Showing posts with label தனுஷ். Show all posts
Showing posts with label தனுஷ். Show all posts

Monday, July 21, 2014

வேலையில்லா பட்டதாரி- SUPER STAR - IN MAKING!!!


Share/Bookmark
படம் ஆரம்பிக்கிற நாள்லருந்து படத்தோட கதையோ இல்லை படத்தைப் பத்தின செய்தியோ இல்லை  ஏதாவது ஸ்டில்ஸோ ரிலீஸே ஆயிடக்கூடாதுன்னு ஷங்கர் பட பாணியில ரொம்ப சீக்ரெட்டா வச்சி படத்த ரிலீஸ் பண்ணி   ஹிட்டடிக்கிறது ஒரு ரகம். அதே, படத்தோட மொத்தக் கதையையும் முன்னாலயே சொல்லி,  ஆடியன்ஸ தியேட்டருக்கு வரச்சொல்லி,  சொல்லி அடிக்கிறது இன்னொரு ரகம்...இந்த வேலையில்லா பட்டதாரி சொல்லி அடிக்கிற ரெண்டாவது ரகம். இந்தப் படத்தோட ரெண்டு நிமிஷ ட்ரெயிலரே போதும்  படத்தோட மொத்தக் கதையையும் நமக்கு சொல்றதுக்கு. இருந்தாலும் எந்த சலிப்பும் இல்லாம செம  ஜாலியான ஒரு படத்த  கொடுத்துருக்காங்க.

தனுஷுக்குனே அளவெடுத்து தச்சா மாதிரியான ஒரு கேரக்டர். ஏற்கனவே பல படத்துல அவர்  பண்ணதுதான்னாலும் இதுலயும் கொஞ்சமும் குறையில்லாம பண்ணிருக்காரு. முதல் பாதி முழுசுமே செம  ஜாலியா போவுது. காமெடில பிண்ணிருக்காய்ங்க. சிவில் படிச்சிட்டு கட்டிடம் கட்டுறத தவற வேற எந்த  வேலைக்கும் போக மனசில்லாம நாலு வருஷமா வேலைதேடி அலையிறவரு தனுஷ்.  அவருக்கு பின்னால  படிக்கிற தம்பி வேலைக்கு போயி நல்லா சம்பாதிச்சி காரெல்லாம் வாங்க நம்மாளுக்கு லைட்டா பொகையிது அப்பாவும் அடிக்கடி ரெண்டு பேரையும் கம்பேர் பண்ணி பேசி நம்மாள கடுப்பேத்துறாரு. பின்னால  அவருக்கு எப்படி வேலை கெடைக்குது, அதுக்கப்புறம் அவர் ஃபேஸ் பண்ற ப்ரச்சனைகள் என்னென்னங்குறத சொல்றது தான் இந்த VIP. என்னடா சன் டிவி டாப் டென் சுரேஷ் குமார் மாதிரி  பேசுறேனேன்னு தானே வெறிக்கிறீங்க?

தமிழ் சினிமாவோட அம்மா கேரக்டர கொஞ்ச நாளுக்கு முன்னால் சுஜாதா குத்தகைக்கு எடுத்துருந்த மாதிரி  இப்போ சரண்யா. அனைத்து ஹீரோக்களுக்கும் அம்மா அவங்க தான். அப்பாவா சமுத்திரக்கனி செண்டிமெண்ட் வசனங்கள்ல மட்டும் இல்லாம காமெடி வசங்கள்லயும் டெலிவரி செம. "ஏண்டா 15  வருசத்துக்கு முன்னால இதே வீட்டுக்குள்ளருந்து ball எடுத்துத்துட்டு வந்த.. அப்போ உன்னோட 15 பேர்  விளையாண்டாய்ங்க.. எல்லாரும் வேலைக்கு பொய்ட்டாய்ங்க.. நீ இப்பவும் இங்க பால் எடுத்துகிட்டு தான்  இருக்க" ன்னு சொல்றப்போவும், "ஊதுடா ஊது என் மூஞ்சில ஊது"ன்னு சொல்லும் போதும் 7G விஜயன  ஞாபகப்படுத்துறாரு.

அடுத்த வீட்டுப் பொண்ணா அமலாப்பால்... தனுஷ் கிட்ட பக்கத்து வீட்டு அமலாப் பால ஹீரோயின் ரேஞ்சுக்கு சரண்யா பில்டப் பண்ணி சொன்னப்புறம் தனுஷ் அவளப் பாத்து "இதப்பாரு உனக்கு ஹீரோயின் அளவுக்கெல்லாம் சீன் இல்லை..  சுமாராத்தான் இருக்க" ன்னு சொன்னதும் எனக்கு  "ச்ச நம்ம மனசுல இருக்கத அப்படியே எழுதிருக்காய்ங்கையா..." ன்னு செம ஜாலியாயிருச்சி.. நல்ல வேளை அமலா பாலோட அகோர முகரைகளை  காமிக்காம ஓரளவு சுமாராவே காமிச்சிருக்காங்க. தெய்வத்திருமகளுக்கு அப்புறம் இதுல ஓரளவு பாக்குற மாதிரி இருக்கு.

