Friday, March 9, 2018

FERDINAND & COCO !!!


Share/Bookmark

எருது சண்டைகளுக்காக ப்ரத்யேகமாக காளைகள் வளர்க்கப்படும் ஒரு பண்ணையில், அந்த சண்டைக்கு தெரிவாவதே வாழ்வின் லட்சியமென காளைகள் வாழ்ந்து வருகின்றன. பலசாலியான காளைகள் மட்டுமே சண்டைகளுக்கு தெரிவு செய்யப்படும். யார் பலசாலி, யார் சண்டைக்கு தெரிவு செய்யப்படப் போவது என எருதுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் பலத்தைக் காட்டிக்கொண்டிருக்க,  Ferdinand என்ற ஒரு கன்று மட்டும் இது போன்ற சண்டைகளிலெல்லாம் ஈடுபாடில்லாமல் வாழ்க்கையை வேறு கோணத்தில் ரசிக்கிறது. 

Ferdinand இன் தந்தை , எருது சண்டைக்குத் தெரிவாகி பண்ணையிலிருந்து வெளியேறி, நீண்ட நாட்களாகியும் திரும்பாததால் Ferdinand பண்ணையிலிருந்து தப்பித்து வெகுதூரம் பயணித்து ஒரு குடும்பத்திடம் சேர்கிறது. தான் எதிர்பார்த்த அத்தனையும் அங்கு கிடைக்க, மிகுந்த மகிழ்ச்சியுடன் வளர்ந்து வருகிறது. Ice Age படத்தில் Ellie என்ற யானை தான் ஒரு யானை என்பதே தெரியாமல் குழந்தைத் தனமாய் வளர்ந்து வருவது போல, தான் ஒரு பிரம்மாண்டமான எருது எனத் தெரியாமலேயே ப்ரம்மாண்டமாக வளர்ந்து வருகிறது.

எல்லாம் மகிழ்வாகச் சென்றுகொண்டிருக்க, ஒரு எதிர்பாராத சம்பவத்தினால் Ferdinand மீண்டும் தான் தப்பித்து வந்த இட்த்திற்கே கொண்டு செல்லப்படுகிறது. எந்த சண்டை வேண்டாம் என்றிருந்ததோ அதே சண்டையை மீண்டும் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட, அதை Ferdinand எப்படி எதிர்கொண்டு வெற்றி பெருகிறது என்பதே கதை.

கதை என்று பார்த்தால் நமக்கு பழக்கமான தமிழ்ப்படங்கள் போல எளிதில் யூகிக்க முடிந்த டெம்ளேட் கதை தான். ஆனால் விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அனிமேஷன் படம் என்பதால் போரடிக்காமல் செல்கிறது.

முடி வளர்ந்து கண்ணை மறைத்திருப்பதை ஒரு எருது தனக்கு பார்வை கோளாரு இருக்கிறது என நினைத்துக் கொண்டிருப்பதும், Ferdinand ன் நண்பனாக வரும் ஒரு நாயும் அவ்வப்போது லேசான சிரிப்பை வரவழைக்கின்றன.

ஆஹா ஓஹா டைப் படமெல்லாம் இல்லை என்றாலும், ஒரு முறை தாராளமாகப் பார்க்கலாம். 

COCO
  


No Spoilers
மூணு தலைமுறைக்கு முன்னால மியூசிக்ல இருக்க ஆர்வத்துல மனைவியையும் குழந்தையையும் விட்டுட்டு போயிடுற ஒருத்தனால, அந்தக் குடும்பத்துக்கே மியூசிக் மேல வெறுப்பு வந்துடுது. எந்த அளவுக்கு வெறுப்புன்னா ரோட்டுல போற எவனாவது ஒருத்தன் மியூசிக்க பத்தி பேசுனாலே செருப்ப சாணில முக்கி அவன் அடுத்த தெருவுக்கு போற வரைக்கும் அடிச்சி தொறத்துற அளவுக்கு.

மொத்தக் குடும்பமும் அதே மாதிரி மனநிலையுடன் இருக்க, மூணு தலைமுறை தாண்டிய ஒரு சின்ன பையனுக்கு இசை மேல பயங்கர ஆரவம் வருது. மிரட்டல் அடில வர்ற ஓனர் கெழவி மாதிரி அவனோட பாட்டி அந்தப் பையன வாயிமேலயே நாலு மிதி மிதிச்சி மீசிக்கெல்லாம் ஒண்ணும் வேணாம் நம்ம குடும்பத் தொழிலான ஷூ தைக்கிற தொழிலையே கத்துக்கோன்னு சொல்லிடுது.

சோகத்துல இருக்க பையன், ஒரு சில சம்பவங்களால இறந்துபோனவர்களோட உலகத்துக்கு போயிடுறான். அங்கிருந்து அவன் திரும்ப நிஜ உலகத்துக்கு வரனும்னா, அவன் குடும்பத்த சேர்ந்த யாராவது அவனுக்கு ஆசி வழங்குனாதான் வரமுடியும். எப்படி அவன் இறந்தவர்களோட உலகத்துலருந்து நிஜ உலகத்துக்கு வர்றாங்குறத, ரொம்ப ஜாலியாவும் ட்விஸ்டுகளோடவும் சொல்லிருக்க படம்தான் கோகோ.

