Friday, October 20, 2017

மெர்சல் - ஜில் ஜங் ஜக்!!!


Share/Bookmark
இத்தனை வருஷ தமிழ் சினிமா எத்தனையோ பரிணாம வளர்ச்சிகள அடைஞ்சிருக்கு. ஆனா என்ன வளர்ச்சி அடைஞ்சாலும் மாறாம இருக்கது இந்த மாஸ் ஹீரோக்களோட பழி வாங்குற கதைகள். இந்தக் கதைக்கான டெம்ளேட் ரொம்ப சிம்பிள். மூணு அல்லது நாலு வில்லன்கள். பெரும்பாலும் கவர்மெண்ட் ஆஃபீசர்களா இருப்பாங்க. ஒரு டாக்டர், ஒரு வக்கீல், ஒரு போலீஸ் மற்றும் இதுல ஒரு அரசியல்வாதியையும் சேர்த்துக்கொள்ளுதல் உசிதம்.  முதல் பாதி முழுக்க ஹீரோ போலீஸூக்கு தண்ணி காட்டி ஒவ்வொருத்தரா கடத்திக் கொல்லுவாறு. இந்த கேப்புல ஒரு நல்ல புள்ளையா பாத்து லவ்வுவாறு.  ரெண்டாவது பாதிலயோ இல்ல இண்டர்வல்லயோ ஹீரோயினுக்கு இவன் ஒரு கொலைகாரன்னு தெரிஞ்ச உடனே “ச்சீ…ரேஸ்கல்.. நீ ஒரு கொலைகாரனா”ன்னு காரித் துப்பிட்டு விலகிப் போகும்போது, ஹீரோ கூடவே சுத்துற ஒரு அள்ளக்கை அந்தப் புள்ளைய நிறுத்தி “அவன் ஏன் அவனுங்களயெல்லாம் கொல்றான் தெரியுமாம்மா?”ன்னு ஆரம்பிச்சி வலுக்கட்டாயமா அந்த புள்ளைக்கிட்ட ஒரு மொக்கை ஃப்ளாஷ்பேக்க சொல்லுவானுங்க.

ஃப்ளாஷ்பேக்குல ஹீரோவுக்கு நெருக்கமான ஒருத்தர் இறந்துருப்பாங்க. ஃப்ளாஷ் பேக் முடிஞ்ச உடனே கொல்றதுக்கு இன்னும் ஒரே ஒருத்தன் மட்டும் பாக்கியிருப்பான். அது யாருன்னு பாத்தா ஹீரோயினோட அப்பாவா இருக்கும். பத்து நிமிஷ ஃப்ளாஷ்பேக்க கேட்டுட்டு இத்தனை வருஷம் வளர்த்த அப்பாவ கொல்றதுக்கு ”நா உதவி பன்றேன்”னு வாய் கூசாம சொல்லும். அத்தோட விட மாட்டானுங்க.  அந்த இடத்துல கட் பண்ணி ஒரு குத்து சாங்க போட்டு விடுவானுங்க. இதான் காலங் காலமா பாக்குற நமக்கு சலிச்சிப் போனாலும் எடுக்குற அவங்களுக்கு சலிக்காம எடுத்து நமக்கு போட்டுக்காட்டுற பழிவாங்குற கதைகள். 

