Wednesday, May 31, 2017

ஏய் நா இண்டர்வியூக்கு போறேன்.. இண்டர்வியூக்கு போறேன்-ACCET PLACEMENT!!! -2


Share/Bookmark
இந்தப்பதிவின் முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும். காலங்கள் உருண்டோடியது. சுத்தி உள்ள எல்லாம் மாறிக்கிட்டே இருந்துச்சி. ஆனா நா இண்டர்வியூக்கு போயி மொக்கை வாங்கிட்டு வர்றது மட்டும் மாறவே இல்லை. ஒரு கட்டத்துல reject ஆகுறது கஷ்டமாக இருந்த காலம் போய் என்ன சார்.. நேத்து  இண்டர்வியூ பன்ன வர்றேன்னீங்க.. வரவே இல்லை ன்னு ஒவ்வொன்னையும் எஞ்சாய் பன்ன ஆரம்பிச்சிட்டேன். அதுவும் ஒவ்வொரு தடவ நா இண்டர்வியூக்கு போகும்போதும் எங்க பயலுக குஷியாயிருவானுங்க.. எப்புடியும் ஊத்திக்கும்னு தெரிஞ்சே நா ஃபைல துக்கிட்டு வர்றத பாத்துட்டு ஃபைனல் இயர் ஹாஸ்டல் வாசல்ல உக்காந்துக்கிட்டு என்ன தல.. இந்தத் தடவ அடி கொஞ்சம் ஓவரோ கால்லயே போட்டானுங்க போலருக்குன்னு கேட்டாத்தான் அவனுங்களுக்கு நிம்மதி.

ஒரு வேளை நாம கொண்டு போற ஃபைல்தான் ராசியில்லையோ அப்டின்னு, ஏற்கனவே வேலை கிடைச்சவன் வச்சிருந்த ஃபைல எடுத்துட்டு போவேன். அன்னிக்கும் பொடனில தட்டி அனுப்பி விட்டுருவாய்ங்க.. திரும்ப வந்து “இந்தா உன் ஃபைலு.. உன் மொகர மாதிரியே இருக்கு”ன்னு வாங்குனவன்கிட்ட விசிரி அடிச்சிருவேன்.

ப்ளேஸ்மெண்டுக்குன்னு ஒரு 2000 ரூவா வாங்குவானுங்க.. அந்த ரெண்டாயிரத்தையும் முழுசா, ஏன் அதுக்கும் அதிகமாவே யூஸ் பன்ன ஆளுகள்ல நானும் ஒருத்தன். காரைக்குடி, மதுரைன்னு லோக்கல்ல இண்டர்வியூ அண்டண்ட் பன்னிட்டு இருந்துட்டு, அடுத்த கொஞ்ச நாள்ல திண்டுக்கல், கோவைன்னு இண்டர்நேஷனல் டூர் போக ஆரம்பிச்சிட்டோம்.
Polaris ன்னு ஒரு கம்பெனி.. திண்டுக்கல் PSNA ல off-campus. எங்க காலேஜ்லருந்து பஸ் arrange பன்னிருந்தானுங்க.. காரைக்குடிலருந்து திண்டுக்கல் போற வரைக்கும் ஒரே கூத்துதான். நான் எங்க டிப்பார்ட்மெண்ட் டூர் போனப்ப கூட அப்டி எஞ்சாய் பன்னதில்லை. 

அங்க போய் பாத்தா நம்மாள மாதிரி வேலை கெடைக்காம பல ஆயிரம் பேர் இருந்துருப்பானுங்க போல. சுத்துப்பட்டி 18 சிட்டிலருந்தும் Place ஆகாத அத்தனை பயலுகலும் அங்க கூடியிருந்தாய்ங்க. 50 பேர் இருந்தாலே வேலை கெடைக்காது… 5000 பேரு இருக்கானுவ… இன்னிக்கு டண்டனக்காதான்னு நினைச்சிட்டு பசங்களோட உட்கார்ந்திருந்தேன். 

அந்த காலேஜ்ல படிக்கிற ஒருத்தன் எங்கள நோக்கி வந்தான்.

“பாஸ் நீங்கல்லாம் காரைக்குடி AC tech ah?” ன்னான்.

“ஆமா”

“என்ன டிப்பார்ட்மெண்ட்?” ன்னான்

“EEE” ன்னோம்.

“உங்க டிப்பார்ட்மெண்ட்ல கார்த்திகான்னு ஒரு பொண்ணு இருக்குல்ல?” 
(பெயர் லைட்டாக மாற்றப்பட்டுள்ளது)

“ஆமா இருக்கு... ஏன் கேக்குறீங்க”

“இல்ல சும்மா கேட்டேன்”

“உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா அது?” ன்னேன்

“எனக்கு அவங்களத் தெரியும். அவங்கள எனக்குத் தெரியும்”

“டேய்…. ரெண்டும் ஒண்ணுதான்… அப்ப அந்த புள்ளைக்கு உன்னத் தெரியாது.?.”

“ஆமா..”

