Wednesday, March 3, 2010

விண்ணை தாண்டி வருவாயா....


Share/Bookmark
நண்பர்களே.... யாராவது இந்த படத்துக்கு போகணும்னு ஆசப்பட்டீங்கன்னா, நல்ல plan பண்ணி போங்க. Office la வேல பாக்குறவங்க இந்த படத்த காலைல பாத்துட்டு மதியம் office போயிடலாம்னோ, இல்ல காலேஜ் ல படிக்கிறவங்க இந்த படத்த morning பாத்துட்டு afternoon class ku போயிடலாம்னோ நெனச்சி போனீங்க... செத்தீங்க.... ஏன்னா அவ்ளோ நேரம் ஓடுது இந்த படம். Night show போன விடிஞ்சி தான் வீட்டுக்கு போகலாம்.

இந்த படம் பாக்க என்கூட ஒரு நாலு பேர அழைச்சிட்டு போனேன். படம் முடியும் போது side la இருந்தது ஒரு சத்தம். "ச்சீ... அப்புடியெல்லாம் பண்ணாதீங்க நயன்தாரா...!! " ன்னு.

டேய்
இந்த படத்துல த்ரிஷா தானடா heroine. யாருடா நயனதாராவ கூப்புடுறதுன்னு பாத்தா.... என் பக்கத்துல உக்கார்ந்து இருந்தவன் தூக்கத்துல ஒளரிக்கிட்டு இருக்கான்.... டேய் சனியன் புடிச்சவனே எழுந்திரிட போலாம்" ன்னா bed coffee குடுத்தா தான் வருவேன்னு அடம் புடிக்கிறான்.ஒரு வழியா அவன எழுப்பி கூப்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சி...

நா சொன்ன இந்த ஒரு minus point தாங்க இந்த படத்துல. டக்குன்னு முடிக்க வேண்டிய படத்த ஒரு ரெண்டு கிலோமீட்டர் இழுத்து முடிச்சிருக்காங்க.

படத்தோட title போடும் போதே ரஜினி ரசிகர்கர்களின் முகம் சிவப்பாக மாறுற அளவுக்கு ஒரு கொடுமை நடக்குது. காரணம் 'young super star' simbhu போடுறதுதான். ஆனா படம் முடிஞ்சி வர்றப்போ "ச்ச... போன போகுது போட்டுக்கட்டும்" ன்னு சொல்ற அளவுக்கு நடிச்சிருக்க்காறு சிம்பு. இது வரைக்கும் இப்டி ஒரு சிமபுவ யாரும் பாத்துருக்க மாட்டங்க. அவ்ளோ சூப்பரான நடிப்பு. இவ்ளோ expressions, இவளோ அழகான முகம் இதெல்லாம் இவளோ நாள் எங்க வச்சிருந்தாருன்னே தெரியல....

படம் ஆரம்பிச்ச மொத நிமிஷத்துலேர்ந்து த்ரிஷாவ லவ் பண்ண ஆரம்பிக்கிறாரு. படத்தோட கடைசி நிமிஷம் வரைக்கும் அத மட்டுமே பண்றாரு எ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கோட.

த்ரிஷா தேவதை மாத்ரி வர்றாங்க. இந்த சிம்பு-த்ரிஷா pair ah விட best pair வேற இருக்குமான்னு சந்தேகம் தான். அவ்ளோ அழகா லவ் பண்றாங்க. படத்துல நெறைய scene ல கை தட்டி ரசிக்கிற மாதிரி இல்லாம, feel பண்ணி ரசிக்க வச்சிருக்காங்க.

லவ் story ன்னு வந்துட்டாலே, ஹீரோவோட பேரு கார்த்திக் னு தான் இருக்கணும்னு நடிகர் சங்கத்துல எதாவது சட்டம் போட்டுருக்காங்கலான்னு தெரியல. இந்த படத்துல சிம்பு பேரும் கார்த்திக் தான்.

"இந்த உலகத்துல எத்தனையோ பேரு இருக்கும் போது, நா உன்ன மட்டும் ஏன் லவ் பண்ணேன் ஜெஸ்சி? " இந்த dialogue ah சிம்பு படத்துல ஒரு 40 தடவ சொல்லுவாரு.

" நீ ஏன் என்ன லவ் பண்ண கார்த்திக்?" இந்த dialogue ah த்ரிஷா ஒரு 50 தடவ சொல்லுவாங்க.