பெரும்பாலும் அனிமேஷன் படங்கள்ல கதை ரொம்ப ரொம்ப சிம்பிளாதான் இருக்கும். ஆனா இந்தப் பட்த்தைப் பொறுத்த அளவு, மற்ற படங்கள் மாதிரி இல்லாம கதையில நிறைய twists & turns வச்சி ரொம்பவே சுவாரஸ்யமா கொண்டு போயிருக்காங்க.

ஒரு திரைப்படத்துல ஒவ்வொரு காட்சிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு அதிகரிக்கும்போது, படத்துல சுவாரஸ்யமும் அதிகரிக்கும் அதே சமயம் அந்தக் கதையில ஒரு முழுமையை நம்ம உணரமுடியும். அந்த மாதிரி ஒரு முழுமைய இந்தப் படத்துல உணர முடியிது. ரொம்ப brilliant ஆன திரைக்கதை.


சமீபத்துல satisfied ah பாத்த ஒரு சூப்பர் படம். மிஸ் பன்னாதீங்க



Sunday, February 18, 2018

நாச்சியார்!!!


Share/Bookmark
நேத்து ஃப்ரண்டு ஒருத்தன் இந்தப் படத்தப் பாத்துட்டு பயங்கர பெணாத்தல். ”பாலா வித்யாசமா படம் எடுத்துருக்காருடா.. பாலா பட்டையக் கெளப்பிருக்காருடா… இதுவரைக்கும் பன்னாத மாதிரி படம் பன்னிருக்காருடா.. ஹேட்டர்ஸ் எல்லாம் சாவுங்கடா”

“சரி ஒரு நிமிஷம் நீ இப்டி வாடா.. என்ன வித்யாசமா படம் எடுத்துருக்காரு?”ன்னு கேட்டேன்.

“க்ளைமாக்ஸ்ல யாரையுமே கொல்லாம படம் எடுத்துருக்காருல்ல.. பாலா கெத்துடா…”ன்னான்.

”இன்னும் கொஞ்சம் பக்கத்துல வா..த்தூ…”


அவனச் சொல்லி குத்தம்மில்ல.. இந்த செகப்பு கலர்ல பேர் போட்டுக்குற டைரக்டர்களோட படம்னாலே நம்ம பயலுக மொதல்ல “சூப்பரப்பு”ன்னு கை தட்டிட்டுத்தான் அப்புறம் படம் எப்டி இருக்குன்னு யோசிப்பானுங்க. மணிரத்னம், மிஷ்கின், பாலான்னு டைட்டில் கார்டுல அவங்க பேர செகப்பு கலர்ல போட்டுக்கிட்டாலே அவங்க ஒரு டெர்ர்ரான டைரக்டர்ஸ்னு நம்ம மைண்டுல பதிஞ்சி போச்சு


வீடியோ விமர்சனத்திற்கு கீழே க்ளிக்கவும்!!


இந்தப் படத்தோட போஸ்டர் வந்த எல்லாருக்குள்ளயும் ஒரு கன்பீசன். க்ளைமாக்ஸ்ல சாகப்போறது ஜிவி ப்ரகாஷா, ஜோதிகாவா இல்லை ஜோதிகா கையில இருக்க குழந்தையான்னு? இந்த மூணு பேருமே சாகலன்னதும் இது ஒரு மிகப்பெரிய வித்யாசமான படமா தெரியிதே தவற மத்தபடி ஒண்ணும் இல்ல.

படத்தோட கதைன்னு பாத்தா “யாருடா மகேஷ்… மகேஷ் who are you?” அப்டின்னு ஒரு படம் வந்துச்சி. அந்தப் படத்தோட கதைதான் இந்தப் படத்தோடதும். அது என்ன கதைன்னு கேக்குறீங்களா? சொல்லக்கூடாது.. அதான் இந்தப் படத்துல பெரிய டுஸ்ட்டே..

ஜோதிகா வர்ற காட்சிகள் கொஞ்சம் பரவால்ல. விஜய் நார்மலா நல்லாருப்பாரு.. ஆனா போலீஸ்  கெட்டப் போட்டா மட்டும் வாய் ஒரு மாதிரி கோணிக்கும். அதே மாதிரி ஜோதிகாவுக்கு படம் முழுக்க வாய் அதே மாதிரி கோணிட்டே இருக்கு. கெத்தா இருக்காங்களாம். வாயில என்னசார் கெத்து? மத்தபடி ஜி.வி.ப்ரகாஷ், இவானா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளெல்லாம் அப்டியே வழக்கு எண் 18/9 படத்த ஞாபகப் படுத்துது. ஜி.வி போட்டுருக்க டி ஷர்ட் கூட வழக்கு எண்ல ஸ்ரீ போட்டது மாதிரி இருந்துச்சின்னா பாத்துக்குங்களேன்.