“இப்ப அதுக்கு நா என்னடா பன்னனும்”

“நா அவங்கள கேட்டதா சொல்லிருங்க”

அடப்பாவிகளா… பயலுகன்னா பக்கத்துல உள்ளவன் கூட கண்டுக்க மாட்றான்.. ஒரு அழகான புள்ளைன்னா அசலூர்காரன்கூட இவ்வளவு பரிவா விசாரிக்கிறீங்களேடான்னு நினைச்சிட்டு “சரி சரி சொல்லுறேன்”ன்னு சொன்னதும் வாயெல்லாம் பல்லக் காட்டிக்கிட்டு கிளம்பிப் போனான்.

Aptitude முடிஞ்சி எல்லா காலேஜ்லருந்து வந்த மொத்த கும்பலும் ரிசல்ட்டுக்காக அங்கருந்த ஒரு ஆடிடோரியத்துல உக்கார்ந்திருந்தோம். பேர் கூப்ட கூப்ட செலெக்ட் ஆனவங்க ஒவ்வொருத்தரா எழுந்து முன்னால போனாங்க. ஒவ்வொரு பேரா படிச்சிட்டு வந்தாங்க…. “சிவா…”ன்னு மைக்குல பேரு வந்ததுதான் தெரியும். குடுகுடுன்னு எழுந்து நாலடி முன்னாடி போன அப்புறம்தான் தெரிஞ்சிது அது வேற எதோ ஒரு காலேஜ்லருந்து வந்த இன்னொரு சிவான்னு. அய்யய்யோ அசிங்கமாப்போச்சேன்னு பொத்துனாப்புல வந்து உக்காந்தேன். கடைசி வரைக்கும் என் பேரே கூப்டவே இல்ல.   கிட்டத்தட்ட 50 பேருக்கு மேல போயிருந்த எங்க காலேஜ்லருந்து அஷோக்குன்னு ஒரே ஒரு பையன் மட்டும்தான் Apps la செலெக்ட் ஆனான்.


பஸ்ஸுல போன மொத்த பேரும் அவன் ஒருத்தனுக்காக பஸ்ஸோட காத்திருக்க முடியாதுன்னு ”இண்டர்வியூ அட்டெண்ட் பன்னிட்டு மெல்ல வந்துருப்பா” ன்னு அவனுக்கு பஸ்ஸூக்கு காச குடுத்துட்டு, நாங்க எல்லாரும் ராவோட ராவா காரைக்குடிக்கு வந்து சேந்துட்டோம். அவன் மறுநாள்தான் வந்தான். கையில வேலையோட வந்தான். இப்ப வரைக்கும் அதே கம்பெனிலதான் இருக்கான்.

என்னடா இது சங்கத்துல ஆள் வர வர கம்மியாயிட்டே வருது? போற போக்கப் பாத்தா சங்கத்துல நம்ம ஆயுட் கால உறுப்பினராயிருவோமோன்னு அப்பப்ப உள் மனசுல ஒரு பீதி இருந்துக்கிட்டேதான் இருந்துச்சி.  

அடுத்தடுத்து  L&T E-Engineerning, Flextronics ன்னு ரெண்டு மூணு கம்பெனில மண்ணக் கவ்வ அதுக்கடுத்து வந்தானுங்க ”MANDO BRAKES” ன்னு ஒரு கம்பெனி. எல்லா கம்பெனியும் வந்த உடனே அவனுங்க கம்பெனி profile பத்தி ஒரு அரைமணி நேரம் intro குடுப்பானுங்க. நம்மதான் யாரு பேச ஆரம்பிச்சாலும் தூங்கிருவோமே… அவன் என்ன சொன்னான்னே ஞாபகம் இல்லை.

வழக்கம்போல இதுலயும் Apps க்ளியர் பன்னி உள்ள போயாச்சு. இண்டர்வியூ பேனலுக்குள்ள என் பேர கூப்ட உடனே உள்ள கையில ஃபைலோட போனேன். நா அப்ப கொஞ்சம் சிக்குன்னு சிறுத்தை குட்டியா இருப்பேன். ஒரு டைட்டான சட்டைய வேற போட்டுட்டு போயிருந்தேன். நா உள்ள போனதுமே பேனல்ல உக்கார்ந்துருந்த ஒருத்தன் “Body a ஃபிட்டா வச்சிருக்கீங்க.. எக்ஸர்சைஸ்லாம் பன்னுவீங்களா?”ன்னான்.

“ஆத்தாடி மதுரைக்காரன் எவனோல்ல இண்டர்வியூ பன்ன வந்துருக்கான்.. ஆரம்பத்துலயே வாரி விடுறானேன்னு நினைச்சிகிட்டு “ஹிஹி.. எப்பவாச்சும் பன்னுவேங்கன்னுட்டு உக்காந்தேன்,  

ஆமா பாஸ்…அவனுங்க ரெண்டு பேரு இருந்தானுங்க. (Friends Charlie slang)
Tell about yourself ல மனப்பாடம் பன்னி வச்சிருந்த ரெண்டு பாராவ ஒப்பிச்சப்புறம் ரெண்டு மூணு கேள்வி கேட்டனுங்க… ஏற்கனவே பலபேர்ட்ட வாங்கியிருந்த அடியில அதுக்கெல்லாம் தத்தி தத்தி பதில் சொல்லிட்டேன்.

அடுத்து ஓரு கேள்வி கேட்டான்.

”காக்கா கரண்டு கம்பில உக்காந்துருக்கு.. ஆனா சாக மாட்டேங்குது.. ஏன்?”

கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு ப்ரில்லியண்ட்டா ஒரு ஆன்சர் சொன்னேன்.

“காக்கா கரண்டு கம்பில நேரடியா கால வைக்காது சார்..அதோட நகத்துலதான் உக்காரும்… அதனால ஷாக் அடிக்காது”ன்னேன்.. ஷாக் ஆயிட்டானுங்க.

“இல்ல தம்பி… இப்ப நீ ஒரு ட்ரேயின் மேல நிக்கிற… அந்த ட்ரெயின் மேல போற கரண்டு கம்பிய நீ புடிச்சா என்ன ஆகும்?”

”ஷாக் அடிச்சி செத்துவேன்…”

“அப்ப காக்கா ஏன் சாக மாட்டேங்குது?”ன்னான்.

”ட்ரெயின் வந்து இரும்பு சார்.. அதுனால ஷாக் அடிக்கிது… காக்காவோட நகம் வந்து Non-Conductor சார்.. அதுனால ஷாக் அடிக்காது”ன்னேன்.

இவன் கூடப் பேசி நம்ம படிச்சதெல்லாம் மறந்துடும்போலயேன்னு அவனுங்களே “தம்பி அதுக்கு பேரு ஷார்ட் சர்க்யூட்டுப்பா”ன்னு ஆன்சர சொல்லிட்டானுங்க..

அப்புறம் கேள்வியெல்லாம் கேட்டு முடிச்சப்புறம்

”ஸ்ரீபெரும்புத்தூர் தெரியுமா?”

“தெரியும் சார்”

“அந்த இடம் எதுக்கு ஃபேமஸூன்னு தெரியுமா?”

“பால்கோவாவுக்கு சார்”

யோவ் அது ஸ்ரீவில்லிப்புத்தூர்யா…” ன்னு ஒரு நிமிஷம் அந்தாளு பதறிட்டாரு, இதுக்கு மேல இவன்கூட மாறடிக்க முடியாதுன்னு சரிப்பா நீ வெளிய வெய்ட் பன்னு நாங்க சொல்லி அனுப்புறோம்னு அனுப்புனாய்ங்க.

நா  வெளிலவந்து மூடிக்கிட்டு இல்லாம கதவு ஓரமா நின்ன placement coordinator ஒருத்தன்கிட்ட “டேய் மச்சி… ஸ்ரீபெரும்புத்தூர் எதுக்குடா ஃபேமஸூ? உள்ள கேட்டானுங்க… எனக்கு தெர்யலடா?”ன்னேன்.

“அய்யய்யோ.. அங்கதாண்டா Mando Brakes கம்பெனி இருக்கு” ன்னான்.

ஆத்தாடி… company profile சொல்லும்போது தூங்குனது வெனையாப் போச்சே… இதக்கூட சொல்ல்லைன்னா வேலையே தரமாட்டாய்ங்களேன்னு “இருடா நா போய் சொல்லிட்டு வந்துடுறேன்”னு திரும்ப உள்ள போய்

“சார்… “ன்னேன். என்னடா திரும்ப வந்துருக்கான்னு ஒரு மாதிரி பாத்தானுங்க..

”நீங்க ஸ்ரீபெரம்புத்தூர் எதுக்கு ஃபேமஸுன்னு கேட்டீங்கல்ல… நம்ம Mando Brakes கம்பெனி அங்கதான்சார் இருக்கு.. அதுக்கு தான் சார் ஸ்ரீபெரம்புத்தூர் ஃபேமஸூ”ன்னேன். ரெண்டு பேரும் ஒருத்தன ஒருத்தன் பாத்து சிரிச்சிக்கிட்டு

"சரிப்பா போ" ன்னு அனுப்பி விட்டானுங்க…  ஆனா அந்தக் கம்பெனிலயும் எனக்கு வேலை குடுக்கல..

என்னடா இது.. இண்டர்வியூ முடிஞ்சி கூட திரும்ப போய் ஆன்சர் சொல்லிட்டு வந்தோம். ஆனாலும் நம்மள மதிக்கலையேன்னு ஃபீல் பன்னிட்டு இருந்தேன். அப்பதான் “ஆமா வெளில வந்துட்டு திரும்ப உள்ள போனியே எதுக்குடா?ன்னு ஒருத்தான் கேட்டான்

“இல்லடா.. ஸ்ரீபெரம்புத்தூர் எதுக்கு ஃபேமஸூன்னு கேட்டானுங்க.. மொதல்ல நா பதில் சொல்லல. வெளில வந்தப்புறம்தான் தெரிஞ்சிது அங்க மேண்டோ ப்ரேக்ஸ் இருக்குன்னு.. அதான் போய் சொல்லிட்டு வந்தேன்ன்னேன்.

“இப்பதான் தெரியிது உனக்கு ஏன் அவனுங்க வேலை குடுக்கலன்னு” ன்னான்.

“ஏண்டா?”

“அடேய் ஸ்ரீபெரம்புத்தூர்லதான் ராஜீவ் காந்திய குண்டு வச்சி வெடிச்சாய்ங்க.. அதுக்குதான் அந்த ஊரு பேமஸூ… அத சொல்லுவன்னுதான் அவனுங்க எதிர்பார்த்துருக்கானுங்க... நீ கண்டத சொன்னா எப்டி வேலை குடுப்பானுங்க”

அப்பதான் புரிஞ்சிது நா ரெண்டாவது தடவ உள்ள போய் சொன்னப்போ அவனுங்க ஏன் கெக்க புக்கன்னு சிரிச்சானுங்கன்னு. ராஜீவ் காந்தி அங்க போய் செத்தா... அதுக்கு நா என்ன பன்றது... என்கிட்ட சொல்லிட்டா செத்தாரு...

