Monday, April 17, 2017

சிவலிங்கா – சந்திரமுகி பார்ட் 6!!!


Share/Bookmark
சந்திரமுகி பட்த்துல ரஜினி ஜோதிகாகப் பத்தி ஒரு வசனம் சொல்லுவாரு. கங்கா சந்திரமுகி அறைக்குப் போனா.. கங்கா சந்திரமுகியா நின்னா.. கங்கா சந்திரமுகியா நடந்தா.. கங்கா சந்திரமுகியாவே தன்னை நினைச்சிக்கிட்டான்னு. இந்த வசனம் ஜோதிகாவுக்கு பொருந்துச்சோ இல்லையோ… நம்ம பி.வாசு சாருக்குத்தான் கரெக்டா பொருந்துது. மனுசன் சந்திரமுகியாவே மாறிட்டாரு போல.. அத விட்டு வெளில வரவே மாட்டேங்குறாரு. கடந்த 12 வருசத்துல கிட்டதட்ட  நாலு சந்திரமுகி எடுத்துருக்காரு.





முதல்ல மலையாள மணிச்சித்ரதாள கன்னடத்துல விஷ்ணுவர்தன வச்சி ஆப்தமித்ரான்னு எடுத்தாரு. அது ஹிட்டான உடனே அத சந்திரமுகின்னு ரஜினிய வச்சி தமிழ்& தெலுகுல எடுத்து மெகா ஹிட்டாக்குனாரு. திரும்ப கன்னடத்துக்கே போயி ஆப்தமித்ராவோட சீக்குவல் ஆப்தரக்‌ஷகாவ எடுத்தாரு. படம் எடுத்து முடிச்சோன விஷ்ணுவர்த்தன் இறந்துட்டாரு. ச்ச… ச்ச… படம் பாத்ததாலயெல்லாம் அவரு சாகல… அந்தப் படம் பாத்தா நம்மதான் சாவோம். அந்த அளவுக்கு இருக்கும். இருந்தாலும் விஷ்ணுவர்தனோட கடைசிப் படம்ங்குறதாலா படம் பிச்சிக்கிட்டு ஓடுச்சி. அதே படத்த தமிழ்ல சந்திரமுகி-2ன்னு எடுக்க ரஜினிய அப்ரோச் பன்னி அது முடியாமப் போக, அதே கதைய தெலுகுல “நாகவல்லி”ங்குற பேர்ல வெங்கடேஷ், அனுஷ்காவ வச்சி எடுத்தாரு. அதாவது வெங்கடேஷ் அந்தப் பட்த்துல சந்திரமுகி சரவணனோட சிஷ்யானா வந்துருப்பாரு. சீக்குவல்னவுடே என்னென்னவோ நினைச்சிடாதீங்க. ஹீரோ ஹீரோயின மட்டும் மாத்திட்டு அதே கதைய அப்டியே திரும்ப எடுத்துருப்பாரு.

ஆக மொத்தம் P. வாசு கணக்குல நாலு சந்திரமுகி. இது இல்லாம அரண்மனைங்குற பேர்ல சுந்தர்.சி வேற ரெண்டு தடவ சந்திரமுகிய எடுத்துருக்காரு. அது வேற கணக்கு விடுங்க. இந்தப் பக்கம் நம்ம ராகவா லாரண்ஸ்.. கடந்த பத்து வருஷத்துல அவர் முனி மட்டும்தான் எடுத்துருக்காரு. அடுத்த பத்து வருஷத்துலயும் முனி மட்டும்தான் எடுப்பாரு போல. ஏன்னா இன்னும் முனி-4, முனி-5ன்னு நிறைய வரவேண்டியிருக்கு.

