Wednesday, April 5, 2017

ஏய் நா இண்டர்வியூக்கு போறேன்.. இண்டர்வியூக்கு போறேன்-ACCET PLACEMENT!!!


Share/Bookmark
இந்தப் பதிவில் குறிப்பிடப்படும் சம்பவங்கள் கதாப்பாத்திரங்கள் யாவும் உண்மையே.. (சினிமா மேற்கோள்கள் மட்டும் எக்ஸ்ட்ரா)

காலேஜ் சேந்து அஞ்சி செமஸ்டர் வர்ற வரைகும் செத்த நாய் செருப்ப கடிச்ச மாதிரி கிடக்குற பயலுக குபீர்னு ஆறாவது செமஸ்டர்ல படிக்க கெளம்பிருவாய்ங்க. ஆளாளுக்கு நமீதா சைஸுல ஒரு புக்கை கைல எடுத்துக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் திரிஞ்சிட்டு இருப்பானுங்க. இதுல லேடீஸ் ஹாஸ்டல்லருந்து வர்ற ஃபோன் கால்ல டவுட்ட வேற க்ளியர் பன்னிட்டு இருப்பானுங்க. அப்டி என்னடா கையில இவ்ளோ பெருசா வச்சிருக்காய்ங்கன்னு பாத்தா R.S.அகர்வால் எழுதுன Quantitative Aptitude புத்தகம். சப்ஜெக்டுக்கு புக் எழுதிக் கொன்னது பத்தாதுன்னு அந்த அகர்வால் நாதாரி நாயி இங்கயும் வந்துருச்சா. வக்காளி அவனக் கொல்லனும்டா மொதல்லன்னு தோணும்.

ப்ளேஸ்மெண்ட்க்கு கம்பெனிங்க வரனும்னா மொதல்ல அவனுங்க மண்டையக் கழுவி காலேஜ்க்கு அழைச்சிட்டு வரனும். நம்மல்லாம் கூப்டப் போனா மேலயும் கீழயும் பாத்துட்டு வாட்ச்மேன் ட்ரஸ்ஸ குடுத்து கேட்டுல உக்கார வச்சிருவாய்ங்க. அதனால அவனுங்கள கூப்டு வர நல்லா பேசுற ஒரு நாலு பேரு வேணும். அப்படிப்பட்ட பசங்கள செலெக்ட் பண்ணி Placement co-ordinator ah பதவி குடுத்து ஒவ்வொரு கம்பெனிக்கும் அனுப்பி, அவனுங்கள கூட்டிக்கிட்டு வரனும். ஆமா இவனுங்க வழிச்செலவுக்கு காசு வேணுமே? காலேஜ்ல கேட்டா “காலேஜே அவராதத்துலதான் ஓடுது.. நீ வேணா காலேஜுக்கு குடு” ம்பாரு ப்ரின்சிபால். வேற என்ன பன்றது.. “எவன் எவனுக்கெல்லாம் வேலை வேணுமோ அவன்லாம் 2000 ரூவா குடுன்னு எல்லார்கிட்டயும் கலெக்‌ஷனப் போட்டு இந்த மாதிரி செலவுக்கெல்லாம் யூஸ் பன்னிக்குவாய்ங்க. இப்ப இந்த ப்ளேஸ்மெண்ட்ல நம்ம கடந்து வந்த பாதையக் கொஞ்சம் திரும்பி பாக்குறதுதான் இந்தப் பதிவு.

அந்த நாளும் வந்துச்சி. மொதல்ல TCS வந்தாய்ங்க. கேலேஜே ஒரே திருவிழா மாதிரி இருந்துச்சி. பசங்க எல்லாரும் ரேமண்ட்ஸ் மாடல் மாதிரி இருந்தாய்ங்க. பொண்ணுங்க அதுக்கு மேல… “டேய் மச்சி.. யார்ரா இந்தப் பொண்ணு… இத நா சொல்லியே ஆகனும்… யாரும் இவ்வளவு அழக… இவ்வளவு அழகப் பாத்துருக்க மாட்டாங்க.. “  “டேய்… நல்லா கண்ண கழுவிட்டு பாருடா… அது நம்ம க்ளாஸ் புள்ளைதான்… ஃபுல் மேக்கப்புல வந்துருக்கு…” "அப்ப அங்க நிக்கிற பியூட்டி?” “அடேய்... நம்ம HOD மாலாடா..” “அடக் கருமத்தே…. வீட்டுக்கு போன உடனே கண்ண ஆசிட் ஊத்திக் கழுவனும்”ன்னு  இப்படி பல கண்பீசன் நடக்குற அளவுக்கு புள்ளைங்களோட கெட்டப் இருந்துச்சி.

