Friday, August 12, 2016

சிங்கம் 3 & சாமி 2 ஸ்டோரி டிஸ்கஷன் !!!


Share/Bookmark
இயக்குனர் ஹரி சிங்கம் 3 ஐ தொடர்ந்து சாமி-2 இயக்கப்போவதாக கொஞ்ச நாள் முன்னால அறிவிச்சிருக்காரு. இந்த சூழ்நிலையில சிங்கம் 3 மற்றும் சாமி 2 படங்களோட கதை டிஸ்கஷன அந்த படத்துல ஏற்கனவே நடிச்ச ஒருசில நடிகர்களோட ஒரே அறையில வச்சிருக்காரு. இப்ப என்ன நடக்குதுன்னு பாப்போம். அந்தந்த கேரக்டர்கள் பேசுற ஸ்லாங்குல படிங்க.

(தொடர்ந்து வெறும் போலீஸ் படமா இயக்கி இயக்கி ஹரி ஒரு மாதிரி மெண்டல் டிஸ்ஸாடர் ஆகுற கண்டிஷன்ல இருக்காரு)

டிஸ்கஷன் ரூமுக்குள்ள வந்து பாக்குறாரு. சந்தானம், ஹாரிஸ் ஹெயராஜ், DSP எல்லாம் வந்து உக்கார்ந்துருக்காங்க.

ஹரி : யோவ்… என்னய்யா எல்லாரும் வந்துருக்காங்க.. வர வேண்டிய ஹீரோ ரெண்டு பேரயும்  காணும்

Asst 1: சொல்லியாச்சு சார்… இப்ப வந்துருவாங்க

ஹரி : ஆமா நீ ஏன் காக்கி கலர்ல சட்டை போட்டுருக்க?

Asst 1: சார் நல்லா பாருங்க… இது காக்கி இல்லை. பச்சை கலர்

ஹரி : (மனதிற்குள்: அய்ய்யயோ… வர வர எதப்பாத்தாலும் காக்கி கலர்லயே தெரியிதே… ) சரி சரி சும்மா தமாசுக்கு கேட்டேன் உக்காரு
எல்லாரும் உக்கார

ஹரி : சரி என்ன சீன் எழுதிருக்கீங்க.. குடுங்க பாக்கலாம்.

Asst 2 : சார்.. சிங்கம் 3 படத்துக்கு ஒரு சூப்பர் இண்ட்ரோ எழுதிருக்கோம் படிச்சி பாருங்க

ஹரி அந்த சீன வாங்கி படிச்சி மெரண்டு போய்

ஹரி : ”யோவ் இந்த சீனெல்லாம் எடுக்குறது ரொம்ப கஷ்டம்யா… டூப் போட்டு தான் எடுக்க முடியும்” ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போதே வெளில சூர்யா குரல் கேக்குது

சூர்யா : ஹாய் ஹலோ எல்லாருக்கும் வணக்கம். சாரி கொஞ்சம் லேட் ஆயிருச்சி..

சந்தானம் : யார்ரா அது?

சூர்யா : ஆத்ரேயாடா

சந்தானம் : கொஞ்சம் சாத்துருயாடா?

சூர்யா : என்னது?

சந்தானம் : இல்லை கதவ சாத்துருயாடான்னு கேட்டேன். வந்து உள்ள உக்காருங்க லில்லிபுட் அங்கிள்

(சூர்யா உள்ள வந்து உக்கார்ந்தப்புறம்)

சூர்யா: என்ன… என்ன போயிட்டு இருக்கு?….

ஹரி : உங்க இண்ட்ரோ சீனப் பத்தி தான் சார் பேசிக்கிட்டு இருந்தோம். ரொம்ப tough ah இருக்கு. அதான் டூப் போட்டு எடுக்கலாமான்னு நினைக்கிறோம்

சூர்யா : என்ன சார்… Six பேக்லாம் வச்சி எப்டி இருக்கேன். எனக்கு போய் டூப் போடனும்ங்குறீங்க… என்ன பன்னனும் சொல்லுங்க… 30 அடி உயரத்துலருந்து குதிக்கனுமா? ட்ரெயின் மேல 200 கிலொ மீட்டர் வேகத்துல ஓடனுமா? இல்லை பாம் வெடிக்கும்போது பக்கத்துல நின்னு ஸ்டைல திரும்பனுமா? எதா இருந்தாலும் சொல்லுங்க. பின்னிடுவோம்
ஹரி : கிரிக்கெட் விளையாடனும்…

சூர்யா : க்..க்…கி.கி.கி.கிரிக்கெட்டா…. பரவால்ல…  நீங்க அதுக்கு டூப்பே போட்டு எடுத்துருங்க.  

