Showing posts with label Unusual deaths. Show all posts
Showing posts with label Unusual deaths. Show all posts

Thursday, March 12, 2015

அது எப்புடிடா சிரிச்ச மாதிரியே செத்துருக்க?


Share/Bookmark
பயத்துக்கே பயம் காட்டுற ஒரு விஷயம் தான் இந்த மரணம்ங்குறது. எப்பேற்பட்டவனையும் சாவு பயத்த காட்டி மாத்திடலாம். ஆனா இப்போ சாவப்பத்தி ரொம்ப டீட்டெய்லான, சீரியஸான டிஸ்கஷன் எதுவும் தேவையில்லை. உலகத்துல எதிர்பாராத விதமா நடந்த சில, மரணங்களப் பத்தி இந்தப் பதிவுல கொஞ்சம் ஜாலியா பாக்கலாம். சாவுறதுல என்னடா ஜாலி? ஏண்டா செத்து செத்து விளையாடுறது ஒரு விளாட்டாடா ன்னு கேக்குற உங்க மைண்டு வாய்ஸ நா கேட்ச் பன்னிட்டேன்.

நாம என்னவாக நினைக்கிறமோ அதுவாத்தான் ஆகுறோம்னு புத்தர் சொல்லிருக்காரு. அதுக்குன்னு ”நா கூடத்தான் கலெக்டர் ஆகனும்னு நினைச்சேன். இப்போ கல்லொடைச்சிட்டு இருக்கேன்” ன்னு கேக்கக் கூடாது. நினைச்சிட்டே விட்டத்த பாத்துக்கிட்டு படுத்திருந்தா வேலைக்காகாது. கொஞ்ச்ம் டீ டிக்காசனோட உழைக்கனும். சரி அத உடுங்க. இங்க ஒருத்தருக்கு என்ன நினைச்சாரோ அது அப்படியே நடந்துருக்கு. அப்டி என்ன நினைச்சாரு?

“நா எப்ப செத்தாலும் இடி விழுந்து தான் சாகனும்”ன்னு அமெரிக்காவ சேர்ந்த ஒருத்தன் அவனோட நண்பர்கள்கிட்ட சொல்லிட்டு இருந்துருக்கான். அதே மாதிரி ஒரு நாள் அவனோட ஃப்ரண்ட் வீட்டுக்கு வாசப்படிக்கு முன்னால நிக்கும் போது, அந்த வீட்டு chimney ல இடி விழுந்து அந்த அதிர்ச்சிலயே நம்மாளு மர்கயா சாலா. அட இடி விழுந்த இருளாண்டி.. எங்க ஊர்லல்லாம் அடுத்தவன் தலையில இடி விழனும்னு தாண்டா வேண்டிக்குவாய்ங்க. நீ என்னடா புதுசா உன் தலையில இடி விழனும்னு நீயே வேண்டிருக்க?

அடுத்ததும் அதே அமெரிக்காவுல தான். ஒரு வக்கீலு என்னா பண்ணிருக்கான் ஒரு மர்டர் கேஸ கோர்ட்ல வாதாடிருக்கான். அது என்ன கேஸூன்னா ஒருத்தன் குண்டடி பட்டு செத்துட்டான். அவன சுட்டதா சொல்லி ஒருத்தன கைது பண்ணிட்டாய்ங்க. இப்போ நம்மாளு வாதாடுறது அந்த அரஸ்ட் ஆனவனுக்காகத்தான். என்ன சொல்லி வாதாடிருக்காப்ள பாருங்க. “ கணம் கோர்ட்டார் அவர்களே.. எனது கட்சிக்காரர் செத்தவர சுடல. அவரே துப்பாக்கிய எடுக்கும் போது கைதவறி சுட்டுக்கிட்டு செத்துட்டார்” ன்னு வாதாடிருக்காப்ள