மொதல்ல aptitude test… முக்கால்வாசிப்பேரு தேறியாச்சி. நானும் உள்ள இருந்தேன். அடுத்து  டெக்னிக்கல் இண்டர்வியூ… என்னென்னமோ கேட்டுட்டு “ஆமா வெளியூரெல்லாம் அனுப்புனா போவியா?ன்னான்… நா படக்குன்னு “நோ சார்”ன்னேன்.. “ஏன் சார்” னான்.. “என்னோட ஃபேமிய விட்டுட்டு என்னால எப்புடி சார்ர்… “ன்னு ஒரு விக்ரமன் பட பர்ஃபார்மன்ஸ போட்டேன். க்ளியர் பன்னி HR இண்டெர்வியூக்கு அனுப்பிட்டானுங்க. வெளில வந்து பயலுக்கிட்ட் சொன்னதுக்கு “அட நாசமா போற எடுபட்ட பயலே.. ஏண்டா போக மாட்டேன்னு சொன்னே.. இதுக்கெல்லாம் போவேன்னு சொல்லனும்ண்டா” ன்னானுக… “இதெல்லாம் எனக்கு எப்படா சொல்லிக்குடுத்தீங்க? திடீர்ன்னு கேட்டா நா என்னத்த சொல்றதுன்னு தெரியாம சொல்லித் தொலைஞ்சிட்டேனே… அடுத்த HR இண்டெர்வியூல எப்டி கலக்குறேன் பாரு”ன்னு உள்ள போனேன்..

சொல்லிவச்சா மாதிரி அந்தாளும் கரெக்ட்டா “வெளியூர் அனுப்புனா போவியா மாட்டியா?” ன்னான். இந்த தடவ கொஞ்சம் கூட யோசிக்கலையே “போவேன் சார்” ன்னு மண்டைய வேகமா ஆட்டுனேன். ”டெக்னிக்கல் இண்டர்வியூல போகமாட்டேன்னு சொல்லிருக்க.. இங்க வந்து போவேனு சொல்ற… ஒண்ணு மண்டைய இந்தப் பக்கம் ஆட்டு இல்லை அந்தப் பக்கம் ஆட்டு.. ஏன் இப்புடி மாத்தி மாத்தி ஒளருற”ன்னாரு அவுரு. சார் மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு அவ்வையார் சொன்னாருன்னு அப்பச் சொன்னேன்.. ஆனா திருவள்ளுவர் என்ன சொல்லிருக்காருன்னா “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” ன்னு சொல்லிருக்காருன்னு கில்லி விஜய் மாதிரி மாத்தி மாத்தி பேசுனதுக்கு எதோ சொல்லி சமாளிச்சிட்டு வெளில வந்தேன்.

மொத்த குரூப்புக்கும் இண்டர்வியூ முடிய ராத்திரி ஆயிருச்சி. நைட்டு எட்டு மணியப் போல காலேஜ்குள்ள வச்சி ரிசல்டு சொல்றானுங்க. EEE அட்டெண்டன்ஸ் வாரியா செலெக்ட் ஆன பேரெல்லாம் ஒவ்வொன்னா படிக்கப் படிக்க நமக்கு உள்ளுக்குள்ள திகீர் திகீர்னு இருக்கு. கரெக்ட்டா நம்ம பேரு வரப் போறப்ப மட்டும் டக்குன்னு ஜம்ப் பன்னி அடுத்த பேருக்கு பொய்ட்டாய்ங்க. கிட்டான் போச்சா… காதுல குருவி ரிங்குன்னு சுத்துமே…. குபு குபுன்னு கண்ணுல தண்ணி வந்துருச்சி. நம்ம செலெக்ட் ஆவாத்துக்கு கூட இல்லை. நமக்கு வேண்டியவங்க… வேண்டியவங்களுக்கு வேண்டியவங்க எல்லாரும் TCS ல செலெக்ட் ஆயிட்டாங்க. அந்த சோகம் வேற..

