... ஒரு வேலை பேர்
சரியா வரலன்னா பாக்கமாட்டாங்க.. வந்துடலாம்... ஃப்ரீதான்.." ன்னாரு

"என்னது பல வருஷத்துக்கு முன்னாடி எழுதப்பட்ட ஒலைச்சுவடில நம்ம பேரு நம்ம குடும்பத்துல உள்ள பேரெல்லாம் இருக்குமான்னு அவர் சொன்ன விஷயங்கள் எனக்குள்ள ஒரு அமானுஷ்யமான எதிர்பார்ப்ப ஏற்படுத்துனுச்சி"

அவர் சொன்னத கேட்டதும் எங்கம்மாவும் நானும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கிட்டோம்.

"பாப்போமாடா"

"நீ சொல்லும்மா" ன்னேன்

"நீ எதுக்கும் மாமாட்ட கேளுடா... அவன் கரெக்டா சொல்லுவான்டா" ன்னு சொல்லுச்சி

முன்னாடி என்னோட தாய்மாமா சொக்கலிங்கம் போய்கிட்டு இருந்தாரு... அவருக்கு கொஞ்சம் நக்கல் ஜாஸ்தி

"மாமா இந்த ஓலைச்சுவடி ஜாதகம் பாக்கலாமான்னு அம்மா கேக்குது"

"என்னது ஓலைச்சுவடி ஜாதகமா? டேய் இவய்ங்கல்லாம் மொரட்டு ஃப்ராடுடா.. பேசாம வா.. பணத்த புடுங்கிருவாய்ங்க.." ன்னு சொன்னவுடனே நா கொஞ்சம் ஏமாற்றத்தோட அங்கனக்குள்ளயே நிக்க

"டேய் சொன்னா கேளு.... அத்தனையும் பொய்யி.. பேசாம வா சாமி கும்டுட்டு கெளம்புவோம்"ன்னாரு

"ஆரம்பத்துலயே கேட்டப் போட்டுட்டியா... வேற என்ன பண்றது" ன்னு தலைவர தரிசனம் பண்ண பொய்ட்டோம்..         


தரிசனம் முடிஞ்சி உள்ள உக்கார்ந்துருக்கும் போது அம்மா

"டேய் எவளவோ செலவு பண்றோம்.. ஒருதடவ என்ன சொல்றாய்ங்கண்ணு பாப்போமே" ன்னு அம்மா சொல்ல "உன் தம்பிகிட்ட கேளும்மா" ன்னேன்..

அது அவர்ட்ட போயி "தம்பி இவனுக்கு எதோ ஓலைச்சுவடி பாத்தே ஆவனுமாம்.. கொஞ்சம் அழைச்சிட்டு பொய்ட்டு வாயேன்... "ன்னு என்னைய போட்டு விட்டுருச்சி. ஆனா இந்த தடவ எதுவும் சொல்லாம சரி வாங்க போலாம்னு சொல்லிட்டு கூப்டுபோனாரு.நாங்க அர்ச்சனைவாங்குன கடைக்காரர் "வாங்கடே... நீங்க வருவீங்கன்னு தெரியும்டே" ன்னு மனசுல நெனைச்சிகிட்டே வாங்க வாங்கன்னு கோவிலுக்கு சைடுல இருந்த ஒரு வழில அழைச்சிட்டு போனாரு.

"ஓலைச்சுவடியா... அப்ப ஜாதகம் பாக்குறவருக்கு ஒரு 70 வயசு இருக்கும்.. நெஞ்சு வரைக்கும் தாடி வச்சிருப்பாரு... வெறும் ருத்ராட்ச மாலையா போட்டுருப்பாரு... காவி வேஷ்டி சட்டை போட்டுருப்பாரு" ன்னு அவரப்பத்தி எனக்குள்ளயே ஒரு கற்பனை ஓடிக்கிட்டு இருந்துச்சி.

ஆனா கோயில விட்டு வெளிய அவரு அழைச்சிட்டு போன எடத்துக்கு போய் பாத்தா ஒரு சின்ன கார்ப்ரேட் கம்பெனி மாதிரி வச்சி நடத்திகிட்டு இருந்தாய்ங்க.. ரிசப்ஷன்ல ஒருத்தர் வர்ரவங்க போறவங்க கைய எல்லாம் புடிச்சி வலுக்கட்டாயமா இங்க் க தடவி பேப்பர்ல கைரேகைய எடுத்து இன்னொருத்தர்கிட்ட குடுத்துட்டு ஒரு ரிஜிஸ்டர்ல வேற எண்ட்ரி போட்டுக்கிட்டு இருந்தாரு..

நாங்க உள்ள நுழைஞ்சதுமே "யாருக்கு பாக்கனும்.. யாருக்கு பாக்கனும்" பறபறன்னு  ஒருத்தன் கேக்க

"ஆகா..ரொம்ப ஆவலா எதிர்பாக்குறாய்ங்களே... அவசரப்பட்டு வந்து மாட்டிக்கிட்டோமோன்னு நெனச்சிட்டே, எனக்கு தாங்க பாக்கனும்"னு சொன்னன்.

