Wednesday, July 29, 2015

தாய் நாட்டுக்கு ஒரு ப்ரச்சனைன்னா நானே ஒடுவேன்!!!


Share/Bookmark
சிலபேரு உயிரோட இருக்கும்போது அவங்க எவ்வளவு பெரிய ஆள்ங்குறது அவங்களுக்கே தெரியிறதில்லை. இறந்த அப்புறம்தான் தூக்கி வச்சிக் கொண்டாடுறாங்க. அப்துல் கலாம் அய்யா ஒரு வேளை இப்ப நடக்குறதயெல்லாம் பாத்துக்கிட்டு இருந்தார்ன்னா அவரே நம்ப மாட்டாரு. ஒரு தனி மனிதனுக்கு இவ்வளவு மரியாதை, எத்தனை ரசிகர்கள், எத்தனை ஃபாலோயர்கள். அதுல முக்கால்வாசி ”திடீர்” ரசிகர்கள், ”திடீர்” பாலோயர்கள். சரி அவங்கள பின்னால கவனிச்சிக்குவோம். சமீப காலங்கள்ல இவ்வளவு பேர் ஒரு தனிமனிதனோட இறப்புக்கு வருந்துவது இதுதான் முதல் தடவ. ஒரு சில அரை கிறுக்கர்களத் தவற எல்லாருமே கலாம கொண்டாடுறாங்களே தவற யாரும் திட்டல. அந்த கிறுக்கய்ங்க கூட இத செய்யாம விட்டுட்டாருன்னு திட்டுறாய்ங்களே தவற “இப்புடிப் பன்னிட்டாரே”ன்னு சொல்லல. அந்த ஒண்ணே சொல்லுது இவர் எவ்வளவு பெரிய மனிதர்னு. அவரோட மறைவு நிச்சயம் ஒரு பெரிய இழப்பு தான்.

ஆனா இந்த ரெண்டு நாள்ல தான் நம்ம எவ்வளவு போலியா வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்னும் தெரியிது. வண்டாருய்யா கருத்து சொல்லன்னு யாரும் ஆரம்பத்துலயே அசிங்கமா திட்டவேணாம். முழுசா படிச்சிட்டு கொஞ்சம் யோசிச்சி பாத்தப்புறம் தப்புன்னா கழுவி ஊத்துங்க தப்பில்லை. இடம் பொருள் ஏவல்ங்குறது எல்லா விஷயங்களுக்குமே உண்டு. ”மஞ்சுளா அம்மாவைப் பிரிந்து சோகத்தில் வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” ன்னு கேப்டன் ஒரே ஒரு வார்த்தை தப்பா சொல்லிட்டாரு. அத வச்சி இப்ப வரைக்கும் ஓட்டுறோம். அன்னிக்கு எத்தனையோ பேர் இறங்கல் தெரிவிக்க கூட இல்லை. அவங்கல்லாம் எஸ்கேப் ஆயிட்டாங்க. ஆனா மஞ்சுளா அவர்களோட இறுதி சடங்குளையெல்லாம் நேரலையா கேப்டன் டிவில ஒளிபரப்பினாரு கேப்டன். அந்த ஒரு தப்பான வார்த்தை, அவர் அன்னிக்கு செஞ்ச நல்ல விஷயங்கள் எல்லாத்தையும் மறக்க வச்சிருச்சி.

ல்லது செய்யனும்னு ஆசைப்பட்டு வர்றவங்க செய்யிற சின்ன தப்பால மாட்டிகிறதும், எதுவுமே பன்னாம இருக்கவங்க  safe ah எஸ்கேப் ஆயிடுறதும் இப்ப ரொம்ப சகஜமாயிருச்சி. அதானால சில விஷயங்கள பன்றதுக்கு பண்ணாமலேயே இருக்கலாம் போலருக்கு. நேத்து கூட அப்படி ஒரு விஷயம் ஆதித்யா டிவில நடந்துச்சி.

மதுரை முத்து ஒரு காமெடி சொல்லுவாரு.. “எங்களை கல்யாண வீட்டுக்க்கு ப்ரோக்ராம் பன்ன பேசக்கூப்புடுவாங்க.. போவோம். காதுகுத்துக்கு ப்ரோக்ராம் பன்ன கூப்புடுவாங்க போவோம். அரசியல் கூட்டத்துக்க்கு ப்ரோக்ராம் பன்ன கூப்டுவாங்க. அங்கயும் போவோம். திடீர்னு ஒருநாள் ஒருத்தர் இறந்ததுக்கு பேசக்கூப்புட்டாய்ங்க. நாங்க பயந்துட்டோம். அங்க போனப்புறம் “யோவ் சாவு வீட்டுல எப்புடிய்யா காமெடி சொல்றது?” ன்னு அவய்ங்ககிட்ட கேட்டேன். அதுக்கு அவிங்க “கொஞ்சம் சிரிப்பு வராத மாதிரி சோகமான ஜோக்கா சொல்லுங்க தம்பி” ன்னு சொன்னாய்ங்க. “அது எப்புடிய்யா சிரிப்பு வராத ஜோக்கு சொல்றது?” ன்னு கேட்டேன். “இந்த டிவிலயெல்லாம் சொல்லுவீங்களே தம்பி அந்த மாதிரி சொல்லுங்க” ன்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டாருன்னு.

மதுரை முத்து சொன்ன காமெடிய நேத்து ஆதித்யா டிவில செஞ்சே காமிச்சாய்க. ”அடிக்கடி கடிக்கடி”ன்னு நினைக்கிறேன். ப்ரகாஷ்ராஜ் மாதிரி ஒருத்தன். பாக்யராஜ் மாதிரி ஒருத்தன். ரெண்டு பேரும் கலாம் இறந்ததுக்கு ரொம்ப சோகமா ஹோஸ்ட் பண்ணிட்டு இருக்காய்ங்க. ஃபோன் பன்றவய்ங்க கிட்டயும் கலாம பத்தி ரொம்ப உருக்கமா பேசிட்டு, “அய்யா நம்மளவிட்டு போனது ரொம்ப வருத்தமான செய்தி… சரி நீங்க இந்த காமெடி சீன பாருங்க” ன்னாய்ங்க. அதப்பாக்கவே ரொம்ப awkward ah இருந்துச்சி. அவங்க இந்தப் ப்ரோக்ராம் பன்னாமலேயே இருந்துருக்கலாமோன்னு தோணுச்சி.

நகைச்சுவைக்குன்னே இருக்க சேனல்ல இப்படி ஒரு ப்ரோக்ராம் கண்டிப்பா பன்னித்தான் ஆகனும்னு எந்த அவசியமும் இல்லை. அடுத்தவங்க நம்ம ஏன் ஃபீல் பன்னலன்னு கேள்வி கேட்டுருவாங்களோன்னு தான் இன்னிக்கு பல பேர் திரியிறாய்ங்க. நம்ம இன்னிக்கு செய்யிற நிறைய விஷயங்கள் “பாருப்பா நானும் கலாம் இறந்ததுக்கு ஃபீல் பன்றேன் நல்லா பாத்துக்கோ. நாளைப்பின்ன இல்லைன்னு சொல்லிடக்கூடாது” ங்குற மாதிரி தான் இருக்கு.

இன்னொரு மெண்டல் குரூப்பு. ஜெயலலிதாவும், கலைஞரும் இறுதி அஞ்சலி செலுத்தப் போகலன்னும், தனுஷ் ஏன் நேத்து பர்த்டே கொண்டாடுனாருன்னும் எதோ கொலைக்குத்தம் பன்ன லெவல்ல கழுவி ஊத்துறாய்ங்க. சரி ஒரு நிமிஷம். கலாம் இறந்துட்டாருங்குறதால உங்களோட ரெகுலர் ஆக்டிவிட்டீஸ்ல எதயாவது நிறுத்திருக்கீங்களா இல்லை மாத்திருக்கீங்களா?  இல்லை ஒரு வேளை சாப்பாட்டையாவது நிறுத்திருக்கோமா? இல்லை போன ரெண்டு நாள்ல பிறந்தநாள் கொண்டாடுன உங்க நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லாம இருந்துருக்கீங்களா? நம்மளப் பொறுத்த அளவு கலாம் ஃபோட்டோவ ப்ரொஃபைல் பிக்சரா மாத்திக்கிறதும் அவரப்பத்தின எதாவது மெசேஜ் வந்த அத உடனே நாலு பேருக்கு அனுப்புறதும், அவர் சொன்ன “quotes” ah கூகிள்ல தேடி அத ஸ்டேட்டஸா போட்டுக்கிறதும் தான் நம்ம காட்டுற வருத்தம். இதே தனுஷ் யாருக்கும் சொல்லாம வீட்டுல நல்லா பிறந்தநாள் கொண்டாடிட்டு, ஃபுல்லா சரக்கடிச்சி தூங்கிட்டு மறுநாள் காலையில ஒரு கலாமுக்காக ஒரு சோகமான ட்வீட் போட்டிருந்தா இந்நேரம் அந்த லெவலே வேறயாயிருக்கும்.

