Friday, August 12, 2016

சிங்கம் 3 & சாமி 2 ஸ்டோரி டிஸ்கஷன் !!!


Share/Bookmark
இயக்குனர் ஹரி சிங்கம் 3 ஐ தொடர்ந்து சாமி-2 இயக்கப்போவதாக கொஞ்ச நாள் முன்னால அறிவிச்சிருக்காரு. இந்த சூழ்நிலையில சிங்கம் 3 மற்றும் சாமி 2 படங்களோட கதை டிஸ்கஷன அந்த படத்துல ஏற்கனவே நடிச்ச ஒருசில நடிகர்களோட ஒரே அறையில வச்சிருக்காரு. இப்ப என்ன நடக்குதுன்னு பாப்போம். அந்தந்த கேரக்டர்கள் பேசுற ஸ்லாங்குல படிங்க.

(தொடர்ந்து வெறும் போலீஸ் படமா இயக்கி இயக்கி ஹரி ஒரு மாதிரி மெண்டல் டிஸ்ஸாடர் ஆகுற கண்டிஷன்ல இருக்காரு)

டிஸ்கஷன் ரூமுக்குள்ள வந்து பாக்குறாரு. சந்தானம், ஹாரிஸ் ஹெயராஜ், DSP எல்லாம் வந்து உக்கார்ந்துருக்காங்க.

ஹரி : யோவ்… என்னய்யா எல்லாரும் வந்துருக்காங்க.. வர வேண்டிய ஹீரோ ரெண்டு பேரயும்  காணும்

Asst 1: சொல்லியாச்சு சார்… இப்ப வந்துருவாங்க

ஹரி : ஆமா நீ ஏன் காக்கி கலர்ல சட்டை போட்டுருக்க?

Asst 1: சார் நல்லா பாருங்க… இது காக்கி இல்லை. பச்சை கலர்

ஹரி : (மனதிற்குள்: அய்ய்யயோ… வர வர எதப்பாத்தாலும் காக்கி கலர்லயே தெரியிதே… ) சரி சரி சும்மா தமாசுக்கு கேட்டேன் உக்காரு
எல்லாரும் உக்கார

ஹரி : சரி என்ன சீன் எழுதிருக்கீங்க.. குடுங்க பாக்கலாம்.

Asst 2 : சார்.. சிங்கம் 3 படத்துக்கு ஒரு சூப்பர் இண்ட்ரோ எழுதிருக்கோம் படிச்சி பாருங்க

ஹரி அந்த சீன வாங்கி படிச்சி மெரண்டு போய்

ஹரி : ”யோவ் இந்த சீனெல்லாம் எடுக்குறது ரொம்ப கஷ்டம்யா… டூப் போட்டு தான் எடுக்க முடியும்” ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போதே வெளில சூர்யா குரல் கேக்குது

சூர்யா : ஹாய் ஹலோ எல்லாருக்கும் வணக்கம். சாரி கொஞ்சம் லேட் ஆயிருச்சி..

சந்தானம் : யார்ரா அது?

சூர்யா : ஆத்ரேயாடா

சந்தானம் : கொஞ்சம் சாத்துருயாடா?

சூர்யா : என்னது?

சந்தானம் : இல்லை கதவ சாத்துருயாடான்னு கேட்டேன். வந்து உள்ள உக்காருங்க லில்லிபுட் அங்கிள்

(சூர்யா உள்ள வந்து உக்கார்ந்தப்புறம்)

சூர்யா: என்ன… என்ன போயிட்டு இருக்கு?….

ஹரி : உங்க இண்ட்ரோ சீனப் பத்தி தான் சார் பேசிக்கிட்டு இருந்தோம். ரொம்ப tough ah இருக்கு. அதான் டூப் போட்டு எடுக்கலாமான்னு நினைக்கிறோம்

சூர்யா : என்ன சார்… Six பேக்லாம் வச்சி எப்டி இருக்கேன். எனக்கு போய் டூப் போடனும்ங்குறீங்க… என்ன பன்னனும் சொல்லுங்க… 30 அடி உயரத்துலருந்து குதிக்கனுமா? ட்ரெயின் மேல 200 கிலொ மீட்டர் வேகத்துல ஓடனுமா? இல்லை பாம் வெடிக்கும்போது பக்கத்துல நின்னு ஸ்டைல திரும்பனுமா? எதா இருந்தாலும் சொல்லுங்க. பின்னிடுவோம்
ஹரி : கிரிக்கெட் விளையாடனும்…

சூர்யா : க்..க்…கி.கி.கி.கிரிக்கெட்டா…. பரவால்ல…  நீங்க அதுக்கு டூப்பே போட்டு எடுத்துருங்க.  

