
என்னடா
ரெண்டு மாசமா ஒண்ணும் பெரிய
சம்பவங்கள் எதுவும் நடக்கலியே... நல்லா
போயிட்டு இருக்கேன்னு
பாத்தேன்... நடத்திட்டாய்ங்க. ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு கெப்பா குட்டி
இருக்கு. ஒருத்தனால என்ன ரேஞ்சுல படம்
எடுக்க முடியும்,அவன் பாடி எவ்வளவு
தாங்கும்.. இதெயெல்லாம் பாத்து தான் ஒருத்தர்கிட்ட
படத்த குடுக்கனும். சுசிகணேசன்கிட்ட கந்த சாமிய குடுத்து
நல்லா வாங்கி கட்டிகிட்டது மாதிரி.
அவரு எடுத்துருந்தது அதுக்கு முன்னாடி ரெண்டே
ரெண்டு பிட்டு படம்தான். அவர
நம்பி பல கோடிரூவாய எந்த
நம்பிக்கையில குடுத்தாங்கன்னு தெரியல. அதே மாதிரி
தான் இங்கயும். நம்ம சற்குணம் எடுத்தது
ரெண்டே ரெண்டு படம் அதுவும்
ஒரு படம் full க்கு தாங்காது. அவர
நம்பி நம்ம தனுஷ் எந்த
நம்பிக்கையில படம் குடுத்தாருன்னு தெரியல.
படம் ஒரளவுக்கு எதாவது
சொல்ற மாதிரி இருந்தா மட்டும்
தான் என்னால ரிவியூ எழுத
முடியும். இல்லன்னா மொத்த பொறுப்பையும் அவர்கிட்ட
குடுத்துருவேன். அவர்கிட்ட நீங்களே படத்த பத்தி
கேட்டுக்குங்க....
இடம் :
அழகுராஜா சைக்கிள் கடை... மாலை 4 மணி..
செந்தில்
: என்னணே ஒரே டென்சனா உக்காந்துருக்கீங்க?
கவுண்டர்
: அட ஏண்டா அழகேசா... வாரம்
ஏழு நாலும் இந்த ஓட்டை
விழுந்த சைக்கிள் டியூபையும் துரு புடிச்சி போன
ரிம்மையும் பாத்து பாத்து போரடிச்சி
போச்சிடா.. மனுசனுக்கு ஒரு எண்டர்டைன்மெண்ட் இருந்தா
தானே வாழ்க்கை ஒரு கில்ஃபான்ஸா போவும்
செந்தில்:
அட இவ்வளவு தானா... இதுக்கு
என்கிட்ட ஒரு சூப்பர் ஐடியா
இருக்கே...
கவுண்டர் : தம்பி நீ ஏற்கனவே
எனக்கு ஐடியா தர்றேன்னு சொல்லி
பலமுறை ஓட ஓட அடி
வாங்கிருக்க.. மரியாதையா என்ன கொஞ்சம் தனியா
விட்டுட்டு ஓடிப்போயிரு..
செந்தில்
:(சோகமாக) என்னண்ணே... நா உங்க தம்பி
மாதிரி உங்களுக்கு ஒரு நல்லது பண்ணலாம்னு
பாத்தா இப்டி பேசுறீங்களே...
கவுண்டர்
: டேய்... டேய்... இப்போ என்னத்துக்கு
அழுவுற நீயி... சரி சொல்லித்
தொலை..
செந்தில் : நம்மூர் கொட்டாயில புது
படம் ரிலீஸ் ஆயிருக்குண்ணே... சாயந்தர
ஆட்டத்துக்கு போனா உங்க டென்சன்
எல்லாம் போயிரும்னே...
கவுண்டர்
:டேய்... யோசனை என்னவோ நல்லாத்தான்
இருக்கு.. ஆனா நா படம்
பாக்குறதயே விட்டுட்டேனேடா.. இப்பல்லாம் ஒரு நாயும் ஒழுங்கா
படம் எடுக்குறதே இல்லை.. 14 ரீல காலி பண்ணனும்ங்கறத்துக்காகவே
எத எதயோ எடுத்து வைக்கிறாங்க....
இது சரிப்பட்டு வராது ஆள விடு...
செந்தில்
: அண்ணேன்... இவரு நல்ல டைரக்டருண்ணே...
நேசனல் அவார்டு எல்லாம் வாங்கிருக்காரு..