ஒரு விஷயம் செஞ்சாலும் தப்பு கண்டுபுடிப்போம். செய்யலன்னாலும் தப்பு கண்டுபிடிப்போம். Maggi la நச்சுப்பொருள் இருக்குன்னு தடை பண்ணா, ஏன் மத்ததை தடை பன்னலன்னு கேப்போம். விஷால் நாய்களுக்காக போராட்டம் இருந்தா ஏன் ஈழத்துக்கு போராடலைன்னு கேப்போம். இந்த Celebrities ah கேள்வி கேக்குறதுலயும் அவிங்கள தொவைச்சி காயப்போடுறதுலயும் நமக்கு இருக்க சொகம் இருக்கே? அடடா.. ஏன்னா நாம என்ன சொன்னாலும் அவங்க கேட்டுக்குவாங்க. ரியாக்ட் பன்ன மாட்டாங்கங்குற தைரியம். விஷால நாய்களுக்கு போரட்டம் பண்ணிட்டு ஈழத்துக்கு ஏன் போராடலைன்னு கேக்குறவிங்களால அவிங்க ஆஃபீஸ் கேண்டீன்ல “இன்னிக்கு ஏன் பொங்கல் போடாம இட்லி போட்டீங்க? “ ன்னு கூட கேக்க முடியாது. ஏன்னா அங்க இன்ஸ்டண்ட் ரியாக்‌ஷன் இருக்கும். 


நம்ம செஞ்சா அது நியாயம். அடுத்தவன் செஞ்சா அது தப்பு. அவங்களும் மனுஷங்கதாங்குற ஒரு அறிவுகூட இல்லாம வாய் இருக்குன்னு என்ன வேணாலும் பேச ஆரம்பிச்சிடுறோம். கலைஞரோட உடல்நிலை என்னன்னு எல்லாருக்குமே தெரியும். ஜெயலலிதாவுக்கும் கொஞ்ச நாளா உடல்நிலை சரியில்லைன்னு தகவல்கள்தான் வந்துட்டு இருக்கு. அப்படி இருக்கும்போது அவங்க இறுதிஅஞ்சலிக்கு போகலன்னு அசிங்கமா பேசுறத எந்த வகையில சேத்துக்கிறது?


கடந்த ரெண்டு நாளா நீங்களே நல்லா யோசிச்சி பாருங்க. கலாம் சம்பந்தமா எத்தனை செய்திய wats app la நம்ம அனுப்பிருக்கோம். அதுல எத்தனை உண்மை? எத்தனை பொய்யி? கலாம் இறந்துட்டாருங்குற செய்தி மட்டும் உண்மை. உடனே பத்துவருசத்துக்கு முன்னால எடுத்த ஒரு ஃபோட்டோவ “கலாமின் இறுதி நிமிடங்கள்” ங்குற பேர்ல போட்டுவிட்டாய்ங்க.  ஒருத்தன் நாளைக்கு எல்லாருக்கும் லீவு. கவர்மெண்ட் சொல்லிருச்சுன்னு அனுப்புறான். ராமேஸ்வரத்துக்கு கவர்மெண்ட் இலவசமா பஸ் இயக்குதுன்னு ஒருத்தன் கிளப்பி விடுறான். (இதயெல்லாம் அரசாங்கம் அறிவிக்கிறதுக்கு முன்னாலயே). திடீர்ன்னு இன்னிக்கு காலையில ஒபாமா கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்துறதுக்கு ராமேஸ்வரத்துக்கு வர்றார்ன்னு அனுப்புறாய்ங்க.

இறந்த செய்தி வந்து அரைமணி நேரம்கூட ஆகல. கலாமைப் பத்தி பக்கம் பக்கமா கட்டுரைங்க வந்து குவியிது. கலாம் இத சொல்லிருக்காரு. அத சொல்லிருக்காரு. அவ்வளவுயும் பாத்து “டேய்.. கலாம் இவ்வளவு சொல்லிருக்க்காராடா.. இவ்வளவு நாள் எங்கடா போயிருந்தீங்கன்னு தான் தோணுச்சி. அதயெல்லாம் கலாம் தான் சொன்னாருன்னு நாம எத்தனை பேருக்கு உறுதியாத் தெரியும்? எதோ வருது நாமளும் அனுப்புறோம்.  

இந்த வாட்ஸ் ஆப் வந்ததுலருந்தே என்னன்னு தெரியல நம்மாளுங்களுக்கு “தாய்க்கு ஒரு ப்ரச்சனைன்னா ஆம்புலன்ஸ கூப்புடுவேன். தாய்நாட்டுக்கு ஒரு ப்ரச்சனைன்னா நானே ஓடுவேன்” ன்னு உணர்ச்சி பொங்க எவனுக்காச்சும் உதவி பன்னியே ஆகனும்னு அடம்புடிக்கிறானுங்க. எவனுக்காச்சும் ரத்தம் கேட்டு மெசேஜ் வருதா? இல்லை இத ஒருத்தருக்கு அனுப்புனா பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு வாட்ஸ் ஆப் பத்து பைசா தர்றேன்னு ஒத்துக்கிச்சின்னு மெசேஜ் வருதா? Forward ah போட்டுவிடு. அது உண்மையா பொய்யா? யாருக்கு என்ன போச்சு?

போனவாரம் திடீர்ன்னு ஆக்சிடெண்ட் ஆன ஒருத்தனுக்கு அவசரம “A +ve “ வேணும்னு ஒரு மெசேஜ். நானும் சரி உதவலாமேன்னு ஒரு நாலுபேருக்கு அனுப்புனேன். அப்புறம் விசாரிச்சிப் பாத்தாதான் தெரியிது. அவனுக்கு ஆக்ஸிடெண்ட் நடந்தது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி. ஆக்ஸிடெண்ட் ஆனவனுக்கே அந்த மெசேஜ் திரும்ப போயிருக்கு. “அடப்பாவிகளா ரெண்டு வருஷம் முன்னால ஆக்ஸிடெண்ட் ஆன எனக்கு இன்னுமாடா ரத்தம் கேட்டுட்டு இருக்கீங்க” ன்னு புலம்புன சம்பவங்களும் இருக்கு. இன்னிக்கு ”ராத்திரி 12 மணிலருந்து 3 மணிவரைக்கும் ரொம்ப கொடிய ரேடியேஷன்கள் பூமியைத் தாக்குறதால எல்லாரும் ஃபோன சுட்ச் ஆஃப் பண்ணி வைங்க. இத நாசா கூட கன்ஃபார்ம் பன்னிருக்காங்க” ன்னு ரெண்டு  மாசம்  முன்னால ஒரு மெசேஜ். ”நாசாவே சொல்லிட்டாங்களா.. அப்ப உண்மையாத்தான் இருக்கும்”னு நானும் நாலு பேருக்கு அனுப்பிட்டு நைட்டு ஃபோன வேற ஆஃப் பண்ணி வேற வச்சேன். இப்ப வரைக்கும் அந்த மெசேஜ் எனக்கு ஒரு இருபது தடவ வந்துருக்கு. ஒவ்வொரு தடவ அது வரும்போதும் “தா… அந்த நாசாவ கொளுத்துங்கடா” ன்னு தான் தோணுது.

