Thursday, November 17, 2016

பணம் பிறந்த கதை - பகுதி 2


Share/Bookmark
முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும். 1700 கள் ல போன பதிவுல சொன்ன மாதிரி  இன்னொரு நகை வியாபாரியும், மக்களோட தங்கத்த வச்சிக்கிட்டு ரசீது கொடுத்து, வட்டிக்கும் கொடுக்கும் தொழில் பன்னிக்கிட்டு இருந்தாரு. அவர் வீட்டு கதவுல ஒரு ஷீல்டு மேல ரோமானியக் கழுகு உட்கார்ந்து இருப்பது மாதிரி வச்சிருப்பாராம். அதுக்க்கு ஜெர்மன்ல Rothschild ன்னு பேராம். அதனால அவர எல்லாரும் Rothschild ன்னு கூப்பிடுவாங்களாம். காலப்போக்குல அந்த நகைவியாபாரியோட பையன் தன்னோட பேரயே Rothschild ன்னு மாத்தி வச்சிக்கிட்டான். ஒரு கட்டத்துல மக்களுக்கு கடன் குடுக்குறத  விட அரசாங்கத்துக்கு கடன் குடுக்குறதுதான் நல்ல வருமானம்னு கண்டுபுடிச்சிருக்கானுங்க. ஏன்னா, மக்களுக்கு கொஞ்ச கொஞ்சமா குடுக்குறத விட ஒரு பெத்த அமவுண்ட்டா அரசாங்கத்துக்கு குடுத்துடலாம். மக்கள் வரிப்பணம் மூலமாத்தான் அத திருப்பி குடுப்பானுங்கங்குறாதால அந்தப் பணத்துக்கு செக்யூரிட்ட்யும் இருந்ததால அரசாங்கங்களுக்கு கடன் குடுக்குறதயே இந்த Rothschild விரும்புனானுங்க. 

அந்த Rothschild  க்கு மொத்தம் அஞ்சு பசங்க. அஞ்சு பேரயும் art of finance ல நல்லா ட்ரெயின் பன்னி அஞ்சு வெவ்வேற பகுதிகளுக்கு அனுப்பி வச்சான். அவனுங்க மூலமாத்தான் உலகத்தோட பெரும்பான்மையான பகுதிகளோட பேங்கிங்க அவனுங்க கண்ட்ரோல்ல கொண்டு வந்தானுங்க. பல டகால்ட்டி வேலைகளும் பாத்துதான் இவனுங்க உலக மார்க்கெட்ட புடிச்சிருக்கானுங்க. என்ன பன்னான்னு பாக்குறதுக்கு முன்னால…

அதே காலகட்டத்துலதான் Bank of England உருவானத பாத்தோம். தொடர்ந்து நாலு போர்களால, இங்கிலாந்து அவனுங்க கிட்ட சுமார் 14 கோடி பவுண்ட் கடன் வாங்கியிருந்தானுங்க. அந்த காலத்துல இது மிகப் பெரிய தொகை. அதனால அந்தக் கடன கட்டுறதுக்கு இங்கிலாந்தோட அமெரிக்க காலனிகள்லருந்து வரி வசூல பன்னலாம்னு ஒரு ஐடியா பன்னிருந்துருக்கானுங்க.

இப்ப அந்த அமெரிக்க காலனிகள்ல காசு (coin) அடிக்கிறதுக்கு போதுமான தங்கமோ வெள்ளியோ இல்லாததால, Colonial Script எனப்படுகிற பேப்பர் பணத்த அச்சடிக்க ஆரம்பிச்சாங்க. இந்த பேப்பர் பணம் நாம போன பதிவுல சொன்ன மாதிரி எந்த தங்கத்தோட மதிப்பையோ, வெள்ளியோட மதிப்பையோ சார்ந்து இல்லாம அவங்களே அச்சடிச்சிக்கிற மாதிரி இருந்துச்சி. மார்க்கெட்டுல அந்த பணம் நல்ல ரீச்சும் ஆச்சு. 

