Sunday, October 25, 2015

நானும் ரெளடி தான் – ராவான ரவுடி!!!


Share/Bookmark
முதல் நான்கு தொடர் வெற்றிகளுக்கு அப்புறம் விஜய் சேதுபதிகிட்ட ஒரு மேடையில “உங்களுக்கு போட்டியா யார நினைக்கிறீங்க?” ன்னு கேட்டப்போ, லேசா சிரிச்சபடி “எனக்கு இப்ப போட்டின்னா அது சிவகார்த்திகேயன் தான்” ன்னு சொல்லிருந்தாரு. அதன் பிறகு சிவகார்த்திகேயன் பன்னுண படங்கள் எல்லாமே பெரிய பேனர். படங்கள் ஊத்திக்கிட்டாலும் எல்லா படத்துக்குமே பெரிய ஹீரோ படங்களைப் போல நல்ல ஓப்பனிங். ஆன அந்த டைம்ல ரிலீஸான விஜய் சேதுபதியோட படங்கள் ஏனோ தானோன்னு தான் இருந்துச்சி. பெரிய அளவுல எந்த வெற்றிப்படமும் இல்லை. வெறும் ஆவரேஜும் பிலோ ஆவேரேஜ் படங்களை மட்டுமே கொடுத்துக்கிட்டு இருந்தவரு ரொம்ப நாளுக்கப்புறம் மீண்டும் பழைய பாதையில் பயணிக்க தொடங்கிருக்காரு.

தலைவரோட ரங்கா படம் பாத்துருப்பீங்க. ஒரு திருடனும், நல்லவனும் ஒரு நாள் ஒண்ணா தங்கி, திருடனா இருக்கது நல்லதா நல்லவனா இருக்கது நல்லதான்னு மாத்தி மாத்தி பேசிக்குவாங்க. காலையில நல்லவனா இருந்த தலைவரு திருடனாகவும், திருடனா இருந்த கரேத்தே மணி நல்லவனாவும் மாறிடுவாங்க. அதே மாதிரி தான் இங்க போலீஸாகனும்னு நினைக்கிற சின்னப்பையன, ஜெயிலுக்குள்ள வர்ற ரவுடி பெயிண்டர் ராஜேந்திரன் ரவுடிங்களோட பெருமைங்கள எடுத்து சொல்லி அவன மாத்துறாரு. போலீஸாக நினைச்ச பையன் அத மறந்துட்டு ரவுடியாக ஆசப்படுறான். அவன் ரவுடியானான இல்லையா எப்படி ரவுடியானாங்குறது தான் படம்.

பார்த்திபன், ராதிகா, ஆனந்த ராஜ், RJ பாலாஜி, அழகம் பெருமாள்ன்னு படத்தில் நடிச்சிருக்க அத்தனை பேருமே பெரிய பெரிய ஆர்டிஸ்டுங்க. அதுவே படம் பாக்குறப்ப ஒரு நல்ல ஃபீல குடுக்குது. டைரக்டர ஓரளவு தப்பிக்க வைச்சதும் இந்த ஸ்டார் காஸ்டிங்குன்னு கூட சொல்லலாம்.

முதல் பாதி முழுக்க விஜய் சேதுபதி ஏற்கனவே பன்னி ஹிட்டான காமெடிங்களையே வச்சி ஓட்டிக்கிட்டு இருக்காங்க. புதுசுன்னு எதுவும் சொல்ல முடியாது. விஜய் சேதுபதி சொல்றாருங்குறதுக்காக நமக்கு சில இடங்கள்ள சிரிப்பு வருதே தவற மத்தபடி பெருசா காமெடின்னு ஒண்ணும் இல்லை. RJ பாலாஜியல்லாம் பாதி கூட யூஸ் பன்னல.

கதையோ திரைக்கதையோ ரொம்ப சுமார் ரகம் தான். அதுல நடிச்சிருக்க நடிகர்களும் ரொம்ப அலட்டிக்காம சுமார் பர்ஃபார்மன்ஸைத்தான் குடுத்துருக்காங்க. இந்த சுமார் பர்ஃபார்மன்ஸூக்கு இடையிலயும் பட்டையக் கிளப்பிருக்கது நயன்தாரா தான். ப்ப்பா.. என்னா நடிப்பு. ஒவ்வொரு படத்துலயும் அழகும் சரி நடிப்பு திறமையும் கூடிக்கிட்டே தான் போகுது. தமிழ் சினிமாவுல இந்த பத்தாண்டின் சிறந்த ”நடிகை” ன்னா அது நயன் தாரா தான். 

படத்துல இன்னொரு ரொம்ப சுமார் ரகம் வந்து கேமரா. செம கப்பி. ரொம்ப லோ க்வாலிட்டி. நிறைய இடங்கள்ல எதோ ஷார்ட் ஃபிலிம் பாக்குற ஃபீல் தான் வருது. நிறைய இடங்கள்ல கையில கேமராவ வச்சி எடுத்து ஆட்டி ஆட்டி கண்ணு வலி வரவைக்கிறாரு. காஸ்டியூமும் அப்டித்தான். விஜய் சேதுபதி ரொம்ப ஆர்டினரியா இருக்காரு. காஸுவலா இருக்கலாம். அதுக்குன்னு எல்லா சீன்லயும் காலையில ஜாக்கிங்க் போறப்ப இருக்க மாதிரி ஒரு ட்ராக்ஸும் ஒரு மொக்கை டீ ஷர்ட்டயும் போட்டுக்கிட்டா இருக்கது. அவரு ஹீரோப்பா. காஸ்டியூம் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம்.

”எங்கப்பா ஒருத்தன சுடப்போனாரு”ன்னு சொல்லிட்டு நயந்தாரா நாலஞ்சி நாளா ஜாலியா சுத்துது. அவரு என்னவோ நார்த் இண்டியாவுக்கு சுடப்போனா மாதிரி. அந்தாளு அதே ஊர்ல இருக்க ஒருத்தனத்தான் சுடப்போறாரு. அடுத்தநாளே பதறிருக்க வேணாமா? என்னம்மா நீங்க இப்டி பண்றீங்களேமா.

இதையெல்லாத்தையும் தாண்டி படம் பாத்துட்டு வர்றவங்க படம் சூப்பர்ன்னு சொல்ல வைக்கிறது கடைசி 20 நிமிடங்கள் தான். படம் ஆரம்பிச்சதுலருந்து சுமாரா பர்ஃபார்ம் பன்னிக்கிட்டு இருந்த விஜய் சேதுபதி, பார்த்திபன், ஆனந்த ராஜ் எல்லாருமே க்ளைமாக்ஸ்ல ஃபுல் ஃபார்முக்கு வந்து பட்டையக் கிளப்புறாங்க. செம காமெடி. மொட்டை ராஜேந்திரன் ஒரு 10 நிமிஷம் வந்தாலும் அவரும் சூப்பர். ராகுல்ங்குற தாத்தா செம கெத்து.

ஒரு வில்லன காமெடியா காமிக்கிறது தப்பே இல்லை. ஆனா காமெடின்னு வரும் போது அவன் கொலை பன்றதெல்லாம் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். முதல் பாதில பார்த்திபன காமிக்கும்போது அவருக்கும் கேரக்டருக்கும் சம்பந்தமே இல்லாம கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம் பன்ற மாதிரி இருந்துச்சி. ஆனா  க்ளைமாக்ஸ்ல எல்லாத்தையும் ஈக்குவல் பன்னிட்டாரு.

