Showing posts with label new year 2017. Show all posts
Showing posts with label new year 2017. Show all posts

Friday, December 30, 2016

குடிமகன்களின் புத்தாண்டு!!!


Share/Bookmark
சிறு வயதில் தீபாவளியை எதிர் நோக்கும்போது இருக்கும் அதே உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் இப்பொழுது புத்தாண்டு கொண்டாட காத்திருக்கும் பலரிடமும் பார்க்க முடிகிறது.. புத்தாண்டிற்கு அவர்கள் அருந்தப்போகும் unlimited மதுவும் பப்புகளில் இவர்கள் போடக்காத்திருக்கும் ஆட்டங்களுமே இந்த உற்சாகத்திற்குக் காரணமாக இருக்கிறது. கடந்த நாலஞ்சி நாளாவே ரெண்டு பயலுக சேந்தா கேக்குற கேள்வி நியூ இயர் ப்ளான் என்ன பாஸ்ன்னு தான். அதாவது நியூ இயருக்கு எங்க போய் குடிக்கப்போறன்னு? நியூ இயர்ங்குறது அங்கீகரிக்கப்பட்ட குடிகாரர்கள் தினம்ங்குற நினைப்பு எல்லார்க்குள்ளயும் ஊரிப்போய் கெடக்கு.

ஊருக்கு போறதுக்கு ட்ரெய்ன் டிக்கெட் கிடைக்கலன்னு ஃபீல் பன்றது மாதிரி நியூ இயர் அன்னிக்கு  ஹோட்டல்ல மூவாயிரம் நாலாயிரத்துக்கு எண்ட்ரி டிக்கெட் கிடைக்கலன்னு ஃபீல் பன்ற சில நண்பர்களையும் பாக்க முடியிது.  ஆமா அந்த 3000 ரூவாய்க்கு என்ன தருவாய்ங்கன்னு கேட்டா “டான்ஸ் ஃப்ளோர், அண்லிமிட்டட் சோறு.. அண்லிமிட்டட் சரக்காம்”

நியூ இயருக்கு சரக்கடிக்க அலையிற பாதி பேரு மாரி படத்துல வர்ற சனிக்கிழமை ரோபோ சங்கர் மாதிரிதான். நியூ அன்னிக்கு கம்பல்சரியா சரக்கு அடிப்போம். அப்ப மத்த நாள்ல? மத்த நாள்ல கண்டிப்பா சரக்கு அடிப்போம்.

நியூ இயர்க்கு மட்டும் இல்லை. இந்த கம்பெனிலயெல்லாம் டூர் ப்ளான் பண்ணுவானுங்க. அதுல மெயின் அஜண்டாவே குடிதான். அந்த டூர் ப்ளான அவிங்க போடும்போது பாத்தா செம காமெடியா இருக்கும். எந்தெந்த இடத்துக்கு போறதுங்குறதட விட எங்கெங்க சரக்கு வாங்குறோம் அத எங்கெங்க வச்சி குடிக்கிறோம்ங்குற டீட்டெய்லதான் மொதல்ல டிஸ்கஸ் பன்னுவானுங்க.

கிராமங்கள்ல இன்னும் ஒரு நம்பிக்கை இருக்கு. ஊர்ல இருக்க வரைக்கும் புள்ள நல்லா இருப்பான். டவுனுக்கு போன உடனே அங்கருக்க பசங்க அவனுக்கு குடிக்க வச்சி பழக்கி விட்டுருவாய்ங்கன்னு. எந்த நண்பனுமே சரி.. எவ்வளவு உயிர் நண்பனா இருந்தாலும் சரி யாரும் சரக்க வாயத்தொறந்தெல்லாம் ஊத்தி விட மாட்டானுங்க. எதாவது ஒரு பொருள சாப்டா பக்கத்துல இருக்கவனுக்கும் குடுக்குறது நம்ம பண்பாடு.. அந்த courtesy க்கு மச்சி நீயும் சாப்புடு மச்சின்னு சொல்லுவான். “இல்ல மச்சி நா சாப்பிட மாட்டேன்”ன்னு சொன்னா “சூப்பர் மச்சி.. அப்டியே இரு” ன்னு சொல்றவங்கதான் அதிகமே தவற இல்ல இல்ல நீ குடிச்சே ஆகனும்னு யாரும் அடம் புடிக்கிறதில்லை. எல்லாமே நம்ம சொல்ற பதில்ல தான் இருக்கு.

பண்டிகைகள், கொண்டாட்டங்கள் கட்டாயமா வேணும். ஆனா இப்ப கொண்டாட்டம்னாவே அது சரக்க போட்டு மட்டையாகுறதுன்னு மட்டும்தான்னு அர்த்தமாக்கிக்கிட்டு இருக்காங்க.. கொண்டாட்டாம்னா நம்ம மகிழ்ச்சியா இருக்கது. நம்மளையே மறந்து மட்டையாகி கிடக்குறது இல்லை.

நீங்க குடிக்கிற காச சேத்து வச்சிருந்தா இந்நேரம் ஒரு வீடு வாங்கிருக்கலாம். அந்தக் காச ஒரு ஆதரவற்ற குழந்தைகளோட ஒரு நாள் சாப்பாட்டுக்கு குடுக்கலாம்னுல்லாம் நா கருத்து சொல்லல. கொண்டாடுறது சரி. ஆனா இதுதான் கொண்டாட்டமாங்குறது தான் கேள்வி.

எதோ ஒரு புராணக் கதையைச் சொல்லியும் கடவுள் பேரச் சொல்லியும் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளை குடும்பத்துடன் கொண்டாடுபவர்களை ஏளணம் செய்யும் அறிவு ஜீவிகள்தான் இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் முதல் ஆளாக நிற்கிறார்கள். 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...