வாதாடுனதோட மட்டும் இல்லாம “இப்ப பாருங்களேன் எப்டின்னு செஞ்சி காமிக்கிறேன்” என்னு ஒரு துப்பாக்கிய வச்சி செய்முறை விளக்கம் குடுக்க ட்ரை பண்ணிருக்காப்ள. ப்யூட்டி என்னன்னா அந்த வக்கீலு செய்முறை விளக்கம் குடுக்கும்போது, அவர் கையில வச்சிருந்த துப்பாக்கி வெடிச்சி கோர்ட்டுல அந்தாளே இறந்துட்டாரு. கேஸ் என்னாச்சின்னு கேப்பீங்களே? அவர் வாதாடுன கேஸ் ஜெயிச்சிருச்சி. இதப்பாத்தும் ஜட்ஜ் வேற தீர்ப்பு சொல்லுவாரா என்ன? ஏண்டா தன்வினை தன்னை சுடும்னு சொல்லுவாய்ங்களே அது இந்த ”சுடும்”தானாடா?

சிரிப்பு தான் நிறைய வியாதிக்கு மருந்துன்னு சொல்லுவாங்க. சிரிப்ப தான் மனுஷங்களோட ஸ்பெஷாலிட்டின்னு சொல்லுவாங்க. காமெடி சென்ஸ் ஒரு மனுஷனுக்கு இருக்க வேண்டியது தான். அதுக்குன்னு? இங்கிலாந்துல காமெடி சென்ஸ் அதிகமா இருந்த ஒருத்தன், ஒரு டிவி ஷோவ பாத்து 25 நிமிஷம் கெக்க புக்கன்னு விடாம சிரிச்சிட்டு இருந்துருக்கான். அரைமணி நேரம் கழிச்சி பொண்டாட்டி வந்து “ஏனுங்மாமா சிரிச்சா மாதிரியே வாய வச்சிருக்கீங்க” ன்னு கேக்கும் போதும் பதில் சொல்லாம சிரிச்சிட்டே இருந்துருக்கான். அப்புறம் தான் தெரிஞ்சிருக்கு நாயி சிரிச்சிட்டே வாயப் பொளந்துருச்சின்னு. ஓவரா சிரிச்சதுல இதயத்துக்கு ஆக்ஸிசன் பத்தாம இறந்துபொய்ட்டானாம்.


”இந்த சாப்பாட்ட சாப்பிட்டுக்கிட்டே செத்துப்போயிரலாம்”ன்னு சொல்றபடி சமைக்கிற மனைவிகளும் இருக்காங்க. “இவ சமைக்கிற சாப்பாட்ட வாயில வச்சாலே நுரை தள்ளி செத்துரவேண்டியது தான்” ன்னு சொல்ல வைக்கிற மாதிரி சமைக்கிற மனைவிகளும் இருக்காங்க. இங்க ஒருத்தனோட மனைவி ரொம்ப உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல இருந்துருக்காங்க. அதனால அவனுக்கு paranoia ன்னு ஒரு வியாதி வந்து , ஹாஸ்பிட்டல்ல இருக்க என்னோட பொண்டாட்டி வந்து சமைச்சா தான் நா சாப்புடுவேன். இல்லைன்னா சாப்பிடவே மாட்டேன்னு அடம் புடிச்சே, சாப்டாம இருந்து செத்துட்டானாம்.

இந்த மாதிரி உண்ணா விரதம் இருக்கது தப்பில்லை. ஆனா உண்ணாவிரதம் எப்படி இருக்கனும்னு எங்க ஊர் அரசியல் தலைகள்ட வந்து கத்துக்கிட்டு போய்யா.. ஒரு மணி நேர உண்ணாவிரதம், இரண்டு மணி நேர உண்ணாவிரதம்னு வகை ஸ்டாக் வகையா வச்சிருக்கோம். சரி எதோ “paranoia” ன்னு புதுவிதமான வியாதி சொல்லிருக்காய்ங்களேன்னு விக்கீபீடியாவுல தேடுனா ” Paranoia is a thought process believed to be heavily influenced by anxiety or fear, often to the point of irrationality and delusion” ன்னு சொல்லுச்சி. இது புரியிறதுக்குள்ள சேகர் செத்துருவாம்போலயேன்னு “It is an unwanted statement irrelevant to the current situation” ன்னு சொல்லி படக்குன்னு அத க்ளோஸ் பன்னிட்டேன்.