எங்க குரூப்புல மொத்தம் எழு பேரு (பசங்க மட்டுந்தேன்..). நானு, அனந்த், ப்ரபு, ஞான சுந்தர், பரத், ராஜா, வினோத். அதுல அனந்த், ப்ரபு செலெக்ட் ஆயிட்டானுங்க. ”அள்ளிப்போடு… அள்ளிப்போடு..” ன்னு மொத்த காலேஜ் strength la பாதி பேர TCS அள்ளிக்கிட்டு பொய்ட்டனுங்க.  சரி மிச்சம் இருக்க பயலுகளாவது நமக்கு கம்பெனியா இருப்பாய்ங்கன்னு ஒரு ஆறுதல்.

அடுத்த நாலாவது நாள்லயே CTS  காம்பஸ் இண்டர்வியூ. அதுலயும் Aptitude clear. (பேசிக்கலி நா கொஞ்சம் அறிவாளிதான்.. ஆனா பேசதான் வராது). அங்கயும் இண்டர்வியூ. எனக்கு, வினோத், ராஜா மூணூ பேருக்குமே ஒரே பேனல்ல இண்டர்வியூ. அப்ப கஜினி படம் வந்த சமயம். புதுசட்டையெல்லாம் போட்டு டை எல்லாம் கட்டிக்கிட்டு இருக்கவும் கஜினில வர்ற சத்டியன் மாதிரி அங்கிட்டும் இங்கிட்டும் நடந்து “ஹாய்… ஐ ஆம் சஞ்சய் ராமசாமி”ன்னு அவன் குரல்ல காமெடி பன்னிட்டு இருந்தேன்.

ஒவ்வொருத்தனா உள்ள கூப்டானுங்க. இப்ப நம்ம டர்ன். உள்ள போனதும் ஃபைல வாங்கி டேபிள்ள வச்சிட்டு மொத கேள்வி

“what is current?”
“………………………………..”
(பதில் சொல்லல)

அடுத்த கேள்வி

“what is voltage?”
“…………………………………”
அதுக்கும் பதில் சொல்லாம பே பேன்னு உக்கார்ந்திருந்தேன்.

அடுத்து என்கிட்ட ஆன்ஸர் வரவைக்கனும்னே எதோ கேக்க அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சேன். பத்து நிமிஷம் இண்டர்வியூ எடுத்தப்புறம் தில்லு முல்லு தேங்காய் சீனிவாசன் மாதிரி

“What is current க்கும் Answer தெரியாது… What is Voltage க்கும் ஆன்சர் தெரியாது… ஆனா பேரு மட்டும் எலெக்ட்ரிகல் என்ஜினியர்… கெட் அவுட்ட்ட்”ன்னு சொல்ல “ஷார்ட் நேம் சுப்பி சார்”ன்னு வெளில வந்துட்டேன்.

வெளில வந்த அடுத்த செகண்ட் தோணுது “Currnet na flow of electrons ல… Voltage ன்னா potential difference ல… அட மானங்கெட்ட மைண்டே.. இத அப்பவே சொல்லிருந்தா அவய்ங்க்கிட்ட அசிங்கப்படாமயாது வந்துருக்கலாம்லன்னு நினைச்சிட்டு போனேன்… அந்த இண்டர்வியூவும் அவுட்டு. நம்ம பயலுக ராஜாவும் வினோத்தும் செலெக்ட் ஆயிட்டானுங்க. சங்கத்துல மிச்சம் நானு, பரத்து, சுந்தர் மூணு பேருதான்.

மூணு வருசமும் arrears எதுவும் வைக்காத்தால பாரபட்சம் பாக்காம எல்லா கம்பெனியும் அட்டெண்ட் பன்ற eligibility இருந்துச்சி. அடுத்த நாலு நாள்ல WIPRO off campus interview. மதுரை K.L.N காலேஜ்ல. பஸ் எடுத்து காரைக்குடிலருந்து மதுரைக்கு அழைச்சிட்டு போனாய்ங்க. என்னா ஜாலி பஸ்ல. வேலை கிடைக்கலங்குற ஒரு குறையத் தவற வாய்க்கு மட்டும் நமக்கு குறைச்சலே இல்லை அப்ப.