-தொடரலாம்.... 



Saturday, May 27, 2017

தொண்டன் – இங்கு சிறந்த முறையில் கருத்துக்கள் சொல்லப்படும்!!!


Share/Bookmark
நடிகர் சமுத்திரக்கனியைப் பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு அனைவருக்கும் பிடித்தமான ஒரு சிறந்த நடிகர். ஆனால் இயக்குனர் சமுத்திரக்கனி பெரும்பாலானோரின் நன் மதிப்பைப் பெற்றிருந்தாலும்,  ஒரு சாரர் அவர் இயக்கும் படங்களைக் கண்டாலே “அய்யய்யோ…அட்வைஸ் பண்ணியே கொன்னுருவாருப்பா” என்று பயந்து ஓடுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. சமூகக் கருத்துக்களை காட்சிப் பிணைப்புகளோடு ஒரு திரைப்படத்தின் வாயிலாக வெகுஜன மக்களுக்கு கொண்டு செல்வது என்பது ஒரு கலை. அந்தக் கலையில் சமுத்திரக்கனி நிச்சயம் தேர்ச்சி பெற்ற ஒருவர் என்பதில் சந்தேகமே இல்லை. நாடோடிகளுக்குப் பிறகு அவர் எடுத்த அனைத்து படங்களுமே வசூல் ரீதியாக மாபெரும் சாதனைகளை படைக்காவிட்டாலும் Critically Acclaimed படங்களாகவே இருந்திருக்கின்றன.

சமுத்திரக்கனியின் முந்தைய படைப்பான அப்பா பெரும்பாலனவர்களிடம் பாரட்டைப் பெற்று, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம். இப்படியிருக்க, அவரின் இயக்கத்தில், அவரே நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் இந்த தொண்டன். 

சிம்பிளா இந்த தொண்டன் படத்தப் பத்தி சொல்லனும்னா, இதுக்கு முன்னால வந்த சமுத்திரக்கனியோட படங்கள்ல படத்தோட கதைக்கு நடுவுல கொஞ்சம் கருத்து சொல்லுவாரு. ஆனா இந்தப் படத்துல கருத்துக்கு நடுவுல கொஞ்சம் கதை சொல்லிருக்காரு. அம்புட்டுத்தேன். கருத்து சொல்வதற்கென்றே எடுக்கப்பட்ட ஒரு படம்.

எந்த ஒரு சினிமாவானாலும் கதை, திரைக்கதை சரியா இல்லைன்னா என்னதான் நல்ல கருத்து சொன்னாலும், எவ்வளவுதான் நல்ல விஷயங்கள் படத்துல இருந்தாலும் எடுபடாது. அப்படிப்பட்ட ஒரு படைப்பு தான் இந்தப் படம்.

ராணுவத்துல வேலை பாத்துக்கிட்டு இருந்த சமுத்திரக்கனி வேலைய விட்டுட்டு ஊர்ல வந்து ஆம்புலன்ஸ் ஓட்டிக்கிட்டு இருக்காரு. கருத்து சொல்றது, அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பன்றது போன்ற விஷயங்கள மெயின் தொழிலாவும் ஆம்புலன்ஸ் ஓட்டுறத சைடு தொழிலாவும் வச்சிட்டு வாழ்க்கைய ஓட்டிக்கிட்டு இருக்காரு.

அதுவும் அவரு ஆம்புலன்ஸுல பிரசவத்துக்கு அழைச்சிட்டு போனா பொறக்குற கொழந்தைக்கு எல்லாரும் இவரு பேரத்தான் வைக்கிறாங்க. ஆண் பிள்ளையா இருந்தா விஷ்ணு பிரியன், பெண் பிள்ளையா இருந்த விஷ்ணுப் பிரியான்னும்.. யப்பா டேய்… மிடியல. 

கூட இருக்க நண்பனே அவரோட தங்கைய லவ் பன்றேன்னு சொல்லி கலாட்டா பன்றப்போ, கொஞ்சம் கூட கோவப்படாம, அவனுக்கு சப்போர்ட் செஞ்சி அட்வைஸ் பன்றாரு. நாடோடிகள்லருந்தே இதே ஃபார்முலாவ ஃபாலோ பன்னிட்டு வர்றாரு. என்னதான் ஆயிரம் அட்வைஸ் அடுத்தவங்களுக்கு பன்னாலும் நம்ம தங்கச்சின்னு வரும்போது யாரா இருந்தாலும் வெட்டுக்குத்து லெவலுக்கு போயிரும். ”என் தங்கச்சின்னு மட்டும் இல்லை.. யார் தங்கச்சியா இருந்தாலும் இதத் தான் செய்வேன்”ன்னு சொல்றாரு. அவரு சொல்ல வர்ற கருத்து ஓக்கேன்னாலும் அது போன்ற காட்சியோட ஒண்ற முடியல. அயன் படத்துல ஜெகன் அவரோட தங்கச்சி தமன்னாவ சூர்யாவ லவ் பன்ன வைக்கிற அளவுக்கு இங்க மோசமா போயிடல.. ஒரளவுக்கு டீசண்டுதான்.