அடுத்து ஒருத்தனுக்கு விதி எப்புடி விளையாண்டுருக்குன்னு பாருங்க. டொரண்டோவுல உள்ள டொமினியன் செண்டர்ங்குற பில்டிங்கு வர்ற விசிட்டர்ஸுக்கு எல்லாம் “இந்த பில்டிங்குல உள்ள க்ளாஸ் (Glass) எதுவுமே உடையாது” ன்னு சொல்லி டெமோ காட்டுற வேலைய ஒருத்தன் பாத்துக்கிட்டு இருந்துருக்கான். அதாவது ஜன்னல்ல பிக்ஸ் பன்னிருக்க க்ளாஸ்ல வேகமா போய் உடம்பால மோதி, க்ளாஸ் உடையாது”ன்னு காமிப்பான். 

அதுவரைக்கும் நிறைய பேர்கிட்ட அந்த மாதிரி க்ளாஸ் மேல போய் வேகமா மோதி உடையாதுன்னு டெமோ காமிச்சிருக்கான்.  அதே மாதிரி ஒருநாள் 24 வது மாடியில வச்சி ஒரு குரூப்புக்கு டெமோ காமிக்க வேகமா போய் ஜன்னல்ல மோதிரிருக்கான். ஜன்னல் க்ளாஸ் உடைஞ்சி கீழ போய் விழுந்து செத்துருப்பான்னு தானே நினைக்கிறீங்க. அதான் இல்லை. மொத்த ஜன்னல் ஃப்ரேமே கழட்டிக்கிட்டு, 24 வது மாடியிலருந்து கீழ விழுந்து செத்துட்டான். மேட்டர் என்னன்னா கடைசி வரைக்கும் அந்த ஜன்னல் கண்ணாடி உடையவே இல்லை.

ரஷ்யாவுல ஒருத்தன் என்ன பண்ணிருக்கான், ஃபுல்லா குச்சிட்டு, மடிக்கிற மாதிரியான ஒரு ஸ்பிரிங் bed la (folding couch) படுத்துக்கிட்டு பொண்டாட்டி கூட சண்டை போட்டுட்டு இருந்துருக்கான். வாய்த்தகரறாரு முத்திப்போய், பொண்டாட்டி கோவமா வீட்ட விட்டு கிளம்பி போகும்போது இந்த ”நாய சூ ன்னு விரட்டிட்டு போற” மாதிரி கடுப்புல அவன் படுத்துருந்த ஸ்ப்ரிங்க் பெட்டோட கால உதைச்சிட்டு போயிருச்சி. மூணு மணி நேரம் கழிச்சி வந்து பாத்தப்போ, அந்த ஸ்பிங்க் பெட்டுக்குள்ள நசுங்கி ஆத்துக்காரர் அப்பளாமாயிருந்துருக்காரு. இந்தப்புள்ள உதைச்ச ஸ்பீடுல, அந்த bed டக்குன்னு மடிஞ்சிகிருச்சி. நம்மாளு உள்ள மாட்டிகினாரு.

ஆஸ்திரேலியாவுல ஒரு தாத்தா, தாடிக்கு ரொம்ப ஃபேமஸு. அவரோட தாடியோட நீளம் மட்டும் நாலரை அடி. அவரு எங்க போனாலும் அந்த தாடியப் பாக்குறதுக்காகவே அவ்ளோ கூட்டம் இருக்குமாம். ஆனா என்ன செய்யிறது? ஒரு தடவ ஒரு பில்டிங்குக்குள்ள தீப்பிடிச்சோன எல்லாரும் தெறிச்சி ஓடிருக்காய்ங்க. நம்ம தாத்தாவும் ஓட ட்ரை பண்ணிருக்காரு. ஓடுறவரு தாடிய அள்ளி கையில வச்சிட்டு தானே ஓடிருக்கனும். பதட்டத்துல தாடிய அள்ள மறந்து அப்படியே ஓட, தாடியிலயே கால் தடுக்கி கீழ விழுந்து கழுத்தெழும்பு உடைச்சி, கதம் ஆயிட்டாரு.