அட்லி விஜய்ய வச்சி அடுத்த படம் எடுக்க போறாருங்குற நியூஸ் வந்த உடனே எல்லார் மனசுலயும் தோணுன ஒரே கேள்வி ”இந்த தடவ எந்த படத்துலருந்து எடுக்கப் போறாரு”ன்னு தான். ஏன்னா நம்மாளு ட்ராக் ரெக்கார்டு அப்டி. அதுவும் மூணு விஜய்ன்ன உடனே தமிழ்ல ஏற்கனவே அந்த காம்பினேஷன்ல வந்தது மூன்று முகம், அபூர்வ சகோதரர்கள்ன்னு ஒரு சில படங்கள் தான். அதுலயும் ஒருத்தர் மேஜிஷியன்ங்குற செய்தி வந்த உடனே அந்த காம்பினேஷன்ல வந்துருக்க படம் ப்ரஸ்டீஜ். சரி இதையெல்லாம் கலந்து விட்டு ஒரு மாதிரியான படமா எடுக்கப்போறாருன்னு நாமல்லாம் ஒரு யூகமா வச்சிருந்தா, இந்த அட்லீ பாருங்க நம்ம மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு நம்ம நினைச்ச மாதிரியே எடுத்து வச்சிருக்காப்ள.  

ரெண்டு நாளுக்கு முன்னால நண்பர் ஒருத்தர்கிட்ட மெர்சல் பத்தி பேசிக்கிட்டு இருந்தேன்.  ”படம் எப்டி இருக்கப்போவுதுன்னு தெரியலஜி “ ன்னு நான் சொன்னதுக்கு அவரு சிம்பிளா ஒரு பதில் சொன்னாரு. ”ஜி.. விஜய் படத்துல ரெண்டே வகை தான். ஒண்ணு விஜய் ஃபேன்ஸ்க்கு எண்டர்டெய்ண்மெண்ட்டா இருக்கும். இல்லைன்னா நமக்கு எண்டர்டெய்ண்ட்மெண்ட்டா இருக்கும். ஆனா கண்டிப்பா எண்டர்டெய்ண்ட்மெண்ட் மட்டும் உறுதி”ன்னு. பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சி.

பொதுவா விஜய் படங்கள்ல மேல சொன்ன மாதிரி எதாவது ஒரு பக்க எண்டர்டெய்ண்மெண்ட் தான் படம் முழுசுமே இருக்கும். ஆனா அட்லி கொஞ்சம் வித்யாசமா எல்லா ஆடியன்ஸையும் கவர் பன்ற மாதிரி ஒரு பாதி விஜய் ஃபேன்ஸூக்கும் இன்னொரு பாதிய நமக்கும் இருக்க மாதிரி சரிபாதியா பிரிச்சி வச்சி செஞ்சிருக்காரு.  

தேணாண்டாள் பிலிம்ஸ் லெட்டர் பேட்ல ப்ரிண்ட் செய்யப்பட்ட மெர்சல் படத்தோட கதைச் சுருக்கம் லீக் ஆனத நிறைய பேர் பாத்துருப்பீங்க. அச்சு பிசிறாம அதே தான் கதை. மருத்துவத் துறையைச் சேர்ந்த ஒருசிலர் முதல் பாதில கொல்லப்பட, அவங்க ஏன் கொல்லப்பட்டாங்கங்குறதுக்கான காரணத்த விளக்குறதுதான் ரெண்டாவது பாதி. 

டாக்டர் மாறனா நடிச்சிருக்க விஜய்யோட கெட்டபும், உடல்மொழியும், வசன உச்சரிப்புகளும் சூப்பர். இந்த மாதிரி அமைதியான, அலட்டல் இல்லாத விஜய்யப் பாத்தே ரொம்ப நாளாச்சி. சுருக்கமா சொன்னா நம்ம விஜய் ஆண்டனி சலீம், பிச்சைக்காரன் படங்கள்ல பேசுற மாதிரி விஜய் பேசிருக்காரு..