இந்த மாதிரி தப்பான தகவல்கள் குடுத்து ஏமாத்துறப் பத்தி ஓரு ரெண்டுவரிக்கதை இருக்கு. “ஒரு பையன் ரூமுக்குள்ள புலி வந்துருச்சி புலி வந்துருச்சின்னு அவங்க அப்பாவ அடிக்கடி ஏமாத்துவானாம். பதறியடிச்சிட்டு அவங்க அப்பா ஓடிப்போய் ரூமுக்குள்ள பாத்தா பையன் மட்டும்தான் இருப்பான். புலியக் காணும். திடீர்னு ஒரு நாள் உண்மையிலயே புலி வந்துருச்சாம். பையன் புலி வந்துருச்சி புலி வந்துருச்சின்னு கத்த, அப்பா எப்பவும் போலத்தான்னு நினைச்சி கண்டுக்காம விட்டுட்டு ஒரு அரைமணி நேரம் கழிச்சி போய் பாத்தாரம். அப்போ ரூம்ல புலி மட்டும் இருந்துருக்கு. பையனக் காணும். அவ்வளவுதான். (இந்த புலிக்கதை எந்தப் படத்திலிருந்து ஆட்டையப் போட்டது எனக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு வெங்கலக் கின்னம்)

நம்மளும் இதயேத்தான் பன்னிட்டு இருக்கோம். இந்த மாதிரி தப்பு தப்பா அனுப்பி அனுப்பி, வெறுத்துபோனவங்க, உண்மையிலேயே யாருக்கவது உதவி தேவைப்படுறப்போ அத செய்யாம விடுறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு. ஒரு விஷயத்த வந்த உடனே மத்தவங்களுக்கு அனுப்பித்தான் நம்ம கடமை உணர்ச்சியக் காட்டனும்னு இல்லை. ஒவ்வொரு செய்தியையும் கிளப்பி விடுறதுக்கு முன்னாலயோ இல்லை மத்தவங்களுக்கு அனுப்புறதுக்கு முன்னாலயோ கொஞ்சம் யோசிச்சி பாருங்க. 


Monday, July 27, 2015

இது நம்ம ரவுசு!!!


Share/Bookmark
”எத்தனை நாள்தான்பா சும்மா, இந்தப் படம் நல்லா இல்லை, அந்தப் படம் மொக்கையா இருக்குன்னு சுட்ட வடையே சுட்டுக்கிட்டு இருப்ப. எதாவது உருப்படியா பண்ணலாம்ல” ன்னு ஒருத்தர் நாக்க புடுங்கிக்கிற மாதிரி கொஞ்ச நாள் முன்னால கேட்டதோட விளைவுதான் இது. ஏண்டா நெட்டுல அருத்தது பத்தாதுன்னு புத்தகமா வேற அருக்கப்போறியான்னு நீங்க நினைக்கலாம். ப்ளீஸ் என்ன தடுக்காதீங்க. நானும் ரவுடியா ஃபார்ம் ஆயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.  

சரி முதல்ல மாயவலைய முழுசா எழுதி அத மொதல்ல ரிலீஸ் பன்னுவோம்ங்குற ஐடியாவுல முழுக்கதையையும் எழுதிட்டு சில பதிப்பகங்கள்ல “What is the procedure the publish a book” ன்னு வசூல்ராஜா ஸ்டைல்ல கேக்க அவிங்க கோரஸா “தம்பி நாங்க மதன் சுஜாதா மாதிரி ஃபேமஸான ஆளுங்களோட புத்தகங்களத்தான் வெளியிடுவோம். உன்ன மாதிரி புதுசா எழுதுறவங்க புக்கையெல்லாம் நாங்க பப்ளிஷ் பண்றதில்லை. ” ன்னாங்க. “ணே… நா புதுசில்லண்ணே.. ஆறு ஏழு வருஷமா blog la எழுதுறேண்ணேன்” ன்னேன். அதுக்கு அவிங்க “நீ ஒண்ணாப்புலருந்து கூடத்தான் ரூல்டு நோட்டுல எழுதிட்டு இருந்துருப்ப. அதயெல்லாம் நாங்க கணக்குல எடுக்க முடியாது ஓடிரு” ன்னு மரியாதையா சொல்ல பட் அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்ததால அமைதியா வந்துட்டேன்.

சரி ஸ்டெரெய்ட்டா ஹீரோ வேலைக்கு ஆகல. மொதல்ல வில்லன் அப்புறம் ஹீரோ அப்புறம் டெல்லின்னு படிப்படியா போவோம்னு முதல் படியா self-publishing மூலமா இந்த ரவுச publish பன்னிருக்கேன். நம்ம blog la வெளியிடப்பட்ட சில நல்ல பதிவுகளத் தொகுத்து இந்தப் புத்தகத்துல கவர் பன்னிருக்கோம். அதுமட்டும் இல்லாம, முதல் பக்கத்துலருந்து கடைசி கவர் பக்கம் வரைக்கும் புத்தகத்தோட டைட்டிலுக்கு ஏத்த மாதிரி ரவுசக் கூட்டிருக்கோம். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன். ஒரு சாம்பிள் கீழே



இத புத்தகமா ரிலீஸ் பன்றதுக்கு ரொம்ப உதவியா இருந்தவரு நண்பர் பால விக்னேஷ். Layout லருந்து கவர் டிசைன் வரைக்கும் எல்லாத்தையும் பன்னிக்குடுத்தது அவர்தான். நா எதோ ஒரு மாதிரி கவர்டிசைன் பன்னலாம்னு சொல்ல, ஆனா அவரு நா கேக்காமலேயே எனக்கு புடிச்ச மாதிரி தலைவர் படத்த வச்சே கவர் டிசைன் பன்னிக்குடுத்து அசத்திட்டாரு. என்னடா அவுர் இவுர்ன்னு ஓவரா மரியாத குடுக்குறேனேன்னு வெறிக்காதீங்க. நம்ம காலேஜ்மேட் தான். சும்மா ஒரு பில்ட் அப்பு. ”தம்பி ப்ரச்சனை பன்னாதீங்கப்பா”  போஸ்டுல மாட்ட சிங்கம் அடிக்கிற மாதிரி ஒரு படம் வரைஞ்சாருன்னு சொன்னேன்ல. அது இவரு தான்.

சரி இவ்ளோதான் மேட்டரு. எப்பவும்போல நண்பர்கள் அனைவரோட ஆதரவையும் எதிர்பாக்குறேன். நிச்சயம் உங்களுக்கு பிடிச்ச ஒரு புத்தகமாவும் உங்களை கண்டிப்பா சிரிக்க வைக்கும் புத்தகமாகவும் இருக்கும்னு நம்புறேன். லிங்க் கீழே.


குறிப்பு:

இந்த போஸ்ட பாத்தப்புறம் புத்தகத்த ஆர்டர் பண்னாம படக்குன்னு க்ளோஸ் பன்றவங்க கவனத்திற்கு. அப்டி எதாவது செஞ்சா என்னாகும் தெரியும்ல.. 



உசார் பத்திரி ரெய்டு

வாச்சா பத்திரி சீ..    

மயில்சாமி சொல்லுவாரே ரத்த வாந்தி.. அதுதான்.
உடம்ப பாத்துக்குங்க... 



Saturday, July 18, 2015

மாரி – Mass Unlimited!!!


Share/Bookmark
ஒரு படம் ஓடுற ரெண்டரை மணி நேரமும் கைதட்டி, விசிலடிச்சி, சிரிச்சிட்டு இருந்தா கூட, தியேட்டர விட்டு வெளில வந்த உடனே அது அனைத்தையும் மறந்துட்டு இது செம்ம மொக்கப்பா, கொன்னுட்டாங்கப்பா, செஞ்சிட்டாங்கப்பான்னு புளுகுறதுக்கு சில பேருக்கு எப்படி மனசு வருதுன்னு தெரியில. இப்போ ஃபேஸ்புக்குகள்ல நல்லா போயிட்டு இருக்க யாவாரம்னு பாத்தா மெமி க்ரியேஷன்தான். எவண்டா எப்படா சிக்குவான்னு பாத்துக்கிட்டு இருக்கதுதான் இப்ப வேலை. ஆனா நல்லா இல்லாத ஒரு விஷயத்த கலாய்க்கிறதுல தப்பே இல்லை. ஆனா ஓட்டுறதுக்காகவே ஒரு விஷயத்த மொக்கை பண்ணக்கூடாது. ரெண்டு நாளா மாரி பத்தின மெமிக்களப் பாத்துட்டு, படம் பாத்தப்புறம் தான் தெரியிது அந்த மெமி க்ரியேட் பண்ண எவனுமே படம் பாக்கலன்னு. அதுமட்டும் இல்லை அத ஷேர் பண்றவனுங்களும் படம் பாக்கல.

