Saturday, April 9, 2016

SARDAR GABBAR SINGH – ஆபத்தான மிருகம்!!!!


Share/Bookmark
ஒரு நடிகர் வளர்ந்து வரும்போது, அவருக்கான ஒரு அடையாளத்த தேடிக்கிட்டு இருக்கும்போது எந்த அளவு கதையில கவனம் செலுத்துறாங்களோ அதே அளவு கவனத்த அவங்களுக்குன்னு ஒரு அடையாளம் ஒரு ரசிகர் கூட்டம் கிடைச்சப்புறம் செய்யிறதில்லைன்னு தான் சொல்லனும். நம்ம ரசிகர்கள் நாம எதை எடுத்து விட்டாலும் பாப்பாங்கங்குற ஒரு ஆணவம் அவங்களுக்குள்ளாகவே வந்துரும் போல. எப்பவுமே ஒரு படத்துக்கு ஹீரோ நிறைய மக்களுக்கு அந்தப் படத்த கொண்டு சேர்க்குறதுக்காக மட்டுமே பயன்படுறாரே ஒழிய உண்மையான ஹீரோ எப்பவும் இயக்குனரும், கதையும் திரைக்கதையும் தான். இதை அத்தனை நடிகர்களுக்கும் மக்கள் அப்பப்ப உணர்த்தியிருக்காங்க. இப்ப பவன் கல்யாணுக்கும் இத புரிய வைக்க வேண்டிய நேரம்னு நினைக்கிறேன்.

குறுகிய காலத்துல மிகப்பெரிய ஃபேன் பேஸ க்ரியேட் பன்னிக்கிட்டவரு பவன் கல்யான். அதுவும் சாதாரண ஃபேன்ஸ் இல்ல வெறித்தனமான ஃபேன்ஸ். அவரோட Body language க்கும், ஸ்டைலுக்கும் , டயலாக் டெலிவரிக்கும் நிச்சயமா அத்தனை பேரும் ஃபேன் ஆகிடுவாங்கங்குறதுல சந்தேகமே இல்லை. சமீபத்துல வந்த பெங்கால் டைகர்ங்குற ரவிதேஜா படத்துல வர்ற வசனம்

வில்லன் : என்னய்யா என்னோட ஜாதகம் மாதிரி உலகத்துல வேற யாருக்குமே இல்லைன்னு சொன்ன.. இப்ப இவனுக்கு (ரவிதேஜா) இருக்குன்னு சொல்ற.. 

அள்ளக்கை: சார் சவுத் இந்தியாவுல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்த அடிச்சிக்க வேற ஆளே வரமாட்டாங்கன்னு நாம நினைச்சிட்டு இருந்தோம்.. ஆனா நம்ம பவர் ஸ்டார் பவன் கல்யாண் வந்தாருல்ல..  அப்டிம்பான் அந்த அளவுக்கு பவன் கல்யாண தூக்கி வச்சிருந்தாய்ங்க. அதுமட்டும் இல்லாம அவரோட கடந்த ரெண்டு படங்களான “அத்தாரிண்டிக்கி தாரெதி” யும் “கப்பர் சிங்” கும் அந்தந்த வருஷத்துல தெலுகுல அதிக கலெக்‌ஷன் எடுத்த படங்கள். அப்படி இருக்க 3 வருஷம் கழிச்சி பவனோட படம்.. அதுவும் மெகா ஹிட்டான கப்பர் சிங்கோட அடுத்த பார்ட்.. எதிர் பார்ப்பு எப்புடி இருக்கும்னு பாருங்க.. ஆனா என்ன நடந்துச்சி… பாப்போம்.

”என்னய்யா சும்மா கப்பர் சிங் கப்பர் சிங்குங்குறீங்க.. அதானே நம்ம ஊர்ல ”ஒஸ்தி”ன்னு வந்துச்சி.. அதோட லட்சனத்த தான் பாத்தோமே” உங்களுக்கு தோணும். ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. கப்பர் சிங்க பாத்தாதான் ஒஸ்தி கதையக் கூட இவ்வளவு சூப்பரா எடுக்க முடியுமான்னு நமக்கு ஆச்சர்யாமா இருக்கும். நாம ஒஸ்தில என்னவெல்லாம் கடுப்புன்னு நினைக்கிறமோ அதயெல்லாம் தூக்கிருப்பாய்ங்க இல்ல மாத்தி நல்லா எடுத்துருப்பாய்ங்க. 

