Friday, April 13, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - ராஜேஷின் "அழகான நாட்கள்"


Share/Bookmark
வழக்கமா டைரக்டருங்க கதைய எழுதிட்டு ஹீரோவ தேடுவாங்க... இன்னும் சில பெரிய ஹீரோக்களுக்கு ஹீரோவுக்காக கதை எழுதுவாங்க.. ஆனா ஒரு காமெடியனுக்காக கதை (?) எழுதப்பட்டு வெளிவந்துருக்க படம் தான் இந்த ஒரு கல் ஒரு கண்ணாடி. பாஸ் என்கிற பாஸ்கரனோட மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு, முழுக்க முழுக்க  சந்தானத்தோட ஒன்லைன் பஞ்ச்சுகள நம்பி மட்டுமே எடுக்கப்பட்ட படம். 
பாஸ் என்கிற பாஸ்கரன்ல கதைக்கு தேவையான மாதிரி சந்தானத்தோட காமெடி  இருந்துச்சி.. ஆனா இங்க சந்தானத்துக்கு ஏத்த மாதிரி கதையை சுத்தி சுத்தி வளைச்சி நெளிச்சி என்னென்னமோ பண்ணிருக்காய்ங்க... ராஜேஷோட போன இரண்டு படங்கள போலவே லவ், லவ் ஃபெயிலியர், ஒயின் ஷாப், மச்சான் மச்சான்னு கூட திரியிற சந்தானம்... ஒரு சீனுக்கு கெஸ்ட் அப்பிரண்ஸ் குடுக்குற "B" கிரேடு ஹீரோக்கள்னு சுட்ட தோசையையே திரும்ப திரும்ப சுட்டுகிட்டு இருக்காங்க.. இதுனாலயோ என்னவோ தெரியல படம் பாத்து முடிச்சப்புறம் ஒரு படம் பாத்த ஃபீலிங் இல்லாம பல பிட்டு காமெடிங்கள சேத்து பாத்த ஒரு எஃபெக்ட் தான் இருக்கு. அதுவும் கடைசி அரை மணி நேரம் என்ன பண்றதுன்னு தெரியாம கண்ட மேனிக்கு மொக்கைய
போட்டு சாவடிச்சிடுறாய்ங்க.

ஆனா சந்தானம் எந்த விதத்துலயும் நம்மள ஏமாத்தல... நிறைய இடங்கள்ல
தியேட்டர அதிர வச்சிருக்காரு.. ஆனா தியேட்டர்ல இருந்தவங்க, படத்துல நிறைய இடத்துல நல்ல நல்ல காமெடிங்க இருந்தும் ட்ரெயிலர்ல போடுற மொக்க டயலாக்குங்க வர்றப்பதான் சவுண்டு அதிகமா குடுத்தது கொஞ்சம் வருத்தமா இருந்துச்சி... உதாரணமா ஒரு சீன்ல வேதம் புதிது படத்துல வர்ற பாலுத்தேவர் சீன கலாய்ப்பாங்க.. ஆனா அதுக்கு தியேட்டர்ல ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல.. ஒரு வேளை எத காலாய்க்கிறாங்கன்னு சரியா டிரைக்டர் புரிய வைக்கலையோ என்னவோ..

அப்புறம்இந்த படத்துல சந்தானம் மஞ்ச கலரு பேண்டு, பச்சை கலரு பேண்டுன்னு டூயட்டுல வர்ற எம்.ஜி.ஆர் மாதிரியே படம் புல்லா வர்றாரு.. அதோட மயிலாப்பூர்ல இருக்கேன்ன்னு சொல்லிகிட்டு வித்யாசமான ஒரு ஸ்லாங்ல பேச ட்ரை பண்றாரு.. ஏண்டா இப்புடி மொக்கத்தனமா பண்ணிகிட்டு இருக்காய்ங்கன்னு நெனைச்சிட்டு இருந்தேன் அப்புறம் தான் கண்டுபுடிச்சேன் ஏன் இப்புடி பண்றாய்ங்கண்ணு.. கேரக்டர்ல differentiation காமிக்கிறாங்களாமா.

