மீடியாவைக் கடந்து ஆர்.கே. நகருக்குள் மூவரும் செல்கிறார்கள்
ஒரு கூட்டம் ஓட்டுக்கேட்டு வருகிறது... கையில் ஒரு ஃப்ரேம் செய்யப்பட்ட புகைப்படம்... ஒற்றை இலை சின்னத்தில்கொடி
செந்தில் : அண்ணேன்... ராஜ்கிரன் வர்றாரு ராஜ்கிரண் வர்றாரு
கவுண்டர் : என்னது ராஜ்கிரணா? எங்கடா?
செந்தில் : அங்க பாருங்கண்ணே... மஞ்சப்பைல நடிச்ச ராஜ்கிரண் வர்றாரு...
கவுண்டர் : அடப்பாவி... ரெண்டு பக்கமும் காது ஓரமா நரைச்சிருந்த உடனே அது ராஜ்கிரனா.... நல்லா பாருடா... அவருதாண்டா கண்ணீ செல்வம்
சத்யராஜ் : மாம்ஸ் இர்ர்ர விட்டுட்டீங்க
கவுண்டர் : நா இர்ர்ரு விடல மாப்ள... டேய் வடை சட்டி மண்டைய நீ எதுவும் விட்டியா?
செந்தில் : ஆத்தா சத்தியமா நா விடலண்ணே..
சத்யராஜ் : அய்யோ மாம்ஸ்.. அவரு பேர்ல வர்ற இர்ர விட்டுட்டீங்கன்னு சொன்னேன்....
(அந்தக் கூட்டம் பக்கத்தில் வருகிறது)
கண்ணீர் செல்வம் சத்யராஜைப் பார்த்து சிரிக்கிறார்
சத்யராஜ் : மாம்ஸ் இவரு என்னப்பாத்து சும்மா சும்மா சிரிக்கிறாரு
கவுண்டர் : யப்பா அவரு வேணும்னே சிரிக்கலப்பா... அவரு மூஞ்சே அப்டிதான்
க.செல்வம் : மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இருக்கும் வேறுபாடே இந்த சிரிப்புத்தான்.. விலங்குகளால் சிரிக்கமுடியாது
கவுண்டர் : (செந்திலைப் பார்த்து ) டேய் காட்டேரி வாயா.. கொஞ்சம் சிரி
செந்தில் : ஹாஹாஹா....... ஹீ ஹீ ஹீ........ ஹூ ஹூ ஹூ
கவுண்டர் : இப்ப என்ன சொல்றீங்க
(அப்பொழுதும் கண்ணீர் செல்வம் அதே மாதிரி சிரித்தது போல் முகத்தை வைத்துக்கொள்கிறார்)
கவுண்டர் : அடங்கப்பா... இது ஒலக நடிப்புடா சாமி... இவரோட இன்னும் கொஞ்ச நேரம் நின்னா நம்ம மூஞ்சும் இப்டிஆயிரும்... ஆள வுடு சாமி
*****
அந்தக் கூட்டம் இவர்களைக் கடந்து செல்ல, அடுத்த கூட்டம் அதே போல் கையில் ஒரு ஃப்ரேம் செய்யப்பட்ட ஃபோட்டோவுடனும் வருகின்றனர். அதே போல் ஒற்றை இலை சின்னக் கொடி
செந்தில் : அய்யோ அண்ணேன்...
கவுண்டர் : என்னடா...
செந்தில் : எண்ணன்னே இன்னொரு குரூப்பு வருது... கையில அதே படம்... அதே கொடி...
கவுண்டர் : டேய் டேங்கர் கப்பல் மண்டையா... ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள்ன்னு சொல்லுவானுகள்ளஅது இவனுங்கதான்... ஒரு குரூப்பு அந்த ஃபோட்டோவ மக்கள்கிட்ட காமிச்சி ”இவங்க செத்துப் பொய்ட்டாங்க அதுனாலஓட்டுப்போடுங்க” ன்னு கெஞ்சுவான்... இன்னொரு குரூப்பு அதே ஃபோட்டோவக் காமிச்சி “இவங்கள அந்த குரூப்புகொன்னுட்டாங்க... அதனால எங்களுக்கு ஓட்டுப்போடுங்க” ன்னு சொல்லுவான்... ஆனா அந்த ஃபோட்டோவுலஇருக்கவங்க சாகும்போது ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து தான் ட்ராமால்லாம் போட்டாங்கன்னு மக்கள் எல்லாருக்கும்தெரியிங்
சத்யராஜ் : மாம்ஸ்... அது என்ன மாம்ஸ் ரெண்டு பேருக்கும் சின்னத்துல ஓரே ஒரு இலை மட்டும் இருக்கு... அதுவும்இலை வேற வேற பக்கம் இருக்கு.