வேஷ்டி சட்டையோட ஏர்போர்ட்டுக்குள்ள நுழையும்போது கெத்தா இருக்காரு. கூடவே வைகைப்புயல் வடிவேலு. காமெடி பிரிக்கப் போறாங்கன்னு எதிர்பாத்தா, காமெடிங்குறதுக்கான அறிகுறியே படத்துல தென்படல. மெஜீஷியனா வர்ற விஜய் மெஜீஷியனா இல்ல மந்திரவாதியான்னு ஒரே கன்பீசனா இருக்கு. சண்டை நடந்துகிட்டு இருக்கும்போது காஜலோட Bag ல என்ன இருக்குன்னு கேக்குறாரு. அது எதோ முப்பாத்தம்மன் ஃபோட்டோன்னு சொல்லுது. உடனே நம்மாளு அது போதுமேன்னு சொல்லிட்டு அந்த சின்ன ஹேண்ட் Bag லருந்து ஆளுயர சூளாயுதம் ஒண்ண வெளிய எடுத்து சண்டை போடுறாரு.  ஏண்ணே… மேஜிக்னாலும் ஒரு நாயம் வேணாமாண்ணே.. 

முதல்பாதி முழுக்க ரொம்ப அழகாவும், சுவாரஸ்யமாவும் போகுது. ரெண்டாவது பாதி ஆரம்பிச்ச உடனே நம்ம ஆளப்போற தமிழன் உள்ள வர்றாரு. படம் படுத்துருது. சுவாரஸ்யமே இல்லாம ஏனோதானோன்னு கதை நகருது. ”மண்ண அள்ளாதீங்க, தண்ணிய உரியாதீங்க”ன்னு சும்மா வந்ததுக்கு எதயாவது பேசனுமேன்னு பேசிக்கிட்டு இருக்காரு. வில்லனால அவரும் அவரோட மனைவியும் கொல்லப்பட அந்த நீ……ண்ட ஃப்ளாஷ்பேக் முடியிது. 

மத்த பழிவாங்குற படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் ரெண்டு மிகப்பெரிய வித்யாசத்த இயக்குனர் அட்லி உருவாக்கிருக்காரு. என்னன்னா வழக்கமா மூணு வில்லன்கள் இருப்பானுங்க. ஆனா இந்தப் படத்துல ரெண்டு தான். அடுத்து ஃப்ளாஷ்பேக் முடிஞ்ச உடனே வர்ற குத்துப்பாட்டு இந்தப் படத்துல இல்லை. 

மூணு ஹீரோயின்கள்லயும் நித்யா மேன்ன் மட்டும்தான் கொஞ்ச நேரம் ஸ்கீரின்ல வருது. ஆனா அத ஏன் பஞ்சாபியா காமிச்சாங்க, ஏன் விஜய் பஞ்சாப்லருந்து ஆளப்போறான் தமிழன்னு பாடுனாருங்குற கேள்வியெல்லாம் நிறைய இருக்கு. (தமிழ்நாட்டுல பாடுனாதான் கழுத்தாம்பட்டையிலயே போடுறாய்ங்களே) காஜலும், சமந்தாவும் மின்னல் மாதிரி வந்துட்டு ஜொய்ங்குன்னு போயிடுறாங்க. பிரதர், சிஸ்டர்னு சொல்லிட்டு அப்புறம் அவங்கள லவ் பன்ன வைக்கிற அருவருப்பான சீக்குவன்ஸ அட்லி விடமாட்டாப்ள போல.எஸ்.ஜே.சூர்யா அவரோட கேரக்டர அசால்ட்டா பண்ணிருக்காரு. வழக்கமான வில்லன். பெரிய அளவுல ஸ்பெஷலா சொல்றதுக்கு எதுவும் இல்லை. 

சமூகக் கருத்துக்கள மசாலா கலந்து ஜனரஞ்சகமா சொல்றது ஷங்கரோட பாணி. அதே பாணிய அவரோட சிஷ்யன் அட்லியும் ஃபாலோ பன்னிருக்காரு.. பாணிய மட்டும் ஃபாலோ பன்னா பரவால்ல. ஷங்கர் படத்துல வந்த காட்சிகளையுமா அப்படியே ஃபாலோ பன்னிருக்காரு. மெர்சல் படத்துல வர்ற ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு படங்கள்ல ஏற்கனவே பார்த்தது. அதுக்காகவே தனியா ஒரு பதிவு கூட எழுதலாம். அடுத்தடுத்து வரப்போற காட்சிகளையும் ரொம்ப ஈஸியா யூகிக்க முடியுது.