உதாரணத்துக்கு சிம்பு அடிக்கடி “எலேய்.. திருடன்னு சொன்ன உடனே தான் ஞாபகம் வருது.. உன் மச்சான் எங்கலே இருக்கான்?” ன்னு அடிக்கடி சம்பந்தம் சம்பந்தம் இல்லாம எரிச்சலக் கெளப்பிட்டு இருப்பான். அத அப்டியே தூக்கிட்டு வேற மாதிரி மாத்தி காமெடி வச்சிருப்பாய்ங்க. அதுக்கும் மேல ஒஸ்தில ரொம்ப கேவலமான ஒரு சீன் ஜித்தன் ரமேஷுக்கு கல்யாணம் நடக்க போகும்போது அங்க சிம்பு போய் அந்த மேடையில அவன் கல்யாணம் பன்னிட்டு வருவான். இது ரொம்ப பாடாதியா இருக்கும் பாக்க. அதல்லாத்தயும் மாத்திருப்பானுங்க. கிட்டத்தட்ட அந்தப் படத்த ரீமேக்னு சொல்லாம சும்மாவே எடுத்துருக்கலாம்.

இடையில தீவிர அரசியல்லயெல்லாம் ஈடுபட்டுட்டு “கோபாலா கோபாலா” வுல (Remake of Oh my God) ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ குடுத்துட்டு இப்ப சர்தார் கப்பர் சிங். ட்ரெயிலரப் பாக்கும்போதே கதை என்னன்னு தெரிஞ்சிரும். இல்லைன்னாலும் ஒண்ணும் பெருசா புது கதையெல்லாம் எடுத்துர மாட்டாய்ங்க. இந்திய திரைப்பட வரலாற்றுல கிட்டத்தட்ட ரெண்டு லட்சத்து இருபத்தஞ்சாயிரமாவது முறையா வில்லன்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிற ஒரு கிராமத்த ஹீரோ ஒத்த ஆளா காப்பாத்துற கதைதான் இந்த சர்தார் கப்பர் சிங்.

ரொம்ப நாளுக்கப்புறம் ஹீரோவுக்கு ஒரு செமையான இண்ட்ரோ சீன். ”பாபா” படத்துல, தலைவருக்காக எல்லாரும் வெய்ட் பன்னிட்டு இருக்கும்போது, பாபாஜி படத்துலருந்து ஒரு பூ கீழ விழ ,சுஜாதா ஸ்லோமோஷன்ல திரும்பி “பாபா வந்துட்டு இருக்கான்” ம்பாங்க. எனக்கு ரொம்ப புடிச்ச இண்ட்ரோ அது. இதுல வில்லன் ஊரயே அடிச்சி நாசம் பன்னிட்டு இருப்பான். அப்ப இவங்ககிட்டருந்து காப்பாத்த யார் வரப்போறான்னு கத்தும்போது, ஒரு முள் வேலில ஒரு துண்டு (பவன் கழுத்துல போட்டுருக்க துண்டு) காத்துல ஆடிக்கிட்டு இருக்கும். அப்டியே கட் பன்னா பவனோட இண்ட்ரோ… ப்ப்பா.. புல்லரிச்சிருச்சி.

அப்டி அரிச்சோன சொரிஞ்சிக்கிட்டு அப்பவே பேசாம எழுந்து  வந்துட்டா உயிர் பொழைக்கலாம். இல்லன்னா அவ்ளோதான். ஒரு சீன்கூட புதுசா இருந்துடக் கூடாதுங்குறதுல டைரக்டர் ரொம்பவே கவனமா இருந்துருக்காப்ள. கப்பர் சிங்குல வர்ற காமெடியன்கள் அத்தனை பேரும் இருக்காங்க. ஆனா காமெடிதான் ஒண்ணுமே இல்லை. முதல் பாகத்துல பவன் கல்யாணே சும்மா துரு துருன்னு இருப்பாரு. ஒவ்வொரு டயலாக் சொல்லிட்டும் “ஒரே சாம்பா.. ராஸ்கோரா” ன்னு ஆலே கிட்ட சொல்றதும் செமையா இருக்கும். ஆனா இங்க ஒண்ணு இல்லை. பவனே ரொம்ப டல்லா இருக்காப்ள. நடிப்புல அந்த பழைய துருதுருப்பு இல்லை.