ஹரி : பரவால்ல சார்.. டூப்பு வேணாம் நீங்களே நடிங்க. ஃபுல் ஸ்பீடுல வர்ற பந்தை நீங்க மடக்கி சிக்ஸர் அடிக்கிறீங்க. அதன் இண்ட்ரோ சீன்

சூர்யா : நோ நோ.. நா கோடி ரூவா குடுத்தா கூட இனிமே கிரிக்கெட் விளையாட மாட்டேன்னு ஜோ மேல சத்தியம் பன்னிருக்கேன்.

சந்தானம் : (சைடுல திரும்பி) நீயே கோடி ரூவா குடுத்தா கூட இனிமே உன்னயும் உன் தம்பியையும் எங்கயும் விளையாட சேத்துக்க மாட்டாங்க

சூர்யா : கலாய்க்கிறீங்கன்னு நினைக்கிறேன். பரவால்ல… அடுத்த சீன சொல்லுங்க.

ஹரி : இண்ட்ரோ சீன் முடிஞ்ச உடனே அந்த கிரிக்கெட் ஸ்டம்பைய புடுங்கி அங்கருக்க ஒரு 10 ரவுடிய வெளுத்து கட்டுறீங்க. ஃபைட்டு முடிஞ்ச உடனே அதே கிரிக்கட் கிரவுண்டுல ஆடிக்கிட்டு இருந்த ச்சியர் கேர்ள்ஸோட ஒரு குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடுறீங்க.

சூர்யா : வாவ்.. வாவ்…வாவ்.. சூப்பர் சூப்பர்

Asst 2 : (ஹரியின் காதுக்குள்) சார் நீங்க எடுத்த பத்து படத்துலயும் இதே சீனத்தான் மாத்தி மாத்தி வச்சிருக்கீங்க. இவர் என்ன சூப்பர் சூப்பர்ங்குறாரு?

ஹரி : கிரிக்கெட் சீன கேட்டதுல பதட்டமாயி வாவ் வாவ் ன்னு உளரிக்கிட்டு இருக்கான். அப்டியே ஓக்கே வாங்கி சீன ஃபிக்ஸ் பன்னிக்குவோம். ஆமா நீ ஏன் கையில லாட்டிய வச்சிருக்க?

Asst 2 : சார்…  லாட்டி இல்ல சார் இது.. பேனா…

ஹரி : எனக்கு தெரியாதா? சும்மா தமாசு (அவ்வ்வ்)

சூர்யா : என்ன DSP… இண்ட்ரோ சாங்குக்கு ட்யூன் ரெடியா?

சந்தானம் : இவந்தான் பத்துவருசமா நாலு  ட்யூன் போட்டு ரெடியா வச்சிருக்கானே. எந்த பாட்டு வேணும்னு கேட்டா உடனே போட்டுக்குடுத்துருவான்

சூர்யா : என்ன சொல்றீங்க..

சந்தானம் : இஹ்ஹ்.. இல்லை என்ன மாதிரி பாட்டு வேணும்னு கேட்டா சார் போட்டு குடுத்துருவாருன்னு சொன்னேன்.

ஹரி : DSP அந்த இண்ட்ரோ சாங் ட்யூன போடுங்க

DSP : எப்பவோ ரெடி… போடுறேன் கேளுங்க..  “Yo… yo… This is Dsp………………”

சந்தானம் : டேய் வான் கோழி வாயா…  சூர்யாவுக்கு இண்ட்ரோ சாங் போட சொன்னா நீ உனக்கு இண்ட்ரோ சாங் போட்டுக்குறியா

DSP : இல்ல சார்.. எனக்கு இப்புடி ஆரம்பிச்சாதான் ட்யூன் வரும்

சந்தானம் : எனக்கு வாயில நல்லா வரும்… நீ ட்யூனே போட வேணாம் பேசாம உக்காரு.

(ஹாரிஸ் உடனே இடையில பூந்து)

ஹாரிஸ் : சார் எங்கிட்ட ரெண்டு புது ட்யூன்  இருக்கு. கேக்குறீங்களா?