படத்தோட ட்ரெயிலர்லயே எப்படி மொத்தக்க தையையும் டைரக்டர் சொன்னாரோ அதே மாதிரி அனிரூத்தும்  ட்ரைலர்லயே மொத்த மீசிக்கையும் சொல்லிட்டாரு.. வக்காளி ட்ரெயிலர்ல வர்ற ரெண்டே BGM தான்  படம்  மொத்ததுக்குக்கும். ஒரு லெவல்ல BGM கடுப்பேத்த ஆரம்பிச்சிருச்சி. பாட்டும் அதே மாதிரிதான். ட்யூன்  எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா இவன் ஏதேதோ instruments ah போட்டு காய் மூய்னு கத்தி, கெடுத்து  வச்சிட்டான். பாட்டு ஓடும்போது காதுல காய்ச்சின எண்ணைய ஊத்தி கொடாய்ஞ்சி விட்டா  மாதிரி ஒரே  கடுப்பா இருக்கு. சில நேரத்துல மேல போஸ்டர்ல தனுஷ் என்ன பண்றாரோ அதயே பண்ணனும்னு போல தோணுச்சி.

முதல் பாதி முழுதும் தம்பி, காதலி, அம்மா அப்பான்னு வீட்டை சுத்தியே செம்ம காமெடியா படம்  நகர்ந்துகிட்டு இருக்க, இரண்டாவது பாதியில கதைக்களமே அப்படியே மாறுது. கொஞ்சம் சீரியஸா.. வில்லனா ஒரு சின்னப் பையன் நம்ம ஆர்யா மாதிரி "என்னே பாஸ்.. எப்டி இருக்கீங்கே பாஸ்"ன்னு கொழ கொழ தமிழ் பேசிக்கிட்டு வர்றான். ஆனா கடைசி வரைக்கும் தனுஷ் அவன ஒரு வில்லனாவே மதிக்காம  இருக்கதுதான் படத்துலயே ஹைலைட். அதுவும் க்ளைமாக்ஸ்ல "தம்பி உனக்கும் எனக்கும் எதாவது  ப்ரச்சனையா?" ன்னு தனுஷ் கேக்கவும் அதுக்கு அந்தப் பையன் பம்புறதும் அல்டிமேட் காமெடி. ரெண்டாவது  பாதியில காமெடிப் பொறுப்ப விவேக் எடுத்துகிட்டு செம்மையாவே செஞ்சிருக்காரு.

ரெண்டாவது பாதில "இவன் வேற மாதிரி" பட ஹீரோயினும் இருக்கு. அதப் பாத்தப்புறம் "அடப் பாவிகளா இந்தப் புள்ளைய மொதல்லையே எறக்கிருக்கலாமேடா,.,. அமலாப் பால் மூஞ்சிய பாக்குறத கொஞ்சம் கம்மி பண்ணிருக்கலாம். நல்ல வேளை தெலுங்குப் பட பாணியில கடைசியில ரெண்டு ஹீரோயினோட தனுஷ் ஆடுற மாதிரி எதும் குத்துப் பாட்டெல்லாம் வக்கல.

என்னதான் படம் கொஞ்சம் கூட போர் அடிக்கலன்னாலும் அங்கங்க சில சில லாஜிக் சொதப்பல்கள், சில  சினிமாத்தனமான காட்சிகளை தவிர்க்க முடியவே இல்லை. அதுவும் கால் செண்டர்ல முதல் மாசத்துல 50000 ரூபாய்க்கு வேலைக்கு சேர்றாரு. கன்ஸ்டரக்ஷன் கம்பெனில வேலைக்கு சேர்ந்த ஆறே மாசத்துல 200 கோடி ப்ராஜெக்ட தனுஷும் விவேக்கும் கொண்ட இரண்டு நபர் குழுவே handle பண்ணுது. நல்லா யோசிச்சி பாருங்க மக்களே இங்க  எவனாவது நம்மள ஒரு 20 லட்சரூபா ப்ராஜெக்டுக்காகவாது own ah decision எடுக்க விடுவாய்ங்களா? அதவிட பெரிய கடுப்பு VIP facebook க்ரூப்புல இவரு போஸ்ட போட்ட உடனே பஸ்ஸு,லாரின்னு ஷங்கர் படத்துல வர்றது மாதிரி ஆளுங்க வந்து குவியிறாங்க. கொஞ்சம் யோசிங்க உண்மையிலயே அதுமாதிரி ஒருத்தன் போட்டா என்ன  பண்ணுவோம்? குரூப்புல இருக்க பாவத்துக்கு கழுதைக்கு ஒரு லைக்க போட்டு விட்டுட்டு பொத்துனாப்புல வீட்டுக்குள்ளயே உக்காந்துக்குவோம். 

