
பொதுவா
முன்னனியில் இருக்குற ஹீரோக்களோட பாதைய கொஞ்சம் திருப்பி பாத்தோம்னா, ஒவ்வொரு குறிப்பிட்ட
காலகட்டத்துலயும் ஒரு சில குறிப்பிட்ட படங்கள் அவர்களோட இமேஜையும் , அவங்க படத்தோட
standard ah யும் மாத்தி அமைக்கிற மாதிரி இருக்கும்.
அந்த குறிப்பிட்ட படங்களுக்கு முன் பின் அவங்களோட படங்கள்ல நிறைய மாற்றங்கள் தெரியும்.
இது மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்தா மட்டுமே ஒருத்தர் சரியான பாதையில பயணிச்சிட்டு
இருக்காருன்னு அர்த்தம். அப்படிப்பட்ட ஒரு சரியான வெற்றிப்பாதையில பயணிக்கிற ஒரு ஹீரோ
தான் நம்ம NTR ஜூனியர். அவருக்கும் மேல சொன்னதுபோல ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியிலும்
ஒவ்வொரு படங்கள் வந்து அவரோட படங்கள ட்யூன் பன்னிக்கிட்டே இருக்கு.
சினிமா
பின்னனி இருந்ததால் மட்டுமே இவர் சினிமாவுக்குள்ள நுழைய முடிஞ்சிது. இல்லைன்னா இவரோட
ஆரம்ப கால தோற்றத்துக்கு சத்தியமா சைடு ரோலுக்கு கூட சேத்துக்கிட்டு இருக்க மாட்டாங்க.
ஆனா சினிமாக்குள்ள வந்த இந்த ஒரு 10 வருஷ காலத்துல அவர் நடிப்பிலும் உடல் ரீதியாகவும்
அடைஞ்ச மாற்றங்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. நா காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போது
வந்த மன்மதன் படத்துல “நூவண்டே நாக்கு சால இஷ்டம்.. நேனே சிம்மாத்ரி… நேனே சாம்பா…
தீஸ்கோரா” ன்னு சந்தானம் இவரத்தான் கிண்டல் அடிப்பாரு. வேலையில்லா பட்டதாரி படத்துல சமுத்திரக்கணி தனுஷ
பாத்து சொல்வாறே “ உன் கூட படிச்சவன்லாம் படிச்சி வேலை வாங்கி எங்கயோ பொய்ட்டான். ஆனா
நீ இன்னும் இங்கயே சுத்திக்கிட்டு இருக்க” ன்னு. அதே தான் இங்கயும்.
அன்னிக்கு
NTR ah கிண்டலடிச்ச சிம்பு இன்னும் அதே நிலமையில தான் இருக்காரு. ஆனா இன்னிக்கு நிலைமையில
NTR ரோட ரேஞ்சே வேற. தெலுகு டாப் 5 ஹீரோக்கள்ல அவரும் ஒருத்தரு. அவருக்குன்னு மிகப்பெரிய
ஃபேன் பேஸ். எல்லா படங்களுக்கும் மிகப்பெரிய ஓப்பனிங். இவரோட சினிமா standard ah யும்
ஒரு சில படங்கள் கொஞ்சம் கொஞ்சம் மெருகேத்தி மாத்தி அமைச்சிது. அதுல முதல் படம் SS
ராஜ மெளலி எடுத்த எமதொங்கா. அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்டுகிட்டு ஜம்போ சைஸ்ல இருந்த
NTR ah பாதியா குறைச்சது அந்தப் படம். உடல் ரீதியா மிகப்பெரிய மாறுதல். அப்புறம்
2010 ல பிருந்தாவனம்னு ஒரு ட்ரெண்ட் செட்டிங்க் படம். கடந்த 5 வருஷங்கள்ல தெலுங்குல
வந்த பல படங்களுக்கு இந்தப்படம் தான் பேஸ். அடுத்ததா போன வருஷம் வந்த டெம்பர். NTR
ன்னா டான்ஸ் ஆடிட்டு சத்தம்போட்டு பஞ்ச் டயலாக் மட்டும்தான் பேசுவாறுன்னு இருந்த இமேஜ
உடைச்சி அவருக்குள்ள இருந்த நடிகன வெளில கொண்டுவந்து பூரி ஜகன்நாத்துக்கே உரிய ஆக்ஷன்
பேக்ல உருவாக்கப்பட்ட படம். இப்ப அடுத்து அவரோட இன்னொரு லெவலுக்கு எடுத்துட்டு போற
மாதிரியான படம்தான் இந்த நாநாக்கு ப்ரேமதோ.