வழக்கம்போலவண்டான்யா தனுஷ் படம்னா பில்டப் குடுக்குறதுக்குன்னு நீங்க நினைக்கலாம். பரவாயில்லை. எனக்கு சரின்னு படுற விஷயத்த எத்தனை தடவையானாலும், எத்தனை பேர் தப்புன்னு சொன்னாலும் பதிவு செய்ய தவற மாட்டேன்.  

இந்த மசாலா பட அலர்ஜி உள்ளவனுங்க நிறையா பேர் இருக்கானுங்க. அதாவது தமிழ்நாட்டுலயே பொறக்காதவனுங்க மாதிரியும், ஆங்கில மற்றும் கொரிய மொழிகளில் வந்த தரமான திரைப்படங்களை மட்டும்தான் பாப்பானுங்கங்குற மாதிரியும் அள்ளி விடுவானுங்க. நாலு பேர் முன்னால ஒரு மசால படத்த நல்லாருக்குன்னு சொல்றதக் கூட அசிங்கமா நினைக்கிற கூட்டம் கூட இருக்கு.  நம்ம சினிமாவோட முதுகெலும்பே மசாலாப்படங்கள் தான்.

நம்மாளுங்ககிட்ட இருக்க இன்னொரு ப்ரச்சனை எல்லா படங்களையும் ஒரே தராசுல தான் எடை போடுவாய்ங்க. சமீபத்துல காக்கா முட்டைய பாத்துட்டா கொஞ்ச நாளுக்கு எல்லா படத்தையும் என்னைய்யா காக்கா முட்டை எவ்வளவு சூப்பரா ரியலா எடுத்துருந்தாய்ங்க. அது படம்யா… இது என்ன இப்டி இருக்கு” ங்க வேண்டியது. அந்த மாதிரி காக்கா முட்டைகள் ரெண்டு மூணு வருஷத்துக்கு ஒரு முறை வர்றதனாலதான் இவ்வளவு சிறப்பா கொண்டாடப்படுது. வர்றது பூரா காக்கா முட்டையாவே இருந்தா அப்ப தெரியும்.

சரி மாரிக்கு வருவோம். என்னைப்பொறுத்த அளவு தனுஷுக்கு இன்னொரு பெஸ்ட் படம். எந்த இடத்துலயுமே போர் அடிக்கல. சொல்லபோனா அஞ்சி நிமிஷத்துக்கு ஒரு தடவ காமெடிக்கோ, இல்லை மாஸ் சீனுக்கோ தியேட்டர்ல கைதட்டலும் விசில் சத்தமுமாத்தான் இருந்துச்சி. நா சொல்றது டைட்டில் போடும்போதோ இண்ட்ரோ சீனும்போதோ இல்லை. படம் முழுசுக்கும் அப்டித்தான்.

ரொம்ப நாளுக்கு அப்புறம் நிறைய காட்சிகள்ல புல்லரிக்க வச்ச ஒரு படம் மாரி. முன்னெல்லாம் தலைவர் படம் பாக்கும்போது அப்டித்தான் இருக்கும். படையப்பா, சிவாஜிலாம் பாத்த எஃபெக்ட் படம் பாத்து ரெண்டு மூணு நாள் அப்டியே இருக்கும். ஆனா கொஞ்ச நாளா, அந்த மாதிரி புல்லரிக்கிற காட்சிகள் எங்கயாவது எப்பவாவது ஒவ்வொணு மட்டுமே வந்துக்கிட்டு இருந்துச்சி. எனக்கே ஒரு சந்தேகமாப் போச்சி. ஒரு வேளை வதவதன்னு நாம படம் பாக்குறதால நாம மந்தமாகி அந்தமாதிரி எதுவும் இப்ப தோணமாட்டுதோன்னு. ஆனா எனக்குள்ல அந்த ரசனை அப்படியேத்தான் இருக்கு, இப்ப வர்ற படங்கள்ல தான் அந்த மாதிரிக் காட்சிகள் கம்மிங்குறத மாரி புரிய வச்சிது. 

காளி வெங்கட், இன்ஸ்பெக்டர் விஜய் ஜேசுதாஸ்கிட்ட தனுஷப் பத்தி பில்டப் குடுக்க, குடுக்க ஆரம்பிக்கிற தனுஷ் இண்ட்ரோவுலருந்து, மாரி இண்ட்ரோ சாங் முடியிற வரைக்கும் உள்ள பத்து நிமிஷமும் தியேட்டர் ஃபுல்லும் நிக்காத விசில் சத்தம். செம ஸ்டைல் & மாஸ் ஓப்பனிங்.
இன்னும் சொல்லபோன நேத்துலருந்து வந்த நெகட்டிவ் ரிவியூவ்ஸ்லயெல்லாம் ரோபோ சங்கர்தான் நடிச்சிருக்காரு, அனிரூத் பின்னிருக்காரு தனுஷ் தெரியவே இல்லைன்னு என்னென்னவோ சொல்றாய்ங்க. தனுஷை மட்டம் தட்டுறதுக்கான வேலையாத்தான் இதெல்லம் தெரியிது.  ரோபோ சங்கர் ஒன் லைனர்ஸ் ல பட்டைய கெளப்பிருந்தாலும் ஒவ்வொரு காட்சிலயும் தனுஷோட ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்தான் செமையா இருக்கு.  

இன்னொன்னு இண்டர்வல் ட்விஸ்ட் ரொம்ப கெஸ் பன்ற மாதிரி இருக்காம். டேய் மொதல்ல அது ட்விஸ்டே இல்லைடா. இந்த மாதிரியான படங்களுக்கு ட்விஸ்ட்ங்குற ஒரு சமாச்சரமே தேவையில்லாத ஒண்ணு. இண்டர்வலுக்கு முந்துன சீன்ல பாக்குற எல்லாருக்குமே அடுத்தது என்ன நடக்கும்னு நல்லா தெரியிற மாதிரி தான் எடுத்துருப்பாய்ங்க. ஆனா இவய்ங்க மட்டும் ட்விஸ்ட கெஸ் பன்னிட்டாய்ங்களாம்.

படம் ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்குமே ஒரே ஸ்பீடுல கொஞ்சம் கூட முகம் சுழிக்கிற மாதிரியோ அருவையாவோ இல்லாம போகுது. அனிரூத் BGM கொஞ்சம் இறைச்சலா இருந்தாலும், அந்த “ஜிந்த்தா… ஏ ஜிந்த்தா” தீம் வாய்ப்பே இல்லை. பட்டையக் கெளப்புது.

முதல் பாதில முக்கால்வாசிக் காமெடி கால்வாஸி மாஸ்னா ரெண்டாவது பாதில கால்வாசி காமெடி முக்கால்வாசி மாஸ். தெறிக்க விட்டுருக்காய்ங்க. அதுவும் மாமூல் வசூல் பண்ண வர்ற கேங் முன்னாடி, தனுஷ் ஸ்டைலா உக்காந்துட்டு ஒவ்வொரு பட்டாசாத் தூக்கி போடுறது செம்ம.

”எரிஞ்சி போன கூண்டுலருந்து போன புறாவெல்லாம் திரும்ப வராது மாரி… வா நம்ம இந்த ஏரியாவ விட்டுப் போயிடலாம்னு ரோபோசங்கர்  சொன்னதும் டக்குன்னு ஒரு புறா வந்து தனுஷ் பக்கத்துல உக்காரும். இது நிச்சயமா predictable சீன் தான். இருந்தாலும் ரொம்ப ஃபீல் குட் சீன். “அதுங்களுக்கே இதுதான் நம்ம இடம்னு தெரியிது. உங்களுக்கு ஏண்டா தெரிய மாட்டேங்குது” ன்னு தனுஷ் திரும்ப கேக்குறது சூப்பர்.