இதே மாதிரி Aptitude க்ளியர் பன்னிட்டேன். நம்ம கூட பஸ்ல வந்த முக்கால்வாசிப்பேரு Apps லயே மட்டை ஆயிட்ட்டால அவியிங்களல்லாம் பேக் அப் பன்னி அந்த பஸ்லயே திரும்ப அனுப்பிட்டானுங்க. அடுத்து டெக்னிக்கல் இண்டர்வியூ. அதுலயும் க்ளியர் பன்னியாச்சு. நூறு பேருக்கும் மேல வந்த பசங்கள்ள 12 பேரு மட்டும் டெக்னிக்கல் க்ளியர் பன்னி HR interview க்கு செலெக்ட் ஆனோம். HR இண்டர்வியூம் முடிஞ்சி அந்த 12 பேர்ல 9 பேர் செலெக் பன்னானுங்க… சோகம் என்ன்ன்னா முகேஷ எங்களால இந்த தடவையும் காப்பாத்த முடியல. இந்த தடவயும் ஊத்திக்கிச்சி.  

மணி ராத்திரி 11க்கு மேல… நாங்க பன்னண்டு பேரும் மதுரைக்கு வந்து பஸ்ஸு புடிச்சிதான் வரனும். அதெல்லாம் ப்ரச்சனை இல்லை. வர்ற 12 பேர்ல 9 பேர் குஜால்ஸ் மூடுல இருப்பாங்க. மித்த 3 பேரு நாங்க சோக மூடுல இருக்கோம். (இல்லைன்னாலும் வரவச்சிக்கனுமே). போற வழிலயே செலெக்ட் ஆன ரெண்டு பயலுக சரக்கடிக்கப் போறேன்னு கிளம்பிட்டானுங்க. ரிஜெக்ட் ஆன பீஸூல நானும் SM சரவணன்னு ஒரு பையனும் இருக்கோம். இன்னொருத்தன் யாருன்னு மறந்து போச்சு. நம்ம SM சரவணன் எப்டின்னா, ஓங்கி அடிச்சான்னா ஒண்ணரை டன் இல்லை நாலு டன் வெய்ட்டு. அப்டி இருப்பான் ஆளு.

நடந்து வந்துக்கிட்டு இருக்கும்போது செலெக்ட் ஆகாத நாங்களே சும்மா வந்துகிட்டு இருக்கோம். செலெக்ட் ஆன ஒருத்தன் ரொம்ப ஃபீல் பன்னிட்டு வந்துக்கிட்டு இருந்தான். “ச்ச… போச்சுடா.. அவ்ளொதாண்டா… ச்ச போச்சுடா…”ன்னுட்டே வந்தான்.

என்னடா செலெக்ட் ஆனவன் ஏன் போச்சுடா போச்சுடான்னு பொலம்புறான்னு என்னடான்னு கேட்டா

“ச்ச… இந்த கம்பெனிலல்லாம் Place ஆனதே அசிங்கம் மச்சி… எங்கப்பாவுக்கெல்லாம் தெரிஞ்சா அசிங்கமா திட்டப்போறாரு… ச்ச…. அசிங்கமா இருக்கும்”ன்னான்.

இய்ய்ய்ய்…. அடடடாடா. ஆஆஆ…. டேய்ய்ய்ய்ய்

இதக் கேட்ட்தும் எனக்கு தேவிக்குமார் ஞாபகம் வந்துருச்சி.. (தேவிக்குமார் மேட்டர மைண்டுல வச்சிக்குங்க. பின்னால சொல்றேன்.) திடீர்னு என்னோட உடம்புல எதோ ஒண்ணு இடிச்சிது. என்ன நமக்கு இங்க கொஞ்சம் muscle extraவா வளர்ந்துருக்கேன்னு தொட்டுப் பாத்தா அது SM சரவணனோட ஆர்ம்ஸூ… முறுக்கிட்டு அடிக்கிற லெவல்ல நிக்கிறான். பின்ன கடுப்பாகுமா ஆவாதா… அவன் இருந்த கோவத்துக்கு நம்ம பயல அடிச்சி பூமிக்குள்ள இறக்கிருப்பான்.

அப்புறம் அவன சாந்திப் படுத்தி, மதுரை டவுனுக்கு வந்து ஆளுக்கு நாளு பொரோட்டாவ பிச்சிப் போட்டுக்கிட்டு விடியக் காலமா காரைக்குடி வந்து சேந்தோம்.