இப்ப இந்த பி.வாசு, ராகவா லாரண்ஸ் ங்குற ரெண்டு வெவ்வேறு மந்தையில் இருந்த ஆடுகள் ஒண்ணா சந்திச்ச போது ஏற்பட்ட அசம்பாவிதம்தான் இந்த சிவலிங்கா. படம் முழுக்க சந்திரமுகியும், முனியும்தான் மாத்தி மாத்தி ஓடுது. க்ளைமாக்ஸ்ல பி.வாசு இயக்கத்துல கவுண்டரும் சத்யராஜூம் இணைந்து நடிச்சி மெகா ஹிட்டான மலபார் போலீஸ் படத்தோட க்ளைமாக்ஸ் சீன அப்டியே எடுத்து சேத்துக்கிட்டுருக்காங்க. அவ்ளோதான். ஏற்கனவே பி.வாசுக்கு நாலு சந்திரமுகி. இப்ப சிவலிங்கா ஒண்ணு அஞ்சி. சிவலிங்காவே கன்னட சிவலிங்கா படத்தோட ரீமேக்தான். ஆக மொத்தம் ஆறு… ச்சியேர்ஸ்.. ச்சை.. நமக்கே கண்ணக்கட்டுது.

படத்தோட மிகப்பெரிய ப்ளஸ் நம்ம வடிவேலு. ரொம்ப நாளுக்கு அப்புறம் அவரோட காமெடி ஒர்க் அவுட் ஆகியிருக்கு. நமக்கெல்லாம் புடிச்ச பழைய வடிவேலுவா செமையா சிரிக்க வச்சிருக்காரு. ஒரு நாலஞ்சி சீன் தான் வர்றாரு. ஆனா வந்த சீனெல்லாம் செம காமெடி. எப்புடி திருடுனேன்னு ஊர்வசிக்கிட்ட சொல்லிக்காட்டுற சீன் தாறு மாறு.

அடுத்து ராகவா லாரன்ஸ்.. ஆளு சூப்பரா இருக்காரு. நல்லா டான்ஸ் ஆடுறாரு. ஆனா என்ன ரொம்ப அதிகப் பிரசங்கித் தனம் பன்றாரு. முனி-1 ல பேயப்  பாத்து பயப்புடுவேன்னு ஆரம்பிச்சி இன்னும் அதே ரம்பத்தப் போட்டுக்கிட்டு இருக்காரு. எப்ப நிறுத்தப்போறாருன்னு தெரியல.

போன படத்துல “மக்கள் சூப்பர் ஸ்டார்”ன்னு போட்டு எல்லார்கிட்டயும் நல்லா வலுவா வாங்கிக் கட்டிக்கிட்டாரு. இதுல என்னன்னு பாத்தா அவரு பேரு சிவ லிங்கேஸ்வரன்… அதுலயும் படத்துல அடிக்கடி ”இந்த லிங்கா… சிவலிங்கேஸ்வரன் இத செய்யாம விடமாட்டன்…. லிங்கா இத கண்டுபிடிக்காம விடமாட்டான்” ன்றாராப்ள.. இன்னும் உச்சக்கட்டம் இண்ட்ரோ சாங்கு. இவரு சின்னக் கபாலியாம்… பல பேரு ரஜினி பேர சொல்லாம சூப்பர்  ஸ்டாருன்னு போட்டுக்குறானுங்க… இவரு ரஜினி படத்த ஸ்க்ரீன்ல காமிச்சிட்டு நாந்தான் அடுத்த ரஜினின்னு சொல்லிக்கிறாரு. மத்தபடி அவய்ங்களுக்கும் இவருக்கும் எந்த வித்யாசமும் இல்லை. சின்னக் கபாலி சொல்லிக்கிட்டு திரிஞ்சி சின்னப் பகவதி மாதிரி எவன்கிட்டயாவது மாத்து வாங்குனாதான் தெளியிவாரு போல.

பி.வாசுவோட பையன் ஒரு ரோல் பன்னிருக்காரு. அந்த ரோலுக்கு கரெக்ட்டா மேட்ச் ஆயிருக்காரு. நல்லா நடிக்கவும் செஞ்சிருக்காரு. தமன் பாட்டெல்லாம் கேக்குற மாதிரிதான் போட்டுருக்காரு. பின்ணனி இசைதான் கொஞ்சம் இறைச்சல்.