இயக்குனர் விக்னேஷ் சிவனப் பத்தி சொல்லனும்னா, விஜய் சேதுபதி, நயன், பார்த்திபன், ஆனந்த ராஜ், RJ பாலாஜி, ராதிகான்னு அவருக்கு கிடைச்சிருக்க resources ah வச்சி அவர் கொடுத்திருக்க output பாதி கூட இல்லை. ஆனா ரொம்ப மோசம்னும் சொல்ல முடியாது. காமெடி வசனங்கள விட நயன்க்கு எழுதப்பட்ட சீரியஸான சில வசனங்கள் நல்லா இருந்துச்சி.  

அனிருத் எப்பவும்போல பின்னணி இசையில இறைச்சல குடுக்காம, ரொம்ப நல்லாவே பன்னிருக்காரு. ஃபர்ஸ்ட் ஹாஃப் ஓரளவு நல்லா போறதுக்கு அனிரூத்தும் ஒரு காரணம். தங்கம்மே உன்னத்தான் பாட்டு சூப்பர். VIP  மியூசிக்ல Wunder bar films ன்னு போடும்போதெல்லாம் தியேட்டர்ல சவுண்டு காதப் பொளக்குது. ஒரு production கம்பெனி பேருக்கு ஆடியன்ஸ் கத்துறது இதுக்கு மட்டும் தான். தனுஷுக்காக கத்துறாய்ங்களா, அனிரூத்காக கத்துறாங்களா, இல்லை VIP படம் நல்லாருந்துச்சின்னு கத்துறாய்ங்களான்னு தெரியல.


இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சூது கவ்வும் லாம் பாத்துட்டு வரும்போது இருந்த “விஜய் சேதுபதி satisfaction” இதுல நிச்சயமா இல்லை. ஆனா ரொம்ப போர் அடிக்காம திரைக்கதைய நகர்த்தி, கடைசி 20 நிமிஷ நான் ஸ்டாப் காமெடில நம்ம மண்டையக் கழுவி படம் பாத்துட்டு வர்றவங்கள சூப்பர்னு சொல்ல வைக்கிற ஆவரேஜ் படம் தான் இந்த நானும் ரவுடி தான். 


Thursday, October 22, 2015

10 எண்றதுக்குள்ள - படுத்து தூங்கிருங்க!!!


Share/Bookmark
சேதுல விக்ரமோட கம் பேக்கு அப்புறம், காசி, பிதாமகன்னு விகரமோட வித விதமான கேரக்டர்களையும் படத்துக்காக அவர் படுற கஷ்டங்களையும் பார்த்த தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு இப்பல்லாம் ட்ரயல் எடுக்கனும்னாலே விக்ரமோட மூஞ்சிதான் ஞாபகம் வருதுன்னு நினைக்கிறேன். “அடி வாங்குறதுக்குன்னே அளவெடுத்து செஞ்சா மாதிரி இருக்கான்யா” ன்னு தான் எல்லாருக்கும் தோணும் போல. போக்கிரில வடிவேலுக்கு பின்னால தண்ணி வந்துகிட்டு இருக்கும்போது ரெண்டு பேர் “நீங்க இவன கொண்டு போய் ஒரு  பத்தாயிரம் லிட்டர் எடுத்துக்குங்க.. அப்புறம் நாங்க ஒரு பத்தாயிரம் லிட்டர் எடுத்துக்குறோம்னு சொல்ற மாதிரி “விக்ரம கொண்டு போய் நீங்க ஒரு ரெண்டு வருஷம் படம் எடுங்க.. அப்புறம் எங்ககிட்ட அனுப்புங்க.. அவர வச்சி நாங்க ஒரு ரெண்டு வருஷம் படம் எடுக்குறோம்.. இப்படியே மாறி மாறி மாறி மாறி……” ன்னு போட்டி போட்டு அந்தாள கொண்ணு எடுத்துகிட்டு இருக்காங்க.

நம்ம ஷங்கர் சார் மட்டும் விகரமோட கேரியர்ல ஒரு நாலரை வருஷத்த சாப்பிட்டிருப்பாரு. சாப்டது மட்டும் இல்லாம “இப்ப நீங்க என்ன பண்றீங்க உங்க வெய்ட்ட 100 கிலோவுக்கு ஏத்துறீங்க.. அத வச்சி ரெண்டு சீன் எடுக்குறோம்… அப்புறம் சர்ர்ருன்னு அந்த வெய்ட்ட 45 கிலோவுக்கு குறைக்கிறீங்க.. அத வச்சி ஒரு நாலு சீன் எடுக்குறோம்” ன்னு அவர் பாடில கபடி ஆடி அவ்வளவு கஷ்டப்படுத்திருக்காய்ங்க. கஷ்டப்படுத்துறது மட்டும் இல்லாம “இவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சிருக்காரு இந்த படத்த நல்லா இல்லைன்னு சொல்கிறீர்களே பாவிகளா?” ன்னு அத நமக்கு திருப்பி விடுவாய்ங்க.

போன வருஷம் பெரிய நடிகர்கள் யாரும் இல்லாம சின்னப் பசங்கள வச்சே கோலிசோடான்னு ஒரு சூப்பர்ஹிட்ட குடுத்த கேமராமேன் விஜய் மில்டன் இந்த வருஷம் விகரம வச்சி இறங்கிருக்காரு. முதல்ல வித்யாசமான கெட்டப் ட்ரை பண்றேன்னு அந்தாளப் போட்டு கொன்னு எடுக்காம ஒழுங்கா நடிக்க வச்சிருக்கது பெரிய ஆறுதல். சரி வாங்க படம் எப்டிகீதுன்னு பாப்போம்.

சின்னத்தம்பி படத்துல கவுண்டர் நைட்டுல கண்ணு தெரியாம இருக்கத சமாளிக்க, தியேட்டர்லருந்து வரும்போது வொய்ஃப்கிட்ட பந்தயம் கட்டிட்டு ஓட்டிட்டு வருவாரு. அப்போ அந்த பொண்ணு “ஏங்க நீங்க கண்ண மூடிகிட்டு ரொம்ப நல்லா வண்டி ஓட்டுறீங்கங்கும்.. அப்ப கவுண்டரு “இதென்ன ப்ரமாதம்… நா கம்பி மேலயே வண்டி ஓட்டுவேன்”ன்னு அடிச்சி விடுவாரு. அவரு அன்னிக்கு சொன்ன அந்த ஒரு வார்தை தான் இன்னிக்கு விக்ரமோட கேரக்டரா வந்துருக்கு. எல்லா கம்பியிலயும் கார் ஓட்டுறாரு. கார் எங்க இருந்தாலும் ஓட்டுறாரு. ஓட்டோ ஓட்டுன்னு ஓட்டுறாரு.

கார் நல்லா ஓட்டுற திறமைய வச்சிக்கிட்டு, கள்ளக் கடத்தல் பண்ணுற ரவுடிங்களுக்கு உதவி பண்ணி அது மூலமா சம்பாதிச்சிட்டு இருக்காரு. ஒரு சம்பவத்துல லோக்கல் தாதா பசுபதியோட பழக்கமாகி அவருக்கு வேலை பாத்துக்கிட்டு இருக்காரு. அப்பதான் ஒரு முக்கியமான விஷயத்த உத்தர்காண்ட் மாநிலம் வரைக்கும் கொண்டு போய் சேக்க வேண்டிய பொறுப்பு விக்ரமுக்கு வருது. அத கொண்டு போகும்போதும், கொண்டு போனதுக்கப்புறமும் விக்ரம் சந்திக்கிற ப்ரச்சனைகள்தான் 10 எண்றதுக்குள்ள.