லாஜிக்ல ஓட்டை இருக்கும்னு பாத்தா சத்யமா இல்லை. ஓட்டையிலதான் லாஜிக்கே இருக்கு. உதாரணமா எஸ்.ஜே.சூர்யா முதல் முதலா விஜய் முகத்த டிவில பாத்ததுமே ரமணா படத்து விஜயன் மாதிரி “நோ”ன்னு கத்துறாரு. ஆனா முதல்ல கொல்லப்படும் வில்லன் விஜய் கூட சகஜமா பேசிகிட்டு இருக்காரு. அவருக்கு எந்த ஞாபகமும் வரல. விஜய் முகத்த அடையாளமும் தெரியல. என்ன மிஸ்டர் பிள்ளைவாள்?

கடைசி வில்லனையும் கொண்ணதுக்கு அப்புறம் கத்தி படத்துல பேசுன மாதிரி, உ.பில ஆக்ஸிசன் இல்லாம இறந்த குழந்தைகள், மனைவியின் சடலத்த கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காத பரிதாபம்னு சமீபத்துல நடந்த சம்பவங்களையெல்லாம் நினைவுபடுத்தி ஒரு நீண்ட வசனம் பேசுறாரு. சினிமாவுல இந்த மாதிரி current affairs பத்தியெல்லாம் பேசுனா மக்கள்ட நல்லா ரீச் ஆகலாம்னு யாரும் நம்மாளுக்கு ஐடியா சொல்லிக்குடுத்துருப்பாங்க போல. இதப் பத்தியெல்லாம் பேசனும்னு ஆசைப்பட்டா அவர் நேரடியாவே பேசலாம். சினிமாவப் பொறுத்த அளவுல ஒரு நடிகர் அவர் எடுத்துக்கிட்ட கதைக்கும், கதைக்களத்துக்கும் நியாயம் செஞ்சா போதும். 

அதுலயும் இப்ப இருக்க நடிகர்கள் பெரும்பாலானோர் மக்களோட உணர்சிகளை காசாக்க முயற்சி செஞ்சிட்டு இருக்காங்க. ஜல்லிக்கட்ட காப்பாத்துறேன், விவசாயத்த காப்பாத்துறேன்னு சமீபத்துல வந்த நிறைய படங்கள்ல கதைக்கும் வசனத்துக்கும் சம்பந்தமே இல்லாம இடைச்சொருகலா வசனங்களையும் காட்சிகளையும் உள்ள சொருகிட்டு இருக்காங்க. மக்கள் எப்போதுமே ரொம்ப தெளிவுங்க சார்.

மெர்சலுக்கு ஏ.ஆர். ரஹ்மான்னு இசைன்னு சொல்றாங்க. ஆனா  பிண்ணனி இசையிலயெல்லாம் எங்கடா ரஹ்மானக் காணாம்னு கரண்டி போட்டு தொழாவ வேண்டியிருக்கு. ஒண்ணும் சிறப்பா இல்லை. ஆனா ஏற்கனவே இருந்த விஜய்-ரஹ்மான் செண்டிமெண்ட்ட இந்தப் படம் கண்டிப்பா உடைக்கும். உதயா, அழகிய தமிழ்மகன் மாதிரி இந்தப் படம் கொடூர ஃப்ளாப் ஆக வாய்ப்பே இல்லை.

மொத்தத்தில் மெர்சல் முதல் பாதி அருமை. ரெண்டாவது பாதி பார்க்க தேவை நிறைய பொறுமை. விஜய் ஒருவருக்காக கட்டாயம் பார்க்கலாம். 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Prem S said...

நடுநிலையான விமர்சனம் நன்று

Anonymous said...

இதுவே தெலுங்கு படமா இருந்தா Super,fantastic,Marvalous னு சொல்லிருப்பீங்களே...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...