Friday, April 25, 2014

ஆனாலும் நீங்க இவ்வளவு நல்லவரா இருக்கக் கூடாது சார் - FACEBOOK BOYS!!!


Share/Bookmark
குறிப்பு : இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்கோ, தனிப்படா எவரையும் குறிப்பிட்டோ எழுதப்பட்டது அல்ல.  ரொம்ப ரொம்ப நல்லங்க சில பேரு நம்மூர்ல இருந்தாங்கன்னா அது நம்ம விக்ரமன் படத்து ஹீரோக்கள் தான். "அநியாயத்தை கண்டால் பொங்குறது" "அடி மனச டச் பண்றது", "அடுத்தவங்களுக்காக அடி வாங்குறது"  "எவ்வளவு அடிச்சாலும் வாங்கிகிட்டு வலிக்காத மாதிரியே நடிக்கிறது" இந்த மாதிரியான வேலைகள்லாம் செஞ்சி  படம் பாக்குறவிங்கள 'அவ்வளவு நல்லவனாடா நீயி"ன்னு ஆச்சர்யப்பட வைக்கிற டெக்னிகெல்லாம் அவங்களுக்கு மட்டும் தான் தெரியும். ஆனா இப்போ அவிங்களையெல்லாம் மிஞ்சிடுற அளவுக்கு சில  நல்லவர்கள் நம்ம  சமூக வலைத்தளங்கள்ல உலவிக்கிட்டு இருக்காய்ங்க. அதாவது இவிங்களுக்கு மட்டும் தான் மனித நேயம், நாட்டுப்பற்று, பண்பாடு, எறுமைமாடுன்னு அத்தனையும் இருக்க மாதிரியும்,   சார் தமிழ்நாட்டு மானத்த நீங்க தான் காப்பாத்தனும்னு அனைவரும் இவனுங்கள கேட்டுக்கிட்ட மாதிரியும் மனசுக்குள்ள நெனைச்சிகிட்டு  போடுறானுங்க பாருங்க ஒரு படம்.. நம்மள நாமலே கடிச்சிகிட்டு தொப்புள சுத்தி ஊசிபோட்டுக்க வேண்டியது தான்.

மொதல்ல இந்த எலெக்சன் வந்தாலும் வந்துச்சி.. மைக்செட் போட்டு ப்ரச்சாரம் பண்றவனுங்க கூட பரவால்ல போலருக்கு. "ஓட்டு போடுவது நம் உரிமை" "நண்பர்களே மறக்காமல் வாக்களியுங்கள்" "நா ஓட்டு போடப்போறேன் அப்ப நீங்க?" டேய் என்னடா கல்யான் ஜூவல்லர்ஸ் பிரபு மாதிரி ஏண்டா ஹைபிட்ச்ல கத்திகிட்டு இருக்கீங்க..மொதல்ல நீங்க ஃபேஸ்புக்க விட்டுட்டு எழுந்து போய் ஓட்டு இருந்தா போடுங்கடா.. என்னமோ எல்லாரும் நா ஓட்டு போட மாட்டேன் நா ஓட்டு போடமாட்டேன்னு மல்லுகட்டிகிட்டு இருக்க மாதிரியும் இவனுங்கதான் அத அத தூக்கி நிறுத்தி எல்லாரையும் ஓட்டு போட வைக்கிற மாதிரியும் மனசுக்குள்ள ஒரு நெனைப்பு போல. உங்கள மாதிரி தாண்டா மத்தவைங்களும்.. உங்க பொறுப்ப காட்டுறதா நெனைச்சி மத்தவன் பருப்பல்லாம் எடுத்துருவீங்க போலருக்கு. இந்த வருசம் ஓட்டுப்பதிவு கொஞ்சம் அதிகமா இருந்துட்டா இவனுங்களாலதான்னு சொன்னாலும் சொல்லுவாய்ங்க. கம்பெனி லீவு விட்ட ஆட்டோமேட்டிக்கா எல்லாரும் ஓட்டு போடப்போறாய்ங்க.