ஹரி : பரவால்ல சார்.. டூப்பு வேணாம் நீங்களே நடிங்க. ஃபுல் ஸ்பீடுல வர்ற பந்தை நீங்க மடக்கி சிக்ஸர் அடிக்கிறீங்க. அதன் இண்ட்ரோ சீன்

சூர்யா : நோ நோ.. நா கோடி ரூவா குடுத்தா கூட இனிமே கிரிக்கெட் விளையாட மாட்டேன்னு ஜோ மேல சத்தியம் பன்னிருக்கேன்.

சந்தானம் : (சைடுல திரும்பி) நீயே கோடி ரூவா குடுத்தா கூட இனிமே உன்னயும் உன் தம்பியையும் எங்கயும் விளையாட சேத்துக்க மாட்டாங்க

சூர்யா : கலாய்க்கிறீங்கன்னு நினைக்கிறேன். பரவால்ல… அடுத்த சீன சொல்லுங்க.

ஹரி : இண்ட்ரோ சீன் முடிஞ்ச உடனே அந்த கிரிக்கெட் ஸ்டம்பைய புடுங்கி அங்கருக்க ஒரு 10 ரவுடிய வெளுத்து கட்டுறீங்க. ஃபைட்டு முடிஞ்ச உடனே அதே கிரிக்கட் கிரவுண்டுல ஆடிக்கிட்டு இருந்த ச்சியர் கேர்ள்ஸோட ஒரு குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடுறீங்க.

சூர்யா : வாவ்.. வாவ்…வாவ்.. சூப்பர் சூப்பர்

Asst 2 : (ஹரியின் காதுக்குள்) சார் நீங்க எடுத்த பத்து படத்துலயும் இதே சீனத்தான் மாத்தி மாத்தி வச்சிருக்கீங்க. இவர் என்ன சூப்பர் சூப்பர்ங்குறாரு?

ஹரி : கிரிக்கெட் சீன கேட்டதுல பதட்டமாயி வாவ் வாவ் ன்னு உளரிக்கிட்டு இருக்கான். அப்டியே ஓக்கே வாங்கி சீன ஃபிக்ஸ் பன்னிக்குவோம். ஆமா நீ ஏன் கையில லாட்டிய வச்சிருக்க?

Asst 2 : சார்…  லாட்டி இல்ல சார் இது.. பேனா…

ஹரி : எனக்கு தெரியாதா? சும்மா தமாசு (அவ்வ்வ்)

சூர்யா : என்ன DSP… இண்ட்ரோ சாங்குக்கு ட்யூன் ரெடியா?

சந்தானம் : இவந்தான் பத்துவருசமா நாலு  ட்யூன் போட்டு ரெடியா வச்சிருக்கானே. எந்த பாட்டு வேணும்னு கேட்டா உடனே போட்டுக்குடுத்துருவான்

சூர்யா : என்ன சொல்றீங்க..

சந்தானம் : இஹ்ஹ்.. இல்லை என்ன மாதிரி பாட்டு வேணும்னு கேட்டா சார் போட்டு குடுத்துருவாருன்னு சொன்னேன்.

ஹரி : DSP அந்த இண்ட்ரோ சாங் ட்யூன போடுங்க

DSP : எப்பவோ ரெடி… போடுறேன் கேளுங்க..  “Yo… yo… This is Dsp………………”

சந்தானம் : டேய் வான் கோழி வாயா…  சூர்யாவுக்கு இண்ட்ரோ சாங் போட சொன்னா நீ உனக்கு இண்ட்ரோ சாங் போட்டுக்குறியா

DSP : இல்ல சார்.. எனக்கு இப்புடி ஆரம்பிச்சாதான் ட்யூன் வரும்

சந்தானம் : எனக்கு வாயில நல்லா வரும்… நீ ட்யூனே போட வேணாம் பேசாம உக்காரு.

(ஹாரிஸ் உடனே இடையில பூந்து)

ஹாரிஸ் : சார் எங்கிட்ட ரெண்டு புது ட்யூன்  இருக்கு. கேக்குறீங்களா?

சந்தானம் : எங்கருந்து போட்டது?  (சுட்டது)

ஹாரிஸ் : என்ன சார்?

சந்தானம் : இ..இது எங்க இருந்துகிட்டு ட்யூன போட்டீங்கன்னு கேட்டேன் பாப் கட்டிங் அங்கிள்

ஹாரிஸ்: நானே சொந்தமா என் ஸ்டூடியோவுல போட்டேன்

சந்தானம் : அப்ப சத்தியமா நல்லாருக்காது.   



சூர்யா : சார்.. அப்புறம் இந்தப் படத்துலயும் அனுஷ்காதானே?