துப்பாக்கி படத்துல தங்கச்சிய கடத்துனவன் எங்க இருக்கான்னு தெரியாம விஜய் தேடிட்டு இருப்பாரு. வில்லன் குரூப் ”நம்ம இருக்க இடத்த யாராலையும் கண்டுபிடிக்க முடியாது”ன்னு சொல்லிட்டு கழுத்துல கத்தி வைக்கப் போகுதும்போது, தூரத்துல சின்னதா நாய் கொலைக்கிற சத்தம் கேக்கும். அப்ப நமக்கு ஒரு ஃபீல் இருக்கும் பாருங்க. அந்த ஃபீலுக்குப் பேருதான் சார் “மாஸ்”. அந்த மாதிரி மாஸ் காட்சிகள் எல்லாருக்கும் வைக்க முடியாது. வச்சாலும் அந்த ஃபீல் க்ரியேட் பன்றது ரொம்ப கஷ்டம். ஆனா அந்த மாதிரி நிறைய இடத்துல சீன்ஸ் வச்சி, எல்லா இடத்துலயுமே நமக்கு அந்த ஃபீல க்ரியேட் பன்னிருக்காங்க.

அனைத்து பெரிய வெப்சைட்டுகளோட விமர்சனங்களிலும் பாலாஜி மோகன் அடுத்த படத்தில் come back தருவார் என எதிர்பார்ப்போம்னு போட்டுருக்காய்ங்க. அவரு இதுக்கு முன்னால எடுத்தது ரெண்டு படம். ரெண்டு படத்தையும் முழுசா நா பாக்கல. சத்தம் போடாமல் பேசவும் ன்னு ஒரு படத்த ஒரு நாள் பஸ்ல போட்டாய்ங்க. நா கொஞ்ச நேரத்துல கண்ணை மூடி தூங்கிட்டேன். அவர் இதற்கு முன்னால எடுத்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றிப்படங்கள் இல்லை. அப்படி இருக்கும்போது இதுல அவர் சருக்கிட்டதா எழுதுற யார மட்டப் படுத்தன்னு தெரியல.

மேல சொன்னா மாதிரி நம்மாளுங்க கிட்ட உள்ள கெட்டப் பழக்கம் ஒரே மாதிரிப் படங்களை ஒருத்தர்கிட்டருந்து எதிர்பாக்குறது தான். ஒரு மாஸ் ஆக்‌ஷன் எண்டர்டய்னரா மாரில பாலாஜி மோகன் 100 % வெற்றி பெற்றிருக்கிறார்னு தான் சொல்லனும். “இந்த டைரக்டர் இந்த டைப் படங்கள் மட்டும்தான் எடுப்பார்” ன்னு பேரெடுக்குற இயக்குனர்களைக் காட்டிலும் “இந்த டைரக்டர் எந்த மாதிரி படம்  எடுத்தாலும் நல்லா எடுப்பார்” ன்னு பேரெடுக்குறவங்க தான் நீண்ட நாள் நிலைச்சி நிப்பாங்க.

காஜல் அகர்வால ஹைட்டெக் கலர்ஃபுல் தெலுங்கு செட்டுகள்ல பள பளன்னு பாத்துட்டு இந்தப் படத்துல லோக்கல் ஏரியால பாக்க கொஞ்சம் மனசு கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா ஓக்கே. புராக்கூண்டு பத்தி எரிஞ்சிட்டு இருக்கும்போது நேரா காஜல் புறாக்கூண்ட நோக்கி ஓடும்போது அப்டியே கட் பண்ணி அடுத்த ஷாட்டுக்குப் போக, நா கூட கேம் ஆப் த்ரோன்ஸ்ல தினாரிஸ் டார்கேரியன் தீக்குள்ள இருந்து பொறிச்ச ட்ராகன் குஞ்சுகளோட வர்ற மாதிரி இவனும் புறாவெல்லாம் பத்தரமா பாதுகாத்து வச்சிருந்து உள்ளருந்து வருவாளோன்னு பயந்துட்டேன். அப்புறம் அந்த விமர்சகர் வேற அதுக்கும் இதுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறதுன்னு ஆரம்பிச்சிருவாரு. நல்லவேள அப்டி எதுவும் இல்லை.

படத்துல இன்னும் கொஞ்சம் கான்சண்ட்ரேட் பண்ணிருக்கலாம்ன்னு ஒரு சில விஷயங்களைச் சொல்லலாம். ஏரியாவ கண்ரோல் பன்ற தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரொம்ப குறுகய வட்டத்துக்குள்ளயே இருக்கு. அதாவது தனுஷ் பெரிய ரவுடின்னு எல்லாரையும் மிரட்டுறாரு. ஆனா அவரு பெரிய ரவுடிங்குறதுக்கு அடையாளமா அவரை விட ஒரு பெரிய ரவுடிக்கு கீழ வேலைபாக்குறதும், எட்டு வருஷத்துக்கு முன்னால நடந்த ஒரு கொலையுமே பின்னனியா காமிக்கப் படுதே தவற வேற காட்சிகள் இல்லை.

உதாரணமா புதுப்பேட்டையில தனுஷ் பெரிய ரவுடியா ஃபார்ம் ஆனப்புறமும், அழகம் பெருமாள் அவர் பொண்ணு ப்ரச்சனையச் சொல்லி உதவி கேப்பாரு. அப்போ அந்த வீடியோ கேசட்ட வாங்க போகும்போது கூட தனுஷ் கண்ண காட்டுனதும் தனுஷோட அள்ளக்கை ஒருத்தன ஒரே போடுல போட்டுத்தள்ளுவான். அதுக்கு தனுஷ் “சவுண்ட் வுட்ரான் பாரு.. இன்னும்  ப்ராக்டிஸ் வேணும்” ன்னு அசால்ட்டா சொல்லுவாறு. அந்த மாதிரி அவரோட பேக்ரவுண்ட மெயிண்டெய்ன் பன்ற மாதிரி ஒருசில காட்சிகள் வச்சிருக்கலாம். அப்புறம் புறாப் பந்தையம் வருஷா வருசம் நடக்குதா இல்லை மாதா மாத போட்டியான்னு ஒரு கன்பீசன். நினைச்ச நேரத்துல கப்பு, டோர்னமெண்டுன்னு பேசிட்டு இருக்காய்ங்க.

வில்லன் சற்று டொம்மை மாதிரி இருக்காப்ள. ஆனா அவனோட கேரக்டரே ரொம்ப கெத்தான கேரக்டரெல்லாம் இல்லாம, தனுஷுக்கு எப்பவுமே அடங்கி நடக்குற மாதிரியான கேரக்டர்ங்குறதால ஓக்கே தான்.  விஜய் ஜேசுதாஸ் கெட்டப்பும் கேரக்டருக்கும் நல்லாருக்காரு. ஆனா வாய மட்டும் நம்ம நவரச நாயகன் ஸ்லாங்குல பேசுற மாதிரி “ஏய்.. அவ்வ்வ்.. மிஷ்டர் சந்திரமெளலி.. என்ன காலிங்” ன்னு வாய்க்குள்ள பீடா மென்னு வச்சிருக்க மாதிரியே வச்சிருக்காரு.

படம் முழுக்க சிகரெட் காட்சிகளும், பார் காட்சிகளும் எக்கச்செக்கம். ஸ்லோ மோஷன் காட்சிகள்ல அது கெத்தாத் தெரிஞ்சா கூட, ரொம்ப நாளா இந்த மாதிரி காட்சிகள அதிகம் பாக்காம இருந்து திடீன்னு அன்லிமிட்டடா இந்தப் படத்துல வர்றதால கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு.
ஒரு சில நெகடிவ் இருந்தா கூட, அதெல்லாம் படம் பாக்குறவங்கள ஒண்ணும் பெருசா பாதிக்கல. ஒரு படத்தோட முதல் குறிக்கோள், படம் பாக்குறவங்கள எதோ ஒரு வைகையில எங்கேஜ் பன்னி வச்சி எண்டர்டெய்ன் பன்றது. அத மாரி 100% கரெக்டா பன்னிருக்குங்குறதுல எந்த சந்தேகமும் இல்லை.