பாடல்கள் எடுத்த விதமும் சரி, stunt um சரி... நல்லாவே இருக்கு.  இந்த ஆல்பத்துலயே எனக்கு  ரொம்ப புடிச்ச் பாட்டு "போ இன்று நீயாக" தான். ஆனா அந்தப் பாட்டு பிக்சரைசேஷன் செம சொதப்பல். அது  மட்டும் படத்தோட தரத்துல இல்லாம, தனியாத் தெரியிது. சூப்பர் BGM ம்மோட D25 ன்னு ஆரம்பத்துல வர்ற ஸ்லைடும், வேலையில்லா பட்டதாரி டைட்டில் கார்டும் சூப்பரா பண்ணிருக்காங்க. அதுக்கும் மேல டைட்டில்ல "பாடல்கள் - "poetu" தனுஷ்" ன்னு போடுறது அல்டிமேட்

தனுஷ சைடு ஆங்கிள்ல பாத்தா மொத்த அகலமே ஒரு 30 செண்டி மீட்டர்தான் இருப்பாரு போலருக்கு.  பழைய 7up விளம்பரத்துல வர்ற குச்சி பொம்மை மாதிரி தான் இருக்காரு. அதுவும் அவரோட ஸ்பெஷல்  பைக்க மூஞ்ச பரிதாபமா வச்சிகிட்டு ஓட்டிகிட்டு வரும்போது, சிரிப்பும் வருது பாவமாவும் இருக்கு.  ஒவ்வொரு ரியாக்ஷன்லயும் செம variation. கோவப்படுப்போதும் சரி, பாவமா இருக்கும்போதும் சரி, காமெடி  பண்ணும் போதும் சரி நிறைய இடத்துல தனுஷ் ரூபத்துல சூப்பர் ஸ்டாரே தெரியிறாரு. குறிப்பா சும்மா படுத்துருக்க தனுஷ் ரவுசுக்காக தம்பிய கூப்டு "டேய் ஃபேனப் போடுறா" ன்னு சொல்ற சீன்லயும், அமுல்  பேபி சீன்லயும், ஏன் க்ளைமாக்ஸ் ஃபைட்டுல கூட அதே சாயல்.  இதுல நோட் பண்ண வேண்டிய விஷயம்  என்னன்னா 'அமுல் பேபி" சீனத் தவற வேற எந்த இடத்துலயும் தனுஷ் தலைவர imitate பண்ண முயற்சி  செய்யவே இல்ல. இயல்பாவே அவருக்கு அந்த லுக்கு வருது. 

சூப்பர் ஸ்டார்ங்குற பட்டத்த எவன் வேணாலும் எவண்டயாது காச குடுத்து வாங்கி போட்டுக்கலாம். ஆனா  அதுக்கு பின்னால இருக்க ரஜினிங்குற பேருக்கான  இடத்தை பிடிக்க யாராலையும் முடியாது. ஏன்னா அது  ஒரு சிலருக்கு பிடிச்சமாதிரி படங்களைக் கொடுக்குறதால கிடைக்கிறது இல்லை. சின்ன பசங்கல்லருந்து  பெரிய ஆளுங்க வரை அனைவருக்கும் பிடிச்ச படங்களை கொடுத்தா மட்டுமே முடியும். நகைச்சுவை  ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட்டுன்னு எல்லாமே செய்க்கூடிய ஒருத்தரால தான் முடியும். இதுவரை சூப்பர் ஸ்டார்  இடத்துக்கு ஆசைப்பட்ட ஆளுங்கள கொஞ்சம் பாருங்க. முதல் மூணு நாள் பாக்குற ரசிகர்களோட  சப்போர்ட்ல மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கவங்க. ஒருத்தருக்கு செண்டிமெண்ட்டும் வராது. காமெடியும்   வராது. இன்னொருத்தர் எதப் பண்ணாலும் காமெடியாத்தான் இருக்கும்.  (யார் யார சொல்றேன்னு நீங்களே  புரிஞ்சிக்குங்க)

இப்படிப்பட்டவிங்க போட்டி போட்டுகிட்டு இருக்குற  இங்க, ஓரளவு இலக்கை நோக்கி சரியான பாதையில  போய்கிட்டு இருக்கவர் தனுஷ் மட்டுமே. அதுக்கு இந்த வேலையில்லா பட்டதாரி ஒரு சிறந்த உதாரணம்.  நிச்சயம் பாருங்க. இந்த வருஷத்தோட சிறந்த பொழுதுபோக்குப் படம். 