உடனே அங்க இருந்த ஒரு INK pad la என் கைய வச்சி அமுக்கி ஒரு சின்ன துண்டு பேப்பர்ல கைரேகைய எடுத்துகிட்டாய்ங்க.. எடுத்தவன் கைலயே ஒரு சின்ன ஓலைச்சுவடி  கட்டு இருந்துச்சி.... போன மாசம்தேன் அத எங்கயோ ஆர்டர் குடுத்து செஞ்சிருப்பாய்ங்க போல.. கைரேகை எடுத்தவனுக்கு வயது 25 லருந்து 30 க்குள்ள தான் இருக்கும்.

"சரி நீங்க ஒரு 5 நிமிஷம் உள்ள உக்காருங்கன்னு ஒரு நாலுக்கு நாலு சைஸ்ல ஒரு சின்ன ரூம்ல உக்காரவச்சிட்டு உள்ள எங்கயோ போனாரு.. ஒரு ரெண்டே நிமிஷத்துல திரும்ப வந்தாரு.. கையில் முன்னாடி வச்சிருந்த அதே ஒலைச்சுவடிதான் இருந்துச்சி.. ரூம லாக் பண்ணிட்டு எதுதாப்புல சேர்ல உக்கார்ந்து ஆரம்பிச்சாரு....

சங்கத்தமிழ்ல, மூச்சுவிடாம ஓலைச்சுவடிய பாத்து எனக்கு புரியாத மாதிரியே எதோ படிச்சிட்டு "இப்ப நா படிச்சது கடவுள் வாழ்த்து" ன்னாரு.

"அப்புடியா... எனக்கு தான் ஒண்ணும் புரியலையே... நீங்க தேசியகீதத்த தமிழ்ல படிச்சேன்னு சொன்னா கூட நம்பித்தானே ஆகனும்" ன்னு நெனச்சிகிட்டு மேல சொல்லுங்கன்னு சொன்னேன்.

அவர் அதே மாதிரி புரியாத மாதிரியே அடுத்த ஓலைச்சுவடிலருந்து இன்னும் ஏதேதோ படிச்சிட்டு...

"உங்க அப்பா பேரு கா, கீ, கு , கே இதுல எதாவது ஒரு எழுத்துல தொடங்குமா?" ன்னு கேட்டாரு

"இல்லை" ண்ணேன்.

"ஆ, உ, வே, நா" இதுல எதாவது ஒரு எழுத்துல ஆரம்பிக்குமா?

"இல்லை"

"மா, மு, வ, ர" இதுல எதாவது ஒரு எழுத்துல ஆரம்பிக்குமா?

"இல்லை"

"வீ, ச, ஜெ, அ" இதுல எதாவது ஒரு எழுத்துல ஆரம்பிக்குமா?

"அடப்பாவிகளா இதுக்கு மேல தமிழ்ல எழுத்துக்களே இல்லையேடா... நீங்க இப்புடித்தான் ஒவ்வொருத்தரோட அப்பா பேரயும் ஒலைச்சுவடில கொண்டுவரீங்களா?" ன்னு நெனச்சிகிட்டு ஆமான்னேன்.



அப்புறம் எங்க மேற்கண்ட எழுத்துக்கள்ல ஆரம்பிக்கிற தமிழ் பெயர்கள ஒண்ணு ஓண்ணா சொல்ல ஆரம்பிச்சி இதுவா இதுவா இதுவான்னு கேட்டு பதினைஞ்சி பேருக்கு அப்புறம் அத கண்டுபுடிச்சான்.. கண்டுபுடிச்சிட்டு "இருக்கே.. ஓலைச்சுவடில இருக்கே" ன்னு ஓலைச்சுவடில ஒரு பேனா மாதிரி வச்சி டிக் போட்டுகிட்டான்..

ஏண்டா அந்த தம்மா தூண்டு ஓலைச்சுவடிக்குள்ளயா இத்தனை பேரும் இருந்துச்சி.. அப்பா பேர கண்டுபுடிக்கிறதுக்கே இவளவு நேரம் ஆயிருச்சி.. திரும்ப அதே மாதிரி திரும்ப அம்மா பேர கண்டுபுடிக்க திரும்ப மொதல்லருந்து ஆரம்பிச்சி தமிழ்ல உள்ள அத்தனை பேரயும் கேட்டுட்டாரு.. கடைசில நானேதான் அம்மா பேர சொன்னேன்,.... அதுவும் ஓலைச்சுவடில இருக்குன்னு சொல்லி டிக் பண்ணிகிட்டாரு.. வெரிஃபிகேசனாமா..

திரும்ப என் பேர கண்டுபுடிக்கிறதுக்கும் இதே ப்ராசஸ்,,, அப்புறம் என் ராசி நட்சத்திரத்த கேட்டு தெரிஞ்சிகிட்டாரு.