நிச்சயம் மாரி, சமூக வலைத்தளங்கள்லயும் பிரபல பத்திரிக்கை விமர்சனங்கள்யும் ரேட் பண்ணப்பட்டிருக்க அளவு ஒரு சுமாரான படமோ மோசமான படமோ இல்லை. நிச்சயம் ரெண்டரை மணி நேரத்திற்கு எண்டர்டெண்ட்மெண்ட் கேரண்டி தரக்கூடிய ஒரு படம்.


Mark my words. அடுத்த சூப்பர்ஸ்டார் அப்டிங்குற ஒரு விஷயம் இருந்தா, அதுக்கு தகுதியான ஆள் தனுஷ் தான்ங்குறத இந்தப் படமும் ஒரு அடி முன்னால போய் உறுதிப் படுத்திருக்கு. தியேட்டர்ல வந்த ஒவ்வொரு விசில் சத்தமும் இதுக்கு சாட்சி. (இதுக்காக எத்தனை பேர் கழுவி ஊத்தப் போறாய்ங்களோ.. )


Saturday, July 11, 2015

பாகுபலி – பெத்த கல்லூ!! பெத்த லாபம்!!!


Share/Bookmark
ஆந்த்ராவுல தமிழ் தயாரிப்புகளுக்கு கொடுக்கபடுற மரியாதை தமிழ்நாட்டுல தெலுங்குப் படங்களுக்கு அவ்வளவா இருந்ததில்லை. ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, விஷால், கார்த்தின்னு எல்லாரயும் அவங்களுக்குத் தெரியும். இங்க மட்டையான சில படங்கள் கூட ஆந்த்ராவுல பிச்சிக்கிட்டு ஓடிருக்கு. ஆனா பாலைய்யா, சிரஞ்சீவி, நாகர்ஜூனா தவற நம்மூர்ல தெலுங்கு நடிகர்கள் யாரையும் தெரியாது. அவங்க படங்கள் டப் பன்னப்பட்டு ரிலீஸ் ஆனா கூட, ஒண்ணும் பெரிய ரெஸ்பான்ஸ் இருந்ததில்லை. ஆனாலும் அம்மன், அருந்ததி, நான் ஈ ன்னு ஒவ்வொரு சீசன்லயும் ஒரு தெலுங்குப் படம் நேரடித் ரிலீஸ்ல நம்மூர்லயும் சக்க போடு போட்டு அவங்களோட ப்ரசன்ஸ்ச நமக்கு காட்டிக்கிட்டுத்தான் இருக்கு. அந்த வகையில நம்ம எல்லாரையும் அசர வைக்கிற மாதிரியான ஒரு படத்தோட வந்துருக்காரு எஸ்.எஸ். ராஜமெளலி.

இந்தியாவுலயே பெரிய பட்ஜெட் படமுங்க, ப்ரபாஸ் தமன்னா, அனுஷ்கா நடிச்சிருக்காங்க. இன்னும் ஒரு பார்ட் வேற இருக்குதுங்கன்னு  நானும் தொவைச்ச துணியவே துவைச்சா ரொம்ப அருவையா இருக்கும். ஏன்னா கடந்த ரெண்டு வாரமா எல்லா இடத்துலயும் ஒரே பாகுபலி பேச்சுத்தான். அதனால அந்த மேட்டரல்லாம் அப்டியே விட்டுடலாம்.

இதுவரைக்குமே தலைவர் படங்களத் தவற, ஒரு படத்த பாத்த உடனே இன்னொரு தடவ பாக்கனும்னு தோணுனது கில்லி ஒரு படத்துக் மட்டும் தான். பாத்துட்டு தியேட்டர விட்டுட்டு வெளில வரும்போதே, அடுத்த ஷோ அப்டியே போயிடலாமான்னு யோசிச்சேன். காசில்லாத காரணத்தால் பொத்துனாப்புல ஹாஸ்டலுக்கு வந்துட்டேன். கிட்டத்தட்ட அதே மாதிரி ஒரு ஃபீல் இந்தப் படத்த பாத்துட்டு வரும்போதும் இருந்துச்சி. இன்னமும் இருக்கு.

கிராஃபிக்ஸ்ல ஆங்கிலப்படங்களை மட்டுமே பாத்து வாயப் பிளந்துக்கிட்டு இருந்த நமக்கு, நம்மூர்ல கூட அதே மாதிரி கொண்டு வர முடியும்ங்குற நம்பிக்கையக் கொடுத்துருக்கு இந்தப் படம்.  உண்மையிலயே அந்த ப்ரமிப்பு இன்னும் போகல. அந்த ப்ரம்மாண்டமான Falls ஆகட்டும், மகிழ்மதி கோட்டைகளாகட்டும், யுத்த களமா இருக்கட்டும். அத்தனையும் இன்னும் கண்ணு முன்னாலயே நிக்கிது. அதுவும் கடைசி அரைமணி நேரம் வாய்ப்பே இல்லை.

கதையோ திரைக்கதையோ ரொம்பப் புதுசுன்னுலாம் சொல்ல முடியாது. எல்லாம் நமக்குப் பழக்கப்பட்ட கதை தான். ஆனா அத விஷுவலா நமக்கு ப்ரசண்ட் பன்ன விதத்துலதான் இந்தப் படம் வேற லெவலா தெரியிது. அதுவும் ஆரம்பத்துல ப்ரபாஸ் வளருற Falls எல்லாம் பாக்கும்போது நம்மளையும் அறியாம உள்ளுக்குள்ள ரொம்ப சூப்பரான ஒரு ஃபீல்.

வண்ணத்து பூச்சிங்கல்லாம் உடம்புல சுத்தி இருக்க மாதிரி வர்ற தமன்னா இன்ட்ரோ தாறு மாறு. ஆனா கோவமா வசனம் பேசுறது, விறைப்பா நடக்குறதெல்லாம் தமன்னாவுக்கு செட் ஆகல. அனுஷ்கா அம்மையார் சில காட்சிள் வந்தாலும் நல்லா நடிச்சிருக்காங்க. என்ன அம்மையாருன்னெல்லாம் சொல்றேனு பாக்குறீங்களா? அந்த கெட்டப்புல பாத்தப்புறம் வெறும் அனுஷ்கான்னு டைப் பண்ணவே ஒரு மாதிரி இருக்கு.

பார்த்த மாதிரி காட்சிகள் இருந்தா கூட நிறைய இடத்துல புல்லரிக்க வச்சிருக்காங்க. க்ளீஷே ஆனா கூட சில காட்சிகள் எத்தனை தடவ பாத்தாலும் புல்லரிக்க வைக்கும். பாட்ஷாவுல மாணிக்கம், மாணிக் பாட்ஷாவா மாறுற மாதிரி, ஹீரோ அப்பாவியா இருந்து அதிரடி ஆக்‌ஷனுக்கு மாறுற மாதிரி சீன்ஸ்  இதுவரைக்கும் ஒரு முப்பது படத்துல வந்துருக்கும். ஆனா அந்த சீன பாக்குறதுக்கு நமக்கு கொஞ்சம் ஆர்வமாதான் இருக்கும்.

பாபா படத்துல எல்லாரும் தலைவர் எப்ப வருவாருன்னு காத்துக்கிட்டு இருப்பாங்க. திடீர்னு கவுண்டர் வந்து இறங்குவாரு. எல்லாரும் வெறியாயிருவாய்ங்க. அப்போ சுஜாதா சாமி ரூமுக்குள்ள போக, பாபாஜி படத்துலருந்து ஒரு பூ கீழ விழும். உடனே சுஜாதா ஸ்லோமோஷன்ல சிரிச்ச மாதிரி திரும்பி “பாபா வந்துட்டு இருக்கான்” ம்பாங்க. புல்லரிக்கும்.  அதே மாதிரி இருபத்தைஞ்சி வருஷாமா சங்கிலியால கட்டப்பட்டு கஷ்டப்படுற அனுஷ்கா, ப்ரபாஸ் அந்த ஊருக்குள்ள கால வச்சதும் “anushka instinct” ல டக்குன்னு செம சந்தோஷமா “மகிழ்மதியே உயிர்த்தெழு.. என் மகன் வந்துவிட்டான்னு சிரிச்சிட்டெ சொல்றது சூப்பர். யாருக்குமே பாகுபலிய ஞாபகம் இருக்காதுன்னு சொன்ன ராணாவப் பாத்து, சிலை வைக்கும்போது ஊரே “பாகுபலி பாகுபலி” ன்னு கத்துறப்போ அனுஷ்கா ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க.