அப்புறம் ஹன்சிகா... யப்பா... என்னா அழகு.... ஆல் யங் கேர்ள்ஸ்...அந்த சிரிப்புக்கு முன்னாடி நா செதைஞ்சி பொயிட்டேன்... இதுவரைக்கும் ஹன்சிகாவ புடிக்காம இருந்தா கூட இந்த படம் பாத்தா புடிக்கும்.... ஃபேஸ் ரியாக் ஷன்ஸ் எல்லாமே சூப்பர்.முடிஞ்ச வரைக்கும் நல்லா நடிக்க பாத்துருக்காங்க. ஆனா உதய நிதி, ஹன்சிகா ஜோடி அவ்வளவு பொருத்தமா இல்லை.

உதயநிதி ஸ்டாலின்.. ஹீரோவா நடிக்க எல்லா தகுதிங்களும் இருக்கு.. ஆனா இந்த படத்துல பெரிய நடிப்ப வெளிப்படுத்துற மாதிரி சீன்ஸ் எதுவும் இல்லை.. பெரிய டயலாக் பேசற சீனும் இல்லை... காமெடி பண்ண ட்ரை பண்ணிருக்காரு... சிரிப்பு அவ்வளவா வரலன்னாலும் கடுப்பு வரல... இவரு தைரியமா ஆக் ஷன் படங்கள்ல நடிக்கலாம்..கண்டிப்பா எடுபடும்...

ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கம் போலவே அவர்கிட்ட இருக்க அந்த அஞ்சி ட்யூன வச்சி மேனேஜ் பண்ணிருக்காரு.. வழக்கம் போல BGM மட்டை... காலைல டிவில ராஜேஷூம் உதயநிதியும் இந்த படத்துக்கு ஹாரிஸ் தான் பெரிய ப்ளஸ்ன்னு அளந்து விட்டுகிட்டு  இருந்தாங்க.. ஆனா பாக்கப்போனா படத்துக்கு பெரிய மைனஸே ஹாரிஸ் ஜெயராஜ் தான்... செகண்ட் ஹாஃப்ல மின்சார கனவுல பாட்டுல வர்றா ஒரு பீஸ் மியூசிக்க அப்புடியே போட்டுருக்காரு..  இந்த படத்துக்கெல்லாம் யுவன் தான் கரெக்ட்.

கதைக்காக ரொம்ப ஒண்ணும் பெருசா மெனக்கெடாம எதோ சீன் சீனா எழுதி
ஒப்பேத்திருக்காங்க. அதுனாலயோ என்னவோ படம் ஒரு அஞ்சி பேர மட்டுமே சுத்தி நகருது.. அழகம் பெருமாள்ங்கற ஒரு நல்ல நடிகர இந்த படத்துல வேஸ்ட் பண்ணிட்டாங்கன்னு தான் சொல்லனும். அதே போல தான் சாயாஜி ஷின்டேவும். சரண்யா வழக்கம் போல.. நடிப்புல பிண்ணிருக்காங்க.

அப்புறம் டைரக்டர் ராஜேஷ்.. மக்களை சிரிக்க வைக்கனும்ங்கற நோக்கத்துல படம்  எடுத்துகிட்டு இருக்காரு.. ரொம்ப நல்ல விஷயம்.. ஆனா ஒருத்தர நம்பியே படம் எடுக்கக்கூடாது.. அதே மாதிரி ஒரே படத்தையே திரும்ப திரும்ப எடுக்கவும் கூடாது. படங்களின் கதைக்களங்கள்ல variation காட்டாம இப்புடியே படம் எடுத்துக்கிட்டு இருந்தா கூடிய சீக்கிரம் தோல்வி இவர வந்து சந்திக்கும். ஆனா இந்த தடவ எஸ்கேப் ஆயிட்டாருன்னு தான் சொல்லனும். பாடல் காட்சிகள் படமாக்கிய விதம் எதுவுமே சரியில்ல.. அந்த "பட்டுக்கோ பட்டுக்கோ" பாட்டு சம்பந்தமே இல்லாம எதோ எடுத்து வச்சிருக்காய்ங்க.. அதோட 1st half la வர்ற மூணு பாட்டுமே ஒரே மாதிரி இருக்கு.

சரி சுருக்கமா படத்த பத்தி சொல்லனும்னா  சுந்தர்.சி யோட உள்ளத்தை அள்ளித்தா படத்துக்கும் அழகான நாட்கள் படத்துக்கும் என்ன வித்யாசமோ அதே வித்யாசம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்கும் இந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கும்.

