Monday, February 5, 2018

ஒரு நல்ல நாள் பாத்து சொல்லுறேன் – கொல்லுறேன்னு வச்சிருக்கனும்!!!


Share/Bookmark
”விஜய் சேதுபதி மாதிரி ஒரு நல்ல மனுஷனப் பாக்க முடியாதுப்பா… ஃப்ர்ண்ட்ஸ் போய் கேட்டா இல்லைனு சொல்லாம உடனே படம் நடிச்சி குடுப்பாருப்பா…. இது அவர் நட்புக்காக நடிச்சி குடுத்த படம்ப்பா… அதான் அவ்வளவு நல்லா இல்லை.. “ விஜய் சேதுபதியின் மொக்கை படங்கள் ரிலீஸாகும் போதெல்லாம் இது போன்ற பல வசனங்கள் காதுல வந்து விழவது இப்பல்லாம் சகஜமாகிப் போச்சு. எதோ இவருக்கு மட்டும்தான் நண்பர்கள் இருக்க  மாதிரியும் மத்தவங்கல்லாம் யாருமே இல்லாம அத்துவிட்டு திரியிற மாதிரியும்.

ஒரு பையன் டீச்சர் கிட்ட “மிஸ்… இன்னிக்கு நா ரெண்டு பேருக்கு உதவி பண்ணிருக்கேன்”ன்னாம்.

உடனே டீச்சர்.. “அப்டியா.. சூப்பர்.. யார் யாருக்கு உதவி செஞ்ச?”ன்னு கேட்டதும்

“வழில ஒரு கிளி பறக்க முடியாம பாவமா விழுந்து கிடந்துச்சி…  அது வண்டில எதுவும் அடிபட்டுறக் கூடாதுன்னு காப்பாத்துனேன்”

 “சரி ரெண்டாவது உதவி ?

“வழில வந்துகிட்டு இருக்கும்போது ஒரு பூனை பசியோட இருந்துச்சி.. அந்தப் பூனைக்கு நா காப்பாத்துன கிளிய சாப்புடக் குடுத்தேன்” ன்னானாம். விஜய் சேதுபதி செய்யிற உதவியும் அப்டித்தான். சேதுபதி சார்.. உதவி செய்யிங்க.. வேணாம்ங்கள..  நீங்க உதவி செய்யிறதுக்கு ஏன் உங்கள நம்பி படம் பாக்க வர்ற எங்க உசுற எடுக்குறீங்க?

விஜய் சேதுபதி படம்னா யார் இயக்குனர்னுலாம் பாக்காம “விஜய் சேதுபதி படம்னா நல்லாருக்கும்யா”ன்னு நம்பி வர்றவன “இனிமே வருவியா.. வருவியா”ன்னு கழுத்தாம்பட்டையிலயே சாத்து சாத்துன்னு சாத்துற படம் தான் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்.

Spoiler Alert லாம் போட்டு spoiler alert க்கு உள்ள மரியாதைய நா கெடுக்க விரும்பல.

நகைச்சுவைப் படம் எடுக்குறது ஒண்ணும் அவ்வளவு ஈஸி இல்ல. என்ன சொன்னாலும் சிரிக்கிறதுக்கு நம்மாளுக முட்டாள்களும் இல்லை. என்னதான் நகைச்சுவைப் படங்களுக்கு லாஜிக் தேவை இல்லைன்னாலும் கதை திரைக்கதையில சில அடிப்படைகளையாவது பின்பற்றியாகனும். அது எதுவுமே இல்லாம ஏனோதானோன்னு எடுக்கப்பட்ட ஒரு அரை வேக்காடு தான் இந்தப் படம்.

”கதைக்களம்” மற்றும் ”கதாப்பாத்திர அமைப்புகளில் தெளிவு” இது ரெண்டும் ஆடியன்ஸ படத்தோட ஒன்றச் செய்யிறதுல மிக முக்கியமான பங்கு வகிக்கிது.  ஆனா இங்க இந்த ரெண்டுலயுமே எந்தத தெளிவும் இல்ல. விஜய் சேதுபதி காட்டுக்குள்ளருந்து ஊருக்குள்ள திருட வந்து, மாறுவேடங்கள்ல போய்த் திருடுறாரு. அதுக்கு ஒரு விக் வச்சி விட்டுருக்காங்க பாருங்க… போக்கிரி பாடி சோடா கெட்டப்பெல்லாம் தோத்துரும். அந்த மண்டையோட ஒருத்தன் ஒரு இடத்துக்கு போனாலே மண்டையில நெருப்ப கொளுத்திப் போட்டு அனுப்பிருவானுங்க. இவரு அந்த கெட்டப்ல பல இடங்கள்ல திருடுறாரு.

அடுத்து அவரோட பழக்கவழக்கமும் பேச்சும். தமிழ் லோக்கல் பாஷையில பேசுறாரு.. தெலுங்குல பேசுறாரு.. திடீர்னு இங்க்லீஷ்ல பேசுறாரு. அதுவும் அவர் கூட இருக்க ரெண்டு அள்ளக் கையிங்க.. அடடா அபாரம்.. Sneak Peak ஒரு சீன் பாத்திருந்தாலே தெரிஞ்சிருக்கும். ”அண்ணேன் நாங்க காரு… நீங்க சாவி” அதுதான் படத்துல இருக்கதுல கொஞ்சம் பரவால்லாத மொக்கன்னா பாத்துக்குங்க..

