Monday, December 31, 2012

கவுண்டர் தொகுத்து வழங்கும் கடுப்பேற்றிய படங்கள்- 2012 !!!


Share/Bookmark

கவுண்டர் மெக்கானிக் ஷாப் ஸ்டூல்ல தனியா உக்காந்து பொலம்பிக்கிட்டு இருக்காரு.

"என்னடா வாழ்க்கை இது... கரண்டு இருந்தா தான நாலு பேரு மோட்டார ஓட்டுவான்... அது ரிப்பேர் ஆகும்.. அத நம்ம கிட்ட கொண்டு வருவானுக.. இப்பல்லாம் வாங்குன மோட்டாரு ஓடாம புதுசா அப்புடியே இருக்கு.. இவனுக அத எப்ப ஓட்டுறது... அது எப்ப ரிப்பேர் ஆகுறது நமக்கு எப்போ தொழில் கெடைக்கிறது.... ஒரே குஸ்டமப்பா... பேசாம தொழில மாத்தி பழைய மாதிரி பெட்ரமாக்ஸ் லைட்டே விக்க ஆரம்பிச்சிட வேண்டியதுதான்.....ஆனா ஒண்ணே ஒண்ணுடா... கரண்டு பில்லு நா கட்னதே இல்லைடா... "

அப்ப அந்த வழியா செந்தில் டவுசரோட பாட்டு பாடிகிட்டே வர்றாரு...

"மக்காயாலா மக்காயாலா .... காய காவுவா...
மக்காயாலா மக்காயாலா காய காவுவா..."

கவுண்டர் மனசுக்குள் " என்ன இந்த கருநாய ஆப்ரிக்கா காட்டேரி எதும் அடிச்சிருச்சா...  வேற வேற மொழில என்னென்னவோ பேசிட்டு வர்றான்"

செந்தில் பக்கத்துல வந்து.. "என்னண்ணே ரொம்ப பிஸியா இருக்கீங்க போல"

கவுண்டர் : அடி செருப்பால நாயே... என்ன நக்கலா... ஏண்டா நானே நாலு நாளா எந்த இளிச்ச வாயனும் சிக்கமாட்டேங்குறானேன்னு கடுப்புல இருக்கேன்... நீவேற வெந்த புண்ணுல புள்ளையார பாச்சிகிட்டு... ஆமா அங்க வரும்போது வேற பாசையில என்னவோ பண்ணிட்டு வந்தியே என்ன ராஜா?

செந்தில்: அதுவாண்ணே... அது லேட்டஸ்ட் தமிழ் பாட்டுண்ணே..

கவுண்டர் :
என்னது தமிழ்பாட்டா? எங்க ஒருக்கா பாடு

செந்தில்  : மக்கயாலா மக்காயாலா காய காவுவா

கவுண்டர் : இய்ய்ய்... ஏண்டா கும்கி வாயா..  இது தமிழ்பாட்டா... கொக்கா கோலா கேள்வி பட்டுருகேன்.. அது என்னடா மக்காயாலா...

செந்தில்  : இப்பவெல்லாம் இதுதாண்ணே தமிழ்பாட்டு...

கவுண்டர்: சரி அது எதுவா வேணாலும் இருக்கட்டும்... இன்னொருக்கா இந்த பாட்ட பாடுன மவனே அடுத்த வேளை சோறு திங்ய வாயி இருக்காது.

செந்தில்   : ஒரு யூத்து பாட்டு பாடுனா உங்களுக்கு புடிக்காதே... சரி விடுங்க... நம்ம ஊரு  கொட்டாயில மத்தியான ஆட்டம் படத்துக்கு போவலாம்னு இருக்கேன் வர்றீங்களா...

கவுண்டர் : (காத பொத்திக்கிட்டு) அய்யோ... நா ஏற்கனவே இந்தவருசம் படம் பாத்து வாங்குனதெல்லாம் போதும்பா...  நீ ஆள விடு...

செந்தில் : அட அப்புடி என்ன படம்னே பாத்தீங்க... கொஞ்சம் சொன்னீங்கன்னா எனக்கும் கொஞம் டைம் பாஸாகும்.

கவுண்டர் : (செந்தில் காலர பொத்துனாப்புல புடிச்சி ) சரி வா சொல்றேன்... மவனே ஆரம்பிச்சிவிட்டு பாதில ஓடலாம்னு எதுவும் பாத்த, வாயில முன்னாடி ரெண்டு பல்லத்தவற மத்த எல்லாத்தையும் புடுங்கி
எரிஞ்சிருவேன்.

செந்தில் : சரி சொல்லுங்க...


 அஸ்தமனம்:


இந்த டைரக்டரு ஒரு நல்லவரு... இதுக்குமுன்னால ஒரு அருமையான படத்த எடுத்தவரு..  அப்புடின்னு ஒரு பன்னி சொன்னத நம்பி இந்த படத்துக்கு போனேன்... இந்த படத்த பாத்த அப்புறம் தான் தெரிஞ்சிது அந்த டைரக்டரு இதுக்கு முன்னால எப்புடி பட்ட படம் எடுத்துருப்பருன்னு. டேய் இது படமே அல்ல.. நாளைய இயக்குனர்ல போடவேண்டிய ஒரு short film.. 150 ரூவா பணத்த வாங்கிட்டு முக்கா மணி நேரத்துல படம் முடிஞ்சிருச்சின்னு அனுப்பிட்டானுகடா..  இந்த படத்தோட பேரு படத்துக்கு பொருந்துதோ இல்லையோ படம் பாக்க போறவனுகளுக்கு கரெக்டா பொருந்தும் அஸ்த்தமனம் - வக்காளி டேய்!!!!!!!




