Saturday, March 30, 2013

INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!!


Share/Bookmark
உலகத்துல எந்த மொழில பேய் படம் எடுத்தாலும் கதை ஒரே மாதிரி தான் இருக்கும். பொதுவா படத்துல வர்ற பேய்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு ஃப்ளாஷ்பேக் பேய்கள் இன்னொன்னு NON-ஃப்ளாஷ்பேக் பேய்கள். இந்த ப்ளாஷ்பேக் பேய்கள்ல பெரும்பாலும் லேடீஸ் பேய்களும் குழந்தை பேய்களும் தான் அதிகம் வரும். இந்த ஃப்ளாஷ்பேக் பேய்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு பேச்சிலர் பேய்கள், இன்னொன்னு ஃபேமிலி பேய்கள். இந்த தனியா வர்ற லேடீஸ் பேய்கள் பெரும்பாலும் ஒரு நாலு அஞ்சு பேரால கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கும், அவங்கள பழிவாங்குறதுக்காக சபதம் எடுத்து பேயா சுத்திகிட்டு இருக்கும்.

இந்த ஃபேமிலி பேய்கள்ல பெரும்பாலும் ஒரு அம்மா பேயும் ரெண்டு குழந்தை பேய்களும் இருக்கும். இந்த மூணு பேரும் ஒரே நேரத்துல முன்னாள் புருஷனாலயோ இல்ல எதாவது ஒரு சைக்கோவாலயோ  ஒண்ணா சாகடிக்கப்பட்டிருப்பாங்க. இவங்க இறந்து போன வீட்டுக்கு வர்றவங்கள பயமுறுத்துறதுதான் இதுங்களோட வேலை. அந்த வீட்டுக்கு புதுசா வர்ற குடும்பத்துலயும் இந்த பேய் ஃபேமிலில என்ன கான்ஃபிக்ரேஷன் இருக்கோ அதே கான்ஃபிக்ரேஷன்ல தான் குழந்தைகள் இருக்கும். அதாவது பேய் பேமிலில ஒரு 5 வயசு குழந்தையும் ஒரு 3 வயசு குழந்தையும் இருந்தா அந்த வீட்டுக்கு புதுசா குடி வர்றவங்களுக்கும் அதே வயசுல ரெண்டு  குழந்தைங்க இருக்கும்.

இந்த NON-flash back பேய்கள் பெரும்பாலும் ஆம்பளை பேயிங்கதான். இதுங்க ஏன் பேயா சுத்துதுங்கன்னு  பெருசா காரணம் எதுவும் சொல்ல தேவை இல்ல. மூஞ்சில அங்கங்க கிழிஞ்சி தொங்குறமாதிரியும், ஒரு சைடு நெருப்புல வெந்த மாதிரியும் காமிச்சா போதும். இந்த vampire ருங்க எல்லாம் இந்த குரூப்புல தான் வரும்.  இதுங்க பழிக்கு பழியெல்லாம் வாங்காது கண்ணுல பட்டவிங்கள எல்லாம் புடிச்சி கடிச்சி பேயாக்கி விட்டுரும். இவ்வளவு தான்பா உலக பேய்படமே. (இவை என்னுடைய ஃப்ளாஷ்பேக் பேய்களும், NON-ஃப்ளாஷ்பேக் பேய்களும் என்ற ஒரு பழைய பதிவிலிருந்து சுட்டு மறுபடியும் ரிப்பீட்டு அடித்தது)

பொதுவாவே பேய் படங்கள்னாலோ இல்லை த்ரில்லர் படங்கள்னாலோ ஆல் ஒவர்த வேர்ல்டு பயன்படுத்திகிட்டு இருக்கது  ஒரே ஒரு கான்செப்ட் தான்  ஒரு 5 பேர் கொண்ட கும்பல் (3 பசங்க +2 பொண்ணுங்க) எவனுமே போகாத ஒரு காட்டுக்கு போய் எவனுமே தங்காத ஒது பங்களாவுல போய் தங்குவாய்ங்க.  ஒவ்வொருத்தரா செத்துகிட்டே வர கடைசில ஒரே ஒரு பொண்ணு மட்டும் தப்பிச்சி வரும்.  ஆங்கிலத் திரைப்படங்களும் இதுக்கு விதிவிலக்கு இல்லை. அவிங்க எடுக்குற படங்கள்ல ஒரு குடும்பம் ஒரு புது வீட்டுல போய் தங்கும். கண்டிப்பா அந்த வீட்டுல பூட்டி வைக்கப்பட்ட ஒரு அறையோ இல்ல பழைய பொருள்கள வைக்கிற ஒரு பால்கனியோ கண்டிப்பா இருக்கும்.

இவிங்க சும்மா இல்லாம அதுல ஏறி  தூங்கிகிட்டு இருக்க பேய நோண்டி விட்டு முழிக்க வச்சிருவாய்ங்க..அப்புறம் என்ன... பேய காமிக்காமலேயே மியூசிக் போட்டு நம்மள  பயமுறுத்துவாய்ங்க... கடைசில ஒரு மந்திர வாதிய கூப்டு வந்து அந்த பேய அழைச்சிட்டு வந்து பேச்சு வார்த்த நடத்துனா அது ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லும்... என்ன அவன் கற்பழிச்சிட்டான். இவன் மர்டர் பண்ணிட்டான்னு... இதுலருந்து மாறுபட்டு வர்றது ஒரு சில படங்கள் மட்டும் தான் அந்த மாதிரி ஒரு படம் தான் இந்த INSIDIOUS...