“10 எண்றதுக்குள்ளங்குற டைட்டில justify பண்ண ரெண்டு மூணு சீன் வச்சிருந்தாலும் ஒண்ணும் வேலைக்கு ஆகல.. 10 எண்றதுக்குள்ள என்ன வேணாலும் நடக்கும்ங்குறாங்க… பத்து எண்றதுக்குள்ள ஒருத்தனை அடிப்பேங்குறாரு ஒரு சீன்ல. பேசாம சும்மாவே விட்ருக்கலாம். டைட்டிலுக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருக்கனுமா என்ன… எத்தனை படம் பாத்துருக்கோம் சம்பந்தமே இல்லாம.

முதல் பாதில பசுபதி, சமந்தாவோட புண்ணியத்துல படம் ஒரளவுக்கு பரவால்லாமயே போகுது. ஹீரோயினுக்கு நடிக்க நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்ட படங்கள்ல இதுவும் ஒண்ணுன்னு சொல்லலாம். சமந்த்தா அது கேரக்டர நல்லாவே பண்ணிருக்கு. அப்பப்ப நமக்கு சிரிப்பும் வருது. பசுபதியும் அப்டித்தான். அவர் கேரக்டர சிறப்பா பன்னிருக்காரு. அப்பப்ப நம்மள சிரிக்கவும் வைக்கிறாரு.

முதல் பாதில பல மொக்கைகள் இருந்தாலும், ஒண்ணும் பெருசா அருக்குற மாதிரி தெரியல. ஆனா ரெண்டாவது பாதி பாடி தாங்க மாட்டுது. கிட்டத்தட்ட செகண்ட் ஹாஃப் மட்டும் நாலு மணி நேரம் ஓடுற மாதிரி ஒரு ஃபீல். அப்படியே தெலுங்கு பட ஸ்டைல். அங்க தான் படம் முடிஞ்சிருச்சின்னு நினைப்போம். ஆனா அதுக்கப்புறம் ஒரு புது கேரக்டர இண்ட்ரொடியூஸ் பண்ணி இன்னும் ஒரு அரை மணி நேரம் படத்த இழுப்பாய்ங்க. அதே ஃபீல் தான் இங்கயும். கிட்டத்தட்ட படம் முடிஞ்சிருச்சி போலன்னு நினைக்கும் போது அதுக்கப்புறம் ஒரு முக்கா மணி நேரம் ஓடுது.

என்னய்யா சம்பந்தமே இல்லாம டூயட் வருதுன்னு நிறைய படத்த கிண்டல் பண்ணிருப்போம். ஆனா இங்க “பாட்டு போடனும்னா போடுங்கய்யா.. அதுக்கு ஏன் இவ்வளவு மொக்கைன்னு தோண ஆரம்பிச்சிடும்”. சார்மி கூட ஒரு பாட்டு வைக்கிறதுக்கு முன்னால இங்க சிட்சுவேஷன் வச்சிருக்காய்ங்க பாருங்க. கப்பி. ஆனா சார்மிக்காக பொறுத்துக்கலாம். (ஐ ஆம் சார்மி ஃபேன்…அவ்வ்)

படத்துல ஃபைட்டும் அவ்வளவு சிறப்பா எடுக்கல. ஃபைட்டுல காமெடி பண்றேங்குற பேர்ல கடுப்பேத்திருக்காய்ங்க. இமான் அவரு வேலைய சிறப்பா செஞ்சிருக்காரு. “நா பாஞ்சா புல்லட்டுதான்” பாட்டு சூப்பரா எடுத்துருக்காய்ங்க. பாக்க கலர்ஃபுல்லாவும் ஜாலியாவும் இருக்கு.

மொத்தமா படத்த கிட்டத்தட்ட பையா பார்ட்-2 தான் சொல்லனும். இங்க வெறும் லவ்வுன்னு மட்டும் இல்லாம உத்தர்காண்ட் ஜாதிக்கலவரம், சின்ன சின்ன ட்விஸ்டுன்னு வச்சி ஓரளவு தெலுங்கு மசாலா டைப்புல ட்ரை பண்ணிருக்காங்க. விக்ரமுக்கும், சமந்தாவுக்கும் இடையில வர்ற லவ் சீன்ஸ் நல்லா இருக்கு. ஆனா தேவையில்லாத சில வல்கர் சீன்ஸ வச்சி அத காலி பண்ணி விட்டுடுறாங்க.

விஜய் மில்டன் ஸ்க்ரிப்டுல கொஞ்சம் இன்னும் கவனம் செலுத்திருக்கலாம். நிறைய விஷயங்கள் தெளிவா இல்லை. ஏன் விக்ரம் அவர் பேர மாத்தி மாத்தி சொல்றாருங்குறது கூட புரியாத புதிர்தான். ஸ்கிரிப்டுல கோட்டை விட்டாலும், சினிமாட்டோகிராஃபில பட்டைய கிளப்பிருக்காரு. பிக்சரைசேஷன்ல நல்ல குவாலிட்டி. உத்தர்காண்ட் காட்சிகள்லாம் அழகா இருக்கு. ஆனா உத்தர்காண்டுலருந்து சென்னை பஸ்ல சமந்தாவ விக்ரம் ஏத்தி அனுப்பும்போது எனக்கு நெஞ்சி டபீர்ன்னு வெடிச்சிருச்சி. அடப்பாவிகளா…. உத்தர்காண்டுலருந்து சென்னைக்கு பஸ்ல வந்தா சீட்டு கிழிஞ்சிருமேடா… (நா சொன்னது பஸ்ஸூ சீட்ட இல்ல)

என்னைப் பொறுத்த அளவு வீக்கான செகண்ட் ஹாஃப் படத்துக்கு ஒரு மைனஸ்னா, விக்ரம் தான் இன்னொரு மைனஸ். ஆளு நல்லாருக்காரு. ஆனா இந்த மாதிரி ஒரு ஜாலியான கமர்ஷியல் படத்துல இருக்க ஹீரோ, வெறும் வசனம் பேசிட்டும், நாலு பேர அடிச்சிட்டும் போனா மட்டும் பத்தாது. ஹீரோவுக்கு கொஞ்சம் காமெடியும் வரனும். விக்ரமுக்கு காமெடி சுத்தமா வராதுன்னு நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். ஆனா இதுநாள் வரைக்கும் அதை மறைக்க எதாவது ஒரு காமெடியன் கூட இருப்பார். அப்படி யாரும் இல்லாதது இந்தப் படத்துல ஒரு பெரிய மைனஸ். பசுபதி, சமந்தாவால அந்த குறைய முழுசா பூர்த்தி செய்ய முடியல. வேற ஒரு ஹீரோவ தேர்ந்தெடுத்திருக்கும் பட்சத்துல இந்த “10 எண்றதுக்குள்ள” இன்னும் கொஞ்சம் நல்லா வந்திருக்க வாய்ப்பு இருக்கு.


ஆவரேஜ் First half, ரொம்ப பெரிய செகண்ட் ஹாஃப்னு மொத்தத்துல படம் அவ்வளவு சிறப்பா இல்லை. ஆனா காட்டு மொக்கைன்னும் ஒதுக்கிட முடியாது. எனக்கு என்னவோ ”ஐ” க்கு இது பரவால்லன்னு தான் தோணுச்சி. 


Sunday, October 4, 2015

49-ஓ - அரசியல் COUNTER!!!


