Saturday, April 9, 2016

SARDAR GABBAR SINGH – ஆபத்தான மிருகம்!!!!


Share/Bookmark
ஒரு நடிகர் வளர்ந்து வரும்போது, அவருக்கான ஒரு அடையாளத்த தேடிக்கிட்டு இருக்கும்போது எந்த அளவு கதையில கவனம் செலுத்துறாங்களோ அதே அளவு கவனத்த அவங்களுக்குன்னு ஒரு அடையாளம் ஒரு ரசிகர் கூட்டம் கிடைச்சப்புறம் செய்யிறதில்லைன்னு தான் சொல்லனும். நம்ம ரசிகர்கள் நாம எதை எடுத்து விட்டாலும் பாப்பாங்கங்குற ஒரு ஆணவம் அவங்களுக்குள்ளாகவே வந்துரும் போல. எப்பவுமே ஒரு படத்துக்கு ஹீரோ நிறைய மக்களுக்கு அந்தப் படத்த கொண்டு சேர்க்குறதுக்காக மட்டுமே பயன்படுறாரே ஒழிய உண்மையான ஹீரோ எப்பவும் இயக்குனரும், கதையும் திரைக்கதையும் தான். இதை அத்தனை நடிகர்களுக்கும் மக்கள் அப்பப்ப உணர்த்தியிருக்காங்க. இப்ப பவன் கல்யாணுக்கும் இத புரிய வைக்க வேண்டிய நேரம்னு நினைக்கிறேன்.

குறுகிய காலத்துல மிகப்பெரிய ஃபேன் பேஸ க்ரியேட் பன்னிக்கிட்டவரு பவன் கல்யான். அதுவும் சாதாரண ஃபேன்ஸ் இல்ல வெறித்தனமான ஃபேன்ஸ். அவரோட Body language க்கும், ஸ்டைலுக்கும் , டயலாக் டெலிவரிக்கும் நிச்சயமா அத்தனை பேரும் ஃபேன் ஆகிடுவாங்கங்குறதுல சந்தேகமே இல்லை. சமீபத்துல வந்த பெங்கால் டைகர்ங்குற ரவிதேஜா படத்துல வர்ற வசனம்

வில்லன் : என்னய்யா என்னோட ஜாதகம் மாதிரி உலகத்துல வேற யாருக்குமே இல்லைன்னு சொன்ன.. இப்ப இவனுக்கு (ரவிதேஜா) இருக்குன்னு சொல்ற.. 

அள்ளக்கை: சார் சவுத் இந்தியாவுல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்த அடிச்சிக்க வேற ஆளே வரமாட்டாங்கன்னு நாம நினைச்சிட்டு இருந்தோம்.. ஆனா நம்ம பவர் ஸ்டார் பவன் கல்யாண் வந்தாருல்ல..  அப்டிம்பான் அந்த அளவுக்கு பவன் கல்யாண தூக்கி வச்சிருந்தாய்ங்க. அதுமட்டும் இல்லாம அவரோட கடந்த ரெண்டு படங்களான “அத்தாரிண்டிக்கி தாரெதி” யும் “கப்பர் சிங்” கும் அந்தந்த வருஷத்துல தெலுகுல அதிக கலெக்‌ஷன் எடுத்த படங்கள். அப்படி இருக்க 3 வருஷம் கழிச்சி பவனோட படம்.. அதுவும் மெகா ஹிட்டான கப்பர் சிங்கோட அடுத்த பார்ட்.. எதிர் பார்ப்பு எப்புடி இருக்கும்னு பாருங்க.. ஆனா என்ன நடந்துச்சி… பாப்போம்.