இடையில ஒரு சின்ன அரசியல்வாதியோட மோதல். அதனால வர்ற ப்ரச்சனைகள்னு படம் எதோ ஒரு மாதிரி போகுது. இடைவேளையில கூட படம் எத நோக்கி போயிட்டு இருக்கு, நம்மாளு என்ன சொல்ல வர்றாருங்குற க்ளாரிட்டியே இருக்க மாட்டுது. அப்புறம் படம் முடியிறதுக்கு ஒரு 20 நிமிஷம் முன்னாடி தான் படத்தோட ஒன்லைன் தெரியிது. அது என்னன்னா “ஒரு கொடிய மிருகம் நம்மள கடிக்க வருதுன்னா அத கட்டிப்புடிச்சி புரள்றது புத்தி சாலித்தனம் இல்லை. ஒண்ணு நாம விலகிறனும்… இல்லை அந்த மிருகத்த திசை திருப்பி விட்டுறனும்” இவ்வளவுதான் மேட்டர்.  

அவரு கருத்து சொல்றதக் கூடத் தாங்கிக்கலாம் போல. ஆனா காமெடி பன்றேங்குற பேர்ல ஏரியா திருடனப் புடிக்கிற சீக்குவன்ஸ் ஒரு ரெண்டு வச்சிருக்காரு பாருங்க. பிரமாதம். சார்.. நீங்க சீரியஸாவே பேசுங்க சார்…

சுனைனா சமுத்திரக்கனியோட ஜோடியா கொஞ்ச நேரம் ஸ்கிரீன்ல வர்றாங்க. நடிக்க பெரிய ஸ்கோப் எல்லாம் இல்லை. சமுத்திரக்கனியின் தங்கச்சியாக வர்ற second ஹீரோயின் சூப்பரா இருக்கு. வழக்கமான ஹீரோயின்கள் மாதிரி ரொம்ப அந்நியமா தெரியாம, நம்ம படிக்கிறப்போ ஸ்கூல்ல காலேஜ்லலலாம் நம்ம க்ளாஸ்லயே ஒரு அழகான பொண்ணு இருக்குமே.. அந்தப் பொண்ணை பாக்குற மாதிரியே ஒரு ஃபேஸ்கட் அந்தப் பொண்ணுக்கு. விக்ராந்த் கொஞ்சம் பெரிய அமெரிக்க மாப்பிள்ளை ரோல் பன்னிருக்காரு. அவ்வளவுதான்.  

இதுக்கு முன்னால சமுத்திரக்கனி எடுத்த படங்கள்ல ஒரு சமுத்திரக்கனிதான் இருப்பாரு. ஆனா இந்தப் படத்துல வர்றவன் போறவன் எல்லாம் சமுத்திரக்கனி மாதிரியே வசனம் பேசிக்கிட்டு இருக்காய்ங்க. யப்பா டேய்… ஒருத்தர் பேசுறதே பொறுக்க முடியல… அத்தனை பேரும் அதே மாதிரியா?

காட்சிகள் கதையோட ஓட்டத்த சப்போர்ட் பன்னாம, கருத்து சொல்றதுக்காகவே நிறைய திணிக்கப்பட்டுருக்கு. சிங்கம் 2 படத்துல ஒரு காமெடி நோட் பன்னீங்கன்னா சூர்யா போலீஸ் ஸ்டேஷன்ல ஆக்ரோஷமா வசனம் பேசிட்டு வேகமா வண்டிய எடுத்துட்டு Bhai ah பாக்கப் போவாரு. அங்க பாய் பாவமா செவனேன்னு உக்காந்துருப்பாரு. அவருக்கிட்ட இவரே தம் கட்டி, ஊரு விட்டு ஊரு கண்டம் விட்டு கண்டம், ஏவுகணைடா பீரங்கிடான்னு வசனம் பேசி இவரு வண்டிக் கண்ணாடிய இவரே உடைச்சிக்கிட்டு திரும்ப வருவாரு. ”ஏண்டா நா செவனேன்னு தானடா இருந்தேன்.. நீயா வந்த… பேசுன.. உடைச்ச… பொய்ட்ட”ன்னு பாய் மைண்டுல ஓடிருக்கும்.

அதே மாதிரி இங்க ஒரு சீன். ஒரு அரசியல்வாதி சமுத்திரக்கனியப் பாக்கனும்னு கூப்டு வரச்சொல்றாரு. அவ்வளவுதான்.. கூப்டுவரச்சொன்னது ஒரு குத்தமாடான்னு அந்தாளு கதறுற அளவுக்கு சம்பந்தம் சம்பந்தம் இல்லாம வசனத்த அள்ளித் தெளிக்கிறாப்ள நம்மாளு. அதுவும் நம்மூர்ல எத்தனை வகை காளைகள் இருந்துச்சின்னு மூச்சுவிடாம ஒரு லிஸ்ட் படிக்கிறாரு.