வழக்கமா தெலுங்குப் படங்கள்ல பாட்டு நல்லா எடுப்பாய்ங்க. ஆனா இங்க பாட்டக் கூட ஏதோ கடனுக்கு எடுத்து வச்சிருக்காய்ங்க.  DSP ஒவ்வொரு படத்துலயும் ரெண்டு பாட்டு ”கேக்க முடியாத” மாதிரி போடுவாரு. ரெண்டு பாட்ட “ஏற்கனவே கேட்ட” மாதிரி போடுவாரு. ஒரே ஒரு பாட்ட மட்டும் கேக்குற மாதிரி போடுவாரு. என்னிக்கும் இல்லாத திருநாளாம்னு இந்தப் படத்துல எல்லா பாட்டுமே நல்லா போட்டுருந்தாப்ள. ஆனா பாருங்க மக்கழே அத நல்லா ஸ்கிரீன்ல பாக்க நமக்கு குடுத்து வைக்கல. மத்த ஹீரோக்களாவது பரவால்ல, பாட்டு நல்லா இல்லைன்னாலும் டான்ஸ வச்சி மேட்ச் பன்னிருவாய்ங்க. ஆனா பவனுக்கு டான்ஸ் சுத்தம்.

காதல் காட்சிகள்தான் படத்துல அரு அருன்னு அருக்குது. எதோ ஒரு அருவியப் புடிச்சிட்டாய்ங்க. படத்துல வர்ற அத்தனை லவ் சீனும் அதே லொக்கேஷன்ல தான். சீன் தான் மொக்கைன்னா லொக்கேஷன் அதுக்கும் மேல.

இண்ட்ரோ சீன்ல துப்பாக்கி எடுத்து சுட ஆரம்பிக்கிற பவன் கல்யான், படம் முடியிற வரைக்கும் சுட்டுக்கிட்டே இருக்காரு. காலுக்கு சைடுல ஒரு துப்பாக்கி, பெடக்ஸுக்கு பின்னால ஒரு துப்பாக்கின்னு அங்கங்கருந்து எடுத்து சுட்டுக்கிட்டே இருக்காரு. இவரு ஒரு ஆளுன்னா பரவால்ல. அந்த ஊருல அத்தனை பேரும் துப்பாக்கியோட தான் சுத்துராய்ங்க. படத்துல BGM க்கு வேலையே இல்லை. வெறும் துப்பாக்கி சவுண்டு மட்டும்தான். படம் முடிஞ்சி வீட்டுக்கு போய் படுத்த அப்புறமும் என் காதுக்குள்ள எவனோ துப்பாக்கியால டொம்மு டொம்முன்னு சுட்டுக்கிட்டே இருக்க மாதிரியே ஒரு ஃபீலிங்கி.

படத்துல நோட் பன்ன வேண்டிய விஷயம் என்னன்னா கதை திரைக்கதை நம்ம பவன் கல்யான்தான். காட்சிகள் ஒரு கோர்வையே இல்லாம ஏனோதானோன்னு கெடக்கு. எந்த காட்சியும் சுவாரஸ்யமாவும் இல்லை. ஒரே ஒரு செட்ட போட்டு அதுலயே பெரும்பாலான காட்சிகள எடுத்துருக்காய்ங்க. அதுவே முதல்ல ரொம்ப போர் அடிக்கிது.

