Sunday, September 22, 2013

யா யா - கொஞ்சம் ஆஹா!! கொஞ்சம் ஸ்வாகா!!


Share/Bookmark
தலைவாங்குற திரைக்காவியதிற்கு அப்புறம் ரொம்ப நாள் ஆகியும் படம் எதுவும் பாக்கவே முடியல. "அடுத்து பாக்கலாம்னு இருக்கேன்"ன்னு மதகஜராஜா போஸ்டர போன டிசம்பர்ல போட்டேன்நா என்னிக்கு போட்டேனோ அன்னிக்கே அவிங்களுக்கு சனியன் புடிச்சிருச்சி போல. அடுத்த டிசம்பரே வந்துருச்சி. இன்னும் ரிலீஸ் ஆகல. ரெண்டு மூணு வாரத்துக்கு மேல படம் பாக்காததால கைகாலெல்லாம் நடுக்க ஆரம்பிச்சிருச்சி. சிவாவ எனக்கு ரொம்ப பிடிக்கும்னாலும் தில்லு முல்லு பாத்தப்புறம் கொஞ்சம் பீதியாத்தான் இருந்துச்சி. சரி சிவாவுக்காக இல்லைன்னாலும் தலைவன் பவருக்காகவாது படத்த பாக்கனும்னு ரெண்டு நாள் முன்னாலயே ஃபிக்ஸ் ஆயிட்டேன். நேத்து கம்பெனி விட்டு வீட்டுக்கு வந்தப்புறம் தான் தெரிஞ்சிது நேத்திக்கு மும்பைக்கு மேட்சுன்னு. சரின்னு ப்ளான கேன்சல் பண்ணிட்டு மேட்ச பாக்க ஆரம்பிச்சேன். அரைமணி நேரத்துல தலைவர் 15 ரன்னுல விடைபெற நானும் வீட்டுலருந்து விடைபெற்று படத்துக்கு கெளம்பிட்டேன்.



ராமராஜனோன தீவிர ஃபேனான ரேகா தன்னோட பையனுக்கு ராமராஜன்னு பேர் வைக்கிறாங்க. அதே மாதிரி ராஜ் கிரனோட தீவிர ஃபேனான இன்னொருத்தர் அவரோட பையனுக்கு ராஜ்கிரன்னு பேரு வைக்கிறாரு. இந்த ரெண்டு பசங்களுமே தங்களோட பேரு புடிக்காம ராமராஜன தோணின்னும் ராஜ்கிரன சேவாக்குன்னும் மாத்தி வச்சிக்கிட்டு ஊருக்குள்ள அலையிறாங்க. இவங்க ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸானப்புறம் தோணிக்கு ஏற்படுர காதலால நடக்குற சில சம்பவங்கள் தான் படம். அதெல்லாம் இருக்கட்டும் சரி கதைய சொல்லுன்னு தானே கேக்குறீங்க... அட இதாங்க கதையே. நா என்ன வச்சிக்கிட்டா இல்லைங்குறேன்.

இப்பல்லாம் எந்த படத்துலங்க கதையெல்லாம் இருக்கு. இதெல்லாம் ஒரு மேட்டரா. ஆனா படம் ஆரம்பிச்சதுலருந்து முதல் பாதி முழுசுமே இதப்பத்தியெல்லாம் கவலப்பட வைக்காம ஜாலியா
சிரிக்க வச்சிருக்காங்க. சிவா திரும்பவும் ஒரளவுக்கு பழைய ஃபார்முக்கு வந்துட்டாரு. சில இடங்கள்ல லைட்டா மொக்கையானாலும் பல இடங்கள்ல செமையா சிரிக்க வச்சிருக்காரு. மத்ததெல்லாம் ஓக்கே தான் ஆனா பாட்டுல நம்மாளுக்கு என்ன பண்றதுன்னே தெரியாம காமெடி சீன்ல நடிக்கிற மாதிரியே பல்ல காட்டிக்கிட்டே இருக்காரு. இந்த மூஞ்சி பாட்டுக்கு டான்ஸ் ஆடுற மூஞ்சியே அல்ல.

சந்தானம் வழக்கம் போலவே தாறு மாறு. சண்டைக்கோழில விஷாலுக்கு வர்ற பில்டப் சீன் டைப்புல இவருக்கு வர்ற இண்ட்ரோ செம.. ஒரே  மாதிரி நடிச்சி நடிச்சி அவருக்கே அலுத்து போச்சி போல. நிறைய காட்சிகள்ல அவர் முகத்துல ஏதோ வேண்டா வெறுப்பா நடிச்சிட்டு இருக்க மாதிரியே ரியாக்ஷன். தீயா வேலை செய்யனும் குமாரு படத்துல செகண்ட் ஹாஃப்ல வர்ற அதே நெகடிவ் ரோல் தான் சந்தானத்துக்கு இந்த படத்துலயும். தன்ஷிகா செம அழகு இந்த படத்துல.