வழக்கம் போல ஒரு 5 பேர் கொண்ட ஃபேமிலி புதுசா ஒரு வீட்டுக்கு போறாங்க... நா மேல சொன்ன அனைத்தும் நடக்குது. பால்கனில போய் கலைச்சி விட்டு பேய எழுப்பி விட்டுறாய்ங்க. அதுக்கப்புறம் வீட்டுக்குள்ள அங்கயும் இங்கயும் யாரோ திரியிற மாதிரியே ஒரு ஃபீலிங்... திடீர்னு ஒரு நாள் அவங்க பையன் என்ன நோயின்னே கண்டு பிடிக்க முடியாத ஒரு நோயால கோமா ஸ்டேஜூக்கு போயிட... அதை தொடர்ந்து பல திகில் சம்பவங்கள நடத்தி  நம்மள மெரட்டி க்ளைமாக்ஸ செமயா முடிச்சிருக்காங்க.

படத்தோட பெரிய ப்ளஸ் மியூசிக் தான். இதுக்கு முன்னாடி "The Grudge" படத்துல வர்ற "கிர் கிர் கிர்" ஒரு வித்யாசமான சவுண்டு பீதிய கெளப்பும்... அதே மாதிரி இந்த படத்துலயும் ஒரு மியூசிக் இருக்கு.. செம...  முதல் ஒரு 15 நிமிஷத்துக்கு அப்புறம் படம் முடியிற வரைக்கும் செம த்ரில்லிங்.. செமயா மெரட்டிருக்காங்க... தனியா பாக்குறது கொஞ்சம் கஷ்டம் தான்.

படத்தோட டைரக்டர் ஜேம்ஸ் ஸ்வான்... (James Swan).. இவரு வேற யாரும் இல்லை.. SAW, SAW II, SAW III, SAW IV படங்களை எடுத்தவர். அதாங்க... இந்த ஆளுங்கள பல மாதிரி டெக்னிக்கலா சாவடிச்சி சாவடிச்சி வெளாடுவானுங்களே அந்த படம்.  SAW உல எவ்வளவு கொடுரமா கொலைகள காமிச்சி நம்மள உச்ச கட்ட அருவருப்புக்கு கொண்டு போனாரோ அதே மாதிரி இந்த படத்துல பயத்தோட edge க்கே கொண்டு போயிருக்காரு...




சமீபத்துல நா பாத்த த்ரில்லர் படங்கள்ல எனக்கு மிகவும் பிடிச்ச படம்... கண்டிப்பா உங்களையும் மிரட்டும். இந்த படம் பாத்ததுலருந்து நண்பர்கள்கிட்டல்லாம் இத பாக்க சொல்லிருக்கேன்.. வேறென்னா நா பயந்த மாதிரி அவிங்களும் பயந்து சாகட்டும்னு ஒரு நல்லெண்ணம்தேன்...

இந்த படத்தின் torrent link:

http://www.torrentbit.net/torrent/1966359/Insidious%202010%20720p%20BRRip%20XviD%20%28avi%29%20TFRG/

IMDB rating   : 6.7/10
Category        : Horror, Thriller

Monday, March 18, 2013

பரதேசி - அய்யாவுக்கு ஒரு நேஷனல் அவார்டு பார்சல்!!!


Share/Bookmark
பாலா படம்னு சொன்னதுமே நமக்கு மனசுல டக்குன்னு ஒரு கேள்வி வந்துட்டு போகும்... யாரு மனசுல யாரு... இந்தப் படத்துல சாவப்போறது யாரு?ன்னு..அதுவும் ஸ்பானரால  அடிவாங்கி சாவப்போறாய்ங்களா இல்ல கொறவளைய எவனும் கடிச்சி துப்ப  போறாய்ங்களாங்குறது அடுத்த எதிர்பார்ப்பு. எடுத்த அனைத்து படங்கள்லயும் final destination la வர்ற மாதிரி விதவிதமா சாவடிச்சி ஜாலி பண்ணிக்கிட்டு இருந்த பாலா நான் கடவுள்லயும் "அவன் இவன்" லயும் படம் பாத்தவிங்களையும் சேத்து சாவடிச்சிருந்தாரு. சரி இனிமே இவரு எடுக்குற படத்த பாக்கக்கூடாதுன்னு ஒரு முடிவு எடுத்து வச்சிருந்தேன். ஆனா சிலர் கொடுத்த பில்ட் அப்புகளும், சில நாளிதழ்கள் வழங்கிய 5 ஸ்டார்களும் ஆட்டோமேட்டிக்கா  தியேட்டர நோக்கி அழைச்சிட்டு போயிருச்சி.

1939 இல் தேயிலை எஸ்டேட்டுகளில் வேலைசெய்தவர்களின் உண்மைக் கதைங்கற ஸ்லைடோட  ஆரம்பிக்கிர படம், சாலூர் என்கிற ஒரு வறண்ட கிராமத்துல வாழ்ந்துகிட்டு  இருக்கிற மக்களோட வாழ்க்கைமுறையிலேயே முதல் பாதி முழுவதும் பயணிக்குது. 1939ஐ திரையில கொண்டுவர மொதல்ல டைரக்டரும் கேமராமேனும் முடிவு செஞ்ச ஒண்ணே ஒண்ணு படம் பாக்குறவிங்களுக்கு வெளிச்சமா எதுவுமே தெரியக்கூடாதுன்னு தான் போலருக்கு. படம் முழுக்க ஒரே கருங்கும்முன்னு இருக்கு.. இருந்தாலும் அவங்களோட முயற்சி ஒண்ணும்  வீண் போகல... அந்த கிராமத்துல தண்டோரா போடுற வேலை பாத்துக்கிட்டு இருக்கவர் தான் ஒட்டுபொருக்கி (எ) ராசா . பிதாமகன் விக்ரமையும் பதினாறு வயதினிலே சப்பானியையும் சரிபாதியாக கலந்த மாதிரியான ஒரு கேரக்டர்.