முரட்டுக்காளை:


கவுண்டர்: இந்த ஆப்பு மேல தேடிப்போய் உக்காருரதுன்னு கேள்விப்பட்டுருக்கியா? அது இது தான். ஏண்டா எடுத்த படத்த ஒரு சீனு கூட மாத்தாம எடுக்குறதுக்கு பேரு ரீமேக்காடா... நல்லா பண்றானுகப்பா ரீமேக்கு.. என்பது தொண்ணூரு வயசுல வரவேண்டிய கொழப்பமெல்லாம் எனக்கு இந்த படத்த  பாத்தப்புறம் வந்துருச்சி... நாமட்டும் போனா பரவால்ல..ஒரு நாலுபேர வேற கூட்டிப்போயிட்டேன்.. படம் பாத்துமுடிச்சப்புறம் என்ன எப்புடியெல்லாம் தூக்கி போட்டு மிதிச்சாங்க தெரியுமா? இங்ங்ங்ங்

செந்தில் : அய்யோ பாவம்

கவுண்டர்: நாயே..என்ன பீலிங்கா... வக்காளி தேவையில்லாத எடத்துல பீலிங்க் விட்ட அந்த படத்த போட்டு உன்ன உள்ள விட்டு ரூம சாத்திருவேன்முரட்டுக்காளை - அந்தக் காளைய கொல்லுங்கடா!!

SKY FALL



செந்தில்: அண்ணேன்... நீங்க இங்கிலீஸ் படம் லாம் பாப்பீங்களா?

கவுண்டர்: அட என்னடா மண்டையா இப்புடி கேட்டுபுட்ட.. எங்க தாத்தா காலத்துலருந்தே நாங்க  ஒரு இங்கிலீஸ் படம் விடாம பாத்துருவோம்... அதுவும் பாண்டு படம்னா எனக்கு அப்புடி ஒரு
பிரியம்...அக்காங்..

செந்தில்: இல்லையே.. நீங்க அண்ணிக்கு போதையில வேற படத்துக்கு போறதுக்கு பதிலா தெரியாம
இந்த படத்துக்கு பொய்ட்டதால்ல  கீழத்தெரு முணியாண்டி சொன்னான்.

கவுண்டர்:  த்துப்பூ... சொல்லிட்டானா...சரி வுடே... தெரிஞ்சி போனனோ தெரியாம போனணோ... ஏண்டா போனோம்னு ஆயிருச்சிடா... படத்த பாத்துட்டு எனக்கு வந்த கடுப்புல என் பக்கத்துல உக்கார்ந்துருந்தவன் மூக்குல
உட்டேன் பாரு ஒண்ணு... பொல பொலன்னு ரத்தம் வந்துருச்சி.. நல்ல வேளை இருக்குங்கறதால அவன் என் மூஞ்ச பாக்கல...

செந்தில்: (மூஞ்ச அழுகுற மாதிரி வச்சிகிட்டு) அண்ணேன்..அந்த பக்கத்துல உக்காந்து மூக்குல குத்துவாங்குனது வேற யாருமில்லை... நாந்தாண்ணே...

கவுண்டர் : அட கவ்தம் மேனன் மண்டையா....நீ தாணா அது..SKY FALL - கடல்லயே இல்லையாம்!!!

அரவான்:


செந்தில்: அண்ணே ஒரு சந்தேகம்

கவுண்டர் : டேய் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள சந்தேகமா சரி கேளூ

செந்தில்  :
இந்த படத்துக்கு ஏண்ணே அரவான்னு பேர் வச்சிருக்காய்ங்க.?

கவுண்டர் : கொஞ்சம் பக்கத்துல வா... (செந்தில் பக்கத்துல வந்ததும் கண்ணத்துல பொளேர்னு ஒண்ணுவிட்டு)  நாயே நானே அது தெரியாமதான் ஒரு வருசமா திரியிறேன். படத்த தான் ஒழுங்கா எடுக்க மாட்டேங் குறானுகன்னா பேராச்சும் புரியிற மாதிரி வைக்கிறானுகளான்னு பாரு... எதாவது ஒரு பழைய புத்தகத்த படிச்சிருப்பானுக.. அதுல எதாவது ஒருத்தன் பேரு அரவான்னு இருந்துருக்கும் அத அப்புடியே இங்க கொண்டு வந்து வச்சிட்டானுக... மக்களுக்கு புரியிற மாதிரி மட்டும் இவனுக பேர் வைக்கவே மாட்டனுக.அரவான் - தமிழ் சினிமாவில் ஒரு கருங்கல்!!!

தேவுடு ச்சேசின மனுசுலு:


செந்தில்: அண்ணே சந்தேகம் கேக்கலாமா...

கவுண்டர்: நீ என்ன கேக்கப்போறன்னு எனக்கு தெரியிங்... தமிழ் படம் பாக்கவே நமக்கு துப்பு இல்லை இதுல தெலுங்கு வேறயான்னு கேக்கப்போற.. அதான?

செந்தில்: ஆமண்ணே...