சந்தானம் : எங்கருந்து போட்டது?  (சுட்டது)

ஹாரிஸ் : என்ன சார்?

சந்தானம் : இ..இது எங்க இருந்துகிட்டு ட்யூன போட்டீங்கன்னு கேட்டேன் பாப் கட்டிங் அங்கிள்

ஹாரிஸ்: நானே சொந்தமா என் ஸ்டூடியோவுல போட்டேன்

சந்தானம் : அப்ப சத்தியமா நல்லாருக்காது.   



சூர்யா : சார்.. அப்புறம் இந்தப் படத்துலயும் அனுஷ்காதானே?

ஹரி : அனுஷ்கா கொஞ்சம் கஷ்டம் சார்… 5 கோடி ரூவா சம்பளம் கேக்குறாங்க

சூர்யா : என்னது அஞ்சு கோடியா? ரெண்டு பாட்டுக்கும் நாலு சீனுக்கும் வர்றதுக்கு அஞ்சு கோடியா?

ஹரி : அதுக்கில்ல சார்.. ”உங்க கூட நடிக்கும்போது அபூர்வ சகோதரர்கள்ல கமல் நடிச்ச மாதிரி காலை மடக்கியெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்க வேண்டியிருக்காம். போன ரெண்டு பார்ட்ல நடிச்சதுக்கே முட்டி வலி வந்துருச்சி” ன்னு சொல்லி 5 கோடி குடுத்தாதான் நடிக்க வருவேன்னுட்டாங்க.

சூர்யா : 5 கோடி இல்லை… 50 கோடி குடுத்தாவது அனுஷ்காவ உள்ள கூப்டுங்க

(அப்ப திடீர்னு கதவுக்கு பக்கத்துலருந்து விஜய குமார் குரல்)

”சரியாச் சொன்னீங்க துரை சிங்கம்”

சந்தானம் : (கடுப்பாகி) யோவ் அரை போதையில இந்தாள யாருய்யா எழுப்பி விட்டது..

Asst 1: நாங்க யாரும் கூப்டல சார்… அவரே வந்துட்டாரு

விஜயகுமார் : (ஹரிய பாத்து) மாப்ள… எனக்கு இந்த படத்துல எத்தனை சீன்? என்ன வசனம்?

ஹரி : போன ரெண்டு படத்துல என்ன வசனம் பேசுனீங்க?

விஜயகுமார் : “சரியா சொன்னீங்க துரை சிங்கம்” “கலக்கிட்டீங்க துரை சிங்கம்” “ஆமா துரை சிங்கம்” “அப்புடி போடுங்க துரை சிங்கம்” “உங்கள ப்ரமோட் பன்றேன் துரை சிங்கம்” “சார்ஜ் எடுத்துக்குங்க துரை சிங்கம்”

ஹரி : அதே வசனம் தான் இந்த படத்துலயும். போய் சரக்கடிச்சிட்டு தூங்குங்க மாமா.. சும்மா சும்மா வந்து தொல்லை பன்னாதீங்க.

விஜயகுமார் : கோவப் படாதீங்க மாப்ள.. நா அப்டியே ஒரு ஓரமா உக்காந்து வேடிக்க பாத்துக்குறேன் ன்னு விஜய குமார் ஒரு ஓரமா உக்காருறாரு.

சூர்யா : சார்… போன படத்துல சவுத் ஆஃப்ரிக்கா வரைக்கும் போனோம். இந்த தடவ எதாவது புது இடத்துக்கு போகனும்

சந்தானம் : செவ்வாய் கிரகத்துக்கு வேணா போறியா?

சூர்யா : சந்தானம் நீங்க இப்டியே காலாய்ச்சீங்கன்னா உங்கள படத்துலருந்தே தூக்கிருவேன்

சந்தானம் : டேய்.. நானே இந்த படத்துலருந்து விலகுறதுக்காகத்தான் வந்ததுலருந்து உன்ன கலாய்ச்சிட்டு இருக்கேன்.. அது புரியாம நீ மண்ணு மாதிரி உக்காந்துருக்க

சூர்யா : ஹரி சார்… இவர படத்துலருந்து தூக்கிருங்க

விஜயகுமார் : சரியாச் சொன்னீங்க துரை சிங்கம்

சந்தானம் : வக்காளி நா கொலை கேஸுல உள்ள போனாலும் பரவால்ல மொதல்ல இவனப் போட்டுத்தள்ளுறேன்னு விஜய குமார் மேல பாயிறாரு.