"அப்ப சரி... இதுல உங்க வீட்டுல உள்ளவங்க பேரு இருக்கதால இதான் உங்களுக்கான ஓலைச்சுவடி... பலன் சொல்ல ஆரம்பிக்கலாமா" ன்னாரு

"அட இருங்க... எல்லாரயும் கூப்புடுறேன்" ன்னு சொன்னதும் அப்ப வாங்க வேற ஒரு  ரூமுக்கு போகலாம்னு பக்கத்துலருந்த பெரிய கேபினுக்கு அழைச்சிட்டு போனாரு... நா அம்மா அப்பா, மாமா எல்லாரும் சுத்தி உக்கார்ந்துருக்க நம்மாளு கேப்பே விடாம, நம்ம ராசி நட்சத்திரத்துக்கு குருபெயர்ச்சி பலன்லாம் புத்தகத்துல வருமே, அத அப்புடியே ஒப்பிச்சாரு.. ஆனி போயி ஆடி போயி.. ஆவனி போயி..

"யோவ் இப்டியே போயிகிட்டு இருந்தா எல்லாமாசமும் போயி அடுத்த வருசம் வந்துரும்யா.. மேல சொல்லு" ன்னு நெனைச்சிட்டு இருக்கும் போது ஒரு காமெடி பண்ணாரு பாருங்க

"உங்களுக்கு மூணு தங்கச்சி இருக்கானுமே" ன்னாரு

"இல்லை... ஒண்ணுதான்" ன்னேன்..

"ஓ... மூணு தங்கச்சி இருக்கதுக்கு சாத்தியம் இருக்கு... ஆனா ஒரு தங்கச்சிக்கான பலன்  சிறப்பா இருக்கு" ன்னு ஒரு சமாளிப்பு சமாளிசாரு பாருங்க... அவர் ஒவ்வொன்னா  சொல்ல சொல்ல எங்க மாமா பக்கத்துல உக்காந்து உன்னை நினைத்துல சார்லி  ஜாதகம் பாக்கும் போது சிங்கமுத்து "தெரிஞ்சிதா" "புரிஞ்சிதா"ன்னு கேப்பாரே.. அதே மாதிரி என்ன பாத்துக்கிட்டு இருந்தாரு...

ஒரு வழியா 5 நிமிஷத்துல ஒப்பிச்சி முடிஞ்ச அப்புறம் "வேற எதாவது கேக்கனுமா' ன்னாரு...

"ஒண்ணும் இல்லீங்க"

உடனே உள்ள ட்ராவுலருந்து ஒரு A4 சைஸ்ல ப்ரிண்ட் பண்ண ஒரு பேப்பர எடுத்தாரு. வேற ஒண்ணும் இல்லை.. அவங்களோட நாடி ஜோதிடத்துக்கு விளம்பரம்..அத கைல குடுத்துட்டு எங்ககிட்ட

"இப்ப உங்களூக்கு சொன்னது பொதுகாண்டம்.. இதுலயே உங்களுக்கு தனித்தனியான காண்டங்கள விளாவாரியா பாத்துக்கலாம்.. அதாவது தொழில், படிப்பு, வெளிநாட்டு பயணம் திருமணம்... இப்புடி எது வேணாலும் பாத்துக்கலாம்.. ஒரு காண்டம் பாக்க 150 ரூவா" ன்னாரு..

"ஓ.. இப்ப தொழில் காண்டம்னா அதுல என்ன சொல்லுவீங்க?" ன்னேன்

"உங்களுக்கு எப்டி பட்ட வேலை கிடைக்கும்.. சம்பள உயர்வு எப்ப வரும்,,, ப்ரமோஷன் எப்ப வரும்.. இந்த மாதிரி detail la சொல்லுவோம்"

"ஓ... எப்புடி.. முன்னாடி என்ன உள்ள கூட்டிட்டு போயி என்கிட்டயே விஷயத்த கேட்டு திரும்ப வெளில வந்து அத எங்ககிட்டயே திருப்பி சொன்னீங்களே.. அதே மாதிரி திரும்ப என்ன உள்ள கூப்டு உனக்கு எவள சம்பளம், எப்ப ப்ரமோஷன் தருவாய்ங்கங்கற மேட்டரல்லாம் என் டயே கேட்டு என் டயே சொல்றதுக்கா... ஆணியே புடுங்க வேணாம்" ன்னு நெனைச்சிகிட்டு "போதுங்க... முடிச்சிக்குவோம்" ன்னு சொல்லிட்டு பாத்ததுக்கு 150 ஓவாய குடுத்துட்டு வெளிய வந்தோம்..

எங்க மாமா லைட்டா என்ன பாத்தாரு...

"டேய்.. நா தான் சொன்னேன்ல.. இவய்ங்கல்லாம் மொரட்டு ப்ராடுடான்னு... பத்து வருசத்துக்கு முன்னாலயே நானும் என் ஃப்ரண்டு ராஜாவும் இங்க வந்து 4000 ரூவாய விட்டுடோம்டா"

"ஏன் மாமா... ஏற்கனவே நீ வாங்கிட்டு தான் இப்புடி பம்புனியா.. அந்த 4000 ரூவா மேட்டர முன்னாடியே சொல்லிருந்தா பின்பக்கம் வழியா எகிரி குதிச்சி ஓடிருக்கலாம்ல"

விடுறா.. இவய்ங்களுக்கு அந்த 150 ரூவா போகனும்னு இருக்கு...போயிருச்சி,... சரி வா கெளம்புவோம்  ன்னு போனால் போகட்டும் போடா background சாங்கோட வீட்டுக்கு கெளம்புனோம்.