அடுத்து வர்றதுதான் ஒரு செம கேஸூ.  ரொனால்டு ஓபஸ்ங்குறவன், ஒரு அபார்ட்மெண்ட்டோட பத்தாவது மாடியிலருந்து தற்கொலை பன்னிக்கிறதுக்காக குதிச்சிருக்கான். குதிச்சி on the way la ஏர்ல ட்ராவல் பண்ணிட்டு இருக்கும்போது, ஒம்பதாவது மாடியிலருந்து அவன யாரோ துப்பாக்கியால சுட்டுருக்காங்க. So, கீழ விழுந்து உயிர் போறதுக்கு முன்னால ஏர்லயே மட்டை ஆயிட்டான். ஆனா மேட்டர் என்னன்னா, எட்டாவது மாடிக்கு கீழ ஒரு வலை கட்டி இருந்துருக்கு. அதனால இவன் தற்கொலை பன்னிக்கிறதுக்கு குதிச்சிருந்தா கூட, அந்த வலையில மாட்டிகிட்டு சாகாம இருந்துருப்பான். இப்போ அவன யாரோ சுட்டதால தான் செத்துருக்கான். ஆகவே இது கொலை தான்னு கேஸ் ஃபைல் பண்ணி கோர்ட்டுல நடந்துகிட்டு இருந்துருக்கு.

அப்புறம் இன்வெஸ்டிகேஷன்ல தான் தெரிஞ்சிருக்கு, அவன சுட்ட புல்லட் அவங்க அப்பாவோட Short gun லருந்து வந்ததுன்னு. அவருக்கு ஒரு பழக்கமாம். லோட் பண்ணாத துப்பாக்கிய வச்சி, சண்டை வரும்போது அவரோட மனைவிய சுட்டுருவேன் சுட்டுருவேன்னு மிரட்டுவாராம். அவர் பையன சுடும்போது கூட, துப்பாக்கி empty ன்னு நினைச்சி தான் சும்மா சுட்டாராம். அப்புறம் யாரு அந்த துப்பாக்கில load பண்ணது? Further இன்வெஸ்டிகேஷன்ல, அந்த புல்லட்ட லோட் பண்ணது செத்துப்போன ரொனால்டு ஓபஸ்ன்னு தெரிய வந்திருக்கு.


ரொனால்டு ஓபஸ்க்கு அவங்க அம்மா செலவுக்கு காசே தரமாட்டாங்களாம். நிறைய தடவ சண்டை வந்துருக்கு. அதானால அம்மா மேல கடுப்பான ரொனால்டு ஓபஸ், அப்பா மிரட்டுறதுக்காக வச்சிருக்க துப்பாக்கிய லோட் பண்ணி விட்டுட்டான். ஒரு வேளை அப்பா சும்மா சுட்டா கூட அம்ம இறந்துடுவாங்க. சொத்து எல்லாத்தையும் ஜாலியா அனுபவிக்கலாம்ங்குற எண்ணத்துல இப்டி செஞ்சிருக்கான். ஆனா கடைசில அவன் லோட் பண்ண புல்லட் அவனையே காலி பண்ணிருச்சி. இதுல இன்னொரு செமையான விஷயம் என்னன்னா, சும்மா இருந்த துப்பாக்கில ரொனால்ட் ஓபஸே புல்லட்ட லோட் பண்ணி, அதுனாலயே அவன் செத்துப் பொய்ட்டதால இந்தக் கேஸ் கோர்ட் தற்கொலைன்னு டிக்லார் பண்ணி அவங்க அப்பாவ ரிலீஸ் பண்ணி விட்டுட்டாய்ங்க. 

குறிப்பு : மேல சொன்ன அத்தனையும் உண்மை சம்பவங்களே.. மசாலா மட்டும் நம்ம போட்டது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...