ரம்யா கிருஷ்ணன் செம கெத்து. அதே மாதிரி சத்யராஜூக்கும் செம ரோல். நாசரோட கெட்டப் கொஞ்சம் மாத்திருக்கலாம். ஏன் சத்யாரஜ், நாசர் மாதிரியான தமிழ் ஆட்களுக்கு வாய்ப்பு குடுத்தீங்கன்னு கேட்டு எல்லார்கிட்டயும் ஏத்து வாங்குன சுரேஷும் இந்நேரம் படத்த பாத்திருப்பார். அவருக்கே அந்தக் கேள்விக்கு விடை கிடைச்சிருக்கும். ராணா ரெண்டு கெட்டப்புலயும் சூப்பர். ராணாவுக்கு டப்பிங் வாய்ஸும், அந்த ஸ்லாங்கும் ரொம்ப நல்லா இருந்துச்சி.

ப்ரபாஸ் ஆளு மொரட்டுத்தனமா இருக்காரு. லிங்கத்த அடியோட பேத்து தூக்கி எடுத்துட்டுப் போறப்போ, உண்மையிலயே தூக்கிட்டுப் போன மாதிரி தான் இருந்துச்சி. எஸ். எஸ். ராஜ மெளலியோட ப்ரபாஸுக்கு இது ரெண்டாவது படம். ஏற்கனவே நம்மாளுங்களுக்கு ரொம்ப பழக்கமான “வாடு போத்தே வீடு… வீடு போத்தே நேனு” வசனம் ப்ரபாஸ், ராஜமெளலி காம்பினேஷன்ல வந்த சத்ரபதி படத்துல வர்றதுதான். ராஜமெளலிய பட்டைய கிளப்பிருக்காரு, வேற லெவலுக்குப் பொய்ட்டாருன்னு தனியா ஒருதடவ புழகத்தேவையில்லை. இந்த போஸ்டுல உள்ள எல்லா புகழும் அவருக்குத்தான். MM கீரவாணி பாட்டும் சரி, BGM மும் சரி. படத்துக்கேத்த மாதிரி ப்ரம்மாண்டமாவே குடுத்துருக்காரு.

படத்துல குறையா ஒரு சில விஷயங்கள மட்டும் சொல்லலாம். ப்ரபாஸ மிகப்பெரிய பலசாலி, வீரன், பயமில்லாதவன்னு காமிக்கிறதுக்காக நூறடிக்கு ஜம்ப் பன்றது, 100 அடி சிலைய ஒரே ஆளா தடுத்து நிறுத்துறது, மிகப்பெரிய பாறைய கம்புக்குச்சிய உடைக்கிறமாதிரி படக்குன்னு உடைக்கிறதுங்குற மாதிரி காமிச்சிருக்க காட்சிகள்ல கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம். முதல் பாதில நிறைய இடங்கள்ல ஆடியன்ஸ் கேலி பண்ணி சிரிக்க இதெல்லாம் வாய்ப்பு குடுக்குது. ரொம்ப கம்மியான இடைவெளில பாட்டுங்க நிறைய வருது. அதுவும் எல்லா தெலுங்கு படங்க மாதிரி இதுலயும் தேவையே இல்லாத ஒரு ஐடம் சாங். என் கூட வந்தவருக்கிட்ட “ஏன் ஜி இந்தப் படத்துல கூட இப்டி ஒரு பாட்டு வைக்கனுமா?” ன்னேன். அதுக்கு அவரு “அட நீங்கவேறஜீ… இந்தப் பாட்டு இல்லைன்னா ஆந்த்ராவுல படத்த ஃப்ளாப் ஆக்கி விட்டுருவாய்ங்க ஜீ” ன்னாரு. அதுக்கப்புறம் நோ கொஸ்டீன்ஸ்.

ஏற்கனவே சொன்னமாதிரி படத்தோட கதை ஒண்ணும் புதுசு இல்லை. இரண்டு பாகமா எடுக்கனும்ங்குற அவசியமும் இருக்க மாதிரி தெரியல. அவங்க நினைச்சிருந்தா இத ஒரு பார்ட்டாவே எடுத்துருக்கலாம்னு தான் தோணுது. ஆனா போடுற உழைப்புக்கும், பணத்துக்கும் ஒரே பார்ட்டா எடுத்துட்டா பெத்த கல்லூ சின்ன லாபம். அதே ரெண்டு பார்ட்டா ரிலீஸ் பன்னா ”அதே கல்லூ… பெத்த பெத்த லாபம்”. அவ்வளவு தான்.

முதல் நாள்லயே எல்லா கலெக்‌ஷன் ரெக்கார்டயெல்லாம் உடைச்சிட்டதா சொல்றாங்க. அதுக்கு நிச்சயம் தகுதியான படம் தான். படம் பாத்துட்டு வந்து ஒரு நாள் ஆனப்புறமும் இன்னும் மனசு அந்த பாகுபலி உலகத்துலயே சுத்திட்டு இருக்கு. கண்டிப்பா மிஸ் பன்னாம பாக்க வேண்டிய படம்.


Saturday, July 4, 2015

பாபநாசம் – லெவல் கமலஹாசன்!!!


Share/Bookmark
ஐந்து மொழிகள்ல ஒரு படம் ரீமேக் செய்யப்படுதுன்னா அது சாதாரண விஷயம் இல்லை. இந்தியவுலயே அதிக முறை ரீமேக் செய்யப்பட்ட படம் தேவதாஸ். 1917 ல ரிலீஸான ஒரு நாவல அடிப்படையா கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்த இது வரைக்கும் ஆறு மொழிகள்ல பதினாறு தடவ ரீமேக் பன்னிருக்காங்க. அடுத்தது அதிக முறை ரீமேக் செய்யப்பட்ட படம் மோகன்லால் நடிச்ச மணிச்சித்ர தாழு. இதுவரைக்கும் ஆப்தமித்ரா, சந்திரமுகின்னு 10 முறை ரீமேக் செய்யப்பட்டுருக்கு. (இரண்டாவது பாகங்களையும் சேர்த்து). அடுத்தபடியா அந்த ரெக்கார்ட இந்த த்ரிஷ்யம் அடிச்சிரும் போலத் தெரியிது. இதுவரைக்கும் 4 ரிலீஸ் ஆயிருக்கு. அஞ்சாவது இந்த மாசம் கடைசியில ரிலீஸ் ஆகப் போகுது.


கமல் இந்தப் படத்த ரீமெக் பன்னப்போறார்னு தெரிஞ்சதுமே ஏகப்பட்ட கருத்துக்கள். ஒரு பக்கம் கமலத் தவற வேற யாரும் இதப் பன்ன முடியாதுன்னாங்க. இன்னொரு பக்கம் மோகன்லால் ரொம்ப நேச்சுரலா நடிச்சிருந்தாரு. அத கமல் ஓவர் ஆக்டிங் பன்னி கெடுத்து விடப்போறார்னு ஆளாளுக்கு ஒண்ணு ஒண்ணு. இன்னும் சில பேரு மோகன் லால் கண்ணு நடிச்சிது, கன்னம் நடிச்சிதுன்னு மோகன்லால தூக்க ஆரம்பிச்சாய்ங்க. அடப் பாவிகளா.. மோகன்லாலுக்கு கன்னத்துல சதை கொஞ்சம் அதிகம். வேகமா திரும்பும்போது கன்னம் கொஞ்சம் ஆடிருச்சி. அத வச்சி கன்னம் நடிக்கிது கண்ணு துடிக்கிதுன்னு கெளப்ப ஆரம்பிச்சிட்டாய்ங்க.  மோகன்லால் ரொம்ப இயல்பா நடிச்சிருந்தார்ங்குறதுல எந்த சந்தேகமும் இல்லை. ஆனா, தமிழ்ல கமலத்தவற இந்தப் படத்த வேற யாராலயும் இவ்வளவு செமையா பன்னிருக்க முடியாதுன்னு படம் பாத்துட்டு வரும்போது ஒவ்வொருத்தருக்கும் தெரியும்.