Monday, June 25, 2012

சகுனி - எஸ்கேப் ஆயிட்டான்டா !!!


Share/Bookmark
 
2005 ல விஜய் தன்னந்தனி ஆளா சென்னைக்கு வந்து ஊர்ல உள்ள அத்தனை ரவுடிகளையும் ஒத்த ஆளா போட்டுத்தள்ளுர மாதிரி படம் எடுத்தப்ப, அத திரும்ப திரும்ப பாத்து  ஹிட்டாக்குனது யாரு? நம்ம பயளுகதேன்...

அதே படத்த சிவகாசின்னு டைட்டில மட்டும் மாத்தி எடுத்து ரிலீஸ் பண்ணப்ப அதயும் வெறிக்க வெறிக்க பாத்து 100 நாள் ஓடவச்சவியிங்க யாரு? நம்ம பயலுகதேன்...

அதவிட பழைய பில்லா படத்தோட ஒரு சீன கூட மாத்தாம புது கோட்டு மட்டும் தச்சி  அஜித்துக்கு போட்டு விட்டு அங்க்கிட்டும் இங்கிட்டும் நடக்க விட்டு ரீமேக்குன்னு ரிலீஸ் பண்ணப்ப, அதயும் மூச்சு தெணற தெணற பாத்தவியிங்க யாரு? அதுவும் நம்ம பயலுகதேன்..

ஆன இப்ப கொஞ்ச நாளா மசாலா படங்கள பாக்குறத எதோ மிகப்பெரிய பாவம் பண்ணுறத போல நெனைக்கிறவுகளும் யாரு.. நம்ம பயலுகதேன்..

காமெடி படத்துலயும், மசாலா படத்துலயும் லாஜிக் தேடுறது படிச்சிட்டு போவாத கேள்விக்கு பதில் எழுத ட்ரைபண்ற மாதிரி.. இல்லாத ஒண்ண, இருக்காத ஒண்ண எங்க எங்கன்னு தேடுனா எப்புடி இருக்கும்? போனமா பாத்தமா சிரிச்சமா... ensaai பண்ணமா வந்தமான்னு இருக்கனும்.. சரி படத்துக்கு வருவோம்.

ஏற்கனவே 2003 ல வெளியாகி மெகா ஹிட்டான ஒரு மசாலா படத்தோட ஒன்லைன் சாயல்லயே ஆரம்பிக்குது படம். ரொம்ப நாளுக்கு அப்புறம் நம்ம தல ஷங்கர் மகாதேவன் பாடுன intro song. நல்லா இருந்துச்சி... சந்தானம் கார்த்தி நல்ல காம்பிநேஷன்... குட் காம்பிநேஷன்... காமெடில பட்டைய கெளப்பி இருக்காய்ங்க. சந்தானம் பீச்ல குடைபுடிச்சிட்டு உக்காந்துருக்க ஜோடிகிட்ட டைம் கேட்டுட்டு அடிக்கிற கமெண்ட்டுக்கும குடிகாரங்களோட பெருமைய பத்தி ஒயின்ஷாப்ல பேசுற வசனத்துக்கும் தியேட்டர்ல செம் வரவேற்பு. கார்த்தி சாதாரண நடிகனா இருந்து மகாநடிகனா மாறிட்டு வர்றாரு.. அண்ணாச்சிய தூக்கி சாப்பிட்டுருவாரு போல.



சந்தானத்துக்கிட்ட கார்த்தி நடந்த கதைய narrate பண்றது போல காட்சியமைப்பும், ரஜினி, கமல்னு மாத்தி மாத்தி மொக்கைய போட்டுக்குறதும் கடுப்பா இருந்தாலும் சந்தானம் அடிக்கிற கலக்கல் கமெண்டுல எல்லாம் காணாம போயிடுது.. அனுஷ்கா 2 நிமிஷம் வந்தாலும் செம... அழகென்ற சொல்லுக்கு அனுஷ்காதான்.. இந்த ஹீரோயின் நல்லாருக்கா நல்லா இல்லையாங்குற கன்பீசன்லயே படம் முடிஞ்சிருச்சி..

வழக்கமான மசாலா படங்கள்ல வர்ற மாதிரி பாட்டுன்னா பாட்டே வா... ஃபைட்டு ஃபைட்டு... ஃபைட்டுன்னா ஃபைட்டேவா பாட்டு பாட்டுன்னு இல்லாம ரெண்டு டூயட்டோட நிறுத்திகிட்டு சண்டைக்காட்சிகளையும் கம்மி பண்ணிருக்கது ஒரு நிம்மதி.

