Tuesday, October 2, 2018

செக்க சிவந்த வானம் !!!


Share/Bookmark

இந்த ஆடுகளம்னு ஒரு படம் பாத்துருப்பீங்க… அதுல பேட்டக்காரன்னு ஒருத்தர் இருப்பாரு. ஒரு காலத்துல ஓஹோன்னு வாழ்ந்தவரு. சம காலத்து பசங்க கூட போட்டி போட முடியாம ரொம்ப கஷ்டப்படுவாரு. , தன்னோட கெத்த நிரூபிக்கிறதுக்காக நிறைய தில்லு முள்ளெல்லாம் பன்னுவாரு. அந்த மாதிரி தான் மணி சார். ஒரு காலத்துல ஓஹோன்னு பேர் சொல்லுற படங்கள எடுத்தவரு. சம கால படங்களோட போட்டி போட முடியாம ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தாரு. நானும் யூத்துக்கு படம் எடுக்குறேன், மேல் தட்டு மக்களோட லவ்வ படமாக்குறேன்னு பல வித லவ் ஸ்டோரிக்கள எடுத்து, ஆடியன்ஸ தியேட்டர விட்டு தெறிச்சி ஓட வச்சதுதான் மிச்சம். அவர் எடுத்த லவ் ஸ்டோரி எதுவுமே மக்களுக்கு பிடிக்கலன்னு அவரு தெரிஞ்சிக்கவே பத்து பதினைஞ்சி வருஷன் ஆயிருக்கு.  லவ் ஸ்டோரிய தலைய சுத்தி தூக்கி வீசியே ஆக வேண்டிய கட்டாயம், ஜெயிச்சே ஆக வேண்டிய கட்டாயம். இப்படி பல கட்டாயங்களுக்கு நடுவுல ஒரு கொரியன் படத்துல இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்ட படமான இந்த செக்கச் சிவந்த வானம் எப்டி இருக்குன்னு பாக்கலாம்.

மணி சார் எடுத்த கடந்த சில படங்களைப் பாத்து கடுப்பாகி இனிமே மணி சார் படமே பாக்கக் கூடாது அப்டின்னு முடிவெடுத்த என்னைய மாதிரி பல பேர இந்தப் படத்தப் பாக்க வச்சதுக்கு முக்கியமான காரணம் இந்தப் படத்தோட ஸ்டார் காஸ்டிங். நாலு முன்ணனி ஹீரோக்கள், ப்ரகாஷ்ராஜ், ஜோதிகா.. அப்றம் எப்டி இந்தப் படத்த பாக்காம விடுறது.

வீடியோ விமர்சனம்

படத்தோட கதை ட்ரெயிலரப் பாத்தாலே எல்லாருக்கும் தெரியும். பெரிய கை ப்ரகாஷ்ராஜ் மட்டையானதும் அவரோட இடம் யாருக்கு அப்டிங்குற சண்டை அவரோட மூணு மகன்களுக்கு உண்டாகுது. அவங்களுக்குள்ள அடிச்சிக்கிட்டு யாரு அந்த இடத்த புடிக்கிறாங்கங்குறது தான் கதை

நாலு ஹீரோக்கள் இருந்தாலும் நாலுபேருக்கும் ஈக்குவலான ஸ்க்ரீன் ஸ்பேஸ் குடுத்து ஸ்க்ரீன் ப்ளே பன்னிருக்காங்க. நாலு பேரும் அதே மாதிரி நல்லாவே நடிச்சிருக்காங்க. குறிப்பா விஜய் சேதுபதிக்கும், சிம்புவுக்கும் ரசிகர்கள உற்சாகப் படுத்துற மாதிரி ஜாலியான வசனங்கள். சிம்புவோட ரசிகர்களெல்லாம் லெமூரியாக் கண்டத்தோட வழக்கொழிஞ்சி பொய்ட்டாங்கன்னு நினைச்சிட்டுருந்தேன். ஆனா சிம்பு எண்ட்ரிக்கு தியேட்டர் விசில் தெறிக்கிது. ஹிட்டு குடுத்து பல வருஷம் ஆச்சு. எந்தப் படமும் சொன்ன தேதிக்கு வர்றதில்லை. இருந்தாலும் இவ்வளவு ஃபேன் பேஸ் மெய்ண்டய்ன் பன்றது பெரிய விஷய்ம் தான்.

முதல் பாதி அப்டியே போரடிக்காம போகுது. ரெண்டாவது பாதில அண்ணன் தம்பிகளூகுள்ள சண்டை ஆரம்பிச்சதும் அது ஒரு சீரியஸான சண்டையாவே நம்மாள உணர முடியல. அவனுங்கத்தான் யுத்தம் நடக்குது யுத்தம் நடக்குதுன்னு அப்பப்ப சொல்லிக்கிறாங்க. ஆனா பாக்குற நமக்கு அப்டி ஒரு சீரியஸான யுத்தம் நடக்குற ஒரு ஃபீலே வர மாட்டுது. ஆடியன்ஸ அந்த கதைக்களத்துக்குள்ள இழுக்க முடியலன்னா அவங்க வைக்கிற காட்சிகளோட அழுத்தத்தையும் உணர வைக்க முடியாது.