ஒட்டுப்பொருக்கி  மேல ஆசைப்படுற ஹீரோயின் தான் வேதிகா. இப்பவே சொல்லிடுறேன். நீங்க படம் பாத்துட்டு வந்து எங்க படத்துல வேதிகாவையே காணும்னு என் சட்டைய புடிச்சிற கூடாது. மூஞ்சில வண்டிமைய அள்ளி அப்புன மாதிரி ஒண்ணு சுத்திகிட்டு இருக்கும். அதுதான் வேதிகா. அந்த செவத்த புள்ளைய ஏன்யா இவ்வளவு அலங்கோல படுத்தி வச்சிருக்கீங்க. வெளக்க தேடி வந்து விழுகுற விட்டில் பூச்சிங்க மாதிரி பாலா படம்னோன பல்ல காட்டிக்கிட்டு வந்து நடிக்க வேண்டியது... ஆனா பாலா படத்துல நடிச்சா அதுதான் அவங்களுக்கு கடைசி படம்ங்கறது கொஞ்ச நாள் கழிச்சி தான் அவங்களுக்கு தெரியவரும். நம்ம பூஜாவை திரை உலகத்துலருந்தே ஒழிச்ச பெருமை எல்லாம் அய்யா பாலாவையே சாரும். சரி இங்க  வருவோம்.

அந்த புள்ள ஒட்டுப்பொருக்கிய கலாய்க்கிறதாவும், காமெடி பண்றதாவும் நெனைச்சி என்னென்னவோ பண்ணி நமக்கு அருவருப்ப கூட்டுது. அசிங்கமாவும் அருவருப்பாவும் பேசுறது மட்டுமே காமெடின்னு நெனைச்சி நம்ம பாலா நமக்கு வாந்திதான் வரவக்கிறாரு. அவன் இவன் பாத்தவங்களுக்கு இது தெரிஞ்சிருக்கும். இங்கயும் அதே தான்.. வேதிகா பண்ற மொக்கை காமெடிக்கெல்லாம் அந்த ஊரே கூடி நின்னு சிரிக்குது. படம் பாக்கும் போது உங்களுக்கு எந்த சீன் காமெடி சீன்னு கன்பீசன் வரக்கூடாதுங்கறதுக்காக ஸ்கிரீன்ல இருக்கவங்களையே சிரிக்க வச்சிருக்காரு. so, அந்த காட்சில் நடிச்சிருக்கவங்க யாராவது சிரிச்சா ஓ இது காமெடி போலருக்குன்னு நாமளும்
சேந்து சிரிச்சிக்க வேண்டியது தான். தியேட்டர்ல முக்கால்வாசி பேரு அப்புடித்தான் சிரிச்சிட்டு இருந்தாங்க.

ஆனா எல்லா அருவைக்கும் அதர்வா ஒருத்தரே ஆறுதலா இருக்காரு. கல்யாண பந்தில  சாப்பாடு கெடைக்காம கொட்டு அடிச்சிட்டே காட்டுக்குள்ள உக்காந்து அழுகுறதும், கூலிக்கு வேலை செஞ்சிட்டு, கூலி கெடைக்கலன்னதும் 'நியாமாரே... கூலிய குடுத்துருங்க நியாமாரே" ன்னு கலங்கி அழுகுறதுமா நம்மையும் சேத்து கலங்க வச்சிடுராரு. உண்மையிலயே அதர்வா இந்த படத்துக்கு செமயான choice.

பிழைக்க சரியான வழியில்லாம திரியிற சாலூர் கிராம மக்கள், நிறைய சம்பளம் கெடைக்கும்னு கங்கானி சொன்ன ஆசை வார்த்தைங்கள நம்பி ரொம்ப தூரத்துல உள்ள ஒரு டீ எஸ்டேட்டுக்கு பஞ்சம் பொழைக்க கிளம்பி போறாங்க. 48 நாள் நடந்து நடந்து சோர்ந்து போன ஒருத்தர் மயங்கி கீழ விழந்து, உயிருக்கு போராடிகிட்டு இருக்காரு. அவரோட மனைவி கதறி அழ, கங்கானி "இதெல்லாம் ஊர் போர வரைக்கும் தாங்காது... இங்கயே விட்டு வா"ன்னு அவர அங்கயே போட்டுட்டு அவர் மனைவியையும் மத்தவங்களையும் இழத்துட்டு போயிடுறாரு. விழுந்து கிடப்பவர் அவரோட மனைவிய நோக்கி உதவிக்காக கைய நீட்ட, உதவ முடியாமல் மனைவியும்  மற்றவர்களும் செல்ல.... இடைவேளை... இந்த ஒரு காட்சியே அவர்கள் பஞ்சம் பிழைக்க போகிற இடம் எவ்வளவு கொடூரமானதுங்கறதுக்கு ஒரு சிறந்த உதாரணம்.

இரண்டாம் பாதியில் அனைவருமே டீ எஸ்டேட்டுல கொத்தடிமைகளாக்கப்பட்டு கொடுமை படுத்தப்படுறாங்க.  உள்ள வந்தப்புறம் தான் எல்லாருக்கும் தெரியுது இங்க வந்தா போக வெளிய போக முடியாதுன்னு. வேறு ஒரு ஊர்லருந்து அங்க வந்து வேலை செஞ்சிட்டுருக்க தன்ஷிகா, அதர்வாமேல பரிவா இருக்காங்க. பாருங்க விஷக்காய்ச்சல் வந்து
அவங்களும் இறந்து போயிடுறாங்க. நல்ல வேளை... அவங்களை ராவோட ராவா யாரும் கடத்திட்டு போயி, மூஞ்ச கிழிச்சி காலையில மூட்டையில் கட்டிக்கொண்டு வந்து வீட்டு முன்னாடியெல்லாம் போடுறமாதிரி எடுக்கல.