முதல் பத்து வகைய சொல்லும்போது தியேட்டர்ல கைதட்டுனாயங்க. அடுத்த பத்து வகைய சொல்லும்போது விசிலடிச்சி கைதட்டுனாய்ங்க. அடுத்த பத்து வகைய சொல்லும்போது சவுண்டு கம்மி ஆயிருச்சி. அடுத்த பத்து வகைய சொல்லும்போது “போதும்ப்பா…..”ன்னானுங்க. அடுத்த பத்து வகைய சொல்லும்போது ”வக்காளி.. டேய்ன்னு வெறியாயிட்டனுங்க… எவ்வளவு நீளம்.. யய்யாடி..

சரி இதுவரைக்கும் பாத்ததெல்லாம் படத்தோட மைனஸ்.. ப்ள்ஸ்ஸூன்னு பாக்கப்போன முதல்ல படத்தோட மேக்கிங்… காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் மற்றும் ஒவ்வொரு காட்சியிலயும் வர்ற ஒரு சில ஒன்லைனர் ரொம்ப நல்லா இருந்துச்சு.

ஒரு சில வசனங்களும் ரொம்ப சூப்பர். உங்களமாதிரி கெட்டவங்களையெல்லாம் ஒரு அளவுக்குத்தான் இந்த பூமி பொறுக்கும். கோவப்பட்டு ஒரு சிலுப்பு சிலுப்பிச்சின்னா கெட்டதெல்லாம் உள்ள போய் நல்லது மட்டும் மேல நிக்கும். அதுலருந்து இந்த உலகத்துக்கு தேவையான ஒரு தலைவன சல்லடை போட்டு சலிச்சி முன்னால வந்து நிறுத்தும்… அதுதான் இப்ப நடந்துக்கிட்டு இருக்குன்னு ஒருவசனம் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சி. ”ஏண்டா பொண்ணுங்க உங்க மூஞ்சிய புடிக்கலன்னு சொன்னா புடிக்காத மூஞ்சிய ஏண்டா திரும்ப திரும்ப கொண்டு போய் காட்டுறீங்க.. அதுங்களுக்கு புடிக்கிற மாதிரி எதாவது பன்னுங்களேண்டா..” இன்னும் நிறைய வசனங்கள் ஞாபகம் இல்லை.

இன்னொன்னு படத்தோட Casting. வேல ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு, கு.ஞானசம்பந்தம், தம்பி ராமைய்யா, நமோ நாராயணா எல்லாருமே நல்ல ஸ்க்ரீன் presence உள்ளவங்க. வேல ராமமூர்த்தி பெண் கேக்கப் போற சீன்ல செமையா பன்னிருக்காரு. 

இப்போ இருக்க நடிகர்கள் பட்டாளத்துல தம்பி ராமைய்யா ஒரு மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர். எந்த கேரக்டரா இருந்தாலும், நகைச்சுவையா இருந்தாலும், செண்டிமெண்ட்டா இருந்தாலும், Cunning ஆனா ரோலா இருந்தாலும் பிரிச்சி மேயிறவரு. இதுல IT ஆஃபீசரா ஒரு பத்து நிமிஷம்தான் வருவாரு. அவர் உடல்மொழியும், வசன உச்சரிப்பும் அப்டியே ஆஃபீசர் மாதிரி.. செம கெத்து. சூரியோட 10 நிமிட எண்ட்ரியும் அதகளம்..

ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு நல்ல கதையோட காட்சிகள் நகராம, சமீபத்துல நடந்த நிகழ்ச்சிகளையும், இளைஞர்கள் உணர்ச்சிகளையும் மையமா வச்சி, காட்சிகள அமைத்து அதன் மூலமா பணம் பன்ன பாத்ததுதான் இந்தப் படத்தோட ப்ரச்சனை. அதுவும் அவசர அவசரமா எடுக்கப்பட்டது மாதிரி தெரியிது. அதுமட்டும் இல்லாம சமுத்திரக்கனி ஸ்க்ரீன்ல இல்லாத காட்சிகள்லாம் ரொம்ப மோசமா ஏனோ தானோன்னு எடுத்த மாதிரி இருக்கு. சிலரோட நடிப்பு ரொம்ப செயற்கைத்தனம்.

படம் முடிஞ்சப்புறம் ”இந்த உலகில் வாழ்ந்ததற்கான அடையளத்தைப் பதிவு செய்யுங்கள்” எழுத்து போட்டு முடிச்சாரு, ஏண்ணே., ஆதார் கார்டு எடுக்கனும்ங்குறதுக்குத்தான் இப்புடி ரெண்டு மணி நேரம் சுத்தி சுத்தி எடுத்துருந்தியா? இத முன்னாலயே சொல்லிருக்கலாமேன்னு நினைச்சிக்கிட்டேன்.

மொத்தத்துல தொண்டன் சமுத்திரக்கனியோட முந்தைய படைப்புகள் அளவு தரமானதுன்னு சொல்ல முடியாது. நடிகர்களோட ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்காகவும், ஒருசில நல்ல வசங்களுக்காகவும் ஒருதடவ பாக்கலாம்


Wednesday, May 17, 2017

தலைவா... உன் எதிரிகளை நம்பி அரசியலுக்கு வா!!!