எப்புடி இருந்தாலும் நம்பி போறவங்கள ஏமாற்றாத ஒரு படம்



Monday, April 9, 2012

அஸ்த்தமனம் - வக்காளி டேய்!!!!!!!


Share/Bookmark
குறிப்பு: விமர்சனங்கள்ல கதைய சொல்றது எனக்கு பிடிக்காது.. இருந்தாலும் இந்த படத்துக்கு கதைய சொன்னாலும் சொல்லலன்னாலும் யாரும் பாக்க மாட்டீங்கங்குறதால கதைய பத்தி ஒரு ரெண்டு லைன் போட்டுருக்கேன்..

"இப்புடி ஒரு படம் வந்துருக்கா"ன்னு தான் பல பேர் கேப்பீங்க. இந்த படம்
எந்த தியேட்டர்ல ஓடுதுண்ணு கண்டுபுடிக்கவே ரொம்ப கஷ்டமா போச்சு.. சரி இந்த  படத்தோட விமர்சனத்தை பார்க்க வேண்டுமானால் நாம் சில வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூறுவது அவசியமாகிறது. (ச்சும்மா தசாவதாரம் ஸ்டைல்ல..ஹிஹி)


2006 ல "யுகா"ன்னு யார் கண்ணன் டிரைக்ட் பண்ண படம் ஒண்ணு ரிலீஸ் ஆச்சு. "யார்" ரொம்ப நல்ல திகில்படமாச்சே.. இந்த படமும் அந்த அளவுக்கு இருக்குமேன்னு  படத்துக்கு கிளம்புனேன். படத்து பேர கேட்டதுமே ஒருத்தனும் கூட வரல.  அப்புறம் மாப்ள ஞானசுந்தர் கிட்ட "மாப்ள யார் கண்ணன்" எடுத்த படம்டா சூப்பரா இருக்கும் வா" ன்னு கூப்புட்டதும் நம்பி அவனும் வந்தான். படம் பாத்து முடிச்சப்புறம் அவன் என்னப்பாத்து கேட்டான் பாருங்க.. "மாப்ள டேய் "யார்"கண்ணன் "யார்" கண்ணன் ன்னு சொல்லி கூப்டு வந்தியேடா.. கடைசில யார்ரா அவன் கண்ணன்.. அவன் மட்டும் கைல கெடைச்சான்னா தூக்கி போட்டு மிதிச்சிருவேன்" னான். அந்த அளவுக்கு
இருந்துச்சி அந்த படம்.

அதயெல்லாம் அடிச்சி தூக்கிருச்சி இந்த படம்.. தேவி காம்ளக்ஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு' உள்ள போனா, மொத்தமே நாங்க மூணு பேர் தான் இருந்தோம். அந்த செக்யூரிட்டி அண்ணன்கிட்ட லைட்டா பேச்சு குடுத்துகிட்டு இருந்தேன்..

"அண்ணேன்... ஷோ எதும் கேன்சல் பண்ணிர மாட்டாங்களே"

"அதெல்லாம் பண்ண மாட்டாங்கப்பா" ன்னாரு

"நீங்க தொணைக்கு உள்ள வருவீங்களாண்ணே" ன்னேன்

"இல்லப்பா எங்களுக்கு உள்ள வர allowed இல்லன்னு சிரிச்சிகிட்டே சொன்னாரு"

படம் ஆரம்பிக்கும் போது சத்தியமா தியேட்டர்ல மொத்தமே 8 பேருதான் இருந்தோம்.எனக்கு ரொம்ப வருத்தமா போச்சு.. சரி படம் நல்லாருந்துச்சின்னா நாம ரிவிய்யூ எழுதி ஒரு 10 பேரயாவது பாக்க வைக்கனும்னு நெனைச்சேன்.. ஆனா படம் பாத்தப்புறம் தான் தெரிஞ்சிது அந்த படத்துக்கு அந்த 8 பேரே அதிகம்னு. படம் முடியும் போது கிட்ட தட்ட ஒரு 30 பேரு என்ன மாதிரியே பணத்த வேஸ்ட் பண்ணிட்டாங்கனு தெரிஞ்சிது.