இரண்டாம் பாதியில மக்கள் கஷ்டப்படுறதை காமிக்கிறதுக்காக பாலா எவ்வளவோ காட்சிகளை எடுத்துருந்தாரு... ஆனா அத்தனையும் பாத்தாலும் நமக்குள்ள ஒரு impact இல்லை... ஆனா இது அத்தனையும் அதர்வா கடைசியில தன்னால ஊருக்கு போக முடியலைங்கறத ஒரு  மலை மேல உக்காந்து அழுது பொலம்புவாரு பாருங்க....ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ...அது ஒண்ணு போதும்... "நியாமாரே... சாதி சனத்த பாக்கனும் நியாமாரே.... நியாமாரே நாங்க எந்த தப்பும் செய்யல நியாமாரே...." ன்னு... கொடூரம்... அந்த ஒரு காட்சில தொண்டைய அடைக்க வச்சிடுறாரு. "உன்னையே நீ எண்ணி பாரு..." விக்ரம் ஸ்டைல்

படம் பாக்குற நமக்கு, அப்பாவியா இருக்க அதர்வா பொங்கி எழுந்து வெள்ளைக்கரனையும் கங்கானியையும் ஓட ஓட வெரட்டி வெரட்டி அடிச்சி கொண்ணுட்டு எல்லாரையும் விடுவிக்க போறாரு போலன்னு தோணும்.. ஆனா நல்ல வேளை... அப்புடி எதுவும் இல்லை...  ஒரு சூப்பரான க்ளைமாக்ஸ் வச்சிருக்காரு பாலா.

படத்துல ஒரு செம்ம காமெடியாருன்ன அது ஜி.வி.ப்ரகாஷ் தான். படம் நடக்குறது 1939ல அத ஸ்கிரீன்ல கொண்டு வர எல்லாரும் ரொம்ப கஷ்டப்பட்டுருக்காய்ங்க. ஆனா நம்மாளு கொஞ்சம் கூட கூச்சப்படவே இல்லை.. வழக்கமா எல்லா படத்துக்கும் போடுற மாதிரியே போட்டுருக்காரு. கொஞ்சம் வித்யாசமான இன்ஸ்ருமெண்ட்ஸாவது யூஸ் பண்ணி எதாது
வித்யாசமா முயற்சி பண்ணிருக்கலாம்...அதும் 1st half la மியூசிக் மட்டும் ரொம்ப odd ah தெரியுது. அப்புறம் தன்ஷிகா சாவும் போது ஒரு பீப்பீ ஊதிருப்பாரு பாருங்க... காது ஜவ்வு கிழிஞ்சிருச்சி. ஆனா பாட்டு எல்லாமே செம.

அப்புறம் பாலா... கடந்த ரெண்டு படங்கள்ல மொக்கையாகி திரும்ப இந்த படத்தின் மூலமா அவரோட ரசிகர்கள் மனசுல நாற்காலி போட்டு உக்காந்துட்டாருன்னு சொல்லலாம். கதைக்களமும் படமாக்கிய விதமும் ரொம்பவே சூப்பர். ஆனா பாலாசார்... நீங்க சீரியசாவே படம் எடுங்க.. படத்துல காமெடி சீன் வக்கிறேன்னு தயவுசெஞ்சி கடுப்பேத்தாதீங்க.

சாலூர் கிராமம்னு சொல்லிட்டு 10 பதினைஞ்சி சின்ன வீடுங்கள மட்டுமே காமிக்கிறதும், அந்த பதினைஞ்சி வீட்டுக்கு எதுக்குப்பா தண்டோரா போடுறவன்ங்குற கேள்வி மனசுல எழுறதையும் தவிர்க்க முடியல. இரண்டாவது பாதியில, வெள்ளைக்காரங்க காந்திய பத்தி தப்பா பேசிகிட்டு இருக்கப்போ, ஒரு துரையம்மா காந்திய ரொம்ப புகழ்ந்து பேசுறது மாதிரி ஒரு காட்சி  திணிக்கப்பட்ட ரகம்.. ஏன்சார் இதெல்லாம்? யார்ட்ட நல்ல பேரு எடுக்க இந்த காமெடியெல்லாம்? எல்லாத்துக்கும் மேல கிறிஸ்துவ டாக்டராக வர்ற தம்பதிங்க வைத்தியம் பாக்குறத விட்டுட்டு கொத்தடிமைங்களா இருக்க மக்கள்கிட்ட மதத்த பரப்பிகிட்டு இருக்கது போல காமிக்கிறதும், அதை தொடர்ந்து வர்ற ஒரு கேவலாமான பாடலும் படத்தோட தரத்த ரொம்பவே கொறைக்குது. உண்மையாவே இருந்தாலும் இதெல்லாம் ஏங்க... ஒருவேளை நீங்களும் உங்க படத்து மேல  கிறிஸ்தவ நண்பர்கள் கேஸ் எதுவும் போட்டு படத்த ஃபேமஸ் ஆக்கனும்னு எதிர்பாக்குறீங்களோ?