Share/Bookmark
விபரம் தெரிந்ததில் இருந்து ரஜினி ரசிகனாகஇருக்கிறேன்ஆனால் ஒரு முறை கூட அவர் அரசியலுக்குவரவேண்டும் என்றோதமிழ்நாட்டை ஆள வேண்டும் என்றோ நினைத்ததில்லைகாரணம் நம்மூர்அரசியல்வாதிகளின்  அரசியலைப் பார்த்த அனுவத்தில்தான்அரசியல்வாதி என்பவனுக்கு மனசாட்சி என்பதேஇருக்கக்கூடாதுசார்ந்திருக்கும் கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு மாற்றுக் கருத்து கூறக்கூடாதுஎந்தப்பக்கம் புறண்டாவது முட்டுக்கொடுக்க வேண்டும்எதிர்கட்சிகள் என்பவர்கள் தவறு மட்டுமே செய்பவர்கள் எனஎண்ணவேண்டும்பழகிய நண்பனே எதிர்கட்சியில் இருந்தாலும் தரம் தாழ்த்திப் பேசவேண்டும்இன்னும் பலவிஷயங்களை அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்அதற்கெல்லாம் இவர் சரிப்பட்டு வரமாட்டார்என்ற எண்ணம் எனக்கு எப்பொழுதுமே உண்டுஇப்போதும் கூட.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே இவர் இப்பொழுதுஅரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறதுஇப்போது கூட அவர் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்ற ஆசையால் அல்லகடந்த இரண்டு நாட்களாக நம்மூர் அரசியல்வாதிகளிடமும்அவர்களுக்குமுட்டுக்கொடுக்கும் அள்ளு சில்லுகளுக்கும் கிளம்பியிருக்கிறதே ஒரு பயம்… அதை இன்னும் கொஞ்ச நாள்நன்றாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதுஅதற்காகத்தான்.

ஒருவனுக்கு ஏற்படும் பயத்தைபய உணர்வாகத்தான் வெளிப்படுத்த வேண்டும் என்றில்லைசிலர் கோபமாகவும்,சிலர் அழுகையாகவும்சிலர் ஏளமாகவும் வெளிப்படுத்துவர்அப்படி ஒன்றுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறதுரஜினியை ஏளனம் செய்வதாக நினைத்து அவர்களின் பயத்தை வெளிக்காட்டிக்கொண்டிருக்கின்றனர். பிடித்தவர்கள் புகழ்ந்தும் பிடிக்காதவர்கள் இகழ்ந்தும் பதிவிடுகிறார்களே தவிற ரஜினியை யாராலும் புறக்கணிக்க முடிவதில்லை. ”ரஜினியையெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது... அப்டியே விட்டுறனும்” என்று ஒருவர் பதிந்த பதிவில் கூட அவர் ரஜினியைப் பற்றித்தான் பேசியிருக்கிறார் என்பது அவருக்கு தெரியுமோ தெரியாதோ?

மற்றவர்கள் பேசுவதைப் போல அவர் அரசியல் பற்றி அடுக்கு மொழிகளில் அரைமணி நேரம் பேசவில்லை.நாற்பதைம்பதாண்டு கால அரசியல் வரலாற்றைப் புட்டு புட்டு வைக்கவில்லைகட்சி பற்றிப் பேசவில்லை.எதிர்காலத் திட்டங்கள் பற்றி பேசவில்லைஅவர் அந்த கூட்டத்தில் அரசியலைப் பற்றிப் பேசியது ஒரே ஒருநிமிடம்அதுவும் அரசியலில் அவர் நிலை என்ன என்பது பற்றி மட்டும்தான். ஆனால் அன்று லோக்கல் முதல்நேஷனல் சேனல்கள் வரை ப்ரேக்கிங் நியூஸ் அதுதான். மறுநாள் காலை அனைத்து செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியும் அதுதான். இதுவே ரஜினி என்பவருக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம்.

தலைவா.. நீ ஒரு நிமிடம் பேசிவிட்டுபலரின் தூக்கத்தைக் கலைத்துவிட்டு உன் பாட்டுக்கு வேலையைப் பார்க்கச்சென்றுவிட்டாய்பார்… பல நாட்கள் எங்கிருந்தார் என்று தெரியாதவரெல்லாம் நீ ஒருநிமிடம் பேசிய அரசியலுக்குஅரைமணி நேர அறிக்கை விடுகிறார்.

தலைவா.. நீ அரசியலுக்கு வா… தோற்றுப் போ… தவறே இல்லை.. இங்கு தோற்காத ஆளுமில்லைஉனக்கு அரசியல்தெரியாமல் தோற்றுப்போகலாம்.. சூது வாது தெரியாமல் தோற்கலாம்இங்கு 50 ஆண்டு காலம் அரசியல் அனுபவம்உள்ளவர்களையே பல தேர்தல்களில் முட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடச் செய்தவர்கள் நம் மக்கள்.. பலஆண்டுகளாக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பலரை சட்டமன்றம் எப்படி இருக்கும் என்றே பார்க்கவிடாதவர்கள் நம் மக்கள். ”ஒரே ஒரு முறை எங்களிடம் கொடுங்கள் அப்புறம் பாருங்கள்” என்று காலில் விழுந்தவர்களை எட்டி உதைத்தவர்கள் நம் மக்கள். அவர்களுக்கு முன்னால் நீ தோற்பது பெரிய விஷயமே அல்ல.