கவுண்டர் : என்னடா பண்றது நம்மூர்ல தான் இப்புடி கருமாந்துரமா படம் எடுக்குறாய்ங்கன்னு அந்தபக்கம் கொஞ்சம் போனேன்.. இந்த படத்துக்கு நம்மூர் படமே எவ்வளவோ தேவலாம் போலருக்கு. ஆனா ஒண்ணுடா... அங்க படம் நல்லாருக்கோ இல்லையோ... ஆனா படத்த பாத்தா ஒரே கலரு ஃபிகரு
கலரு ஃபிகருதான்.. ஃபுல் எஞ்ஜாய் மெண்ட்தேவுடு ச்சேசின மனுஷுலு

 செந்தில் : (லைட்டா உடம்ப நெளிச்சிகிட்டே) அண்ணே எனக்கு லைட்டா ஒண்ணுக்கு வருது..

கவுண்டர் : இருடி... நீ எதுக்காக ஓடுறன்னு தெரியிங்...அப்புடியே எஸ்கேப் ஆயிரலாம்னுதானே பாக்குற...
அது நடக்காது மகனே...


முகமூடி :


கவுண்டர் : நா அப்பவே சொன்னேன்... இந்த கருப்பு கண்ணாடி போட்ட நாய நம்பாதீங்க பாக்க திருடன் மாதிரியே இருக்கான்னு.. எவனாச்சும் கேட்டானுகளா...இப்ப எடுத்துருக்கான் பாருங்கையா ஒரு படம்... ஏண்டா  இங்கிலீஸ் படத்த பாத்து எடுத்தீங்களே அத ஒழுங்க எடுக்க மாட்டீங்களா... படத்துக்கு பேரு வச்சிருக்கான் பாருங்கையா முகமூடின்னு... மூஞ்ச மூடிகிட்டு கூட இந்த படத்த பாக்க முடியல... அதுகூட பரவால்லய்யா ஹீரோயின்னு ஒரு புள்ளைய போட்டுருக்கானுக... அத பாத்துட்டு வந்து என்னால நாலு நாளூ வீட்டுல சோறு திங்க முடியலய்யா...

செந்தில் : அய்யோ அப்புறம் என்னண்ணே பண்ணீங்க..

கவுண்டர் :
வேற என்ன பண்றது... கடையில் போயி புரோட்டா சாப்டு வந்தேன்...  முகமூடி - செம்ம காமெடி சார் நீங்க!!!

பில்லா 2 :


ஒரு தடவ ஒரு படத்த எடுத்து அது ஹிட்டாயிட்டா அத அப்புடியே விட மாட்டானுக.. அதுக்கு பார்ட் 1 பார்ட் 2லருந்து பார்ட் 5 வரைக்கும் எடுத்து அத நாரடிச்சிட்டு தான் மறுவேளை பாக்குறானுக..

செந்தில்: ஹாலிவுட்லயெல்லாம் அப்புடித்தானே பண்றாய்ங்க..

கவுண்டர்: அது ஹாலிவுட்லடா... பாப்பநாயக்கம் பட்டில உண்ட கட்டி வாங்கி திங்கிற நமக்கெல்லாம் எதுக்குடா இதெல்லாம்... அதுவும் ஒழுங்கா எடுத்தானுகளான்னா இல்லை... சரி சொந்தமாவாச்சும் எடுத்துருக்கலாம்னா அதுவும் இல்லை... ஒரு இங்கிலீஸ்படத்த அப்புடியே உல்டா அடிச்சிருக்கு இந்த டோலட்டி நாயி. அந்தாளே பாவம்... 4 படத்துல ஒரு படம் தான் அவருக்கு ஓடுது.. இவனுங்க என்னன்னா அவர வச்சி தான் ட்ரயல் எடுக்குறானுக...

செந்தில்: ஆமா அது என்ன இங்கிலீஸ் படம்னே...

கவுண்டர்: அதுவாடா... ஸ்கார் ஃபேஸ்

செந்தில் : யார் ஃபேஸ்ணே?

கவுண்டர் : உங்கொப்பன் பன்னிவாயன் ஃபேஸ்.. படுவா...

செந்தில் : அது எப்புடின்னே இங்க உக்காந்துட்டே எல்லா விஷயத்தயும் தெரிஞ்சி வச்சிருக்கீங்க...

கவுணட்ர் : தட் ஈஸ் ஆல் இன் ஆல் அழகுராஜா... பில்லா 2 - The டண்டனக்கா DON

தாண்டவம்:





கவுண்டர் : முன்னாடியெல்லாம் படம் எடுக்கறதுக்காக வெளியூர்க்கு போவானுக... இப்பலாம் வெளியூர்க்கு போறதுக்காவே படம் எடுக்க ஆரம்பிச்சிட்டானுக... ஊர் சுத்தி பாக்க ஆசப்பட்ட நாயி தனியா சொந்தகாசுல போவனும்... இளிச்சவாயி புரடியூசர் ஒருத்தன் கெடைச்சிட்டா போதும்... அமெரிக்கால தான்  எடுக்கனும்பானுக... லண்டன்லதான் எடுக்கனும்பானுக... சுச்சர்லாந்துல தான் எடுக்கனும்பானுக... ஏண்டா ஃபாரின்ல தான் எடுக்கனும்னு நாங்க என்னிக்காவது கேட்டுருக்கமாடா... இல்லை நம்ம ஊர்ல படம் எடுக்குறதுக்கு எடமே இல்லையா...