ப்ரகாஷ்ராஜ், நாசர், ராதிகா, ரோஜா ன்னு ஒரு பெரிய சீனியர் நடிகர் பட்டாளமே இருக்கு.  இவங்கல்லாம் இருக்கதே படத்துக்கு ஒரு பெரிய ப்ளஸ்... ப்ரகாஷ்ராஜ்... தமிழ்சினிமாவின் மகாநடிகன்.. வழக்கம்போல கலக்கல்...முதலில் வேறு ஒரு வில்லன வச்சி படத்த எடுத்ததுக்கு அப்புறம் சூர்யா படத்த பாத்துட்டு ப்ரகாஷ்ராஜ வில்லானா போட்டு எடுக்க சொன்னதாகவும், திரும்ப ப்ரகாஷ்ராஜ மட்டும் வச்சி அவர் வர்ற காட்சிகளை திரும்ப எடுத்ததாகவும் யாரோ சொல்லி கேள்விப்பட்டேன்.  நாசர் ரெண்டு மூணு  சீனே வந்தாலும் நச்சின்னு நடிச்சிருக்காரு... அதேமாதிரிதான் ராதிகாவும். கொடுக்கப்பட்ட கேரக்டர கரெக்டா பண்ணிருக்காங்க..

குறிப்பா சொல்லவேண்டிய இன்னொரு விஷயம் G.V.ப்ரகாஷ்குமார்... தமிழ்ல்ல இப்போதைக்கு பாட்டு  மட்டும் இல்லாம பிண்ணனி இசையையும் சிறப்பா தர்றதுல ஏ.ஆர்.ரஹ்மான், யுவனுக்கு அப்புறம் இப்பதைக்கு இவருதான். நாலு பாட்டுமே நல்லாருக்கு... குறிப்பா பிண்ணனி இசையும் செம.

படத்துல நெருடுறமாதிரி இருக்க ஒரே விஷயம் கார்த்தி சென்னைக்கு வந்த வேலைய விட்டுட்டு என்னென்னமோ பண்ணி ஸ்டேட்டு சென்ட்ரல்னு எங்கெங்கயோ போயிருவாரு. இத மட்டும் சரிசெஞ்சி வேற பிண்ணனி எதாவது வச்சிருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும். 

எனக்கு படம் ஒண்ணும் அவ்ளோ மோசமா இருக்கா மாதிரி தெரியல. குடுத்த காசுக்கு ஒர்த்தா இருக்க  மாதிரியே ஃபீல் பண்ணேன். ஆனா படம் விட்டு வரும்போது சில பேர் "ச்ச.. படமாடா இது... கொண்ணு எடுத்துட்டாய்ங்க" ன்னு பேசிட்டு போனது கேட்டு வழக்கம்போல ஒண்ணும் புரியாம வந்துகிட்டுஇருந்தேன்.

போர் அடிக்கிற மாதிரி சீன்ஸ் அதிகம் இல்லை... லாஜிக் இல்லா மேஜிக்க ஒத்துக்க மனசு இருந்துச்சின்னா சகுனி கண்டிப்பா ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். 

இப்ப எல்லாரும் பில்லாவ ரொம்ம ஆவலா எதிர் பாத்துட்டு இருப்பீங்களே... ஆனா பில்லா ரிலீஸ் ஆனப்புறம்தேன் சகுனியோட அருமை எல்லாருக்கும்
புரியுமோ?ன்னு உள்ளுக்குள்ள எனக்கு பச்சி சொல்லிகிட்டு இருக்கு



Sunday, June 17, 2012

முரட்டுக்காளை - அந்தக் காளைய கொல்லுங்கடா!!


Share/Bookmark
For the Past 25 years ah அதாவது கிட்டத்தட்ட 25 வருஷங்களா இப்புடி ஒரு படத்த தான் தேடிக்கிட்டு இருந்தேன். என்னோட இத்தனை வருஷ  அனுபவத்துல இப்படி ஒரு படத்த நா பாத்ததே இல்லை. I have never seen a such a beautiful movie in my life. ரஜினியின் முரட்டுக்காளை ரிலீஸ் ஆனப்ப நான் பொறக்கவே இல்லை. ஆனா அப்ப இருந்துருந்தா எந்த அளவு என்ஜாய் பண்ணிருப்பனோ அதே மாதிரி ஒரு அனுபவத்தை இந்த முரட்டுக்காளை ரீமேக்கின் மூலமாக தந்திருக்காரு டைரக்டர் செல்வபாரதி.  அதுவும் என்னோட favorate சுந்தர்.சி ய வச்சே.

இது ரீமேக் தானான்னு நாமளே சந்தேகப்படும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலயும் புதுமை  புதுமை புதுமை. விவேக்கோட காமெடில தியேட்டரே அதிருது.. இருமல் வர்ற அளவுக்கு சிரிப்பு. விழுந்து விழுந்து சிரிச்சதுல ரெண்டு தடவ முன்னாடி சீட்டுல உக்கார்ந்துருந்த அங்கிள் மேல  விழுந்துட்டேன்னா பாத்துக்குங்களேன். ரஜினி இந்த படத்த பாத்தாருன்னா "ச்ச.. நாம இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்காலாமோ" ன்னு ஃபீல் பண்ணுவாரு. அதே எஸ்.பி. முத்துராமன் இந்த படத்த பாத்தாருன்னா "நாம இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்துருக்கலாமோ" ன்னு  வருத்தப்படுவாரு.

