Tuesday, September 22, 2009

குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்


Share/Bookmark
வெடி குண்டு ன்னு சொன்னா யாருக்கு வேணா பயமா இருக்கும். ஆனா நம்ம தமிழ் நாட்டு காரங்களுக்கு மட்டும் பயமாவே இருக்காது. ஏன்னா நம்ம தமிழ் சினிமா மக்கள் கிட்ட வெடிகுண்ட பத்தி அவ்வளவு நல்ல விதமா சொல்லிருக்காங்க. பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் குண்டு வெடிச்ச தான் மூஞ்சயே காட்டுவாங்க. அதுலையும் நம்ம கேப்டன் விஜயகாந்த் படம்னா அவரோட intro scene ku atleast நாலு குண்டாவது வெடிக்கனும்.அப்ப தான் அவரு வருவாரு.

வில்லன் வீசுன குண்ட அப்புடியே கவ்வி புடிச்சி திரும்ப அவனுக்கே வீசுறது, அப்புறம் வெடிகுண்ட வச்சி FOOT BALL ஆடுறது (ஜெயம் ரவி) , கூலிங் கிளாஸ் கலட்டுனா குண்டு வேடிக்குறது ( வில்லு விஜய்) மாதிரியான சூப்பர் சீன் எல்லாம் வக்கிரத்துக்கு நம்மாள மட்டும் தான் முடியும்.

அதுலயும் கிளைமாக்ஸ் ல வர்ற வெடிகுண்டு காட்சிகள் தான் உச்ச கட்ட காமெடி.

வில்லன் ஏதாவது ஒரு பொது இடத்துல bomb வச்சிருவாரு. அதிகமா இதுவரைக்கும் பாம் வைக்கப்பட்ட இடம் hospital தான். அதிகமா வச்சவரு நம்ம ரகுவரன் தான். வச்சிட்டு பேசாம இல்லாம ஹீரோவுக்கு அத போன் பண்ணி சொல்லிடுவாரு.

"அந்த ஹாஸ்பிடல் ல bomb இருக்கு. முடிஞ்சா எடுத்து பாரு..... ஹா ஹா..."

அப்பறம் என்ன.... ஹீரோ வுக்கு தெரிஞ்சா எந்த bomb வெடிக்கும்?. அடுத்த ரெண்டாவது நிமிஷத்துல ஹீரோ அந்த ஹாஸ்பிடல் ல இருப்பாரு. ஹாஸ்பிடல் லருந்து எல்லாரும் வெளில ஓடி வருவாங்க... இவரு உள்ள போவாரு.... அந்த சமயம் ஒரு பெரியவர் கால் தடுக்கி கீழ விழுவாறு... அவர வேற ஹீரோ தூக்கி வெளில கொண்டு பொய் விட்டுட்டு திரும்ப bomb ah தேடுவாரு. கடைசில
"டிக் டிக் ....டிக் டிக்..." bomb ah கண்டுபுடிச்சிருவாறு...

அது ஒரு digital display ல டைம் ஓடிக்கிட்டிருக்கும்...

"பாம் ச்குவார்டு கூட இருப்பாங்க... " அவங்க அந்த பாம பாத்த உடனே சொல்லிடுவாங்க....
" Very Powerful RDX.... இந்த bomb ah ரொம்ப complicated ah, diffuse பண்ண முடியாத படி டிசைன் பண்ணிருக்காங்க... எங்களோட service ல இப்புடி ஒரு பவர்புல் பாம பாத்ததே கிடையாது" ன்னு சொல்லிட்டு அவங்களும் கெளம்பிடுவாங்க... இப்ப நம்மாளு மட்டும் தனியா...

"இன்னும் 30 செகண்ட் தான் இருக்கு.... "

அந்த பாம் ல மஞ்ச கலர், சிவப்பு கலர், நீல கலர் ல மூணு வொயர் இருக்கும். அதுல எதாவது ஒயர கட் பண்ணா bomb வெடிக்காது... எத கட் பண்றது...

சிகப்பா... நீலமா..
நீலமா... சிகப்பா... 30,29,28...... 15,14, 13,.....

ஹீரோ
வின் முகத்தில் வியர்வை... "பதட்டமா இருக்காராம்..." ஆனா படம் பாக்குற யாருக்கும் பதட்டமா இருக்காது.... ஏன்னா இதுவரைக்கும் எந்த படத்துலயும் ஹீரோ வொயர கட் பண்ணும்போது பாம் வெடிச்ததே இல்ல..

கடைசியா bomb வெடிக்க ஒரு செகண்ட் இருக்கும் போது எதாவது ஒரு wire ah கட் பண்ணி bomb ah வெடிக்க விடாம பண்ணிடுவாரு...வில்லன் கஷ்டப்பட்டு செஞ்ச bomb ah, ஹீரோ சிம்பிளா ஒரு கட்டிங் பிளேயர வச்சி diffuse பண்ணிடுவாரு. இதுமாதிரி நம்ம ஆகஷன் கிங் அர்ஜுன் ஒரு அம்பது அறுபது பாம எடுத்துருப்பறு....

இது கூட பரவால... சில படங்கள்ல ஹீரோ வொயர கட் பண்ணாம, அந்த பாம அப்புடியே அலேக்கா தூக்கிட்டு பொய் மெரீனா பீச் ல போட்டுட்டு வந்துடுவாரு... அது எப்புடின்னு தெரியல தாம்பரத்துல குண்டு வச்சா கூட அடுத்த ரெண்டாவது நிமிஷத்துல ஓடி வந்து மெரீனா பீச் ல தூக்கி போட்டுருவாங்க.. மொத்ததுல வில்லன் வக்கிர குண்டு வெடி குண்டு இல்ல ... வெருங்குண்டு...

வெடி குண்ட கண்டுபுடிச்சவன் மட்டும் நம்ம தமிழ் சினிமாவ பாத்தான்... அந்த எடத்த்துலையே துடி துடிச்சி செத்துடுவான்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

9 comments:

Ilavarasan said...

ha ha ha weightu!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கொல வெறி

sarath said...

thaakittinga

ராஜாதி ராஜ் said...

அண்ணே ஹாலிவுட் படமே பார்த்ததில்ல போலருக்கு :)

CRICKET KA MAHASANGRAAM said...

mapla.. superu... but rajini kantha pathi sollave illa...

Unknown said...

ஹி ஹி....
அசத்தல்...

ஷாகுல் said...
This comment has been removed by a blog administrator.
Minmalar said...

வெ(டி)றித்தனமா ஆராய்ச்சி
பண்ணிருப்பீங்க போல!

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா...கலக்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...