ஒரு தடவ Bank of England ப்ரதிநிதி, அமெரிக்க போனப்போ, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்கிட்ட இது எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னு கேட்டதுக்கு, அவர் “இந்தப் பணத்த சந்தை பரிவர்த்தனைகளைப் பொறுத்து அச்சடிச்சி வெளியிடுறோம். இந்தப் பணத்தை பெறுபவர்கள் அதற்காக வட்டின்னு எதுவும் செலுத்த தேவையில்லை. அதுமட்டும் இல்லாம ஒவ்வொரு பேப்பர் பணத்தோட மதிப்பையும், அதாவது அதோட purchase value ah நாங்களே நிர்ணயிச்சி அத எங்களோட கட்டுக்குள் வச்சிருக்கோம். அதனாலதான் இது சாத்தியப்படுகிறது” என பதிலளித்திருக்கிறார்.

இந்த Colonial script  பாத்த பேங்க்காரய்ங்க, சந்தோஷமா இருக்க புருஷன் பொண்டாட்டிய பாத்து செந்தில் “சந்தோசமா இருக்கியா… இனிமே இருக்கக்கூடாதே” ன்னு பிரிச்சி விடுற மாதிரி ஊருக்கு போய் நல்லா சோலி பாத்து விட்டுட்டாய்ங்க. என்னன்னா  ஆளாளுக்கு சொந்தமால்லாம் இனிமே பணம் அடிச்சிக்கல்லாம் கூடாது. இனிமே இங்கிலாந்துக்கு குடுக்க வேண்டிய வரி அனைத்தையும் தங்கமாவோ வெள்ளியாவோ மட்டும்தான் குடுக்கனும்னு சட்டம் போட்டுட்டானுங்க.

அமெரிக்க காலனிகள்ல புலக்கத்தில் இருந்த அந்த பணம், செல்லாம பொய்ட்டதால பல ப்ரச்சனைகளுக்கு ஆளானாங்க. தங்கம் இல்லைன்னுதான் இப்டி காசு அடிச்சாய்ங்க. இப்ப தங்கமாதான் குடுக்கனும்னா எங்க போவானுங்க. இந்த சட்டத்தால ஒருவருஷ காலத்தில் எல்லாமே மாறி ஊருக்குள்ள வேலையில்லா திண்டாட்டம் அதிகமாயிட்டதா ஃப்ராங்க்ளின் அவரோட Auto Biography ல தெரிவிச்சிருக்காராம்.



இப்படியே மாறி மாறி மாறி ஒவ்வொன்னா  நடக்க , இந்த Rothschild குரூப்பு ஒரு பக்கம் பேங்கிங்ல பெரிய லெவல்ல டெவலப் ஆகிட்டு வந்தானுங்க. முன்னாலயே சொன்ன மாதிரி ஒரு நாட்டுக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருந்தானுங்க. அதுமட்டும் இல்லாம சண்டைகள் (War ) நடக்கும் போது போரிடும் ரெண்டு நாடுகளுமே கடன் வாங்கிதான் செலவு பன்னும்.  பெரிய காமெடி என்னன்னா ரெண்டு பேருமே ஒரே ஆளுகிட்டருந்து தான் கடன் வாங்குவானுங்க. அதுல ஒரு டீலிங் என்னன்னா, போர்ல தோக்குற நாடு வாங்குன கடன, போர்ல ஜெயிக்கிற நாடுதான் குடுக்கனும்னு ஒரு கண்டிஷன். அதனால எப்டிப்பாத்தாலும் பணம் குடுக்குறவன் சேஃப் தான். 