கவுண்டர் : அட அது ஒண்ணு மில்லையப்பா... மொதல்ல ரெண்டு இலைதான் இருந்துச்சி... இவனுங்க ரெண்டு பேரும்ஒரே சின்னத்துக்காக அடிச்சிக்கிட்டு இருந்தானுங்க.... இதப் பாத்த ஜட்ஜ் ஒருத்தரு ரெண்டு இலைக்கு நடுவுல ரெண்டாகிழிச்சி ஒரு பக்கத்த இவனுங்களுக்கும் இன்னொரு பக்கத்த அவனுங்களுக்கும் குடுத்துவிட்டுட்டாரு...
அந்தக் கூட்டம் இவர்களைக் கடந்து செல்ல
கவுண்டர் சத்யராஜைப் பார்த்து
கவுண்டர் : பழ்னிச்சாமி இங்க வா
உடனே அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவர் “என்னங்க கூப்டீங்களா?” என்கிறார்
கவுண்டர் : நா உங்களக் கூப்டலயே.. என் மாப்ள பழ்னிச்சாமியக் கூப்டேன்
அவர் : என் பேரும் பழ்னிச்சாமிதானுங்க
கவுண்டர் : அப்டீங்களா... உங்க ஊரு?
அவர் : காட்பாடி
கவுண்டர் : ஓ.. காட்பாடி பழனிச்சாமியா நீங்க... எம் மாப்ள பாப்பநாயக்கம் பட்டி பழனிச்சாமி
கா.பழனிச்சாமி : ரொம்ப சந்தோசம்.. நீங்க என்ன பன்றீங்க?
கவுண்டர் : நாங்க நேத்து வரைக்கும் சும்மாதான் இருந்தோம்... இன்னிக்கு காலைலருந்து முழு நேர அரசியல்வாதியாமாறிட்டோம். ஆமா நீங்க என்ன பன்றீங்க?
கா.ப: நானும் போன மாசம் வரைக்கும் சும்மாதான் இருந்தேன்.
கவுண்டர் : இப்ப பிஸி ஆகிட்டீங்களா?
கா.ப: இல்லைங்க... இப்பவும் அப்டித்தான் இருக்கேன்... ரெசாட்ல ரெஸ்ட் எடுத்தது போக மிச்ச நேரத்துல அப்பப்பதலைமைச் செயலகத்துக்கு பொய்ட்டு வந்துகிட்டு இருக்கேன்.
கவுண்டர் : அத ஏன் இவ்வளவு சோகமா சொல்றீங்க?
கா.ப: இது இன்னும் எத்தனை நாளைக்குன்னு தெரியல... சரி அத விடுங்க என் சோகம் என்னோட போகட்டும்...மறக்காம நமக்கே ஓட்டுப் போட்டுருங்க
கவுண்டர் : ண்ணா... நாங்களும் உங்கள மாதிரிதாணுங்கண்ணா... ஓட்டு கேட்டுதான் வந்தோம்... நீங்க முடிஞ்சாஎங்களுக்கு ஓட்டுப் போடுங்கண்ணா... தோ... பாருங்க உங்க குரூப்பெல்லாம் வெய்ட் பன்னுது.. போய் ஜாய்ண்பன்னிக்குங்க... அப்டியே எதுக்கும் ராஜினாமா கடிதத்தையும் ரெடி பண்ணி வச்சிக்குங்க… கூடிய சீக்கிரம் தேவைப்படும்
(காட்பாடி சோகமாக நடந்து சென்று கூட்டத்தில் இணைகிறார்)
செந்தில் : அண்ணேன்…. இவருக்கும் முன்னால வந்த கண்ணீர் செல்வத்துக்கும் ஒரு வித்யாசம் இருக்கு… என்னன்னு சொல்லுங்க
கவுண்டர் : நீயே சொல்லு நாயே
செந்தில் : கண்ணீரு நிரந்தர தற்காலிக முதல்வரு… காட்படி தற்காலிக நிரந்தர முதல்வரு….
கவுண்டர்: என்னா கண்டுபிடிப்பு… குட்டிம்மா…. மூஞ்ச இப்புடி பக்கத்துல கொண்டு வா…..துப்ப்…பூ
*****
இன்னும் சற்று முன்னே செல்கிறார்கள்
கவுண்டர் : மாப்பி... ஒரு முக்கியமான மேட்டர மறந்துட்டோமே...
சத்யராஜ் : சொல்லுங்க மாம்ஸ்
கவுண்டர் : இங்கல்லாம் ஓட்டு வாங்கனும்னா நல்லவங்களா இருந்தா மட்டும் பத்தாது மாப்ள... கைல காசுஇருக்கனும்....