சினிமாங்குறதுக்கு ஒரு மரியாதை இருக்கு.. அத கொஞ்சம் கூட குடுக்காத படம் இது. எதவேணும்னா சும்மா எடுக்கலாம்.. எல்லாரும் பாப்பாய்ங்குற நெனப்புல எடுத்த படம்  இது. ஒண்ணரை மணி நேர படம்.. ஆனா இத எந்த விதத்துலயும் படத்தோட ப்ளஸ்ன்னு சொல்ல முடியாது. இங்லீஷ்காரன் ஒண்ணரை மணி நேரம் படம் எடுக்குறான்னா, அவன்  படத்தோட மொத சீனே கதையில ஆரம்பிப்பான்..நாம படம் ஆரம்பிச்சா கதைக்குள்ள  போகவே அரைமணி நேரம் ஆகும்.நமக்கு ஏன் இந்த வேலை...

"Based on a true Night mare" "பாண்டி சரோஜ் குமார் thrill" ன்னு பில்ட் அப்புக்கு
மட்டும் ஒண்ணும் கொறைச்சலே இல்ல. ஒரு அஞ்சி பேரு (வழக்கம் போல
மூணு பசங்க, ரெண்டு பொண்ணுங்க) ட்ரெக்கிங்குற பேர்ல ஒரு காட்டுக்கு போறாய்ங்க. ஒரு நைட் தங்குனப்புறம் காலைல அவங்கள கூட்டிட்டு போன guide ah யாரோ  கொலை பண்ணி போட்டுருக்காங்க.. உடனே எல்லாரும் பயந்துடுராங்க.. இந்த build up ah அப்புடியே மெயின்டெய்ன் பண்ணி,  யாரு கொலை பண்ணாங்குறத சஸ்பென்ஸா வச்சி கொண்டு போயிருந்தா "த்ரில்" ங்கற வார்த்தைக்கு ஒரு மரியாத இருந்துருக்கும்.  ஆனா அது நடக்கல.. அடுத்த சீனே சில காட்டு வாசிங்கள காமிச்சி, அவங்க மத்தவங்கள
பிடிக்கிறதோட இன்ட்டர்வல்னு போட்டாய்ங்க பாருங்க..( நாற்பது நிமிஷத்துல) "நாம சம்பாதிச்ச காசெல்லாம் இப்புடி வீணா போகுதேன்னு" அப்பதான் நான் ரொம்ப வருத்தப்பட்டேன்..

அப்புறம் புடிச்சவிங்கள்ள ரெண்டு பேர காட்டுவாசிங்க கொல்ல, மீதம் இருக்குற ஒரு பையனும் (ஹீரோ மாதிரி) ரெண்டு பொண்ணுங்களும் அந்த காட்டு வாசிங்கள மடார் மடார்னு கட்டையால அடிச்சி போட்டுட்டு தப்பிச்சி வந்துடுறாங்க...

அவ்ளோ தான் படம் முடிஞ்சிருச்சிங்க...

ஹீரோ மாதிரி காமிக்கப்பட்டிருக்கவர் பேரு தெரில... ஆனா அவரு ஸ்டாலின் படத்துல மொத ஃபைட்டுல சிரஞ்சீவிகிட்ட அடி வாங்குற ரவுடி.. அது மட்டும் தெரியும்.. இந்த ஸ்கிரிப்ட வச்சிகிட்டு இவரு எப்புடி இவளோ தைரியமா படம் எடுத்தாருன்னு எனக்கு இன்னும் யோசனையாவே இருக்கு.. அதோட இத எப்புடி இவ்ளோ தைரியமா ரிலீஸ் பண்ணாய்ங்கன்னும் தெரியல...