எடுக்குறதயாவது நல்லா எடுக்குறானுகளா பாரு... எப்பவும் தியேட்டர் காரங்களுக்கு நாம காசுகுடுத்து டிக்கெட் எடுப்போம்... ஆனா இந்த படம் முடிஞ்சி வரும் போது தியேட்டர் காரன் படம் பாக்க வந்த ஒவ்வொருத்தருக்கும் ஆஸ்பத்திரி செலவுக்கு நூறு ரூவா குடுத்து அனுப்புறாண்டா... தாண்டவம் - என்னது மகாத்மா காந்தி செத்துட்டாரா?

செந்தில் : அப்புறம் அண்ணேன்.. நா ரொம்ப நேரமா சொல்லுவீங்க சொல்லுவீங்கன்னு எதிர்பாக்குறேன் சொல்ல மாட்டேங்குறீங்களே...

கவுண்டர் : என்னது?

செந்தில்: இந்த மாற்றான் அப்புறம் நீ தானே என் பொன் வசந்தம் இதெல்லாம் லிஸ்ட்டுல வரவே இல்லையே...

கவுண்டர் : இந்த வருசம் நா செஞ்ச ஒரே நல்ல காரியம் இந்த ரெண்டு படத்தையும் பாக்காம விட்டது தான்...எப்பவும் எல்லாருக்கும் முன்னாடி போயி படம் பாத்து அடி வாங்கிட்டு வருவேன். இந்த ரெண்டு படத்துக்கும் எனக்கு முன்னாடி போனவங்க ரத்த களரியோட வெளிய வர்றத பாத்தே இந்த
படங்க எப்புடி இருக்கும்னு நா தெரிஞ்சிகிட்டேன்..

சரி உங்கொக்கா சாப்புட கூப்புடுறா.. நா பொய்ட்டு சாப்டு வர்றேன்... நீ கெளம்பு கடைய சாத்தனும்

செந்தில்
: (சந்தோசமாக) அண்ணேன் நீங்க சாப்டு வாங்கண்ணே நா கடைய பாத்துக்கறேன்...

கவுண்டர்: உன் வேலையெல்லாம் எனக்கு தெரியிங் மகனே... கடையில இப்ப மிச்சம் இருக்கதே நாலு ஸ்பேனரும் ரெண்டு திருப்புளியிங் தான்... அதயும் தூக்கிட்டு போயி வித்துரலாம்னு பாக்குற... அது நடக்காது மகனே... நீ கெளம்பு...

செந்தில் : (பாட்டு பாடிக்கிட்டே வெளிய போறாரு) மக்காயாலா மக்காயாலா காய காவுவா

கவுண்டர் : (ஒரு பெரிய கம்பிய எடுத்து செந்தில் மேல வீசி.... ஹைபிட்ச்ல) ஒக்கா மவனே இதுவே  கடைசியா இருக்கட்டும்.. இன்னொருக்கா இந்த பாட்ட பாடுன  கிரீஸ அள்ளி வாயில அப்பிருவேன்,...  படுவா...


Monday, December 10, 2012

அந்த அமேசான் காடுகள் மிகவும் ஆபத்தானவை!!! - MAN Vs WILD


Share/Bookmark
நம்ம இம்சை அரசன்ல வர்ற அக்காமாலா, கப்ஸி தயாரிக்கிற காட்சி ஞாபகம் இருக்கா? "அரைத்த புயங்கொட்டையை வெண்ணீரில் கலந்து கொதிக்க விட வேண்டும்.. பின்பு அதனுள்  ஒரு கைப்பிடியளவு மண்புழுக்களை அள்ளி போடவேண்டும்" னு சொன்னவுடனே ஒரு வேலையாள் வாந்தி எடுப்பன்.  "பின்பு அதனுள் ஒரு முயலை மூன்று நாட்கள் நீந்த விட வேண்டும். பிறகு பாம்பு கழட்டி போட்ட சட்டையில் நன்றாக வடிகட்ட வேண்டும்"னு ன்னு சொன்னதும் "நானெல்லாம் சாக்கடையிலேயே ஒரு மாமாங்கம் கூடுகட்டி வாழ்ந்தவனைய்யா"ன்னு சொன்ன வடிவேலுகூட வாந்தி எடுத்துருவாரு. அதே மாதிரிதான் இங்கயும்.இவிங்க பண்றத பாத்தா யாரா இருந்தாலும் உவ்வே தான்.

மிஞ்சி மிஞ்சி போனா நாம என்ன என்னத்த திம்போம்? கோழி , ஆடு, மீன், இராலு, நண்டு சிலபேரு மாடு, பன்னி கூட... ஆனா இவிங்க இருக்காய்ங்களே... நடக்குறது, ஓடுறது, ஓடுறது போடுறது, தாவுறது, தவழ்றதுலருந்து உயிரோட எதாவது கண்ணுக்கு தெரிஞ்சாலே புடிச்சி திண்ணுடுறாய்ங்க. ஆத்தாடி .டிஸ்கவரி Man Vs Wild la ஒருத்தன் வர்றான் பாருங்க.

இந்த ப்ரோக்ராம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால அமேசான் காட்டுல 3500 வகை பூச்சிங்க இருந்துச்சாம். ஆனா இப்ப வெறும் 350 வகைதான் இருக்காம். மத்ததுங்க எல்லாம் என்ன  ஆச்சா? இவன் எல்லாத்தையும் புடிச்சி திண்ணுட்டாங்க. வழில போயிகிட்டேஇருக்கான்... ஒரு தவளை அதுபாட்டுக்கு சிவனேன்னு ஒரு மரத்துல உக்காந்துருக்கு ... உடனே அத புடிச்சி "ஐ... இத கொஞ்ச நேரம் மென்னுகிட்டே நடக்கலாம்.. இது ரொம்ப சுவையா இருக்கும்" அப்புடின்னு உடனே வாய்க்குள்ள தூக்கி போட்டு மெல்ல ஆரம்பிச்சிடுறாய்ங்க.அவன கொஞ்ச நாளு அமேசான் காடுங்களுக்குள்ள தொடந்து நடமாட விட்டா அங்க உள்ள மிச்சம் இருக்குற பூச்சி இனங்களையெல்லாம் அடியோட திண்ணே அழிச்சிருவான்.