கவுண்டர்
: டேய் படப் பொட்டி மண்டையா...நேசனல் அவார்டுங்றது எந்த
படத்துக்கு தருவாய்ங்க? வந்துச்சா வரலியா, ஓடுச்சா ஓடலையாண்ணு
தெரியாத ரேஞ்சில ஒரு படம்
வரும் பாத்தியா அதுக்கு தான். அவார்டு குடுக்கும் போது
தான் அப்டி ஒரு படம்
வந்ததையே மக்கள் தெரிஞ்சிக்குவாங்க.. அப்டி
இல்லைன்னா எவன்கிட்டயாது காசு நெறையா இருந்தா
அத குடுத்து ஒரு நேசனல் அவார்டு
வாங்கிக்குறாய்ங்க.. இதெயெல்லாம் நம்பி போக முடியாதுடா..
செந்தில்
: போங்கண்ணே... இவ்ளோ சொல்லியும் கேக்காமாட்டேங்குறீங்க..
இனிமே நா இங்க சைக்கிள்
தொடைக்க மாட்டேன்...
கவுண்டர்
: ஆமா சைக்கிள் தொடைக்கிறது பெரிய கவர்னர் உத்யோகம்
இவரு இல்லைன்னா யாரும் பாக்க முடியாது..
சரி இவ்ளோ கெஞ்சிறதால வர்றேன்...
மவனே எதாவது மிஸ் ஆச்சு
நாளையிருந்து சைக்கிள் தொடைக்க கை இருக்காது...
(தியேட்டரில்)
கவுண்டர்
: அடேங்கப்பா... டேய் மண்டையா கூட்டம்
அலை மோதுது.. படம் சூப்பரா இருக்கும்
போலருக்குடோவ்...
செந்தில்:
இருக்காதா பின்ன... நம்ம தனுஷ் வேற
நடிச்சிருக்காறே..
கவுண்டர்
: யாரு இந்த கம்பு குச்சில
சட்டைய மாட்டி விட்டா மாதிரி
ஒருத்தன் இருப்பானே அவனா.. ரொம்ப விபரமான
பையன்,...
செந்தில்
: (சத்தமாக) அண்ணே... அண்ணே... அங்க பாருங்கண்ணே..
கவுண்டர்
: என்னடா அங்க..
செந்தில்
: இந்த படத்தோட டைரக்டரு சற்குணம்
வர்றாருண்ணே...
கவுண்டர்
: டேய் வாடா.. நா இதுவரைக்கும்
சினிமா காரங்கள பாத்ததே இல்லை
பாத்து ரெண்டு வார்த்த பேசிட்டு
வருவோம்...
கவுண்டர்
: அய்யா வணக்கம்ங்க..
சற்குணம்
: ம்ம்ம்... வணக்கம் வணக்கம்... படம்
பாத்துட்டீங்களா
கவுண்டர்
: இனிமே தாங்க பாக்க போறோம்...
சற்குணம்
: அதானே பாத்தேன்... படம் பாத்துருந்தா இந்நேரம்
சிரிச்சி சிரிச்சி உங்க வயிறே புண்
ஆயிருக்குமே
கவுண்டர்
: அப்டீங்களா.. அவளோ காமெடியா எடுத்துருக்கீங்களா?
சற்குணம்
: அட என்ன அப்டி கேட்டுட்டீங்க..
இந்த கதைய நா தனுஷ்
கிட்ட சொல்லும் போதே அவரு கைதட்டி
சிரிச்சி ரசிச்சார்னா பாத்துக்குங்களேன்... its a
laugh riot
கவுண்டர்
: அடேங்கப்பா.. (சைடுல லைட்டா திரும்பி
) டேய் மண்டையா லாப் ரியாட்னா
என்னடா?
செந்தில்
: அதாவதுன்னே இந்த படத்த பாத்தா
நீங்க குலுங்க குலுங்க சிரிச்சி
ரசிப்பீங்களாம்னே
கவுண்டர்
: டேய் அழகேசா... நா உன்ன என்னவோ
தப்பா நெனைச்சிட்டேண்டா.. இந்த அண்ணேன் சந்தோசமா
இருக்கனும்னு நீ எவ்வளவு நல்ல
மனசோட இருந்துருக்க...
சற்குணம்
: அதுமட்டும் இல்லை இந்த படத்துல
5 பாட்டு இருக்கு பாருங்க.. ஃபெண்டாஸ்டிக்...
அதயும் ஃபாரின்ல சூட் பண்ணிருக்கேன்... அசந்து
போயிருவீங்க... குறிப்பா ஒரு தொப்புள் சீன்
வச்சிருக்கேன் பாருங்க... ஒரு பய வச்சதில்லை
இதுவரைக்கும் தமிழ் சினிமாவுல
கவுண்டர்:
சார் நீங்க இங்கயே இருங்க...
நாங்க படம் பாத்துட்டு வந்து
இத பத்தி டீடெய்லா பேசுவோம்..