மொத்தத்துல பரதேசி நல்ல பொழுதுபோக்கு படமான்னு  கேட்டா சத்தியமா இல்லை.. ஆனா  பாலாவுக்கு பல விருதுகளை வாங்கித்தரப்போற படம்ங்கறதுல எந்த சந்தேகமும் இல்லை. அதே போல அதர்வாவுக்கு இது ஒரு மிகப்பெரிய தொடக்கமாகவும், வழக்கம்போல வேதிகாவுக்கு இதுவே கடைசி படமாகவும் அமைய நிறைய வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கின்றன.

Tuesday, March 5, 2013

ஆஃபீஸில் ஓப்பி அடிப்பது எப்படி?


Share/Bookmark
ஆஃபீஸில் ஓப்பி அடிப்பது எப்படி அப்புடின்னு ஆரம்பிச்ச உடனேயே "டேய் எங்ககிட்டயேவா?" ன்னு ஒரு பெருமிதத்தோட  கேக்குற உங்களோட குரல் எனக்கு கேக்குது. இதெல்லாம் நா சொல்லித்தான் தெரியனுமா?... கரெக்ட் தான். எதோ இன்னும் ஒரு நாலு அஞ்சி பேர் வேலை செஞ்சிகிட்டு இருந்தாலும் அவங்களுக்கும் இந்த வித்தையவெல்லாம் கத்துக் கொடுத்து கம்பெனிய முன்னுக்கு கொண்டு வர்றதுதான் இந்த பதிவோட நோக்கமன்றி வேறில்லை.


1. மொதல்ல punctuality ங்கற வார்த்தையவே உங்க டிக்சனரிலருந்து தூக்கிடனும். ஒம்பது மணிக்கு ஆஃபீஸ்னா, அங்க ஒம்பது மணிக்கே போய் நின்னா அப்புறம் நமக்கென்ன மரியாத? வக்காளி பத்தரை மணிக்கு போறோம். அப்போதான் மேனேஜரு எல்லார் முன்னலையும் ஒரு அல்சேசன்  மாதிரி கொலைக்க எல்லாரும் நம்மளையே ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க. மம்மி ஏத்திவிட்ட  விஸ்வரூபம் மாதிரி நம்ம இண்ட்ரோ குடுக்காமலேயே அனைவரும் நம்மள பத்தி தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிருவாங்க.

2. உடனே சட்டு புட்டுன்னு சிஸ்டத்த ஆன்பண்ணி........ என்னது க்ளையண்ட் மெயிலா... அந்த க்ளையண்ட்ட வெட்டுங்கடா... மொதல்ல NDTV, Indian Express அப்புடி அதுவும் இல்லைன்னா இந்த தினகரன்.காம்ல எதயாது ஒண்ண ஓப்பன் பண்ணி நாட்டு நடப்புகள தெரிஞ்சிக்குங்க. இந்த செஷன் தான் ரொம்ப முக்கியம். இதுல படிக்கிற மேட்டர்கள வச்சிதான் இன்றைய மீதமுள்ள பொழுதுகளை கழிக்கனும்.  எவ்வளவுக்கு எவ்வளவு சூடான மேட்டர் படிக்கிறீங்களோ அவ்வளவுக்கவ்வளவு அன்றைய பொழுது சுவாரஸ்யமாக கழியும்.  

3. சரி நாட்டு நடப்ப நீங்க தெரிஞ்சிகிட்டா போதுமா? அதப்பத்தி பேச நம்மள மாதிரியே நாலு பயபுள்ளைக வேணாம்? படக்குன்னு ஒரு குரூப் சாட்ட ஓப்பன் பண்ணி நீங்க படிச்ச அந்த லிங்குகள அந்தப்  பயபுள்ளைகளுக்கும் அனுப்பிவிடுங்க. அதெப்புடி அவனுங்க மட்டும் வேலை பாக்குறது. இப்போ லைட்டா அடிவயிற்றிலே ஒரு சிறிய மாற்றம். ஒண்ணும் இல்லை காலைல வர்ற அவசரத்துல break fast  சாப்புடாமயே வந்துட்டீங்க. என்ன அப்புடியாவா? அட அப்புடித்தான் தம்பி சொல்லோனும் எவனும் கேட்டா. அந்த குரூப் சாட்டுலயே பயபுள்ளைகள காஃபடேரியாவுக்கு கூப்புடுங்க. மொதல்ல வரமாட்டேம்பானுக... காஃபி நா வாங்கிதார்றேன்னு சொல்லுங்க படக்குன்னு பறந்து வந்துருவானுக. அங்க போனவுடனே அவனையே ஏமாத்தி அவன் ஃபுட் கார்ட வாங்கி தேய்ச்சிறலாம்.

4. ஹலோ ஹலோ.. ஹலோ... என்ன காஃபி குடிச்சிட்டு 10 நிமிஷத்துல வந்துட்டீங்க... இதெல்லாம் நம்ம ஒடம்புக்கு ஆகாது. கொஞ்ச நேரம் ஆர அமர ஒக்காந்து நல்லா பேசி பழகிட்டு ஒரு அரைமணி நேரம் கழிச்சி வாங்க. வந்துட்டீங்களா? இப்ப உங்க பாக்கெட்டுல இருக்க ஃபோன் லைட்டா வைப்ரேட் ஆகும் பாருங்க.. ஒண்ணும் இல்லை நீங்க CUG கார்டு வாங்கி குடுத்த உங்க ஆளு தான் கூப்புடுது. அத அட்டெண்ட் பண்ணி காலைல என்ன சாப்டீங்க எத்தனை இட்லி சாப்டீங்க, சட்னில எதனை கடுகு கெடந்துச்சி, சாம்பார்ல எத்தனை வண்டு செத்துக் கெடந்துச்சி இதயெல்லாம் அப்டேட் பண்ணுங்க. 