ஒரிஜினலுக்கு கொஞ்சம் கூட கலங்கம் வராம ஒரிஜினலோட தரத்த விட ஒருபடி அதிகமாவே இங்க நமக்கு குடுத்துருக்காங்க. அதுக்கு முக்கியக் காரணம் கமலோட நடிப்பு மட்டும் தான். இந்த ஸ்க்ரிப்டுல யார் நடிச்சிருந்தாலும் ஹிட்டு தான். ஆனா இந்த பர்ஃபார்மன்ஸ் கமலால மட்டுமே குடுக்க முடியும்.
  
முதல் பத்து நிமிடத்தில் நெல்லைத் தமிழோடு ஒத்துப்போக ரொம்பவே கஷ்டமா இருக்கு. அதுவும் டீ கடையில் கமல், எம்.எஸ்.பாஸ்கர், கடை பையன் மூணு பேரும் மாத்தி மாத்தி பேசும்போது எதோ வேற மொழிப் படம் பாக்குற எஃபெக்ட் கூட லைட்டா தெரிஞ்சிது. படத்தோட ஆரம்பத்துல நெல்லைத் தமிழ் வலுக்கட்டாயமா புகுத்தப்பட்ட மாதிரி தெரிஞ்சா கூட, கொஞ்ச நேரத்துல அதுவும் பழகிருது.

அப்புறம் ட்ரையிலர் பாத்துட்டு எல்லாரும் முகத்த சுழிச்ச ரெண்டு விஷயம் ஒண்ணு ஒட்டு மீசை. இன்னொன்னு கவுதமி. ஓட்டுமீசையும் பாக்கப் பாக்கப் பழகிடுது. கவுதமி மீனாவ ரீப்ளேஸ் பன்ன முடியல தான். ஆனா செகண்ட் ஹாப்ல போலீஸ்கிட்ட கெஞ்சும் போதும், பயப்படும் போதும் மீனாவ விட கவுதமி ஒரு படி மேல தான்.

கொழாப்புட்டுக்கு பதிலா இட்லி, “தலைவா சரிதம் எழுது தலைவா” க்கு பதிலா “கூகிள் கூகிள் பன்னிப்பாத்தேன் உலகத்துல” ன்னு ரொம்ப ரொம்ப சின்ன சின்ன மாற்றங்களத் தவிற பெரும்பாலும் எதுவும் மாறல. ஒரிஜினல்ல வர்ற ஒரு சில நீள காட்சிகள வெட்டித்தள்ளிருக்காங்க.

குடும்பமே கஷ்டத்துல இருக்கும்போது அவங்களை கமல் அஞ்சானுக்கு அழைச்சிட்டு போறது வெந்த புண்ணுல புள்ளையார பாச்சிற மாதிரி இருக்காதா. அதுவும் கமல் அஞ்சான் பாக்குற  தியேட்டர்ல  அஞ்சானுக்கு எல்லாரும் விசில் அடிச்சி தெறிக்க விடுறாங்க. எழுந்து நின்னு ஆடுறாய்ங்க. லிங்குசாமி போனமாசம் கமல கலாய்ச்சதுக்காக கமல் திரும்ப கலாய்க்கிறாரான்னு தெரியல அவ்வ்

க்ளைமாக்ஸ் சீன்ல கமல் பேசிக்கிட்டு இருக்கும்போதே டக்குன்னு கண்ணுத்தண்ணி கொட்டுறது செம. அஞ்சி போலீஸ்காரனுங்களும் குழிய தோண்டி பாத்து ஏமாந்து at a time ல கமல திரும்பிப் பாக்கும் போது கமல் குடுக்குற ரியாக்சன் செம மாஸ்.

ரொம்பநாளுக்கப்புறம் சார்லிக்கு வாய்ப்பு குடுத்துருக்காங்க. ஆனா ரெண்டே சீன் மட்டும் வர்றது தான் கொஞ்சம் கொடுமை. டெல்லி கணேஷ், இளவரசு எல்லாமே அவங்கவங்க வேலைய கரெக்டா செஞ்சிருக்காங்க. கலாபவன் மணி சுகர் வந்த கவுண்டமணி மாதிரி ரொம்ப சுருங்கிப்போய் இருக்காரு. ஆனா அந்த கேரக்டருக்கு என்ன வெறுப்ப சம்பாதிக்கனுமோ அத பக்காவா செஞ்சிருக்காரு.

ஹாரி பார்ட்டர் படத்துல வர்ற ஹெர்மாயினி (Emma Watson) முதல் பாகத்துல குழுந்தையா அறிமுகமாயி, ஹாரி பாட்டர் கடைசி பாகம் வரும்போது ஹீரோயினா நடிக்கிற அளவு வளந்துருச்சி. அதே மாதிரிதான் இங்க வர்ற சின்ன பொன்னும். மலையாளம், தெலுங்கு, தமிழ்ன்னு வரிசையா எல்லா படத்துலயும் அதே பொண்ணு தான். எல்லா மொழி ரீமேக்கும் முடியிறதுக்குள்ள இந்த பாப்பாவும் ஹீரோயின் ஆயிரும் போல.

சிவாஜிங்குற சிங்கத்துக்கு கடைசி வரைக்கும் நம்ம சினிமாவுல தயிர்சாதத்த மட்டுமே குடுத்துட்டாங்க. அதுனாலதான் எனக்கான சமையல நானே சமைச்சிக்கிறேன்னு கமல் சொன்னதா சமீபத்துல ஒரு பதிவுல படிச்சேன்.  எனக்கென்னவோ கமல்ங்குற மகாநடிகன மற்ற டைரக்டர்கள் செதுக்கும்போது தான் அதோட அவுட்புட் நல்லா வருது. அதுக்கு ஒரு சாட்சி இந்தப் படம். அவருக்கான சாப்பாட்ட அவரே சமைச்சிக்கும்போது பெரும்பாலான சமயங்கள்ல அந்த சாப்பாடு அவர் மட்டுமே சாப்புடுற மாதிரிதான் அமையிது.

மோட்டர் அமைவதெல்லாம் அவனவன் செய்தெ வெனைங்குற மாதிரி படம் பாக்குறப்போ பக்கத்துல உக்காருறவனுங்க எப்பிடி பட்டவனுங்கங்குறதும் அவனவன் செய்த வெனை தான். கருமம் எனக்கு முன் சீட்டுல ஒருத்தன் பின் சீட்டுல ஒருத்தன்னு கமல் என்ன சொன்னாலும் விழுந்து விழுந்து சிரிச்சிக்கிட்டு இருக்காய்ங்க. அடேய்
இருங்கடா காமெடி வரும்போது சிரிக்கலாம். படத்துல ஒரு சில வசனங்களைத் தவற பெரிய காமெடின்னு எதுவும் இல்லை. எவனோ அவிங்ககிட்ட கமல் காமெடிப்படம் எடுத்துருக்காருன்னு சொல்லி அனுப்பிட்டாய்ங்க போல. கருமம். கமல் எச்சி துப்ப வாயத்தொறந்தா கூட கெக்க புக்கன்னு காதுக்குள்ள வந்து சிரிச்சிட்டு இருக்காய்ங்க. 

குடும்பத்தோட படத்துக்கு அழைச்சிட்டு போகும்போது நாம சங்கோஜப்படுற மாதிரி வரும் முத்தக்காட்சிகளோ, முகம் சுழிக்கிற மாதிரி படுக்கையறை காட்சிகளோ இல்லாத ஒரு கமல் படத்த பாக்குறதுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அதுவும் மோகன்லால் மீனா கான்வர்சேஷ்ன்ல கூட ஒரு சில டபுள் மீனிங் வசங்கள் வரும். ஆனா தமிழ்ல அதுகூட இல்லாம ரொம்ப நீட்டா எடுத்துருக்காங்க.

திரிஷ்யம் பாக்காம முதல் தடவ இந்தப் படத்த பாக்குறவங்களுக்கு நிச்சயம் ஒரு சூப்பர் எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...