நல்ல விஷயங்கள்னு சொல்லப்போனா கேமராவும் ஸ்டண்டும். நிறைய காட்சிகள நல்லா படம் புடிச்சிருக்காங்க. இண்ட்ரோ ஃபைட்டும் இண்டர்வல் ஃபைட்டும் செம. அதுவும் இண்டர்வல் ஃபைட்டுல ஒரு 500 பேர ஒத்த ஆளா அடிச்சி தொம்சம் பன்னுவாப்ள நம்மாளு. 500 ah ன்னு வாயப் பொளக்காதீங்க. பவன் கல்யான் நடிச்ச “கேமராமேன் கங்காதோ ராம்பாபு” ன்னு ஒரு படம். ப்ரகாஷ் ராஜ் வில்லன்.. முதல்ல பவன அடிக்க 10 பேர அனுப்புவாரு ப்ரகாஷ்ராஜ். பவன் அடிச்சி போட்டுருவாப்ள. அடுத்து 20 பேர் . அதயும் அடிச்சி போட்டுருவாப்ள.

கடுப்பாகி ப்ரகாஷ்ராஜ் “ஏண்டா பத்து பேர அடிச்சா நீ பெரிய ஆளா.. 50 பேர இறக்குறேண்டா.. பாக்குறியா?” ன்ன உடனே பவன் ஒரு பதில் சொல்லுவாரு பாருங்க. “நீ 50 பேர இறக்குனாலும் சரி 100 பேர இறக்குனாலும் சரி. At a time ல என்ன சுத்தி நிக்கப்போறது நாலு பேர்தான். அந்த நாலு பேரயும் ஸ்பாட்லயே கொன்னுருவேன்” ம்பாரு... இத ஏன் சொல்றேன்னா, எப்புடி இத்தனை பேர அடிக்க முடியும்னு நம்ம எதாவது கேட்டா இப்டிதான் பதில் சொல்லுவாங்க. அதனால அம்பதோ, ஐநூரோ… பேசாம பாத்துட்டு போயிட வேண்டியது தான்.

படத்துக்கு இன்னொரு பெரிய மைனஸ் படத்தோட நீளம். 2.45 மணி நேரம் ஓடுது. இண்டர்வல் வரும்போதே எதோ படம் முடியப்போற ஃபீல். மொக்கை சீனையெல்லாம் கட்பன்னா நல்லாருக்கும். ஆனா என்ன மொக்கை சீனையெல்லாம் கட் பன்னிட்டு பாத்தா மிச்சம் 5 பாட்டும் 6 ஃபைட்டும்தான் பேலன்ஸ் இருக்கும்.


நம்ம ராம் கோபால் வர்மா அப்பப்ப எதாவது ஒரு பெரியாள வம்பிழுத்து வாங்கிக் கட்டிக்குவாப்ள. அவர் சர்தார் கப்பர் சிங்கப் பத்தி போட்ட ட்வீட் ”Bahubali gave Tremendous sky like rise to Tollywood in the eyes of Bollywood and now SGS crashed it back into the underground” இதுக்கு பவன் ஃபேன்ஸ் அவர கயிவி கயிவி ஊத்திக்கிட்டு இருக்காய்ங்க. ஆனா அந்தாளு சொல்லிருக்கது கரெக்ட் தான். சமீப காலங்கள்ல பாத்த சில மோசமான  படங்கள்ல இதுவும் ஒண்ணு. 

Sunday, April 3, 2016

சங்கமே அபராதத்துலதான் ஓடிக்கிட்டு இருக்கு!!!


Share/Bookmark
ஒரு விஷயத்துக்கு மக்கள் எந்த அளவு முக்கியதுவம் கொடுக்குறாங்க என்பதைப் பொறுத்துதான் ஊடகங்கள் அந்த விஷயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் இருக்கு. ஒவ்வொரு முறை கிரிக்கெட்டை பத்தி சூடா விவாதம் பன்னிக்கிட்டு இருக்கும்போதும் “நம்மூர்ல கிரிக்கெட்டுக்கு கொடுக்குற அளவு மத்த விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேங்குறாங்க” ங்குற புலம்பலும் சேர்ந்துதான் வரும். ஏன்னா இன்னிக்கு கிரிக்கெட்தான் மக்களுக்கு புடிச்சிருக்கு. அதனால எல்லாரும் கிரிக்கெட்ட தான் புரமோட் பன்ன ஆசைப்படுறாங்க. அது சம்பந்தமான வீரர்களுக்கு தான் நிறைய ஸ்பான்ஸர்ஸ் கிடைக்கிது. மற்ற விளையாட்டைச் சேர்ந்த வீரர்கள் இந்த அளவு வசதி இல்லாம இருக்காங்க.