எப்படி அர்விந்த் சாமிய அவங்க ரெண்டு பேரும் வீழ்த்துறாங்கன்றதுக்கு ரெண்டு  மூணு சீன் வச்சிருக்காங்க. அபாரம். ஒரு கும்பல் ரவுடிங்கள கூடாரத்துக்குள்ள விட்டு 30 செகண்ட் மோட்டிவேஷனல் ஸ்பீச் குடுக்குறாரு. மொத்த பயலுகளும் அவர் கூட சேந்துடுறாய்ங்க. சிங்கம் மாதிரி இருந்த அர்விந்த சாமி ரெண்டு மூணு இழப்புலயே பொட்டியத் தூக்கிட்டு ஊர் ஊரா ஓட ஆரம்பிச்சிடுறாரு.

சிம்பு அவங்க அம்மா கிட்ட பேசுற மாதிரி ஒரு காட்சி. தளபதில ரஜினியும் ஸ்ரீவித்யாவும் பேசிக்கிற சீன் மாதிரி எடுக்க முயற்சி பன்னிருக்காரு.ஆனா ரொம்ப ஆர்டிஃபீஷியலான காட்சியாகிப்போச்சு.  என் சாயாவ செத்ததுக்கு நீங்க யாருமே ஃபீல் பன்னலம்மாம்பாரு.. டேய் உன் சாயாவ நீயே ரெண்டு சீன்ல தான் பாத்துருக்க. இதுல உனக்கே அழுக வரக்கூடாது. இதுல அம்மாவ வேற அழுகச்சொல்லுற… அம்மா.. நீங்க என் கூட இருந்த்தே இல்லம்மான்னுவாரு. இவந்தான் யார் கூடயும் அதிகமா பழகக் கூடாதுன்னு செர்பியால போய் படுத்துக்கெடப்பாரு. இதுல அம்மா கூட இல்லன்னு பீலிங் வேற.

இது ரொம்ப விறுவிறுப்பான திரைக்கதையும் இல்ல.. ஒரு ப்ரில்லியண்ட்டான ஸ்க்ரீன்ப்ளேயும் இல்ல. இத ஒரு நல்ல த்ரில்லரா கொண்டுபோயிருக்கலாம். அதுக்கான ஸ்கோப் கதையில இருக்கு. ஆடியன்ஸ் நாமதான் ஒருவேள இப்டி ட்விஸ்ட் வைப்பாங்களோ இல்ல அப்டி ட்விஸ்ட் வைப்பாங்களோன்னு யோசிக்கிறோம். ஆனா மணி சார் ட்விஸ்டே இல்லாத்துதான் இங்க ட்விஸ்டு அப்டின்னு ஒரு ட்விஸ்ட் வச்சிருக்காரு.

மணி சார் இந்தப் படத்துல செஞ்சிருக்கது ரெண்டு சாதனை. ஒண்ணு ரொம்ப நாளுக்கு அப்புறம் படம் ஓடிக்கிட்டு இருக்கும்போது பாதிலயே தெறிச்சி ஓடாம முழு படத்தையும் தியேட்டர்ல உக்கார்ந்து பாக்குற மாதிரி ஒரு படம் எடுத்துருக்காரு. இன்னொன்னு சிம்பு நடிச்ச ஒரு படத்த கரெட்டான தேதிக்கு ரிலீஸ்  பன்னிருக்காரு. ரெண்டாவது தான் மிகப்பெரிய சாதனை.

நண்பர்கள் பல பேரு ஏ.ஆர்.ரஹ்மான் செக்க சிவந்த வானத்துக்கு செமையா மியூசிக் போட்டுட்டு சர்காருக்கு மட்டும் சங்கு ஊதிட்டாருன்னுலாம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. எனக்கென்னவோ இந்தப் படத்துல கூட இசை பழைய ஏ.ஆர்.ரஹ்மான் படங்கள் மாதிரி பெரிய அளவுல பாதிப்ப உண்டாக்குற மாதிரி இல்லை.

ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் கொஞ்சம் கூட போர் அடிக்காம படம் ஓடுது. அதே மாதிரி ஆஹா ஓஹோ.. மணி சார் ஈஸ் பேக், மணீ சார் ஈஸ் சைடு.. அப்டின்னு எக்ஸைட் ஆகுற அளவுக்கெல்லாம் படத்துல ஒண்ணும் இல்ல.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Unknown said...

Kadal was the last Mani (So called "sir") movie. After that I decided not to waste my time and Money. I didn't watched OKK , Gas trouble. This time I controlled Myself from Watching CCV. You saved me from Mani.
Thank you Muthusiva ! Great job !

Pallandu pallandu , Pallayirathaandu Vazhga !

Anonymous said...

Gas trouble! hehehe!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...