மைனஸ் அப்டின்னு சொல்லனும்னா எக்கச்சக்கமா சொல்லலாம். மொதல்ல ஏற்கனவே பலதடவ பாத்து பழக்கப்பட்ட அதே கதை திரைக்கதை. இந்தப் படத்த ஒரு பேய் படமா இல்லாம ஒரு க்ரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் டைப் படமா எடுத்துருந்தா மலபார் போலீஸ் மாதிரி நல்ல  படமா வந்திருக்க வாய்ப்பு இருந்துருக்கும்.

அடுத்து ரித்திகா சிங்…சந்திரமுகில ஜோதிகா பன்ன ரோல பன்னிருக்காங்க. அந்தப் புள்ளைக்கு நடிக்கவும் வரல.. அந்த ரோலுக்கு செட்டும் ஆகல.. மேக்கப்பும் சரியில்லை… ஸ்க்ரீன்ல வந்து எதோ பன்னிட்டு இருக்கு. ஊர்வசியும் அதே தான்…

இன்னொரு கொடுமையான விஷயம் மேக்கப். சமீப காலத்துல இவ்வளவு மோசமான மேக்கப்ப படங்கள்ல பாத்த்தே இல்லை. கரகாட்டம் ஆடுறப்போ மூஞ்சி ஃபுல்லா ரோஸ் பவுட நல்லா அள்ளி அப்பி, அடிக்கிற கலர்ல ஒரு லிப் ஸ்டிக் போட்டுக்கிட்டு இருப்பாங்களே… அதே மாதிரிதான் இருக்கு இதுல ரித்திகா சிங், ஊர்வசி.. பனுப்பிரியா எல்லாரோட மூஞ்சும். மூஞ்சில சுண்ணாம்ப விட்டு அப்பி விட்டமாதிரி. அதுவும் இந்தப் படத்துல போட்டுருக்க லிப் ஸ்டிக் கலரெல்லாம் நா தெலுங்குப் படத்துல கூட பாத்தில்லை. படத்த கலர்ஃபுல்லா காமிக்கிறதுக்காக முயற்சி செஞ்சி படம் ஃபுல்லா ஒரே ஊதா கலரு… அதுவும் அடிக்கிற கலரு.. யப்பா… மிடில.

இன்னொரு பெரிய கடுப்பு என்னன்னா படத்துல வர்ற கேரக்டர்கள் நான் ஸ்டாப்பா பேசிக்கிட்டே இருக்காங்க.. ஒவ்வொருத்தரோட வாய்ஸ் intensity யும் பயங்கர அதிகம். காது கொய்யிங்குது. இவங்க சும்மா இருந்தாலும் தமன் விட மாட்ராப்ள.. எதாவது ஒரு மீசிக்க போட்டு காத கிழிச்சி விடுறாப்ள..  படத்துல ஒரு pleasant டான சீன் கூட இல்லை. நல்ல வேளை கோவை சரளா படத்துல இல்லையேன்னு இறைவனுக்கு நன்றிய தெரிவிச்சிக்கிட்டேன். பாக்குற ஐடியா இருந்தா நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டல பாருங்க.


மொத்ததுல வடிவேலு ஒருத்தருக்காக வேணா ஒருதடவ போய்ப் பாக்கலாம். மத்தபடி சிறப்பா சொல்ற மாதிரி ஒண்ணும் இல்லை. 

Monday, April 10, 2017

காற்று வெளியிடை – ”மணி சார்” என்னும் பேட்டைக்காரன்!!!