”என்னய்யா சும்மா கப்பர் சிங் கப்பர் சிங்குங்குறீங்க.. அதானே நம்ம ஊர்ல ”ஒஸ்தி”ன்னு வந்துச்சி.. அதோட லட்சனத்த தான் பாத்தோமே” உங்களுக்கு தோணும். ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. கப்பர் சிங்க பாத்தாதான் ஒஸ்தி கதையக் கூட இவ்வளவு சூப்பரா எடுக்க முடியுமான்னு நமக்கு ஆச்சர்யாமா இருக்கும். நாம ஒஸ்தில என்னவெல்லாம் கடுப்புன்னு நினைக்கிறமோ அதயெல்லாம் தூக்கிருப்பாய்ங்க இல்ல மாத்தி நல்லா எடுத்துருப்பாய்ங்க. 

உதாரணத்துக்கு சிம்பு அடிக்கடி “எலேய்.. திருடன்னு சொன்ன உடனே தான் ஞாபகம் வருது.. உன் மச்சான் எங்கலே இருக்கான்?” ன்னு அடிக்கடி சம்பந்தம் சம்பந்தம் இல்லாம எரிச்சலக் கெளப்பிட்டு இருப்பான். அத அப்டியே தூக்கிட்டு வேற மாதிரி மாத்தி காமெடி வச்சிருப்பாய்ங்க. அதுக்கும் மேல ஒஸ்தில ரொம்ப கேவலமான ஒரு சீன் ஜித்தன் ரமேஷுக்கு கல்யாணம் நடக்க போகும்போது அங்க சிம்பு போய் அந்த மேடையில அவன் கல்யாணம் பன்னிட்டு வருவான். இது ரொம்ப பாடாதியா இருக்கும் பாக்க. அதல்லாத்தயும் மாத்திருப்பானுங்க. கிட்டத்தட்ட அந்தப் படத்த ரீமேக்னு சொல்லாம சும்மாவே எடுத்துருக்கலாம்.

இடையில தீவிர அரசியல்லயெல்லாம் ஈடுபட்டுட்டு “கோபாலா கோபாலா” வுல (Remake of Oh my God) ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ குடுத்துட்டு இப்ப சர்தார் கப்பர் சிங். ட்ரெயிலரப் பாக்கும்போதே கதை என்னன்னு தெரிஞ்சிரும். இல்லைன்னாலும் ஒண்ணும் பெருசா புது கதையெல்லாம் எடுத்துர மாட்டாய்ங்க. இந்திய திரைப்பட வரலாற்றுல கிட்டத்தட்ட ரெண்டு லட்சத்து இருபத்தஞ்சாயிரமாவது முறையா வில்லன்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிற ஒரு கிராமத்த ஹீரோ ஒத்த ஆளா காப்பாத்துற கதைதான் இந்த சர்தார் கப்பர் சிங்.

ரொம்ப நாளுக்கப்புறம் ஹீரோவுக்கு ஒரு செமையான இண்ட்ரோ சீன். ”பாபா” படத்துல, தலைவருக்காக எல்லாரும் வெய்ட் பன்னிட்டு இருக்கும்போது, பாபாஜி படத்துலருந்து ஒரு பூ கீழ விழ ,சுஜாதா ஸ்லோமோஷன்ல திரும்பி “பாபா வந்துட்டு இருக்கான்” ம்பாங்க. எனக்கு ரொம்ப புடிச்ச இண்ட்ரோ அது. இதுல வில்லன் ஊரயே அடிச்சி நாசம் பன்னிட்டு இருப்பான். அப்ப இவங்ககிட்டருந்து காப்பாத்த யார் வரப்போறான்னு கத்தும்போது, ஒரு முள் வேலில ஒரு துண்டு (பவன் கழுத்துல போட்டுருக்க துண்டு) காத்துல ஆடிக்கிட்டு இருக்கும். அப்டியே கட் பன்னா பவனோட இண்ட்ரோ… ப்ப்பா.. புல்லரிச்சிருச்சி.