இதனால பாதிக்கப்பட்ட ஒரு ஆள்ல நெப்போலியனும் ஒருத்தர். அட நம்ம “மாடசாமி” நெப்போலியன் இல்லப்பா. மாவீரன் நெப்போலியன். மொதல்ல நெப்போலியனும் இந்த மாதிரியான பேங்க்குகள்ல கடன் வாங்குறது நல்லதில்லைன்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தாப்ள. அதாவது ”ஒரு நாடு ஒருவரிடம் கடன் வாங்கும்போது , கொடுப்பவர் சூப்பர் பவராகவும், வாங்குபவர் அவருக்கு பணிந்து நடப்பவராகவும் மாற நேரிடும். இது ஒரு நாட்டுக்கு உகந்ததல்ல” ன்னு பில்ட் அப்பெல்லாம் குடுத்துக்கிட்டு, பேங்குல கடன் வாங்குறத அசிங்கமா நினைச்சி தன்கிட்ட இருந்த ஒரு மிகப்பெரிய நிலப்பரப்ப (Mississippi) அமெரிக்கக்காரம் ஒருத்தன்கிட்ட 3 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்துக்கு வித்துட்டு அதுல வந்த காச வச்சி, மிகப்பெரிய படைய திரட்டி பல நிலப்பரப்புக்க்களை புடிச்சான்.

இப்படி கெத்தா போயிட்டு இருந்த நெப்போலியன வெல்லிங்க்டன்ல நடந்த ஒரு போர்ல ஊமை குத்தா குத்தி அனுப்பி விட்டாய்ங்க. உசுறு பொழைச்சா போதும்னு தப்பிச்சி போயி ஒரு தீவுல பதுங்கியிருந்தான். மொதல்ல யார்கிட்டயும் கடன் வாங்க மாட்டேன்னு வீராப்பா திரிஞ்சவன் “அய்யா… கப்பல்ல வேலைன்னு ஒரு பன்னி சொன்னத நம்பி உங்கள தப்பா பேசிட்டேன்யா.. கப்பல்ல வேலை இல்லைன்னு தெரிஞ்சப்புறம் அந்த நாயி திரும்ப உங்ககிட்டயே வந்துருச்சிங்கய்யா” ன்னு கவுண்டர் சொன்ன மாதிரி யூரோப்புல ஒரு பேங்குல லம்ப்பா ஒரு அமவுண்ட்ட கடனா வாங்கி ஒரு 74000 வீரர்கள திரட்டி திரும்ப திரும்ப பாரிஸ்ல அட்டாக் பன்ன ப்ளான் பன்னிருக்கான். அவனுக்கு எதிரா அதே பலத்தோட சுமார் 67000 ப்ரிட்டீஷ் படை வீரர்களும், சொச்ச ஐரோப்பிய படைகளும் சண்டையிட தயாரா இருந்தாங்க.

இங்கதான் Rothschild நிக்கிறான். அந்த சமயத்துலயே இங்கிலாந்துல இருந்த பெரும்பாலான கம்பெனிகள் ஷேர் மார்கெட் முறை இருந்துச்சி. அதாவது கம்பெனியோட பங்குகள்ல அதிக பங்குகள் வச்சிருக்கவர் முதலாளியாக இருப்பார். மத்த எல்லாம் பங்குதாரராக இருப்பாங்க.

இப்ப நெப்போலியனுக்கும் வெல்லிங்டன் படைகளுக்கும் இடையே போர் நடக்குல இடத்துக்கு பக்கத்துல நம்ம Rothschild ஒரு Spy  ah வச்சிருந்தான். அதாங்க ஒட்டுக்கேட்டு வந்து போட்டுக்குடுக்குறவன். போன தடவ ஊமை குத்தா வாங்கிட்டுப் போன நெப்போலியன் இந்த தடவ இன்னும் நல்லா வகையா வந்து மாட்டுன உடனே மூத்தர சந்துக்குள்ள வச்சி கும்முற மாதிரி கும்மி எடுத்துட்டாய்ங்க.