படத்துல முக்கியமா சொல்லவேண்டிய இன்னொரு விஷயம் ஸ்ரீகாந்த் தேவாவோட மிரட்டல் இசை.பட்டைய கெளப்புது. ஸ்நேகாவுக்கும் சிந்து துளானிக்கும் ஒரு போட்டி படத்துல. என்ன போட்டியா? யாரு சிறந்த குடும்ப பெண் அவார்டு வாங்குறதுன்னு தான். படம்முழுக்க சேலையிலயே குடும்ப குத்துவிளக்கு மாதிரி வலம் வர்றாங்க. கொஞ்சம் கூட சலிப்படைய வைக்காத புத்தம் புதிய விறுவிறுப்பான திரைக்கதையில படம் ஜெட் வேகத்துல பயணிக்குது.

மொத்ததுல முரட்டுக்காளை ஒருமுறை பார்க்கும் அளவுக்கு சுமாரான படமாக இல்லாமல் திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் சூப்பரான படம் என்று சொன்னால் அது மிகையாகாது..."



படம் நல்லாருந்துருந்தா இப்புடியெல்லாம் எழுதலாம்னு தான் ஆசைப்பட்டேன்... ஆனா நடந்தது என்ன? வக்காளி படமாடா இது... சில படங்களை முழுவதும் பாக்க முடியாது.. சில படங்கள பாதிக்கு மேல பாக்க முடியாது. ஆனா இந்த படத்துக்கு போனா கால் மணி நேரத்துல வீட்டுக்கு ஓடிரலமான்னு தோணும். அந்த அளவு கேவலாமான ஒரு படம்.

எஸ்.பி முத்துராமன் எடுத்த அதே ஸ்கிரிப்டுல கேரக்டர மட்டும் மாத்தி போட்டு கருமத்த எடுத்துட்டு டைட்டில்ல  மட்டும் "கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் செல்வபாரதின்னு போட்டுக்குது.. ஏண்டா உனக்கெல்லாம் வெக்கமே இல்லையா? முப்பது வருஷம் முன்னாடி எடுத்த அந்த படத்துல ஹீரோ பேரு காளையன். சரி 2012 ல எடுத்த இந்த படத்துலயாது காளையங்கற பேர மாத்தி கொசக்ஸி பசப்புகழ், பஞ்சவன் பாரிவேந்தன் எதாவது லேட்டஸ்ட் தமிழ் பேர வச்சிருக்கலாம்ல.

இந்த படத்துல சுந்தர்.சி ய பாக்கும் போது ரொம்ப பாவமா இருந்துச்சி. அவரோட ஹீரோ  அவதாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ஒரு படம் மட்டுமே போதும்.  படம் பாக்கும் போது  நண்பர் ஒருத்தர் சொன்னாரு இந்த படம் எடுக்கும் போது "சுந்தர்.சி க்கு கால் உடைஞ்சதால  தான் இந்த படம் வர லேட் ஆயிருச்சின்னு. அப்புடியே இந்த படத்த ட்ராப் பண்ணிருந்தா கூட அவரு மேல ஒரு நல்ல மரியாதை இருந்துருக்கும்.

படத்துல் ஒரு கொடூர காமெடி என்னன்னா சுந்தர்.சி போலீஸ்லருந்து தப்பிச்சி ஒரு பயரமான காட்டுல ஒளிஞ்சிருப்பாரு (ஒளிஞ்சி- நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர்) ஆனா அவர ஹீரோயின் போய் பாத்துட்டு வருவாங்க. போலீஸ் போய் பாத்துட்டு வருவாங்க. வில்லன் பாத்துட்டு வருவான். அவரு தம்பிங்க பாத்துட்டு  வருவாங்க. எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு எடத்துல எதுக்குடா ஒளிஞ்சிருக்கீங்க. அதுக்கு பேசாம வீட்டுலயே வந்து இருக்கலாமே (ஒரிஜினல் படத்துலயும் இப்டிதான் இருக்கும்... ஆனா இப்பயாது
அத கொஞ்சம் மாத்திருக்கலாமே)

விவேக்க பத்தி சொல்லியே ஆகனும். 2.30 மணி நேர படத்துல சுந்தர்.சி அரை மணி நேரம் தான் வருவாரு. மத்த நேரமெல்லாம் இந்த சனியன் தான் வந்து கத்தி கத்தி காது வலிய வரவச்சிருச்சி. அவன் பேசுனதுல முக்காவாசி டபுள் மீனிங் வசனங்கள். படத்துல பாக்குற மாதிரி இருந்த ஒரே விஷயம் பதினாறு வயதினிலே டாக்டர் கேரக்டர்ல  வர்ற செல்முருகன் சீன்ஸ் மட்டும் தான்.