ஒரு கட்டத்துல " டேய் கருமம் புடிச்சவனுன்களா... நீங்க லவ்வே பண்ண வேண்டாம்... செத்துருங்கடான்னு " நம்ம சொல்ற அளவுக்கு second half la இழுவை.

இதுக்கும் மேல வழக்கமான கெளதம் படத்தோட வாடை கொஞ்சமும் குறையல. எப்பவும் போல எல்லா சீன்லயும் background voice la narrate பண்றது. வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் ல வர்ற அதே எடத்துல US la ஒரு song. அத விட கொடும வழக்கமா அவன் படத்துல வர்ற மாதரியே 3rd class வசனங்கள்.

"என் பொண்ண உன் பையன் try பண்றான்"

"அவளோட front ah பாத்தத விட back ah தான் அதிகமா பாத்தேன்"

"ஒ..... "வில் ஆரம்பிக்கிற கெளதம் மேனனோட favorite வார்த்தை அடிக்கடி...

இதுமாதிரி வசனங்கள் இந்த மாதிரி படத்துக்கு தேவையா? இவன் திருந்த மாட்டங்க... திருந்தவே மாட்டன்...

எ.ஆர்.ரஹ்மான் first half ல ஹாரிஸ் ஜெயரஜோட feel ah ye குடுத்தாலும் , second half "மன்னிப்பாயா" song வரும் போது, " நா அவன் மாதிரி இல்லீங்கோ... வேற மாதிரீங்கோ" ன்னு proof பண்ணிடுறாரு.

"த்ரிஷா கெடைக்கலன்ன திவ்யா" ங்குற அருமையான ஒரு message ah இந்த படத்துல சொல்லிருக்காங்க... கண்டிப்பா ஒரு தடவ பாக்கலாம்..(தியேட்டருக்கு போனா ஒரு தடவ பாத்து தானப்பா ஆவனும்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது).

Friday, December 18, 2009

நா அடிச்சா தாங்க மாட்ட ..


Share/Bookmark

இந்த பதிப்பில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் யாவும் உண்மையே. ஆனா யார் மனதையும் புண்படுத்துவற்காக அல்ல.

இடம்: விஜய் வீடு.
நாள் : வேட்டைக்காரன் ரிலீஸ் ஆனா மூன்றாவது நாள்.

விஜய்: என்னப்பா இப்புடி ஆயிடுச்சி. போன வாரம் தான் சன் டிவி ல "வருகிறது வேட்டைக்காரன்" ன்னு போட்டாங்க. இந்தவாரம் "இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, திரைக்கு வந்து சில நாட்களே ஆனா" ன்னு போடா ஆரம்பிச்சிட்டாங்க. ரொம்ப கஷ்டமா இருக்குப்பா...

எஸ்..சந்திரசேகர்: ஆமாண்டா மகனே... படம் வர்றதுக்கு முன்னாடி டிரைலர் மட்டும் 25 நாள் ஓடுனிச்சி. ஆனா படம் நாலு நாள் கூட தாக்கு புடிக்க மாட்டேங்குதேப்பா...

விஜய்: ஆமாப்பா.. என்னோட அடுத்த படமாவது ஒரு வாரம் ஓடுற அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி படமா இருக்கணும்.

எஸ்..சி: அதுக்கு தான் உன்னோட அடுத்த படத்த நானே தயாரிச்சி டைரக்ட் பண்ணலாமுன்னு இருக்கேன்.

விஜய்: என்பா.. என் படம் நாலு நாள் ஓடுறது உனக்கு பொறுக்கலையா. நீ மூடிக்கிட்டு, எல்லா ஆடியோ ரிலீஸ் பங்க்ஷன் லயும் " என் மகன் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்" ன்னு பேசுறதோட நிறுத்திக்க.

எஸ்..சி: நானும் நாலு வருஷமா இத தான் எல்லா மேடயிலையும் சொல்லிக்கிட்டிருக்கேன். எல்லாரும் இத கேட்டுட்டு ஓரமா போய் நின்னு, கெக்க புக்க கெக்க புக்க ன்னு சிரிச்சிட்டு " போங்க சார்.. காமெடி பண்ணாதிங்க" ன்னு சொல்லிட்டு போய்டுரானுங்க.

விஜய்: அட விடுப்ப. இவிங்க எப்பவுமே இப்புடி தான். இனிமே நீ " விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆர்" ன்னு சொல்லிப்பாரு என்ன reaction ன்னு பாப்போம்.