அரை கிரவுண்ட் இடத்துல போடப்பட்ட ஒரு கண்றாவியான செட்டுல, கருப்பு ட்ரஸ் போட்ட ஒரு நாப்பது பேர் அங்கயும் இங்கயும் சுத்தவிட்டா அதான் விஜய் சேதுபதியோட மலை கிராமம். லோ பட்ஜெட்ல படம் எடுக்க வேணாம்னு சொல்லல.. பட்ஜெட்டே இல்லாம படம் எடுக்காதீங்கன்னுதான் சொல்றோம். விஜய் சேதுபதியின் கிராமம் சம்பந்தப்பட்ட காட்சிகள்லாம் கிட்டத்தட்ட ZEE டிவி டப்பிங் சீரியில் பாக்குற எஃபெக்ட்ட தான் குடுக்குது.

ஹீரோயின் பாக்குற மாதிரி இருக்கு. “ஃப்ரண்டு ஃபீல் ஆயிட்டாப்ள” டேனியல் தான் ஒரளவுக்கு ஆறுதல். அவரும் காமெடிங்குற பேர்ல நிறைய சீன்ல கத்தி கத்தி காது ஜவ்வ கிளிச்சி விட்டுட்டாரு.

இந்தக் கொடுமையெல்லாம் ஒரு பக்கம்னா கவுதம் கார்த்திக் இன்னொரு பக்கம். அடிக்கடி மூஞ்ச மூஞ்ச காட்டி ஒரே இம்சை. அவர ஹீரோயின் பக்கத்துல வச்சி பாக்குறப்போ யார் ஹீரோ யார் ஹீரோயின்னு கண்டுபுடிக்கிறதே நமக்கு பெரிய சவால்.

“கீழ ஒரு கிராமம்.. மேல ஒரு கிராமம்” இந்த கான்செப்ட் நல்லா இருந்துச்சி. இத மெயினா வச்சி இது தொடர்பான சுவாரஸ்யமான காட்சிகள முதல்ல குடுத்துட்டு பொண்ண தூக்குற மேட்டர சைடாக்கிருந்தா  ஒரு வேளை சுவாரஸ்யமா இருந்தாலும் இருந்திருக்கலாம்.

விஜய் சேதுபதி தலையில கொம்பு வச்ச கிரீடம் வச்சிட்டு வரும்போது, நீளமான முடி வச்சிருக்க கெட்டப்புல வரும்போதெல்லாம் அவரப் பாக்க பாவமாத்தான் இருந்துச்சி. இதெல்லாம் தெரிஞ்சிதான் பன்றாரா இல்ல கமிட் ஆயிட்டோமேன்னு கடனுக்கு எதாவது செய்வோம்னு செய்றாரா இல்ல உண்மையிலயே எதுவும் தெரியாம இதயெல்லாம் சீரியஸா செய்றாரான்னு ஒண்ணும் புரியல. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

நா எத வேணாலும் பொறுத்துக்குவேன். ஆனா படம் முடியும்போது ரெண்டாவது பார்ட்டுக்கு டைரக்டர் ஒரு லீடு குடுக்குறாரு பாருங்க… அத மட்டும் என்னால பொறுத்துக்கவே முடியல. பட் அந்த confidence ah பாராட்டியே ஆகனும். ”அந்த ஓட்டக் கண்ணாடியப் போட்டுக்கிட்டு எப்புடித்தான் துணிஞ்சி முன்னால நிக்கிறியோ..”
  

இன்னும் கழுவி ஊத்த நிறைய இருந்தாலும் மூடு இல்லாத காரணத்தால இதோட முடிச்சிக்குவோம்.


மொத்தத்துல இந்தப் படம் பாக்கப்போற மூணு மணி நேரத்துல காலு ரெண்டயும் கதவுக்கு முட்டுக்குடுத்து, மல்லாக்கப் படுத்து விட்டத்தப் பாத்து கொரட்டை விட்டு நல்லா தூங்குறது மேல்…

    
   

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Paranitharan.k said...

என்னங்க சார் நீங்க ..இது வரை வந்ந விமர்சனம் எல்லாம் செம காமெடி படம்..சூப்பர் காமெடி ன்னு இருக்க நீங்க இப்படி தாளிக்கிறீங்க .

நாங்க யாரை தான் நம்புறது..:-(

ஜீவி said...

நியாயமான விமர்சனம் முத்து சிவா அவர்களிடம் இருந்து..
இது வரை எல்லாரும் ஏதோ பிளாக் காமெடி அது இது nnu (அப்படின்னா என்ன எழவோ) ஆளாளுக்கு அடிச்சு விடுறாங்க. விஜய் சேதுபதி நடித்தா அது கிளாசிக் படம் nnu கூப்பாடு போடவே ஒரு பெரும் கூட்டம் இருக்கு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...