Share/Bookmark
மற்ற நடிகர்களுக்கும் கவுண்டருக்கும் ஒரு வித்யாசம் இருக்கு. இந்த வசனத்த பேசுனா இவங்க தப்பா நினைப்பாங்களோ, அவங்க தப்ப நினைப்பாங்களோன்னு அவர் எப்புவுமே நினைக்கிறதுமில்லை. பயப்படுறதுமில்லை. பெரும்பாலும் எல்லா நடிகர்களும் ஸ்க்ரீன்ல வரும்போது மக்கள்தான் எல்லாம், அவங்க போட்ட பிச்சைதான் எல்லாம்னு என்னென்னவோ மக்களை உயர்த்தி சொல்வாங்க. ஆனா இவரு “மக்களா.. அட அவனுங்க கெடக்குறாங்கப்பா..” ன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாரு. அவரப் பொறுத்த அளவு ”நா நடிக்கிறேன். நீ பாக்குற.. அவ்வளவு தான் ரெண்டு பேருக்கும் உள்ள தொடர்பு”

அதுவும் எந்த ஒரு நடிகரையும் போறபோக்குல நேரடியா நக்கலடிக்க கவுண்டரால மட்டுமே முடியும். அதுவும் சத்யராஜ் கூட சேர்ந்துட்டா சொல்லவே தேவையில்லை. இவங்க காம்பினேஷல்ல வந்த பீக் காமெடிங்களெல்லாம் நா சொல்லித்தான் உங்களுக்கு தெரியனும்னு இல்லை. கடைசியா ரெண்டு பேரும் நடிச்சது தங்கம்னு ஒரு படம். அதுல கவுண்டர் அடிவாங்கிட்டு ஒரு ஓரமா உக்கார்ந்துருப்பாரு. உடனே அந்த வழியா திம்மு திம்முன்னு ஒரு நாலு பேரு அருவாளோட ஓடுவாய்ங்க. உடனே அதுல ஒருத்தன புடிச்சி “ஏம்பா நீங்கல்லாம் இந்த “வேல்” சினிமாவுல நடிசாவங்களாப்பா?”  “ஏன் கேக்குறீங்க?” “இல்லை அதுலதான் இவ்வளவு பெரிய அருவாள எடுத்துகிட்டு இங்குட்டும் அங்குட்டும் ஓடிக்கிட்டு இருப்பானுக.. அதான் கேட்டேன்”ம்பாறு. 

அப்போ சத்யராஜ் வந்து “மாம்ஸ் நா உங்கள காப்பாத்துறேன்…” “ஒண்ணும் வேணாம்பா…” “அப்ப நா இந்தியாவையாவது காப்பாத்துறேன்” ன்னு சத்யராஜ் கேக்க “அட அதுக்குத்தான் அர்ஜூன் இருக்கானே… இப்ப நீங்க எதையாவது காப்பாத்தியே ஆகனுமா” ன்னு அசால்ட்டா அடிச்சிட்டு போய்டே இருப்பாரு. ஒரு நடிகரை அவன் இவன்னு திரையில உரிமையா கூப்புடுற ஒரே காமெடியன் தலைவர் கவுண்டராத்தான் இருப்பாரு. நம்ம 49 ஓவுக்கு வருவோம்.

சில கதைகள் சில பேரை மட்டும் மனசுல வச்சி எழுதப்படும். சில கதைகள் சிலபேரு நடிச்சா மட்டும்தான் எடுபடும். இந்த படத்தோட இயக்குனர் இந்தக் கதைய யார மனசுல வச்சி எழுதுனாருன்னு தெரியல. ஆனா இந்த கதைக்கும், இதில் வர்ற வசனங்களைப் பேசுறதுக்கும் கரெக்டான ஆளத்தான் புடிச்சிருக்காங்க. அவர்தான் தலைவர் கவுண்டர்.

அஞ்சு வருஷத்துக்கு ஓருதடவ ஓட்டு கேட்க மட்டும் ஊருக்குள்ள வீடு வீடா வந்து கால்ல விழுகுற அரசியல்வாதிங்க ஜெயிச்சப்புறம், அடுத்த அஞ்சி வருஷத்துக்கு அவங்க வீட்டு வாசல்ல மக்கள் எதாவது நல்லது செய்ய மாட்டாங்களான்னு காத்துகிடக்க வேண்டியிருக்கு. மக்கள , மக்களாப் பாக்காம வெறும் ஓட்டுகளா பாக்குற போலி அரசியல்வாதிகளையும், ஓட்டுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் ஆக்டிங் அரசியல்வாதிகளையும்,  தேர்தல் சமயத்துல மக்களுக்கு ஐநூறு ,ஆயிரம்னு பணத்த குடுத்து ஓட்டுகள வாங்கி அப்புறம் ஐயாயிரம் கோடி, பத்தாயிரம் கோடின்னு ஆட்டையப் போடுற திருட்டு அரசியல் வாதிகளையும் வசனங்களால புரட்டி எடுக்குற படம்தான் இந்த 49-ஓ.

உங்களுக்கு திமுக  இல்லை அதிமுக என்ற கட்சி நிலைப்பாடுகள் எதுவும் இல்லாம, நம்மூர்ல நடக்குற அரசியல் நாடகங்களையும், ஆட்டைகளையும் பாத்து எதுவும் செய்யமுடியாம, உள்ளுக்குள்ளயே புழுங்கிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதர் நீங்கன்னா, நிச்சயமா இந்தப் படத்தோட ஒவ்வொரு வசனமும், காட்சியும் உங்களுக்கு ரொம்ப புடிக்கும். ஏன்னா நா ஏற்கனவே ஒரு பதிவில எழுதிருந்த மாதிரி, ஏதேனும் ஒரு கட்சியில தன்னை இணைச்சிக்கிட்டவங்களுக்கு அவங்க தப்பு பன்னா கூட ஒப்புக்குற மனப்பாங்கு சுத்தமா இல்லாம போச்சு. உயிரக்குடுத்தாவது அவங்க செஞ்சது ரைட்டுன்னு தான் சொல்றாங்க.

விவசாயத்த மட்டுமே நம்பியிருக்கிற ஒரு கிராமத்துல, விவசாயிகளோட வருமையப் பயன்படுத்தி அவங்களோட விளை நிலங்களையெல்லாம் வாங்கி ப்ளாட் போட்டு விக்கிறதுக்கு முயற்சிக்கிறாங்க ஒரு அரசியல் குரூப்பு. விவசாயம்தான் இந்த நாட்டோட முதுகெலும்புன்னு உணர்ந்த அந்த ஊரோட ஒரு விவசாயியான சவுரிமுத்து (கவுண்டர்), அந்த அரசியல்வாதிகள்கிட்டருந்து நிலத்த மீட்டு மீண்டும் அத விளைநிலங்களாக்க என்னென்ன முயற்சி எடுக்குறாருங்குறது அவர் பாஷையிலயே சொல்லனும்னா என்னென்ன டகால்டி வேலை பன்றாருங்குறதுதான் 49-ஓ.

நா சொல்றத கேக்கும்போது எதோ ரொம்ப போரடிக்கிற சப்ஜெக்ட் மாதிரி உங்களுக்கு தோணும். ஆனா, படத்துல ஒரு சீன் கூட போரடிக்காது. படம் முழுசும் கவுண்டரோட அளப்பறைகள அள்ளித் தெளிச்சிருக்காங்க. அவரோட வழக்கமான ஒன்லைனர்ஸ் அங்கங்க வந்து பட்டைய கெளப்புது. கவுண்டர் TVS Excel ல கிளம்பிட்டு இருப்பாரு.. உடனே அவர் மனைவி வீட்டுக்குள்ளருந்து வந்து “ஏங்க என்னையும் கொஞ்சம் ஏத்திட்டு போங்க” ங்கும். “வந்து அப்டி வண்டிக்கு முன்னால படு.. ஏத்திட்டு போறேன்…”ன்னு போய்ட்டே இருப்பாரு. பேரெண்ண? “நீலவேணி” “எவ்வளவு நீளம்” மொமெண்ட்.

திமுக, அதிமுகன்னு எல்லா கட்சிக்கும் சகட்டு மேனிக்கு ஏத்து விழுகுது.