அன்னிக்கு நா பாத்த ஒரு எபிசோடு

நம்மாளு வழக்கம் போல "இந்த காடுகள்ல மிகவும் கவனமா இருக்கனும்... இந்த காட்டுல கொடிய விஷமுள்ள பாம்புங்க நிறைய இருக்கு... அதுங்க மனுஷங்கள அப்புடியே விழுங்கிரும். அப்டின்னு சொல்லிகிட்டே பொயிட்டுருந்தான். திடீர்னு ஒரு மரத்த பாத்து 'இந்த மரப்பட்டைங்கள கொஞ்சம் சாப்டா பாம்பு கடிச்சா விஷம் ஏறுரத தடுக்கும் ன்னு கொஞ்சம் மரப்பட்டைங்கள  வெட்டி பையில போட்டுகிட்டான்... அவ்வளவு பயந்தவனாடா நீயி...

 கொஞ்ச தூரம் போயிட்டே இருந்துட்டு திடீர்னு "பாருங்க... பாருங்க இங்க பாருங்க" ன்னு கத்துனான். உண்மையிலயே ஒரு ஆறடி நீள பாம்பு ஆந்த்ரா மெஸ் அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்டா மாதிரி உப்பலான வயிரோட அந்த இடத்த விட்டு நகராம படுத்துருந்துச்சி.. சரி இவந்தான் பாம்ப கண்டா பயப்புடுவானே ஓடிருவான்னு பாத்தா மெதுவா அந்த பாம்புக்கு பின்னாடி போய் அது கழுத்த புடிச்சி தூக்கிட்டான்...

ஏன் இந்த குருட்டு நாயி ஓடாம இப்புடி பண்றான்னு பாத்தா... பையிலருந்து ஒரு கத்திய எடுத்து அந்த பாம்பு தலைய தனியா வெட்டி போட்டுட்டு அடுத்த அஞ்சி நிமிஷத்துல அந்த பாம்போட கொடல தனியா உருவி வெளிய எடுத்துட்டு "பாம்போட வெய்ட்டுல மூணுல ரெண்டு பகுதி அதோட குடல் தான்... அதுனால குடல தனியா எடுத்துட்டா இத தூக்கிட்டு போக மிக ஈசியா இருக்கும்" அப்புடின்னு சொல்லிட்ட்டு அந்த பாம்ப அப்புடியே தோள்ல போட்டுகிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டான். ஏண்டா டேய் பாம்புககிட்டருந்து நீ தப்பிக்க மரத்து வேரெல்லாம் எடுத்து வச்சிருக்க உன்கிட்டருந்து தப்பிக்க அதுங்க எதடா எடுத்து வச்சிருக்கனும்? கொஞ்ச நேரத்துல அத நெருப்புல போட்டு சுட்டு "ஹ்ம்ம்ம்.... இன்னிக்கு நைட் டின்னர் ரொம்ப டேஸ்ட்டா இருக்கு... " ன்னு சாப்புட்டுகிட்டு இருக்குறான். 



அப்புறம் போயிட்டே இருந்தான்.. ஒரு பட்டுப்போன மரம் இருந்துச்சி.... அத ரெண்டா கையால ஒடைச்சிட்டு உள்ள பாத்தான்... பாத்துட்டு ஒரு ரியாக்சன் குடுத்தான் பாருங்க.. "ஹையோ நா இத கொஞ்சம் கூட எதிர்பாக்கல... நா ரொம்ப அதிர்ஷ்டக்காரன்" என்னடா இது இந்த நாய்க்கு மரத்துக்குள்ளருந்து பொதையல் எதுவும் கெடைச்சிருச்சோன்னு பாத்தா, உள்ள வெள்ளைக்கலர்ல சின்ன சின்ன புழுவா இருக்கு.

உடனே அதுல ரெண்ட கையில புடிச்சி "இந்த புழுக்கல்ல புரத சத்து மிகவும் அதிக அளவுல காணப்படுது.. அதுனால இதுங்கள கொஞ்சம் திண்ணா எனக்கு அதிக அளவுள சக்தி கிடைச்சி நா ரொம்ப தூரம் நடக்கலாம்" ன்னு சொல்லிட்டு அத வாயில போட்டு கருமுருன்னு மெண்ணு திண்ணுட்டான்... (உங்களூக்கு வாந்தி வர்ற மாதிரி இருக்குள்ள... எனக்கும் அதே ஃபீலிங் தான்) அதோட  மட்டும் இல்லாம "இந்த புழுக்கல நா கொஞ்சம் சேகரிச்சி வச்சிக்குறேன்... வழில நொறுக்கு தீனிமாதிரி இத உபயோகிச்சிகிட்டா நல்லா இருக்கும்"ன்னு சொல்லி ஒரு சின்ன சுருக்குபைபுல  மிச்சம் இருக்கதையும் அள்ளி போட்டுகிட்டு கெளம்பிட்டான். என்ன வாயிடா அது என்ன வாயி?