இந்த Spy என்ன பன்னான்னா நெப்போலியன் தோத்துப் போறது லைட்டா தெரிஞ்ச உடனேயே வேக வேகமா வந்து இங்கிலாந்துல இருந்த நம்ம Rothschild கிட்ட சொல்லிட்டான். அதாவது official news இங்கிலாந்துக்கு ரீச் ஆகுறதுக்கு முன்னாலயே. இந்த இடந்தான் த்ரிலிங்கான இடம். மனச திடப்படுத்திக்குங்க… பயந்துடாதீங்க. என்ன புலி குட்டி போட்டுருச்சா?” இல்லை இல்லை.

மேட்டர் தெரிஞ்ச உடனே நம்ம Rothschild என்ன பன்னான், மூஞ்ச சோகமா வச்சிக்கிட்டு, தலைய தொங்க போட்டுக்கிட்டு ப்ரிட்டீஷ் அரசாங்கத்தோட Bonds ah எல்லாம் மொத்த மொத்தமா விக்க ஆரம்பிச்சான். இதப் பாத்தவனுங்களுக்கு அய்யய்யோ போர்ல இங்கிலாந்து படைகள் தோத்துருச்சி போலருக்குன்னு ஷேர் வச்சிருந்த எல்லாருமே மிகக் குறைவான விலையில எல்லா ஷேரயும்  விக்க ஆரம்பிச்சிட்டானுங்க.. ஏன்னா நெப்போலியன் ஜெயிச்சிட்டான்னா இப்ப இருக்க financial சிஸ்டத்தயே காலி பன்னாலும் பன்னிடுவான்னு கெடைச்ச வரைக்கும் லாபம்னு கையில இருந்த எல்லா ஷேரயும் விக்க ஆரம்பிச்சிட்டானுங்க.

அப்ப காட்டுனான் நம்மாளு பர்ஃபார்மன்ஸ…. அழுகுற மூஞ்ச கொஞ்சம் கொஞ்சமா சிரிச்ச மூஞ்சாக்கி வேதாளம் அஜித் மாதிரி பல்ல காட்டிக்கிட்டே, அவனுங்க வித்த எல்லா ஷேரயும் இவன் ஒருத்தனே பல மடங்கு கம்மியான விலையில வாங்குனான். மறுநாள்தான் எல்லாருக்கும் தெரிஞ்சிது போர்ல ஜெயிச்சது நெப்போலியன் இல்லை இங்கிலாந்து படைகள்தான்னு. இப்ப இங்கிலாந்துல இருந்த அனைத்து ஷேர்களும் நம்மாளூ கையில. அல்டிமேட்டா மொத்த இங்கிலாந்துமே அவன் கையில வந்த மாதிரி.

நெப்போலியன் வாழ்நாள் முழுசும் பிடிச்ச ஏரியாவ விட, இந்த Rothschild சில மணி நேரங்கள்ல பிடிச்ச பகுதிகள் அதிகம்னு சொல்றாங்க. எல்லாம் வெசம் வெசம் வெசம் வெசம். அப்பலருந்து இப்ப வரைக்கும் உலகத்தோட முக்கால்வாசி பேங்கிங் மற்றும் பண பரிவர்த்தனைகள் இந்த Rothschild குருப்போட கண்ட்ரோல்லதான் இருக்கு.

தனக்கு லாபம் வரனும்ங்குறதுக்காகவும், தன்னோட கண்ட்ரோல்ல இருக்கனும்ங்குறதுக்காகவும் எந்த அளவு வேணாலும் இறங்கக் கூடியவனுங்க. அதுக்கு சிறந்த உதாரணம் சென்ற வருடம் காணாமல் போன மலேசிய விமானம். அதற்கும் இந்த குருப்புக்கும் மிகப்பெரிய சம்பந்தம் இருப்பதாக சில கருத்துக்கள் உலவுது. அது நம்பும்படியும் இருக்கு. அதைப் பற்றி மற்றுமொரு பதிவில் பார்ப்போம்.






நன்றி : தோழர் பாலவிக்னேஷ்


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

Anonymous said...

nice na very nice.
i like ur blog very much.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...