Share/Bookmark
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை மணி சாருக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. ஒரு மனிதரால் எப்படி என்பதுகள் முதல் இப்பொழுது வரை மக்களின் ரசனையைப் புரிந்துகொண்டு திரைப்படங்களைக் கொடுக்க முடிகிறது? எப்படி இப்படி updated ஆக இருக்கிறார் என்பதெல்லாம் மிகவும் ஆச்சர்யமூட்டும் விஷயங்கள். அவரை விடுங்கள். உங்களின் சினிமா ரசனை எந்த அளவு உள்ளது? சமூக மாற்றங்களை நீங்கள் எந்த அளவு உள் வாங்கிக் கொள்கிறீர்கள்? ஒவ்வொரு காட்சியிலும் வைக்கப்படும் குறியீடுகள் உங்களுக்கு புரிகின்றனவா இல்லையா? என்பதயெல்லாம் சோதித்துப் பார்க்க வேண்டுமானால நீங்கள் முதலில் இந்த காற்று வெளியிடையைப் பார்க்க வேண்டும். ஒரு சினிமா எப்படி எடுக்கப்பட வேண்டும் என இன்றைய இயக்குனர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாகவே இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார். என்ன? பக்குன்னு தூக்கிப் போடுதா? படம் நல்லாருந்தா இப்டியெல்லாம் எழுதலாம்னு இருந்தேன். ஆனா பாருங்க அப்படிப்பட்ட கெட்ட சம்பவங்கள் எதுவும் நடக்கல.

தமிழ் சினிமாவில் இதுபோன்ற அரிய காவியங்கள் வாய்ப்பது மிகவும் அரிது. ஒவ்வொரு ஃப்ரேமையும் செதில் செதிலாக கருக்கி…. ச்சி… செதுக்கி உருவாக்கப்பட்ட இந்தக் காவியத்தை ஒரே ஒரு வார்த்தையில் நன்றாக இல்லை என்று கூற மக்களுக்கு எப்படித்தான் மனது வருகின்றது என்று தெரியவில்லை. அதனால ஒரு வார்த்தையில சொல்லாம ஒரு நாலஞ்சி பாராவுல கழுவி ஊத்துவோம் வாங்க.

மணி ரத்னத்தைப் பற்றிய விமர்சன்ங்கள் எதையாவது முன் வச்சாலே அவரது ரசிகர்கள் (?) “அவரு நாயகன்லாம் எப்டி எடுத்துருந்தாரு தெரியும்ல… தளபதியெல்லாம் மாஸ்டர் பீஸ் தெரியும்ல”ன்னு ஆரமிச்சிருவாய்ங்க. யாருப்பா இல்லைன்னு சொன்னா ? வேணும்னா அந்தப் படத்தையெல்லாம் டிவில போடும்போது பாத்துட்டு  அமைதியா இருங்கய்யா.. இந்தப் படத்துக்கெல்லாம் ஏண்யா கொடை புடிக்கிறீங்க. நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி எல்லாத்துலயும் மொக்கை வெறி ஊறிப்போன ஒருத்தராலதான் இவ்வளவு பெரிய மொக்கைய எடுக்க முடியும்.

இந்த மணி சாரும் சரி கெளதம் மேனனும் சரி.. யாருக்காக படம் எடுக்குறாங்கங்குறதுல பெரிய சந்தேகமே இருக்கு. தமிழ் இயக்குனர்கள். தமிழ்லதான் படம் எடுக்குறாங்க. ஆனா பாருங்க படத்துல வர்ற கேரக்டர்கள் எதுவுமே தமிழ்நாட்டுல இருக்கவங்க மாதிரியோ தமிழ் கலாச்சாரத்தோட ஒன்றியவர்களாகவோ இருக்காது. அதயெல்லாம் விடுங்க… படத்துல பேசுற வசனங்கள் ஒண்ணாவது நம்மாளுங்க பேசுற மாதிரி இருக்கா? 

இந்த  trilingual படம்ன்னு கேள்விப்பட்டுருப்பீங்க. உண்மையான ட்ரை லிங்குவல் படம்னா அது இதுதான். வக்காளி படத்துலயே மூணு லாங்குவேஜ் பேசுறாய்ங்க. அதுல தமிழ் எப்பயாச்சும் அப்பப்ப வந்துட்டு போகுது. ஒரு புள்ளை கார்த்தியப் பாத்து கேக்குது ” When we are gonna have our முதல் பிள்ளை? ” ன்னு. ஏன் ஆத்தா ஒரு வார்த்தைய மட்டும் தமிழ்ல பேசுற? அதயும் இங்கிலீஷ்லயே கேட்டுருக்கலாமே? 