இந்த தேவிக்குமார பத்தி சொன்னேணே…. ஏற்கனவே ஒரு பதிவுல சொல்லிருக்கேன். இருந்தாலும் இன்னொருதபா…

ஃப்ரஸ்ட் இயர்ல எங்களுக்கு பக்கத்து ரூமுதான் தேவிக்குமார். காலேஜ் சேர்ந்து மொத series test நடத்தி, பேப்பர்லாம் திருத்தி குடுத்துருந்தானுங்க. கணக்கு பேப்பர்ல நா 50க்கு 37ன்னு நினைக்கிறேன். நம்ம ரூம் பசங்க எல்லாமே ஓரளவு டீசண்டான மார்க்குதான் எடுத்துருந்தாய்ங்க. சாப்ட மதியம் ரூமுக்கு வந்தப்ப தேவிக்குமார் ஹாஸ்டல் காரிடார்ல நின்னு பெனாத்திக்கிட்டு இருந்தான்.

“போச்சுடா.. எல்லாமே போச்சுடா… மொத டெஸ்ட்லயே இவ்ளோ கம்பியா எடுத்தா professor க்கு என் மேல impression eh போயிரும்டா” ன்னு ஃபீல் பன்னிட்டு இருந்தான்… “ஹா..ஹா. ஃபெயில் ஆயிட்டான் போலருக்கு funny boy” ன்னு நினைச்சி அவன் பேப்பர அப்டி கையில வாங்கிப் பாக்குறோம்…
டபீர்ன்னு நெஞ்சி வெடிச்சிருச்சி… 50 க்கு 49… அட நாயே.. இந்த  மார்க்க வச்சிக்கிட்டு தான் இவ்வளவு நேரம் இம்ப்ரஷன் போயிரும்… ஆப்ரேசன் ஆயிரும்னெல்லாம் பினாத்துனியா… 

ரைட்டுரா.. இன்னிலருந்து நாங்க உன் பக்கத்து ரூம் இல்லடா.. ரூமக் காலி பன்றோம்டான்னு போனதுதான். பின்னாலதான் தெரிஞ்சிது அவன் தான் 10th matriculation எக்ஸாம்ல ஸ்டேட் ஃப்ர்ஸ்டுன்னு. அவ்வளோதான். நாலு வருஷத்துலயும் அவன் எவ்வளவு மார்க் எடுத்தான்னு நாங்க கேட்டதே இல்லையே…

(இண்டர்வியூ கதை இன்னும் முடியல… மூணு கம்பெனி கதை தான் முடிஞ்சிருக்கு.. இன்னும் 15 பாக்கி இருக்கு. அடுத்த பதிவுல தொடருவோம்)


Monday, April 3, 2017

கவண்!!!


Share/Bookmark
ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு செண்டிமெண்ட் இருக்கு. அவங்களோட வெற்றிபெற்ற படங்கள்ல இருக்க எதாவது ஒரு விஷயத்த அவர்களோட அடுத்தடுத்த படங்கள்லயும் தொடருவாங்க. TR பெரும்பாலும் ஒன்பது எழுத்துக்களில் இருப்பது போலான தலைப்பை வைக்கிறது போல அயன் படத்தின் வெற்றியாலதான் கே.வி ஆனந்த் “அநேகன்” “மாற்றான்” “கவண்”ன்னு ஒரே ‘ன்’ல முடியிற பேரா வச்சிக்கொல்றாரு போல. மற்ற ரெண்டு பட பெயர்களாவது பரவால்ல. கவண்ங்குற பேர்ல ஒரு அட்ராக்‌ஷனே இல்லை.  படத்துலயாவது எதாவது இருக்கான்னு பாப்போம் .

                     செம ஸ்பாய்லர்ஸ்

படம் ரிலீஸான முதல்நாளே படத்துக்கு பயங்கர பில்ட் அப்பு.. அதுவும் சில ஆர்வக்கோளாறுகள் “மீடியாவ விட்டு கிழிச்சிட்டானுங்க” “மீடியாவ வச்சி செஞ்சிட்டானுங்க” ன்னு எக்கச்சக்கமா அடிச்சிவிட்டுக்கிட்டு இருந்தானுங்க. அப்டி என்னத்த கிழிச்சாங்க, நமக்கு தெரியாத எதோ ஒண்ண சொல்லிட்டாங்க போலன்னு பாத்தா எல்லாமே நமக்கு ரொம்ப பழக்கப்பட்ட நாடா.

விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள ஓட்டுரானுங்க. இது ரொம்பப் புதுசு பாருங்க நமக்கு. விஜய் டிவியே ஒரு மானங்கெட்டவனுங்க. அவனுங்களே ஷோ பன்னுவானுங்க. அப்புறம் அது இது எது, கலக்கப்போவது யாருங்குற பேர்ல அவனுங்களே அந்த ஷோவ ஓட்டிக்குவானுங்க. வாரம் ஏழு நாள்ல, பதினாலுதடவ அதயே திரும்பத் திரும்ப போட்டுக்காட்டி அருத்துக் கொல்லுவானுங்க.  இப்டி இருக்க அதே கண்டெண்ட்ட திரும்ப படத்துல வச்சா அது சுவாரஸ்யமா இருக்குமா?.

ஒரு வேளை கே.வி ஆனந்த் இந்தக் கதையை யோசிக்கும்போது இந்த விஷயங்கள் கொஞ்சம் புதிதாக இருந்திருக்கலாம் ஆனா, இன்னிக்கு தேதிக்கு இதெல்லாம் ரொம்ப பழைய மேட்டர்.

தனது டிவி சேனலை முதல் இடத்துக்கு கொண்டு வர துடிக்கிற ஒரு சேட்டு, சிலப் பல டகால்டி வேலைகள்லாம் பண்ணி சேனலோட TRP ய ஏத்திக்கிறாரு. சேனல் மூலமா எந்த செய்தியையும் மக்களை நம்ப வைக்கலாம்ங்குற மெண்டாலிட்டில தப்பான காரியங்கள் செய்யிறாரு. (இதெல்லாம் வாஞ்சிநாதன்ல ப்ரகாஷ்ராஜ் செஞ்சது) இதைத் தட்டிக்கேட்கும் விஜய் சேதுபதி & மடோனா செபஸ்டியன் குழு, அந்த டிவி சேனல்லருந்து வெளியேறி, இருக்கா இல்லையான்னே தெரியாத ஒரு டிவி சேனல்ல வேலைக்கு சேர்ந்து,  சூரியவம்சம் சரத் குமார் மாதிரி ஒரே பாட்டுல எப்படி அந்த சேனலை முன்னேத்துறாங்கங்குறது தான்.

படத்தில் மிகப்பெரிய பலவீனம் Casting. முதல்ல இந்த கதைக்கு விஜய் சேதுபதி பொருத்தமானவரே இல்லை. நிறைய இடங்கள்ல சொதப்பல். ஆங்கிலம் பேசும் காட்சிகள் அபாரம். அதுவும் ஒரு விக்கயும் கண்ணாடியயும் மாட்டி விட்டு, சில காட்சிகள்ல அப்டியே chitti ட்ரெயின் பன்னுற டாக்டர் வசீகரன் மாதிரியே இருக்காரு.  என்னைப் பொறுத்த வரை இந்தக் கேரக்டர்ல விஜய் சேதுபதியை விட மாதவன் இன்னும் சிறப்பாக பொருந்தியிருப்பார். ஆனாலும் சில இடங்களில் விஜய் சேதுபதி அவருக்கே உரிய சில பாடி லாங்குவேஜ், ஒன்லைன்கள்ல நம்மள கவருறாரு. 

இன்னொரு மொக்கையான பாத்திரப் படைப்பு அரசியல் வாதியா வர்ற போஸ் வெங்கட்டோடது. தொடர் குடிகாரர், லோக்கல் பாஷையில் பேசும் ரவுடி கம் அரசியல் வாதி. இந்தக் கேரக்டர அசால்ட்டா பன்ன தமிழ்ல எத்தனையோ பேர் இருக்காங்க. போஸ் வெங்கட்ட கூப்டு வந்து அவருக்கு ஒரு மொக்கை கெட்டப்ப போட்டு விட்டு, செம மொக்கை போட்டுருக்காங்க. அதுவும் சேனல் ஓனர் சேட்டும், போஸ் வெங்கட்டும் பேசிக்கிற காட்சிகள் கண்றாவி. “ஃபேஸ்புக்குல என்ன வச்சி காமெடி தானடா பன்னிக்கிட்டு இருந்தீங்க” என்கிறார் ஒரு காட்சியில். ஒரு வேளை கேப்டனை imitate செய்ய  முயற்சித்திருக்கிறார்களா என தெரியவில்லை.