அப்புறம் சிந்துதுலானி... இந்த பீஸுக்கு எக்ஸ்பைரி டேட் முடிஞ்சி பல வருஷம் ஆகுது. திரும்ப இத ஹீரோயினா பாக்குறத்துக்கு ரெம்ப குஷ்டமா இருக்கு. அந்த பட்டிக்காட்டுல அரைக்கால்  டவுசரும் முண்டா பனியனையும் போட்டுக்கிட்டு இது பண்ற அநியாயம் தாங்க முடியல.மார்டன் கேர்ளாமாப்பா. அதுகூட பரவால்லா.. ஆத்தா ஸ்நேகா...பாக்க ரொம்ப அழகா இருக்கீங்க. காலம் போன கடைசில ஏன் உனக்கு இந்த வேலை. உங்க விட்டுல தாவணிலாம் எப்புடி போட்டுக்கிறதுன்னு சொல்லித்தரலயா.. இந்த மாதிரி தாவணி போடுறத நாம எங்கயுமே பாத்துருக்க முடியாது. இதயெல்லாம் பாத்தா ப்ரசன்னா எவளோ வருத்தப்படுவாரு.

மக்களே எனக்காக ஒரே ஒரு உதவி பண்ணுங்க.. இந்த ஸ்ரீகாந்த் தேவாவ எங்கயாச்சும் பாத்தீங்கன்னா கல்ல கொண்டு எறிஞ்சி கொண்ணுடுங்க. என்ன கேஸானாலும் நா பாத்துக்குறேன். நாரப்பயபுள்ள. படம் எடுக்குறதுக்கு முன்னாலயே மியூசிக் போட்டுடான் போல. அதுபாட்டுக்கு தனியா என்னமோ ஒடிகிட்டு இருக்கு. இது ஒரு ரீமேக் படம்ங்கறதால இவரும் பல படங்களோட இசைய ரீமேக்  பண்ணி இதுல போட்டுருக்காரு.

சுந்தர்.சிக்கு தம்பிங்களா ஒரு நாலு பேர செலக்ட் பண்ணிருந்தாங்க பாருங்க.. beautiful selection லொல்லு சபா ஜீவா.. ரோபோ ஷங்கரோட நடிக்கிற அரவிந்த். காதல் படத்துல வர்ற ஒர்க் ஷாப் பையன். அப்புறம் விவேக் காமெடிகள்ல வர்றா சின்ன பையன்.. இந்த காம்பினேஷன்கள பாக்கவே கன்றாவியா இருக்கு. இதுல பாவப்பட்ட ஜீவன்னா அது ஜீவா தான். அவர் டயலாக் பேசுறத பாத்தா ஒரு சீன்ல சரத்குமார் பேசுற ஸ்லாங்ல இருக்கு.. இன்னொரு சீன்ல ரஜினி பேசுற ஸ்லாங்ல இருக்கு.... லொல்லு சபால நடிச்சி நடிச்சி சொந்த ஸ்லாங்க தொலைச்சிட்டியேப்பா...



நான் இதுவரைக்கும் பார்த்த சிறந்த கேவலாமன படங்களை வரிசைப்படுத்தினா இந்தபடம் கண்டிப்பா முதல் இடத்த புடிச்சிரும்.


முரட்டுக்காளை Remake      = 20 ஆழ்வார்
                                                       = 15 அசல்
                                                       = 10 வில்லு
                                                       =  5 சுறா

மொத்தத்துல முரட்டுக்காளை The Remake - டிவில போட்டா கூட பாத்துடாதீங்க.


Sunday, June 10, 2012

தடையறத் தாக்க...


Share/Bookmark
"புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்.. புகை பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்"         

"புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்.. புகை பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்"   

 "புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்.. புகை பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்"

ஒரு மூணு தடவ திரும்ப திரும்ப படிக்கிறதுக்கே கடுப்பா இருக்குல்ல... இந்த
படத்துல இத ஒரு அம்பது தடவ இத போடுறாய்ங்க.. புகைபிடிக்கிற காட்சிகளே படங்கள்ல இருக்க கூடாதுன்னுதான் நம்ம அரசாங்கம் புதுசு புதுசா ரூல் போடுறாங்க. ஆனா அதுலயும் எங்கல்லாம் ஓட்டை இருக்குதோ அதயெல்லாம் தேடிப்புடிச்சி அந்த மாதிரி சீன வச்சிடுறாய்ங்க. கேட்டா கதைக்கு தேவைப்படுதுன்னு ஒரு உதாரு வேற.  " உங்க படத்துல ரவுடியா வர்றவரு ஏன்யா சிகரெட் குடிக்க மாட்டேங்குறாரு? உனது கதையில் பிழை இருக்கிறது" ன்னு யாராவது அவர்ட்ட போயி சண்டை போடப்போறாங்களா என்ன...

அருண்விஜயின் இரண்டு மசாலா ஹிட்டுகளுக்கு அப்புறம் ஒரு வித்யாசமான கதை அமைப்போட வந்துருக்க ஒரு படம். தனுஷோட பொல்லாதவன் டைப் கதை மற்றும் காட்சி அமைப்புகள். வழக்கமான மொரட்டு தனமான ரவுடி கும்பல்ல மாட்டிக்கிற ஒரு அப்பாவி சூப்பர் ஹீரோவோட கதை தான் இந்த தடையற தாக்க. ஆனா முடிஞ்ச வரைக்கும் அதுல கொஞ்சம் சஸ்பென்ஸ புகுத்தி வித்யாசமா காட்ட முயற்சி பண்ணி இருக்காங்க.