காதுல ஏர் ஃபோன் மாட்டிக்கிட்டு உங்க ஆள்கிட்ட பேசிக்கிட்டே குரூப் சாட்ல அந்த நாலு பேரு கூட காலைல படிச்ச மேட்டர்கள பத்தி fourth umpire மாதிரி டிஸ்கஸ் பண்ண ஆரம்பிங்க. அதுவும் மொதநாள் எதாவது கிரிக்கெட் மேட்ச் நடந்துருந்துச்சின்னா ரொம்ப உசிதம்... வேற மேட்டரே தேவையில்லை... “தோணி அந்த டவுன் எறங்கிருக்கவே கூடாதுங்க... கடைசி ஓவர் யாருங்க இஷாந்த் சர்மாவுக்கு குடுத்தது? இந்த பிட்ச்சிலயெல்லாம் அசால்ட்டா 350 ah chase பண்ணலாம்ங்க.. இப்புடி வாயி இருக்குங்குற காரணத்துக்காக நாம என்ன வேணா அட்வைஸ் குடுக்கலாம்.

எப்புடியும் சஞ்சம் மஞ்சரேக்கர் மாதிரி ரெண்டு பேரு உங்களுக்கு ஒத்து ஊதுனா, இன்னும் ரெண்டு பேரு நவ்ஞ்ஜோட் சிங் சித்து மாதிரி நீங்க சொல்றத ஒத்துக்காம உங்கள சாட்ல கண்டபடி திட்டுவாய்ங்க... நீங்க சாட் பண்ணிகிட்டே "இங்க பாருடா செல்லம் இந்த பையன் என்ன எப்புடி திட்டுறான் "ன்னு உங்களோட இந்த  உலகலாவிய chat history ah உங்களப்போலவே இன்னொரு கம்பெனில உக்காந்து சின்சியரா வேலை செஞ்சிகிட்டு இருக்க உங்க ஆளுக்கு அனுப்பி விடுங்க... (உங்களமாதிரியே- நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர்) அது அத பாத்துட்டு "these guys are so funny ya" அப்புடிங்கும்...

5. சரி மணி பன்னண்டு ஆச்சி... அந்த பாவப்பட்ட க்ளையண்டு நீங்களும் வேலை செய்வீங்கண்னு நம்பி உங்களுக்கு எதாவது மெயில் அனுப்பிருப்பான். அத ஓப்பன் பண்ணுங்க. ரெண்டு நிமிஷத்துக்கு மேல அவன் அனுப்ச மெயில படிக்க முடியாதுன்னு எல்லாருக்கும் தெரியிங்..அவிங்க என்ன அனுப்பிருக்காய்ங்கன்னு படிச்சி தெரிஞ்சிக்கிறதுக்குள்ள லஞ்ச் டைம் வந்துரும். சுவர் இருந்தாதானே சித்திரம் வரைய முடியும்.. சோறு திண்ணாதான வேலை பாக்க முடியும்னு உங்ககிட்ட நீங்களே சொல்லிகிட்டு கொஞ்சம் கூட கூச்சப்படாம லஞ்ச் சாப்புட கெளம்பிடலாம். 

6. சாப்டு வந்து திரும்ப காலைல பண்ண அதே exercise திரும்ப கண்டினியூ
பண்ண மணி அஞ்சாயிரும்.. என்னது வீட்டுக்கா? அது தான் இல்லை...
இப்பதான் வேலைய ஆரம்பிக்கனும்...எல்லாரும் வீட்டுக்கு கெளம்பிட்டு இருக்கும்போது நீங்க சின்சியரா வேலை பாத்துட்டு இருப்பீங்க... நீங்க காலைல பண்ண வேண்டிய வேலைய தான் இப்ப உக்காந்து தம் கட்டிட்டு இருக்கீங்கண்ணு அவிங்களுக்கு எங்க தெரிய போவுது?

8. புதுசா ஒருத்தன் கம்பெனில சேந்துட்டான்னா அவ்ளோதான்.. நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமையான்வர்கள் ன்னு எல்லாத்தையும் 
அவனுக்கு தள்ளி விட்டுட்டு நாம திரும்ப ஃபோர்த் அம்பய்ர கண்டினியூ பண்ணலாம்.

9. அதுவும் இந்த அப்ரைசல் டைம்னா இன்னும் ஜாலி தான்... காரணம் தானா கெடைக்கும். நீங்க அந்த வருசம் ஃபுல்லா கிழிச்ச கிழிக்கு செகண்ட் ரேட்டிங்கோ இல்லை மூணாவது ரேட்டிங்கோ வந்துருக்கும். (ஆக்சுவலா அதுவே அதிகம்னு உங்களுக்கு தெரியும்) அவ்ளோதான்... உடனே என்னை அப்ரைசல்ல குத்திட்டாங்க... ஆப்படிச்சிட்டாங்க... இனிமே நா வேலையெல்லாம் செய்ய மாட்டேன்னு அடம்புடிக்கலாம்... சாயங்காலம் 5 மணிக்கெல்லாம் வீட்டுக்கு கெளம்பலாம். 

உண்மையிலயே அந்த வாரம் உங்களுக்கு வேலை எதும் இல்லாத்தாலதான் நீங்க கெளம்பிருப்பீங்க.. ஆனா வெளியில உங்களுக்கு அப்ரைசல் குடுக்காத்தால தான் நீங்க வேலைசெய்ய மாட்டேங்குறீங்கங்குற மாதிரி ஒரு பில்ட் அப்ப கெளப்பி விடனும். இதெல்லாம் ஒரு வாரத்துக்கோ இல்லை பத்துநாளுக்கோதான் தாக்கு புடிக்கும். இதயே continue பண்ண ஆசைப்பட்டீங்க அவ்ளோதான்... அடுத்த வருசம் ரேட்டிங் போடுறதுக்கு உங்க பேரே payroll la  இருக்காது. 