அப்புறம் இதெல்லாம் முடிச்சிட்டு ஒரு குகைக்கு போணான்... " இங்க உள்ள போயி பாத்தா என்னோட நைட் சாப்பாட்டுக்கு எதாவது கிடைக்கும்முனு நினைக்கிறேன்"னு உள்ள போயி தீ பந்தந்த வச்சிகிட்டு தேடுனான்... ஒரு ப்ரம்மாண்டமான பெருச்சாளி... "இது மட்டும் புடிச்சிட்டா எனக்கு இன்னும் ரெண்டு வேளைக்கு சாப்பாட்டு ப்ரச்சனையே இல்ல" அப்புடின்னு சொல்லிகிட்டெ அத தொறத்த அது டக்குன்னு ஒரு பொந்துக்குள்ள ஓடிருச்சி..
அதுக்கு ஆயுசு கெட்டி போல..  அப்புறம் அந்த குகையையே சுத்தி பாத்த அவன்
"இங்க பாருங்களேன்... என்னால இத நம்பவே முடியலன்னு" ஒரு ஜெர்க்க குடுத்தான்.. அய்யய்ய திரும்ப எதோ புழுங்கள பாத்துட்டான் போலருக்குடான்னு நெனச்சா இந்த தடவ  புழு இல்ல... பூச்சி.. சிலந்தி பூச்சி... ஒரு பெரிய சிலந்தி பூச்சி ஒண்ணு வலையில நின்னுச்சி..

"இங்க பாருங்களேன்.. இவ்வளவு பெரிய சிலந்தி பூச்சிய நா பாத்ததே இல்லை... நா தேள் சாப்புட்ட்டுருக்கேன்.. நட்டுவாக்கிளி சாப்டுருக்கேன்... ஆனா இவ்வளவு பெரிய சிலந்திய சாப்டதே இல்லை.. அதோட உடம்ப பாருங்களேன்... தேள் மாதிரியே இருக்கு  இது எதோ hybrid வகைய சேந்ததுன்னு நெனைக்கிறேன்" (ஏன்டா இல்லைன்னா மட்டும்
அத திங்காமயா விடப்போற... திண்ணு தொலை) அந்த சிலந்தி பூச்சிய கையில எடுத்து  மிஸ்டர் பீன் இரால சாப்புடுற மாதிரியே அந்த பூச்சிய கடிச்சிட்டு ஒண்ணு சொன்னான் பாருங்க... "நா அந்த சிலந்தியோட பின் பகுதிய கடிச்சிட்டேன்னு நெனைக்கிறேன்". ஏண்டா 6 அடி நீள பாம்பையா தூக்கிப்போட்டு தூர் வாருற.. இதுல சிலந்திய நீ முன்னால கடிச்ச என்ன பின்னால கடிச்சா என்ன?


இந்தாளுக்கு காட்டுல இருக்கதுங்கள எப்புயெல்லாம் கொல்லலாம்னுதான் ஸ்பெசல் ட்ரெயினிங் குடுத்துருப்பாய்ங்க போல. ஒரு நாள் போயிட்டே இருந்தான். திடீர்னு நின்னான்... "இங்க எங்கயோ கோழிங்க கத்துற சத்தம் கேக்குது.  அதுனால நா இங்கயே கொஞ்ச நேரம் தங்கி இருந்து அதுங்கள வேட்டையாட போறேன்னு படக்குன்னு நாலு குச்சிங்கள வெட்டுனான், ரெண்டுமூனு கெளைங்கள அப்புடியே ஒடிச்சான் ஒரு ஒருமணி நேரத்துல
கடையவே போட்டுட்டான். கிட்டத்தட்ட ஒரு ஆளு தூங்குற மாதிரி ஒரு சின்ன வீட்டையே கட்டிபுட்டான்.  "சரி இப்ப வேட்டையாடனும்... ஆனா அதுக்கு எனக்கு இப்போ அம்புங்க வேணும்" நேரான ஒரு குச்சியை ஒடைச்சான்..

அங்கன்னு பாத்து எவனோ பல வருசத்த்துக்கு முன்னாடி குடிச்சிட்டு போட்ட ஒரு பாதி  பீர் பாட்டில் கெடக்கு. அதோட அடிப்பகுதியே அப்புடியே கொஞ்ச கொஞ்சமா ஒடச்சி கூரா ஆக்கி அந்த குச்சிக்கு மொனையில வச்சி கட்டிட்டான்... அம்பு ரெடி... அடப்பாவி பல வித்தைகள கையில வச்சிருக்கான்யா. சும்மாவே ஜங்கு ஜங்குன்னு ஆடுவான்... இதுல சலங்கைய வேற கட்டியாச்சின்னா குஷிதான்... வெறும் கையையும் வாயையும் வச்சே பல ப்ராணிகளை கடிச்சி திண்ணவனுக்கு அம்பு கெடைச்தும் சும்மா இருப்பானா.. பத்தே நிமிசம் தான்.. 3 அடிக்கு ஒரு வான் கோழிமாதிரி எதையோ தூக்கிட்டு வந்துட்டான். அப்புறம் என்ன உக்காந்து மேய வேண்டியதுதான். நெருப்ப கொழுத்தி போட்டு, பாதி கோழிய சுட்டு திண்ணுட்டு பாதிய எடுத்து பைக்குள்ள வச்சிகிட்டான்.