அள்ளக்கை : என்னங்க உங்க அப்பா (MLA) இறந்துட்டாரு.. கொஞ்சம் கூட சோகமே இல்லாம இருக்கீங்க?
வில்லன் : டேய் எங்கப்பா என்னடா இருபது வயசுலயா செத்தாரு. என்பது வயசாகி செத்தாரு..
அள்ளக்கை : என்பது வயசா? சாகும்போது இளைஞர் அணித்தலைவரால்ல இருந்தாரு…. ???!!!!
வில்லன் : அப்பா இறந்துட்டாருல்ல.. இனி ஃபுல் பவரும் நம்ம கையிலதான்.
அள்ளக்கை : (மைண்டு வாய்ஸ்) உங்கப்பா கையில இருக்கும்போதே பாதி நேரம் இருட்டுதான். உன் கைக்கு வந்தா முழுநேர இருட்டு தான் போல…

அப்புறம் ஒரு காட்சில "நாட்டுல மண்ணெண்ணை வாங்குறது தான்டா கஷ்டம். எம்.எல்.ஏ ஆகுறது ரொம்ப ஈஸி” ங்குறாரு.  ஓட்டுக்கு அரசியல்வாதிங்ககிட்ட காசு கேக்கும்ப்போது “என்னப்பா மக்கள்லாம் இப்புடி காசு கேக்க ஆரம்பிச்சிட்டீங்க?”ன்னு அவன் கேக்க “ஓட்டுக்கு காசுகொடுத்து ஆரம்பிச்சி வச்சதே நீங்கதானே” ன்னு போட்டு தள்றாரு.


சுடுகாட்டை ப்ரமோட் பண்ண  ஜாவா சுந்தரேசனையும் இன்னொரு ஹீரோயினையும் கூட்டிட்டு வந்து, அவன் வசனம் பேச பேச கவுண்டர் அதுக்கு counter குடுத்துக்கிட்டே இருக்கது செம. “ராப்பிச்சை” ன்னு ஒரு பிச்சக்காரன வேட்பாளரா நிறுத்தி அத வச்சி கவுண்டர் அடிக்கிற நக்கல் எல்லாம் அவருக்கு மட்டுமே வரும்.



குறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் ஒளிப்பதிவு மற்றும் காட்சியமைப்பு. ரொம்ப நல்லாருக்கு. பசுமையான வயல்கள படம்பிடிச்சதும் சரி, வறண்ட ஊர் தெருக்கள்ல வர்ற காட்சிகள படம் புடிச்சதும் சரி.. நல்ல குவாலிட்டி. ”அம்மா போல அள்ளித்தரும் மழைதான்” பாட்டும், படமாக்கியதும் சூப்பர். மற்ற இரண்டு பாடல்கள் சுமார் ரகம்.

இயக்குனர் ஆரோக்யதாஸின் முதல் படம். திரைக்கதையை விட வசனங்களே படத்த தூக்கி நிறுத்துது. எல்லா வசனஙளுமே ஊழல் அரசியல்வாதிகளுக்கான ஆணி.  குறிப்பாக க்ளைமாக்ஸ்ல தலைவர் 49-ஓ வ பத்தி பேசுற வசனங்கள். தேவையில்லாம போட்டு இழுக்காம சொல்ல வந்தத சொல்லிட்டு படத்த ஒண்ணே முக்கால் மணி நேரத்துல முடிச்சிட்டாரு. 

படத்துல மைனஸ்ஸுன்னு சில விஷயங்களச் சொல்லலாம். மைனஸுங்குறத விட சில லாஜிக் ஓட்டை மற்றும் க்ளீஷேக்கள். வழக்கமா எல்லா தமிழ் சினிமாவுலயும் ஒரு ஊர் பெரியவர உசார் பன்னிட்டா உடனே  MLA ஆயிடலாம்னே காமிக்கிறாங்க. இந்தப் படத்துலயும் அது விதிவிலக்கில்ல. முதல்ல நூறு தலைக்கட்டு உள்ள ஊராக காமிச்சிட்டு, கவுண்டர் சொன்னாருன்னு பத்தாயிரம் இருபதாயிரம் பேர் வேட்புமணு தாக்கல் பன்ன வரிசையில நிக்கிறது ஏத்துக்கிற மாதிரி இல்லை. மேலும் டிவில ஆட்டோ ஓட்டுறவரு, பூ விக்கிறவங்கன்னு ஒவ்வொருத்தரையா பேட்டி எடுக்குறது.  அவங்க “அவர் சொல்றதுதாங்க கரெக்டு” “வச்சாரு பாருங்க ஆப்பு” ன்னு சொல்றது போன்ற வழக்கமான ஷங்கர் பட டைப் காட்சிகள கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். வில்லனா வர்றவரு அந்த ரோலுக்கு சூட்டா இல்லை. சின்னப்பையனா இருக்காரு. ஒரு அரசியல்வாதிங்கிற பார்வையில அவர பாக்கவே முடியல. 

கவுண்டர் நடிப்புலயும், டயலாக் டெலிவரிலயும் அதே வேகம். கொஞ்சம் கூட மாற்றம் இல்லை. ஆனா ஒரு சில காட்சிகள்ல எவ்வளவு மேக்கப்பிலும் வயசை மறைக்க முடியல. அந்த தோற்றத்துல தலைவர பாக்க மனசு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. 




இந்தப்படத்தோட ஆடியோ ரிலீஸ்ல கவுண்டர் பேசுனத நிறைய பேர் பாத்துருப்பீங்க. எல்லாருக்குமே தெரியும் அவர் பெரும்பாலும் எந்த ஃபங்ஷன்லயும் கலந்துக்க மாட்டாரு. அதிகம் மேடையிலயும் பேசுனதில்லை. அன்னிக்கு பேசும்போது "49-ஓ is the best movie... இது ஒரு நல்ல படம்” ன்னு சொல்லுவாரு. கொஞ்ச நேரத்துல தெரியாம அதே sentence ah repeat பன்னிருவாரு. ஆனா அதயே சமாளிச்சி கடைசில அத வேற வேற tone la சொல்லி எல்லாரையும் சிரிக்க வச்சிருவாரு. அவரு சொன்ன மாதிரி “49-ஒ is a good movie.. இது ஒரு நல்ல படம்”

நா கவுண்டர் ஃபேன்ங்குறதால ஓவர் பில்ட் அப் குடுக்குறேன்னு நினைக்க வேண்டாம். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். ரொம்ப நாளா மிஸ்ஸான கவுண்டரோட counter சில இங்க கிடைக்கும். நல்லா ரீச் ஆயிருக்க வேண்டிய படம். அதிக அளவு தியேட்டர்கள்ல ரிலீஸ் செய்யப்படாததாலயும், சில மார்க்கெட்டிங் கோளாருகளாலயும் முடங்கிப் போனது வருத்தம்.


Friday, October 2, 2015

புலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை!!!


Share/Bookmark
எந்த படம் பாக்கனும்னு முடிவு பன்னாலும் உசாரா முன்னாலயே டிக்கெட்டெல்லாம் புக் பன்னி வச்சிருவேன். ஆனா புலி விஷயத்துல கொஞ்சம் கண் அசந்த நேரத்துல புக்கிங்க ஓப்பன் பன்னி சீட்டெல்லாம் புல்லப் பண்ணிட்டாய்ங்க. எங்கயும் முதல்நாள் டிக்கெட் கிடைக்கல. அப்புறம்  எங்க மாமா மூலமா காசி தியேட்டர் அதிகாலை நாலரை மணி ஷோக்கு ஒரு டிக்கெட் உசார் பன்னிட்டேன். மொதநாள் நைட்டே ஐடி காரங்க அண்ணன அமுக்கிட்டாங்க. அண்ணனுக்கு ஏழரை நடக்கும்போது நாலரைக்கு எப்புடி படம் போடுவாய்ங்கன்னு உள் மனசு கேள்வி கேட்டாலும், ஒரு நம்பிக்கையில காசி தியேட்டருக்கு போனேன். ஏற்கனவே அங்க கூடியிருந்த குழந்தைகள் கூட்டத்த, போலீஸ்காரங்க “தம்பி எல்லாரும் பொய்ட்டு பத்து மணிக்கு மேல வாங்க.. பொட்டி வரலயாம்”ன்னு கலைச்சி விட்டுக்கிட்டு இருந்தாங்க.