அப்டி அரிச்சோன சொரிஞ்சிக்கிட்டு அப்பவே பேசாம எழுந்து  வந்துட்டா உயிர் பொழைக்கலாம். இல்லன்னா அவ்ளோதான். ஒரு சீன்கூட புதுசா இருந்துடக் கூடாதுங்குறதுல டைரக்டர் ரொம்பவே கவனமா இருந்துருக்காப்ள. கப்பர் சிங்குல வர்ற காமெடியன்கள் அத்தனை பேரும் இருக்காங்க. ஆனா காமெடிதான் ஒண்ணுமே இல்லை. முதல் பாகத்துல பவன் கல்யாணே சும்மா துரு துருன்னு இருப்பாரு. ஒவ்வொரு டயலாக் சொல்லிட்டும் “ஒரே சாம்பா.. ராஸ்கோரா” ன்னு ஆலே கிட்ட சொல்றதும் செமையா இருக்கும். ஆனா இங்க ஒண்ணு இல்லை. பவனே ரொம்ப டல்லா இருக்காப்ள. நடிப்புல அந்த பழைய துருதுருப்பு இல்லை.

வழக்கமா தெலுங்குப் படங்கள்ல பாட்டு நல்லா எடுப்பாய்ங்க. ஆனா இங்க பாட்டக் கூட ஏதோ கடனுக்கு எடுத்து வச்சிருக்காய்ங்க.  DSP ஒவ்வொரு படத்துலயும் ரெண்டு பாட்டு ”கேக்க முடியாத” மாதிரி போடுவாரு. ரெண்டு பாட்ட “ஏற்கனவே கேட்ட” மாதிரி போடுவாரு. ஒரே ஒரு பாட்ட மட்டும் கேக்குற மாதிரி போடுவாரு. என்னிக்கும் இல்லாத திருநாளாம்னு இந்தப் படத்துல எல்லா பாட்டுமே நல்லா போட்டுருந்தாப்ள. ஆனா பாருங்க மக்கழே அத நல்லா ஸ்கிரீன்ல பாக்க நமக்கு குடுத்து வைக்கல. மத்த ஹீரோக்களாவது பரவால்ல, பாட்டு நல்லா இல்லைன்னாலும் டான்ஸ வச்சி மேட்ச் பன்னிருவாய்ங்க. ஆனா பவனுக்கு டான்ஸ் சுத்தம்.

காதல் காட்சிகள்தான் படத்துல அரு அருன்னு அருக்குது. எதோ ஒரு அருவியப் புடிச்சிட்டாய்ங்க. படத்துல வர்ற அத்தனை லவ் சீனும் அதே லொக்கேஷன்ல தான். சீன் தான் மொக்கைன்னா லொக்கேஷன் அதுக்கும் மேல.

இண்ட்ரோ சீன்ல துப்பாக்கி எடுத்து சுட ஆரம்பிக்கிற பவன் கல்யான், படம் முடியிற வரைக்கும் சுட்டுக்கிட்டே இருக்காரு. காலுக்கு சைடுல ஒரு துப்பாக்கி, பெடக்ஸுக்கு பின்னால ஒரு துப்பாக்கின்னு அங்கங்கருந்து எடுத்து சுட்டுக்கிட்டே இருக்காரு. இவரு ஒரு ஆளுன்னா பரவால்ல. அந்த ஊருல அத்தனை பேரும் துப்பாக்கியோட தான் சுத்துராய்ங்க. படத்துல BGM க்கு வேலையே இல்லை. வெறும் துப்பாக்கி சவுண்டு மட்டும்தான். படம் முடிஞ்சி வீட்டுக்கு போய் படுத்த அப்புறமும் என் காதுக்குள்ள எவனோ துப்பாக்கியால டொம்மு டொம்முன்னு சுட்டுக்கிட்டே இருக்க மாதிரியே ஒரு ஃபீலிங்கி.