அப்புறம் படுக்கும் போது சொல்றான். "நா இந்த நெருப்ப அணைக்க மாட்டேன்.. இது தான் என்ன காட்டு  விலங்குகள்கிட்டருந்து பாதுகாக்க உதவும்"

டேய் அதுங்க ஏண்டா உன்ன தேடி  வரப்போவுது...உன்னத்தேடி ஒரு காட்டு விலங்கு வருதுண்ணா அதுக்கு  விதி முடிஞ்சி போச்சின்னு  அர்த்தம்டா!!

Wednesday, December 5, 2012

நடுவுல கொஞ்சம் "எதையோ" காணும்!!!


Share/Bookmark
தலைப்ப பாத்ததும் "ஹையய்யோ இவனும் அது மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டானேன்னு அசிங்கமா திட்ட ஆரம்பிச்சிருப்பீங்களே.. சரி விடுங்க... இங்க என்ன என்னத்த காணும்னு பாப்போம்













 



Monday, December 3, 2012

DAMARUKAM - அரைச்ச மாவ அரைப்போமா!!!


Share/Bookmark
அடுத்த மாசம் வருதுங்க... என்ன வரலியா? அப்ப தீவாளிக்கு வரும்.. என்னது தீவாளிக்கும் வரலியா? அப்ப கண்டிப்பா அடுத்த வாரம் வந்துரும்.  அட இப்பவும் வரலியா? அட என்னங்க  போங்க... இப்புடி பல ரிலீஸ் தேதிகளை குடுத்து பல ப்ரச்சனைங்களால தள்ளிப்போன தமருகம்  கடைசியா ரிலீஸ் ஆயிருச்சிப்பா.. ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னால வேலை விஷயமா ஹைதராபாத் போயிருந்தப்ப எல்லா channel லயும் ஒரே தமுருகம் விளம்பரம் தான்.. இன்னும் சொல்லப்போனா  ஒரு சேனல்ல தமருகம் ரிலீஸுக்கு மூணு நாளுக்கு முன்னாடி கவுண்டவுன் எல்லாம் ஓடிட்டு   இருந்துச்சி. அன்னிக்கு தமருகம் ரிலீஸ் தேதி... காலைல கம்பெனி போற வழில ஒரு தியேட்டர்ல அந்த பட போஸ்டர் போட்டுருந்தாய்ங்க.. சரி என்ன ஆனாலும் சரி ராத்திரி அடிச்சி புடிச்சி  டிக்கெட் வாங்கி பாத்துட வேண்டியதுதான்னு நெனச்சிட்டு போனேன்.. சாய்ங்கலாம் திரும்பி வரும்போது பாத்தா அதுல வேற எதோ ஒரு இங்கிலீஷ் படம் போஸ்டர் போட்டுருந்தாய்ங்க..

"அட பாவிகளா... எங்க ஊர்ல படம் மொக்கையானா ஒரு ரெண்டு நாள் கழிச்சி தானடா தியேட்டர்லருந்து  தூக்குவோம்.. இவிங்க என்னனா ரெண்டே ஷோவுல தூக்கிட்டாய்ங்களே... அவளவு கோவக்காரய்ங்களாய்யா நீங்க?" ன்னு நெனைச்சிட்டு போனேன்.. அப்புறம் தான் தெரிஞ்சிது அன்னிக்கு ரிலீஸ் ஆக வேண்டிய  படம் ரிலீஸ் ஆகலன்னு. சரி படத்துக்கு வருவோம்...

அட நம்மூர் சினிமாவுல இந்த பஞ்ச பூதங்களை அடக்க நினைக்கிற அரக்கர்கள் எப்பதான்  ஒழியுவாய்ங்கன்னே தெரியலப்பா... அந்த ஏழு கிரகங்களும் ஒண்ணு சேர்ர நாள் அன்னிக்கு  இந்த நட்சத்துரத்துல பொறந்த ஒரு பொண்ண பலி கொடுத்தா பஞ்ச பூதங்களும் உன் கட்டுப்படுத்தலாம். இதுதான் விட்டலாச்சாரியா காலத்து வில்லன்கள்லருந்து இப்பவரைக்கும் நம்மூர் படங்கள்ல  அரக்கன்கள் செய்யிற வேலை... பசிச்சா ஒரு பண்ண வாங்கி திண்ணூங்க... காசு இருந்தா ரெண்டு வடைய  வாங்கி திண்ணுங்க .அப்புடி அந்த பூதங்களையெல்லாம் கட்டுப்படுத்தி என்னடா பண்ணப்போறீங்க

இங்கயும் அதே கதைதான்... அசுர குலத்துல ஒக்கே ஒக்க அசுரன் மட்டும் தான் மிச்சம் இருக்கான். அவன் ஒரு புள்ளைய பலி கொடுத்தா 5 பூதங்களும் அவரு கண்ட்ரோல்ல வந்துரும்.. அந்த  அசுரன் வேற யாரும் இல்ல... நம்ம வேட்டைகாரன்ல "வா.....டாஆஆஆஆ"ன்னு ஒருத்தர்  வந்து ஹைபிட்ச்ல கத்துவாரே அவரேதான். எல்லாருக்கும் மண்டை மேல முடி மொளச்சிருக்கும் ஆனா இவருக்கு பாம்பு முளச்சிருக்கு.. தலை நிறையா கசகசன்னு ஒரே பாம்புங்க... இந்த பாம்புகள  கிராஃபிக்ஸ் பண்ணதான் இவிங்களுக்கு நேரம் ஆயிருச்சி போல...