முதல் ஒரு முக்கால் மணி நேரப் படம் ரொம்ப நல்லாவே போகுது. கதை நகருது. ஆனா ஒரு கட்டத்துல டிவி ஷோவ ஓட்ட ஆரம்பிக்கிறேன்னு பவர் ஸ்டார chief கெஸ்ட்டா கூப்டு வந்து ஒரு ஷோ பன்ற மாதிரி காமிக்கிறானுங்க. அப்ப ஆரம்பிக்கிறது தான்.. அப்புறம் க்ளைமாக்ஸ் வரைக்கும் படம் கடி தான். அதுவும் ரெண்டாவது பாதிலல்லாம் கதை நகரவே இல்லை. இண்டர்வல் வரைக்கும் கதை எவ்வளவு வந்துச்சோ அவ்ளோதான் க்ளைமாக்ஸ் வரைக்கும். இன்னும் இந்த ஃபேக்டரி கழிவுகள்லருந்து மக்களைக் காப்பாத்துற கதைய எத்தனை படத்துல எடுக்கப் போறாய்ங்கன்னு தெரியல. 

படத்தில் ஒரு சில ஆறுதல்கள்ல டி.ஆரும் ஒண்ணு. வடிவேலு ஒரு படத்துல பார்த்திபனப் பாத்து சொல்லுவாறு “இவன் ரூபத்துல ஒருத்தன ஊமையா பாக்குறது மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு”ன்னு. கிட்டத்தட்ட எனக்கும் அதேதான் தோணுச்சி. இவர் ரூபத்துல வாயக் கொஞ்ச நேரம் மூடிக்கிட்டு ஸ்க்ரீன்ல வர்றதப் பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. இவர் வசனம் பேசுவதற்காக திணிக்கப்பட்ட காட்சிகளும் ஒண்ணு ரெண்டு இருக்கு.

மிகப் பெரிய காமெடி என்னன்னா டி ஆர் ஒரு டொம்மையான டிவி சேனலுக்கு ஓனர். அவரோட ஆஃபீஸக் காமிக்கிறானுங்க. ஒரு பாழடைஞ்ச வீடு. அதுல கூட்டுறதுக்கு ஒரு ஆயா.. டி ஆருக்கு அள்ளக்கை ஒண்ணு. லேகியம் விக்கிறா ப்ரோகிராமுக்கு ரெண்டு பேரு. இவ்வளவுதான் மக்களே ஒரு சேனல் ஆஃபீஸ் செட்டப்பு. சேனல்ன்னு சொன்னதுக்காகவாச்சும் எதாவது பன்னிருக்கலாம்ல. அதுலயும் டிஆர் சேனல் ஓனர்னு தான் பேரு. சும்மா சொங்கி மாதிரி வந்துட்டு போறாப்ள.  அவரோட சேனல் செட்டப்ப பாக்கும்போது அப்படியே ஞானப்பழம் படத்துல பாக்யராஜோட ப்ரஸ்ஸ பாக்குறா ஃபீல் 

விஜய் சேதுபதி டிஆர் கிட்ட வேலை கேட்டு போறதும் அதுக்கு அவர் மறுக்குறதும் அப்படியே கிரி பட காமெடிய ஞாபகப்படுத்துது. “எதுவுமே இல்லாத என் கம்பெனிக்கு வேலைக்கு வரனும்னு துடிக்கிறியே அது ஏன்? என்கிட்ட இருக்கதே அரைக்கிலோ மைதா மாவும் நாலு வரிக்கியும்தாம்”பாறு வடிவேலு. இங்க டிஆர்கிட்ட வரிக்கிக்கு பதிலா லேகியம். அவ்ளோதான் டிபரன்ஸ். விஜய் சேதுபதி டீம் இவர் சேனலுக்கு வந்தும் பெருசா இன்னோவேட்டிவால்லாம் எதுவும் பன்ன மாட்டானுங்க. கூட்டி பெருக்கி சுத்தம் மட்டும் பன்னி சுத்தி உக்காந்து பேசிக்கிட்டு இருப்பானுங்க அவ்வளவுதான். அதுவும் அவனுங்க கவர் பன்றது அந்த ஃபேக்டரி மேட்டர் மட்டும்தான்  சேனல் முன்னேறிடும்.