அந்த கூட்டத்துலருந்த ஒரு LKG பையன் “காசுகுடுத்து டிக்கெட் வாங்குன நம்மல்லாம் என்ன சொம்பையா.. வாங்க பாஸூ பஸ்ஸ மறிக்கலாம்” ன்னு நாலு பேர சேத்துகிட்டு இருந்தான். ஏண்டா பொட்டி என்ன MTC பஸ்லயாடா வந்துட்டு இருக்க்கு. அதுக்கு ஏண்டா பஸ்ஸ மறிக்க ப்ளான் பன்றீங்க. ஆத்தாடி இங்க நின்னா நம்மளையும் அண்ணாவின் விழுதுகள்னு நினைச்சிட்டு போலீஸ் வெளுத்து விட்ருவாய்ங்கன்னு பொத்துனாப்புல கெளம்பி கம்பெனிக்கு பொய்ட்டேன். நல்ல வேளை படம் போடாததால கம்பெனிக்கு போனேன். ஒருவேளை படத்த காலைலயே பாத்துருந்தேன்னா கம்பெனிக்கு லீவு போட்டுட்டு ரூம் போட்டு அழுதுட்டு இருந்துருப்பேன். சரி வாங்க புலிக்கு ஆப்ரேசன் பன்னுவோம்.

நம்மூர்ல படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னால மொதநாளே சில வெளிநாடுகள்ல நைட்ஷோ போட்டுருவாய்ங்க. அத பாத்தவியிங்க ஓவர் சீஸ் ரிவியூன்னு ட்விட்டர்ல “ஆசெம்” “excellent” ன்னு வாய்க்கு வந்தத அடிச்சி விடுவாய்ங்க. மறுநாள் நம்ம படம் பாக்கும்போதுதான் அவனுங்கள தேடிப்புடிச்சி கொல்லனும் போலத் தோணும். இது வழக்கமா எல்லா படத்துக்கும் நடக்குறதுதான்.  

ஆனா நேத்து ஒண்ணு பன்னாய்ங்க பாருங்க. உன்னைப்போல் ஒருவன் படத்துல வர்ற டிவி ஷோவுல மறுநாள் நடக்கப்போற தாக்குதலுக்கு மொதநாளே முஷரப்,  புஷ்ஷுக்கு ஃபோன் பண்ணி இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு மன்னிப்பு கேப்பாரு. அது மாதிரி நேத்து சாயங்காலம் புலி ரிவியூன்னு ஒரு லிங்க்க எல்லாரும் ஷேர் பன்னிட்டு இருந்தாய்ங்க. அதுல பாத்தா “sridevi excellent performace” “vijay steals the show” "visuals better than bahubali" ன்னு அடிச்சிவிட்டு அஞ்சிக்கு நாலு ஸ்டார் வேற குடுத்துருந்தாய்ங்க. ”அண்ணன் ஷோ தான் நல்லாருக்காதேடா.. அப்புறம் எப்டி நாலு ஸ்டாரு” ன்னு பாத்தாதான் தெரியிது நாயிங்க படம் வந்தோன போடுறதுக்காக ஒருமாசம் முன்னாலயே எழுதி வச்சிருந்த ரிவியூ, படம் ரிலீஸ் ஆகாதது தெரியாம அவசரப்பட்டு போஸ்ட் பன்னி விட்டுட்டாய்ங்க.

இந்தப் படத்தோட கதையை கேக்குறதாலயோ இல்லை காட்சிகளப் பத்தி கேக்குறதாலயோ படம் பாக்கும்போது சுவாரஸ்யம் கம்மியாயிடும்னு ஃபீல் பன்னீங்கன்னா அதவிட மடத்தனம் எதுவும் இருக்காது. ஏன்னா அப்புடி எதுவுமே இங்க நடக்க வாய்ப்பு இல்லை. ஒரு பெரிய கோட்ட சின்னதாக்கனும்னா என்ன பண்ணனும். அதுக்கு பக்கத்துல மிகப்பெரிய கோடு ஒண்ணு போடனும். விஜய் என்னிக்கோ ஒருநாள் சிம்புதேவன பாக்கும்போது வில்லு, சுறா படங்களோட ஃப்ளாப் பத்தி சொல்லி ஃபீல் பன்னிருப்பாருன்னு நினைக்கிறேன். அதுக்கு தான் சிம்பு தேவன் அந்தப் படங்கள்ளாம் தங்கம்னு மக்கள் மனசுல தோணுற மாதிரி “அதுக்கும் மேல” ஒரு படத்த எடுத்துருக்காரு.

”முன்னொரு காலத்தில் நமது நாட்டை வேதாளங்கள் ஆட்சி செய்து வந்தன” ங்குற narration ஆரம்பிக்குது படம். அவர்கள் மிகவும் கொடுமைக்காரர்கள், கோவம் வந்தா பல்லு முளைக்கும்னு , கண்ணு புளூ கலரா மாறிடும்னு என்னெனவோ சொல்றாய்ங்க. அவங்களுக்கு கீழ உள்ள 59 கிராமத்துல நம்ம கல்யான் ஜூவல்லர்ஸ்காரர் ஒரு ஊர்ல இருக்காரு. அவரு ஒரு ஊர்ல இருக்காருன்னு சொல்றதுக்கு பதிலா அவரையே ஒரு ஊருன்னு கூட சொல்லலாம்.  அப்ப ஆத்து தண்ணில அடிச்சிட்டு வந்த ஒரு குழந்தை ஒதுங்குது. அந்த குழந்தையோடவே ஒரு முட்டையும் இருக்கு. என்னது? ச்ச ச்ச அந்த முட்டை அந்த குழந்தை போட்டது இல்லைங்க. வேற. 

உடனே அந்தக் குழந்தைய அந்த கிராமத்தோட வைத்தியர்கிட்ட தூக்கிட்டு போறாங்க. அவரு குழந்தை மொகரைய பாத்தோன “இது ரொம்ப ஆபத்தான மிருகம். இத அப்புடியே வீட்டீங்கன்னா இது நம்மள கடிச்சி வச்சிரும். அதனால இந்த குழந்தைக்கு டெய்லி இந்த இலைய குடுங்க”ன்னு ஒரு மூலிகை இலையையும் குடுக்குறாரு. இந்த பில்டப்பெல்லாம் குடுக்கும்ப்போதே அண்ணனோட ஃப்ளாஷ்பேக் என்ன அண்ணன் எங்கருந்து வர்றாருன்னு எல்லாமே நமக்கு தெரிஞ்சிடும். ஏன்னா சமீபத்துலதான் நாம பாகுபலி வேற பாத்தோம். கல்யாண் ஜுவல்லர்ஸ்காரர் அந்த குழந்தைக்கு “மறுதீரன்”ன்னு பேரு வச்சி தான் குழந்தையா வளர்க்குறாரு. அந்தக் குழந்தையே நம்ம அண்ணாதான். ஊருக்குள்ள அப்பப்ப வேதாள வீரர்கள் வந்து கொடுமை பன்றாங்க. இதப் பாக்குற கல்யாண் ஜுவல்லர்ஸ் “புலி பதுங்குறது பாயிறதுக்குத்தான்வே “ ன்னு பில்டப் குடுத்துட்டு இருக்காரு.