(தொடரும்)



Tuesday, August 9, 2016

STRANGER THINGS!!!


Share/Bookmark
முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும். போன பதிவுல சொன்னது மாதிரி இந்த pschokenisis ஒவ்வொருவரப் பொறுத்தும் எப்படி மாறுபடுதுன்னு விளக்க ஒரு எக்ஸ்பெரிமெண்ட் பன்னாங்க. அதுல பங்கெடுதவங்கள ரெண்டு குழுவா பிரிச்சி, ரெண்டு பேருக்கும் தனித்தனியா ஒரு வீடியோ க்ளிப்பிங்க போட்டு காமிச்சாங்க. முதல் குழுவுக்கு மட்டும் “இப்ப நீங்க பாக்கப் போற வீடியோவுல ஒருத்தர் ஒரு சாவிய தொடாமலேயே வளைக்கப் போறார் பாருங்க. நேரம் ஆக ஆக அந்த சாவி கொஞ்சம் கொஞ்சமா வளைய ஆரம்பிக்கும் பாருங்க” ன்னு சொல்லி வீடியோவ போட்டு காமிச்சிருக்கானுங்க. ஆனா ரெண்டாவது குழுவுக்கு அந்த மாதிரி எந்த ஹிண்ட்டுமே குடுக்காம வீடியோவ போட்டு காமிச்சி ரெண்டு குழுவையும் தனித்தனியா கேட்டதுல முதல் குழுவுல இருக்கவனுங்கள்ள பெரும்பாலான பேரு “ஆமா சார்…. சாவி நல்லாவே வளைஞ்சிது” ன்னு சொல்லிருக்கானுங்க. ஆனா ரெண்டாவது குழுவுல பெரும்பாலானவங்க “என்னது சாவி வளைஞ்சிதா? அப்டி ஒண்ணும் எங்களுக்கு தெரியலையே” ன்னு சொல்லிருக்கானுங்க.

அதாவது முதல் குழுவுல இருக்கவனுங்க சாவி வளையும், சாவி வளையும்ங்குற ஒரு எதிர்பார்ப்பிலே பார்த்ததால சாவி உண்மையிலே வளைவது போல ஒரு illusion அவங்களுக்கு உண்டாகியிருக்கலாம் அப்டிங்குறதத்தான் இந்த experiment லருந்து சொல்ல வர்றானுங்க.  

2000 மாவது வருஷத்துல ஒரு பெரிய பொதுமக்கள் கூட்டத்துக்கு முன்னால  PC Sorkar junior ங்குறவரு தாஜ்மஹாலயே ரெண்டு நிமிஷம் மறைய வச்ச சம்பவம் நிறைய பேரு கேள்விப்பட்டுருப்பீங்க. ஒருத்தர் ரெண்டு பேருக்குன்னா பரவால்லை. ஒரு கூட்டமே இருக்கும்போது எப்படி அத்தனை பேருக்கும் அந்த illusion ah கொண்டு வர முடிஞ்சிது? ஒரு பொருளை நாம எப்படி பார்க்கிறோம்? ஒரு பொருள் இருப்பது எப்படி நமக்கு தெரியிது? ஒரு பொருள் மேல படுகிற வெளிச்சக் கதிர்கள் அந்தப் பொருளால எதிரொளிக்கப்பட்டு நம்ம கண்களை அடையும் போது அந்த பொருள் அந்த இடத்தில் இருப்பது நமக்கு தெரியிது. எப்படி தாஜ்மஹால மறைய வச்சீங்கன்னு Sorkar கிட்ட கேட்டப்ப அவர் சொன்னது “தாஜ்மஹால்லருந்து வர்ற Light Rays பார்வையாளர்கள் கண்ணுக்கு சென்றடையாம தடுத்தேன். அதனாலதான் தாஜ்மஹால் மறைஞ்சது மாதிரியான ஒரு optical illusion create ஆனதுன்னு சொல்லிருக்காரு. எப்படி தடுத்தார் என்பதெல்லாம் advanced science ஆம். நிறைய லேசர் லைட், அது இதுன்னு என்னென்னவோ வச்சி அத பன்னிருக்காங்க. நேரமிருப்பவர்கள் தேடி படிச்சிக்குங்க.