தமிழ்சினிமாவுல ஷங்கர் மூலமா பரப்பப்பட்ட ஒரு அபத்தமான காட்சிகள்ல ஒண்ணு, ஒரு சேனல்ல ஹீரோ பேசும்போது தமிழ்நாட்டுல உள்ள அத்தனை மக்களும் அந்த சேனல கூட்டமா வீட்டுல உக்காந்தோ இல்லை ரோட்டு ஓரமா வசந்த் அன் கோவுல நின்னோ பாத்து “அப்புடிக் கேளுய்யா… அடிச்சாம்பாரு ஆப்பு.. அந்தத் தம்பி சரியாத் தான் பேசுது “ போன்ற வசங்களப் பேசிக்கிட்டு இருப்பானுங்க. ஏண்டா நம்மாளுக கிரிக்கெட் மேட்சத் தவற வேற எதயாவது ஒண்ணா நின்னு பாத்துருகானுங்களா? அதுமட்டும் இல்லாம ஒருத்தன் குடிகாரன்னா கையிலயே பாட்டில வச்சிக்கிட்டு ரெண்டு நிமிஷத்துக்கு ஒருதடவ வாயில ஊத்திக்கிற மாதிரி காமிக்கிறாய்ங்க. மொடா குடிகாரன்கூட அப்டி குடிக்க மாட்டான்.

கேவி ஆனந்தின் முந்தைய படமான அநேகன்ல கொஞ்சமாவது படத்த ட்ரைவ் பன்றதுக்கு ஒரு கதையும் கண்டெண்டும் இருக்கும். இங்க மீடியாங்குறா மேட்டர மட்டும் எடுத்துக்கிட்டு ஒரு முழுப் படத்தையும் தொயிவில்லாம கொண்டு போற ஒரு கதைய எழுதாம விட்டுட்டாரு. கேமரா முதல் பாதி சூப்பர். ரொம்ப ரிச்சா இருந்துச்சி.. ரெண்டாவது பாதில ரொம்ப சுமார். காட்டுக்குள்ள லொக்கேஷன் பொய்ட்டாலே பிக்சர் குவாலிட்டி மொக்கையாயிரும்.

கே.வி ஆனந்தும் ரஞ்சித் மாதிரி ஆயிட்டாரு. ஹீரோ ஹீரோயினத் தவற மற்ற துணை நடிகர்களெல்லாம் அவரோட இதற்கு முந்தைய படங்கள்ல பார்த்து பழக்கப்பட்ட அதே ஆட்கள். மடோனா செபஸ்டியன் ஆளு சூப்பரா இருக்கு. ஆனா நம்ம பயளுக அந்தப் புள்ளைய சத்யராஜ் சத்யராஜுன்னு சொல்லி ஓட்டுறதால அதப் பாக்கும்போதெல்லாம் சத்யராஜ் ஞாபகம்தான் வருது.

கே.வி ஆனந்த் படங்களுக்கு பெரிய பலம் ஹாரிஸின் பாடல்களும் பின்ணணி இசையும். இங்க அது இல்லை. ஹிப் ஹாப் தமிழாவின் பாடல்கள் காதுக்குள்ள காய்ச்சுன கம்பிய விட்டு கொடாயிற மாதிரி இருக்கு. ஹிப் ஆதிக்கு ஜாஸி கிஃப்ட், சுக்விந்தர் சிங் மாதிரியான கொஞ்சம் பெக்குலியர் வாய்ஸ். பத்தில் ஒரு பாடல் அவர்கள் குரலில் கேட்டால்தான் நல்லாருக்கும். பத்தயுமே அவர்கள் குரல்ல கேட்டா காது ஜவ்வு கிழிஞ்சிரும். நம்மதம்பி அனைத்து பாட்டையும் அவரே பாடனும்னு ஆசப்படுறாப்ள. அவருக்கு வாயில எதாவது ஆப்ரேஷன் பண்ணி பாடவிடாம பன்ன முடியுமா பாருங்க. ஆப்ரேசன் செலவுக்கு கூட நானும் ஷேர் தர்றேன்.

மொத்ததுல படத்துக்கு ப்ளஸ்ஸுன்னு பாத்தா முதல் முக்கால் மணி நேரம். விஜய சேதுபதியோட ஒண்ணு ரெண்டு காமெடிகள். மத்தபடி அனைத்துமே படத்துக்கு துணை நிக்கல.  கே.வி ஆனந்த், சேதுபதி, டிஆர் காம்பினேஷன்ல நம்ம எதிர் பாத்த அளவு இல்லாம, ரொம்ப ஆவரேஜான படம். 




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...