அண்ணன் கொஞ்ச நாள்ல பெடல சுத்தி பெரியாளாயிடுறாப்டி. பிரபு வேதாளங்கள சந்திக்கும்போது வில்லன் அவரோட ஒரு கைய வெட்டிடுற மாதிரி ஒரு காட்சி. அந்த காட்சி வச்சதுக்கான அர்த்தம் எனக்கு லேட்டதான் புரிஞ்சிது. அவர கேமராவுல காமிச்சா வேற யாருமே ஃப்ரேம்ல தெரிய மாட்டுறாங்க. அதுனால ஃப்ரேம்ல மத்தவங்களும் தெரியனும்ங்குறதுக்காக அவரோட ஒரு கைய வெட்டி, அந்த கை மறைச்சிருந்த இடத்துல தான் மத்த ஆக்டர்லாம் நின்னு பேசுறாங்க.

ஊருக்குள்ளயே வேதாளங்கள எதிர்க்குற ஒரே ஆள் அண்ணந்தான். வேதாள வீரர்கள் வந்தாலே அண்ணன கூப்டுருவாங்க. அண்ணன் வந்து வேதாளங்களோட கால்ல விழுந்து, ஊர காப்பாத்துவாரு. ஹலோ இது காமெடி சீனுங்க. சிரிங்க. இப்ப எப்புடி இருக்க்கு மூஞ்சி. அவ்வளவு பழங்காலத்துலயும் அண்ணன் ட்ரிமிங்க் மிஷின் வச்சி, சைடு கட்டிங்கெல்லாம் பண்ணி, தெய்வ திருமகள்ல விக்ரம் போட்டுருந்த ஷ்வெட்டர வாங்கி கைய மட்டும் நறுக்கிட்டு போட்டுகிட்டு சுத்துறாரு. பழைய கால காஸ்டியூமாம்.

அப்ப வர்றாங்க வெளியூருக்கு சின்ன வயசுல படிக்க போயிருந்த ஈரோயின்.  சின்ன வயசுல ஹன்சிகா மாதிரி  போன  குழந்த வளர்ந்து சுருதி ஹாசன் மாதிரி கண்றாவிய வருது. அதுலயும் குரலு இருக்கெ குரலு. நம்ம ஐபிஎல் மேட்சுக்கு பொய்ட்டு ஃபுல்லா கத்தி எஞ்ஜாய் பன்னிட்டு வந்தா, வந்த மறுநாள் காலையில நம்ம குரலு எப்டி இருக்குமோ அச்சு அசல் அதான் சுருதி குரல். ”அமைச்சரே இவன் காதிற்குள் அரைப்படி கட்டெரும்பை விடுங்கள். அவை அனைத்தும் மறுகாது வழியாக வரவேண்டும். அதனை நான் மறுநாள் வந்து பார்க்க வேண்டும்” ன்னு வடிவேலு குடுப்பாரே ஒரு தண்டனை. அந்த தண்டனைய குடுத்தா நம்ம காது என்னவாகுமோ, அப்டித்தான் ஆகுது சுருதியோட கொரல கேக்க்கும்போது. காதுல பாறைக்கம்பிய சொருகுன மாதிரி. சுருதியோட காஸ்டியூம் பிரமாதம்.

வேதாளங்கள் சுருதிய வேதாளக் கோட்டைக்கு கடத்திட்டு போயிடுறாங்க. உடனே அண்ணன் காப்பாத்த கெளம்புறாரு. அதுவும் வேதாளம் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு (போடாமலேயே மொகர வேதாளம் அப்டித்தான் இருக்கு) வேதாளங்களுக்கு கண்ணு புளு கலருல இருக்கும். அதுக்கு அண்ணன் ஒரு ஐடியா பண்றாரு பாருங்க. கையில க்ளீனிக் ப்ளஸ் ஷாம்பு மாதிரி எதோ ஒண்ண லைட்டா ரெண்டு சொட்டு ஊத்தி விரல வச்சி அழுத்தி எடுத்து கண்ணுக்குள்ள வச்சிக்கிறாரு. அட நாயே கண்டத கண்ணுக்குள்ள வச்சா கண்ணு நொள்ளையாயிடும்டா. இவ்வளவு சுலபமா காண்டாக்ட் லென்ஸ் தயார் பன்ன அண்ணாவால மட்டுமே முடியும்.

அண்ணன் எப்பல்லாம் ஹீரோயின்கள கவரனும்னு நினைக்கிறாரோ அப்பல்லாம் சண்டை போட்டு பெர்ஃபார்மன்ஸ் பண்ண யாராவது கிடைச்சிருவாங்க. அப்டித்தான் ஹன்சிகாவ பாக்கும்போது ஒரு கருப்பு புலியோட அண்ணன் சண்டை போடுறாரு. சண்டை பீக்ல போயிடுட்டு இருக்கும்போது கரும்புலி, விஜய் அண்ணாவ தூக்கி ஒரு புதருக்குள்ள வீசிட்டு அதுவும் அந்த புதருக்குள்ள பாயிது. கொஞ்ச நேரம் சல சலன்னு புதர் ஆடுறத மட்டும் காமிக்கிறாங்க. என்னது? ச்ச..ச்ச,,, அண்ணன் அப்டியெல்லாம் பன்னிருக்க மாட்டாருய்யா. சும்ம புதர் ஆடுனோன நீங்க இப்டியெல்லாம் பேசக்கூடாது. ஆனா கொஞ்ச நேரத்துல வெளில வந்த புலி, சைலண்ட்டா திரும்பி போயிடுது. அதப்பாத்தாதான் எனக்கும் ஒரு டவுட்டு. ரெண்டு படத்துல வடிவேலு சொன்னதும், அந்த மனிதக்குரங்கு அமைதியா போவுமே அது மாதிரி.

இவரு  வேதாளக்கோட்டைய தேடிப்போகும்போது வழில ரோபோ ஷங்கர், இமான் அண்ணாச்சி, வித்யூலேகா, ஆலே உள்ளிட்ட குள்ளர்கள சந்திக்கிறாரு. அவங்களோட பேர பாத்தா ஆல்ஃபா, பீட்டா, காமா, ஐன்ஸ்டின்னு என்னென்னவோ வச்சிருக்காய்ங்க. இதப்பாத்தோன்ன தான் சிம்புதேவன் சுத்தமா மெண்டல் ஆயிட்டாரோன்னு டவுட் வந்துச்சி. எதோ இம்சை அரசன்ல வித்யாசமா எதோ பண்ணாரு. எல்லாருக்கும் புடிச்சிச்சி. அதயே திரும்ப திரும்ப போட்டு அருத்தா எப்டி. அதுவும் இது ஒரு பழங்காலத்து கதையா வச்சிக்கிட்டு அதுல ஐன்ஸ்டின், ஃபெர்னாண்டஸ் ஆல்ஃபா பீட்டான்னுகிட்டு. காமெடியாமாம்.

தலைநகரம் வடிவேலு மனோபாலாகிட்ட சொல்றமாதிரி “மிஸ்டர் சிம்புதேவன். இதுவரைக்கும் நீங்க பண்ண காமெடி எதுக்குமே எங்களுக்கு சிரிப்பு வரல. அப்டின்னா உங்க வீக்குனசு என்னன்னு தெரிஞ்சிகிட்டு படம் எடுக்க பாருங்க.”  