Thursday, January 2, 2014

சூப்பர் படங்கள் - 2013


Share/Bookmark
போன வருஷத்த கம்பேர் பண்ணி பாக்கும்போது இந்த வருஷம் எவ்வளவோ பரவால்ல. போன வருசம் நல்ல பத்து படத்த தேடி கண்டுபுடிக்கிறதே பெரும்பாடா போச்சு. இந்த வருஷம் எக்கச்சக்கமான நல்ல படங்கள் வந்து பட்டைய கெளப்பிருக்கு. படம் ரிலீஸ் ஆவுறதுக்கு முன்னாலயே ஹிட்டாக்கப்பட்ட தங்கமீன்கள், ராஜா ராணிய மட்டும் என்னவோ இன்னும் பாக்க பிடிக்கல.  மத்தபடி நான் பார்த்த சில நல்ல படங்களோட வரிசை. விமர்சனத்துக்கு டைட்டில க்ளிக்குங்க.

10. a.ஹரிதாஸ்

 சிம்பிளான ஒரு கதைய எடுத்துக்கிட்டு ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் ஒரு நீட்டான ஸ்க்ரீன் ப்ளேல கொண்டு போயிருந்த ஒரு நல்ல படம்.




கமர்ஷியலா படம் ப்ளாப்.. நிறைய பேருக்கு படம் பிடிக்கலை. ஆனா  செகண்ட் ஹாஃப்ல வர்ற ஒரு சில காட்சிகள தவற மற்றபடி தரமான ஒரு படம்.  ஆடுகளத்துக்கு அப்புறம் தனுஷ் ஒரு செம ஆக்டர்னு மறுபடி ப்ரூப் பண்ண படம்






நம்ம டீம்ல ஷேவாக் விக்கெட்ட மட்டும் கணக்குல எடுக்கவே முடியாது. சில சமயம் மொத விக்கெட் எப்பவுமே ஃப்ரீ விக்கெட் மாதிரி தான். 9 விக்கெட் கணக்குல வச்சிகிட்டு மத்தவங்க தான் டீம காப்பாத்தனும். அது மாதிரி இந்த படத்துல இருந்த ரெண்டு விக்கெட்டுல பாலாங்குற விக்கெட் ஃப்ரீ விக்கெட்டு. எந்த ப்ரயோஜனமும் இல்லைன்னாலும் தனி ஆளா படத்த தூக்கி நிறுத்திய பெருமை விஜய் சேதுபதிக்கு தான். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்த தியேட்டர விட்டு சீக்கிரமா ஒழிச்ச பெருமையும் இந்த படத்தையே சாரும்




அவன் இவனுக்கு  ஒரு கப்பிக்கு அப்புறம் பாலாகிட்டருந்து வந்த இன்னொரு தரமான படம்


வருஷ கடைசில வந்தாலும் கார்த்திக்கு கைகுடுத்த ஒரு படம்

 

8. எதிர் நீச்சல்

இந்த வருஷத்தோட most successful hero நம்மாளு தான்.  கேடிபில்லா கில்லாடி ரங்கா கைவிட்டாலும் அடுத்த மாசமே எதிர்நீச்சல இறக்கி ஹிட்டடிச்சவரு.




ரொம்ப நாளுக்கு அப்புறம் விஷாலுக்கு ஒரு நல்ல படம். வழக்கமான விஷால் படங்கள் மாதிரி இல்லாம எடுத்ததே இந்த படத்தோட வெற்றிக்கு முக்கிய காரணம்



6.மூடர் கூடம்

பாண்டிராஜின் தயாரிப்புல வந்த இந்த படம் வந்ததும் போனதும் தெரியலன்னாலும் சூப்பரான ஒரு படம்.  பெரிய செட்டு, நிறைய பணம்னு இல்லாம கம்மியான கேரக்டர்களோட ஒரு வீட்டுக்குள்ளயே கொஞ்சம் கூட போர் அடிக்காம எடுத்து பட்டைய கெளப்பிருந்தாரு டைரக்டர் நவீன்.  அந்த நாலு மெயின் கேரக்டரோட வடிவமைப்பும், கடைசி வரைக்கும் அத மெயிண்டெய்ண் பன்னி கொண்டு போனதும் சூப்பர். செண்ட்ராய் படத்துக்கு இன்னொரு பலம்





 அதுவா வந்துருந்தா சுமாரா ஓடி ஒரு வாரத்துல போயிருக்கும். ஆனா சும்மா இருந்த படத்த நோண்டி விட்டு எக்கச்சக்கமா விளம்பரம் குடுத்து இந்த வருஷத்தோட மெகா ஹிட் படமாக்கிட்டாங்க. இரண்டாவது பாதி மொக்கன்னாலும் கமலுக்காகவும், அவரோட வித்யாசமான முயற்சிகளுக்காவும் கண்டிப்பா பாக்கவேண்டிய ஒரு படம்



4. வருத்தப்படாத வாலிபர் சங்கம்

இந்த வருஷத்தோட இன்னொரு சூப்பர் ஹிட் படம். அதுக்கு முக்கியமான் ஒரு காரணம் இமான். எல்லா பாட்டும் பட்டைய கெளப்பிருந்தாரு. படம் ஹிட்டாச்சோ இல்லியோ நம்ம ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீ திவ்யா செம ஹிட்டாயிருச்சி. ஒரே படம் ஓஹோன்னு வாழ்க்கைங்குறது இது தான். 