சத்யராஜ் : அய்யோ மாம்ஸ்... வரும்போது பீரோவுல பணத்த மறந்து வச்சிட்டு வந்துட்டேன்... நா வேணா போய்எடுத்துட்டு வந்துரட்டுமா?
கவுண்டர்:(குஜாலாக ) மாப்ள இந்தப் பண மேட்டர என்கிட்ட சொல்லவே இல்லை... நீ ஜெயிச்சிட்ட... ஆமா எத்தனைலட்சம்..? எத்தனை கோடி? இப்பவே எனக்கு கூவத்தூர் ரெசார்ட் கண்ணுக்குத் தெரியிதே.... சொல்லு மாப்ள எத்தனைகோடி?
சத்யராஜ் : இருநூத்தி முப்பது ரூவா அம்பது பைசா...
கவுண்டர் : இய்ய்ய்ய்.... என்னது இருநூத்தி முப்பது ரூவா அம்பது காசா? அம்பது பைசால்லாம் செல்லாதுன்னுசொல்லி பல வருசமாச்சிய்யா... இந்த நிக்கிறானே கச்சத்தீவு வாயன்.. இவன் ஒரு வேளை சாப்பாடே 500 ரூவாய்க்குசாப்புடுவான்... நீ வெக்கமில்லாம பிச்சக்காசு 200 ரூவாய பீரோவுல வச்சிட்டு வந்துட்டேன்னு ஃபீல் பன்ற... போ மாப்ள..உன் மேல வச்சிருந்த மரியாதையே போயிருச்சிய்யா...
அப்ப ஒரு குரூப்பு தாமரை கொடியப் புடிச்சிக்கிட்டு செகப்புக் கலர் காரத் தள்ளிக்கிட்டு வருது... (கங்கை அமரன் &ஃபேமிலி)
(கரகாட்டக்காரன் பேக்ரவுண்ட் மீயூசிக்கை ஒலிக்க விடுக)
கவுண்டர் : மாப்ள... இந்தக் கார நா எங்கயோ பாத்துருக்கேனே....
செந்தில் : அண்ணேன் நானும் பாத்துருக்கேன்...
கவுண்டர் : டேய்... இந்தக் காரப் பாத்த உடனே அடுத்து நீ என்ன கேப்பன்னு எனக்குத் தெரியிங்.. கேட்டே... மகனேஅடுத்த வேளை சோறு திங்க வாய் இருக்காது.
செந்தில் : அட அது இல்லைண்ணே… நீங்க எவ்வளவு பெரிய விஞ்ஞானி
(சத்யராஜ் பொளக்குன்னு சிரிக்கிறார்)
கவுண்டர் மூஞ்சை முறைப்பா வச்சிக்கிட்டு
கவுண்டர் : மேல…
செந்தில் : அட அது இல்லைண்ணே… இத்தனை வருசமாகியும் இந்த சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்காங்கன்னே கண்டுபுடிக்க முடியலையே…. அதான் வருத்தமா இருக்கு
கவுண்டர்: ரொம்ப வருத்தப்படாதடா.. விசித்ரான்னு ஒரு பாட்டுப்பாடுற புள்ளை இருக்கு.. அதுகிட்ட கேட்ட ஒரு வேளை தெரியலாம். ஏன்னா இன்னிக்கு தேதிக்கு யாரு யாரு யார் யார வச்சிருக்காங்குறா விவ்ரமெல்லாம் அந்தப் புள்ளைக்கிட்டதான் இருக்கு
செந்தில் : விலாசம்... விசித்ராவோட விலாசம்...
கவுண்டர் பக்கத்தில் கிடந்த கல்லைப் பார்க்க செந்தில் நைசாக நழுவுகிறார்.
(அப்போது கங்கை அமரனைப் பார்த்து)
சத்யராஜ் : மாம்ஸ் அந்தத் தாத்தாவயும் நான் அடிக்கடி பாத்துருக்கேன்....
கவுண்டர் : எங்க?
சத்யராஜ் : வருசா வருசம் மாட்டுப்பொங்லன்னிக்கு வெள்ளை வேட்டி சட்டை போட்டுக்கிட்டு
கவுண்டர் : பொங்க சோரு வாங்கித் திங்க வருவாரா?
சத்யராஜ் : இல்ல மாம்ஸ்… டிவில பட்டிக்காடா பட்டனமான்னு ஒரு மொக்கை ப்ரோகிராம் நடத்துவாரு
(அந்த குரூப் இவர்களை நெருங்கி வர.... )
கவுண்டர் : என்ன சார்... டிவி ப்ரோகிராமெல்லாம் எதுவும் இல்லயா? இந்தப் பக்கம் வந்துட்டீங்க....