விஜய்ய வேதாளக்கோட்டை அடைஞ்ச உடனே வர்றாங்க நம்ம ஸ்ரீதேவி. அவங்கள பாத்தோன எல்லாருக்கும் நம்ம நடுவுல கொஞ்ச பக்கத்த காணும் ரியாக்‌ஷன்தான். ”ப்ப்ப்ப்ப்பா.. யார்ரா இது பேய் மாதிரி”ன்னு. கருமம். அங்க நம்ம அண்ணன ஒரிஜினல் வேதாளமா இல்லையான்னு செக்பன்ன பல டெஸ்டுகள் பன்றாங்க. அண்ணன் பாஸ் பன்னிடுறாரு. அப்பதான் நமக்கு மொத சீன்லயே தெரிஞ்ச அண்ணனோட ஃப்ளாஷ்பேக் அவருக்கு தெரிய வருது.


விஜய்ய பொறுத்த அளவு கெட்டப் சேஞ்ச்னா முடிய கொஞ்சம் நீளமா வச்சிக்கிட்டு, வாய சாணி மிதிச்ச மாதிரி வச்சிக்கிறது மட்டும் தான் போல. வேட்டைக்காரன் “ஒரு சின்னத்தாமரை” பாட்டுல அவரு வச்சிருந்த அதே விக்க வச்சி, வாய வில்லு ஃப்ளாஷ்பேக்ல வர்ற விஜய் மாதிரி வச்சிக்கிட்டா அதான் அப்பா விஜய். அதுவும் அப்பா விஜய் ஒரு வாய்ஸ் மாடுலேஷன் பன்னி டயலாக் பேசுறாரு பாருங்க. காலங்காத்தால அவசரமா டாய்லெட்ல முக்குறத நிறுத்தாம வசனம் பேசச் சொன்னா எப்டி இருக்கும்? அப்டிதான் இருக்கு.

கெட்டப் மாத்தி நடிக்கனும்ங்குறது நடிகருக்கு அவசியம் இல்லைதான். ஆனா நம்ம கெட்டப்புக்கு எது சூட் ஆகுதுங்குறத செலெக்ட் பண்ணி நடிக்கிறது நிச்சயம் ஒரு நடிகரோட கடமை. உங்களுக்கு பழங்கால கதையில நடிக்கனும்னு கனவு இருந்துருக்கும். போனா போகுது. நடிச்சிட்டீங்க. இனிமே படுக்கும்போது வெளக்கமாற தலைமாட்டுல வச்சி படுங்க. அந்த மாதிரி கனவெல்லாம் இனிமே உங்களுக்கு வரவே கூடாது. பெரும்பாலான காட்சிகள்ல விஜய் கேமராவ பாத்து பேசாம சைடுல எங்கயோ பாத்து பேசிகிட்டு இருக்கமாதிரியே வச்சிருக்காங்க. அதுவே மொதல்ல கடுப்பா இருக்கு.

லொக்கேஷன்லாம் செம கப்பி. ஒரு பழங்கால படம் பாக்குற ஒரு ஃபீலே வரல.  வேதாளக் கோட்டை காட்சிகள்ல மட்டும் ஒருசில vfx ஓக்கே. படத்துல மிகக் கேவலமான இன்னொரு விஷயம் வசனம். பாசத்துக்கு முன்னால நா பனி, பகைக்கு முன்னால நா புலி”, நீங்க வேதாளம் நாங்க பாதாளம்ன்னு கப்பியான வசனங்கள். வசனங்களுக்காக அந்த அளவு முக்கியத்துவம் குடுக்கல போல. “அம்மா… தமிழ்நாட்டுக்கே நீங்க ராணி மாதிரி.. ஆனா நா தமிழ்நாட்டுக்கே… அத உடுங்க ஏன் என்வாயல சொல்லிக்கிட்டு” ன்னு தலைவர் சொல்லுவாரே. நம்ம பழைய தளபதி அதயும் விட்டு வைக்கல… “நீங்க இந்த கோட்டைக்கு மட்டும்தான் தளபதி… ஆனா நான்…” அப்டின்னு ஒரு வசனம். இவன அடிக்கிறதுல தப்பே இல்லை

காமெடிங்குற பேர்ல கொன்னு எடுக்குறாய்ங்க. தம்பி ராமைய்யா கும்கில மனசுக்குள்ளயே பேசிக்கிட்டு அருத்த மாதிரி இதுலயும் அதயே பன்னி கொல்றாரு. எங்கயுமே கொஞ்சம் கூட சிரிப்பு வரல. வழக்கமா விஜய் படத்துல பாட்டெல்லாம் நல்ல எடுப்பாய்ங்க. இதுல அதுவும் இல்லை. “எங்க மக்காங்.. எங்க மக்காங்” ல ஒரு டான்ஸ் ஆடுறாரு பாருங்க. சில சமயம் நாயோட காலுங்க எதாவது கயித்துல சிக்கிக்கும். கயித்துல மாட்டிக்கிட்ட கால எடுக்க நாயி முன்னங்கால தூக்கும் பின்னங்கால தூக்கும். சுத்தி சுத்தி லூசு மாதிரி திரியும். அண்ணாவும் அந்த மாதிரிதான் எதோ பன்றாரு அந்த பாட்டுல. வக்காளி இனிமே எவனாவது ஆசை நூறுவகை பாட்ட ஓட்டுனீங்க வெறியாயிருவேன். இத பாருங்க. அத ஓட்டமாட்டீங்க.

என்னது DSP யா? யோவ் சும்மா எல்லா தடவையும் அந்த பச்ச புள்ளையையே ஓட்டுங்க. இங்க எதோ மத்தவன்லாம் செமையா பன்னிருக்க மாதிரியும் DSP மட்டும் ஒழுங்கா பன்னாத மாதிரியும். போங்கப்பா.  சுதீப் ஓக்கே. ஆனா அவர டான்ஸெல்லாம் ஆடவச்சி நம்மள கொடும படுத்திருக்காய்ங்க. ஹன்சிகா அழகு. அவ்ளோதான்.

ஒரு தடவ மக்கள் ஒரு விஷயத்துக்கு சிரிச்சாங்கன்னா எல்லாதடவையும் சிரிப்பாங்கன்னு அர்த்தம் இல்லைங்குறத சிம்புதேவன் புரிஞ்சிக்கனும். பேண்டசி படம் எடுக்குறேங்குற பேர்ல (தமிழ்ல அந்த பேர சொன்னா ரொம்ப கேவலமா இருக்கே) அதாவது fantasy படம் எடுக்குறேங்குற பேர்ல இனியும் எங்கள கொல்லாதீங்க. எந்த genre படம் எடுக்குறோமோ அதுல தெளிவா இருந்து, அதுகேத்த காட்சி மற்றும் காமெடிகள வைக்கிறதுதான் நல்லது. இங்க அந்த தெளிவே இல்லை. கேவலமான திரைக்கதை மற்றும் வசனம். படத்துல வர்ற கேரக்டர்களோட பேருங்கள கேட்டாலே மனுசனுக்கு மண்டை காயிது.


படம் முடிஞ்சி வெளில வரும்போது என்கூட வந்த ஒரு விஜய் ஃபேன்கிட்ட “என்னங்க படம் இவ்வளவு மொக்கையா இருக்கு?”ன்னேன். அதுக்கு அவன் “இது குழந்தைங்களுக்கான படம் பாஸ்” ன்னான். “அப்புறம் என்ன நொன்னைக்கு எறுமை மாடே நீ படத்துக்கு வந்த?” ன்னேன். பத்து செகண்ட் என்னை உத்து பாத்த அவன் “துப்பாக்கிடா” ங்குற சத்தத்த எழுப்பியபடியே கூட்டத்திற்குள் சென்று மறைந்தான்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...