சரி ஏன் இந்த டாபிக்ல நாம இப்ப மொக்கை போட்டுக்கிட்டு இருக்கோம்னு நிறைய பேருக்கு சந்தேகம் வரும். நான் இந்த மாதிரி சம்பவங்களை தேடித்தேடி படிக்கிற ஆளெல்லாம் கிடையாது. எதாவது படம் பாக்கும்போது அதிலுள்ள கேரக்டர்கள பத்தி  படிக்கும்போது விஜயகாந்த் பேசிக்கிட்டு இருக்கும்போது மைக் ஒயர் கையில மாட்டுற மாதிரி எனக்கும் இந்த மாதிரி எதாவது மாட்டும். அப்டி மாட்டுற விஷயம் கொஞ்சம் interesting ah இருந்தா எழுதுறது. அவ்வளவுதான்.

சரி இப்ப 2016 ல வந்த Stranger Things அப்டிங்குற ஒரு மினி சீரிஸ பத்தி தான் பாக்கப்போறோம். 1983 ல அமெரிக்காவின் Hawkins நகர்ல நடக்குற மாதிரியான கதை. அந்த Hawkins la ஒரு பகுதிய restricted area வா அறிவிச்சி அதுல US Department of Energy oru Lab வச்சிருக்காங்க. முதல் காட்சிலயே அந்த Lab லருந்து தெறிச்சி ஓடுற ஒரு சயிண்டிஸ்ட்ட எதோ ஒண்ணு துரத்தி துரத்தி கொல்லுது.

அதே ஊர்ல நாலு ஸ்கூல் பசங்க ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட்ஸா இருக்கானுங்க. ஒரே  adventures படங்களையும், கதைகளையும் பாத்து, படிச்சி   எப்ப பாத்தாலும் ஒரு தனி உலகத்துல இருக்க பசங்க. அவனுங்க நாலு பேரு காண்டாக்ட் பன்னிகிறதுக்கு மட்டும் தனி வாக்கி டாக்கி வச்சிக்கிட்டு படங்கள்ல பேசிக்கிட்டு திரியிறவனுங்க.

இந்த சீரியல்ல பெரும்பாலான கேரக்டர்ஸ் இந்த நாலு பசங்களும் அவங்க ஃபேமிலி மெம்பர்ஸூம்தான். ஒரு நாள் ராத்திரி  நாலு பேரும் விளையாடி முடிச்சிட்டு, ஒவ்வொருத்தனும் வீட்டுக்கு போக, அந்த நாலு பேர்ல ஒருத்தனான Will buyers போற வழியில எதையோ பாத்து மிரண்டு ஓடுறான். அது துரத்தி வந்து அவனப் புடிச்சிருது.

அவ்வளவுதான். அன்னிக்கு ராத்திரி முழுக்க வீட்டுக்கு வரலன்னதும் Will buyers ஸோட அம்மா பதட்டமாகி ஒவ்வொரு ஃப்ரண்ட் வீட்டுக்கா ஃபோன் பன்னி கேக்குறாங்க. ஆனா யாருக்குமே எதுவும் தெரியல. கடைசில வேற வழியில்லாம போலீஸுக்கு போக, போலீஸ் கோதாவுல இறங்குறாய்ங்க. கொஞ்சம் மந்தமான இன்வெஸ்டிகேஷனயே மொதல்ல ஸ்டார்ட் பன்றானுங்க. ஒரு நாளாகுது ரெண்டு நாளாகுது.. பையனப் பத்தின எந்த க்ளூவும் கிடைக்காததால பையனோட அம்மா ரொம்ப Frustrated  ஆன Stage க்கு தள்ளப்படுறாங்க. அடிக்கடி அவங்க வீட்டுல power fluxuation ஆகி லைட்டெல்லாம் டிம்மாகி டிம்மாகி எரியிது. முதல்ல சாதாரணமா எடுத்துக்கிட்டவங்க போகப்போக அவங்க பையன் தான் லைட் மூலமா எதோ சிக்னல் குடுக்குறான்னு நம்புறாங்க.

அத மத்தவங்ககிட்ட சொல்ல, எல்லாரும் அந்தம்மா சொல்றத காதுகுடுத்து கூட கேக்க மாட்டேங்குறானுங்க. ஆனா அந்தம்மா காசு குடுத்து கடையில உள்ள அனைத்து சீரியல் பல்பையும் வீட்டுல வாங்கிட்டு வந்து வீட்டுக்குள்ள கட்டி வச்சிக்கிட்டு பையனோட சிக்னலுக்காக காத்திருக்குது.