ஃபேஸ்புக்ல இருக்கவிங்களுக்கு தான் அரசியல் அறிவு அருவியா வழிஞ்சி ஊத்துது. மோடிக்கு நாட்டை  ஆள தகுதி இல்லை. மன்மோகன் சிங்கிற்கு எதுவுமே தெரியாது. ராகுல் காந்தி இவர்களை விட அறிவு கம்மியான ஒரு சின்ன பையன்... அதாவது அரசியல் தலைவர்களுக்கெல்லாம் அடிப்படை அறிவு கூட இல்லாத மாதிரியும் இவிங்களுக்கு அறிவு அப்புடியே கொப்புளிக்கிர மாதிரியும், இவிங்க போனா ரெண்டே நாள்ல நாட்டை வல்லரசு வாஞ்சிநாதன் தென்னவனாக மாத்திடுற மாதிரியும் பேசிறாய்ங்க . ராசா
உங்களுக்கு தெரிஞ்ச அளவு விஷயமோ இல்லை உங்களுக்கு இருக்க அளவுக்கு அறிவோ அவங்களுக்கெல்லாம் இல்லைப்பா. பேசாம பொத்துனாப்ல நீங்களே பிரதமர் ஆயிடுங்க. அவிங்களுக்கு உங்க அளவுக்கு கூறு இல்லை.


அப்புறம் இன்னொரு புதுவிதமான பிரச்சாரம் ஒண்ணு கண்டுபுடிச்சி வச்சிருக்காய்ங்க... நேரடியா இந்த கட்சிக்கு ஓட்டுப் போடுங்கன்னு கேக்க மாட்டாய்ங்க.. "அந்த ஊழல் பண்ண அந்த கட்சிக்கா உங்கள் ஓட்டு..இல்லை இந்த ஊழல் பண்ண இந்த கட்சிக்கா உங்க ஓட்டு எனவே சிந்தித்து வாக்களியுங்கள் தோழர்களே" ன்னு போடுவாய்ங்க. அதாவது அவரு நேரடியா அவரு சப்போர்ட் பண்ற கட்சிய சொல்ல மாட்டாராம். நடுநிலையா இருக்காராம்... நாயே நீ நடுவுல இருந்தா என்ன இல்லை நட்டுகிட்டு இருந்தா என்ன.... ஒருவேளை இவரு இந்த கட்சிய சப்போர்ட் பண்றேன்னு சொன்னா ஆல் இந்தியா லெவல்ல அவரோட இமேஜ் பாதிக்கப் படுமாம். 

அப்புறம் பார்ப்பன எதிர்ப்பு... இதப் பன்னாதான் இவரு ஒரு மிகப்பெரிய போராளின்னு ஊருக்கு தெரியுமாம். இவனுங்க அவனுங்க ஜாதிக்கட்சில இருக்கலாம். அவன் சொந்தக்காரனுங்களை மட்டுமே கட்சில வச்சிக்கலாம். இவன் திமுக காரண்டா, இவன் அதிமுக காரண்டான்னு அவன் அவன் கட்சில இருக்கவனுக்கு சப்போர்ட் பண்ணலாம். ஆனா இதயே ஒரு பிராமணர் அவன் சொந்தகாரனுக்கோ இல்லை ஜாதிக்காரனுக்கோ உதவி பண்ணா அதுக்கு பேரு பார்ப்பனியம். 50 வருசமா இத சொல்லி சொல்லியே ஓட்டிக்கிட்டு இருக்கானுங்க. முன்னாடி சொன்னீங்க ஓக்கே. இப்போ எல்லாம் மாறியாச்சி. அவிங்களுக்கு எல்லா சலுகைங்களையும் குடுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணியாச்சி. ஆனாலும் எல்லா எடத்துலயும் அவங்கதான் மொதல்லை இருக்காய்ங்கன்னா அதுக்கேத்த மாதிரி படிக்கிறானுங்க. அவன் ஆளுங்களுக்கு உதவி பண்றானுங்க. முடிஞ்சா நீயும் உன் ஜாதிக்காரனுக்கு உதவி பண்ணி அவன தூக்கி விடு. அது நம்மாள பண்ண முடியாது. ஆனா அடுத்தவன் பண்றான்னு குறை மட்டும் சொல்லவேண்டியது.