ஆபீசர்களை கரெக்ட் செய்வது எப்படி?


1. ஆபீசர்களை அமுக்குறதுக்கு மொத மொத நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான ஒண்ணு. ஆவியிங்க எது கேட்டாலும் நீங்க “NO” ன்னு மட்டும் சொல்லிடவே கூடாது.  ஒருமாசத்துல முடிக்கவேண்டிய வேலைய ரெண்டு நாள்ல முடிச்சி தரனும்னு சொல்லுவாய்ங்க.. அத ரெண்டு மாசம் ஆனாலும் முடிக்க முடியாதுன்னு உங்களுக்கும் தெரியும் உங்க மேனேஜருக்கும் தெரியும்... ஆனா NO  சொல்லக்கூடாது... முடிக்கிறோம் சார்... தூக்குறோம் சார்... பிண்றோம்சார் ன்னு பிட்ட போட்டு வைக்கனும்.. தப்பித்தவறி முடியாதுன்னு உண்மைய மட்டும் சொல்லிட்டீங்க அவ்ளோதான் Pessimistic ah பேசுறோம்னு சொல்லி ஆப்படிச்சிருவாய்ங்க. 

2. அப்புறம் முக்கியமான ஒரு விஷயம்... பாஸூங்களோட ரூமுக்கு போனா உங்களுக்கு காது கிழியிற அளவு திட்டு விழும்...  அதுக்காக சூடு சொரணை வந்து கடுப்பாயிற கூடாது.why blood… same blood” ன்னு தொடைச்சிகிட்டு “என்ன பாஸ் நேத்து திட்ட வர்றேன்னீங்க.. வரவே இல்லை... ன்னு வடிவேலு மாதிரி போயிட்டே இருக்க வேண்டியதுதான்... ஆனா வெளிய வந்த்துக்கப்புறம் மத்தவங்க கிட்ட “சும்மா உள்ள விட்டுக்கிட்டு திருப்பு திருப்புன்னு திருப்பிட்டேன்ல... அரண்டு போயிட்டாரு அப்புடின்னு பீலா விட்டுக்கிட வேண்டியதுதான். 


3. உங்க சிஸ்டம் settings ah மாத்தி வச்சிக்கனும். அப்பத்தான் நீங்க சிஸ்டடத்த லாக் பண்ணிட்டு பக்கத்து சீட்டுல மொக்கை போட்டுகிட்டு இருந்தாலும், ரெஸ்ட் ரூம்ல போய் அசந்து தூங்கிட்டாலும், சாப்புட போனாலும் , க்ரிக்கெட் விளாட போனாலும் இல்லை சைடுல படத்துக்கே போனாலும் "Available" ன்னே chat la உங்க பேரு இருக்கும். அப்புறம் chat la உங்க ஸ்டேட்டஸ மாத்திகிட்டே இருக்கனும். "in Meeting" "busy for next two hrs" அப்புடியெல்லாம். அப்பதான் நீங்க பக்கத்துல இருக்க புள்ளைகிட்ட மீட்டிங் போட்டுகிட்டு இருந்தாலும் நீங்க எதோ Board of  directors மீட்டிங்ல இருக்கமாதிரி அனைவரும் நெனைச்சிக்குவாங்க.  எங்க கம்பெனில ஒரு சாட் இருக்கு. அதுல என் பேரு மேல எப்ப வச்சாலும் "free for next 8 hrs " ன்னு காமிச்சி அசிங்கப்  படுத்திரும். நம்மள ரொம்ப close ah watch பண்ணுது போல... dangerous plow...

4.  Don ah பாஃர்ம் ஆயிட்டாலே நாலு எடத்துக்கு போகனும் வரனும். அதனால உங்க சீட்டுல மட்டுமே நீங்க உக்காந்துருக்க கூடாது. அடிக்கடி எழுந்து அடுத்தவன் சீட்டுக்கு போயி நின்னு லைட்டா மொக்க போட்டுட்டு வரனும். நீங்க அவண்ட்ட போயி நேத்து நீயா நானா பாத்தியான்னு கேட்டு வந்தா கூட தூரத்துலருந்து பாக்குறவங்களுக்கு நீங்க  தீயா வேலை செய்யிற மாதிரி தோணும்... பல வித்தைகள கத்தவரு அனைவருக்கும் சொல்லித்தர்றாருன்னு டர்ர்ர்ர் ஆயிருவானுங்க.

5. அப்புறம் எந்த மீட்டிங்குக்கு போனாலும் கையில ஒரு டைரி பேனா எடுத்துகிட்டு தான் போகனும். அங்க போயி நாம டைரில ஒரு பூ படமோ இல்ல எதாவது natural sceneries வரைஞ்சிகிட்டு இருந்தாலும் மத்தவங்க உங்கள ஒரு சின்சியர் பாய்னு மனசுக்குள்ள நெனைச்சுக்குவாங்க.