ஒருதடவ எனக்கும் என்னோட நண்பருக்கும் இடையில ஒரு பெரிய விவாதமே நடந்துச்சி. நான் க்ரிக்கெட்ட பத்தி எதோ பேசிக்கிட்டு இருக்கும்போது அவர் “க்ரிக்கெட்லாம் பாக்க கூடாது சிவா.. அது நம்ம விளையாட்டே இல்லை. அத நம்மகிட்ட மார்கெட்டிங் பன்னிட்டாங்க” ன்னு சொன்னாரு. அதுக்கு நா “இருந்துட்டு  போகட்டும்.. அதனால என்ன? அந்த விளையாட்டு எனக்கு புடிச்சிருக்கு நா பாக்குறேன்” ன்னேன். மறுபடி மறுபடி அவரோட வாதம் முழுசும் “கிரிக்கெட் நம்ம விளையாட்டில்ல.. அத நம்மகிட்ட வெளிநாட்டுகாரர்கள் மார்க்கெட்டிங் பன்னிட்டாங்க.. அந்த விளையாட்ட பாக்க நாம மூணு மணி நேரம் ஆறு மணிநேரம்னு வேஸ்ட் பன்னக்கூடாது” என்பதாத்தான் இருந்துச்சி.

அவரோட வாதம் உண்மையா கூட இருக்கலாம். ஆனா அது இப்ப வரைக்கும் எனக்கு கன்வீன்சிங்கா இல்லை. மார்க்கெட்டிங் பன்னப்பட்டதா இருந்தாலும் அது இப்பதைக்கு நமக்கு பிடிச்ச ஒரு விஷயமா இருக்கு. அத நீ செய்யக்கூடாதுன்னு, நமக்கு பழக்கமில்லாத, பிடிக்காத ஒரு விஷயத்ததான் நீ பன்னனும்னு சொல்றத என்னால ஏத்துக்க முடியல. அத விட மூணு மணிநேரம் ஏன் வேஸ்ட் பன்றீங்கன்னு ஒண்ணு கேட்டாரு. ஒருத்தனோட நேரம் வீணடிக்கப்படுதா இல்லை முறையா பயன்படுத்தப்படுதாங்குறத அவன் அவந்தான் முடிவு பன்னனும். என்னப் பொறுத்த அளவு அந்த மூணு மணி நேரம் நா எனக்கு பிடிச்ச ஒரு விஷயத்த பன்றேன். அது அவரது பார்வையில வீணடிக்கப்படுவதா இருக்கு. இன்னிக்கு இருக்க நிலமையில நேரத்த பணமா கன்வர்ட் பன்னாலோ, அல்லது பணம் செய்வதற்கு தேவையான திறமையை வளர்த்தாலோதான் அந்த நேரம் பயனுள்ளபடி செலவழிக்கப்பட்டதாக கருதப்படுது.

எவன் என்ன மார்க்கெட்டிங் பன்னாலும் நமக்கு தேவையானதை, நமக்கு பிடித்ததைத்தான் நாம தெரிவு செய்யிறோம். டிவில போடுற அத்தனை விளம்பரங்களையும் பார்த்து நம்பி நாம எல்லாத்தையும் வாங்கிடுறதில்லை. நமக்கு ஒரு பொருள் தேவைப்படும்போது அதுல ஒண்ணத் தெரிவு செய்ய வேணும்னா இந்த விளம்பரங்கள் உதவுன்னு வச்சிக்கலாம். உயிர்வாழ அத்யாவசியம் இல்லாத ஒரு பொருளை மார்க்கெட்டிங் பன்னுறப்போ அது எப்பவுமே திணிப்பதாக எடுத்துக்க முடியாது.  நம்மதான் திணிக்கப்படுவது போல உணருரோம். அது வெறும் ஆப்ஷன் தான்.