விஜய் சேதுபதிய அடுத்த லெவலுக்கு கொண்டு போன படம். விஜய் சேதுபதி ரசிகர்களை ரெண்டு மடங்காக்கிய படம். இதற்கு தானே ஆசைப்பட்டாய் படம் ஓட காரணமா இருந்த படம்.   பீட்சாவுக்கு அப்புறம் அவருக்கு பெரிய மார்க்கெட் கிடைக்க காரணமே இந்த படத்தோட தாறு மாறு வெற்றிதான்.

 
 

 தலைவர் சுந்தர்.சி இன்னொரு தடவ காமெடில அவர அடிச்சிக்க ஆள் இல்லைன்னு ப்ரூப் பண்ண இன்னொரு படம்.




முகமூடிங்குற பள்ளத்துல விழுந்த மிஷ்கின் டக்குன்னு எழுந்த படம். இந்த வருஷம் வந்த படங்கள்ல தீயா வேலை செய்யனும் குமாருக்கு அப்புறம் ரொம்ப  satisfied ah பாத்துட்டு வந்த படம் இது தான். ஆன  படம் 4 நாள்தான் தியேட்டர்ல ஓடுனுச்சிங்குறதுதான் ரொம்ப சோகமான விஷயம். 

 



Sunday, October 13, 2013

நய்யாண்டி – ஜருகண்டி!! ஜருகண்டி !!! ( கவுண்டர் Review)


Share/Bookmark

என்னடா ரெண்டு மாசமா ஒண்ணும் பெரிய சம்பவங்கள் எதுவும் நடக்கலியே... நல்லா போயிட்டு  இருக்கேன்னு பாத்தேன்... நடத்திட்டாய்ங்க. ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு கெப்பா குட்டி இருக்கு. ஒருத்தனால என்ன ரேஞ்சுல படம் எடுக்க முடியும்,அவன் பாடி எவ்வளவு தாங்கும்.. இதெயெல்லாம் பாத்து தான் ஒருத்தர்கிட்ட படத்த குடுக்கனும். சுசிகணேசன்கிட்ட கந்த சாமிய குடுத்து நல்லா வாங்கி கட்டிகிட்டது மாதிரி. அவரு எடுத்துருந்தது அதுக்கு முன்னாடி ரெண்டே ரெண்டு பிட்டு படம்தான். அவர நம்பி பல கோடிரூவாய எந்த நம்பிக்கையில குடுத்தாங்கன்னு தெரியல. அதே மாதிரி தான் இங்கயும். நம்ம சற்குணம் எடுத்தது ரெண்டே ரெண்டு படம் அதுவும் ஒரு படம் full க்கு தாங்காது. அவர நம்பி நம்ம தனுஷ் எந்த நம்பிக்கையில படம் குடுத்தாருன்னு தெரியல. படம் ஒரளவுக்கு  எதாவது சொல்ற மாதிரி இருந்தா மட்டும் தான் என்னால ரிவியூ எழுத முடியும். இல்லன்னா மொத்த பொறுப்பையும் அவர்கிட்ட குடுத்துருவேன். அவர்கிட்ட நீங்களே படத்த பத்தி கேட்டுக்குங்க....

இடம் : அழகுராஜா சைக்கிள் கடை... மாலை 4 மணி..
செந்தில் : என்னணே ஒரே டென்சனா உக்காந்துருக்கீங்க?

கவுண்டர் : அட ஏண்டா அழகேசா... வாரம் ஏழு நாலும் இந்த ஓட்டை விழுந்த சைக்கிள் டியூபையும் துரு புடிச்சி போன ரிம்மையும் பாத்து பாத்து போரடிச்சி போச்சிடா.. மனுசனுக்கு ஒரு எண்டர்டைன்மெண்ட் இருந்தா தானே வாழ்க்கை ஒரு கில்ஃபான்ஸா போவும்

செந்தில்: அட இவ்வளவு தானா... இதுக்கு என்கிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்கே... 

 கவுண்டர் : தம்பி நீ ஏற்கனவே எனக்கு ஐடியா தர்றேன்னு சொல்லி பலமுறை ஓட ஓட அடி வாங்கிருக்க.. மரியாதையா என்ன கொஞ்சம் தனியா விட்டுட்டு ஓடிப்போயிரு..

செந்தில் :(சோகமாக) என்னண்ணே... நா உங்க தம்பி மாதிரி உங்களுக்கு ஒரு நல்லது பண்ணலாம்னு பாத்தா இப்டி பேசுறீங்களே...