ஹரி : அனுஷ்கா கொஞ்சம் கஷ்டம் சார்… 5 கோடி ரூவா சம்பளம் கேக்குறாங்க

சூர்யா : என்னது அஞ்சு கோடியா? ரெண்டு பாட்டுக்கும் நாலு சீனுக்கும் வர்றதுக்கு அஞ்சு கோடியா?

ஹரி : அதுக்கில்ல சார்.. ”உங்க கூட நடிக்கும்போது அபூர்வ சகோதரர்கள்ல கமல் நடிச்ச மாதிரி காலை மடக்கியெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்க வேண்டியிருக்காம். போன ரெண்டு பார்ட்ல நடிச்சதுக்கே முட்டி வலி வந்துருச்சி” ன்னு சொல்லி 5 கோடி குடுத்தாதான் நடிக்க வருவேன்னுட்டாங்க.

சூர்யா : 5 கோடி இல்லை… 50 கோடி குடுத்தாவது அனுஷ்காவ உள்ள கூப்டுங்க

(அப்ப திடீர்னு கதவுக்கு பக்கத்துலருந்து விஜய குமார் குரல்)

”சரியாச் சொன்னீங்க துரை சிங்கம்”

சந்தானம் : (கடுப்பாகி) யோவ் அரை போதையில இந்தாள யாருய்யா எழுப்பி விட்டது..

Asst 1: நாங்க யாரும் கூப்டல சார்… அவரே வந்துட்டாரு

விஜயகுமார் : (ஹரிய பாத்து) மாப்ள… எனக்கு இந்த படத்துல எத்தனை சீன்? என்ன வசனம்?

ஹரி : போன ரெண்டு படத்துல என்ன வசனம் பேசுனீங்க?

விஜயகுமார் : “சரியா சொன்னீங்க துரை சிங்கம்” “கலக்கிட்டீங்க துரை சிங்கம்” “ஆமா துரை சிங்கம்” “அப்புடி போடுங்க துரை சிங்கம்” “உங்கள ப்ரமோட் பன்றேன் துரை சிங்கம்” “சார்ஜ் எடுத்துக்குங்க துரை சிங்கம்”

ஹரி : அதே வசனம் தான் இந்த படத்துலயும். போய் சரக்கடிச்சிட்டு தூங்குங்க மாமா.. சும்மா சும்மா வந்து தொல்லை பன்னாதீங்க.

விஜயகுமார் : கோவப் படாதீங்க மாப்ள.. நா அப்டியே ஒரு ஓரமா உக்காந்து வேடிக்க பாத்துக்குறேன் ன்னு விஜய குமார் ஒரு ஓரமா உக்காருறாரு.

சூர்யா : சார்… போன படத்துல சவுத் ஆஃப்ரிக்கா வரைக்கும் போனோம். இந்த தடவ எதாவது புது இடத்துக்கு போகனும்

சந்தானம் : செவ்வாய் கிரகத்துக்கு வேணா போறியா?

சூர்யா : சந்தானம் நீங்க இப்டியே காலாய்ச்சீங்கன்னா உங்கள படத்துலருந்தே தூக்கிருவேன்

சந்தானம் : டேய்.. நானே இந்த படத்துலருந்து விலகுறதுக்காகத்தான் வந்ததுலருந்து உன்ன கலாய்ச்சிட்டு இருக்கேன்.. அது புரியாம நீ மண்ணு மாதிரி உக்காந்துருக்க

சூர்யா : ஹரி சார்… இவர படத்துலருந்து தூக்கிருங்க

விஜயகுமார் : சரியாச் சொன்னீங்க துரை சிங்கம்

சந்தானம் : வக்காளி நா கொலை கேஸுல உள்ள போனாலும் பரவால்ல மொதல்ல இவனப் போட்டுத்தள்ளுறேன்னு விஜய குமார் மேல பாயிறாரு.

(தொடரும்)



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

Unknown said...

கலக்கிட்டீங்க துரை சிங்கம்

Anonymous said...

nice na but
வந்து உள்ள உக்காருங்க லில்லிபுட் அங்கிள்
உங்க கூட நடிக்கும்போது அபூர்வ சகோதரர்கள்ல கமல் நடிச்ச மாதிரி காலை மடக்கியெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்க வேண்டியிருக்காம். போன ரெண்டு பார்ட்ல நடிச்சதுக்கே முட்டி வலி வந்துருச்சி”
too much na

Anonymous said...

anna mayavalai adutha part ithilaye podunkalen please.

Anonymous said...

anna mayavalai adutha part ithilaye podunkalen please.

AquaNasav said...

Super

AquaNasav said...

Super

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...