யாருக்கு யாரோ ஸ்டெப்னி படத்துல கூட ஒரு நேர்மை இருந்துச்சிங்க.. அவிங்க கதைன்னு ஓண்ண ரெடி பண்ணி நல்லா எடுக்க தெரியலன்னாலும் எதோ எடுத்து எல்லாரயும் சிரிக்க வச்சிருந்தாய்ங்க.. ஆனா இவிங்க வித்யாசமா பண்றதா நெனச்சிகிட்டு கடுப்ப ஏத்திருக்காய்ங்க. வக்காளி அந்த கேமரா மேனுக்கு யாரோ தப்பா சொல்லி குடுத்துருக்காய்ங்கய்யா..  எனக்கு ரொம்ப எரிச்சல குடுத்தது கேமராதான்.. கேமராவ எதாவது ஒரு இலையயோ, மரத்தோட கிளையையோ ஃபோகஸ் பண்ணி வச்சிருவாய்ங்க... பின்னாடி ஐஞ்சி பேரோட காலு மட்டும் நடக்குறது தெரியும்.. இதுல இன்னொரு கடுப்பு என்னனா அந்த அஞ்சி பேரு நடந்து போன அப்புறமும் கேமரா அதே ஆங்கிள்ல இருந்துகிட்டே இருக்கும். எல்லா சீனுமே அப்டித்தான்.. இதயெல்லாம் எடிட்டிங்க்ல தூக்கிருந்தாய்ங்கன்னா இத direct ah you tube la ஷார்ட் பிலிமா ரிலீஸ் பண்ணிருக்கலாம். பேசாம எங்க ஜாக்கி அண்ணனை
கேமரா மேனா போட்டுருந்தா பட்டைய கெளப்பிருப்பாரு..

படத்துல ஒரே ஒரு நல்ல விஷயம், சில டைமிங் காமெடிங்க உண்மையிலயே மனசு விட்டு சிரிக்க வச்சிச்சி..

இந்த படம் நல்லாருக்குன்னு சொன்னா கூட யாரும் பாக்க மாட்டீங்க.. நல்ல வேளை அந்த மாதிரி சம்பவங்கள் நடக்க வாய்ப்பே இல்ல..



Saturday, April 7, 2012

ரஜினி படங்கள் படும் பாடு !!!!!!!


Share/Bookmark


நம்ம வீட்டு மாப்பிள்ளையா இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்


தல.. நமக்கு இதெல்லாம் வேணாம்... நீங்க டைரக்ட் பண்ணுங்க


இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலயே


டேய் ஆந்தை மாதிரி முழிய வச்சிகிட்டு கழுகுன்னு பேரப்பாரு

இந்த "தீ" படத்தையும் முதல் நாள் ரிசர்வ் பண்ணி பாத்த சில பேர்ல நானும் ஒருத்தன்

யாருடா நீ.. எங்கருந்துடா கெளம்புறீங்க?

மிஸ்டர் முனி... தயவு செஞ்சி நிறுத்துங்க


இது ஒரு நல்ல படம்ங்கறதால மன்னிச்சிடலாம்


 முடியல

"வாழ்விழந்த வாலிபருக்கு வாழ்கை தந்த  வள்ளலே"  ன்னு நீ அவருக்கு போஸ்டர் அடிக்கனும்பா

லிஸ்டுல நீதாண்டி அதிகமா ஆட்டைய போட்டுருக்க..

                                                    நல்லா இனிக்குது போங்க...
                                                                          


 "நான் மகான் அல்ல" வா.. நானும் தாண்டா.. இதுவே கடைசியா இருக்கட்டும்


                      ஆமா இதுல யாரு ஆடு ? யாரு புலி? ரெண்டுமே கண்டிஷன்
                                      பெயில்ல வெளிய வந்ததுங்க மாதிரி இருக்கு...

என்னவே ப்ரச்சனை உங்களுக்கெல்லாம்? தமிழ்ல தலைப்புக்காவே பஞ்சம்... 
அது என்ன குறிப்பா அவரு நடிச்ச பட தலைப்பாவே தேடி புடிச்சி வைக்கிறீக.. சரி வக்கிறதுதான் வக்கிறீங்க... நல்ல படத்துகளுக்கு வக்கிறீங்களா.. இதுலஉள்ள முக்காவாசி படம் நாலு நாளைக்கு மேல தியேட்டர்ல ஓடல

கிட்டதட்ட மொத்தத்தையும் வச்சிட்டீங்க.. இன்னும் ஒரு நாலஞ்சி தான் மீதி இருக்கும்... அதையும் வச்சிருங்கவே..

Monday, April 2, 2012

இவங்கல்லாம் பஞ்ச் டயலாக் பேச ஆரம்பிச்சா...


Share/Bookmark
















LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...