கவுண்டர் : டேய்... டேய்... இப்போ என்னத்துக்கு அழுவுற நீயி... சரி சொல்லித் தொலை..

 செந்தில் : நம்மூர் கொட்டாயில புது படம் ரிலீஸ் ஆயிருக்குண்ணே... சாயந்தர ஆட்டத்துக்கு போனா உங்க டென்சன் எல்லாம் போயிரும்னே...

கவுண்டர் :டேய்... யோசனை என்னவோ நல்லாத்தான் இருக்கு.. ஆனா நா படம் பாக்குறதயே விட்டுட்டேனேடா.. இப்பல்லாம் ஒரு நாயும் ஒழுங்கா படம் எடுக்குறதே இல்லை.. 14 ரீல காலி பண்ணனும்ங்கறத்துக்காகவே எத எதயோ எடுத்து வைக்கிறாங்க.... இது சரிப்பட்டு வராது ஆள விடு...

செந்தில் : அண்ணேன்... இவரு நல்ல டைரக்டருண்ணே... நேசனல் அவார்டு எல்லாம் வாங்கிருக்காரு..

கவுண்டர் : டேய் படப் பொட்டி மண்டையா...நேசனல் அவார்டுங்றது எந்த படத்துக்கு தருவாய்ங்க? வந்துச்சா வரலியா, ஓடுச்சா ஓடலையாண்ணு தெரியாத ரேஞ்சில ஒரு படம் வரும் பாத்தியா அதுக்கு தான்அவார்டு குடுக்கும் போது தான் அப்டி ஒரு படம் வந்ததையே மக்கள் தெரிஞ்சிக்குவாங்க.. அப்டி இல்லைன்னா எவன்கிட்டயாது காசு நெறையா இருந்தா அத குடுத்து ஒரு நேசனல் அவார்டு வாங்கிக்குறாய்ங்க.. இதெயெல்லாம் நம்பி போக முடியாதுடா..

செந்தில் : போங்கண்ணே... இவ்ளோ சொல்லியும் கேக்காமாட்டேங்குறீங்க.. இனிமே நா இங்க சைக்கிள் தொடைக்க மாட்டேன்...

கவுண்டர் : ஆமா சைக்கிள் தொடைக்கிறது பெரிய கவர்னர் உத்யோகம் இவரு இல்லைன்னா யாரும் பாக்க முடியாது.. சரி இவ்ளோ கெஞ்சிறதால வர்றேன்... மவனே எதாவது மிஸ் ஆச்சு நாளையிருந்து சைக்கிள் தொடைக்க கை இருக்காது...



(தியேட்டரில்)

கவுண்டர் : அடேங்கப்பா... டேய் மண்டையா கூட்டம் அலை மோதுது.. படம் சூப்பரா இருக்கும் போலருக்குடோவ்... 

செந்தில்: இருக்காதா பின்ன... நம்ம தனுஷ் வேற நடிச்சிருக்காறே..

கவுண்டர் : யாரு இந்த கம்பு குச்சில சட்டைய மாட்டி விட்டா மாதிரி ஒருத்தன் இருப்பானே அவனா.. ரொம்ப விபரமான பையன்,...

செந்தில் : (சத்தமாக) அண்ணே... அண்ணே... அங்க பாருங்கண்ணே..
கவுண்டர் : என்னடா அங்க..

செந்தில் : இந்த படத்தோட டைரக்டரு சற்குணம் வர்றாருண்ணே...  

கவுண்டர் : டேய் வாடா.. நா இதுவரைக்கும் சினிமா காரங்கள பாத்ததே இல்லை பாத்து ரெண்டு வார்த்த பேசிட்டு வருவோம்...

கவுண்டர் : அய்யா வணக்கம்ங்க..

சற்குணம் : ம்ம்ம்... வணக்கம் வணக்கம்... படம் பாத்துட்டீங்களா
கவுண்டர் : இனிமே தாங்க பாக்க போறோம்... 

சற்குணம் : அதானே பாத்தேன்... படம் பாத்துருந்தா இந்நேரம் சிரிச்சி சிரிச்சி உங்க வயிறே புண் ஆயிருக்குமே

கவுண்டர் : அப்டீங்களா.. அவளோ காமெடியா எடுத்துருக்கீங்களா?

சற்குணம் : அட என்ன அப்டி கேட்டுட்டீங்க.. இந்த கதைய நா தனுஷ் கிட்ட சொல்லும் போதே அவரு கைதட்டி சிரிச்சி ரசிச்சார்னா பாத்துக்குங்களேன்... its a laugh riot 

கவுண்டர் : அடேங்கப்பா.. (சைடுல லைட்டா திரும்பி ) டேய் மண்டையா லாப் ரியாட்னா என்னடா?