படத்துக்கு இன்னோரு பெரிய ப்ளஸ்.. பவரு... 10 நிமிஷம் வந்தாலும் பட்டைய கெளப்பிருக்காரு. முன்னடியோல இப்போ தொப்பையெல்லாம் கொறைச்சி ஸ்மார்ட் ஆயிட்டாரு (அவ்வ்) அடுத்த படத்துல சிக்ஸ் பேக்கோட வந்தாலும் ஆச்சர்யப்ப்டுறதுக்கு இல்லை. பவர் வர்ற அத்தனை சீனுமே பழைய ஹிட் படங்களோட ஸ்பூஃப் காட்சிகள்ங்கும் போது கண்டிப்பா சிரிப்ப அடக்க முடியல. சிங்கம் சூர்யா மாதிரியும், போக்கிரி விஜய் மாதிரியும், பில்லா அஜித் மாதிரியும், விருமாண்டி கமல் மாதிரியும் எந்திரன் ரஜினி மாதிரியும் வந்து தெரிக்க விடுறாரு. அதுலயும் எந்திரன் சீன்ல "soldiers roatate your heads" ன்னு சொன்னோன அந்த ரோபோக்கள்ளாம் தலைய சுத்துரது செம காமெடி.

ரெண்டாவது பாதி வந்தப்புறம் தான் படம் அருக்க ஆரம்பிக்குது. என்ன எடுக்குறதுன்னே தெரியாம கண்ட மேனிக்கு சீன்ஸ் வருது. முதல் பாதில இருந்ததுக்கு பாதி அளவு கூட செகண்ட் ஹாஃப்ல காமெடி இல்லை. படத்துல இன்னும் ரெண்டு பெரிய மைனஸ் என்னன்னா ஒண்ணு தேவதர்ஷினி கேரக்டர். இன்னொன்னு காதல் சந்தியா கேரக்டர். கவுன்சிலரா பெரிய பல்லோட வர்ற தேவதர்ஷினி வர்ற காட்சிங்க அத்தனியுமே கண்றாவி. காமெடிக்கு பதிலா கடுப்பே வருது.  ஆரம்பத்துலருந்து  சந்தானத்த தலைவா ஸ்டைல்ல "ப்ரோ" "ப்ரோ" ன்னு கூப்டுட்டு கடைசில ப்ரோன்னா ப்ரதர் இல்லடா ப்ரோக்கர்ங்கறது செம.

அப்புறம் டொப்பி மூக்கி காதல் சந்தியா... இது மூஞ்ச 10 செகண்ட் உத்து பாத்தா போதும்ஸ்பாட்லயே வாந்தி எடுப்பீங்க. கருமம். இது வர்ற சீன் எல்லாமே எரிச்சலா வருது. அதுவும்  இத சந்தானத்துக்கு ஜோடியா போட்டு செகண்ட் ஹாஃப்ல சந்தானம் இதுகூட ரொமான்ஸ் பண்ற மாதிரியான சீன்ஸ் எல்லாமே அருவருப்பு தான். பாட்டெல்லாம் மொத தடவ படம் பாக்கும் போது தான் கேட்டேன். நல்லா தான் இருந்துச்சி. அருக்குற மாதிரியெல்லாம் இல்லை.

"இவர் தாங்க தோணி... இவருக்கு ஏன் தோணின்னு பேரு வந்துச்சின்னா.... "   "இவரு தாங்க தோணியோட அப்பா... இவரு எப்டிபட்டவர்னா..." "இவங்க தாங்க தோணியோட அம்மா.. இவங்க ராமராஜனோட தீவிர ஃபேன்" இப்டின்னு படம் ஆரம்பிக்கும் போது கேரக்டர இண்ட்ரொடியூஸ் பண்றேங்குற பேர்ல டைரக்டர் வந்து narrate பண்ணப்போ தியேட்டர விட்டு எழுந்து ஓடிரலாம் போல இருந்துச்சி.. எத்தன படத்துலடா இதே மாதிரியே background narrate பண்ணி அருப்பீங்க.. யப்பா டேய்.. போதும்பா... ஆனா போகப்போக டைரக்டர் ஓரளவு தேரிருவான்னு தான் தோணுச்சி. முதல் பாதியோட முடியிறாப்புல போன கதைய தேவையில்லாம வழ வழன்னு இழுத்து சம்பந்தமில்லா காட்சிங்கள வச்சி செகண்ட் ஹாஃப்ல ஒட்டாம போயிடுச்சி.

மத்தபடி படம் கண்டிப்பா ஒரு தடவ பாக்கலாம். சில அருவை காட்சிகள தவற படம் ஃபுல்லாவுமே செம காமெடி. சிவாவோட தில்லு முல்லுக்கு இந்த படம் 10 மடங்கு பரவால்ல.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

Unknown said...

மூடர் கூடம் பற்றிய உங்கள் விமர்சனம் எதிர்பார்க்க படுகிறது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...