உன் துறையில் நீ தோற்றால்தான் நீ வெட்கப்படவோ வேதனைப் படவோ வேண்டும்உன் துறையில் என்றுமேநீதான் ராஜா.. உன் துறையில் நீ சாதிக்காத்து இன்னும் என்ன இருக்கிறது? ”தமிழ்” என்ற ஒன்றைவைத்துக்கொண்டுஊரை ஏமாற்றி குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில்பிறப்பால் வேறு மாநிலத்தோனாக இருந்தாலும், வெளிநாடுகளில் தமிழனுக்கு அடையாளமாய் இருப்பவன் நீ.ஜப்பான் மக்களைக் கூட தமிழ் கற்கச் செய்தவன் நீமலேசிய அதிபரை வீடு தேடி வரவைத்தவன் நீஉன்துறையில் நீ சாதித்ததைப் போல்அரசியலில் இங்கு எவனும் சாதிக்கவில்லை.

உன்னை பயந்தாங்கோளி என்கிறார்கள்.. அவர்களின் தைரியத்தைப் பற்றி மக்களுக்கு நன்றாகவே தெரியும்.தனியாகத் தேர்தலைச் சந்திக்கத் துப்பில்லாமல் கூட்டணிக்காக எவன் காலிலும் விழும்மகா தைரியசாலிகள்தான்உன்னை பயந்தாங்கோளி என்கிறார்கள்மக்களின் வாக்குகளைப் பெற ஜாதியின் துணையை கூடவே அழைத்துச்செல்லும் மாபெரும் தைரியசாலிகள்தான் உன்னை பயந்தாக்கோளி என்கிறார்கள்.

உனக்கு நிர்வாகத் திறமை இல்லை என்பார்கள்.. கூட்டத்தை கும்பிடு போட வைக்கும் நிர்வாகத் திறமையோ, கூண்டோடு எம்.எல்.ஏக்களை அடைத்து வைக்கும் நிர்வாகத் திறமையோ நிச்சயமாக உன்னிடம் இல்லை. தெர்மோக்கோலை வைத்து ஏரியை மூடிய புத்திசாலிகளை விடவோ, ஜெயிலில் இருக்கும் குற்றவாளிகளுக்காக தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறி வெட்கமில்லாமல் திரியும் மானஸ்தர்களை விடவோ நீ குறைவான அரசியல் எதுவும் செய்துவிடப் போவதில்லை.

மரம் வெட்டி அரசியல் செய்தவர்களுக்கும், பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கும் உன்னுடைய கள்ளங்கபடமற்ற நேர்மையான பேச்சு கலக்கத்தை தான் உருவாக்கியிருக்கிறது. கேட்பாரற்றுக் கிடப்பவர்கள் உன்னை வைத்து முகவரி தேடிக்கொள்ள முயல்கிறார்கள். உனக்கு அரசியல் சரிப்படாது என்கிறார்கள்.  நீ அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு சரிப்படாதோ என்னவோ?

அரசியலில் நீ இல்லாவிட்டாலும் கடந்த 20 வருடங்களாக உன் பெயர் அடிபடாமல் எந்தத் தேர்தலுமே இங்கு நடைபெறவில்லை. உன்னுடைய ஆதரவை நாடாத கட்சியும் இல்லை.

நிழலையும் நிஜத்தையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிந்தவன் நீ. திரையில் பேசுவதைப் போல வீரவசனம் பேசி கட்சி ஆரம்பித்தவர்களுக்கு இன்று சின்னமே இல்லை. மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தத் தெரியாதவன் என உன்னை சிலாகித்துவிட்டு உனக்கு முன் அரசியலில் இறங்கிய மெகா ஸ்டார்கள் கடையை காலி செய்துவிட்டு மீண்டும் அரிதாரம் பூசிய கதைகளை உலகறியும்.

எதை எப்போது செய்யவேண்டும் என்பது உனக்குத் தெரியும். உன் மனதில் இருக்கும் ஆண்டவனுக்குத் தெரியும். இரண்டு நிமிடப் பேச்சுக்கே பதற்றத்தில் ஆங்காங்கு நிறைய உளரல்கள் கேட்க ஆரம்பித்து விட்டது. அப்படியானால் நீ வருகிறாய் என்றால் அவர்களின் புலம்பல் எப்படி இருக்கும் எனப் பார்க்க பேராவலாக உள்ளது.

தலைவா… நீ அரசியலுக்கு வா… உன்னுடைய ரசிகர்களை நம்பி வரவேண்டாம்உன் எதிரிகளை நம்பி வா…. நீநடிகனாக இருக்கும்போதே “என்ன செய்தாய் என்ன செய்தாய்” என்று உரிமையோடு கேட்பவர்கள் அவர்கள்.. நாளெல்லாம் உன்னைக் திட்டித் தீர்த்துவிட்டு உன் படத்தின் முதல் காட்சிக்கு வந்து முதலில் நிற்பவர்கள் அவர்கள்.நீ என்ன செய்து கிழிக்கிறாய் என்று பார்ப்பதற்காவது அவர்கள் நிச்சயம் உனக்குத்தான் வாக்களிக்கப்போகிறார்கள்..!!!

நீ வெற்றி பெற்றால் வாழ்த்தும் தகுதி பலருக்கு உண்டு. ஆனால் தோல்வியடைந்தால் ஏளனம் செய்யும் தகுதி எவனுக்கும் இல்லை. ஏனென்றால் அரசியலில் தோற்காதவனே இல்லை!!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...