அப்புறம் இந்த இயற்கைய காப்பாற்றும் நல்லவர்கள். இதுவும் அதே கதை தான். மரத்த வெட்டுறவனுங்கள கண்டா இவனுங்களுக்கு கோவம் வந்துரும். "மரத்தை வெட்டும் பாவிகள்.. இவர்களுக்கு சோறு கிடைக்காது.. நாசமாக போவர்கள்.." அது இதுன்னு திட்டுவாய்ங்க. அதாவது இயற்கை மேல இவரு அளவு கடந்த பாசம் வச்சிருக்காராம். ஏண்டா டேய் அறிவுங்குறது கொஞ்சம் கூட இருக்காதா. மரத்த வெட்டுறவன் கொண்டுபோய் அவன் வீட்டுல மட்டுமா வச்சி திங்கிறான்?  நீ வீடு கட்டுறதுக்கும் , நீ மர நாற்காலில உக்கார்றதுக்கும், நீ நியூஸ் பேப்பர் படிக்கிறதுக்கும் நீ தீப்பெட்டி யூஸ் பண்றதுக்கும் தாண்டா அவனுங்க மரத்த வெட்டுறானுங்க. இதுல சாபம் வேற. அதாவது பிரியாணி திங்கிறவனுங்க நல்லவங்க. ஆட்டை வெட்டுறவன் கெட்டவன்.




அப்புறம் இன்னொரு பெருங்காமெடி குரூப்பு இந்த மனித நேய குருப்பு. இவிங்க என்னன்னா மனித நேயத்த போற்றுரவிங்களாம். என்ன பண்ணுவாய்ங்க. எவனாவது ஒருத்தனுக்கு தூக்கு தண்டனை குடுத்துட்டா அவனை தூக்குல போடவே கூடாதுன்னு அடம் புடிப்பாய்ங்க. தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் இது மனித நேயமற்ற செயல் அது இதுன்னு பேச ஆரம்பிச்சிருவாய்க. அதே ஒருத்தன் ஒரு பெண்ணை கற்பழிச்சிட்டதா ஒரு நியூஸ் வருதுன்னு வச்சிக்குவோம். இப்பொ இவிங்க ரியாக்சன பாருங்க.. "இந்த மாதிரி ஆட்களையெல்லாம் நடுரோட்டுல நிக்கவச்சி அடிச்சே கொல்லனும்" ன்னு கொந்தளிப்பாய்ங்க. ஏன்னா முன்னாடி சொன்னது வேற வாயி. இது நாற  வாயி. ஏண்டா நடுரோட்டுல வச்சி அடிச்சி ஒருத்தனை கொன்னா அது தப்புல்லை. அதே கற்பழிப்பு கேசுக்கு அரசாங்கம் அவனுக்கு மரண தண்டனை குடுத்தா  அது மனித நேயமில்லாத செயலா? அதாவது அநீதிய கண்டா பொங்கவும் செய்வாங்க.. அதே குற்றவாளி உயிரை காப்பாத்தவும் செய்வாய்ங்க. இதற்குப் பேரு தான் மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்.

அடுத்த குரூப்பு செண்டிமெண்ட் க்ருப்பு.. "இவருக்கு லைக் வராது" அப்டின்னு ஒரு கேப்சனோட  ஒருவர் சாக்கடை சுத்தம் செய்யும் ஃபோட்டைவ போட்டு போஸ்ட் பண்ணிருப்பாய்ங்க. அதாவது இவரு வித்யாசமானவராம். அதாவது அவரு லைக் வராதுன்னு போட்டா செண்டிமெண்ட்டா அட்டாச் ஆயி எல்லாரும் அத லைக் பண்ணுவாய்ங்களாம். ஆமா இங்க அந்த ஃபோட்டோவ ஒரு 500 பேர் லைக் போட்டா சாக்கடை அள்ளுரவருக்கு  ஒரு 50000 ரூவா பணம் போகப்போவுது பாருங்க. நேர்ல அந்த மாதிரி ஆளுங்க கூட முகம் குடுத்து பேசக் கூட தயங்குறவங்க, தங்களை நல்லவர்களா காட்டிக்கிறதுக்கு அவங்க ஃபோட்டோ தேவைப்படுது. அந்த ஃபோட்டோக்கள போடுற எத்தனை பேரு உண்மையிலயே அந்த மாதிரி ஆளுங்க கிட்ட முகம் சுழிக்காம நின்னு பேசுவீங்க?

அப்புறம் இன்னொரு கதை எல்லாரும் கேள்விப்ப்பட்டுருப்பீங்க.