உள்ள என்ன பேசுறானுங்களோ.. ஆனா படத்தோட பேரும், பாடல்களும் தூய தமிழ்ல வச்சிடுறாய்ங்க. மணி சாருக்கு ஒரு வைரமுத்து… கெளதமுக்கு ஒரு தாமரை. இத மட்டும் ஏன் தமிழ்ல வைக்கிறீங்க? ஊர ஏமாத்தவா? “உள்ளே உங்களது ஆங்கிலப் பூர்வீகமே இருக்கலாம் ஆனால் தலைப்பு தமிழில்தான் இருக்கவேண்டும்” இம்சை அரசன்ல சொன்னத கரெக்ட்டா ஃபாலோ பன்றது இவருதான்.  

ஒரு காட்சி கூட இயல்பாவே இல்லை. ரொம்ப ஆர்டிஃபீஷியல். அதுவும் வசனம் பேசுனா ஒண்ணு இங்கிலீஷ்ல பேசுறானுங்க. தமிழ்ல பேசச் சொன்னா படக்குன்னு ” “நெறித்த திரைகடலில் நின்முகம் கண்டேன்” ன்னு கவிதையில இறங்கிடுறானுங்க. ஏண்டா ஒண்ணு தூங்குற இல்லை தூர்வார்ற. நார்மலாவே பேச மாட்டீங்களா? 

கார்த்தியும், அந்தப் புள்ளை அதிதீயும் பேசிக்கிறாங்க.. ”இனிமே நம்ம மீட் பன்னக்கூடாதுன்னு நினைக்கிறேன்… இது டேஞ்சரஸ்னு தோணுது….” டேய்.. கொஞ்சம் இருங்க.. இத நா எங்கயோ கேட்டுருக்கேனே.. இது அதுல்ல…. “நா உன்ன லவ் பன்னல… நீ அழ்கா இருக்கேன்னு நினைக்கல… ஆனா இதெல்லாம் நடந்துருமோன்னு பய்மா இருக்கு”  எத்தனை தடவ?

படத்துல ரெண்டு பாவப்பட்ட ஜீவன்கள்ல ஒண்ணு கார்த்தி… நல்ல இருந்த மனுசன “சார் நீங்க மீசைய மட்டும் எடுத்தீங்கண்ணா நல்லா சாக்லேட் பாய் மாதிரி இருப்பீங்க சார்…. பொண்ணுங்கல்லாம் சும்மா அள்ளிக்குவாங்க”ன்னு என்னென்னமோ சொல்லி மண்டையக் கழுவி மீசைய எடுக்க வச்சிட்டாய்ங்க. ஆனா அதப் பாக்க ரண கொடூரமா இருக்கு. அதுவும் கார்த்தியும், அதிதீயும் ஒண்ணா க்ளோஸப் காட்சிகள்ல காமிக்கும்போது யாரு கார்த்தி யாரு அதிதீன்னு கண்டுபுடிக்கிறதே பெரிய கஷ்டமா இருக்கு. 