இந்தப் பதிவு எழுத ஆரம்பிச்சதே இந்த நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடத்தப்பட இருக்கிற மேடை நாடகம் மற்றும் நட்சத்திர க்ரிக்கெட் தொடர்பாத்தான். முன்னதா ஒரு நாலு மாசத்துக்கு முன்னால நடிகர் சங்கத் தேர்தலுக்கு சட்டமன்றத் தேர்தலை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்கள் பெரிது படுத்தியும், வாக்கெடுப்பு அன்னிக்கு லைவ் டெலிகாஸ்ட்டெல்லாம் பன்னி எக்கச்சக்க பில்ட் அப் பன்னாய்ங்க.

அடுத்த ரெண்டு மாசத்துல சென்னை வெள்ளத்துல மூழ்குனப்போ நேரடியா விஷால் & co இதுக்கு நடிகர் சங்கம் எதுவும் செய்ய முடியாது அரசாங்கம்தான் உரிய நடவடிக்கை எடுக்கனும்னு ஓப்பனா சொன்னாரு. இப்ப அதுதான் நிறைய பேருக்கு உறுத்துது. சென்னை வெள்ளத்தில் தத்தளிச்சப்போ உதவ முடியாதுன்னு சொன்ன நீங்க இப்ப ஏன் மக்கள்கிட்ட பணம் வசூல பன்றீங்க? இதுக்கு பேரு என்ன தெரியும்மா… எச்சைங்குறான்  ஒருத்தான்.. இன்னொருத்தன் ஏன் அதுக்கு நிதி திரட்ட நிகழ்ச்சி நடத்தலன்னு கேக்குறான். இன்னும் என்னென்னவோ  வாய்க்கு வந்தத திட்டுறாய்ங்க.

எதோ நடிகர் சங்கத்துல உள்ளவிங்க இவனுங்க ஒவ்வொருத்தன் வீட்டுக்கும் வந்து அம்மா, தாயே கட்டிடம் கட்ட காசு இல்லை எதாவது போடுங்கன்னு கேட்ட மாதிரி இவனுங்க பொங்குற பொங்கு தாங்க முடியல. நடிகர்கள் ஒரு ஷோ நடத்தி 100, 200 டிக்கெட் போட்டு வசூல் பன்றதுக்கு பேர் மக்கள்கிட்டருந்து பணம் பறிக்கிறதுன்னா, தியேட்டர்ல படத்த ரிலீஸ் பண்ணி 120 ரூவா டிக்கெட் வாங்கிட்டு படத்த மக்களுக்கு காமிக்கிறதுக்கு பேரும் பணம் பறிப்பு தானா?  ஃபாரின் ப்ளேயர்ஸ கொண்டு வந்து இங்க விளையாடவிட்டு குறைந்த பட்ச டிக்கெட் 1500, அதிகபட்ச டிக்கெட் 50000 வரைக்கும் வசூலிக்கிற IPL லுக்கு பேரெல்லாம் என்ன?

அதெல்லாம் சரி.. இப்ப நடிகர்சங்க மேட்ச்ச கட்டாயமா நீங்க பாத்தே ஆகனும்னு யாரு கட்டாயப்படுத்துனது? நடிகர்கள் விளையாடுறாங்க. உங்களுக்கு பாக்கனும்னு தோணுச்சின்னா போங்க. இல்லைன்னா பேசாம கெடங்க. எதோ உங்க பாக்கெட்டுலருந்து உங்களக் கேக்காம காச எடுத்த மாதிரி பதறுறீங்க.

இந்த கேப்புல அஜித் மக்கள்கிட்ட பணம் பறிக்கக்கூடாதுன்னு ஃபங்ஷனுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாராம். அதுக்கு கெத்துடா… மாஸுடா வேற.. ஏதோ அஜித் படங்கள்ல பணம் வாங்காம நடிக்கிற மாதிரியும், அஜித் படங்கள் தியேட்டர்ல மக்களுக்காக ஃப்ரீயா ஓடிக்கிட்டு இருக்க மாதிரியும். இவரு என்னவோ மத்த எல்லா ஃபங்ஷனுக்கும் வந்துட்ட மாதிரியும், மக்கள்கிட்ட பணம் பறிக்கிறாங்கன்னு கொதிச்சி இந்த ஒரு ஃபங்ஷனுக்கு மட்டும் வரமாட்டேன்னு சொல்லிட்ட மாதிரியும்.. எந்த ஃபங்ஷனுக்கு அது வந்துருக்கு? ஃபங்ஷனுக்கு வராம ஓபி அடிக்கிறதுக்கு  இப்டி ஒரு பில்ட் அப்பு.