சற்குணம்
: கண்டிப்பா... நா இன்னிக்கு இங்கயே
தான் இருப்பேன்...
போகும்
பொது கவுண்டர் "டேய் மண்டையா...படம்
நல்லாருந்தா ராத்திரி ஆட்டத்துக்கு செகப்பிய கூப்டு வந்து ஒருக்கா
பாத்துட்டு போயிறனும்டா.."
---------------------------------------
படம் ஆரம்பிக்கப்படுகிறது..
இண்டர்வல்
செந்தில்
நெளிந்து கொண்டே
"அண்ணே,..
எனக்கு லைட்டா வயித்த கலக்குற
மாதிரி இருக்குன்னே... நா கொஞ்சம் அர்ஜெண்டா
வயக்காட்டு பக்கம் போறேன்.. நீங்க
இருந்த மிச்ச படத்த முடிச்சி
வச்சிட்டு வந்துருங்கண்ணே"
கவுண்டர்
: (தோள் மேல கைய போட்டு)
நீ இருடி.... என்னா மாதிரி படத்துக்கு
கூட்டிட்டு வந்துருக்கா.. கொல்லைக்கு தான போவனும்... கொஞ்ச
நேரத்துல நானே வரவைக்கிறேன்...
-----------------------------------------
படம் முடிந்து....
கவுண்டர்
: (ரெண்டு காதையும் பொத்துனாப்ள மூடிகிட்டு) அடடடா.... ஆஆஆஆஅ........ ஐயயயோ.... (செந்தில் கைத்தாங்களா கூட்டிட்டு வர்றாரு..."டேய் அழகேசா... என்னால
நடக்க முடியல... என்ன இப்புடி படிக்காட்டு
ஓரமா உக்காரவச்சிட்டு நீ என்ன பண்ற
படத்துக்கு போறதுக்கு முன்னாடி டைரக்டருன்னு ஒருத்தன காமிச்சல்ல அவன
போய் பொத்துனாப்ள இங்க அழைச்சிட்டு வா...
போ"
செந்தில்
: சரிண்ணே
கவுண்டர்
:டேய் அப்டியே எஸ்கேப் ஆவலாம்னு
பாத்த... மவனே இன்னியோட உனக்கு
க்ளைமாக்ஸ் தான்.
(5 நிமிடத்தில்
செந்தில் சற்குணத்தோடு வருகிறார்)
சற்குணம்
: என்ன சார் ... படத்த நல்லா எஞ்ஜாய்
பண்ணீங்களா.. சிரிச்சி சிரிச்சே டயர்டு ஆயிட்டீங்க போல...
கவுண்டர்
கடுப்பாயி அவன் பொரடில கைய
வச்சி இழுத்து
(ஹை பிட்ச்ல) ஏண்டா நாயே... இது
ஒரு படம் இதுக்கு நா
சிரிச்சி சிரிச்சி டயர்டு ஆயிட்டேனா.. நா
பேசாம என் கடையில உள்ள
பழைய சைக்கிளயே பாத்துகிட்டு இருந்துருப்பேண்டா... என் 200 ரூவாயையும் காலி
பண்ணி இப்போ என்னை ஆஸ்பத்திரில
அட்மிட் ஆக வச்சிட்டியேடா... ஆமா
உன் பேரு என்ன நாயே?
"சற்குணம்ங்க"
கவுண்டர்
: என்னடா பேரு இது சருக்குனோம் வழுக்குனோம்னு... நீயெல்லாம் என்ன தைரியத்துல கேமராவ
தூக்கிட்டு படம் எடுக்க வந்த்துட்ட....
ஒரு சீனாவது பாக்குற மாதிரி
இருக்காடா...
சற்குணம்
: சார்... actually its a
laugh......
கவுண்டர்
: (வாயிலயே அடிச்சி) இங்கிலீசு... இங்கிலீசு... இந்த மொகரைக்கு இங்கிலீசு...
நீயெல்லாம் இனிமே
தமிழே பேசக்கூடாது நாயே.... ஆமா அப்போ என்னவோ
சொன்னியே என்ன அது
செந்தில்
: laugh riot ண்ணே..
கவுண்டர்
: அக்காங்... அது ஒண்ணு தான்
கொறைச்சல்... அப்புறம் பாட்டு பட்டைய கெளப்புதா?
டேய் இது தமிழ்ப் படம்
தானேடா... எந்த பாட்டாவது தமிழ்ல
வந்துச்சாடா... சரி அத விடு
கும்பகோணம் பக்கத்துல ஒரு கிராமத்து பையனுக்கு
காதல் வந்தாலும் அடுத்த செகண்டே சுட்சர்லாட்ந்து
போயி தான்
சூட்டிங் எடுப்பீங்களாடா...