யாரோ ஒரு புள்ளைய பலி கொடுக்கனும்னு சொன்னோமே...ஆங் அது வேற யாரும் இல்ல... நம்ம  அனுஷ்காதான்.. இந்த படத்துல அனுஷ்கா performance காமிக்கிற மாதிரி எந்த காட்சியும் இல்ல. மற்ற சாதா ஹீரோயின் மாதிரி சும்மா வந்துட்டு போறாங்க. சிறப்பா சொல்றமாதிரி எதுவும் இல்லை.

ப்ரகாஷ்ராஜ்... அய்யோ கடவுள்... இவருக்கு செட் ஆகாத வேஷமே இல்ல போல எதுவா இருந்தாலும்  பிண்ணி பெடல் எடுக்குறாரு... இந்த படத்துல சிவபெருமானா வர்றாரு. இவருக்கும் performance காமிக்கிற மாதிரி சீன் எதுவும் இல்லைன்னாலும் அவரு வேலைய கரெக்டா பண்ணிருக்காரு. நம்ம அறை எண் 302ல் கடவுள்ல வர்ற மாதிரியே , கடவுள்னு சொல்லாம ஹீரோ கூட இருந்து அவருக்கு உதவி பண்ணிட்டு இருக்காரு. அப்புறம் ப்ரம்மானந்தம் வரவர படு மொக்கையாயிட்டே வர்றாரு.. காமெடியெல்லாம் ஒண்ணும் வேலைக்கு ஆகல..


சரிக் கமப் பத நீசே... கபக் கபக் கப, கபக் கபக் கப ஜல்சே... இது.தல DSP யோட 50 வது படம். 3 பாட்டு ஓக்கே.. நம்ம சார்மி வந்து ஆடுற "கும்மாங் கும்மாங் சாய்" பாட்டு செம... ட்ரெயிலர்ல  அந்த பாட்ட பாத்துட்டு அதுக்காக படத்துக்கு போறவாங்க ஏராளம். அப்றம் தல ஷங்கர் மகாதேவன் பாடுன க்ளைமாக்ஸ் பாட்டும் சூப்பர். க்ளைமாக்ஸ் பாட்டுனோன வழக்கம்போல குத்துப்பாட்டுன்னு நெனைப்பீங்களே... அதான் இல்லை... இது அகோரிங்க டான்ஸ் ஆடுற பாட்டு... கடைசி வரைக்கும் "Hello everybody....This is DSPeeeeeeeeeeeeeeee" அப்புடின்னு எதாது பாட்டு வந்துருமோன்னு பயந்துட்டே இருந்தேன்.. நல்ல வேளை வரல...

அப்புறம் யாரோ ஒருத்தர விட்டுட்டோமே.. ஆங்... நம்ம நாகர்ஜூனா கூட இந்த
படத்துல நடிச்சிருக்காருப்பா... என்னது ஹீரோவா? ச்ச ச்ச ... அதெல்லாம் இல்லை... அனுஷ்காவ காப்பாத்துற கெஸ்ட் ரோல்ல நடிச்சிருக்காரு... படம் ஆரம்பிச்சி 25 நிமிஷம் கழிச்சி தான் நாகர்ஜூனாவே வர்றாரு... படத்துல இவரு வர்ற காட்சிகள விட மத்தவங்க வர்ற காட்சிகள் தான் அதிகம்.. ஆரம்பத்துல பயங்கர சிவ பக்தனா இருந்துட்டு அப்புறம் குடும்பத்த இழந்தபிறது சிவன்கற பேரகேட்டாலே வெறுக்குற மாதிரியான கேரக்டர் இவருக்கு. ஆனா அத வச்சிகிட்டே பல காட்சிகள்ல மொக்கைய போடுறது செம கடுப்பு.  ஆளு ஆனா செமயா இருக்காரு...  க்ளைமாக்ஸ் பாட்டுல சிக்ஸ் பேக்கோட வர்றப்ப கெத்தா இருக்காரு... ஆனா நம்மாளுக்கு டான்ஸ் சுத்தமா வராது போல.. பாட்டெல்லாம் செம காமெடி.... அப்புறம் க்ளைமாக்ஸ்ல ல ஒரு கிராஃபிக்ஸ் மிருகதோட சண்ட போடுறாரு... பாக்க எதோ கார்ட்டூன் படம் பாத்த ஃபீலிங்கு.. அதோட மிரட்டல் அடி 2 க்ளைமாக்ஸ்ல ஹீரோ மேகத்துக்கு உள்ள போனதும் புத்தர் தெரிவாரு. அத பாத்துட்டு வந்து வில்லன கொல்லுவாரு. அத அப்புடியே இங்க ஆட்டைய போட்டு, க்ளைமாக்ஸ் சீனா வச்சிருக்காய்ங்க. இங்க புத்தருக்கு பதிலா சிவன்.

கிராஃபிக்ஸ்க்கு ரொம்ப உழைச்சிருக்காங்க.. நிறைய காட்சிகள் நல்லா இருந்தாலும் ஒரு சில காட்சிகள் இது தெலுகு பட கிராஃபிக்ஸ்ங்கறத அப்பட்டமா காட்டிக் குடுக்குற அளவு கப்பியா இருக்கு. மத்தபடி பெருசா சொல்லும் படியா எதுவும் இல்லை. வீண் பில்ட் அப் குடுத்தது மட்டும் தான் மிச்சம்.  சுருக்கமா சொல்லப்போனா "அரைச்ச மாவ அரைப்போமா துவைச்ச துணிய துவைப்போமா" தான்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...