செந்தில் : அதாவதுன்னே இந்த படத்த பாத்தா நீங்க குலுங்க குலுங்க சிரிச்சி ரசிப்பீங்களாம்னே

கவுண்டர் : டேய் அழகேசா... நா உன்ன என்னவோ தப்பா நெனைச்சிட்டேண்டா.. இந்த அண்ணேன் சந்தோசமா இருக்கனும்னு நீ எவ்வளவு நல்ல மனசோட இருந்துருக்க...

சற்குணம் : அதுமட்டும் இல்லை இந்த படத்துல 5 பாட்டு இருக்கு பாருங்க.. ஃபெண்டாஸ்டிக்... அதயும் ஃபாரின்ல சூட் பண்ணிருக்கேன்... அசந்து போயிருவீங்க... குறிப்பா ஒரு தொப்புள் சீன் வச்சிருக்கேன் பாருங்க... ஒரு பய வச்சதில்லை இதுவரைக்கும் தமிழ் சினிமாவுல

கவுண்டர்: சார் நீங்க இங்கயே இருங்க... நாங்க படம் பாத்துட்டு வந்து இத பத்தி டீடெய்லா பேசுவோம்..

சற்குணம் : கண்டிப்பா... நா இன்னிக்கு இங்கயே தான் இருப்பேன்...

போகும் பொது கவுண்டர் "டேய் மண்டையா...படம் நல்லாருந்தா ராத்திரி ஆட்டத்துக்கு செகப்பிய கூப்டு வந்து ஒருக்கா பாத்துட்டு போயிறனும்டா.."
---------------------------------------
படம் ஆரம்பிக்கப்படுகிறது..

இண்டர்வல்

செந்தில் நெளிந்து கொண்டே
"அண்ணே,.. எனக்கு லைட்டா வயித்த கலக்குற மாதிரி இருக்குன்னே... நா கொஞ்சம் அர்ஜெண்டா வயக்காட்டு பக்கம் போறேன்.. நீங்க இருந்த மிச்ச படத்த முடிச்சி வச்சிட்டு வந்துருங்கண்ணே"

கவுண்டர் : (தோள் மேல கைய போட்டு) நீ இருடி.... என்னா மாதிரி படத்துக்கு கூட்டிட்டு வந்துருக்கா.. கொல்லைக்கு தான போவனும்... கொஞ்ச நேரத்துல நானே வரவைக்கிறேன்...

-----------------------------------------
படம் முடிந்து....

கவுண்டர் : (ரெண்டு காதையும் பொத்துனாப்ள மூடிகிட்டு) அடடடா.... ஆஆஆஆஅ........ ஐயயயோ.... (செந்தில் கைத்தாங்களா கூட்டிட்டு வர்றாரு..."டேய் அழகேசா... என்னால நடக்க முடியல... என்ன இப்புடி படிக்காட்டு ஓரமா உக்காரவச்சிட்டு நீ என்ன பண்ற படத்துக்கு போறதுக்கு முன்னாடி டைரக்டருன்னு ஒருத்தன காமிச்சல்ல அவன போய் பொத்துனாப்ள இங்க அழைச்சிட்டு வா... போ"

செந்தில் : சரிண்ணே

கவுண்டர் :டேய் அப்டியே எஸ்கேப் ஆவலாம்னு பாத்த... மவனே இன்னியோட உனக்கு க்ளைமாக்ஸ் தான்.
(5 நிமிடத்தில் செந்தில் சற்குணத்தோடு வருகிறார்)

சற்குணம் : என்ன சார் ... படத்த நல்லா எஞ்ஜாய் பண்ணீங்களா.. சிரிச்சி சிரிச்சே டயர்டு ஆயிட்டீங்க போல...

கவுண்டர் கடுப்பாயி அவன் பொரடில கைய வச்சி இழுத்து
(ஹை பிட்ச்ல) ஏண்டா நாயே... இது ஒரு படம் இதுக்கு நா சிரிச்சி சிரிச்சி டயர்டு ஆயிட்டேனா.. நா பேசாம என் கடையில உள்ள பழைய சைக்கிளயே பாத்துகிட்டு இருந்துருப்பேண்டா... ன் 200 ரூவாயையும் காலி பண்ணி இப்போ என்னை ஆஸ்பத்திரில அட்மிட் ஆக வச்சிட்டியேடா... ஆமா உன் பேரு என்ன நாயே?

"சற்குணம்ங்க"

கவுண்டர் : என்னடா பேரு இது  சருக்குனோம் வழுக்குனோம்னு... நீயெல்லாம் என்ன தைரியத்துல கேமராவ தூக்கிட்டு படம் எடுக்க வந்த்துட்ட.... ஒரு சீனாவது பாக்குற மாதிரி இருக்காடா...

சற்குணம் : சார்... actually its a laugh......

கவுண்டர் : (வாயிலயே அடிச்சி) இங்கிலீசு... இங்கிலீசு... இந்த மொகரைக்கு இங்கிலீசு... நீயெல்லாம்  இனிமே தமிழே பேசக்கூடாது நாயே.... ஆமா அப்போ என்னவோ சொன்னியே என்ன அது

செந்தில் : laugh riot ண்ணே..