படத்துல நோட் பன்ன வேண்டிய விஷயம் என்னன்னா கதை திரைக்கதை நம்ம பவன் கல்யான்தான். காட்சிகள் ஒரு கோர்வையே இல்லாம ஏனோதானோன்னு கெடக்கு. எந்த காட்சியும் சுவாரஸ்யமாவும் இல்லை. ஒரே ஒரு செட்ட போட்டு அதுலயே பெரும்பாலான காட்சிகள எடுத்துருக்காய்ங்க. அதுவே முதல்ல ரொம்ப போர் அடிக்கிது.

நல்ல விஷயங்கள்னு சொல்லப்போனா கேமராவும் ஸ்டண்டும். நிறைய காட்சிகள நல்லா படம் புடிச்சிருக்காங்க. இண்ட்ரோ ஃபைட்டும் இண்டர்வல் ஃபைட்டும் செம. அதுவும் இண்டர்வல் ஃபைட்டுல ஒரு 500 பேர ஒத்த ஆளா அடிச்சி தொம்சம் பன்னுவாப்ள நம்மாளு. 500 ah ன்னு வாயப் பொளக்காதீங்க. பவன் கல்யான் நடிச்ச “கேமராமேன் கங்காதோ ராம்பாபு” ன்னு ஒரு படம். ப்ரகாஷ் ராஜ் வில்லன்.. முதல்ல பவன அடிக்க 10 பேர அனுப்புவாரு ப்ரகாஷ்ராஜ். பவன் அடிச்சி போட்டுருவாப்ள. அடுத்து 20 பேர் . அதயும் அடிச்சி போட்டுருவாப்ள.

கடுப்பாகி ப்ரகாஷ்ராஜ் “ஏண்டா பத்து பேர அடிச்சா நீ பெரிய ஆளா.. 50 பேர இறக்குறேண்டா.. பாக்குறியா?” ன்ன உடனே பவன் ஒரு பதில் சொல்லுவாரு பாருங்க. “நீ 50 பேர இறக்குனாலும் சரி 100 பேர இறக்குனாலும் சரி. At a time ல என்ன சுத்தி நிக்கப்போறது நாலு பேர்தான். அந்த நாலு பேரயும் ஸ்பாட்லயே கொன்னுருவேன்” ம்பாரு... இத ஏன் சொல்றேன்னா, எப்புடி இத்தனை பேர அடிக்க முடியும்னு நம்ம எதாவது கேட்டா இப்டிதான் பதில் சொல்லுவாங்க. அதனால அம்பதோ, ஐநூரோ… பேசாம பாத்துட்டு போயிட வேண்டியது தான்.

படத்துக்கு இன்னொரு பெரிய மைனஸ் படத்தோட நீளம். 2.45 மணி நேரம் ஓடுது. இண்டர்வல் வரும்போதே எதோ படம் முடியப்போற ஃபீல். மொக்கை சீனையெல்லாம் கட்பன்னா நல்லாருக்கும். ஆனா என்ன மொக்கை சீனையெல்லாம் கட் பன்னிட்டு பாத்தா மிச்சம் 5 பாட்டும் 6 ஃபைட்டும்தான் பேலன்ஸ் இருக்கும்.


நம்ம ராம் கோபால் வர்மா அப்பப்ப எதாவது ஒரு பெரியாள வம்பிழுத்து வாங்கிக் கட்டிக்குவாப்ள. அவர் சர்தார் கப்பர் சிங்கப் பத்தி போட்ட ட்வீட் ”Bahubali gave Tremendous sky like rise to Tollywood in the eyes of Bollywood and now SGS crashed it back into the underground” இதுக்கு பவன் ஃபேன்ஸ் அவர கயிவி கயிவி ஊத்திக்கிட்டு இருக்காய்ங்க. ஆனா அந்தாளு சொல்லிருக்கது கரெக்ட் தான். சமீப காலங்கள்ல பாத்த சில மோசமான  படங்கள்ல இதுவும் ஒண்ணு. 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...