கங்கை அமரன் : நானும் இந்தத் தொகுதியில் எலெக்ஷன்ல் நிற்கிறேன்...
கவுண்டர் : நிக்கிறது இருக்கட்டும்.. யாரு ஓட்டுப்போடுவா?
கங்கை அமரன் : ஓட்டு என்று கூறியவுடன் எனக்கு ஒரு சம்பவம் ஞாபத்திற்கு வருகிறது. சிறு வயதில் நானும்அண்ணன் இளையராஜாவும் ஒரு முறை ஓட்டுப்போடச் சென்ற பொழுது
கவுண்டர் : ஓட்டு இல்லைன்னு சொல்லி தொரத்தி விட்டுட்டாங்களா?
கங்கை அமரன் : துரத்திவிட்டார்களா என்று சொன்னதும் எனக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது... நானும்அண்ணனும்...
ப்ரேம்ஜி : யப்பா... சும்மாருப்பா... அண்ணேன்…மறக்காம....... எங்களுக்கே...... ஓட்டுப்போட்டுருங்க.... ஆங்........ (கையை மடக்கி அவர் மேனரிசத்தை செய்கிறார்)
கவுண்டர் :(பதட்டமாக)அய்யோ பழ்னிச்சாமி.... அந்த சாவிக்கொத்தை எடு.. பையனுக்கு வலிப்பு வந்துருச்சி பாரு....
கங்கை அமரன் : அது வலிப்பு இல்லைங்க... என பையனோட மேனரிசம்....
கவுண்டர் : து.....ப்பூ.... இந்த பாருங்க சின்ன வாத்தியம்... இதெய்ல்லாம் பக்கத்துல வச்சிக்கிட்டு சுத்தாதீங்க.. எத எப்பகடிச்சி வைக்கும்னே தெரியாது.... நீங்க தனியா போனாக்கூட ஒண்ணூ ரெண்டு ஓட்டு விழலாம்ம்ம்... ஆனாஇதயெல்லாம் கூட்டிக்கிட்டு போனா கஞ்சி தான்....
யமுனை அமரன் : கஞ்சி என்று சொல்லும்பொழுது எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. சிறு வயதில் நானும்அண்ணன் இளைய ராஜாவும் கஞ்சி குடிக்கும் பொழுது
கவுண்டர் : யப்பா சாமி... தெரியாமக் கேட்டுட்டேண்டா... இடத்தக் காலி பன்னுங்க...
மறுபடியும் கரகாட்டக்காரன் மியூசிக்.. அமரன் க்ரூப் அந்தக் காரைத் தள்ளிக்கொண்டு போகும்போது பின்னால் இருந்துகவுண்டர் )
கவுண்டர் : ஏங்க தாடிக்காரரே... வீட்டுக்குப் போனவுடனே மொதோ வேலையா மூஞ்சில ஸ்ப்ரே அடிக்கிற அந்த காக்காவலிப்பு தம்பியக் நல்ல சங்கிலியா பாத்து கட்டிப்போடுங்க.. இதயெல்லாம் சும்மா விடுறது ஆபத்து...
(அவர்கள் சென்றதும்)
செந்தில் : (கோவமாக) அண்ணேன்... என் பதவிய நான் ராஜினாமா பன்றேன்...
கவுண்டர் : ஆங்ங்... கூட அள்ளக்கையா வர்றது பெரிய கவர்னர் பதவி... அத இவரு ராஜினாமா வேற பன்றாரு...சோத்துக்கு என்ன நாயே பன்னப்போற?
செந்தில் : உங்க கட்சி நடவடிக்கையில எனக்கு உடன்பாடு இல்லை. அதுனால நா என்னோட தொண்டர்கள் ஆதரவோட தனிக்கட்சி ஆரம்பிக்கப் போறேன்…
கவுண்டர் : ஆங்.. அப்புடியே கட்சில நாலுகோடி பேரு இருந்தானுங்க… இதுல தொண்டர்கள் ஆதரவு வேற… மொத்தத்துல கட்சில இருந்ததே மூணுபேரு.. அதுலயும் தனிக்கட்சியா? போற போக்குல தமிழ்நாட்டுல ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு கட்சி ஆரம்பிச்சி, வாட்டிகன்ல போப் எலெக்ஷனப்போ அவன் அவனுக்கு அவன் அவனே ஓட்டுப் போட்டுக்குற மாதிரி தமிழ்நாடும் ஆகபோகுது…. ஒழிஞ்சி போங்கடா… மாப்ளா நீ போய் தியேட்டர்ல பழைய எம்.ஜி.ஆர் படத்த ஓட்டி பொழச்சிக்க…. நா பழையபடி நா சைக்கிள் கடைக்கே போயிடுறேன்..
புண்ணாக்கு பேரவை கலைங்கடா…. !!!