அந்த இன்னொரு பாவப்பட்ட ஜீவன் யாருன்னா நம்ம RJ பாலாஜி. சாதரண மனுஷன் ஒரு நிமிஷத்துக்கு 200 வார்த்தை பேசுனான்னா RJ பாலாஜி நானூறு வார்த்தை பேசுறவரு. அந்தாளப் போய் இப்பிடி ஆக்கிவிட்டுட்டீங்களேடா… அதுக்கு பேசாம அவருக்கு ஒரு ஊமை கேரக்டரா குடுத்துருக்கலாம். பேசுறதுக்கு தான் RJ பாலாஜி வேணும்? சும்மா வந்துட்டு போறதுக்கு யாரையாவது போட்டுருக்கலாமே..
படத்துல கார்த்தியோட ஃபேமில ஒரு பியூட்டிஃபுல் பேமிலி… மொதல்ல கொழந்தை பெத்துக்கிட்டு தான் அப்புறம் கல்யாணம் பன்னிக்குவாய்ங்க. கார்த்தி அண்ணன் ஒரு புள்ளைய ஒன்பது மாசமாக்கிட்டு அப்புறம் கல்யாணம் பன்றாப்ள… ஒரு வேளை செலவை கம்மி பன்றதுக்காக வளைகாப்பயும் கல்யாணத்தையும் ஒண்ணா வச்சிருக்கானுங்களோ? இது கார்த்தி அதிதீகிட்ட  “எங்கம்மா எனக்கு பாரதியாரயும் மீன் குழம்பையும் ஊட்டி வளர்த்தவங்க.”ன்னு பெருமையா சொல்றாப்ள. அப்டியே இவனுக்கு கொஞ்சம் கள்ளிப்பாலையும் ஊட்டி வளர்த்துருந்தா இவ்வளவு தொல்லை இருக்காது. 

சரி கார்த்தி மூஞ்சிதான் சகிக்கல… அந்த ஹீரோயின் மூஞ்சாவது நல்லாருக்கான்னு பாத்தா அது அதுக்கும் மேல.. ஹீரோயின் கூட ஒரு துண்டு பீடி எப்பவும் ஒட்டிக்கிட்டே வருது. அதாங்க நம்ம ருக்மணி.. அது ஏன்னு எனக்கு அப்புறம் தான் புரிஞ்சிது. அதெல்லாம் பக்கத்துல இருந்தாதான் அதிதீ கொஞ்சமாவது அழகாத் தெரியும்னுதான் கூடவே சுத்த விட்டுருக்கானுங்க. 



கார்த்தி ஜெயில்ல இருந்தபடி அதிதீய நினைச்சி புலம்புறாரு. ”கண்ண மூடுனா உன் முகம் தெரியிது… உன் சிரிப்பு தெரியிது… உன் பெரிய கண்ணு தெரியிது…. “ டேய் தியேட்டர்ல எல்லாரும் எழுந்து வெளில தம் அடிக்க போறானுகளே அது தெரியிதாடா? 

கார்த்திய ஒரு ப்ளே பாய் மாதிரி காமிக்கிறாய்ங்க. கார்த்திக்கு இந்தப் புள்ளை நாலாவது. அப்ப அந்தப் புள்ளைக்கு கார்த்தி ஏழாவதான்னு கேப்பீங்க? அதப்பற்றிய டீட்டெய்லிங் படத்துல இல்லாமப் போனது கொஞ்சம் வருத்தம்தான். கார்த்தி அதிதீய சின்சியரா லவ் பன்றாரு.. ஆனா கல்யாணம் பன்னிக்க மாட்டாரு. சண்டை போடுறாரு. அந்தப் புள்ளை கோச்சிக்கிட்டு போனா பாட்டுப்பாடி கூப்டு வருவாரு. திரும்ப சண்டை போடுறாரு. திரும்ப கோச்சிக்கிட்டு போகுது… டேய்ய்ய்ய்ய்… என்னடா வாழைப்பழக்காமெடி திரும்பத் திரும்ப அதயே பன்னிக்கிட்டு இருக்கீங்க. திட்டுறதுக்கு வார்த்தை இல்லாம திரும்பத்திரும்ப அதே வார்த்தையச் சொல்லி திட்டுறியேடாங்குற மாதிரி எடுக்குறதுக்கு சீன் இல்லாமா திரும்பத் திரும்ப அதயே எடுத்துக்கிட்டு இருந்துருக்காரு நம்மாளு.