6. Friday மதியம் உங்களுக்கு ஒரு இம்பார்ட்டண்ட் மெயில் வருதுன்னு வச்சிக்குவோம்.. நீங்க பொளக்குன்னு அதுக்கு ரிப்ளை பண்ணா சாதா பூபதியாயிருவீங்க. அதுக்கு சனிக்கிழமை மதியமோ இல்லை ஞாயிற்று கிழமை அதிகாலையிலயோ ரிப்ளை போடனும். அப்பதான் லீவு நாள்ல கூட கம்பெனிக்கு இப்புடி நாயா உழைக்கிறானேன்னு உங்க ரேட்டிங்ல ஒரு 0.5 ஏறும்.

7. டைனமிக் ரிப்போர்ட் எதயாது ஜெனரேட் பண்ணிட்டு சிஸ்டத்துக்கு முன்னால சீரியஸா கன்னத்துல கைவச்சிகிட்டு சிஸ்டத்த விடாம  பாத்துக்கிட்டே இருங்க.. தூரத்துலருந்து பாக்குறவங்களுக்கு நீங்க மொரட்டுத் தனமா வேலை செய்யிற மாதிரி தோணுனாலும் நீங்க முழிச்சிட்டே தூங்கிட்டு இருக்கது உங்களூக்கு மட்டுமே தெரிஞ்ச ராஜ ரகசியம்.

8. அப்புறம் க்ளையண்ட் திடீர்னு ஒரு நாள் வேலைல தப்பு கண்டுபுடிச்சி  உங்களையும் உங்க மேனேஜரையும் காரித்துப்பி ஒரு மெயில் அனுப்பிருப்பான். அப்ப காட்டனும் உங்க performance ah. டக்குன்னு உங்க மெயில்ல தேடுங்க.. என்னிக்கோ ஒரு நாள் க்ளையண்ட் சரக்கடிச்சிட்டு தூங்கிட்டு இருக்க அன்னிக்கு எவனுக்குமே புரியாத மாதிரி ஒரு மெயில் அனுப்பிருப்பீங்க. அந்த மெயில அவனுக்கே திரும்ப அட்டாச்
பண்ணி அனுப்பி, "நா இந்த டவுட்ட அன்னிக்கே கேட்டேன்... நீங்க தான் clarify பண்ணல.. அதுனாலதான் இந்த fault" ன்னு அவன் பக்கமே ப்ளேட்ட திருப்பி போட்டுடனும். சத்தியமா நீங்க அனுப்ச மெயிலுக்கும் அவன் சொல்லிருந்த fault க்கும் சம்பந்தமே இருக்காது. ஆனா திருப்பி அடிக்கனும் குமாரு... அப்பதான் ஒரு வேளை தப்பு பண்ணிட்டோமோன்னு அவனுங்க பயப்படுவானுக. உடனே மானங்காத்த மகராசாவான உங்களுக்கு  ON THE SPOT AWARD ன்னு உங்க மேனேஜர்  ஒரு வெங்கல கிண்ணம் பரிசா குடுப்பாரு.

9. அப்புறம் உங்க பாஸ் கிட்ட எதாவது ஒர்க் குடுத்து ரிசல்ட் கேட்டுருக்காருனு வச்சிக்கோங்க.. அத எடுத்துகிட்டு பல்லகாட்டிகிட்டு காலையில வந்தோண அவர்கிட்ட போயி நின்னீங்கண்ணா மேட்டர் ஓவர்... அவரே அப்பதான் வீட்டுல wife ku சாப்பாடு செஞ்சு குடுத்துட்டு, கொழந்தைங்கள கெளப்பி ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வந்து கடுப்புல உக்காந்துருப்பாரு. அதனால காலைல பாஸ்கிட்ட டீலிங்குங்குறதே இருக்கக்கூடாது.. அப்புறம் எப்போ போறது? லஞ்ச் முடிச்சி ஒரு கால்மணி நேரம் கழிச்சி.. அப்பதான் அவரு அரை தூக்கத்துல இருப்பாரு.. நீங்க என்ன சொன்னாலும் ஆமா சொல்லுவாரு... வெள்ளை பேப்பர்ல கையெழுத்து வாங்குனாலும் அப்போ வாங்கிகிட்டாதான் உண்டு.


10. நீங்க வருசம் ஃபுல்லா ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தாலும் பரவால்ல.. ஆனா இந்த மார்ச் மாசம் மட்டும் தீயா வேலை செய்யனும் குமாரு... இந்த பாஸூங்கல்லாம் இருக்காங்களே... எல்லாரும் short term memory loss உள்ளவங்க... நீ ஜூன் மாசத்துல நாக்கு தள்ள வேலை செஞ்சிருந்தாலும் அத ஜுலை மாசத்தோட மறந்துடுவாங்க.  நீ மார்ச்ல என்ன பண்றியோ அதுதான் உனக்கு மார்க் போடும். அதுவும் பெரிய ஆஃபீசர்கள் நம்மள க்ராஸ் பண்றப்போதான் நாம மாமன் மகள் சத்யராஜ் மாதிரி “அந்த தாய்லாந்து பார்டி என்னாச்சி? “ஹாஜி.. I will come next week”  “ நமக்கு பையர்ஸயும் ஹாப்பி பண்ணி ஆகனும் கஸ்டமர்ஸயும் பாத்துக்கனும்.. பிஸினஸ் ட்ரெண்டு தெரியாம பேசுறீங்களே.. அப்புடி இப்புடின்னு காலே வராதா ஃபோன காதுல வச்சிட்டு எதாவது அடிச்சி விடனும். 

இவ்வாறாகச் செய்து வந்தால் வருடத்தின் இந்த நாள் மட்டுமல்லாமல் எந்த நாளும் இனிய நாளாகவே அமையும்.



எண்ணம் : நண்பன் அசால்டு அசார்
கருத்துக்கள் : நண்பன் அனந்த நாராயணன், நண்பன் கார்த்தி



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...