கவுண்டர் : அக்காங்... அது ஒண்ணு தான் கொறைச்சல்... அப்புறம் பாட்டு பட்டைய கெளப்புதா? டேய் இது தமிழ்ப் படம் தானேடா... எந்த பாட்டாவது தமிழ்ல வந்துச்சாடா... சரி அத விடு கும்பகோணம் பக்கத்துல ஒரு கிராமத்து பையனுக்கு காதல் வந்தாலும் அடுத்த செகண்டே சுட்சர்லாட்ந்து போயி  தான் சூட்டிங் எடுப்பீங்களாடா...

சற்குணம் : இல்லை சார்,... மக்கள் விருப்பப் படுறாங்கண்ணு தான்..

கவுண்டர் : மக்கள் என்னிக்குடா உங்ககிட்ட ஃபாரின் சாங்கு வேணும்னு கேட்டுருக்காங்க.. நாயே நீ சுத்திபாக்குறதுக்கு மக்கள் மேல பழிய போடுறியா

சற்குணம் : சார்... என்ன ஓவரா பேசுறீங்க... I am a national award winner

கவுண்டர்:  உனக்கு நேசனல் அவார்டு குடுத்த அந்த நாயி மட்டும் இப்போ என் கையில சிக்குச்சி வாயி மேலயே எட்டி மிதிச்சி போடுவேன்... ஆமா அது என்னடா ஹீரோயின்... அப்பு கமலுக்கு பொம்பள வேசம் போட்ட மாதிரி,.. இதுல அதுக்கு தொப்புள் சீன் மட்டும் தான் கொறைச்சல்... ஆமா அதுக்கு மனசுல என்ன சோதிகான்னு நெனப்பா... இந்த ஆக்டிங்கெல்லாம் நாங்க பல தடவ பாத்தாச்சும்மா.  அதுக்கும் சொல்லிவை... கடைப்பக்கம் வந்தா கல்லெடுத்து அடிச்சி போடுவேன்னு

சற்குணம் : கோவப்படாதீங்க சார்.. படத்துல ஹீரோ தான் சரியில்லை.. நா சொல்லிக்குடுத்த மாதிரி அவரு பர்ஃபார்ம் பண்ணல... அதான் உங்களுக்கு புடிக்கல..
கவுண்டர் : அய்யா என்ன சொன்னீங்க? ஹீரோ சரியில்லையா.. நாயே..நீ எடுத்துருக்க படத்துல கமலஹாசனே நடிச்சாலும் ஒண்ணும் பண்ண முடியாதுடா.. உன் கதை அப்புடி... அதென்னா மொத சீன்ல காதலிச்சிட்டு அடுத்த சீன்லயே அந்த புள்ளை இவன் கூட ஓடிப்போயிருது...

சற்குணம் : அப்பதான் சார் கதை ஸ்பீடா இருக்கும்...

கவுண்டர் : நீ ஒண்ணு பண்ணிருக்கலாமே... டைட்டில் போட்ட உடனேயே க்ளைமாக்ஸ போட்டுருந்தா இன்னும் ஸ்பீடா இருந்துருக்குமல்லோ... 

சற்குணம் : சரி சார்... விடுங்க... எதோ தப்பு நடந்து போச்சு... என்னோட அடுத்த படத்துல இந்த தப்பெல்லாம் நடக்காம பாத்துக்குறேன்...

கவுண்டர் : (லைட்டா தோள் மேல கைய போட்டு பக்கத்துல இழுத்து) இந்த மூஞ்சி இதுக்கு மேல கோடம்பாக்கத்துக்கு பக்கம் நடமாடுற மாதிரியோ இல்லை கேமராவ தூக்கிட்டு எங்கயும் படம் எடுக்கு போகுதுன்னோ எனக்கு எதாவது சேதி வந்துச்சி... வக்காளி பஸ் ஏறி வந்து கொறவளைய கடிச்சி போடுவேன் ஓடிப்போயிறு... (சற்குணம் விட்டா போதும்னு ஓடுகிறார்)

செந்தில் : அண்ணேன்.. நா வேணா அண்ணிய போய் அண்ணிய அழைச்சிட்டு வர்றேன்.. நீங்க ரெண்டு பேரும் இருந்து ரெண்டாவது ஆட்டம் பாத்துட்டு வர்றீங்களா?

கவுண்டர் மெதுவா கீழ குணிஞ்சி ஒரு பெரிய கல்ல எடுத்துகிட்டு
வக்காளி எங்க ரெண்டு பேரயும் கொலை பண்ணவா பாக்குற படுவா... இருடா இன்னிக்கு உன் மண்டைய பொளந்து மூளைய பாக்காம விடமாட்டேண்டா... ன்னு சொல்லிட்டு துரத்த செந்தில்  ஓடுகிறார்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...