ஒருத்தன் ஏர்போர்ட் பக்கத்துல நின்னு சிகரெட் குடிச்சிட்டு இருந்தானாம். அப்போ அங்க வந்த இன்னொருத்தன் அவர் கிட்ட ஒரு நாளுக்கு எத்தனை பாக்கெட் குடிப்பீங்கன்னு கேட்டாராம்

அதுக்கு சிகரெட் குடிச்சவர் "ரெண்டு பாக்கெட்" ன்னாராம்

திரும்ப அவன் "எத்தனை வருஷமா குடிக்கிறீங்க" ன்னானம்

 அவர் " 30 வருஷமா" ன்னு பதில் சொன்னாராம்

அதக்கேட்டதும் "ஏன் இந்த மாதிரி சிகரெட் குடிச்சி காச வேஸ் பண்றீங்க. இதுவரைக்கும் நீங்க குடிச்ச சிகரெட் காச சேத்து வச்சிருந்தா அங்க நிக்கிற மாதிரி ஒரு ஃப்ளைட்டே வாங்கிருக்கலாம்" ன்னு சொன்னோன்ன சிகரெட் குடிச்சவர் கேட்டாராம்

"நீங்க தான் சிகரெட் குடிக்க மாட்டிங்கல்ல.. நீங்க சேத்து வச்ச காசுல வாங்குன உங்க ஃப்ளைட் எங்க இருக்கு"ன்னு கேட்டராம்

அதுக்கு அவன் பெப்பேன்னு முழிக்க இவர் திரும்ப சொன்னாராம் "ஆனா உள்ள ரன்வேல நிக்கிறது என்னோட ஃப்ளைட்டுன்னு"

இத ஏன் இப்போ சொல்றேன்னா "சாமிக்கு பால் ஊத்துறதயும் ஒரு நடிகரோட கட் அவுட்டுக்கோ என்னிக்கோ ஒரு நாள் பால் ஊத்துறதயும் போட்டு "இந்த பாலை பசியில் வாடும் குழந்தைகளுக்கு குடுத்தா அவங்க சாப்புடுவாங்கன்னு சொல்ல வேண்டியது. சரி சார்... பால் ஊத்துறவிங்க தான் அறிவில்லாத கேனப்பயலுக. நம்ம கோயிலுக்கும்  போறதில்லை எந்த நடிகர் கட் அவுட்டுக்கும் பால் வாங்கி ஊத்துறதுமில்லை.. சரி தினம் எத்தனை ஏழைங்களுக்கு நீங்க பால் வாங்கியோ இல்லை சாப்பாடு வாங்கியோ குடுக்குறீங்க? இல்லை தெரியாம தான் கேக்குறேன் கோயிலுக்கு போறவன் புண்ணியம் கெடைக்கும்னாவது நாலு பேருக்கு சாப்பாடு வாங்கி குடுப்பான்... நடிகனுக்கு பால் ஊத்துறவன் படம் ரிலீசு பொறந்த நாளுன்னு எதுக்காவது ஊருக்கு தெரியனும்னாவது சில ஏழைங்களுக்கு உதவி பண்ணுவாய்ங்க. ஆனா நாம கடைசி வரைக்கும் பகுத்தறிவு செம்மலா இருந்துகிட்டு எதுவும் செய்யாம இந்த மாதிரி வெட்டி நியாயம்  பேசிகிட்டே திரிய வேண்டியது தான்.

யப்பா டேய் போதும்பா... எங்களால முடியல. நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்கன்னு நாங்க எழுதி கையெழுத்து வேணாலும் போட்டுத்தர்றோம். தயவு செஞ்சி நிறுத்துங்கடா சாமி..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

9 comments:

Anonymous said...

super boss....

Sivakasikaran said...

பாஸ் செம மிரட்டல்... அந்த பார்ப்பன மேட்டர் தான் பெஸ்ட்.. கலக்குங்க.. :-)

Anonymous said...

Excellent!

Anonymous said...

Boss, that brahmin matter seriously superb. ..

Thanks

G Hariprasad

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

wonderful post.
kalakarthik

ibnu UTHSMAN. said...

itheyelllam solra neenga ithu varaikkum ennenna saathanaigal senjuttu itha eluthiringanu solringala.ithuve ungalukku fashiona pochchu ........... kurai solravanai kurai solvathu....you both are same.........

முத்துசிவா said...

intha mathiri senji aduthavangala kaduppethama irukkathe periya sathana than

Shareef S M A said...

//பண்பாடு, எறுமைமாடு// செம ரைமிங் தல....

Anonymous said...

Very true... excellent

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...