நம்ம மக்கள்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா மத்த எல்லா இடத்துலயும் காசு குடுத்து ஒண்ணு வாங்குனா அந்த டீலிங்க அப்பவே முடிச்சிக்குவாய்ங்க. ஆனா சினிமாக்காரங்ககிட்ட மட்டும் “தில் மாங்கே மோர்” ன்னு “நா காசு குடுத்து இவன் படத்த பாத்தேன்.. இவன் ஏன் எனக்கு இத செய்யல? இவன் எதுக்கு இதுக்கு காசு குடுக்கல?” ன்னு எக்ஸ்ட்ராவா எதிர் பாப்பாய்ங்க.

விஷால் நடிகர் சங்கத்தின் மூலமா எதுவும் செய்ய முடியாதுன்னு சொன்னாலும், தமிழ் நடிகர்கள் மூலமா பல கோடி ரூபாய் நிவாரண உதவி கிடைச்சிது. இரவு பகல் பாக்காம உதவிய சித்தார்த், RJ பாலாஜி லாரன்ஸ், மயில்சாமி எல்லாரும் மக்கள்கிட்ட பணம் பறிக்கக்கூடாதுன்னு நடிகர்கள்தான்.

ஆன்னா ஊண்ணா ரசிகர்கள் காசுலதான் சினிமாக்காரங்க வாழுறாங்க.. ரசிகர்கள் இல்லைன்னா சினிமாக்காரனே இல்லைன்னு ஆரம்பிச்சிருவோம். இன்னிக்கு இருக்க நிலமையில ஒரு சில ஹீரோக்களத் தவிற, மக்களுக்கும் நடிகர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு ஒரு கஸ்டமருக்கும் சப்ளையருக்கும் இடையில உள்ள தொடர்புதான். இதுல நம்ம பெருசா அவங்கள வாழ வைக்கிறமாதிரியெல்லாம் நினைச்சிக்கிறது நம்மோட மன ப்ராந்தி தான்.

நடிகர் சங்க கட்டிடம் இவங்க நடிகர்கள்கிட்டயே வசூல் செஞ்சி கட்டுறதோ, இல்லை ஷோ நடத்தி வசூல் பன்னி கட்டுறதோ அவங்க விருப்பம். அந்த ஷோவ காசு குடுத்து பாக்குறதோ, மூடிக்கிட்டு வீட்டுல இருக்கதோ நம்ம விருப்பம். இதுக்காகவெல்லாம் அவங்கள அசிங்கமா திட்டுறது எப்படி இருக்குன்னா, நம்ம ஏரியாவுல உள்ள பீட்சா கடை ஓனர்கிட்ட போய் “ஏண்டா நானே காசில்லாம கஷ்டத்துல இருக்கேன்.. நீ ஏண்டா உன் கடையில பீட்சா விக்கிற?” ன்னு அவன் சட்டையப் புடிச்சி கேக்குற மாதிரி.


நல்லா சம்பாதிக்கிற  நமக்கு பரிட்சையமான முன்னணி நடிகர்கள் மட்டும் இல்லாம, டெய்லி பேட்டாவுக்காக மட்டும் நடிக்கும் எத்தனையோ துணை நடிகர்களைக் கொண்டது நடிகர் சங்கம். பெரிய நடிகர்களிடம் மட்டும் லட்சக் கணக்கில் நன்கொடை பெற்று கட்டிடம் கட்டி முடிப்பது எளிதான வேலையாகத்தான் இருக்கும். ஆனால் இந்தக் கட்டிடம் இவர்களால் மட்டும் கட்டப்பட்டது என்பது போலாகிவிடலாம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் பணம் வசூல் செய்து கட்டிடம் கட்டும்போது அதில் எந்த தனிப்பட்ட நடிகரின் பெயரும் முன்னிலைப் படுத்தப்படாமல் அனைத்து நடிகர்களுக்குமான சம உரிமைக் கட்டிடமாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே இந்த முடிவு எடுக்க்கப்பட்டிருக்கலாம்ங்குறது என்னோட ஊகம். 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...