படத்தோட டைட்டில் கார்டுல “அறிமுகம்” ராக்லைன் வெங்கடேஷ்ன்னு போட்டடாய்ங்க. அட நம்ம லிங்கா புரடியூசருல்லன்னு நினைச்சிட்டு படம் ஃபுல்லா தேடிப்பாத்தேன் ஆளையே காணும். அப்புறம் வீட்டுல வந்து நெட்டுல தேடிப்பாத்தாத்தான் தெரியிது சோதிகா கூட வர்ற கட்டை மீசை போலீஸ்காரர்தான் ராக்லைன் வெங்கடேஷூன்னு. அவன் அவன் கெட்டப் சேஞ்ச் பன்ன என்னென்னவோ பன்னிட்டுருக்கானுங்க. ஆனா கெட்டப் மாற மாட்டுது. இங்க அரை இஞ்ச் மீசைய தடிமனா வச்சி ஆளையே அடையாளம் தெரியாம மாத்திட்டானுங்க.

பாலா படம்னு சொன்ன உடனே இளையராஜா கதையெல்லாம் கேக்காம அசிஸ்டண்ட் கிட்ட “நாலு சாவு மியூசிக்க தூக்கிப் போட்டுவிடுய்யா”ன்னு சொல்லிட்டு போய்ட்டாரு போல. படத்துல சோகமே இல்ல.. ஆனா மீசிக்குல ஒரே சோக மயம். அப்ப அதானே?

கள்வனின் காதலி படத்துல சம்பந்தமே இல்லாம அப்பப்ப ஒரு பொண்ணு வந்து “கலத்கா.. மத்கர்”ன்னு சொல்லிட்டு போயிரும். அது ஏன் வருது.. அது யாருண்ணே தெரியாது.. அந்த மாதிரி இந்தப் படத்துல ஒருத்தன் இருக்கான். சோதிகா புருசன். அப்பப்ப வந்துட்டு “சொல்லிட்டியா சொல்லலியா? சொல்ல்லன்னா சொல்லிரு”ன்னு ஜோதிகாட்ட சொல்லிட்டு போயிருவான். கடைசி வரைக்கும் அந்த ஒரே வசனம்தான். அது வேற யாரும் இல்ல.. மீனாக்‌ஷி மிஷன் டாக்டர் குருஷங்கரு. சினிமா ஆசை யார உட்டுச்சு...

க்ளைமாக்ஸ்ல யாரும் சாகலைங்குறத் தவற படத்துல பெரிய விஷயங்கள்லாம் எதுவும் இல்லை. பாலாவோட அதே வழக்கமான பல்லு விளக்காம காரக்க்குழம்பு தலையோட வர்ற ஹீரோ,  சிரிப்பு வராத காமெடிகள், ரொம்ப கடுப்பேத்தாத சுமாரான காதல் காட்சிகள்னு, சுமாரா படம் நகருது.

.முதல் ஓரிரு படங்களுக்குப் பிறகு, க்ளைமாக்ஸ்ல அவர் காட்டும் குரூரங்களைத் தவிர்த்து அவர் படத்தோட மற்ற காட்சிகளப் பாத்தா ரொம்ப ரொம்ப ரொம்ப சுமார் ரகமாத்தான் இருக்கும். ஒரு வசனம் கூட நல்லாருக்காது. நகைச்சுவைக் காட்சிகளுக்கு படத்துல இருக்க கேரக்டர்கள்தான் சிரிக்குமே தவிற நமக்கு சிரிப்பு வராது.  நெகடிவ் க்ளைமாக்ஸ் மக்களுக்கு பிடிக்கலன்னு அவர உணர வைக்கவே நாலு படத்த தொர்ந்து ஊமை குத்தா குத்தி ஃப்ளாப் ஆக்க வேண்டியிருக்கு. இந்தப் பல்லு வெளக்காத ஹீரோ கதைகளை விட்டுட்டு கொஞ்சம் வெளில வந்து எடுத்தாதான் அவரோட கெப்பா குட்டி தெரியும்.

எனக்கென்னவோ அர்ஜூன் ரெட்டி ரீமேக்க கூட ஹீரோ காலேஜ்ல கக்கூஸ் கழுவுறவன், ஹீரோயின் க்ளாஸ் ரூம் பெருக்குறவ. இவங்க ரெண்டு பேருக்கும் இடையில வர்ற காதல்ன்னு கதாப்பாத்திரங்கள மாத்தி எடுத்தாலும் எடுத்துருவாரோன்னு பயமா இருக்கு.

வெறுப்பேத்தாத பாலா படம் என்பதைத் தாண்டி ”ஆஹா ஓஹோ” “அல்டிமேட்டுடா அம்பி”ன்னு சொல்ற அளவுக்கெல்லாம் ஒர்த்தான படம் இல்லை. போரடிக்காம ஓடுது. ஒரு தடவ பாக்கலாம். 

  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...