அந்த சமயத்துல ஒரு டெலிஃபோன் வருது. எடுத்து அந்தம்மா காதுல வைக்க முதல்ல யாரோ ஒருத்தர் மூச்சு விடுற சவுண்ட் மட்டும் கேக்குது. அதத் தொடர்ந்து எதொ ஒரு வித்யாசமான சத்தம். உடனே அந்தம்மா போலீஸூக்கு ஃபோன் பன்னி என் ஃபோன்ல மூச்சு விட்டது என் பையந்தான்னு சொல்லுது. ஆனா அவனுங்க நம்பாம இந்தம்மாவ ஒரு லூசுமாதியே நினைச்சிட்டு இருக்கானுங்க.

முதல் காட்சில அந்த லேப்ல ஒருத்தர் செத்தாரே… அவனுங்க வேற லேப் லருந்து யாரோ ஒரு பொண்ணு எஸ்கேப் ஆயிட்டதா யாருக்கும் தெரியாதமாதிரி சீக்ரெட்டா தேடிக்கிட்டு இருக்கானுங்க. அந்த பொண்ணை கண்டு புடிக்கிறதுக்காக பாக்குறவனுங்களையெல்லாம் சுட்டு கொல்லவும் தயங்க மாட்டானுங்க. அவ்வளவு முக்கியம் அந்த பொண்ணு.

நண்பன் (Will Buyers) காணாம போன உடனே மத்த மூணு பசங்க நாமளே அவன தேடி கண்டுபுடிப்போம்னு அவய்ங்களுக்கு தெரிஞ்ச இடத்துலயெல்லாம் தேடுறானுங்க. ராத்திரி நேரத்துல காட்டுல அவன தேடிக்கிட்டு இருக்கும்போது “ஆஹா.. தேளத் தேடி வந்த இடத்துல தேனா..” ங்குற மாதிரி ஒரு பொண்ணு இவனுங்க கிட்ட வந்து சிக்குது
.  
அந்த பொண்ணுதான் நாம போன பதிவுல மொக்க போட காரணமா இருந்த Psychokinesis பொண்ணு. எந்தப் பொருளையும் தொடாம கண்பார்வையாலேயே அந்தப் புள்ளையால கண்ட்ரோல் பன்ன முடியும். அந்தப் பொண்ணுக்கு நம்ம X-Men மெக்னீடோவோட பவர் மட்டும் இல்லாம Charles Xavier ரோட பவரும் சேர்ந்து இருக்கு. அது என்னன்னு நீங்களே பாத்து தெரிஞ்சிக்குங்க. அந்தப் பொண்ணுக்கு ஒழுங்கா பேசக்கூட வரமாட்டேங்குது. பயந்து நடுங்குற அந்த பொண்ணை யாருக்கும் தெரியாம பத்தரமா வீட்டுல தங்க வச்சி பாத்துக்குறாங்க அந்த பசங்க.

ஒரு கட்டத்துல அந்த பொண்ணுக்கு Will Byers  பற்றிய information தெரியும்னு பசங்களுக்கு தெரிய வர, அந்த பொண்ணை வச்சே நண்பனை கண்டுபுடிக்க முயற்சி பன்றாங்க. இந்த நிலையில் போலீஸ் ஒரு சின்ன பையனோட பாடிய ரெகவர் பன்னி, அது Will byers ரோடதுன்னு identify பன்றாங்க. எல்லாரும் அது Will byers தான்னு ஒத்துக்கிட்டாலும் அவங்க அம்மா மட்டும் அது என்னோட பையன் இல்லைன்னு ஆணித்தனமா நம்புறாங்க. 

உண்மையிலயே அது யார்? Will byers உயிரோட இருக்கானா இல்லையா? இருக்கான்னா அவன யார் தூக்குனதுங்குறத செம இன்ட்ரஸ்டிங்கா கொஞ்சம் fantasy கலந்து சொல்லியிருக்கது தான் இந்த Stranger things. மொத்தமே 8 எபிசோட் தான். அதிகபட்சம் ரெண்டு படம் பாக்குற டைம் தான். 

Mystery, Thriller விரும்பிகளுக்கு இந்த சீரிஸ் கண்டிப்பா புடிக்கும். தவறாம பாருங்க. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...