மணி சாரோட இந்தப் படம் ஒரு கொரியன் சீரியலோட காப்பின்னு ஊருக்குள்ள பரவலா பேசிக்கிறாங்க. அது அப்டியே இருக்கட்டும்… நம்ம அந்த லெவலுக்கு போக வேணாம்… ஒரு நாலு மாசம் முன்னால வாகான்னு ஒரு படம் வந்துச்சி. கிட்டத்தட்ட அதே நம்ம காற்று வெளியிடையும். பாக்கிஸ்தான் ஆர்மிக்கிட்ட மாட்டுன ஒரு இந்திய வீரர், அங்கருந்துக்கிட்டே அவரோட லவ்வ நினைச்சிப் பாப்பாரு. பாக்கிஸ்தான் ஆர்மிக்கிட்டருந்து தப்பிக்கிற காமெடியெல்லாம் அதே வாகாதான்.

பாக்கிஸ்தான் பார்டர்ல கார்த்தி வண்டி ஓட்டிக்கிட்டு வரும்போது வழில வண்டிய பஞ்சர் ஆக்குறதுக்கு ஸ்பைக்ஸ் எல்லாம் போட்டு ஒரு நாலு பாக்கிஸ்தான் போலீஸ் நிப்பானுங்க. நம்மாளு டூவீலர் காரனுங்க ஸ்பீட் ப்ரேக்கர மேல ஏத்தாம சைடுல விட்டு ஓட்டிக்கிட்டு போவானுங்களே.. அதே மாதிரி வண்டிய நேராவிடாம சைடுல விட்டு தப்பிச்சிடுறாரு… அடேய்… பார்டருக்கு உண்டான மரியாதை போச்சேடா உங்களால. வாகா ஒரு காட்டு மொக்கைப் படம். ஆனா காற்று வெளியிடை பாத்தப்புறம் அப்டி நினைச்சது தப்பு தப்புன்னு கண்ணத்துலயே போட்டுக்கிட்டேன். 
டெட் பாடிக்கு அலங்காரம் பண்ணி பன்னீரெல்லாம் தளிச்சி வைக்கிற மாதிரிதான் ஏ.ஆர்.ரஹ்மானோட இசையும், ரவி வர்மனோட ஒளிப்பதிவும். கதையும் திரைக்கதையும் செத்துக் கிடக்குறப்போ, இசையையும் ஒளிப்பதிவையும் வச்சிக்கிட்டு என்ன செய்யிறது?

மணி சார்.. நீங்க  படம் எடுக்குறதெல்லாம் சரி.. ஆனா யாருக்காக எடுக்குறீங்கன்னுதான் தெரியல. நீங்க எடுக்குற படமெல்லாம் தமிழுக்கான படமோ தமிழர்களுக்கான படமோ இல்லைன்னு மட்டும் உறுதியாச் சொல்ல முடியும். புது இளம் இயக்குனர்களே இப்பல்லாம் படத்துல லவ்வுங்குறத வெறும் ஊறுகா மாதிரிதான் தொட்டுக்கிட்டு படம் எடுக்குறாங்க. ஆனா நீங்க அந்த காலத்துலயே புரட்சி பன்னவரு… இப்ப வந்து முழு நீளக் காதல் திரைப்படம் எடுத்துக்கிட்டு திரியிறீங்க. அட நல்லா எடுத்தாலும் பரவால்ல.. நமக்குதான் வரலைல்ல… அப்புறமும் ஏன் அதயே கட்டிகிட்டு அழனும்… வேற பக்கம் வண்டியத் திருப்புங்க. எதாவது தேறுதா பாப்போம். 

நீங்களே சொந்தமா படம் தயாரிக்கிற வரைக்கும் உங்க மனசுல என்ன தோணுதோ அதத்தான் எடுக்கப்போறீங்க.. மெட்ராஸ் டாக்கீஸ இழுத்து மூடி அடுத்த தயாரிப்பாளர்கிட்ட கதை சொல்லி படம் எடுக்க வேண்டிய நிலமை வந்தால் இன்னும் கொஞ்சம் பெட்டரா பன்னுவீங்கன்னு நம்புறோம்.. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...