எஸ்..சி: அப்ப நம்ம வீட்டுக்கு permanent ah ஒரு ஆம்புலன்ஸ் வாங்கிடுப்பா. எனக்கு அடிக்கடி தேவைப்படும். ஆனா எது பேசுறதா இருந்தாலும் நானே பேசிக்கிறேன். நீ இனிமே பிரஸ் மீட்டுக்கு ஏதும் போய் பேசிடாத. திருச்சி ல பேசும்போது வெறிநாய் கொலைக்கிற மாதிரி விட்டியே ஒரு எபக்ட்டு.... எல்லாரும் எண்ட வந்து " என்ன சார் உங்க பையன நாய் கடிச்சிருச்சா?" ன்னு கேக்குராயிங்க.

விஜய்: சரி விடுப்பா... நம்ம சண்டைய அப்புறம் வச்சிக்குவோம்.. என்னோட அடுத்த படத்துக்கு கதை சொல்றதுக்காக வெளில டைரக்டருங்க எல்லாம் wait பண்ணிட்டு இருக்காங்க. வரச்சொல்லு.

முதல்ல ஒருத்தரு வர்றாரு.

டைரக்டர்: சார், இந்த படத்துல கதை தான் சார் ஹீரோ.

விஜய்: நிறுத்து. கதைங்கற வார்த்தைய கேட்டாலே எனக்கு அலர்ஜியா இருக்கு.
அதுக்கு தமிழ் நாட்டுல வேற ஆளுங்க இருக்காங்க. போயிட்டு அடுத்த ஆள வர சொல்லு. நம்மள பத்தி தெரியாம வந்துட்டிங்க போலருக்கு.

அடுத்தவர் வர்றாரு.

டைரக்டர் 2: வணக்கம் சார்.

விஜய்: வணக்கம் லாம் இருக்கட்டும். ஆரம்பி .

டைரக்டர் 2: சார் இந்த படத்துல நீங்க இது வரைக்கும் பண்ணாத ஒரு புது கேரக்டர் சார். படத்துல நீங்க ரிகஷா ஓட்டுறீங்க. படத்தோட பேரு "மாட்டுக்காரன்".

விஜய்: யோவ். உனக்கு அறிவு இருக்கா.. படத்துக்கு மாட்டுக்கரன்னு பேரு வச்சிட்டு ரிக்ஷா ஓட்டறேன்னு சொல்ற.

டைரக்டர் 2: ஏன் சார், நீங்க மட்டும் கில்லி ன்னு பேர் வச்சிட்டு கபடி விளையாண்டிங்க. போக்கிரின்னு பேர் வச்சிட்டு போலீஸ் ah நடிச்சீங்க. வில்லு ன்னு பேர் வச்சிட்டு படம் full ah துப்பாக்கியாலேயே சுட்டுகிட்டு இருந்தீங்க. வேட்டைக்கரன்னு பேர் வச்சிக்கிட்டு ஆட்டோ ஒட்டுநீங்க. அப்பல்லாம் உங்க அறிவு எங்க சார் போச்சு?

விஜய்: நீ ரொம்ப பேசுற. உனக்கு சான்ஸ் கெடையாது. கெளம்பு. அடுத்தவன வரச்சொல்லு. அவனாவது எனக்கு புடிச்ச மாதிரி கதை சொல்றானா பாக்கலாம்.

அடுத்தவரு உள்ள வர்றாரு.

டைரக்டர் 3: சார் இந்த படத்துல மூணு வில்லன் சார். நாலு fight சார். அஞ்சி குத்து பாட்டு சார். அஜித்த தாக்குற மாதிரி ஒரு ஆறு பஞ்ச் டயலாக் சார். ஒரு சீன்ல ரஜினி மாதிரி டான்ஸ் ஆடுறீங்க சார். ஹீரோயின் ah ஆந்திர லிருந்து ஏறக்குறோம் சார்.

விஜய: super.. excellent.. fantastic.. bale... நாளைக்கே பூஜா போட்டு படத்த ஆரம்பிக்கிறோம். அப்புறம் படத்தோட டைட்டில் நெருப்பு மாதிரி இருக்கணும்.

டைரக்டர் 3: அப்ப படத்துக்கு "நெருப்பு" ன்னே பேர் வச்சிக்கலாம் சார்.

விஜய்: சூப்பர். உங்களுக்கு பேரரசு மாதிரி பெரிய எதிர்காலம் இருக்கு.
எஸ்..சி: என்பா அப்ப கதை?

விஜய்: அத படம் எடுக்கும் பொது டைம் இருந்த யோசிச்சிக்கலாம் பா. இந்த நெருப்பு அடுத்த வேட்டைக்கு கெளம்பிட்டான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...