லண்டன்ல
செட்டில் ஆன ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம் ராஜேந்திர ப்ரசாத்தோடது (Quick gun
Murugan). அவரோட 3 மகன்கள்ல ஒருத்தர்தான் NTR. திடீர்னு அவருக்கு ஒரு பயங்கர வியாதி
வந்துட ஒரு மாசம்தான் உயிரோட இருப்பார்னு சொல்லிடுறாங்க. வேலைய இழந்துட்டு சொந்தமா
ஒரு கம்பெனி ஆரம்பிக்கிற NTR க்கு அப்பா சீரியஸா இருக்க விஷயம் தெரிஞ்சி உடனே வீட்டுக்கு
வர்றாரு. அந்த சமயத்துல அப்பா ராஜேந்திர ப்ரசாத் ரொம்பவும் ஃபீல் பன்னி அழறாரு. இதப்பாத்த
அவரோட மூத்த மகன் “அப்பா.. நீங்க ஏன்பா இப்ப கவலப்படுறீங்க.. உங்க மூணு மகன்களும் நல்ல
நிலமையில இருக்கோம். என்கிட்ட ரேஞ்ச் ரோவர் கார் இருக்கு. தம்பி ஒரு 4 பெட் ரூம் வீடு
வாங்கிருக்கான். சின்ன தம்பி (NTR) புதுசா கம்பெனி ஆரம்பிச்சிருக்கான். இப்ப நீங்க
சந்தோஷமாத்தானப்பா சாகனும். ஏன் கவலப்படுறீங்க?” ன்னு கேக்குறான்.
அதுக்கு
அவர் “ஏண்டா ரேஞ்ச் ரோவர் காரா? நீ சின்ன வயசுல Ferrari கார்ல ஸ்கூலுக்கு போனவண்டா…
உன் தம்பி கிட்ட 4 பெட்ரூம் வீடு இருக்கா? 24 பெட்ரூம் உள்ள வீட்டுல ஒளிஞ்சி புடிச்சி
விளையாண்டவனுங்கடா நீங்க. உங்கள நா கஷ்டப்பட்டுதான் வளர்த்தேன். ஆனா இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க
வேண்டிய அவசியமே இல்லை. லண்டன்ல மிகப்பெரிய பணக்காரன் நான். என்ன ஒருத்தன் ஏமாத்தி
நடுத்தெருவுக்கு கொண்டு வந்துட்டான். அவன எதுவும் பன்னாம சாகுறோமேன்னு தான் எனக்கு
வருத்தமா இருக்கு..” ன்னு சொல்ல NTR oda பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கிது.
அப்பாவ
ஏமாத்துனது வேற யாரும் இல்லை. இப்பதைக்கு லண்டன்ல மிகப்பெரிய பிஸினஸ்மேனா இருக்க ஜகபதி பாபு. பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர். அவர
அப்பா ராஜேந்திர பிரசாத் சாகுறதுக்குள்ள zero ஆக்கி பழி வாங்கனும். இதான் கதை. (இப்ப
நா சொன்னது முதல் அஞ்சி நிமிஷம்தான் மக்கழே.. அதனால படம் பாக்க நினைச்சவங்க பயப்படாதீங்க.
உடனே கதை வழக்கமான அதே கதைன்னு டமால் டூமீல்னு அடிச்சி தொம்சம் பன்னுவார்னு தப்பா நினைக்காதீங்க.
இது வேற லெவல் அப்ரோச். படத்துல NTR சத்தம் போட்டு ஒரு வசனம் கூட பேசல.
எப்ப
பாத்தாலும் Butterfly Effect ah பத்தி பேசிக்கிட்டு, பாக்குற எல்லாத்தையும் உள்வாங்கி
கணக்கு போட்டு மூவ் பன்ற ஒரு நடமாடும் ஷெர்லாக் தான் நம்ம அபி ங்குற NTR கேரக்டர்.
ஆளு லுக்கே செம. ஜம்முன்னு இருக்காரு. செம மெச்சுருட்டி & ஸ்க்ரீன் ப்ரசனஸ். பட்டைய
கிளப்பிருக்காரு. டான்ஸு ஃபைட்டுலயெல்லாம்
அதே எனர்ஜி.
படத்துல
ஒரு சீன்கூட நம்மூர்ல எடுக்கல. எல்லா சீனுமே ஃபாரின் தான். கேமரா பட்டைய கெளப்புது.