சற்குணம்
: இல்லை சார்,... மக்கள் விருப்பப் படுறாங்கண்ணு
தான்..
கவுண்டர்
: மக்கள் என்னிக்குடா உங்ககிட்ட ஃபாரின் சாங்கு வேணும்னு
கேட்டுருக்காங்க.. நாயே நீ சுத்திபாக்குறதுக்கு
மக்கள் மேல பழிய போடுறியா?
சற்குணம்
: சார்... என்ன ஓவரா பேசுறீங்க...
I am a national award winner
கவுண்டர்: உனக்கு
நேசனல் அவார்டு குடுத்த அந்த
நாயி மட்டும் இப்போ என்
கையில சிக்குச்சி வாயி மேலயே எட்டி
மிதிச்சி போடுவேன்... ஆமா அது என்னடா
ஹீரோயின்... அப்பு கமலுக்கு பொம்பள
வேசம் போட்ட மாதிரி,.. இதுல
அதுக்கு தொப்புள் சீன் மட்டும் தான்
கொறைச்சல்... ஆமா அதுக்கு மனசுல
என்ன சோதிகான்னு நெனப்பா... இந்த ஆக்டிங்கெல்லாம் நாங்க
பல தடவ பாத்தாச்சும்மா. அதுக்கும்
சொல்லிவை... கடைப்பக்கம் வந்தா கல்லெடுத்து அடிச்சி
போடுவேன்னு
சற்குணம்
: கோவப்படாதீங்க சார்.. படத்துல ஹீரோ
தான் சரியில்லை.. நா சொல்லிக்குடுத்த மாதிரி
அவரு பர்ஃபார்ம் பண்ணல... அதான் உங்களுக்கு புடிக்கல..
கவுண்டர்
: அய்யா என்ன சொன்னீங்க? ஹீரோ சரியில்லையா.. நாயே..நீ எடுத்துருக்க படத்துல
கமலஹாசனே நடிச்சாலும் ஒண்ணும் பண்ண முடியாதுடா..
உன் கதை அப்புடி... அதென்னா
மொத சீன்ல காதலிச்சிட்டு அடுத்த
சீன்லயே அந்த புள்ளை இவன்
கூட ஓடிப்போயிருது...
சற்குணம்
: அப்பதான் சார் கதை ஸ்பீடா
இருக்கும்...
கவுண்டர்
: நீ ஒண்ணு பண்ணிருக்கலாமே... டைட்டில்
போட்ட உடனேயே க்ளைமாக்ஸ போட்டுருந்தா
இன்னும் ஸ்பீடா இருந்துருக்குமல்லோ...
சற்குணம்
: சரி சார்... விடுங்க... எதோ
தப்பு நடந்து போச்சு... என்னோட
அடுத்த படத்துல இந்த தப்பெல்லாம்
நடக்காம பாத்துக்குறேன்...
கவுண்டர்
: (லைட்டா தோள் மேல கைய
போட்டு பக்கத்துல இழுத்து) இந்த மூஞ்சி இதுக்கு
மேல கோடம்பாக்கத்துக்கு பக்கம் நடமாடுற மாதிரியோ
இல்லை கேமராவ தூக்கிட்டு எங்கயும்
படம் எடுக்கு போகுதுன்னோ எனக்கு
எதாவது சேதி வந்துச்சி... வக்காளி
பஸ் ஏறி வந்து கொறவளைய
கடிச்சி போடுவேன் ஓடிப்போயிறு... (சற்குணம் விட்டா போதும்னு ஓடுகிறார்)
செந்தில்
: அண்ணேன்.. நா வேணா அண்ணிய
போய் அண்ணிய அழைச்சிட்டு வர்றேன்..
நீங்க ரெண்டு பேரும் இருந்து
ரெண்டாவது ஆட்டம் பாத்துட்டு வர்றீங்களா?
கவுண்டர்
மெதுவா கீழ குணிஞ்சி ஒரு
பெரிய கல்ல எடுத்துகிட்டு
வக்காளி
எங்க ரெண்டு பேரயும் கொலை
பண்ணவா பாக்குற படுவா... இருடா
இன்னிக்கு உன் மண்டைய பொளந்து
மூளைய பாக்காம விடமாட்டேண்டா... ன்னு
சொல்லிட்டு துரத்த செந்தில் ஓடுகிறார்.
4 comments:
i loved your comment awesome writing.
i want to see koundamani and senthil watch this movie and how they react to it
மிக ரசித்துச் சிரித்தேன்; அருமை!
good boss..i enjoyed
your post is super than film... keep it up
Post a Comment