மொத்தமா படத்துல குறை சொல்லக்கூடிய ஐட்டங்கள் ரொம்ப கம்மி. எல்லாரும் அவங்கவங்க வேலைய கரெக்டா பண்ணிருக்காங்க. குறிப்பா திரைக்கதை, கேமரா, ஸ்டண்ட் மற்றும் இசை. ஆஹா ஓஹோன்னு பாராட்ட முடியலண்ணாலும் அருவை ரகம் இல்லை. முதல் பாதில ஒரளவு காமெடி, காதல், ரவுடிஸம்னு நகருற கதை  ரெண்டாவது பாதில முழுசும் ஒரே சஸ்பென்ஸ் ஆக் ஷனுக்கு  மாறிடுது. முதல் பாதில இன்னும் கொஞ்சம் நகைச்சுவை காட்சிகளை சேத்துருக்கலாம்.

வில்லன்களா வர்ற ரெண்டுபேரும் கேரக்டருக்கு அப்புடியே பொருந்துறாங்க.
அவங்களோட கேரக்டர விளக்க ஒரு ஃப்ளாஷ்பேக் வச்சி தெளிவா எடுத்துருந்த இயக்குனர் அருண்விஜய் ஏன் இப்புடி ரவுடிங்க மேல கோவப்பட்டு பந்தாடுறாருன்னு ஒரு Valid reason காமிக்க மறந்துட்டாரு.
  
ப்ளஸ்:

1. Bore அடிக்காத திரைக்கதை. ஒவ்வொரு சீனும் சூப்பர்னு சொல்ல முடியலண்ணாலும் குறைகண்டுபுடிக்க முடியாத திரைக்கதை.

2. படத்துல மொத்தம் ரெண்டே ரெண்டு பாட்டுதான். அதுவும் முதல் பாதிலயே
முடிஞ்சிருது. குறிப்பா படத்தோட க்ளைமாக்ஸ் நெருங்கிகிட்டு இருக்கும் போது வழக்கமா வர்ற குத்துப்பாட்டு இல்லை. அதுவரைக்கும் சந்தோஷம்.

2. தமனோட BGM சூப்பர். ஆக் ஷன் படத்துக்கேற்ற தரமான music.

3. அருண் விஜய்க்கு எதாவது ஃப்ளாஷ்பேக் இருக்கும்னு நெனச்சேன்.
எதிர்பார்த்தமாதிரி ஃப்ளாஸ்பேக் வைக்காம இருந்தது பெரிய ட்விஸ்டா இருந்துச்சி

4.  அருண் விஜய் ஆளு செம ஃபிட்டா இருக்காரு. ஆக் ஷன் காட்சிகள்ல
பூந்து விளையாடிருக்காரு. நல்ல நடிப்பும் கூட.

5. படத்தோட second half. நல்ல விறுவிறுப்பா, சஸ்பென்ஸோட கொண்டுபோயிருக்காங்க.

மைனஸ்:

1. மம்தாவ ஹீரோயினா போட்டது.. எனக்கு  பிடிக்காத சில ஹீரோயின்கள்ல மம்தாவும் ஒண்ணு. ஆனா என்ன பண்றது..எல்லா படத்துக்கும் ஹண்சிகா, அனுஷ்கா தமன்னாவ போடனும்னா ப்ரொடியூசர் எங்க போவாரு. அவன் அவன் அவனவன் சேஃப்டிய பாக்கதான செய்வான்.

2. யாவரும் நலம் படத்துல அந்த "Cook Book" சீன் பாத்துருப்பீங்க. அந்த சீனோட
கண்டெண்ட் ஒரு மாதிரியா இருந்தாலும் அந்த சீன ரொம்ப டீசண்ட்டா எடுத்துருப்பாங்க அதே மாதிரி இந்த படத்துல பட்டர்ஃப்ளைன்னு ஒண்ண வச்சி எதோ ட்ரை பண்றாய்ங்க.அத பாத்தா கடுப்பு தான் வருது. மம்தா வர்ற காட்சிகள் எல்லாமே கப்பி தனமா இருக்கு.

3. ரவுடிங்கள பத்துன கதைங்கறாதால,  படத்துலஅருண் விஜய தவற
எல்லாரும் கண்டிஷன் பெயில்ல வந்தவிங்க மாதிரியே இருக்காங்க. பாக்கவே ஒரு மாதிரி இருக்கு.

மொத்ததுல இந்த படத்த பாத்தே தீரவேண்டிய படம்னு சொல்ல முடியாது. ஆனா தாராளமா ஒரு தடவ பாக்கலாம். Low Budget படம்ங்கறதுக்காக "வழக்கு எண்" ங்கற மொக்கைகளை எல்லாம் பாத்து வெற்றிபெற வச்ச நாம இந்த படத்த பாக்குறதுல தப்பே இல்லை.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...