ஒவ்வொரு காட்சியும் செம ரிச் லுக். படத்தோட இயக்குனர் சுகுமார். ஆர்யா, ஆர்யா 2, நேன்
ஒக்கடினே படங்களை எடுத்தவர். நேன் ஒக்கடினே படம் பாதி ஃபாரின் பாதி இந்தியாவுல இருக்கும்.
ஆனா இந்தப்படத்துல மருந்துக்கு கூட ஒரு லோக்கல் காட்சி இல்ல. திரைக்கதை ரொம்ப வேகமா
இல்லைன்னாலும், ப்ரில்லியண்ட்டான திரைக்கதை. எல்லா காட்சிகளும் ஒண்ணுக்கொன்னு தொடர்புள்ள
மாதிரி அமைச்சிருக்காரு. ஒரு திரைக்கதையில காட்சிகளுக்கு இடையே உள்ள லிங்க் எவ்வளவு
அதிகமா இருக்கோ அந்த அளவு அது சக்ஸஸ்ஃபுல்லான திரைக்கதையா இருக்கும்.
வில்லன்
ஜகபதி பாபு. ஆளு செம கெத்து. சீன்ஸூக்கேத்த அதே ரிச் லுக் அவர்கிட்டயும். அவர் மகள்தான்
ஹீரோயின் (ரகுல் ப்ரீத் சிங்) . இப்பதைக்கு நம்ம லேட்டஸ்ட் டார்லிங் இதுதான். செம பீட்டிடா மச்சான். ஒவ்வொரு
படத்துலயும் பாடல்கள் எடுக்கப்படுற விதம் என்னை ப்ரம்மிக்க வைக்க தவறுறதே இல்லை. அஞ்சு
பாட்டும் செமையா எடுத்துருக்காய்ங்க. அதுலயும் இண்ட்ரோவும், I wanna follow follow
you பாட்டும் செம.
இப்ப
படத்துக்கு மீசிக் யாருன்னு கேப்பீங்களே… கபக் கபக்… அவரே தான். நம்ம தல DSP. வழக்கம்
போல ஒரு ட்யூன். அஞ்சி பாட்டு. இந்த ஆர்கெஸ்ட்ரா பாடுறவங்களுக்கெல்லாம் DSP பாட்ட செலெக்ட்
பன்னா ரொம்ப ஈஸி. ஒரு படத்துல ஒரே ஒரு கரோக்கி டவுன்லோட் பன்னிக்கிட்டா போதும். அது
ஒண்ண வச்சே அஞ்சி பாட்டும் பாடிக்கலாம். தெலுங்கு படங்கள்ல அதுவும் NTR படங்கள்ல பாட்டு
மொக்கையா இருந்தா கூட ப்ரச்சனையே இல்லை. விஷூவல்லயும், கொரியோகிராஃபிலயும் பிரிச்சிருவாய்ங்க்.
இன்னொரு சோகமான விஷயம் இந்த படத்தோட ஆடியோ ரிலீஸூக்கு ஒரு வாரம் முன்னால DSP யோட அப்பா
இறந்துட்டாரு. அவருக்காக கம்போஸ் பன்ன “நாநாக்கு ப்ரேமதோ…” ங்குற சோக பாட்டு. படத்தோட
கடைசில வருது. சூப்பர். ரெண்டு நாளா அதே பாட்டத்தான் முணுமுணுத்துக்கிட்டு இருக்கேன்.
படத்துல சில மைனஸ்னு பாத்தா NTR ரோட characterization la சில விஷயங்கள்தான். பட்டர் ஃப்ளை எஃபெக்ட்டுன்னு ஒவ்வொரு மூவ்மெண்டுக்கும் என்ன நடக்கும்னு அவர் சொலறது கூட ஓக்கே. ஆனா ஒரு சீன்ல ஒருத்தன் ஓடிவர்றத கன்னாலயே பாத்து 18 km/hr ன்னு கணக்கு போடுவாறு.. நா அப்டியே ஸ்டன் ஆயிட்டேன். இன்னும் ஒரு சில ரொம்ப சினிமாத்தனமான காட்சிகள். ஆனா சினிமாவுல சினிமாத்தனம் இருக்கது சகஜம் தான.
இது
NTR ரோட 25 வது படம். கமர்ஷியலா படம் எந்த அளவு போகும்னு தெரியல. ஆனா நிச்சயம் NTR
career la ரொம்ப முக்கியமான, அவரோட இன்னொரு முகத்தை காண்பித்த ஒரு படம். எனக்கு ரொம்ப
புடிச்சிருக்கு.
No comments:
Post a Comment